ஆனாய நாயனார் வரலாறு

ஆனாய நாயனார்

ஆனாய நாயனார்

மழநாடு என்னும் நடுநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில், ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார் ஆவார்.

 இவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார்.

 இடையர்களின் தலைவரான அவர், பசுக்கூட்டங்களை மேய்த்து வந்தார்.

 கூடவே குழல் எடுத்து இசைத்தும் வந்தார்.

 ஒருநாள் ஆயனார் பசுக்களை மேய்க்க காட்டிற்குச் சென்றார். அங்கு மரங்களில் கொன்றைப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும் ஆயனாருக்கு மனதில் பேரானந்தம் உண்டானது.

 கொன்றைப் பூக்களுடன் நிற்கும் மரங்கள் சிவபெருமானது திருமுடியாகவே தெரிந்தது அவருக்கு.

 அப்பேரானந்தத்தில் திளைத்த ஆயனார், தன் குழலை மடுத்தார்.

 ஐந்தெழுத்து மந்திரத்தை குழலில் இசைக்க ஆரம்பித்தார்.

 பொழுது போவதை மறந்து இசைத்தார்.

 அவரது குழலிசையில் மரங்கள், நதிகள், பறவைகள் இன்னபிற உயிரினங்கள் எல்லாம் அசைவற்று நின்றன.

தேவர்களும், தேவ மங்கைகளும் நிலைதடுமாறினர்.

 அவரது குழல் இசை பிரம்மலோகம், வைகுந்தம் இவைகளைத் தாண்டி கையிலாயம் வரை எட்டியது.

 ஆனாயரது இசைக்கு மெச்சிய சிவபெருமான் ஆனாயர் முன்தோன்றினார்.

 ‘இனிய இந்த இசையோடு என்னோடு வந்து கலப்பாய்’ என்று வாக்கருளினார்.

 ஆனாய நாயனார் சிவஜோதியில் கலந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here