Friday, September 5, 2025
Home Blog

அழகான ராட்சசி|கவிதை|முனைவர் த.மகேஸ்வரி

அழகான ராட்சசி - முனைவர் த. மகேஸ்வரி

🧚‍♀️அப்பா


உன் ஆசை மகள்


எழுதுகிறேன்..!


🧚‍♀️ வர்ணனையில் கூட


உனக்குப் பிடிக்காத


வார்த்தைகளைக் கூற மாட்டேன்..!


🧚‍♀️ என்னை தேவதை என்று


மற்றவர் கூறும்போது


மார்தட்டி கூறுவாய்!


அவள் தேவதை இல்லை


என் செல்ல ராட்சசியென்று,


அர்த்தம் புரியவில்லை அன்று..!


🧚‍♀️ புராண இதிகாச கதைகள் கூறும்


பாட்டியிடம் இருந்து விடுவித்து


ஆறு வயதிலேயே


அண்ணாவின் ஆரிய மாயைக்கு


அர்த்தம் சொன்னவர் தாங்கள்..!


🧚‍♀️பட்டுப் பாவாடை அணியவிடாமல்


கால் சட்டையும் பனியனும்


அழகு என்பாய்..!


🧚‍♀️ வாடா போடா என்று


உரையாடும் உன்னிடம்


ஆண்மகன் இல்லை என்ற


ஆதங்கத்தை


ஒருபோதும் கண்டதில்லை..!


🧚‍♀️ அப்பா உன்


மூச்சுக் காற்றுக்கு


முகவரி தொலைந்ததால்


உன்னால் அடைக்கப்பட்ட


நாக்குகள் எல்லாம்


விலங்குடைத்து வீறுகொண்டன..!


🧚‍♀️ பெண்மை இடுகாட்டிற்குச் செல்வது


பெரும் குற்றமென கங்கணம் கட்டும்


சமூகத்தின் மத்தியில்


நான் ஆண்மகனின்


அடையாளத்தை தேடினேன்..!


🧚‍♀️ நீ இல்லை என்று


நிலைகுலைந்து நிற்கும் என்னிடம்


எங்கிருந்து வந்தது


அந்த ஆண்மை!


முந்திக்கொண்ட தீக்கிரையாக்க


அந்த ஒரு நொடி


நான் ராட்சசியானேன்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் த. மகேஸ்வரி

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,

பெரம்பலூர்

 

சிந்தனைச் சிறகுகள்|காஞ்சி கிருபா

சிந்தனைச் சிறகுகள் - காஞ்சி கிருபா
🦋 எந்தச்சலசலப்பும்

இல்லாத

ஓர் அதிகாலை

மௌனத்தில்

என்னை நானே

தொலைத்துவிட்டு 
மீண்டு வருவதற்குள்

சிறகுகளை விரித்து

எங்கெங்கோ

பறந்து செல்கிறேன்..!
🦋 ஆள் நடமாட்டம்

இல்லாத

பாலை வனத்தில்

எனக்கான

பாடலை இசைத்துக் கொண்டு

செல்கையில்

வண்ணத்துப்பூச்சிகள்

என் அருகில்

வந்து செல்கின்றன..!
🦋 லேசான மழைத் தூறலில்

தெருவோர

தேநீர் கடைத் தேடி

நடந்து சென்ற நேரம்

மழையில் நனைந்த

ஒரு குட்டி நாயின்

சிலு சிலுப்பைக் கண்டு

பொழுது விடியாத

அந்தக் கணத்தில்

தூக்கிக் கொஞ்சுகிறேன்..!


 

🦋 அலைகள் வந்து

மோதுகின்ற
கடற்கரை மணலில் 
நடந்து செல்கிறேன்

என் தனிமையை உணர..!
🦋 தனிமையின்

மௌனத்தில்

மூழ்கும்போது

ஆழமான கவிதைகளை

மொண்டு வருகிறேன்..!


 

🦋 அதோ அந்தப்

பூஞ்சோலையின்

நறுமணமுகர்ந்து

என் விரல்களால்

எழுதி வைக்கிறேன்

முகர்ந்து கொள்ளுங்கள்

முடித்து விடாதீர்கள்..!


 

🦋 நிலாவின் வெளிச்சத்தில்

விண்மீன்களை

இரசித்துக்கொண்டு

மேகங்களிடம்

என் கவிதைகளைச்

சொல்லிக் கொண்டிருந்தேன்
 
காதல் மோகமெடுத்து

அவைகள்

ஒன்றாக கலந்து விட்டன..!
🦋 விண்மீன்கள்

மறியல் செய்தன

இவன் ஒரு

காதல் குற்றவாளி..!
🦋 என் சிறகுகளைத் திருப்பி

மீண்டும் வந்து சேர்கையில்

பாலைவனத்தைத்

தெருவோரத்தைக்

கடற்கரையைப்

பூஞ்சோலையைத்

தொலைத்துவிட்ட
சோகத்தில்

அழுது கொண்டிருக்கின்றன

என் விழிகள்..!

கவிதையின் ஆசிரியர்
காஞ்சி கிருபா
528/1 கட்டபொம்மன் தெரு,
விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,
சின்ன காஞ்சிபுரம், 631501

 

Thamilar Vaalviyalil Ariviyal|Dr A.Parimala

தமிழர் வாழ்வியலில் அறிவியல் - முனைவர் ஆ.பரிமளா
Abstract         
           In the life of the ancient Tamils, science was intricately woven into every aspect, extending from the atom to the universe. Tamil literature was not composed merely for aesthetic pleasure, but rather as a synthesis of experience and scientific thought. The visions conceived by the Tamils of the past are now materializing as present-day realities. Indeed, it would not be an exaggeration to assert that the very foundation of modern scientific advancement can be traced to the life and knowledge of the ancient Tamils, as reflected in their literary works. For instance, with reference to natural science, a verse states:

“Splitting the atom could stir even the seven seas.”
               
          This highlights the profound foresight regarding scientific principles. The concept of the atom as an indivisible, minute particle, invisible to the naked eye, is recognized as a discovery of modern science. However, it is astonishing that Avvaiyar, who lived more than a millennium ago, not only identified the atom but also articulated the idea of splitting it in her poetry. Similarly, Subramania Bharathi vividly illustrates the dynamic nature of atomic motion in his verse:

“We have heard scholars proclaim that atoms ceaselessly move in orbits.”
               
            Thus, Tamil literature serves as a remarkable testimony to the scientific acumen of the Tamils. This essay, therefore, seeks to analyze and emphasize the scientific insights embedded within Tamil literary traditions.

KEYWORDS: Ancient Tamils, Science, Literature, Atom, Avvaiyar, Innovation, Scientific knowledge


தமிழர் வாழ்வியலில் அறிவியல்

அறிமுகம்        
     பழந்தமிழரின் வாழ்வில், அணுவில் தொடங்கி அண்டம் வரையிலும் அறிவியல் பரவிக் கிடக்கின்றது. இலக்கியங்கள், வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றன.  இன்று நம் வாழ்வின் அறிவியல் வளர்ச்சியின் ஆணிவேராக பழந்தமிழர் வாழ்க்கை அமைந்துள்ளது என்றால் மிகையில்லை. இதனைத் தமிழ் இலக்கியங்கள்  பறைசாற்றுகின்றன. இயற்கை அறிவியல்,

அணுவைப் பிளந்து ஏழ்கடலைப் புகட்டி
குறுகத் தெறித்த குறள்.
         
         என்று அறிவியலின்  பெருமையை உரைக்கிறது. அணு என்பது கண்களுக்குப் புலப்படாத மிகச் சிறிய மூலக்கூறு என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. ஆயினும் பன்னூறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஔவை அதனை அறிந்திருந்ததும் அணுவைப் பிளப்பது குறித்து பாடலில் கூறியிருப்பதும் வியப்பிற்குரியது.

இடையின்றி அணுக்க ளெல்லாம் சுற்றுமென
இயல் நூலார் இசைத்தல் கேட்டோம்
         
       என்று பாரதி அணுக்களின் அசைவுகள் குறித்து அழகு தமிழ் படைக்கின்றார். அவ்வகையில் தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் ஆற்றல் பற்றி இக்கட்டுரை ஆய்கிறது.

முன்னுரை 
      
    ஐம்பூதங்களால் உருவானது இவ்வுலகம். அதனை,

நுண்முறை வெள்ள முழ்கியார் தருபு
உள்ளிபிகிய இருநிலத் தூழியும் (பரி.2:5- 12)
         
     என்று பரிபாடல் விளக்குகிறது. இதில் வானிலிருந்து காற்றும் காற்றிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து நிலமும் தோன்றிய நிலைகளைப் புலவர் கூறியுள்ளார். இவை மட்டுமன்றி கதிரவனில் பிரிந்து பூமி நீண்ட காலத்திற்கு நெருப்புக் கோளமாக இருந்தது என்றும் அது  காலப்போக்கில்   சிறிது   சிறிதாக    குளிர்ந்து    பனிப்படலமாக   மாறி, பின் நிலம் தோன்றியது என்றும், உலகத்தின் தோற்றம் குறித்த பல அறிவியல் உண்மைகளை விளக்குகிறது, பரிபாடல்.  மேகம் கடல் நீரை பெற்று மழையாகப் பொழிகிறது என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. அதனை ,

நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட (பரி. 6:1 – 2)
         
     என்று பாரிபாடலில்,  முகில்கள் கடலின்கண் நீரை முகந்து கொண்டு வந்து ஊழி முடிவின்கண் முழுகுவிக்க முயன்றது போல் மழை பெய்தது என்ற கருத்து, கூறப்பட்டுள்ளது. மேலும், இன்றைய மருத்துவ உலகம் மனிதனைக் காப்பாற்ற மரணத்தின் வாயில் வரை செல்கிறது. மருத்துவப் படிப்புகளோ, செயல்முறைப் பயிற்சிகளோ இல்லாத அந்தக் காலகட்டத்திலும் சித்தர்களும், சிறந்த வைத்தியர்களும் வாழ்ந்துள்ளதை அவர்கள் படைத்த  இலக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன.                                                       
மாதா உதிரம் இரண்டொக்கில் கண்ணில்லை
மாதா உதிரத்தில் வைத்த குழவிக்கே  (திருமந்திரம்)
         
      என்று திருமூலர் இயற்றிய திருமந்திரப் பாடல் விளம்புகின்றது. தாயின் உதிரத்தில் மலம் மிகுந்தால் பிறக்கும் குழுந்தை மந்தபுத்தி உடையதாகவும், நீர் மிகுந்தால் குழந்தை ஊமையாகவும் மலம், நீர் இரண்டும் மிகுதியாக இருந்தால் குழந்தை குருடாகப் பிறக்கும், என்ற கருத்துக்கள் இப்பாடலில் பயின்று வருகின்றன. இக்கருத்துக்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளிலும் அமைந்திருப்பதை அறிய முடிகிறது. மேலும், பழுதுபட்ட ஒரு உடல் உறுப்பை எடுத்துவிட்டு வேறொரு உறுப்பினைப் பொருத்துதல் என்பது இன்றைய மருத்துவ உலகின் சாதனை. அதனை,   

நாடுவிளங் கொண்புகழ் நடுகதல் வேண்டித்தன்
ஆடு மழைத் தடக்கை யறுத்து முறைசெய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன் (சிலப்பதிகாரம்)
என்ற சிலப்பதிகாரப் பாடலின்வழி உணரமுடிகிறது.  பெரியபுராணத்திலும்,

மதர்த்தெழும் உள்ளத்தோடு மகிழ்ந்துமுன் இருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணில் அப்ப (பெ.பு.2)
         
       என்ற அடிகளில் விளக்கப்படுகின்றது. இன்று கண்பார்வையற்றவர்க்கு பிறருடைய கண்ணினை வைத்து அறுவை சிகிச்சை செய்து பார்வை பெற வைக்கும் மருத்துவ அறிவினை மிக எளிமையாக கண்ணப்பர் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார் சேக்கிழார். மேலும்,  அறிவியல் உலகின் அறிய சாதனையான அறுவைச் சிகிச்சையினை பதிற்றுப்பத்தில்,

அம்புசே ருடம்பினர்ச் சேர்ந்தோ ரல்லது
தும்பை சூடாது மலைந்த மாட்சி (பதிற்றுப்பத்து 42: 2 – 6)
         
       என்று ஐந்தாம் பத்தின் இரண்டாம் பாடலடியில் போரில் வெட்டுண்ட உடலை வெள்ளுசி கொண்டு தைத்த மருத்துவன் செயலை விளக்குகின்றன. இன்றைய மருத்துவ முறையின் அறிவியல் சார்ந்த சிகிக்சைகள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழரால் கையாளப்பட்டு வந்துள்ளன என்பது பெருமை கொள்ளச் செய்கின்றன.

ஆய்வுநோக்கம்
             நம் முன்னோர்களின் வாழ்வில் அனு முதல் அண்டம் வரை அறிவியல் எல்லா நிலைகளிலும் பரவியிருக்கிறது இலக்கியத்தினை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமல்லாமல் தன்னுடைய அனுபவங்களையும் அறிவியலையும் கலந்து, படைப்பாகவே நல்கி இருக்கின்றனர். அன்றைய நம் சான்றோர்கள் கண்ட கனவுகளே இன்று பல நிலைகளில் நிஜங்கள் ஆக வலம் வருவதைக் காணமுடிகின்றது. இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையின் ஆதாரத்தினை நாம் நம்முடைய சான்றோர்களின் வாயிலாகவே பெற்றிருக்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அத்தகைய அறிவியல் அறத்தினை, இத்தலைமுறை  செம்மொழியுடன் இணைத்துப் பாதுகாத்துப் பயில வேண்டும் என்பதே இவ்வாய்வின் நல்நோக்கம் ஆகும்.

பழந்தமிழர் வாழ்வியலில் அறிவியல்         
         அமுதாம்பிகை பிள்ளைத் தமிழில் ஊசற் பருவத்தில், அமுதாம்பிகை ஊசலாடும் நிகழ்வினைக் குறிக்கும்போது சிவஞான முனிவர்,

நின்னகை நிலவெழிலுக்கு அவர் முகத்
திங்கள் சாய (அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் – ஊசல் பருவம்)
         
       என்ற அடிகளில் அமுதாம்பிகை ஆடும் ஊசலின் கயிறு  நீளமாக இருந்ததால் மெதுவாக ஆடுகிறது என்றும் ஆனால் அவள் காதில் அணிந்திருக்கும் குண்டலம் குறைவான நீளத்தில் தொங்குவதால் விரைவாக ஆடுகிறது என்றும் கூறியுள்ளார். இதனையே கலிலியோ ஊசலின் நீளம் குறித்த தம் ஆய்வில் ‘‘ஊசலின் நீளம் குறைவாக இருந்தால் விரைவாக ஆடும். ஊசலின் நீளம் அதிகமாக இருந்தால் மெதுவாக ஆடும்’’ என்றும் கூறியுள்ளார்.  இவ்வாறு ஆய்வுகளின் மூலமாக அறியப்பட்ட பல அறிவியல் உண்மைகள் வெறும் அனுபவத்தின் மூலமாகவும்,  பண்டைய தமிழர்களின் அறிவுத் தேடலின் விளைவுகளாகவும் பெறப்பட்டவை என்பதனை உணரலாம். அன்றைய மனிதன் கண்ட கனவை  இன்றைய அறிவியல் முன்னேற்றம்  நிஜமாக்கியது.   தேடல் இருக்கும் இடத்தில்தான் வெற்றி  கிடைக்கிறது.  பறவையைக் கண்ட மனிதன் தானும் பறக்க நினைத்தான். இறக்கைகள் இல்லாதபோதும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. விளைவு விமானத்தின் துணையோடு விண்ணில் பறந்தான் என்பதனை,   

வலவன் ஏவ வானவூர்தி (புறம் 27)
         
என்ற குறிப்புகள்  சங்கப் பாடல்களிலேயே பயின்று வந்துள்ளமையைக் காண முடிகிறது. மேலும், சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச் சென்றதாக அமைந்த  காட்சியினை  இளங்கோவடிகள்,

வானவூர்தி ஏறினள் மாதோ
கானமலர் புரிகுழல் கண்ணகி தானென் (3:196 – 200 )
         
        என்ற வரிகளில் கூறப்பட்டுள்ளது. சீவக சிந்தாமணியில், கட்டியங்காரன் போருக்கு வந்ததால் சச்சந்தன் தன் மனைவியை காப்பாற்ற அவளை மயிற்பொறியில் ஏற்றி அனுப்பினான் என்பது செய்தி.  கட்டியங்காரனின் வெற்றி முழக்கத்தை வான் வழியே கேட்டு விசயை மயங்கி வீழ்ந்தாள். மயிற்பொறி இடப்புறமாகத் திரும்பி ஒரு சுடுகாட்டில் இறங்கி கால் ஊன்றி நின்றது என்பதாக அமைந்துள்ளது. இதனை,

வெஃகிய புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து சோர்ந்தாள் (நா.இ., பா. 299)
என்றும்,

பல் பொறி நெற்றிக்
குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து இருந்து (நா.இ., பா,30)         
        போன்ற வரிகளிலும் வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. இத்தகைய இலக்கியங்களை நோக்கும்போது தொகையும் பாட்டுமாக, சித்தர்களின் அரிய பொக்கிஷமாக, நாட்டுப்புற இலக்கியமாக இன்னும் எண்ணற்ற அறிவியல் உண்மைகள் இவற்றுள் பொதிந்து கிடக்கின்றன என்பதை உணர முடிகிறது. இவற்றுள் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின்வழி  மனித இனத்திற்குத் தேவையான மகத்தான  அறிவியல் அறிவும் பல மருத்துவத் தீர்வுகளும் கிடைக்கும் என்பது தெளிவாகிறது.
 மண்ணிலிருந்து எடுக்கப்படும் பொன் முழுவதும் தூய்மையானது அல்ல அதில் இடம்பெற்றுள்ள வேண்டாத பொருள்களை அகற்றினால் மட்டுமே தூய்மையான பயன்பாட்டிற்கு உடைய நிலையில் தங்கம் கிடைக்கும். அவ்வாறு பயன்பாட்டிற்கு உரிய நிலையில் தங்கத்தை மாற்றுவதற்கு முக்கிய இடத்தைப் பெறுவது நெருப்பாகும். தங்கத்தை நெருப்பினால் உருக்கித் தேவையில்லாத கழிவுகளை நீக்கியதும் தங்கம் தன்னுடைய ஒளியைப் பெற்று விடுகிறது இதனை வள்ளுவர்
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோக்கில் பவருக்கு. (குறள்-267)
         
      என்ற பாக்களின் வாயிலாக எடுத்துரைத்துள்ளார். இயற்பியலின் ஒரு பிரிவாக விளங்குவது அணுவியல். அண்மைக்கால அறிவியல் வரலாற்றில் அற்புதமான வளர்ச்சி பெற்று இருப்பது அணுவியலாகும். முதலில் அணுவைப் பிளக்க இயலாது என்ற கொள்கை தோன்றியது. மேலும், சந்திர கிரகணத்தைக் குறிக்க வந்த புலவர்கள், திங்களைப் பாம்பு விழுங்கியது என்று குறித்துள்ளனர்.  அக்காலத்தில் ராகு கேது என்றும் பாம்புகள் சூரியனையும் சந்திரனையும் விழுங்க முயல்வதாக மக்கள் கருதியிருந்த கருத்தே அதற்குக் காரணமாகும்.  பழங்காலத்தில் மேகம் கடலுக்கு சென்று நீரை முகந்து கொண்டு வானத்தில் ஏறிவந்து மழை பொழிவதாக மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை,

விசும்புஇவர் கல்லாது தாங்குபு புணரி
செழும்பல் குன்றம் நோக்கிப்
பெருங்கலி வானம் ஏர்தரும் பொழுதே (குறுந்தொகை: 287)
         
         என்ற பாடலின்வழி அறியலாம். தமிழர் மரபுப்படி சனிக்கிழமை நீராடுவது வழக்கம், இதன் பொருள் சனிக்கிழமை மட்டும் நீராடுவது அல்ல.  உடல் ஆரோக்கியத்துடன் இருக்க கந்தகத்தன்மை சேர்ந்த தண்ணீரில் குளி என்பது பொருள்படும்.  இதன்படி சனிக்கோளில் (கரிக்கோள்), கந்தகத்தன்மை உள்ளதாக அறிவியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  பலகோடி விண்மீன்கள் விண்வெளியில் உள்ளன. அதன்வழி 12 வட்டங்களாக ராசி என்ற பெயரிட்டு அழைத்தமையை,

தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற் றிருக்கையுள்
உருகெழு வெள்ளிவந்த தேற்றியல் சேர (பரிபாடல் 11,1-4) 
என்ற பாடல் விளக்குகின்றது.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் கோட்பாடுகள்
            
          தமிழிலக்கிய வரலாற்றில் பல அறிவியல் கோட்பாடுகள் பொதிந்துள்ளன. அவற்றில் சங்க கால இலக்கியங்களின் சான்றுகள் உள்ளன.  கரு, முதல் மாதத்தில் கரு 4.மி.மீ உள்ளதாக இருக்கும்.  இது இருபது நாட்களில் வளர்ச்சியுற்று இருதயம் துடிக்கச் செய்யும். இரண்டாவது மாதத்தில் கருவானது கருமுட்டையை விட 40,000 மடங்கு அதிகரிக்கும், என்கிறது கருவியல் நூல், அதனையே,

வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவருண்ணா வருமண்ணினையே (புற:20 14.15)
         என்ற பாடல் விளக்குகின்றது. மேலும், மூன்று மாதத்தில் கரு அசைவு, நான்காம் மாதத்தில் பார்வைப்புலன் வளர்ச்சி அடையும் என்பதை மணிவாசகர்,

“பேரிருள் பிழைத்தும்”
      என்று விளக்குகிறார். இந்தப் படிநிலைகள் பல விஞ்ஞான வளர்ச்சியடைந்த போதிலும் கருவியல் கூறும் படிநிலைகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருக்கின்றது என்பது கருவியலில் உள்ள ஆச்சரியமாகும். மேலும், அறிவியல் மின்னனுக்களுடன் தொடர்புடைய துறையாக உள்ளது எனலாம். மூலக்கூறு என்பது அந்த பொருள்களில் உள்ள அணுக்களைப் பொருத்து அமைந்துள்ளது என்பதனை

தீயினுள் தெறல்நீ பூவினுள் நாற்றம் நீ
கல்லினுள் மணியும்நீ (பரி: 3,63-64)
         
       என்கிறது இப்பாடல். உலகத்தில் அழிவு ஒன்று உண்டு அழிந்து மீண்டும் தோன்றும் என்று பழமை நூல்களும், வேத சாஸ்திரங்களும் கூறுகின்றன.  கிருத்துவ புனித நூலான விவிலியத்தில் உலகம் பல்வேறு மாற்றங்களால் அழிவு நேரிடும் என்று கூறுகின்றது. இயற்கையின் பேரழிவால் உலகம் அழிய வாய்ப்பு இருக்கிறது என்றும் இந்த உலகம் அழிந்து மீண்டும் தோன்றும் முறையினை,

பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்ல(பரி:2, 1-4)
என்று பரிபாடல் கூறுகிறது. மேலும், அறத்துப்பாலில் வான்சிறப்பு எனும் அதிகாரத்தில்,

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்(குறள்-17)         
     என்ற குறட்பா வாயிலாகக்  கடல் நீர் ஆவியாகி மழையாகிப்  பெய்கின்ற நிகழ்வினை மிகத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார், வள்ளுவர். இதுவே இன்று நாம் நம் கல்வி முறையில் பயிலும் வாட்டர் சைக்கிள் (எவாபொரேஷன் ) ஆகும். விஞ்ஞானத்தைக் கூட அறம் வாயிலாக சுட்டி உரைத்தது நம் இலக்கியங்களில் மிகப்பெரிய தலையாயப் பண்பாகும். அறிவியலை வாழ்வியலுடன் இணைத்துக் கூற, தமிழால் மட்டுமே முடியும். கணிதம், மக்களின் வாழ்வோடு ஒட்டியது. கணிதம் இல்லாமல் வாழ்வியல் முறை இல்லை என்றே கூறலாம்.

நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய (பரி:2,13-14)
         
          என்கிறது பரிபாடல். இப்பாடலில்,  கணக்கற்ற பல ஊழிகள் பலகோடி ஆயிரம் காலத்தை குறிக்கின்றது.  இதில் ஆம்பல் என்பது ஆயிரம் கோடி என்ற பேரியல் எண்ணைக் குறிக்கின்றது. வெள்ளம் என்பது கோடி கோடியையும், கமலம் என்பது நூறு ஆயிரம் கோடியையும், பத்மம் என்பது சங்கம் பத்து நூறாயிரம் கோடி, நெய்தல் அல்லது குவளை நூறுகோடி எனவும், பாழ் என்பது பூஜ்யம் என்பது முதல் பல் அடுக்கு ஆம்பலான ஆயிரம் கோடி வரையிலும். ஆதற்கு மேலும் கணிதமுறையில் பின்னல்கள் முறையிலும் தனித் தனி பெயர்களைத் தமிழர்கள் கையாண்டு வந்திருக்கின்றனர் என்பது இதன் மூலம் நாம் அறியமுடிகிறது.

தொகுப்புரை
         
        20-ஆம் நூற்றாண்டை, “அறிவியல் யுகம்’ என்று கூறலாம். அறிவியல் கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கணக்கில் அடங்காதவை. அறிவியல் வளர்ச்சி பெற்று விளங்கும் கருத்துகளுக்கான வித்துக்களைப் புராண இதிகாசங்கள், சங்க இலக்கியம் தொடங்கி ஆரம்பகாலக் கண்ணாடியான இலக்கியத்தில் காணலாம். மேலும், இந்நூற்றாண்டில் ஈடு இணையற்ற கவி பாரதியார் ஆவார். எதிர்காலச் சமுதாயம் அறிவியல் துறையில் என்னென்ன சாதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் தம் கனவினை,

வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்…         
என்று தம் பாடல் வழி உணர்த்துகிறார். இத்தகைய ஆய்வுகளின் வாயிலாக வரும் தலைமுறையினர் தம்முடைய எதிர்காலத்திற்குத் தேவையான அறிவியல் அறிவினையும் அதற்கான தீர்வையும் நம் சான்றோர்கள் முன்கூட்டியே சுட்டிக்காட்டி இருப்பார்கள் என்பதனை தெள்ளத்தெளிவாக அறியமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்
1.wikipedia

2.google

3.தமிழ் அகராதி – தமிழ் அகரமுதலி, சென்னைப் பல்கலைக்கழக அகராதி.

4.தமிழ் இலக்கிய வரலாறு – மு. வரதராசன்

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர். ஆ. பரிமளா
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, கோவை.

 

தலைமுறை இடைவெளி|சிறுகதை|ரா.ஷரஂமிளா

தலைமுறை இடைவெளி - சிறுகதை - ரா.ஷரஂமிளா
     மாலா தனஂ அமஂமாவிடமஂ கேடஂடாளஂ “அமஂமா இனஂனைகஂகு ஸஂகூலஂ லீவு போடவா”. சீதா மகளை அனஂபாகவுமஂ, ஒழுகஂகமாகவுமஂ வளரஂகஂகுமஂ ஒரு தாயஂ. மகளினஂ எணஂண ஒடஂடதஂதைப் புரிநஂதவளாக நடிதஂதாளஂ. “ஸயினஂஸஂ மிஸஂ பரீடஂசைனஂனு சொனஂனாஙஂகௗா? பயமா இருகஂகா, கணஂணா! நானஂ சொலஂலி தரேனஂ”. “சரி போமஂமா” எனஂறு பளஂளி கிளமஂபினாளஂ.
மாலாவிறஂகு தமிழஂ மறஂறுமஂ கணகஂகு பாடஙஂகளஂ மிகவுமஂ பிடிகஂகுமஂ. அறிவியலஂ பாடமஂ பிடிகஂகாது. மாலா, ஒர் உணரஂவு பூரஂவமான பெணஂ. பாடமஂ நடதஂதுமஂ ஆசிரியரைப் பிடிதஂதாலஂ பாடமஂ பிடிகஂகுமஂ. ஆசிரியரைப் பிடிகஂகாவிடஂடாலஂ பாடமஂ பிடிகஂகாது.

       கலஂவி, திருமணமஂ, மறஂறுமஂ உறவுகளஂ தலைமுறை இடைவெளி எனஂற ஒனஂறை வாழஂகஂகை ஏடஂடிலஂ பதிவு செயஂது விடுகினஂறது. மாலா ஒனஂபதாமஂ வகுபஂபு படிகஂகிறாௗஂ. புதிய தலைமுறையைச் சேரஂநஂதவளஂ. பழையக் காலதஂதிலஂ இருநஂதவரஂகளஂ உணஂமையையுமஂ, மனதினஂ ஓடஂடதஂதையுமஂ புரிநஂது வாழஂநஂதாரஂகளஂ. இநஂதக் காலதஂதுக் குழநஂதைகௗஂ மனதை ஆராயஂசஂசி செயஂகிறாரஂகளஂ, உணஂமையைப் புறகஂகனிகஂகிறாரஂகளஂ. மாலா இயறஂகையாகவுமஂ, எளிமையாகவுமஂ வாழஂபவௗஂ. ஏனோ தெரியவிலஂலை ஆடமஂபர பொருடஂகளைக் கடின உழைபஂபை அவளஂ விருமஂபவிலஂலை.

       தமிழஂ ஆசிரியைத் தோழமையுடனுமஂ நகைசஂசுவையுடனுமஂ பேசுவாரஂ. கணகஂகு ஆசிரியையுமஂ நடஂபாகப் பேசுவாரஂ. அறிவியலஂ ஆசிரியை யதாரஂதமானவரஂ. இளமஂ வயது மாணவரஂகளஂ உழைகஂக வேணஂடுமஂ எனஂற கொளஂகை உடையவரஂ.
ஒருநாௗஂ அறிவியலஂ பாடமஂ நடதஂதுமஂ ஆசிரியரஂ மாலா ஆரஂவமஂ இலஂலாமலஂ இருபஂபதை சுடஂடிக்காடஂட நினைதஂது ஒரு கேளஂவியைக் கேடஂகிறாரஂ.
         “இநஂதக் கேளஂவியை எடஂடாமஂ வகுபஂபு மாணவுயிடமஂ கேளஂ. அவளஂ கூறுவதை எனஂனிடமஂ கூறு எனஂகிறாரஂ”.
மாலா எடஂடாமஂ வகுபஂபிலஂ பயிலுமஂ மாணவியிடமஂ விடை கேடஂகிறாரஂ. அறிவியலஂ ஆசிரியரஂ, “உனஂனைவிட வயதிலஂ சிறியவளஂ அறிவிலஂ பெரியவளாக உளஂளாளஂ. நீ எனஂறு வளர போகிறாயஂ” எனஂறு கேடஂகிறாரஂ.
இநஂதச் சமஂபவமஂ மாலாவினஂ மனதிலஂ வெறுபஂபை விதைகஂகிறது.

        சீதா பலமுறை கூறியுளஂளாளஂ, “பாடமஂ கேடஂகுமஂ பொழுது அறிவுபூரஂவமாகச் சிநஂதிகஂக வேணஂடுமஂ. உணரஂவுபூரஂவமாகச் சிநஂதிகஂக கூடாது”. புதிய தலைமுறை புதிய பாதையிலஂ நடபஂபது இயலஂபான மாறஂறமஂ தானே. மாலா தனஂ எணஂணமஂ போல வாழஂபவளஂ. பிடிதஂததைச் செயஂவாளஂ. “எனஂ வாழஂகஂகை, எனஂ ரூலஂஸஂ” எனஂறு ஆஙஂகிலதஂதிலஂ கூறுவாளஂ. ஆனாலஂ ஆசிரியரஂகளிடமஂ ஒழகஂகமான பெணஂணாகக் காடஂடிகஂகொளஂவாளஂ.
அவௗஂ அநஂதரஙஂகமஂ தாயஂகஂகுமஂ தநஂதைகஂகு மடஂடுமே தெரியுமஂ. “படஂடாதானஂ புரியுமஂ”னஂனு ஒரு வசனமஂ சொலஂவாஙஂகளே அதுதானஂ சீதாவிறஂகு ஞாபகமஂ வருமஂ. காலமஂ பதிலஂ சொலஂலுமஂ எனஂறு நமஂபினாளஂ தாயஂ. தாயினஂ கணகஂகு தபஂபாகாதே. அநஂதநாளஂ வநஂதது.
 தமிழஂ ஆசிரியரஂ வனஜாவுமஂ அறிவியலஂ ஆசிரியரஂ கிரிஜாவுமஂ மாணவிகளைப் பறஂறி பேசிகஂ கொணஂடு இருநஂதாரஂகளஂ.

கிரிஜா: எனகஂகு மாலாவை நினைதஂதாலஂ வருதஂதமா இருகஂகு. மறஂற பாடதஂதிலஂ இருகஂகுமஂ ஆரஂவமஂ அவளுகஂகு எனஂ பாடதஂதிலஂ இலஂலை.

வனஜா: விளையாடஂடுப் பருவமஂ. வேகமஂ உளஂள அளவுகஂகு விவேகமஂ இலஂலை. நானஂ அவளுகஂகு அறிவுரை கூறவா மிஸஂ?

கிரிஐா: “எதை கேடஂடாலுமஂ சமாளிபஂபாளஂ. வெளிபஂபடையா பேசினாலஂ, கலஂவியினஂ மகதஂதுவதஂதை அவளுகஂகு புரிய வைகஂகலாமஂ. நீஙஂக டஂரை பணஂனுஙஂக மிஸஂ” எனஂறாரஂ.
தமிழஂ பாடமஂ படிகஂகுமஂ பொழுது ஆசிரியரஂ கேடஂடாரஂ மாலா, உனஂ அமஂமா வீடஂடிலஂ எனஂன வேலை செயஂகிறாரஂ.

மாலா: எனஂ அமஂமா சமையலஂ செயஂவாரஂ. தாதஂதா, பாடஂடி, தமஂபியைப் பாரஂதஂதுகஂ கொளஂவாரஂ. மாலை நேரதஂதிலஂ கணகஂகு பாடமஂ டியூசனஂ எடுபஂபாரஂ. ஏனஂ கேடஂகறீஙஂக மிஸஂ?

வனஜா: நீ அமஂமாவுகஂகு உதவி செயஂவியா?

மாலா: இலஂல மிஸஂ. சமையலஂ செயஂய எனகஂகு பிடிகஂகுமஂ. ஆனா, நேரமஂ இருகஂகாது.

வனஜா: சுடு தணஂணீரஂ வைகஂக தெரியுமா?
மாலா: சிரிசஂசுடஂடே தெரியுமே எனஂறாளஂ.

வனஜா: எபஂபடி சுடு தணஂணீரஂ வைபஂபதுனஂனு எனகஂகு சொலஂலு எனஂறாரஂ.

மாலா: சினஂன பாதஂதரதஂதிலஂ தணஂணீரஂ எடுதஂதுச் சிநஂதாமலஂ அடுபஂபிலஂ வைகஂகனுமஂ. பெரிய பாதஂதிரதஂதிலஂ வசஂசா தூகஂகுறது கஷஂடமஂ.

வனஜா: சரி, அடுபஂபு பறஂற வைகஂக உனஂ தோழி வரனுமா? எனஂறு நகைசஂசுவையாகக் கூறினாரஂ.

மாணவிகளினஂ சிரிபஂபு விணஂணை கிழிதஂதது.

வனஜா டீசஂசரஂ மாலாவிடமஂ கூறினாரஂ, “நாமஂ கணஂகளாலஂ பாரஂதஂதுத் தெரிநஂது கொளஂளுமஂ விஷயஙஂகளை விட சிநஂதிதஂதுப் புரிநஂது கொளஂளுமஂ விஷயமஂ ஆழமானது. நீ உலகை கணஂகளாலஂ புரிநஂது கொளஂகிறாயஂ. சநஂதிதஂதுப் பாரஂ உணஂமையுமஂ, வேறஂறுமைகளுமஂ புரியுமஂ” எனஂறாரஂ.
மாலா மொளனமாகச் சிநஂதிதஂதாளஂ. தமிழஂ ஆசிரியரஂ குறிபஂபிடஂடுப் பேசுவது அவளுகஂகுப் புரிநஂதது.
அடுதஂதநாளஂ தமிழஂ ஆசிரியரஂ, “நானஂ எனஂன சொனஂனேனஂஂனு புரிஞஂசதா? எனஂறு கேடஂடாரஂ.
மாலா தெரிநஂதுமஂ தெரியாதவளஂ போல சொனஂனாளஂ. “நீஙஂக நலஂலா பேசறீஙஂக, மிஸஂ”.

வனஜா: உனகஂகு எநஂத உடை அலஙஂகாரமஂ மிகவுமஂ பிடிகஂகுமஂ.
மாலா: எனகஂகு படஂடுப் பாவாடை ரொமஂப பிடிகஂகுமஂ.

வனஜா: உனஂகிடஂட எவஂவளவு படஂடுப் பாவாடை இருகஂகு.
மாலா: இரணஂடு மிஸஂ. நானஂ அதுல அழகா இருகஂகேனஂனு அமஂமா சொலஂவாஙஂக எனஂறாளஂ பெருமையாயஂ.

வனஜா: படஂடுப் பாவாடை போடுமஂ பொழுது எனஂன நகை போடுவாயஂ.
மாலா: அழகான கலஂ வலையலஂ, ஆரமஂ, ஜிமிகஂகி கமஂமலஂ போடுவேனஂ.

வனஜா: நலஂல ரசனை உளஂள பெணஂ நீ. அநஂத அழகான உடைகஂகு காதிலஂ எதுவுமஂ அணியாமலஂ இருநஂதாலஂ எபஂபடி இருகஂகுமஂ.
மாலா: நலஂலா இருகஂகாது மிஸஂ. உடையுமஂ நகையுமஂ அகஂகா, தஙஂகை மாதிரி.

வனஜா: உடை, நகை இரணஂடுமஂ சேரஂநஂதாலஂ உனஂ அழகு கூடுகிறது. அதுபோல தமிழஂ, கணகஂகு, அறிவியலஂ அனைதஂதிலுமஂ நீ கவனமஂ செலுதஂதினாலஂ நீ சகலகலா வலஂலியாக மாறுவாயஂ.

மாலா: நீஙஂக சரியா சொளலஂறீஙஂக, மிஸஂ.
மாலா: நானஂதானஂ தமிழஂல முதலஂ மதிபஂபெணஂ எடுதஂதிருகஂகேனஂ. அடுதஂத முறையுமஂ கணஂடிபஂபா முதலஂ மாரஂகஂ எடுகஂகறேனஂ. மறஂற பாடதஂதிலுமஂ கவனமஂ செலுதஂதறேனஂ, மிஸஂ.

வனஜா: எனஂ பாடமஂ மடஂடுமஂ அலஂல அனைதஂதுப் பாடதஂதையுமஂ ஆரஂவமுடனஂ படிகஂக வேணஂடுமஂ. நீ சகலகலாவலஂலி ஆக வேணஂடுமஂ, எனஂறாரஂ.
தமிழஂ ஆசிரியரினஂ அறிவுரையுமஂ, அறிவியலஂ ஆசிரியரினஂ அறிவுமஂ மாலாவை மாறஂறியது.

       மாலா பதஂதாமஂ வகுபஂபிலஂ முதலஂ மதிபஂபெணஂ எடுதஂதாரஂ. மாலாவினஂ வெறஂறிகஂகு பினஂனாலஂ தமிழாசிரியரினஂ அறிவுரையுமஂ, அறிவியலாசிரியரினஂ அனஂபுமஂ இருபஂபது மாலாவினஂ தாயஂ சீதாவிறஂகஂகு தெரியுமஂ. சீதா மனதிறஂகுளஂ இறைவனுகஂகுமஂ, ஆசிரியரஂகளுகஂகுமஂ நனஂறி கூறினாளஂ.
ஒவஂவொரு மாணவரஂகளையுமஂ உருவாகஂக ஆசிரியரஂகளஂ தானஂ எதஂதனை பாடுபடுகிறாரஂகளஂ எனஂறு சீதா வியபஂபடைநஂதாளஂ.

சிறுகதையின் ஆசிரியர்
ரா.ஷரஂமிளா,

ஆதமஂபாகஂகமஂ,
செனஂனை.

 

Padinilai Koorugalaga Thalattuppadalgal|M. Chitra Priya

படிநிலைக் கூறுகளாகத் தாலாட்டுப்பாடல்கள்
Abstract
            Lullabies are songs sung by mothers for their children. The aim of this study is to find out whether lullabies are still oral songs in folk songs. Lullabies are related to human emotions. Singing lullabies makes the child forget himself and fall asleep. Lullabies are not only for this time but also for all times, although they have changed slightly. The ideas of this article are that lullabies are always in stages.

படிநிலைக் கூறுகளாகத் தாலாட்டுப்பாடல்கள்
ஆய்வுச்சுருக்கம்
          தாலாட்டுப் பாடல்கள் என்பது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்காகப் பாடும் பாடல்கள். இந்த ஆய்வின் நோக்கம், நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்கள் இன்னும் வாய்மொழிப் பாடல்களாக இருக்கிறதா என்பதைக் கண்டறிவதாகும். தாலாட்டுப் பாடல்கள் மனித உணர்வுகளுடன் தொடர்புடையவை. தாலாட்டுப் பாடல்களைப் பாடுவது குழந்தை தன்னை மறந்து தூங்கச் செய்கிறது. தாலாட்டுப் பாடல்கள் இந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, எக்காலத்திற்கும் சிறிது மாறுப்பட்டாலும் படி நிலைகளாக இருந்து வருகிறது.

குறியீட்டுச் சொற்கள்
: தாலாட்டு, செல்வம், முத்து, படிநிலை, பவளம்

முன்னுரை         
       படிநிலைக் கூறுகளாக தாலாட்டுப்பாடல்கள் தாலாட்டு என்பது குழந்தைகள் தூங்க வைக்கும் போது பாடப்படும் பாட்டு ஆகும். இது குழந்தைகளின் அழுகையை நிறுத்தவும் குழந்தைகளை மகிழ்விக்கப் பாடப்படும் பாட்டுக்கள் ஆகும். தாய்மார்களின் மனதில் இருந்து குழந்தைகளுக்காக பாடப்படும் பாடல் வரிகள் ஆகும். தாலாட்டு பாடலின் மூலம் குழந்தை தன்னை மறந்து தூங்குகிறது.

தாலாட்டுப் பாடல்களின் படிநிலைகள்
         
        தாலாட்டுப் பாடல்கள் இன்ஸ்டாலமும் குழந்தைகளுக்காக நாட்டுப்புறங்களில் பாடப்பட்டு வருகின்றன. இன்றளவும் குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டி அதில் குழந்தையை இட்டு தாலாட்டுப்பாட்டினைக் குழந்தைகளுக்குப் பாடி வருகின்றனர். தாலாட்டுப்பாடல் மனிதனின் உணர்வுகளோடு தாய் மற்றும் சேய் தொடர்பான தொடர்புடையது எனலாம். வாய்மொழி சார்ந்த கூறுகளாக இன்றளவும் தாலாட்டுப் பாடல்கள் இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடல்களின் தன்மை தாய் மற்றும் சேய் எக்காலத்திற்கும் பொருந்தும் உணர்ச்சிப் பாடல்களாக இருந்து வருகின்றது.
தாலாட்டு
         
தால் என்பது நாவை குறிக்கும் நாவினால் குரல் ஓசையை எழுப்புவதன் மூலம் குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டுதல் என்பதால் தாலாட்டு என்று பெயர் பெற்றது. தாலாட்டுத் தொடக்கத்திலும் இறுதியிலும் ராரோ ஆரிரரோ ஆரிரரோ என்று பாடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தாலாட்டுப் பாடுகிற பொழுது முதலில் ராரி ராரி ரா ரராரோ ரார் என்றும் தூரி தூரி ரா ரா தூரி என்றும் தொடங்குவது எச்சக் கூறுகளாக உள்ளது. ரா ரா ரி ரி என்று தொடங்குவதால் தாய்மார்கள் பாட்டை எளிதில் பாட முடிகிறது. ஆனால் அவர்கள் இதற்கென்று பயிற்சி பெறுவதில்லை. இந்தத் தாலாட்டு பாடல்களில் குழந்தைகளுக்குத் தேவையான பால் கறக்கும் மாட்டையும், குழந்தை விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்களையும் வாங்கி வந்து கொடுக்கும் மாமனை புகழ்ந்தும் பாடி வருகின்றனர்.

தாலாட்டுப்பாடல்கள்
கண்ணா சிறு சலங்கை
எனக்கு காலு அழுந்ததுன்னு
தங்க சிலுசலங்க
இந்த தங்கம் ஏன் அழுகுது 
தார உழுந்து போகும்னு
கழட்டி வைப்பான்
உன்மாமா உன்மாமா
என் தங்கம் நடக்கும் இடத்தில்
தாமரை வெப்பா உன் மாமா..!
குழந்தைகளுக்கான தாலாட்டுப் பாடல்கள்
         
     குழந்தைக்குப் பசி ஏற்பட்டுப் பசிக்கு அழுதாலும் தூக்கத்திற்காக அழுதாலும் தாய்மார்கள் குழந்தையைத் தொட்டிலில் இட்டு தாலாட்டுகின்றனர். தாலாட்டுப் பாடுகின்ற வழக்கம் தமிழகத்தில் கிராமங்கள் மட்டுமின்றி நகரங்கள் என வேறுபாடு இன்றி இவ்வழக்கம் உள்ளது.  தாலாட்டுப் பாடல்களின் செல்வம், முத்து, பவளம் போன்ற வளம் தரும் சொற்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு வளம் தரும் சொற்களைப் பயன்படுத்துவதால் குழந்தை வளம் பெற்று வளரும் என்ற நம்பிக்கை எச்சக்கூறுகளாக இன்றளவும் தாலாட்டு பாடல்களில் இடம்பெற்று வருகின்றது. குழந்தை நன்றாக வளர வேண்டும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தால் இப்பாடல்கள் இன்றளவும் பாடப்பட்டு வருகிறது.

முடிவுரை
      குழந்தைகளுக்காகத் தாலாட்டுப்பாடும் பழக்கங்கள் பழங்காலங்கள் தொட்டு இன்றளவும் இருந்து வருகின்றன. மேலும் தாலாட்டுப்பாடல்கள் எக்காலத்திற்கும் படிநிலை கூறுகளாக இருந்து வருவது மிகவும் போற்றுத்தக்கதாகும்
துணைநூற்பட்டியல்
1. கள ஆய்வு

2. கோவைக் கிழார், எங்கள் நாட்டுப்புறம்.

3. சண்முகசுந்தரம் க, தமிழக நாட்டுப்புற பாடல்கள்

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு.சித்ரப்ரியா
உதவிப் பேராசிரியர்
கோபி கலை அறிவியல் கல்லூரி
கோபிசெட்டிபாளையம் – 638453.

 

Ilakkiyangalil Naattar Valakkatriyal|Dr.A.Janarthali Begam

இலக்கியங்களில் நாட்டார் வழக்காற்றியல் - முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்
Abstract
               
          The lore of the countryman is today known as ‘Folklore’. This article is designed to show that oral story-telling and story-songs expressing the natural feelings and celebrations of the people living in the rural villages while man lived harmonious with music, the expression of the history of the ancestors through the play and dance, the worship of the deities in the ancestral way and the celebration by offering what is necessary for those gods, the riddle proverb of the village and so on spread out as unwritten poetries in folklore.
Keywords: Verbal, Proverb, Riddle, Song, Dance


இலக்கியங்களில் நாட்டார் வழக்காற்றியல்

ஆய்வுச்சுருக்கம்
         
       நாட்டார் வழக்காற்றியல் இன்று நாட்டுப்புறவியல் என்று அழைக்கப்படுகிறது. இசைக்கு மனிதன் இசைந்து வாழ்ந்த காலம் நாட்டுப்புற கிராமங்களில் வாழும் மக்களின் இயற்கை உணர்வுகளையும் கொண்டாட்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக வாய்மொழியாக கதை சொல்லல் கதைப் பாடல்கள், முன்னோர் வரலாற்றை நாடகம் மற்றும் கூத்தின் வழி வெளிப்படுத்துதல், முன்னோர் வழியில் தெய்வ வழிபாடு செய்து அத்தெய்வத்திற்கு தேவையானவற்றைப் படைத்து மகிழ்தல், விடுகதை, பழமொழி போன்றவை ஏட்டில் எழுதாக் கவிகளாக வலம் வந்தது நாட்டுப்புறவியலில் தான் என்பதை எடுத்துக் கூறும் வகையில் இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

கலைச்சொற்கள்
         
வாய்மொழி, பழமொழி, விடுகதை, பாட்டு, ஆடல்.

முன்னுரை
         
        மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைப்பது இலக்கியங்களாகும். அத்தகைய இலக்கியங்களில் ஒன்றுதான் நாட்டுப்புறவியல் இவ்விலக்கியங்கள் எண்ணங்களை எவ்வகை நாகரீகமும் கலவாது இயற்கையான வழக்குச் சொற்களாகவே இடம்பெறுகின்றது. ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின், ஒரு மொழியின் பண்பாட்டுக் கூறுகள் நாட்டுப்புற இலக்கியத்தில் குறிக்கப்படுவதுபோல் வேறு எந்த இலக்கியத்திலும் குறிப்பிடுவதில்லை என்பதே உண்மை. உழைப்புக்கிடையே உவகை பெறவும் களைப்புக்கிடையே களிப்பை அடையவும், சோர்வை அகற்றிச் சுறுசுறுப்புறவும் இன்ப துன்பங்களை வெளிப்படுத்தும் விதமாக ஆடல்களாலும் பாடல்களாலும் நாட்டு மக்களின் மன மகிழ்ச்சிக்காக ஆக்கப்பெற்றவை நாட்டுப்புற இலக்கியங்கள் ஆகும்.

தொல்காப்பியமும் நாட்டுப்புறவியலும்
         
      பழமையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் நாட்டுப்புறவியல் கூறுகளைப் பற்றி தொல்காப்பியர் கூறியுள்ளார். அகத்தியம் முதலாவதாகத் தோன்றிய நூல் எனினும் நமக்கு முழுமையாகக் கிடைத்த நூல் தொல்காப்பியமே. மரபு வழித்தோன்றி வாய்மொழி இலக்கியம் செழித்து வளர அடிப்படையாக அமைந்தது தொல்காப்பியமாகும்,
          இலக்கண நூலாயினும் இது இலக்கியச் சிறப்புகளையும் உள்ளடக்கியது. செய்யுளியலில் யாப்பின் வகைகளைக் கூறவந்த தொல்காப்பியர்.
         
“பாட்டு உரைநூலே வாய்மொழி பிசியே       
அங்கதம் முதுசொலோடவ் வேழ்நிலத்தும்       
வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்       
நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும்       
யாப்பின் வழியது என்மனார் புலவர்”(தொல்-பொருள்-செய்யுளியல். 79)
     என்று எடுத்துரைக்கிறார். பாட்டு, உரைநூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வழக்கில் இருந்தமையை அறியமுடிகின்றது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பண்ணத்தி இன்றைய நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கிறது. இசையுடன் கற்பனை கலந்து வாய்மொழியாக வழங்குவதைப் பண்ணத்தி எனக் குறிக்கப்படுகிறது. பண்ணத்தியை பிசியோடு ஒப்பிட்டு கூறுகிறார். இம்மரபை பின்பற்றியே சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட பாணர், பாடினியர், விறலியர், போன்றோர் வளர்ந்து வந்துள்ளது தெளிவாகின்றது. நாட்டுப்புற இலக்கியம் குறித்து, “நாட்டுப்புற இலக்கியம் ஆழங்காண இயலாத ஆழி போன்றது. இன்னும் எல்லா நாட்டுப்புறக்கலைகளையும் இலக்கியங்களையும் அறிந்துவிட்டோம் என்ற நிலை இல்லை. சிற்றூரில் விளையாடும் சிறுவர்களிடையே பயிலும் சில பாடல்கள் பலரறியாதவாறு பாடப்பெற்றும் வரலாம். நாட்டுப்புற இலக்கியத்தினைப் பாடல், ஆடல், கதைகள், கதைப்பாடல்கள், ஆடல்பாடல்கள், கூத்துகள், விடுகதைகள், பழமொழிகள் என்ற பிரிவுகளில் பெரும்பான்மையானவற்றை அடக்கிவிடலாம். இப்பிரிவுகள் அனைத்தும் ஆடல், பாடல் என்ற இருவகையுள் அடங்கும்”(அ.ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், பக்.12)
         என்று நாட்டுப்புறவியலுக்கு ஆறுமுகம் விளக்கமளிக்கின்றார்.
“பண்ணத்தி என்ற சொல்லுக்குப் பண்ணை விரும்புவது என்று பொருள். இசைப்பாட்டில் வரையறையான பொருள் அமைந்திருக்கும். இப்பாட்டிலும் இன்னோசை இருப்பினும் இசைப்பாட்டிற்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் எண்ணாமல் பண்ணத்தி என்றார்”(கி.வா.ஜகந்நாதன், மலையருவி, ப.9)
என்று கூறுகிறார். பண்ணத்தியை,
       
“பாட்டிடைக் கலந்த பொருளவாகியது”(தொல். பொருள். செய்யுளியல். 180)
         
        பாட்டின் இயலது, பிசியொடு மானும், அடி நிமிர்கிளவி ஈராறு ஆகும், அடியிகந்து வரினும் கடிவரையின்றே என ஐவகைத் தன்மைகளைக் குறிப்பிடுகின்றார். பேராசிரியர் தனது உரையில் மெய் வழக்கில்லாத புறவழக்குடையது என்றும் எழுதும் பயிற்சி இல்லாத புறவுறுப்புப் பொருட்களை உடையது என்றும் பண்ணத்திக்கு விளக்கம் சொல்வார். கற்பனை நிறைந்தது என்றும் வாய்மொழியாக வருவது என்றும் பொருள் கொள்ளலாம்.
         
பாட்டுமடை                    – கூடத்தினிடையில் வருவது
         
வஞ்சிப்பாட்டு                 – ஓடப்பாடல்
         
மோதிரப்பாட்டு            – நாடக நூல் வகை
         
கடகண்டு                       – பழைய நாடக நூல்

      ஆகிய நான்குமாம். ‘பண்ணத்தி என்றால் சிற்றிசையும் பேரிசையும் முதலாக இசைத்தமிழில் ஓதப்படுவன’ என்கிறார் இளம்பூரணர். மேலும்,
        “தொல்காப்பியர் கதைகளைப் பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுகின்றார். பேராசிரியர் இதற்கு உரை எழுதும் போது, ‘யானையும் குருவியும் தம்முள் நட்பு கொண்டு இன்ன இடத்திற்குப் போய், இன்னவாறு செய்தன என்று ஒருவன் புனைந்துரைக்கும் வகையெல்லாம் இதன்பால் அடங்கின’ என்று விளக்குகின்றார்”(டாக்டர் சு.சண்முக சுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, பக்.70)
  இதனால் தொல்காப்பியர் காலத்தில் கதைகள் வழங்கப்பட்டன என அறியமுடிகின்றது. சங்கப் பாடல்களில் செறிந்துள்ள குன்றப்பாடல், குரவைப்பாடல், வேலன் பாடல், வள்ளைப் பாடல், சடங்குப்பாடல், துணங்கைப்பாடல், உழவர் பாடல், நீர் இறைப்போர் பாடல், ஊசல் பாடல் போன்றவை நாட்டுப்புறப் பாடல்களாகும். காப்பியங்களில் வரிப்பாடல்கள், குரவைப் பாடல்கள், உழவர் பாடல்கள், மன வாழ்த்துப் பாடல்கள், பந்தாட்டப் பாடல், ஊசல் பாடல், ஓலுறுத்தல் என்னும் தாலாட்டுப் பாடல், வள்ளைப் பாடல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
          கம்பரின் ஏற்றப் பாடல்களை வியந்து கூறுவர். மணிக்கவாசகர் ஊசல், சுண்ணம், சாழல், அம்மானை போன்ற நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவிப் பாடியுள்ளார். இவ்வாறு பாரதி காலம் வரை பல புலவர்கள் நாட்டுப்புறப் பாடல்களைச் சுவைத்தும், தொகுத்தும் வைத்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறவியல்
         
             சங்க இலக்கியங்களில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐவகை நிலங்களிலும் வாழும் மக்கள் அந்தந்த நிலங்களுக்கு ஏற்றவகையில் பாடியும் ஆடியும் இன்புறும் காட்சிகள் இடம்பெறுகின்றன. ஆடலுடன் பாடிய பாடல்களும் கூறப்பட்டுள்ளன. நாட்டுப்புறப் பாடல்களின் செல்வாக்கினைப் பாரி மகளிரின் ‘அற்றைத் திங்கள்’ பாடலிலும் மாண்ட மன்னனுக்காகப் பாடும் ‘முல்லையும் பூத்தியோ’ பாடல் ஒப்பாரியின் சாயலை உடையன. நாட்டுப்புறப் பாடல்களில் ராசாத்தி, தங்கரத்தினமே என்ற சொற்கள் அடிக்கடி மீண்டும் வருவது போன்று ஐங்குறுநூற்றுப் பாடல்களில் வேழம், எருமை, கள்வன் போன்ற சொற்கள் மீண்டும் வருகின்றன.
       
“பறத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
பறச்சி கூடி நிற்கையிலே       
இடைத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
இடைச்சி கூடி நிற்கையிலே       
வலைத்தெரு வீதியிலே – கண்ணே அங்கே               
வலைச்சி கூடி நிற்கையிலே”(கி.வா.ஜகந்நாதன். மலையருவி, 223)
          என்ற நாட்டுப்புறப் பாடலில் மூன்றடுக்கு வருவது போன்று கலித்தொகை சங்க இலக்கியமானக் படலிலும் இடம்பெற்றுள்ளன. உடன்போக்கு போன தன் மகளைத் தேடி செல்கிறாள் செவிலி பாலை நிலத்தின் தன்மையைக் கூறி உவமையுடன் கூடிய இத்தகைய பாடலில் நாட்டுகப்புறக் கூறுகள் இடம்பெறுவதை அறிந்துகொள்ள முடிகின்றது.
       
“பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை       
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதா மென்செய்யும்       
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே;       
சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை       
நீருளே பிறப்பினும் நீர்க்கவைதா மென்செய்யும்;       
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே       
ஏழ்புண ரின்னிசை முரல்பவர்க் கல்லதை       
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவைதா மென்செய்யும்,       
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே”(கலித்தொகை, பாலைக்கவி. 9)
     நும்மகள் நுமக்குமாங் கனையளே என்று மும்முறை திரும்ப வருகின்ற காரணத்தால் இங்கு நாட்டுப்புற வடிவம் இடம்பெற்றுள்ளதை உணரமுடிகிறது.

காப்பியங்களில் நாட்டுபுறவியல்
         
      காப்பியங்களிலும் நாட்டுபுற இலக்கியக் கூறுகள் செறிந்து காணப்படுகின்றன. ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், கம்பராமாயணம், மகாபாரதம், புராணம் போன்றவற்றில் நாட்டுப்புறவியலின் செல்வாக்கினைக் காணமுடிகின்றது.
          சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவையானது. ‘கோவா மலையாரம்’ என்றும் குன்றக் குரவையானது, ‘எற்றொன்றும் காணேம் புலத்தல்’ என்று தொடங்குகின்றன.
       
“எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர் மலைக்       
கற்றீண்டி வந்தப் புதுப்புனல்       
கற்றீண்டி வந்தப் புதுப்புனல் மற்றையார்       
உற்றாடின் நோம் தோழி நெஞ்சன்றே”           (சிலப்பதிகாரம், குன்றக் குரவை. 24:3)
       என்று குன்றக்குரவையில் இரண்டு மற்றும் மூன்றாவது அடியில் கற்றீண்டி வந்தப் புதுப்புனல் திரும்ப வருகின்றது. வரியும் குரவையும் பாடல்களாக மட்டுமல்ல செய்திகளாகவும் பல இடங்களில் காண முடிகிறது. மணிமேகலை மணிபல்லவத்தில் இருக்கும் போது தந்தையின் நினைவால் துயருறுகின்றாள்.
         
“கோற்றொடு மாதரொடு வேற்று நாடடைந்து       
வைவாழ் உழன்ற மணிப்பூண் அகலத்து ஐயாவே”(மணிமேகலை. 41-43)
என்று பாடுவது ஒப்பாரிச் சுவையை உணர்த்துவதாகும்.
       
“மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்       
ஆடிய குரவை இஃதாமென நோக்கியும்”(மணிமேகலை.19: 65-66)
என்ற குரவைப் பாடல் வழி அறியமுடிகிறது.
விசயைக்குச் சுடுகாட்டில் பிள்ளை பிறக்கிறது. அதே நேரத்தில் கணவனின் இறப்பிற்கு அறிகுறியான ஓசை விண்ணில் எழுகின்றது. இச்சூழலில்,
       
“இவ்வாறாகி பிறப்பதோ இதுவோ மன்னர்க்       
கியல் வேந்தே”(சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம். பா.309)
என்று புலம்புவதன் மூலம் இதில் தாலாட்டு ஒப்பாரி இரண்டும் நிறைந்திருப்பதைக் காணமுடிகிறது. பெருங்கதையில் ஊசலாடிப் பாடும் பாடலை,
       
“வேங்கையொடு தொகுத்த விளையாட் டூசற்       
றூங்குபு மறலு குழைச்சிறு சிலதியல்       
பாடற் பாணியொ டளைஇ”(கம்பராமாயணம், உஞ்ஞைகாண்டம் மாலை. 23-25)
என்று குறிப்பிடுகிறது. வள்ளைப் பாட்டு, அம்மானை, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி, பந்து விளையாட்டு ஆகியவை கூறப்படுகிறது. இராமாயணம் நாட்டுப்புற இலக்கியக் கூறுகளை மூலமாகக் கொண்டது. ‘மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே’ என்ற ஏற்றப் பாடல் சிறப்பு வாய்ந்தது.
       
“கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலிற்       
கன்றுறக்குங் குரவை”(கம்பராமாயணம், பாலகாண்டம். 65)
         
    காப்பிய இலக்கியங்களில் காணப்படுகிறது. இதேபோன்று பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், இக்கால இலக்கியங்கள் என நாட்டுப்புறவியலின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகின்றன.

பழமொழி
         
          நாட்டுப்புற இலக்கியத்தில் பழமொழி ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பேச்சு வழக்கில் வாழ்க்கையின் சாராம்சத்தை எடுத்துக் கூறவும், வாழ்க்கையின் அர்தத்தையும் தத்துவத்தையும் அதனுடன் உண்மையான எதார்த்தங்களைத் தெரிந்து கொள்ளவும் பழமொழி பயன்படுகிறது.
    மக்களின் அனுபவப் பெருமைகளின் சுருக்க வடிவமே பழமொழி. சமுதாயத்தின் தோற்றக் காலத்திலிருந்து தொடர்ந்து வருவது. ஏட்டிலக்கியத்திலும் எடுத்தாளப் பெறுவது, நுட்பம், சுருக்கம், அழுத்தம். எளிமை ஆகிய பண்புகளை உடையது. தொல்காப்பியம் பழமொழியை ‘முதுமொழி’ என்கிறது. பழஞ்சொல், முதுசொல், வசனம், சொலவு, சொலவடை போன்ற சொற்கள் பழமொழியைக் குறிக்கின்றன. ‘பல்லோர் கூறிய பழமொழி’, ‘தொன்றுபடு பழமொழி’ எனப் பழமொழிகளைப் பற்றி அகநானூறு கூறுகின்றது. பின்னர் தோன்றிய இலக்கியங்களிலும் பழமொழியின் வழக்கு காணப்படுகிறது. பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான பழமொழி நானூறு பழமொழிகளைத் தொகுத்துத்தரும் நூலாக விளங்குகிறது. தண்டலையார் சதகம் என்னும் சதகநூல் பழமொழியின் களஞ்சியமாக விளங்குகிறது.
      பழமொழியைப் பற்றி பல்வேறு அயலக அறிஞர்கள் தத்தம் கருத்துக்களை தங்களது ஆய்வு நூல்களின் வழி வெளியிட்டுள்ளனர். பழமொழியானது, பழமையான நம்பிக்கைகளையும் வரலாற்றினையும் பண்பாட்டினையும் மனித உணர்வுகளையும் காட்டுபவையாக இருக்கின்றன. பழமொழிகள் சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக் கூறுகளையும் விளக்கும் சான்றாகத் திகழ்கின்றன.
       
“பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த       
வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ்”       
“பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை       
ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கி கூறுவது ஆகும்.       
அப்பழமொழி முழுமையாக இல்லாவிடினும் அதை       
விளக்கிக் கூறும்போது முழுக்கருத்தும் வெளிப்படும்என்கிறார் துர்கா பகவத்” 
“பழமொழியானது எளிதில் கவனிக்கக்கூடிய, சேகரிக்கக்கூடிய       
தொன்மை வாய்ந்த கருத்தாகும். இருப்பினும் எளிதில்       
புரிந்து கொள்ள கடினமானது என்கிறார் ரிச்சார்டு டார்சன்”
                                                (டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.103)
            என்று பழமொழிகள் பற்றிய அறிஞர்கள் கருத்தினை அறிந்து கொள்ள முடிகின்றது.
 இறைமை சார்ந்த பழமொழிகள், இல்லறம் சார்ந்த பழமொழிகள், திருமணம் பற்றிய பழமொழிகள், உறவு முறைப் பழமொழிகள், பெண்மை நிலை பற்றிய பழமொழிகள், உழவியல் பழமொழிகள், மருத்துவப் பழமொழிகள், அறிவுரைப் பழமொழிகள், நம்பிக்கைப் பழமொழிகள், அறிவியல் பழமொழிகள், காலப் பழமொழிகள், தத்துவப் பழமொழிகள், பொருளியல் பழமொழிகள், சாதிப் பழமொழிகள், நகைச்சுவைப் பழமொழிகள், உளவியல் சார்ந்த பழமொழிகள், வரலாற்றுப் பழமொழிகள் என்று பழமொழிகள் பல்வேறு வகைப்படும். அவற்றில் ஒரு சில பழமொழிகளைப் பின்வருமாறு காணலாம்.
       
“அவனன்றி ஓரணுவும் அசையாது       
இல்லறம் பெரிது, துறவறம் சிறிது       
பெண்ணுக்குப் பெண்தான் சீதனம்       
தோட்டி போல் உழைத்துத்               
துரைபோல் சாப்பிட வேண்டும்       
நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால்               
கிடைக்கு இரண்டாடு கேட்கும்       
காடுகாத்தவனும் கச்சேரி காத்தவனும்               
பலனடைவான்”
     (அ. ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், பக்.143)
      என்று குறிப்பிடுகிறது. தத்துவத்துடன் கூடிய நகைச்சுவை மிகுந்ததாக பழமொழிகள் விளங்குகின்றன. ஒருவர் கூற்றுக்குச் சான்றாகத் திகழ்வது ‘பழமொழி’ என்று பொருள் தரும். பழமொழி என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்தில் இல்லை. பழமொழிக்கு விளக்கம் கூறுகையில் தொல்காப்பியர்.
       
“நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்       
மென்மை என்றிவை விளங்கத் தோன்றிக்       
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்       
ஏது நுதலிய முதுமொழி”(தொல். பொருள், செய்யுளியல். 177)
    என்று குறிப்பிடுகிறார். கருதிய பொருளை விளக்கும் வகையில் நுண்மை, சுருக்கம், தெளிவு, மென்மை ஆகிய பண்புகளுடன் பழமொழி விளங்கும் என்பது இதன் பொருளாகும். சங்க இலக்கியங்களிலும் பழமொழிகள் சொல்லாட்சி மிகுந்து காணப்படுகிறது. பழமொழியை தொன்றுபடு பழமொழி என்று அகநானூறு குறிப்பிடுகிறது.
         
“நன்று செய் மருங்கில் தீது இல் என்னும்       
தொன்றுபடு பழமொழி இன்று       
பொய்த்தன்று கொல்?”(அகநானூறு. 101:2-4)
நன்மை செய்தால் தீமை வராது என்னும் பழமொழி உண்மையாய் நிகழ்வதை என் வாழ்வில் கண்டுகொண்டேன் என்று தலைவி தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
    பதிணென் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான பழமொழி நானூறு வாழ்க்கைக்குத் தேவையானவற்றை விளக்கும் வகையில் அமைந்த நூலாகும். உறவினர் இல்லா ஊரும் ஒரு காடே என்பதை உணர்த்தும் பழமொழி,
       
“கல்வியால் அய கழிநுட்பம் கல்லர்முன்       
சொல்லிய நல்லவும் தீயவாம் – எல்லாம்       
இவர் வரைநாட! தமரை இல்லார்க்கு       
நகரமும் காடுபோன் றாங்கு”(பழமொழி நானூறு. 15)
         
பல நூல்களைக் கற்றறிந்து பெற்ற பயனால் அறிந்த பல நுணுக்கமான செய்திகளையும், கல்வி அறிவு இல்லாதவர்கள் முன்னே சொன்னால் அவையாவும் பொருளற்றவையாகத் தீய விளைவுகளையே உண்டாக்கும். எல்லாப் பொருள்களும் செறிந்து, சிறந்து விளங்குகின்ற மலைநாட்டு மன்னவனாயினும் தமரை – அதாவது சுற்றத்தார்கள் எவரையும் பெற்றிராத ஒரு நகரில் வாழ்பவனுக்கு அந்நகரமும் காடு போலவே இருக்கும். சுற்றத்தார் இல்லாத ஒருவன் தனிமைப்பட்டு துன்பப்படுவான் என்பதை பழமொழி நானூறு இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான ஒன்றினை அன்றே உணர்த்தியது சிறப்பிற்குரியதாகும்.

விடுகதை
         
தொல்காப்பியம் குறிப்பிடும் பிசி என்பது விடுகதை ஆகும். விடுவிக்கப்பட வேண்டிய புதிர்கள் விடுகதை. இவற்றுக்குப் புதிர், அழிப்பின் கதை, வெடி, நெடி என்ற வேறு பெயர்களும் உண்டு. தொல்காப்பியம்,
       
“ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்       
தோன்றுவது கிளந்த துணிவினானும்       
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”(தொல். பொருள், செய்யுளியல். 169)
         
இரு பொருள்களுக்கு உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருகின்ற உவமைப் பொருளால் கூறுதல், உள்ளத்தில் தோன்றுகின்ற ஒன்றைக் கூற அதனால் மற்றொன்று தோன்றும் துணிவுடைய சொல்லால் கூறுதல் என்னும் இரண்டு வகையால் அமையும் என்கிறார்.
       
“நீராடான் பார்ப்பான் நிறம்செய்யான் நீராடில்       
ஊரொடு நீரில்காக் கை”(ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம். 330)
என்பது தோன்றுவது கிளந்த துணிவினான் நெருப்பைக் குறித்தது எனப் பிசி வகை இரண்டிற்கும் சான்று காட்டி விளக்குகிறார். பிசி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாகத் தங்களது பொழுதுபோக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
       
“பொட்டுப்போல இலை இருக்கும், பொரிபோல் பூப்பூக்கும்       
தின்னக் காய் கொடுக்கும் தின்னாப் பழம் பழுக்கும்”
                                   (ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம். 330)
     என்பது ஒப்பொடு புணர்ந்த உவமமாய் முருங்கை மரத்தைக் குறித்தது. சங்கப் புலவர்கள் விடுகதைப் பண்புடன் பல பாடல்களை இயற்றியுள்ளனர். குறுந்தொகைப் பாடலொன்றில், தலைவன் பரத்தையோடு வாழ்ந்து தன் தவறை உணர்ந்து மீண்டும் தலைவியுடன் வாழ நினைக்கிறான். இதனை,
       
“மலையிடை இட்ட நாட்டரும் அல்லர்       
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்”(குறுந்தொகை. 203: 1-2)
தலைவன் இருக்கும் ஊருக்கும் நான் இருக்கும் இடத்திற்கும் இடையே மலைகள் ஏதும் இல்லை. அவரிருக்குமிடத்தில் மரங்கள் நிறைந்த காடுகள் இருப்பதால் காணமுடியாத ஊராரும் அல்லர் என்று தன் கணவன் அருகில் இருந்தும் காண வர இயலாததை தலைவி எடுத்துரைக்கின்றாள். மேலும்,
        “ஐதேய்ந்தன்று பிறையுமன்று       
மைதீர்ந்தன்று மதியுமன்று       
வேயமன்றன்னு மலையுமன்று       
பூவமன்றன்று சுனையுமன்று       
மெல்ல இயலும்இ மயிலுமன்று       
சொல்லத் தளரும் கிளியுமன்று”(கலித்தொகை. 55:9-14)
சங்க இலக்கிய காலகட்டங்களில் வழங்கப்பட்டவையாகும். தலைவியை நிலவு, மலை, மூங்கில் என்றெல்லாம் கூறி அவளற்றை வி நீ சிறந்தவள் என்று தலைவியின் அழகு நலன்களைப் புகழ்வதில் அழகிய நாட்டுப்புறக்கூறுகள் இடம்பெற்றுள்ளதை உணர முடிகிறது.

நாப்புறப் பாடல்களும், கதைகளும்
         
      நாட்டுப்புறப் பாடல்களில் இரண்டு வகையான உத்திகளைப் பின்பற்றுகின்றனர். ஒன்று நீண்ட பாடல்களை உருவாக்குதல் சூழலுக்கேற்பப் பாடலை மாற்றல். நாட்டுப்புறப் பாடலானது தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரை பல நிகழ்வுகளில் பாடப்படுகின்றன.
          காற்றிலே மிதந்த கவிதை நாட்டுப்புறப் பாடல்களின் முதல் தொகுப்பு நூலாகும்.
        “ஆரியக் கூத்தர் கழையிற் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடினர். அப்பொழுது பறை கொட்டப்பட்டது. தெருவில் ஆடவர்கள் மகளிரொடு கலந்து குரவைக் கூத்தாடினர். அப்பொழுது தொண்டகப்பறை கொட்டப்பட்டது”(ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், பக். 21)
நாட்டுப்புறப் பாடல் வடிவங்கள் குறிக்கப்படுகின்றன. ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பாடப்படுவதாகும். நாட்டுப்புறப் பாடல்களில் பாடப்படும் சூழலின் தேவையைக் கருதி வேண்டுமளவு அடுக்கிப் பாடப்படும். தாலாட்டின் தொடக்கமான ‘ஆராரோ’ போன்ற ஒலிக்குறிப்பு வாய்ப்பாட்டை முதலில் இட்டு, குழந்தையை விளிக்கும் ‘கண்ணே’ போன்ற சொற்களை ஆங்காங்கே கூறுவதன் வாயிலாகக் கதைப் பாடல்களுக்குத் தாலாட்டு வடிவம் கிடைக்கிறது.
          இதே போன்று சரோசா அவர்கள் பாடிய கும்மிப்பாடல் ஒன்றில்,
         
“கூடையிலே கல்பொறுக்கி       
கூடையிலே கல்பொறுக்கி       
கூடையிலே கல்பொறுக்கி       
கோவிரங்கள் உண்டுபண்ணி       
கோவிரத்தின் உள்ளாலே       
கோவிரத்தின் உள்ளாலே       
கோவிரத்தின் உள்ளாலே       
குயிலுவந்து முட்டையிடும்”(ஆறு. இராமநாதன், தமிழர் கலை இலக்கிய மரபுகள், பக்.183)
         
நாட்டுப்புறப் பாடல்களை ஒருவர் பாடுவதைப் போலவே மற்றவர் பாடுவது கிடையாது. ஒருவரே ஒரு பாடலை மறுமுறை பாடும்போது மாற்றம் ஏற்படுகின்றது.
       “தமிழ் மனத்தின் ஆதி நிலையில் தொன்மங்களுக்கான அறிதிறன் கூறுகள் பல்வேறு தளங்களில் விரிவு பெற்றன. பலதார மணத்திற்குப் பாரதக் கதை. ஒருதார மனத்திற்கு இராமகதை. திருமாலின் பத்து அவதாரங்களும் பூவுலகின் பத்துத் தனித்தனியான சூழல்களுக்குத் தகவமையும் படிமலர்ச்சி நிலையாகும். கதைகள் அமைந்து காணப்படுகிறது”(பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல், பக். 194)
          பல்வேறு கதைப்பாடல்கள் கூறப்பட்டுள்ளன. ஆதி மனிதன் காட்டில் வேட்டையாடிச் சென்று திரும்பியவுடன் தன் அனுபவங்களை மற்றவர்களுக்குச் சொன்னதிலேயே கதையின் தொடக்கத்தைக் காணமுடிகிறது. தொல்காப்பியர் கதைகளைப் பொருளொடு புணராப் பொய்மொழி என்று குறிப்பிடுகின்றார். கதா சிந்தாமணி, கதாமஞ்சரி, விநோதரச மஞ்சரி, திராவிட மத்திய காலக் கதைகள், தக்காண பூர்வக் கதைகள், பூலோக விநோதக் கதைகள் போன்ற கதைகள் உருவாயின.

முடிவுரை
         
     நாட்டுப்புற இலக்கியம் மனிதன் வாய்மொழி தொடங்கிய காலம் முதலே தோன்றியது. வாய்மொழி தொடங்கி தங்களது உணர்வுகளின் வெளிப்பாடாகவே நாட்டுபுற இலக்கியம் இருந்து வந்தமையை அறிய முடிகிறது. பழமொழி, விடுகதையின் வாயிலாக வாழ்க்கையின் தத்துவங்களையும், எதிர்கால வாழ்வின் உண்மை நிகழ்வுகளையும் அறிகிறோம். புராணங்களையும் இதிகாசங்களையும் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பும் கதைப் பாடல்களின் வழி அறிந்து கொள்ள முடிகிறது. ஆடல், பாடல் என்ற பொழுதுபோக்குகளும் நிறைந்து காணப்படுகின்றன. இத்தகைய நாட்டார் வழக்காற்றியலை போற்றிப் பாதுகாத்திடல் நம் கடமையாகும்.

துணை நூற்பட்டியல்
[1] அ. ஆறுமுகம், நாட்டுப்புற இலக்கியமும் பண்பாடும், தேன்தமிழ்ப் பதிப்பகம், 85, சுப்பிரமணியம் பிள்ளைத்தெரு, சேலம்-1, முதற்பதிப்பு செப்டம்பர், 1984

[2] அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும், உ.வே.சா. பதிப்பகம், சென்னை, ஏழாம் பதிப்பு, 1960

[3] அ.மா. பரிமணம், கு.வெ. பாலசுப்பிரமணியன், கலித்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-98, 2014

[4] உ.வே. சாமிநாதைய்யர், குறுந்தொகை, கபீர் அச்சுக்கூடம், சென்னை, முதற்பதிப்பு, 1937

[5] ஆர்.ஆளவந்தார், தமிழர் தோற்கருவிகள், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், அடையாறு, சென்னை – 20, முதற்பதிப்பு டிசம்பர், 1981

[6] ஆறு. இராமநாதன், தமிழர் கலை இலக்கிய மரபுகள், மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 1, முதல் பதிப்பு, டிசம்பர், 2007

[7] கி.வா.ஜகந்நாதன், மலையருவி, ப.9 சரசுவதி நூலகம், தஞ்சை – 1958 முதற்பதிப்பு

[8] ச.திருஞானசம்பந்தம், தொல்காப்பியம் பொருளதிகாரம், கதிர் பதிப்பகம், தெற்குவீதி, திருவையாறு-24, முதற்பதிப்பு மார்ச், 2020

[9] ஞா.மாணிக்கவாசன், பழமொழி நானூறு மூலமும் – தெளிவுரையும், உமா பதிப்பகம், மண்ணடி, சென்னை – 1, மூன்றாம் பதிப்பு, பிப்ரவரி, 2021

[10] டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு, 89 லிங்கிச் செட்டித்தெரு, சென்னை – 1, இரண்டாம் பதிப்பு. டிசம்பர் 1980

[11] டாக்டர் சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புற இலக்கிய வரலாறு, மணிவாசகர் நூலகம், சென்னை – 1, முதற் பதிப்பு, டிசம்பர், 1980

[12]மு.ந. வெங்கடசாமி நாட்டார், அகநானூறு, வையைப் பதிப்பகம், சென்னை, 1966

[13] டாக்டர் சு.சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு, ப.103, மணிவாசகர் நூலகம், சிங்கர்தெரு, பாரிமுனை, சென்னை – 1, இருபத்தி இரண்டாம் பதிப்பு, டிசம்பர், 2015

[14] டாக்டர். ரா. சீனிவாசன், கம்பராமாயணம், அணியகம், செனாய் நகர், சென்னை-30, மூன்றாம் பதிப்பு, 2000

[15] தேன்தமிழ்ப் பதிப்பகம், 85, சுப்பிரமணியம் பிள்ளைத் தெரு, சேலம் – 1, முதற்பதிப்பு, செப்டம்பர் 1984

[16] பக்தவத்சல பாரதி, இலக்கிய மானிடவியல், புத்தாநத்தம், திருச்சி.

[17] ஜெ. ஸ்ரீசந்திரன், மணிமேகலை மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17, முதற்பதிப்பு, 1996

[18] ஜெ. ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணி, தமிழ் நிலையம், உஸ்மான் சாலை, தியாகராய நகர், சென்னை-17, முதற்பதிப்பு, 1996

Reference:
[1] A. Arumugam, Folk literature and culture, p. 143, published by Thenmozhi Press, 85, Subramaniam Pillayathru, Salem-1, first edition September, 1984

[2] Adiyarkku nallar, Silappathikaram, Text and Glossary, Vu. Ve. Sa. Publishing house, Chennai, seventh edition, 1960

[3] A.Ma. Parimanam, Ku.Ve. Balasubramanian, Kalitogai Source and text, New Century Book House, Chennai-98, 2014.

[4] Vu. Ve. Saminathayar, Kurunthogai, published by Kabir Press, Chennai, Frist edition, 1937.

[5] R. Aalavanthar, Leather Instruments of Tamil, World Tamil Research Institute, Athiyar, Chennai – 20, first edition, December, 1981 6.

[6] Aaru. Ramnathan, Tamil art and literary traditions, Meyyappan Publishing House, 53, New Street, Chidambaram – 1, first edition, December, 2007

[7] Ki.VA. Jagannathan, Malaiyaruvi, P. 9 Saraswati Library, Thanjavur – 1958 first edition.

[8] Sa. Tirunyanasampantham, Tholkappiyam, Porulathikaram, Kadir Publishing House, South Street, Thiruvaiyaru-24, first edition March, 2020

[9] Ya. Manicavasan, Proverb four hundred Text – Explanation, Uma Publishing House, Manadi, Chennai – 1, Third Edition, February, 2021

[10] Dr. Su. Sanmugasundharam, The influence of folk literature, 89 Lingich Chettitheru, Chennai – 1, second edition. December 1980.

[11] Dr. Su. Sanmugasundharam, History of folk literature, Manivasagar Library, Chennai – 1, first edition, December, 1980

[12] Mu. Na. Venkatasamy Nadar, Agananuru, Waiyai Publishing House, Chennai, 1966

[13] Dr. Shaktivel, Folklore Studies, p.103, Manivasagar Library, Singartheru, Pasis corner, Chennai – 1, 22nd edition, December, 2015

[14] Ra. Sinivasan, Kambharamayanam, Aniyagakam, Senoi Nagar, Chennai Nagar, Chennai-30, third edition, 2000

[15] ThenThamizh Press, 85, Subramaniam Pillai Street, Salem – 1, first edition, September 1984 The first edition.

[16] Bhaktavadsala Bharati, literary anthropology, Butthanatham, and Tirupati.

[17] J. Srichandran, Mani Maigalai – Text and explanation, Tamil Station, Usman Road, Thiyagaraya Nagar, Chennai-17, first edition, 1996.

[18] J. Srichandran, Sivagashintamani, Tamil Station, Usman Road, Diackara Nagar, Chennai-17, first edition, 1996

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் அ. ஜனார்த்தலி பேகம்,

உதவிப் பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,

ஜமால் முகமது கல்லூரி (தன்னாட்சி),
திருச்சிராப்பள்ளி – 620 020, தமிழ்நாடு, இந்தியா.

 

A Comparative study of Silappathikaram and Eriyum Panikkadu|R.Subashini

ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு - இரா, சுபாஷினி
Abstract
      From a global perspective, the pursuit of universality and tolerance within literary creations constitutes the field of Comparative Literature. Within this framework, Silappathikaram by Ilango Adigal and Red Tea, an English novel authored by P.H. Daniel and translated into Tamil as Eriyum Panikkadu by R. Murugavel, are taken for comparative analysis.
Elango Adigal, belonging to the Chera dynasty and the younger brother of Cheran Senguttuvan, composed Silappathikaram in epic form. Through the life story of Kovalan and Kannagi, who hailed from the merchant community, he sought to unite the three Tamil dynasties as well as diverse religious traditions, while simultaneously imparting three essential truths of worldly existence to society. In 1969,  Paul Harris Daniel authored the novel Red Tea, which vividly portrayed the socio-economic hardships of tea plantation workers. Its Tamil translation, Eriyum Panikkadu, published in 2007, recounts the untold story of thousands of oppressed laborers whose lives were consumed on the enchanting yet famine-stricken slopes of the hill regions, which today stand as centers of beauty and as significant contributors of foreign exchange through tea estates. The novel underscores the brutalities jointly perpetrated by the British colonial administration and the allied industrial establishments of that period.
This paper seeks to undertake a comparative study of the lives of Karuppan and Valli, as depicted in Eriyum Panikkadu, with those of Kovalan and Kannagi in Silappathikaram, particularly examining the disparities in their socio-economic conditions.

KEY WORD 
Silapathikaram,Red tea,Eriyum Pani Kadu,Elangovadikal,R.Murugavel,porulvayin pirivu,


ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு

அறிமுகம்
     உலகளாவிய நோக்கில் இலக்கியப் படைப்புகளில் பொதுமையையும் பொறுமையையும் காண முயல்வது ஒப்பிலக்கிய ஆய்வாகும். இவ்வகையில் இளங்கோவடியின் சிலப்பதிகாரமும் பி. எச். டேனியல் Red Tea என ஆங்கிலத்தில் எழுதி இரா.முருகவேள் அவர்களால் தமிழில்  எரியும் பனிக்காடு என மொழிபெயர்க்கப்பட்ட நாவலும் ஒப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.
 இளங்கோவடிகள் சேர மரபில் தோன்றியவர். சேரன் செங்குட்டுவனின் தமையன். இவர் மூவேந்தர்களையும் பல சமயங்களையும் இணைத்து உலகியல் உண்மை மூன்றையும் மக்களுக்கு உணர்த்தும் வகையில் வணிகக்குலம் சேர்ந்த கோவலன் கண்ணகியின் வாழ்க்கையைக் காப்பியமாக வடித்துள்ளார். 1969 ஆம் ஆண்டு பி.எச்.டேனியல்  அவர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியல் சிக்கல்களைப் படம்பிடித்துக் காட்டும் வகையில் எழுதிய Red Tea நாவலின் மொழிபெயர்ப்பாக தமிழில்  2007 ஆம் ஆண்டு வெளியான எரியும் பனிக்காடு, இன்றைய எழில் மிகுந்த மலை நகரங்களையும் அன்னியச் செலவாணியை அள்ளித்தரும் தேயிலை தோட்டங்களையும் கட்டி அமைக்கக் கூட்டம் கூட்டமாகப் பலிக் கொடுக்கப்பட்ட அந்தக் கண் கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன ஆயிரம் ஆயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை தான். பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத்தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள் தான் இந்நாவல். எரியும் பனிக்காடு நாவல் கூறும் கருப்பன் வள்ளியின் வாழ்வியலையும் சிலப்பதிகாரம் கூறும் கோவலன் கண்ணகியின் வாழ்வியலையும் இவர்களின் பொருள்வயின் பிரிவினையும்  ஒப்பிட்டு ஆராய இக்கட்டுரை முயல்கிறது.

ஆய்வு நோக்கம்
           
         பொருள் வயிற் செலவில் மக்களின் வாழ்வியலை சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு நாவல் வழி ஒப்பிட்டு ஆராய்ந்து கூறுவதே நோக்கமாகும்

ஆய்வு அணுகுமுறை
      இவ்வாய்வானது இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தையும் பி எச் டேனியல் ஆங்கிலத்தில் எழுதி  இரா.முருகவேல் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட எரியும் பனிக்காடு நாவலையும் ஒப்பாய்வு அணுகுமுறைக்கு உட்படுத்தப்பட்டு  ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாய்விற்குச் சிலப்பதிகாரம் மற்றும் எரியும் பனிக்காடு முதன்மை தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது இவை சார்ந்த கட்டுரை நூல்கள் இதழ்கள் மின்னுலகக் கருத்துக்கள் முதலியவை ஆய்வு தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

குடும்ப நிலை
 
“போகமும் நீள் புகழ் மன்னும் புகார் நகர் “ (சிலம்பு.மங்கல வாழ்த்துப் பாடல்: பா.வரி 22)        
      என்ற சிறப்புக்குரிய நீண்ட புகழும் போகமும் கொண்ட பூம்புகார்கண் அரசர்களும் விரும்பக்கூடிய பெரும் செல்வம் கொண்ட வணிகக் குலம் சார்ந்த மாநாய்கன் மகள் கண்ணகியும் ஒப்பற்ற குடிகளாகிய தன் கிளைகளோடு கூடி மிக்கோங்கிய செல்வத்தை உடையவனான மாசாத்துவானின் மகன் கோவலனும் திங்கள் ரோகிணியோடு கூடும் நல்ல நாளிலே மணம் புரிந்தனர்.

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவிற்பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
(சிலம்பு.மனையறம்.பா.வரி.2)
        
       எல்லையற்ற சிறப்பைக்  கொண்ட பூம்புகார் நகரிலே கோவலனும் கண்ணகியும்  ஏழு நிலை கொண்ட மாடத்தில் இன்புற்று வாழ்ந்தனர். அரசர்கள் விரும்பக் கூடிய அளவிற்குச்  செல்வங்களைக் கொண்டவர்களாக வணிகர்கள் இருந்துள்ளனர். மனையறம் படைத்த காதை, கோவலன் கண்ணகியின் செல்வ நிலையைத் தெளிவாக விளக்குகிறது. மேலும், மாதவியுடன் இன்பத்தில் திளைத்து மீண்டும் வந்த கோவலன் கண்ணகியிடம்

குலந்தருவான் பொருள் குன்றந் தொலைந்த
இலம்பாடு நாணு த் தருமெனக் கென்ன (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி.70)
         
     எனக் கூறும் செய்தியானது கோவலன் முன் மலை போன்ற செல்வத்தைக் கொண்டிருந்தான் என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு புகார் நகரில் பெரும் செல்வம் கொண்ட வணிகக் குடும்பத்தைச் சார்ந்த கோவலன் கண்ணகியின் செல்வ நிலையினையும் பின் மாதவி மீது கொண்ட மையலினால்  செல்வம் இழந்து நின்ற வறுமை நிலையையும் சிலப்பதிகாரம் தெளிவாக விளக்குகிறது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மயிலோடை கிராமத்தில் மொத்தம் 30 வீடுகள் மட்டுமே உள்ளன அதில் ஒரு வீடு மட்டுமே செங்கல்லால் கட்டப்பட்டது ஊர் மக்கள் அனைவரும் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களின் நிலத்தில் கூலி வேலை செய்பவர்கள். இதில் இருந்தே ஊர் மக்களின் வறுமை நிலையை அறிய முடிகிறது. மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த கருப்பன், தனது அக்கா மகளான வள்ளியைத் திருமணம் செய்து கொண்டு மூங்கிலும் பனையோலையும் கொண்ட கூரை வீட்டில்  பசியின் கோரத்தாண்டவத்தின் நடுவே  வாழ்ந்து வந்தான். கருப்பன் ஒரு கிழிந்த பாயில் சுருண்டுப் படுத்துக் கொண்டிருந்தான். ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலையில் புது வேகம் பெற்றுக் கருப்பனைப் படுத்தியது.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.  (குறள்:1029)
         
      என்ற திருவள்ளுவரின் வாக்குப் படி, தான் பசி துன்பத்தில் இருந்தாலும் தன் குடியைக் காக்க கருப்பனின் மனம் மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டத் திட்டம் தீட்டிக்கொண்டு, தன் பசியைப் பொருட்படுத்தாமல்  அதிகாலையே கழுத்தாறு நோக்கி செல்கிறான். கருப்பன் கடுமையாக உழைக்கும் உழைப்பாளி. வறட்சியால் ஏற்பட்ட வறுமையினால் வேலை கிடைக்காமல் குடும்பத் தேவையை நிறைவேற்ற  போராடிக் கொண்டிருந்தான். குடும்பத்தின் பசி துன்பத்தைப் போக்க  கால் கொலுசையும் வீட்டிலிருந்த மண்சட்டிகளையும் அடகு வைத்து  நிறையத் தண்ணீருடன் ஒரு கைப்பிடி ராகி மாவு கலந்த கஞ்சியை ஒரு நாளிற்கு ஒரு வேலை மட்டும் உண்டு வாழ்ந்து வந்தனர்.
“கூரையாக வேயப்பட்டிருந்த பனை ஓலை ஏறக்குறைய இறுதி மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அதில் எண்ணற்ற ஓட்டைகளின் வழியே அறைக்குள் புகுந்த நிலவொளியில் எதிர் மூலையில் கிழிந்த நாராகக் கிடந்த அம்மாவின் உருவம்” (இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு, பக்:15)
          இவ்வாறு கருப்பனின் குடும்ப நிலையானது, ஓட்டை நிறைந்த வீடும். வீட்டிலிருந்த பொருட்களை அடகு வைத்து ராகிக் கலந்த ஒரு வேலை மட்டும் உண்ணக்கூடிய நிலையுமான வறுமை, அவனையும் அவன் குடும்பத்தையும் ஆட்டிப் படைத்திருந்தது.

பொருள்வயிற் பிரிவு
         பண்டையக் காலந்தொட்டு மக்கள் ஓர் இடத்தில் நிலைத்துத் தங்காமல் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருந்தனர். மக்கள் நாகரிகம் பெற்று கூடி வாழத் தொடங்கிய பின் கல்வி, பொருளீட்டுதல், போர் போன்ற காரணங்களுக்காகத் தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்ந்தனர். இத்தகைய இடம்பெயர்வினை தொல்காப்பியர்,

ஓதல் பகையே தூது இவை பிரிவு    (தொல்.பொருளதிகாரம்:27)
         
என இடம்பெயர்வினைப் பிரிவு எனக் குறித்துள்ளார். கல்வி, பகை, தூது மட்டும் இன்றிப் பொருள்வயிற் பிரிவினையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.
 
இழைத்த ஒண்பொருள் முடியவும் பிரிவே (தொல்.பொருளதிகாரம்:30)
         
இதன்மூலம் மக்கள் பொருளீட்டுவதற்காக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தனர் என்பதை அறியலாம். இவ்வாறு பொருளீட்டுவதற்குச் செல்லும் தலைவன் தலைவியை உடன் அழைத்துச் செல்வதும் உண்டு.

குலந்தருவான் பொருள் குன்றத் தொலைந்த
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன   (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி70)

    சிலப்பதிகாரத்தில் கோவலன், கண்ணகியை மணந்து இன்புற்று வாழ்ந்தான். பின் அரங்கேற்றக்காதையில் மாதவியின் மீது கொண்ட மையலினால் கண்ணகியை மறந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின் மாதவியிடம் ஊடி கண்ணகியை நாடி வந்து  மாதவியின் தாயான சித்திராபதியால் தனது செல்வங்களை எல்லாம் இழந்த நிலை எண்ணி நாணம் அடைந்து நிற்கிறான்.

நலங்கேழ் முறுவல்  நகைமுகங் காட்டிச்
சிலம்புளக் கொண்மெனச் சேயிழை கேளி  (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி72)

   கோவலனின் நிலையைக் கண்ட கண்ணகி, மாதவிக்குக் கொடுக்கப் பொருள் இல்லாத காரணத்தினால் கோவலன் வருந்துகிறான் என்று எண்ணிச் சிறுநகைப் புரிந்து  தனது காற்சிலம்பினை கோவலனிடம் தருகிறாள்.

சிலம்பு முதலாகச் சென்ற கலனே
டுலந்தபொரு ளீட்டுத லுற்றன்  மலர்ந்த சீர்
மாட மதுரை யகத்துச் சென்றேன்   (கனாத்திறம் உரைத்த கதை:பா.வரி74)
         
     சிலம்பினைப் பெற்றுக் கொண்ட கோவலன், கண்ணகியை நோக்கி இக்காற் சிலம்பைக் கொண்டு மதுரைச் சென்று இழந்த செல்வங்களை மீண்டும்  பெற்று விடலாம் என்று கூறி, விடியற் பொழுதிலே கோவலன்  கண்ணகியை மதுரை நோக்கி அழைத்துச் சென்றான். போகும் வழியில் சமணத் துறவியான  கவுந்தியடிகளிடம்  ஆசிப் பெற்று. வரைபொருள் வேட்கையின் காரணமாக மதுரைச் செல்லும் செய்தியைக் கூறினர்.

பாடகச் சீறடி பறப்பகை யுழலா
காடிடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதிவள் செவ்வி  அறிகுறிநா யாரோ   (நாடு காண் காதை:52)
         
     எனக் கவுந்தியடிகள்  கண்ணகியின் மென் பாதங்கள் மதுரை செல்வது கடினம் என்றார். கோவலன்,கண்ணகி இருவரும் பொருள் செலவுப் போக்கொழுக்கவில்லை. கவுந்தியடிகள், கோவலன் கண்ணகியுடன் மதுரை நோக்கிச் சென்றார். போகும் வழியில்

கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியுங் கனைக்குர னுரையுந்   (நாடு காண் காதை:113)         
       எனப் பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்தவாறு மதுரை நோக்கிச் சென்றனர். போகும் வழியில் பல இடங்களில் தங்கி இளைப்பாரி, பல இன்னல்களைக் கடந்து மதுரையை அடைந்தனர். கவுந்தியடிகள், கோவலன்  கண்ணகி இருவரையும் மாதரிடம் அடைக்கலம் புக செலுத்துகிறார். வணிகக் குலத்தில் பிறந்து, பொருள்வயிற் பிரிந்து, மதுரை அடைந்து, கால் சிலம்பினை விற்கும் பொருட்டுப் பொற்கொல்லனை அடைந்து, கோவலன் திருட்டுப் பழிக்கு ஆளாக்கப்பட்டு இறந்துப்படுகிறான். கண்ணகி வழக்குரைத்து அரசனை எதிர்க்கிறாள் அரசன் தவறு உணர்ந்து இறக்கிறான். பின் சேர மன்னன் கண்ணகிக்குச் சிலை எழுப்புவதாகக் காப்பியம் நிறைவுறுகிறது.

🎯 சிலப்பதிகாரத்தில் மாதவிடம் கொண்ட காதலின் காரணமாகக்  கோவலன் மலைபோல் குவிந்த செல்வத்தை இழக்கிறான். கருப்பன் வறட்சியின் காரணமாக வீட்டில் இருந்த பொருட்களை இழந்து வறுமையில் அல்லற்படுகிறான்.

🎯 கண்ணகி கோவலனின் கவலையைப் போக்க கால் சிலம்பினை  வறுமை சூழலில் அளிப்பதைப் போலவே வள்ளி, வறுமை சூழலில் கருப்பனிடம் கால் கொலுசு கொடுத்து குடும்பத்தின் பசியாற்றினாள்.

🎯 கண்ணகியின் பாதம் கதா தூரம் செல்ல தயங்கும் என்பதைக்  கவுந்தியடிகள் கூறியதை போலக் கருப்பனின் தாய் முத்தாத்தாள் வள்ளி கருப்புனுடன்  செல்லும் பொருள் வயிற் பிரிவை ஒழிக்க முற்படுகிறாள்.

🎯  கோவலன் கவுந்தியடிகள் வார்த்தையை வணங்கி மறுப்பது போலவே கருப்பனும் தாயின் சொல்லை மறுத்து தாயின் மனதை மாற்றுகிறான்.

🎯  மதுரையை நோக்கி செல்லும் வழியில் கண்ட அனைத்து காட்சிகளையும் ரசித்துக்கொண்டே கோவலனும் கண்ணகியும் பெரு நம்பிக்கையுடன் பயணம் செய்தனர் அதுபோலவே கருப்பனும் வள்ளியும் பெரு நம்பிக்கையைச் சுமந்து தேயிலை தோட்டம் நோக்கி சென்றனர்.”புதிய நட்பும் நம்பிக்கையும் தந்த இன்பமான மனநிலையில் அவர்கள் சிரித்து பேசியும் நையாண்டி செய்து கொண்டும்  வாக்களிக்கப்பட்ட நிலத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர்”( இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு, பக்:63)

🎯 கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் பல இடங்களில் தங்கி இளைப்பாறினர் இதுபோலவே கருப்பன் வள்ளி மற்றும் உடன் சென்ற பலரும் பல்வேறு இடங்களில் தங்கி, நடந்து நடந்து கால் ஓய்ந்து தேயிலை தோட்டம் அடைந்தனர்.

🎯  கோவலனுக்கும் கண்ணகிக்கும் மாதரி அடைக்கலம் அளித்து, தனி இடம் கொடுத்து தேவையான பொருட்களையும் கொடுத்ததைப் போன்று தேயிலை தோட்டத்தில் கருப்பனுக்கும் வள்ளிக்கும் கால்நீட்டி படுக்க முடியாத அளவிற்குத்  தனியிடம் வழங்கப்பட்டுச்  சமையலுக்குத்  தேவையான பொருட்கள் போர்வை போன்றவை வழங்கப்பட்டது.”அரிசியும் மற்றவைகளும் வாங்கிக் கொண்டு லைனுக்கு திரும்பியதும் அவர்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கி தரப்பட்டன. கருப்பனுக்கும் வள்ளிக்கும் மட்டும் அதே லைனில் ஒரு அறையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது”(இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:72)

🎯 கோவலன் காற்சிலம்பினைப் பொற்கொல்லனிடம் கொண்டு சென்று பொய் வழக்கு சாற்றப்பட்டு இறந்து படுகிறான்.  கருப்பன் வள்ளி இருவரும் கங்காணியின் பொய்வாக்கால் தேயிலை தோட்டம் அடைந்து பல இன்னல்களை எதிர்கொள்ள முடியாமல் வலிகளைப் பொறுத்து இறுதியில் வள்ளி நோய்வாய்ப்பட்டு இறக்கிறாள்.

🎯 தன் கணவன் கள்வன் இல்லை என வழக்காற்றி மன்னனின் தவறினை உணர்த்தி வெற்றி காண்கிறாள் கண்ணகி.

🎯 வணிகக்  குலப்  பெண் கண்ணகி, தன் கணவனுக்கு ஒரு நாட்டின் அரசனால் ஏற்பட்ட  அநீதியை எதிர்த்து போராடும் சுதந்திரம் இருந்தது. கருப்பன் தன் மனைவி போதிய உணவு  இல்லாமலும், மருத்துவ வசதி இல்லாமலும், போதிய ஓய்வு கிடைக்காமலும் இறந்து பட்டால் என்று தெரிந்தும் அவனது உரிமை குரல் ஊமையாகவே  இருந்தது.
பொருள்வயின் பிரிவானது வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது எனத்  தொல்காப்பியர் கூறுகிறார்.

பொருள்வயின் பிரிதலும் அவர்வயின்ன் உரித்தே (தொல்.பொருளதிகாரம்:35)         
       பிரிவு மட்டுமே இருவருக்கும் உரியது போலும். வாதிட்டு  நீதி பெறும் உரிமை வணிகக் குலத்துடன் நின்று விட்டது. போலும் எனவேதான், தன் மேலதிகாரி ஒருவரையும் எதிர்த்துக்  கேள்வி கேட்கும் உரிமை வேளாள பொருளீட்டு வந்த மக்களிடம் பாதிக்கப்பட்டுள்ளது. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என இறைவனை எதிர்த்து எரியூட்டப்பட்ட நக்கீரர், தவறு இழைத்த அரசனைத் தட்டிக் கேட்கும் பெண்கள் என அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் உரிமையைப் பெற்றிருந்த தமிழ் மக்களின் வாழ்க்கை சூழல் காலப்போக்கில் மாறியது. வியப்பே. அரசர்,அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவு பெயரளவில் இருந்த காலத்தில் மக்கள் நீதியைச் சரியான முறையில் பெற்றனர். இந்த நான்கு வர்ணப் பாகுபாடு மக்களின் ஆழ்மனம் சென்று வெவ்வேறு இனமாகக்  காண நேரிட்ட காலச்சூழலில் மக்கள் நீதி பெற அல்லலுற்றனர். அநீதிகளை எதிர்த்துக்  கேள்வி எழுப்பும் தன்மை இழந்தனர். இறைவனின் தவறினைச் சுட்டிக்காட்டும் மக்களின் மனநிலை மாறி. இறைவன் தானே என எண்ணி ஆதிக்கம் செலுத்த,உழைக்கும் மக்களின் ஆவி அவர்களின் உள்ளங்கையில் சிக்குண்டது.

இன்னல்கள்
      செல்வம் நிறைந்த வணிகக் குடியில் பிறந்து பொருள்களை இழந்து ஊழ்வினைக் காரணமாக மதுரை புறப்பட்டு மலர் போன்ற கண்ணகியின் பாதங்கள் பல இன்னல்களை அடைந்தது.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு   (குறள் 1029)
         
        தன் குடிக்குக் குற்றம் வராமல் தடுக்கப் புகாரைத் தகர்ந்து. பொருளீட்டிக் குடி பெருமையைக் காக்க மதுரை அடைந்து. ஏழு மாடத்தில் இருந்த கோவலன் கண்ணகி இருவரும் சிறுவீட்டில் தங்கி. புது வாழ்க்கைக்குத் தயாராகிய வேளையில் பொற்கொல்லனால் பொய் வழக்கில் சிக்குண்டு மன்னரின் ஆணை கோவலனின் உயிரைப் பறித்தது. இவ்வாறு கண்ணகி கணவனைப் பிரிந்து அறம் செய்ய முடியாமல் பல துன்பங்களை அடைந்தாள். கணவன் மீண்டும் வந்தபின் பொருள் இல்லாமையைப்   பொருட்படுத்தாமல் காற்சிலம்பு கொடுக்க. மதுரை வந்து மீண்டும் கோவலனைப்   பிரிந்து பெரும் துன்பத்தை அடைந்து அழற்பட்டாள்.
 கருப்பனும் வள்ளியும் கங்காணியின் வார்த்தைகளை நம்பி குடும்பத்தின் வறுமை நிலை மாற்றத் தேயிலை தோட்டம் செல்ல முடிவு செய்து செல்லும் வழியில் எல்லாம் பல துன்பங்களை எதிர்கொண்டு பசி மற்றும் கூட்ட நெரிசலில் சிக்குண்டு தேயிலை தோட்டம் அடைந்து.”அரிசியும் மற்றவைகளும் வாங்கிக் கொண்டு லைனுக்கு திரும்பியதும் அவர்களுக்கு இருப்பிடங்கள் ஒதுக்கி தரப்பட்டன. கருப்பனுக்கும் வெள்ளிக்கும் மட்டும் அதே லைனில் ஒரு அறையின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது”. (இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:72)
          ஓர் அறையில் சிறு பகுதியில் கால் நீட்டிப் படுக்க இயலாமல் துன்புற்று இருந்தனர்.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)
         
        எனத்  திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைத்  துணை நலத்தின் கூறினைக் கொண்டவளாக வள்ளி, தன் கற்பு நெறியில் தன்னையும் காத்துக் கொள்ளவும் தன் கணவனான கருப்பனை காப்பாற்றிக் கொள்ளவும் தகுதி அமைந்த தன் புகழையும் காப்பாற்றிக் கொள்ளவும் ஒவ்வொரு நாளும் போராடி வெற்றி கண்டாள்..“வேலை செய்யும்போது கம்பளில் சுற்றிக் கொண்டாலும் கூட சில நிமிடங்களில் உடல் முழுவதும் மழையில் நனைந்து ஊறிப் போனது”.(இரா.முருகவேள்,எரியும் பனிக்காடு,பக்:135)
 இப்போராட்டத்தில் கருப்பனும் வள்ளியும் பல நாள் நோயுற்று பல ஏசல்களையும் சாட்டையடிகளையும் அப்போது சிறு பரிசாகப் பெற்று  கால் நீட்டி படுக்க இயலாத சிறு அறையில் தங்கி சத்தான உணவு கிடைக்காமல் கொட்டும் மழையில் அட்டைகளின் நடுவில் ரத்த சுவடுகளுடன் உழைத்தனர். கற்பு காக்க காட்டுமிராண்டிகளிடம் உதைப்பட்டு, “ரத்தம் வழிவதை தடுக்க அவர்கள் கொழுந்து இலைகளையோ,மெல்லிய காகிதத் துண்டுகயோ அட்டை கடித்த இடத்தில் ஒட்டிக்கொண்டனர்”. இறுதியாகப் போராட்டத்தின் பெரும்பரிசாக வள்ளி மரணம் அடைந்தாள். கருப்பனின் வேதனை பெருகி வீடு திரும்ப முடியாமல் மீண்டும் வாழ்க்கை போராட்டத்தில் குதித்தான்.

தொகுப்புரை
      இளங்கோவடிகளால் எழுதப்பட்ட சிலப்பதிகாரமும் பி.எச்.டேனியல் அவர்களால் எழுதப்பட்டுத் தமிழில்  மொழிபெயர்க்கப்பட்ட எரியும் பனிக்காடு இரண்டும் வெவ்வேறு காலங்களில் தோன்றினாலும் சொல்லப்பட்ட செய்திகள், மக்கள் அடைந்த துன்பங்களில் தாக்கமானது புத்தகங்களின் பக்கங்களின் வழியை நிறைந்து வந்து மனதில் சில கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் குன்று போன்ற செல்வம் குறைந்ததை எண்ணி கோவலனே மதுரைச் செல்ல கண்ணகியை உடன் அழைக்கிறான். எரியும் பனிக்காடு நாவலிலும் கருப்பனே வள்ளியிடம் குடும்பச்  சூழலை விளக்கி தேயிலை தோட்டம் செல்ல உடன் அழைக்கிறான். இவ்விரு நூல்களிலுமே  பொருள்வயின் பிரிவின் போது இரண்டு தம்பதியரும் ஞாயிறு உதிப்பதற்கு முன் தம் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். கோவலன் பொருள் இல்லாமையை எண்ணி வருந்தும் வேளையில் கண்ணகி தன் காற்சிலம்பைத் தருகிறாள். வள்ளியும் தனது குடும்பச்  சூழ்நிலை உணர்ந்து தனது கொலுசை அடகு வைத்துக்  குடும்பத்தைக்  காக்கிறாள். இவ்விரு பெண்களின் மன ஓட்டம் ஒன்றாகவே உள்ளது. இருவரும் தன்னை மட்டும் காத்துக் கொள்ளாமல் தன் குடும்பத்தைக்  காப்பதில் கருத்து ஒற்றுமை உடையவர்களாக உள்ளனர். இவ்வாறு இக்கட்டுரை, பல்வேறு ஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் கொண்ட இவ்விரு நூல்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்குகிறது.

துணைநூல் பட்டியல்
1.திருஞானசம்பந்தம்,ச.தொல்காப்பியம் பொருளதிகாரம் மூலமும் உரையும். கதிர் பதிப்பகம், 2020.

2. முருகவேள், இரா. எரியும் பனிக்காடு. ஐம்பொழில் பதிப்பகம்( ம ) சீர் வாசகர் வட்டம்,2007.

3. காசி விசுவநாதன், வெ. பெரி. பழ. மு. (பதிப்பாசிரியர்). சிலப்பதிகார மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார்  உரையும். தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1953.

4. திருக்குறள் பரிமேலழகர் உரை, சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம், திருநெல்வேலி, 1951.

5. முருகையா சதீஸ்.  “ஔவையாரும் வள்ளுவரும் வலியுறுத்தும் நீதிக்கருத்துக்கள்: திருக்குறள் மற்றும் ஆத்திசூடியை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஒப்பாய்வு”.தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ்.(2022):102-109

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இரா, சுபாஷினி,
உதவிப் பேராசிரியர்,
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயா பல்கலைக்கழகம்,
காஞ்சிபுரம்.

 

உனைக் கண் தேடுதே|கவிதை|கவிஞர் இளங்கதிர்

உனைக் கண் தேடுதே- கவிஞர் இளங்கதிர்

👁️கடிகார முட்களோடு


பயணித்த வண்ணம் கண்கள்…


உன்னைக் காணாத ஏக்கத்தில்


கலங்கிடும் கண்கள்…


 

👁️ கடிகார முட்களை அசைத்துவைக்கலாமா?


நேரம் உன்னை அழைத்து வருமா?


உனக்காகக் காத்திருப்பது


உயர்ந்த சுகம்.


 

👁️தாமதம் தந்த கோபம்


தண்ணீரில் எழுதியதாகும்.


காத்திருந்தும் நீ வராத நாட்கள்


கானகத்தில் வெறும் முட்கள்.

👁️உன் பயணத்தில் காற்றானால்


என் இதயம் சீராகும்.


நிலவை நான் அழைக்கவா


உள்ளம் நீ நனைக்க.


கனவே நீ சென்று வா


காணாத இதயத்தை ஏந்தி வா.


 

👁️உன் மூச்சுக் காற்றையாவது


அனுப்பி வை 


என் மரணத்தை அதனால்


தள்ளி வை


கவிதையின் ஆசிரியர்

கவிஞர் இளங்கதிர்


சென்னை.

 

பரந்து விரிந்த பழங்குடிகள்|கவிதை|சி.அரவிந்த குமார்

பரந்து விரிந்த பழங்குடிகள்-சி.அரவிந்த குமார்

⛰️தொல்குடிகளாகத்


தோகை விரித்தாடினோம்


மலைப்பகுதியில்..!


 

⛰️ அகதியைப் போல


அடித்துத் துரத்தப்பட்டோம்


மலையின் அடிப்பகுதியில்..!


 

⛰️ உணவுக்கு ஏங்கினோம்


நீர்நிலைகளின் ஒதுக்குபுறத்தில்
 

தூங்கினோம்.


 

⛰️ நாடோடிகளாக அலைகிறோம்


நாகரிக வாழ்க்கையில்

நலிவுற்று இருக்கிறோம்


பொலிவுற்ற நகரத்தில்..!


 

⛰️ கொத்துக் கொத்தாய்


செல்கிறோம் கொத்தடிமையாக


ஒரு கொண்டாட்டமும் கண்டதில்லை


புத்தாடை இல்லாத மேனியாக..!


 

⛰️ கானகமும் கண்கலங்கும்


எங்கள் கதறல்களைக் கேட்டு


வனச்சட்டமும் வசம் சேரும்


எங்கள் வாடிய வாழ்கையோடு..!


 

⛰️ பாடுப்பட்டு வாழ்கிறோம்


பரந்த இவ்வுலகில்


பழங்குடியாய் வாழ்ந்தால்


மதிப்பு கிடைப்பது எவ்வுலகில்..!


கவிதையின் ஆசிரியர்

சி.அரவிந்த குமார்


முனைவர் பட்ட ஆய்வாளர்


தமிழ்த்துறை


தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்


திருவாரூர்-610005

 

VAIRAMUTHU, PONMANI  VAIRAMUTHU KAVITHAIGALIL  ILLAKKIYAK KOORUGAL|Dr M.J.MAHESWARI

VAIRAMUTHU PONMANI VAIRAMUTHU KAVITHAIGALIL ILLAKKIYAK KOORUGAL - Dr M.J.MAHES
Abstract
        
          It is no exaggeration to say that literature serves as a guiding light for one’s life. The ideas of literature are indelibly imprinted in the minds of future creators and are the reason for creating new works. In that regard, Vairamuthu and Ponmani Vairamuthu have followed many literary elements in their works, from Tolkappiyam to the poems of Bharathiyar and Bharathidasan. Through this, this study aims to highlight the literary personality and creative ability of Vairamuthu and Ponmani Vairamuthu.


வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் இலக்கியக் கூறுகள்

ஆய்வுச் சுருக்கம்
     
      ஒருவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக இலக்கியங்கள் திகழ்கின்றன என்றால் மிகையாகாது. இலக்கியங்களின் கருத்துகள் எதிர்கால படைப்பாளர்களின் மனதில் நீங்கா இடம் பெறுவதோடு புதிய புதிய படைப்புகளை உருவாக்குவதற்கும் காரணமாய்த் திகழ்கின்றன. அந்த வகையில் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து அவர்களின் கவிதைகளில் தொல்காப்பியம் முதல் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் வரை தன்னுடைய படைப்புகளில் பல இலக்கியங்களின் கூறுகளைப் பின்பற்றியுள்ளனர். இதன்வழி வைரமுத்து, பொன்மணி வைரமுத்து அவர்களின்  இலக்கிய ஆளுமையையும் படைப்பாக்கத் திறனையும் எடுத்துரைப்பதாக இந்த ஆய்வு அமைகின்றது.

குறிச்சொற்கள்
     
வெண்முத்தம், களிப்பு,இடுக்கண், நகுக, கேளிர், அன்புச்சுரபி, ஊன்

முன்னுரை
         
     இலக்கியத்திற்கு அழகு ஊட்டுவன அணிகள் மட்டுமல்ல. இலக்கியக்கூறுகளும் படைப்பாளிகள் படைக்கும் படைப்புகளுக்கு மேலும் அழகு ஊட்டுவனாக உள்ளன. அந்த வகையில் வைரமுத்து, பொன்மணி வைரமுத்து கவிதைகளில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை உள்ள கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள். கவிஞர்கள் இருவரும் இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கில் உத்தியைக் கையாண்டுள்ளனர்.  இவர்களுடைய பார்வையில் இலக்கியக் கூறுகள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதை ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

தொல்காப்பியம்
         
         தமிழில் இன்று கிடைக்கும் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியமாகும். இந்நூல் எழுத்து, சொல் மட்டுமின்றி பொருள் இலக்கணமும் கூறும் முதல் நூலாகும். இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் எழுத்தாளர்களுக்குப் பஞ்சமில்லை. அச்சகம் வைத்துள்ளவர்களெல்லாம் கவிதை எழுதி வெளியிடுகின்றனர். அல்லது கவிதை எழுதுவோரெல்லாம் சொந்தமாக ஒரு அச்சகத்தைத் தொடங்கிவிடுகின்றனர். இந்நிலை நீடிப்பதால் ஏராளமான நூல்கள் வளர்ந்து அவற்றை வாசிக்கத்தான் ஆட்கள் இல்லை என்பதை,

“வடவேங்கடம் தென்குமரி /ஆயிடைத் / தமிழ்க்கூறு
நல்லுலகத்துள் / பழைய புத்தக / வியாபாரிகளே
இன்று / விமர்சகர்கள்”1
      என்னும் அடிகள் வாயிலாக தமிழகம் முழுவதும் இந்நிலை காணப்படுகிறது என்பதைக் குறிக்க தொல்காப்பியத்தின் சிறப்புப்பாயிர வரிகளை வைரமுத்து அவர்கள் பயன்படுத்தியுள்ளார்.

பரிபாடல்
         
       மதுரை நகரைப் பற்றி சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டிலும், மதுரைக்காஞ்சியிலும் விரிவான குறிப்புகள் உள்ளன. துரைக்காஞ்சி மதுரை நகரின் சிறப்புகளையும்,  தெருக்களையும் அடுக்கிக் கொண்டே போகிறது. மதுரையின் பெருமையை,

“மதுரை தாமரைப் பூவென்றும்-அதன்
மலர்ந்த இதழே தெருவென்றும்
இதழில் ஒட்டிய தாதுக்கள்-அவை
எம்குடி மக்கள் திரளென்றும் – பரி
பாடல் பாடிய பால்மதுரை
வட மதுராபுரியினும் மேல்மதுரை”2
என்னும் வரிகளில் பரிபாடல் கருத்தை வைரமுத்து பதிவு செய்கிறார்.

கலித்தொகை
    
     பொன்மணி வைரமுத்துவின் மாணவி ஒருத்தி திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு தன் வெளிநாட்டு வாழ்க்கையை நினைத்து வருந்துகிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கு கலித்தொகை இலக்கியத்திலிருந்து வரிகளைத் தேர்ந்தெடுக்கிறார். உடன் போக்கிற்குச் சென்ற தலைவன் தலைவியரைத் தேடிச் செல்லும் செவிலிக்குக் கண்டோர் கூறுவதாகப் பின்வருமாறு பாடல் அமைகின்றது.

“சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லவை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தான் என் செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே”3
என்று அமையும் பாடல் கருத்தை ஒட்டி,

“நீரிலே பிறந்த முத்துக்களை இங்கு / நீரா அணியும்
வேறொருவன் தான் என்ற கலித்தொகைப் பாட்டு
களிப்பாய்க் கேட்ட கிளிப்பிள்ளை நீ / காலமெல்லாமா
கல்லூரி வானில் / பறக்க முடியும்”4
என்று அறிவுறுத்தி, இல்வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்க அறிவுறுத்துகிறார்.

புறநானூறு
       
      பழந்தமிழரின் வீரத்தையும் பண்பாட்டையும் பேசுவது புறநானூறு. மனிதன் வாழ்வதற்கான நன்னெறிகளையும் வகுத்துச் சொல்கிறது இந்நூல்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா”5
என்னும் அடிகளில் நமக்கு வரும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நாம் செய்யும் செயல்களே காரணமே ஒழியப் பிறரைக் காரணமாக்குவது சரியல்ல என்பதை கவிஞர் வைரமுத்துவும் இக்கருத்தை உணர்த்த வந்த போது,

“காலமே / என்னைக் / காப்பாற்று / தீதும் நன்றும்
பிறர்தர வாரா / என்பது எனக்கு ஏற்புடைத்தென்பதால்”6
       என்ற பாடலில் புறநானூற்று வரிகளைப் பயன்படுத்தியுள்ளார். புறநானூற்றில் வள்ளல் பலரைக் காண்கிறோம். அவர்களுள் தமிழுக்காகத் தன் தலையையும் கொடுக்க முன்வந்தவர் குமணன். வாழையின் கொடையைக் குறிப்பிட வந்த பொன்மணி வைரமுத்து குமணின் கொடையோடு ஒப்பிடுகிறார். இதனை,

“வள்ளல்களை விஞ்சுகின்ற / வாழை இந்த வாழை
குமணன் தன் தலையைக் / கொடுப்பதாய்த் தான் சொன்னான்
இதுவோ / குலையென்னும் தலையைக் / கொடுத்தே விடுகிறது”7
என்னுமிடத்தில் புறநானூற்றுச் செய்தியைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

திருக்குறள்
         
         பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திருக்குறள். இது நீதி நூல்களுள் ஒன்றாக விளங்குகிறது. சிரிப்பு என்பது நோய் தீர்க்கும் மருந்து. பிறரைப் புண்படுத்தாத சிரிப்பே விரும்பப்படுவது. தன்னுடைய மனமகிழ்ச்சியைக் சிரிப்பாக வெளிப்படுத்தவேண்டுமே ஒழிய, பிறருடைய துன்பம் கண்டு மகிழ்வதோ பிறரை ஏளனமாகக் கருதி சிரிப்பதோ கூடாது. தன்னுடைய துன்பம் கண்டு தானே சிரிக்கும் மனோபாவம் வாய்க்கும் போதுதான் நம்மால் வாழ்க்கையில் துன்பங்களை எதிர்கொண்டு வாழமுடியும். இதனை,

“இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ த/தொப்ப தில்”8
என்கிறார் வள்ளுவர். இக்குறளைத் தழுவி,

“இடுக்கண் வருங்கால் / நகுக என்றான் வள்ளுவன்
சிலர் நகைத்தால்தான் / இடுக்கண்ணே வருகிறது”9
         என்னும் கவிதையில் குறள் கருத்தைக் கொண்டு விளக்குகிறார்.
பொய் சொல்லக் கூடாது என்றுதான் எல்லா அறநூல்களும் அறிவுறுத்துகின்றன. ஆனால் நடைமுறையில் ஆயிரம் பொய்யைச் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம் என்று உள்ளது. வள்ளுவப் பெருந்தகையோ நாம் சொல்லும் ஒரு பொய்யால் நன்மை விளையுமானால் பொய் சொல்லலாம் என்கிறார். இதனை,

“பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்”10
         என்ற குறளின் கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு மக்கள் ஏராளமான பொய்களைக் கூற தயங்குவதில்லை என்கிறார். பொன்மணி வைரமுத்து சத்தியத்திடம் உரையாடுவதாக அமைந்த கவிதையில் சத்தியமாகிய  உன்னைப் பற்றி வள்ளுவர் நிறையப் பாடியிருக்கிறாரே என்கிறார். அதற்கு சத்;தியம்,

“குற்றம் இல்லாத நன்மை தருமென்றால்
பொய்யும்கூட / மெய்போலத்தான் என்று பாடியிருக்கிறார்
அவசியம் கருதி அவர் பாடியதை   
வசதியாக்கிக் கொண்டார்களே”11
 
     என்று வருத்தப்பட்டது. பொதுவாகவே நம் நாட்டில் கடுமையான சட்டங்கள் வகுக்கப்பட்டாலும், அச்சட்டத்தில் சிறு விதிவிலக்கு இருந்தாலும், அதைக் காட்டித் தப்பிப்பது போல வள்ளுவரின் இக்குறளைப் பயன்படுத்தித் தம் செயல்களுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

சிலப்பதிகாரம்
         
   இரட்டைக்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம். நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்று பாரதியாரால் புகழப்பட்ட சிறப்புடையது சிலம்பு. தன்னுணர்ச்சிப் பாடல்களாக இருந்து வந்த தமிழ்க் கவிதை மரபில் முதன்முதலில் காப்பியத்தை இயற்றிப் புரட்சி செய்தவர் இளங்கோவடிகள். மதுரை நகரம் தொன்மைச் சிறப்பு வாய்ந்தது.  பண்டைய வரலாற்றோடு தொடர்புடையது. கடைச்சங்கம் தமிழை வளர்த்தப் பெருமைக்குரியது. பாண்டியர்களின் தலைநகரமாய் இருந்தது. இந்நகரத்தின் பெருமைகளைப் பட்டியலிட்டு வரும் கவிஞர், இந்நகரம் இன்று சாதியத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. பல்வேறு சிறப்புக்களுக்குப் பெயர் பெற்ற நகரம் இன்று சாதிக் கலவரங்களுக்கும் தீண்டாமைக்கும் பெயர்  பெற்றிருக்கிறது என்று வருந்துகிறார். ஒரு காலத்தில் நீதிக்குப்; பெயர் பெற்ற இந்நகரத்தில் இன்று சாதியால் தாழ்ந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதைக் குறிப்பிடுகிறார். இதனை,

“தென்னன் நீதி பிழைத்ததனால் – அது
தெரிந்து மரணம் அழைத்ததனால்
கண்ணகி திருகி எறிந்ததனால் – அவள்
கந்தக முலையில் எரிந்ததனால்
நீதிக் கஞ்சிய தொன்மதுரை – இன்று
ஜாதிக் கஞ்சும் தென்மதுரை”12
என்ற அடிகளில் நீதி நிலைநாட்டப்பட்டதை உணர்த்துகிறார்.

மணிமேகலை
         
‘மணிமேகலைத் துறவு’ என்று அழைக்கப்படுகின்ற ‘மணிமேகலை’ சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. பெற்றோர்கள் பலர் பெண்ணின் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை காணப்படுகிறது. முதல் தேதியானால் கிடைக்கும் அவளது வருமானம் போய்விடக்கூடாதே என்பதற்காகவே பல பெற்றோர்கள் பெண்ணின் திருமணத்தைத் தள்ளிப் போடக் கூடிய அவலமும் நடக்கிறது என்பதை கவிஞர் வைரமுத்து பின்வரும் கவிதைவரிகளில்,

“ஒண்ணாந்தேதி அமுதசுரபிகள்
வைத்ததிருப்பதால் / சில பெற்றோர்கள் அவர்களை
மணிமேகலைகளாய் / மாற்றிவிட்டனர்”13
என்கிறார். மேலும் கவிஞர் பொன்மணி வைரமுத்து அன்னை தெரசா குறித்து எழுதிய கவிதையொன்றில் அவருடைய வற்றாத அன்பையும் குறையாத இரக்கத்தையும் அமுதசுரபிக்கு இணையாக்குகிறார். இதனை,

“அன்புச் சுரபியேந்திய / இன்னொரு மணிமேகலை” 14
என்ற வரிகளில் அன்னை தெரசாவின் கருணையைப் பாராட்டுகின்றார்.

திருமந்திரம்
         
           திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாவதாக அமைந்து பக்தி கருத்துக்களைக் கொண்டதாக இருந்தாலும், இறையைப் பற்றிப் பிற இலக்கியங்கள் கூறுவதிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. இதன் ஆசிரியரான திருமூலர் இறை என்பது நமக்குள்ளேதான் இருக்கிறது என்றும் வேறு இடங்களில் அதனைத் தேட வேண்டியதில்லை என்று உணர்த்தியவர்.
          திருமூலர் நமக்குள்ளேயே இறைவன் உள்ளான் என்று பாடியவர். அவருடைய கருத்தை அவ்வாறே கூறிய கவிஞர் பொன்மணி, பெண்ணையும் இறைக்கு நிகராகக் காண்கிறார் என்பதனை,

“ஊனுக்குள் ஈசன் / கோயில் கொண்டிருப்பதால்
உடம்பைக் காக்கின்றேன் என்றார் திருமூலர்
பெண்ணும் அப்படியே / அவள்
தனக்குச் செய்துகொள்ளும்
அலங்கார மெல்லாம் / தனக்குள்ளிருக்கும்
அம்பிகைக்குச் செய்யும் அலங்காரமே”15
என்னும் கவிதை வரிகள் அவருடைய பெண்மை மீதான மதிப்பீட்டைக் காட்டுகின்றன.

ஆண்டாள்
         
    பக்தி இலக்கியங்கள் நாராயணன்மேல் காதல் கொண்டு அவனையே மணாளனாக அடைந்த பெருமைக்குரியவளாகப் படைத்துக் காட்டுக்கின்றன. ஆனால் இன்று வரதட்சணை வாங்காமல் எந்த ஆண்மகனும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிப்பதில்லை. அதனால் நல்ல கணவன் வாய்ப்பதற்கு விடியற்காலையிலே நீராடி நோன்பிருந்தால் மட்டும் போதாது நிறைய நகைகளும் பணமும் இருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்பதை,

“பாரடி…/ வெளிச்சம் உதிராத கருப்பு விடியலில்
அவரவர் கண்களிலேயே / நீராடிக் கொண்டு…
ஆயிரம் உணர்வுகளோடு / போராடிக் கொண்டு…
உன்  / வில்லிபுத்தூர்த் தோழிகள் இன்னும்
வீட்டிலேயே இருக்கிறார்கள் / வெவ்வேறு வீடுகளில்
வெவ்வேறு ஊர்களில்… / வெவ்வேறு பெயர்களில்;…”16
     என்று பெண்களின் நிலையைப் பாடியதோடு நில்லாமல் வருங்காலத்தில் வரன் வேண்டுமென்றால் வரதட்சணை இன்றி முடியாது. எனவே வரதட்சணைக் கேட்காத மாப்பிள்ளைகள் வரும் வரை இந்தப் பெண்களுக்கு வயது கூடாமல் மார்க்கண்டேயனிகளாய் இருக்கும்படி உன் மாதவனிடம் வரம் வாங்கித்தா என்று ஆண்டாளிடம் கோரிக்கை ஒன்றையும் வைக்கிறார் பொன்மணி வைரமுத்து.

இராமாயணம்         
      நெருப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கத்தையே மனிதன் சிதைத்தான். நெருப்பைக் கடவுளாக வழிபட்டனர். நெருப்பை தீபங்களில் ஏற்றி வழிபட்டனர். குளிர் காய்வதற்காகவும், விலங்குகளை விரட்டவும், சமைக்கவும், சைகை புரியவும், கருவிகள் செய்யவும், களிமண்ணைச் சுட்டப் பாத்திரங்களாக்கவும் பயன்பட்ட நெருப்பை பெண்ணின் கற்பைச் சோதித்தறியும் கருவியாக மாற்றினான் மனிதன். முதன் முதலில் இராமாயணத்தில்தான் பெண் தன் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஏகபத்தினி விரதன் என்றும் பிறன்மனை நோக்காப் பேராண்மையாளன் என்றும், புகழப்பட்ட இராமன் இச்செயலால் பலரது விமர்சனத்துக்கும் ஆளாகிறான் என்பதை,

“கருவி செய்ய – களிமண் சுடப் / பயன்பட்ட நெருப்பை
கற்பைக் கண்டறியும் தர்மா மீட்டராய்
அழுக்குச் செய்தான் அயோத்தி மன்னன்”17
      என்னும் அடிகளில் நெருப்பு அழுக்கை நீக்கிப் புனிதப்படுத்தியது போய் தன்னுடைய செயலால் நெருப்பையே அழுக்குச் செய்துவிட்டான் இராமன் என்று ஆதங்கப்படுகிறார் வைரமுத்து.
 பொன்மணி வைரமுத்து தன் எழுதுமேசை பற்றிய கவிதையில் நீண்ட நாட்களாக அது பயன்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்த்து, அதன் பயன்பாடுகளைப் பட்டியலிடுகிறார்.  அதை அழகுபடுத்தலாமா என்று யோசித்த அவர் அதன் பழந்தன்மையே தனக்கு மிகவும் பிடித்திருப்பதாய்க் கூறுகிறார்.  இதனை,

“அலங்காரஞ் செய்யாது / அசோகவனத்திலிருந்தபடியே
ராமனைப் பார்க்க வந்த சீதையைப்போல /
அதன் பழஞ்சுவடுகளோடு அது இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது”18
      என்ற கவிதை வரிகளின் மூலம் கவிஞர் பழைய மேசைக்குச் சீதையை ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

ஒளவையார்
         
      சங்ககாலம் முதற்கொண்டு ஒளவை என்னும் பெயரில் பல்வேறு பெண்பாற் புலவர்கள் வாழ்ந்துள்ளனர். குமரகுருபரர் காலத்தில் வாழ்ந்த ஒளவை கல்வியைக் குறித்து கூறும்போது ‘யாரும் முழுவதும் கற்றவரில்லை. ஒன்றும் அறியாதவரும் இல்லை. அதனால் தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்புக் கொள்ளக்கூடாது’ என்கிறார். ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்னும் நீதிநூல் பாடலில் எறும்பும் தன்கையால் எண்சாண் என்றார். இதே கருத்தினை,

“கற்றது கைம்மண்ணளவு என்று / கலைமகள் ஓதியது
குமரகுருபரர் காலத்தில் / இன்றைய கலைமகள்கள்
கற்றிருப்பது உலகளவு / சுற்றுவது வானளவு”19
       எனும் வரிகள் மூலம் பொன்மணி வைரமுத்து பெண்கள் கற்றிருப்பது கைம்மண்ணளவு அல்ல. உலகளவு, வானளவு என்று கூறி மகிழ்கிறார்.

உமர்கய்யாம்
         
       உமர்கய்யாம் பாரசீகக் கவிஞர். இவரது கவிதைகள் ‘ருபாயத்’ என்னும் தொகுப்பாக வெளிவந்தவை. கவிமணி அவர்கள் அக்கவிதைகளைத் தமிழில் ‘உமர்கய்யாம் கவிதைகள்’ என்னும் பெயரிலேயே மொழிபெயர்த்துள்ளார். அவற்றுள் சிறந்த கவிதையாகப் பெரும்பான்மையான இலக்கிய வரலாற்றாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்படுவது பின்வரும் கவிதையாகும்.

“வெய்யிற் கேற்ற நிழலுண்டு / வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு / கலசம் நிறைய மதுவுண்டு”20
பொன்மணி வைரமுத்து உமர்கய்யாமின் கவிதையை இவரது வார்த்தைகளாக்குகிறார். இதனை,

“வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்
என் / விருப்பத்திற்குரிய வேப்பமரம்
ஒருகையில் தேநீர் / இன்னொரு கையில் புத்தகம்
இதைவிடவா ஒரு வாழ்க்கை”21
என்னும் கவிதை வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

பாரதி         
      பாரதியின் கவிதையையொற்றி பொன்மணி வைரமுத்து ‘புரட்சிப்பெண்கள்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதையில் புதுமைப்பெண்கள் சமூகக் கொடுமைகளிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர் என்பதை,

“இந்நூற்றாண்டுப் பூவையர் / நிமிர்ந்த நன்னடையும்
நேர்கொண்ட பார்வையுமாய் / புகுந்த வீட்டிற்குப்
புறப்பட்டுப் போய் / ‘காஸ் ஸ்டவ்’ ஏற்றினர்”22
           என்னும் வரிகளில் புதுமைப்பெண்களை எள்ளல் செய்யும் தொனியில் கூறியுள்ளார். முற்காலத்தில் உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்கள் இன்று நவீனமாய் காஸ் ஸ்டவ்களால் கொளுத்தப்படுகிறார்கள். தண்டனை வடிவம்தான் மாறியுள்ளதே தவிர தண்டனை மாறவில்லை என்ற அவலத்தை இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
          இருபதாம் நூற்றாண்டில் பெண் கல்வி வலியுறுத்தியவர்களுள் பாரதி முன்னோடி. அவருக்குப்பின் பாரதிதாசன் முதலானோர் தொடர்ந்து பெண்கல்வியை வலியுறுத்தினர். இன்று கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். இதைப் பொன்மணி வைரமுத்து,

“அப்பா பாரதி / நீ பாடியது சரிதான் / அதிகரிக்கிறது
பெண்கல்வி / ஆணுக்குப்பெண் இளைப்பில்லைதான்”23
என்ற வரிகளில் தன் மகிழ்வைத் தெரிவிக்கிறார்.

பாரதிதாசன்         
       பாரதி பாதையில் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் பாரதிதாசன். அதனால்தான் புரட்சிக்கவிஞர் எனப்பட்டார். குறிப்பாகப் பெண் சார்ந்தத சிக்கல்களுகு;கும் விழிப்புணர்வுக்கும் பாரதிதாசன் பாடுபட்டார். பெண் கல்வியை வற்புறுத்தினார். பெண்களுக்குக் கல்வி வேண்டும். குடித்தனம் பேணுதற்கே என்றார். அதையே பொன்மணி வைரமுத்து,

“ஐயா! கனகசுப்புரத்தினம் இனி / ஆண்களுக்கு கல்வி வேண்டும்
குடித்தனம் பேணுதற்கே என்று / பாட்டை மாற்றிப்
பாடவேண்டும்”24
      என்று கூறியிருப்பதில் பெண் கல்வியில் சமூகம் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதைப் புலப்படுத்துகிறார். மேலும் ஆண்கள் குடித்தனம் பேணுவதற்கு கல்வி வேண்டும் என்கிறார்.

முடிவுரை
    
         வைரமுத்து, பொன்மணி வைரமுத்து ஆகிய இருவரும் பழைய இலக்கியங்களில் இருந்து ஓரிரு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளனர். சில கவிதைகளில் இலக்கியங்களின் கருத்துக்களும் இலக்கியச் செய்திகளும் புதுக்கவிதை நடையில் விரித்து கூறப்பட்டுள்ளன.
காப்பியப் பாத்திரங்களை இன்றைய நடைமுறைச் சிக்கல்களுக்குப் பொருத்திக் காட்டப்பட்டுள்ளது. இலக்கியக் கருத்துக்கள் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு இன்றைய நிலையிலிருந்து அவற்றை விமர்சிக்கும் வகையிலான கவிதைகளும் அமைந்துள்ளன. திருக்குறள், இராமாயணம் ஆகிய நூல்களில் இருந்து மிகுதியான கருத்துகள் கவிஞர்களால் கையாளப்பட்டுள்ளன. ஒளவையார், உமர்கய்யாம், பாரதியார், பாரதிதாசன் போன்ற கவிஞர்களின் கவிதைவரிகளும் கருத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகின்றது.

சான்றெண் விளக்கம்
1.வைரமுத்து ,திருத்தி எழுதிய தீர்ப்புகள்,ப.31

2.வைரமுத்து,பெய்யெனப் பெய்யும் மழை,ப.157

3.விசுவநாதன்,அ.,( உ.ஆ) கலித்தொகை,பா .எண்.34

4.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,பக்.89- 90

5.பாலசுப்பிரமணியன்,கு.வெ.விசுவநாதன். அ. (உ.ஆ) முதலியோர், புறம்.பா.எண் .192,வ.2

6.வைரமுத்து,பெய்யெனப் பெய்யும் மழை,ப.73

7.பொன்மணி வைரமுத்து, பொன்மணி கவிதைகள்,ப.61

8.கல்யாணசுந்தரம். திரு.வி.,(வி.உ), குறள் எண்.621

9.பொன்மணி  வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.129

10.கல்யாணசுந்தரம்.திரு.வி.,(வி.உ), குறள் எண் .292

11.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.206

12.வைரமுத்து,பெய்யென பெய்யும் மழை, ப.157

13.வைரமுத்து, இன்னொரு தேசிய கீதம்,ப.48

14.பொன்மணி வைரமுத்து, மீண்டும் சரஸ்வதி,ப.250

15.மேலது,ப.245

16.பொன்மணி வைரமுத்து ,பொன்மணி கவிதைகள்,ப.3

17.வைரமுத்து,தமிழுக்கு நிறம் உண்டு,ப.31

18.பொன்மணி வைரமுத்து,மீண்டும் சரஸ்வதி,ப.25

19.பொன்மணி வைரமுத்து ,பொன்மணி கவிதைகள்,ப.146

20.தேசிக விநாயகம்பிள்ளை, கவிமணி சி.,உமர்கய்யாம் ,பா.எண் .106

21.பொன்மணி வைரமுத்து ,மீண்டும் சரஸ்வதி,ப.124

22.பொன்மணி வைரமுத்து,பொன்மணி கவிதைகள்,ப.28
23.மேலது,ப.28

24.மேலது,ப.146
                                                                  
Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மோ.ஜ.மகேஸ்வரி,

இணைப்பேராசிரியர், 
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சேலம் 16.

 

வியர்வை பூக்கள்|கவிதை|காஞ்சி கிருபா

வியர்வை பூக்கள் - காஞ்சி கிருபா

🎯 இளைஞனே வா!


தோல்விகளால்..


துவண்டு விடாதே!!


 

🎯 முயற்சி மூங்கிலெடு


இனி…


உன் புல்லாங்குழலில்


வெற்றிப் பாக்கள்


இசைந்து வரும்
!

 

🎯 தூரத்தில்


வைத்துவிட்ட


நம்பிக்கை என்னும்


தூரிகை எடு!!


வெற்றி ஓவியங்கள்


உன் வீடு தேடி வரும்!!!


 

🎯 உன் வெற்றி


விரல்களுக்கு ஊக்கம் கொடு!!!


சாதனைக் கோலங்கள்


உன் வாசலை


வசீகரிக்கும்!!!


 

🎯 உன் எழுதுகோலுக்கு


எழுச்சிகொடு..


உன் தரித்திர


பக்கங்கள்


சரித்திரமாய் மாறும்!


 

🎯 தடை கற்களைக்


குயவனாய் மிதித்துப் போடு!!


உன் வியர்வை
துளிகளில்….


கிடைக்கும்


வெற்றி பாண்டம்!!


 

🎯 உன் உடலுக்கு


உழைப்பு கொடு!!


வியர்வை பூக்கள்


உனக்கு மாலையாகும்!!!


 

🎯 சிந்தனைச் சிறகுகளை


விரித்துபார்….


வெற்றி வானத்திற்கு…


உன் பயணம் தொடங்கும்…


 

🎯 இளைஞனே வா


தோல்விகளால்


துவண்டு விடாதே!!!!
                     

கவிதையின் ஆசிரியர்

காஞ்சி கிருபா

528/1 கட்டபொம்மன் தெரு,

விஷ்ணு நகர், தேனம்பாக்கம்,

சின்ன காஞ்சிபுரம், 631501

 

The Philosophy of Impermanence as Expounded by Thirumoolar|Dr.K.Nagammal

The Philosophy of Impermanence as Expounded by Thirumoolar -Dr.K.Nagammal
Abstract
       This research paper examines the concept of impermanence as expounded in Thirumoolar’s Thirumandiram, arguing that this doctrine serves as a unique catalyst for spiritual liberation. It highlights how Thirumoolar presents human suffering as a consequence of attachment to transient worldly illusions. The path to true deliverance, the study finds, is a dedicated and urgent pursuit of the eternal Ultimate Reality, or Paramaporul. A central tenet is the imperative to achieve this state of supreme bliss within one’s current lifetime. Ultimately, this analysis validates Thirumoolar’s profound legacy as a moral and spiritual guide whose work offers a compelling framework for human welfare and enlightenment.


திருமூலர் காட்டும் நிலையாமை தத்துவங்கள்

ஆய்வுச் சுருக்கம்
      இறைத்தன்மை மிக்க சித்தர் பாடல்களில் திருமூலரின் திருமந்திரத்தில் எடுத்தியம்பப்பட்டுள்ள நிலையாமை தத்துவங்களை வெளிக்கொணந்து அதனூடாக ஆன்மாக்களை ஆன்ம விடுதலையை நோக்கி உந்தப்படுகிற தனித்துவத்தைத் திருமூலர் முன் வைத்திருப்பதை எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு பிறவியிலும் பிறக்கின்ற மனிதர்கள் மாயைகளை நம்பி உலகின் கட்டுக்களால் பின்னப்பட்டு துன்பப்படுகிற நிலையிலிருந்து விடுபட வேண்டுமெனில் அவர்கள் நிலையான பரம்பொருளை எய்திட முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் முயற்சியையும் உடலும் உயிருமுள்ள பொழுதே செய்து வெற்றி காண வேண்டும் அதுதான் வாழ்வின் பேரானந்தம் என்பதைப் புலப்படுத்தியுள்ளது. இவ்வாறு உலகிற்கு நன்மை பயக்கும் நல்லறங்களைக்கூறி ஆற்றுப்படுத்தியப் பங்கை மெய்பித்துள்ளது.

திறவுச் சொற்கள்
           திருமூலர், திருமந்திரம், நிலையாமை, தத்துவங்கள், மெய்யியல்,இறையியல், இறவா நிலை, பேரானந்தம், ஆன்மா, பரம்பொருள், பிறவி, மெய்ப்பொருள், சித்தர் இலக்கியம், சித்தர், சித்தம், சித், யோகம், அறிவுடைமை. 

முன்னுரை
     காலந்தோறும் இலக்கியங்கள் தோன்றி மக்களின் சிந்தனையில் இயங்கி அவர்களை நெறிப்படுத்தி அதன் ஊடாக அவர்தம் வாழ்க்கை முறையை மாண்புற செய்துள்ளது. அந்த வரிசையில் சித்தர் இலக்கியங்கள் உயிர்கள் பிறந்ததன் பயனையுணர்த்தி நிலையில்லா இந்த உலகத்தில் நிலையான மெய்ப்பொருளை அடைவதற்கான வழிவகைகளைக்  கூறி அந்த உயிர்களுக்கான ஆன்ம விடுதலையை வலியுறுத்துவதைக் காணமுடிகிறது. அச்சித்தர்களில் முதன்மையான சித்தர் என்று போற்றப்படுகிற திருமூலரின் திருமந்திரத்தில் உள்மொழியப்பட்டுள்ள நிலையாமை மெய்யியலை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.

திருமந்திரம்
           திருமூலரால் இந்தயுலக மக்கள் யாவர்க்கும் அளிக்கப்பட்ட அனுபவ பிழிவுதான் திருமந்திரமென்னும் நூல். இந்நூல் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக விளங்குவதோடு முதல் ‘சைவ சித்தாந்த சாத்திர நூல்’ என்ற பெருமையும் கொண்டு மிளிர்கிறது. ‘சைவ சித்தாந்தம்’ என்ற சொல்லும் இந்நூலில் தான் முதன் முதலில் கையாளப்பட்டுள்ளது.சேக்கிழாரால் ‘தமிழ் மூவாயிரம்’ என்று சிறப்பிக்கப்பட்ட இப்பனுவலின் ஒன்பது தந்திரங்களில் 1- 4 ஆம் தந்திரங்கள் சிவ ஞானத்தைப் பெறுவதற்கானம சாதனங்களை எடுத்துக் கூறுகிறது. அதேபோல, ஐந்தாம் தந்திரம் சைவ சித்தாந்த உண்மைகளை விளக்குகிறது. மேலும், 6-9 ஆம் தந்திரங்கள் சிவஞானத்தால் பிறக்கும்   நன்மைகளை விளம்புகிறது. திருமூலர் எண்ணாயிரம் பாடல்களை எழுதியிருந்தாலும் கூட அவரியற்றிய திருமந்திரம் என்னும் படைப்பே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது.

சித்தர்கள் 
         ‘சித்’ – என்ற வடமொழி சொல்லிலிருந்து தோன்றியதுதான் சித்தர் என்ற சொல்.  சித் – என்றால் அறிவு என்று பொருள். அதன் அடிப்படையில் சித்தர்கள் நுண்ணறிவாளராகவும் பேரறிவாளராகவும் மெய்ஞ்ஞானிகளாகவும் திகழ்ந்தனர் என்று கொள்ளலாம். ஏனென்றால் சித்தர்கள் பக்தர்களிலிருந்து வேறுபட்டவர்கள். “பக்தி நெறியின்றி வேறு நெறியால் கடவுளைக் கண்டு தெரிந்து இருவினையொட்டி நிகழுங் காணும் உடலோடு உலாவுவோர் சித்தர்.” (அருணாசலம்.மு, தமிழ் இலக்கிய வரலாறு, 14 -ஆம் நூற்றாண்டு அத்-12.) என்று உரைத்துள்ள மு. அருணாசலம் அவர்களின் கருத்தும் இவ்விடத்தில் சிந்திக்க தக்கதாகும்.
அச்சித்தர்கள் சாதி, மதம்,  இனம் இப்படியான சமூகத்தின் பிரிவினைகளுக்கு மிக முக்கிய காரணங்களாக விளங்கக்கூடிய வேறுபாடுகளை ஒழித்து மக்கள் ஒற்றுமையுடன் உயர்ந்த வாழ்வை வாழவேண்டுமென்ற நோக்கில் அவர்களின் விழுமிய வாழ்வியலுக்காகத் தம் படைப்பின் வழியாக உலக மெய்யியலை வழங்கியுள்ளனர். அவற்றில் நிலையாமை தத்துவத்தைப் பற்றி பாடும் பாடல்களை முன் வைத்து இக்கட்டுரைகயில் “திருமூலர் காட்டும் நிலையாமை தத்துவங்கள்” என்ற தலைப்பில் ஆய்வு பொருள் அமைக்கப்பட்டுள்ளது. 

நிலையாமை தத்துவம் 
         தத்துவம் என்பதனை அறிஞர்கள் ‘மெய்யியல்’ என்கின்றனர். குறிப்பாக நிலையாமை தத்துவம் என்பது இந்த உலகத்தில் நிலையற்ற பொருள்களின் உண்மை தன்மையைச் உறுதிப்படக் கூறுவது. “நிலையில்லாத தன்மையே நிலையாமை” (அண்ணாமலை (அ.கு.தலை.) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு, ப. 832) என்று நிலையாமைக்கு க்ரியா அகராதி பொருள் விளக்கம் தருகிறது. 
இப்படியான சிந்தனைகளைப் புரிந்து கொள்ளுதல் என்பதும் அதனை வாழ்க்கையில் பின்பற்றுதல் என்பதும் பெரும்பான்மையான மக்களிடத்தில் எட்டாக்கனியாக இருந்து வருவதைப் பார்க்க முடிகிறது. தன் அனுபவத்தால் ஒன்றினை மிக எளிமையாக உள்வாங்கிக் கொள்கின்ற  மானிடயினம் இதுபோன்ற சித்தாந்தங்களில் தன்னை உட்புகுத்திக் கொள்ளாமல் கடந்து செல்ல எண்ணும் போக்கைக் காணமுடிகிறது. இதன் காரணமாக முடிவில் துன்பத்தில் அழுந்தி வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.  அதனால்தான் திருமூலர் மனித ஆன்மாக்களை இதுபோன்ற துன்ப நிலையிலிருந்து மீட்டெடுத்து இறவாத பெருவாழ்வை நோக்கி செலுத்தும் முகமாகத் தன் படைப்பான திருமந்திரத்தில்  யாக்கை நிலையாமை  25 – பாடல்கள், செல்வநிலையாமை  -9 பாடல்கள், இளமை நிலையாமை 10- பாடல்கள் உயிர்நிலையாமை  10- பாடல்கள் என நிலையாமைக்கு நான்கு அதிகாரங்களை வகுத்து 54 பாடல்களைத் தொகுத்தளித்து அப்பாடல்கள் மூலமாகத் திறம்பட ஆற்றுப்படுத்தியுள்ளார். 

நிலையற்ற உடம்பு 
        பரந்து விரிந்த  இப்பூவுலகத்தில் இன்று, நாம் பார்த்த ஒன்று நாளையில்லை. இன்று நம்முன் நடமாடிய மனிதன் அடுத்த நொடியே இறந்து விடுகின்ற நிலையை கண்முன் கண்ட பின்னும் கூட அறியாமையில் மக்கள் நிலையில்லாதவைகளை நிலையானது என்று மயங்கி கிடக்கின்றார்கள். இத்தகைய தன்மை உடையோரை, 

“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்  
புல்லறி வாண்மை கடை” (திருக்குறள்.331) 
         
     எனக் கூறி இவ்வாறு நம்புகின்ற அறியாமை இழிவானது என்று இடித்துரைக்கிறார் வள்ளுவர். 
 
“ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் 
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு 
சூரையாங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு 
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந் தார்களே” (திருமந்திரம்.145)
         
       எனப் பாடுகிறார் திருமூலர். இதனினும் மேலாக, அதன் உச்சத்தைக் காட்ட விரும்பி இந்த உடலைவிட்டு போகும் உயிர் மீண்டும் இந்த உடலுக்குள் வந்து புகாது (திருமந்திரம்.146,149) அதேபோல, ஒரு குயவன் செய்த குடம் உடைந்து போனால் அதன் துண்டுகளை ஓடு என்று சொல்லி நாளை உதவுமென்றும் எடுத்து வைப்பார்கள். ஆனால், மனித உடல் அழிந்து போனால் அது ஒன்றுக்குமே பயன்படுவதில்லை மாறாக அது நாறிவிடுமென்று உடனே அப்புறப்படுத்தி விடுவார்கள் என்பதை,

“வளத்திடை முற்றத்துஓர் மாநிலம் முற்றும்
குளத்தின் மண்கொண்டு குயவன் வனைந்தான்;
குடம்உடைந் தால்அவை ஓடென்று வைப்பர்
உடல்உடைந் தால்இறைப் போதும் வையாரே.”  (திருமந்திரம்.158)
         
        என மனமுருகிப் பாடுகிறார் எனவே, உடலின் இத்தகு தன்மையை உணர்ந்து மனிதன் சிவ ஒளியைச் சேரும்போது அந்த உடல் அழிவற்ற நிலையை எய்த முடியும் என்ற உறுதிப்பாட்டை ஒரு குயவன் செய்கின்ற சுட்ட மண்பாண்டமும் பச்சை மண்பாண்டமும் ஒரே மண்ணிலிருந்து செய்வதை நாம் கண்டாலும் கூட தீயினால் சுட்டது இறுகி திண்மை பெறும். சுடாமல் இருப்பதோ இறுக்கம் பெறாததால்  மழைநீரில் கரைந்து மீண்டும் மண்ணாகவே ஆகிவிடும். அதைப்போலத்தான் மனித உடம்பும் தவத்தால் சிவவொளியைப் பெற்றுவிட்டால் அழியாது. ஆனால், சிவ ஒளியைப் பெறாதபோது வலிமையைப் பெறாது விரைந்து அழிந்து போகின்றது. இப்படித்தான் இவ்வுலகில் எண்ணற்றவர் இறந்து விடுகின்றனர் என்ற பேருண்மையை,

“மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச்  சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டும்மண் ஆவபோல்
எண்ணின்றிமாந்தர் இறக்கின்ற வாறே.”          (திருமந்திரம்.143)
என விளம்புகிறார்.

நில்லாச் செல்வம்
         இன்றைய மானுட வாழ்வில்  அவர்களின் ஓட்டம், ஓய்வு ஓய்வறியா உழைப்பு,ஒருவர் மீது மற்றொருவர் பொறாமை கொள்ளுதல், ஒருவரை பழிவாங்கித் தான் அந்தயிடத்தில் அமர வேண்டுமென நினைத்தல், தனக்கேயிது கிடைக்க வேண்டுமென்ற பேரவா இப்படி இன்னோரன்ன பல காரணங்களுக்கும் மூல காரணமாக இருப்பது பொருள் தேவை அல்லது பொருளாதாரம் பற்றிய எண்ணங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படியெல்லாம் தேடுகிற இந்த செல்வம் நிலையற்றது என்ற உண்மையைப் புறந்தள்ளி விட்டு வாழும் மக்களைப் பார்த்து சித்தர்கள் கவலை கொள்கிறார்கள்.
அரும்பாடுபட்டுத் தேடி வைத்து அறம் செய்யாது பெருக்குகின்ற எல்லா செல்வமும் என்றோ ஒருநாள் அழியும் தன்மையுடையது. இதனை, உணராத மனிதன் காடு, வீடு, நாடு என எல்லா இடங்களிலும் அதனைத் தேடி அலைகிறான். ஏதோ ஒரு வகையில் அதனை அடைந்த பின்னும் அவனுடன் உடன்வரும் ஆற்றல் அதற்கில்லை என்பதுதான் எதார்த்தம். அதனால்தான் திருமூலர், என்றும் குறையாத செல்வமாக விளங்கும் இறைவனிடம் சேர்ந்துவிட்டால் அந்த உயிரானது அரிய தவங்களையும் செய்ய வேண்டாம்; எதற்கும் அஞ்சவும் வேண்டாம் என்று தெளிவுபடுத்துகிறார் இதனை,

“தெருளும் உயிரொடும் செல்வனைச் சேரில் 
மருளும் பினைஅவன் மாதவம் அன்றே‌”  ( திருமந்திரம்.168)
         
       இவ்வடிகளில் அறியமுடிகிறது. நில்லா இப்பொருள் செல்வத்தை விடுத்து மனித மனமானது என்றும் நிலைக்க வல்ல இறைவனைத் தேடுவதற்கான வழியைக் கண்டு அவனோடு ஒன்றிட வேண்டும் என்கின்றனர் சித்தர்கள். 

இளமை நிலையாமை
       மனித உயிர்கள் பிறந்து வளர்ந்து இளமையை அடைந்து முதுமை பெறுவதும் உறுதி. இப்படியிருக்க இளமையே நிலையானது என எண்ணுவது மாயையானதை நம்புவது அது பயனற்றதுமாகும்.இது போன்ற தத்துவ அறிவுறுத்தலை திருமூலர்,

“ஆண்டு பலவும் கழிந்தன; அப்பனைப்
பூண்டு கொண்டாரும் புகுந்தறி வாரில்லை;
நீண்ட காலங்கள்; நீண்டு கொடுக்கினும் 
தூண்டு விளக்கின் சுடரறி யாரே” ( திருமந்திரம்.178)         
         இறைவனை அறியாமலேயே பல ஆண்டுகள் வாழ்நாளில் கழிந்து விட்டன. இந்த உலக உயிர்களுக்கெல்லாம் அப்பனாக விளங்கும் இறைவனை உள்ளத்திலே கொண்டவர்கள் கூட, ஒளியாகிய அவனை ஆழமாக எண்ணி முழுமையாக அறியவில்லை. அப்படியிருக்க இன்னும் நீண்ட காலம் வாழ்கிற வாய்ப்பு இருந்தும் தூண்டு விளக்கின் பெருஞ்சூடராக இருக்கும் இறைவனை அறிந்து தொழாமல் கழிக்கின்றனரே இந்த மக்கள் என உலக மக்கள் குறித்து வருந்துகிறார். அதேபோல, இளமை என்பது அனுதினமும் தேய்ந்து தேய்ந்து இறுதியிலே மாய்ந்துவிடும் இயல்புடையது. அத்தகைய இளமை கழிந்து விட்டால் எத்தகைய நல்ல அறங்களையும் செய்ய முடியாமல் போகிவிடும் என்பதை,

“தேய்ந்துஅற்று ஒழிந்த இளமை கடைமுறை;
ஆய்ந்துஅற்ற பின்னை அரிய கருமங்கள்;
பாய்ந்து அற்ற கங்கைப் படர் சடை நந்தியை
ஓர்ந்து உற்றுக் கொள்ளும்! உயிருள்ள போதே. ”       (திருமந்திரம்.179) 
         
        எனப்பாடி உயிருள்ளபோதே சிவபெருமானை நன்கு எண்ணி உணர்விலே வைத்துக் கொள்ள வேண்டும் என ஆற்றுப்படுத்துகிறார்.  ஆகவே, உயிர்கள் அனைத்தும் இளமையின் தன்மையை உணர்ந்து அது இருக்கும் காலத்திலேயே இறையொளியோடு கூடுதலே இப்பிறவியின் பயன் என்பதை அறியவைத்துள்ளார்.

உயிர் நிலையாமை
        உயிரைத் தாங்கி நிற்கின்ற உடல் அழியுமேயன்றி உயிர் அழிவதில்லை. உடலும் உயிரும் ஒன்றோடுயொன்று பின்னிபிணைந்தவை அந்த உடலை விட்டு உயிர் பிரிந்து போகும் முன்பே இறைவனின் திருவடி ஒளியைப் போற்றி வழிபட வேண்டும். அப்படி இல்லையேல் எமன் அழைக்கும் நாளில் அந்த இறைவனை அறிந்து போற்றுவதற்கு வாய்ப்பு ஏதுமில்லை என்றுரைப்பதை, 

“தழைக்கின்ற செந்தளிர்த் தண்மலர்க் கொம்பில்
இழைக்கின்ற எல்லாம் இறக்கின்ற கண்டும் 
பிழைப்பின்றி எம்பெரு மான்அடி ஏத்தார்
அழைக்கின்ற போதுஅறி யாரவர் தாமே.    (திருமந்திரம். 187)
          இவ்வடிகள் சுட்டிக் காட்டுகிறது.   உடல், உயிர் ஆக்கம் அதன் இயக்கம் எனத் தெள்ளத் தெளிந்த திருமூலர் முதலில் உடலைப் பாதுகாத்தல் வேண்டும் அதன் மூலம் நீண்ட நாட்கள் வாழலாம் என்றார் இதனை,

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்;
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்      தேனே. ”  (திருமந்திரம். 724
)
             இவ்வடிகள் விளக்கி நிற்கிறது. எப்படியோ வாழலாம் என்று இல்லாது இப்படித்தான் வாழ வேண்டும் எனக் கொள்கைகளோடு வாழும் மனிதர்களுக்கும் அந்த வாழ்க்கையின் நிறைவில் அவர்கள் எய்த வேண்டிய பெருவாழ்வு எது என்பதை உணர்த்தும் ஆற்றல் உடையதே சித்தர் இலக்கியங்கள் என்பது பெறப்படுகிறது. 

மெய்ப்பொருள் உணர்தல்
      செல்வம், யாக்கை,இளமை,உயிர் ஆகிய அழியும் தன்மையுடையவற்றை மனித மனம் வெறுத்தொதுக்கி இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய நிலைத்தன்மையுடைய இறையை அடைவது தான் வாழ்வின் பயன் என உணர்ந்து அத்தகைய, உயர்ந்த வாழ்வை எய்திட எண்ணும் பொழுது அந்த உயிர்கள் சிவஞானத்தை எய்தி பேரொளியோடு ஓரொளியாகச்  சேருகிற மெய்யிலை உணரும் அந்நிலையே வாழ்வின் உன்னதம் என்பதனைச் சித்தர்கள் மெய்பித்துள்ளனர். இங்கே,
“மெய் என்னும் சொல்லுக்கு உண்மை, உடம்பு என்னும் இரண்டு பொருள்கள் உண்டு.”(அரசு வீ., மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்- 18, ப.141)
என்றுரைக்கும் கருத்து ஒப்பிட்டு எண்ணத்தக்கது.

முடிவுரை 
         
🍁மானுடர்கள் அனைவரும் நிலையில்லாத உலகப் நிலைப்பாட்டினை உள்வாங்கிக் கொண்டு நிலையான பரம்பொருளை அடைய வேண்டும். அப்பரம்பொருள் வேறு நாம் வேறல்ல நமது உள்ளம் தான் அந்த இறைவன்  என்ற மெய்யியலை வழங்கி அவர்களின் வாழ்வியலின் காப்பாகவும்; மனித சமூகம் மேம்பாடாகவும் விளங்கும் இதுபோன்ற மடைமாற்ற சிந்தனையின் மூலமாக மனிதனை மேம்பட்ட ஆன்மாவாக நிலைநிறுத்தும் முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
         
🍁மனித உடலானது தவத்தால் சிவ ஒளியைப் பெற்றுவிட்டால் அந்த உடம்பின் அழிவிலிருந்து தப்பலாம் அல்லது உடம்பிற்கு அழிவேயில்லை என்று உறுதிப்படுத்தி உயிர்கள் செல்ல வேண்டிய எல்லையை வகுத்து தருகிறார்.
         
🍁ஆன்மாக்கள் மோட்சம் அடையும் வழிமுறைகளை எடுத்துக்காட்டி அவர்களின் எதிர்கால கனவினை மெய்ப்பட செய்யும் பணியைச் செவ்வனே ஆற்றியுள்ளார்.
         
🍁இப்பூமியில் மெய்யான பொருள் இறைவன் என்பதை உணர்த்தி அதனை அடைவதே ஆன்மாக்களின் பெரும்பேறு, இப்பிறவியின் பயன் என்பதனை எடுத்துக்காட்டி அதற்கான வழிகளான தவம், யோகங்களை கைவரப்பெறுதல் வேண்டும்; குறிப்பாக வாழும் காலத்தில் இறைவனை தனக்குள்ளேயே தேட வேண்டும் என்ற தத்துவ போக்கை சித்தர்கள் நிலைநாட்டியுள்ளனர்
         
🍁வாழும் காலத்தில் ஆண்டுகளைத் தொலைத்துவிட்டு வாழ்வின் இறுதித் தருவாயில் இறைவனை எண்ணுவதால் பயனில்லை என்று ரைத்து வாழும் காலத்தே அழிவில்லா இறைவனை அடைவதே துன்பம் போக்கும் வழி என வலியுறுத்துவதை அறியமுடிகிறது.
         
🍁எப்பொழுது ஆன்மாக்கள் மாயையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறைவனையடைய வேண்டுமென எண்ணுகிறதோ அப்பொழுததே இறையருளால் குருவின் துணையோடு மோட்சத்தை எய்தும் பாக்கியம் பெறுமென்பதைத் திருமூலரின் திருமந்திரப் பாடல் புலப்படுத்துவதை உணர முடிகிறது.
 
துணைநூற் பட்டியல்
1.அண்ணாமலை (அ.கு.தலை.) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு, க்ரியா, New No.2,  old NO.25, 17th East Street Thiruvanmiyur, Chennai- 41, first edition, 1992.

2.அரசு வீ., மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்- 18, இளங்கணி பதிப்பகம், பி 11, குல்மொகர் அடுக்ககம், 35/15 பி,தெற்கு போக்கு சாலை, தியாகராய நகர், சென்னை – 6000 17.

3.அருணாசலம்.மு, தமிழ் இலக்கிய வரலாறு, 14 -ஆம் நூற்றாண்டு அத்-12.

4.மணிவாசகன் புலவர் அடியன், திருமந்திரம், சாரதா பதிப்பகம், ஜி 4 சாந்தி அடுக்ககம் 3 ஸ்ரீ கிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை சென்னை -14, ஏழாம் பதிப்பு, செப்டம்பர் – 2022.

5.புலியூர்க்கேசிகன்,(ப.ஆ) திருக்குறள் பரிமேலழகர் உரை, பூம்புகார் பதிப்பகம், சென்னை – 03, 11 – ஆம் பதிப்பு, 2010.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கு. நாகம்மாள், 
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,
எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,

இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »