சுந்தரர் வரலாறு

சுந்தரர்-வரலாறு

சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌

63 நாயன்மார்களில் ஒருவர்

        திருமுனைப்பாடி நாட்டிலுள்ள இருநாவலூரில்‌ ஆதிசைவர்‌ குலத்திலே பிறந்தவர்‌ சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ ஆவார்‌. இவரது தந்தை சடையனார்‌தாய்‌ இசைஞானியர்‌ ஆவர்‌. பெற்றோர்‌ அவருக்கு இட்ட பெயர்‌ நம்பியாரூரர்‌. நம்பியாரூரர்‌ சிறுபிள்ளையா௧ இருக்கையில்‌, அவரைக்‌ கண்ட அந்நாட்டு மன்னரான நரசிங்கமுனையார்‌ அக்குழந்தையைத்‌ தனக்கே தருமாறு சடையனாரிடம்‌ கேட்டார்‌. சடையனாரும்‌ தந்தார்‌. நம்பியாரூரரும்‌ அரண்மனையில்‌ அந்தணக்‌ குழந்தையாகவே வளர்க்கப்‌பட்டார்‌. இவ்வாறு நம்பியாரூரர்‌ சிறப்புற வளர்ந்து திருமணப்‌ பருவத்தை எட்டினார்‌.

    புத்தூரில்‌ வசித்து வந்த சடங்கவி சிவாச்சாரியரின்‌ புதல்வியை, நம்பிக்கு மணம்‌ செய்து வைக்க சடையனார்‌ ஏற்பாடுகள்‌ செய்தார்‌. அதை ஊரில்‌ அனைவருக்கும்‌ தெரிவித்தார்‌. திருமண நாளும்‌ வந்தது. சடங்குகள்‌ எல்லாம்‌ நடந்தேறின.  நம்பியாரூரரும்‌ திருமணப்‌ பந்தலுள்‌ அமர்ந்தார்‌. சிவபிரான்‌, ஏற்கனவே தான்‌ கூறியபடி நம்பியாரூராரைத்‌ தடுத்தாட்‌கொள்ள நினைத்தார்‌.

சிவபெருமான்‌ தடுத்தாட்கொளல்‌

      சிவனடியாரைப்‌ போன்று வடிவெடுத்த சிவபிரான்‌, கையில்‌ ஒரு சிறிய ஒலையுடன்‌, திருமணப்‌ பந்தலிற்குள்‌ நுழைந்தார்‌. சபையோர்‌ சூழவிருந்த நம்பியாரூரரும்‌ அவரை வணங்கினார்‌. சிவனடியாரும்‌ தான்‌ வந்த காரணத்தை சபையோர்முன்‌ கூறினார்‌.

“நம்பியாரூரா! நீ எனக்குப்‌ பரம்பரை அடிமை. இத்திருமணத்தை உதறிவிட்டு என்‌ பின்னே வா!” என்றார்‌.

     நம்பியாரூரார்‌ சினம்‌ கொண்டு, “அந்தணருக்கு அந்தணர்‌ எப்படி அடிமையாக முடியும்‌? அதற்கு என்ன சாட்சி உள்ளது? என்று கடுமையாக வினவினார்‌.

    சிவனடியாரும்‌, “இதோ என்‌ கையிலுள்ள ஓலைதான்‌ அதற்குச்‌ சாட்சி. ஒலையை உன்னிடம்‌ காட்டத்‌ தேவையில்லை. நீ என்‌ பின்னே வா” என்று நடக்கலானார்‌. சினம்‌ கொண்ட நம்பியாரூரரும்‌, சிவனடியாரின்‌ பின்னே சென்று ஒலையைப்‌ பறித்துக் கிழித்தெறிந்தார்‌.

     உடனே சிவனடியாரும்‌ அருகில்‌ நின்றிருந்தவர்களைப்‌ பார்த்து, “என்‌ ஓலையை இவன்‌ கிழித்ததனால்‌, இவன்‌ என்‌ அடிமை என்பது உறுதியாயிற்று. இன்னும்‌ இதை மெய்பிக்கவேண்டும்‌ என்றால்‌ என்னோடு திருவெண்ணெய்‌ நல்லூருக்கு வாருங்கள்‌ என்றபடி நடந்தார்‌. எல்லோரும்‌ சிவனடியாரின்‌ பின்னே, திருவெண்ணெய்‌ நல்லூருக்குச்‌ சென்றார்கள்‌.

     திருவெண்ணெய்நல்லூரில்‌, சான்றோர்கள்‌ நிறைந்த சபைக்குச்‌ சென்றார்‌ அச்சிவனடியார்‌. நடந்தவற்றைக்‌ கூறினார்‌. அச்சான்றோர்களும்‌, “அந்தணர்க்கு அந்தணர்‌ அடிமையாதல்‌ வழக்கிலில்லையே? நீர்‌ கூறுவதை எப்படி நம்புவது? என்று வினவினர்‌.

அதற்கு அச்சிவனடியார்‌, “இதோ, நம்பி கிழித்தது படிஒலைதான்‌. மூல ஓலை என்னிடம்‌ இருக்கிறது, எடுத்து வருகிறேன்‌” என்று ஆலயத்தின்‌ சன்னிதிக்குப்‌ போய்‌ அதை எடுத்து வந்தார்‌. சான்றோர்களால்‌ அவ்வோலை வாசிக்கப்பட்டது. பின்‌, நம்பியாரூரரின்‌ பாட்டனாரின்‌ கையெழுத்தோடு ஒப்பிடப்பட்டு, அது உண்மையென்பது உறுதிப்படுத்தப்‌பட்டது. நம்பியாரூரரும்‌ கலங்கி நின்றார்‌. பின்‌ அனைவரும்‌, “சரி, அடியவரே! இவ்வோலையில்‌ உமது ஊர்‌, திருவெண்ணெய்நல்லூர்‌ என்று எழுதப்‌பட்டுள்ளதே. இங்கு உமது வீடுதான்‌ எங்குள்ளது?” என்று கேட்டனர்‌.

      அதற்கு அடியவரும்‌, “இதோ என்னிருப்பிடம்‌ இங்குள்ளது!” என்றபடி திருக்கோயிலினுள்‌ சென்று மறைந்தார்‌. நம்பியாருரார்‌ மட்டும்‌ தனியாக ஆலயத்தினுள்‌ பிரவேசித்தார்‌. உள்ளே சிவனடியாரைத்‌ தேடினார்‌. காணவில்லை. அங்கே, சிவபிரான்‌, உமாதேவியருடன்‌ ரிஷப வாகனத்தில்‌ நம்பிக்குக்‌ காட்சிக்‌ கொடுத்தார்‌. நம்பியாரூராரும்‌ மெய்‌சிலிர்த்தார்‌. பரமனை இருகரம்‌ கூப்பி வணங்கினார்‌. கயிலையில்‌ நடந்தவை அனைத்தும்‌ நினைவிற்கு வந்தது. எளியவன்‌ தன்‌ வேண்டுதலின்‌ பொருட்டு தன்னை தடுத்தாட்கொண்ட பெருமானின்‌ கருணை நினைந்து சிந்தையுருகினார்‌.

       சிவபெருமானும்‌ நம்பியை நோக்கி, “நீ என்னை வன்மையான வார்த்தைகளால்‌ பேசினாய்‌. எனவே இன்றுமுதல்‌ நீ ‘வன்தொண்டன்‌’ என்று அழைக்கப்படுவாய்‌ என்று இருவாக்கு அருளினார்‌. நம்பியாரூரரும்‌ ‘பித்தா பிறைசூடி’ என்னும்‌ திருப்‌ பதிகத்தைப்‌ பாடினார்‌.

      திருமணம்‌ தடைபட்டதால்‌, சடங்கவி சிவாச்சாரியாரின்‌ புதல்வியும்‌, நம்பியின்‌ நினைவாகவே இருந்து சிவனடி சேர்ந்தாள்‌. வன்தொண்டரோ அன்று முதல்‌ சிவபெருமானைத்‌ திருப்பதிகங்களால்‌ பாடித்‌ தொழுது வந்தார்‌. பல தருத்தலங்களுக்குச்‌ சென்று திருவதிகை என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

      திருவதிகை, அப்பர்‌ சுவாமிகள்‌ உழவாரப்‌ பணி செய்த இத்திருத்தலம்‌. எனவே அம்மண்ணை மிதிக்கக்‌ கூடாது என்ற எண்ணத்தில்‌ஆலயத்திற்குச்‌ செல்லாமலேயே இறைவனை வணங்கி அருகிலுள்ள மடத்தில்‌ படுத்தார்‌. அப்போது சிவபிரான்‌ கிழ அடியவராக வந்து சுந்தரரின்‌ அருகில்‌ படுத்தார்‌. தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையின்மீது படும்படி வைத்தார்‌. அதைக்கண்ட வன்தொண்டர்‌ சற்று தள்ளிப்‌ படுத்தார்‌. மீண்டும்‌ கிழ அடியவர்‌, தன்‌ கால்களை வன்தொண்டரின்‌ தலையில்‌ வைத்தார்‌.

       வன்தொண்டருக்குச்‌ சற்று கோபம்‌ வந்தது. அவர்‌ அம்முதியவரை நோக்கி, “அடியவரே! நீர்‌ செய்வது முறையா?” என்று கேட்டார்‌. கிழ அடியவரும்‌, “என்ன வன்தொண்டா? என்னைத்‌ தெரியவில்லையோ ?]” என்ற படி மறைந்தார்‌. அப்போதுதான்‌ அவ்வடியவர்‌ யாரென்று வன்‌தொண்டருக்குப்‌ புரிந்தது. இறைவனின்‌ கருணையை நினைத்து மெய்‌ சிலிர்த்தார்‌.

     பிறகு திருவாரூர்‌ சென்றடைந்த வன்தொண்டரின்‌ பக்திக்கு மெச்சிய சிவபெருமான்‌, நம்பியாரூரைத்‌ தன்‌தோழராக ஏற்றுக்‌ கொண்டார்‌. இல்லறத்தில்‌ ஈடுபட்டு வாழவும்‌ பணித்தார்‌. அதனால்‌ நம்பியாரூர்‌ தம்பிரான்‌ தோழர்‌ என்ற பெயர்‌ பெற்றார்‌. மேலும்‌ சிவபிரான்‌ நம்பியாரூரிடம்‌, “யாம்‌ உன்னைத்‌ தடுத்து ஆட்கொண்ட போது இருந்தபடி திருமணக்‌ கோலத்திலேயே எப்போதும்‌ இருப்பாயாக!” என்று கூறினார்‌. நம்பியாரும்‌ திருமணக்‌கோலம்‌ தாங்கியே எங்கும்‌ போய்‌ வந்தார்‌.

பரவையாரோடு இல்லறம்

     இந்நிலையில்‌, திருவாரூரில்‌ பரவை நாச்சியார்‌ என்ற மங்கையைக்‌ கண்டார்‌. அவர்மீது நம்பியார்‌ காதல்‌ கொண்டார்‌. பரவையாரும்‌ நம்பியார்‌ மீதுமையல்‌ கொள்ள இருவருக்கும்‌ பெற்றோர்‌ மணம்‌ செய்து வைத்தனர்‌. இருவரும்‌ இல்லறம்‌ நடத்தத்‌ தொடங்கினர்‌.

   ஒருநாள்‌ அடியவர்களுடன்‌ கோயிலில்‌ அமர்ந்திருந்த நம்பியாரூரர்‌ முன்‌ சிவபிரான்‌ காட்சி தந்தார்‌. திருத்‌தொண்டத்‌ தொகை” பாடும்படிக்‌ கூறினார்‌. நம்பியாரும்‌ அதைப்‌ பாடினார்‌.

      ஒருமுறை குண்டையூர்‌ என்னும்‌ ஊரிலே கிழவர்‌ ஒருவர்‌ இருந்தார்‌. அவர்‌ கனவிலே தோன்றிய சிவபிரான்‌, “வன்தொண்டருக்காக உம்மிடம்‌ நெல்‌ அனுப்பியுள்ளோம்‌. அவற்றை வன்தொண்டரிடம்‌ சேர்ப்பிப்பாயாக!” என்று கூறினார்‌.  கண்விழித்த கிழவர்‌, தன்‌ ஊர்‌ முழுவதும்‌ நெல்‌ மலையாகக்‌ கிடக்கக்‌ கண்டார்‌. உடனே நம்பியாரூரருக்குச்‌ செய்தி அனுப்பினார்‌. நம்பியாரூரார்‌ குண்டையூர்‌ வந்து நெல்மலைகளைக்‌ கண்டார்‌. பின்‌ சிவபெருமானை வேண்ட, சிவபூத கணங்கள்‌ வந்து அவற்றை திருவாருக்கு எடுத்துச்‌ சென்றன. நம்பியாரும்‌, பரவையாரும்‌ அவற்றை ஊர்‌ மக்களுக்கு வழங்கினர்‌.

      ஒருமுறை திருநாட்டியத்தான்குடி என்னும்‌ ஊரிலுள்ள கோட்புலியார்‌ நம்பியாஞரனின்‌ பெருமைகளைக்‌ கேட்டறிந்‌தார்‌. அவர்‌ தன்‌ இரு புதல்விகளான சிங்கடியையும்‌, வனப்பகையையும்‌ திருமணம்‌ செய்து கொள்ள வேண்டும்‌ என்று நம்பியாரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌. நம்பியாரூரரோ, இவ்விரு மங்கையரும்‌ தம்‌ புதல்வியர்‌ போன்றவர்கள்‌ என்று கூறி அவர்களை ஆசிர்வதித்தார்‌. அவ்விருவரையும்‌ தம்‌பதிகங்களில்‌ வைத்துப்‌ பாடிச்‌ சிறப்பித்தார்‌.

செங்கல்‌ பொன்னானது

      ஒரு பங்குனி உத்திரத்‌ திருநாள்‌ செலவிற்கு பொருள்‌ ஏதுமின்றித்‌ தவித்த பரவையார்‌, நம்பியாரூரரிடம்‌ தெரிவித்தார்‌. நம்பியாரும்‌ திருப்புகலூர்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. அன்று அவர்‌ அக்கோயிலின்‌ அருகேயுள்ள மடத்தில்‌ ஒரு செங்கல்லைத்‌ தலையணையாக்கி உறங்கினார்‌. சிவபிரான்‌ அருளால்‌ செங்கல்‌ பொன்னாக மாறியது. பரவையாரின்‌ குறையும்‌ நீங்கியது. இவ்வாறு பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்ற சுவாமிகள்‌, சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. பொன்னும்‌ பொருளும்‌ பெற்றார்‌.

     திருமுதுகுன்றம்‌ என்னும்‌ இடத்தில்‌ உறைந்தருளும்‌ சிவபெருமானைப்‌ பாடித்துதித்தார்‌. பெருமான்‌ நம்பியாருக்குப்‌ பன்னிரண்டாயிரம்‌ பொன்‌ தந்தார்‌. அப்போது நம்பியார்‌, சிவபிரானிடம்‌ இப்பொன்னைத்‌ திருவாரூரில்‌ தந்தால்‌, சிறப்பாகவிருக்கும்‌ என்று வேண்டிக்‌ கொண்டார்‌. சிவபெருமான்‌, “வன்தொண்டரே! இப்பொன்னை மணிமுத்தா நதியில்‌ இடுவீராக! பிறகு திருவாரூர்‌ சென்று அக்கோயில்‌ குளத்தில்‌ எடுத்துக்‌ கொள்வீராக!”  என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ அப்பொன்னை நதியில்‌ விட்டுவிட்டு, மாற்று உரை பார்க்கும்‌ பொருட்டு ஒரு சிறு துண்டு பொன்னை மட்டும்‌ வெட்டி எடுத்துக்‌ கொண்டார்‌. திருவாரூர்‌ சென்றார்‌. திருவாரூர்‌ மக்கள்‌ அறிய பொன்னை அவவூரின்‌ குளத்திலே எடுத்தார்‌. இரு பொன்னின்‌ மாற்றும்‌ ஒத்ததாக இருந்தது. சுந்தரரின்‌ பெருமையை மக்கள்‌ அறிந்தனர்‌.

       வன்தொண்டர்‌ பின்‌ பல திருத்தலங்களுக்குச்‌ சென்று சிவபிரானைப்‌ பதிகம்‌ பாடித்‌ தொழுதார்‌. திருக்குருகாவூர்‌ என்ற இடத்திலும்‌, திருக்கச்சூர்‌ என்னுமிடத்திலும்‌ நம்பியாரூரர்‌ உணவின்றித்‌ தவித்தார்‌. அவ்வேளைகளில்‌ சிவபிரானே அடியவர்‌ கோலத்தில்‌ வந்து சுந்தரரின்‌ பசியைத்‌ தீர்த்தார்‌; தாகம்‌ தணித்தார்‌. இவ்வாறு சிவபிரான்‌ நம்பியாஞூரரைத்‌ தன்‌ தோழராகவே பாவித்து பல இடங்களில்‌ அருள்‌ செய்தார்‌.

     நம்பியாரூரரும்‌ இவ்வாறு பல திருத்தலங்களை வழிபட்டு தொண்டை நாடு வந்தார்‌. திருக்காஞ்சி, காமக்‌கோட்டம்‌ முதலிய இடங்களுக்குச்‌ சென்று இறைவனை வழிபட்டார்‌. இறுதியில்‌ திருவொற்றியூர்‌ வந்து சேர்ந்தார்‌.

சங்கிலி நாச்சியாரோடு திருமணம்‌

      திருவொற்றியூரில்‌ ஞாயிறு கிழவர்‌ என்பவரின்‌ புதல்வி சங்கிலியார்‌ என்னும்‌ மங்கை உமையன்னையிடம்‌ மிகுந்த பக்தி கொண்டிருந்தார்‌. அவருக்குத்‌ திருமணம்‌ செய்து வைக்க பெற்றோர்‌ பல வரன்களைத்‌ தேடினர்‌. ஆனால்‌ சங்கிலியாருக்கோ, ‘தான்‌ ஒரு சிவனடியாருக்கு மனைவியாகவே பிறந்தவள்‌’ என்ற உணர்வு தோன்றியிருந்தது. அதனால்‌ பெற்றோர்‌ கொண்டுவந்த வரன்களை எல்லாம்‌ மறுத்து வந்தார்‌.

       அவ்‌வேளையில்‌ சுந்தரமூர்த்தியார்‌ திருவொற்றியூர்‌ வந்தார்‌. அக்கோயிலில்‌ இருந்த சங்கிலியாரைக்‌ கண்டார்‌. காதல்‌ கொண்டார்‌. சங்கிலியாரைக்‌ கண்ட பொழுது முதல்‌, அவருக்கு அப்பெண்ணின்‌ நினைவாகவே இருந்தது. எனவே சிவபிரானிடம்‌, “இப்பெண்ணை நான்‌ மணக்க வேண்டும்‌!” என்று வேண்டினார்‌. இறைவனும்‌ அவ்வாறே நடக்கும்‌” என்று அருள்‌ செய்தார்‌.

     சுந்தரரைக்‌ கண்ட நாள்‌ முதல்‌ சங்கிலியாரும்‌ தன்‌ மனதை, நம்பியாரூரரிடம்‌ பறி கொடுத்திருந்தார்‌. அவ்வாறிருக்கையில்‌, ஒருநாள்‌ சிவபிரான்‌, சங்கிலியாரின்‌ கனவில்‌ தோன்றி, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்து கொள்ள விரும்புவதாகக்‌ கூறினார்‌. அதற்கு சங்கிலியாரோ, “பெருமானே! சுந்தரர்‌ ஏற்கனவே திருவாரூரில்‌ ஒரு பெண்ணைத்‌ திருமணம்‌ செய்துள்ளாரே! என்னை மணம்‌ செய்தால்‌ என்றேனும்‌ ஒருநாள்‌ என்னைப்‌ பிரிந்து திருவாரூர்‌ சென்றுவிட மாட்டாரோ!” என்று கேட்டார்‌.

       அதற்கு இறைவன்‌, “சுந்தரன்‌ அவ்வாறு செய்யாமலிருக்க, நீ அவனிடம்‌, உன்னைப்‌ பிரிந்து போகாதபடி சத்தியம்‌ வாங்கிக்‌ கொள்‌!” என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பிறகு சிவபிரான்‌ சுந்தரரின்‌ கனவில்‌ தோன்றி, “ நீ சங்கிலியார்‌ மேல்‌ வைத்த காதலை அவரிடம்‌ தெரிவித்தாகி விட்டது. ஆனால்‌ நீ அவளிடம்‌, அவளைப்‌ பிரிந்து போக மாட்டேன்‌ என்ற சத்தியம்‌ செய்து தர வேண்டும்‌” என்று கூறினார்‌.

      சுந்தரரும்‌ இறைவனிடம்‌, “நான்‌ கோயிலின்‌ கருவறையின்‌ முன்‌ சத்தியம்‌ செய்து தருகிறேன்‌. பெருமானே! நீர்‌ அப்போது அக்கோயிலில்‌ உள்ள மகிழ மரத்தின்‌ கீழ்‌ வீற்றிருக்க வேண்டும்‌!” என்று கேட்டுக்‌ கொண்டார்‌. இறைவனும்‌ சம்மதித்தார்‌.

       ஆனால்‌ சிவபிரான்‌ தன்‌ திருவிளையாடலைத்‌ தொடங்கினார்‌. நேராக, சங்கிலியாரின்‌ கனவில்‌ சென்று, “சுந்தரன்‌ உன்னிடம்‌ சத்தியம்‌ செய்யும்போது, மகிழ மரத்தின்‌கீழ் சத்தியம்‌ செய்யும்படி கேட்டுக்‌ கொள்‌! என்று கூறினார்‌. சங்கிலியாரும்‌ சம்மதித்தார்‌. பின்‌ செய்தியைத்‌ தன்‌ தோழிகளிடம்‌ கூறினார்‌.

      மறுநாள்‌ கோயிலில்‌ சங்கிலியார்‌ மறைந்திருக்க, அவரின்‌ தோழிகள்‌, சுந்தரரிடம்‌ ‘சங்கிலியாரைப்‌ பிரிய மாட்டேன்‌’ என்று சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டார்கள்‌. சுந்தரரும்‌ கோயிலின்‌ கருவறை முன்‌ சத்தியம்‌ செய்யச்‌ சென்றார்‌. தோழிகளோ, மகிழ மரத்தின்‌ அடியில்‌ சத்தியம்‌ செய்து தரும்படிக்‌ கேட்டனர்‌. சுந்தரர்‌ என்ன செய்வதென்று புரியாமல்‌ விழித்தார்‌. வேறு வழியில்லாமல்‌ சத்தியம்‌ செய்து தந்தார்‌. அதைக்கண்ட சங்கிலியார்‌ மனம்‌ வருந்தினார்‌.

     சுந்தரருக்கும்‌ சங்கிலியாருக்கும்‌ திருமணம்‌ நடைபெற்றது. இருவரும்‌ மகிழ்ச்சியாக இல்லறம்‌ நடத்தினர்‌. சில மாதங்கள்‌ சென்றபின்‌, நம்பியாருராருக்கு திருவாரூர்‌ நினைவு வந்தது. அவர்‌ பரவையாரிடம்‌ செல்லநினைத்தார்‌. சங்கிலியாரிடம்‌ விடை பெற்றார்‌. இறைவனின்‌ தோழராக இருப்பினும்‌ சத்தியம்‌ தவறலாமோ? அதனால்‌ சிவபிரான்‌ சுந்தரரின்‌ இரு கண்களிலும்‌ பார்வையைப்‌ பறித்து விட்டார்‌. சுந்தரர்‌ கண்பார்வையின்றி தவித்தார்‌. இறைவனிடம்‌ தொழுதார்‌. பலநாட்களுக்குப்‌ பிறகு திருவெண்பாக்கம்‌ என்னுமிடத்தில்‌

       இறைவன்‌ சுந்தருக்கு ஒரு ஊன்று கோல்‌ தந்தார்‌. அதைப்‌ பெற்றுக்கொண்டு, பலத்‌ திருத்தலங்களுக்குச்‌ சென்று, பதிகங்கள்‌ பாடி சிவபிரானைத்‌ தொழுதார்‌ சுந்தரர்‌. அவ்வாறு வருகையில்‌ காஞ்சி ஏகாம்பரநாதரைத்‌ தொழுகையில்‌ ஒற்றைக்‌ கண்ணில்‌ மட்டும்‌ பார்வை வந்தது. பிறகு பலத்‌ திருத்தலங்களைத்‌ தொழுது வருகையில்‌, திருத்துமுத்தி என்னும்‌ இடத்தில்‌ சிவபிரானை மனம்‌ வருந்தித்‌ தொழுதார்‌. மறு கண்ணிலும்‌ பார்வை பெற்றார்‌.

      இவ்வாறு பயணம்‌ செய்து இறுதியில்‌ திருவாரூர்‌ சென்றடைந்தார்‌. ஆனால்‌ பரவையார்‌, சுந்தரர்‌ சங்கிலியாரைத்‌ திருமணம்‌ செய்த செய்தி அறிந்து அவர்‌ மீது கடுங்கோபம்‌ கொண்டிருந்தார்‌.

சிவபெருமானைத்‌ தூது விடல்‌

      பரவையாரைக்‌ காணச்‌ சென்ற சுந்தரரை, பரவையார்‌ வீட்டினுள்ளேயே அனுமதிக்க மறுத்தார்‌. அவருடன்‌ பேசவும்‌ மறுத்தார்‌. சுந்தரர்‌ மிகவும்‌ மனம்‌ வருந்தி அவவூர்க்‌கோயில்‌ மண்டபத்திற்கு வந்து அமர்ந்தார்‌. பரவையார்‌, தன்னை வெறுத்ததை சுந்தரரால்‌ பொறுக்க முடியவில்லை. அவ்விரவே, தியாகேசப்‌ பெருமானைத்‌ தொழுதார்‌. ‘தன்‌மீது கோபம்‌ கொண்ட பரவையாரை ஆறுதல்‌ செய்து, தன்னை மீண்டும்‌ சேரும்படிச்‌ செய்ய வேண்டும்‌” என்று வேண்டினார்‌. சிவபெருமானும்‌ சுந்தரருக்காக அந்த நடுநிசியிலும்‌ பரவையாரிடம்‌ தூது செல்லச்சம்மதித்தார்‌.

      மறுகணமே சிவபிரான்‌ அடியவர்‌ கோலம்‌ கொண்டார்‌. தேவர்களையெல்லாம்‌ பிற அடியவர்களாக கோலம்‌ கொள்ளச்‌ செய்தார்‌. பரவையார்‌ வீடு நோக்திச்‌ சென்றார்‌. பரவையாருக்கு சுந்தரர்‌ மீது கோபம்‌ இன்னும்‌ அடங்கவில்லை. நடுநிசியிலும்‌ உறங்காது விழித்திருந்தார்‌.

    அவ்வேளை, சிவபெருமான்‌ அடியவர்‌ கோலத்தில்‌ சென்றார்‌. சுந்தரர்‌ மீது தவறேதும்‌ இல்லை என்று எடுத்துரைத்தார்‌. ஆனால்‌ பரவையார்‌ அதை ஏற்றுக்‌ கொள்ளவில்லை. அவர்‌ அவ்வடியவரிடம்‌, “சுந்தரர்‌ எனக்கு வஞ்சகம்‌ செய்தார்‌!அதனால்‌ நான்‌ அவரை ஏற்றுக்‌ கொள்ள இயலாது!” என்று கூறிவிட்டார்‌.

    சிவபிரானும்‌ திரும்பி, சுந்தரரிடமே வந்தார்‌. நடந்ததைக்‌ கூறினார்‌. உடனே சுந்தரரும்‌, “பரவையார்‌ நித்தம்‌ வழிபடும்‌ சிவனே தூது வந்தார்‌ என்று அறிந்தும்‌, என்னை ஏற்றுக்‌ கொள்ள மறுக்கிறாளோ பரவையார்‌ இல்லாது என்னால்‌ உயிர்‌ வாழ முடியாது. எனக்காக நீர்‌ மீண்டும்‌ ஒருமுறை தூது செல்ல வேண்டும்‌!” என்று பணிந்து வேண்டினார்‌.

    சுந்தரர்‌ மீது பெருங்கருணை கொண்ட சிவபிரான்‌, மீண்டும்‌ பரவையார்‌ வீட்டிற்கு, தேவர்கள்‌ புடைசூழச்‌ சென்றார்‌. இந்நிலையில்‌ பரவையாரின்‌ மனதில்‌, ‘சற்று முன்பு வந்தது சிவபெருமானே!’ என்ற எண்ணம்‌ உதித்தது. ‘ஐயோ! நான்‌ நித்தம்‌ வணங்கும்‌ பெருமான்‌, என்னைத்‌ தேடி வந்தாரே! நான்‌ அவரைத்‌ திருப்பி அனுப்பினேனே!’ என்று கலக்கமுற்றிருந்தார்‌. அவ்வேளையில்‌ மீண்டும்‌ சிவபிரான்‌ தன்னைத்தேடி வரும்‌ உணர்வு அவருள்‌ தோன்றியது.

      இம்முறை சிவபிரான்‌, வந்து கேட்கும்‌ முன்பே, பரவையார்‌ பெருமானை வணங்கித்‌ துதித்தாள்‌. சுந்தரரை ஏற்றுக்‌ கொள்ளச்‌ சம்மதித்தார்‌. சிவபிரானும்‌ செய்தியைச்‌ சுந்தரிடம்‌ தெரிவித்தார்‌. சுந்தரரும்‌ வணங்கினார்‌

      நம்பியாரும்‌ பரவையாரும்‌ மீண்டும்‌ இல்லறத்தில்‌ ஈடுபட்டனர்‌. சுந்தரர்‌, சிவபெருமானை ஒரு பெண்ணிற்காகத்‌ தூது அனுப்பியதை அவ்வூரில்‌ இருந்த ஏயர்கோன்‌ கலிக்காமர்‌ என்ற அடியவரால்‌ பொறுத்துக்‌ கொள்ள முடியவில்லை. அவர்‌ சுந்தரர்‌ மீது கோபம்‌ கொண்டார்‌. ஆனால்‌, கலிக்காமரின்‌ கோபத்தை மாற்ற திருவுள்ளம்‌ கொண்டார்‌ சிவபிரான்‌. அவருக்கு சூலை நோயை உண்டாக்கினார்‌.

        அந்நோயை சுந்தரர்‌ நீக்குவார்‌ என்று சொல்லி, கலிக்காமருக்கும்‌ சுந்தரருக்கும்‌ இடையே நட்புண்டாகச்‌ செய்தார்‌. இருவரும்‌ அதன்‌ பிறகு ஒருவர்‌ மீது ஒருவர்‌ மாறாப்‌ பேரன்பு கொண்டிருந்தனர்‌.

      பிறகு சுந்தரர்‌, பாண்டி நாட்டிலுள்ள பல இருத்தலங்‌களுக்கும்‌ சென்று சிவபிரானை வழிபட்டார்‌. அதுபோல்‌, மலை நாட்டை ஆண்டு கொண்டிருந்த சேரமான்பெருமாள்‌ என்னும்‌ மன்னர்‌, சிவபக்தியில்‌ சிறந்து நின்றவர்‌. அவரோடு சுந்தரரை நட்புறவு கொள்ளச்செய்தார்‌ சிவபிரான்‌. அவர்கள்‌ இருவரும்‌ நட்பு கொண்டனர்‌. சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரரின்‌ மீது பேரன்பு வைத்திருந்தார்‌. சுந்தரரும்‌ மலைநாடு சென்று, சேரமான்‌ பெருமாளுடன்‌ சிலகாலம்‌ தங்கியிருந்து இருவாருக்குத்‌ திரும்பினார்‌.

       அவ்வேளையில்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரருக்கு ஏராளமான பொன்னும்‌ பொருளும்‌ தந்து வழியனுப்பினார்‌. சிவபிரானோ, எப்பொருளையும்‌ சுந்தரருக்குத்‌ தானே நேரடியாகத்‌ தரவேண்டும்‌ என்று திருவுள்ளம்‌ கொண்டார்‌. சுந்தரரின்‌ உடன்‌ வந்த அடியவர்களின்‌ பொன்னையும்‌ பொருளையும்‌ திருடர்களாய்‌ கோலம்‌ கொண்ட சிவகணங்கள்‌ கொண்டு பறித்தார்‌. திருமுருகன்‌ பூண்டி என்னும்‌ தலத்தில்‌ மீண்டும்‌ தந்தார்‌.

சுந்தரர்‌ இவ்வாறு பலத்‌ திருத்தலங்களைச்‌ சென்று தரிசித்து, திருப்புக்கொளியூர் என்னும்‌ தலத்தை அடைந்தார்‌.

முதலையுண்ட பாலகனை உயிர்ப்பித்தல்‌

          சுந்தரர்‌, திருப்புக்கொளியூர்‌ தலத்து பெருமானைத்‌ தொழுது, மாடவீதி வழியே வந்து கொண்டிருந்தார்‌. அப்போது அவ்வீதியில்‌ எதிர்‌ எதிரே அமைந்த இரு வீடுகளைக்‌ கண்டார்‌.  ஒரு வீட்டில்‌ மங்கல மேளச்‌ சத்தம்‌ கேட்டது. எதிர்‌ வீட்டில்‌ அழுகுரல்‌ கேட்டது. என்ன நடந்தது என்று சுந்தரர்‌, அவவீடுகளுக்குச்‌ சென்று கேட்டார்‌. மங்கலமேளம்‌ கேட்ட வீட்டில்‌ ஒன்பது வயது பாலகன்‌ ஒருவனுக்கு உபநயனம்‌ நடந்து கொண்டிருந்தது.

         பிறகு, சுந்தரர்‌ அழுகுரல்‌ கேட்ட வீட்டிற்குள்‌ சென்றார்‌. காரணம்‌ கேட்டார்‌. அக்குடும்பத்திலுள்ள ஒரு பாலகன்‌ கடந்த ஆண்டு, நண்பனுடன்‌ குளத்தில்‌ குளிக்கச்‌ சென்றான்‌. அப்போது, அக்குளத்திலிருந்த ஒரு முதலை அப்பாலகனைக்‌ கடித்து விழுங்கியது. அவன்‌ இறந்து ஓர்‌ ஆண்டு முடிவுற்றிருந்தது.

    இன்று எதிர்‌ வீட்டுப்‌ பாலகனுக்கு உபநயனம்‌ நடக்கையில்‌, இவ்வீட்டிலுள்ள பெற்றோர்களுக்கு, தங்கள்‌ புதல்வனின்‌ நினைவு வந்தது. அவர்கள்‌ அழுது கொண்டிருந்தனர்‌. ஆனால்‌, சுந்தரரைக்‌ கண்டதும்‌ அவர்கள்‌ தங்கள்‌ கவலையை மறந்து, அவரை வரவேற்று உபசரித்தனர்‌. அக்காட்சி சுந்தரரின்‌ மனதைத்‌ தொட்டது. அவர்‌, அக்குடும்பத்திலுள்ளோர்களிடம்‌, இறந்து போன பாலகனை முதலை விழுங்கிய குளம்‌ எங்கே உள்ளது என்று கேட்டறிந்து, அவர்களையும்‌ தன்னுடன்‌ அழைத்துச்‌ சென்றார்‌. அங்கு சென்றதும்‌, சிவபெருமானை நினைத்துப்‌ பதிகம்‌ பாடி பாலகனை அழைத்தார்‌.

       இறந்து போன பாலகன்‌, ஓர்‌ ஆண்டில்‌ எவ்வளவு வளர்ச்சி பெற்றிருப்பானோ, அப்பருவத்தில்‌ முதலையின்‌ வாயிலிருந்து வெளிவந்தான்‌. அவனது பெற்றோர்கள்‌ அளவிலா மகிழ்ச்சி அடைந்தார்கள்‌. சுந்தரை வணங்கி, ஆனந்தக்‌ கண்ணீர்‌ வடித்தனர்‌.

மலைநாடு வருதல்‌

        ஏற்கனவே, சுந்தரரின்‌ மீது பேரன்பு கொண்டிருந்த மலைநாட்டு மன்னர்‌ சேரமான்‌ பெருமாள்‌, சுந்தரர்‌ ஒவ்வொரு திருத்தலங்களிலும்‌ நடத்திய அற்புதங்களைக்‌ கேட்டறிந்து, அவரை எப்போது காண்போம்‌ என்று காத்திருந்தார்‌.

        அவ்வேளையில்‌ சுந்தரரும்‌ மலைநாடு சென்றடைந்‌தார்‌. அவரைக்‌ கண்ட சேரமான்‌ பெருமாள்‌, எல்லையில்லா ஆனந்தம்‌ அடைந்தார்‌. சுந்தரரும்‌, சேரமான்‌ பெருமாளும்‌ எந்நேரமும்‌ சேர்ந்தே சிவபிரானைத்‌ தொழுதனர்‌. பல நாட்கள்‌ கடந்தன.

        ஒருநாள்‌ சுந்தரரைத்‌ தேடினார்‌ சேரமான்‌ பெருமாள்‌. காணவில்லை. அருகிலிருந்தவர்களிடம்‌ கேட்டார்‌. சுந்தரர்‌ திருவஞ்சை களத்தியப்பனை வணங்கச்‌ சென்றிருப்பதாகக்‌ கூறினர்‌. சேரமான்‌ பெருமாளும்‌ தன்‌ வெள்ளைக்‌ குதிரையில்‌ ஏறிப்‌ புறப்பட்டார்‌. திருக்கோயிலை நெருங்கினார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌, கோயிலினுள்ளிருந்து வெளியே வந்தார்‌. அப்போது சேரமான்‌ கண்ட காட்சி திருக்கயிலையிலிருந்து கணங்கள்‌ சூழ ஒரு வெள்ளை யானை இறங்கி வந்தது. சுந்தரரை தன்‌ முதுகில்‌ ஏற்றியது. பின்‌ விண்ணுலகம்‌ தாண்டிப்‌ பறந்தது.

    சுந்தரரை ஒரு கணமும்‌ பிரிந்திருக்க இயலாத சேரமான்‌ பெருமாள்‌ மனம்‌ பதைத்தார்‌. தன்‌ வெள்ளைக்‌ குதிரையின்‌ காதில்‌ சிவபஞ்சாட்சர மந்திரத்தைக்‌ கூறினார்‌. விண்ணுக்குக்‌ கிளம்பி, அவ்வெள்ளை யானையைத்‌ தொடரும்படிக்‌கூறினார்‌. குதிரை உயரே கிளம்பியது. சுந்தரரை ஏற்றிச்‌சென்ற யானையை வலம்‌ வந்தபடியே பறந்து வந்தார்‌ சேரமான்‌.

       இறுதியில்‌ இருவரும்‌ கைலாயத்தை அடைந்தனர்‌. அங்கு சுந்தரரைக்‌ கண்டதும்‌ பல வாயில்கள்‌ திறந்தன. சுந்தரர்‌ அவைகளில்‌ நுழைந்து சென்றார்‌. சேரமானும்‌ பின்‌ தொடர்ந்து சென்றார்‌. ஒரு வாயிலில்‌ சுந்தரர்‌ நுழைந்தார்‌. சேரமான்‌ பெருமாள்‌ நுழையுமுன்‌ வாயில்‌ அடைபட்டது. சுந்தரர்‌ இவ்வாறு பல வாசல்களைக்‌ கடந்து சிவபெருமானின்‌ முன்‌ வந்து நின்று வணங்கினார்‌. பெருமானும்‌, “சுந்தரா! நான்‌ உன்னை மட்டும்தானே வரும்படிக்‌ கூறினேன்‌. வேறு யாரையேனும்‌ அழைத்து வந்தாயோ என்று வினவினார்‌.

      சுந்தரர்‌ சிவபிரானை வணங்கி, “பெருமானே! என்‌ மீதுள்ள அன்பினால்‌ சேரமானும்‌ என்னைத்‌ தொடர்ந்தார்‌. இப்போது கயிலையின்‌ வாசலில்‌ நிற்கின்றார்‌! என்றார்‌. சிவபிரான்‌, சேரமானையும்‌ கயிலையினுள்‌ வரும்படி ஆணையிட்டார்‌. கயிலை வந்ததன்‌ காரணம்‌ கேட்டார்‌. சேரமான்‌, “பெருமானே! சுந்தரை வணங்கி நானும்‌ வலம்‌ வந்தேன்‌. திருக்கயிலையை அடைந்து விட்டேன்‌.

       சுந்தரைப்‌ பிரிந்து என்னால்‌ பூவுலகில்‌ வாழ இயலாது!” என்று வணங்கினார்‌. இறைவன்‌ திருவுள்ளம்‌ பூரித்தார்‌. சுந்தரமூர்த்தி சுவாமிகளை முன்போல, தன்‌ பணி புரிய ஆலால சுந்தரராய்‌ விற்றிருக்கச்‌ செய்தார்‌ இறைவன்‌. பின்‌, சேரமானின்‌ அடியவர்‌ பக்தியை மெச்சி, சேரமான்‌ பெருமாளையும்‌ கணங்களுக்குத்‌ தலைவராக்கினார்‌.

சுந்தரர்‌ மண்ணுலகம்‌ ஏன்‌ வந்தார்‌?

     சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ திருக்கையிலாயத்தில்‌ சிவபிரானுக்குத்‌ திருப்பணி புரியும்‌ ஆலால சுந்தரராய்‌ இருந்தார்‌. ஒருநாள்‌ கயிலாயத்‌ தோட்டத்தினுள்‌ சென்ற சுந்தரனார்‌, அங்கே பார்வதி தேவியின்‌ தோழியரான கமலினி, அநிந்திதை என்ற இரு தேவ கன்னிகையரை நோக்கி மனதில்‌ சிறிது சலனம்‌ கொண்டார்‌.

        இதனையறிந்த சிவபிரான்‌, சுந்தரரை நோக்கி, “பெண்‌ மீதான காமத்தைக்‌ கடந்தாக வேண்டும்‌. அதனால்‌ பூமியில்‌ பிறந்து காமம்‌ தணிந்து வருவாயாக!” என்று பணித்தார்‌.

        அதனால்‌ மனம்‌ கலங்கிய சுந்தரரோ, சிவபெருமானை நோக்கி, “பூமியில்‌ பிறக்க சபிக்கப்பட்டேன்‌. இருப்பினும்‌ நான்‌ பூலோக ஆசைகளில்‌ சிக்கிக்‌ கொள்ளும்போது, நீ என்னைத்‌ தடுத்தாட்கொள்ள வேண்டும்‌ என்று வேண்டிக்‌கொண்டார்‌. அதன்படியே செய்வதாக சிவபிரானும்‌ வாக்களித்தார்‌. தான்‌ சுந்தரனுக்கு வாக்களித்தபடியே, திருமணப்‌ பந்தத்தில்‌ சிக்கிக்‌ கொள்ளவிருக்கும்‌ சுந்தரனை, தடுத்தாட்‌கொண்டார்‌. பின்‌ சுந்தரமூர்த்தியாரே, வேண்டியபடி பரவையாரையும்‌, சங்கிலியாரையும்‌ அவரோடு சேர்ப்பித்து இல்லறத்தில்‌ ஈடுபடச்‌ செய்தார்‌. பின்‌, மீண்டும்‌ பிறவாதபடி திருக்கயிலையில்‌ அணைத்துக் கொண்டார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here