Sunday, April 5, 2026
Home Blog Page 34

குங்கிலியக் கலய நாயனார் புராணம்

குங்குலியக் கலய நாயனார்

குங்கிலியக் கலய நாயனார்

    சோழநாட்டிலுள்ள திருக்கடவூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் கலயனார் ஆவார். சிவபக்தியில் சிறந்து நின்ற அவர், திருக்கோயிலில் குங்கிலியம் என்னும் வாசனைப் பொருளால் தூபமிட்டு அருந்தொண்டாற்றி வந்தார். அதனால் அவரைக் குங்கிலியக் கலய நாயனார் என்று மக்கள் அழைத்தனர்.

     நாயனாரின் பெருமையை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். கலயனாரின் செல்வம் கரையத் தொடங்கியது. இருப்பினும் தன் நிலங்களை விற்று குங்கிலியத்தூபமிடும் பணியில் வழுவாது நின்றார் நாயனார். நாளடைவில் வறுமையின் கோரப் பிணி அவரது குடும்பத்தை வாட்டியது. உணவிற்கே திண்டாட்டமானது.

        அதைக்கண்ட கலயனாரின் மனைவி, தன் திருமாங்கல்யத்தைக் கழற்றித் தந்தார். அப்பொன்னை விற்று நெல் வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார். நாயனார் திருமாங்கல்யத்தோடு வீதியில் நடந்தார். அப்போது எதிரில் குங்கிலியம் விற்றபடி ஒருவர் வந்தார். நாயனாருக்கு, தன் பசியும் வீட்டிலுள்ளோரின் பசியும் மறந்து போனது.

         நேராகக் குங்கிலியம் விற்பவரிடம் சென்று, தன் மனைவியின் திருமாங்கல்யத்தைக் கொடுத்தார். அதற்குப் பதிலாக குங்கிலியம் பெற்று கோயிலுக்குச் சென்று, மிக்க மகிழ்ச்சியோடு பெருமானுக்குத் தூபமிட்டார்.

         நாயனாரின் குடும்பத்தார் பசியால் உறங்கிப் போயினர். அக்கணம் சிவபிரானது அருளால் நாயனாரின்  செல்வம் நிரம்பியிருப்பதை சிவபிரானும், நாயனாரின் மனைவியார் கனவில் தோன்றிக் கூறினார். நாயனாரின் மனைவி விழித்துப் பார்த்தார். வீடு செல்வத்தால் நிரம்பியிருந்தது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார்.

         கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த நாயனாரின் கனவிலும் தோன்றிய பெருமான் அச்செய்தியைக் கூறினார். நாயனாரும் வீடு திரும்பினார். செல்வங்களைக் கண்டார். கலியானாரும் அவரது மனைவியாரும் சிவனருளை எண்ணி மெய் சிலிர்த்தனர். நாயனார் அச்செல்வத்தைக் கொண்டு, தன் குங்கிலியத் தூபத்தொண்டினையும், அடியவர்க்கு அமுதூட்டும் தொண்டினையும் குறைவறச் செய்து மகிழ்ந்திருந்தார்.

       இவ்வாறிருக்கையில் ஒருநாள் திருப்பனந்தாள் என்னும் ஊரிலுள்ள ஆலயத்தின் சிவலிங்கம் சாய்ந்தது. அதனை நிமிர்த்த பலர் முயன்றும் இயலவில்லை. செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னர் தன் அரண்மனை யானைகளைக் கொண்டுவந்து கயிற்றைக் கட்டி இழுத்தான். இருப்பினும் சிவலிங்கம் நிமிரவில்லை. மன்னன் பெரிதும் வருத்தமுற்றான்.

       மன்னனின் வருத்தத்தைக் கேள்விப்பட்ட கலயனார், திருப்பனந்தாள் சென்றார். சிவலிங்கத்தின் கழுத்திலுள்ள கயிற்றின் மறுமுனையைத் தன் கழுத்தில் கட்டி இழுத்தார். மறுகணமே சிவலிங்கம் நிமிர்ந்தது. மன்னனும் கலயனாரை வணங்கினான். கலயனாரின் பெருமையை ஊரறிய பறைசாற்றினான்.

            திருப்பனந்தாள் விட்டு திருக்கடவூர் திரும்பி தம் அருந் தொண்டினைத் தொடர்ந்தார்கலயனார். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் திருக்கடவூர் வந்தபோது, அவர்களை வணங்கி அமுது படைத்தார். அவ்விரு பெரியோர்களும் நாயனாரை வாழ்த்தினர்.

இவ்வாறு தமது திருத்தொண்டை தவறாது செய்த குங்கிலியக் கலய நாயனார் சிவபதம் சென்றடைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிக..

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

செயல்பாடுகளே உங்களின் மதிப்பை உயர்த்தும்!

செயல்பாடு உங்கள் மதிப்பை உயர்த்தும்

செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

(தன்னம்பிக்கை கட்டுரை)

     உலகில் உள்ள மனிதர்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால் அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தால் போதும். அவரவர் செயல்பாடுகளின் மூலமாக அவர்களின் மீது மதிப்பு உண்டாகிறதா? அவமதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கணிக்கலாம்.

          நமது ஊர்களில் சிலர் பேசும்போது கேட்டிருக்கலாம். அவர்கள் வாயைத்திறந்தால் போதும் தவறான சொற்களை மட்டுமே பேசுவார்கள். அவற்றை தவிர மற்ற வார்த்தைகளைப் பேசி பழகாதவர்கள். இவர்களின் பேச்சில் யாரேனும் குறுக்கிட்டால் அவ்வளவுதான், அவர்களின் ஆஸ்தியையே அழித்ததைப் போன்று கோபத்துடன் லபோ திபோ என்று கத்துவார்கள். பாவம் இவர்களுக்கு மதிப்பு என்பது பற்றி ஏதேனும் தெரியுமா? என்றால் ஒன்றும் தெரியாது.

தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்

          உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அந்த பிறவிக்கே உரிய ஆக்க சக்தி என்பது இருக்கும். அவர்கள் அதை உணர்ந்து தன் ஆற்றலை பெருக்கிக்கொண்டால் போதும். தானாகவே மதிப்பு உயரும். சமூகத்தில் மற்றவர்கள் எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ன கூறுவார்களோ? என்று எண்ணி உங்களுக்குள்ள ஆற்றலை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

        இந்த உலகம் இராமனின் சீதையையே ஐயப்பட்டு அக்னியில் குளிக்க வைத்தது. அதனால் அவற்றை பற்றியெல்லாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் ஆழ்மன உந்துதலே செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன. எனவே மற்றவரின் போற்றுதலுக்காக உங்களின் தனித்தன்மையை மாற்றிக் கொள்ளாதீர். ஆனால் உங்களின் தன்மையால் நன்மதிப்பை பெறுங்கள். அதுவே நிலையான மதிப்பு.

பொறுப்பைச் செயலில் காட்டுங்கள்

       ஒரு தனியார் கம்பெனி ஒன்று இளைஞர்கள் நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு அழைத்திருந்தது. காலையில் பத்து மணிக்கு வந்து சேர்ந்து விட்டனர். வேலைதேடும் பட்டதாரிகள். அது ஒரு பெரிய பரந்த அறை. அந்த இடத்தில் டேபிள், நாற்காலி, சோபா என்று போடப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நாளிதழ்கள், வார இதழ்கள் என்று தாருமாறாகக் கிடந்தன. காலண்டர், கடிகாரம் எதுவும் சரியான முறையில் இல்லை. அந்த அறையில் சுமார் நாற்பதுபேர் அமர்ந்திருந்தனர். நேர்முகதேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி அவர்க்கான இடத்தில் அமர்ந்து கொண்டார். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், அந்த பெண் எழுந்தார். சிதறிக்கிடந்த இதழ்களை பொறுக்கி எடுத்தார். தேதியைப் பார்த்து வரிசை படுத்தி டேபிள் மீது வைத்தார். நாற்காலிகளை ஒழுங்காக்கினார். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ஓடியது. ஆனால் நேரத்தைத் தவறாகக் காட்டியது. அதனை சரிசெய்து அதன்இடத்தில் மாட்டி வைத்தார். காலண்டரில் தாள்கள் கிழிக்கப்படாமலே இருந்தது. அதை கிழித்துத் தூசுதட்டி உரிய இடத்தில் வைத்தார்.

ஒரு ஓரமாகப் பிள்ளையார் படம் ஒன்று இருந்தது, அருகில் விளக்கு திரி ஊதுபத்தி என்று சகிதமும் இருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி ஊதுபத்தி கொழுத்தி வைத்தார். பிள்ளையாரை வணங்கிவிட்டு தன்இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அந்த அறையே ஊதுபத்தியின் மணம் கமழ்ந்தது. ஒவ்வொருவராகத் தேர்வுக்கு உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்களும் உள்ளே செல்லும்போது பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர். இந்தப் பெண்ணையும் நேர்முகத்தேர்வுக்கு பெயர் சொல்லி அழைத்தனர். மற்ற எல்லோருக்கும் ஒரு ஐயம். இந்தப்பெண் இங்கு ஏற்கனவே வேலை பார்க்கவில்லையா? ஆனால் அந்த பெண் வேலைதேடி வந்துள்ளார் என்பதே உண்மை. கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத சிந்தனை பொறுப்பு இவருக்கு மட்டும் எப்படி வந்தது? இந்த பெண் செய்தவற்றை கேமரா மூலம் பார்த்துக்கொண்டு இருந்த அந்தக் கம்பெனியின் முதலாளி அப்போதே முடிவு செய்தார். காலி பணியிடம் அந்தப் பெண்ணிற்கு என்று. அவ்வகையான செயல்பாடுகள் மற்றவரின் மத்தியில் அவர்களின் மீதுள்ள கணிப்பை உயர்த்திக்காட்டும். அவர் மற்றவர்களைபோல நமக்கென்ன என்று இருக்கவில்லை. அவற்றை நன்றாக மாற்றவேண்டும் என்று எண்ணினார். அது அவருடைய தனித்தன்மை என்பதை உணருங்கள்.

செயல்கள் மதிப்புமிக்கவை

      படித்த நிகழ்வு ஒன்று. ஒரு கல்லூரியில் அழகான இளமைக்காலத்தில் மாணவர்கள் பறவைகள் போல பாடித்திரிய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அவர்கள் வாக்கிடாக்கியில் பாடல்களைக் கேட்டுகொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். பின்னர் வேறுவேலை பார்ப்பார்கள். ஆனால் ஒரு மாணவன் மட்டும் அந்த வாக்கிடாக்கியைக் காதுகளின் இருந்து அகற்றுவதே இல்லை. எல்லா நேரங்களிலும் மாட்டிக்கொண்டு திரிவான். அதேவேளை தேர்வில் மதிப்பெண்களையும் அதிகமாகப் பெற்றுவிடுவான். இது எவ்வாறு என்று கவனித்தபோதுதான் தெரிந்தது. அவன் கேட்டவை பாடல்கள் அல்ல பாடங்கள். மற்ற மாணவர்கள் சினிமாப்பாடல்களைக் கேட்கும்போது இவன் மட்டும் பாடத்தை ஒருமுறை உறக்க படித்து அதில் பதிவுசெய்து கொண்டு தனக்கு மனதில் பதியும்வரை மீண்டும்மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் மதிப்பெண்கள் உயர்ந்தன. பேராசிரியர்கள் மத்தியில் இவன் மதிப்பும் உயர்ந்தது.

பெரிய மாற்றம்தரும் சிறிய செயல்

         செய்யும் செயல்கள் மற்றவர்க்கு உதவுமாறு நல்ல நோக்கத்துடன் செய்யுங்கள். எப்போதோ படித்த ஒன்று. ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பலநூறு மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பேருந்துவசதி கிடையாது. பலமுறை போக்குவரத்து துறைக்கு விண்ணப்பம் அனுப்பி வைத்தனர். என்றாலும் அவர்கள் எந்தஊர், எந்தக் கிராமம் என்று விசாரணை செய்துவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள். அது அவ்வளவு தான். அந்த ஊர் மக்களும் பலமுறை எழுதிஎழுதி சலித்து விண்ணப்பம் செய்வதையே விட்டு விட்டனர். பேருந்து இனி வரப்போவதில்லை என்று அவர்களே முடிவு செய்து கொண்டனர். அதற்குக் காரணம் அந்தக் கிராமத்தைச் சுற்றி ஒரு மலை கிழக்கு திசையிலிருந்து தொடங்கி தெற்கு மேற்கு திசை வரை மூன்று பக்கமும் மதில்சுவர் போன்று காணப்பட்டது. அந்த ஊருக்கு செல்பவர்கள் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே சென்றால் மீண்டும் அதே வழியில்தான் திரும்பி வர வேண்டும். மலைக்கு அந்தப்பக்கம் இருவழி சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஊருக்கு எந்தப்பேருந்தும் வராது.

        இவ்வாறு இருக்க அந்தக் கிராமத்திற்கு எந்த வசதியும் கிடையாது. பள்ளிக்கூடம் ஏழு கிலோமீட்டர் செல்ல வேண்டும். மருத்துவ வசதி பத்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். பால்நிலையம், காவல் நிலையம் என்று எதுவும் கிடையாது. அக்கிராமம் பல தலைமுறைகளாக எந்தவொரு முன்னேற்றத்தையும் பார்க்க வில்லை. கிராமத்தில் ஐம்பது வயது தாண்டிய  நபர் ஒருவர் தினமும் சுத்தியலுடன் உளியையும் எடுத்து கொண்டு தனக்கு மதிய உணவை தயார் செய்து கொண்டு சென்று விடுவார். எங்கு செல்வார்? அந்த மலைக்கு சென்று  பாறையாக உயர்ந்திருக்கும் அதன் அருகில் சென்று அமர்ந்து கொள்வார். உளியை பாறையில் வைத்து சுத்தியலைக் கொண்டு பலமாக அடிப்பார். அடித்து சிறிது சிறிதாக உடைப்பார். மாலை ஐந்து மணி வரை இதே வேலையை சலைக்காமல் செய்வார். இந்த வேலை பல வருடங்களாகத் தொடர்ந்தது. இதைக்கண்ட மற்றவர்கள் கேலி செய்தனர், ஏளனமாக நகைத்தனர். பைத்தியம் என்றனர்.

         இவர் சுமார் பதினைந்து வருடங்களாக அந்த பாறையைக் குடைந்து எடுத்துள்ளார். பின்னர் இவரின் இறுதிக்காலம் நெருங்கும் நிலையில் படுக்கையில் இருந்து கொண்டு “நான் பாறையை உடைத்த இடத்தில் சென்று பாருங்கள்” என்றார். அங்கு சென்று பார்த்தவுடன்தான் தெரிந்தது, அந்த மலைப்பாறை குடையப்பட்டு மறுப்பக்கத்தில் சாலை தெரியுமாறு ஒரு துவாரம் செய்யப்பட்டிருந்தது. ஆகா என்ன ஆச்சர்யம் மக்கள் எல்லோரும் அந்த மலைக்கு சென்று அந்த துவாரத்தைக் குடைந்து மேலும் பெரிதாக்கி தமக்கு சாலை அமைக்க ஒருவழி கிடைத்திருப்பதை உணர்ந்தனர். அந்த மனிதரை பைத்தியம் என்று கேலி செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு கைக்கூப்பினர். அந்தப் பெரியவரும், எத்தனையோ ஆண்டுகளாகச் செய்ய இயலாத ஒன்றை தம்சந்ததியினருக்கு செய்து விட்டோம் என்ற மன நிம்மதியுடன் கண்களை மூடினார். இவருடைய சிறிய செயல் கிராமத்தின் தலையெழுத்தை மாற்றியது.

       இவர் மற்றவரைப் போல இல்லாமல் வேறு விதமாக மக்களின் அவலத்தை போக்க வேண்டும் என்று நினைத்து மற்றவர்கள் செய்கிறார்களா? என்று பார்க்கவில்லை தானே முன்வந்து செய்தார். அந்தக்கிராம மக்கள் அவரை தெய்வமாக மதித்தனர். அது அவருடைய தனித்தன்மை.

     எந்தப் பிறவி பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு ஒரு நன்மையைச் செய்யும் நீங்கள் தனித்துவம் கொண்டவர்கள்தான்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான-அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

உங்களின் வாழ்க்கையில் சோம்பலை விரட்டிவிட்டீர்கள் என்றால் அதன் இறுதியில் கிடைப்பது முன்னேற்றத்தின் தொடக்கம்தான். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகும். இப்போது நீங்கள் செய்வதற்கு கண்முன்னே ஆயிரம் கடமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மாற்றி அதைப்போன்று கற்பனை செய்து பாருங்கள். உங்களின் அகக்கண்களின் மூலம் உங்களால் செய்யப்பட்ட சமுதாய மாற்றம் தெளிவாகத் தெரியும். 

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

          நிதமும் இந்தச் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய நீங்கள் சிந்தனை செய்து கொண்டு அதனால் ஏற்படும் மாற்றங்களை கண்முன்னே கொண்டு வாருங்கள். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. எத்தனை தடைகள், எதிர்ப்புகள், வசைகள், இன்னல்கள் பலவும் நிகழும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் சலைக்காமல் மீண்டும் முன்னேற்றத்தைத் தொடர வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். நல்ல காரியம் செய்யும்போது ஒவ்வொரு படிநிலையிலும் மற்றவர்களால் இடையூறுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நீங்கள் வெற்றிபெறும் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இலக்குகளின் பாதைகள்

        இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது உங்களுக்கு எந்தவித தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் நீங்கள் பாதையை கடந்துவிட்டீர்கள் என்றால் வந்த பாதையை விட்டு விலகி வேறுபாதையில் பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது வெற்றியைப் பெறுவதில் மட்டுமல்ல, அதை அடைவதற்கு கடந்து வந்த பாதையில் சவால்களைச் சமாளித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள், பழகிய மனிதர்கள், மாமனிதர்கள், சுரண்டல்காரர்கள், கண்முன்னே நமது பொருட்களைப் பறிக்கும் கடத்தல் பேர்வழிகள் என்று பலவிதமான மனிதர்களை அறிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமானவை. இவற்றையெல்லாம் நீங்கள் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் சென்றாலும் கற்றுக் கொள்ள இயலாது.

வருவது துன்பமல்ல சவால்

         இலக்கின் பாதையில் துன்பங்களை பேச்சுக்களை மனிதர்களைச் சந்திக்கின்ற போது இதற்குமுன் இந்த அனுபவம் பெற்றிருக்க மாட்டீர்கள். முதன்முறை எதிர்கொள்ளும்போது திரும்பி சென்றுவிடலாமா? என்று தோன்றும். இவற்றை முடிக்க நம்மால் இயலுமா? போன்ற பல வினாக்கள் முன்னே வந்து நிற்கும். எவை வந்தாலும் நிறைவான வெற்றியால் பெறும் மாற்றத்தை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கஷ்டங்களை சமாளிக்கும் திறன் தானாகவே வரும். எப்போதுமே துன்பங்களை வேதனையோடு எதிர்பார்க்காதீர்கள். அவற்றை சவாலாக ஏற்றுச் செயல்படுங்கள். பார்த்துவிடலாம்! என்று மனதிற்கு ஒரு போட்டியை ஏற்படுத்துங்கள். அப்போது மனதில் ஒரு வேகம் ஆற்றல் உண்டாகும். மீண்டும் மீண்டும் இதையே பின்பற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு சலிப்பே வராமல் பார்த்துக்கொண்டால் நாளடைவில் வெற்றி என்பது உங்களின் அருகில் வந்து விடும். வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

          உங்களுடைய ஆற்றலை யாரால் உணர்ந்து கொள்ள முடியுமோ அவர்களின் முன்னே செயல்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளின் அருமை யாருக்கு புரிகிறதோ அவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துச் செயல்படுங்கள். ஒரு வெற்றியை நீங்கள் பெறவேண்டும் என்றால் அதற்கு சிலரின் ஒத்துழைப்பாவது உறுதியாகத் தேவைப்படும். எனவே மற்றவரிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறுவதைப் பொறுத்தே உங்கள் மீது அவர்களுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகுமாறு நடந்தது கொள்ளுங்கள்.

அமைதியான அணுகுமுறை

      நீங்கள் சமுதாயத்திற்காகச் செய்யப்போகும் செயல்கள் அதனால் அங்கு வாழும்மக்கள் பெறப்போகும் நன்மைகள் இவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களைத் தூண்டும். தேசப்பற்று போன்றவற்றை அவரின் மனம்குளிர எடுத்துக்கூறுங்கள். அமைதியாகக் கனிவான பேச்சில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை உதவுபவர்க்கு உருவாக்குங்கள். உங்களின் ஆற்றலை உணர்ந்து உதவும் அவர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

       நீங்கள் வெற்றியை அடைந்து விடுவீர்கள் என்று உங்கள் மனம் நம்பிவிட்டால் போதும் நீங்கள் சாதனையாளர்தான். இதை மற்றவர்க்கு கூறி நம்பவைக்க முடியாதா? முடியும். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஐம்பத்திரண்டு வயதான நபர் ஒருவர். அவரிடம் “இந்த வயதில் சிகரத்தை ஏற உங்களால் எவ்வாறு முடிந்தது? கடினமாக இல்லையா? ஏறுவதற்குக் கால்கள் தடுமாறவில்லையா?” என்று கேட்டதற்கு அவர் “மலை ஏறும்போது என் கால்கள் தடுமாறவில்லை. ஏறுவதற்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிகரத்தின் உச்சியை அடையமுடியும் என்று என்மனதை நம்ப வைத்ததுதான் எனக்கு கடினமாக இருந்தது. மற்றப்படி இது எனக்கு எளிமையாகவே இருந்தது” என்று கூறினார். உங்கள் மனதை நம்பவைப்பது முன்னேற்றத்தின் அடுத்தபடியாகும். சமுதாயத்திற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனதிற்குப் பயிற்சி அளித்து தயார் படுத்துவது அடுத்தபடியாகும். செல்லும் பாதையில் படிகள் இருந்தால் ஏறி சென்றுவிடுவீர்கள். முட்கள் இருந்தால் என்ன செய்வீர்? பாதையில் முட்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள் என்று நிறைய இருக்கும். அவை உங்களுக்குத் தடைகள் அல்ல, நீங்கள் சாதிப்பதற்கான சவால்கள் என்பதை உணருங்கள்.

மற்றவர்க்காக ஒன்றை செய்வதற்கு நீங்கள் தயாரா!

          நமது நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர்கள் எதையும் தனிப்பட்ட அவர்க்கென்று செய்யவில்லை மற்றவர்களுக்கு செய்தனர். ஆங்கிலேயர்கள் நம்மக்களை அடிமை செய்த போது அவர்கள் குறைந்த எண்ணிக்கையே இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெள்ளைக்காரர்களைக் கையால் அடித்தே துரத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நம் மக்கள் நமக்கென்ன என்று இருந்ததால் சிலநூறு வருடங்கள் அவர்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். அதனை முறியடிக்க யாரேனும் முன்வர வேண்டுமல்லவா வந்தனர். திலகர், கோகலே, சுபாஸ்சந்திரபோஸ், காந்தி, நேரு, செக்கிழுத்த செம்மல் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவரும் தமக்காகப் போராடவில்லை, பிறருக்காகப் போராடினர். கொடிகாத்தகுமரன் அடிபட்டு குருதி பெருகி கீழே விழும் நிலையிலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டு முழக்கம் செய்தார். இவர்களைக் கவனித்தால் சமுதாயத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்ட அக்கறை அடுத்து வரும் சந்ததியினர் மீது கொண்ட பற்று இவையெல்லாம் அவர்களின் மனதில் வியாபித்து இருந்தன. அவர்களை செயல்பட வைத்தன.

நெருப்புக் கோழியின் குணம் வேண்டாம்

         ஒரு செயலை மற்றவர்க்காகத்தான் செய்கிறோம். அதனால் எந்தத் துன்பமும் வராது என்று நினைத்து நீங்கள் செயலை ஆரம்பித்தால் நெருப்புக் கோழியின் செயலைப் போல ஆகிவிடும். அந்த நெருப்புக் கோழி தனது எதிரிகள் தன்னை தாக்க துரத்தும் போது காத்துக்கொள்ள ஓடிச்சென்று ஒரு குழிக்குள் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம். அது தன் உருவம் வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைக்க எதிரிகளான வேடர்கள் எளிமையாகப் பிடித்து விடுவார்களாம். அவ்வாறுதான் நீங்கள் நினைப்பதும். தொடங்கும் செயல் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொண்டு அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் சென்று கருத்துக்களை அவர்களின் அனுபவங்களை சேகரித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி விடவும் கூடாது. எந்த அளவிற்கு இவை உண்மையான செய்திகள் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று மெய்யானவற்றை  சிந்தனை செய்து தெளியவேண்டும்.

         உங்களை மற்றவர்கள் புகழ வேண்டும். போற்ற வேண்டும். பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த செயலையும் செய்யாதீர்கள். எதையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே தியாக மனப்பான்மை.

       ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றைச் செய்வது சேவையாகாது. அது பண்டமாற்று முறையே ஆகும். உங்களின் மதிப்பு மிகுந்த செயல்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்.

      உங்களால் என்ன நன்மைகளைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். சோகங்களைச் சவாலாக எதிர்கொள்ளும் நீங்கள்தான் சமுதாயத்தின் நாயகன் இதில் ஐயமில்லை.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

கண்ணப்ப நாயனார்‌ புராணம்

கண்ணப்ப நாயனார்

கண்ணப்ப நாயனார்‌

பொத்தப்பி என்னும்‌ மலைநாட்டில்‌ வேடர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ திண்ணனார்‌. இவர்‌ வேடர்‌ குலத்‌ தலைவராக விளங்கினார்‌.

திண்ணனார்‌ வேட்டையாடுவதில்‌ நிகரற்ற வீரராகத்‌ திகழ்ந்தார்‌. தன் பணியாளர்‌ சிலருடன்‌ காட்டிற்குச்‌ சென்று வேட்டையாடி, விலங்குகளைக்‌ கொன்றார்‌. அதைத்‌ தம்‌ இனத்தவருக்குத்‌ தந்தும்‌ தானும்‌ உண்டும்‌ வாழ்ந்தார்‌.

ஒருநாள்‌ தன்‌ நண்பர்களான காடன்‌, நாணன்‌ என்பவர்களுடன்‌ சேர்ந்து காட்டிற்கு வேட்டையாடச்‌ சென்றார்‌. கொழுத்த பன்றி ஒன்றை வேட்டையாடினார்‌. அவர்கள்‌ நடந்து நடந்து பொன்முகலி ஆற்றங்கரையை அடைந்தனர்‌. அப்போது அவர்களுக்கு மிகுதியான பசி உண்டானது. திண்ணனார்‌ அப்பன்றியை தீயில்‌ வாட்டும்படி காடனிடம்‌ கூறினார்‌.

அப்போது அருகிலிருந்த மலை திண்ணனாரைக்‌ கவர்ந்தது. அவர்‌ அம்மலைமீது ஏறிச்‌ சென்றார்‌. அவரது முற்பிறவி வாசனையால்‌ அவரை அறியாமல்‌ அவரது கால்கள்‌ சென்றன. அங்கே மரங்களின்‌ நடுவில்‌ சிவலிங்கம்‌ ஒன்றைக்‌ கண்டார்‌. ஏனோ அவரை அறியாமல்‌ பெருமானின்‌ மீது பேரன்பு சுரந்தது.

அச்சிவலிங்கத்தின்‌ மீது சில பூக்களும்‌ இலை தழைகளும்‌ இருந்தன. அதைக்கண்ட திண்ணனார்‌, நாணனிடம்‌ “இந்தக்‌ கொடிய காட்டில்‌ இந்த வேலையை யார்‌ செய்கிறார்கள்‌?” என்று கேட்டார்‌.

நாணனும்‌, ஒரு வேதியர்‌ அவ்வாறு தினமும்‌ செய்து அன்னம் படைப்பதாகக் கூறினான். உடனே திண்ணனார்‌, “இக்காட்டில்‌ தனித்திருக்கும்‌ இவருக்குப்‌ பசிக்காதோ! உடனே இவருக்கு உணவு படைக்க வேண்டும்‌!” என்று கூறியபடி மலையை விட்டு இறங்கினார்‌. அவரது செய்கைகள்‌, நாணனுக்கு வேடிக்கையாக இருந்தது.

மலையை விட்டு இறங்கிய திண்ணனார்‌, காடன் சுட்டு வைத்திருந்த பன்றிக்‌ கறியை எடுத்து சுவைத்துப்‌ பார்த்தார்‌. அதில்‌ நல்ல தசைகளை மட்டும்‌ எடுத்து வைத்தார்‌. பின்‌ பொன்முகலி ஆற்றிற்குச்‌ சென்று நீரை எடுத்து வாயில்‌ அடக்கிக்‌ கொண்டார்‌. நேராக மலைக்கு ஒடினார்‌.

அச்சிவலிங்கத்தின்‌ மீது வாயிலுள்ள நீரை உமிழ்ந்தார்‌. தான்‌ கொண்ட வந்த பன்றிக்கறியை அதன் முன்‌ வைத்தார்‌. நெடுநேரம்‌ சிவலிங்கத்தையே பார்த்தபடி நின்றார்‌. நாணனும்‌ காடனும்‌ தங்கள்‌ தலைவர்‌ திண்ணனாருக்கு ஏதோ தீவினை தொற்றிக்‌ கொண்டது என்று நினைத்தார்கள்‌. செய்தியை திண்ணனாரின்‌ தந்தையிடம்‌ கூறச்‌ சென்றார்கள்‌.

ஆனால்‌ திண்ணனாரோ அவவிடத்தைவிட்டு அசையவில்லை. இரவில்‌ தனித்திருக்கும்‌ சிவலிங்கத்திற்குக்‌ கொடிய விலங்குகளால்‌ தீங்கு ஏதேனும்‌ நேர்ந்துவிடுமோ என்று அஞ்‌ச இரவு முழுவதும்‌ அவ்விடத்திலேயே நின்றார்‌. மறுநாள்‌ காலையிலேயே மலையை விட்டு இறங்கிச்‌ சென்றார்‌.

காலை வழக்கம்போல்‌ வேதியர்‌ சிவலிங்கத்திற்கு பூசை செய்ய அங்கு வந்தார்‌. லிங்கத்தின்‌ முன்‌ இருந்த மாமிசத்தைப்‌ பார்த்தார்‌. “ஐயோ! இந்தப்‌ பாதகத்தையார்‌ செய்தது! என்று துடித்தார்‌. உடனே அவற்றை அப்புறப்படுத்தினார்‌. சிவலிங்கத்தை நீராட்டி, பூக்கள்‌ சூடி, அன்னம்‌ படைத்தார்‌. பெருமானை வணங்கிவிட்டு அவ்விடம்‌ விட்டுச்‌ சென்றார்‌. அன்றிரவும்‌ திண்ணனார்‌ வந்து, பன்றிக்‌ கறியைப்‌ படைத்தார்‌. மெய்யுருக நின்றார்‌. இவ்வாறு பல நாட்கள்‌ நடைபெற்றது.

ஒருநாள்‌ மனம்‌ பொறுக்காத வேதியர்‌, “சிவபெருமானே! இவ்வாறு மாமிசம்‌ படைக்கும்‌ அடாத செயலைச்‌செய்பவர்‌ யாரோ? இக்கொடிய செயலை நீரே மாற்ற வேண்டும்‌” என்று வேண்டிக்‌ கொண்டார்‌. பின்‌ தன்‌ இல்லம்‌சென்றடைந்தார்‌.

சிவபெருமான்‌ அவ்வேதியரது கனவில்‌ தோன்றினார்‌. “வேதியரே!. எனக்குத்‌ இனமும்‌ இரவில்‌ ஒருவன்‌ வந்து மாமிசம்‌ படைப்பது என்மேலுள்ள அன்பினாலேயே! அவனது அன்பை நீர்காண வேண்டுமென்றால்‌ இன்று இரவு வரவேண்டும்‌. அவன்‌ அறியாதபடி ஒளித்திருந்து கவனிக்க வேண்டும்‌!” என்று சொல்லி அருளினார்‌.

வேதியரும்‌ இரவில்‌ மலைக்குச்‌ சென்று ஒரு மரத்தின்‌ பின்னால்‌ ஒளிந்திருந்தார்‌. வழக்கம்போல்‌ இரவில்‌ மலையை நோக்கி வந்தார்‌ திண்ணனார்‌. வரும்‌ வழியில்‌ அவருக்குச்‌ சில கெட்ட சகுனங்கள்‌ தோன்றின. அவர்‌ மனதில்‌ துயரம்‌ உண்டானது. அவர்‌ நேராக சிவலிங்கத்தின்‌ அருகில்‌ ஒடிவந்தார்‌. அப்போது சிவலிங்கத்தின்‌ ஒரு கண்ணிலிருந்து ரத்தம்‌ வடிந்து கொண்டிருந்தது.

அதைக்கண்ட திண்ணனார்‌ மனம்‌ பதைத்தார்‌. “ஐயோ! இந்த அடாத காரியத்தைச்‌ செய்தவர்‌ யார்‌?” என்று கூறியபடி அங்கும்‌ இங்கும்‌ யாராவது தென்படுகிறார்களா என்று தேடினார்‌. யாரையும்‌ காணவில்லை. உடனே, அவர்‌ கணமும்‌ யோசிக்காமல்‌ தன்‌ அம்பை

எடுத்து தன்‌ ஒரு கண்ணைத்‌ தோண்டி எடுத்தார்‌. சிவபெருமானின்‌ பழுதுபட்ட கண்ணை அகற்றி, அவ்விடத்தில்‌ தன்‌கண்ணைப்‌ பொருத்தினார்‌. ரத்தம்‌ வடிவது நின்றது. திண்ணனார்‌ மனம்‌ கொஞ்சம்‌ சமாதானம்‌ அடைந்தது.

ஆனால்‌ சிறிது நேரத்திலேயே சிவலிங்கத்தின்‌ மறுகண்ணிலிருந்து ரத்தம்‌ வழிந்தது. அதைக்கண்ட திண்ணனார்‌ பதறிப்போனார்‌. உடனே அம்பை எடுத்தார்‌. தன்‌ மறு கண்ணைத்‌ தோண்டி எடுக்க முன்வந்தார்‌. தன்‌ மறுகண்‌ணையும்‌ எடுத்து விட்டால்‌ தனக்குப்‌ பார்வை போய்விடுமே என்பதால்‌, அடையாளத்திற்காக சிவலிங்கத்தின்‌ கண்ணின்‌ மீது தன்‌கால்‌ விரல்களைப்‌ பதித்துக்‌ கொண்டார்‌. பின்‌ அம்பை எடுத்து தன்‌ மறுகண்ணைத்‌ தோண்டி எடுக்க முயன்றார்‌.

அக்கணமே சிவபெருமான்‌, “கண்ணப்பா நில்‌! கண்ணப்பா நில்‌!” என்று அசரீரியாய்‌ ஒலித்தார்‌. திண்ணனாரின்‌ கையைத்‌ தடுத்தார்‌. அத்திருக்காட்சியை, மரத்தின்‌ பின்‌ மறைந்திருந்த வேதியர்‌ கண்டார்‌. திண்ணனார்‌ பெருமான்‌ மீது கொண்டிருந்த பேரன்பை உணர்ந்தார்‌. பெருமகிழ்ச்சி அடைந்தார்‌.

சிவபெருமான்‌ திண்ணனாரிடம்‌, “என்‌ மீது பேரன்பு கொண்டதால்‌ எப்போதும்‌ என்‌ நிழலில்‌ விற்றிருப்பாயாக!” என்று பேரருள்‌ புரிந்தார்‌. இறைவனுக்குக்‌ கண்‌ தந்ததால்‌, இறைவராலேயே ‘கண்ணப்பர்‌’ என்று அழைக்கப்பட அழியாப்‌ பேறு பெற்றார்‌.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

 

மற்றொரு கனாக்காலம் 

மற்றொரு-கனாக்காலம்

தன்னம்பிக்கை கட்டுரை

கட்டுரையின் ஆசிரியர்

ஹமீது தம்பி,

கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம்.

      நண்பர் புன்யமீனை சந்திக்க போய் இருந்தேன் . அப்போது அவரை சந்திக்க இன்னொருவரும் வந்திருந்தார். புன்யமீண் அவரை எனக்கு அறிமுகம்  செய்து வைத்தார் .இவர் என் பால்ய நண்பர் ராஜசேகர். சிறந்த கல்வியாளர், அவரிடம் படித்த பலர் பெரும் பதவிகளில் இருப்பதாகவும் சொன்னார் .

       பிறகு அவர்களுக்கிடையே நடந்த உரையாடல், எனக்குள் ஏற்கனவே இருந்த பல கேள்விகளுக்கு விளக்கமோ, விடையோ கிடைத்தது போலிருந்தது.

      ராஜசேகர் “நான் கற்பித்ததெல்லாம் பணம் சம்பாதிக்க தான் .ஆனால் எப்படி வாழ்வது என்று இந்த முதிய வயதில் இதுவரை கற்றுக்கொள்ளவில்லை”, அதற்காகத்தான் உங்களிடம் யோசனை கேட்க வந்திருக்கிறேன்” என்றார்  .

    அதற்கு  புன்யமீண்” நீங்கள் உங்கள் அறிவியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். உங்கள் துறையில் ஒரு பெரிய ஆளுமை. நான் வெறும் அந்த கால சாதாரண பட்டம் படித்தவன், என்னிடம் யோசனை கேட்க வந்திருப்பது வேடிக்கை தான்” என்றார் .   

     வந்தவர் நீங்கள் “இப்படி பேசுவது தன்னடக்கமா, அல்லது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியவில்லையா?.  உங்களைப் பற்றி நான் நன்கு அறிவேன் .நம் சம வயதினரில்  மிகவும், சந்தோசமாகவும், நிம்மதியாகவும் ,திருப்தியாகவும் வாழ்வது நீங்கள்தான். நீங்கள் பெரிய பணக்காரர் இல்லை. பெரிய சேமிப்பும் இல்லை. கோயில், குளம், என்று போகிற பெரிய ஆன்மீகவாதியும் இல்லை.  மூத்த பிள்ளையின் குடும்பத்தோடுதான் இருக்கிறீர்கள். இந்த வயதில் எப்படி வாழ்வது? என்று உங்களிடம்தான் தெரிந்துகொள்ளமுடியும்.

இது,பள்ளிகளிலோ, கல்லூரியிலோ கற்றுக்கொடுப்பதில்லை. ஆன்மீகவாதிகளிடமும் அதற்கான நிவாரணம் இருக்கும் என்று தெரியவில்லை” என்றார்.  

தன்னடக்கமில்லை. நான் பெரிய   சிந்தனைவாதியோ, சித்தாந்தவாதியோ இல்லை. சாதாரணமான மனிதன். வாழ்க்கை ஓடம் கால நீரோட்டத்தில் போகும் போக்கில் போகிறவன். என் சித்தாந்தம் என்றால் ஒன்று தான் .

அது “நன்றும் தீதும் பிறர் தர வாரா” .

“நாம் தான் எல்லாவற்றிற்கும் காரணம். நான் நாத்திகனுமல்ல, உங்களைப்போல் ஆத்திகனுமல்ல . கடவுள்  இருக்கிறார் என்று நம்புகிறேன். அது இயற்கையாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் நம்மிடம் எதையும் எதிர்பார்க்கிறார் என்று தோன்ற வில்லை” என்றார்  புன்யமீண் .

வந்திருந்தவர் கடவுள் பற்றியோ, ஆன்மிகம் பற்றியோ கேட்க வரவில்லை. எனக்குள்ள பிரச்சினைகளுக்கு உங்களிடம், தீர்வு இருக்கும் என்ற நம்பிக்கையில் வந்திருக்கிறேன் என்றார்.

 புன்யமீண், நான் பரிகாரம் சொல்ல ஆன்மீகவாதியோ, மதநம்பிக்கை உடையவனோ , அல்ல . என்னிடம் உங்களைப்போன்ற அறிஞர் வந்து தீர்வு கேட்பது வினோதம் என்றார் .

வந்தவர் விடாமல், நீங்கள் ஆன்மீகவாதியோ, மதநம்பிக்கை இல்லாதவராகவோ, இருக்கலாம், உங்கள் வாழ்கையில் சில கொள்கைகள் இருக்கும் . அரசியல் ,சமூகம் ,உறவு, நட்பு  என்று. அதுபோக உங்களுக்கு வழிகாட்டியோ, ஆதர்ச மனிதரோ இருக்கலாம். அதுபற்றி சொல்லுங்கள் என்றார் . 

புன்யமீண் எனக்கு வழிகாட்டிகள் என்றால், புத்தகங்கள்தான். நான் படித்த அகடமிக் கல்வி எனக்கு சம்பாதிக்க வழிகாட்டியது. மற்றபடி, எனக்கு வழிகாட்டி என்றால் படித்ததுதான். எந்தக்காலத்திலும் படிப்பதை நிறுத்தியதில்லை.

தினம் குறைந்தது ஐந்துமணி நேரம்படிப்பேன் என்றார். நான் எல்லாவித புத்தகங்களும் படிப்பேன். தமிழ், ஆங்கிலம் என்று வித்யாசமில்லை . கதை, இலக்கியம், அறிவியல், சரித்திரம், மனநலம், சுய முன்னேற்றம் என்று உலக இலக்கியங்களிலிருந்து, இன்றைய தமிழ் எழுத்தாளர்கள்வரை  எதையும் படிப்பேன். பிடித்த பிடிக்காத எழுத்தாளர்கள் உண்டு. ஆனால் வழிகாட்டி என்று இவர்களில் யாரும் இல்லை. அவர்களின் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொள்வேன். பெரியாரையும் படிப்பேன். கி.வா.ஜெகநாதனையும், கிருபானந்தவாரியாரையும் படிப்பேன். டால்ஸ்டாய், டோவ்ச்டோவ்ச்கி.கோர்கி போன்ற ருஷியா எழுத்தாளர்களையும் படிப்பேன். ஜேன் ஆஸ்டின், சார்லஸ் டிக்கன், போன்ற அன்றைய ஆங்கில எழுத்தாளர்களின் புத்தகங்களிலிருந்து படிப்பேன். அன்றைய தமிழில் சங்க இலக்கியங்களிலிருந்து தமிழ் எழுத்தளர்கள்  சாண்டில்யன்,கல்கி ,கிவாஜ, ஜெயகாந்தன், சுஜாதா, இன்றைய கி.ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று எல்லோரையும் படிப்பேன்.

முக்கியம் என்னுடைய சொந்த வாழ்கையில் ஏற்பட்ட அனுபவங்கள். அவை கற்பித்த பாடங்களும் எனக்கு என் சொந்த வாழ்கையில் கற்றது ஒரு ஐம்பது வருட பாடம்தான். ஆனால் படிக்கும் பழக்கத்தில் பல நூறு நபர்களின் வாழ்கையை தெரிந்து கொண்டேன். இவற்றிலிருந்து தேவையானவற்றை  மட்டும் எடுத்துக்கொள்வேன் என்றார் .

ராஜசேகர் தேவையானவை எது என்று எப்படி தெரியும் ? என்றார்

புன்யமீண் “மிகவும் சுலபம். ஒரு குழந்தை மனதைப்போல, திறந்த மனதை வைத்திருக்க வேண்டும். அந்த கருத்தை ஒரு நடுநிலையில்தான் பார்க்க வேண்டும் .  நம்முடைய சொந்த கருத்து, நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும், சொல்லப்பட்டிருப்பது தர்க்கரீதியாக, அறிவியல் பூர்வமாக சரியானதாகப்பட்டால், ஏற்றுக்கொள்ளலாம். முக்கியமாக அந்தந்ததுறையில் வல்லுனர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். உதாரணமாக நமக்கு ஏதாவது உடல் நல பிரச்சினை என்றால், நமக்கு தெரிந்த கைவைத்தியம் பார்ப்பதில் தவறில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் நாமே பரிகாரம் கண்டுகொண்டிருக்ககூடாது. உலகத்தில் எத்தனை மனிதர்கள் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் மருத்துவர்கள்தான். ஒருவரிடம் தலை வலிக்கிறது என்று சொல்லிப்பாருங்கள். நிச்சயம் ஒரு மருத்துவம் சொல்வார். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மருத்துவம் சொல்வார்கள். அதற்காக உடனே ஒரு ஸ்பெசலிஸ்டை பார்க்கவேண்டியதில்லை. குடும்ப டாக்டர் என்று ஒரு சாதாரண GP அருகில் இருக்கும் டாக்டரை தொடர்பில் வைத்திருங்கள். நீங்கள் சுலபமாக அணுகக்கூடியவராக எந்தநேரத்திலும் தொலைபேசியில் அணுகக்கூடிய மருத்துவராக இருத்தல் நலம். அவரிடம் ஆலோசனை பெறுங்கள். அவர் ரெபர் செய்தால் தவிர ஸ்பெசலிஸ்ட் இடம் போகாதீர்கள் .

     இதேபோன்று எந்த பிரச்சினையிலும் உங்களுக்கு அடுத்து இருப்பவர்களிடம் யோசனை கேட்பதில் தவறில்லை. ஆனால் முடிவு செய்வது நீங்களாகத்தான் இருக்க வேண்டும். எல்லோரிடமும் பகுத்தறிவு இருக்கிறது. தற்போது பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்று தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. எதையும் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.  

         அதிகமாக நமக்கு கிடைக்கும் யோசனைகள் பொதுப்புத்தியிலிருந்துதான். அநேகமாக அந்த பொதுவான நம்பிக்கைகள் மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலோ, முன்னோர்கள் அவர்கள் காலத்திற்கு ஏற்ப ஏற்பட்ட பழக்கங்ளாகவோ இருக்கலாம். ஆனால் அது எதார்தத்திலோ, தர்கரீதியாகவோ பொருந்தாமல் போகலாம். அதை கலாச்சாரம், நம் பாரம்பாரிய பழக்கம் என்று பிடித்துக்கொண்டு செய்வது அறிவுடைமை ஆகாது. பதிலுக்கு பிரச்சினைகளைத்தான் கொடுக்கும். சரி  உங்கள் பிரட்சினைதான் என்ன? நான் உங்கள் நிலையில் இருந்தால் என்ன செய்வேன் என்று வேண்டுமானால் சொல்கிறேன். ஆனால் அவற்றில் எதை எடுத்துக்கொள்வதென்று முடிவு செய்யவேண்டியது நீங்கள்தான். என்றார் புன்யமீண். 

        ராஜசேகர் தனக்குள்ள மனவருத்தத்தை சொல்ல ஆரம்பித்தார் .“என்னிடம் நல்ல வசதி இருக்கிறது. மகள் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாள். உங்களைப்போல் மகன் குடும்பத்துடன் இருக்கிறேன். இருக்கும் வீடும் மற்றும் சொத்துக்களும் நான் சம்பாதித்தவைதான். வசதிக்கு எந்த குறையும் இல்லை. ஆனால் இன்று ஒரு அனாதை போல் உணருகிறேன். நான் ஐந்து ஆண்டுக்கு முன்பு ஓய்வுபெற்றேன். அதிலிருந்து என்னிடமிருந்து எல்லோரும் விலக ஆரம்பித்துவிட்டார்கள். வீட்டிலுள்ளவர்களே என்னை மதிப்பதில்லை. மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் யாரும் என்னை மதிக்கவில்லை. ஒவ்வொருநாளும் அவமானங்களுக்கும், மன வருத்தங்களுக்கும் குறைவில்லை . முப்பத்தைந்து காலம் , அன்போடு வாழ்ந்த என் இனிய மனைவிகூட என்னை அவமானப்படுத்துகிறாள் . அவளின் அன்பு எங்கே போனது ? நீங்கள்தான் என் இன்ஸ்பிரேசன், வழிகாட்டி என்று சொன்ன மகன் இன்று நாங்க பாத்துக்குறோம், நீங்க உங்க வேலையப்பாருங்க  என்கிறான். மருமகள் ஜாடை மாடையா, வயசான காலத்துல அமைதியா பைபிள், சர்சுன்னு இல்லாம, எல்லாத்துலயும் தலைய விட்டுக்கிட்டு பிரட்சின 

பண்ணுது “ என்று ஒருமையில் பேசுகிறாள் . 

“நான் வீட்டில் இப்போது வேண்டாத லயபிளிடி ஆகிவிட்டேன் .

          தினசரி என்னுடைய நேரங்களில் மனசுக்கு சற்று ஆறுதலான நேரம், மாலையில் பார்க்கில் கார்த்திகேயன், குணா, மனோகரன், எட்வின், உசைன் போன்ற நண்பர்களைச் சந்திக்கும்போதுதான். இவர்கள் எல்லோருமே உன்னைப்போல், என் பால்யகால நண்பர்கள். பள்ளியிலும் கல்லுரியிலும் ஒன்றாக படித்தவர்கள். இவர்கள் எல்லோரும் பலதரப்பட்ட சமூக பொருளாதார நிலைகளில் உள்ளவர்கள் . 

பெரும்பாழும் நாங்கள் பகிர்ந்து கொள்வது எங்களுக்கு ஏற்பட்ட  அவமானங்களையும், சோகங்களையும்தான். அந்த நேரத்தில் அதில் ஒரு ஆறுதல் கிடைப்பதாகப்படும். இதற்காகவே மாலையில் அந்த பூங்காவில் கூடுவோம்.  வாக்கிங் போவதாக காரணம் சொல்லிக்கொண்டு வருவோம். கால் மணிநேரம் கூட வாக்கிங் இருக்காது. சும்மா ஒரு சுற்று சுற்றிவிட்டு நாங்கள் கூடும் அந்த தூங்குமூஞ்சி மாரத்தடியில்   சிமன்ட் பெஞ்சுகளில் கூடிவிடுவோம். எங்களுக்கு அன்றாட வாழ்க்கையின் சோகங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கொள்வோம். இளமைக்கால இனிய நிகழ்வுகளை நினைவூட்டி அரட்டையடிப்போம். ஒரு நாளில் நாங்கள் சந்தோசமாக இருப்பது அந்த கணங்கள் மட்டுமே. அவர்களிளும் ஒவ்வொருவராக சொல்லாமால் கொள்ளாமல்,விடை பெற்றுக்கொண்டிருகரார்கள். நான்குநாட்களுக்குமுன்  ஜோபிசேட்டன் போய் சேர்ந்துட்டான். அவனின் கேலியும் கிண்டலும் ஒரு பெரிய இழப்பு எங்கள் க்ரூப்பிற்கு .

உன்னைத்தான் வெகுநாளாக பார்க்க வேண்டுமென்றிருந்தேன். உன் வாட்சப் பதிவுகளில் எனக்கு உன் வாழ்க்கையின் மகிழ்வும், திருப்தியும் புரிந்தது. அடிக்கடி வந்து பார்க்க விருப்பம்தான். ஆனால் நீ இத்தனை தூரத்தில் இருக்கிறாய். எப்படியும் இன்று உன்னைபார்த்துவிடவேண்டுமென்று கிளம்பி வந்துவிட்டேன் என்றார்.

சந்தோசம் .”உனக்கு நான்  இப்போது என்ன சொல்ல  வேண்டும்?” என்றார் புன்யமீண். 

“எப்படி உன்னால் சந்தோசமாக , திருப்தியாக இருக்கிறாய் ? அந்த ரகசியத்தை சொல் “ என்றார் ராஜசேகர்.

ரகசியம் என்று ஏதுமில்லை . ரகசியம் (SECRET) ரோண்டா பைன்(Rhonda Byrne) என்பவர்   எழுதிய ஒரு புத்தகம் ஆங்கிலத்தில் உள்ளது. உலக அளவில் அதிகம் விற்பனையான புத்தகங்களில் ஒன்று. தமிழில் கூட மொழிபெயர்ப்பு கிடைக்கிறது. அதில் நிறைய  நல்ல விடயங்களை பதிவிட்டுள்ளார். வாழ்கையின் வெற்றி ரகசியங்கள் அவை. ஆனால் வெற்றி பெற்றிவிட்டால் மட்டும் மகிழ்ச்சி வந்துவிடுமா என்றால் இல்லை. அந்த வெற்றியின் மகிழ்ச்சி சில கணங்கள்தான். அதன் பின் வேறொரு குறிக்கோள் வந்து, அதன் வெற்றியைநோக்கி பயணிக்க வேண்டியதிருக்கும். அதனால் அதுவும் சந்தோசத்தின் தேடுதலுக்கு உதவாது .

சந்தோசத்தின் தேடுதல்தான் தேவையான தேடுதல். தேடுதல் என்பதுகூட தவறு. ஏனென்றால் தேடுவதற்கு அது தொலைந்து போன பொருள் அல்ல. நம்மிடமே எப்போதும் இருப்பதுதான். நாம் வெளியில் தேடிக்கொண்டிருக்கிறோம்.  சிலர் மூக்குக்கண்ணாடியை தலையில் மாட்டிகொண்டு, அறை முழுதும், தேடிக்கொண்டிருப்பார்கள். அதுபோல் நம்மிடம் இருக்கும் சந்தோசத்தை தொலைந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு வெளியில் தேடிக்கொண்டிருபோம் .

நம்மிடம் ஏற்பட்டிருக்கும் பருவங்களின் பரிமாண வளர்ச்சி பற்றி எண்ணியதுண்டா ? 

குழந்தை பருவத்தில் எத்தனை மகிழ்வோடு இருந்தோம். இன்று அதுபோல் ஏன் இல்லை என்று நினைக்கிறோம். உருது கவிஞர் மிர்சா காலிப் எழுதிய கவிதையின் கருத்தை தழுவி, நண்பர்(என்னை காட்டி) எழுதிய கவிதை ,

குழந்தை பருவத்து மழைக்காலம்

“வெட்டிவேர் வாசத்துடன் மண் மணக்கும்,

பன்னீர் மரத்தில் மணத்துடன் சொட்டும் நீர்த்துளிகள்,

காகிதக்கப்பல் மிதக்கும் முற்றத்து மழைநீர் ,

நிரம்பி வழியும் கல்குளமும் மண்குளமும்

உம்மாவின் கைமணத்தில் இஞ்சி மணக்கும் தேநீர்,

வேலிகளில் நடத்திய தட்டான் பூச்சி வேட்டை ,

பொன்னிக்குருவி விற்றுவரும் வேடுவப்பெண்கள் ,

அடைமழையில் ஆனந்த குளியல் ,

சிமெண்டு முற்றத்து கசியலுக்கு அஞ்சி

சுண்ணாம்புத்தரை தளத்துக்குழியில் போர்வைக்குள் உறக்கம் ,

அத்தனையையும் இளமைக்காலத்தோடு தொலைத்துவிட்டு ,

மழை இல்லா இந்த பாலையில் பல்லாண்டுகளாக ஏங்கித்தவிக்கும்

நான் கேட்பது “இறைவா திருப்பித்தா என் குழந்தை பிராயத்தை. 

நீ எனக்குத்தந்த எல்லாவற்றையும் எடுத்துக்கொள்”.

இத்தனை மகிழ்ச்சியையும் குழந்தை பருவத்தோடு போய்விட்டதாகவே நினைக்கிறோம் . ஏன் தொலைத்தோம் ?”

 என்னைக்கேட்டால் தொலைந்துவிட்டதாக நினைக்கிறோம். காரணம் என்ன? பெற்றவர்கள் எல்லோருக்கும் வாழ்கையில் பெரிய கனவாக இருப்பது பிள்ளைகளின் எதிர்காலம்தான். பிள்ளைகள் எப்படி வளரவேண்டும், எப்படி வரவேண்டும் என்ற கனவுகளும்,திட்டங்களும் இல்லாத பொறுப்பற்ற பெற்றோர் யாருமில்லை. வாழ்க்கை சூழலில் இந்த கனவுகளுக்கும், திட்டங்களுக்கும் நடைமுறை சிக்கல்களும் ஏமாற்றங்களும் வருவது ஒருபுறம். இந்த கனவுகளும் திட்டங்களும் சரியானதுதானா? நியாயமானதுதானா ? ஆதாரமாக சிந்திக்கவேண்டிய விடயம். இந்த கனவுகள் பொதுவாக பொருளாதார ரீதியாக வாழவைக்க என்ற அடிப்படையில் மட்டுமே இருக்கிறது. டாக்டராகவோ, பெரிய பொறியாளராகவோ, கணக்கு தனிக்கையாளராகவோ(Auditor), இந்திய நிர்வாக சேவை (IAS), இந்திய காவல் சேவை(IPS) போன்ற பதவிகள் வகிக்க வேண்டும் என்ற கனவுகளோடுதான் அநேகமாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் .இதற்காக பெற்றோர்கள் சந்திக்கும் தடைகளும், விதிமீறல்களும் எத்தனை? கனவுகளை அடைய தகுதிக்கு மீறிய செலவுகளுக்கு கடன் வாங்கி வாழ்க்கை முழுவதும் கடனாளியாக வாழ்பவர்கள் எத்தனை பேர்? இத்தனை செய்தும் அவர்கள் கனவுகள் முற்றுப்பெராமல் போனவர்கள் எத்தனை பேர்?

இந்த எலிப்பந்தயத்தில்(Rat Race) கூட்டத்தோடு பொதுப்புத்தி கொண்டு ஓடத்தொடங்குகிறோம். இந்த பந்தயத்தின் இலக்கு பதவி, பணம் மட்டுமே. அதற்கு செலவிடும் காலம் வாழ்வில் பாதிக்கு மேல்.முடிவில் வெற்றி கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் ,எதிர்கொள்ளகாத்திருப்பது ஏமாற்றமும் விரக்தியும்தான்.

பிறகு கனவுகாண்பதிலும் திட்டமிடுதளிலும் செயலாக்குவதிலும் என்ன தவறு செய்கிறோம்? இந்த கனவுகளில் உயரிய சரியான நோக்கமோ, வழிகாட்டலோ, செயல்முறையோ இல்லை என்பதுதான் உண்மை. கனவுகளே தவறாக இருக்கும்போது, முடிவுகள் எப்படி சரியாக இருக்கும்? கனவு காணச்சொல்லி அப்துல் கலாம் முதல் அனைவரும் சொல்கிறார்கள். மற்றும் சிலர் எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என்று சொல்கிறார்கள். கனவு காண்பதும், ஆசைப்படுவதும் தவறில்லை. ஆனால் இங்கே நாம் சிந்திக்கவேண்டியது நமக்கு இறைவன் அளித்த இந்த அழகிய வாழ்கையை எப்படி வாழ்வது என்பதுதான்

எதை நாம் கொண்டுவந்தோம்,

எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியில்

வாழ்கையை அன்பில் வாழ்ந்து

விடைபெறுவோம்”

மாயாவி திரைப்படத்தில் கவிஞர் பழனி பாரதி எழுதிய இறைவன் தந்த அழகிய வாழ்வு என்ற பாடலின் மேற்கண்ட வரிகள்போல் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறவேண்டும். அடிக்கடி நான் கேட்கும் இந்த பாடலின் கருத்து நம் கனவாகவும் நம் சந்ததிகளை பற்றிய கனவாகவும் அமைந்தால் ,அதுதான்  நாம் பிறந்ததின் வெற்றி.

பல பெற்றோர்கள் முதுமைக்காலத்தை, முதியோர் மையங்களிலும், தனிமையிலும் பிள்ளைகளால் குடும்ப வாழ்க்கை நிராகரிக்கப்பட்டு வாடுவதை பார்க்கிறோம்.கஷ்டப்பட்டு ஆளாக்கிய பிள்ளைகள் தான் கொண்ட கனவுகள் போல் அவர்களின் பிள்ளைகளுக்காக தூரத்தில் தங்களின் இளமையையும் சந்தோசத்தையும் தொலைத்துக்கொண்டு பணத்திற்காக எலி ஓட்டம் ஓடுவதை பார்க்கிறோம். தனக்கும் பெற்றோர்போல் முதுமை வரும் என்றும் பணத்தால் எல்லாம் வந்துவிடாது என்று உணரும்போது பெற்றோர் போல தானும் தாமதப்பட்டது தெரியும்.

பணத்தை கொண்டுமட்டும் அன்பு சந்தோசம் போன்ற மனிதநேயமான விடயங்கள் பெறமுடியாது என்பதை சிறிய வயதிலேயே பிள்ளைகளுக்கு புரியவைக்கவேண்டும். பணம் நிச்சயம் வேண்டும் அதற்காக இளமையை, சந்தோசத்தை, அன்பை, நேசத்தை, மனிதநேயத்தை தொலைத்து விட்டு சம்பாதிக்கும் அந்த பணம் கண்ணை விற்று ஓவியம் வாங்கியதற்கு சமம் .

அது போகட்டும் .இப்போது நீங்கள் என்ன செய்யலாம் . நீங்கள் என்றில்லை, நாம் என்ன செய்யலாம் என்று பார்ப்போம். அவர்களுக்கு (குடும்பத்தினருக்கு) புரிய வைக்க முயற்சிப்பது வீண் வேலை. அதை விட்டு நாம் நமக்காக வாழவேண்டும். அவர்களுக்கு செய்யவேண்டியவைகளை செய்வோம். நாம் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் ஆதரவிற்கும் குறைவைக்க வேண்டியதில்லை. ஆனால் பதிலுக்கு அவர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் ஏங்கவேண்டாம். தானாக வந்தால் ஏற்போம். இல்லையென்றால் நான் எவ்வளவு செய்திருப்பேன்.  நன்றி இல்லாமல் இருக்கிறீர்களே என்று சொல்லாதீர்கள். அன்புக்கு பதில் அன்பை எதிர்பார்க்க வேண்டாம். எந்த கண்டிசனும் இல்லாததுதான் அன்பு. நாம் செய்தது செய்வது எல்லாம் நம் கடமை. அதற்கு அவர்களிடமிருந்து பலனை எதிர்பார்ப்பது அன்பல்ல,வியாபாரம் . என்றார் புன்யமின்.

அவர்களுக்கு உங்கள்மீது அன்பில்லை, மரியாதை இல்லை, என்று அர்த்தமில்லை. நீங்கள் நினைப்பதுபோல் அவர்கள் நடக்காததால் அப்படி நினைக்கலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுடைய புரிதலும், அறிவும், நம்மிடமிருந்து முழுக்க முழுக்க வேறானவை .அதை புரிந்துகொண்டாலே போதும் . 

நாம் நமக்கு மகிழ்ச்சிதரும் காரியங்களை நாம் செய்வோம்  .அவர்களுக்கு விருப்பமான விடயங்களில் நாம் தலையிடவோ, விமர்சனம் செய்யவோ வேண்டாம். அவர்கள் வாழ்க்கை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அதுபோல் நமக்கு சரியென்ற காரியங்களை நாம் செய்துகொள்வோம் . அதுதான் மகிழ்ச்சியின் வழி.

தலைமுறை இடைவெளி என்பது இதுதான். இதை புரிந்துகொண்டால் போதும் .உங்கள் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்று நினைக்கிறேன். ஒரு நட்செல்லில் சொல்லவேண்டுமென்றால், பாரதி சொன்னதுபோலே 

விட்டு விடுதலையாகி நிற்பாய் ஒரு சிட்டுக்குருவியை போலே

கணியன் பூங்குன்றனார் சொன்னதுபோல்

‘நன்றும் தீதும் பிறர்தர வாரா’

அவ்வளவுதான் என் வாழ்வின் மகிழ்வின் ரகசியம்

குழந்தை பருவம் போன்ற மற்றொரு கனாகாலத்தை வாழுங்கள்   என்றார் புன்யமின்.

ராஜசேகர் கையை பிடித்துக்கொண்டு, இனி மகிழ்வோடு இருப்பேன் நான் எனக்காக என்றார் . 

எனக்கும் புரிந்தது .

ஏனாதிநாத நாயனார் புராணம்

ஏனாதிநாத-நாயனார்-புராணம்

ஏனாதிநாத நாயனார்‌

சோழநாட்டிலுள்ள எயினனூரில்‌ ஈழகுலத்தில்‌ பிறந்தவர்‌ ஏனாதிநாத நாயனார்‌ ஆவார்‌. சிறந்த சிவபக்தராய்‌ விளங்கிய இவர்‌, அரச குலத்தவருக்கு வாள்வித்தைப்‌ பயிற்சி அளித்து வந்தார்‌. அதில்‌ கிடைக்கும்‌ வருமானத்தைக்‌ கொண்டு சிவனடியார்களுக்குத்‌ திருத்தொண்டு புரிந்து வந்தார்‌.

ஏனாதிநாதரின்‌ புகழ்‌ எங்கும்‌ பரவியது கண்டு அவ்வூரிலுள்ள அதிசூரன்‌ என்பவன்‌ ஏனாதியார்‌ மீது பொறாமை கொண்டான்‌. அதிசூரனும்‌ வாள்‌ வித்தையே கற்பித்து வந்தான்‌.

ஒருநாள்‌ தன்‌ மாணவர்களுடன்‌ புறப்பட்டு வந்த அதிசூரன்‌, ஏனாதிநாதரைப்‌ போருக்கு அழைத்தான்‌. ஏனாதிநாதரும்‌ தன்‌ மாணவர்களுடன்‌ போருக்குக்‌ கிளம்பி வந்தார்‌. அதிசூரன்‌ போரில்‌ தோற்றோடினான்‌.

அன்றிரவு அதிசூரனுக்கு உறக்கம்‌ வராது தவித்தான்‌. ‘ஏனாதிநாதரை போரில்‌ வெல்ல முடியாது, வஞ்சகத்தால்‌ தான்‌ வெல்ல முடியும்‌! என்று முடிவெடுத்தான்‌. மறுநாள்‌ காலையில்‌ ஓர்‌ ஒற்றனை அனுப்பினான். அவனிடம்‌, “ஏனாதிநாதரும்‌ நானும்‌ தனித்தனியாய்‌ப் போரிட வேண்டும்‌. இப்போரில்‌ அவர்‌ என்னை வெல்ல முடியுமோ?” என்று கேட்டு வரவேண்டும்‌ என்று கூறினான்‌. ஒற்றன்‌ அவ்வாறு போய்‌ கேட்க, ஏனாதிநாதரும்‌ உடன்‌பட்டார்‌.

ஏனாதியாரின்‌ அடியவர்‌ பக்தியை அறிந்த அதிசூரன்‌, தன்‌ நெற்றியில்‌ திருநீற்றைப்‌ பூசிக்‌ கொண்டான்‌. தன்‌முகத்தைக்‌ கேடயத்தால்‌ மறைத்தவாறு, வாளேந்தி போர்க்களம்‌ புறப்பட்டான்‌. ஏனாதியாரின்‌ முன்வந்து நின்றான்‌. அருகில்‌ வந்ததும்‌ தன்‌ கேடயத்தை அகற்றினான்‌.

அதிசூரனனின்‌ நெற்றியில்‌ திருநீற்றைக்‌ கண்ட ஏனாதிநாதருக்கு அதிசூரனும்‌ அடியவராகவேத்‌ தெரிந்‌தான்‌. உடனே அவர்தன்‌ கையிலுள்ள வாளை தரையில்‌ போட்டார்‌. அதிசூரனை வணங்கினார்‌. இதுதான்‌ சமயம்‌ என்று அதிசூரன்‌ வாளை வீசி ஏனாதியார்‌ முன்‌ பாய்ந்தான்‌.

ஏனாதியாரின்‌ மனதில்‌ அக்கணமே ஓர்‌ எண்ணம்‌ தோன்றியது. ஆயுதமின்றி நிற்கும்‌ தன்னை அதிசூரன்‌ கொன்றால்‌, ‘நிராயுதபாணியைக்‌ கொன்றவன்‌’ என்ற அவப்பெயர்‌ அவனுக்கு உண்டாகுமே! என்று எண்ணிய ஏனாதிநாதர்‌ தன்‌ வாளைக்‌ கையிலெடுத்தார்‌. எனினும்‌ திருநீறு அணிந்தவனுடன்‌ போர்‌ புரிய அவர்‌ மனம்‌ ஒப்பவில்லை. ஏதோ பெயரளவிற்கு அதிசூரனோடு போர்‌ புரிவதுபோல்‌ நடித்த ஏனாதிநாதரை, சீற்றமாய்‌ பாய்ந்த அதிசூரன்‌ வாளால்‌ வெட்டிச்‌ சாய்த்தான்‌.

ஏனாதிநாதரின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சிய சிவபெருமான்‌, அக்கணமே அவருக்குத்‌ இருக்காட்சி அருளினார்‌. ஏனாதிநாத நாயனாரை சிவபதம்‌ சேர்த்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

எறிபத்த நாயனார்‌ புராணம்

எறிபத்த-நாயனார்

எறிபத்த நாயனார்‌

சோழ மன்னரின்‌ அதிகாரத்தில்‌ இருந்த கருவூரில்‌ பிறந்தவர்‌ எறிபத்த நாயனார்‌ ஆவார்‌. இவர்‌ சிவபக்தியிலும்‌ அடியவர்‌ பக்தியிலும்‌ சிறந்து விளங்கினார்‌. அடியவர்‌களுக்கு யாரேனும்‌ தீங்கிழைத்தால்‌ அவர்களை அழிப்பதற்காக மழுப்படை ஏந்தி வலம்‌ வந்தார்‌.

கருவூரில்‌ சிவகாமியாண்டார்‌ என்ற அடியவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ அவ்வூரில்‌ உறைந்தருளும்‌ ஆனிலைப்‌ பெருமானுக்கு நாள்தோறும்‌ பூக்கள்‌ சுமந்து செல்வார்‌. ஒருநாள்‌ காலை அவர்‌ அவ்வாறு பூக்கூடை சுமந்து வருகையில்‌, மன்னர்‌ புகழ்ச்சோழரின்‌ பட்டத்து யானை அவ்வழியே வந்தது. அந்த யானை சிவகாமியாண்டாரின்‌ கையிலிருந்த பூக்கூடையைத்‌ தட்டிப்‌ பறித்தது. அதனால்‌ பூக்கள்‌ வீதியெங்கும்‌ சிதறியது. யானைப்பாகர்கள்‌ யானையை விரைவாக ஒட்டிச்‌ சென்றனர்‌.

அவ்வழியே வந்து கொண்டிருந்த எறிபத்தர்‌ மிகுந்த கோபம்‌ கொண்டார்‌. அவர்‌ நேராக யானையின்‌ அருகில்‌ சென்றார்‌. தன்‌ கையிலிருந்த மழுவால்‌ யானையின்‌ தும்பிக்கையை வெட்டினார்‌. யானை பிவிறியபடி தரையில்‌விழுந்தது. அதைக்கண்ட யானைப்பாகர்கள்‌ எறிபத்தரைத்‌ தாக்க வந்தார்கள்‌. எறிபத்தர்‌ அவர்களையும்‌ தன்‌ மழுவால்‌ வெட்டிச் சாய்த்தார்‌.

பட்டத்து யானையை ஒருவர்‌ வெட்டிச்சாய்த்தார்‌ என்ற செய்தி கருவூர்‌ மடத்திலிருந்த புகழ்ச்சோழ மன்னருக்கு எட்டியது. அவர்‌ கோபம்‌ கொண்டு, புறப்பட்டு வந்தார்‌. என்‌ பட்டத்து யானையைக்‌ கொன்றவர்‌ யார்? என்று கேட்டார்‌.

எறிபத்தர்‌, ஆனிலைப்‌ பெருமானுக்காகச் சிவகாமியாண்டார்‌ கொண்டு சென்ற பூக்களை யானை சிதறடித்ததையும்‌, அதனால்‌, தான்‌ யானையை வெட்டிக்‌கொன்றதாகவும்‌ மன்னரிடம்‌ கூறினார்‌.

அகைக்கேட்ட புகழ்ச்சோழர்‌ எறிபத்தரை வணங்கி, “யானை செய்த தவறுக்கு யானையையும்‌ பாகர்களையும்‌ கொன்றால்‌ மட்டும்‌ போதாது. யானையின்‌ சொந்தக்‌காரனான என்னையும்‌ கொல்லுங்கள்‌!” என்று கூறி தன்‌ வாளை உருவி எறிபத்தரிடம்‌ தந்தான்‌.

தான்‌ வாளைப்‌ பெறாவிட்டால்‌, மன்னர்‌ தற்கொலை செய்து கொள்வாரோ என்று பயந்த எறிபத்தர்‌ வாளைப்‌ பெற்றுக்‌ கொண்டார்‌. பின்பு, எறிபத்தர் மன்னரின்‌ சிவபக்தியையும்‌ அடியவர்‌ பக்தியையும்‌ உணர்ந்து, தன்‌ கையிலிருந்த வாளால்‌ தன்‌ தலையைக்‌ கொய்து கொள்ள முயன்றார்‌.

அதைக்கண்ட புகழ்ச்சோழர்‌, “ஐயோ! என்னைத்‌ தீராப்‌பழிக்கு ஆளாக்கிவிட்டீர்களே!” என்று பதறியபடி எறிபத்தரைத்‌ தடுத்தார்‌. உடனே அவ்விடத்தில்‌, “அடியவர்களே! உமது இருவரின்‌ பக்தியை உலகறியச்‌ செய்யவே இவ்வாறு சோதித்தேன்‌!’ என்ற அசரீரி ஒன்று எழுந்தது. மறுகணமே இறந்து போன யானையும்‌ பாகர்களும்‌ மீண்டும்‌ உயிருடன்‌ எழுந்தார்கள்‌. மன்னரும்‌, எறிபத்தரும்‌ சிவனருளை எண்ணி மெய்ச்‌ சிலிர்த்தனர்‌.

புகழ்ச்சோழரும்‌ யானை மீதேறி புறப்பட்டார்‌. சிவகாமியாண்டாரும்‌ தன்‌ திருப்பணியைத்‌ தொடரச்‌ சென்றார்‌. இவ்வாறு தன்‌ வாழ்நாள்‌ முழுவதும்‌ அடியவர்க்குத்‌ திருத்தொண்டு புரிந்த எறிபத்த நாயனார்‌, சிவனடி நிழல்‌ சேர்ந்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

 

 

 

 

 

பெருங்கதையில் முகத்தூது

பெருங்கதையில் முகத்தூது

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

கொங்குவேளிர் அவர்களின் பெருங்காப்பியமான பெருங்கதையிலிருந்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. தலைவன் தலைவியருக்குள் நடக்கும் உள்ளுணர்வு போராட்டத்தை வெளிக்காட்டவும் தூது இலக்கியத்தின் ஒருபகுதியாகவும் இக்காப்பியமானது அமைகின்றது. இவ்வாய்வில் தலைவன் தன்னுடைய மனைவியின் வாயிலாகவே வேறொரு பெண்ணுக்குத் தூது அனுப்புகிறான்.  மனைவியும் இவற்றை அறியாமலேயே அவர்களுக்குள் நடக்கும் காதல் நாடகத்திற்கு துணை செய்கிறாள். இறுதியில் நடந்ததை எண்ணி மனம் வெதும்புகிறாள்.  தூது என்கிற பெயரில் ஒரு பெண்ணுக்கு தெரியாமலே அவளுடைய முகத்தில் காதல் கடிதம் வரையப்படுவதும் அப்பெண்ணின் மனம் படும்துன்பங்களுக்கு ஒரு உந்துதலையும் வாசவதத்தையின் கோபங்கள் அனைத்தும் இவ்வாய்வு முன்வைக்க முயல்கிறது.

பெருங்கதையில் முகத்தூது

திறவுச்சொற்கள்

1.பெருங்கதை                5.கொங்குவேளிர்

2.முகத்தூது                  6.தூது

3.மானனீகை                 7.பந்தடித்தல்

4.உதயணன்                  8.வாசவதத்தை

முன்னுரை

ஒரு காலத்தில் மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த சைகை மொழியினைப் பயன்படுத்தியிருப்பான். கண் சிமிட்டுவதாலும் கை அசைவுகளாலும் தலை ஆட்டுவதாலுமே மனதில் தோன்றிய கருத்தை இவ்வகையான செயல்பாடுகளின் மூலம் எதிரில் நிற்பவற்கு தெரிவித்திருக்க வேண்டும். அதுவே கண்ணுக்குத் தெரியாமல் குறிப்பிட்ட தூரத்தில் ஒருவர் இருக்கின்றார் எனில் ஆய்… ஓய்… என்று வேகமாகக் கத்தியும் சீழ்க்கை (விசில்) ஒலி எழுப்பியும் தான்இருக்கும் இடத்தை அறிவித்திருப்பார்கள். தமிழ்மொழிக்கு ஒலிதான் மொழியின் முதல்படியாய் இருக்கக்கூடும். இப்படியாகக் கொஞ்சகொஞ்சமாய் வளர்ந்த மொழியானது பல நூற்றாண்டுகளுக்கு மேல் பேச்சுமொழியாக உருவெடுத்துள்ளது எனலாம். அதன் பிறகே எழுத்துமொழியும் தோன்றியிருக்கும். எவ்வளவுதான் பேசினாலும் காதல் என்று வந்துவிட்டால் அவ்விடத்தில் எழுத்துமொழிதான் தேவைப்படுகிறது. மனதில் தோன்றிய கருத்தை நேரில் சொல்லமுடியாததையும் எழுத்து வடிவில் கடிதம் மூலமாகச் சொல்லமுடியும்.  சங்ககாலம் முதல் இக்காலம் வரை அவ்வாறு எழுதிய கடிதங்கள் ஏராளம். பெருங்கதையில் தலைவியின் முகத்தைக்  காகிதமாக வைத்து வண்ணம் தீட்டி காதல் மடல் எழுதுவதும் தலைவியே தன்னுடைய கணவனுக்காகக் (அவள் அறியாமல்) காதல்தூது செல்வதும் வியப்பிற்குரியதே.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் காப்பியத்தைச் சாமர்த்தியமாகவும் மிக நேர்த்தியாகவும் கதையை நகர்த்தி செல்கின்றார். காப்பியத் தலைவனாகிய உதயணனை நலம் குன்றாத வகையில் காட்டியுள்ளார். யானையை அடக்குதல், யாழ் கற்றுக்கொடுத்தல், காதல் கொள்ளுதல், பகைவர்களைப் போரிலே வென்று வெற்றியைச் சூடுதல் போன்றவை மூலம் உதயணனின் இரண்டு பக்க முகங்களைக் காட்டியுள்ளார். ஒருபக்கம் வீரனாகவும், மறுபக்கம் மன்மதனாகவும் உதயணன் இருந்துள்ளார். மானனீகை அழகுள்ளவளாகவும் அறிவு செறிந்துள்ளவளாகவும் படைக்கப்பட்டுள்ளாள். தான் கவர்ந்து வரப்பட்டவள் என்பதை நன்கு உணர்ந்துதான் உதயணனைின் காதலை வேண்டாம் என்று மறுத்துரைக்கிறாள். ஆனாலும் மன்னன் அல்லவா உதயணன். ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உதயணனின் காதலே வென்று விடுகிறது. இங்கு வாசவதத்தை மற்றும் பதுமாபதியின் உள்ளமும் மானனீகையின் காதல்நிலையுமாகிய இப்பெண்களின் மனப்போராட்டமே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம் பெறுகிறது.

தூது – விளக்கம்

     தன்னுடைய மனக்கருத்தைப் பிறருக்கு அறிவுறுத்த வேண்டி எழுத்து மூலமாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ அனுப்பப்படுவது தூது இலக்கியம் எனப்படும். இத்தூதானது அகத்தூது மற்றும் புறத்தூது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அகத்தூதில் தலைவன் தலைவியின் காதல் சார்ந்த செயல்பாடுகளும் புறத்தூதில் போர்ச்செய்திகள் அடங்கிய செயல்பாடுகளும் இடம்பெறும். ‘‘தூது விடுதலைப் பொருளாகக் கொண்ட செய்யுட்கள் பல சங்க இலக்கியத்தில் காமம் மிக்க கழிபடர் கிளவி என்ற துறையில் வருகின்றன’’1 என்கிறார் மது.ச.விமலானந்தம். காதல் அதிகமாதலின் காரணமாக தலைவனும் தலைவியும் உயிருள்ளவைகளையோ அல்லது உயிரற்றப் பொருட்களையோ தூதாக விடுகிறார்கள். தூது இலக்கியங்கள் கலிவெண்பாவில் இயற்றப்பெறும். தூது விடப்படும் பொருட்களையே தலைப்பாகவும் கொண்டிருக்கும். தூது இலக்கியத்திற்கு சந்து இலக்கியம் வாயில் இலக்கியம் என்ற பெயரும் உண்டு.

தூது செல்வோர்க்கான வாயில்கள்

     அகத்தூதில் தலைவன் தலைவியற்கு யாரெல்லாம் தூது செல்லக்கூடியவர்கள் எனத் தொல்காப்பியர்,

                ‘‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

              பாணன் பாடினி இளையர் விருந்தினர்

              கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

              யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப’’ (தொல்.பொருள்.கற்பு.52)

     மேற்கண்ட பன்னிருவரும் அகத்தூதுக்குரியவர்களாகச் சுட்டுகின்றார். இவர்களில் வாயிலாகத் தங்களுடைய மனக்கருத்தைக் காதல் கொண்டவர்ககுத் தெரியப்படுத்துகிறார்கள். மேலும், புறத்தூதாக,

                ‘‘இயம்புகின்ற காலத்து எகினமயில் கிள்ளை

              பயம்பேறு மேகம்பூவை பாங்கி – நயந்தகுயில்

              பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே

              தூதுரைத்து வாங்கும் தொடை’’2

இவ்வாறாகப் புறத்தூதுக்குரியப் பொருட்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இலக்கியங்களில் தூதுக்கள்

  • இராமாணத்தில் இராமன் சீதையிடம் அனுமனைத் தூதாக அனுப்புகிறார்.
  • இராமன் இவணனிடம் அங்கதனைத் தூதாக அனுப்பி வைக்கின்றார்.
  • சிலம்பில் மாதவி கோவலனிடம் தன்னுடைய தோழி வயந்தமாலையைத் தூதாக அனுப்புகிறாள்.
  • அதியமான் தொண்டைமானிடம் ஔவையாரைத் தூதாக அனுப்புகிறார்.
  • பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனைத் தூதாக அனுப்புகிறார்கள்.
  • முருகன் சூரபதுமனிடம் வீரவாகுத்தேவரை தூதாக அனுப்பகிறார்.
  • பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலை தூதாக அனுப்புகிறார்.
  • சீவகசிந்தாமணியில் குணமாலை சீவகனுக்கு கிளியைத் தூது விடுகிறாள்.
  • பெரியபுராணத்தில் சுந்தரர் பரவையாருக்கு இறைவனைத் துது அனுப்புகிறார்.
  • நளவெண்பாவில் நளன் தமயந்திக்கு அன்னப்பறவையைத் தூதாக அனுப்புகிறாள்.
  • தேம்பாவணியில் சூசையப்பருக்கு விண்ணவர் தூது வருகின்றார்.

இவைபோன்று இலக்கியங்களில் தூதுச்செய்திகள் இன்னும் காணக்கிடக்கின்றன. தூதுக்கென்றே தனி இலக்கியங்களும் உள்ளன. முதல் தூது இலக்கியம் நெஞ்சுவிடு தூது ஆகும். ஆனால் மதுரை சொக்கலிங்கர் மேல் தமிழைத் தூதாக விடப்படும் தமிழ்விடு தூதே சிறந்த தூது இலக்கியமாகக் கருதப்படுகிறது. சைவ வைணவ இலக்கியங்களில் கூட தூதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. காப்பியங்களிலும் தூதுக்களினால் பெயர் பெற்றவர்களைக் (கண்ணன், அனுமன்) கண்டிருக்கின்றோம். கொங்கு வேளிரின் பெருங்கதையிலும் தூது நடைபெறுவதற்குரிய காரணங்களும் அதனால் ஏற்படக்கூடிய சினமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கதையும் – ஆசிரியரும்

     பெருங்கதை, மாக்கதை, உதயணன் கதை என்று வேறுபெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. பெருங்கதையானது முதலில் பிருகத்கதை என்கிற காப்பியத்தைக் குணாட்டியார் என்பவரால் பைசாசி மொழியில் இயற்றப்பட்டது. இந்த நூலில் இருந்தோ அல்லது அதன்வழி ஒன்றிலிருந்தோ பெருங்கதையின் கதைப்பொருளை எடுத்திருக்கலாம். இந்நூலில் உதயணனின் வரலாற்றையும் அவனுடைய மகன் நரவாணதத்தனின் வரலாற்றையும் குறிப்பிடுகிறது. பெருங்காப்பியங்கள் சிறுங்காப்பியங்களிடையே பெருங்கதையும் காப்பியமாகவே போற்றப்படுகிறது. இந்நூலின் சிறப்பினால் மகாபாரதம் கம்பஇராமாயணம் போன்ற இதிகாசங்களுடன் ஒரேநிலையில் வைத்து  எண்ணப்படுகிறது.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் ஆவார். இவருடைய இயற்பெயர் யாதென்று தெரியவில்லை. இவர் வாழ்ந்த நாட்டின் பகுதியையும் வம்சாவளி பெயரான வேளிர் என்பதையும் இணைத்துக் கொங்குவேளிர் என அழைக்கப்படுகிறார். பகையரசனை வெல்லும் போது அந்த நாட்டிற்கு ஒரு தலைமை வீரனை அரசர் நியமிக்கின்றார். அவ்வீரனுக்குத் தனிப்பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். ‘‘கொங்கு மண்டலத்தை ஆண்ட கொங்கு மன்னன் தான்வென்ற குறும்பு நாட்டின் பகுதிக்கு நியமிக்கப்பட்ட தலைவனை வேளிர் என்று அழைக்கப்பட்டான்’’3 என்று பொன்னுத்தாய் குறிப்பிடுகிறார்.

பெருங்கதையின் காலம் கி.பி 750 என்றும் இதே காலம் கொங்கு வேளிரின் காலமாகவும் ஆசிரியர் கருதுகிறார்கள். ‘‘இளமைக் காலத்திலிருந்தே கொங்கு வேளிர் கல்வித்திறம் மிக்கவராகத் திகழ்ந்தார். தமிழ்மொழி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவராக இருந்தார் எனப் பெருங்கதையை ஆய்வு செய்தவர்கள் குறிப்பிடுகின்றனர்’’4 என்று இராமச்சந்திரன் செட்டியார் குறிப்பிடுகிறார்.  பண்டையத் தமிழகம் மூன்று வேந்தர்களால் ஆளப்பட்டது.  அம்மன்னர்களுக்குள் சண்டைகள் நடைபெறும்போது வேளிர்கள் அவர்களுடன் ஒன்றாகவோ தனியாகவோ சேர்ந்து போரிட்டனர். ‘‘வேளிர்கள் வீரம், ஆற்றல் மிக்கவர்களாக விளங்கியதுடன் பலர் பெரு வள்ளல்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களுள் சங்க காலத்தில் வாழ்ந்த கடை எழு வள்ளல்களான பாரி, ஆய், எழினி, பொதினி, காரி, ஓரி, பேகன், மலையன் ஆகிய வேளிர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்’’ 5 என்கிறார் ரா.விஜயலட்சுமி.  

இவற்றில் பெருங்கதையின் மொழிநடை, யாப்பு போன்றவற்றின் அமைப்பைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். மேலும் கொங்குவேளிர் வடமொழியில் சிறந்திருந்த சமணப் பெரியோர்களோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆதாலால்தான் மொழிபெயர்ப்பு நூலாக இருப்பினும் பெருங்கதையில் வடமொழிப் பெயர்களையே வைத்துள்ளமையைக் காணமுடியும்.

உஞ்சைக்காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்று ஐந்து காண்டங்கள் இடம் பெற்றுள்ளன.  பெருங்கதையில் பெரும்பான பாடல்கள் கிடைக்கவில்லை.  முப்பத்தைந்து அடி எல்லையாகக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள். மேலும் காண்டத்தில் கதையின் போக்கு நிறைவு பெறாமல் இருப்பதால் ஆறாவது காண்டமாகத் துறவு பற்றி இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப்பெருங்கதைக் காப்பியமானது நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. சமண சமயக் கோட்பாட்டை வலியுறுத்தி பெருங்கதை செல்வதால் சமண சமயத்தைச் சார்ந்து நின்றது எனலாம்.

பெருங்கதையில் முகத்தூது

     பெருங்கதையில் வத்தவகாண்டத்தில் பந்தடி கண்டது காதையும் முகவெழுத்துக்காதையும் இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்படுகிறது. தூது இலக்கியங்களில் நாம் நிறைய செய்திகளைக் கண்டும் கேட்டிருப்போம். இப்பகுதியில் தலைவன் தன்னுடைய மனைவியின் முகத்திலேயே யவண மொழியில் காதல் கடிதம் எழுதி தன்னுடைய காதலை வளர்க்கிறான். இக்காதலை மனைவி முதலில் வெறுத்தும் பிற்பாடு ஏற்றுக்கொண்டதன் பின்னணியும் மாறுபாடும் பெண்கள் குறித்த நிலையும் இக்கட்டுரையில் சொல்லப்படுகின்றன.

உதயணனின் போர்

     வத்தவ காண்டத்தில் உதயணனை மன்மதனாகவும் மிகச்சிறந்த வீரனாகவும் கொங்குவேளிர் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஒவ்வவொரு கதை நிகழ்வும் படிக்கும் மனதில் ஊன்றி நிற்பவயே. வருணனைகளும் எடுத்துக் கையாளும் விதமும் மிகநன்று. வத்தவ நாட்டின் மன்னன் உதயணன் ஆவான். உதயணனின் நன்பனும் அமைச்சனும் யூகி என்பவன் ஆவான். உதயணன் உஞ்சை நாட்டு மன்னன் பிரச்சோதனன் – பதுமகாரிகை மகளான வாசவதத்தையை யாழ் மீட்டு கற்றுக் கொடுத்துத் திருமணம் செய்து கொள்கின்றான். இரண்டாவதாக மகத மன்னனின் தங்கையான  பதுமாபதியை மாணகன் என்ற அந்தணர் பெயரைக் கொண்டு திருமணம் செய்து கொள்கின்றான்.

     பாஞ்சால நாட்டின் மன்னன் ஆருணி ஆவான். ஆருணி மன்னனுக்கும் உதயணனுக்கும் வெகு காலமாகவே பகை இருந்து வந்தது.  ஒற்றனாகிய வருடக்காரனின் யோசனையாலும் வகுத்துக் கொடுத்த திட்டத்தாலும் ஆருணி மன்னனைப் போரிலே உதயணன் தோற்கடிக்கிறான். ஆருணியைத் தோற்கடித்தது மட்டும் இல்லாமல் அவனுடைய அந்தப்புரத்திலிருந்து அரிய கலைத்திறனும் ஆடல் பாடல் வல்லமையும் கூத்துத் திறமையும் உள்ள ஆயிரத்தெட்டுப் பெண்களை வத்தவ நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வருகின்றான்.

 ‘‘அருமை சான்ற வாருணி யரசன்

ஆயிரத் தெண்ம ரரங்கியன் மகளிர்

ஆடலும் பாடலு நாடொன்று நவின்ற

நன்நுதன் மகளிரை மின்னோர் மின்னிடை’’ (பெருங்கதை.வத்தவ.12:3-8)

இந்தப் பெண்களில் மிகச்சிறந்த அழகியும், கலைத்திறனும் பெற்றவளுமான மானனீகையும் உடனிருந்தாள். இவ்பெண்கள் அனைவரும் மிக்க அழகுடனும் திறமையுடனும் வீற்றிருந்தார்கள். மேலும், இப்பெண்கள் ஆருணி மன்னனால் பகை மன்னர்களைத் தோற்கடித்து அவனுடைய திறன்மிக்க மகள்களைக் கவர்ந்து வந்து தன்னுடைய அந்தப்புரத்தில் வைத்திருந்தாகத் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பந்தாட்டம் நிகழ்தல்

     போருக்குப் பின் ஒருநாள் உதயணனின் மனைவிமார்கள் வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும் நிலாமுற்றத்தில் பெண்களிடையே பந்தடிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தோழிமார்கள் இரண்டு அணியாகப் பிரிந்து நின்றார்கள். ஆனாலும் ஆட்கள் குறையவே, மன்னன் தேவியர் இருவருக்கும் கூட்டி வந்த ஆயிரெத்தெட்டுப் பெண்களையும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்தான். இப்போது பந்தாட்டம் நடைபெறுவதற்கான ஆட்களை இரண்டு பெண்களும் பிரித்துக் கொண்டார்கள். அவர்களுள் மானனீகையும் ஒருத்தி ஆவாள்.

‘‘வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்

கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை

கொடுத்த காலை……’’ (பெருங்கதை.வத்தவ.12:9-11)

இவ்வாறாகப் பந்தாட்டத்தில் பங்கு பெறும் பெண்கள் அனைவரும் நெட்டியும் பஞ்சும், பட்டு நூலும் சேர்த்து உருட்டிக் கட்டிக்கொண்டனர். முடியை நன்றாகப் பின்னி அவற்றின் மேல் நூலாலும் கயிற்றாலும் மெல்லியதாய்ச் சுற்றி பாம்புத்தோல் போலவும் மயில் தொகையின் கண் போலவும் சுற்றிக்கொண்டனர். இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை  போன்ற பெண்களுக்குப் பிறகு மானனீகை பந்தடிக்க வருகிறாள். அப்பெண்களின் வர்ணனைப் பற்றி,

‘‘பீலியும் மயிரும் வாலிதின் வலந்து

நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்

கோலமாகக் கொண்டனர் பிடித்துப்

பாம்பின் றேலும் பீலிக் கண்ணும்

பூம்புன னுரையும் புரையக் குத்தி’’ (பெருங்கதை.வத்தவ.12:44-48)

ஆசிரியர் கூறுகின்றார். மானனீகை இருபத்தியொரு பந்துகளை எடுக்கிறாள். தான் நடுவில் நின்று பந்தகளைத் தன்னைச் சுற்றிலும் வட்டமாக வைக்கிறாள். பின்னர் பந்தை வானத்தை நோக்கி அடிக்கிறாள். மீண்டும் வந்த பந்தை நிலத்தில்அடிக்கிறாள். பந்து மேலே எழும்பும் போது தானும் மேலே எழுகிறாள். பந்தடிப்பதற்கு ஏற்ப அவளது கைகளும் கால்களும் உடலும் புருவமும் கண்களும் அசைகின்றன. அவள் இருபத்தியொரு பந்துகளை எடுக்கிறாள். மானனீகை பந்தடிக்கும் போது பாடல் மகளிர் நூல்களிற் கூறப்பட்ட வண்ணம் தாளம் தவறாது கைகளால் தாளம் இடுகின்றனர். அவளுடைய செயல் திறனைக் கண்டு ஏனைய பந்தாடும் மகளிர்கள் பாராட்டுகின்றார்கள். உதயணனின் மனைவிமார்கள் மானனீகையைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். பந்துகள் சுழலும் வேகத்தில் அவளும் சேர்ந்து சுழலுவதால் அவள் இருக்குமிடம் அறியாத தோழிமார்கள் இது என்ன மாயமோ என்று வியக்கிறார்கள். ஆசிரியர் கொங்குவேளிர் இந்நிகழ்ச்சியை,

     ‘‘சுழன்றன தாமங் குழன்றது கூந்தல்

     அழன்றது மேனி யவிழ்ந்தது மேகலை

     எழுந்தது குறுவிய ரிழிந்தது புருவம்

     ஓடின தடங்கண் கூடின புருவம்

     அங்கையி னேற்றம் புறங்கையி னோட்டியும்

     தங்குற வளைத்துத் தான் புரிந் தடித்தும்’’ (பெருங்கதை.4:12:225-230)

கூந்தல் சுருள்கிறது. உடல் வெதும்புகிறது. மேகலை அவிழ்கிறது. வியர்வையினால் சந்தனம் வழிகிறது. அகன்ற கண்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. உள்ளங்கையால் பந்தை ஏற்று புறங்கையால் பந்தை தட்டியும் உடம்பை வளைத்து ஆடுகிறாள் என வர்ணனை செய்கின்றார் ஆசிரியர். இம்மாதிரியான பந்தாடுதல் முறையானது சீவகசிந்தாமணியில் விமலையாரும், குற்றாலக்குறவஞ்சியில் வசந்தவல்லியும் பந்தாடுகிறார்கள். பெண்கள் மட்டுமே கூடி பந்தாடுகின்ற இவ்வேளையில் வயந்தகன் உதவியால் உதயணன் பெண் வேடமிட்டு அக்கூட்டத்தினுள்ளே மானனீகையின் அழகைப் பருகிய வண்ணம் அமர்ந்திருக்கிறான்.

உதயணனின் காதல்

     மானனீகையின் பந்தடிக்கும் திறனைப் பார்த்து வியந்த வாசவதத்தை, இவளை உதயணன் கண்டால் உடனே காதல் கொண்டு விடுவான் என்று அஞ்சுகிறாள். அதனால் உதயணன் மானனீகையைப் பாரக்காதவாறு செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்கிறாள். ஆனாலும் பந்தடிக்கும் இடத்தில் மாறுவேடத்தில் இருந்த உதயணனின் மனமானது மானனீகையிடம் சென்று விடுகிறது. மானனீகையைப் பார்ப்பதற்காகத் தன்னுடைய தேவியரிடம் பந்தடித்த அனைத்து மகளிரையும் பார்க்க வேண்டும் எனக் கூறுகிறான்.  ஆனால் வாசவதத்தை மானனீகையைத் தவிர்த்து மற்ற பெண்களை அழைத்து வந்து காட்டுகிறாள். மானனீகை வராமல் இருப்பதைப் பார்த்த மன்னன் வருத்தப்படுகிறான். காதலின் மிகுதியால் எப்படியாவது மானனீகையைப் பார்த்து விட வேண்டும் என எண்ணுகிறான். இதனை,

‘‘ஒன்றிய வியல்போ டொன்றுக் கொன்றவை

ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்

வேலென விலங்குஞ் சேலென மிளிரும்

மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்

குழைமே லெறியுங் குமிழ்மேன் மறியும்

மலருங் குவியும் கடைசெல வளரும்

சுழலு நிற்குஞ் சொல்வன பொலும்

கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்

மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்’’ (பெருங்கதை.வத்தவ.12:270-279)

என்கிறார் ஆசிரியர். அதனால் தன்னுடைய மனைவி வாசவதத்தையிடம் ஆருணி மன்னன் சேமித்து வைத்த பொருட்களெல்லாம் இருக்குமிடம்  மானனீகைக்கு மட்டும்தான் தெரியும் என்று பொய் கூறுகிறான். அதனை உண்மை என நம்பிய வாசவதத்தை மானனீகையை அழைத்து வரும்படிச் செய்கிறாள்.

     மானனீகையிடம், நீதானே ஆருணி மன்னனுக்குத் திருமந்திர ஓலை எழுதுதலும், வழக்குரை அறையைக் காத்தலும், அம்மன்னனின் தேவியர்களுக்கு ஒப்பனை செய்யும் வேலையை செய்து வந்தாய் என்று கேள்விபட்டேன். அவளும் நான் ஒப்பனை செய்யும் வண்ணமகள்தான் என்று கூறுகிறாள். அதனால் மானனீகையை வாசவதத்தைக்கு வண்ணமகளாக நியமிக்கின்றான் உதயணன்.

முகம் வழியாகத் தூது

     பெருங்கதையின் மூன்றாவது காதல் இங்குதான் நடைபெறுகிறது. உதயணன் மானனீகை இவருக்கும் மட்டுமே தெரிந்த யவன மொழி இக்காதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வண்ணமகளாகச் செயல்பட்டிருக்கும் மானனீகை வாசவதத்தையின் முகத்தில் சந்தனமும் குங்குமமும் குழைத்து அழகாய் வண்ணம் தீட்டினாள். வாசவதத்தையின் முகத்தை மானனீகைதான் அழகாக மாற்றியிருக்கக் கூடும் என்பதை உதயணன் அறிகிறான். அதனால் மானனீகை செய்த ஒப்பனை இயற்கை அழகிற்கேற்ப அமையவில்லை எனக் கூறி அழிக்கிறான். பூந்துகளையும் சந்தனத்தையும் குழைத்து வாசவதத்தையின் முகத்தில் தானே ஒப்பனை செய்கின்றான்.  வாசவதத்தையின் நெற்றியின் மேல் தனக்கும் மானனீகைக்கும் மட்டும் தெரிந்த யவன மொழியில் காதல் மடல் எழுதுகிறான்.  ‘‘ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் ஈர்த்து ஒருநிலைப்படுத்துவதாகும். உள்ளத்துக்கு உணர்ச்சி ஊட்டுவதாகும். இத்தகைய சிறப்புடையமையாற்றான் இது நுண் கலைகளுள் ஒன்று என்று அறிஞரால் பாராட்டப்படுகிறது’’6 என்கிறார் இராசமாணிக்கனார்.

உதயணனின் காதல் மடல்

     சிறந்த புகழுடைய உதயணன் எழுதும் ஓலை இது. ‘‘நுண்ணிடையும் இன்மொழியும் சிவந்த வாயும் கொண்ட மானனீகையே! மேல் மாடத்தில் நீ பந்தடித்து விளையாடியபோது உன் வேல் போன்ற கண்கள் என் நெஞ்சைக் கிழித்தன.  நெருப்புப் போன்ற அந்தப் புண்ணுடன் உயிர் வாழ என்னால் முடியவில்லை. அப்புண்ணிற்கு மருந்து கொம்புத்தேன் போன்ற உன் குவிந்த மார்பகங்களே. நீ பந்தடித்தபோது என் மனம் பறையடித்தது. என் எண்ணமும் நிலைமையும் சொல்வதற்கரியன. காமமாகியப் பெருங்கடலிலே நான் அழுந்தாபடி ஆழ்ந்த நீரில் அகப்பட்டோர்க்குத் தெப்பம் போல நீ உதவி செய்து என்னை உய்யக் கொள்வாயாக! நான் நினைப்பவற்றையெல்லாம் எழுதுவதற்கு இந்த ஏடு (வாசவதத்தையின் நெற்றி) போதவில்லை’’7 என்று உதயணன் மடல் எழுதினான் என்கிறார் விஜயலட்சுமி. பெருங்கதையில்,

‘‘பற்றிய யவன பாடையி லெழுத்தவள்

     பூந்தா தோடு சாந்துறக் கூட்டி

     ஒடியா விழுச்சீ ருதயண னேலை

     மான னீகை காண்க சேணுயர்

     பந்துவிளை யாட்டினுட் பாவைதன் முகத்துச

     கொந்தழற் புண்ணொடு நொந்துயிர் வாழ்தல்

     ஆற்றே னவ்வழ லவிக்குமா மருந்து

கோற்றேன் கிளவிதன் குவிமுலை யாகும்’’ (பெருங்கதை.4:13:59-73)

என்று ஆசிரியர் பெருங்கதையில் கூறுவதாக அமைகின்றது. வாசவதத்தையிடம் நான் செய்த ஒப்பனை மிகவும் அழகாக உள்ளது என்கிறான் உதயணன்.

மானனீகையின் மறு மடல்

     தன்னுடைய மனைவி வாசவதத்தையின் முகத்தில் மானனீகைக்கு தூது அனுப்புகிறான் உதயணன். வாசவதத்தையின் முகத்தைப் பார்த்து உதயணனின் காதல் தூதை மானனீகைப் புரிந்து கொள்கிறாள். ‘‘அரசர் எழுதிய திருமுகம் மிக அழகுடையது என்று இரண்டு பொருள்படக் கூறுகிறாள். திருமுகம் (1.அழகிய முகம்   2. கடிதம்)’’8 என்கிறார் விஜயலட்சுமி. மானனீகையும் வாசவதத்தையின் நெற்றியில் ஒப்பனை செய்வது போல் யவன மொழியில் உதயணனுக்குப் பதில் எழுதுகிறாள்.

‘‘மறுமொழி கொடுக்கு நினைவின ளாகி

     நெறிமயிர்க் கருகே யறிவரி தாக

     எழுதிய திருமுகம் பழுதுபட லின்றிக்

     பொருந்திய பல்லுரை யுயர்ந்தோர்க் காகும்

     சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்

பேணு செய்தல் பெண்பிறந் தோருக்

புறஞ்சொலு மன்றி யறந்தலை நீங்கும்’’ (பெருங்கதை.4:13:108-121)

என்பதாகப் பெருமகனின் அருள் என் மேல் உண்டென்பதை அறிகிறேன். ஆனால் அத்தகைய உயர் மொழி வாசகம் என் போன்ற பணிமகளிர்க்குப் பொருந்தாது. வாசவதத்தைப் போன்ற அரச மகளிர்க்கே பொருந்தும். மேலும் காவல் உள்ள இடத்திலிருந்து கொண்டு மறைவாக நாம் செய்யும் செயல்களை யாரும் காணமாட்டார் என்று எண்ணிச் செயல்படுவது என்போன்ற பெண்களுக்குத் தகுதியல்லவே. பெருமானாகிய தாங்கள் என்மேல் வைத்த திருவருளை முற்றிலும் மறந்து விடுதல் நல்லது எனப் பதில் மடலில் உதயணனின் காதலை மறுத்து எழுதுகின்றாள். பெண்களுக்குக் கற்பொழுக்கம் என்பது நாணத்தின் ஒருபகுதியாகவே கருதப்பட்டது. நாணமிழந்தவள் கற்பு நெறியில் சிறக்கமாட்டாள் என்பது மானனீகை நன்கு அறிந்திருந்தாள். அதனால்தான் உதயணனின் விருப்பத்தை அறிந்த மானனீகை அச்சமும் நாணமும் கொண்டவளாகக் காணப்பட்டாள்.  தன்னைப் பற்றியும் உதயணனின் காதல் பற்றியும் பயமும் கொண்டாள். அதுவும் தான் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்வது மிகப் பிழையாகும் என்று கருதினாள். இதேபோல் வாசசதத்தையின் முகத்தில் உதயணனும் மானனீகையும் திரும்பதிரும்ப காதல் கடிதம் எழுதி தூது அனுப்புகிறார்கள்.

குச்சரக்குடிகை

     மானனீகையிடம் உள்ள அளவற்ற காதலால் உதயணன் மீண்டும் மீண்டும் தன்னுடையக் காதலை வற்புறுத்துகிறான். அதனால் மானனீகை குச்சக்குடிகையில் அவனை இரவில் பார்க்க இசைகிறாள். உதயணன் மேல் வாசவதத்தை சந்தேகம் கொள்கிறாள். அதனால் காஞ்சனமாலையை உதயணனைப்பின் தொடரும்படி செய்கிறாள். குச்சரக்குடிகையில்  மன்னனும் மானனீகையும் காதல் வசப்பட்டுக் கூடியும் ஊடியும் நீண்ட நேரம் பொழுதைக் கழிக்கின்றனர். தாமிருவரும் வாசவதத்தை நெற்றியில் எழுதிய செய்திகளை மீண்டும் மீண்டும் கூறி மகிழ்கின்றனர். இறுதியில் மன்னன் மானனீகைக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக அளிக்கிறான். இதனை ஆசிரியர்,

‘‘திருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து

     விருப்பொடு தழுவி நடுக்கந் தீரக்

     கூடிய வேட்கையி னெருவர்க் கொருவர்

     ஊடியுங் கூடியு நீடுவிளை யாடியும்

     இருந்த பின்றை யிருவரு முறைமுறை

திருந்திய முகத்துப் பொருந்திய காதலொ

டெழுதிய வாசக மெல்லா முரைத்து

குறியெனக் கூறிச் சிறுவிரன் மொதிரம்

கொடுத்தன னருளிக் கோயிலு ணீங்க’’ (பெருங்கதை.4:13:182-291)

     காஞ்சனமாலையிடமிருந்து தெரிந்து கொண்ட வாசவதத்தை மிகவும் சினம் கொள்கிறாள். மன்னனிடமும் கனவில் கண்டதாக மானனீகையின் காதலைப் பற்றிக் கூறுகிறாள். மன்னன் கற்பனையால் வந்த கனவுதான் என்று சமாதானம் செய்கிறான். அன்று மாலையில் மானனீகையை சிறையில் அடைத்து விட்டு குச்சரக்குடிகைக்கு வாசவதத்தைச் செல்கிறாள். வாசவதத்தையை மானனீகை என்றெண்ணி கொஞ்சிப் பேசுகிறான் உதயணன். தனக்கு முன்னால் இருப்பது மானனீகை அல்ல வாசவதத்தைதான் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறான்.

     இவைப்போன்ற காட்சிகள் மற்றும் யவனமொழியில் எழுதப்படும் தூதுச் செய்திகள் என அனைத்தும் சிறந்த நாடகத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.

வாசவதத்தையின் கோபம்

     அடுத்தநாள் காலையில் மானனீகையைத் தூணில் கட்டி அவளுடைய மயிரைக் குறைக்க எண்ணுகிறாள் வாசவதத்தை. இதை அறிந்த வயந்தகன் என்பவன் கத்தரிகளை ஆய்வு செய்வது போல் நடித்து கொஞ்ச நேரம் காலம் நீட்டிக்கிறான். அங்கு ஒரு மௌன சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பதுமாபதி அங்கு வந்து கணவன் தவறு செய்தால் பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று உரைக்கின்றாள். ஆனாலும் வாசவதத்தை யார் பேச்சையும் கேட்காமல் பிடிவாதமாகவே இருக்கிறாள். அதன்பிறகு,

‘‘தனக்குந் தங்கை  யியற்பது மாபதி

     இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்

     பயந்த நாளொடு பட்டதை யுணர்த்தாள்

     தன்பெயர் கரந்து மான னீகையென

     அன்புடைய மடந்தை தங்கையை நாடி

எய்திய துயர்தீர்த் தியான் வரு காறும்’’ (பெருங்கதை.4:14:126-133)

     அச்சூழலில்தான் கோசல மன்னன் உதயணனுக்கு எழுதிய கடிதத்தை வாசவதத்தைக்கு அனுப்புகிறான். அக்கடிதத்தில், மானனீகை வாசவதத்தையின் தங்கை முறையாவாள் என்றும், ஆருணி மன்னன் அவனை போரில் கவர்ந்து சென்றதாகவும், அவளைத்தான் பிற்பாடு உதயணன் கவர்ந்து வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. மேலும் கோசல நாட்டு மன்னனுக்கும் தன்னுடைய சிற்றன்னையாகிய வசுந்தரியின் மகளே மானனீகை ஆவாள் என்பதையும் வாசவதத்தை அறிகிறாள். கோபம் தணிகிறது. மன்னன் உதயணனுக்கும் மானனீகைக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. வாசவதத்தையும் பதுமாபதியும் மானனீகையைக் கொடுக்க நான்கு மறைகளும் ஓதி மணச்சடங்குகள் நிகழ்த்த பலபேர் முன்னிலையில் தீ வலம் வந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது.

முடிவுரை

     மேற்கண்ட பந்தடி கண்டது, முகவெழுத்துக்காதை ஆகிய இரு காதைகளிலும் பெண்களைக் காமப்பொருளாகவும் அடிமை பெண்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆணாதிகத்தால் போர்மேற் செல்லும் மன்னர்கள் அங்கு அழகாய் இருக்கும் பெண்களை வற்புறுத்தி அழைத்து வருவதும் அவர்களை உடல் சார்ந்து துன்பப்படுத்துதலும் நடைபெற்று வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. கணவன் செய்யும் அனைத்திற்கும் பெண்கள் துணையாக இருக்க வேண்டும் என்று பதுமாபதியின் வாயிலாக அறிய முடிகிறது. அக்காலத்தில் போரின் காரணமாக ஆண்கள் அதிக அளவு உயிர் விட்டிருக்கலாம். அதனால் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால் ஒருஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் வந்திருக்கக்கூடும் என் நம்பப்படுகிறது. உதணயனுக்கு மானனீகை மூன்றாவது மனைவி. மேலும் மன்னனுக்கு நான்காவதாக விரிசிகை என்னும் முனிவரின் மகளையும் திருமணம் செய்து கொள்கின்றான். இராமாயணத்தில் அயோத்தி அரசன் தசரதனுக்கு அறுபதாயிரத்து மூன்று மனைவிகள் உள்ளனராம். சீவகசிந்தாமணியில் சீவகனுக்கு எட்டு மனைவிமார்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறாக அரசர்களின் வாழ்க்கையில் திருமண நிகழ்வுகள் இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழரின் பண்பாடாக இருப்பதைக் காணலாம்.

சான்றெண் விளக்கம்

1.தமிழ் இலக்கிய வரலாறு, மது.ச.விமலானந்தம், அபிராமி பதிப்பகம், சென்னை, ப.147

2.தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன், கலையக வெளியீடு, ப.236

3.பெருங்கதையில் பெண்மை, இரா.பொன்னுத்தாய், முனைவர் பட்ட ஆய்வேடு, ப.75

4.கொங்கு நாட்டு வரலாறு, இராமச்சந்திரன் செட்டியார், ப.102

5.கொங்குவேளிர், ரா.விஜயலட்சுமி, சாகித்திய அகாதெமி, ப.13

6.தமிழகக் கலைகள், மா.இராசமாணிக்கனார், பாரிநிலையம், சென்னை, ப.27

7. கொங்குவேளிர், ரா.விஜயலட்சுமி, சாகித்திய அகாதெமி, ப.86

8.மேலது.ப.86

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்,

எழுத்தாளர், முதன்மை ஆசிரியர் (இனியவை கற்றல் )

www.iniyavaikatral.in

www.kelviyumpathilum.com

www.puthagasalai.com

youtube : iniyavaikatral (இனியவை கற்றல்)

சோம்பலை நெருங்க விடாதீர்கள்

சோம்பலை நெருங்க விடாதீர்கள்

தன்னம்பிக்கை கட்டுரை – 11

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர்

          உலகில் நீங்கள் சாதிக்க பிறந்தவர் என்றால் சோம்பலை நீக்க வேண்டும். எப்போதும் காலையில் ஆறுமணிக்கு எழும் நீங்கள் அதை ஐந்து மணியாகக்  குறைக்கலாம். அவ்வாறு எழுந்தநாள் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். சுறுசுறுப்பைத் தரும். அந்தக் காலைநேரத்தில் அழகாக இதமாக பாட்டு ஒன்று பாடலாம் என்று தோன்றும். அந்த நாளில் செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறும். பாரதியார் கூறுவார் “இன்று புதிதாய் பிறந்தேன்” என்று. அவ்வாறே நீங்களும் புதிதாகப் பிறந்ததைப் போன்று உணர்வீர்கள். சோம்பலை நெருங்க விடாதீர்கள்

        அடுத்த வாரத்தில் நாலரைமணிக்கு எழப் பழகுங்கள். மனம் மகிழ்ச்சியில் திழைக்கும். அன்று நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அவற்றை பட்டியலிடுங்கள். யாரை பார்க்கவேண்டும்? எத்தனை மணிக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள். எவ்வாறு அவரிடம் உரையாடுவது? என்பதை நிதானமாக யோசித்து பாருங்கள். சில நிமிடங்கள் பிராணாயாமம் செய்யுங்கள். சிறிது தூரம் காலார நடந்து செல்லுங்கள். நல்ல தூய்மையான காற்றைச் சுவாசித்து வாருங்கள். அன்று நீங்கள் சுறுசுறுப்பின் உன்னதத்தைப் பெறுவீர்கள். ஆதலால் அதிகாலையில் எழுந்து பாருங்கள் உங்கள் வெற்றி சிறிது அருகே வந்திருக்கும்.

நற்செயலுக்குப் பிறகு என்பதே இல்லை

        நல்ல செயல்களைj தள்ளிப்போடாதீர். பலர் இதை உணர்வதே இல்லை. எதை எடுத்தாலும் நாளை அப்புறம் பிறகு என்று தள்ளி போட்டுக்கொண்டே இருப்பார்கள். நேற்று என்பது முடிந்து விட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. இன்று என்பதே உங்களின் கைகளில் உள்ளது. மணித்துளிகள் உயிர் போன்றவை. சென்றால் திரும்பாது. அதனால் எப்போதும் நிகழ்காலத்தில் வாழுங்கள். நேற்று நடந்தவற்றை நினைத்து கொண்டோ அல்லது எதிர்காலத்தை எண்ணிக்கொண்டோ இருந்தால் நிகழ்காலம் இறந்துவிடும். எனவே நிகழ்காலத்தில் வாழுங்கள். பொன்மொழி ஒன்று கூறுவார்கள், “பிறகு என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்” ஒரு செயலைச் செய்யாமல் தள்ளிப்போடும் மனோபாவம் வந்துவிட்டால் அவர் அதனை முடிக்க இயலாது என்றே கூறலாம். ஒரு செயலைச் செய்யாமல் காரணங்களைச் சொல்பவன் பொய்களைச் சொல்கிறான். ஒரு மணிநேரம்தான் தள்ளிப் போடுகிறோம் என்ற எண்ணம் ஒரு வருடம் தள்ளிப்போடும் மனநிலையை கொண்டு வரும். எந்தச் செயலையும் உடனே இன்றே இப்போதே என்று செய்ய வேண்டுமே தவிர நாளை என்று தள்ளிப்போடாதீர். இவ்வாறு தள்ளிப்போடுவதற்கு காரணம் சோம்பேறித்தனம். தன்னை செயலைச்செய்யாமல் முன்னேற்றத்தைத் தள்ளிப்போடும் சோம்பல் தேவையா? நல்ல பெயரெடுக்க வைக்கும் சுறுசுறுப்பு அவசியமா? எது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

உறக்கத்தைத் தள்ளிவைக்கலாம்

       இராமாயணத்தில் கூறப்படும் நிகழ்வு ஒன்று. மந்தரை என்ற கூனி இராமனின் மீது கொண்ட கோபத்தால், கைகேயிடம் சூழ்ச்சியுடன் பேசுகிறாள். “இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யக்கூடாது. நாட்டை துறந்து அவனை காட்டிற்கு அனுப்ப வேண்டும.” என்று ஏதேதோ பேசி கைகேயியின் மனதை மாற்றிவிடுகிறாள். இதனால் இராமன் காட்டிற்கு அனுப்பப்படுகிறான். செல்லும்போது சீதையும் இலட்சுமணனும் உடன் வருகின்றனர். மூவரும் அயோத்தி நகரத்தை விட்டு நீங்கி கங்கை கரையை அடைகின்றனர். அப்போது அங்குள்ள மக்கள் மனம் கலங்குகின்றனர். அரசாள வேண்டிய இராமன் காட்டிற்குச் செல்கிறானே என்று வேதனைப்பட்டனர். நாளெல்லாம் நடந்து கங்கைக்கரையில் துறவர் தங்கியிருக்கும் இடத்தில் சீதையுடன் இராமன் தங்கியுள்ளார். தம்பி இலட்சுமணன் வெளியில் நின்று அண்ணனுக்குக் காவல் காக்கிறான். நாளெல்லாம் நடந்த களைப்பு. இரவுநேரம் கண்கள் அப்படியே மூடிக்கொள்கின்றன. உடனே இலட்சுமணன் “நித்திரைப் பெண்ணே என்னை விட்டு இப்போது சென்று பதினான்கு ஆண்டுகள் முடித்துவிட்டு மீண்டும் நாங்கள் அயோத்தியை அடைந்தவுடன் வா” என்று இலட்சுமணன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தில் உறங்கக்கூடாது என்று கண்விழித்து காத்தான். எனவே நீங்கள் இலட்சுமணன் போன்று இல்லாவிட்டாலும் உறக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். உறக்கம் என்பது உணவைப் போன்று அளவுடன் இருக்க வேண்டுமே தவிர, அது உங்களை மூழ்கடிக்க்க் கூடாது. சிலர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து களைத்துப்போவார்கள். பாவம் இவர்களின் ஆற்றலும் ஓய்வெடுத்து களைத்துவிடுகிறது என்பதை அறியாதவர்கள்.

இலக்கை குறி வையுங்கள்

       ஒன்றை பெறவேண்டும் என்று மனது  வைத்துவிட்டால் உழைப்பதற்கு நேரம் பார்க்கக்கூடாது. இரவுபகல் என்று பாராமல் உணவு உறக்கம் என்று நினைவில்வராமல் உழைப்பு செயல் முன்னேற்றம் வெற்றி என்றே சிந்தனையில் இருக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் உங்களுக்கு சோம்பலா? என்ன அது என்று கேட்பீர்கள். உமக்கு என்ன தேவை? வெற்றி. அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். ஒரு செயலைச் செய்யும் போது ஓய்வு வேண்டாமா? என்று கேட்கலாம். ஓய்வு வேண்டாம் என்று கூறவில்லை. அந்த நேரத்திலும் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடலாம். வெறுமனே அமர்ந்து கொண்டு இருக்காமல் அந்த நேரத்திலும் உங்களுக்கான யோசனைகளைப் புரட்டிப் பார்க்கலாம்.

       ஒரு இலக்கை நோக்கி அடைய வேண்டும் என்று புறப்பட்டு விட்டாலே போதும் சோம்பல் என்பது காணாமல் ஓடிப்போகும். நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ உங்களுக்கு அதில் ஆர்வம் குறைவாக இருந்தாலோ  சோம்பல் என்பது உங்களை ஆட்கொள்ளும். ஒன்று பிடித்த வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் பிடித்தவாறு செய்ய வேண்டும். இல்லையென்றால் சோம்பல்தான் மிஞ்சும். உங்களை திறனற்றவன் என்று பெயரெடுக்க வைக்கும். முன்னேற்றத்திலிருந்து உங்களை மிகவும் தூரத்தில் எறிந்துவிடும். எனவே கவனமாக இருந்து சுறுசுறுப்பை வரவழைத்து வாழ்ந்து பாருங்கள்! இந்த இயற்கை உலகம் உறவுகள் அனைத்தும் உங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று நினைக்கத் தோன்றும். பொழிகின்ற மழை பூக்கின்ற மலர்கள் எல்லாம் உங்களை பார்த்து நேசம் கொள்வதைப்போல உணர்வீர்கள்.

சுறுசுறுப்பு என்பது மனிதனைக் காட்டாறு போல ஓட வைப்பது. பல தோல்விகளை வெற்றிகளாக மாறச்செய்வது. பல மணித்துளிகளை மிச்சப்படுத்துவது. பலரின் வாழ்க்கை தன்மையை மாற்ற வல்லது. எனவே சோம்பலை விரட்டுங்கள் வெற்றிக்கதவுகளைத் திறவுங்கள்.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

3.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

4.மாற்றி யோசியுங்கள்

 

இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்

இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்

இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்

முன்னுரை

            நாடு என்பது பல்வேறு வளங்களின் இருப்பிடமாய் இருக்க வேண்டும். வளங்கள் இல்லா நாடு வறுமை உடைய நாடாகவே கருதப்படும். ஆதலால் நாடு பல்வேறு வளங்களையும் இயல்பாகப் பெற்றுத் திகழ வேண்டும். இயற்கை வளமே மற்ற எல்லா வளங்களுக்கும் அடிப்படையாக அமையும். இயற்கையே எல்லாவற்றிற்கும் காரணமாக அமைவதால் மக்கள் அதனைத் தெய்வமாக வழிபட்ட தன்மையைச் சங்க இலக்கியம் புலப்படுத்துகிறது. மற்ற நாடுகளிலிருந்து வளங்களைப் பெறாமல், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாய் நாடு அமைந்திருக்க வேண்டும். இதனை,

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளம்தரும் நாடு”1

என்ற திருக்குறள் குறிப்பிட்டுள்ளது.

மலை வளம்

            மலை கனிம வளங்களின் இருப்பிடமாகும். மழை ஆதாரத்தின் சிறப்பிடமாகும். அருவிகளின் பிறப்பிடமாகும். மலைகள் இல்லை யென்றால் ஆறுகள் கடல்கள் இல்லையெனலாம். அத்தகைய மலைகள் நாட்டினை அணி செய்வதில் இன்றியமையாததாக உள்ளது. சங்ககால மன்னர்கள் மலையினைக் களமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். மலைகளின் பல்வேறு செல்வங்களை அக்கால மக்கள் பெற்றுள்ளனர். குறிஞ்சி நில மக்களின் வாழிடமாக மலை இருந்ததைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

            கொண்கானம் கிழான் என்னும் குறுநில மன்னன் கொண்கானம் எனும் மலைப்பகுதியை மக்களின் மனநிலை அறிந்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஆண்ட அம்மலைப் பகுதி வளங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றிருந்தது. அது பகைவர் யாராலும் கைப்பற்ற முடியாத அளவிற்கு வலிமையிலும் சிறந்து விளங்கியது. மற்ற நாடு மன்னர்களின் வளத்திலோ ஏதேனும் ஒன்றில் மட்டும் சிறந்ததாக இருந்தது.

“ஒன்றுநன் குடைய பிறர்குன்றம், என்றும்

இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்”2

என்ற மோசி கீரனாரின் பாடல் அடியால் கொண்கானம் எனும் மலைப்பகுதி, வளத்திலும் வலிமையிலும் சிறந்து விளங்கிய தன்மையினை அறிய முடிகிறது.

            பாரி, பறம்பு மலைப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் மலையைப் பகைவர்களால் எளிதில் அணுக முடியாது. அவன் முல்லைக்குத் தேர் கொடுத்த சிறப்புக்குரியவன். அவனது மலைப்பகுதி பல்வேறு வளங்களில் சிறப்புற்றதாய் அமைந்திருந்தது. அம்மலையில் சுனைகள் பல இடங்களில் இருந்தன. அச்சுனை நீரின் சுவைக்கு வேறு எதுவும் ஈடாகாது.

“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்

ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர்”3

என்ற கபிலரின் பாடல் பறம்பு மலையின் இயல்பினைப் பதிவு செய்துள்ளது.

            நாஞ்சில் வள்ளுவன் பாண்டியனின் படைத் தலைவன். அவன் நாஞ்சில் மலைக்குத் தலைவன். அம்மலை இயற்கை வளங்களை நிரம்பப் பெற்றிருந்தது. மலை மல்லிகையும், கூதாளியும் தழைத்துச் செழித்திருந்தன. தேன் போன்ற சுவை கொண்ட பலா மரங்கள் நிறைந்து விளங்கின. இதனை,

“நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய

………………………………………….

தீஞ்சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்”4

என்ற கரூவூர்க் கதப்பிள்ளையின் பாடல் அடிகள் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் மலைகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதையும் அறிய முடிகிறது.

மழை வளம்

            மழை நீர் உயிர் நீர் என்பர். மக்கள் உயிர்வாழ நீர் இன்றியமையாதது. மனித உடல் இயக்கத்திற்கும் நீர் அவசியம். மனித உடலில் நீரின் அளவு குறைந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இத்தகைய நீனினை வழங்கவல்லது மழையே ஒரு நாட்டின் இயற்கை வளங்களை மேம்படுத்தும் மழை இல்லையென்றால் உழவுத்தொழில் சிறக்காது. மாதம் மும்மாரி பொழிய வேண்டும்| என்ற கருத்தின் மூலம் சங்ககாலத்தில் மழைக்கு நல்கிய சிறப்பினை அறிய முடிகிறது. மழையே நிலத்தின் வளமைக்கும், நாட்டின் வளமைக்கும் காரணமாக அமைகிறது.

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி யுலகிற்கு அவனளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்”5

என்ற இளங்கோவடிகளின் பாடலால் மழையின் சிறப்பினை அறிய முடிகிறது.

            வெப்பத்தின் தாக்குதலால் மூங்கில்கள் காய்ந்து வாடின. குன்றுகள் அனைத்தும் பசுமையினை இழந்து வாடின. அருவிகள் நீரற்றுக் காட்சியளித்தன. அத்தகைய வறட்சிக் காலத்திலும், சேரன் செங்குட்டுவன் நாட்டில் மக்கள் பொன் ஏர் பூட்டி உழுது மகிழுமாறு மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொணர்ந்து பொழிந்தன. இதனை,

“இருப்பணை திரங்கப் பெரும் பெயர் ஒளிப்பு,

குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ,

அருவி அற்ற பெருவறல் காலையும்,

அருஞ்செலல் பேர்யாற்று இருங்கரை உடைத்து,

கடிஏர் பூட்டிக் கடுக்கை மலைய

வரைவுஇல் கதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்து,

ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்கு”6

என்ற பரணரின் பாடல் அடிகள் பதிவு செய்துள்ளன. இதன்வழி வெப்பம் மிகுந்த கோடைக் காலத்திலும் செங்குட்டுவனின் நாடு மழையைப் பெறுகின்ற இயல்பினை உடையதை அறிய முடிகிறது. மேலும், இயற்கை வளத்தைப் பேணிய காரணத்தினால் கோடையிலும் மழை பொழிந்ததையும் அறிய முடிகிறது.

நீர்வளம்

            நாட்டின் வளங்களுள் நீர்வளம் இன்றியமையாதாது. ~நீரின்றி அமையாது உலகு| என்பதின் மூலம் நீரின் தன்மையை அறிய முடிகிறது. மன்னன் மழை நீரை மட்டும் நம்பி வாழாது, மக்களுக்குப் பயன்படும் படியாக ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளை ஏற்படுத்தி நாட்டில் நீர்வளங்களைப் பெருக்க வேண்டும். நீர்நிலைகளே, கோடைக் காலத்தில் வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாக்கும். நீரினைச் சேமிக்கும் இத்தன்மையால்தான் விவசாயம் செழிக்கும். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கும்.

“இயற்கையினால் உண்டாகும் மழைநீரை, மட்டும் நம்பி தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கினான். குளங்களும், ஏரிகளும் அவனின் விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன”7 என்ற கருத்து நீர்நிலைகளின் தன்மையினையும் அதன் சிறப்பினையும் எடுத்துரைக்கிறது.

            நாஞ்சில் மலையை ஆண்ட நாஞ்சில் வள்ளுவன் நீரின் மேன்மையை அறிந்தவன். மழையினை மட்டும் நம்பி வாழாது, பல்வேறு நீர் நிலைகளை ஏற்படுத்தி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்கினான். அதனால்தான், அவன் நாட்டில் நீரில்லையென்றால் காய்ந்து விடும் குவளை மலர் கோடைக் காலத்திலும் செழிப்புற்று வளர்ந்திருந்தது.

“கொண்டல் கொண்ட நீர் கோடைக் காயினும்

கண்அன்ன மலர் பூக்குந்து”8

என்ற ஒருசிறைப் பெரியனாரின் பாடலால் அறியலாம். இயல்பாகவே குவளை மலர் நீர் இல்லையென்றால் காய்ந்துவிடும். ஆனால், நாஞ்சில் நாட்டில் கோடைக் காலத்திலும் செழிப்புற்று குவளை மலர் வளர்ந்திருந்ததின் மூலம், அவன் நாட்டில் நீர்நிலைகள் பெருகியிருந்ததையும், கோடைக் காலத்திலும் வற்றாது காணப்பட்டதையும் அறிய முடிகிறது.

            வெள்ளி என்னும் சுக்கிர நட்சத்திரம் மழைக்கு உதவுகின்ற மற்ற விண்மீன்களோடு நிற்க வேண்டிய நாளில் நின்றது. கடலிலிருந்து எழுந்த கார்மேகங்கள் நான்கு திசைகளிலும் பொருந்தி உலகினைக் காத்தற் பொருட்டு கார்காலத்தில் மழைபொழிய வலப்பக்கமாக எழுந்தது. ஆனால் மழை பொழியாது கார் மேகம் மறைந்து விட்டது. கார்மேகம் மழை பொழிய மறந்தாலும், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் நாடு எப்பொழுதும் வற்றாத நீர்வளங்களை உடையது.

“மன்னுயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்

கொண்டல் தண் தனிக் கமஞ்சூல் மாமதை

கார் எதிர் பருவம் மறப்பினும்

பேரா யாணர்த்தால், வாழ்க நின்வளனே!”9

என்ற பாலை கௌதமனாரின் பாடல் அடிகள் பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் நாடு வற்றாத நீர் நிலைகளைக் கொண்ட தன்மையினைப் பதிவு செய்துள்ளன.

நிலவளம்

            நிலம் மனிதனுக்கு இயற்கை தந்த கொடை. நிலத்திற்கு மனிதன் என்ன செய்கிறானோ அதனையே திருப்பி நிலம் மனிதனுக்குச் செய்யும். நிலத்தை மாசு அடையாமல் காத்தால்தான் நாடு வளமையானதாக இருக்கும். சங்ககாலத் தமிழ் மக்கள் நிலத்தின் பயனை நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான், நிலத்தை வளப்படுத்தி, பயிர்களைச் செழுமையாக்கினார். அவர்கள் நிலத்தை நன்செய், புன்செய் என்று பாகுபடுத்தி அதற்கேற்றவாறு விதைகளை விதைத்தனர் என்பதை,

“தமிழ்நாட்டு நிலம் மிக வளப்பமானது. நன்செய் நிலம் நெல், கரும்பு உற்பத்தி ஆகிய அளவிற்கு மெத்த வளமும், புன்செய் கேழ்வரகு, கரும்பு, சோளம் ஆகிய புஞ்சைப் பயிர்கள் பயிராகிற அளவிற்கு ஓரளவு வளமும் உடையது”10 என்ற கருத்தின் வாயிலாக தமிழ்நாட்டு நில வளத்தின் தன்மையினை அறியலாம்.

            நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட நிலப்பகுதி மிகவும் வளமுடையதாகத் திகழ்ந்தது. இயல்பாகவே எல்லா நாட்டிலும் மழை பொழியும் காலத்தில் பயிர்கள் செழுமையுடன் வளரும். ஆனால், நாஞ்சில் வள்ளுவன் நாட்டில், மழையில்லாத கோடைக் காலத்திலும் மக்கள் விதைத்த வித்து கரும்பு போல தழைத்தது.

“காய்த்திட்ட வித்து வறத்திற் சாவாது

கழைக்கரும்பின் ஒலிக்குந்து”11

என்ற பாடல் அடியால் நாஞ்சில் நாட்டில் நிலம் வறண்ட கோடைக் காலத்திலும் பயிர்கள் செழித்து வளர்ந்த தன்மையினை அறிய முடிகிறது.

உணவு வளம்

            உணவின் மூலாதாரம் விவசாயம். எந்தவொரு நாடு விவசாயத்தில் செழிப்புற்றிருக்கிறாதோ அந்நாட்டில் வறுமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இருக்காது. உணவினைத் தரும் விவசாயத்தை அனைவரும் போற்றிக் காக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கும், உடலை வலிமையோடு வைத்துக் கொள்வதற்கும் உணவு இன்றியமையாததாக விளங்குகிறது. மக்களுக்கு உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைக் கூறுகளில் உணவிற்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மன்னர்களுக்குப் புலவர்கள் நாட்டின் நிலையை அறிவுறுத்துகையில், உணவின் இன்றியமையாமையை அறிவுறுத்தியதனைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. உணவிற்கு அடிப்படையான உழவினையும், உழவர்களையும் மன்னர்கள் போற்றிக் காத்தனர்.

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை”12

என்ற குறளானது உணவிற்கு அடிப்படையான உழவின் தன்மையைக் குறிப்பிட்டுள்ளது.

            நல்லியக்கோடன் ஓய்மான் நாட்டை ஆட்சி புரிந்தவன். அவன் உணவிற்கு மக்கள் பசியறியாது வாழ்ந்து வந்தனர். அவன் நாட்டில் எங்கும் உணவு வளம் நிறைந்திருந்தது. அவன் நாட்டில் விளையாட்டில் ஈடுபட்ட மக்கள், பன்றி உழுத சேற்றைக் கிளறினர். அப்போது அதிலிருந்து ஆமை முட்டையையும், அல்லிக் கிழங்கையும் எடுத்தனர்.

“கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்

யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்

தேன்நாறு ஆம்பல் கிழங்கோடு பெறூஉம்”13

என்ற புறத்திணை நன்னாகனார் பாடல் அடிகள் நல்லியக்கோடன் நாடு உணவு வளத்தில் குறைவுபடாது இருந்த இயல்பைக் காட்டுகின்றது.

            பிட்டன் கொற்றன் நாட்டு மக்கள் பன்றி கிளறியப் புழுதி பரந்த இடத்தில் நல்ல நாளினைப் பார்த்து தினையை விதைத்தனர். தினை வளர்ந்து முற்றியது. அதனை அறுவடை செய்து, மான்கறி சமைக்கப்பட்ட பானையில் தினையைக் கொட்டி, சந்தன விறகினைக் கொண்டு தீமூட்டிச் சமைத்தனர். சமைத்த உணவை வாழை இலையில் பரப்பி, அவன் நாட்டு மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.

“கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு

கடுங்கண் கேழல் உழுத பூமி

நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை”14

என்ற கரூவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரின் பாடல் பிட்டன் கொற்றன் நாடு பசியறியாது உணவு வளத்தில் சிறந்திருந்த இயல்பைப் பதிவு செய்துள்ளது.

            பாண்டி நாட்டில் பிசிர் என்ற ஊர் உள்ளது. அவ்வூர் உணவு வளம் குன்றாது சிறப்பற்றிருந்தது. அவ்வூரில் இடைச்சி சமைத்த புளியங்கூழை, அவரைக் கொய்பவர்கள் தம் வயிறு நிரம்ப உண்டனர்.

“கவைக்கதிர் வரகின் அவைப்புறு  வாக்கல்

தாதெரு மறுகின் போதொடு பொதுளிய

வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ”15

என்ற கோப்பெருஞ்சோழரின் பாடல் அடிகள் பாண்டிய நாட்டுப் பிசிர் என்ற ஊரானது வற்றாது உணவு வளத்தைக் கொண்ட தன்மையினைப் பதிவு செய்துள்ளன.

தொகுப்புரை

சங்ககாலம் நிலம், நீர், மலை, மழை, உணவு இயற்கை போன்ற அனைத்து வளங்களையும் பெற்று தன்னிறைவு உடைய சமுதாயமாக விளங்கியது. மன்னன் நீர்நிலைகளை ஏற்படுத்தி வேளாண் தொழிலையும், நீர்வள ஆதாரங்களையும் பெருக்கினான். மழையை நம்பியிராது கோடையிலும் மக்கள் செழிப்புற்று வாழ்ந்துள்ளனர்.

சான்றெண்விளக்கம்

1.திருக்குறள், 739

2.புறம். 156 (1-2)

3.மேலது, 176 (9-10)

4.மேலது, 380 (7-9)

5.சிலம்பு, மங்கல வாழ்த்துப் பாடல், (7-9)

6.பதிற்றுப். 43 (12-18)

7.அ.ச.ஞானசம்பந்தன், அகமும் புறமும், ப.214

8.புறம். 137 (7-8)

9.பதிற்றுப். 24 (27-30)

10.க.ப.அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, ப.188

11.புறம். 137 (5-6)

12.குறள். 1031

13.புறம். 176 (2-4)

14.மேலது, 168 (3-6)

15.மேலது, 215 (1-3)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி அ.கிறிஸ்டி நேசகுமாரி

ஆய்வில் நிறைஞர்

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

 

இரண்டாவது மனைவி | சிறுகதை

இரண்டாவது-மனைவி

இரண்டாவது மனைவி

ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம். நான்கு சக்கரம் இருந்துவிட்டால் குட்டியானை, டெம்போ, லாரி என்றல்லவா அழைத்திருப்போம். கையில் பிடித்த ஸ்டிரிங்கை சாலையில் குண்டு குழியில் சக்கரம் சிக்கிக்கொள்ளாமல் சரியாக ஓட்டினான் கனகசபை. அவனுடைய ஆட்டோவில் வருகின்றவர்களுக்கு ஒருகுறையும் வந்துறக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பான்.

“தம்பி இந்த இடம்தான் நிறுத்துப்பா..” என்றார் அந்த வயதானவர்.

ஆட்டோவை நிறுத்தி மீட்டரைப் பார்த்தான் கனகசபை. அந்தப் பெரியவரும் பார்த்தார். இரண்டு பேர் கண்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் வந்துவிடப்போகிறது. ஒரே தொகைதான். பெரியவர்  கனகசபையிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் அமர்ந்திருக்கும் தன்னுடைய வயதான மனைவியை அழைக்க கையை நீட்டினார். அதற்குள் கனகசபை கீழே இறங்கி,

“பெரியவரே இருங்க. அம்மாவ நானே மெதுவா இறக்கி விடுறேன்”

“உனக்கு எதுக்குப்பா சிரமம். நான் பாத்துக்கிறனே” என்றார் பெரியவர்.

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல. பாட்டியம்மா என்னோட கையைப் புடிச்சுக்கோங்க” என்றான். அந்த வயதான அம்மாவை மெதுவாய் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டான். அவர்களுடையப் பைகளையும் கொண்டுபோய் வீட்டின் உள்கதவு வாசலில் வைத்தான். ஆட்டோவிற்கு திரும்பி வந்த கனகசபை ஒருமுறை ஆட்டோவை நன்றாகக் கவனித்தான். எதையாவது விட்டுவிட்டு சென்று இருப்பார்களா என்று? எதுவுமில்லை என்றவுடன் மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். அப்போதுதான் அதை கவனித்தான்.

அந்தப் பெரியவருக்குத் தொன்னூறு வயதிற்கு மேல் இருக்கும். பெரியம்மாவிற்கு எம்பத்தைந்தைத் தாண்டியிருக்கும். சுருக்கம் விழுந்த பெரியம்மாவின் கையை இறுகப்பற்றியிருந்தார் அப்பெரியவர். பெரியம்மாவும் கணவனைத் தாங்கிப்பிடித்து நடந்து சென்றார். கனகசபைக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. இத்தனை வயசுக்குப் பின்னாலும் காதலும் தாபத்தியமும் இனிக்கின்றதா என்ன? உன்னதமான அன்பு இறைவனால் எப்போதும் கைவிடப்படுவதில்லை. ஆட்டோ வேகமாக ஓடியதில் புகை கருகியது.

சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கல்யாணி நின்றிருந்தாள். எடுப்பான தோற்றம். கை இடுக்கில் தோல்பை ஒன்று. பார்க்க சாதாரணமாய் இருந்தாலும் அழகாய் இருந்தாள். கல்யாணியின் கண்கள் வலதும் இடதுமாய் சுழன்ற வண்ணம் இருந்தன. இப்போது அவளின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது.

“ஏன் இவ்வளவு நேரம். சீக்கிரம் வர வேண்டியதுதானே” என்று கடிந்து கொண்டாள் கல்யாணி.

“சவாரி ஒன்னு இருந்தது. அதான் லேட்டாயிடுச்சி. வா.. வந்த ஆட்டோவுல சீக்கிரம் ஏறு. இன்னும் பசங்கள வேற கூப்பிட போகனும்” என்றான் கனகசபை.

பசங்க என்று சொன்னவுடன் முகம் கோணலாகியது கல்யாணிக்கு. இறுகிய முகத்துடனே ஆட்டோவில் ஏறினாள். கொஞ்சதூரம் சென்றவுடன் மளிகைகடை தாண்டி ஆட்டோவை நிறுத்தினான். கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்து கல்யாணியிடம் கொடுத்தான். அவளும் வாங்கிக்கொண்டாள்.  வீடு போய்ச்சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆட்டோவிலிருந்து கல்யாணி இறங்கியவுடன் புறப்படத் தயாரானான்.

“உள்ள வந்து காபி சாப்பிட்டு போங்க” என்றாள் கல்யாணி

“ஸ்கூல்ல இருந்து பசங்கள கூப்பிடனும். இப்பவே டைம் ஆச்சு. நான் அப்புறமா வரேன்” என்று சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

“இந்த மனுசனுக்கு இங்க வந்தாதான் ஏதோவொரு வேல இருக்குன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடுராரு. மாசம் பொறந்திச்சின்னா போதும், கல்லி..கல்லி..யின்னு பின்னாலே வந்து அந்தச் செலவு இருக்கு இந்தச் செலவு இருக்குன்னு வாங்கின சம்பளத்துல பாதிய புடிங்கிடுறாரு. மீதியை அப்பப்ப வந்து வாங்கிகிட்டு போயிடறாரு. ஆனா செய்யுறது எல்லாம் அந்த வீட்டுக்கு மட்டுதான். என்ன கொஞ்சமாவது நினைச்சு பாத்தாரா..” மனதில் பொறுமிக் கொண்டாள் கல்யாணி.

வாசலில் கீரையை ஆய்ந்து முறத்தில் வைத்துக்கொண்டிருந்தாள் மீனாட்சி. ஆட்டோ வந்ததும் பிள்ளைகள் ரெண்டும் வேகவேகமாய் அம்மாவைக் கடந்து உள்ளே ஓடின. ஆட்டோவை நிறுத்தி விட்டு கனகசபையும் மீனாட்சியைத் தாண்டி உள்ளே நுழையப்போனான்.

“பசங்களுக்கு எப்ப ஸ்கூல் முடிஞ்சது. இப்பத்தான் கூட்டிட்டு வரீங்க. இவ்வளவு நேரமா எங்க போனீங்க“

“சவாரி இருந்திச்சி. அதான் ஸ்கூலுக்குப் போக லேட்டாயிடுச்சு”

“எல்லாம் எனக்கு தெரியும். ஆட்டோ எங்கயெல்லாம் போகுதுன்னு.. நடக்கட்டும் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறன்”

“என்ன விசாரணை கமிஷனா? உனக்கு என்ன தெரியும்? அவனவனுக்கு ஆட்டோ ஓட்டி கஷ்டபட்டா தெரியும்”

“ஆமா… ஊர்ல எவனுமே ஆட்டோ ஓட்டுல பாரு. துரை நீங்க மட்டுந்தான் ஆட்டோ ஓட்டுறீங்க”

அடுத்த வினாடி மீனாட்சியின் கையில் இருந்த முறம் வாசலுக்குப் பறந்தது. கனகசபை வீட்டிற்குள் சென்றான். மீனாட்சி தேம்பி தேம்பி அழுதாள். பெரியவனும் சின்னவனும் பாத்ரூமில் ஒன்னுக்குப் போகச் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு ரெண்டு பசங்களும் அமைதியாய் வெளியில் எட்டிப்பார்த்தனர்.

அந்தத் தெருவில் கடைசி வீடுதான் கல்யாணியின் வீடு. ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அவள் வீட்டு முன்னால் ஆட்டோ வந்து நின்றது. கையில் கேரிபேக். அவற்றில் மீன் இருந்தது. நேராக உள்ளே சென்றவன் கதவைச் சாத்தினான். தான் வந்த போவது யாருக்கும் தெரியக்கூடாதாம். ஆனால் அந்த வீட்டு முன்னால அப்பப்போ ஆட்டோ வந்து நிக்கிறது தெரு முழுக்க தெரிஞ்சுதான் இருந்தது.

“கல்யாணி.. கல்யாணி… எங்க இருக்குற…” என்று அழைத்துக்கொண்டே பின் வாசலுக்குச் சென்றான்.

“துணி துவைச்சிட்டு இருக்கேன்” பதில் உடனடியாக வந்தது.

      அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கல்யாணியையே உற்றுப் பாரத்துக் கொண்டிருந்தான். என்ன அழகு? தங்கமான குணம்! வியர்வையும் தண்ணீராலும் நனைந்து போயிருந்த முதுகுபுறம். தன்னையே மறந்து போனான்.

      “என்ன புருஷன் சார்! பொண்டாட்டிய சைட் அடிக்கிறியா?”

      “ஆமாம்!”  உண்மையை ஒத்துக்கொண்டான் கனகசபை.

      “செம தைரியம்தான் உங்களுக்கு! சரி நடங்க வெளிய போவோம்…”

      “எதுக்கு வெளிய கூப்பிடுற”

      “சும்மாதான்… கொஞ்ச வாயேன்..” என்று கையைப் பிடித்து இழுத்தாள். அவள் கை முழுவதும் அழுக்கு சோப்பு நுரை இருந்ததனால் வழுக்கிச் சென்றது.

      “என்ன சைட் அடிக்கிற இல்ல.. அதான் வெளிய வந்து ஊரக்கூட்டுறன். சத்தமா இவதான் என்னோட பொண்டாட்டின்னு சொல்லு”

      “ம்..ம்.. அது வந்து.. அது வந்து… என்னால முடியாது”

      “என்ன முடியாதா? ஆமா நானு யாரு? உங்கள சந்தோஷப்படுத்தனும். காசு கேட்கிறப்பல்லாம் கொடுக்கனும். அதான உங்க விருப்பம். சிறுக்கி மொவதான நானு!

      “அப்படியில்ல கல்யாணி தப்பா புரிஞ்சுக்காத…” கோப முகத்துடன் ஐந்து விரல்களையும் ஒன்றாக தலைக்கு மேல தூக்கி, ”போதும் நிறுத்து பேசாத! நான் சிறுக்கி மொவதான” என்றாள். கல்யாணியின் மனம் குமறியது.

      “தெருவுல நடக்க முடியல. என்ன யாரு பாத்தாலும், டே ஸ்டெப்னி போகுதுடா – ன்னு சொல்றாங்க. செகணட்டு, பழசு, ஓட்ட காரு, டவுன்பஸ்சு, டே அந்த ஆட்டோக்காரன் அவனுக்கும் வண்டிக்கும் ஸ்டெப்னி வச்சிருக்காண்டா ன்னு சொல்றாங்க”

      “நமக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சில்ல. நீ என்னோட பொண்டாட்டி கல்யாணி. உன்ன எதுக்கு அப்படி பேசனும்”

      “உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு நம்ம ரெண்டு பேரு, அப்புறம் அந்தப் பூசாரி அப்புறம் ரெண்டு பொண்டாட்டிகார சாமி. அவ்வளவுதான் வேற யாருக்குமே தெரியாது. இதெல்லாம் ஒரு கல்யாணமா? நல்லது கெட்டதுக்குப் போக முடியல… நீதான் யே புருஷன்னு வெளிய சொல்ல முடியல.. ஆபிஸ்ல எங்க வூட்டுகாரரு மாதிரி யாருமில்லன்னு சொல்லி வச்சிருக்கேன். இன்னும் அவுங்களுக்கு நம்ம கதை தெரியல. தெரிஞ்சா அவ்வளவுதான் நான். ஏதோ யே கதையும் ஓடிட்டு இருக்கு” கடுகடுத்தாள் கல்யாணி. கனகசபை மூஞ்சியை உம்மென்று வைத்திருந்தான்.

“உங்களுக்கென்ன நீங்க ஆம்பிளைங்க. உங்க சுகதுக்கத்தை எல்லாம் இங்க இறக்கி வச்சிட்டு போயிடுவீங்க… நாங்க எங்க இறக்கி வைக்கிறதாம்? எந்த நேரத்துல எங்க அம்மாக்காரி என்னைப் பெத்துப்போட்டாலோ தெரியல. காலம் பூராவும் லோலு பட்டுட்டு திரியரன். இதுக்கு ஒரு விடிவுகாலமே வராதா” என்று அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டாள். கனகசபை தலை குனிந்து கொண்டான். கனகசபை அப்படி உட்காந்திருப்பது கல்யாணிக்குப் பிடிக்கவில்லை.

“சரி.. தலையை தொங்கப்போட்டுட்டு உட்காந்து இருக்காதீங்க. நல்லா இல்ல! சரி கையில என்ன வச்சிருக்கீங்க..”

“மத்தி மீனு வாங்கிட்டு வந்திருக்கேன். மத்தி மீனு உடம்புக்கு நல்லாதாம். குழும்பும் ருசியாய் இருக்குமாம்”

“அந்த வூட்டுக்கு என்ன வாங்கி கொடுத்தீரூ…” புடவைக்கு சோப்பு போட்டுக்கொண்டே கேட்டாள்.

“அங்கேயும் மீனு வாங்கி கொடுத்துட்டுதான் வரேன்” கல்யாணி கனகசபையை முறைத்துவிட்டு, மீன அலசி வையுங்க. சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடியை எடுத்து உரிச்சி வையுங்க. புளி கொஞ்சம் ஊற வைச்சிருங்க. நானு இந்த ரெண்டு துணியை அலசி போட்டுட்டு வந்துடுறேன்.

ஒரே பொண்ணுங்கிறதால அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பொண்ணு. அம்மாதான் இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து அவள கெடுக்கிறீங்க.. என்று அப்பப்போ சண்டை போடுவா.  இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் எங்க வீட்டுக்கு அப்பாவோட பால்ய வயசு நண்பர் ஒருத்தர் வந்திருந்தார். அவுங்க பையன் குரூப் எக்ஸாம் பாஸ் பண்ணி வேலையில இருக்கிறானாம். இப்ப பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்களாம். என்னைப் பார்த்து,

“நீ என்னம்மா பண்ற” – என்றார் அவர்.

“பி.இ முடிச்சிருக்கேன். இப்ப வேலை தேடிகிட்டு இருக்கேன். அப்பாவுக்கும் வயசாயிடுச்சி. அப்பாவுடைய பென்சன் பணத்துலதான் குடும்பமே ஓடுது. நான் வேலைக்கு போனேனான்னா… கொஞ்சம் சிரமம் கொறையும்” வந்தவரிடம் தன்னுடைய இயலாமையைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டாள் கல்யாணி.

“நீ ஏன் குரூப் எக்ஸாம்க்கு படிக்க கூடாது” என்றார்.

அன்று அவர் சொன்னதுதான் மூன்று வருடங்களுக்குப் பிறகு சாத்தியமாகி இருக்கிறது. இரவு பகல் என்று பாராமல் படித்தவள் இன்று அரசாங்க வேலையில் அமர்ந்திருக்கிறாள். கல்யாணிக்கும் வயசு ஏறிக்கொண்டே சென்றது. அப்பாவும் அவருடைய நண்பரும் அடுத்த சந்திப்பில் என்னுடைய கல்யாணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டனர். அப்பாவின் நண்பருடைய மகனை எனக்கு நிச்சயம் செய்திருந்தனர். நல்ல சம்பந்தம்தான். அன்று காலை நல்ல சுபமுகூர்த்த வேளையில் எனக்கு திருமணம் நடந்தது. மறுவீடு அழைப்பின் போது என்னுடைய கணவர் அவரின் தங்கை குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்க பைக்கில் செல்லும் போது லாரி மீது மோதி மரணமடைந்தார். அத்துடன் என் வாழ்வும் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. கொஞ்ச காலத்தில் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நான் அநாதை ஆக்கப்பட்டேன்.  அப்பொழுதுதான் தனிமையை முழுமையாக உணர்ந்தேன். வேலைக்கு சென்று வரும்போதுதான் இந்தக் கனகசபையைப் பார்த்தேன். தினமும் அவருடைய ஆட்டோவில்தான் சென்று வருவேன். ஆரம்பத்தில் நான் அவருடன் பேசவே மாட்டேன். நாளாக நாளாகப் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் என்னுடைய ஆதரவை எண்ணி அவரை விரும்ப ஆரமித்தேன். இந்தச் சமூகத்தில் எனக்கு மனைவி என்கிற அந்தஸ்து வேண்டும். கனகசபையும் அவருடைய வீட்டில் எப்படியோ சம்மதம் பெற்று தருவதாக உறுதி அளித்தார். மனைவி என்கிற அந்தஸ்து அவரிடம் கிடைக்கும் என நம்பினேன். அதனால் அவருக்கு இரண்டாவது மனைவியாகக் கழுத்தை நீட்டினேன்.

எந்த மனைவியாவது தன்னுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி வருவதை ஒத்துக்கொள்வாளா? எங்கையாவது இப்படி நடக்குமா? நான்தான் முட்டாள்தனமாக நம்பிவிட்டேன். என்ன மடத்தனமாய் இருக்கிறது? என்று துணிகளை அலசிக்கொண்டை அத்தனையும் மனதில் படமாய் ஓட்டிப்பார்த்துக் கொண்டாள். கையில் இருந்த ஈரப்புடவையை கையை மேலே தூக்கி உதறினாள். துளித்துளியாய் தண்ணீர் சாரளாய் தெரித்தது. மத்தி மீனு குழம்பில் கொதித்தது. கல்யாணியின் மனமும் குழம்பில் கிடந்த மீனாய் தவித்த்து.

அன்று மாலை கல்யாணியில் வீட்டுக்கதவு யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மாராப்பை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு கல்யாணிதான் கதவை திறந்தாள். திறந்தவுடன், “ஏ… தேவுடியா மொவளே!..” என்று அவளுடைய வயிற்றில் எட்டி உதைக்கப்பட்டது. தொப்பென்று உள்ளே போய் விழுந்தாள். அதற்குள் கனகசபையின் மனைவியும் அவளுடைய தம்பிகளும் உள்ளே நுழைந்திருந்தனர். மீனாட்சி கனகசபையைப் பார்த்தாள்.

“இந்தாருடா தம்பி… உங்க மாமன பாத்தியாடா… ஆட்டுக்கறியை எனக்கு எடுத்துக்கொடுத்துட்டு மூத்திரத்த குடிக்க இங்க வந்திருக்காருடா” – மீனாட்சி

“அக்கா சும்மா இரு… பேச்சைக்கொற.. மாமா நீங்க வாங்க மாமா…” என்று கனகசபையை வெளியே அழைத்துச்சென்றனர். செல்லும்போது அக்கா மீனாட்சியிடம் கண்ணைக்காமித்துக் கல்யாணியைப் பாரத்தனர். அவ்வளவுதான்! மீனாட்சி கல்யாணியின் மேல் ஏறி சிண்டப்புடிச்சி அடிஅடியென்று அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள். தலைமுடி விரித்த நிலையில் கல்யாணி கீழே படுத்துக்கொண்டிருக்க, கல்யாணியின் வயிற்றின் மேல் மீனாட்சி அமர்ந்திருந்தாள். அவளின் கைகள் கல்யாணியின் மார்பை ஓங்கி ஓங்கி குத்தியது. மீனாட்சியின் வாயில் கெட்ட வார்த்தைகள் தவிர வேறெதுவும் வரவில்லை. பச்சை பச்சையாகத் திட்டிக்கொண்டிருந்தாள்.

“விடுங்கடா என்னை… எங்கடா கூட்டிட்டு போறீங்க… ” என்றார் கனகசபை. மீனாட்சியின் தம்பிகள் ரெண்டு பேரும் அந்த வீதியின் முனைப்பகுதியில் உள்ள சாலையில் கொண்டு வந்து சேர்த்தனர். கல்யாணி வீட்டில் மீனாட்சி அடிப்பது பெரும் சத்தத்ததுடன் அலறல் கேட்டது. அந்த வீதி முழுவதும் கூட்டமாய் மக்கள் நிறைந்து இருந்தனர். கடைசி வீட்டில் அப்படி என்ன நடக்கிறது என்ற ஆவலே அவர்களிடத்தில் மிகுந்திருந்தது. ஒரு சிலபேர் இப்படி அப்படி என்று பலர் அலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கல்யாணியால் அடியைப் பொறுக்க முடியவில்லை. மயக்க நிலைக்குக் கொஞ்சகொஞ்சமாய் சென்றுகொண்டிருந்தாள். மீனாட்சியின் ஒவ்வொரு அடியும் கன்னத்தில் மாறிமாறி விழுந்தது. அடுத்த வினாடி.. கல்யாணி மீனாட்சியை ஒரேஒரு தள்ளாய் கதவுக்கு வெளியே தள்ளி தாழிட்டாள். அப்பதான் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சி வாங்கியது. அடிவயிறு சுள்ளென்று வலித்தது. நெஞ்சு வெடித்து இதயம் வெளியே வந்துவிடும் போலிருந்தது கல்யாணிக்கு.

“கதவ தொறடி நாதேரி முண்ட” சத்தமாய் திட்டினாள்.

கதவை எட்டி எட்டி உதைத்தாள். கதவு அதற்குமேல் திறக்காது என்று தெரிந்து கொண்டாள் மீனாட்சி. மாராப்பை நேராக இழுத்துவிட்டுக்கொண்டு கலைந்திருந்த தலைமுடியைக் கொண்டைப்போட்டுக்கொண்டாள். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மீனாட்சியின் வெறித்தனமான ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நேராக கணவனிடம் சென்றாள். அவனுடைய சட்டையை இறுக்கப்பிடித்துக்கொண்டாள்.

“எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு? சொல்லு… இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும் எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு?”

“அமைதியா இரு.. எல்லாரும் பாக்குறாங்க. மானமே போகுது” – கனகசபை

“பாத்தியாடா தம்பி உங்க மாமாவுக்கு மானம் போகுதாம். ஏற்கனவே மானம் காத்துல போயி சந்தி சிரிப்பா சிரிக்குது. அவஅவளுக்கும் வாழ்க்கையே போகுதாம்… இவருக்கு மானம் போகுதாம்மல்ல…” நக்கலாய்ச் சிரித்தாள் மீனாட்சி.

“எதுவாயிருந்தாலும் வீட்டுக்குப் போயி பேசிக்கலாம். வா.. முதல்ல வீட்டுக்குப் போவோம்…” என்றார் கனகசபை.

“என்னது வீட்டுக்குப் போவோமா? என்னது என்ன பூசான பூத்துப் போயிருக்கு. அவகிட்ட என்ன இருக்குன்னுகு நாக்க தொங்க போட்டுட்டு போனவ”

கொஞ்சநேரம் அந்த இடமே நாரசமாய் வார்த்தைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. சிலர் சின்னக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். வலி தாங்க முடியாமல் குப்புறப்படுத்துக்கிடந்தாள் கல்யாணி. அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீர்த்துளியானது தரையில் போடப்பட்டிருந்த கோடுகளின் வழியாக ஓடி சுவற்றை தொட்டு திக்குதெரியாமல் அடைபட்டு நின்றது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

புறநானூற்றில் புலவரும் மன்னரும்

புறநானூற்றில்-புலவரும்-மன்னரும்

புறநானூற்றில் புலவரும் மன்னரும்

            சங்கச் சான்றோர் “எமக்குத் தொழில் கவிதை”யென்று கருதி, பெருமிதவுணர்வோடு மக்களின் நல்வாழ்விற்காகத் தம் எழுத்தாற்றலையும் சொல்லாற்றலையும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து அறிய முடியும்.  புலவர்களை ‘அறிவுத்தொழில் செய்வார்’ என்ற பொருளில் “புலன் உழுது உண்மார்” என்றே குறிப்பிடும் பாடலும் உண்டு.  தாம் மேற்கொண்ட அறிவு வாழ்க்கை (life of the mind)  செயல்வாழ்க்கை (life of  action) என்பதினின்றும் வேறுபட்டது என்பதையும், பின்னதற்குரிய உடல் உழைப்பு தமக்குப் பொருந்துவது அன்று என்பதையும், எனவே மன்னரிடமும் குறுநில வேந்தரிடமும் ஏனைய செல்வரிடமும் சென்று தம் நாவன்மையைக் காட்டிப் பரிசில் பெற்று வாழ்க்கையை நடத்துவதில் தவறில்லையென்பதையும், அதுவே சமுதாயத்திற்குத் தாம் செய்ய வேண்டிய பணியென்பதையும் நன்றாகவே அப்புலவர்கள் உணர்ந்திருந்தார்கள். புறநானூற்றில் புலவரும் மன்னரும்

            இக்கருத்தைச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் தெளிவுபடுத்தும் கபிலர் “போர்க்களத்தும் அரசவையிலும் செயலாற்ற வேண்டிய அரசனின் கைகள் வலியவையாக இருப்பதும் புலாலும் துவையலும் கறியும் சோறும் உண்ணுவதைத்தவிர வேறு வலிய செயல்களைச் செய்யாமையால் புலவர்களின் கைகள் மென்மையானவையாக இருப்பதும் இயற்கை”

                                    சாவநோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்

                                    பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்

                                    வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை

                                    கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது

                                    பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்

                                    மெல்லியபெரும தாமே நல்லவர்க்கு

                                    ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு

                                    இருநிலத்து அன்ன நோன்மைச்

                                    செருமிகு சேஎய்நின் பாடுநர் கையே                   (புறம் 14)

என்பார். கவிதை யாத்தலை, புலமைத் தொழிலை ஒரு வாழ்க்கை முறையாகவே அன்னார் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு இத்தகைய பாடல்கள் சான்றாகும்.

            அறிவுத் தொழிலைச் செவ்வனே செய்வதற்காக இரந்துவாழும் வாழ்வு ஏற்புடையதே என்பது அவர்களது உறுதியான நம்பிக்கை.  மன்னர் வாழ்வினும் புலவர் வாழ்வு எவ்விதத்தினும் குறையுடையதன்று என்று மன்னனிடமே எடுத்துக்கூறும் புலவர் கோவூர்கிழார் ஆவார்.  “ஊர்ஊராகச் சென்று நாவன்மையால் வள்ளல்களைப் பாடிப் பொருளைப் பெற்றுச் சுற்றத்தைக் காத்துத் தமக்கென வைத்துக் கொள்ளாது பலருக்குக் கொடுத்துவாழும் புலவர் வாழ்க்கையால் யாருக்கேனும் தீங்கு உண்டாகக் கூடுமோ? அவர்களின் வாழ்வு பெருஞ்செல்வம் படைத்த அரசர்களின் வாழ்வை ஒத்த செம்மாப்பு உடையது” என்று புலவர் தொழிலின் பெருமையை மன்னனுக்கு எடுத்துக் கூறுகிறார்.

                                    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

                                    நெடிய என்னாது சுரம்பல கடந்து

                                    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

                                    பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

                                    ஓம்பாது உண்டு.  கூம்பாது வீசி,

                                    வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

                                    பிறர்க்குத்தீது அறிந்தன்றோ!  இன்றே திறப்பட

                                    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி

                                    ஆங்கினிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்

                                    மண்ணாள் செல்வம் எய்திய

                                    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே!             (புறம் 47)

            அறிவுத் தொழிலைத் திறம்படச் செய்து பரிசில் வாழ்க்கை வாழ்ந்த புலவர்கள் இரத்தலை இழிதொழிலாகக் கருதினாரல்லர்.  வேறு உடல்தொழில் செய்வதில் நாட்டமற்றவர்களாய், அதனால் தமது காலத்தையும் தமக்கிருந்த பிறவி ஆற்றலையும் விரயமாக்க விரும்பாதவர்களாய், மன்னரிடமிருந்து பெற்ற பெருவளத்தைப் பலரோடு பகிர்ந்துகொள்பவர்களாய்த் தம் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.  இதனால் அவர்கள் தாழ்வுமனப்பான்மை ஏதுமின்றித் தலைக்குனிவிற்கு இடமின்றித் தமக்கெனத் தெரிந்தெடுத்துக் கொண்ட தொழிலைச் செவ்வையாகச் செய்யமுடிந்தது.  வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் குறுநில மன்னனாகிய வெளிமானிடம் பரிசில் கேட்கச் சென்றபோது அவன் இறந்ததைக் கேள்வியுற்று, “என் இறைவன் இறந்தது அறியாது,  அந்தோ இரங்கத்தக்க நான்வந்தேனே!  என்ன ஆவார்களோ என் சுற்றத்தார்!  மழை பெய்யும் இரவில் மரக்கலம் கவிழ்ந்த போதில் கண்ணில்லாத ஊமையன் கடலில் விழுந்து அழுந்தியதைப்போல எல்லை அளந்தறியப் படாத தாங்குதற்கரிய அலைகள் வீசுகின்ற நீரில் மூழ்கி இறந்து படுதலே நன்று; நாம் செய்யத்தக்கதும் அதுவே” (புறம். 238) என்று வருந்திப்பாடியவர்.  அவரே குமணன் அளித்த பரிசிலைப் பெற்ற போது,

                                    நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்

                                    பன்மாண்கற்பின் நின் கிளை முதலோர்க்கும்

                                    கடும்பின் கடும்பசி தீர யாழநின்

                                    நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்

                                    இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

                                    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

                                    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!

                                    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

                                    திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.             (புறம். 163)

என்று தமது மனைவிக்கு அறிவுரை கூறுவார்.  வறுமையின் கொடுமையை உணர்ந்த புலவர் இரந்துபெற்ற பொருளைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில் கவிஞர்கள் வள்ளல்களுக்கு இளைத்தவர் அல்லர் என்பதை வலியுறுத்துவது நோக்கற்பாலது.

            இப்பெருஞ்சித்திரனாரே இளவெளிமான் என்பான் தமது தகுதிக்கேற்ற பரிசில் தராதபோது “புலி களிற்றை வீழ்த்த முயன்று அது தப்பிவிட்டால் எலியை நோக்கிப் பாயாது.  நெஞ்சமே கலங்காதே!”  என்று தமக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அப்பரிசினை ஏற்க மறுத்தார்.  அதற்கும் மேலாக, குமணன் தமக்களித்த யானை ஒன்றை இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டிவிட்டு,

                                    இரவலர் புரவலை நீயும் அல்லை;

                                    புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;

                                    இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு

                                    ஈவோர் உண்மையும் காண்இனி; நின்ஊர்க்

                                    கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த

                                    நெடுநல் யானைஎம் பரிசில்

                                    கடுமான் தோன்றல் செல்வல் யானே                   (புறம் 162)

என்று அவனிடம் சொல்லிச் செல்கிறார்.  புலவர்கள் தன்மானம் மிக்கார் என்பதற்கு இதனினும் உயர்ந்த சான்றைத் தேடிச்செல்ல வேண்டியதில்லை.  பெருஞ்சித்திரனார் இத்தகையர் என்பதை நாம் நம்புதற்கு இன்னொரு புறப்படாலும் ஏதுவாகிறது.

            அவ்வையாரின் பாராட்டைப் பெற்ற வள்ளலாகிய அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசில் பெறச் சென்ற பெருஞ்சித்திரனாரை அவன் நேரில் கண்டு பேசாது அனுப்பிவைத்த பரிசிலை அவர் ஏற்காது, “நான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்” என்று தம் நிலையைத் தெளிவுபடுத்துகிறார்.

                                    குன்றும் மலையும் பலபின் ஒழிய

                                    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென

                                    நின்ற என்நயந்து அருளி ஈதுகொண்டு

                                    ஈங்கனம் செல்க தான் என என்னை

                                    யாங்கு அறிந்தனனோ தாங்கரும் காவலன்

                                    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

                                    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்

                                    தினையனைத் தாயினும் இனிதவர்

                                    துணையள வறிந்து நல்கினர் விடினே.               (புறம் 208)

            சங்க காலத்தில் அரசர்க்கும் புலவர்க்கும் இருந்த உறவு பொதுவாகப் புரவலர்க்கும் இரவலர்க்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வான உறவு அன்று.  மன்னர்களை அளவு கடந்து புகழ்ந்து பரிசில்களை அள்ளிச் செல்லும் நோக்குடன் புலவர்கள் செயல்பட்டார்கள் என்று கருதுவது தவறு.  தம்தனி வாழ்வில் அறமல்லாச் செயல்களை அரசர்கள் செய்தபொழுது அவர்களை இடித்துரைக்கப் புலவர்கள் தயங்கவில்லை.  வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து அவளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பரத்தை ஒருத்தியோடு வாழத் தொடங்கியதை அறிந்த புலவர்கள் நால்வர் அவனைக் கடுமையாகச் சாடி அறவுரை கூறத்தயங்கவில்லை.  பேகனை,

                                    உடாஅபோரா ஆகுதல் அறிந்தும்

                                    படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

                                    கடாஅ யானைக் கலிமான் பேகன்

                                    எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன

                                    மறுமை நோக்கின்றோ அன்றே

                                    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே.           (புறம் 141)

என்றும்

                                    வரையா மரபின் மாரி போலக்

                                    கடாஅ யானைக் கழற்கால் பேகன்

                                    கொடைமடம் படுதல் அல்லது

                                    படைமடம் படான்பிறர் படைமயக்குறினே        (புறம் 142)

என்றும் பாராட்டிப் பேசும் பரணர் கண்ணகியின் துயரை,

                                    முகைபுரை விரலில் கண்ணீர் துடையா

                                    யாம்அவன் கிளைஞ ரேம்அல்லேம்; கேள்இனி;

                                    எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்

                                    வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்

                                    ஒல்லென ஒலிக்கும் தேரொடு

                                    முல்லை வேலி நல்லூ ரானே                                     (புறம் 144)

என்று படம்பிடித்துக்காட்டி “அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடியது” என்று கண்டிப்பார்.  இன்னொரு பாடலில் “நாங்கள் உன்னிடம் பசித்து வரவில்லை; எமக்குப் பரிசில் வேண்டும் சுற்றமும் இல்லை; நீ உன் மனைவியைச் சேர்ந்து அவள் துன்பத்தைப் போக்கு; இஃது யாம் இரந்த பரிசில்” (புறம் 145) என்பார்.  செறுத்த செய்யுள் செய்க் கபிலனோ,

                                    “நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்

                                    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று

                                    நின்னும் நின் மலையும் பாட இன்னாது

                                    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

                                    முலையகம் நனைப்ப விம்மிக்

                                    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே”     (புறம்  143)

என்று ஓர் அவலக்காட்சியை ஓவியப்படுத்தி, “யார்கொல் அளியள் தானே” என்று மறைமுகமாக, ஆனால் அவன் உள்ளத்தில் தைக்குமாறு ஒரு வினாவை எழுப்புகிறார்.

            அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமான் பேகன் அளித்த பெரும்பரிசிலைப் புறக்கணித்து

                                    அன்னவாக் நின் அருங்கல வெறுக்கை

                                    அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப்பேக         (புறம் 146)

என்று சினத்தொடுபேசி, “நீ என்னை நயந்து பரிசில் நல்குவையாயின் உன்னால் ஒதுக்கப்பட்ட மனைவியை நீ உடன்சேர வேண்டும் என்பதே நான் வேண்டும் பரிசில்” என்பார்.

            பெருங்குன்றூர்க் கிழாரும் இத்தகைய வேண்டுகோளையே முன்வைப்பார்: “ஆவியர்கோவே! நாங்கள் கல்முழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்தோம்.  கார்காலத்து வானிலிருந்து விழும் மழைத் துளிகளின் ஓசையை ஒருபெண் தனித்திருந்துகேட்டுத் துயர்தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.  அப்பெண்ணின் நெய்துறந்த கரிய கூந்தலை மணிபோல் மாசில்லாமல் கழுவிப் புதுமலர் அணியச் செய்வதற்கு இன்றே நீ செல்வாயானால் அஃதே நீ எமக்களிக்கும் பரிசில்” (புறம் 147).

            நான்கு பெரும் புலவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரே விதமான கருத்தைத் தெரிவித்திருப்பதால் இது வரலாற்று நிகழ்ச்சியென்பதில் ஐயமிருக்க வழியில்லை.  பேகனையும் கண்ணகியையும் இணைத்து வைக்கப் புலவர்கள் மேற்கொண்ட முயற்சி முற்றும் கற்பனையானது என்று கருதுவது அறிவீனமாகும்.  இப்பாடல்களைப் பெருந்திணையில் குறுங்கலித் துறையைச் சார்ந்தவையென்று திணை, துறை வகுத்தோர் இலக்கண வரம்பைத் தளர்த்தி, பெருந்திணை, குறுங்கலி ஆகியவற்றின் பாடுபொருளை விரிவு செய்துள்ளமை வரலாற்று நிகழ்ச்சியொன்றுபற்றிப்பேசும் அருமையான பாடல்களைத் தினை, துறை இலக்கணத்துள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே என்பது தெளிவாகிறது.

            பெருந்திணையென்பது பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுவது. ஒருவனால் துறக்கப்பட்ட மனைவியை அவனோடு சேர்த்து வைக்கும் நோக்குடன் நீ அவளிடம் அருள்காட்ட வேண்டும் என்று புலவர் வேண்டுதலே குறுங்கலியெனும் துறையென்று இப்பாடல்களை வைத்துக் கொண்டு அத்தகைய துறையைச் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.

            சங்கச்சான்றோர் எழுத்துத்தொழிலைச் சமுதாய நலனுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தினர். தமது அறிவு, மன, ஆன்ம வளர்ச்சிக்காகவோ, தாம்பெறும் முருகியல் இன்பத்திற்காகவோ என்று மட்டுமல்லாமல் தம்மைச் சூழ்ந்திருந்த மாந்தர் நல்வாழ்வுபெறத் தம்மால் இயன்றதையெல்லாம் செய்யும் நோக்குடன் தம் கவிதையாற்றலைக் கையாண்டனர். கிரேக்கப் பழங்கவிஞர்களோடு புறநானூற்றுப் புலவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பின்னவர் சிறப்பு தெளிவாகும். பிண்டார் (Pindas), சாஃபோ (Sappho) போன்ற கிரேக்கத் தன்னுணர்ச்சிப் பாடல்களில் வல்லுநர்கள் சமுதாய மேம்பாட்டில், மனிதஇன முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் அல்லர். “Social Consciousness was unknown to  the ancient Greek poets” என்று இன்றைய கிரேக்கக் கல்வியாளர்கள் அக்கவிஞர்களின் குறையைச் சுட்டிக்காட்டுவார்கள். பேரறிவு பெற்ற கவிஞர்கள் தம் கவிதைகள் மூலம் சமுதாயப்புரட்சிக்கு வித்திடவும் சட்டமியற்றவும் வருவதுரைக்கவும் வல்லவர்கள் என்று ஷெல்லி கூறுவார். புறநானூற்றுப் புலவர் பலர் இத்தகையோரே. தமிழ்வேந்தர் பலர் கல்வியின் இறையாண்மையினை நன்குணர்ந்து கற்றோர் கூறும் அறநெறியைக் காதுகொடுத்துக் கேட்டுத் தமது அரசுமுறையினை நடத்தி வந்தனர்; அன்னாரை நன்னெறியில் செலுத்த அறம் உரைக்கும் நல்லவைகளும் இருந்தன. பாண்டியன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் “அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும்” என்பதை ஏற்றுக்கொள்கிறான். புலமைத்தொழிலுக்கு அடிப்படையான கல்வியின் சிறப்பை அம்மன்னன்,

                                    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

                                    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

                                    பிறப்போ ரன்ன உடன் வயிற்று உள்ளும்

                                    சிறப்பின் பாலான் தாயும்மனம் திரியும்;

                                    ஒருகுடிப்பிறந்த பல்லோர் உள்ளும்

                                    மூத்தோன் வருக என்னாது அவருள்

                                    அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும்

                                    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

                                    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

                                    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. (புறம். 183)

என்று விளக்கக் காணலாம்.

            வேந்தர்க்குக்கடன் இதுவென அறிவுறுத்தும் மோசிகீரனார், “மாந்தர்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று; மலர்தலை உலகம் மன்னனையே உயிராகவுடையது; அதனால்தான் உயிர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு மன்னனின் கடமையும் ஆகும்” (புறம் 186) என்று கூறுவார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய வெள்ளைக்குடி நாகனார், “போரிட்டு நீ பெறும் வெற்றி உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மாரிப்பொய்ப்பின்னும் வாரிகுன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் இவ்வுலகம் அரசரையே பழிக்கும். ஆதனை நன்கு அறிந்து உழவுத்தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பர்களை நீ பாதுகாப்பாயானால் பகைவர்களும் நின் அடிபுறம் தருகுவர்” (புறம் 35) என்று பாடாண்திணையில் செவியறிவுறூஉ எனும் துறையில் தம் பாடலை அமைத்துக் கொள்வார். மன்னர்க்குப் புலவர் அறிவுரையை இடித்துக் கூறவே இத்துறை வழி செய்திருக்கக் காணலாம்.

            பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியிடம் ஓர் அரசன் வரியை எவ்வாறு திரட்டவேண்டும் என்பதையும் எடுத்துச்சொல்வார். “அறிவுடையவேந்தன் இறைகொள்ளும் நெறிஅறிந்து அவ்வாறே இறைபெறுவானாயின் அவனது நாடு அவன் ஆட்சி நடத்துவதற்குப் பெரும்பொருளை ஈட்டிக் கொடுத்துத் தானும் தழைக்கும். அதைவிடுத்து அரசன் அறிவால் குறைந்தவனாகி நாள்தோறும் தரம் அறியாது, நன்மையை எடுத்துக்கூறாது, அவன் விரும்புவதையே தாமும் விரும்பும் ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி அன்புகெடக் கொள்ளும் இறையானது யானை புக்க புலம்போல அவனுக்கும் பயன்படாது அவனது நாட்டையும் கெடுக்கும்” (புறம் 184) என்று அவர் கூறும் அறிவுரை இன்றைக்கும் பொருந்தும் நல்லரையாகும்.

            முடியுடைவேந்தர் மூவரில் ஒருவராயினும் அவரிடம் அச்சமின்றிப் பேசும் புலவர்களையும் புறநானூற்றில் காண்கிறோம். வெண்ணிப் பறந்தலையில் நடந்த பெரும்போரில் சோழன் கரிகால்பெருவளத்தான் வென்றான்; தோற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் விழுப்புண் பட்டதாலே புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்நீத்தான். சோழனது வெற்றியினும் சேரனது மானவுணர்வு உயரியது என்பதை வெண்ணிக்குயத்தியார் எனும் பெண்பாற்புலவர் சோழனிடமே கூறுகின்றார்.

                                    களிஇயல் யானைக் கரிகால் வளவ

                                    சென்றமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

                                    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே

                                    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

                                    மிகப் புகழ் உலக மெய்திப்

                                    புறப்புண் நாணி வடக்கிருந்தோனே. (புறம் 66)

            கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் “தேரும் படையும் களிறும் உடையார் என்பதாலே நாங்கள் பேரரசருடைய செல்வத்தை மதித்தல் செய்யோம். சிறிய ஊரையுடைய மன்னராயினும் எம்மிடத்தே முறையோடு நடந்துகொள்ளும் பண்புடையராயின் அவர்களையே நாங்கள் போற்றுவோம். யாம் பெரிதும் துன்புற்றாலும் சிறிதும் அறிவற்றவருடைய செல்வம் பயன்படாமையின் அதனை எண்ணோம். நல்ல அறிவினை உடையவர்களது வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக்கருதுவோம்.” (புறம் 197) என்றுரைப்பார்.

            இப்பாடல்களைப் பார்க்கும்போது அறிஞர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்காகப் போராடிய ஆங்கிலக்கவிஞர் மில்டனின் கூற்றகளும் அருஞ்செயல்களும் நம் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க இயலாது. மக்களாட்சிக்காகப் போராடிய இப்பெரும்புலவர் அவருடைய கருத்துக்களுக்கு எதிராக முடியரசை ஆதரித்துக் கட்டுரைகள் வெளிவந்தபோது, கண்பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும் கொடியவனாகிய இரண்டாம் சார்லசு மன்னனைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருந்தும், “எனது முடிவு உறுதியானது, மாற்றிக்கௌ;ள முடியாதது. என் கண்பார்வையை முற்றுமாக இழக்கவேண்டும்; அல்லது என் கடமையைச் செய்யாது நழுவவேண்டும்; ஆனால் கிரேக்க மருத்துவத் தெய்வமான எஸ்குலாபியசே நீ படிப்பதையும் எழுதுவதையும் விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்தாலும் கூட, நான் அதைக் கேட்கப் போவதில்லை” என்று கூறி அக்கட்டுரைகள் எழுப்பிய வினாக்களுக்குத் தக்க விடைகள் தாங்கிய கட்டுரையை எழுதினார். எழுத்தாளனின் உரிமைகளுக்காகப் போராடும் அரியோ பஜிடிகா எனும் நீண்ட கட்டுரையில், “நூல்களை அரசு தணிக்கை செய்தல் கூடாது; எனக்கு அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், என் கருத்துக்களைச் சொல்லவும், என் மனச்சாட்சியின்படி விடுதலையுணர்வோடு கலந்துரையாடவும் உரிமைகள் தரப்படல் வேண்டும்” என்று எழுதினார். அக்கட்டுரையின் தொடக்கத்தில் கிரேக்கத் துன்பியல் நாடக ஆசிரியரான யூரிபிடீசின் கீழ்க்கண்ட கூற்றை அவர் மேற்கோளாகத் தருவதும் குறிப்பிற்குரியது:

விடுதலையோடு பிறந்த மாந்தர் அச்சமின்றி விடுதலையுணர்வோடு பேசவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறவும் பெறுகின்ற உரிமைதான் உண்மையான உரிமையாகும். யார் அவ்வுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளமுடியுமோ, பயன்படுத்திக் கொள்கிறானோ அவன் பாராட்டுக்குரியவன். ஓர் ஆட்சியில் இதைவிட நேர்மையான உரிமை வேறு எதுவாக இருக்கமுடியும்?

            இங்கிலாந்தில் முடியரசு வீழ்ந்தபின், ஆலிவர் கிராம்வெல் என்பார் மக்கள்தலைவராகப் பதவியேற்றபோது, மில்டன் அவரைப் பாராட்டிப்பேசுவதையே தொழிலாகக் கொள்ளாது அவன் எதனைச் செய்யவேண்டும், எதனைத் தவிர்க்கவேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கத் தயங்கவில்லை.

நீ இதுகாறும் மக்களுடைய உரிமையின் காவலனாகவும் அவ்வுரிமையின் புரவலனாகவும் செயல்பட்டு வந்திருக்கிறாய். நேர்மை, அறவுணர்வு, நற்பண்பு ஆகியவற்றில் உன்னை விஞ்சியவர்கள் யாருமில்லை. ஆயினும் நீ போற்றிக்காத்த உரிமைக்கு எதிராக அதனை அழிப்பதற்கு முயல்வாயானால், உனது நடத்தை உரிமைக்கு எதிராக மட்டுமல்லாமல் நேர்மை, அறவுணர்வு, நற்பண்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் செயல்படுவதாக அமையும்… எதிர்காலச் சந்ததியினர் உனது இயல்புபற்றி இழிவான எண்ணங்கொண்டு உன்னை மறப்பர்.

            கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய மில்டன் இக்காலக் கவிஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர். அவருடைய பேச்சும் எழுத்தும் செயலும் புறநானூற்றுக் கவிஞர்பலர் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நாம் எண்ணிப்பார்க்கத் துணை செய்யும்.

            கவிஞரின் கடமைகளும் உரிமைகளும் பற்றி ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி கூறும் கருத்துக்களும் இங்கு எண்ணிப் பார்க்கப்படவேண்டியவை:

புலவர் ஒவ்வொருவம் ஒரு குறுகிய கால எல்லைக்குள் தம் வாழ்வை முடித்துக் கொள்பவராயினும் நீண்ட, நெடுங்கால மாந்தர்வாழ்வின் வரலாற்றிலும் பங்கு பெறுவோராவர்; நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தம் பங்களிப்பைச் செய்தோராவர்; கவிதையெழுதுதல் மட்டும் அவர்களது தொழில் அன்று; கவிதையின் மூலம் சமுதாயப் புரட்சிகளுக்கு வித்திட்டு, வருவது உணர்ந்து, அதற்கேற்ப எதிர்காலச் சந்ததியினரின் அரசியல், சமுதாய வாழ்வை நெறிப்படுத்தும் சட்டங்கள் இயற்றவும் வழி செய்வோராவர்.

கவிஞர்கள் எவ்வாறு ஒப்புரவொழுகலையும், பிறர்நலம் பேணலையும் மாந்த இனம் முழுமையும் கடைத்தேற நன்னெறி காட்டலையும் செய்ய இயலுகிறது என்பதையும் ஆராய்ந்துரைப்பர் ஷெல்லி.

அன்பே அறக்கருத்துக்களின் அடிப்படையாகும். அவ்வன்பானது நம்மை நம்மிலிருந்து வெளிக் கொணர்வது; நமக்குச் சொந்தமில்லாத கருத்து, செயல், மாந்தன் ஆகியவற்றில் வாழும் அழகுக் கூறுகளோடு நம்மை ஒருங்கிணைத்துக்கொள்ளும் இயல்பாகும். ஒரு மனிதன் மீவுயர் மனிதனாக வாழவேண்டுமானால் ஆழமாகவும் விரிவாகவும் கற்பனைசெய்யும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அவன்தன்னை மற்றொருவனுடைய, வேறு பலருடைய, இடத்தில் வைத்துப்பார்க்கும் மனநிலை உடையவனாதல் வேண்டும். மாந்த இனத்தின் துன்பங்கள், இன்பங்கள் யாவும் அவனுடையதாதல் வேண்டும். நல்லறம் செய்யத் தூண்டும் கருவி கற்பனையேயாகும். கவிதையானது காரணத்தில் செயல்பட்டுக் காரியம் நடைபெற வழிவகுக்கின்றது; தன்னைப் பிறர் நிலையில் எண்ணிப்பார்க்கும் கற்பனையின்மூலம் பிறர்நலம் பேணும் செயல்களில் ஈடுபடுத்துகிறது.

            புறநானூற்றுக் கவிஞர்கள் இத்தகைய கற்பனை வளத்தைப் பெற்றிருந்ததால்தான் சமுதாய நலனில் அக்கறைகாட்டியதோடு மன்னர்களும் பிற புரவலர்களும் அதில் ஆர்வம் கொள்ளத் தூண்டுகின்ற கவிதைகளைப் படைப்பதில் வல்லவர்களாகவும் இருந்தார்கள். அதனையே தமது கடமையாகவும் தொழிலாகவும் கொண்டு செயல்பட்டார்கள்.

            வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாய் விளங்கிய பாரி முடியுடை மன்னரின் வஞ்சத்தால் கொலையுண்டபின் அவனது மகளிர் இருவர்க்கும் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பைக் கபிலர் ஏற்றுக் கொள்கிறார். நாடும் செல்வமும் தந்தையும் ஒருங்கே இழந்த அப்பெண்டிரை மணக்க எக்குறுநில மன்னரும் முன்வராத நிலையில் மனமுடைந்த அப்புலவர்பெருமான் அன்னாரின் பகைமையைத் தேடிக்கொள்ளவும் தயங்காது ஊர்ஊராக அம்மங்கையரை அழைத்துச் செல்கிறார். பாரி மகளிரை ஏற்றுக்கொள்ளாத இருங்கோவேளைக் கபிலர் கடுமையாகச் சாடும் கவிதையும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

உன்மூதாதை, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்,” புகழ்ந்த செய்யுள்

கழாத்தலையாரை இகழ்ந்ததால் உங்களுடைய புகழ்வாய்ந்த மூதூர் அழிந்தது என்பதை நினைவில் கொள்வாயாக (புறம் 202).

விச்சிக்கோவிடம் பாரிமகளிரை அழைத்துச் சென்று

                                    இவரே பூத்;தலை யறாஅப் புனைகொடி முல்லை

                                    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்

                                    கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

                                    பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர்;

                                    யானே பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே

                                    வரிசையில் வணக்கும் வாள்மேம்படுநன்

                                    நினக்குயான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்

                                    அடங்கா மன்னரை அடக்கும்

                                    மடங்கா விளையுள் நாடுகிழ வோயே (புறம் 200)

என்று கபிலர் அவனிடம் வேண்டும் பாடலும் இருப்பதால் இது வரலாற்று நிகழ்ச்சியெனக் கொள்வதில் தடையேதுமில்லை.

            பிசிராந்தையும் கோப்பெருஞ்சோழனும், அவ்வையும் அதியமானும், புலவரும் புரவலருமாக அல்லாமல் கெழுதகைநட்புக் கொண்டவர்களாகவே இருந்தார்களென்பதைக் காட்டும் பாடல்களும் வரலாற்று உண்மைகொண்டவையே. பிசிராந்தையார் அன்னச்சோலை விளித்து, “நீ உறந்தைசென்று கோப்பெருஞ்சோழனைக் கண்டு ‘நான் பிசிராந்தையின் அடியுறை’ என்று கூறினால் அவன்  நின் இன்புறுபேடை அணியத் தன் நன்புறு நன்கலம் நல்குவன்” (புறம் 67) என்று சொல்லும்போது அவர்களுக்குள்ளிருக்கும் நட்பைச் சிறப்பித்துக் கூறுகிறார். வடக்கிருந்த சோழன் அவனருகில் இருந்த சான்றோரிடம் பிசிராந்தையார் நிகழ்ந்தது அறிந்தால் உடன் வருவார் என்பதை,

                                    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

                                    பிசிரோன் என்ப, என் உயிர் ஓம் புநனே;

                                    செல்வக் காலை நிற்பினும்

                                    அல்லற் காலை நில்லன் மன்னே (புறம் 215)

என்று அவர்தம் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறான். அவர் உறுதியாக வருவார் என்பதால், அவருக்கு இடம் ஒதுக்கி வைக்குமாறு நண்பர்களிடம் வேண்டுகிறான்:

                                    இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,

                                    புகழ்கெட வரூஉம் பொய்வேண்டலனே,

                                    புன்பெயர் கிளக்கும் காலை ‘என்பெயர்

                                    பேதைச் சோழன்’ என்னும் சிறந்த

                                    காதற் கிழமையும் உடையவன்; அதன்தலை

                                    இன்னதோர் காலை நில்லலன்,

                                    இன்னேவருகுவன், ஒழிக்க, அவற்கு இடமே! (புறம் 216)

பிசிராந்தையார் வந்ததுகண்டு பொத்தியார் வியந்து பாடுகிறார்:

                        ‘வருவன்’ என்ற கோனது பெருமையும்

                                    அது பழுதின்றி வந்தவன் அறிவும்

                        வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே. (புறம் 217)

            வடக்கிருந்த பிசிராந்தையைக்கண்டு கண்ணகனார் பாடுவதும் இந்நட்பின் வரலாற்று உண்மைக்குச் சான்றாகிறது:

                                   சான்றோர்

                                    சான்றோர் பாலர் ஆகுப;

                                    சாலார் சாலார் பாலர் ஆகுபவே. (புறம் 218)

            அதியமான் நெடுமான் அஞ்சியின் போர்;த்திறனையும் வள்ளன்மையையும் பல பாடல்களில் அரிய உவமைகள் கொண்டு பாராட்டும் அவ்வை அவன் பொருட்டுத் தூது செல்லும் பணியையும் மேற்கொள்கிறார். தன் படைக்கருவிகளைப் பெருமிதத்தோடு காண்பித்த தொண்டைமானிடம்

                                    இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

                                    கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து

                                    கடியுடைய வியன் நகரவ்வே; அவ்வே

                                    பகைவர்க்குத்திக் கோடுநுதி சிதைந்து

                                    கொல்துறைக் குற்றில மாதோ என்றும்

                                    உண்டாயின் பதம் கொடுத்து

                                    இல்லாயின் உடன் உண்ணும்

                                    இல்லோர் ஒக்கல் தலைவன்

                                    அண்ணல் எம் கோன் வைந்நுதி வேலே (புறம் 95)

என்று அம்மன்னனுக்கு அறிவுகொளுத்தும் வண்ணம் அதியன் பல போர்க்களங்களைக் கண்டவன், அவனை வெல்வது எளிதன்று என்று மறைமுகமாகத் தெரிவிக்கக் காணலாம்.

            அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களில் ஐம்பத்தொன்பது பாடல்களைப் பாடியுள்ள அவ்வையார் எனும் பெரும்பெயர்க்குரிய கவிஞர், தன்னைப்புரக்கும் குறுநில மன்னனுக்கு உதவ,

                                                      இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

                                                                     உறுதி பயப்பதாம் தூது

என்னும் குறட்பாவிற்கு இணங்க இன்னொரு மன்னனிடம் தூது சென்றுள்ளதை அறிவிக்கும்பாடல் சங்ககாலப் புலவர்கள் எழுத்துத்தொழில் திறனை மக்கள் நலனுக்கு ஒல்லும் வசையெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டும்.

            தவறு செய்த மன்னர்களைத் தட்டிக்கேட்கும் உள்ளவுரம் கொண்ட கோவூர் கிழார் பரிசில்நாட்டமே தலைநோக்காய்க் கொண்ட வாணிகப்புலவர் அல்லர் என்பதையும் மக்கள்நலன் கருதி மன்னர்க்கு அறவுரைகூறி நல்வழிப்படுத்திய பெருந்தகையாளர் என்பதையும் நிறுவும் பாடல்கள் பல புறநானூற்றில் உண்டு.

            சோழன் நலங்கிள்ளியின் நாட்டுவளத்தையும் கொடைச்சிறப்பையும் வெற்றிகளையும் பாடிய கோவூர்கிழார் உறையூரை நலங்கிள்ளி முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போர்மேற்கொள்ளாமல் தன் அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டிருந்ததைக் கண்டித்து, “உன்நாட்டில் முற்றுகை காரணமாக, யானைகள் குளங்களில் படியாமல் உள்ளன; உணவுக் கவளங்களை உண்ணாமல் பெருமூச்சு விட்டுக் கலங்கி இடிஇடிப்பதுபோல் பிளிறுகின்றன; குழவிகள் பாலில்லாமல் அலறுகின்றன; மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிகின்றார்கள்; மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது; இச்சூழலில் நீ இங்கு இனிது இருத்தல் இன்னாதது. அறவழியில் நடப்பவனானால் நாட்டை நலங்கிள்ளிக்கு அளித்துப்போரை நிறுத்து; மறவழியில் நடப்பவனானால் கோட்டைக் கதவுகளைத் திறந்து போருக்குச் செல். நீ இவ்வாறு நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தகவுடைத்து” (புறம் 44) என்று அஞ்சாமல் அறம் கூறுவார்.

            நெடுங்கிள்ளியை இவ்வாறு சாடியவர் சோழமன்னர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் போர்புரிவது எவ்வளவு அறிவீனம் என்பதை இருவர்க்கும் எடுத்துச் சொல்கிறார்: “இருவருடைய மாலைகளும் ஆத்திப்பூக்களால் தொடுக்கப்பட்டவை. யார்தோற்றாலும் தோற்பது சோழனின் குடியே. இருவரும் ஒருபோரில் வெற்றி பெறுவதென்பது இயலாதது. இப்போரானது நும்மோர்அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகையை ஊட்டுவதாகும்.” (புறம் 45)

            இளந்தத்தன் என்னும் புலவர் உறையூருக்குச் சென்றபோது அவரை வெளிநாட்டிலிருந்து வந்த ஒற்றன் என்று தவறாகக் கருதி நெடுங்கிள்ளி கொலை செய்யமுனைந்தபோது கோவூர்க்கிழார் அரசனுக்கு உண்மையை எடுத்துக்கூறிப் புலவரைக் காப்பாற்றினார். “வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீமை கருதாத வாழ்க்கையாகும். தம்மோடு மாறுபட்டவர்களைத் தம்புலமையால் வென்று தலைநிமிர்ந்து நடக்கும் புலவர்கள் மண்ணாள் செல்வம் எய்திய மன்னரை ஒத்த பெருமிதம் உடையவர்கள்” (புறம் 47) என்று புலவர் தொழிலின் சிறப்பையும் கூறினார்.

            குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அவனது பகைவனான மலையமானின் சிறுவர்களை யானையின் காலின் கீழிட்டுக் கொல்ல முயன்றபோது அவனுக்கு அறிவுரை கூறிய பெருமையும் கோவூர்கிழார்க்கு உண்டு. “நீ புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலன் உழுது உண்பவர்களாகிய புலவர்களை ஆதரித்த மலையமானின் மக்கள். தம்மைக் கொல்லவரும் களிற்றினைக் கண்டு அஞ்சி அழுகிறார்கள். இவர்களைத் துன்புறுத்தாதே. நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன். நீ உன் விருப்பப்படி செயல்படு” என்று அவனது அறியாமையை இடித்துக் கூறுகிறார் தமது பாடலில் (புறம் 46).

            போரில் வெற்றிகண்ட மன்னர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் யாவரும் மண்ணாள்வோரின் போர்வெறியைத் தூண்டி அவர்களை ஊக்கினார்கள் என்று கருதுவது தவறாகும். போரினால் நாடும்மக்களும் அடையும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி மறைமுகமாக மன்னரைத் தெருட்டிய பாடல்கள் பலவும் புறுநானூற்றில் உண்டு. இவற்றுள் பரணர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

            சோழன் உருவப் பஃறோர் இளஞ்சேட் சென்னியின் நாற்படை வலிமையைப் பாராட்டிப்பாடும் பரணர் இறுதியில், “நீ இத்தகைய பேராற்றல் கொண்டவனாக இருப்பதால் உன் பகைவர்களுடைய நாட்டு மக்கள் தாயில்லாத குழவிகள் போல ஓயாது கூவி வருந்துகின்றனர்” (புறம் 4) என்பார். சோழன் பெருவிறற்கிள்ளியும் சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதனும் நிகழ்த்திய போரில் இருவரும் மாண்டனர்; இருவர் படைகளும் அழிந்தன. இதனைப் பாடுபொருளாக்கும் பரணர், “பல யானைகள் அம்பால் தாக்கப்பட்டுப் போர்த் தொழிலின்றி இறந்தன; புரவிகள் எல்லாம் மறத்தகை மைந்தரொடு மாண்டன; தேர்வீரர் யாவரும் தோல் கண்மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர்; முரசுகள் தாங்குவோர் இன்மையின் தரையில் கிடந்தன; மார்பில் நெடுவேல் பாய்ந்ததால் இருவேந்தரும் இறந்தனர்; பெருவளமுடைய நாட்டின்நிலை யாதாகுமோ?” (புறம் 63) என்று அவலச்சுவை ஓங்கி நிற்கும் பாடலை எழுதியுள்ளார். இது போரில் வென்ற மன்னனைப் பரிசில் பெறும் நோக்குடன் பாராட்டிப்பாடப் பட்டதன்று என்பது நாம் நினைவில் கொள்ளவேண்டிய கருத்தாகும்.

            பரணரின் மகட்பாற் காஞ்சிப்பாடல்கள் போரினால் வரும் பேரழிவைச் சுட்டிக்காட்டி அவலஉணர்வை மிகுவிப்பன. “வேட்டவேந்தனும் பெருஞ்சினத்தினன்;; இவள் தந்தையும் எளிதில் பணியாதவன்; இப்பெண்ணால் இவ்வருங்கடிமூதூர் பெரும்பேதுற்றது; முற்றுமாக அழியப்போகிறது” (புறம் 336). “இப்பெண்ணைத்தர அவள்தந்தை மறுப்பதால் மென்புனல் வைப்பின் இத்தண்பணை ஊர், களிறு பொரக் கலங்கிய தண்கயம்போலப் பெருங்கவின் இழப்பது கொல்லோ!” (புறம் 341). “முசிறியன்ன விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும் தகுதியற்றோர்க்கு இவள் தந்தை மணம் செய்து கொடுக்க மாட்டான். இந்த நெடுநல்ஊர் போரில் அழியப்போவதையெண்ணி மதில்மேல் சாய்த்து வைக்கப்பட்ட ஏணியும் வருந்துகின்றதோ?” (புறம் 343). “இவளை இவள் தாய் ஈனாதிருப்பாளாயின், எம்பெருந்துறை மரங்கள், நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும் செந்நுதல் யானை பிணிப்ப, வருந்துதல் நேர்ந்திராது” (புறம் 348). “மடந்தை மான்பிணை அன்ன மகிழ்மட நோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ!” (புறம் 354)

            பிறபுலவர்கள் பாடியுள்ள மகட்பாற் காஞ்சிப் பாடல்களும் போரால் ஊர் அழியப் போவதற்கு ஒருபெண் காரணமாகி விட்டாளே என்ற கருத்தையே வற்புறுத்தி நம் உள்ளத்தை உருக்கும் தன்மையவை. அண்டவர்மகன் குறுவழுதியின் பாடல் “அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள்நலனே” (புறம் 346) என்றும் மருதனிளநாகனார் பாடல் “அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படுசிறு தீப்போல அணங்காயினள் தான் பிறந்த ஊர்;க்கே” (புறம் 349) என்றும் ஆயத்தனார் பாடல் “தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர் யாங்காவது கொல் தானே தாங்காது” (புறம் 350) என்றும் மதுரைப் படைமங்;க மன்னியார் பாடல் “என் ஆவது கொல் தானே – தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரிநாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின் இப்பணைநல்லூரே?” (புறம் 351) என்றும் ஒரு சில வரிகளிலே ஒரு துன்பியல் நாடகத்தைப் படைத்துவிடக் காணலாம். இவையெல்லாம் அப்புலவர்கள் பரிசிலுக்காகவன்றிப் போரின் கொடுமையை உலகுக்குணர்த்தவே பாடியவை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

            புறநானூற்றில் இடம்பெற்றுள்ள புலவர் பலர் புலமைத் தொழிலால் வறுமையில் வாட வேண்டியிருந்தும், முடியுடை வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் ஊர் ஊராகச் சென்று இரந்து வாழவேண்டியிருந்தும், எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தும், அத்தொழிலை உயர்வுடையதாகக் கருதித் தாம் பெற்றிருந்த அறிவு முதிர்ச்சியையும் எழுத்தாற்றலையும் சமுதாய நலனுக்காகப் பயன்படுத்தினார் என்பது பெரும்பாராட்டுக்குரியதாகும். கிரேக்கம் முதலான ஏனைய தொன்மைச் செம்மொழிகளில் இத்தகைய புலவர் குழுக்களைக் காண்டல் அரிது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. ப. மருதநாயகம்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »