Wednesday, June 3, 2026
Home Blog Page 42

சிலப்பதிகாரத்தில் விளிம்புநிலை மாந்தர்கள்

            ஒவ்வொரு கால கட்டத்தில் தோன்றும் அறிவுலகக் கோட்பாடுகள் சமூகத்தினை மாற்றம் பெறச்செய்கின்றன.  இலக்கியமும் வரலாறும் இக்கோட்பாடுகளினால் புதிய பரிணாமம் பெறுகின்றன.  எனவே இலக்கியம் காலம்தோறும் பன்முக வாசிப்புக்கு ஆளாவதும் வரலாறும் அத்தகைய மாற்றத்தினை எதிர் கொள்வதும் இயல்பானதாகும்.  இன்றைய நவீன உலகில் விளிம்பு நிலை ஆய்வின் வருகை பின்காலனிய கால கட்டத்தில் துவங்குகிறது எனலாம்.  சமூகத்தின் ஒரத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிக் குழுக்களாக அவற்றை இனம் காண்கிறார் ஹோமி பாபா எனும் பின் – காலனியத் திறனாய்வாளர்.  ஆனால் ‘காயத்ரி ஸ்பிவாக்’ பண்பாட்டு மேலாண்மை குறித்த சொல்லாடல்களை முன்வைக்கிறாhர்.

            இந்தியாவில் விளிம்புநிலை ஆய்வின் தொடக்கப்புள்ளியாக 1982 – இல் ‘ரணஜித் குகா’ அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட  ‘Subaltern Studnes’ எனும் இதழ் அமைகிறது.  இது இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று ஆசிரியர்களையும் மேல்தட்டு வர்க்கத்தினரையும் கடுமையாக உள்ளிட்டவர்களை மையப்படுத்தியது.  வரலாற்றினை மீள் ஆய்வு செய்தது.  புதிய நோக்கில் வரலாற்றெழுதியல் முறையினைக் கொண்டு வந்தது.

            அடித்தள மக்கள் ஆய்வு குறித்த ஆய்வுகளும் விவாதங்களும் தொடர்ந்தன.  விளிம்பு நிலை மக்கள் எனப்படும்  ‘Subaltern’ எனும் தொடருக்கு மார்க்சியத்தின் அடிப்படையில் சமூக, அரசியல், நிலவியல், பண்பாட்டு மேலாண்மை ஆகிய அதிகார மையத்தில் இருந்து விலகியுள்ள அல்லது விலக்கப்பட்டு தொழிற்சாலைகளில் பணிபுரிந்த உழைக்கும் மக்கள்  திரளின் கூட்டம் என்பதாக அந்தோணி குரோம்சி (1891 – 1937) எனும் இத்தாலி நாட்டு மார்க்சிய அறிஞர் வரையறைப்படுத்துகிறார்.  இருப்பினும் காலம், இடம், சமூகச்சூழல், பண்பாட்டு, ஆதிக்கம் ஆகியவை சமூகத்தின் விளிம்புநிலை வாழ்வினைத் தீர்மானிக்கின்றன.

            இந்தியச்சூழலில் பெண்கள், தலித்துகள், மலைவாழ்மக்கள், விவசாயக்கூலிகள், நாடோடி மக்கள், கல்வி கற்கவியலாத மகளிர் எனக் குறிப்பிடலாம்.  இவர்கள் மேட்டிமைக்குழுவிற்கு நேர்மாறாக எண்ணிக்கையில் அதிகமானவர்களாகவும் சமூக வளங்களில் உரிய பங்கு பெற முடியாதவர்களாகவும் குறைந்த அளவு உணவு, உடை, கல்வி பெற்று வாழும் மக்கள் பிரிவினராக உள்ளனர் எனலாம்.

            விளிம்பு நிலை மக்கள் என்பதற்கு சாதி, செய்யும் தொழில், அரசியல் அதிகாரம், சமூக மேட்டிமை, பொருளியல் நிலை, பண்பாட்டு ஆளுமை ஆகியவற்றுள் ஒன்றோ அல்லது அனைத்து நிலையிலும் தாழ்ந்திருக்கும் அல்லது சமூக கட்டுமானத்தின் ஓரத்தில் இருக்கும் மக்கள் என வரையறை செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன். (2002 : 50)

            இளங்கோ அடிகள் படைத்த சிலப்பதிகாரம் தமிழ்ச்சமூகக் காலவெளியில் பல்வேறு வாசிப்புகளைக் கடந்து வந்துள்ளது.  சிலம்பினைத் தேசிய இலக்கியமாக வடிவமைத்ததில் ம.பொ.சி. நா.வானமாமலை, சாமிசிதம்பரனார், வையாபுரிப்பிள்ளை, ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.  சிலம்பு சைவ இலக்கியம் என்றும் இளங்கோ அடிகளின் சமயம் சமணம் அன்று: என வலியுறுத்தியவர்கள் ந.மு. வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப் பிள்ளை, வீ. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர்கள் ஆவர்.  மேலும், சிலம்பினை சமூகவியல், உளவியல் திறனாய்வுப் போக்கில் ஆராய்ந்தவர்கள் தெ.பொ.மீ, கா. செல்லப்பன், துரை. சீனிச்சாமி, எஸ். இராமகிருஷ்ணன் ஆவர்.  மார்க்சிய அணுகுமுறையில் கே. முத்தையா, இரகுநாதன் ஆகியோர் ஆளும் அரச வர்க்கத்திற்கும் வணிக வர்க்கத்திற்கும் இடையில் தோன்றிய முரண்பாட்டின் விளைச்சல்தான் சிலம்பு என்கின்றனர்.  நாட்டார் மரபின் அடிப்படையில் நா. வானமாமலை போன்றோர் சிலம்பில் இடம்பெறும் நாட்டார் பண்பாட்டினை மையப்படுத்துகிறார்.

              புகழேந்திப் புலவர் தொடங்கி சங்கரதாஸ் சுவாமிகள் வரை இது தொடர்ந்தது.  திராவிட இயக்கத்தின் வரவால் தமிழர், ஆரியர் திருமண முறை, மக்களாட்சி சிந்தனை, தமிழரின் மேன்மை, மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் அடங்கிய இலக்கியமாகச் சிலம்பு பார்க்கப்பட்டது.  சான்று: பாரதிதாசனின் கண்ணகி புரட்சிக் காப்பியம்.  இவ்வாறு சிலம்பு பன்முக வாசிப்புக்கு ஆளானது.

            விளிம்புநிலை ஆய்வின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை அணுகுவது என்பது இன்றைய காலத்தின் தேவையாகும்.  மைய நீரோட்டத்திலிருந்து விலகி இருக்கும் சாமானிய மக்களின் பதிவுகள் சிலம்பில் இடம் பெற்றுள்ள தன்மையினை ஆராய்வதன் மூலம் சிலம்பினை புதிய பொருண்மைத் தளத்தில் அறிந்து கொள்ளத் துணைபுரியும்.

            சிலம்பில் விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவினைக் கீழ்கண்ட உட்தலைப்புகளில் காணலாம்.  அவை:

1. குற்றம் இழைப்போர் – பொற்கொல்லர், கள்வர், கல்லாக் களிமகன், சிறைவாசிகள், பொய் சாட்சி கூறுவோர்

2. செய்தொழில் / வருணம்/ சாதிப்பிரிவு – எயினர், வேடர், கானக் குறவர், ஆயர், ஆய்ச்சியர், பொருநர், பாணர், கூத்தர், பரதவர்

3. மாற்றுத்திறனாளிகள் / உடல் ஊனமுற்றோர்

4. ஏவலாளர் – அடிமைகள்

5. அந்தணர் மேன்மையும் விளிம்புநிலை மாந்தர்களின் பதிவும்.

1. குற்றம் இழைப்போர்:

பொற்கொல்லர்:

            சிலம்புவில் இடம் பெறும் பொற்கொல்லன் பாத்திரம் குற்றச் செயல்புரியும் பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது.  பொருளாதாரத் தற்சார்பு, சமூக மேன்மை பெற்றிருந்தாலும் பொற்கொல்லர் கதை மாந்தர் சிலம்பு திருடியதாகப் படைக்கப்பட்டிருப்பது மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதற்கு இடமுண்டு. ஏனெனில் சிலம்பு பொற்கொல்லர் மேல் வெறுப்பு கொள்வதற்காகவே படைக்கப்பட்ட காப்பியம் என்ற விமர்சனம் உண்டு.  ஆனால், ஆசாரி, பத்தர் ஆகிய பிறப்புவழிச் சாதிப்பெயர்கள் சிலம்புவில் இல்லை.  தொழில் அடிப்படையில் இளங்கோ சுட்டுகிறார் என்ற ம.பொ.சி.யின் மறுப்பும் உண்டு. இருப்பினும், இழிந்தோன் எனும் பார்வையில் அடிகள்.  “விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லன்.  கூற்றத்தூதன், பொய்த்தொழிற்கொல்லன், கருந்தொழிற்கொல்லன்” என்றெல்லாம் சித்திரிக்கின்றார்.  மேலும், கொற்கையில் இருந்த வெற்றிவேற்செழியன் (இவனை இளஞ்செழியன் என்பார் அடியார்க்கு நல்லார்) பத்தினித் தெய்வம் கண்ணகிக்கு ஆயிரம் பொற்கொல்லர்களை ஒரு பகற்பொழுதில் உயிர்ப்பலியூட்டி அரசுக் கட்டில் ஏறினான் என்ற பதிவைப் புறம் தள்ள முடியாது. குற்றம் செய்தவர் என்ற சமூக இழிவின் அடிப்படையில் மட்டுமே இங்கு பொற்கொல்லர் பாத்திரம் விளிம்புநிலைப் பாத்திரமாகக் கருதுவதற்கு ஓரளவு தர்க்கமுண்டு எனலாம்.

கள்வர்:

            சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்கள் கள்வர்கள் ஆவர். இழிந்த களவுத்தொழிலைச் செய்து வாழும் கள்வர்கள் குறித்த பதிவு சிலம்புவில் உண்டு.  அடைக்கலக் காதையில் (166-171) கோவலன் மேன்மக்களுக்கு உரிய இலக்கணம் உடையவனாக இருக்கிறான்.  எனவே, இவன் கொலை செய்தற்கு உரிய கள்வனாகத் தோன்றவில்லை என்று கூறிய காவலர்க்குக் கள்வர்தம் இலக்கணத்தினைக் களவு நூலிலிருந்து விரிவாக எடுத்துக்கூறினான் பொற்கொல்லன்.  கள்வர்கள் மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டினையும் துனையாகக் கொண்டிருப்பர்: எளிதில் அகப்படமாட்டார்கள்: கண்ணுக்குப் புலப்படமாட்டார்கள்: உருமாறும் தன்மை கொண்டவர்கள் என்று இடம் பெறுகிறது.  “இழுக்குடை மரபிற் ஃ கட்டுண் மாக்கள்” எனச் சித்திரித்துள்ளது.

கல்லாக் களிமகன்:

            கல்லாத மக்கள் குறித்துச் சிலம்பு பகர்கிறது.  “கல்லாக் களிமகன் ஒருவன் கையில் / வெள்வாள் எறிந்தனன் விலங்கு ஊடறுத்தது / புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப / மண்ணக மடந்தை வான்றுயர் கூறக் / காவலன் செங்கோல் வளைய வீழ்ந்தனன் / கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென்” (212-217) இது.  கொலைக்களக்காதையில் கல்வியின்மையானும் கொலையஞ்சானுமாகிய கள்ளுண்ட களிமகன் ஒருவன் தன் கையிலுள்ள வெள்ளிய வாளால் கோவலனைக் கொன்றதைக் கூறுகிறது.

            இங்கு கல்வி கற்ற சமூகம் வேறு: கல்லாத மக்கள் திரள் என்பது வேறு.  இக்கல்வி பெற்றவர்கள் யார் என்பதைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது.  தோல்காப்பியரின் “ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன” என்னும் அகத்திணையியல் (28) நூற்பாவில் இடம்பெறும் உயர்ந்தோராக அந்தணர்.  அரசரைச் சுட்டுகிறார்.  “உயர்ந்தோர்க்குரிய ஓத்தினான்” (33) எனும் நூற்பா வணிகர்க்கு ஓதுதலின் பொருட்டும் பிரிவு நிகழ்கிறது.  அப்படியாயின் உயர்ந்தோர் என்ற பிரிவிற்குள் வராதார்க்கு ஓதல் பிரிவு இல்லை என்றாகிறது.  வெகுசன மக்கள் கூட்டத்திற்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

            “தொன்னெறி மொழிவயின் அகுநவும்” என்ற சொல்லதிகார நூற்பாவிற்கு உரை எழுதும் சேனாவரையர், “யாட்டுளான் இன்னுரை தாரான் என்றது இடையன் எழுத்தொடு புணராது பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறுதலின்றி எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் மொழியைக் கூறான்” என்று விளக்கம் தருகிறார்.  கல்வி கற்காத இம்மக்கள் குறித்துச் சங்க இலக்கியங்களில் கல்லாக் கோவலர் (அகம். 74:16; நற். 367:8; ஐங். 304:1) என்றும் திருப்பாவையில் “அறிவென்றுமில்லாத ஆயக்குலம்” என்றும் குறிப்பிடுகிறது. ஆநிரைச் செல்வம் உடைய ஆயர்குலமே இவ்வாறு இழிவுபடுத்தப்பட்டதற்குக் காரணம் கல்வி மறுக்கப்பட்டதே.  இம்மக்கள் குறித்த இலக்கியப்பதிவுகள் அருகிக் காணப்படுகின்றன.

            உடைமையற்ற கற்காத உடல் உழைப்புடைய ஏனைய விளிம்புநிலை மக்கள் குறித்த பதிவுகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவே எனலாம்.  கல்வியறிவு மறுக்கப்பட்ட இம்மக்கள் பிரதிநிதியாகச் சிலம்புவில் ‘கல்லாக் களிமகனைக்’ கருதலாம்.  கோவலனைக் கொன்றவன் கல்வி கற்காதவன்; கள்ளுண்டவன்; முன்பின் யோசனை அற்றவன்;  உணர்ச்சிமிக்கவன் என்ற பதிவுகள் உள்ளன.  இப்பதிவுகள் விளிம்புநிலை மக்கள் குறித்த அக்கால மதிப்பீடாகக் கொள்ளலாம்.

சிறைவாசிகள்:

            சிறைவாசிகள் குறித்த பதிவு கட்டுரை காதையில் (98-103) இடம் பெறுகிறது.  கள்வர்கள், குற்றவாளிகள், பகைவர்கள் ஆகியோர் இச்சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்தனர்.  சுpறைவாசிகளை விடுவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றதை ‘சிறைப்படுகோட்டம் சீமின்’ (126) எனவும் ‘சிறையோர் கோட்டம் சீமின்’ (நடுகற்காதை: 203) எனவும் ‘ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப்’ (194) என வரும் அடிகள் உணர்த்துகின்றன.  மங்கலதேவி நன்னாளில் செய்த நாளணி வேள்வியில் ‘அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் / பெருஞ்சிறை கோட்டம் பிரிந்த மன்னரும்’ (வரந்தருகாதை: 157-158) கலந்து கொண்டனர் இங்கு அரசியல் கைதிகளான பகை அரசர்களும் விளிம்புநிலை குற்றவாளி மக்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

பொய் சாட்சி கூறுவோர்:

            வறுமையில் உழலும் ஒருவன், பொருள் பெறுதலுக்காக, கற்புடை மகள் மீது பொய்ப்பழி சுமத்திப் பொய்க்கரி (பொய்சாட்சி) கூறியதால் தீயோரைத் துன்புறுத்தும் பூதம் அவனைக் கொல்லப் பிடித்துக்கொள்கிறது.  இப்பதிவு அடைக்கலக்காதையில் வருகிறது.  (76-85) இல்லோர் செம்மல் (வறியொர் தலவன்) எனக் கோவலனின் பெருமை பேசும் மாடலனின் கூற்றாக இடம் பெறுகிறது.  பொய்ச்சாட்சி கூறியவனைப் பூதம் துன்புறுத்த அதைக் கண்டு அவன் தாய் படும் துயரத்தைக் காண் சகியாத கோவலன் அப்பூதத்திடம் சென்று, “என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென / நன்னெடு பூதம் நல்கா தாகி / நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு / பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை ஃஎன்று கூறி அவனைத் தன் எதிரே புடைத்து உண்டது.  அதாவது, கீழோனுடைய உயிரின்பொருட்டு நல்ல உயிரினைக் கொண்டு மேலான நிலையை இழக்கும் தன்மை என்னிடத்தில் இல்லை எனும் பூதத்தின் கூற்றில் மேல் கீழ்: நல்லவர் நரகர் (கெட்டவர்) எனும் முரண் உள்ளதை அறியலாம்.

2. செய்தொழில் / வருணம் / சாதிப்பிரிவு:

            நால்வருணம் குறித்த பதிவு ஊர்காண் காதையில் (211-213) இடம் பெற்றுள்ளது.  மதுரையில் உள்ள தெருக்கள் பற்றிக் கூறுமிடத்து, “கூலங் குவிந்த கூல வீதியும் /பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் / அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்” என வருகிறது.  கூல வீதிகளும், பகுதி வேறு தெரிந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பார் இருக்கும் நால்வேறாகிய தெருக்களும் முச்சந்தியும், நாற்சந்தியும், கொயிற்கடைத் தெருக்களும் அமைந்துள்ளதைச் சித்திரிக்கிறது.

            செய்தொழில் அடிப்படையில் சிலப்பதிகாரக் குன்றக்குரவையில் குறவன் குறத்தியர், வேட்டுவரும் புறஞ்சேரியிறுத்த காதையில் யாழிசைக்கும் பாணரும் (105), மருத நிலத்து வைகறையில் பறை ஓசை கொட்டும் கிணைநிலைப் பொருநரும் (148) நடுகற்காதையில் கூத்து நிகழ்த்தும் சாக்கையனும் (77), ஆய்ச்சியர் குரவையில் ஆயரும், ஆய்ச்சியரும், கானல் வரியில் பரதவ மக்களும், வேட்டுவ வரியில் வழிவளம் பெறும் எயினர், எயிற்றியரும், விளிம்புநிலை மாந்தராகக் கொள்ளலாம்.  நாடுகாண் காதையில் வரும் விருந்தின் பாணி, ஏர் மங்கலம், தொழிலாளர்களின் பாடல்களைக் கொள்ளலாம்.

            சிலம்புவின் துன்பமாலை  விளிம்புநிலை மக்களின் ஒப்பாரிப்பாடல் வகையாகக் கருதலாம்.  மேலும், மாதரி பாற்சோறு படைக்கும் இயக்கி, பாசண்ட சாத்தன், சாலினி வழிபடும் கொற்றவை, வன தேவதைகள் வரத்தோமை, வட்டிகைப் பூங்கொடி ஆகியன சிலம்பில் இடம்பெறும் விளிம்புநிலை மக்களின் தெய்வங்களாகக் கூறலாம்.  அடைக்கலம் கொடுக்கும் வழக்கமும், நீராடிய பின் வழிபடும் மரபும் கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையும் மானிட மகளைத் தெய்வமாக அலங்கரித்துக் குறி கேட்கும் வழக்கமும் இம்மக்களிடம் இருந்திருப்பதைச் சிலம்பு உணர்த்துகிறது.

            செய்தொழில் அடிப்படையில் மேற்சொன்ன மக்கள் இனங்கள் காலப்போக்கில் வைதிகச் சமயத்தின் வருணக்கோட்பாட்டுடன் உட்கலந்து பின் அகமணம், பிறப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சாதிப்பிரிவுகளாக மாறின.

3. மாற்றுத்திறனாளிகள்:

            சிலம்பில் இடம்பெறும் மாற்றுத்திறனாளிகள் அரச மகளிர்க்கு குற்றேவல் புரியும் ஏவலர்களாகவும் ஆடல்மகளிரின் பணிப்பெண்களாகவும், இலஞ்சி மன்றத்தில் நோயாளிகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.  இலஞ்சி என்ற குளத்தில் மாற்றுத்திறனாளிகளான கூனரும், குறளளும், ஊமையும், செவிடரும் மூழ்கி எழுந்தால் அவர்களின் உடல் ஊனம் நீங்கி நன்னிலை பெறுவதாக ‘இளங்கோ’ சித்திரித்துள்ளார்.  “கூனும் குறளும் ஊனமும் செவிடும் / அழுகு மெய்யாளரும் முழுகினர் ஆடிப் / பழுதில் காட்சி நன்னிறம் பெற்று / வலம் செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” இந்திரவிழவூர் எடுத்த காதை (118-121)

            மேலும் சேரன் செங்குட்டுவன் இமயமலை சென்று பத்தினிக்கல்லைக் கனக விசயர் முடியின் மீதேற்றி வெற்றியுடன் திரும்பி வரும் செய்தியைச் சிறுதொழில் செய்யும் குறிய  கூனும் குறளும் துயிலின்றி வருந்தியிருக்கும் வெண்மாளின் நெகிழ்ந்த வளை மகிழ்ச்சியில் செறியும் வண்ணம் அரசியிடம் சென்று ‘அரசன் வந்தனன்; நின் எழிலைப் பெறுவாயாக’ என்று கூறினர்.  இச்செய்தி நீர்ப்படைக் காதையில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.  சிறு குறுங்கூனும் குறளுஞ் சென்று / பெருக நின் செவ்வி பெருமகன் வந்தான் /நறுமலர்க் கூந்தல் நாளணி பெறுகென (214-216). பாண்டிமாதேவியின் அந்தப்புறத்தில் பணிபுரியும் கூனராயும் குறளராயும் ஊமராயுங் குழுமிய குற்றேவல் புரியும் மகளிர் நெருங்கிப் புடைசூழத் தான் கண்ட தீக்கனாவின் தன்மையைப் பாண்டிய அரசனிடம் எடுத்துச் சொல்லச் சென்றாள்.  “கூனுங் குறளும் ஊமுங்கூடிய / குறுந் தொழிலிளைஞர் செறிந்து சூழ் தர” என்று வழக்குரை காதையில் (18-19) ஏவல் தொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகள் இடம் பெற்றுள்ளனர்.

            நடுகற்காதையிலும் (57-58) “மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும் / கூனுங் குறளுங் கொண்டன வொருசார்” என இம்மக்கள் இடம் பெற்றுள்ளனர்.  அங்கக் குறைபாடு உள்ளவர்களை அரசன் அந்தப்புறத்தில் பணியாளராக வைத்திருப்பதன் நோக்கம் அரச மகளிரின் மீது அரசன் கொண்ட நம்பிக்கையின்மையைக் காட்டுகிறது எனலாம்.  அதே நேரத்தில் அரச மகளிரைப் பாதுகாக்கவும் ஏவல் பணிகளைச் செய்யவும் இம்மாற்றுத் திறனாளிகளைப் பணியாளர்களாக வைத்துள்ளனர்.

            சிலம்பின் திருப்பு முனைப் பாத்திரம் கூனி. கணிகையர் குலப்பெண்ணான மாதவியின் நடன அரங்கேற்றத்திற்குப் பரிசிலாக அரசன் தரும் 10008 கழஞ்சு பொன்மாலையை விற்கச் செல்லும் பணிப் பெண்ணாகக் கூனியைப் படைத்துள்ளார் இளங்கோ அடிகள். இதனை, அரங்கேற்று காதை “மாலை வாங்குநர் சாலுநங் கொடிக்கென /மானமர் நோக்கியோர் கூனி கைக் கொடுத்து /பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த  /மாமலர் நெடுங்கண் மாதவி மாலை / கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு /மணமனை புக்கு”…. (166-172) எனச் சித்திரிக்கிறது. இங்கு கூனியின் இயற்பெயர் சுட்டப்படவில்லை.  இது நோக்கத்தக்கது. உடல் சார்ந்த உழைப்பில் ஈடுபடும் இம்மாற்றுத்திறனாளிகள் சிலம்புவில் இவ்வாறு வந்து போகும் பாத்திரங்களாக, அரச அதிகார மைய நீரோட்டத்தில் விளிம்புநிலைத் தன்மையில் ஓரத்திலேயே இம்மக்களின் சித்தரிப்பு இடம் பெறுகிறது எனலாம்.

4. ஏவலாளர் – அடிமைகள்:

            “அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் / கடிவரை இல: புறத்து என்மனார் புவலர்” (1:25), “ஏவல் மரபின் ஏனோரும் உரியர் / ஆகிய நிலைமை அவரும் அன்னர்” (1:26) எனும் நூற்பாக்களில் தொல்காப்பியர் கூறும் செய்தியாவது அடியோர், வினைவலர், ஏவலாளர் ஆகியோர் அக இலக்கியத்தல் கதை மாந்தர்களாக இடம் பெறக்கூடாது: மாறாக, புற இலக்கியத்தில் அவர்கள் வரலாம்.  சிலம்புவில் ஏவலாளர் குறித்த பதிவு புறஞ்சேரியிறுத்த காதையில் வருகிறது.  கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து கண்ணகியுடன் மதுரைக்கு யாருக்கும் சொல்லாமல் செல்கிறான்.  இவர்களைக் காணாத சுற்றத்தினர் துயரமுற்றுத் தேடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.  ஏவலாளர் பலவிடங்களிலும் தேட முற்பட்டனர்.  இதனை “இருநிதிக்கிழவனும் பெருமனைக் கிழத்தியும் / அருமனை இழந்த நாகம் போன்றதும் / இன்னுயிர் இழந்த யாக்கை என்னத் / துன்னியச் சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்/ ஏவலாளர் யாங்கணும் சென்று / கோவலன் தேடிக் கொண்ரக வெனப் பெயர்ந்ததும்  / (15-62) என்று கூறி ஏவல் தொழில் செய்யும் விளிம்புநிலை மாந்தரைப் பதிவு செய்துள்ளது.

5. அந்தணர் மேன்மையும் விளிம்புநிலை மாந்தர்களின் பதிவும்:

            அந்தணர் யார் என்பதற்குச் சிலம்பு கூறும் வரையறை இங்கு குறிப்பிடத்தக்கது.  “ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் /முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி/ ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் / அறுதொழில் அந்தணர் பெறுமுறை வகுக்க” (கட்டுரை காதை: 66-70) எனும் இவ் அடிகள் ஆரியரின் வருணாசிரமக் கருத்தாக்கம் சிலம்புவில் இடம் பெற்றுள்ளதை உணர்த்துகிறது.

            சிலம்புவில் வரும் அந்தணர்கள் வேதக்கல்வி பயின்றவர்கள்: அரசனுக்கு அருகாமையில் இருப்பவர்கள்.  ‘வரிநவில் கொள்கை மறைநூல் வழக்கத்து புரிநூல் மார்பர்’ (புறஞ்சேரியிறுத்த காதை: 38-39) முப்புரிநூல் அணிந்தவர்கள்: இரு பிறப்பாளர்கள் ஆவர்.  குறிப்பாக மாடல மறையோன், மாங்காட்டு மறையோன், கோசிகாமணி ஆகிய அந்தணக் கதை மாந்தர்கள் தனிச்சிறப்பிடம் பெறுகின்றனர்.

            மாடல மறையோன், நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன்: சொல்லின் செல்வன்: குமரி முதல், கங்கை வரை நிலவியல் அறிவு கொண்டவன்: நீண்ட பயணம் செய்பவன்: செங்குட்டுவனிடம் வேள்வி நடத்தச் சொன்னவன்: நான்மறை மருங்கின் வேள்வி பார்ப்பான் ஃ அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய ஃ பெருநல் வேள்வி நீ செயல் வேண்டும். (நடுகற்காதை: 176-178) சேரன் செங்குட்டுவன் தன் நிறையாகிய ஐம்பது துலாம் பொன்னைப் பரிசிலாக (துலா புருட தானம்) மாடல மறையோனுக்கு பெரு விருப்பம் கொண்டு வழங்கினான்.  (நீர்ப்படைக்காதை: 173-176)

            காப்பிய நிகழ்ச்சிகளை ஒன்றிணைக்கும் பாலம் போன்றவன்: கோவலன் புகழ் பாடுபவன் என்று சிறப்பு மாடலனுக்கு உண்டு. புறஞ்சேரியிருத்த காதையில் கோவலன் இவன் காலில் விழுந்து வணங்குகிறான்.

            மாங்காட்டு மறையோன் உறையூரில் மதுரைக்குச் செல்லும் செவ்விய வழியைக் கோவலனுக்கு கூறியவன்: திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய தலங்களில் திருமாலைத் தரிசிக்கக் குடமலை நாட்டிலிருந்து பயணப்பட்டவன்: வைணவ சமயத்தின் பெருமை பேசுபவன்.

            கோசிகாமணி மதுரைக்குச் செல்லும் கோவலனைப் பின் தொடர்ந்து சென்று மாதவி தீட்டிய காதல் மடலைக் கோவலனிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறான்.  மாதவியின் மனப்பாங்கினைப் புலப்படுத்தும் பாத்திரமாக விளங்குகிறான்.  இச்செய்தி புறஞ்சேரியிறுத்த காதையில் வருகிறது.  இம்மூன்று அந்தணர்களும் பயணம் மேற்கொள்பவர்கள்: தனித்த ஆளுமை கொண்டவர்கள்: அதிகார மையத்துடன் நெருக்கம் மிக கொண்டவர்கள்: அரசனிடம் பல வெகுமதிகள் பெற வேதக்கல்வி உடையவர்கள்.

            வீடுபேற்றினை விரும்பும் ஒரு கொள்கையுடையவர்கள்; உபநயனத்திற்கு முன் ஒரு பிறப்பும் பின் ஒரு பிறப்பும் ஆகிய இருபிறப்பாளர்கள்; ஆகவனியம், காருகபத்தியம், தக்கிணாக்கினி ஆகிய முத்தீ வளர்ப்பவர்கள்; ரிக்கு, யசூர், சாமம், அதர்வணம் எனும் நான்மறை கற்றவர்கள்; கடவுள் வேள்வி, பிரம வேள்வி, பூத வேள்வி, மானிட வேள்வி, தென்புலத்தார் வேள்வி ஆகிய ஐந்து வேள்விகளைச் செய்பவர்கள்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகிய அறுதொழில் உடையவர்கள் அந்தணர்கள் ஆவர்.  இத்தகைய தன்மையுடையவன் சோணாட்டைச் சார்ந்த அறிவில் வல்ல பராசரன் எனும் அந்தணன்.  இவன், சேர மன்னனின் கொடைத்திறம் கேட்டு அவனிடம் சென்று தன்னுடைய நாத்திறத்தால் வாதிட்டுப் பகைவரை வென்று பார்ப்பனவாகை சூட்டப்பெற்று பொன் பரிசில் பெற்றுத் திரும்பும் வழியில் பாண்டிய நாட்டில் திருத்தங்கால் எனும் அந்தணக்குடியிருப்பில் இளைப்பாறினான்.  அவனைச் சுற்றி அந்தணச் சிறுவர்கள் சூழ அவர்களிடம் “அந்தணச் சிறுவர்களே, என்னுடைய ஒப்ப மறையினை ஓதி என் பண்டச் சிறுபொதி கொண்டு போமின்” என்கிறான்.

            அதற்கேற்ப வார்த்திகன் புதல்வன் தக்கிணாமூர்த்தி எனும் அந்தணச் சிறுவன் அம்மறையின் ஓசையை முறை பிறழாது உள்ளம் நிறைமகிழ்வுடன் பராசரனோடு ஒப்ப ஓதுகிறான்.  அதைக்கண்ட பராசரன் அச்சிறுவனை வியந்து பாராட்டி முத்து வடப் பூணூல், கைவளை, தோடு ஆகிய தகுதிவாய்ந்த பொன்னாலான அணிகலன்களைப் பரிசிலாகக் கொடுத்து தன்னூர் சென்றான்.

            பொன்பரிசிலைப் பொறாத சிலர். படுபொருள் (களவுபொருள்) வெளவிய பார்ப்பான் இவன் என்று கூறிக் காவலரிடம் கூற அவர்கள் புதையலைக் கவர்ந்த குற்றத்திற்காக வார்த்திகனைச் சிறையில் இட்டனர்.  அதனால். அவன் மனைவி கார்த்திகை என்பவள் பெருந்துன்பம் கொண்டு அழுது புலம்பினாள்: நிலத்தில் புரண்டு மயங்கி விழுந்தாள்: கடவுளை வெறுத்து வெகுண்டாள்: அதனால் மதுரையிலிருந்த (இதுநாள் வரை திறந்திருக்கும்) துர்க்கை கோயிற்கதவு இப்பெண்ணின் புலம்பலால் திடீரென மூடிக்கொண்டது.  இதனால் பாண்டிய மன்னன் மனம் வருந்தி, எனது செங்கோல் கோடியது உண்டா?  துர்க்கைக்கு உற்ற துன்பம் எதனால்?  என்று வினவ கார்த்திகையின் கணவனான வார்த்திகனைச் சிறையிட்ட உண்மைச் செய்தியினைக் காவலர் கூறினர்.

            உடனே, பாண்டிய மன்னன் வார்த்திகனை சிறையிலிருந்து விடுவித்து அவனைப் புகழ்ந்து. ‘என்னுடைய அரச நீதி தவறுற்றது; அதனைப் பொறுத்தல் நுமது கடமையாகும்’ என்று மன்னிப்பு கேட்கிறான்.  மேலும், அதற்கு ஈடாக பெரிய நீர் சூழ்ந்த வயல்களை உடைய திருத்தங்கால் எனும் ஊருடன் குறைவுபடாத விளைவினை உடைய வயலூரையும் வழங்கினான்.  பாண்டிய நாட்டின் அரசனே மன்னிப்பு கேட்பதும் அதற்கு கைம்மாறாக ஊர்களை வழங்குவதும் ஆகிய பதிவுகள் “அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவெண் / இறைமுறை பிழைத்தது பொறுத்தல் நுங் கடன்எனத் /தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் / மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் / கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர்” / (கட்டுரை காதை: 116-120) என்று வருகிறது.  இது சிலப்பதிகார காலத்தில் அந்தணர்கள் பெற்ற மேன்மை நிலையாகக் கொள்ளலாம்.

            விளிம்புநிலைப் பெண்ணான மாதரி, தம்மிடம் அடைக்கலமாக வந்த கண்ணகி கோவலன் ஆகியோரின் இறப்புக்காக மனம் வருந்தித் துன்புற்று இறுதியில் உயிர் துறக்கிறாள்.  அதைப்போலவே. வணிகர் குலத்தில் பிறந்த கோவலனின் நற்றாயும் கண்ணகியின் நற்றாயும் இறக்கின்றனர்.  வரந்தரு காதையில் தெய்வ அருள் பெற்றத் தேவந்தியின் கூற்றாக வரும் பகுதியில் கண்ணகி தாயும் கோவலன் தாயும் மாதரியும் மறுபிறவி எடுத்து வஞ்சி நகரில் பிறக்கின்றனர்.  இது,

 “கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன் / கடவுண் மங்கலங் காணிய வந்த / மடமொழி நல்லார் மாணிழை யோருள் / அரட்டன் செட்டிதன் ஆயிழை ஈன்ற / இரட்டையம் பெண்கள் இருவரு மன்றியும் / ஆடக மாடத் தரவணைக் கிடந்தோன் / சேடக்குடும்பியின் சிறுமகள் ஈங்குளள் / (வரந்தரு காதை: 46-52) என வருகிறது.

            கண்ணகி பிரதிட்டையைக் கண்டு வணங்க வந்த மகளிருள் அரட்டன் செட்டியின் மனைவி மன மகிழ் சிறப்புடன் பெற்றெடுத்த இரட்டையாராகத் தோன்றிய மகளிர் இருவரும் (முற்பிறவியில் கண்ணகி கோவலனின் தாய்மார்கள் இவர்கள்) திருவனந்தபுரத்து அராவணையில் பள்ளி கொண்ட திருமாலுக்குத் தொண்டு செய்யும் குடும்பத்தைச் சார்ந்த சேடன் (திருவடி பிடிக்கும் அடியவன்) மகளாகப் பிறந்த சிறுமகளும் (முற்பிறவியில் மாதரி) கண்ணகி கோயிலில் இருந்தனர்.  கண்ணகி தாயும் கோவலன் தாயும் மாதரியும் இறந்தவுடன் சொர்க்கம் (துறக்கவுலகம்) செல்வதில்லை.  ஆனால், கோவலன், கண்ணகிக்கு வானுலகம் கிட்டுகிறது.  இதற்குக் காரணம் இம்மூன்று பெண்களும் அறம் செய்வதில்லை: அதனால் மேலுலகம் அவர்களுக்கு கிடைப்பதில்லை: கோவலனிடம் தானம் பெற வந்த பார்ப்பனனை மதம் யானை தாக்க வருகிறது.  அம் மத யானையிடமிருந்து அப்பார்ப்பானனைக் காப்பாற்றுகிறான்.  இவ் அறச்செயல் தான் கோவலனுக்கு வானுலகத்தைப் பெற்றுத் தருகிறது.

            கோவலன் மீது கண்ணகி கொண்ட அன்புதான் அவள் சொர்க்கம் அடையக் காரணம் எனும் பதிவும் கண்ணகி மீதுள்ள அன்பின் மிகுதியால் இடையர் குலத்து முதியளாகிய மாதரி மற்றும் வணிகர் குலத்து மாசாத்துவன் மனைவியும் மாநாய்கன் மனைவியும் கண்ணகி அணுகிய வஞ்சி மூதூரில் பிறக்கின்றனர் என்ற செய்தியும் அறம் செய்தால் பொன்னுலகம் அடைதலும் ஒருவர்பால் அன்பு வைக்கும் உள்ளமுடையோர் இந்நிலத்தில் தாம் அன்பு வைத்த இடத்தே பிறத்தல் இயல்பும் ஆகிய கருத்துக்கள் வரந்தரு காதையில் (121-138) இடம் பெற்றுள்ளன.

            இப்பதிவுகளை உற்று நோக்கும்போது ஆயர்குலத்தில் பிறந்த மாதரி அடுத்த பிறவியிலும் அதே குலத்தில் பிறந்து பெருமாளுக்கு அடிமைத் தொண்டு செய்வதும் வணிகர் குலத்தில் பிறந்த கண்ணகி, கோவலன், தாய்மார்கள் மறுபிறவியிலும் அதே (வணிகர்) செட்டியார் சாதியில் அரட்டன் செட்டியின் இரட்டைப் பெண்களாகப் பிறப்பதும் ஏன் என்ற வினா எழுவது இயல்பு. காரணம் விளிம்புநிலை மாந்தரான மாதரியும், வணிகர்குல மாந்தர்களான கண்ணகி, கோவலன், தாய்மார்களும் சாதி மாறாமல் அடுத்த பிறவியில் பிறப்பது என்பது சாத்தியமா? என்ற வினாவும் உடன் தோன்றுகிறது ஒரு ஆறுதலான விசயம் இம்மூன்று பெண்களும் ஒரே நாட்டில் பிறக்கின்றனர் என்பதே அது.

            தமிழ்ச் சமூக அமைப்பில் சாதி / இனம், தொழிற்பிரிவுகள் ஆகியவைகள் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.  ஒருவர் ஒரு குறிப்பிட்ட சாதி / இனத்தில் பிறந்துவிட்டால் அதுவே அடுத்த பிறவியிலும் தொடரும் என்ற கருத்தியலுக்குச் சான்றாகவும் மாதரி எனும் விளிம்புநிலைப் பாத்திரத்தைச் சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது எனலாம்.

நிறைவாக:

            சிலப்பதிகார காலகட்டத் தமிழ்ச் சமூக அதிகார அமைப்புகளின் மேல் மட்டத்தில் இருந்தவர்கள் அரசர்கள் இருப்பினும் அவர்களை இயக்குபவர்களாக அந்தணர்கள் இருந்துள்ளனர்.  அத்துடன் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியற்பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.

பயன்பட்ட நூல்கள்:

1.          சிவசுப்பிரமணியன்.ஆ., அடித்தள மக்கள் வரலாறு, மக்கள் வெளியீடு, சென்னை. முதற்பதிப்பு, 2002

2.          வேங்கடசாமி நாட்டார், ந.மு., (உரை ஆசிரியர்), சிலப்பதிகார ராமையா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு, 2005.

3.          Bier, Jess “Srbalterin Studies” Encyclopedia of Geography,  2010. 15 Nov. 2010 http://www. Sageereference.com/geography_n1095.html.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் மா. வெங்கடேசன்

தமிழ் இணைப் பேராசிரியர்

அரசு கலைக் கல்லூரி (ஆடவர்)

கிருட்டினகிரி-635 001.

கிணத்துக்கடை| சிறுகதை

                          பழைய ஊர். கட்டுப்பாடுகள் அதிகம். சண்டைகளும் கலவரங்களும் சக்கரைப் பொங்கல் மாதிரி அப்பப்ப வந்து தெவட்டும். முனுசாமி அதிகாரி பொம்பளைங்க விஷியத்துல கொஞ்சம் அப்படி இப்படி. அவருக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு பொண்டாட்டிக்கும் ஆளுக்கொரு ஒரு ஆண் பிள்ளைங்க. ஊரே தன்னோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சிருந்தாரு. அவருடைய முறுக்கு மீசையும் கோபக்கண்களும் பார்த்தா, யாருக்குமே பயம் வரும். முனுசாமி அதிகாரியை கேட்காம அந்தவூர்ல எதுவுமே நடக்காது. ஆண்டு அனுபவிச்சிட்டு ஒருநாள் இறைவனிடம் போய் சேந்திட்டாரு. ஆனா, வக்கில புடிச்சி பத்திரத்துல தன்னோட ரெண்டு மகனுகளுக்கும் சரிபாதியா பங்கு பிரிச்சி வச்சிட்டுத்தான் போயிருக்காரு. அவருக்குப் பின்னால வந்த மகன்களும் அப்பன மாதிரி குடியும் கும்மாளமுமா இருந்தாங்க. வீட்டுல இருக்கிற பண்டப் பாத்திரங்கள வித்தாங்க.. நிலத்த மனைகளாக்கி காசப்பாத்தாங்க. வீடுகள் அதிகமாச்சு. ஊரும் பெருசாச்சு. சனி பகவான் பசங்க ரெண்டு பேரோட தலையை இறுக்கப் பிடிச்சிட்டான் போலிருக்கு. அண்ணன் தம்பிக்குள்ள ஒரே சண்டை. ரெண்டு பேரும் ஒருசில இரத்தக் காயங்களோட தப்பிச்சிட்டாங்க. இனி செத்தா கூட போவக்கூடாதுன்னு முடிவும் பண்ணியாச்சு. தங்களோட எல்லையை முள்ளுக்கம்பிகளாலும் செங்கல் கற்களாலும் தனித்தனியா பிரிச்சிட்டாங்க.

                          ஒரு விஷியத்துல முனுசாமி அதிகாரி ரொம்ப விவரம். அவங்க காட்டுல நல்லத்தண்ணி கிணறு ஒன்னு இருக்கு. நல்லா அகலமாவும் பெரியதாகவும் இருக்கும். கோடையிலும் தண்ணீ வத்தவே வத்தாது.  மக்கள் கூட்டகூட்டமா வந்து தண்ணி எடுத்துட்டு போனதால கிணத்துக்கடைன்னு சொல்லுவாங்க. அவருகிட்ட,

                          “ஏங்க அதிகாரி, உங்க கிணத்துல மட்டும் தண்ணீ எப்பவும் வத்தவே மாட்டங்குதே…. என்ன? ஏதாவது மந்திரம் தந்திரம் செய்யுறீங்களா” ன்னு ஊரார் கேட்கும் போது,

                      “அந்த கிணத்துக்கு அடியில பெரிய நீர் வீழ்ச்சி இருக்கிறதாகவும், அது ஆறாக ஓடுவதாகவும், இந்தக் கிணத்துல இருந்துதான் சூரியனின் பார்வையைப் பெற்று இருப்பதனால்தான் தண்ணீரானது தேன் போன்று சுவையா இருக்கிறதாகவும் என் அப்பா அடிக்கடி என்னிடம் சொல்லுவாரு” என்று ரொம்பவே பெருமைப்பட்டுக்கொள்வார்.

   ஊரே அந்தக் கிணத்துலதான் தண்ணீர் எடுக்க வருவாங்க. முனுசாமி அதிகாரி ரொம்ப கர்வமா நினைப்பார். ஒருநாளும் யாரும் வராதிங்கன்னு சொல்லவே மாட்டாரு… அந்த வட்டாரத்துல கிணத்துக்கடைன்னா தெரியாதவங்க யாருமே கிடையாது. அந்தக்கிணத்துத் தண்ணிக் குடிச்சா  கொஞ்சம் கூட சளி பிடிக்காது. யாருன்னாலும் தைரியமா அந்தத் தண்ணியைக் குடிக்கலாம். பழைய ஊருக்கு கிணத்துக்கடைதான் சாமி.. குலசாமி.

       முனுசாமி அதிகாரி கிணத்தைப் பிரிக்கும் போது பொதுமக்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் வராதபடிக்கு பிரிச்சார். கிணறு ரெண்டு மகன்களுக்கும் சரிபாதி. அதாவது, மொத்த நிலத்தின் மையப்பகுதி அக்கிணறு. வட்டமாய் உள்ள கிணற்றில் வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசையாய் நேராகச் செல்வது. அந்தப் பத்திரத்தில், கிணற்றில் தண்ணீர் இருக்கும் வரை பொதுமக்கள் பிடித்துக் கொள்ளலாம். தனியாக குழாய்ப் போட்டு பிடிக்க அனுமதி இல்லை. யாரும் கிணற்றுக்குச் சொந்தம் கொண்டாட முடியாது. என் இரு மகன்களும் அந்தக் கிணற்றுக்குப் பாதுகாவலராக இருப்பார்கள். கிணற்றைத் தூர்வாரும் செலவுகள் அனைத்தும் என் மகன்களோடு ஊர்ப்பொது மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

                          சண்டையிட்ட அண்ணன் தம்பிகள், வடமேற்கு திசையில் இருந்து தென்கிழக்கு திசை நோக்கி சரியாகக் கிணற்றின் பாதி வழியாக செங்கல் கட்டிடம் கட்டினர். ஊர் ரெண்டாக்கப்பட்டன. அந்தந்தப் பிரிவு வேலிக்கு உள்ளிருந்தவர்கள் அந்தப் பகுதிக்கு கட்படுவாராயினர். கிணற்று நடுவில் நேராக இரண்டு அரங்கள் போடப்பட்டன. அரத்திற்கு ஆறாய் தவலைக் கட்டப்பட்டன. இப்பகுதியில் உள்ளோர் கிணற்றில் இங்கிருந்து நீர் இறைத்துக் கொள்வர். அப்பகுதியில் உள்ளோர் அங்கிருந்து நீர் இறைத்துக் கொள்வர். பொதுவா மக்கள், பெரியவரு ஊரு… சின்னவரு ஊருன்னு சொல்லுவாங்க. பெரியவரு ஊருல பூங்கொடின்னு வயசு பொண்ணு ஒருத்தி இருந்தா. கருப்பா இருந்தாலும்,  பாக்க லட்சணமா அழகா இருப்பா.

                          “என்ன பூங்கொடி! தனியா யோசனையில இருக்க! கொடி வாடுதா? இல்ல வாடாம இருக்க மாரியத்தேடுதா?” என்று புதிர்ப்போட்டாள் பக்கத்துவூட்டுக்காரி மங்கா.

                          “ஏ… மங்கா என்னப் பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா. ஆமா! மாரியத் தேடித்தான் இந்த கொடி வாடிக்கிடக்குது. இப்ப அதுக்கு என்ன?” என்று முறைத்தாள் பூங்கொடி.

                          “அதுக்கில்ல பூங்கொடி… உன்னப்பாத்தா ஏதோ மனசு கவலையில இருக்கிற மாதிரி தோணிச்சு. அதான் உதவலாமுன்னு பேச்சுக்கொடுத்தேன். நீ என்னன்னா இப்படி கோவிச்சிக்கிறீயே” என்று உதட்டை ஒருவாறு பிதுக்கிக்கொண்டாள் மங்கா. பூங்கொடியும் மங்காவும் ஒரு வயசுக்காரிங்கதான். மங்காவுக்கு பதிமூனு வயசிலேயே தாய்மாமனைப் புடிச்சி கட்டி வச்சுட்டாங்க. மங்காவுக்கு ரெண்டு பொட்டபுள்ளையங்க. கடைசியா ஆம்பிளை பிள்ளை ஒன்னு. ஆக மொத்தம் மூனு புள்ளையங்க. யாராவது கேட்டா, “ஏண்டி.. மூனு புள்ளைய பெத்துருக்கியே.. எப்படி கரைசேத்துவன்னு” அதுக்கு அவ சொல்லுவா, “கடவுள் கொடுத்தது. அவனுக்குத் தெரியாதா எப்படி கரைசேத்தனுமுன்னு” என்று பதில் சொல்லுவா.

                          “இல்ல மங்கா… பெரியவரும் சின்னவரும் சண்டைப் போட்டு தனித்தனியா பிரிஞ்சிட்டாங்க. இதுல வேற ரெண்டு பக்கமும் செவறு, கம்பி வேலிப் போட்டு கட்டிட்டாங்க. மாரியப் பாத்து ரொம்ப நாளாச்சு. நேத்துதான் கிணத்துக்கடைக்கிட்ட தண்ணி எடுக்கலாமுன்னு போனேன். அங்கதான் மாரியும் தண்ணிப் புடிக்க வந்திச்சு”

                          “அப்ப காதலர்கள் ரெண்டு பேரும் ஒன்னா சந்திச்சிட்டீங்க”

                          “ஆமாம்! என்ன சந்திச்சோம். கிணத்துக்கடையில ஒரே கூட்டம். பேசவே முடியல. மாரிக்கு மட்டும் கேட்குற மாதிரி, என்ன ஓங்கூட சீக்கிரம்  கூட்டிட்டு போயிடுன்னு மட்டும் சொல்லிட்டு வந்தட்டேன்”

    மாரியும் பூங்கொடியும் காதலிக்குறாங்க. சாதி வேற. பிரச்சனையும் பெரிசு. ஊரு ஒன்னா இருந்தப்ப ஒன்னா திரிஞ்சாங்க. அம்பல் அலராகிப் போனது. காதலர்கள் ரெண்டு பேத்தையும் பாக்கவிடாம செஞ்சாங்க. இதுல சண்டைப்போட்டு கிணத்துக்கடைக்கிட்ட செவுறு வேற. ஒருத்தர ஒருத்தர் பாக்காம துடிச்சிப் போயிட்டாங்க.

                          “பூங்கொடி… நீ வேற சாதி.. மாரி வேற சாதி… அதனால பிரச்சனைதான் பெரிசாகும்டி. இந்த கிராமத்துல இருக்கிறவங்கள எதிர்த்திட்டு உன்னால வாழ முடியாது”

                       “எது நடந்தாலும் எனக்கு மாரிதான் முக்கியம். என்னோட வாழ்க்கை மாரிக்கூடத்தான்” என்று திட்டவட்டமாகப் பதில் சொன்னால் பூங்கொடி.

                          “ஏதோ நீ பெரிசா பண்ணப்போறன்னு தெரியுது. எரியுற நெருப்புல யாரெல்லாம் குளிர் காயப்போறாங்கன்னு  தெரியல… நல்லது நடந்தா சந்தோசம்தான்” என்று சொல்லிவிட்டு மங்கா அழுகிற கைக்குழந்தையை தூங்கிட்டு வீட்டுக்குள் போனாள். பூங்கொடியின் மனசு ஒருமாதிரியாக இருந்தது.

                          அடுத்த ஒரு வாரத்தில் பழைய ஊர் பரப்பரப்பாகக் காணப்பட்டது. மாரியும் பூங்கொடியும் திருத்தணி முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டு போலிஸில் தஞ்சமடைந்தார்கள் என்று செய்திதாளில் செய்தி வெளியாயின. பெரியவரு ஊரு, சின்னவரு ஊரு என ரெண்டு ஊர்க்காரங்களும் தங்களோட சாதிக்காக சண்டைப் போட்டுக்கிட்டாங்க. எங்கப்பார்த்தாலும் கோ…கொல்லேன்னு சத்தம் கேட்கும். எல்லாரும் ஓடுவாங்க.. தனியா யாரும் போக மாட்டாங்க. கும்பளமா நின்னு பேசுவாங்க. யாரு எப்ப வந்து வெட்டுவா? அடிப்பான்னு தெரியாத ஒரு நிலை இருந்தது. ரெண்டு பிரிவினருக்கும் இதே பயம்தான். பிரிவு செவுத்த உடைச்சி உள்ள வந்து பூங்கொடிவூட்டு ஆளுங்க விடியக்காத்தால மாரிவூட்ட கொளுத்திப்பூட்டானுங்க. இதுல தூங்கிட்டு இருந்த மாரியோட அம்மாவும்  தங்கச்சியும் நெருப்புல பட்டு முகம், கைக்காலெல்லாம் வெந்து போச்சு. அவுங்க பெரிய ஆஸ்பத்திரில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.  இதனால மாரிவூட்டு வகையறா பூங்கொடிவூட்டு மேல மிகுந்த கோபத்துல இருந்தானுங்க.  

        எப்படியாவது அவனுங்கள பழி வாங்கியேத் தீரனும். நம்ம இடத்துக்கே வந்து குடிசைய பத்த வச்சிட்டானுவ. அவனுகளை சும்மா விடக்கூடாது என்று பொறுமினார்கள் கிணத்துக்கடைக்கிட்டதான் அடிக்கடி சண்டை நடந்துகிட்டே இருக்கும். ஏன்னா? காலையில அங்க தண்ணி எடுக்க வரவங்க சும்மா இருக்கிறதுல்ல… எதையாவது கிளப்பிவிட்டுட்டு போயிடுராங்க.. அதுதான் பின்னால பத்திட்டு எரியுது. அங்க எப்பவும் பெரிய மனுசங்க ரெண்டு மூனு பேரு இருந்திட்டே இருப்பாங்க. ஏதாவது பிரச்சனையின்னா முதல்ல அடிச்சிட்டுதான் கலைஞ்சு போவச் சொல்லுவாங்க. அப்படி இருந்தும் கிணத்துக்கடைக்கிட்ட அடிக்கடி அடிதடி நடந்துகிட்டே இருக்கும்.

                          இப்படியே விட்டா ஊரு சுடுகாடா மாறிடும்.        பெரியவரும் சின்னவரும் ஒன்னா சந்திச்சு பேசுனாங்க. கிணத்துக்கடைக்கிட்ட ரெண்டு பகுதிகாரங்களையும் ஒன்னா கூட்டி பஞ்சாயத்து நடந்தது.

                          “சாதியினர். இரண்டு ஊர்களிலுமே இருவரும் சரியாய் இருக்கின்றனர். சண்டைப் போட்டு சாவுறதை விட சமாதானமா வாழ்ந்துட்டு போவோமே” என்றார் பெரியவர்.

                          “அதெப்படிங்க முடியும். என்னோட வீட்ட எரிச்சு,  பொண்டாட்டி புள்ளைய தீயில வெந்தது எனக்குதான தெரியம்” என்றார் மாரியோட அப்பா.

                          “ஏலே, அதுக்கு என்ன செய்யனுமிங்கிற… நீயே சொல்லு” என்று கத்திக்கேட்டார் சின்னவர்.

                          “அவனுங்க வீட்டுல ஒரு உசிராவது போவனும்” என்று மெதுவாய் முகத்தை திருப்பியபடி சொன்னார்.

                    “அது எப்படி முடியும்? அவுங்க வீட்டுப் பொண்ண உன் பையன் இழுத்துட்டு போயிட்டான்ல்ல. பொண்ணப் பெத்தவங்க கொஞ்சம் கோபமாத்தான் இருப்பாங்க. அதனால அவுங்க செஞ்சது சரியின்னு நான் சொல்லல. கொளுத்திய வீட்டை சீரமைத்து தரணும். ஆஸ்பத்திரி செலவ முழுசா பாத்துக்கணும். அதுக்கப்புறம் பொண்ணு மாப்பிள்ளையை சேத்துக்கிறது சேத்துகாதது அவுங்க விருப்பம். நான் சொல்லறதுக்கு கட்பட்டு இருக்கிறதா இருந்தா இருங்க. இல்லன்னா டவுன்ல போலிஸ வரச்சொல்லி ரெண்டு பேருமேலேயும் கேஸ் குடுத்துப்புடுவேன். என்ன தம்பி? நான் சொல்லுறது உனக்கும் சரிதானே” என்று தம்பியிடம் கேட்டார்.

         சின்னவரு வாயடைத்துப் போனார். இவ்வளவு நாளைக்கு பின்னர் தம்பின்னு சொல்லியிருக்காருன்னு பெருமைபட்டார். தலையை மட்டும் அசைத்து சம்மதம் தெரிவித்தார்.

                    “இளவட்ட பசங்க இரத்தத்துடிப்புல இருப்பீங்க. கொஞ்சம் அமைதியா இருங்க. சின்னப்பசங்க தப்பு பன்னா பெரியவங்க எடுத்துச் சொல்லிப் புரியவையுங்க. நீங்களே அவுங்கள உசுப்பிவிட்டு கலவரத்தை உண்டு பண்ணாதீங்க. இத்தோட இந்த பிரச்சனையை விட்டுடுங்க” என்றார் பெரியவர்.

                     “அண்ணாரு சம்மதிச்சாருன்னா… செவுத்த இடிச்சிட்டு எப்போதும் போல ஒன்னா இருக்கலாம்” என்று தன்னோட கருத்தை முன் வைச்சார்.

                          “எங்க அப்பா முனுசாமி அதிகாரி உழைச்ச பூமி இது. இங்க வாழனுமே தவிர, சாகக்கூடாது. எனக்கு பரிபூரண சம்மதம். கிணத்துக்கடை இனிமேல் ஊருக்கு பொது” என்றார் பெரியவர்.

                          அத்துடன் கூட்டம் முடிந்தது. மக்கள் அனைவருக்கும் ஒரே சந்தோசம். ஒரு பிரச்சனை உருவாகும் போதுதான் இன்னொரு பிரச்சனை முடிவுக்கு வருகிறது என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். மாரியின் அப்பாவிற்கு பஞ்சாத்தில் நடந்தது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. எப்படியாவது அவர்களை பழிவாங்கியே ஆக வேண்டும் என்று உறுமிக்கொண்டிருந்தார். அதற்கான நேரத்தையம் திட்டத்தையும் வகுத்துக்கொண்டிருந்தார்.

                          கிணத்துக்கடை பாதுகாவலில் இருக்கும் பெரிய மனுசங்க மூனுபேரில் ஒருத்தர் மட்டும் மாரிவூட்டுக்கு  சொந்தக்காரர். அவருக்கு தண்ணிய நிறையா வாங்கி கொடுத்து கிணத்துக்கடையில இருக்கிற கிணத்துல சுமார் நாப்பது லிட்டர் விஷத்தை கலக்கச் சொல்லிட்டார். போதையில பின்னால் நடக்கும் விபரீதம் தெரியாம மத்த ரெண்டு பேரையும் வீட்டுக்குச் சாப்பிட அனுப்பினார். அமாவாசை இருட்டு. அந்த நேரத்துல மறைச்சு வச்சிருந்த விஷக்கேனை திறந்து கிணத்துகடை தண்ணில ஊத்திட்டாரு.

                 அந்த விஷமானது நேராக பூமிக்கு அடியில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் ஊற்றியது. நீர் வீழ்ச்சியின் அடிப்பகுதியில் சிவன் அண்ணாந்து பார்த்த நிலையில் வாயில் தண்ணீரானது உள்ளே விழுந்த்து. திருநீலகண்டனின் கழுத்தில் விஷம் நின்று போனது. நிலவின் ஒளி கிணற்றில் விழுந்தது. கிணற்றில் நடக்கும் அதிசயம் நிலவில் ஓவியமாய் தெரிந்தது. கிணத்துக்கடைப் பாதுகாவலர் அதிசயத்து மயங்கிப்போனார்.

                          அடுத்த நாள் செய்தித்தாளில், கிணத்துக்கடை தண்ணீர் குடித்துவிட்டு  பழைய ஊர் மக்கள்  வாந்தி, பேதியினால் அவதி. பெரிய ஆஸ்பத்திரியில் கூட்டம் அலைமோதின. கிணத்துக்கடையில் விஷம் கலந்திருப்பதாக மருத்துவர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் கலவரம் நடக்காமல் இருக்க காவலர்கள் குவிந்தனர். இனி யாரும் கிணத்துக்கடை தண்ணீரை உபயோகப்படுத்தக்கூடாது என்று இரும்பால் கான்கிரீட் போடப்பட்டு கிணறு மூடப்பட்டது.  செய்தியினைப் படித்துவிட்டு மாரியும் பூங்கொடியும் இறைவனின் பாதங்களில் போய் விழுந்தார்கள். அதன்பிறகு கிணத்துக்கடையில் ஒவ்வொரு அமாவாசை  அன்றும் பைத்தியக்காரன் ஒருவன் வருவான். அவன் யார்? எங்கிருந்து வருகிறான்? என்று யாருக்கும் தெரியவதில்லை. இரவு முழுக்க பயங்கரமாகச் சிரித்துக்கொண்டிருப்பான். விடிந்ததும் காணாமல் போய் விடுவான்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

இளமையில் ஆமைபோல் வாழ்ந்து விடாதே!

“என்னிடம் நூறு இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிக்காட்டுகிறேன்” என்று விவேகானந்தர் கூறினார். அவர் இந்தியாவின் தலையெழுத்தை மாற்ற இளைஞர்களையே கேட்டார். எனவேதான் நன்றாக உழைப்பதற்கு இளமைக்காலமே உகந்தது.

          இளமைக்காலத்தில் உள்ள நீங்கள் நல்ல வழியை தேர்ந்தெடுத்து பலரின் இன்னல்களை நீக்குகின்ற பெரும் செயலைச் செய்வதற்கு உழைக்க வேண்டும். உழைக்கும் மனம் தூய்மையானதாக எந்தவித உணர்வுகளுக்கும் ஆட்படாததாக பக்குவப்பட்டதாக இருக்கவேண்டும். வித்தைகளாக இருந்தாலும் கல்வியாக இருந்தாலும் கற்றுக்கொள்ள இளமையே சிறந்தது. இளமையில் தான் உடலும் உள்ளமும் ஒன்றுசேர்ந்து வேகமும் விவேகமும் கலந்து பலத்துடன் காணப்படும்.

          இந்த இளமைக் காலத்தில் நீங்கள் பிறந்த இந்தச் சமுதாயத்திற்கு செய்ய வேண்டியவை உழைக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன. உதாரணமாக, நீங்கள் பிறந்துள்ள இந்த நாட்டில் சேரிகள் உள்ளன. உணவை விளைவிக்கும் விவசாயிகள் ஏழ்மையால் தற்கொலை செய்துள்ளனர். ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டும் முதலாளிகளும் உள்ளனர். இவற்றையெல்லாம் நீங்கள் மாற்ற வேண்டாமா? அதற்காக உழைக்க வேண்டாமா? இவற்றை எல்லாம் மாற்றவே நீங்கள் பிறந்துள்ளீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டாமா? இளமையில் மனப்பக்குவம் என்பது சிறிது சிரமம்தான் என்றாலும், சமுதாயத்தைத் திருத்த பிறந்துள்ள இளமைக்கு புலன்களை அடக்கி ஆளும் மனப்பக்குவம் வேண்டும்.

புலன்களைக் கையாளுங்கள்

       விட்டில் பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அவை இரவில் விளக்கு வெளிச்சத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். அந்தப் பூச்சிகளின் கண்களுக்கு ஒரு ஆற்றல் உண்டு. இவை வெளிச்சத்தை மிக அருகில் சென்று பார்க்கும். மனிதர்களின் கண்களானது லைட், சூரியன் போன்றவற்றைப் பார்த்தால் கூசும். எனவே விட்டில் பூச்சிகளுக்கு விளக்கின் வெளிச்சத்தை சுடரின் மிகஅருகே சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுடரை நெருங்கும். அப்போது சுடரின் வெப்பத்தால் தாக்கப்பட்டு இறந்துவிடும். அதனுடைய பலவீனம் அதன் கண்களில் உள்ளது. கண்களுக்கு வெளிச்சத்தை அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை.

            மீன் பிடிப்பவர்கள் தூண்டிலிட்டு மீனைப்பிடிப்பார்கள், மீனுக்கு அதன் வாய்தான் பலவீனம். தூண்டிலில் ஏதேனும் உணவை மாட்டி விட்டு நீரில் விடுவார்கள். அதை பார்க்கும் மீனின் கண்களுக்கு உணவு மட்டுமே தெரியும். உணவு மாட்டப்பட்டுள்ள கொக்கியோ நூலோ தெரியாது. உண்ண வேண்டும் என்ற ஆசையில் சரியாகக் கவனிக்காமல் தன்வாயால் உணவை பற்றும். பற்றியதும் அதனுடைய வாயின் மேல் பகுதி தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் பின்னர் மனிதர்களுக்கு உணவாகிவிடும். மீனுக்கு அதன்வாய் ஆபத்தை தேடித்தரும். மீனின் பலவீனம் அதன் வாயில்தான் உள்ளது.

மரம் துளைக்கும் வண்டுகள்

       வசந்தகாலத்தில் இயற்கை அழகாக இருக்கும். பசுமை நிறைந்த அக்காலத்தில் எல்லா தாவரங்களும் புல் முதல் மரம் வரை பூத்துக்குலுங்கும். வண்டுகள் அந்த மலர்களைச் சுற்றிக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாகப் பாடிக்கொண்டே இருக்கும். இந்த வண்டுகளுக்கு மலர்களின் மணம் மிகவும் பிடிக்கும். மாமரப்பூக்களில் வண்டுகள் அமர்ந்து தேனையும் உண்டு மலரின் நறுமணத்திலேயே மயங்கி கிடைக்கும். பூ இதழ்களை மூடிக்கொள்ளும் அதன் உள்ளேயே மாதக்கணக்கில் இருக்கும். அது பிஞ்சாகி காயாகி பழமாகி உண்ணும் வரை வண்டு வெளியே வராது. உள்ளேயே இறந்தும் விடும். ஒரு மரத்தையே துளைத்து துவாரமிடும் ஆற்றல் கொண்ட ஒரு வண்டு ஒரு பூவை துளையிட்டு வெளியே வர இயலாதா? முடியும். ஆனால் அது பூவின் வாசனையிலேயே மயங்கிக் கிடைக்கும். எனவே வண்டுக்கு அதன் மூக்கே ஆபத்தை விளைவித்துவிடும். மூக்குதான் அதன் பலம். ஏனெனில் மலர்களை கண்டறிவது அதன் நறுமணத்தை வைத்துதான். ஆனால் அது அளவுடன் இல்லாமல் மேலும் மேலும் வாசனையை நுகர்ந்து இறப்பை தேடிக்கொள்ளும். எனவே வண்டு அதன் மூக்கால் அழியும்.

நெருப்பில் குளிக்கும் பறவைகள்

           காட்டில் வேட்டையாடும் வேடர்களைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் பறவைகள் விலங்குகள் என்று எல்லாவற்றையும் பிடிப்பதற்கு சில வழிமுறைகளையும் கருவிகளையும் வைத்துக்கொண்டு வேட்டையாடுவர். அவற்றில் அசுணமா என்ற பறவையினம் இசையைக் கேட்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவை. அவற்றை வேட்டையாடும் வேடர்கள் காட்டில் சென்று புல்லாங்குழலை வாசிப்பார்கள். அந்த இசையைக் கேட்டதும் அப்பறவை இசை எங்கிருந்து வருகிறது என்று தேடிக்கொண்டு பறந்தது வந்துவிடும். அவ்வாறு வரும் பறவை இசையை கேட்பதற்காக மிகஅருகில் இன்னும் அருகில் என்று கீழே வந்து பறந்து கொண்டே இருக்கும். குழலை வாசிக்கின்ற வேடன் அதனை கவனித்துக்கொண்டே இருப்பான். பறவை இசையில் மயங்கி வேடனின் தலைக்கு மேலே பறக்கும். மிக அருகிலேயே பறக்கும். உடனே மற்ற வேடர்கள் அந்த வேடனின் அருகில் காய்ந்த சருகுகளைக் கொண்டு நெருப்பை எரிய விடுவர். இசைத்துக் கொண்டிருந்த வேடன் அதை நிறுத்தி விட்டு பறை என்ற தோல் கருவியை எடுத்து தாறுமாறாக அடித்து ஒலி எழுப்புவான். மிகவும் இனிமையான புல்லாங்குழலின் இசையைக் கேட்டு மயங்கிய பறவை அந்த பறையின் சத்தத்தை கேட்டதும் நிலை தடுமாறி நெருப்பில் விழுந்துவிடும். இறுதியில் வேடர்களுக்கு உணவாகிவிடும். அந்தப் பறவைகளின் காதுகளுக்கு கேட்கும் திறன் அதிகம். இசையை மிகமிக அருகில் சென்று கேட்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானதால், வேடர்கள் பிடித்துவிடுவர் என்பதை உணராமல் தலைக்கு மேலேயே பறந்து கொண்டு இசையில் மயங்கி தன் உயிரை போக்கிக்கொண்டது. மற்ற பறவை இனத்திற்கு இல்லாத ஒரு சிறப்பு இந்தப் பறவைகளுக்கு அதன் காதுகளால் உள்ளது. ஆனால் ஆசையை ஒரு அளவில் வைக்கலாம் தன்னையே அழிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது. அசுணமா பறவைகளுக்கு அதன் காதுகளே பலவீனம்.

மனிதனுக்கு அடிபணியும் யானைகள்

            யானைகளுக்கு மெய்யுணர்வு அதிகம். மனிதர்கள் காட்டு யானைகளைப் பிடிக்க வேண்டுமென்றால் பெண்யானை ஒன்றை பிடித்துச்சென்று காட்டில் ஓரிடத்தில் கட்டிவிடுவார்கள். அது நிற்பதற்கும் சிறிது நடப்பதற்கும், இடம்விட்டு சுற்றிலும் பெரிய குழியைத் தோண்டிவிடுவார்கள். அவ்வாறு தோண்டிய குழி மேலே தெரியாதவாறு மரக்கிளைகளைக் குறுக்காகப் பரப்பி வைத்துவிடுவார்கள். பின்னர் யாரும் இல்லாத அந்தக் காட்டில் தனியாக உள்ள பெண்யானை கத்த ஆரம்பிக்கும்.  ஒலியைக் கேட்டதும் காட்டுயானை கத்துவது பெண்யானைதான் என்பதை உறுதி செய்துகொண்டு அதனுடன் சேரவேண்டும் என்ற ஆசையால் மிக வேகமாக ஓடி வரும். அதற்கு பெண்யானை மட்டுமே கவனத்தில் இருக்கும் சுற்றிலும் குழி தோண்டி இருப்பது கண்களுக்கு புலப்படாது. வேகமாக பெண்யானையை நுகரவந்து குழிக்குள் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக்கொள்ளும். காட்டிலேயே பெரிய உடலையும் பலத்தையும் கொண்ட விலங்கினம் தனது மெய்யுணர்வு ஆசையால் சிறிய உருவம் கொண்ட மனிதர்களால் ஆளப்பட்டுவிடும். எனவே அதற்கு அதன் அதிகமாக உள்ள மெய்யுணர்வே துன்பத்திற்கு காரணமாகும்.

விட்டில் பூச்சிகளுக்கு அதன் கண்களால் ஆபத்து ஏற்படும்.

மீனுக்கு அதன் வாயால் ஆபத்து நேரும்

வண்டுக்கு அதன் மூக்கே எமனாகும்

பறவைக்கு அதன் காதுகளே பலவீனமாகும்

யானைகளுக்கு அதன் மெய்யுணர்வே துன்பத்தை கொடுத்து விடும்

இவ்வாறு இந்த விலங்கினங்களுக்கு அவைகளின் ஒரு புலனால் மட்டுமே ஆபத்து உண்டாகும். ஆனால் மனித இனத்திற்கு அவனுடைய ஐந்து புலன்களாலும் ஆபத்து நேர்ந்துவிடும்.

உழைக்கும் காலம், இளமைக்காலமே

       இளைஞர்களாகிய நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்களின் ஐம்புலன்களால் உண்டாகும் ஆசைகளை கட்டுப்படுத்துங்கள். இளமையில் அது மிகவும் கடினம். நம்முன்னோர்கள் “ஐந்தை அடக்கு” ஐம்புலன்களையும் எவன் ஒருவன் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளானோ அவன்கட்டுக்குள் இந்த உலகம் அடங்கும் என்று கூறியுள்ளனர்.

         இளைஞனே! உனது சமுதாயத்தில் வாழும் மனிதர்கள் நீரை மாசுபடுத்திவிட்டனர். காற்றையும் விஷவாயுவாக மாற்றுகின்றனர். இயற்கையாக உணவைத்தரும் மண்ணையும் மாசுபடுத்திவிட்டனர். இன்னும் எவ்வளவோ கூறலாம். இவற்றையெல்லாம் பார்க்கும் உணரும் உமது மனதில் ஒரு வேகம் எழவில்லையா. அடுத்து வரும் சந்ததியினருக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கிறது. இதையெல்லாம் பார்த்துமா உனது மனம் தடுக்க நினைக்க வில்லை? இந்த நிலையை மாற்ற உனது இளமையே சிறந்தது. உழைக்கப்புறப்படு. உன் தேசத்தை சரியாகத் திருத்தப் பயணம் செய். இரவு பகல் என்று பாராமல் உழைப்பதற்கு ஆயத்தமாகு.

உலகம் உனக்கானது. நீயே அதன் அதிபதி. அதன் சேவகன் எல்லாம் நீயே. இங்கு நடக்கும் அநியாயங்களை தடுக்கவில்லை என்றால் அவை நடப்பதற்கு நீங்களும் ஒரு காரணம். இந்த உண்மை நீங்கள் சிந்தித்து பார்த்தால் உமக்கே புரியும்.

இளைஞர்களே செய்யும் கைம்மாறு

         இளைஞனே! நீங்கள் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, வகிக்கும் பதவி, அடையும் மகிழ்ச்சி அனைத்தும் இங்குதான் கிடைத்தன. இவற்றை யெல்லாம் பெற்றுக்கொண்டு இந்தச் சமுதாயத்திற்காக என்ன செய்யப்போகிறாய்? சிந்தனை செய். மனித வாழ்க்கை என்பது இரயில் பயணம் போன்றது, அவரவர் இடம் வந்துவிட்டால் இறங்கிக்கொள்ள வேண்டியதுதான். இறங்குவதற்கு முன்பாக அதாவது காலம் முடிவதற்குள் தீமைகள் சிலவற்றையாவது மாற்றலாம். அவ்வாறு மாற்ற உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு இளமையே சரியானது. உழைக்காமல் இங்கு எதுவும் மாறப்போவதில்லை. எனவே சாதிக்க வேண்டியவற்றை இளமையில் செய்து முடிப்பதே உன்னதமானது.

     உங்கள் புலன்களைக் கட்டுக்குள் கொண்டுவரும் நீங்கள்தான் இவ்வுலகின் தலைவன்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலாயா மகளிர் கல்லூரி, தர்மபுரி.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

  1. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
  2. தோல்வி வீழ்ச்சி அல்ல, எழுச்சியே !
  3. மனப்பான்மையை உயர்த்துங்கள்
  4. உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

அன்னை முத்துலட்சுமி ரெட்டியின் வாழ்க்கை வரலாறு

‘பெண்ணினத்தின் உயர்வில்தான் ஒரு நாட்டின் உயர்வு அடங்கி இருக்கிறது’ என்று உணர்ந்து பெண்ணினத்தின் உரிமைக்காகவும் உயர்வுக்காகவும் பாடுபட முன்வந்த பெருமக்களுள் அன்னை முத்துலட்சுமி, பெருமைக்குரிய இடத்தைப் பெற்றவர் ஆவார்.

சேற்றில் முளைத்த செந்தாமரை

இத்தகு பெருமை வாய்ந்த அன்னை முத்துலட்சுமி அம்மையார் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாள் புதுக்கோட்டையில், இழித்தும் பழித்தும் பேசப்பட்ட பெண்ணினத்திலே சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனத் தோன்றினார். புதுக்கோட்டை அரசர் கல்லூரித் தலைவராகவும். கல்வித் துறை இயக்குநராகவும், அரசருக்கு ஆய்வுரை கூறுநராகவும் இருந்த நாராயணசாமி ஐயரே இவர் தந்தை. இளமையும் எழிலும் நல்லொழுக்கமும் வாய்ந்த சந்திரம்மா இவர் தாய். கலப்பு மணம் செய்துகொண்ட இவர்கட்குத் தோன்றிய நான்கு மக்களுள் மூத்த மகளே அன்னை முத்துலட்சுமி என்பார்.

திண்ணைப் பள்ளியில் கல்வி

தந்தை நாராயணசாமி தம் மகள் நான்காம் அகவையில் ஆடவர் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார். முத்துலட்சுமியை நடத்தும் திண்ணைப் செல்வி முத்துலட்சுமியைப் பள்ளியில் சேர்த்தபோது அவர் தந்தை ஆசிரியரிடம் ‘பால் கணக்கு சலவைக் கணக்கு எழுதும் அளவிற்குக் கற்பித்தால்  போதும்’ என்று கேட்டுக் கொண்டார். படித்தார். முத்துலட்சுமியோ ஊக்கத்தோடு ஆனரல் தந்தைக்கு தெரியாமலேயே ஆங்கில அரிச்சுவடியைப் படித்து முடித்தார். அவர் ஆங்கில அறிவு மேம்பட்டு வருவதைக் கண்டு ஆசிரிய பாராட்டி அன்பு செலுத்தினார். மகள் ஆறாம் வகுப்புப் படித்துத் தேர்ச்சி பெற்றுவிட்ட செய்தி தந்தைக்குப் பெரு வியப்பாயிருந்தது. எனினும் மேற்படிப்பிற்குச் செல்லாதவாறு தடுத்துவிட்டார். மேற்கொண்டு உயர்கல்வி பெற இயலாமல் குழம்பினார் முத்துலட்சுமி.

பாடங்கற்பித்த ஆசிரியர் பாலையா, முத்துலட்சுமியின் தாயாரிடம் சென்று முத்துலட்சுமியின் மதிநுட்பத்தையும் நினைவாற்றலையும் எடுத்துரைத்துக் கல்விச் செலவைத் தாம் ஏற்றுக் கொள்வதாகவும், படிப்பை நிறுத்த வேண்டாவெனவும் கேட்டுக் கொண்டார். முத்துலட்சுமியின் அறிவின் கதவு திறக்கப்பட்டுவிட்டது; பெற்றோரின் இசைவால் படிப்புத் தொடர்ந்தது. எட்டாம் வகுப்பு முடிப்பதற்கும், 13 ஆம் அகவையில் பருவமடைவதற்கும் சரியாயிருந்தது. அக்காலத்திலே பருவமடைந்த பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவது மரபில்லை ஆதலின், அவர் பள்ளி செல்ல மீண்டும் தடை போடப்பட்டது.

திவானுக்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகத் தந்தை பணியிலிருந்து கட்டாய ஓய்வு பெற்றார். முத்துலட்சுமி தம் தந்தையிடமே பாடம் கேட்டார். கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் சரவணப் பிள்ளையும் பேராசிரியர் இராதாகிருஷ்ணரும் தமிழும் அறிவியலும் கற்றுக் கொடுத்து, இடைநிலைத் தேர்வில் சிறப்பான வெற்றிபெற அவருக்கு உதவினர்.

புதுக்கோட்டையிலிருந்து தேர்வுக்குச் சென்ற நூற்றுவருள் பதின்மரே தேர்ச்சி பெற்றனர். முத்துலட்சுமியும் ஒருவர். முந்துலட்சுமியின் வெற்றிச் அவர்களுள் ஏனையோர் சிறப்பிடம் பெற்றது. பெற்றோரும் உற்றாரும் பெருமகிழ்ச்சி எய்தினர். செல்லி செய்தி, செய்தி ஏடுகளில் ஆசிரியர் ஆடவர் அன்னை முத்துலட்சுமியோ பாலையாவுக்கு உள்ளத்தில் கோயிலெழுப்பி உயர் வணக்கம் செலுத்தினார்.

கல்லூரி வாழ்க்கை

ஒருநாள் தந்தை நாராயணசாமி செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது, அதில் திருமதி கமலா சத்தியநாதன், அவர் தங்கை கிருஷ்ணம்மா ஆகியோர் படங்கள் பட்டதாரி உடையிலிருந்ததைக் கண்டு, முத்துலட்சுமி தாமும் படித்துப் பட்டம் பெற்று அத்தகைய உடையணிய வேண்டுமென ஆவல் கொண்டார்; தந்தையை வேண்டினார். கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது. முத்துலட்சுமியின் விண்ணப்பத்தைக் கண்டு கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் மலைத்துப் போயினர். நாராயணசாமி, கல்லூரித் தலைவரை அணுகினார். ஆடவர் கல்லூரியில் பெண்களைச் சேர்க்கக் கூடாதென்ற விதி இருந்ததால் வேண்டுகோள் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் தந்தை நாராயணசாமி மன்னரை அணுகினார். மன்னர் ஆஸ்திரேலிய பெண்ணை மன்னரை மணந்தவர். ஆதலின் முற்போக்குச் சிந்தனை உடையவராக இருந்தார். எனவே இருவரும் கலந்து பேசி முத்துலட்சுமியைக் கல்லூரியில் சேர்த்துக் கொள்ள இசைவளித்ததோடு ஒரு கட்டுப்பாட்டையும் விதித்தனர். முத்துலட்சுமியை மாணவர்கள் காணாத வகையிலும் ஆசிரியர் மட்டும் காணும் வகையிலும் இடையில் ஒரு திரையிடப்படும் என்பதுதான் அக்கட்டுப்பாடு முத்துலட்சுமி திரைக்குப் பின்னாலமர்ந்து படித்தார். அவர் வகுப்பறையை விட்டுச் சென்ற பின்னரே வகுப்பு நேரம் முடிந்ததாகக் கருதப்படும். பின்னரே ஆண் பிள்ளைகள் வெளியே போசுலாம். அவ்வாண்டு நடந்த தேர்வில் முத்துலட்சுமி பல்கலைக் கழகத்திலேயே முதலாவதாகத் தேறினார் என்ற செய்தியைக் கேட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருபுறம் நாணமும், மறுபுறம் வியப்பும் அடைந்தனர். ஆண்களோடு சமமாக அமர்ந்து படிக்கிறாள் என்ற கேலிப் பேச்சும் மொட்டைக் கடிதங்களின் மூச்சும் பயனற்றுப் போயின.  

மகள் முத்துலட்சுமிக்கு மணமுடிக்கவில்லையே என்ற மனக்கவலை, தாயார் சந்திரம்மாளை நோய்வாயில் தள்ளிப் படுக்கையில் கிடத்திவிட்டது. சமுதாயச் சழக்குகளிலேயும் பழமைப் பிடிப்பிலேயும் மூழ்கிக் கிடந்த அந்தக் காலத்திலே சந்திரம்மாள் கவலைப்பட்டதில் வியப்பில்லை. அதிலும், கலப்புமணம் செய்து கொண்ட சந்திரம்மாளின் கூடுதலாகவே இருந்ததில் நியாயம் இருந்தது. மருத்துவர் தந்த மருந்து பயனளிக்காமல் தாயார் உடல் மெலிந்தார். உயிருக்கு மன்றாடினார். தலைமகளோ உளம் மெலிந்தார்; இரவு பகல் ஊணுறக்கமின்றி அன்னையின் அருகிலேயே இருந்து இருந்து பணிவிடைகள் செய்தார். தாம் மருத்துவம் படித்திருந்தால் தாயாருக்கு எவ்வளவு உதவியாக இருக்கும் என்று எண்ணினார் ஆயுர்வேத, ஆங்கில மருத்துவரெல்லாம் பார்த்துக் கைவிரித்து விட்டனர். இறுதியாக ‘வான் ஆலன்’ என்ற அமெரிக்க மருத்துவர் கொடுத்த மருந்தால் தாய் உயிர் பிழைத்தார்.

மருத்துவக் கல்லூரி

தாயார் சந்திரம்மாளுக்குத் தம் மகளின் திருமணம் பற்றிய எண்ணம் தலைதூக்கியது. தலைமகள் முத்துலட்சுமிக்கோ தாம் ஒரு மருத்துவராக வேண்டுமென்னும் எண்ணம் தலைதூக்கியது. அதன் பயனாகச் செல்வி முத்துலட்சுமி 1907 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். இவ்வகையில் சென்னை மருத்துவக் கல்லூரி வரலாற்றிலேயே எம்.பி. & சி.எம். வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்ட முதல் தமிழ்ப் பெண்மணியும், ஒவ்வோராண்டும் தகுதியிலேயே தேர்ச்சி பெற்றுவந்த முதல் பெண்மணியும் முதல் முத்துலட்சுமியே ஆவார். பல்கலைக் கழகத்திலேயே முதல பட்டதாரியாகவும் இந்தியாவிலேயே முதல் மருத்துவப் பெண் பட்டதாரியாகவும் இவர் தேர்ச்சி பெற்றார்.

நெஞ்சை உலுக்கிய துயர நிகழ்ச்சி

மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக 1907ஆம் ஆண்டு தந்தையோடு புறப்பட்டார். புறப்படும்போது பெற்றோரையும் கணவரையும் இழந்து, நிறைமாதக் கருவோடு தமது இல்லத்திலே இருந்தது செல்வி முத்துலட்சுமி சென்னைக்குப் சிற்றப்பா மகள் வீரலட்சுமி தம்மிடத்தில் மிகவும் அன்போடிருந்த முத்துலட்சுமியைப் பிரிய இயலாமல் கோவெனக் கதறினார். தம்மையும் அழைத்துச் சென்று சென்னையைச் நிறைவயிற்றுப் சுற்றிக் காட்டுமாறு கெஞ்சினார். அந்த பெண்ணிற்குக் கலங்கிய கண்களோடு முத்துலட்சுமி ஆறுதல் கூறி விடை பெற்றார். சென்னைப் புரசைவாக்கத்தில் குடியமர்ந்து தந்தையும் மகளும் நூல்கள் வாங்குவதற்காகக் கடைத்தெரு சென்று திரும்பிய போது அவர்கட்காகக் காத்திருந்த தந்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தனர். வீரலட்சுமி ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு உயிரிழந்தாள் என்று அறிந்து முத்துலட்சுமி ஆற்றொணாத் துயரமடைந்தார்; சில நாள் ஊணுறக்கமின்றித் துயருழந்தார். பின்னர்ச் சில நாள்களில் தம் தாயார், வீரலட்சுமியில் குழந்தையோடும் ஏனையோரோடும் சென்னை வந்து சேர்ந்தார். தம்பி இராமையாவைக் கிறித்தவக் கல்லூரியிலும், சுந்தரம்மாள், நல்லமுத்து ஆகிய தங்கையரை எழும்பூர் மாநிலப் பெண்கள் பயிற்சிக் கல்லூரியிலும் சேர்த்தனர். மருத்துவக் கல்விக்காகப் புதுக்கோட்டை அரசு அனுப்பி வந்த உதவித் தொகை ரூ.180/- இவர்கள் குடும்பத்திற்கு உதவியாய் இருந்தது.

நாட்டுப்பற்று

முத்துலட்சுமியின் நாட்டுப்பற்று டாக்டர் நஞ்சுண்டராவின் தொடர்பால் கிளர்ந்தெழுந்தது. அவர்  வழியாகவே அக்காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் பலரோடு கலந்துரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. 1912 ஏப்பிரல் திங்களில் பட்டம் பெற்றவுடன் எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் பணிபுரியும் வாய்ப்புப் பெற்றார். பின்னர், 1917-ல் எழும்பூரில் தனியாகத் தொழில் நடத்தத் தொடங்கினார்.

மணவாழ்க்கையும் மக்கட்பேறும்

ஆடவர்களால் கொடுமைப் படுத்தப்பட்ட பெண்களின் நிலைமையை நேரில் அறிந்திருந்த முத்துலட்சுமி இளமைக் காலத்தில் திருமணத்தின் மீதே வெறுப்புற்றிருந்தார். பின் மனம் மாறித் தம்மைப்போலவே மருத்துவப் பணி புரிந்து வந்த சுந்தரம் என்பாரைத் தம் வாழ்க்கைத் துணைவராக ஏற்றும் கொண்டார். இராம்மோகன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய நன்மக்களை ஈன்று புறந்தந்தனர்.

புற்றுநோய்க்குத் தீர்வு

முத்துலட்சுமியின் தங்கை சுந்தரம்மாள் ஒருநாள் திடீரென நோய்வாய்ப்பட்டாள். அன்னை முத்துலட்சுமி 1922 ஆட்பட்டுவிட்டன் தங்கையின் உடல் நிலையை முதன்முறையாக ஆராய்ந்த போது . தம் அன்புத் தங்கை புற்றுநோய்க்கு என்பதறிந்து அதிர்ச்சி அடைந்தார். அதையறிந்த சுந்தரம்மாகும் அமைதியிழந்து பெரிதும் துயருழந்தார். 1922 முதல் 1923 வரை முத்துலட்சுமி தம் தங்கையின் படுக்கை அருகிலேயே இரவு பகல் உடனிருந்து பணிவிடை செய்தும் பயனேற்படவில்லை சுந்தரம்மாள் இறந்தாள். தம் அன்புத் தங்கையை என்ன எண்ணிக் கண்ணீருகுத்தார் முத்துலட்சுமி. உற்றார்க்கு விடிவே இல்லையா?” எனப் ”புற்றுநோய் புலம்பினர் புற்றுநோயை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினார். அதல் விளைவுதான் இன்றுள்ள அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை.

வெளிநாட்டுப் பயணம்

முத்துலட்சுமி அரசினரின் உதவியால் தம் கணவருடன் வெளிநாட்டுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார். இலண்டன் மாநகர் சென்று அங்குத் தம் மருத்துவப் பயிற்சியைத் தொடங்கினார். குழந்தைகளுக்கு வரும் நோய் பற்றி அவர் நடத்திய ஆராய்ச்சியைக் கண்டு மேதைகள் வியப்படைந்தனர். குழந்தை மருத்துவத்தில் பெரும் திறன் பெற்றார். ஒருமுறை மேல்நாட்டு மருத்துவ மருத்துவமனையைப் பார்வையிட்டுப் புற்றுநோய் அறுவை இராயல் மருத்துவம் பற்றிப் பல நுட்பங்களைத் தெரிந்து கொண்டர்.

பாரீஸ் பெருநகரில் நடந்த அனைத்து உலகப் பெண்கள் மாநாட்டில், கலந்து கொண்டு அன்னை முத்துலட்சுமி அரியகொரு சொற்பெருக்காற்றினார். இந்தியப் பெண்கள் பெற்றிருக்கின்ற பெறவேண்டிய உரிமைகள் பற்றி விரிவாகப் பேசினார். கீழைதாட்டுப் பெண்களும் மேலைநாட்டுப் பெண்களைப்போல் சிறந்து வாழத் தாம் தொண்டு செய்யப் போவதாக உறுதி கூறினார்.

தாயகம் திரும்புதல்

அன்னை முத்துலட்சுமி 1926 ஆம் ஆண்டு தாயகம் திரும்பினார். நண்பர்களும் பொதுமக்களும் அவருக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர். இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் நடந்த விழாவில் அன்னை முத்துலட்சுமி தம் பயணப் பட்டறிவு பற்றி எடுத்துரைத்தார்.

இந்தியப் பெண்கள் கழகத்தின் ஏற்றமிகு தோற்றம்

அன்னை முத்துலட்சுமி அவர்கள் பரந்த சமய நோக்குடைய (Theosophist) திருமதி மார்கரெட் இ. சுசின்ஸ். திருமதி ஜினாாதாதாசா என்ற ஐரோப்பிய மாதருக்கு உறுதுணையாக இருந்து 8-5-1917-இல் அடையாற்றில் இந்தியப் பெண்கள் கழகத்தைத் (Women’s Indian Association) தோற்றுவித்தார். தொடக்கக்கால முதல் அதன் முதல் இந்திய உறுப்பினராகவும், பல்லாண்டுகள் அதன் செயலாளராகவும், பின்னர் வாழ்நாள் தலைவராகவும், அது நடத்திய ‘ஸ்திரீ தர்மா’ (மாதர் அறம்) என்னும் இதழாசிரியராகவும் இருந்து தொண்டாற்றினார்.

சட்டமேலவையில் அன்னை

அன்னை முத்துலட்சுமி சென்னை திரும்பியதும் ‘இந்தியப் பெண்கள் கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்க மாநில ஆளுநரால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப் பெற்றார்; 1927-இல் மேலவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். உலகத்திலேயே இவ்வாறு தேர்ந்தெடுக்கப் பெற்ற முதல் பெண்மணி அன்னை முத்துலட்சுமியே ஆவார்.

சட்ட மேலவையில் அன்னை முத்துலட்சுமி 27-1-1927-இல் அவைத் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க முதன்முறையாகத் தலைமையேற்றுப் பேசினார் ஒருமுகமாக, முழுமனத்தோடு எனக்களித்த பெருமையைத் தனிப்பட்ட பெருமையாகக் கருதாமல் இந்தியா முழுவதிலுமுள்ள பெண்களனைவர்க்கும் அளித்த பெருமையாகவே கருதுகிறேன்.

‘இந்த மாநிலம், பெண்ணினத்தைப் பொறுத்தவரை இணையற்ற பல பெருமைகளை ஈட்டியிருக்கிறது. முதன் முதல் பெண்ணினத்திற்கு வாக்குரிமை அளித்த பெருமையும். பெண்மணி ஒருத்தி உறுப்பினராய் அமர இடமளித்த பெருமையும், விழிப்புணர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் யாரும் கேளாமலும் வேண்டாமலும் இருக்கும்போது ஒப்பிட்டுச் சொல்ல இயலாத வகையில் மேலவைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த பெருமையும் ஆகிய இணையற்ற பெருமைகளை நம் மாநில அரசு பெற்றுத் திகழ்கிறது. இது, பல் சீர்திருத்தங்களில் பெண்கள் முன்னேற்றத்தில் வழிகாட்டியாக விளங்கும் என நம்புகிறேன். எப்போதும் உங்கள் ஒத்துழைப்புக் கிடைக்குமெனவும் நம்புகிறேன்’ என்று பேசினார்.

அன்னை முத்துலட்சுமியின் மருத்துவமனைகளில் டையறா முயற்சியால் முதன் முதலில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. குழந்தைகட்குத் தனி மருத்துவமனையும் மகப்பேறு மருத்துவமனையும் ஏற்படுத்தப்பட்டன. ஏழைச் சிறுமியர்க்கு இலவசக் கல்வியும், இளங்கைம்பெண்களுக்குக் கல்விச் சலுகையும், பள்ளிகளில் மருத்துவக் கண்காணிப்பும் ஏற்பாடு செய்யப்பட்டன. மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குழந்தை மணத் தடுப்பும், கோயில்களில் தேவரடியார் அமைப்புமுறை ஒழிப்பும் கொணரப்பட்டன.

அன்னை முத்துலட்சுமி சட்ட மேலவையில் 1927 ஆண்டு நவம்பர்த் திங்களில், ‘தேவரடியார் அமைப்புமுறை ஆம் ஒழிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்து நீண்டதொரு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவர் பேச்சைக்கேட்டு மேலவையே அசைந்தது; பழமை விரும்பிகளின் பல்வேறு எதிர்ப்புக்கிடையிலும் சட்டம் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அன்னை முத்துலட்சுமியால் இளமையணத் தடுப்புத் தீர்மானமும் கொணரப்பட்டு வெற்றி பெற்றது.

காந்தியடிகளைக் காணல்

அண்ணல் காந்தியடிகள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது தேசியக் காங்கிரசு தலைவர் திரு. எஸ். சீனிவாச ஐயங்கார் இல்லத்தில்தான் அன்னை முத்துலட்சுமி, அண்ணல் காந்தியடிகளை அன்னை கஸ்தூரிபாவுடன் முதன் முறையாகக் கண்டு பூரிப்பும் பெருமகிழ்வும் எய்தினார். முத்துலட்சுமி அறிமுகப்படுத்தப்பட்டதும் அண்ணல் காந்தியடிகள் அவரை நோக்கி, ‘மேலவையில் பொறுப்பேற்றிருப்பதறிந்து மகிழ்கிறேன். நீர் பெண்ணினத்திற்கு எவ்வாறு தொண்டாற்றப் போகிறீர்’ என்று கேட்டார். உடனே பெண்கள் முன்னேற்றம் தொடர்பாகத் தீட்டி வைத்திருந்த திட்டங்களையும் தீர்மானங்களையும் அண்ணல் காந்தியடிகளிடம் தந்து ஒத்துழைப்புத் தரக் கேட்டுக் கொண்டார்.

பதவியைத் துறத்தல்  

அண்ணல் காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உறங்கிக் கொண்டிருந்த மக்களைத்  தட்டியெழுப்பியது. காந்தியடிகள் தண்டியிலே உப்பெடுத்துச் சிறையில் அடைக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயைப்போல் பரவியது. உதகையிலிருந்த அன்னை முத்துலட்சுமி செய்தி அறிந்த அரை மணி நேரத்தில் சட்ட மேலவைத் துணைத்தலைவர் பதவியைத் துறந்தார். உதகையில் தங்கியிருந்த ஆங்கில ஆளுநருக்குப் பதவி விலகல் கடிதம் எழுதித் தம் கணவர் வழியாக அனுப்பினார்.

அவ்வாறு அன்று பதவியைத் துறந்த நாட்டுப்பற்றையும் செய்தி ஏடுகளும் தேசியத் தலைவர்களும் அவ்வாறு முதல் முத்துலட்சுமியின் துணிவையும்  வியந்து பாராட்டினர்.

அண்ணல் காந்திக்கு அரிய வரவேற்பு

தாழ்த்தப்பட்டோர்க்கு இழைக்கப்படும் கொடுமையை கண்டித்து அண்ணல் காந்தி எரவாடாச் சிறையில் உண்ண நோன்பு இருந்து உடலிளைத்தார். அவர் உடல் நலம்பெ தடைவிதித்தாலும் கோரி வழிபாடு நடத்தச் சென்னை நகர மாதர் கூட்டத்திற் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அரசு அன்னை முத்துலட்சுமி தடையை மீற முடிவு செய்தார். நோய் வாய்ப்பட்டுச் சிறிது மயக்கமுற்ற நிலையிலும் தம் கணவருடன் பி வந்தார். அன்னை முத்துலட்சுமி.

கூட்டம் கூட வேண்டிய திடலுக்குச் செல்ல முடியாதாவறு காவலர்களால் ஸ்பர்டாங் தடுக்கப்பட்ட சாலையில் மக்கள் அலைகடலெனக் ஆயிரக்கணக்கி கூடியிருந்தனர். அன்னை முத்துலட்சுமி தடையை மீறி நேரே திடலுக்கு நுழைந்து சென்று வழிபாட்டுப் பாடலைப் பாடாலானர்.

அண்ணல் காந்தியடிகள் தீண்டாமை ஒழிப்புக்காகத் தென்னகத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது சென்னையில் மாதர் கழகத்தின் சார்பில் வரவேற்பளித்துப் பண முடிப்பும் வழங்கினார் அன்னை.

 அன்னை முத்துலட்சுமி ‘ஸ்திரீ தர்மம்’ (மகளிர் அறம்) என்னும் பெயரில் இதழ் தொடங்கிப் பெண்கல்லி நாட்டுரிமை. தீண்டாமை ஒழிப்பு, இளமை மணத்தில் கொடுமை பற்றியெல்லாம் கனல் தெறிக்கும் கட்டுரைகச எழுதினார்.

குழந்தைகளின் அன்புத்தாய்

அன்னை முத்துலட்சுமி குழந்தைகளிடத்தில் அளவது, அன்புடையவர். தாம் பிறந்து வளர்ந்த புதுக்கோட்டையில் 5 இல்லத்திற்கு அருகிலிருந்த ஆயர்குடிக் குழந்தைகளை நீர் குளிப்பாட்டிச் விளையாடிய தொடர்ந்தது. சீவி முடித்து இளமைக்காலப் பழக்கம்  இறுதிவரை  தொடர்ந்தது.  தம் பிள்ளைகளின்  பிறந்தநாள்   வரும்போதெல்லாம் குழந்தை இல்லங்களுக்குச் சென்று இனிப்புப் பண்டங்கள் வழங்கி மகிழ்வது அவரது வழக்கமான பணி. எழும்பூர் மகப்பேறு மருத்துவ மனையில் ஒரே பெண் மருத்துவ அலுவலராகப் பணியேற்றபோதும் அவர் விரும்பி ஏற்றுக்கொண்டது குழந்தைப் பகுதியே.

 பாரீஸில் கண்ட குழந்தைகள் பாதுகாப்பில்லத்தைப் பொல, குற்றமிழைத்த சிறுவர்கள் திருந்து நடக்கவும் அன்புப் பிணைப்போடு வளரவும் குழந்தைகள் பாதுகாப்பில்லம்’ ஒன்றை நிறுவியதோடு அதைச் சீர்திருத்தப் பள்ளியாகவும் மலரச் செய்தமை அவர் அருள் உள்ளத்திற்கோர் எடுத்துக் எட்டாகும். அதேபோன்று பெண்களுக்காகக் கீழ்ப்பாக்கத்தில் திக்கற்ற இளம்பெண்கள் இல்லம்’ அமைந்ததும் மறக்க முடியாத தொண்டாகும்.

அவ்வை இல்லம்

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட இளம்பெண்கள் அன்னை முத்துலட்சுமியிடம் அடைக்கலம் வேண்டியபோது அவர் தம் தங்கை நல்லமுத்தோடும் கணவரோடும் கலந்து பேசினார். அன்று இரவே அவ்வை இல்லம் தோற்றமெடுத்தது. திருமதி நல்லமுத்து அதன் முதல் காப்பாளராகப் பொறுப்பேற்றார்.

நேர்மையும் நடுநிலைமையும் அற்ற தன்னலம் மிகுந்த – சமுதாயத்திற்கெதிராகச் சூழ்நிலையின் நெருக்குதலாலும், மன எழுச்சியாலும் 1930-இல் தோற்றுவிக்கப் பெற்ற இவ் அவ்வை இல்லம் நானூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும். இளம் பெண்களுக்கும், முதிய மகளிர்க்கும் புகலிடம் தந்து, ஒரு தொழிற்பள்ளி, ஒரு தொடக்கப்பள்ளி, அடிப்படை ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, ஓர் உயர்நிலைப் பள்ளி எனப் படிப்படியாக வளர்ந்து வலிவோடும் பொலிவோடும் விளங்குகின்றது. புறக்கணிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர் செவிலித் தாயர்களாகவும் மருத்துவர்களாகவும் ஊரகப் பெண் தொண்டராகவும் பயிற்சி பெற்று அவ்வை இல்லத்திலிருந்து  ஆண்டுதோறும் வெளிவருகின்றனர்.

பிற பணிகள்

அவ்வை இல்லத்தைத் தொடர்ந்து அன்னை முத்துலட்சுமி சென்னையில் ‘ஒழுக்கந் தவறிய பெண்கள் கண்காணிப் கழகம்’ (Vigilance Association) ஒன்றமைத்து முதன் முறையா அத்தகைய பெண்களுக்குத் தற்காப்பில்லம் ஒன்றும் ஏற்படுத்தினார். குற்றமிழைத்த சிறுவர்களுக்கான நிறுவனம் (Children Aid Society) ஒன்றை நிறுவி அதன் செயலாளராகப் பணிபுரிந்தார்.

அம்மா

அவ்வை இல்லத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதரவிழந்த இளம்பெண்களும் பிறரும் அன்னை முத்துலட்சுமியை ‘அம்மா’ என்றே அழைத்தனர். அவர் தோழி பெற்ற பிள்ளைகளுக்கு மட்டுமன்றி அனைவருக்கும் ‘அம்மா’வாகத் திகழ்ந்ததோடு பெண்கள் சீர்திருத்தத்திலே ‘பெரிய அம்மா’வாகவும் (The Great Mother) அவ்வையாகவும் நிகழ்ந்தார் எனலாம்.

புற்றுநோயை எதிர்த்துப் போராட்டம்

புற்று நோய் தொன்றுதொட்டு, வேதகாலம் முதல் இருந்த வரும் கொடிய நோயாகும். இதைப் பணக்கார நோய் என்று தீவினை நாய் என்றும் கூறுவதுண்டு. இதன் கடுை நோயுற்றார்க்கும். அருகிலிருந்து காண்பவருக்குமே நன்று. தெரியும். தம் அன்புத் தங்கை சுந்தரம்மாளைத் துடிக்க துடிக்கத் துன்பத்தில் ஆழ்த்தி அவர் உயிருக்கே உலைவைத்து புற்றுநோயின் கடுமையை அருகிலிருந்து கண்ட அன்மை முத்துலட்சுமி புற்றுநோயை அடியோடு ஒழிக்க வழி முயற்சி மேற்கொண்டார்.

அடையாற்றில் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம்

இங்கிலாந்து சென்று திரும்பிய அன்னை முத்துலட்சுப் துணைத் தலைவரானதும் சென்னை மேலவைத்  மேலவையில் சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை ஒன்று ஏற்படுத்த வேண்டும் எனப் பேசினார். பெண்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்ற ஆங்கில மரபின்படி அன்போடு கேட்டனர். ஆனால் ஒரு பயனும் ஏற்படவில்லை.

1935-இல் நடந்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றினர். தீர்மானத்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் நினைவுக் கொடைக் குழுவிடம் அளித்தனர். அதேபோன்ற தீர்மானத்தை மேலும் பல பெண்கள் அமைப்புகள் தந்தன. நாடு விடுதலை பெற்றபின் அன்றைய ஆளுநரின் மனைவியும் பவநகர் பேரரசியுமான மாண்புமிகு சாகியா தலைமையில் இந்தியப் பெண்கள் கழகத்தின் சார்பில் புற்றுநோய் நீக்கச் சேமிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1951-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் மாண்புமிகு இராசேந்திர பிரசாத் புற்றுநோய் ஒழிப்பு நாளைத் தொடங்கி வைத்தார். அடையாறு காந்தி நகரில் அரசு வழங்கிய நிலத்தில் 1952-இல் நேரு பெருமகனார் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

பெற்றோர் – கணவர் பிரிவு

தம்மைப் பெற்ற அன்பு அன்னை 1919 ஆம் ஆண்டிலும், நம் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் காரணமான தந்தை 1930 ஆம் ஆண்டிலும், தம் அன்புக் கணவரும் அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவருமான மருத்துவர் சுந்தர ரெட்டியார் 1943-லும் இயற்கை எய்தினர்.

புத்துலகப் பெண்துறவி புகழுடம்பெடுத்தார்

அன்னை முத்துலட்சுமி அம்மையார் எண்பதாம் அகவையில் ஒரு கோயிலெனக் காட்சி தந்தார். அவரை நினைத்தால் கவுந்தியடிகளும் அவ்வைப் பெருமாட்டியும் நம் கண்முன் தோன்றுவர். அவரைக் காண்பதும் அவரோடு பேசுவதும் அவர்தம் உறுதிவாய்ந்த தெளிவான குரலைக் கேட்பதும் யாருக்கும் எழுச்சியூட்டுவனவாகவே இருந்தன.

அத்தகு கீர்த்தி வாய்ந்த சமுதாயச் சீர்திருத்தச் செல்வி அன்னை முத்துலட்சுமி தமது எண்பத்து இரண்டாம் அகவையில் 22.7.1968-இல் பொன்னுடல் நீத்துப் புகழுடம்பு எய்தினார். அவ்வை இல்லமும் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையமும் அன்னை முத்துலட்சுமியின் அழியாப் புகழை நிலைநாட்டும் நிறுவனங்களாகக் காட்சி தருகின்றன.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்

பொன்றாது நிற்பதொன் றில்

பழையப் பாடப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது

அன்னை முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவாக உதவித்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

1.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்

2.டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம்

எச்சில் இலை – சிறுகதை

அந்தச் சாலையின் மேட்டுப்பகுதி ரொம்ப உயரமாக இருந்தது. என்னால் சைக்கிளை கொஞ்சம் கூட மிதிக்க முடியவில்லை. கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர் தூரம் இருக்கும். உடம்பில் உள்ள பனியன், வியர்வையால் நனைந்து போயிருந்தது. சூரியன் மறைவதற்குள் எப்படியாவது அந்த மலைக்கிராமத்திற்குச் சென்றாக வேண்டும். இப்போது சைக்கிளை இன்னும் வேகமாக மிதிக்க ஆரமித்தேன். ஒருநாள் வருவதற்கே நமக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதே. அவன் எப்படி ஏழு வருஷம் காலையிலும் மாலையிலும் வந்திட்டுப் போனான் என்று நினைக்கும் போதே மனசு கடுத்தது. நான் ஐஞ்சாவது பாஸ் பண்ணேன். ரொம்ப சந்தோசம். பெரிய ஸ்கூலுக்குப் போகப்போறேன்ல்ல.. அப்பாகிட்ட சண்டைப்போட்டு மூன்று ரூபா வாங்கி எல்லாத்துக்கும் மிட்டாய் வாங்கிக்கொடுத்தேன்.  ஒரே ஜாலியா இருக்கும். இப்பெல்லாம் அந்த மாதிரி நிகழ்வே நடக்கிறதுல்ல.  பழைய நினைவுகளை நினைக்கும் போதே மனசு இனித்தது.

கவர்மண்ட் ஸ்கூல் முதல்நாள் ஆறாம் வகுப்பறை. பயபக்தியோடு அமைதியாக அமர்ந்திருந்தேன்.  புது நண்பர்கள். புது இடம் என எல்லாமே எனக்கு வித்தியாசமாய் தோன்றியது. அவரவர்களும் தங்களின் நண்பர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். மத்தியானம் அவரவர் நண்பர்களோடு சாப்பிடப்போனார்கள். நான் மட்டும் தனித்து விடப்பட்டேன். சின்ன வயசில இருந்தே அவ்வளவா எனக்கு நண்பர்கள் கிடையாது. அன்றும் அப்படித்தான். மத்தியான வகுப்புக்குச் சென்றேன். அப்பெல்லாம் ஸ்கூல்ல தரையிலதான் உட்காந்திருப்போம்.  பசங்க வரிசையில ஓரமா போயி உட்காந்தேன்.  கொஞ்ச நேரத்துக்குப் பிறகு  காக்கி டவுசரோடு வெள்ளை சட்டை  வேர்க்க விறுவிறுக்க ஒருத்தன் வந்தான். உள்ள வந்தவன் அந்த வகுப்பறையை ஒருமுறை சுற்றிப்பாரத்தான். என்ன நினைத்தானோ அவன்? வேகமாக வந்து என் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் பதிலுக்குச் சிரித்தேன். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு நல்ல நண்பனாகிப்போனான். ஆளு மாநிறமாத்தான் இருப்பான். பேரு வெள்ளையன். அப்பாவித்தனமான  வெள்ளையனை எனக்கு ரொம்ப பிடித்துப்போனது. அடுத்தடுத்த ஆறாவது, ஏழாவது எட்டாவது என நானும் வெள்ளையனும்  பத்தாம் வகுப்பு வரை ஒரே வகுப்புதான். அதனால நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நெருக்கமாயிட்டோம்.

வகுப்புக்கு தினமும் தாமதமாகத்தான் வருவான். எங்க ஊருக்கு வடக்கு பக்கமா ஒரு பெரிய மலைக்கிராமத்தில்தான் வெள்ளையனின் வீடு இருக்கு. தினமும் அங்கிருந்துதான் சைக்கிள்ள பள்ளிக்கூடத்திற்கு வருவான். நான் அவனுடைய கிராமத்தைப் பத்திக் கேட்டப்ப நிறைய சொல்லுவான். வெள்ளையனுக்கு மலையிலிருந்து வரது போரது எல்லாம் பழகிப்போயிடுச்சி. பத்தாவதுக்குப் பிறகு வெள்ளையன் படிக்கல. குடும்ப சூழ்நிலையா… படிச்சது போதும்ன்னு நினைச்சானா… தெரியவில்லை. அதுக்குப்பிறகு அவனுடைய தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது.  காலம் மாறிப்போச்சு. பதினைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் வெள்ளையனிடமிருந்து போன் வந்தது. வெள்ளையனுக்கு கல்யாணமாம். கண்டிப்பா வரனும்முன்னு சொன்னான். நானும் போவனுமுன்னு முடிவு பண்னேன். இன்னிக்கு எப்படியோ இதுவரையில் வந்துட்டேன். கொஞ்ச நேரத்துல கிராமத்தை நெருங்கிடுவன். அப்பத்தான் நினைச்சன், இந்த வெள்ளையன் எப்படித்தான் ஐஞ்சு வருஷமா காலையிலும் மாலையிலும் இந்த மலையேறி இறங்கி வந்திருப்பானோ தெரியல.

சீரியல் பல்பு. வாசலில் இரண்டு பக்கமும் வாழைமரம். ஸ்பீக்கரில் புதுப்பாட்டு. கல்யாண வீட்டிற்குள் நுழைந்தேன். அப்போது வாசலை சாணியால் மெழுகிக்கொண்டிருந்தாள் ஒரு நடுத்தர வயதுமிக்க அம்மா.

“அம்மா… நான் வெள்ளையனுடைய பிரண்டு. வெள்ளையன் எங்க?” என்றேன். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே வெள்ளையனின் குரல் கேட்டு திரும்பினேன்.

“வா கதிர்….. உன்னைப் பார்த்து எவ்வளவு வருஷமாச்சு. எப்படி இருக்க.. நல்லா இருக்கியா…” என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டான். இருவரும் கொஞ்ச நேரம் பழைய நினைவுகளை அசைப்போட்டு சிரித்துக் கொண்டோம்.  கல்யாண ஏற்பாடுகள் வெகுவாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.   கல்யாணச் சாப்பாட்டுக்கு இலைப்போட்டார்கள். எல்லோரும் போய் அமர்ந்தார்கள். நானும் வெள்ளையனும் கூட அவர்களுடன் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தோம். இலைப்போட்டு தண்ணீர் தெளித்து பசியை விரட்ட ஆவலோடு காத்திருந்தேன். பரந்த இலையில் பாயாசத்தை முதலில் ஊற்றினார்கள். ஊர்ல அப்பா சொல்லுவாறு, “தம்பி… கல்யாணத்த சிக்கனமா முடிக்கனுமுன்னு நினைக்கிறவங்க சாப்பாடு போடும்போது முதல்ல பாயாசத்தைதான் ஊத்தூவாங்க” என்பார். நான் எதுக்கு அப்படி செய்யுறாங்கன்னு கேள்வி கேட்ட போதுதான் எனக்கு விஷியமே புரிய ஆரமித்தது. இனிப்பு சாப்பிட்ட பிற்பாடு சாப்பாடு நிறைய சாப்பிட முடியாது. கல்யாணத்துல சாப்பாடு செலவுதான் அதிகம் வரும். வரவங்களுக்கு சாப்பாடு நல்லா போட்டுட்டா போதும் எதுவும் பேசமாட்டாங்க. சாப்பாடு சரியில்லன்னா அது நொட்டம், இது நொட்டம்முன்னு ஏதாவது புரளி பேசிட்டுருப்பாங்க. இப்படி சாப்பாட்டு செலவை குறைக்கிறதுக்குத்தான் இப்படி பண்ணுவாங்க.  அதனால்தான் இன்றையக் கல்யாண வீடுகளில்கூட இனிப்பை முதலில் இலையில் வைக்கிறார்கள். பாயாசத்தை வாயில் எடுத்து உறிஞ்சிக்கொண்டே அப்பா சொன்னதை நினைத்துக் கொண்டேன்.

என்னோடு பந்தியில் உட்காந்தவர்கள் அனைவரும் எழுந்து விட்டார்கள். வெள்ளையனும் சாப்பிட்டு முடித்திருந்தான். நான் வீட்டிலே சாப்பிடுகிற மாதிரி பொறுமையாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். “ஏ கதிர் சீக்கிரம் எழுந்தர்றா… எல்லாரும் எழுந்து போயிட்டாங்க…” இப்போது நான் அவசர அவசரமாக சாப்பிட்டேன். அதற்குள் இலை எடுக்கும் அம்மா பக்கத்தில் வந்து விட்டார்கள். என்னுடைய வரிசையில் என் இலையை மட்டும் எடுக்காமல் எனக்காக நின்று கொண்டிருந்தார்கள். “தம்பி பொறுமையா சாப்பிடுங்க… விக்கிக்க போவுது. தண்ணி குடிங்க… நீங்க சாப்பிட்ட பிற்பாடு நான் இலையை எடுத்துக்கிறேன்” என்றாள் அந்த அம்மா. அவர்களிடம் தலையை மட்டும் ஆட்டிவிட்டு புன்னகை செய்தேன். அப்பொழுதுதான் கவனித்தேன், நான் வரும்போது வீட்டை சாணியால் மெழுகிகிட்டு இருந்த அதே அம்மாதான். நான் சாப்பிட்ட எச்சில் இலையை தூக்கி எடுத்த போது எச்சில் ரசமானது அந்தம்மாவின் கைகளை நனைத்தது. ஆனாலும் அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்தாது மீண்டும் தன் வேலையை தொடங்க ஆரமித்தார்கள்.

எனக்கு பின்னால் வந்த அனைத்து பந்திகளிலும் அந்தம்மாதான் எச்சில் இலையினை எடுத்தார்கள். எனக்கென்னவோ மனசு ஒருமாதிரியாக இருந்தது. இலையில் ரசமும் பாயாசமும் ஊற்றி உள்ளங்கை நெனைய நாக்கை சுழற்றி நக்கி நக்கி சாப்பிடுவார்கள். அவர்களின் எச்சில் பட்ட இலையை ஒரு பெண் கைவைத்து எடுக்கனுமா? இது தவறு என நினைத்தேன். அதுவும் அந்தம்மாவைப் பார்த்தப்போது  பூ பொட்டு இல்லாமல் விதவை என்றே தோன்றியது. திருமண வேளைகள்  அனைத்தும் முடிந்து நானும் வெள்ளையனும் தனியே அமர்ந்திருந்தோம். பெண் அழைப்பின் போது வெள்ளையன் வழிந்ததைச் சொல்லி அவனை கிண்டலடித்தேன். பேச்சு வாக்கில் எச்சில் இலையை எடுக்கும் அந்தம்மாவைப் பற்றி விசாரித்தேன்.

“எங்க அத்தைதான். பேரு விசாலாட்சி. மாமா ஒரு விபத்துல செத்துட்டாரு. குழந்தையும் இல்ல. பக்கத்து தெருவுலதான் இருக்காங்க…” என்று சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தான்.

“என்னாடா அத்தைன்னு சொல்ற… அவுங்கள போயி எச்சி இலையை எடுக்கச்சொல்லி… இன்னும் அவுங்கள கஷ்டப்படுத்துற… வருபோது கூட குண்டா நிறையா சாணியைக் கரைச்சிட்டு நின்னுட்டு இருந்தாங்க…”

“இல்ல கதிர்.. நாங்கெல்லாம் ஒன்னும் சொல்லல. அவங்களே இழுத்துப்போட்டுட்டு செய்யிறாங்க” என்றான்.

“சொந்த அண்ணன் வீட்டு கல்யாணம். மேம்போக்கா வந்து உட்காந்து இருக்க வேண்டாமா? அப்பப்ப சின்னதா வேலை. இது போதாதா? ” என்றான் கதிர்.

“கதிர்… இது கிராமம். இங்கெல்லாம் இப்படித்தான். ஒரு வீட்டுல விஷேசமுன்னா பக்கத்துல இருக்கிற ஆம்பிளைங்க, பொம்பிளைங்க எல்லாம் வந்து ஒன்னா வேலை செய்வாங்க… சாப்பிடும் போது பாத்தல்ல.. ஆம்பிளைங்க எல்லாம் பந்தி பரிமாறுனாங்க.. . பொம்பளைங்க சமைச்சாங்க…   எங்க பெரிய சித்தி, அத்தை, அக்கா, பக்கத்து வீட்டு மாரியக்கான்னு எல்லாரும் இருந்தாங்கல்ல ”

“சரிதான் வெள்ளையன். எல்லாரும் கலந்து வேலை செய்யிறது நல்லதுதான். நான் அதை சொல்லல. எச்சிஇலையை எடுக்கிறது மட்டும் அந்தம்மாதான செய்யுது. அதைத்தான் சொன்னேன்”

“எச்சில் இலை எடுக்கிறது புண்ணியம். அது வேற யாருக்கும் கிடைக்காது தெரியுமா?. அதெல்லாம் உனக்கு தெரியாது கதிர்.”

“என்னது… புண்ணியமா? அப்படின்னா நீ எடுக்கிறது? இல்லன்னா, நீ இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே உங்க சொந்தக்காரங்கள எடுக்க சொல்றது? ஏ புண்ணியத்தை அந்த விசாலாட்சி அம்மா மட்டும் எடுத்துக்கனும். ”

வெள்ளையனிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. யோசனையில் ஆழ்ந்தான். “ நீ என்னோட நல்ல நண்பன். உனக்கு விடிஞ்சா கல்யாணம். நான் உன்னை கோபப்படுத்தனுமுன்னு சொல்லல. என் மனசுக்கு பட்டிச்சி அதான் சொன்னேன்.” என்றான் கதிர்.

அதற்கு மேல் அவனிடம் எதுவும் பேசவில்லை. மற்ற சில விஷியங்களைப் பற்றி பேசிக்கொண்டோம். “தம்பி சீக்கிரம் தூங்கு… காலையில எழுந்திருக்கணும்” என்று வெள்ளையனின்  அம்மா சொல்லிட்டுப் போனாங்க. நாங்க ரெண்டு பேரும் தூங்குவதற்கு கிளம்பினோம். போகிற வழியில்தான் சமையலுக்காக பாக்கு மரத்தால் சதுரமாகக் கட்டி தென்னங்கீற்றை மேலே போட்டிருந்தார்கள். அதற்கு பக்கத்தில் அந்த நேரத்திலும் விறகு அடுப்பால் சோறாக்கியக் கரிப்பாத்திரப்பண்டங்கள் அனைத்தும் சுத்தமாக வௌக்கி வைத்திருப்பதைக் கண்டேன். வெள்ளையன் உள்ளே படுக்கச்சொல்லி விட்டு நான் அந்த அம்மாவிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“அம்மா… நான் வெள்ளையனின் பிரண்டு” என்று விசாலாட்சி அம்மாவிடம் என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக்கொண்டேன்.

கொஞ்ச நேர மௌனத்திற்று பிறகு “எந்த ஊருப்பா” என்றார். நான் பிறந்தது முதல் படித்தது வரை சொன்னேன். நானும் “உங்களப்பத்தி சொல்லுங்கம்மா… நீங்க ஏ எச்சில் இலையை எடுக்கிறது, பாத்திரம் கழுவுறது எதுக்கு? உங்களுக்கு துணையா யாரும் இத செய்ய மாட்டாங்களா? நீங்க மட்டும் தனியா செஞ்சிட்டு இருக்கீங்க?” என்றேன்.

“நானும் கல்யாணம் ஆகி ராணி மாதிரி இருந்தேன். புருஷன் செத்ததுக்கு அப்புறம் நல்ல காரியங்களுக்கு முன்ன நிக்கிறதுக்கு எனக்கே கூச்சமாய் இருந்தது. அதுமட்டும் இல்லாம யாராவது எதாவது சொல்லுவாங்களான்னு கூட பயமாவும் இருந்தது. அதனால நானே ஒதுங்கி நிக்க ஆரமிச்சிட்டேன். ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால எங்க நாத்தனார் வீட்டு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். சொந்தகாரங்க எல்லோரும் ஒருஒரு வேலையா செஞ்சாங்க. நானும் அவுங்க கூடமாட உதவி செஞ்சேன். கொஞ்ச நேரத்துக்கு பிற்பாடு புழக்கடை பக்கம் வெளிய போலாம்முன்னு போனேன். அங்க என் நாத்தினார்கிட்ட தூரத்து உறவுப்பெண், “என்ன பாஞ்சாலை, தாலி அறுத்தவ கல்யாண வீடுன்னு கூட பார்க்காம அங்கிட்டும் இங்கிட்டும் சுத்திட்டு திரியரா… நீ சொல்ல மாட்டியா?” என்றாள்.

“என்ன சொல்றது. எங்க வீட்டுக்கார்ரோட தங்கச்சி… அதான்…” என்று பாஞ்சாலை இழுத்தாள்.

“இதெல்லாம் பாத்தா முடியுமா? சொல்லித்தான் ஆகனும். நல்ல விஷேசங்கல்ல கலந்துக்க கூடாது. அப்படியே வந்தாலும் இலை எடுக்கிறது, பாத்திரம் கழுவுறதுன்னு ஒதுங்கியே இருந்திட்டு போயிடுனும். இதெல்லாம் தெரியாதா அவளுக்கு?” என்றாள்

பாஞ்சாலை ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தாள். புழக்கடையில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நான் மனசு ஒடிஞ்சி போயிட்டேன்.  கொஞ்ச நாளைக்கு எந்தவொரு காரியங்களுக்கும் போகாமதான் இருந்தேன். முக்கியமான விஷேசங்கல்ல மட்டும் கலந்துக்குவேன்.  சரி வேலை ஏதாவது செய்யனுமில்ல… அதனால நானே இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய ஆரமிச்சேன். கூடமாட இருந்தவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா போயி, நான் மட்டும் தனியா செய்ய ஆரமிச்சிட்டேன்.

அதுக்கப்புறம் நான் விஷேசத்துக்குப் போனாவே, “ இந்தா விசாலாட்சி வந்துட்டா… இனிமே இந்த வேலையெல்லாம் அவளே பாத்துப்பா.” என்றார்கள். எனக்கு இந்த வேலை செய்யுறது கூட கஷ்டமா தெரியல. என்னோட ரத்த உறவுக்கூட யாருமே, விசா… எதுக்கு பண்ணனும், அவ பண்ண மாட்டான்னு ஒருத்தர் கூட எனக்கு வக்காழத்து வாங்க வரல… என்று சொல்லிக்கொண்டே  அழுத கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

வெள்ளையன் குடும்பம் மீது எனக்கு கோபம் வந்தது. என்கிட்ட மனசுவிட்டு சொன்னதனால கண்டிப்பா விசாலாட்சி அம்மாவுடைய மனபாரம் குறைஞ்சி இருக்கும். நேரம் ஆனதனால நானும் தூங்க வந்துட்டன். மனசு வலித்தது. கிராமங்களில் பெண்களுக்கு இதுபோன்ற வழக்கம் இருப்பதை அறிந்து நொந்து கொண்டேன். அடுத்தநாள் வெள்ளையனை வாழ்த்தி மொய் எழுதிவிட்டேன். மலை கிராமத்தில் இருந்து சைக்கிளில் விசாலாட்சி அம்மாவின் நினைவோடு பயணமானேன்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

கவுந்தியடிகளும் கருணையும்

மனிதர்கள் வாழும் உலகம் மலைகள், காடுகள், வயல்கள், கடல்கள் என்று பன்முகத்தன்மை கொண்டது. உலகின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. நிலங்களின் வகைகளுக்கேற்பவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று பழந்தமிழர் வகைப்படுத்தியுள்ளனர். உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்ற கொள்கையும் பழந்தமிழரிடம் காணப்பட்டது. உலகத்தை மங்கலப் பொருளாகத் தமிழர் கருதினர். தமிழ்ப்புலவர்கள்

            உலகம் உவப்ப1

            வையகம் பனிப்ப2

            நனந்தலை உலகம்3

            மூவா முதலா உலகம்4

            உலகெலாம் உணர்ந்து5

            உலகம் யாவையும்6

என்று தங்களுடைய நூலின் தொடக்கத்திலேயே உலகம் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளனர். ஐந்து வகையான திணைகளையும் நடுவண் ஐந்திணை என்று தொல்காப்பியர் கூறுகிறார். ஒவ்வொரு திணைக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற பாகுபாடுகளையும் தொல்காப்பியம் கூறுகிறது. அவற்றுள் முதற்பொருள் என்பது நிலமும், பொழுதும் ஆகும் என்று தொல்காப்பியம் கூறுவதை

”முதல் எனப்படுவது நிலம்பொழுது இரண்டின்

            இயல்பு எனமொழிப இயல்பு உணர்ந்தோரே”7

என்ற நூற்பா உணர்த்துகிறது. காடுகளையுடைய முல்லை நிலத்திற்குக் கடவுளாகத் திருமாலும், மலைகளையுடைய குறிஞ்சி நிலத்திற்குக் கடவுளாக முருகனும், மிகுதியான நீரையுடைய மருத் நிலத்திற்குக் கடவுளாக இந்திரனும், மணலால் சூழப்பெற்ற செய்தல் நிலத்திற்குக் கடவுளாக வருணனும் இருந்ததைத் தொல்காப்பியம் உணர்த்துகிறது. இதனை,

”மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே8

என்ற நூற்பா உணர்த்துகிறது. தொல்காப்பியர் பாலை என்ற நிலத்தைத் தனியாகக் கூறவில்லை. குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்றி வறண்டு போனதே பாலைநிலம் எனப்பட்டது. பாலைத்திணையின் முதற்பொருள், பாலைத்திணையின் அகத்திணை போன்றவற்றைத் தொல்காப்பியர் கூறியிருந்தாலும், நிலத்தை மட்டும் சுட்டவில்லை. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதநிலம் ஆகும். மருதநிலக்கடவுள் இந்திரன். உழவர், உழத்தியர் என்று இங்குள்ள மக்கள் அழைக்கப்படுவர். உழிஞைத்திணை மருதத் திணையின் புறத்திணையாக இருப்பதை

”உழிஞை தானே மருதத்துப் புறனே”9  

என்று தொல்காப்பியம் உணர்த்துகிறது.

நாடுகாண் காதை

சிலப்பதிகாரம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களைக் குறிப்பிடுகிறது. சங்க இலக்கியங்களுக்குப் பின்னர் ஐந்து திணைகளையும் விவரிக்கும் காப்பியமாக சிலம்பு மிளிர்கிறது.  மருதத்திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் முதலியன சிலப்பதிகாரம் முழவதும் விரிவிக்கிடந்தாலும், நாடுகாண் காதையில் 76 ஆவது அடியிலிருந்து 155 ஆவது அடிவரை மருதத்திணைக் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன. கவுந்தியடிகள் மதுரை செல்லும் வழியை கோவலன், கண்ணகியிடம் விவரிப்பதாக இப்பகுதி அமைந்துள்ளது. கவுந்தியடிகள் ஒரு சமணத்துறவி. எவ்வுயிருக்கும் தீமை செய்யக்கூடாது என்ற சமண மதக் கொள்கையை அவர் பின்பற்றுகிறார். சமணத்துறவியர் நடந்து செல்லும்போது வழியை மயிற்பீலியால் தூய்மை செய்தவாறு நடப்பர். கவுந்தியடிகளும் கொல்லாமையைப் பின்பற்றி நாம் எவ்வுயிருக்கும் தீங்கு செய்தல் கூடாது என்று கூறுகிறார்.

            கோவலனே நாம் செல்லும் வழியில் என்னென்ன துன்பங்கள் பல ஏற்படும் என்பதை அறிவாய். வெயிலின் தன்மையைப் பொறுக்காத மெல்லிய இயல்பினை உடையவள் கண்ணகி. இவளுடன் மலர்களையுடைய சோலை வழியே செல்வோம் என்றால், வள்ளிக்கிழங்கு எடுத்த குழிகளில், சண்பக மரங்களின் பூக்களும் தாதுகளும் நிரம்பி இருக்கும். அக்குழிகள் துன்பம் தரும் என்று கூறுகிறார். இதனை,

”பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே

மண்பக வீழ்ந்த கிழங்ககழ் குழியைச்

சண்பக நிறைந்த தாதுசோர் பொங்கர்

பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்

கையறு துன்பங் காட்டினுங் காட்டும்10

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 ”வள்ளிக்கிழங்கினை

கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே11

என்று புறநானூறு உணர்த்துகிறது. அக்குழிகளை விட்டு ஒதுங்கிச்செல்லலாம் என்றால் பலா, தென்னை போன்றவற்றின் பழங்கள் முட்டும். அதை விடுத்து மஞ்சளும் இஞ்சியும் விளையும் பகுதிகளில் நடந்து செல்லலாம் என்றால், பலாவின் விதைகள் பரல் கற்கள் போல் இருக்கும் என்று கூறும் கவுந்தியடிகள் அடுத்து மருத நிலமான வயலைப்பற்றிக்கூறுகிறார்.

ஆற்று நீர்

வயல் வழியாகச் செல்லலாம் என்றால் குளங்களில் உள்ள நீர்நாய்கள் வாளை மீன்களைத் துரத்துவதால் அம்மீன்கள் வயிலில் குறுக்காகப் பாயும் அதைக்கண்டு கண்ணகி அஞ்சுவாள் என்று கூறுவதை,

”வயலுழைப் படர்குவம் எனினே யாங்குப்

பூநா றிலஞ்சிப் பொருகய லோட்டி

நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை

மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின்

கலங்கலு முண்டிக் காரிகை12

என்ற அடிகள் உணர்த்துகின்றன. வாளை மீனை குளத்தில் நீர்நாய் துரத்துவதை ஒளவையாரும்

”அரில்பவர்ப் பிரம்பின் வரிப்புற நீர்நாய்

வாளை நாளிரை பெறும்13 

என்று குறுந்தொகையில் உணர்த்துகிறார். கரும்புகளில் உள்ள தேன்கூடு அழிந்து, தேன் ஒழுகி அருகில் உள்ள பொய்கையில் கலக்கும். நீர் வேட்கையால் இவள் அந்நீரை உட்கொள்ளவும் கூடும். அந்நீர் அறநூல்களில் விலக்கப்பட்டதால் இதனை உண்ணக்கூடாது என்று கவுந்தி கூறுவதை

”கரும்பிற் தொடுத்த பெருந்தேன் சிதைந்து

சுரம்புகூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்

அடங்கா வேட்கையின் அறிவஞர் எய்திக்

குடங்கையில்  னொண்டு கொள்ளவுங் கூடும்14

என்ற அடிகளால் உணர முடிகிறது. குறிஞ்சி மலர்களில் உள்ள தேனால் உண்டாக்கப்பெற்ற தேனடையை

”கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும்15

என்று குறுந்தொகையும், தாமரை மலர்களில் உள்ள தேனால் சந்தன மரத்தில் கட்டப்பட்ட தேனடையை

”சாந்தில் தொடுத்த தீந்தேன் போல”16

என்று நற்றிணையும் உணர்த்துவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. அவ்விடத்தை விட்டு அகன்று சென்றால் வயலில் களைபறிப்போர் பறித்துப்போட்ட குவளை மலர்களில் வண்டுகள் இருக்கும். அவ்வண்டுகளை அறியாமல் மிதிக்கவும் கூடும் என்பதை

”குறுநர் இட்ட குவளையம் போதொடு

பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை

நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி

அறியா தடியாங் கிடுதலுங் கூடும்17

என்ற அடிகள் உணர்த்துகின்றன. சமணர்கள் தாம் நடந்து செல்லும் பாதையில் உள்ள உயிர்களைத் துன்புறுத்த மாட்டார்கள் என்று சமணத்துறவியாகிய கவுந்தியடிகள் கூறுவதன் மூலம் கொல்லாமையைப் போற்றிய சமணமதத்தின் பெருமையை உணரமுடிகிறது. குவளை மலர்களில் தேனருந்திய வண்டுகள் அம்மலர்களில் உறங்குவதை

”பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப”18

என்று திருப்பாவையில் ஆண்டாள் கூறுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. வாய்க்காலின் கரை வழியாகச் சென்றால் புள்ளிகளையுடைய நண்டினையும், நத்தையையும் மிதித்து அவற்றிற்குத் துன்பம் நேரும். அதனால் வயல்களும்,சோலைகளும் அல்லது வேறு வழிகள் இல்லை. அதனால் பிற உயிர்களுக்குத் துன்பம் நேராமல் பயணத்தைத் தொடர வேண்டும் என்று கவுந்தியடிகள் கூறுகிறார். இதனை,

”எறிநீர் அடைகரை இயக்கந் தன்னில்

பொறிமாண் அலவனு நந்தும் போற்றாது

ஊழடி யொதுக்கத் துறுநோய் காணில்

தாழ்தரு துன்பந் தாங்கவும் ஒண்ணா

வயலுஞ் சோலையும் அல்லது யாங்கணும்

அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை19

என்ற அடிகள் உணர்த்துகின்றன. எவ்வுயிருக்கும் நாம் துன்பம் தருதல் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தை இதன் மூலம் உணர முடிகிறது. நண்டின் உடலில் புள்ளிகள் இருத்தலை,

”தாய்சாப் பிறக்கும் புள்ளிக் களவன்”20

என்று ஐங்குறுநூறு உணர்த்துகிறது. நண்டுகள் ஈரம் மிகுந்த இடங்களில் தம்முடைய புற்றுக்களை அமைக்கும் என்பதை

”அளைவாழ் அலவன்”21

என்று குறுந்தொகை உணர்த்துவதும் ஒப்பு நோக்கத்தக்கது. பயணத்தின் போது சிறுசிறு உயிரினங்களான வண்டு,நண்டு,நத்தை போன்றவற்றிற்கும் நாம் தீங்கு விளைவிக்கக் கூடாது என்ற கவுந்தியடிகளின் மன உணர்வு பாராட்டத்தக்கது. எவ்வுயிரையும் கொல்லக்கூடாது என்ற சமண மதக்கோட்பாட்டை கவுந்தியடிகளின் மன உணர்வின் வழியாக வெளிப்படுவதை  சிலம்பு உணர்த்துகிறது.

சான்றாதாரங்கள்

1.திருமுருகாற்றுப்படை, அடி-1

2.நெடுநல்வாடை, அடி-1

3.நனந்தலை உலகம், அடி-1

4.மூவா முதலா உலகம், சீவக சிந்தாமணி பா-1

5.பெரியபுராணம், பாடல்-1

6.உலகம் யாவையும், பா-1

7.தொல்காப்பியம்,    நூற்பா-950

8.மேலது, நூற்பா-951

9. தொல்காப்பியம், நூற்பா-1010

10. நாடுகாண் காதை, அடி-66

11. புறநானூறு-109

12. நாடுகாண் காதை, அடி-77

13. குறுந்தொகை, பா-364

14. நாடுகாண்காதை, அடி-82

15. குறுந்தொகை, பா-3

16. நற்றிணை-1

17. நாடுகாண் காதை-86

18. திருப்பாவை-3

19. நாடுகாண்காதை, அடி-90

20. ஐங்குறுநூறு, பா-23

21.குறுந்தொகை, பா-35

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

அலைபேசி :9994507627

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

3.தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

பெருந்தாயம் விளையாட்டு – ஒரு பார்வை

            கிருஷ்ணகிரி வட்டாரம் காடுகள் நிறைந்தப் பகுதியாகும். இப்பகுதியில் கால்நடை வளர்ப்புத் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆடு, மாடுகளை மேய்க்கும் தொழிலை மேற்கொள்ளும் ஆடவர்கள், வேளாண்மையில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் தமக்குக் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் உள்ளத்தை மகிழ்ச்சிப்படுத்திக்கொள்ள, நாட்டுப்புற விளையாட்டுகளுள் சில விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டைப் பெருந்தாயம் விளையாட்டு என்று கூறுகின்றனர். இவ்விளையாட்டை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆராயப்படுகின்றது.

பெருந்தாயம் விளையாட்டு

            தமிழ் நாட்டுப் பாரம்பரிய விளையாட்டுகளுள் முக்கியமானது தாயம் விளையாட்டு. தாயக் கட்டத்திற்கு எதிரெதிரே ஆண்கள் அமர்ந்து, தாயக்கட்டையை உருட்டி விளையாடுவர். இவ்விளையாட்டு ஆண்களுக்குரியது. இவ்விளையாட்டைப் பொழுது போக்கிற்காகவும் விளையாடுகிறார்கள். தற்பொழுது பந்தயம் கட்டியும் விளையாடுகின்றனர். இதைப் பங்காளி விளையாட்டு என்றும், சூது, தாயம் என்றும் கூறப்படுகிறது. தாயம் விளையாட்டுத் தமிழர்களின் மரபு சார்ந்த விளையாட்டாகும். இவ்விளையாட்டுத் தமிழரின் எண்ண ஓட்டத்திற்கும், அறிவுக் கூர்மைக்கும் பயன்படும் விளையாட்டாகவே திகழ்கிறது.

தாயம் – சொற்பொருள் விளக்கம்

            தாயம் என்ற சொல்லுக்கு அகராதிகள் பின்வருமாறு விளக்கங்களைத் தருகின்றன. எடுத்துக்காட்டாக, “தாயமாடுதல் – கவறாடுதல், சூதாடல்”1 என்று செந்தமிழ் அகராதியும், 

                                    “சூதாடு கருவி – தாயக்கட்டை

                                    சூதாடல் – சூது விளையாடல்

                                    சூதாட்டம் – தாயம் விளையாடல்

                                    சூதாட்டம் – கவறு உருட்டியாட்டம்

                                    சூதுகாரன் – சூது விளையாடுபவன்”2

என்றெல்லாம் கதிர்வேற்பிள்ளை அகராதியும் பொருள் தருகிறது.

விளையாட்டுக்களம்

            தாயம் விளையாட்டு ஆண்களுக்குரியது. சில நேரங்களில் வீட்டில் இருக்கும் பெண்களும், வீட்டிற்குள் தரையில் கோடுகளை வரைந்து விளையாடுகிறார்கள். வேளாண் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண் தொழிலாளர்கள், மதிய உணவிற்குப் பின் ஓய்வு நேரங்களில், நிலத்தின் அருகில் இருக்கும் பாறை மீது கட்டங்களை வரைந்து இவ்விளையாட்டினை விளையாடுகின்றனர். சிற்றூர்களில் ஊரின் நடுவே தாயாட்டம் விளையாடுவதைப் பார்க்க முடிகிறது. “ஊரிலுள்ளவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்து ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள தட்டையான கல்லுக்குப் பெயர் சகுனிகல் என்பதாகும். சகுனிக்கல் எனப் பொருள் வரக் காரணம், சகுனி என்பவர் மகாபாரதத்தில் சூதாட்டத்தைத் தொடங்கி வைத்தவர். அதனால், தாயாட்டத்தை விளையாடுவதற்குச் சகுனிக்கல் பலகையை அமைத்திருப்பர்”3 என்பது ஆய்வாளர் கருதுகிறார். இது எப்பொழுதும் அழியாத தழும்பாகவே இருக்கக்கூடும். இக்களத்தைச் சுற்றியும் வேப்பமரம், அரசமரம், ஆலமரத்தையும் நிழழுக்காக வளர்ப்பர். இவ்விடத்தில்  பெரியவர்கள், ஆடவர்கள் பகல் பொழுதில் ஓய்வு நேரங்களில் தாயம் விளையாட்டை விளையாடுகின்றனர்.

தாயம் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள்

            பருவச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு காடுகளிலும், மலைகளிலும், நிலத்திலும் வளரக்கூடிய மரம், செடிக் கொடிகளில் கிடைக்கப்பெறும் காய்களையும், விதைகளையும் தாயம் விளையாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். “கிருஷ்ணகிரி வட்டாரத்தில் சுண்டைக்காய், கலாக்காய், புங்கங்கொட்டை, முத்துக்கொட்டை (ஆமணக்கு காய்) சூட்டுக்கொட்டை, வெங்கலிசாங்கல், குண்டுக்கல், ஆட்டுப்புலுக்கை ஆகிய பொருட்களைத் தாயக் கட்டத்தில் நகர்த்துவதற்குக் காய்களாகப் பயன்படுத்துகின்றனர்”4 என்பது களாய்வில் அறியமுடிகிறது.  மேலும், தாயம் விளையாட்டை விளையாடுவதற்கான, கட்டங்களை வரைய கோவை இலை, அவரை இலை, செங்கல், சுண்ணாம்புக்கட்டி, மாவுக்கல் சுண்ணக்கட்டி (சாக்பிஸ்), திருநீறுகட்டி ஆகிய பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருட்கள் அனைத்தும் எளிதாகக் கிடைக்கின்ற பொருட்களாகும். இவ்விளையாட்டிற்கு எல்லா இடத்திலும் மேற்கண்ட பொருட்களைக் கொண்டு வரைவதில்லை. விளையாடும் இடத்தில் மேற்கண்ட பொருட்களுள் எளிதாகக் கிடைக்கும். ஒரு பொருளைக்கொண்டு கட்டத்தை வரைந்து கொள்கின்றனர்.

தாயக்கட்டை வடிவங்கள்

            தாயக் கட்டையைக் கையில் உருட்டி விளையாடுவதற்கு ஏற்ப, வயதிற்கு ஏற்றார் போல பெரியது, சிறியது எனக் கட்டையை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

கட்டம் அமைக்கும் முறை

            தாயம் விளையாட்டை விளையாடுவதற்குக் கட்டம் வரையப்படுகின்றது. தாயம் விளையாடுவதற்குத் தாயக் கட்டையே முதன்மையாகின்றது. முதலில், நடுவில் ஒரு சதுரமாகக் கட்டத்தை வரைந்து கொள்வர். அதனுள் மையப் புள்ளியை வைத்து, நான்கு புறமும் நான்கு செவ்வகங்கள் வரையப்பட்டு, செவ்வகங்களை நீளவாட்டில் மூன்று கட்டங்களாகவும், அகலவாட்டில் ஆறு கட்டங்களாகவும் கோட்டை கட்டத்தைப் போட்டுக்கொள்வார்கள். தாய் மலையில் பெருக்கல் குறியீட்டை செய்து வரைந்து கொள்வர். பின்பு கீழ்மலை, மூலைமலை, கோடிமலைகளில் பெருக்கல் குறியீடுகளை வரைவர்.

தாயம் விளையாடுவோர் எண்ணிக்கை

            தாயம் விளையாட்டில், நபர்களை இரண்டு, நான்கு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் அமர்த்தி, இரு அணியாகப் பிரித்து விளையாடுகின்றனர். ஒற்றை படை எண்ணிக்கையில் அமரக் கூடியவர்கள் ஒரு குழுவாகவும், இரட்டை படை எண்ணிக்கையில் அமரக்கூடியவர்கள் எதிரணியினராகவும் தாயக் கட்டத்தில் அமர்ந்து விளையாடுவர்.

இருவர் விளையாடுதல்

            இருவர் மட்டும் விளையாடும் விளையாட்டை இருவர் விளையாட்டு என்கின்றனர். அதாவது விளையாடும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் எதிரெதிராக அமர்ந்து விளையாடுவதாக இவ்விளையாட்டு அமையும்.

நான்கு பேர் விளையாடுதல்

            ஓர் அணிக்கு இரண்டு நபர்கள் விகிதம், இரண்டு அணிக்கும் மொத்தம் நான்கு நபர்கள் விளையாடுவர். ஓர் அணியாகவும், மற்றோர் அணியாகவும் அமர்ந்து விளையாடுகின்றனர். அவ்வாறு விளையாடுகின்றபொழுது அணித்தலைவராகவும் செயல்படுவர். இவர்களே கட்டத்தில் உள்ள காயை நகர்த்துகின்றனர். சில சமயம் அவரவர் அணியினரின் அறிவுரையின் பேரில் நகர்த்துகின்றனர்.

ஆறுபேர் விளையாடுதல்

            ஓர் அணிக்கு மூன்று நபர் வீதம் இரண்டு அணிக்கு ஆறு நபர்கள் விளையாடுகின்றனர். ஒரு குழுவில் உள்ள அணியில் மூன்று நபர்கள் விளையாடும் பொழுது, அவர்களுள் ஒரு நபர் தாயக்கட்டையை உருட்டி தாயம் போட்டுத் தன் பக்கம் உள்ள மலைக் கட்டத்தில் காயை இறக்குவர். அதே குழுவில் உள்ள மற்ற இரண்டு நபர்கள் தாயம் போட்டு, முதல் நபர் காயை இறக்கிய கட்டத்தில் அதே மலைக் கட்டத்தில் காயை இறக்குவர்.

            அதேபோல் அணியில் மூன்று நபர்கள் விளையாடும்பொழுது மூன்று நபர்களுள் ஒரு நபர் தாயக் கட்டையை உருட்டி தாயம் போட்டுத் தன் பக்கம் உள்ள மலை கட்டத்தில் காயை இறக்குவார்.

பெருந்தாயம் விளையாட்டுக்கு காய்களைப் பயன்படுத்தும் முறை

                        ஒருவர் கட்டையை உருட்டும் போது தாயம் விழுந்தால் மீண்டும் அவரே தொடர்ந்து தாயக் கட்டையை உருட்டி விளையாட வேண்டும். இதேபோல் ஐந்து, ஆறு, பன்னிரண்டு என்ற எண்ணிக்கை விழுந்தால் மீண்டும் அவரே தாயக் கட்டையை உருட்டி விளையாட வேண்டும். தாயக் கட்டையை உருட்டும் போது இரண்டு, மூன்று, நான்கு என்று குறைவான எண்கள் விழுந்தால் புள்ளிகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு காயை நகர்தி விட்டு, எதிரணியினருக்குத் தாயக் கட்டையை விட்டு விட வேண்டும். மறுபடியும் கட்டையை எடுத்து உருட்டக் கூடாது. இது இரு குழுவுக்கும் பொதுவான விதிமுறையாகும்.

விளையாடும் முறை

            இரண்டு அணியினரும் தாயக் கட்டத்திற்கு எதிரெதிரே அமர்ந்து விளையாடும் பொழுது முதலில் யார் தாயக் கட்டையை உருட்டுவது என்பது முக்கியமல்ல, முதலில் தாயம் போடுவது யார் என்பதுதான் முக்கியமாகக் கருதப்படுகிறது. ஒருவர் தாயக் கட்டையை உருட்டியதும் தாயம் (ஒன்று) விழுந்தால்தான் காயைத் தாய் மலையில் இருந்து இறக்கவேண்டும்.

            இரு அணியினரும் தாயம் போட்டு, ஒவ்வொரு காயையும் உரிய மலையில் இறக்கி, வலது புறமாகக் கட்டத்தில் சுற்றி வரவேண்டும். 2,3,4,5,6,12 என்று விழுகின்ற எண்ணிக்கையைக் கொண்டு கணக்கிட்டுக் கட்டத்திற்குள் காய்களை முன்னேற்றிக்கொண்டே செல்லும் போது, இரண்டு அணியினருடைய காய்கள் முன்னும் பின்னுமாக நகர்ந்து, இரு அணியினரின் காய்கள் சந்திக்கும் இடத்தில் வெட்டப்படுகின்றன. ஆனால், இரண்டு அணியினரும் தங்கள் காய்களை வெட்டப்படாமல் பாதுகாத்துத் தாண்டி தாண்டி, வெட்டுக்குக் கொடுக்காமல் விழுகின்ற எண்ணிக்கையைப் பொருத்துத் தந்திரமாகக் கட்டத்திற்குள் காய்களை நகர்த்திக் கொண்டு பழம் எடுக்கின்றனர். ஓர் அணியினர் ஆறு காய்களையும் பழம் எடுத்துவிட்டால், அந்த அணியினர் வெற்றி பெற்றவர்களாவர். எதிர் அணியினர் தோல்வியடைந்தவராவர். தாயம் விளையாடுவதற்கு வரையப்பட்ட கட்டத்தில், வரையப்பட்டுள்ள கட்டங்களுக்கு 1. தாய் மலை அல்லது தாய் வீடு 2. கை துவைதல் அல்லது காய் இறக்குதல் 3. கிழ் மலை 4. மூலை மலை 5. கோடி மலை 6. தொக்கை மலை (அல்லது) பழம் மலை என்றெல்லாம் பெயர் சூட்டப்படுகின்றன.

1. தாய் மலை (அ) தாய் வீடு

            கிருஷ்ணகிரி வட்டாரத்தில் தாய் மலையைத் தாய் வீடு என்று அழைக்கின்றனர். இவ்விளையாட்டில் அனைத்துக் காய்களையும் இறக்குமிடத்திற்குத் தாய்மலை (அ) தாய்வீடு என்று கூறப்படுகிறது.

2. கை துவைதல் (அ) காய் இறக்குதல்

            தாயம் விளையாட்டில் கை துவைதல் அல்லது கை தொய்தல் என்ற வட்டாரச் சொல் வழக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.  ஒருவர் தாயக் கட்டையை முதன் முதலில் உருட்டி விளையாடும் போது 4,5,6,12,2,3 என்ற எண்கள் நீண்ட நேரம் விழுந்து கொண்டேயிருந்தால் அவருக்கு விளையாடுவதற்குத் தகுதி இல்லை. முறையாக ஒரு புள்ளி விழும் போதுதான் அவர் தாயம் விளையாடுவதற்குத் தகுதி பெறுகிறார். தாயம் (ஒன்று) விழுந்தால் மட்டும்தான் காய் துவைதல் என்கின்;றனர்.

3. கீழ் மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து வெளியேற்றி வரும்போது 6 ஆவது கட்டத்தையும், 20 ஆவது கட்டத்தையும், 34 ஆவது கட்டத்தையும், 48 ஆவது கட்டத்தையும் கீழ் மலை என்று அழைக்கின்றனர்.

4. மூலை மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து இறக்கி நகர்த்தி வரும்போது 13 ஆவது கட்டத்தையும், 27 ஆவது கட்டத்தையும், 41 ஆவது கட்டத்தையும் மூலை மலைகள் என்று அழைக்கின்றனர்.

5. கோடி மலை

            தாயம் போட்டுக் காயைத் தாய் வீட்டிலிருந்து இறக்கி நகர்த்தி வரும்போது 55 ஆவது கட்டம் கோடி மலையாகும். காயை இறக்கும் தாய் மலைக்கு இடது பக்கமாக இருக்கும் மலையைக் கோடிமலை என்று கூறப்படுகிறது. கோடி மலையை மூலை மலை என்றும் அழைப்பர். 6. தொக்கை மலை

            தொக்கை மலை என்பதைப் பழம் மலை என்றும் அழைப்பர். இம்மலையில் எதிர்பாராத விதமாக 67 ஆவது கட்டத்தில் காய் இருந்தால், தாயம் போட்டுத்தான் காயை எடுக்க முடியும். இல்லையென்றால் தொக்கையிலே காய் உட்கார்ந்துவிடும்.

தாயாட்டம் தெரிவிக்கும் செய்தி

            தாயம் விளையாட்டுக் கட்டத்தில் மனித சமுதாயத்தின் பிறப்பும், இறப்பும் ஆகிய இரண்டும் அறிவுறுத்தப்படுகின்றன. பிறந்த பின்பு நல்ல அறங்களையும், ஒழுக்க நெறிமுறைகளையும் கற்றுக் கொள்வதற்குப் பாட போதனையாகவும் தாயம் விளையாட்டு அமைகிறது. மனித சமூகத்தில், ஒருவன் பலவிதமான இன்னல்களையும் வெற்றித் தோல்விகளையும் மாறி மாறி அனுபவிக்கின்றான். இதனைச் சந்திக்கும் போக்கு வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒருவரை உயர்த்தி பேசுவதும், தாழ்த்தி பேசுவதும் குறைகளைச் சுட்டிக்காட்டுவதும், நிறைகளை மேன்மைப்படுத்துவதும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்து கொள்வதும், மீண்டும் ஓரிடத்தில் சேருவதும் போன்ற நிகழ்வுகளைச் சந்திக்கின்ற மனித குலப் போராட்டங்களைத் தாயம் விளையாட்டுத் தெரிவிக்கிறது. இவ்விளையாட்டுப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விளையாட்டாக இருந்தாலும், சிற்றூரில் வாழக்கூடியவர்கள், விவசாய தொழிலை நம்பி வாழ்கின்றனர். அவர்கள் நிலத்தில் வேலை செய்து விட்டு, ஓய்வான நேரங்களில் உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் போன்றோர் ஒன்றிணைந்து தாயம் விளையாட்டை விளையாடுகின்றனர்.

முடிவுரை

            இவ்விளையாட்டுப் பொழுது போக்கிற்காகவே இக்காலத்தில் விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டு, மனிதனைப் பக்குவப்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில் அமைகின்றது. அதே சமயத்தில் மக்களின் ஒற்றுமையை புலப்படுத்தவும் வலுப்படுத்துவதாகவும் மனம் மகிழ்ச்சி, சகோதரத்துவம் வளர்க்கும் விளையாட்டாக அமைகிறது. இந்த விளையாட்டுக் காலத்தை கடந்து நிற்கும் வகையில், மேன்மேலும் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டியதாகின்றது.

சான்றெண் விளக்கம்

1.          செந்தமிழ் அகராதி, ப.344

2.          நா.கதிரைவேற்பிள்ளை அகராதி, ப.687

3.          நேர்காணல், மகாலிங்கம், வயது – 68, ஏரிக்கொல்லை, நாள் : 26.01.2019

4.          மேலது. நாள் : 26.01.2019

ஆசிரியரின் பிறக்கட்டுரை

1.சிறுதாயம் விளையாட்டு

கட்டுரையின் ஆசிரியர்

ம.ஆத்மலிங்கம்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

ஓசூர் – 635 130,

தொலைபேசி எண் : 9943259247,

gmail: aathmalingam1977@gmail.com

தொல்காப்பிய இளம்பூரணர் உரையில் கலைச்சொல்லாக்கம்

இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், தெய்வச்சிலையார், பேராசிரியர், கல்லாடர், பழைய உரைகாரர் முதலிய அறுவரே தொல்காப்பியத்திற்கு உரை கண்ட பழைய உரையாசிரியர்கள் ஆவர். இவர்களுள் முதல் உரையாசிரியர் இளம்பூரணர். இவ்வுரைக்கு முன்னரே தொல்காப்பியத்திற்கு உரைகள் பல இருந்தன. அதனை இளம்பூரணரே “என்பாரும் உளர். என்பர் ஒரு சாரார் என்பதாலும் நச்சினார்க்கினியர் சில இடங்களில் இங்ஙனம் பாடம் ஒதுப என்றும் உதாரணம் காட்டுப என்றும் கூறுவதாலும் அறியலாம். எனவே இளம்பூரணருக்கு முன்னரே உரைகள் இருந்ததை உணர முடிகிறது.

இவர்களில் இளம்பூரணர் உரையே முழுமைக்கும் கிடைத்துள்ளது. சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் உரைகள் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உள்ளன. பேராசிரியர் உரை பொருளதிகாரத்துள் பிற்பகுதியான மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல், மரபியல் ஆகிய நான்கு இயல்களுக்கே உள்ளது. நச்சினார்க்கினியர் உரை பொருளதிகாரத்துள் பிற்பகுதியில் மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகிய மூன்று இயல்களுக்குக் கிடைக்கவில்லை, இவ்வுரைகளே இன்றி சொல்லதிகாரத்திற்குப் பழைய உரை ஒன்று உள்ளது.

தொல்காப்பியத்திற்கு உரைகண்ட அறுவருள் இளம்பூரணரே முதல் உரையாசிரியர் ஆவார். “உரையாசிரியராகிய இளம்பூரண அடிகள்” என்று அடியார்க்கு நல்லாரும் “உளங்கூர் கேள்வி இளம்பூரணர்” என்று மயிலை நாதரும் குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து இவர் இளமையிலேயே பேரறிவு படைத்திருந்தனர் என்றும் துறவு மேற்கொண்டிருந்தனர் என்றும் அறிய முடிகிறது.

இளம்பூரணன் என்னும் பெயர் இளையனாய்ப் பேரறிவுச் செல்வனாய் விளங்கும் முருகப்பெருமானைக் குறிக்கும் என்று கூறுவர். பொருளியல் முதல் நூற்பாவிற்கு உரையெழுதும்போது இறைவனது தாள் நிழலைச் சிவானுபூதி எனக்குறிக்கின்றார் அன்றியும் தாமரை புரையும் காமர் சேவடி எனத்தொடங்கும் குறுந்தொகைக் கடவுள் வாழ்த்துப் பாடலை உவமவியல் 3, 6 செய்யுளியல் 11, 49, 74 ஆகிய நூற்பாக்களில் எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு இவரது பெயரையும் இவ்வுரைகளையும் உற்றுநோக்கும் போது இவரைச் சைவர் என்று துணிய இடமேற்படுகிறது.

தொல்காப்பியத்தையும் இளம்பூரணரின் உரையையும் தழுவியே பவணந்தி முனிவர் நன்னூலைச் செய்துள்ளார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பவணந்தியாரின் காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. எனவே இளம்பூரணரின் காலம் கி.பி.2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்கலாம்.

இவருக்குப் பின்வந்த சேனாவரையர், நச்சினார்க்கினியர் போன்றோர் இவருடைய உரையை ஆங்காங்கு மறுத்துச் சொல்லினும் இவர்பால் அவர்கள் பெருமதிப்பு வைத்திருந்தனர் என்பதை அவரவர் உரையால் அறியமுடிகின்றது. மற்ற தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவருடைய இயற்பெயரைக்குறிக்காமல் உரையாசிரியர் என்றே குறித்துச்செல்லுகின்றனர்.

இவருடைய உரை ஆற்றொழுக்காக அமைந்து செல்கிறது. இன்றியமையாது விளக்க வேண்டிய இடங்களில் மட்டும் விளக்கி, படிப்பவர் உள்ளத்தில் நூற்கருத்தையே இவரின் உறை இடம்பெறச்செய்யும். ஐயுறுவதற்குச் காரணமான பொருளை இங்ஙனமிருக்கும் போலும் எனக் கூறிச்செல்வது இவ்வுரையின் இயல்பாகும்.

இளம்பூணரின் உரை உவமை நலம் சான்றது.

1.          அணியிழை மகளிருக்கு அவ்வணியிற் சிறந்த ஆடைபோல

2.          குறிச்சி புக்க மான்போல

3.          நாலுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல போன்றவை சில உதாரணங்களாகும்.

மாத்திரையின் இலக்கணம் பற்றிய இளம்பூரணரின் உரையைக் காண்போம்.

            கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை

            நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே

            என்பது எழுத்ததிகார நூன்மரபில் உள்ள (7) நூற்பாவாகும்.

கண்ணிமையும் நொடியுமாகிய அவை மாத்திரைக்கு அளபு. இது நுண்ணிதாக நூலிலக்கணத்தினை உணர்ந்த ஆசிரியர் கண்ட நெறி. இமையென்றது இமைத்தல் தொழிலை. நொடி என்றது நொடியிற் பிறந்த ஓசையை தன் குறிப்பு இன்றி நிகழ்தலின் இமைமுன் கூறப்பட்டது.

நிறுத்தளத்தல், பெய்தளத்தல், நீட்டியளத்தல், நெறித்தளத்தல் தேங்க முகத்தளத்தல், சாத்தியளத்தல், எண்ணியளத்தல் என ஏழுவகையன என்னும் அளவினுள் இது சார்த்தியளத்தல்.

நுண்ணிதினுணர்ந்தோர் கண்டவாறு என்றதனான் நாலுழக்குக் கொண்டது நாழியென்றாற் போல அவ்வளவைக்கு அளவை பெறாமை அறிக.

தொல்காப்பிய உரையாசிரியர் டாக்டர் கு.சுந்தரமூர்த்தி “மாத்திரையின் அளவைக் கண்ணிமைத்தல், கை நொடித்தல் ஆகியவற்றின் அளவோடு ஒப்பிட்டுரைத்தலின் இவ்வளவு சார்த்தியத்தலின் பாற்படும்.

எழுத்துக்களை ஒலித்தற்கு ஆகும் காலக்கழிவினை மாத்திரை என்பர். இதில் கால், அரை, முக்கால் என்னும் பகுப்பு உண்டு. ஆனால் இரு மாத்திரை கொண்டது இன்ன பெயர் பெறும் என்றோ, மூன்று மாத்திரை கொண்டது இன்ன பெயர் பெறும் என்றோ அதற்குப் பெயர் கூறப்படுவது இல்லை. இதற்கு மாறாக முகத்தல் அளவையில் இங்ஙனம் பெயர் உளதாதலைக் காணலாம். நான்கு உழக்குக் கொண்டதற்கு நாழி என்று பெயர். இரண்டு நாழி கொண்டதை ஒரு படி என்பர். இரண்டு படி கொண்டதை ஒரு குறுணி என்பர். இங்ஙனம் கூறுமாறு போல இத்துணை மாத்திரையுடையது இன்னபெயர் பெறும் என்று கூறப்படுவதில்லை. இதனையே “நாலுழக்குக் கொண்டது நாழி என்றாற் போல” என்னும் உவமை கொண்டு உரையாசிரியர் விளக்குகின்றார்.

தொகை மரபில் அளவைப் பெயர்களைப் பற்றிக் கூறும்போது (நூற்பா 171) நாழி என்பது அளவைப் பெயர் என்று இளம்பூரணர் கூறுகிறார்.

உயிர் மயங்கியலில் (நூற்பா 241) நாழி என்னும் சொல்லை அடுத்து உரி என்னும் சொல் வந்தால் அது நாடுரி என மாறும் என்கிறார் இளம்பூரணர்.

            நாழி (ழ் + இ) + உரி

            நாழ் + உரி

            நா(ட்) + உரி → நாடுரி

மேற்கண்டவாறு இவை மயங்கும்

            நாழி என்னும் சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப்பாட்டு, பரிபாடல், கலித்தொகை புறநானூறு போன்ற நூல்களில் சுட்டப்படுகிறது. முல்லைப்பாட்டில் விரிச்சிக்காக (சகுனம் கேட்டல்) தெய்வத்தை வணங்கும் பெண்கள் நாழியில் முல்லை அரும்புகளையும் நெல்லையும் கொண்டு வந்து தெய்வத்தை வணங்கினர் என்ற செய்தியை அறியமுடிகிறது (அடி.எண்-9)

உண்பது நாழி என்று புறநானூறு (188) என்று கூறுவதும் எண்ணத்தக்கது.

            மூங்கிலில் கூடை பின்னுவது போல உழக்கு, நாழிகை என்னும் அளவைகளும் மூங்கிலைத் துண்டாக்கிச் செய்யப்பெற்றதை அறியமுடிகிறது. குதிரைக்கு உழக்காலும் நாழியாலும் வண்ணம் தீட்டும் தொழிலுக்குச் சேதிகை என்று பெயர். சேதிகையால் குதிரையின் உடல் அழகு படுத்தப்பெற்றதை

            வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக்

            குதிரை உடல் அணி போல”

            என்று கலித்தொகை (பாடல் எண் 96) குறிக்கிறது. இக்காலத்தில் இரும்பால் படி முதலியன செய்யப்படுவது போல அக்காலத்தில் மூங்கிலின் கணுக்கள் வரை வெட்டி உழக்கு நாழி போன்ற அளவைகள் செய்யும் வழக்கம் இருந்ததையும் வண்ணங்களை நீரில் கெட்டியாகக் கரைத்து அவற்றில் உழக்கு, நாழி போன்றவற்றை வைத்து அதன் அச்சை குதிரையின் உடலில் வைத்து அழகு செய்யும் கலை இருந்ததையும் அறிய முடிகிறது. மாட்டுப்பொங்கல் போன்ற விழாக்களின்போது வண்ணக்கலவையில் கையை வைத்து அக்கையை மாடுகளின் மீது வைக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

            தனிப்பாடல் திரட்டில் உழக்கு பற்றிய தகவல் உள்ளது. குறவன் ஒருவனுக்கு இரு மனைவியர், இளைய மனைவியின் மீது அன்பு கொண்ட குறவன் ஒரு நாள் தான் வளர்க்கும் பலா மரத்தை பார்த்துக்கொள்ளும்படி மூத்த மனைவியிடம் சொல்லிவிட்டுச் குறவன் வெளியே சென்று விடுகிறான். மூத்த மனைவியை குறவன் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளைய மனைவி சிலரின் உதவியோடு அம்மரத்தை வெட்டி விடுகிறாள். மூத்த மனைவி மிக வருந்தி அழும்போது ஒளவையார் அங்கே செல்கிறார். மூத்த மனைவி நடந்த நிகழ்வுகளைக்கூற ஒளவையார்

            கூரிய வாளால் குறைப்பட்ட கூன்பலா

            ஓரிலையாய் கன்றாய் மரமாய் – சீரிய

            வண்டுபோல் கொட்டையாய் வண்காயாய் திண்பழமாய்

            பண்டு போல் நிற்கப் பலா”.

என்று பாடுகிறார். உடனே அப்பலாமரம் முன்னர் இருந்தது போன்ற நிலையை அடைகிறது. குறவனின் மூத்த மனைவி ஒளவையாருக்கு மூன்று உழக்கு தினையைத் தருகிறாள். அதனை வாங்கிக்கொண்ட ஒளவையார் அருகில் உள்ள குறுநில மன்னனை சந்திக்கச் செல்கிறார். அம்மன்னன் தினை உள்ள துணி முடிச்சினை என்ன இது என்று வினவ

            கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும்

            மூவுழக்குத் தினை தந்தாள் – சோழா கேள்

            உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை

            ஒப்பிக்கும் என்றன் உள்ளம்”

என்கிறார் ஒளவையார். மூன்று உழக்குத் தினையை மட்டுமே அந்த ஏழைக்குறப்பெண்ணால் தர முடிந்தது அதை மறுக்காது வாங்கிச்சென்ற ஒளவையின் பண்பு நம்மை வியக்க வைக்கிறது. நான்கு உழக்கு ஒரு நாழியாதலால் ஒரு நாழிக்கும் குறைவான அதாவது அரைபடிக்கும் குறைவான தினையை குறமகள் ஒளவைக்குக் கொடுத்ததை அறியமுடிகிறது.  மூதுரை முப்பது நூலில் நாழியைப் பற்றி ஒளவை

            “ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

            நாழி முகவாது நால்நாழி”

            என்று கூறுகிறார். ஒரு நாழியை எவ்வளவுதான் கடலில் அழுத்தி முகந்தாலும் அது நான்கு நாழி நீரை முகக்காது என்பதே இதன்பொருளாகும்.

            நாலுழக்குக் கொண்டது நாழி என்று இளம்பூரணர் கூறுகிறார். நாழி என்பது ஒரு முகத்தல் அளவை கலைச்சொல்லாகும். உழக்கு என்பதும் கலைச்சொல்லாகும். உழக்கை விட மிகச்சிறியது ஆழாக்கு.

முகத்தல் அளவை

            360 நெல்                             1 செவிடு

            2 செவிடு                            1 பிடி

            5 செவிடு                            1 ஆழாக்கு

            2 ஆழாக்கு                          1 உழக்கு

            4 உழக்கு                             1 நாழி

            8 நாழி                                 1 குறுணி

            12 குறுணி                          1 கலம்

            3 கலம்                                 1 கோட்டை

மேற்கண்டவாறு தமிழரின் அளவை முறை 1950 வரை நாட்டுப்புறங்களில் இருந்தது என ம.சோ விக்டர் குறிப்பிடுகிறார்.

            இது போன்ற அளவைப்பெயர்கள் ஒவ்வொன்றுமே கலைச்சொற்கள். சிறிய துளையுள்ள பாத்திரத்தில் உள்ள நீர் கீழே வடிந்ததும் அதை இவ்வளவு நாழிகை எனக்கணக்கிட்டு கூறும் மக்கள் இருந்தனர். அவர்களை நாழிகைக்கணக்கர் என்று கூறுவர். அக்கருவியை குறுநீர்க்கன்னல் என்று கூறுவர் இதனை முல்லைப்பாட்டு (அடி.எண் 55)

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்

தொழுதுகாண் கையர் தோன்ற வாழ்த்தி

எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்

குறுநீர்க் கன்னல்”

என்று உணர்த்துகிறது.

கன்னலும் கிண்ணமும் நாழிகை வட்டில்”

என பிங்கல நிகண்டு கூறுகிறது. 1 நாழிகை என்பது 24 நிமிடம். கிண்ணம் எனப்படும் பாத்திரம் துளையைக்கொண்டது வாய்க்கால் நீரை பாசனத்திற்குப் பயன்படுத்துவோர் இக்கிண்ணத்தைப் பயன்படுத்துகின்றனர். 24 நிமிடங்களில் இதில் நீர் நிரம்பி விடுகிறது. ஒரு வயலுக்கு இத்தனை கிண்ணம் நீர் என அளவீடு செய்வது ஆத்தூர் வட்டாரத்தில் இன்றும் உள்ளது. பிங்கலநிகண்டு கூறும் கிண்ணம் நாழிகை வட்டிலே என நம்மால் உணரமுடிகிறது.

            நாழிக்கும், நாழிகை வட்டிலுக்கும் ஏதேனும் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருதவும் இடமுண்டு. ஏ.கே செட்டியர் தன்னுடைய பயணத்தின்போது இக்கிண்ணத்தை சேலம் மாவட்ட ஆத்தூர் பகுதியில் பார்த்ததாக தன்னுடைய பயணக்கட்டுரையில் குறிப்பிடுகிறார் என்பது குறிக்கத்தக்கது. இதுபோல இளம்பூரணரின் உரையில் உள்ள கலைச்சொற்களைப் பற்றி தனியாக ஆராயும் அளவுக்கு இடம் உள்ளது. எனவே இளம்பூரணரை கலைச்சொல்லாக்க முன்னோடிகளுள் ஒருவராகக் கருதலாம் என்று உணரமுடிகிறது.

ஆய்விற்குத் துணைநின்ற நூல்கள்

1.தொல்காப்பியம் – எழுத்ததிகாரம்

பதிப்பாசிரியர்

டாக்டர் கு.சுந்தரமூர்த்தி

அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

2.சங்க இலக்கியம்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு

சென்னை – 98

3.மூதுரை முப்பது

கழக வெளியீடு

4.தனிப்பாடல் திரட்டு

பாரி நிலைய வெளியீடு

5.தமிழரின் எண்ணியல் – ம.சோ.விக்டர்

நல்லேர் பதிப்பகம் – சென்னை – 04

6.தமிழ்நாடு – (பயணக்கட்டுரைகள்) – ஏ.கே.செட்டியர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

நாமக்கல் – 637501

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

2.சங்க இலக்கியத்தில் குடில்கள்

ஒளவையாரின் படைப்பாளுமை

முன்னுரை

            செம்மொழி என்று போற்றப்படும் பெருமைக்குரியது உயர் தனிச்செம்மொழியான நம் கன்னித் தமிழ்மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்ட செம்மொழியான தமிழ்மொழியில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரைநூல், பதினெண் மேற்கணக்கு நூல்கள் (18), பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் (18) சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம் ஆகிய 41 நூல்களும் செவ்வியல் இலக்கியங்கள் எனச் சிறப்பிக்கப்படுகின்றன.  தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களில் சமூகவியல் வெளிப்பாடுகள் எனும் தலைப்பின் கீழ் சங்ககால ஒளவையாரின் படைப்பாளுமையையும் அவரது பாடல்களில் காணப்படும் சமூகவியல் வெளிப்பாடுகளையும் கண்டுகாட்ட விழைகிறது இக்கட்டுரை.

படைப்பாளுமை

            படைப்பாற்றல் என்பது மனிதர்கள் எல்லோரிடத்திலும் காணப்படுகின்ற பொதுமைப்பண்பு அல்ல.  அது ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படுகின்ற ஒரு தனிப்பண்பு.  அதிலும் இலக்கியப் படைப்பாற்றல் என்பது கற்றுத்துறைபோகிய சான்றோருள்ளும் மிகமிகச் சிலரிடம் மட்டுமே காணப்படுகின்ற பெருமைக்குரிய ஆளுமைப்பண்பாகக் கருதப்படுகின்றது.  சங்க இலக்கியங்களில் பாடல்கள் பாடியுள்ளோர் 40 பெண்பாற்புலவர்களே. அவர்களுள் ஈடும் இணையும் அற்றவராக முதன்மையானவராகக் கருதப்படுபவர் பாட்டுக்கு அரசியாகிய நம் ஒளவைப் பெருமாட்டியார்.

சங்ககால ஒளவையார்

            கடைச்சங்க காலத்தின் இறுதியில் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒளவையார் பாணர் மரபினைச் சார்ந்தவர்.  நூற்றாண்டு வரிசையில் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய அறிஞர் மு. அருணாசலம் ஆறு ஒளையார்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.  டாக்டர் மு.வ தம் இலக்கிய வரலாற்றில் பல ஒளவையார்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்துள்ளமையைச் சுட்டிக்காட்டுகிறார்.  எனினும் சங்ககாலத்தில் வாழ்ந்த ஒளவையாரும் இடைக்காலமாகிய சோழர் காலத்தில் நீதிநூல்களைப் பாடிய ஒளவையாருமே மன்னரும் மக்களும் மதித்துப்போற்றும் புலமையும் சான்றாண்மையும் மிக்கவர்களாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் தமிழண்ணல். ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி ஆகிய நீதி நூல்களைப்பாடிப் பெரும் புகழ் பெற்றவர் இடைக்காலமாகிய சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரே எனினும் காலந்தோறும் ஒளவையின் புகழ் விளங்கத் தொடங்கிவைத்தவர் சங்ககால ஒளவையாரே ஆவார்.  சங்க காலத்தில் புகழ் பெற்ற பெண்பாற் புலவராக இவர் திகழ்ந்தமையால் பிற்காலத்தில் தமிழகத்தில் சிறப்புடைய பெண்பாற்புலவர் பலர் ஒளவை என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள்.

ஓளவையின் படைப்புகள்

            ஓளவையார் பாடியவையாகச் சங்க இலக்கியத்தில் 59 பாடல்கள் உள்ளன.  இவற்றில் 26 அகப்பாடல்கள், 33 புறப்பாடல்கள். 26 அகப்பாடல்களில் குறுந்தொகையில் 15 பாடல்களும் நற்றிணையில் 7 பாடல்களும் அகநானூற்றில் 4 பாடல்களும் இடம்பெற்றுள்ளன.  புறப்பாடல்கள் 33 இல் 22 பாடல்கள் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பற்றியவை. 3 பாடல்கள் அவர்மகன் பொகுட்டெழினியைப் பற்றியவை.

            ஒருபாடல் நாஞ்சில் வள்ளுவனைப் பற்றியது.  ஒரு பாடல் மூவேந்தர்களைப் பற்றியது.  மீதி ஆறு பாடல்களும் பொதுவியல் திணையில் அமைந்த பாடல்களாகும்.

சீற்றத்தில் மலர்ந்த சிறந்த கவிதை

            ஒளவை அதியமானைக் காணச் செல்கிறார்.  அதியமான் ஒளவைக்கு உடனே பரிசில் தராமல் காலம் தாழ்த்துகிறான்.  இதனால் ஒளவைக்குக் கோபம் வருகிறது.  சினமுற்ற ஒளவையார் வாயில் காப்போனை விளித்துப் பாடிய பாடல் அழகான பாட்டுச்சித்திரமாய் விளங்குகிறது.  ஆத்திரம் அறிவைக் கெடுக்கும்: ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு: சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்றெல்லாம் சுட்டப்படுகின்ற சினத்திலும் அழகான, ஆழமான பொருள்நிறைந்த கவிதையை ஒளவை பாடியிருப்பது அவரது புலமைத்திறனுக்கு மிகச்சிறந்த உதாரணமாக அமைகிறது.

வாயிலோயே! வாயிலோயே!

வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!

………………………………………

மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

மழுவுடைக் காட்டகத்து அற்றே

எத்திசைச் செல்லினும் அத்திசைச்சோறே! (புறம் – 306)

என்கிறார் ஒளவையார்

            வாயிற்காவலனே தமது அறிவாலும், புலமைத்திறத்தாலும் வள்ளல்களின் செவிகளில் சிறந்த வாய்மொழிகளை விதைத்துத் தாம் நினைத்த பரிசினை நினைத்தவாறே அறுவடை செய்கின்ற புலவர்கள் பசியால் இறந்தனர் என்று சொல்லும்படியான வறுமையான உலகம் அல்ல இது. அறிவும், புகழும் உடையோர் எத்திசைக்குச் சென்றாலும் அவர்களுக்கு உணவும் கிடைக்கும் மரியாதையும் கிடைக்கும். அதனால் நான் இப்பொழுதே என் இசைக்கருவிகளையும், முட்டுக்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறேன். விறகுவெட்டி கோடரியைத் தோளில் போட்டுக் கொண்டு அடர்ந்த காட்டுக்குள் சென்றால் அவனுக்கு மரத்துக்கா பஞ்சம்?  எனப்பாடியுள்ளார்.  இதில் வறுமையிலும்  செம்மையாக வாழ்ந்த அவரது வாழ்க்கை முறை புலப்படுகிறது. பரிசில் பெற வந்திருக்கிறோமே?  இப்படிப்பாடினால் இனி இவனிடமோ இவனைப்போன்ற வள்ளல்களிடமோ பரிசில் கிடைக்குமோ? கிடைக்காதோ என அஞ்சாது துணிந்து பாடிய இவரது அஞ்சாமை நம்மை வியக்கவைக்கிறது.  சினமுற்றபோதும் சிறந்த பாட்டியற்றும் திறமும் சினத்தைச் சாதுர்யமாக வெளிப்படுத்திய விதமும் இவரது படைப்பாளுமைக்குச் சான்றாக அமைகிறது.

உவமைத் திறமெனும் புலமைத்திறம்

            நுட்பமான உவமைகளால் தான் சொல்லவந்த கருத்துக்களை விளக்குவதில் ஒளவை தன்னிகரற்றவராக விளங்கினார் என்பதை அவரது பாடல்களில் காணப்படும் உவமைகளின் மூலம் அறியலாம்.  அதியமான் பரிசில் தராது காலம் தாழ்த்தியது தன்னை அவனருகே மேலும் சில நாள் தங்க வைக்கத்தான் என்பதை உணர்ந்து கொண்ட ஒளவையார்

ஒரு நாள் செல்லலம் இருநாள் செல்லலம்

பலநாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ

………………………………………..

அதியமான் பரிசில் பெறூஉம் காலம்

நீட்டினும் நீட்டாதாயினும் களிறுதன்

கோட்டிடை வைத்த கவளம் போலக்

கையகத் ததுவது பொய்யாகாதே! (புறம். 101) எனப் பாடியுள்ளார்.

            அதியமான் பரிசில் தரும் காலம் நீட்டினும் நீட்டாதாயினும் பரிசில் தருவது உறுதி என்பதைக் களிறு தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத்ததுவது பொய்யாகாதே எனும் உவமையால் விளக்குகிறார்.  அதாவது யானைக்குக் கவள உணவை உருட்டிப் பாகன் போடும் போது யானை ஆவென வாயைத் திறந்து ஒரு பருக்கை சிந்தாமல் சிதறாமல் ஏற்றுக்கொள்ளும்.  அதுபோல பரிசிலும் சிந்தாமல் சிதறாமல் முழுமையாகக் கிடைக்கும் என நுட்பமான உவமையால் விளக்குவது ஒளவையின் படைப்பாளுமைத்திறன் அன்றி வேறில்லை.

யாழொடும் கொள்ள பொழுதொடும் புணரா

பொருளறிவாரா வாயினும் தந்தையர்க்கு

அருள் வந்தனவால் புதல்வர்தம் மழலை

என்வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்

கடிமதில் அரண்பல கடந்த

நெடுமான்அஞ்சி நீ அருளன் மாறே” (புறம் – 92) என்ற பாடலில்

            குழந்தைகளின் மழலைப் பேச்சு யாழிசையை ஒத்தனவா? காலத்தொடு பொருந்தியனவா? பொருள் விளங்குவனவா? ஆயினும் தந்தை தன் பிள்ளைகளின் மீதுகொண்ட அன்பினாலும் பாசத்தினாலும் அவை போற்றப்படுகின்றன.  அதுபோல என் பாடல்களும் நீ மதிப்பதனால்தான் மதிப்பினைப் பெறுகின்றன என உவமைகூறி தனக்கும் அஞ்சிக்குமான உறவு தந்தைக்கும் மகனுக்குமான உறவினைப்போன்ற நெருக்கமும் பாசமும் உண்மையும் உடையது என்பதை உவமையால் விளக்கும்திறன் பாராட்டுதற்குரியது.

நன்றியில் மலர்ந்த நயமிகு கவிதைகள்

            நன்றி மறவா நெஞ்சினராகிய ஒளவையார் அதியமான், பெருஞ்சேரல் இரும்பொறையுடன் கடும்போர் செய்தபோது அவனது வலிமையைப் பாராட்டி அவனை ஊக்கமூட்டியப் பாடல்கள் அவரது நன்றி உணர்வைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

போரிலே அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபோது அவர் பாடிய

                                    சிறியகட்பெறினே எமக்கீயும் மன்னே

                                    பெரியகட்பெறினே

                                    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே

                                    சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!

                                    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே!

                                    …………………………………………….

                                    …………………………………………….

                                    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளை உரீஇ

                                    இரப்போர் கையுளும் போகிப்

                                    புரப்போர் புன்கண் பாவை சோர

                                    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்

                                    சென்று வீழ்ந்தன்று அவன்

                                    அருநிறத்து இயங்கிய வேலே

                                    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

இனிப் பாடுநரும் இல்லை என்ற பாடலில் பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை (புறம் – 235) எனப்புனைவியல் ஏதுமின்றி தன் மனநிலையை ஒளிப்படமாக்கியிருப்பது அவரது படைப்பாளுமைத் திறனை வெளிப்படுத்துகிறது.

            ஒளவையின் புறப்பாடல்கள் பல இருப்பினும் அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே நடக்க இருந்த போரை நிறுத்திய பாடல் சிறந்ததொரு பாடலாகும்.  தொண்டைமானைப் புகழ்வது போல இகழ்ந்து, அதியமான் போரில் வல்லவன் என்பதை நிறுவியவர் ஒளவையார்.

            “இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி” (புறம். 95) என்ற அடிகளால் இதனை உயரலாம். வெறும் பாடல்கள் இயற்றுவதோடு தம்முடைய கடமை முடிந்து விட்டதென எண்ணாமல், செயல்கள் மூலமும் தமக்குள்ள நாட்டுப்பற்றை வெளிப்படுத்தியுள்ளார் ஒளவையார்.

            ஓளவை புறப்பாடல் புலவர் எனப்போற்றப்பட்டாலும் அவர் அகப்பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறத்தொடுநிற்றலை அழியாக்கவியாக்கியவர்

            அறத்தொடு நிற்றல் குறித்துப் பலர் பல பாடல்கள் பாடியுள்ளபோதும் ஒளவைபாடிய

                                                அகவன் மகளே! அகவன் மகளே

                                                மனவுக்கோப்பன்ன நன்னெடுங்கூந்தல்

                                                அகவன் மகளே! பாடுபாட்டே

                                                இன்னும் பாடுக பாட்டே

                                                அவர் நல்நெடுங்குன்றம் பாடிய பாட்டே” (குறுந்-23)

என கட்டுவிச்சியை அழைத்துப்பாடிய பாடல் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் என்றும் போற்றும்படி அமைந்துள்ளது.

            வரைவிட  ஆற்றாத தலைவியின் நிலையை

                                                முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்

                                                ஒரேன் யானும் ஒர்பெற்றி மேலிட்டு

                                                ஆஅ! ஒல்எனக் கூவுவேன் கொல்

                                                அலமரல் அசைவளி அலைப்ப என்

                                                உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே” (குறுந் – 28)

என சொற்சித்திரமாக்கியுள்ளார்.

அகப்பாடல்களில் புறச்செய்திகள்

அகப்பாடல்களைப் பாடிய ஒளவையார் அவற்றில் சில புறச்செய்திகளையும் கூறுகிறார்.

                                                வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல் எழினி

                                                முனையான் பெருநிரை போல” (குறுந்.80)

                                                “………… நெடுந்தேர் அஞ்சி

                                                கொன்முனை யிரவூர் போல”        (குறுந்.91)

            என்பன அவற்றில் சில. ஒளவையின் பரத்தைக் கூற்றுப் பாடல்களும் இங்குக் குறிக்கத்தக்கன.

முடிவுரை:

            உவமைத்திறத்தாலும் சொல்வீச்சாலும் நடைநயத்தாலும் கருத்துச்செறிவாலும் ஒளவையின் பாடல்கள் காலத்தை வென்று வாழும் தகுதியைப் பெற்றுள்ளன.  கவிதைகள் பாடுவதோடு நின்றுவிடாமல் தன்னுடைய செயலாலும் ஆளுமையை வெளிப்படுத்தியவர் ஒளவையார் என்று உணர முடிகிறது.

ஒளவையின் பாடல்களில் இருந்து கீழ்க்கண்ட தலைப்புகளில் ஆய்வு செய்யலாம்.

1.         ஒளவையின் அகப்பாடல்களில் பரத்தை.

2.         ஒளவையின் அகப்பாடல்களில் புறச்செய்திகள்.

3.         ஒளவையின் புறப்பாடல்களில் அதியமான்.

4.         ஒளவையின் பாடல்களில் உவமைகள்.

5.         ஒளவையின் பாடல்களில் போர்ச்செய்திகள். என்பன அவற்றில் சில.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் த.மஞ்சுளாதேவி

தமிழ்த்துறைத் தலைவர்,

அரசு கலைக் கல்லூரி,

முசிறி.

செவ்வியல் இலக்கியங்களில் கைம்மை

முன்னுரை

            சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் பென்டிங் பிரபு காலத்தில் ஒழிக்கச் சட்டமியற்றப்பட்டது. இராஜஸ்தான் மாநிலத்தில் நாற்பதைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூப் கன்வர் என்ற பெண் தன் கணவனை இழந்தபிறகு உடன்கட்டையேற்றப்பட்டு இறந்திருக்கிறாள். அம்மாநிலத்தில் இவ்வழக்கமானது கடுமையான அரசியல் சட்டத்திற்கு அப்பாலும் செயல்பட்டு வருவதைத்தான் இச்செயல் காட்டுகின்றது. பெண்கள் சிலரை சதி கவர்ந்திருப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. கணவன் இறந்த பிறகு பெண்கள் வாழும் நெறி கடுமையான விதிகளுக்கு உட்பட்டதாய் இருந்திருக்கின்றது. காலப்போக்கில் முழுமையான மாற்றத்தினை அடைந்திருக்கின்றது என்று கருதப்பட்ட போதிலும் ஆயினும் முற்றிலுமாக மாறிவிடவில்லை. கணவனை இழந்த பெண் விதவை என்று அழைக்கப்படுகிறார். ‘சொல்லில்கூட பொட்டு இல்லையே என்று வருத்தப்படுவதற்கு, கைம்பெண் என்று அழைத்தால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு கிடைக்கும்’ என்ற கூற்று ஆறுதல் வார்த்தையாகத்தான் அமைந்திருக்கிறது. ஆனால் சங்க காலத்தில் கைம்பெண்நோன்பு பெண்ணிற்கு ஆறுதல் அளிப்பதாக அமையவில்லை. சங்க காலத்தில் கைம்மை எத்தகு நிலையில் இருந்திருக்கின்றது என்பதை இக்கட்டுரை நுவல்கின்றது.

சங்க கால மகளிர்

            சங்க காலம் தமிழர்களின் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. பொற்காலத்தில் பெண்கள் ஆடவருக்கு நிகரானவர்களாக மதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்குச் சமமான உரிமையினையும் பெற்றிருக்கிறார்கள். ஆடவரைப் போலவே கள் அருத்தியிருக்கிறார்கள்.1 அரசியல் காரணமாய் தூது சென்றிருக்கிறார்கள்.2 சிறந்த கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய நிலை மிக உன்னதமாய் இருந்திருக்கின்றதா? என்பது வினாவுக்குரியதாய் இருக்கிறது. கணவனை இழந்த சங்ககாலப்பெண்டிர் நிலை குறிப்பிடும்படியாக இல்லை. இந்திய மரபு வழிப்பட்ட (?) பெண்களாகவே இருந்திருக்கின்றனர். பிற்காலத்தில் வீடுபேறு பற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட மிகவும் கொடிய பழக்கந்தான் உடன்கட்டை ஏறுதல். இப்பழக்கத்தினை சங்க காலமகளிரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆண்களுக்கு நிகராக சம உரிமை படைத்தவர்களாக விளங்கியவர்களிடம் உடன்கட்டை ஏறல் இருந்தமை வியப்புக்குரியதே.

கைம்மை நோன்பு

            திருமணத்திற்கு முன்பிருந்தே பூச்சூடி வளையலணிந்து நல் உணவு உண்ட மகளிர் கணவரை இழந்த பிறகு அனைத்தையும் துறந்தவராகின்றனர். பஞ்சணையிலோ, நல்ல படுக்கையிலோ படுத்துறங்கிய மகளிர் பாயும் இல்லாது சிறிய கற்கள் நிறைந்த வெறுந்தரையில் படுத்து உறங்கியிருக்கின்றனர். தாளிப்புடன் கூடிய நல்ல கொழுவிய சுவையுடனான அடிசிலைத் தவிர்த்து நறு நெய்யின்றி நீர்ச்சோற்றையும் புளிகூட்டப்பட்ட வேளைக் கீரையினையும் உணவாகக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் அவ்விடத்து உண்டான புல்லரிசியினையே தம் உணவாக உட்கொண்டனர். இதனை

                                    …………………… நறுநெய் தீண்டா

                                    துடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம்

                                    வெள்ளெட் சாந்தோடு புளிப்பெய் தட்ட

                                    வேளை வெந்தை வல்சியாகப்

                                    பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியும்”

என்ற பாடல் அடிகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நீர்ச்சோறோ, புல்லரிசிச்சோறோ யாதாயினும் அதனை கணவனை இழந்த மகளிர் முறையான நேரத்தில் உண்டார்களா எனில் இல்லை எனலாம். நேரந்தவறி உண்ணும் நிலை கணவனை இழந்த பிறகே உருவாக்கப்பட்டிருக்கின்றது.

                                    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்

                                    தின்னா வைக    லுண்ணும்

                                    அல்லிப் படூஉம் புல்லா யினவே

என்று ஒக்கூர் மாசாத்தனார் கணவனை இழந்த பெண்ணொருத்தியின் நிலையினை எடுத்துக் காட்டுகின்றார்”4 கணவனை இழந்து கைம்மை நோன்பு வாழும் பெண்களை தொடி கழி மகளிர்5, ஆளில் பெண்டிர்6, உயவல் பெண்டிர்7, கழிகலமகளிர்8, கழிகல முகடூ9, பருத்திப்பெண்டிர்10, என்று குறிப்பிடுகிற நிலையும் வழக்கில் இருந்திருக்கின்றது.

இறந்தவருக்கு உணவிடுதல்

            கணவன் இறந்த பிறகு அவன் இறந்த இடத்தினை அவனுடைய மனைவி சாணத்தால் மெழுகி புல்லின்மேல் உணவு இட்டு அவனுக்குப் படைப்பாள். வேள் எவ்வி என்ற அரசன் இறந்தபின் அவனுடைய மனையில் அவன் மனைவியின் நிலையினை வெள்ளெருக்கிலையார் என்ற புலவர்

                                    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்

                                    தன்னமர் காதலி புன்மேல் வைத்த

                                    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்

என்று காட்டுகின்றார்11. இதே போன்று இன்னுமொரு காட்சி. மீனிறைச்சியினைப் பலருடன் சேர்ந்து விருந்துண்ணும் இடமானது. கணவன் இறந்து பட்டதும் மாறி விடுகின்றது. இறந்த கணவனுக்கு உணவு படைக்க வேண்டி சிறிய இடத்தினை அழுத கண்களோடு ஆவின் சாணத்தால் மெழுகுகின்றாள் மனைவி.

                                    அடங்கிய கற்பி னாய்துதன் மடந்தை

                                    உயர்நிலை யுலக மவன்புக வார

                                    நீறாடு சுளகிற் சீறிடநீக்கி

                                    அழுத லானாக் கண்ணள்

                                    மெழுகு மாப்பிகண் கலுழ்நீ ரானே

கண்ணீரையும் சாணத்தோடு மெழுகுகின்ற இந்நிலையை தும்பை கோகிலவானர் படம்பிடித்துக் காட்டுகின்றார்12.

கூந்தல் களைதல்

            பெண்ணுக்கு அழகினைத் தருவது கூந்தல். மயிலின் தோகைக்கும் கார்மேகத்திற்கும் ஒப்பிட்டுக் கூறக்கூடியகூந்தலை அகிற்புகையூட்டியும் வாசனைத் திரவியங்களைப் பூசியும் அழகுபடுத்துவர். ஐந்து வகையான பகுப்புகளில் மிகச் சிறப்பாக ஒப்பனை செய்து அழகுபடுத்துவர். இதனை ஐம்பால், சில்லைங் கூந்தல் என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. இவையனைத்தும் கணவர் உயிருடன் இருக்கின்ற காலம் வரையிலுமே. கணவர் இறந்தபின்னர் திரவியங்களால் பெண்கள் தம் கூந்தலை அழகுபடுத்துவதில்லை. மாறாகக் கூந்தலை குறைத்துக் கொண்டிருக்கின்றனர். வளையல் போன்ற அணிகலன்களை அணிவதையும் இழந்திருக்கின்றனர். இந்நிலையினை,

                                    கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

என்று தாயங்கண்ணியார் குறிப்பிடுகின்றார்13. கணவர் இறந்த பின்னர் பெண்கள் வளையல் அணியாதிருப்பதை

                                    வளையில் வறுங்கை யோச்சி

என்று குளம்பந்தாயனாரும் கயமனாரும் தம் பாடல்களில் கூறுகின்றனர்.14 கூந்தலைக் குறைத்துக் கொள்வது தவிர முழுவதுமாகக்களைந்து விடுகின்ற பழக்கமும் இருந்திருக்கின்றது. கைம்பை நோன்பிற்காகப் பெண்கள் தங்கள் கூந்தலை மழித்துக் கொண்ட நிலையினை

                                    ஒள்நுதல் மகளிர் கைம்மை கூர

                                    அவிர் அறல் கடுக்கும் அம்மென்

                                    குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே

என்று கல்லாடானார் பாடிய பாடல் வழி அறியலாம். காரியாதி என்ற சிற்றரசன் இறந்த பின்பு அவனுடைய பொலிவிழந்த மனையின் அழகை ஆவூர் மூலங்கிழார் உரைக்கையில் கணவனை இழந்த பெண்ணின் நிலையுடன் ஒப்பிட்டு உரைக்கின்றார்.

                                    கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

                                    கழிகல மகடூஉப் போல

                                    புல்லென் றணையாற் பல்லணி யிழந்தே

            என்ற இப்பாடலடிகள் கணவனை இழந்த பெண் தலைமயிரை – கூந்தலை மழித்தலோடு அணிகலன்களையும் துறந்த நிலையினை அறிவிக்கின்றன.16 இதனை மாறோக்கத்து நப்பசலையார் பாடலும் உறுதிப்படுத்துகின்றமையைக் காணலாம். பூக்களையும் தழையினையும் சூடுவது கூட கணவன் உயிருடனிருக்கும் காலத்து மட்டுமே. கணவன் இறப்பிற்குப் பின்னர் இவற்றை அணியாது இருந்திருக்கின்றனர்.

                                    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வார

                                    தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்

                                    சிறுவெள் ளாம்பல் அல்லி யுண்ணும்

                                    கழிகல மகளிர் போல

என்பன அப் பாடல் அடிகளாகும்.17 இத்தகைய நிலையே கைம்மை நோன்பாகக் கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனைக் கைம்மைக்கொடுமை என்றே கூறலாம். சங்க காலத் தமிழரிடம் வழக்கிலிருந்த கூந்தல் கலையும் பழக்கம், பிற்காலத்தில் தமிழகத்தில் ஆரியர்கள் வந்தேறிய பிறகு அவர்களிடம் இப்பழக்கம் ஒட்டிக்கொண்டது. கணவனை இழந்த பார்ப்பனப் பெண்கள் தலைமுடியை மழித்துக்கொண்டு கைம்மை நோன்பின் ஒரு கூறினை பின்பற்றி இருந்தனர். சிலப்பதிகார காலத்தில் இக்கைம்மை நோன்பு துறைகளில் நீராடுவதோடு தொடர்கின்றமையைக் காணலாம்.18

கைம்மைத் துயருக்கு மாற்று

            கூந்தலை மழித்து, பூ, தழையாடை முதலியனவற்றைத் துறந்து அணிகலன்களை இழந்து தூய நல்லரிசியினை விலக்கி நீர்ச்சோற்றையும் புல்லரிசிச் சோற்றையும் உண்டு. பஞ்சணையினையும் பாயினையும் நீக்கிப் பருக்கைக் கற்கள் நிறைந்த தரையில் படுத்துறங்கி வாழுகிற வாழ்க்கை கைம்மை நோன்பு ஆகும். இந்நோன்பிற்கு சங்க கால மகளிர் மாற்று தேடினர். அஃது இக்கைம்மை நோன்பினை ஏற்க மறுப்பதோ எதிர்த்துப் போராடுவதோ என்ற வழியில் அமையவில்லை. உயிர் துறப்பதன் மூலமே தீர்வு கண்டிருக்கின்றனர். கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறுதல் அல்லது காடுகிழாள் கோயில் முன்பு தீ மூட்டப்பட்டு அதனுள் இறங்குவதைத் தெரிவு செய்திருக்கின்றனர் புறங்காட்டில் காடுகிழாள் கோயில் முன்பு தீயினுள் இறங்கி பூதப்பாண்டியன்தேவி பெருங்கோப்பெண்டு உயிர்துறந்தமையை மதுரைப் பேராலவாயர் பாடியிருக்கிறார்.19

            கைம்மை நோன்பின் கொடுமையினை நன்கறிந்த பெருங்கோப்பெண்டு தன் கணவன் பூதப்பாண்டியன் இறந்ததும் உடன்கட்டையேறத் துணிகிறாள். நாட்டின் நிலை குறித்து அரசியல் சுற்றத்துச் சான்றோர் தடுக்கின்றனர். பெருங்கோப்பெண்டு இதனைப் பொல்லாச் சூழ்ச்சி என்று கூறி உயிர்துறக்க முயல்கின்றாள்.

                                                பல்சான் றீரே பல்சான் றீரே

                                                செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும்

                                                பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

என்பது அவரது கூற்று 20 கைம்மை நோன்பின் கொடுமையினைத் தாளமுடியாமையினாலேயே இக்கூற்று வெளிப்பட்டிருக்கின்றது. ஒருவர் இறந்தபின் இறந்தவரை எரிக்கின்ற பழக்கமும், புதைக்கின்ற பழக்கமும் உள்ளன. எரிக்கின்ற பழக்கம் உடையோரிடம் கணவனை இழந்த பெண்தீ வளர்த்து தீயினுள் இறங்குவாள். புதைக்கின்ற பழக்கம் உடையோர் இறந்தவரைப் பெரிய தாழியுள் இட்டுப்புதைப்பர். அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பெற்ற முதுமக்கட்டாழிகள் இதனை நமக்கு அறிவிக்கின்றன. இது குறித்துப் புறநானூற்றிலும் அகச்சான்று உள்ளது. கணவனை இழந்த பெண்ணொருத்தி கலஞ்செய்து கொடுக்கும் குயவரிடம் மிகப்பெரிய கலம் கேட்கிறாள். கணவனோடு தன்னையும் சேர்த்துப் புதைப்பதற்காகப் பெரிய கலத்தினைக் கேட்கின்றாள்.

                                                கலஞ்செய் கோவே கலஞ் செய் கோவே

                                                ………………………………………….

                                                வியம்மல ரகன் பொழி லீமத்தாழி

                                                அகலிதாக வனைமோ

என்பது அப்பெண்ணின் வேண்டுகோளாக அமைகிறது.21 கணவன் இறப்பிற்குப் பின்னர் பெண்கள் எரிந்தோ, புதைந்தோ, கைம்மை நோன்பை முடிந்திருக்கின்றனர்.

அகப்பாடலில் கைம்மைக் கொடுமை

            இரவில் தலைவன் தலைவியைச் சந்திக்க வருகின்றான். களவின்பத்தில் மிகுதியும் விருப்புடைய தலைவன் செயலைத் தோழி வரைவுகடாவுதல் காரணமாய் கண்டிக்கிறாள். கடுமையான ஆபத்துகளுக்கிடையே வாரற்க என்கிறாள். இவ்வாபத்து பற்றிக் கூறுகையில் தலைவன் நாட்டில் உள்ள குரங்கின் செயலை எடுத்துக்காட்டுகிறாள். ஆண்குரங்கு இறந்துபட்டதும் பெண் குரங்கு தன்னுடைய குட்டியை உறவினரிடம் கொடுத்து விட்டு கைம்மை நோன்பின் துயர் தாளமுடியாமல் அல்லது அடைய விரும்பாமல் மலையின் உச்சியிலிருந்து கீழே குதித்துத் தன்னுயிரினைக் போக்கிக் கொள்கின்றது.

                                                கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்

                                                கைம்மை உய்யாக்காமர் மந்தி

                                                கல்லா வன்பறழ் கிளைமு தற் சேர்த்தி

                                                ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்.

என்ற இந்த அகப்பாடல் அடிகளில் ஐந்தறிவுடைய குரங்கின் மேல் சங்க கால மகளிரின் நிலை ஏற்றிக் கூறப்படுகிறது.22 கைம்மை நோன்பு கொடுமையானது என்பதும் இந்நோன்புக் கொடுமையினின்று மீள உயிர் துறத்தலைத் தீர்வாகக் கொண்டமையும் என்பது வெள்ளிடை மலையாகிறது.

உடன்கட்டை ஏறக் காரணம்

            ஒத்த அன்புடையவராய் நல்லறமே கொண்டு வாழ்வது இல்லறம். இந்த இல்லறத்தில் இன்ப துன்பங்களைத் தங்களுக்குள் சமமாய் பங்கெடுத்துக் கொளல் வேண்டும். ஒரு சாராருக்கு மட்டும் ஒன்று உயர்ந்தோ, குறைந்தோ இருத்தல் கூடாது. அங்ஙனம் இருப்பின் அங்குச் சமநிலை இல்லை. சங்க காலந்தொட்டு இன்று வரை துன்பங்கள் எப்பொழுதும் பெண்களின் சொத்தாகவே விளங்குகின்றன. திருமணச் சடங்கில் அம்மி மிதித்தல் என்ற சடங்கு ஒன்றுண்டு. அம்மி எதற்காக மிதிக்கப்படுகிறது? கணவனுடைய வாழ்க்கைப்பாதை கரடு முரடானதாக இருந்தாலும் இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொண்டு, மனைவி கணவனோடு செல்லுதல் வேண்டும். இச் செய்தியைத்தான் அம்மி மிதித்தல் என்ற சடங்கு உள்ளடக்கியிருக்கின்றது. பெரும்பாலும் பெண்ணுக்கே இது போன்ற அறிவுரைகள் பல கூறப்படுகின்றன. ஆணுக்கு இத்தகைய அறிவுரை கூறும் சடங்கு இல்லை. கணவன் இறந்த பெண் கைம்பெண், விதவை என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றாள். வெண்ணிற ஆடை உடுத்துகின்றாள். ஆனால் மனைவியை இழந்த கணவனை இது போன்று அடையாளம் காட்டக்கூடிய சொல்லோ, ஆடையோ ஒன்று கூட இல்லை.

சங்க காலத்திலும் இத்தகைய நிலையில் மாற்றம் இல்லை. ஒத்த அன்புடையவரில் கணவன் இறப்பின் மனைவியே பல துன்பங்களைப் பெறுகிறாள். நல்ல உணவில்லை, படுக்கையில்லை, அணிகலன்களை அணிவதுமில்லை. கூந்தலை இழந்து கண்ணீர் மல்க, கணவன் இறந்த இடத்தினை மெழுகி விண்ணுலகில் வாழும் கணவனுக்கு உணவு படைத்து வாழும் வாழ்க்கை நரக வாழ்க்கையாகத்தான் இருக்கின்றது. மனைவி இறந்த பிறகு கணவனுக்கு இது போல் எந்தவிதமான விதிமுறைகளும் கிடையா. மனைவி இறந்த பிறகு எந்த ஒரு கணவனும் தலைமயிரை மழித்துக்கொண்டு நீர்ச்சோறோ, புல்லரிசிச் சோறோ உண்டு வெறுந்தரையில் படுத்துறங்கி மனைவி இறந்த இடத்தினை மெழுகி விண்ணுலகில் (?) வாழும் மனைவிக்கு உணவு படைத்து நோன்பிருப்பதில்லை. மீறி மீறிப் போனால் கொஞ்சம் வருத்தப்படலாம். கைம்மை நோன்போ, உடன்கட்டை ஏறலோ, கணவனுக்குக் கிடையா. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தம் பெருங்கோப்பெண்டு இறந்த பொழுது.

                                    யாங்குப்பெரி தாயினு நோயல வெனைத்தே

                                    உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்

                                    கள்ளி போகிய களரியம் பறந்தலை

                                    வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்

                                    தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி

                                    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை

                                    இன்னும் வாழ்வ லென் னிதன் பண்பே

என்று வருந்த மட்டுமே முடிகிறது.23 தலைவியை விட்டுப்பிரிவது துன்பமெனப் புலம்புகிற தலைவன் கூற்றும் இருக்கத்தான் செய்கிறது. அக்கூற்று

                                    வம்பணி உயர்கொடி அம்பர் சூழ்ந்த

                                    அரிசில் அம்தௌ;ளறல் அன்னயிவள்

                                    விரி ஒலி கூந்தல் விட்ட மை கலனே என்று வெளிப்படுகிறது.24

தலைவியைப் பிரிந்து வாழும் நாட்கள் வீணான பதர் போன்றவையே என வருந்துகிற (எல்லாம் எவனோ? பதடி வைகல்) தலைவனையும் பார்க்க முடிகிறது.25 இவை விகிதாச்சார அளவில் மிகவும் சிலவே. ஆனால் சங்ககாலப் பெண்கள் தாங்கள் இல்லாமல் தலைவர்கள் – ஆண்கள் வாழ மாட்டார்கள் என்று அளவுக்கு அதிகமான நம்பிக்கையினை ஆண்கள் மீது வைத்திருக்கின்றார்கள். இதனை

                                    நீரின்ற மையா உலகம் போலத்

                                    தம்மின்ற மையா நம் நயந் தருளி என்றும் 26

                                    நம்மை விட்டு அமையுமோ மற்றே என்றும் 27

பாடப்படும் பாடலடிகள் மெய்ப்பிக்கின்றன. தாமின்றி தலைவன் இல்லை எனும் எண்ணம் பெண்களுக்கு மிகுதியாக இருந்ததைப் போலவே தலைவன் இல்லாத வாழ்க்கை ஒன்றுமில்லாத பாழ் என உறுதியாக நினைத்த பெண்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். தலைவனுடைய தற்காலிகப் பிரிவைத் தாள முடியாமல்,

                                    நின் இலது இல்லா இவள் என்றும்28

                                    ……….              இவளே

                                    வருவை ஆகிய சின்னாள்

                                    வாழா னாதல் நற்கு அறிந்தனை என்றும்29

                                    ……….              காதலர்

                                    ஒரு நாள் கழியினும் உயிர் வேறு படூஉம் என்றும்30

                                    உயிர்க்கு உயிர் அன்னர்                            என்றும்31

                                    யாம் எங் காதலர்க் காணேம் ஆயின்

                                    செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்

                                    கல்பொரு சிறுநுரை போல

                                    மெல்ல மெல்ல இல்லா குதுமே                என்றும்32

                                    நீயெமக்கு இன்னாதன பல செய்யினும்

                                    நின்னின்று அமைதல் வல்லாம் ஆறே              என்றும்33

                                    விரிநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்

                                    இன்னுயிர் அல்லது பிறிதொன்று

                                    எவனோ? தோழி நாம் இழப்பதுவே                    என்றும்34

புலம்புகிற பெண்ணின் குரலையே அதிகமாகக்கேட்க முடிகிறது. தலைவனை விட்டுப் பிரிந்து துன்புறுவதைவிட அவனுடன் சேர்ந்திருக்கின்ற காலத்திலேயே உயிர் பிரிந்துவிட வேண்டும் என்று நினைக்கின்ற தலைவியின் துயரத்தினை – பிரிவுக்கொடுமையினை தலைவன் இல்லாத வெறுமை நிலையினைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. இதனை சிறைக்குடி ஆந்தையாரின்,

                                    பிரிவ ரிதாகிய தண்டாக் காமமொடு

                                    உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து

                                    இருவேம் ஆகிய உலகத்து

                                    ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே

என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன 35 களவுக்காலத்திலும் கற்புக்காலத்திலும் தலைவனின் குறுகிய காலப் பிரிவும் கூட மிகப்பெரிய வருத்தத்தினையும் துன்பத்தினையும் தரும்போது அவன் இல்லாத வாழ்வு, கைம்மை நோன்பு நோற்று வாழும் வாழ்வு வாழமுடியாத ஒன்றாகவே ஆகிறது.

            கைம்மை நோன்பு தமிழ் மரபென்றும் வடமரபில் காணப்படாதது என்றும் கூறப்பட்டதை மறுத்து போரில் இறந்து பட்ட வீரர்களுடைய மனைவியரின் வீரயுக நம்பிக்கை சார்ந்ததாக அமைந்ததே கைம்மை நோன்பு என்ற கருத்துரைக்கப்படுகின்றது. 36 தமிழ்மரபு, வீரயுக நம்பிக்கை வைதீக மரபு என எதுவாகப் புனைந்து கூறப்பட்டாலும் கைம்மை நோன்பு கொடியதாக இருந்திருக்கின்றது. இதனைத்தாங்கிக் கொள்ள முடியாமல் தாங்கிக் கொண்டு வாழுகிற ஆற்றல் இல்லாமல் உடன்கட்டையேறுதலைப் பெண்கள் ஒருவிதக் கட்டயாத்தின் பேரில் ஏற்றுச் செயல்பட்டிருக்கின்றனர். இது ஒரு வகையான ஆணாதிக்கச் சமூகத்தின் வெளிப்பாடாகும்.

            இத்தகைய ஆணாதிக்கச் சமுதாயத்தைப் பெண்ணால் நேரடியாக எதிர்த்துப் போராட ஆற்றல் இல்லை. அல்லது இல்லாத நிலை ஆக்கப்பட்டிருக்கின்றது. கடுமையான நோன்புகளை மேற்கொண்டு வாழ்ந்து ஆணாதிக்க சமுதாயத்தில் வாழ்வதைவிட உயிர் துறப்பதே மேல் என்ற முடிவுக்கே சங்க கால மகளிர் வந்திருக்கின்றனர். அக்காலச் சமுதாயத்தின் மீது தங்களது எதிர்ப்புணர்வைக்காட்டும் கருவியாகவே உடன்கட்டையேறுதலைக் காணமுடிகிறது. சுக வாழ்வு வாழுகிற அரசப்பரம்பரையில் தோன்றிய பூதப்பாண்டியன் மனைவிக்கும் இதில் விலக்கு இல்லை. பிற்காலத்தில் மதச்சாயம் பூசப்பட்டு வீடு பேறு அடையும் வழியாக மாற்றப்பட்டு விட்டது. வீடு பேறு மனைவிக்கு மட்டுமே. கணவனுக்கு இல்லை. இத்தகைய சமுதாய அமைப்பே, சங்க கால மகளிர் உடன்கட்டையேறல் என்ற பிற்போக்கான முடிவினை எடுக்கக் காரணமாகின்றது.

நிறைவுரை

            சங்க காலமகளிர் அரசியல், தூது, கல்வி, கள்ளுண்ணல் போன்றவற்றில் ஆண்களுக்கு நிகராக ஆற்றல் பெற்றிருக்கின்றனர். கணவனை இழந்த பிறகு கைம்மை நோன்பு என்ற கொடுமையினை அனுபவித்திருக்கின்றனர். ஆண்களுக்குச் சமமாக ஆற்றல் கைவரப் பெற்றிருப்பினும் கணவனை இழந்த பிறகு வாழத் தகுதியற்றவராகவே இருந்திருக்கின்றனர். ஏனெனில் கணவனை இழந்த பிறகு வாழும் பெண்ணின் வாழ்வு நெறி இயல்பானதாக இல்லை. கழிகல மகளிர், கழிகல மகடூஉ, பருத்திப் பெண்டிர், உயவல் பெண்டிர், தொடிகழி மகளிர் என்று பல பெயர்களால் கைம்பெண்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். களவிலும் கற்பிலும் தலைவனின் சிறு பிரிவைக் கூட தாங்க இயலாது வருந்தக்கூடியவளாகப் பெண் விளங்குகிறாள். கணவனை இழந்த பிறகு கடுமையான கைம்பெண் நோன்பு நோற்று வாழ வேண்டுவது பெண்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆண்களுக்கு இந்நோன்பு விதிக்கப்படவில்லை. பின்பற்றப்படவும் இல்லை. களவொழுக்கத்திலும், கற்பொழுக்கத்திலும் தலைவனை விமர்சிக்கிற தலைவி, கணவன் இறந்தபிறகு தன்னை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கு ஆளாகிறாள். இது தலைவன் மீதுள்ள அன்பின் மிகுதி எனக்கொள்ள இயலாது. பிற்போக்குத்தனமான இம்முடிவு அக்காலச் சமுதாயத்தைப் பழி வாங்குவதாகவே அமைகின்றது.

குறிப்புகள்

1.          பட்டினப்பாலை 106-108 புறநானூறு 235

2.          புறநானூறு.95

3.          புறநானூறு.246.5-9

4.          புறநானூறு.248. 3-5

5.          புறநானூறு 238: 6

6.          நற்றிணை 353 : 1

7.          புறநானூறு 246 : 10

8.          புறநானூறு 248 : 14

9.          புறநானூறு 261 : 18

10.        புறநானூறு 125 : 1,325:5)

11.        புறநானூறு 234, 2-4.

12.        புறநானூறு 249, 10-14.

13.        புறநானூறு 250. 4-5.

14.        புறநானூறு 253;5, 254;4

15.        புறநானூறு 25:12-14

16.        புறநானூறு 261. 18-20

17.        புறநானூறு 280. 11-14

18.        சிலப்பதிகாரம் துன்பமாலை 39,43

19.        புறநானூறு.247

20.        புறநானூறு.246:1-3

21.        புறநானூறு.256

22.        குறுந்தொகை 69:1-4

23.        புறநானூறு.245

24.        நற்றிணை 1:6-7

25.        குறுந்தொகை 323:1

26.        நற்றினை 1:6-7

27.        குறுந்தொகை 317:5

28.        ஐங்குநூறு 179:4

29.        நற்றிணை 19:7-9

30.        நற்றிணை 141:11-12

31.        குறுந்தொகை 218:5

32.        குறுந்தொகை 290:3-6

33.        குறுந்தொகை 309:7-8

34.        குறுந்தொகை 334:4-6

35.        குறுந்தொகை 57:3-6

36.        பெ.மாதையன், சங்க இலக்கியத்தில் குடும்பம், பக்.119-120 (மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளது)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

முதல்வர்

சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி,

திருப்பூர் – 641 602

கொப்புகொண்ட பெருமாள் கோவில் வரலாறு

கொப்புகொண்ட பெருமாள் கோவில் தலபுராண வரலாறு

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா  சின்னமசமுத்திரம் கிராமத்தில், கல்வராயன் மலைத்தொடர் உள்ளது.  2,200 அடி உயரத்தில் உள்ள, இம்மலைகுன்றில் கால்நடை மற்றும் விவசாய நிலத்துக்கும், இலை, தழைகள் அறுப்பதற்குப்  பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  மலைகுன்றின் மேலேறி ஆண்கள் அவ்வவ்போது விளையாடி வருவதுமுண்டு. இம்மலையில் மூலிகை செடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அவற்றினைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். தினமும் காலை நேரங்களில் ஆண்களோடு பெண்களும் சேர்ந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு  மலை உச்சிக்குச் செல்வதுண்டு.  அங்கு ஆண்கள் மரங்கள் ஏறி காய்கனிகளைப் பறித்தும் காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டிருப்பர். அந்நேரத்தில் பெண்கள் நல்ல விளைச்சலுள்ள பகுதியில் ஆடு மாடுகளைக் கட்டிப்போட்டுவிட்டு தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் ஆடுவதுண்டு.

கோவில் உருவான வரலாறு (கொப்புகொண்ட பெருமாள் உருவான கதை)

புரட்டாசி வெள்ளிக்கிழமை ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தியின் காதில் அணிந்திருந்த தோடு (தோடு என்பதற்கு கொப்பு என்று பொருள் உண்டு) திருகாணி கழன்று கீழே விழுந்துள்ளது. அது தெரியாமல் அவளும் தன்கணவனுடன் வீட்டுற்குச் சென்று விடுகிறாள். வீட்டை அடைந்ததும் மாமியார் மருமகளிடம் ஒருபக்க காதில் தோடு இல்லாமையைக் கண்டு திட்டியுள்ளார். மருமகளும் அழுதுகொண்டே கணவனிடம் சொல்ல, இருவரும் அடுத்தநாள் புரட்டாசி சனிக்கிழமை காலையில் மலை உச்சிக்குச் சென்றார்கள்.  பெண்கள்  ஆடுமாடுகள் மேய்த்த இடம், விளையாடிய இடம் என்று ஒன்றுவிடாமல் தேடிப்பார்த்தபோது, அப்பெண்கள் விளையாடியிருந்த இடத்தில் புற்று ஒன்று எழும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்கள். புற்று இருந்த இடத்தில்தான் தோடு விழுந்திருக்க கூடும் என்று நினைத்த அப்பெண் அப்புற்றினை இடித்துத் தோட்டினை எடுத்துக் கொடுக்கும்படி கணவனிடம் கூறுகிறாள். கணவனும் மனைவி சொன்னதைக் கேட்டுக் கடப்பாறையால் புற்றினை இடிக்க முயல்கிறான்.

கொப்புகொண்ட பெருமாள் திருக்கோவில், சின்னமசமுத்திரம், பெத்தநாயக்கன் பாளையம்.

அப்போது ஒரு அசரரீ ஒலித்ததாகவும், அதிலிருந்து, திருமால் குடிக்கொண்டிருப்பதாகவும் அப்பெண்ணின் தோட்டினை (கொப்பு) ஆதாரமாகக்  கொண்டு இவ்விடத்தில் உறைவதாகவும் ஒலித்துள்ளது. மேலும், கரடுமுரடான மலைப்பாதையினை மென்மையான கற்களைக் கொண்டு சரிசெய்து ஒரு நடைபாதையாகத் தானாகவே உருவானது என்றும் ஊரிலுள்ள வயதானவர்கள் இன்றளவும் சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லியதாகவும் கூறுகிறார்கள்.

பெண்ணிடமிருந்து கொப்பையைக் கொண்டதால் ”கொப்புகொண்ட பெருமாள்” என அழைக்கப்படுகின்றார். அதன்பிறகு கொப்புகொண்டபெருமாள் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பச்சை பந்தல் அமைத்து, கொப்பு கொண்ட பெருமாளுக்கு திருவிழா எடுத்துப் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். சின்னமசமுத்திரத்தில் இத்திருக்கோவில் அமைந்திருந்தாலும் அதற்கு அடுத்துள்ள காளிச்செட்டியூர் கொண்ட ஆட்களே பூசாரிகளாகவும் இக்கோவில் நிர்வாகப் பிரிவுகளையும் கவனித்து வருகின்றனர்.

கோவிலின் படிக்கட்டுகள்

ஆரம்பகாலத்தில் கோவில் மலைமேல் செல்வதற்கு சிவப்பு மஞ்சளால கற்கள் மற்றும்  கூலாங்கற்களால் ஆன நடைபாதையே இருந்தது. இப்பாதையானது வளைந்து வளைந்து மலையைச் சுற்றிச் செல்லும். அதன்பிறகு இக்கோவிலின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைமேல் சென்று வருகின்ற மாதிரி சாலை அமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். அதனால் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இம்மலையை குடைந்து குறுக்கும் நெடுக்குமாகச் சாலை போட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பணத்தொகை அதிகம் ஆகும் என்பதாலும், ஒருபகுதிக்குமேல் சாலை அமைக்க முடியாத சூழ்நிலைகள் இருந்ததாலும் மலைமேல் போதியவசதி இல்லாமல் இருந்ததால் அந்த திட்டத்தைக் கைவிடப்பட்டது.

கொப்புகொண்ட பெருமாள் மலை – ஓர் அதிசயம்

ஆரம்பத்தில் மலைஉச்சியில் புற்று இருந்த இடமானது சிறிய கோவிலாக மட்டுமே இருந்தது. கோவில் பக்கத்தில் ஆங்காங்கு சின்னசின்ன கோவில்கள் (குடில்கள்) இருந்தன. கோவிலுக்கென்று என்றுமே வற்றிப்போகாத நல்ல தண்ணீர் கிணறும் இருந்தது. இக்கோவிலில் சந்தனக்கல் ஒன்றும் இருந்தது. தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கல்லோடு கல் உரச சந்தன திரவியம் உண்டாகும். பொதுமக்கள் அதனை அரைத்து அரைத்துப் பூசிக்கொள்வதும் உண்டு.  கீழிருந்து மேல் போகும் வழியெல்லாம் அரக்கு செடிகள் ஏரளமாய் உண்டு. பை நிறைய பறித்து வந்து காயவைத்துத் தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். கோவிலுக்குச் சென்று வந்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள் எண்ணினர். புத்திசுவாதினம் இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் போன்றோர்கள் மலைமீது ஏறி இறங்கிவிட்டால் ஏதோ அவர்களுக்குள் மாற்றம் நிகழ்ததாகக் கூறுவார்கள்.

முருகன் சன்னிதி

            பெருமாளைத் தரிசித்துவிட்டு கீழே இறங்கி வருகையில் மலையின் குறுக்குவாக்கிலுள்ள முருகன் சந்நிதி அமைந்துள்ளது. பொதுமக்கள் அங்கேயும் சென்று முருகபெருமானையும் வணங்கிவிட்டு வருவார்கள். மலை ஏறுபவர்கள் முருகன் சந்நிதி அடைந்துவிட்டால் அங்கு கொஞ்சநேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டுப் பிறகு செல்வார்கள்.

புரட்டாசி மாதம் திருவிழா

வருடாவருடம் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். பெத்தநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார ஊர்களான கொத்தாம்பாடி, கல்பகனூர், செல்லியம்பாளையம், ராமநாயக்கன் பாளையம், ஆத்தூர், ஓலப்பாடி, ஒட்டப்பட்டி, ஆரியபாளையம், புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல், பனைமடல், பாப்பநாயக்கன் பட்டி, கருமந்துறை போன்ற இடங்களிலிருந்தும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பெரும்திரளாக வருகை தருகின்றனர். 

கொப்புகொண்ட பெருமாள் திருக்கோவில் – நுழைவாயில்

கோவில் அன்னதானம், பொதுமக்களின் அன்னதானம், ஆடு மாடுகளை காணிக்கை ஒருபுறம், பக்தர்கள்  மொட்டை அடித்தல், இரு சக்கர நான்கு சக்கர நிறுத்தங்கள், வழிநெடுக சிறுகுறு கடைகள், பெருங்கடைகள், ஐஸ் பெட்டிகள், பலவகையான ராட்டினங்கள், வாடகை வண்டிகள், இரவு நேரங்களில் கண்கவர் விளக்குகள், வானவேடிக்கைகள், மைக்செட் வர்ணனைகள் எனத் திருவிழாக்களாய் அமர்க்களப்படுத்தும்.

கும்பாபிஷேகம்

பெத்தநாயக்கன் பாளையம் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு பெரிய மலைகோவிலாக இருக்கும் பழமை வாய்ந்த கொப்புகொண்ட பெருமாள் கோவிலை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். மலைமேல் கொஞ்சம் விரிவுபடுத்தியும் கோபுரங்களைச் சீரமைத்தும் சரிசெய்தனர். மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரம் கட்டிடமும் மற்றும் 11 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலையும் புதிதாக கட்டப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதையில்  எப்போதும் உள்ள கல்லால் ஆன சாலையை நீக்கிவிட்டு கிரானைட் கற்கள் கொண்டு படிக்கட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன.  நன்கொடையாளர்கள் மூலம், 1,893 கருங்கல் படிகள் அமைத்தனர்.

முடிவுரை

            புற்றுக்கு அடியில் ராமமிட்டபடி கொப்புகொண்ட பெருமாள் சுமாமி  காட்சியளிக்கிறார். துளசி மாலையும் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில் சார்பாகப் புரட்டாசி சனிக்கிழமைகளில் முழுவேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மலைமேலிருந்து பார்த்தால் வசிட்ட நதி ஓடும் அழகை ரசிக்கலாம். பெத்தநாயக்கன் பாளையம் சுற்று வட்டார கிராமங்களையும் நெல் வயல்களையும் தென்னை பாக்கு மரங்களின் ஒய்யார முழுஅழகையும் நுகரலாம். புரட்டாசி அல்லாத பிற சனிக்கிழமைகளிலும் இக்கோவிலில் வழிபாடு செய்யப்படுகிறன. மொட்டை அடித்தல், கோவிந்தா.. கோவிந்தா… பொறிக்கடலை, பீப்பீ ஊதி போன்றவைகள் தவிர்க்க முடியாதனவாக இருக்கின்றன. மொத்தத்தில்  அனைவரும் ஒருமுறையாவது சென்று வருவதற்கான அற்புதமான திருத்தலமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சங்க இலக்கியத்தில் குடில்கள்

மனிதன் முதலில் உணவைத் தேடி அலைந்து உணவைப் பெறுகிறான்.  பின்னர் உடையை உடுத்துகிறான்.  நாடோடியாகத் திரிந்து, அலைந்த பின்னர் ஒரே இடத்தில் வாழத்தொடங்குகின்றான். மனிதன் முதலில் குகைகள் போன்றவற்றில் வசிக்க ஆரம்பித்து அவற்றின் தோற்றத்தைக் கொண்டு, அதைப்போலவே குடிசைகள் அமைக்க ஆரம்பிக்கிறான்.  இவ்வாறே முதலில் மனிதன் உறைகின்ற இடம் அமைகிறது.  பல்வேறு விதமான குடிசைகளை இருப்பிடங்களுக்கு ஏற்றவாறு அமைத்த மனிதன், அவற்றில், பல வேறுபாடுகளைச் செய்கிறான்.         

தோற்றம்

            குடிசைகள் புதர்போன்ற தோற்றத்தில் இருந்ததை புதல்போல் குரம்பை என்று அகநானூறு (315) கூறுகிறது.

மரங்களின் பயன்பாடு

சங்ககாலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன.  சங்கத்தமிழர் காடுகளில் இருந்த மரங்களை (விறகிலிருந்து வீடு கட்டுவது வரை) அனைத்து நிலைகளிலும் அனைத்து வகைகளிலும் பயன்படுத்தினர். வேட்டை நாய்கள் குரைத்து விளையாடி வர வேட்டையில் வென்ற கானவன் மரக்காலில் சேர்த்துப்பிணித்த தன் குடிசையை நோக்கிச் சென்றான் என்று நற்றிணை (285) கூறுகிறது. இதனை,

            “மனைவாய் ஞமலி ஒருங்கு புடைஆட

            வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட

            நடுகாற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

கழிகள்

            ஆடுகள் நின்று தின்பதற்காகத் தழைகள் கட்டின குறிய காலையுடைய குடில். அக்குடிலின் வாயில் பல கழிகள் சேர்த்து அமைக்கப்பட்ட கதவினைக் கொண்டதாக உள்ளது.  குடிலின் மேல் உள்ள கழிகளின் மீது வரகுக்கற்றை வேயப்பட்டிருக்கும், என்று கோவலரின் குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (147) உணர்த்துகின்றது. கழிகள் மிடைந்து புல்லால் வேயப்பட்ட குடிலை

            “……….. கழி மிடைந்து இயற்றிய

            புல்வேய் குரம்பை

என்ற அடிகளில் மலைபடுகடாம் (437) உணர்த்துகின்றது.

மூங்கில்

            மூங்கிலைக் கழிகளாப் பயன்படுத்தியதை வேழம்நிரைத்து என்று பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது.

ஒடு மரம்

ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக்கதவினையுடைய இல்லங்களின் முன்னர் வேட்டுவர் தீயைமூட்டி உடும்பை வாட்டுவர் என்று புறநானூறு (325) கூறுகிறது. இதனை,

            உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்

            சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மரக்கோல்கள் கொண்ட கதவு படலை என்று அக்காலத்தில் அழைக்கப்பெற இக்காலத்தில் அது படல் என்று அழைக்கப்படுகிறது.  ஆடு, மாடுகளை அடைக்கும் குடிலின் கதவு கிராமங்களில் சில இடங்களில் மரக்கோல்களைக் கொண்டே இன்றும் அமைக்கப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.

வெப்பம் மிக்க குடில்

            குடிலின் உள்ளே இருப்போர் வருந்துதலுக்குக் காரணமான வெப்பம் மிக்க குடிலைப்பற்றி, உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை என்று சிறுபாணாற்றுப்படை (174) குறிக்கிறது.

வறுமை மிக்க குடில்

            கூரையில் உள்ள கழிகள் வீழ்ந்து கிடக்க, சுவரில் கறையான் அரித்ததால் காளான் பூத்து விளங்க, அடுக்களையில் குட்டிகளை ஈன்ற நாய் பாலில்லாமல் வருந்தி குரைக்கும் வறுமை மிக்க குடிலை சிறுபாணாற்றுப்படை (132) கூறுகிறது.

மரக்கால் பந்தல்

            குடில்களுக்கு முன்னர் பந்தல் இருந்தது.  அப்பந்தல் மரக்கால்களால் அமைக்கப்பட்டிருந்தது.  குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடு துப்பிய விதைகள் பந்தலில் காணப்படும்.  அங்கு இடையன் தீயை மூட்டுவான் என்று புறநானூறு (324) கூறுகிறது.  இதனை,

            “குமிழ் உண்வெள்ளை பகுவாய் பெயர்த்த

            வெண்காழ் தாய வண்காற் பந்தர்

            இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 பாசறை

            பாசறையும் மரக்கால்களைக் கொண்டு அமைக்கப்பட்டது.  கூவையிலையால் மூடப்பட்டது. இதனை, கூவை துற்ற நாற்கால் பந்தர் (புறம் 29) என்ற அடியால் உணரலாம். மேற்கண்ட செய்திகளிலிருந்து குடில்களில் மரங்கள் கதவாகவும், கழியாகவும் பயன்பட்டதை அறிய முடிகிறது.

சுவர்

            குடில்களுக்கு மண்ணால் ஆன சுவர் வைக்கப்பட்டிருந்தது. தரையை மெழுகுவது போல சுவற்றையும் மண்பூசி செய்யப்படுகிறது.

செம்மண் பூசுதல்

 தலைவியை  உடன்போக்கில் அழைத்துக்கொண்டு வரும் தலைவனின் தாய், அலங்கரிக்கப்பெற்ற புறச்சுவரில் செம்மண் பூசி, முற்றத்தில் மணலைப் பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு வீட்டினை அழகு செய்வாள் என்று அகநானூறு (195) கூறுகிறது.  இதனை,

            “………………. தாயே

            புனைமான் இஞ்சி பூவல் ஊட்டி

            மனைமணல் அடுத்து மாலை நாற்றி

என்ற அடிகள் உணர்த்துகின்றன. சுவரில் செம்மண் பூசியதால் சுவர் மண்சுவர் என்று அறியலாம்.  இக்காலத்தில் சுண்ணாம்பு பூசாத மண்சுவருக்கு பண்டிகை போன்ற நாட்களில் செம்மண் பூசும் வழக்கம் உள்ளது. செம்மண் பூசப்பட்ட இல்லத்தை செவ்வாய்ச் சிற்றில் என்று அகநானூறு (394) கூறுகிறது.

திருமணவிழாவின் போது எங்கும் மணல் பரப்பி, இல்லத்திற்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை வைத்து வணங்குவர் என்று கலித்தொகை கூறுகிறது. இதனை,

            தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி

            எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்

என்ற கலித்தொகை (114) அடிகள் உணர்த்துகின்றன. இல்லிற்குச் செம்மண் பூசுவர் என்பதன் மூலம் தரை, சுவர் போன்றவற்றிற்குச் செம்மண் பூசியிருப்பர் என்று உணரப் பெறுகின்றது.

சுண்ணாம்பு பூசுதல்

            குடிலின் இறப்பில் (தாழ்வாரத்தில்) சுண்ணாம்பு பூசியதை

            “……………. இறைமிசை

            மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன

என்று அகநானூறு (346) கூறுகிறது. கலப்பையைச் சார்த்தி வைப்பதால் சுவர் தேய்ந்து காணப்பட்டது என்று பெரும்பாணாற்றுப்படை (188) கூறுகிறது.

குடில்களில் மண்சுவர் இருந்துள்ளது.  அதனைச் செம்மண், சுண்ணாம்பு பூசி அழகு செய்வர் என்று உணரப்பெறுகின்றது. சுவர் மண்சுவராக இருந்ததால் தேய்ந்து காணப்பெற்றது என்று அறியலாம்

குடிசையின் கூரைகள்

            பலவித புற்களையும் இலைகளையும் கொண்டு குடிசையின் கூரைகளை வேய்ந்துள்ளனர்.

புல்

புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசையினை புல்வேய் குரம்பை என்று அகநானூறும் (172), புறநானூறும் (120) உணர்த்துகின்றன. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊரில் புலால் நாற்றம் வீசியதை, புலால்அம் சேரி புல்வேய் குரம்பை என்று அகநானூறு (200) உணர்த்துகிறது. புல்லிய இலைகளால் வேயப்பட்ட குடிசைகளை உடைய ஊரை, புல்இலை வைப்பின் புலம் என்று பதிற்றுப்பத்து (15) கூறுகிறது.

            “ஊகம்புல்லால் வேயப்பட்ட சுவருடைய குடிசையை

            ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்

            என்று பெரும்பாணாற்றுப்படை (122) கூறுகிறது. இதைப்போலவே குன்றக் குறவன் புல்வேய் குரம்பை என்று ஐங்குறுநூறு (252) கூறுகிறது.  இது ஊகம்புல் என்று உரையாசிரியர் கருதுகிறார். எனவே, புல்லால் வேயப்பட்ட குடிசை என்றால் அது ஊகம்புல்லாக இருக்கவும் வாய்ப்புண்டு.

தருப்பைப் புல்

            மூங்கிலைக் கழிகளாக வைத்து, இடையில் மரக்கொம்புகளை வைத்து தாழை நாரால் கட்டி, தருப்பைப் புல்லால் வேய்ந்த வலைஞரின் குடிலை பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது. மீனவர்களின் குடியிருப்பாதலால் அங்கு கிடைக்கும் தாழை மர நார் கட்டுவதற்கும், தருப்பைப்புல் (நாணற்புல்) வேய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறியலாம்.

தாழை

            “தாழையால் வேயப்பட்ட குடிசையை

            தடந்தாட் தாழைக் குரம்பை

என்ற நற்றிணை (270) உணர்த்துகிறது.

முள்ளிச் செடி

            முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய வாசலையுடைய குடிசையை

            “முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை

என்று நற்றிணை (207) கூறுகிறது. நெய்தல் நில மக்கள் தருப்பை, தாழை, முள்ளி போன்றவற்றைக் குடிசையில் வேய்ந்தனர் என்ற கருத்து பெறப்படுகின்றது.

 ஈந்தின் இலை

            கொழுவிய மடலையும், வேல்போலும் நுனியையும் பொருந்திய ஈந்தின் இலையால் வேயப்பட்ட, முள்ளம்பன்றியின் முதுகு போன்ற புறத்தினை உடைய குடிசை, இதன்மேல் எலி, அணில் முதலியன திரியாமல் இருக்கும் என்று பெரும்பாணாற்றுப்படை (86) கூறுகிறது. இதனை,

            “……………….. கொழுமடல்

            வேற்றிலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்

            ஈத்துஇலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை

என்ற அடிகள் உணர்த்துகின்றன.  முள்ளம்பன்றியின் முதுகில் கூர்மையான முட்கள் குத்திட்டு நிற்பது போல குடிசையில் ஈந்தின் இலைகள் குத்திட்டு நின்றன.  இவ்வாறு இதை வேய்வது கடினம். எலி, அணில் போன்றவற்றால் வரும் தொந்தரவுகளைத் தடுக்க, தமக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில், பாதுகாப்பு அரண்போன்று அமைத்துள்ளனர்.

வரகுத்தாள்

            வரகின் வைக்கோலால் வேயப்பெற்ற குடிசையை பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இதனை, கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (191) என்ற அடி உணர்த்துகிறது. கழிகளுக்கு மேல் வரகுக்கற்றை வேயப்பட்டதை

            “செறிகழிக் கதவின்

            கற்றை வேய்ந்த (149)”

என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.  இவை இரண்டுமே கோவலர்களின் குடிசைகள் என்பது குறிக்கத்தக்கது. முல்லை நிலத்தில் விளைந்த வரகு உணவாகவும், வரகுத்தாள் வேய்வதற்கும் பயன்பட்டது என்று அறியலாம்.

நெற்தாள்

            உழவர்களின் குடிசைகளில் வைக்கோல் வேயப்பட்டிருந்தது. இதனைப் பெரும்பாணாற்றுப்படை(225) கூறுகிறது. புதுவை வேய்ந்த கவிகுடில் என்ற அடி இதனை உணர்த்துகிறது.  உழவர்களாதலால் அங்கு நெல்லடித்த பின்னர் எஞ்சியுள்ள நெற்தாள் வீடு வேயப்பயன்பட்டது. இன்றும் பல இடங்களில் இதனை வீடு வேய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.

நெற்கதிர்

நெற்கதிர்களைக் கூரையாக வேய்ந்து, கழிகளாகக் கரும்பைப் பயன்படுத்திய குடிலை

“செந்நெற் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக்கூரை

என்ற அடிகளில் புறநானூறு (22) உணர்த்துகிறது.  மருத நில வளத்தை இவ்வாறு கூறியிருக்கலாம்.

பனை ஓலை

            சமையற் கூடத்தின் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது என்று நற்றிணை (300) கூறுகிறது. இதனை,

            அட்டில் ஓலை தொட்டனை

என்ற அடி உணர்த்துகிறது. இன்றும் பனையோலைகளால் குடில்கள் வேயப்படுகின்றன.

தென்னை மடல்

            தென்னந்தோப்புகள் தோறும் தனித்தனியாக இருந்த உழவரின் வீடுகளைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.  இங்கு முற்றத்தில் மஞ்சள் இருக்கும்.  வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டங்கள் இருக்கும் தென்னையின் வாடிய மடலால் இதன்கூரை வேயப்பட்டிருக்கும். இதனை,

            “வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

            மஞ்சள் முன்றில் மணம்நாறு படப்பை

            தண்டலை உழவர் தனிமனை

என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (353) உணர்த்துகிறது. மருதநிலத்தில், தென்னை முதலியன நன்கு வளர்கின்றன. தோப்புகளுக்கு இடையில் உள்ள குடிசை. அதனால் நிறைய இடம் அங்கு இருக்க அவ்விடத்தில் பூந்தோட்டங்கள் இருந்தன என்று அறியலாம். வாடிய தென்னை மடல் வேயப்பயன்பட்டது என்பதை அறியலாம். இன்று தென்னை மடலைக் கீற்றுக்களாகப் பின்னி, கழிகளின் மேல் அதனைக் கட்டி, அதன்மேல் நெற்தாள் போன்றவற்றை வேய்கின்றனர். இன்றும் பல இடங்களில் வயல்களுக்கு நடுவில் குடிசை வீடுகள் உள்ளன.  வீடுகளைச் சுற்றித் தோட்டங்களும், மரங்களும் வளர்க்கப்படுகின்றன.

குறுகிய கூரை

            குறுகிய கூரையையுடை குடிசையையும், அதன் அருகில் மிளகுக்கொடி படர்ந்த தோட்டத்தையும் அகநானூறு (272)

            “…………. கறிஇவர் படப்பைக்

            குறிஇறைக் குரம்பை

என்ற அடிகளில் உணர்த்துகின்றது. வரகுத்தாள், நெற்தாள், ஈந்தின் இலை, ஊகம்புல், தாழைமடல் போன்றவை கிடைப்பதற்கேற்ப அவை குடிசைகளின் மேற்கூரையாகப் பயன்படுத்தப்பெற்றன என்று உணர முடிகிறது.

பரண்

            கானவர்கள் தம் தினைப்புனத்தில் காவலுக்கு இருப்பதற்காக மரங்களின் மீது பரண் அமைப்பர்.  இப்பரணுக்கு மேற்கூரை இருந்ததை நற்றிணை (306) உணர்த்துகிறது. இப்பரணின் மேற்கூரையில் புலித்தோல் வேய்ந்து இருந்ததையும் நற்றிணை (351) உணர்த்துகிறது.

வாயில்கள்

            குடிசைகளின் வாயில்கள் பெரும்பாலும் மிகவும் குறுகியதாகவே இருந்துள்ளன.  காட்டு விலங்குகள் குடிசைகளுக்குள் புகாமல் இருக்கவே இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அறியலாம். குனிந்து செல்லும்படியான தலைகுவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட பாலைநில ஊரைப் பற்றி அகநானூறு (329) குறிக்கிறது. இதனை, குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்ற அடி உணர்த்துகின்றது. முள்ளிச்செடிகளால் வேய்ந்த குறுகிய வாயிலையுடைய குடிசையை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை என்று நற்றிணை (207) உணர்த்துகிறது.குறுகிய வாயிலைக் கொண்ட மீனவர்களின் வீடுகளை குறுங்கூரைக் குடி என்று பட்டினப்பாலை (81) கூறுகிறது. குடில்களின் வாயில்கள் பெரும்பாலும் சிறியதாகவே இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. குறுகிய இறப்பிணையுடைய குடிசைகளை குறிஇறைக் குரம்பை என்று அகநானூறும் (210) புறநானூறும் (129) கூறுகின்றன.  இறப்பினை, இறவானம் என்று இக்காலத்தில் கூறுகின்றனர்.  இறப்பு மிகவும் குறுகியது என்பதால் வாயிலும் மிகவும் குறுகியது என்று உணரலாம்.

முற்றம்

            வீட்டின் முன்புறம் முற்றம் என்றும் முன்றில் என்றும் கூறப்பட்டது. முள்வேலிக்கு அருகில் பீர்க்கும், சுரையும் படர்ந்த வீட்டின் முற்றத்தை

            “……….. முள்மிடை வேலி

            பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்

            பீரை நாறிய சுரை இவர் மருங்கின்

என்று புறநானூறு (116) உணர்த்துகிறது.

நண்டுகள் விளையாடல்

            பரதவர்களின் வீட்டு முற்றத்தில் மணல் பரப்பப்பட்டிருக்கும். புலால் நாற்றம் வீசும். நண்டுகள் விளையாடும் என்று நற்றிணை (239) உணர்த்துகிறது.

பனைமரம்

            பனையின் கரிய அடிமரம் மறையுமாறு மணல் மிகுந்த முற்றத்தை

            “……………….. பெண்ணை

            மாஅரை  புதைத்த மணல்மலி முன்றில்”

என்று நற்றிணை (135) உணர்த்துகிறது.

புன்னை, தாழை மரங்கள்

            முன்றிலில் புன்னை மரமும், தாழை மரமும் இருந்தன அவற்றின் மணம் எங்கும் பரவின என்று நற்றிணை (49) கூறுகிறது. 

பலா

            குறிஞ்சி நிலத்தில்  முற்றத்தில் கிளைகள்தோறும் பழங்கள் தொங்குகின்ற பலாமரங்கள் இருந்தன என்பதை

            “சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்

            சுளையுடை முன்றில்

என்ற அடிகளில் நற்றிணை (77) உணர்த்துகிறது. முன்றிலில் இருந்த பலாச்சுளைகளைத் தின்ற மந்தி, விதைகளைத் தரையில் பரப்ப, கொடிச்சி தன் தந்தையின் மலையைப் பாடிக்கொண்டே ஐவன வெண்ணெல்லைக் குற்றுவாள் என்பதை நற்றிணை (373) உணர்த்துகின்றது. மரை மான்கள் நெல்லிக்காயைத் தின்று முற்றத்தில் பரப்பும் என்று புறநானூறும் (170) மான்கள் நெல்லிக்காயை உண்ணும் முற்றத்தை குறுந்தொகையும் (235) கூறுகின்றன.

விளாமரம்

எயினரின் குடிசை முற்றத்தில் விளாமரமும் அங்கே மான்களும் கட்டப்பட்டிருந்தன என்று பெரும்பாணாற்றுப்படை (95) கூறுகிறது. இதனை,

            “பார்வை யாத்த பறைதாள் விளவின்

            நீழல் முன்றில் நில உரல் பெய்து

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

குரவைக்கூத்து

            முன்றிலில் இருந்த வேங்கை மரத்தின் அடியில் மக்கள் குரவைக் கூத்தாடுவர் என்பதை, வேங்கை முன்றில் குரவையும் கண்டே என்ற அடியில் நற்றிணை (276) உணர்த்துகிறது.

குறிபார்த்தல்

            மணல் பரப்பப்பட்ட முற்றத்தில் வேலனை அழைத்து கழங்கிட்டுக்குறி பார்ப்பர் என்பதனை

            “பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு

            மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே

என்ற அடிகளில் நற்றிணை (268) உணர்த்துகிறது.

விளையாடுதல்

            குறவர்கள் முன்றிலில் விளையாடுவர் என்பதை நற்றிணை (44)  குறவர் அல்கு அயர் முன்றில் என்ற அடியில் உணர்த்துகிறது.

 கழங்காடுதல்

            கூரையுடைய நல்ல வீட்டின் முற்றத்தில் வளையணிந்த மகளிர் மணற்பரப்பில் கழங்கு விளையாடுவர். இதனை,

            “கூரை நல்மனைக் குறுந்தொடி மகளிர்

            மணல்ஆடு கழங்கின்

என்று நற்றிணை (79) உணர்த்துகிறது.

பறிகள்

            வலைஞரின் குடிசைக்கு முன்னால் மீனை வாரி எடுக்கும் பறிகள் இருந்ததை, பெரும்பாணாற்றுப்படை (265) பறியுடை முன்றில் என்று உணர்த்துகிறது.

கன்றுகள்

            வீட்டின் முற்றங்களில் பசுக்கன்றுகளை கட்டுவர், நெல் குற்றுவர் குரவைக் கூத்தாடுவர் என்பதால் முற்றம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.

மான்கள்

            வேட்டுவரின் குடிசை முன்னால் மான்கள் கட்டப்பட்டதைப் புறநானூறும் (320) கூறுகிறது.

உரல்

முற்றத்தில் உரல் இருந்துள்ளது. உரல் குடிலில் இருந்தால் உயர்த்திக் குற்றும்போது கூரையில் படும் என்பதற்காக வீட்டின் முன்னால் உரல்களை வைக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது.

தூய்மையற்ற முற்றம்

            செத்தைகள் மிகுந்து, தூய்மை செய்யப்பெறாத முற்றத்தை, காட்டொடு மிடைந்த சீயா முன்றில் என்று புறநானூறு (316) கூறுகிறது.

முற்றத்தை மெழுகுதல்

            மனைவி தன் கணவன் விண்ணுலகு அடைந்தபின் அவனுக்கு உணவிட விரும்பி, தன் கண்ணீரும், பசுஞ்சாணமும் கொண்டு முற்றத்தில் முறம் அளவு மெழுகுவதைப் புறநானூறு (249) கூறுகிறது. தெய்வத்திற்கு அயரும் குரவைக்கூத்து முதல், இறந்த கணவனுக்கு உணவு படைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வரை முற்றம் இன்றியமையாத பங்கு வகிக்கும் இடமாக இருந்தது என்று உணரப்பெறுகின்றது.

பந்தல்

            குடிசைகளுக்கு முன்னால் பந்தல் இருந்தது. பந்தலில் பொருட்களைத் தொங்க விடுவர், விருந்தினரைப் பேணுவர்.  சில கொடி வகைகளை வளர்த்து அவற்றைப் பந்தலாக்குவர்.  வளைந்த கால்களையுடைய பந்தலை அகநானூறு (394) கூறுகிறது. இதனை, முடக்கால் பந்தர் என்ற தொடர் உணர்த்துகிறது. குழந்தை பாலை உண்ணாமல் முற்றத்தில் உள்ள பந்தலுக்கு ஓடியதை நற்றிணை (110) கூறுகிறது. விருந்தினர் வந்து கொண்டே இருப்பதால் வீட்டில் ஏற்படும் நெருக்கத்தைக் குறைப்பதற்காகவும், ஒய்விற்காகவும் வீட்டின் முன்னர் பந்தலை அமைத்திருக்கலாம்.

கன்றுகளைப் பிணித்தல்

            சிறிய கால்களைக் கொண்ட பந்தலில், செழுமையான கன்றுகளைப் பிணித்துள்ளதைப் பெரும்பாணாற்றுப்படை (297) கூறுகிறது. இதனை செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர் என்ற அடி உணர்த்துகிறது.

பசுங்காய்கள்

            புன்னையின் கொம்பால் அமைக்கப்பட்ட பந்தலில் பசுங்காய்கள் தொங்குவதை

            “கொடுங்காற் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய

            பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்

என்று அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (266) உணர்த்துகிறது. பசுங்காய்கள் தொங்கும் என்பதால் கொடி வகைகளைப் பந்தலில் படர விட்டுள்ளனர் என்றும், அவை காய்த்துத் தொங்கின என்றும் அறியலாம்.

இசைக்கருவிகள்

            துடி என்னும் இசைக்கருவிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலை

            கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்

என்று பெரும்பாணாற்றுப்படை (124) கூறுகிறது.

முஞ்ஞைக் கொடி, முசுண்டைக் கொடி

            வீட்டின் முற்றத்தில் முஞ்ஞைக் கொடியும், முசுண்டைக் கொடியும் வளர்ந்து, புதிதாகப் பந்தல் அமைக்க வேண்டாமல் அக்கொடிகளே பந்தல் போலக் காட்சியளிக்கும். பலரும் உறங்குவதற்கு அந்நிழல் பயன்படும் என்று புறநானூறு கூறுகிறது. (320) இதனை,

            “முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி

            பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. பலரும் உறங்குவர் என்பதால் பெரிய பந்தல் போல் முஞ்ஞையும், முசுண்டையும் படர்ந்திருந்தது என்று அறியலாம்.  இக்காலத்தில் முல்லை மல்லிகை போன்ற கொடிவகைகளை வீட்டிற்கு முன்னரும் பின்னரும் பந்தல் போல் படர விடுகின்றனர்.  கன்றுகளைப் பிணித்தல், விருந்தினரைப் பேணுதல், கொடி வகைகளைப் படர விடுதல் போன்ற பலவற்றிற்கும் முற்றத்தில் அமைந்திருந்த பந்தல் பயன்பட்டது என்பதை அறிய முடிகிறது.

 வேலி

            வீட்டைச் சுற்றிப் பலவகையான வேலிகளை அமைத்துள்ளனர்.  வீட்டைச் சுற்றி இருந்த முள்வேலியை எருமை தன் கொம்பினால் அகற்றியது. இதனை,

            கூர்முள் வேலி கோட்டின் நீக்கி

என்ற அடியில் அகநானூறு (46) உணர்த்துகிறது.

பீர்க்கங் கொடி

            வீட்டைச் சுற்றி கூர்மையான முள்வேலி இருந்ததையும், அதன்மேல் பீர்க்கங் கொடிகளைப் படர விட்டிருந்ததையும் நற்றிணை (277) கூறுகிறது. இதனை,

            “நுண் உள் வேலித் தாதொடு பொதுளிய

            தாறு படு பீரம்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. பீர்க்கங்கொடி படர்ந்த வேலியைப் பீர் இவர் வேலி என்று பதிற்றுப்பத்து (26) கூறுகிறது. வேலியில் மற்றச் செடிகளைவிட பீர்க்கங் கொடிகளையே அதிகம் படர விட்டிருந்தனர் என்ற கருத்து பெறப்படுகிறது.

முள் வேலி

முள்வேலியிட்ட, தொழுக்கள் நிறைந்த குடியிருப்புகளை

            “………. முள் உடுத்து

            எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்

என்று பெரும்பாணாற்றுப்படை (184) கூறுகிறது.

கழல் முள் வேலி

            கழல் முள்ளால் ஆன வேலியை கழல் முள் வேலி

என்று புறுநானூறு (306) கூறுகிறது. கழல்முள் போன்றவற்றாலும் வேலியை அமைப்பர் என்று அறியலாம்.

மூங்கில் முள்

            மூங்கில் முள்ளால் அமைந்த வேலியையுடைய குடியிருப்புகளை வேரல் வேலி என்று நற்றிணையும் (232) குறுந்தொகையும்(18) கூறுகின்றன.  இயற்கையாக இதுபோல் அமையும் வேலியை வாழ்வேலி என்றும், செயற்கையாக அமையும் வேலியை இடுமுள்வேலி என்றும் அழைத்துள்ளனர். வாழ்வேலியைப்பற்றி பெரும்பாணாற்றுப்படையும் வாழ்முள் வேலி (126) என்று குறிக்கிறது.

தாழை மரவேலி

தாழை மரங்களும் வேலியாக அமைந்திருந்தன. தாழை மரங்கள் வேலியாக இருந்ததை

நற்றிணை (363, 372) உணர்த்துகிறது.  குறிஞ்சி நிலத்தில் மூங்கில் வேலியாக இருந்தது போன்று நெய்தல் நிலத்தில் தாழை இருந்தது என்று அறியமுடிகிறது.

பனையோலை வேலி

            பனை மரங்களிலிருந்து விழும் பனையோலைகளைக் கொண்டு வேலி அமைத்த, மணல் பரந்த நெய்தல் நில முற்றத்தை நற்றிணை (354) உணர்த்துகிறது. குடிசையின் கூரை மட்டுமல்ல, வேலியும் பனையோலையால் அமைவதும் உண்டு என்று அறியலாம். பனை ஓலையோடு முட்கள் சேர்த்துக் கட்டப்பெற்ற வேலியையும் நற்றிணை (38) உணர்த்துகிறது. 

நொச்சி வேலி

            மனைக்கு வேலியாக நொச்சி மரம் இருந்ததையும், அதன் கிளையில் குயில் கூவும் என்பதையும் நற்றிணை (246) கூறுகிறது. இதனை,

            “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

            வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

முல்லை வேலி

            வேலியைச்சுற்றி முல்லைக்கொடி படர்ந்திருந்ததை வேலி சுற்றிய வால்வீ முல்லை என்று அகநானூறு (314) கூறுகிறது. பீர்க்கங்கொடி வேலிகளின் மீது படர்ந்திருந்தது போல் முல்லைக் கொடியும் படர்ந்திருக்கலாம் என்று உணரமுடிகின்றது.

காந்தள் வேலி

குறிஞ்சி நிலத்தில் காந்தள் செடியும் இயற்கை வேலியாக இருந்துள்ளது.  இதனை, காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி என்று குறுந்தொகை (100) உணர்த்துகிறது.

பருத்திச்செடி

            பருத்திச்செடியும் வேலியாக இருந்துள்ளது. பருத்திச்செடி வேலியாக இருந்த ஊரை, பருத்தி வேலிச் சீறூர் என்று புறநானூறு (299,345) கூறுகிறது.

            எனவே, முள்வேலி, பனையோலை வேலி, மூங்கில்முள் வேலி, தாழை மர வேலி, நொச்சி மர வேலி, முல்லைக்கொடி வேலி, கழற்கொடிவேலி போன்ற பலவகை வேலிகள் இருந்துள்ளன என்று அறியப் பெறுகின்றது.  நில  அமைப்பிற்கு ஏற்றாற்போல் இவ்வேலிகள் இருந்தன.  விலங்குகளின் ஆபத்தில் இருந்து தவிர்க்கவே இவ்வாறு வேலியை அமைத்திருப்பர் என்ற கருத்து பெறப்படுகின்றது.

செடிகளும், மரங்களும்

            ஒவ்வொரு நிலத்திலும் அந்தந்த நிலத்திலுள்ள சிறப்பான செடிகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றன. இல்லத்தில் வயலைக்கொடி வளர்த்ததை இல் எழு வயலை என்று நற்றிணை (179) குறிக்கிறது.

குறிஞ்சி

ஓவியம் போன்ற இல்லத்தின் அருகில் குறிஞ்சிச் செடிகள் இருந்ததையும் அதன் மலர்களில் தேன் இருந்ததையும் நற்றிணை (268) உணர்த்துகிறது.

வயலை, நொச்சி

            வீட்டின் முன்னர் வயலைக்கொடியும், நொச்சி மரமும் இருந்ததை,

            “…………… வயலையும்

            மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்

என்ற அடியில் நற்றிணை (305) உணர்த்துகிறது.

பனை

            பனை மரங்கள் ஊரைச்சுற்றி இருந்தன என்று நற்றிணையும் (323), குறுந்தொகையும் (81) கூறுகின்றன.

மூங்கில்

            மூங்கில் மரங்கள் வளர்ந்த இடத்தில் இருந்த மலைக்குவடுகளுக்கு அருகில் இருந்த ஊரை மூங்கில் குவட்டிடையதுவே என்று குறுந்தொகை (179) கூறுகிறது.

தென்னை     

            மணம் கமழும் பூந்தோட்டங்கள் சூழுமாறு, தென்னை மரத்தோப்புகளுக்கு இடையில் உழவர்களின் வீடுகள் இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (353) கூறுகிறது.  இதனை,

            “வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

            மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை

            தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

பூந்தோட்டங்கள்

            பூந்தோட்டங்களுக்கு அருகில் பாணர்களின் குடியிருப்பு இருந்ததை,

            “பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி

            அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்

என்று மதுரைக்காஞ்சி (341) உணர்த்துகிறது. எனவே, வீட்டைச்சுற்றி அல்லது வீட்டின் அருகில் புன்னை, தாழை, விளா, பலா, வேங்கை, மூங்கில், பனை, ஆலமரம், நொச்சி முதலிய மரங்களும், குறிஞ்சி, முல்லை, காந்தள், பீர்க்கு, சுரை, வயலை, கழற்கொடி, முஞ்ஞை, முசுண்டை, பருத்தி முதலிய செடி கொடி வகைகளும் இருந்தன என்று அறிய முடிகின்றது. பலா, வேங்கை, முஞ்ஞை, முசுண்டை, கழற்கொடி முதலியவை முன்னரே வீடுகளின் அருகில் இருந்தமை உணர்த்தப் பெற்றது.

பறவைகள்

            வீடுகளில் சில வகையான பறவைகள் வளர்க்கப்பெற்றன.  அவை குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலியன.

குருவி

            குருவிகள் முற்றத்தில் உலர்த்திய புழுக்கலை உண்டு பொது இடத்தில் உள்ள நுண்ணிய புழுதியில் குடைந்து விளையாடி, தன் குஞ்சுகளோடு வீட்டின் இறைப்பில் தங்கியிருக்கும் என்று குறுந்தொகை (46) கூறுகிறது.  முற்றத்தில் நெல் போன்ற தானிய வகைகளை உலர வைத்திருக்கலாம் என்றும் அதைக் குருவிகள் உண்டிருக்கலாம் என்றும் அறியமுடிகிறது. வீட்டின் இறப்பில் குருவி இருந்ததை உள் இறைக் குரீஇ என்றும் (181) உள் ஊர்க் குரீஇ என்றும் (231) நற்றிணை உணர்த்துகிறது. இதனை மனை உறைக் குரீஇ என்று புறநானூறும் (318) உணர்த்துகிறது.

கோழி

            வீட்டில் கோழிகள் வளர்க்கப்பெற்றுள்ளன. இல்லத்தில் உறையும் கோழியின் பெடை, வேலிக்கு அப்பால் இருந்த காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் இல்லிற்கு வந்ததால், பாதுகாப்பாகப் புகுவதற்கு உரிய இடத்தை அறியாமல் துன்பத்துடன் தன் குஞ்சுகளை அழைத்துக் கூவிற்று என்று குறுந்தொகை (139) கூறுகிறது.

புறா

            புறாக்களும் வளர்க்கப்பெற்றுள்ளன. பாணன் விருந்தினராக மாலை நேரத்தில் வந்ததால் குடிலின் முன்னர் தினையைத் தூவி புறாக்களைப் பிடிப்பதற்கு முடியவில்லை என பாலை நிலத் தலைவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.

இதல்

            இப்பறவை கௌதாரி என்றழைக்கப்படுகிறது. பாணன் மாலைப்பொழுதில் வந்ததால் தினையைத் தூவி இதனைப் பிடிக்க முடியாமல் போனது.  இருப்பினும் முயலின் சுட்ட கறித்துண்டுகளைத் தருவோம் என்று பாலை நிலத் தலைவன் ஒருவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.

இதனை

            “படலை முன்றில் சிறுதினை உணங்கல்

            புறவும் இதலும் அறவும் உண்கெனப்

            பெய்தற்கு எல்லின்று பொழுதே

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

கிளி

            இது அந்தணர்களின் வீடுகளில் வளர்க்கப்பெற்றது. கிளிகளுக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் அந்தணர் வீடுகளைப் பெரும்பாணாற்றுப்படை (300) கூறுகிறது.  இதனை,

            வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

            மறைகாப் பாளர் உறைபதி

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

            குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலிய பறவைகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றுள்ளன.  கோழி, புறா, இதல் முதலிய பறவைகள் உணவிற்கும் பயன்பட்டன.  குருவி, கிளி முதலியவை பொழுது போக்கிற்காக வளர்க்கப் பெற்றுள்ளன.  புறா, இதல் முதலியவை விருந்தினர் வந்தால் உடனடியாக உணவிற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.  இவற்றை உணவிற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் முயல் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

 விலங்குகள்

            குடில்களில் பறவைகள் மட்டுமன்றி விலங்குகளும் பயன்கருதி வளர்க்கப்பெற்றுள்ளன.  பசு, எருமை, மரையா, மான், நாய், பன்றி முதலிய விலங்குகள் வளர்க்கப்பட்டதை அறிய முடிகிறது.

பசு

            இது  ஆயர்களின் வீடுகளில் பெருமளவில் வளர்க்கப்பட்டது.  ஆயர்கள் இதன் மூலம் வளமை அடைந்தனர்.  காலையில் பசுக்களை மேய்ப்பதற்காக ஓட்டிச்செல்வர். பசுவின் கன்றுகளை வீட்டில் கட்டி வைப்பர்.  தாயில்லாமல் வருந்தும் கன்றுகளிடம்,

            கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

            இன்னே வருகுவர் தாயர்

என்று ஆயர் மகள் கூறுவதாக முல்லைப்பாட்டு (15) கூறுகிறது. பசுக்களை மேய்ப்பதற்கு ஆயர்கள் ஓட்டிச் சென்றதை கலித்தொகை (106) கூறுகிறது. ஆயர்கள் ஏறு தழுவும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைக்கலிப் பாடல்கள் உணர்த்துகின்றன.

            பசுக்களின் மூலம் ஆயர்கள் பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றை விற்று தங்கள் வாழ்க்கையை வளமாக்கினர்.

எருமை

            சிறுவர்கள் எருமைகளின் இனிய பாலை கறந்து கொள்வதற்காக எருமைக் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டு வைப்பர்.  எருமைகளின் மேலேறிக் கொண்டு விடியற்காலத்தில் அவற்றை மேய்த்து வைப்பர் என்று நற்றிணை (80) கூறுகிறது. நெய் விற்று வாழ்க்கை நடத்தும் ஆயர்மகள் பசும்பொன்னை விரும்பி வாங்காது எருமைகளையும், பசுக்களையுமே விலைக்கு வாங்குவாள் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதால் பொன்னைவிட எருமை, பசுக்களைப் போற்றினர் என்று அறிய முடிகிறது. இதனை,

            நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

            எருமை நல்ஆன் கருநாகு பெறூஉம் (164)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மரையா

இது ஒருவகை காட்டுப்பசு என்று அறியப்பெறுகிறது.  மரையாவால் உண்ணப்பட்ட நெல்லி விதைகள் முற்றத்தில் கிடக்கும் என்று புறநானூறு (170) கூறுகிறது.  இதனை,

            மரை  பிரித்து உண்ட நெல்லிவேலி

            பரலுடை முன்றில்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மான்

            வேடர்களின் வீடுகளில் இது வளர்க்கப்பட்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட பெண்மானைத் தழுவி, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஆண்மான் விளையாடியதைப் புறநானூறு (320) உணர்த்துகிறது. 

நாய்

            வேட்டைக்குச் செல்லும் வேடர்கள், கானவர்கள் வேட்டை நாயை வளர்த்துள்ளனர்.  கானவன் முள்ளம்பன்றியைக் கொன்று, மனையிடத்தே உள்ள நாய்கள் எல்லாம் ஒருசேரப் பக்கத்தில் குரைத்து விளையாடி வர, மகிழ்வோடு இருப்பதை நற்றிணை (285) உணர்த்துகிறது. 

ஆடு

            ஆடுகள் வளர்க்கப்பெற்றுள்ளன.  வெள்ளாடு குமிழம்பழங்களை உண்டு, அதன் விதைகளைப் பந்தலருகில் துப்பும் என்று புறநானூறு (324) கூறுகிறது.  இதைப்போன்றே மரையாக்கள் நெல்லி விதையை முற்றத்தில் பரப்பியமை முன்னரே உணர்த்தப்பட்டது.

பன்றி

            கள்ளைச்சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதால் வடிந்த நீர் குழம்பிய, ஈரமாகிய சேற்றில் பெண்பன்றிகள் தங்கள் குட்டிகளோடு அளைந்து கொண்டிருக்கும்.  அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து, நெல்லையிடித்து மாவாக்கி அதை உணவாகக் கொடுத்துப் பலநாளும், குழியிலே நிறுத்தி வளர்த்த ஆண்பன்றிகள் இருந்ததாக பெரும்பாணாற்றுப்படை (339) கூறுகிறது. இப்பன்றிகள் உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்விலங்குகளைத் தவிர குதிரைகள், யானைகள் போன்றவைகளை மன்னர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தியுள்ளனர்.  கழுதைகளை உப்பு வணிகர் பயன்படுத்தியுள்ளனர்.  எனவே, இவ்விலங்குகளும் வளர்க்கப்பெற்றுள்ளன. விலைஞர் குடில்களின் முன் விலங்குகள் செறிந்து கிடந்தன என்று பட்டினப்பாலை (198) கூறுகிறது.

இதனால் நில அமைப்பிற்கு ஏற்றபடி அந்தந்த நிலங்களில் இருந்த விலங்குகள் அங்குள்ள மக்களால் வளர்க்கப்பெற்றுள்ளன.

தெரு

            பல இடங்களில் வீடுகள் முறைப்படி இல்லாமல் கூட்டங்கூட்டமாக இருந்துள்ளன.  இருப்பினும் சில சிற்றூர்களில் தெருக்கள் அமைத்துக் கட்டப்பட்ட வீடுகளும் இருந்துள்ளன. புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருவை        மறுகு தொறு புலாவும் சிறுகுடி என்று நற்றிணை (114) கூறுகிறது. மணல் மிகுந்த அகன்ற நீண்ட தெருவும் நெய்தல் நிலத்தில் இருந்துள்ளதை நற்றிணை (319) உணர்த்துகிறது. மலர்களின் மகரந்தத்தாதுக்கள் நிறைந்த தெருவை,

            …….. அம்குடி சீறூர்த்

            தாது எரு மறுகின் என்று நற்றிணை (343) உணர்த்துகிறது. இவ்வூரில் தெருக்களின் இருபுறமும் மலர்ச்செடிகள் இருந்திருக்கலாம். இதுபோன்ற தெருக்கள் சில ஊர்களில் இருந்துள்ளன. நகரங்களில் பெரிய தெருக்கள் இருந்துள்ளன.

ஊர்கள்

            சிற்றூர்கள் பல இருந்துள்ளன. இவைகளும் நில அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. அழகிய குடியிருப்புகளை உடைய சிற்றூரை அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு(367) குறிப்பிடுகிறது. பொதுமன்றங்களைக் கொண்ட அழகிய சிற்றூரை புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு (321) குறிக்கிறது. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய புலால்நாறும் ஊரை புலால்அம் சேரி புல்வேய் குரம்பை ஊர் என்று அகநானூறு (200) குறிக்கிறது. ஊகம்புல் போன்ற புற்களால் அங்குள்ள குடிசைகள் வேயப்பட்டிருக்கலாம். அங்குள்ளோர் வேட்டையாடி விலங்குகளைக் கொன்று, ஊரினருக்கும் இறைச்சியைப் பகுத்துத் தருவதால் அவ்வூரில் புலால் நாற்றம் இருந்திருக்கலாம். குனிந்து செல்லும்படியான தலை குவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட குடியிருப்புக்களை உடைய சிற்றூரை அகநானூறு (329) குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்று உணர்த்துகிறது.

            விலங்குகள் வீட்டிற்குள் புகாதவாறு சிறிய வாயில்கள் இருப்பதால் அவ்வூர் காட்டு வழியில் இருந்தமையும், விலங்குகளின் ஆபத்தும் உணர முடிகின்றது. மலைச்சாரலில் அமைந்த ஊரை சாரற் சிறுகுடி என்று நற்றிணையும் (168) பல மலர்களையுடைய மலைச்சாரலில் உள்ள ஊரை பல்மலர்ச் சாரற் சிறுகுடி என்று குறுந்தொகையும் (95) கூறுகின்றன. காவற்காடு சூழ்ந்த சிற்றூரைக் குழு மிளைச் சீறூர் என்று நற்றிணை (95) கூறுகிறது. போரினால் அழிந்த வேலிகளையுடைய, ஆளில்லாமல் பொது மன்றம் இருக்கும் குடியிருப்புகளையுடைய சிற்றுரை

            அழிந்த வேலி அம்குடிச் சீறூர்

            ஆள்இல் மன்றத்து என்று நற்றிணை (346) கூறுகிறது. அகன்ற வயல்கள் சூழ்ந்த கொல்லைகளை உடைய ஊரை அகல்வயற் படப்பை அவன்ஊர் என்று நற்றிணை (365) கூறுகிறது. நெற்கதிர்கள் நிறைந்த ஊரை பிணிக்கதிர் நெல்லின் செம்மல் மூதூர் என்று புறநானூறு (97) கூறுகிறது.  மேற்கண்ட இரண்டும் வளம் நிறைந்த ஊர்கள் என்பது புலனாகிறது.

            உப்புப்பாத்திகளுக்கு அருகே கடற்கரைச் சோலையால் சூழப்பெற்ற ஊரை,

            நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி

            வானம் வேண்டா உழவின் எம்

            கானல்அம் சிறுகுடி

என்று நற்றிணை (254) குறிக்கிறது. மணல்மேடுகள் நிறைந்த ஊரை எக்கர் நண்ணிய எம்ஊர் என்று குறுந்தொகை (53) கூறுகிறது. கடற்கரையில் உள்ள குடியிருப்பை காமர் சிறுகுடி என்று நற்றிணை (299) கூறுகிறது. மேற்கண்டவை நெய்தல் நிலச்சிற்றூர்கள் என்று அறியமுடிகிறது.  உப்புபாத்திகளுக்கு அருகில் வீடுகள் இருந்தன என்று அறிய முடிகிறது. பாலைநிலத்தில் இருந்த அழகிய சிற்றூரை அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் என்று குறுந்தொகை (79) கூறுகிறது. பரற்கற்கள் மிகவும் அமைந்த செல்லுதற்கு அரிய வழியில் உமணர்களின் குடியிருப்பு இருந்ததை நற்றிணை (374) கூறுகிறது. சங்கத்தமிழர்கள் தமக்குக் கிடைத்த பொருட்களைக்கொண்டே குடிசைகளை அமைத்தனர். மரங்களை வைத்து மரக்கால் கொண்டு அமைக்கப்பட்ட குடிசை, மரக்கோல்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கதவு முதலியவற்றையும் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க குடிசையின் வாயில்களை மிகவும் குறுகியதாகவும் அமைத்துள்ளார்கள்.

ஊகம்புல், தழைகள், கூவையிலை, ஈந்தின் இலை, வைக்கோல், வரகுத்தாள், தருப்பைப்புல், தென்னைமடல், தாழையின் தூறுகள், பனையோலை முதலியவற்றைக் கொண்டு சங்கத் தமிழர்கள் குடிசைகளை வேய்ந்துள்ளனர்.  இதில் ஈந்தின் இலையால் வேயப்படும் குடிசையில் எலி, அணில் முதலியன நுழைய முடியாதபடி இருந்துள்ளது. வீட்டில் பலவகையான பறவைகளையும் பசு, எருமை போன்ற விலங்குகளும் இருந்துள்ளன.  பலவகையான செடிகளும் மரங்களும் வீட்டைச்சுற்றி இருந்துள்ளன. 

            வீட்டின் சுவருக்கு செம்மண் பூசுதல், சுண்ணாம்பு பூசுதல் போன்றவை நடைபெற்றுள்ளன. வுpழாக் காலங்களில் முற்றத்தில் மணல் பரப்பப்பெற்றது.  வீட்டைக்காவல் காக்க காவலர்கள் இருந்தது போல், ஊரைக்காக்கவும் காவலர்கள் இருந்துள்ளனர்.  சங்கத் தமிழர் உறைந்த இடங்கள் பற்றி இவ்வாறு பல செய்திகளை அறிய முடிகிறது. ஐவகை நிலங்களும் தம்முள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டது போலவே ஐவகை நில மக்கள் வசித்த இடங்களும் மாறுபட்டவை என்று இதைப்போலவே ஊர்களும் குடியிருப்புகளும், வீடுகளும் அமைந்திருந்தன என்று அறிய முடிகிறது. சங்கத்தமிழர்கள் மேற்கண்டவாறு குடில்களை அமைத்தும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பயிரினங்களையும், உயிரினங்களையும் வளர்த்தும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர் என்பது எண்ணத்தக்கது.

முனைவர் அ. ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி,

காளிப்பட்டி, நாமக்கல்.

ஆசிரியரின் பிற ஆய்வுக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »