Saturday, July 18, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் இளையான்குடி மாற நாயனார்‌

இளையான்குடி மாற நாயனார்‌

இளையான்குடி-மாற-நாயனா

        இளையான்குடி என்னும்‌ ஊரில்‌ வேளாளர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ மாறனார்‌ என்பவர்‌ ஆவார்‌. வேளாண்மையில்‌ பெரும்‌ செல்வம்‌ ஈட்டிய இவர்‌ சிவபெருமான்‌ மீதும்‌ அடியவர்‌ மீதும்‌ அரும்பக்தி கொண்டிருந்தார்‌. அடியவர்‌களுக்கு அமுது படைப்பதை அரும்பெரும்‌ தொண்டாகக்‌கருதி செய்து வந்தார்‌.

      மாறனாரின்‌ பெருமையை உலகுக்கு அறிவிக்க சிவபெருமான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. அதனால்‌ மாறனாரின்‌ மலை போன்ற செல்வம்‌ கரையத்‌தொடங்கியது. வறுமை மெல்ல மெல்ல நாயனாரைப்‌ பற்றிக்‌கொண்டது. மாறானர்தன்னிடமிருந்த பொருள்களை விற்றுவிற்று அடியவர்களுக்கு அமுது படைக்கும்‌ தொண்டினை விடாது செய்து வந்தார்.  வறுமை முற்றியது. பலரிடம்‌ கடன்‌பெற்று அடியவர்க்கு அமுது படைத்தார்‌ நாயனார்‌.

        அவ்வாறிருக்கையில்‌ ஒருநாள்‌ இரவு உண்ண உணவு ஏதுமின்றி பசியோடு தன்‌ குடிசை வீட்டில்‌ படுத்திருந்தார்‌. அது மழைக்காலம்‌. வெளியில்‌ கடும்மழை பெய்து கொண்டிருந்தார்‌. அவ்வேளையில்‌ வீட்டின்‌ கதவு தட்டப்பட்டது. மாறனார்‌ எழுந்து கதவைத்‌ திறந்தார்‌. வாசலில்‌ அடியவர்‌ ஒருவர்‌ நின்றிருந்தார்‌. அடியவரைக்‌ கண்ட மாறனார்‌, அவரை வீட்டினுள்‌ அழைத்து, அவரது தேகம்‌ துடைத்திட துண்டு தந்து, அமரச்‌ செய்தார்‌.

       பிறகு மனைவியிடம்‌ வந்து அடியவர்க்கு ஏதேனும்‌ உண்ணத்‌ தரவேண்டுமே என்று கூறினார்‌. வீட்டிலே அரிசி சிறிதும்‌ இல்லை. மாறனாரும்‌ அவரது மனைவியும்‌ என்ன செய்தென்று புரியாமல்‌ தவித்தனர்‌. உடனே அவரது மனைவியார்‌, “இன்று வயலில்‌ விதைநெல்‌ தூவினோமே. அந்நெல்மணிகளை எடுத்து வருவீராயின்‌, அடியவர்க்கு அமுது படைக்கலாம்‌!” என்று யோசனை கூறினார்‌.

       மாறனாரும்‌, மழையைப்‌ பொருட்படுத்தாது, தலையில்‌ ஒரு கூடையைக் கவிழ்த்தபடி வயலுக்கு ஓடினார்‌. அங்கே நாற்றங்கால்‌ நீரில்‌ மிதந்து கொண்டிருந்த நெல்மணிகளைச்‌ சேகரித்து கூடையில்‌ அள்ளினார்‌. வீட்டை நோக்கி நடந்தார்‌.

         அரிசிக்கு நெல்‌ வந்து சேர்ந்தது. நெல்லை வறுத்து குத்தி அரிசியாக்க வேண்டுமே? அதற்கு விறகு வேண்டும்‌ என்று நாயனாரைக்‌ கேட்டார்‌. உடனே நாயனார்‌, தன்‌ வீட்டுக்‌கூரையின்‌ தாங்கு கட்டைகளை உருவித்தந்தார்‌. அவரது மனைவியாரும்‌ அக்கட்டைகளை விறகாக எரித்து நெல்லை வறுத்தார்‌. உரலில்‌ இட்டு அதைக்‌ குத்தி அரிசியாக்கி அமுது உண்டாக்கினார்‌.

       கறி சமைக்க காய்‌ ஏதேனும்‌ கொண்டு வரும்படி நாயனாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌ மனைவியார்‌. உடனே நாயனார்‌ வீட்டின்‌ பின்புறத்திற்குச்‌ சென்று அங்கு வளர்ந்திருந்த குப்பைக்‌ கரைகளைப்‌ பறித்து வந்தார்‌. அதைச்‌ கொண்ட மனைவியார்‌ கரி சமைக்கார்‌

     மனைவியார்‌ சமைத்து முடித்ததும்‌ நாயனார்‌, “அடியவரே! உணவு சமைத்தாகிவிட்டது. உணவு அருந்த வாருங்கள்‌! என்றபடியே, அடியவர்‌ படுத்திருந்த இடத்திற்கு வந்தார்‌. கணநேரத்தில்‌ அவ்வடியவர்‌ மறைந்தார்‌. அவ்விடத்தில்‌ சிவபெருமான்‌ உமாதேவியாருடன்‌ இடப வாகனத்தில்‌ தோன்றினார்‌. இறைவன்‌ நாயனாரை நோக்கி,

         “மாறனாரே! அடியவர்களைத்‌ தேடி அன்றாடம்‌ அமுதூட்டிய அன்பரே! உமது மனைவியாருடன்‌ எம்மிடம்‌ வந்து சேர்வீராக! அங்கு எல்லா இன்பங்களையும்‌ துய்ப்பீராக!” என்று இருவாக்கருளினார்‌.

          இளையான்குடி மாற நாயனாரும்‌, அவரது மனைவியாரும்‌ சிவலோகம்‌ சென்று பேரானந்தத்தில்‌ மூழ்கினர்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »