Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் முகமூடி இல்லாத கண்ணாடி|ச.கார்த்திக்

முகமூடி இல்லாத கண்ணாடி|ச.கார்த்திக்

முகமூடி இல்லாத கண்ணாடி -ச. கார்த்திக்

முகம் சுழிக்காமல்


முகம் காட்டுகிறது


முகமூடி இல்லாத கண்ணாடி!


 

எந்த பறவையும்


அழிவு பற்றி யோசிக்கவில்லை


பறந்து(தே) செல்கிறது!


 

வானில் நிலவை தேடுபவனுக்கு


பக்கத்தில் இருக்கும்


நிலா கண்ணுக்கு தெரியவில்லை!


 

கடல் அலைகள் எல்லாம்


கரைகளிடம் மட்டும் உறவாடுகிறது!


அது நமக்கு தெரியவில்லை..


 

அலங்காரத்துடன் நிற்கும்


ஆட்டுக்குட்டி! தெரியாத ஒன்று


தன்னை பலியிடுவார்கள் என்று..


 

இந்தக் கிறுக்களின்


உன் பெயரை


எங்கையோ நான் மறைந்து வைக்கிறேன்!


 

புல் கண்ணீர் சிந்துவதை


இந்த
அருவாள் மட்டும் அறியும்!


 

கூவுகின்ற சேவலுக்கு
தெரியவில்லை


தன்னை பலியிடுவார்கள் என்று..


 

கடல் அலை அசைந்து கொண்டே


இருக்கிறது


சிறு மீன் குஞ்சுகள்!


 

மிகப்பெரிய உறக்கத்தில்


அவளின்


சிறிய கனவுகள்!


 

செடிகள் எல்லா வாடியே


இருக்கிறது
அவளைப் பார்க்காமல் தான்!


 

நிழலை தேடி நாம் செல்கிறோம்


யாரை பற்றி யோசிக்கவில்லை


எந்த மரமும்!


 

அவள் மூச்சு காற்றை


அறிந்தே(து)


மரத்தின் இலைகள் எல்லாம்


மயங்கி விழுகிறது!


 

ஏதோ ஒன்று நினைத்தேன்


ஏதோ ஒன்று எழுதினேன்


உன் பெயரை தவிர!


 

இந்தக் காற்றெல்லாம்


புற்களிடையே


கதையாடிக் கொண்டிருக்கிறது


மரத்தின் கதையை..!


 

செடி வாடுவதை


மழை அறியும்


அவள் வருந்துவதை


நான் அறிவேன்!


 

தந்தை திட்டியதும்


மகளின் முகத்தில்


கண்ணீர் ஓவியம்


வரைந்தது!


 

தன்னுடைய ஆடையைப்
பார்பதற்கு

இங்கு யாரும் வருவதில்லை


புலம்பிக் கொண்டே செல்கிறது


இந்தப் பாம்பு!


 

தனக்கு தேவையான


மீன்களை மட்டும்


பிடித்துச் செல்கிறது


அந்தக் கொக்கு!


 

எதைப் பற்றியும் யோசிக்காமல்


தன் செயலை செய்துக்கொண்டே


இருக்கிறது கடிகார முள்!


 

கடங்காரன் வருகை


அறிந்தே(து)


கதவு மூடப்படுகிறது!


 

யார் யாரோ பற்றி


நினைத்துக்கொண்டு


இருக்கிறேன்


அவன்
அறியாதது

அவனைத்தான்!


 

நீ முகம் கழுவிய


தண்ணீர்


தண்ணீருக்கே அழகு சேர்க்கிறது


கண்மணியே!


 

மரத்தைச் சுற்றி


விழுந்த இலைகள் காண்போம்!


அதை மரத்தின்


துளிர்(கள்) காண்பதில்லை!


 

அவளை பார்க்கத்தான்


முடியவில்லை


அவளின் புகைப்படம்


ஒன்றே போதும்!


 

மரத்தின் இலைகள்


பூமிக்குச் செல்லும் முன்


காற்றில் நடனமாடுகிறது!


 

கடலின் அலைகள்


என் கால் பாதத்தில்


முத்தம் மிட்டு செல்கிறது!


 

சாவிக்கு தெரிந்த கதையும்


பூட்டுக்கு தெரிந்த கதையும்


நமக்கு மட்டும் தெரியாமல் போனது!


 

எந்த ஊர் சென்றாலும்


நான் முதலில் கேட்பது


தேனீர்கடை மட்டும்தான்!


 

யாரும் இல்லாத வீட்டில்


பூனை மட்டும் உலாவியே
செல்கிறது!


கொக்குகளுக்கு மட்டும் தெரிந்த


புழுக்கள்!


மனிதன் கண்களுக்கு


அகப்படவில்லை..


வயலில் இருந்த கொக்குகள்


விரட்டுகின்றன !


எந்த மனிதன்..


 

கூடையில் சுமந்துச் செல்லும்


புல்லாங்குழலுக்கு


காற்றோடு மட்டும்(மே) இசைக்கிறது


செவிக்கு ஆறுதலோடு


வயிற்றுக்கு ஆறுதலாய்
ஒரு

புல்லாங்குழலும் விற்கவில்லை!


 

கண் தெரியாத


பிச்சைக்காரனிடம்


யார் சொல்வார்


இங்கு யாரும்


இல்லை என்று!


 

நாள்தோறும் விலை உயர்வு


என்னுடைய வருவாய் மட்டும்


அதே நிலையில்


இந்த நிறுவனத்தில்..


 

சாலையில் கிடந்த நெற்கதிர்கள்


எந்த பேருந்து ஏரி சென்றதோ


எந்த லாரி எடுத்துச் சென்றதோ


எந்த பையில் அடுத்த வந்ததோ


என் வீட்டிற்கு வெந்து தனிந்தது


ஒரு கைபிடி சோறு!


 

நானெங்குச் சென்றாலும்


ஏதோ ஒன்றை


தொலைந்து விட்டு வருவேன்!


 

யார் யாரோ பற்றி எழுதுகிறோம்


வேரோ சொல்கிறது


இந்த மரம் வாடுவதை பற்றி


எழுதுவதற்கு இங்கு யாருமே இல்லை!


 

விடுமுறை நாட்களில்


நான் ஓய்வாக இருப்பேன்


எங்கள் வீட்டில்


மின்விசிறி மட்டும்


புலம்பிக்கொண்டே இருக்கும்!


இவனுக்கு எதற்கு தான் விடுமுறை விட்டார்களோ?


என்னை அழ வைத்துப் பார்ப்பதில்


இவனுக்கு என்ன ஒரு ஆனந்தம்


என்னை மட்டும் அல்ல !


இந்த நாற்காலியும் பாவம்


அவனை நாள்தோறும்


சுமந்து கொண்டு இருக்கிறது!


அது அழுவதை நான் மட்டும் அறிவேன்


அவனுக்கு தெரியவில்லை ! அவனது செயல் !


அந்த எழுதுக்கோலும், இந்த காகிதமும், பாவம்


ஏன் எழுதுகிறேன் அவன் கை சொல்கிறது


நான் எழுதுகிறேன் என புலம்புகிறது.


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »