Wednesday, June 3, 2026
Home Blog Page 35

மார்க்சியப் பெண்ணியம் | Marxist Feminism

மார்க்சியப் பெண்ணியம்

மார்க்சியப் பெண்ணியம்


            காரல் மார்க்ஸும், ஏங்கல்சும் கம்யூனிசக் கருத்துக்கள் பரவக் மார்க்ஸின் கருத்துக்களை ஏஞ்சல்ஸ் காரணமானவர்கள். ‘குடும்பம், தனிச்சொத்துரிமை, அரசு இவற்றின் தோற்றம்’ (Origin of the Family Private Property and the State) என்னும் நூலில் விளக்குகின்றார். இக்கருத்துக்கள் மார்க்சியப் பெண்ணியத்திற்கு அடிப்படையாக அமைந்தன.


பெண்ணடிமையின் காரணங்கள்


            ஏங்கல்சின் கருத்துப்படி, பொருள் முதல்வாதக் கொள்கையின் அடிப்படையில் கூறப்படும் வரலாற்றில், சமுதாய வாழ்வின்
தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்படும் பொருளுற்பத்தியும், மனித மறு உற்பத்தியும் சமுதாயத்தின் வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணிகள் ஆகும். இந்த இரண்டு காரணிகளும் தொழிலாளர்களின் முன்னேற்ற நிலையுடனும், குடும்ப நிலையுடனும் சேர்ந்து வரலாற்றில் ஒரு கால கட்டத்தின் சமுதாய அமைப்பை உருவாக்குகின்றன. அவர் கருத்துப்படி, பெண்கள் குடும்பத்தின் மூலம் தாழ்நிலை அடைவதே முதன் முதலாக உருவாகின்றது. அதைத் தொடர்ந்து அடிமை வர்க்கம் தாழ்த்தப்படுவதும் நிகழ்கின்றது. இவை இரண்டும் தனிநபர் சொத்துரிமையின் தொடக்க விளைவுகள் ஆகும். அதனால் தனிநபர் சொத்துரிமை அழிக்கப்படுவதன் மூலம் பெண்களின் தாழ்நிலையும், அடிமை வர்க்கத்தின் தாழ்நிலையும் மறையும் என்பது அவர் கருத்து.


            பெண்கள் தாழ்நிலை அடைந்த வரலாற்றை அவர் பின்வருமாறு விளக்குகின்றார். சமூகத்தின் ஆரம்பகால கட்டத்தில் தனிநபர் சொத்துரிமை கிடையாது. மக்கள் கூட்டங் கூட்டமாக வாழ்ந்து பலருடன் பாலுறவு கொண்டு மக்களைப் பெற்றெடுத்தனர். அதனால் ஒரு குழந்தைக்கு அதன் அன்னையைத்தான் அடையாளம் தெரியும். தந்தை யாரெனத் தெரியாது. இவ்வாறான சமூகங்களில் தாய்வழிச் சமுக அமைப்பு வழக்கிலிருந்தது. பெண்களுக்கு மதிப்பு இருந்தது. ஆண்களும் பெண்களும் செய்யும் வேலைகளில் உயர்வு தாழ்வு பாராட்டப் பெறவில்லை.

            பின்பு, தனிநபர் சொத்துக்கள் அதிகரிக்க, அதிகரிக்க, மனிதனுக்கு மற்ற மனிதர்களின் உழைப்பு தேவைப்பட்டது. இது மிருகங்களை வளர்க்கத் தொடங்கிய கால கட்டத்திலிருந்து ஆரம்பமாயிற்று. ஆணுக்குப் புதுவிதமான செல்வங்கள் சேர்ந்தன. இதை அவன் தனக்குப் பிறந்த குழந்தைகள் மட்டுமே வாரிசாக அடைய வேண்டுமென விரும்பினான். இதற்கு உதவியாக ஒரு பெண் ஒரு ஆணை மட்டுமே மணம் புரிந்து, அவனுக்குக் குழந்தைகள் பெற்றெடுக்குமாறு வலியுறுத்தினான். இந்தக் கட்டாயம் ஆண்களது வாழ்வில் இல்லை. இக்கட்டத்தில் தாய்வழிச் சமூகமுறை மாறி, தந்தைவழிச் சமூகமுறை ஆரம்பமாயிற்று. ஏஞ்சல்ஸ், இதனைச் சமூகத்தில் பெண் இனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வி என விவரிக்கின்றார்.

            பெண்,  வீட்டில் ஆணுக்கு அடிமையாக வேலை செய்துகொண்டு, அவனது உடற்பசிக்கு இரையாகிக், குழந்தை பெறும் இயந்திரமாக மட்டும் வாழத் தொடங்கினான். இதனால் சரித்திரத்தில் முதல் வர்க்க நசுக்குதல், ஆண், பெண்ணை ஒரு நபர் மணத்தின் மூலம் கட்டுப்படுத்தியதன் மூலம்தான் ஆரம்பமாயிற்று என்கிறார் ஏங்கல்ஸ். பழங்காலக் கம்யூனிசக் குடும்பங்களில் பெண்கள் வீட்டைப் பராமரிப்பது, ஆண் வெளியில்
சென்று பொருளீட்டுவதற்குச் சமமான சமூக மதிப்பைப் பெற்றிருந்தது.

            ஆயின், ஆண் நாயக ஒரு நபர் மணத்தில், பெண்கள் வீட்டில் செய்யும் வேலைகள் ஒருவனுக்கு மட்டுமே செய்யும் தனி வேலைகளாயின. இதற்குச் சமூக மதிப்பு கிடையாது. பெண்கள் பொது வாழ்வில் ஈடுபடுவது தடைப்பட்டது. அதனால் பெண்களின் தாழ்நிலை சமூகத்தில் ஆண் பெண் இருபாலரும் செய்யும் வேலைகளுக்கு அளிக்கப்பட்ட மாறுபட்ட மதிப்புகளினால் ஆரம்பமாயிற்று. இதே நிலைதான் முதலாளித்துவக் குடும்பத்திலுள்ள பெண்களது வாழ்விலும் காணப்பட்டது என்கின்றார் ஏங்கல்ஸ்.


            இயந்திரமயமாக்கப்பட்ட சமூகத்தில், பெண்களும் வெளியே சென்று உழைத்துப் பொருளீட்டும் கட்டத்தில், அவர்கள் ஆண்களிடமிருந்து விடுதலை பெறுகின்றனர். அதனால் தொழிலாள மக்களிடையேதான் உண்மையான அன்பின் அடிப்படையிலான திருமணங்களும், பெண்களின் சுதந்திரமும் காணப்படுகின்றன. இங்கு சொத்து இல்லாததால் ஆண்நாயகத்தை உறுதிப்படுத்தும் அடிப்படை எதுவும் இல்லை. ஆயினும், பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்தாலும் வீட்டு வேலை செய்வது, வெளி வேலை செய்வது இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலையிலேயே உள்ளனர். சமூக வேலைகளில் ஆண்கள் மட்டுமே குடும்பத்தின் பிரதிநிதியாகச் செயலாற்றுகின்றனர் என்றும் ஏங்கல்ஸ் விளக்குகின்றார்.


பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்


மார்க்சிசக் கருத்துப்படி, உண்மையான சமூக சமத்துவம், ஆண், பெண் இருபாலரும் சட்டப்படி சம உரிமைகளை அனுபவிப்பதன் தொழில்களில் ஈடுபடுவதன் மூலமே நடைபெற முடியும். அதற்கு மூலமே செயற்பட முடியும். இது பெண் இனம் முழுவதும் பொதுத் பொருளாதாரப் பகுதியாக இருப்பது தவிர்க்கப்படுதல் வேண்டும். அடிப்படையாக, ஒரு நபர் மணம் சமூகத்தின் அடிப்படைப் வரப்போகும் சமுதாயப் புரட்சியின் மூலம் சொத்துக்கள் சமுதாய உடமையாகும்பொழுது, வாரிசு முறையில் பெற மிகக் குறைந்த
சொத்துக்களே இருக்கும். ஒரு நபர் மணமுறையின் அடிப்படையான தனிநபர் சொத்துரிமை தகர்க்கப்படும். அப்பொழுது ஒரு நபர் மணமும் தகர்ந்துவிடும்.

            தனிக்குடும்ப நிர்வாகம் சமூக நிறுவனத்திற்கு மாற்றப்படும். குழந்தை வளர்ப்பும் கல்வியும் பொதுப் பணிகளாக மாறும். ஆண் பெண் உறவுகள் அன்பின் அடிப்படையில் அமையும். அதனால் திருமண உறவுகள் ஒருமண உறவாகவே இருக்கும். இதில் ஆணின் ஆதிக்கம் மறையும்.
இந்நிலை மாற ஒரு புரட்சி தேவை. இதில் பெண் தொழிலாளர்கள் ஆண் தொழிலாளர்களோடு இணைந்து போரிட வேண்டுமேயன்றி, மற்ற வர்க்கப் பெண்களோடு ணைந்து செயற்படக்கூடாது என்று ஏங்கல்ஸ் கூறுகின்றார்.


குறைபாடுகள்


            ஐரோப்பிய நாடுகளில் பெண்ணியம் வளர்ச்சியுற்று, பெண்கள் உயர்கல்வி பெற்ற காலத்தில் மார்க்சியக் கோட்பாடு வலிமை பெற்று விளங்கியது. அக்காலத்தில் உயர்கல்வி பெற்ற பெண்ணியவாதிகள், மார்க்சியத்தில் நம்பிக்கை கொண்டவர் களாக இருந்தனர். இங்கிலாந்துப் பெண்ணியவாதிகளிடையே இக்கோட்பாடே வலிமையுற்றிருந்தது. ஆயின், அவர்கள் தொழிற் சங்கங்களுடன் இணைந்து பெண்களின் உரிமைகளுக்காகப் போராடிய காலத்தில், மார்க்சியம் பெண்களின் அடிமைத்தனத்தின் காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் சரியான முறையில் விளக்கவில்லை என்ப்தைப் புரிந்து கொண்டனர். முதலாளித்துவம் எவ்வாறு ஆண் நாயகத்தால் பயனடைகிறது என்பதை விளக்கும் அதே சமயத்தில், ஆண் நாயகம் முதலாளித்துவத்தின் துணையின்றித் தனித்து எவ்வாறு செயற்படுகின்றது என்பதை மார்க்சிசம் விளக்க முயலவில்லை.

