
இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ்
E-ISSN : 3048 – 5495
பன்னாட்டு ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
(International Faculty Development Program )
பொருண்மை : “வாசிப்பு வெளியில் சிலப்பதிகாரம்”
நாள் : 05.07.2025 முதல் 11.07.2025 வரை (7 நாள்கள்), நேரம் : இரவு 7:00 முதல் 8:00 மணி வரை, வழி : Google Meet
அன்புடையீர் வணக்கம்,
தமிழ்மொழியின் அரும்பெரும் இலக்கியங்களில் சிறப்புடையதாகக் காப்பியங்கள் அமைந்துள்ளன. காப்பியங்களில் ஒளிரும் ஒற்றை அணிகலனாக விளங்குவது “சிலப்பதிகாரம்” ஆகும். இயல், இசை, நாடகம், நீதியியல், கலை, பண்பாடு போன்ற பழந்தமிழரின் வாழ்வுக் கருவூலங்களை உணரும் வகையில் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைச் சித்திரமாக்கியுள்ளார். கண்ணகியின் பேராற்றல் மாதவியின் நடனத்திறன் நில இயல்புகளுக்கு ஏற்ப மக்களின் வாழ்வியல் கலைகள் போன்றவை சிலப்பதிகாரத்தில் மிளிர்கின்றன. சிலப்பதிகாரத்தின் காப்பிய அறிமுகம், கதை உருவாக்கம், கவிதைக் கட்டமைப்பு, இசை நுட்பங்கள், இலக்கியச் சிறப்புகள், வணிக மேலாண்மைச் சிந்தனைகள், சிலப்பதிகாரக் காதைகளில் சில புதிய வெளிச்சங்கள், பிற பழந்தமிழ் நூல்களுக்கும் சிலப்பதிகாரக் காதைகளுக்குமான ஒப்பீடு போன்ற பலவற்றையும் அறியும் வகையில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிகழ உள்ளது. இந்தச் சிந்தனையூட்டும் நிகழ்வில் பேராசிரியப் பெருமக்கள் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம்.
முதல் நாள் : 05.07.2025 (சனிக்கிழமை)
தலைப்பு : “சிலம்பில் இசை நுட்பங்கள்”
நெறியாளர் : முனைவர் இராச.கலைவாணி
இசைப்பேராசிரியர் (விருப்ப ஓய்வு), இயக்குநர்,
ஏழிசை இசை ஆய்வகம் மூங்கில் தோட்டம் மயிலாடுதுறை.
இரண்டாம் நாள் : 06.07.2025 (ஞாயிற்றுக்கிழமை)
தலைப்பு : “வழக்குரை காதையில் சில புதிய வெளிச்சங்கள்”
நெறியாளர் : முனைவர் வாணி அறிவாளன்
உதவிப்பேராசிரியர், தமிழ்மொழித் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
மூன்றாம் நாள் : 07.07.2025 (திங்கள்கிழமை)
தலைப்பு : “சிலப்பதிகாரத்தில் வணிகமேலாண்மைச் சிந்தனைகள்”
நெறியாளர் : முனைவர் சி.சிதம்பரம்
உதவிப்பேராசிரியர், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம், திண்டுக்கல்.
நான்காம் நாள் : 08.07.2025 (செவ்வாய்க்கிழமை)
தலைப்பு : “வாசிப்பு நோக்கில் சிலப்பதிகாரம் : கதை உருவாக்கமும் வஞ்சிக்காண்டமும்”
நெறியாளர் : முனைவர் இ.சேனாவரையன்
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி, கோயம்புத்தூர்
ஐந்தாம் நாள் : 09.07.2025 (புதன்கிழமை)
தலைப்பு : “மங்கல வாழ்த்துப் பாடலும் காப்பிய அறிமுகமும்”
நெறியாளர் : முனைவர் வ.கிருஷ்ணன்
முதல்வர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூர்.
ஆறாம் நாள் : 10.07.2025 (வியாழக்கிழமை)
தலைப்பு : “சிலப்பதிகாரத்தில் அறிவார்ந்த கவிதைக் கட்டமைப்பு ”
நெறியாளர் : முனைவர் இரா.செல்வஜோதி
இணைப்பேராசிரியர், மொழியியல் துறை,
மலாயா பல்கலைக்கழகம், மலேசியா.
ஏழாம் நாள் : 11.07.2025 (வெள்ளிக்கிழமை)
தலைப்பு : “முல்லைக்கலியும் ஆய்ச்சியர் குரவையும்”
நெறியாளர் : முனைவர் அ.ஜெயக்குமார்
உதவிப்பேராசிரியர், மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி), காளிப்பட்டி, நாமக்கல்
குறிப்புகள்
1.பேராசிரியர்கள் ஏழு நாள்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
2.ஒவ்வொரு நாள் நிகழ்விற்குப் பின் கொடுக்கப்படும் அன்றைய நிகழ்வின் கேள்விகள் சார்ந்த பின்னூட்டப் படிவத்தினைத் தவறாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
3.பதிவுப்படிவம் பூர்த்தி செய்வதற்கு முன், கட்டணத்தொகை ரூ.150 செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை (Screenshot) எடுத்து வைத்துக்கொள்ளவும்.
4.பதிவுப்படிவம் பூர்த்தி செய்யும்போது கவனமாகச் செய்யவும்.
5.பதிவுப்படிவத்தில் கட்டாயம் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டினை (Screenshot) இணைக்கவும்.
6.நிகழ்வுகள் அனைத்தும் Google Meet வழியாக மட்டுமே நடத்தப்படும்.
7.ஏழு நாள்களிலும் கலந்து கொள்ளும் பேராசிரியர்களுக்கு மட்டுமே E-ISSN எண்ணுடன் மின்சான்றிதழ் வழங்கப்படும்.
8.ஒவ்வொரு சான்றிதழுக்கும் குறிப்பு எண் வழங்கப்படும். QR Code மூலமாக எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
புலனக்குழுவில் இணைய :
https://chat.whatsapp.com/EHzDgmWAkww022Gl35xxlX
தொடர்புக்கு :
முனைவர் க.லெனின், முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் : +91 70102 70575
முனைவர் அ.ஜெயக்குமார், இயக்குநர், இனியவை கற்றல் : +91 99945 07627
முனைவர் கை. சிவக்குமார், நிர்வாக ஆசிரியர், இனியவை கற்றல்: +91 99949 16977
