Monday, July 20, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் பரந்து விரிந்த பழங்குடிகள்|கவிதை|சி.அரவிந்த குமார்

பரந்து விரிந்த பழங்குடிகள்|கவிதை|சி.அரவிந்த குமார்

பரந்து விரிந்த பழங்குடிகள்-சி.அரவிந்த குமார்

⛰️தொல்குடிகளாகத்


தோகை விரித்தாடினோம்


மலைப்பகுதியில்..!


 

⛰️ அகதியைப் போல


அடித்துத் துரத்தப்பட்டோம்


மலையின் அடிப்பகுதியில்..!


 

⛰️ உணவுக்கு ஏங்கினோம்


நீர்நிலைகளின் ஒதுக்குபுறத்தில்
 

தூங்கினோம்.


 

⛰️ நாடோடிகளாக அலைகிறோம்


நாகரிக வாழ்க்கையில்

நலிவுற்று இருக்கிறோம்


பொலிவுற்ற நகரத்தில்..!


 

⛰️ கொத்துக் கொத்தாய்


செல்கிறோம் கொத்தடிமையாக


ஒரு கொண்டாட்டமும் கண்டதில்லை


புத்தாடை இல்லாத மேனியாக..!


 

⛰️ கானகமும் கண்கலங்கும்


எங்கள் கதறல்களைக் கேட்டு


வனச்சட்டமும் வசம் சேரும்


எங்கள் வாடிய வாழ்கையோடு..!


 

⛰️ பாடுப்பட்டு வாழ்கிறோம்


பரந்த இவ்வுலகில்


பழங்குடியாய் வாழ்ந்தால்


மதிப்பு கிடைப்பது எவ்வுலகில்..!


கவிதையின் ஆசிரியர்

சி.அரவிந்த குமார்


முனைவர் பட்ட ஆய்வாளர்


தமிழ்த்துறை


தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்


திருவாரூர்-610005

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »