மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

மார்க்சியப் பெண்ணியம்

மார்க்சியப் பெண்ணியம்


            காரல் மார்க்ஸும், ஏங்கல்சும் கம்யூனிசக் கருத்துக்கள் பரவக் மார்க்ஸின் கருத்துக்களை ஏஞ்சல்ஸ் காரணமானவர்கள். ‘குடும்பம், தனிச்சொத்துரிமை, அரசு இவற்றின் தோற்றம்’ (Origin of the Family Private Property and the State) என்னும் நூலில் விளக்குகின்றார். இக்கருத்துக்கள் மார்க்சியப் பெண்ணியத்திற்கு அடிப்படையாக அமைந்தன.


பெண்ணடிமையின் காரணங்கள்


            ஏங்கல்சின் கருத்துப்படி, பொருள் முதல்வாதக் கொள்கையின் அடிப்படையில் கூறப்படும் வரலாற்றில், சமுதாய வாழ்வின்
தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பொருளுற்பத்தியும், மனித மறு உற்பத்தியும் சமுதாயத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகும். இந்த இரண்டு காரணிகளும் தொழிலாளர்களின் முன்னேற்ற நிலையுடனும், குடும்ப நிலையுடனும் சேர்ந்து வரலாற்றில் ஒரு கால கட்டத்தின் சமுதாய அமைப்பை உருவாக்குகின்றன. அவர் கருத்துப்படி, பெண்கள் குடும்பத்தின் மூலம் தாழ்நிலை அடைவதே முதன் முதலாக உருவாகின்றது. அதைத் தொடர்ந்து அடிமை வர்க்கம் தாழ்த்தப்படுவதும் நிகழ்கின்றது. இவை இரண்டும் தனிநபர் சொத்துரிமையின் தொடக்க விளைவுகள் ஆகும். அதனால் தனிநபர் சொத்துரிமை அழிக்கப்படுவதன் மூலம் பெண்களின் தாழ்நிலையும், அடிமை வர்க்கத்தின் தாழ்நிலையும் மறையும் என்பது அவர் கருத்து.


            பெண்கள் தாழ்நிலை அடைந்த வரலாற்றை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். சமூகத்தின் ஆரம்பகால கட்டத்தில் தனிநபர் சொத்துரிமை கிடையாது. மக்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து பலருடன் பாலுறவு கொண்டு மக்களைப் பெற்றெடுத்தனர். அதனால் ஒரு குழந்தைக்கு அதன் அன்னையைத்தான் அடையாளம் தெரியும். தந்தை யாரெனத் தெரியாது. இவ்வாறான சமூகங்களில் தாய்வழிச் சமுக அமைப்பு வழக்கிலிருந்தது. பெண்களுக்கு மதிப்பு இருந்தது. ஆண்களும் பெண்களும் செய்யும் வேலைகளில் உயர்வு தாழ்வு பாராட்டப் பெறவில்லை.

            பின்பு, தனிநபர் சொத்துக்கள் அதிகரிக்க, அதிகரிக்க, மனிதனுக்கு மற்ற மனிதர்களின் உழைப்பு தேவைப்பட்டது. இது மிருகங்களை வளர்க்கத் தொடங்கிய கால கட்டத்திலிருந்து ஆரம்பமாயிற்று. ஆணுக்குப் புதுவிதமான செல்வங்கள் சேர்ந்தன. இதை அவன் தனக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே வாரிசாக அடைய வேண்டுமென விரும்பினான். இதற்கு உதவியாக ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே மணம் புரிந்து, அவனுக்குக் குழந்தைகள் பெற்றெடுக்குமாறு வலியுறுத்தினான். இந்தக் கட்டாயம் ஆண்களது வாழ்வில் இல்லை. இக்கட்டத்தில் தாய்வழிச் சமூகமுறை மாறி, தந்தைவழிச் சமூகமுறை ஆரம்பமாயிற்று. ஏஞ்சல்ஸ், இதனைச் சமூகத்தில் பெண் இனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என விவரிக்கின்றார்.

            பெண்,  வீட்டில் ஆணுக்கு அடிமையாக வேலை செய்துகொண்டு, அவனது உடற்பசிக்கு இரையாகிக், குழந்தை பெறும் இயந்திரமாக மட்டும் வாழத் தொடங்கினான். இதனால் சரித்திரத்தில் முதல் வர்க்க நசுக்குதல், ஆண், பெண்ணை ஒரு நபர் மணத்தின் மூலம் கட்டுப்படுத்தியதன் மூலம்தான் ஆரம்பமாயிற்று என்கிறார் ஏங்கல்ஸ். பழங்காலக் கம்யூனிசக் குடும்பங்களில் பெண்கள் வீட்டைப் பராமரிப்பது, ஆண் வெளியில்
சென்று பொருளீட்டுவதற்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றிருந்தது.

            ஆயின், ஆண் நாயக ஒரு நபர் மணத்தில், பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் ஒருவனுக்கு மட்டுமே செய்யும் தனி வேலைகளாயின. இதற்குச் சமூக மதிப்பு கிடையாது. பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவது தடைப்பட்டது. அதனால் பெண்களின் தாழ்நிலை சமூகத்தில் ஆண் பெண் இருபாலரும் செய்யும் வேலைகளுக்கு அளிக்கப்பட்ட மாறுபட்ட மதிப்புகளினால் ஆரம்பமாயிற்று. இதே நிலைதான் முதலாளித்துவக் குடும்பத்திலுள்ள பெண்களது வாழ்விலும் காணப்பட்டது என்கின்றார் ஏங்கல்ஸ்.


            இயந்திரமயமாக்கப்பட்ட சமூகத்தில், பெண்களும் வெளியே சென்று உழைத்துப் பொருளீட்டும் கட்டத்தில், அவர்கள் ஆண்களிடமிருந்து விடுதலை பெறுகின்றனர். அதனால் தொழிலாள மக்களிடையேதான் உண்மையான அன்பின் அடிப்படையிலான திருமணங்களும், பெண்களின் சுதந்திரமும் காணப்படுகின்றன. இங்கு சொத்து இல்லாததால் ஆண்நாயகத்தை உறுதிப்படுத்தும் அடிப்படை எதுவும் இல்லை. ஆயினும், பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்தாலும் வீட்டு வேலை செய்வது, வெளி வேலை செய்வது இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளனர். சமூக வேலைகளில் ஆண்கள் மட்டுமே குடும்பத்தின் பிரதிநிதியாகச் செயலாற்றுகின்றனர் என்றும் ஏங்கல்ஸ் விளக்குகின்றார்.


பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்


மார்க்சிசக் கருத்துப்படி, உண்மையான சமூக சமத்துவம், ஆண், பெண் இருபாலரும் சட்டப்படி சம உரிமைகளை அனுபவிப்பதன் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே நடைபெற முடியும். அதற்கு மூலமே செயற்பட முடியும். இது பெண் இனம் முழுவதும் பொதுத் பொருளாதாரப் பகுதியாக இருப்பது தவிர்க்கப்படுதல் வேண்டும். அடிப்படையாக, ஒரு நபர் மணம் சமூகத்தின் அடிப்படைப் வரப்போகும் சமுதாயப் புரட்சியின் மூலம் சொத்துக்கள் சமுதாய உடமையாகும்பொழுது, வாரிசு முறையில் பெற மிகக் குறைந்த
சொத்துக்களே இருக்கும். ஒரு நபர் மணமுறையின் அடிப்படையான தனிநபர் சொத்துரிமை தகர்க்கப்படும். அப்பொழுது ஒரு நபர் மணமும் தகர்ந்துவிடும்.

            தனிக்குடும்ப நிர்வாகம் சமூக நிறுவனத்திற்கு மாற்றப்படும். குழந்தை வளர்ப்பும் கல்வியும் பொதுப் பணிகளாக மாறும். ஆண் பெண் உறவுகள் அன்பின் அடிப்படையில் அமையும். அதனால் திருமண உறவுகள் ஒருமண உறவாகவே இருக்கும். இதில் ஆணின் ஆதிக்கம் மறையும்.
இந்நிலை மாற ஒரு புரட்சி தேவை. இதில் பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களோடு இணைந்து போரிட வேண்டுமேயன்றி, மற்ற வர்க்கப் பெண்களோடு ணைந்து செயற்படக்கூடாது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.


குறைபாடுகள்


            ஐரோப்பிய நாடுகளில் பெண்ணியம் வளர்ச்சியுற்று, பெண்கள் உயர்கல்வி பெற்ற காலத்தில் மார்க்சியக் கோட்பாடு வலிமை பெற்று விளங்கியது. அக்காலத்தில் உயர்கல்வி பெற்ற பெண்ணியவாதிகள், மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தனர். இங்கிலாந்துப் பெண்ணியவாதிகளிடையே இக்கோட்பாடே வலிமையுற்றிருந்தது. ஆயின், அவர்கள் தொழிற் சங்கங்களுடன் இணைந்து பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய காலத்தில், மார்க்சியம் பெண்களின் அடிமைத்தனத்தின் காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் சரியான முறையில் விளக்கவில்லை என்ப்தைப் புரிந்து கொண்டனர். முதலாளித்துவம் எவ்வாறு ஆண் நாயகத்தால் பயனடைகிறது என்பதை விளக்கும் அதே சமயத்தில், ஆண் நாயகம் முதலாளித்துவத்தின் துணையின்றித் தனித்து எவ்வாறு செயற்படுகின்றது என்பதை மார்க்சிசம் விளக்க முயலவில்லை.

            உதாரணமாக, தனிநபர் சொத்துரிமையும் முதலாளித்துவமும் ஏற்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களிலும், பெண் எனும் வர்க்கம் ஆண் வர்க்கத்தால் நசுக்கப்பட்டு வந்திருக்கின்றது; அதற்கான காரணங்களை மார்க்சிசம் விளக்க முற்படவில்லை. அதே போன்று தனிநபர் சொத்துரிமை அழிக்கப்பட்டால் பெண்கள் ஆண்களுக்கிணையான சமூக ன்று. தனிநபர் மதிப்பைப் பெறுவார்கள் என்பதும் உண்மையன்
சொத்துரிமைகள் அழிக்கப்பட்ட கம்யூனிச நாடுகளிலும் பலவிதங்களில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்நிலையில் உள்ளனர் என்பதும் வெளிப்படையாகும். மேலும், இங்கிலாந்தில் தொழிற்சங்கப் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட்டபொழுது, அவர்களுக்கு ஆண் தொழிலாளர்களிடம் இருந்து தகுந்த ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து போராடுவது தகுந்த பயனளிக்குமா என்ற வினாவும் பெண்ணியவாதிகளிடையே எழுந்தது.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here