            உதாரணமாக, தனிநபர் சொத்துரிமையும் முதலாளித்துவமும் ஏற்படுவதற்கு முற்பட்ட காலகட்டங்களிலும், பெண் எனும் வர்க்கம் ஆண் வர்க்கத்தால் நசுக்கப்பட்டு வந்திருக்கின்றது; அதற்கான காரணங்களை மார்க்சிசம் விளக்க முற்படவில்லை. அதே போன்று தனிநபர் சொத்துரிமை அழிக்கப்பட்டால் பெண்கள் ஆண்களுக்கிணையான சமூக ன்று. தனிநபர் மதிப்பைப் பெறுவார்கள் என்பதும் உண்மையன்
சொத்துரிமைகள் அழிக்கப்பட்ட கம்யூனிச நாடுகளிலும் பலவிதங்களில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்நிலையில் உள்ளனர் என்பதும் வெளிப்படையாகும். மேலும், இங்கிலாந்தில் தொழிற்சங்கப் போராட்டங்களில் பெண்கள் ஈடுபட்டபொழுது, அவர்களுக்கு ஆண் தொழிலாளர்களிடம் இருந்து தகுந்த ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் பெண்கள் ஆண்களுடன் சேர்ந்து போராடுவது தகுந்த பயனளிக்குமா என்ற வினாவும் பெண்ணியவாதிகளிடையே எழுந்தது.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

மிதவாதப்-பெண்ணியம்

மிதவாதப் பெண்ணியம் | Moderate Feminism

பெண்ணடிமையின் காரணங்கள்

            பதினெட்டாம் ஐரோப்பாவிலும் முதன் முதலாகத் தோன்றிய பெண்ணியக் கருத்துக்கள், மிதவாதப் பெண்ணியம் என்னும் பிரிவில் அடங்கும். பிரான்சு நாட்டில் உருப்பெற்ற சமத்துவம், சகோதரத்துவம், விடுதலை என்ற பிரெஞ்சுப் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்களும், அமெரிக்காவில் சுதந்திரம், தன்னாட்சி என்ற கருத்துக்கள் வலுப்பெற்றதன்மூலம் விளைந்த அமெரிக்கப் போரும், தனிமனிதனுக்குச் சுதந்திரமும், முக்கியத்துவமும் அளிக்கப்படுதல் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் தோன்றியவை.

            அவை, ‘ஒவ்வொரு மனிதனுக்கும் சில பிறப்புரிமைகள் உள்ளன. அவை அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுதல் வேண்டும்’ என வலியுறுத்தின. சுதந்திரம் என்ற மதிப்பு, எல்லா மதிப்புகளையும்விட மேலானது என்ற கருத்து அக்காலத்தில் மேலோங்கி நின்றது. ஆயின், இச்சுதந்திர எழுச்சி தோன்றிய ஆரம்ப காலத்தில் இவ்வுரிமைகள் அனைத்து மத, இன, வர்க்கத்தைச் சார்ந்த ஆண் மக்களுக்கு மட்டுமே தேவை என வலியுறுத்தப்பட்டது. இவை பெண்களுக்கும் தேவை என்று யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. இதற்குச் சில முக்கியக் காரணங்கள் இருந்தன.

முதலாவது, பெண்கள் ஆண்களைவிட பகுத்தறிவுத் திறனில் குறைந்தவர்கள் என்ற கருத்து அக்கால மக்களிடையே நிலைத்திருந்தது. அதனால் அவர்கள் மனிதர்கள் என்ற தகுதியைப் பெறத் தகுதியற்றவர்கள் என்று அவர்கள் கருதினர்.

            இரண்டாவது காரணம், பெண்கள் முதலில், ‘பெண்கள்’ என்ற மதிப்புக்களின் அடிப்படையில்தான் உணரப்படுகின்றனர். பின்புதான், ‘மனிதர்கள்’ என்ற அடிப்படையில் உணரப்படுகின்றனர். அதனால் பெண்கள் அவர்களுக்குரிய தனியான திறமைகளின் அடிப்படையில் உணரப்படவில்லை. ஆனால், ஆண்களைப் பொருத்த வரையில், அவர்கள் தங்கள் தகுதிகளின் அடிப்படையில் உணரப்படுகின்றனர். இவ்வாறான கருத்துக்களும், நம்பிக்கைகளும் பெண்களுக்குத் தனிமனித சுதந்திரம் தேவை என்று நினைப்பதற்கே இடங்கொடுக்காதவாறு தடை செய்தன.

நூற்றாண்டில் அமெரிக்காவிலும், மிதவாதப் பெண்ணியத்தில் மனிதர்களைப் பற்றிய இரண்டு கருத்துக்கள் முக்கியப் பங்கு வகித்தன. ஒன்று, காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் திறமை; இரண்டாவது, தனிமனித சுதந்திரம். முதல் கருத்தின்படி பெண்களுக்கும் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவுத்திறன் உள்ளது என்ற கருத்து மிதவாதப் பெண்ணியவாதிகளால் விவாதங்களின் மூலம் விளக்கப்பட்டது. இரண்டாவது, பெண்ணும் ஆணைப்போல் ஒரு தனி நபர் என்பதாகும். பெண் ஆணின் போகப்பொருள் அன்று என்ற கருத்தும் நிறுவப்பட்டது. அதனால் ஆணைச் சார்ந்து பெண் வாழும் நிலை மாறி, அவளுக்குத் தனிமனித உரிமைகளும், சுதந்திரமும் தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது.

இவ்வாறான சமூகச் சூழலில், ஆரம்பகால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களுக்குத் தனிமனிதப் பிறப்புரிமைகளைக் கோரினர். இவர்கள், அக்கால கட்டங்களில் தீவிரமடைந்திருந்த சமத்துவம், மக்களாட்சி முதலிய தனிமனித சுதந்திரக் கருத்துக்களுக்கும், நடைமுறையில் பெண்கள் அடிமைகளாக எவ்வித சுதந்திரமுமின்றி உள்ள இடையில் நடத்தப்படுவதற்கும் முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினர். ஆரம்ப காலகட்டத்தில் 1792-இல் மேரி உல்ஸ்டோன் கிராப்ட் எழுதிய ‘பெண்களின் உரிமைகளை நியாயப்படுத்துதல்’, 1848- இல் செனாகாபால்ஸ் பேரவையின் அரசியலமைப்பு, 1869-இல் ஜான் ஸ்டூலட் மில்லின் படைப்பான ‘பெண்கள் அடிமையைப் பற்றி’ முதலிய படைப்புக்கள் இக்கருத்துக்களையே வலியுறுத்துகின்றன.

ஆரம்ப கால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் முக்கியமான இடம் குடும்பமே என வலியுறுத்தினர். இவர்கள் ஆண் பெண் இருபாலருக்கிடையே வழக்கத்திலுள்ள வேலைப் பங்கீடுகளை எதிர்க்கவில்லை. ஆயின், இவ்விரண்டு வேலைகளுக்கிடையே உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது; இரண்டும் சமமாகக் கருதப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினர்.

பெண்கள் முன்னேற்ற வழிமுறைகள்

மிதவாதப் பெண்ணியவாதிகள் சமூகத்தில் பெண்கள் தாழ்நிலை அடைந்திருப்பதற்குச் சமூகத்தில் நிலவிவரும் சில குறைபாடுகளே காரணம் என்று கருதினர். அதனால் அவற்றைச் சில சீர்திருத்தங்களின்மூலம் சரிசெய்துவிட முடியும் என்று நம்பினர். அவர்கள் கருத்துப்படி, இம்மாற்றங்களுக்குப் புரட்சிகள் எதுவும் தேவையில்லை. மேலும் புரட்சி என்பது தற்பொழுது சமூகத்தில் நிலவிவரும் சுதந்திரத்தையும் அழித்துவிடும் என்று அச்சமுற்றனர்.


            பெண்களின் தாழ்நிலையை மாற்ற அவர்கள் காட்டிய வழிகள் சில. அவற்றில் முக்கியமானது, பெண்களுக்கு உரிமைகள் அளிக்க வகை செய்யும் சட்டச் சீர்திருத்தங்கள் ஆகும். ஏனெனில் பெண்ககளின் தாழ்நிலைக்கு அக்காலத்தில் அவர்களுக்கு உரிமையளிக்கும் வகையில் சட்டங்கள் கிடையாது. இவ்வாறான உரிமைகளில் முக்கியமாக அளிக்க வேண்டியது சொத்துரிமையும், பொது (Civil) உரிமையும் ஆகும்.

மேலும், திருமணம் என்பது உள்ள உடன்பாடாகக் மனைவியருக்கிடையே கணவன் கருதப்படல் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். பெண்கள் தங்கள் உரிமைகளை உணருமாறு அவர்களுக்குக் கல்வி அளிக்க வேண்டுமென்றும், பெண்களைப் பற்றி சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களைப் பற்றிய நல்ல கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இம்மாற்றங்களை அவர்கள் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, பொது மக்களுக்குப் புதுக் கருத்துக்களைக் கல்வியின் மூலமும், மக்கள் தொடர்புச் சாதனங்களின் மூலமும் பரப்புவது, சட்டத்தைப் பயன்படுத்துவது முதலிய வழிமுறைகளின் மூலம் கொண்டு வர முடியும் என்று நம்பினர்.

கற்பழிக்கப்பட்ட பெண்கள், கொடுமைகளுக்குள்ளான
பெண்கள், அபலைகள் முதலியோருக்கு ஆதரவு இல்லங்களையும் அவர்கள் நடத்தினர். குழந்தைகள் காப்பகங்களும் செயற்பட்டன. ஒவ்வொரு ஆணும், பெண்ணும், தன்னை மேம்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டுமென்பது அவர்களது நோக்கமாகும்.

பிற்கால மிதவாதப் பெண்ணியம்

பிற்கால மிதவாதப் பெண்ணியவாதிகள் பெண்களின் நல்லியல்புகள் என்று சமூகம் சித்தரிக்கும் இயல்புகள் அவர்களை 
வீட்டிற்குள் சிறைப்படுத்தி, அவர்களுடைய ஆற்றல்கள், உந்துதல்கள் இவைகள் வெளிப்படாதவாறு அடக்கி, அவர்களுடைய சுய மதிப்பைக் கெடுக்கின்றது என்று கருத்துத் தெரிவித்தனர். இதை அவர்கள் ‘பெண்மை என்னும் மாயை’ என அடித்துக் கூறினர். இந்நிலைமாறப் பெண்கள் தங்களை அர்த்தமுள்ள வாழ்க்கைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், திருமணம், தாய்மை இவற்றுடன் வாழ்க்கைப் பணியையும் இணைத்துப் புதுவிதமான வாழ்க்கைத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் விரும்பினர். இது ஒரு பெண்ணின் முக்கியமான இடம் குடும்பமே என்ற ஆரம்பகாலப் பெண்ணியக் கருத்தினின்றும் வேறுபட்டு நிற்கின்றது.

மிதவாதப் பெண்ணியத்தின் குறைபாடுகள்


            மிதவாதப் பெண்ணியம் ஒரு சீர்திருத்தவாதம். இது வர்க்க, இன, பால்சார்ந்த அடக்குமுறைகள் பெண் இனத்தை நசுக்குவதைப் பற்றி ஆராய முற்படவில்லை. மேலும், இது பெண் இனத்தின் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆணாதிக்க மதிப்புகளை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவற்றை ஒப்புக் கொள்கின்றது. அதனால் பெண்களின் தாழ்மை நிலை பற்றிய சரியான விளக்கங்களைக் கொடுக்கத் தவறிவிட்டது.


நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

 

இதழியலின் தொழில் வாய்ப்புக்கள் என்னென்ன?

இதழியலில் தொழில் வாய்ப்புகள் என்னென்ன

இதழியலின் தொழில் வாய்ப்புக்கள்

I. வளர்ந்து வரும் இதழியல் பணிகள்

II.இருவகை இதழியலாளர்கள்

I. வளர்ந்து வரும் இதழியல் பணிகள்


            இதழியல் பணி தற்கால உலகில் போற்றுதலுக்கும் புகழுக்கும் உரிய ஒன்றாகி வருகின்றது. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இதழியல் துறையில் வேலைவாய்ப்புக்கள் பெருகி வருகின்றன. புதுப்புது தொழில் நுட்பங்களை இதழ்களின் வெளியீட்டுத் துறையில் பயன் படுத்துவதால், தொழில் நுட்ப வல்லுநர்களும், இதழ்களின் வீச்சு விரிவடைவதால், பல்வேறு பணிகளைச் செய்பவர்களும் நாள்தோறும் கூடி வருகின்றனர். இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் இதழியல் பணிகள் இதழ்களோடு சேர்ந்து வளர்கின்றன.


இதயம் ஒன்றிய ஈடுபாட்டோடு இதழியல் பணியை மேற்கொள்கின்றவர்கள், அதிலிருக்கும் தீரச்செயல்களுக்கும், சாகசச் செயல்களுக்கும் உள்ள வாய்ப்புக்களில் தனி இன்பமும், உள்ளார்ந்த மனநிறைவும் காண்பார்கள். மக்களாட்சியில் வரலாறு படைத்த இதழியலாளர்களை நாடு என்றும் மறப்பதில்லை.


இப்பொழுது புதுப்புது நாளிதழ்களும், இதழ்களும் தோன்றுகின்றன. நாளிதழ்கள் வெளியிடும் பிரதிகளின் எண்ணிக்கையும் வியக்கத்தக்க அளவில் மிகுந்துள்ளன. செய்திகளை சேகரிப்பதிலும், அச்சுக்கலையிலும், இதழ்களின் தோற்றப் பொலிவிலும் அவற்றைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவதிலும் புதுப்புது மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை எல்லாம் இதழியலில் வேலை வாய்ப்புப் பணிகளை பல்கிப் பெருகத் துணை செய்கின்றன.

ஒரு காலத்தில், “இதழியலாளர்கள் பிறவியிலேயே அதற்குரிய திறமைகளைப் பெற்றிருக்க வேண்டும்,” என்று கருதினர். இப்பொழுது இக்கருத்து மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் ஆர்வம் இருந்தால், இதழியல் கல்வியும் பயிற்சியும் பெற்று இதழியலாளராகத் திகழமுடியும் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.


II.இருவகை இதழியலாளர்கள்:

 இதழியலில் பணி செய்பவர்களைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

இதழியலாளர்கள்
(Journalists)


தொழில்முறை இதழியலாளர்கள்                                                      சுதந்திர இதழியலாளர்கள்

       (Professional Journalists)                                                                           (Free-lance Journalists)

இந்த இருவகை இதழியலாளர்களையும் பற்றித் தனித்தனியாக விளக்கலாம்.


தொழில்முறை இதழியலாளர்கள் :

            ஏதாவது ஒரு இதழில் மாத ஊதியம் பெற்றுக் கொண்டு பணி செய்கின்றவர்களைத் தொழில் முறை இதழியலாளர்கள் என்கின்றோம். இவர்கள் சேகரிப்பவர்களாகவோ, எழுதுகின்றவர்களாகவோ,
துணையாசிரியர்களாகவோ, செய்திகளைச் செய்திகளை-சிறப்புக் கட்டுரைகளை எழுதியவற்றைச் செப்பனிடும் இதழ்களுக்கு முழுவடிவம் தருகின்ற ஆசிரியர்களாகவோ, ஒவியர்களாகவோ, புகைப்படக்காரர்களாகவோ பணியாற்றுவார்கள்.


பொதுவாக, தொழில் முறை இதழியலாளர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்கள் பணியாற்றும் இதழ்களே அவர்களுக்குப் பயிற்சிக்களமாக இருக்கும் காலப் போக்கில் தொழில் திறன் பெற்று விளங்குவார்கள்.


தொழில்முறை இதழியலாளர்கள் தங்களது விருப்பம் போல் செயல்பட முடியாது. தேவைகளுக்கேற்பச் செயல்படுவது இவர்களது கடமையாகும். பெரிய தாங்கள் பணியாற்றும் இதழ்களின் இதழ்களில் பணியாற்றும் இதழியலாளர்களின் பெயர்கள் வெளியிலேயே தெரியாமல் போகலாம்.

சுதந்திர இதழியலாளர்கள்:

எந்த ஒரு தனி செய்தித்தாளோடும், தங்களைப் பிணைத்துக் கொள்ளாமல், தங்களது இதழோடும் விருப்பம்போல் இதழ்களுக்கு எழுதவோ, ஒவியம் தீட்டவோ, புகைப்படம் எடுக்கவோ, வேறு தேவையான பணியையோ செய்வார்கள். இவர்கள் மாத ஊதியம் பெறாமல், இதழ்களிலிருந்து செய்யும் பணிக்குத் தனித்தனியான அன்பளிப்புப் போல ஊதியம் பெறுவார்கள்.


நமது நாட்டில் சுதந்திர இதழியலாளராகப் பணியாற்றிக் கொண்டு வாழ்வதென்பது மிகவும் சிரமமானது. தொடக்ககாலத்தில் இதழ்களில் இடம் பிடிக்கவே போராட வேண்டியதிருக்கும். ஆனால், பெயரும் புகழும் பெற்றுவிட்டால் சுதந்திர இதழியாளர்களாலும் வளமாக வாழமுடியும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க,

1.இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இதழியலாளரின் தகுதிகள்

இதழியலாளரின் தகுதிகள் யாவை?


            ஒருவர் இதழியலாளராக வாழ்க்கையை நடத்தி, பெயரும் புகழும் பெற்றுத்திகழ வேண்டுமானால், அவரிடம் இதழியல் தொழிலுக்கு வேண்டிய சில பொதுத் தகுதிகளும் (General Qualifications), சில சிறப்புத் திறன்களும் (Special skills) இருக்க வேண்டும். இவை இயல்பாக அமையாவிட்டால் பயிற்சியின் மூலமாகவும், முயற்சியின் வாயிலாகவும் ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். இதழியலாளர்களுக்கு வேண்டிய தகுதிகளையும் திறன்களையும் விளக்கிக் கூறலாம்.

(i) பொதுத் தகுதிகள் :

            இதழியலில் பணி செய்கின்றவர்களிடம் அமைந்திருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க பொதுத் தகுதிகளைத் தொகுத்துக் கூறலாம்.

1.கல்வித் தகுதி :

      இதழியலாளராகப் பணி செய்ய விரும்புபவர் ஓரளவு நன்கு எழுதப் படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும். பெரும்பாலான இதழ்கள் பொதுவாகப் பட்டம் பெற்றவர்களையே பணியிலமர்த்த விரும்புகின்றன. பொதுக்கல்வித்தகுதியோடு, எந்த மொழி இதழில் பணியாற்றச் செய்கின்றாரோ அந்த மொழியில் எழுத்தாற்றல் பெற்றிருக்க வேண்டும். பல மொழிகளைத் தெரிந்திருப்பது இதழியல் பணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி பெற்றவர்களால் இதழியல் பணிகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்.

2. பொது அறிவுத்தேர்ச்சி:

      பொது அறிவில் தேர்ச்சி பெற்றிருப்பது இதழியலுக்கு வேண்டிய ஒரு தகுதியாகும். எடுத்துக்காட்டாக, செய்தியாளர் எந்தச் செய்தியைத் திரட்டினாலும், அந்தச் செய்தி சரியானதா வென்பதைத் தீர்மானிக்கவும், அதனைப் பற்றி எழுதவும் பொது அறிவு தேவையாகும். உலகியலறிவு பெற்றவர்களால் இதழியல் பணிகளை அருமையாகச் செய்ய முடியும்.

3. வீர தீரச் செயல்களில் ஆர்வம்:

இதழியல் பணியில் பல வகை இடர்களை எதிர் நோக்க வேண்டியதிருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளிலும் அறிவாற்றலோடும், துணிச்சலோடும் இதழியலாளர்கள் செயல்பட வேண்டும். அதற்குரிய அஞ்சாமை இயல்பு இதழியலாளர்களுக்குத் தேவை.

4. கடின உழைப்பு :

இதழியலாளர்கள் காலம் கருதாமல் உழைக்கும் இயல்புடையவராக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, செய்தியாளர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் செய்திகளுக்காகக் காத்திருக்க வேண்டும். ஓய்வு ஒழிவின்றி அல்லும் பகலும் அயராமல் உழைக்கின்றவர்களால் தான் இதழியலில் பெயரும் புகழும் கொண்ட சிறப்பினைப் பெற முடியும்.

5. பொறுப்புணர்ச்சி:

இதழியலாளா மிருந்த பொறுப்பு வுணர்ச்சியோடு செயல்பட வேண்டும். தனது பணிகளின் விளைவுகளை உணர்ந்து செயல்பட வேண்டும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய தெளிவு இதழியலாளருக்கு வேண்டும்.

6. சுதந்திரமாகச் செயல்படல்:

இதழியலாளர்கள் எந்த விதக் கட்டுப்பாட்டிற்கும் ஆட்படாமல், சுதந்திரமாகச் செயல்படும் மனப்பாங்கினைப் பெற்றிருக்க வேண்டும். சுதந்திர உணர்வு இல்லாதவர்களால் இதழியலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்த முடியாது.

7. சத்திய வேட்கை:

இதழியலாளர்கள் சத்திய வேட்கை வுடையவர்களாக இருக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் பொய்யானவற்றைப் பரப்பக் கூடாது.

8. அற உணர்வு :

இதழியலாளர்கள் நடுநிலை நின்று அறவுணர்வோடு செயல்பட வேண்டும். எந்த நிலையிலும் சமுதாய நீதிக்குப் புறம்பாகச் செயல்படக் கூடாது.

9.நாட்டுப் பற்று :

இதழியலாளர்களிடம் தாய் நாட்டுப் பற்றிருக்க வேண்டும். அப்பொழுது தான் இதழியல் பணியைத் தொண்டு மனப்பான்மையோடு செய்ய முடியும். நாட்டின் முன்னேற்றத்திற்கு இதழியல் பணி மூலம் தொண்டு செய்கின்ற நோக்கம் இருந்தால், அவரது பணியால் பெரும்பலன்கள் விளையும்.

(ii) சிறப்புத் திறன்கள்:

ஆசிரியர் தொழில், மருத்துவர் தொழில் போன்று இதழியல் தொழிலும் தனித்திறமைகளைச் சார்ந்து அமைகின்றது. செய்யும் தொழிலுக்கு வேண்டிய திறமைகளைப் பெற்றிருக்காவிட்டால், இத்தொழிலில் வெற்றி பெற இயலாது. இதழியல் தொழிலுக்கு வேண்டிய சிறப்புத் திறமைகளைச் சுட்டிக்காட்டலாம்.

1. எழுத்துத்திறன் :

இதழியலில், குறிப்பாக செய்தித்திரட்டுதல், செப்பனிடுதல் (Editing) போன்ற பணிகளைச் செய்பவர்களிடம் எதற்கும் வடிவமைத்து எழுதும் திறன் இருக்க வேண்டும். எழுதுவது ஒரு கலையாகும். எழுதுவதை விளக்கமாகவும், நுட்பமாகவும், பிறர் மனங்கொள்ளத்தக்க வகையிலும் எழுத வேண்டும். சுவையான எழுத்து நடையை வாசகர்கள் விரும்பிப் படிப்பார்கள். எழுத வேண்டியதை உரியகாலத்தில், விரைந்து எழுதித்தரும் ஆற்றலை இதழியலாளர்கள் முயன்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.

2. தேர்ந்தெடுக்கும் திறன் :

உலகத்தில் எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடக்கலாம். அவை எல்லாம் இதழ்களில் வெளியிடும் தகுதி பெறுவதில்லை. எவற்றை எப்படி வெளியிட வேண்டுமென்பதைத் தெரிந்தெடுக்கும் திறன் இதழியலாளர்களுக்குத் தேவை.

3.மெய்ப்பொருள் காணும் திறன்:

‘எப்பொருள் எத்தன்மைத் தாயின்’, எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும்’ அப்பொருளில் மெய்ப் பொருள் காணும் திறன் இதழியலாளருக்குத் தேவை. உண்மை இதுவென்று ஆராய்ந்தறியாமல் எதனையும் வெளியிடக் கூடாது.

4.நினைவாற்றல்:

இதழியலாளர்களிடம் நல்ல நினைவாற்றல் இருக்க வேண்டும். எல்லா நிகழ்வுகளையும் உடனுக்குடன் எழுத இயலாது. பலவற்றை நினைவில் நிறுத்திக் கொண்டு செயல்பட வேண்டும். அப்பொழுது தான் செய்திகளைச் சீர்குலைக்காமல் வெளியிட முடியும்.

5. சிறப்புப்பயிற்சி:

தொழிலில் பயன்படுத்துகின்ற கருவிகளை இயக்கவும், பிற பணிகளைச் செய்யவும் சிறப்புப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். எதிர்காலத்தில் இதழியல் துறையில் மேலும் நிறைய வேலைவாய்ப்புக்கள் தோன்றும் சூழல் இருக்கின்றது. அவற்றைப் பலரும் குறிப்பாக இளைஞர்கள், நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

முருக நாயனார் புராணம்

முருக நாயனார்

முருக நாயனார்

இறைவர் திருப்பெயர் :ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் :ஸ்ரீ கருந்தார்குழலி

அவதாரத் தலம் :திருப்புகலூர்

முக்தி தலம் : ஆச்சாள்புரம்

குருபூஜை நாள் : வைகாசி – மூலம்

“புலரும் பொழுதின் முன்னெழுந்து புனித நீரில் மூழ்கிப் போய்

மலரும் செவ்வித் தம்பெருமான் முடிமேல் வான்நீர் ஆறுமதி

உலவும் மருங்கு முருகு உயிர்க்க நகைக்கும் பதத்தின் உடன் பறித்த

அலகில் மலர்கள் வெவ்வேறு திருப்பூம் கூடைகளில் அமைப்பார்.”


பாடல் விளக்கம்:

            பொழுது விடிவதற்கு முன்பாக எழுந்து, தூய நீரில் மூழ்கிச் சென்று, தம்பெருமானின் திருமுடிமேல் பிறையுலவும் திருச்சடையிடத்து முகையவிழ்ந்து மலர்கின்ற செவ்வி பார்த்து, எடுத்த அளவற்ற மலர்களை வெவ்வேறாகத் திருப்பூங்கூடைகளில் சேர்ப்பாராய்.

திருப்புகலூர் தெய்வமணம் கமழும் பழம்பெரும் திருத்தலம்! இத்தலத்திலுள்ள சிவன் கோயிலுக்கு வர்த்தமானேச்சுரம் என்று பெயர். இத்தலத்தில் அந்தணர் குலத்தில் முருகனார் என்னும் சிவத்தொண்டர் தோன்றினார். முருகனார் இளமை முதற்கொண்டே இறைவனின் பாதகமலங்களில் மிகுந்த பற்றுடையவராய் வாழ்ந்து வந்தார்! பேரின்ப வீட்டிற்குப் போக வேண்டிய பேறு பரமனின் திருத்தொண்டின் மூலம்தான் கிட்டும் என்ற பக்தி மார்க்கத்தை உணர்ந்திருந்தார் முருகனார்.

எந்நேரமும் அம்பலத்தரசரையும் அவர் தம் அடியார்களையும் போற்றி வணங்கி வந்தார் முருகனார். தேவார திருப்பதிகத்தினை ஓதுவார். ஐந்தெழுத்து மணிவாசகத்தை இடையறாது உச்சிரிப்பார். இத்தகைய சிறந்த சிவபக்தியுடைய முருக நாயனார் இறைவனுக்கு நறுமலர்களைப் பறித்து மலர்மாலை தொடுக்கும் புண்ணிய கைங்கரியத்தைச் செய்து வந்தார்.


            முருக நாயனார் தினந்தோறும் கோழி கூவத் துயிலெழுவார். தூயநீரில் மூழ்குவார். திருவெண்ணீற்றை மேனியில் ஒளியுறப் பூசிக் கொள்வார். மலர்வனம் செல்வார். மலர்கின்ற பருவத்திலுள்ள மந்தாரம் கொன்றை, செண்பகம் முதலிய கோட்டுப் பூக்களையும், நந்தியவர்த்தம், அலரி, முல்லை, சம்பங்கி, சாதி முதலிய கொடி பூக்களையும், தாமரை, நீலோற்பவம், செங்கழுநீர் முதலிய நீர்ப்பூக்களையும் வகை வகையாகப் பிரித்தெடுத்து வெவ்வேறாகக் கூடைகளில் போட்டுக் கொள்வார்.


            இவ்வாறு பறிக்கப்பட்ட வகை வகையான தூய திருநறுமலர்களைக் கொண்டு, கோவை மாலை, இண்டை மாலை, பக்தி மாலை, கொண்டை மாலை, சர மாலை, தொங்கல் மாலை என்று பல்வேறு விதமான மாலைகளாகத் தொடுப்பார். வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்குப்ப பூமாலையாம் பாமாலை சாத்தி அர்ச்சனை புரிவார்.


            இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார். அரனாரிடம் அளவற்ற பக்தி பூண்டுள்ள முருக நாயனார் சிவன் அடியார்களுக்காகச் சிறந்த மடம் ஒன்றைக் கட்டுவித்தார். முருக நாயனாரின் திருமடத்திற்கு திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் போன்ற சைவ சண்மார்க்கத் தொண்டர்கள் எழுந்தருளியுள்ளார்கள். அவர்கள் முருகநாயனாரின் அன்பிற்கினிய நண்பர்களாகவும் மாறினர்.


            இறுதியில் திருநெல்லூரில் நடந்த திருஞானசம்பந்தரின் பெருமணத்திலே கலந்துகொள்ளச் சென்ற முருக நாயனார் , இறைவன் அருளிய பேரொளியிலே திருஞானசம்பந்தர் புகுந்த போது தாமும் புகுந்தார். என்றும் நிலையான சிவானந்தப் பேரின்ப வாழ்வைப் பெற்றார். இறைவனின் திருவடி நிழலை அடைந்தார்.


“அரவம் அணிந்த அரையாரை அருச்சித்து அவர் தம் கழல் நிழல் கீழ்

விரவு புகலூர் முருகனார் மெய்ம்மைத் தொண்டின் திறம் போற்றிக்

கரவில் அவர்பால் வருவாரைக் கருத்தில் உருத்திரம் கொண்டு

பரவும் அன்பர் பசுபதியார் பணிந்த பெருமை பகர் உற்றேன்.”


பாடல் விளக்கம்:


பாம்பணிந்த திருவரையையுடைய பெருமானைப் போற்றி வழிபட்டதன் பயனாக அவருடைய திருவடி நிழற்கீழ் இன்புற்றிருக்கும் முருக நாயனாரின் உண்மைத் தொண்டின் நெறியினை வணங்கி, இனி வஞ்சனையிலாத நெஞ்சுடையவர்பால் தோன்றி நிற்கும் சிவபெருமானைத் தமது கருத்தில் கொண்டு, உருத்திர மந்திரம் கொண்டு வழிபட்ட அன்பர் உருத்திர பசுபதி நாயனார்பணிந்த பெருமையைச் சொல்கின்றேன்.

சோழநாட்டிலுள்ள திருப்புகலூரில், வேதியர் குலத்தில் பிறந்தவர் முருக நாயனார். சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்.


            நாள்தோறும் மரம், கொடி, செடி, நீர் இவைகளில் பூக்கும் மலர்களைப் பறிப்பார். அவைகளைக் கொண்டு மாலைகள் தொடுப்பார். அவற்றை சிவபெருமானுக்குச் சூட்டி வணங்குவார். ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பார்.


இவ்வாறு திருத்தொண்டு செய்து வந்த இவர், திருஞான சம்பந்தப் பெருமானுடனும் திருநாவுக்கரசு சுவாமிகளுடனும் நட்பும் பக்தியும் கொண்டிருந்தார். சிவ வழிபாட்டில் வழுவாது நின்ற முருக நாயனார் சிவனடி நிழலில் சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

மூர்த்தி நாயனார் புராணம்

மூர்த்தி நாயனார்

மூர்த்தி நாயனார்

            பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில், வணிகர் குலத்தில் பிறந்தவர் மூர்த்தி நாயனார் ஆவார். சிவபெரு மான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். அவர், மதுரை சொக்கநாதப் பெருமானுக்கு சந்தனக் காப்பணிவதைத் தன் பெரும் பேறாகக் கருதி, அத்திருத் தொண்டை. தவறாது புரிந்து வந்தார்.

இவ்வாறிருக்கையில் கர்நாடகத்து மன்னன் ஒருவன் பாண்டியனை போரில் வென்று மதுரையின் அரசனானான். அவன் சமண மதத்தைத் தழுவியவன். சைவர்களை வெறுத்தான். சிவனை வழிபடுவோரை பல்வகையில் துன்புறுத்தினான்.

மூர்த்தியார் சிவனுக்குச் சந்தனக்காப்பு அணிவிப்பதை அறிந்து, அவருக்குச் சந்தனம் அளிக்கத் தடை விதித்தான். இதனால் மூர்த்தியார் மிகுந்த வேதனையடைந்தார்.

சொக்கநாதப் பெருமானுக்குச் சந்தனக் காப்பிட, எங்கெல்லமோ சந்தனத்தைத் தேடி அலைந்தார். மன்னனின் கட்டளை என்பதால் அவருக்கு யாரும் சந்தனம் அளிக்கவில்லை. மூர்த்தியார், ‘இக்கொடிய மன்னன் எப்போது இறப்பான், நமக்கு எப்போது சந்தனம் கிடைக்கும்?’ என்று தவித்தார்.

நேராகக் கோயிலுக்குச் சென்றார் நாயனார். அங்கு சந்தனம் அரைக்கும் கல்லை அடைந்தார். சந்தனம்தான் கிடைக்கவில்லை! என் முழங்கையையே சந்தனக் கட்டையாகத் தேய்த்து பெருமானுக்குக் காப்பிடுவேன் என்று கூறி தன் முழங்கையைக் கல்லில் தேய்க்கலானார். அவரது கைமூட்டின் தோல் பிய்ந்தது. சதை தெறித்தது. பின்பு எலும்பும் தேய்ந்து, எலும்பினுள் இருக்கும் தசையும் வெளிவந்தது. இருந்தும் அவர் தன் கையைக் கல்லில் தேய்ப்பதை மட்டும் நிறுத்தவில்லை.

அக்காட்சியைக் கண்ட பெருமா,ன், “மூர்த்தியாரே! உன் துயரெல்லாம் நாளையே மாறும். இத்தேசம் உனக்குச் சொந்தமாகப் போகிறது. நீர் உம் கையைக் கல்லில் அரைப்பதை நிறுத்து வீராக!” என்று வாக்கருளினார்.  நாயனாரும் கையைத் தேய்ப்பதை நிறுத்தினார். மறுகணமே அவரது கை பழைய நிலைக்குத் திரும்பியது.


அன்றிரவே அச்சமண மன்னன் இறந்தான். மறுநாள் அரண்மனையிலிருந்தோர் அவனது உடலுக்கு ஈமக் கடன்கள் செய்தார்கள். இறந்த மன்னனுக்கு மனைவியோ, மகனோ இல்லை . அதனால் அடுத்த மன்னன் யார்? என்ற கேள்வி எழுந்தது.

அமைச்சர்கள் ஆலோசித்தார்கள். ‘பட்டத்து யானையின் கண்ணைக் கட்டி நடக்கச் செய்வோம். அது யாரைத் தூக்கி தன் முதுகில் வைத்துக் கொள்கிறதோ அவரே இந்நாட்டின் அடுத்த மன்னர்!’ என்று முடிவெடுத்தனர்.

அதன்படி யானையின் கண்ணைக் கட்டி அனுப்பப்பட்டது. வீதியெங்கும் திரிந்த யானை, மூர்த்தியாரின் முன் வந்து அவரை வணங்கியது. அவரைத் தூக்கித் தன் முதுகில் வைத்தது. அமைச்சர்களும் மூர்த்தியாரை அந்நாட்டின் மன்னராக்கினார்கள். மூர்த்தியாரும், “சமண மதத்தை ஒழித்து, எல்லோரும் சைவ மதத்தைப் பின்பற்றுவீர்களானால் நான் மன்னர் பொறுப்பை ஏற்பேன்!” என்று கூறினார்.

அமைச்சர்கள் அதற்குச் சம்மதித்தனர். நான் மன்னனாக முடிசூட்டிக் கொண்டாலும், சிவனடியார் கோலத்தில்தான் இருப்பேன் என்றும் கூறினார். அதற்கும் அமைச்சர்கள் சம்மதித்தனர்.

மூர்த்தியார் உடனே மதுரை சொக்கநாதப் பெருமான் ஆலயம் சென்று வணங்கினார். மன்னர் பொறுப்பேற்றார். இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல், அடியவராகவே இருந்தார். அவரது ஆட்சியில் சமணம் ஒழிந்து சைவம் தழைத்தது.

இவ்வாறு நெடுநாட்கள் சிறப்புற மதுரையை ஆண்ட மூர்த்தி நாயனார் இறுதியில் சிவனடி நிழலில் அமர்ந்தார்.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

ஆனாய நாயனார் வரலாறு

ஆனாய நாயனார்

ஆனாய நாயனார்

மழநாடு என்னும் நடுநாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில், ஆயர் குலத்தில் பிறந்தவர் ஆனாய நாயனார் ஆவார்.

 இவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார்.

 இடையர்களின் தலைவரான அவர், பசுக்கூட்டங்களை மேய்த்து வந்தார்.

 கூடவே குழல் எடுத்து இசைத்தும் வந்தார்.

 ஒருநாள் ஆயனார் பசுக்களை மேய்க்க காட்டிற்குச் சென்றார். அங்கு மரங்களில் கொன்றைப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும் ஆயனாருக்கு மனதில் பேரானந்தம் உண்டானது.

 கொன்றைப் பூக்களுடன் நிற்கும் மரங்கள் சிவபெருமானது திருமுடியாகவே தெரிந்தது அவருக்கு.

 அப்பேரானந்தத்தில் திளைத்த ஆயனார், தன் குழலை மடுத்தார்.

 ஐந்தெழுத்து மந்திரத்தை குழலில் இசைக்க ஆரம்பித்தார்.

 பொழுது போவதை மறந்து இசைத்தார்.

 அவரது குழலிசையில் மரங்கள், நதிகள், பறவைகள் இன்னபிற உயிரினங்கள் எல்லாம் அசைவற்று நின்றன.

தேவர்களும், தேவ மங்கைகளும் நிலைதடுமாறினர்.

 அவரது குழல் இசை பிரம்மலோகம், வைகுந்தம் இவைகளைத் தாண்டி கையிலாயம் வரை எட்டியது.

 ஆனாயரது இசைக்கு மெச்சிய சிவபெருமான் ஆனாயர் முன்தோன்றினார்.

 ‘இனிய இந்த இசையோடு என்னோடு வந்து கலப்பாய்’ என்று வாக்கருளினார்.

 ஆனாய நாயனார் சிவஜோதியில் கலந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

 

அரிவட்டாய நாயனார் புராணம்

அரிவாட்டாய நாயனார்

அரிவட்டாய நாயனார்


            சோழநாட்டிலுள்ள கணமங்கலம் என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் நாயனார் ஆவார். செல்வந்தராகத் திகழ்ந்த அவர் சிவபெருமான் மீது அரும்பக்தி கொண்டிருந்தார். நாள்தோறும் சிவபிரானுக்கு அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்.


            நாயனாரின் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்ட பெருமான், நாயனாரின் செல்வம் அனைத்தையும் கரையச் செய்தார். தாயனார் தன் நிலங்களையெல்லாம் விற்று இறைவனுக்கு அமுது படைத்தார். வறுமையுற்றார்.


            இருப்பினும் சிவனுக்கு அமுது படைக்கத் தவற வில்லை. கூலிக்கு நெல்லறுக்கச் சென்றார் நாயனார். கூலியாகக் கிடைக்கும் செந்நெல் முழுவதையும் பெருமானுக்கே படைத்தார். கார் நெல்லை மட்டுமே தான் உண்டார்.


            நாளடைவில் கார் நெல் கிடைக்காமல் போயிற்று. தாயனார் பட்டினிக் கிடந்தார். கணவர் பசியோடிருக்கப் பொறுக்காத அவர் மனைவியார் தோட்டத்திலுள்ள

            கீரைகளைப் பறித்து சமைத்துத் தந்தார். இவ்வாறு சில நாட்கள் கழிந்தன. தோட்டத்தில் கீரைகளும் தீர்ந்தன. பின் வெறும் நீரை மட்டும் அருந்தினார் தாயனார். அதனால் அவரது உடல் மெலிந்து பலகீனமானது. இருந்தும் இறைவனுக்கு செந்நெல் படைப்பதிலிருந்து விலகாது நின்றார் தாயனார்.


            ஒருநாள் வழக்கம்போல் செந்நெல்லும், செங்கீரையும், மாவடுவையும் தாங்கிய கூடையோடு ஆலயத்தை நோக்கிச் சென்றார் தாயனார். மனைவியாரும் பஞ்ச கவ்ய கலயத்தோடு அவரைப் பின் தொடர்ந்து சென்றார். அது கோடைக்காலம் ஆனதால் வழியெங்கும் நிலம் வெடித்து, பிளந்து நின்றது.


தேகம் மெலிவுற்றிருந்த நாயனார், வழியில் தடுமாறி விழப்போனார். அதைக்கண்ட மனைவியார், கலயத்தோடு கணவரைத் தாங்கிப் பிடித்தார். இருப்பினும் தாயனாரின் கூடையிலிருந்த செந்நெல்லும் மாவடுவும், தரையெங்கும் சிதறியது. நெல்மணிகள் நிலத்திலிருந்த வெடிப்புகளினுள் புகுந்தன.


            அதைக்கண்ட தாயனார், “சிவபிரானுக்கு செந்நெல் படைக்க முடியாத நான் ஏன் உயிரோடு இருக்க வேண்டும்?” என்று கூறியபடியே கத்தியால் தன் கழுத்தை அறுக்கத் தொடங்கினார்.

அக்கணம், நிலத்திலிருந்த வெடிப்பினுள், இறைவர் மாவடுக்களைக் கடிக்கும் ஒலி கேட்டது. மறுகணம் பெருமான், கழுத்தை அறுத்த கையைத் தடுத்தார். தாயனரும் அவரது மனைவியாரும் சிவகருணையை எண்ணி மெய் சிலிர்த்தனர். தாயனாரின் கழுத்தும் முன்போல் ஆனது.

            அந்நேரம் சிவபிரான் உமையன்னையுடன், இடப வாகனத்தில் தோன்றினார். “அன்பனே! வறுமையில் எமக்கு அமுதூட்டத் தவறாத நீயும் மனைவியாரும் என்னை அடைவீர்களாக!” என்று வாக்கருளினார். தாயனரும், அவரது மனைவியாரும் சிவபதம் சென்றடைந்தனர்.


            இறைவனுக்காகத் தன் கழுத்தை அறுக்க துணிந்ததால், தாயனார் அரிவட்டாயர் என்ற பெயர் பெற்றார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

மானகஞ்சாற நாயனார்

மானக்கஞ்சாற நாயனார்


            சோழநாட்டிலுள்ள கஞ்சனூரில், வேளாளர் குலத்தில் பிறந்தவர் மானக்கஞ்சாற நாயனார் ஆவார். இவர் சோழ மன்னரிடத்தில் சேனாதிபதியாய்ப் பணியாற்றினார். சிவபக்தியிலும் அடியவர் பக்தியிலும் சிறந்து நின்றார். தன் பொருள் எல்லாம் அடியவர் பொருள் என்று கருதி வந்தார்.

            அவருக்குத் திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தாள். அப்பெண்ணை, திருப் பெருமங்கலத்திலுள்ள ஏயர்கோன் கலிக்காமருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தார் நாயனார். திருமணமும் நிச்சயமாகி, நாளும் குறிக்கப்பட்டது.

திருமண நாளன்று ஏயர்கோன் கலிக்காமர், தன் சுற்றத் தாருடன் கஞ்சனூருக்குப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவ்வேளையில் சிவபிரான் மானக்கஞ்சாறரின் அடியவர் பக்தியை உலகறியச் செய்ய திருவுள்ளம் கொண்டார்.
            பெருமான் அடியவர் கோலம் தாங்கி, மானக் கஞ்சாறரின் வீட்டிற்குள் நுழைந்தார். அங்கு திருமணக் கோலாகலம் தெரிந்தது. அடியவரைக் கண்ட மானக்கஞ்சாறர் வணங்கினார். தாங்கள் வந்தவேளை நல்லவேளை’ என்று கூறி உபசரித்தார். அடியவர் நாயனாரிடம், “இவ்வீட்டில் நற்காரியம் ஏதும் நடக்கவிருக்கிறதா?” என்று கேட்டார்.

மானக்கஞ்சாறரும் மகிழ்வுடன், “ஆமாம்! என் புதல்விக்குத் திருமணம் நடக்கவுள்ளது. தாங்களும் மணமக்களை வாழ்த்தியருள வேண்டும்!” என்று கூறினார். பின் அடியவரிடம் ஆசி பெறுவதற்காகத் தன் புதல்வியை அழைத்தார்.

நாயனாரின் புதல்வியும் வந்து அடியவரைப் பணிந்து வணங்கினாள். அப்போது, மணப்பெண்ணின் நீண்டு வளர்ந்திருந்த கூந்தலைக் கண்ட அடியவர், “இப்பெண்ணின் கூந்தலை எனக்குத் தருவீரோ?! என் பூணூலுக்கு அது பயன்படும்!” என்று கேட்டார். அடியவர் கேட்டு நாயனார் மறுப்பாரோ?
பெண்ணிற்குத்
சற்று நேரத்தில் திருமணம் நடக்கவிருக்கிறது என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல், நாயனார் தன் மகளின் கூந்தலை வாள் கொண்டு அறுத்து அடியவரிடம் தந்தார். அக்கணமே அடியவர் மறைந்தார். சிவபிரான் உமாதேவியாருடன் விடை வாகனத்தில் திருக்காட்சி தந்தார். அனைவரும் மெய் சிலிர்த்தனர்.

பெருமான் நாயனாரிடம், “அன்பரே! உமது அடியவர் பக்தியை சோதிக்கவே இவ்வாறு செய்தோம். வாழ்வாங்கு வாழ்ந்து சிவபதம் அடைவீராக!” என்று வாழ்த்தி மறைந்தரு ளினார். மணப்பெண்ணின் கூந்தலும் முன்போலவே நீண்டு வளர்ந்தது.

சற்று நேரத்தில் கஞ்சனூரை அடைந்த ஏயர்கோன் கலிக்காமர், நடந்ததைக் கேட்டறிந்தார். ‘அக்காட்சியைத் தான்காணவில்லையே!’ என்று வருந்தினார். மறுகணமே, “யாமே வந்தோம்!” என்று இறைவன் வாக்கருளினார். கலிக்காமருக்கும் மானக்கஞ்சாறரின் புதல்விக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது.


  மானக்கஞ்சாறரும் சிறப்புற வாழ்ந்து, அடியவர் தொண்டை வழுவாது செய்து சிவபதம் அடைந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

குங்கிலியக் கலய நாயனார் புராணம்

குங்குலியக் கலய நாயனார்

குங்கிலியக் கலய நாயனார்

    சோழநாட்டிலுள்ள திருக்கடவூரில் வேதியர் குலத்தில் பிறந்தவர் கலயனார் ஆவார். சிவபக்தியில் சிறந்து நின்ற அவர், திருக்கோயிலில் குங்கிலியம் என்னும் வாசனைப் பொருளால் தூபமிட்டு அருந்தொண்டாற்றி வந்தார். அதனால் அவரைக் குங்கிலியக் கலய நாயனார் என்று மக்கள் அழைத்தனர்.

     நாயனாரின் பெருமையை உலகறியச் செய்ய சிவபெருமான் திருவுள்ளம் கொண்டார். கலயனாரின் செல்வம் கரையத் தொடங்கியது. இருப்பினும் தன் நிலங்களை விற்று குங்கிலியத்தூபமிடும் பணியில் வழுவாது நின்றார் நாயனார். நாளடைவில் வறுமையின் கோரப் பிணி அவரது குடும்பத்தை வாட்டியது. உணவிற்கே திண்டாட்டமானது.

        அதைக்கண்ட கலயனாரின் மனைவி, தன் திருமாங்கல்யத்தைக் கழற்றித் தந்தார். அப்பொன்னை விற்று நெல் வாங்கி வரும்படி கணவரிடம் கூறினார். நாயனார் திருமாங்கல்யத்தோடு வீதியில் நடந்தார். அப்போது எதிரில் குங்கிலியம் விற்றபடி ஒருவர் வந்தார். நாயனாருக்கு, தன் பசியும் வீட்டிலுள்ளோரின் பசியும் மறந்து போனது.

         நேராகக் குங்கிலியம் விற்பவரிடம் சென்று, தன் மனைவியின் திருமாங்கல்யத்தைக் கொடுத்தார். அதற்குப் பதிலாக குங்கிலியம் பெற்று கோயிலுக்குச் சென்று, மிக்க மகிழ்ச்சியோடு பெருமானுக்குத் தூபமிட்டார்.

         நாயனாரின் குடும்பத்தார் பசியால் உறங்கிப் போயினர். அக்கணம் சிவபிரானது அருளால் நாயனாரின்  செல்வம் நிரம்பியிருப்பதை சிவபிரானும், நாயனாரின் மனைவியார் கனவில் தோன்றிக் கூறினார். நாயனாரின் மனைவி விழித்துப் பார்த்தார். வீடு செல்வத்தால் நிரம்பியிருந்தது கண்டு பெருமகிழ்ச்சி கொண்டார்.

         கோயிலில் உறங்கிக் கொண்டிருந்த நாயனாரின் கனவிலும் தோன்றிய பெருமான் அச்செய்தியைக் கூறினார். நாயனாரும் வீடு திரும்பினார். செல்வங்களைக் கண்டார். கலியானாரும் அவரது மனைவியாரும் சிவனருளை எண்ணி மெய் சிலிர்த்தனர். நாயனார் அச்செல்வத்தைக் கொண்டு, தன் குங்கிலியத் தூபத்தொண்டினையும், அடியவர்க்கு அமுதூட்டும் தொண்டினையும் குறைவறச் செய்து மகிழ்ந்திருந்தார்.

       இவ்வாறிருக்கையில் ஒருநாள் திருப்பனந்தாள் என்னும் ஊரிலுள்ள ஆலயத்தின் சிவலிங்கம் சாய்ந்தது. அதனை நிமிர்த்த பலர் முயன்றும் இயலவில்லை. செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னர் தன் அரண்மனை யானைகளைக் கொண்டுவந்து கயிற்றைக் கட்டி இழுத்தான். இருப்பினும் சிவலிங்கம் நிமிரவில்லை. மன்னன் பெரிதும் வருத்தமுற்றான்.

       மன்னனின் வருத்தத்தைக் கேள்விப்பட்ட கலயனார், திருப்பனந்தாள் சென்றார். சிவலிங்கத்தின் கழுத்திலுள்ள கயிற்றின் மறுமுனையைத் தன் கழுத்தில் கட்டி இழுத்தார். மறுகணமே சிவலிங்கம் நிமிர்ந்தது. மன்னனும் கலயனாரை வணங்கினான். கலயனாரின் பெருமையை ஊரறிய பறைசாற்றினான்.

            திருப்பனந்தாள் விட்டு திருக்கடவூர் திரும்பி தம் அருந் தொண்டினைத் தொடர்ந்தார்கலயனார். திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் திருக்கடவூர் வந்தபோது, அவர்களை வணங்கி அமுது படைத்தார். அவ்விரு பெரியோர்களும் நாயனாரை வாழ்த்தினர்.

இவ்வாறு தமது திருத்தொண்டை தவறாது செய்த குங்கிலியக் கலய நாயனார் சிவபதம் சென்றடைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

மேலும் அறிக..

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

செயல்பாடுகளே உங்களின் மதிப்பை உயர்த்தும்!

செயல்பாடு உங்கள் மதிப்பை உயர்த்தும்

செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

(தன்னம்பிக்கை கட்டுரை)

     உலகில் உள்ள மனிதர்களைப் பற்றி அறிய வேண்டும் என்றால் அவர்களின் செயல்பாடுகளைக் கவனித்தால் போதும். அவரவர் செயல்பாடுகளின் மூலமாக அவர்களின் மீது மதிப்பு உண்டாகிறதா? அவமதிப்பு ஏற்படுகிறதா? என்பதை கணிக்கலாம்.

          நமது ஊர்களில் சிலர் பேசும்போது கேட்டிருக்கலாம். அவர்கள் வாயைத்திறந்தால் போதும் தவறான சொற்களை மட்டுமே பேசுவார்கள். அவற்றை தவிர மற்ற வார்த்தைகளைப் பேசி பழகாதவர்கள். இவர்களின் பேச்சில் யாரேனும் குறுக்கிட்டால் அவ்வளவுதான், அவர்களின் ஆஸ்தியையே அழித்ததைப் போன்று கோபத்துடன் லபோ திபோ என்று கத்துவார்கள். பாவம் இவர்களுக்கு மதிப்பு என்பது பற்றி ஏதேனும் தெரியுமா? என்றால் ஒன்றும் தெரியாது.

தனித்தன்மையை வெளிப்படுத்துங்கள்

          உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை அந்த பிறவிக்கே உரிய ஆக்க சக்தி என்பது இருக்கும். அவர்கள் அதை உணர்ந்து தன் ஆற்றலை பெருக்கிக்கொண்டால் போதும். தானாகவே மதிப்பு உயரும். சமூகத்தில் மற்றவர்கள் எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ன கூறுவார்களோ? என்று எண்ணி உங்களுக்குள்ள ஆற்றலை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

        இந்த உலகம் இராமனின் சீதையையே ஐயப்பட்டு அக்னியில் குளிக்க வைத்தது. அதனால் அவற்றை பற்றியெல்லாம் கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் ஆழ்மன உந்துதலே செயல்பாடுகளாக வெளிப்படுகின்றன. எனவே மற்றவரின் போற்றுதலுக்காக உங்களின் தனித்தன்மையை மாற்றிக் கொள்ளாதீர். ஆனால் உங்களின் தன்மையால் நன்மதிப்பை பெறுங்கள். அதுவே நிலையான மதிப்பு.

பொறுப்பைச் செயலில் காட்டுங்கள்

       ஒரு தனியார் கம்பெனி ஒன்று இளைஞர்கள் நேர்முகத்தேர்வு ஒன்றுக்கு அழைத்திருந்தது. காலையில் பத்து மணிக்கு வந்து சேர்ந்து விட்டனர். வேலைதேடும் பட்டதாரிகள். அது ஒரு பெரிய பரந்த அறை. அந்த இடத்தில் டேபிள், நாற்காலி, சோபா என்று போடப்பட்டு இருந்தன. அவற்றின் மீது நாளிதழ்கள், வார இதழ்கள் என்று தாருமாறாகக் கிடந்தன. காலண்டர், கடிகாரம் எதுவும் சரியான முறையில் இல்லை. அந்த அறையில் சுமார் நாற்பதுபேர் அமர்ந்திருந்தனர். நேர்முகதேர்வுக்கு ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி அவர்க்கான இடத்தில் அமர்ந்து கொண்டார். ஐந்து நிமிடங்கள் சென்றிருக்கும், அந்த பெண் எழுந்தார். சிதறிக்கிடந்த இதழ்களை பொறுக்கி எடுத்தார். தேதியைப் பார்த்து வரிசை படுத்தி டேபிள் மீது வைத்தார். நாற்காலிகளை ஒழுங்காக்கினார். சுவரில் மாட்டியிருந்த கடிகாரம் ஓடியது. ஆனால் நேரத்தைத் தவறாகக் காட்டியது. அதனை சரிசெய்து அதன்இடத்தில் மாட்டி வைத்தார். காலண்டரில் தாள்கள் கிழிக்கப்படாமலே இருந்தது. அதை கிழித்துத் தூசுதட்டி உரிய இடத்தில் வைத்தார்.

ஒரு ஓரமாகப் பிள்ளையார் படம் ஒன்று இருந்தது, அருகில் விளக்கு திரி ஊதுபத்தி என்று சகிதமும் இருந்தன. விளக்கில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி ஊதுபத்தி கொழுத்தி வைத்தார். பிள்ளையாரை வணங்கிவிட்டு தன்இடத்தில் வந்து அமர்ந்து கொண்டார். அந்த அறையே ஊதுபத்தியின் மணம் கமழ்ந்தது. ஒவ்வொருவராகத் தேர்வுக்கு உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்களும் உள்ளே செல்லும்போது பிள்ளையாருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிட்டு சென்றனர். இந்தப் பெண்ணையும் நேர்முகத்தேர்வுக்கு பெயர் சொல்லி அழைத்தனர். மற்ற எல்லோருக்கும் ஒரு ஐயம். இந்தப்பெண் இங்கு ஏற்கனவே வேலை பார்க்கவில்லையா? ஆனால் அந்த பெண் வேலைதேடி வந்துள்ளார் என்பதே உண்மை. கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத சிந்தனை பொறுப்பு இவருக்கு மட்டும் எப்படி வந்தது? இந்த பெண் செய்தவற்றை கேமரா மூலம் பார்த்துக்கொண்டு இருந்த அந்தக் கம்பெனியின் முதலாளி அப்போதே முடிவு செய்தார். காலி பணியிடம் அந்தப் பெண்ணிற்கு என்று. அவ்வகையான செயல்பாடுகள் மற்றவரின் மத்தியில் அவர்களின் மீதுள்ள கணிப்பை உயர்த்திக்காட்டும். அவர் மற்றவர்களைபோல நமக்கென்ன என்று இருக்கவில்லை. அவற்றை நன்றாக மாற்றவேண்டும் என்று எண்ணினார். அது அவருடைய தனித்தன்மை என்பதை உணருங்கள்.

செயல்கள் மதிப்புமிக்கவை

      படித்த நிகழ்வு ஒன்று. ஒரு கல்லூரியில் அழகான இளமைக்காலத்தில் மாணவர்கள் பறவைகள் போல பாடித்திரிய வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே அவர்கள் வாக்கிடாக்கியில் பாடல்களைக் கேட்டுகொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்கள். பின்னர் வேறுவேலை பார்ப்பார்கள். ஆனால் ஒரு மாணவன் மட்டும் அந்த வாக்கிடாக்கியைக் காதுகளின் இருந்து அகற்றுவதே இல்லை. எல்லா நேரங்களிலும் மாட்டிக்கொண்டு திரிவான். அதேவேளை தேர்வில் மதிப்பெண்களையும் அதிகமாகப் பெற்றுவிடுவான். இது எவ்வாறு என்று கவனித்தபோதுதான் தெரிந்தது. அவன் கேட்டவை பாடல்கள் அல்ல பாடங்கள். மற்ற மாணவர்கள் சினிமாப்பாடல்களைக் கேட்கும்போது இவன் மட்டும் பாடத்தை ஒருமுறை உறக்க படித்து அதில் பதிவுசெய்து கொண்டு தனக்கு மனதில் பதியும்வரை மீண்டும்மீண்டும் கேட்டுக்கொண்டே இருப்பான். அதனாலேயே அவன் மதிப்பெண்கள் உயர்ந்தன. பேராசிரியர்கள் மத்தியில் இவன் மதிப்பும் உயர்ந்தது.

பெரிய மாற்றம்தரும் சிறிய செயல்

         செய்யும் செயல்கள் மற்றவர்க்கு உதவுமாறு நல்ல நோக்கத்துடன் செய்யுங்கள். எப்போதோ படித்த ஒன்று. ஒரு கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பலநூறு மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பேருந்துவசதி கிடையாது. பலமுறை போக்குவரத்து துறைக்கு விண்ணப்பம் அனுப்பி வைத்தனர். என்றாலும் அவர்கள் எந்தஊர், எந்தக் கிராமம் என்று விசாரணை செய்துவிட்டு அப்படியே விட்டு விடுவார்கள். அது அவ்வளவு தான். அந்த ஊர் மக்களும் பலமுறை எழுதிஎழுதி சலித்து விண்ணப்பம் செய்வதையே விட்டு விட்டனர். பேருந்து இனி வரப்போவதில்லை என்று அவர்களே முடிவு செய்து கொண்டனர். அதற்குக் காரணம் அந்தக் கிராமத்தைச் சுற்றி ஒரு மலை கிழக்கு திசையிலிருந்து தொடங்கி தெற்கு மேற்கு திசை வரை மூன்று பக்கமும் மதில்சுவர் போன்று காணப்பட்டது. அந்த ஊருக்கு செல்பவர்கள் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ளே சென்றால் மீண்டும் அதே வழியில்தான் திரும்பி வர வேண்டும். மலைக்கு அந்தப்பக்கம் இருவழி சாலைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஊருக்கு எந்தப்பேருந்தும் வராது.

        இவ்வாறு இருக்க அந்தக் கிராமத்திற்கு எந்த வசதியும் கிடையாது. பள்ளிக்கூடம் ஏழு கிலோமீட்டர் செல்ல வேண்டும். மருத்துவ வசதி பத்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். பால்நிலையம், காவல் நிலையம் என்று எதுவும் கிடையாது. அக்கிராமம் பல தலைமுறைகளாக எந்தவொரு முன்னேற்றத்தையும் பார்க்க வில்லை. கிராமத்தில் ஐம்பது வயது தாண்டிய  நபர் ஒருவர் தினமும் சுத்தியலுடன் உளியையும் எடுத்து கொண்டு தனக்கு மதிய உணவை தயார் செய்து கொண்டு சென்று விடுவார். எங்கு செல்வார்? அந்த மலைக்கு சென்று  பாறையாக உயர்ந்திருக்கும் அதன் அருகில் சென்று அமர்ந்து கொள்வார். உளியை பாறையில் வைத்து சுத்தியலைக் கொண்டு பலமாக அடிப்பார். அடித்து சிறிது சிறிதாக உடைப்பார். மாலை ஐந்து மணி வரை இதே வேலையை சலைக்காமல் செய்வார். இந்த வேலை பல வருடங்களாகத் தொடர்ந்தது. இதைக்கண்ட மற்றவர்கள் கேலி செய்தனர், ஏளனமாக நகைத்தனர். பைத்தியம் என்றனர்.

         இவர் சுமார் பதினைந்து வருடங்களாக அந்த பாறையைக் குடைந்து எடுத்துள்ளார். பின்னர் இவரின் இறுதிக்காலம் நெருங்கும் நிலையில் படுக்கையில் இருந்து கொண்டு “நான் பாறையை உடைத்த இடத்தில் சென்று பாருங்கள்” என்றார். அங்கு சென்று பார்த்தவுடன்தான் தெரிந்தது, அந்த மலைப்பாறை குடையப்பட்டு மறுப்பக்கத்தில் சாலை தெரியுமாறு ஒரு துவாரம் செய்யப்பட்டிருந்தது. ஆகா என்ன ஆச்சர்யம் மக்கள் எல்லோரும் அந்த மலைக்கு சென்று அந்த துவாரத்தைக் குடைந்து மேலும் பெரிதாக்கி தமக்கு சாலை அமைக்க ஒருவழி கிடைத்திருப்பதை உணர்ந்தனர். அந்த மனிதரை பைத்தியம் என்று கேலி செய்தவர்கள் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு கைக்கூப்பினர். அந்தப் பெரியவரும், எத்தனையோ ஆண்டுகளாகச் செய்ய இயலாத ஒன்றை தம்சந்ததியினருக்கு செய்து விட்டோம் என்ற மன நிம்மதியுடன் கண்களை மூடினார். இவருடைய சிறிய செயல் கிராமத்தின் தலையெழுத்தை மாற்றியது.

       இவர் மற்றவரைப் போல இல்லாமல் வேறு விதமாக மக்களின் அவலத்தை போக்க வேண்டும் என்று நினைத்து மற்றவர்கள் செய்கிறார்களா? என்று பார்க்கவில்லை தானே முன்வந்து செய்தார். அந்தக்கிராம மக்கள் அவரை தெய்வமாக மதித்தனர். அது அவருடைய தனித்தன்மை.

     எந்தப் பிறவி பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு ஒரு நன்மையைச் செய்யும் நீங்கள் தனித்துவம் கொண்டவர்கள்தான்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

அமைதியான-அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

உங்களின் வாழ்க்கையில் சோம்பலை விரட்டிவிட்டீர்கள் என்றால் அதன் இறுதியில் கிடைப்பது முன்னேற்றத்தின் தொடக்கம்தான். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகும். இப்போது நீங்கள் செய்வதற்கு கண்முன்னே ஆயிரம் கடமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மாற்றி அதைப்போன்று கற்பனை செய்து பாருங்கள். உங்களின் அகக்கண்களின் மூலம் உங்களால் செய்யப்பட்ட சமுதாய மாற்றம் தெளிவாகத் தெரியும். 

அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

          நிதமும் இந்தச் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய நீங்கள் சிந்தனை செய்து கொண்டு அதனால் ஏற்படும் மாற்றங்களை கண்முன்னே கொண்டு வாருங்கள். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. எத்தனை தடைகள், எதிர்ப்புகள், வசைகள், இன்னல்கள் பலவும் நிகழும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் சலைக்காமல் மீண்டும் முன்னேற்றத்தைத் தொடர வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். நல்ல காரியம் செய்யும்போது ஒவ்வொரு படிநிலையிலும் மற்றவர்களால் இடையூறுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நீங்கள் வெற்றிபெறும் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இலக்குகளின் பாதைகள்

        இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது உங்களுக்கு எந்தவித தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் நீங்கள் பாதையை கடந்துவிட்டீர்கள் என்றால் வந்த பாதையை விட்டு விலகி வேறுபாதையில் பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது வெற்றியைப் பெறுவதில் மட்டுமல்ல, அதை அடைவதற்கு கடந்து வந்த பாதையில் சவால்களைச் சமாளித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள், பழகிய மனிதர்கள், மாமனிதர்கள், சுரண்டல்காரர்கள், கண்முன்னே நமது பொருட்களைப் பறிக்கும் கடத்தல் பேர்வழிகள் என்று பலவிதமான மனிதர்களை அறிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமானவை. இவற்றையெல்லாம் நீங்கள் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் சென்றாலும் கற்றுக் கொள்ள இயலாது.

வருவது துன்பமல்ல சவால்

         இலக்கின் பாதையில் துன்பங்களை பேச்சுக்களை மனிதர்களைச் சந்திக்கின்ற போது இதற்குமுன் இந்த அனுபவம் பெற்றிருக்க மாட்டீர்கள். முதன்முறை எதிர்கொள்ளும்போது திரும்பி சென்றுவிடலாமா? என்று தோன்றும். இவற்றை முடிக்க நம்மால் இயலுமா? போன்ற பல வினாக்கள் முன்னே வந்து நிற்கும். எவை வந்தாலும் நிறைவான வெற்றியால் பெறும் மாற்றத்தை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கஷ்டங்களை சமாளிக்கும் திறன் தானாகவே வரும். எப்போதுமே துன்பங்களை வேதனையோடு எதிர்பார்க்காதீர்கள். அவற்றை சவாலாக ஏற்றுச் செயல்படுங்கள். பார்த்துவிடலாம்! என்று மனதிற்கு ஒரு போட்டியை ஏற்படுத்துங்கள். அப்போது மனதில் ஒரு வேகம் ஆற்றல் உண்டாகும். மீண்டும் மீண்டும் இதையே பின்பற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு சலிப்பே வராமல் பார்த்துக்கொண்டால் நாளடைவில் வெற்றி என்பது உங்களின் அருகில் வந்து விடும். வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

          உங்களுடைய ஆற்றலை யாரால் உணர்ந்து கொள்ள முடியுமோ அவர்களின் முன்னே செயல்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளின் அருமை யாருக்கு புரிகிறதோ அவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துச் செயல்படுங்கள். ஒரு வெற்றியை நீங்கள் பெறவேண்டும் என்றால் அதற்கு சிலரின் ஒத்துழைப்பாவது உறுதியாகத் தேவைப்படும். எனவே மற்றவரிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறுவதைப் பொறுத்தே உங்கள் மீது அவர்களுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகுமாறு நடந்தது கொள்ளுங்கள்.

அமைதியான அணுகுமுறை

      நீங்கள் சமுதாயத்திற்காகச் செய்யப்போகும் செயல்கள் அதனால் அங்கு வாழும்மக்கள் பெறப்போகும் நன்மைகள் இவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களைத் தூண்டும். தேசப்பற்று போன்றவற்றை அவரின் மனம்குளிர எடுத்துக்கூறுங்கள். அமைதியாகக் கனிவான பேச்சில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை உதவுபவர்க்கு உருவாக்குங்கள். உங்களின் ஆற்றலை உணர்ந்து உதவும் அவர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

       நீங்கள் வெற்றியை அடைந்து விடுவீர்கள் என்று உங்கள் மனம் நம்பிவிட்டால் போதும் நீங்கள் சாதனையாளர்தான். இதை மற்றவர்க்கு கூறி நம்பவைக்க முடியாதா? முடியும். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஐம்பத்திரண்டு வயதான நபர் ஒருவர். அவரிடம் “இந்த வயதில் சிகரத்தை ஏற உங்களால் எவ்வாறு முடிந்தது? கடினமாக இல்லையா? ஏறுவதற்குக் கால்கள் தடுமாறவில்லையா?” என்று கேட்டதற்கு அவர் “மலை ஏறும்போது என் கால்கள் தடுமாறவில்லை. ஏறுவதற்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிகரத்தின் உச்சியை அடையமுடியும் என்று என்மனதை நம்ப வைத்ததுதான் எனக்கு கடினமாக இருந்தது. மற்றப்படி இது எனக்கு எளிமையாகவே இருந்தது” என்று கூறினார். உங்கள் மனதை நம்பவைப்பது முன்னேற்றத்தின் அடுத்தபடியாகும். சமுதாயத்திற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனதிற்குப் பயிற்சி அளித்து தயார் படுத்துவது அடுத்தபடியாகும். செல்லும் பாதையில் படிகள் இருந்தால் ஏறி சென்றுவிடுவீர்கள். முட்கள் இருந்தால் என்ன செய்வீர்? பாதையில் முட்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள் என்று நிறைய இருக்கும். அவை உங்களுக்குத் தடைகள் அல்ல, நீங்கள் சாதிப்பதற்கான சவால்கள் என்பதை உணருங்கள்.

மற்றவர்க்காக ஒன்றை செய்வதற்கு நீங்கள் தயாரா!

          நமது நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர்கள் எதையும் தனிப்பட்ட அவர்க்கென்று செய்யவில்லை மற்றவர்களுக்கு செய்தனர். ஆங்கிலேயர்கள் நம்மக்களை அடிமை செய்த போது அவர்கள் குறைந்த எண்ணிக்கையே இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெள்ளைக்காரர்களைக் கையால் அடித்தே துரத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நம் மக்கள் நமக்கென்ன என்று இருந்ததால் சிலநூறு வருடங்கள் அவர்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். அதனை முறியடிக்க யாரேனும் முன்வர வேண்டுமல்லவா வந்தனர். திலகர், கோகலே, சுபாஸ்சந்திரபோஸ், காந்தி, நேரு, செக்கிழுத்த செம்மல் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவரும் தமக்காகப் போராடவில்லை, பிறருக்காகப் போராடினர். கொடிகாத்தகுமரன் அடிபட்டு குருதி பெருகி கீழே விழும் நிலையிலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டு முழக்கம் செய்தார். இவர்களைக் கவனித்தால் சமுதாயத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்ட அக்கறை அடுத்து வரும் சந்ததியினர் மீது கொண்ட பற்று இவையெல்லாம் அவர்களின் மனதில் வியாபித்து இருந்தன. அவர்களை செயல்பட வைத்தன.

நெருப்புக் கோழியின் குணம் வேண்டாம்

         ஒரு செயலை மற்றவர்க்காகத்தான் செய்கிறோம். அதனால் எந்தத் துன்பமும் வராது என்று நினைத்து நீங்கள் செயலை ஆரம்பித்தால் நெருப்புக் கோழியின் செயலைப் போல ஆகிவிடும். அந்த நெருப்புக் கோழி தனது எதிரிகள் தன்னை தாக்க துரத்தும் போது காத்துக்கொள்ள ஓடிச்சென்று ஒரு குழிக்குள் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம். அது தன் உருவம் வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைக்க எதிரிகளான வேடர்கள் எளிமையாகப் பிடித்து விடுவார்களாம். அவ்வாறுதான் நீங்கள் நினைப்பதும். தொடங்கும் செயல் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொண்டு அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் சென்று கருத்துக்களை அவர்களின் அனுபவங்களை சேகரித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி விடவும் கூடாது. எந்த அளவிற்கு இவை உண்மையான செய்திகள் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று மெய்யானவற்றை  சிந்தனை செய்து தெளியவேண்டும்.

         உங்களை மற்றவர்கள் புகழ வேண்டும். போற்ற வேண்டும். பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த செயலையும் செய்யாதீர்கள். எதையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே தியாக மனப்பான்மை.

       ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றைச் செய்வது சேவையாகாது. அது பண்டமாற்று முறையே ஆகும். உங்களின் மதிப்பு மிகுந்த செயல்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்.

      உங்களால் என்ன நன்மைகளைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். சோகங்களைச் சவாலாக எதிர்கொள்ளும் நீங்கள்தான் சமுதாயத்தின் நாயகன் இதில் ஐயமில்லை.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »