Saturday, April 4, 2026
Home Blog Page 41

கொப்புகொண்ட பெருமாள் கோவில் வரலாறு

கொப்புகொண்ட பெருமாள் கோவில் தலபுராண வரலாறு

சேலம் மாவட்டம்  பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா  சின்னமசமுத்திரம் கிராமத்தில், கல்வராயன் மலைத்தொடர் உள்ளது.  2,200 அடி உயரத்தில் உள்ள, இம்மலைகுன்றில் கால்நடை மற்றும் விவசாய நிலத்துக்கும், இலை, தழைகள் அறுப்பதற்குப்  பொதுமக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.  மலைகுன்றின் மேலேறி ஆண்கள் அவ்வவ்போது விளையாடி வருவதுமுண்டு. இம்மலையில் மூலிகை செடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அவற்றினைப் பயன்படுத்தியும் வந்துள்ளனர். தினமும் காலை நேரங்களில் ஆண்களோடு பெண்களும் சேர்ந்து ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு  மலை உச்சிக்குச் செல்வதுண்டு.  அங்கு ஆண்கள் மரங்கள் ஏறி காய்கனிகளைப் பறித்தும் காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டிருப்பர். அந்நேரத்தில் பெண்கள் நல்ல விளைச்சலுள்ள பகுதியில் ஆடு மாடுகளைக் கட்டிப்போட்டுவிட்டு தாயம், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் ஆடுவதுண்டு.

கோவில் உருவான வரலாறு (கொப்புகொண்ட பெருமாள் உருவான கதை)

புரட்டாசி வெள்ளிக்கிழமை ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்த பெண்களில் ஒருத்தியின் காதில் அணிந்திருந்த தோடு (தோடு என்பதற்கு கொப்பு என்று பொருள் உண்டு) திருகாணி கழன்று கீழே விழுந்துள்ளது. அது தெரியாமல் அவளும் தன்கணவனுடன் வீட்டுற்குச் சென்று விடுகிறாள். வீட்டை அடைந்ததும் மாமியார் மருமகளிடம் ஒருபக்க காதில் தோடு இல்லாமையைக் கண்டு திட்டியுள்ளார். மருமகளும் அழுதுகொண்டே கணவனிடம் சொல்ல, இருவரும் அடுத்தநாள் புரட்டாசி சனிக்கிழமை காலையில் மலை உச்சிக்குச் சென்றார்கள்.  பெண்கள்  ஆடுமாடுகள் மேய்த்த இடம், விளையாடிய இடம் என்று ஒன்றுவிடாமல் தேடிப்பார்த்தபோது, அப்பெண்கள் விளையாடியிருந்த இடத்தில் புற்று ஒன்று எழும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றார்கள். புற்று இருந்த இடத்தில்தான் தோடு விழுந்திருக்க கூடும் என்று நினைத்த அப்பெண் அப்புற்றினை இடித்துத் தோட்டினை எடுத்துக் கொடுக்கும்படி கணவனிடம் கூறுகிறாள். கணவனும் மனைவி சொன்னதைக் கேட்டுக் கடப்பாறையால் புற்றினை இடிக்க முயல்கிறான்.

கொப்புகொண்ட பெருமாள் திருக்கோவில், சின்னமசமுத்திரம், பெத்தநாயக்கன் பாளையம்.

அப்போது ஒரு அசரரீ ஒலித்ததாகவும், அதிலிருந்து, திருமால் குடிக்கொண்டிருப்பதாகவும் அப்பெண்ணின் தோட்டினை (கொப்பு) ஆதாரமாகக்  கொண்டு இவ்விடத்தில் உறைவதாகவும் ஒலித்துள்ளது. மேலும், கரடுமுரடான மலைப்பாதையினை மென்மையான கற்களைக் கொண்டு சரிசெய்து ஒரு நடைபாதையாகத் தானாகவே உருவானது என்றும் ஊரிலுள்ள வயதானவர்கள் இன்றளவும் சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு அவர்களுடைய முன்னோர்கள் வழிவழியாகச் சொல்லியதாகவும் கூறுகிறார்கள்.

பெண்ணிடமிருந்து கொப்பையைக் கொண்டதால் ”கொப்புகொண்ட பெருமாள்” என அழைக்கப்படுகின்றார். அதன்பிறகு கொப்புகொண்டபெருமாள் கோவில் கட்டப்பட்டு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் பச்சை பந்தல் அமைத்து, கொப்பு கொண்ட பெருமாளுக்கு திருவிழா எடுத்துப் பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். சின்னமசமுத்திரத்தில் இத்திருக்கோவில் அமைந்திருந்தாலும் அதற்கு அடுத்துள்ள காளிச்செட்டியூர் கொண்ட ஆட்களே பூசாரிகளாகவும் இக்கோவில் நிர்வாகப் பிரிவுகளையும் கவனித்து வருகின்றனர்.

கோவிலின் படிக்கட்டுகள்

ஆரம்பகாலத்தில் கோவில் மலைமேல் செல்வதற்கு சிவப்பு மஞ்சளால கற்கள் மற்றும்  கூலாங்கற்களால் ஆன நடைபாதையே இருந்தது. இப்பாதையானது வளைந்து வளைந்து மலையைச் சுற்றிச் செல்லும். அதன்பிறகு இக்கோவிலின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைமேல் சென்று வருகின்ற மாதிரி சாலை அமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார்கள். அதனால் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இம்மலையை குடைந்து குறுக்கும் நெடுக்குமாகச் சாலை போட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் பணத்தொகை அதிகம் ஆகும் என்பதாலும், ஒருபகுதிக்குமேல் சாலை அமைக்க முடியாத சூழ்நிலைகள் இருந்ததாலும் மலைமேல் போதியவசதி இல்லாமல் இருந்ததால் அந்த திட்டத்தைக் கைவிடப்பட்டது.

கொப்புகொண்ட பெருமாள் மலை – ஓர் அதிசயம்

ஆரம்பத்தில் மலைஉச்சியில் புற்று இருந்த இடமானது சிறிய கோவிலாக மட்டுமே இருந்தது. கோவில் பக்கத்தில் ஆங்காங்கு சின்னசின்ன கோவில்கள் (குடில்கள்) இருந்தன. கோவிலுக்கென்று என்றுமே வற்றிப்போகாத நல்ல தண்ணீர் கிணறும் இருந்தது. இக்கோவிலில் சந்தனக்கல் ஒன்றும் இருந்தது. தண்ணீர் கொஞ்சம் ஊற்றி கல்லோடு கல் உரச சந்தன திரவியம் உண்டாகும். பொதுமக்கள் அதனை அரைத்து அரைத்துப் பூசிக்கொள்வதும் உண்டு.  கீழிருந்து மேல் போகும் வழியெல்லாம் அரக்கு செடிகள் ஏரளமாய் உண்டு. பை நிறைய பறித்து வந்து காயவைத்துத் தலைக்குத் தேய்த்துக் கொள்ளவும் செய்கின்றனர். கோவிலுக்குச் சென்று வந்தால் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பொதுமக்கள் எண்ணினர். புத்திசுவாதினம் இல்லாதவர்கள், உடல் ஊனமுற்றோர்கள் போன்றோர்கள் மலைமீது ஏறி இறங்கிவிட்டால் ஏதோ அவர்களுக்குள் மாற்றம் நிகழ்ததாகக் கூறுவார்கள்.

முருகன் சன்னிதி

            பெருமாளைத் தரிசித்துவிட்டு கீழே இறங்கி வருகையில் மலையின் குறுக்குவாக்கிலுள்ள முருகன் சந்நிதி அமைந்துள்ளது. பொதுமக்கள் அங்கேயும் சென்று முருகபெருமானையும் வணங்கிவிட்டு வருவார்கள். மலை ஏறுபவர்கள் முருகன் சந்நிதி அடைந்துவிட்டால் அங்கு கொஞ்சநேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டுப் பிறகு செல்வார்கள்.

புரட்டாசி மாதம் திருவிழா

வருடாவருடம் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் கூட்டம் அலைமோதும். பெத்தநாயக்கன் பாளையம் சுற்றுவட்டார ஊர்களான கொத்தாம்பாடி, கல்பகனூர், செல்லியம்பாளையம், ராமநாயக்கன் பாளையம், ஆத்தூர், ஓலப்பாடி, ஒட்டப்பட்டி, ஆரியபாளையம், புத்திரகவுண்டன் பாளையம், ஏத்தாப்பூர், தும்பல், பனைமடல், பாப்பநாயக்கன் பட்டி, கருமந்துறை போன்ற இடங்களிலிருந்தும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பெரும்திரளாக வருகை தருகின்றனர். 

கொப்புகொண்ட பெருமாள் திருக்கோவில் – நுழைவாயில்

கோவில் அன்னதானம், பொதுமக்களின் அன்னதானம், ஆடு மாடுகளை காணிக்கை ஒருபுறம், பக்தர்கள்  மொட்டை அடித்தல், இரு சக்கர நான்கு சக்கர நிறுத்தங்கள், வழிநெடுக சிறுகுறு கடைகள், பெருங்கடைகள், ஐஸ் பெட்டிகள், பலவகையான ராட்டினங்கள், வாடகை வண்டிகள், இரவு நேரங்களில் கண்கவர் விளக்குகள், வானவேடிக்கைகள், மைக்செட் வர்ணனைகள் எனத் திருவிழாக்களாய் அமர்க்களப்படுத்தும்.

கும்பாபிஷேகம்

பெத்தநாயக்கன் பாளையம் சுற்றியுள்ள மக்களுக்கு ஒரு பெரிய மலைகோவிலாக இருக்கும் பழமை வாய்ந்த கொப்புகொண்ட பெருமாள் கோவிலை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றார்கள். மலைமேல் கொஞ்சம் விரிவுபடுத்தியும் கோபுரங்களைச் சீரமைத்தும் சரிசெய்தனர். மூன்று நிலை கொண்ட, 37 அடி உயர ராஜகோபுரம் கட்டிடமும் மற்றும் 11 அடி உயரத்தில், ஆஞ்சநேயர் சிலையும் புதிதாக கட்டப்பட்டது. கோவிலுக்குச் செல்லும் வழிப்பாதையில்  எப்போதும் உள்ள கல்லால் ஆன சாலையை நீக்கிவிட்டு கிரானைட் கற்கள் கொண்டு படிக்கட்டுகளாக அமைக்கப்பட்டுள்ளன.  நன்கொடையாளர்கள் மூலம், 1,893 கருங்கல் படிகள் அமைத்தனர்.

முடிவுரை

            புற்றுக்கு அடியில் ராமமிட்டபடி கொப்புகொண்ட பெருமாள் சுமாமி  காட்சியளிக்கிறார். துளசி மாலையும் தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கோவில் சார்பாகப் புரட்டாசி சனிக்கிழமைகளில் முழுவேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மலைமேலிருந்து பார்த்தால் வசிட்ட நதி ஓடும் அழகை ரசிக்கலாம். பெத்தநாயக்கன் பாளையம் சுற்று வட்டார கிராமங்களையும் நெல் வயல்களையும் தென்னை பாக்கு மரங்களின் ஒய்யார முழுஅழகையும் நுகரலாம். புரட்டாசி அல்லாத பிற சனிக்கிழமைகளிலும் இக்கோவிலில் வழிபாடு செய்யப்படுகிறன. மொட்டை அடித்தல், கோவிந்தா.. கோவிந்தா… பொறிக்கடலை, பீப்பீ ஊதி போன்றவைகள் தவிர்க்க முடியாதனவாக இருக்கின்றன. மொத்தத்தில்  அனைவரும் ஒருமுறையாவது சென்று வருவதற்கான அற்புதமான திருத்தலமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

சங்க இலக்கியத்தில் குடில்கள்

மனிதன் முதலில் உணவைத் தேடி அலைந்து உணவைப் பெறுகிறான்.  பின்னர் உடையை உடுத்துகிறான்.  நாடோடியாகத் திரிந்து, அலைந்த பின்னர் ஒரே இடத்தில் வாழத்தொடங்குகின்றான். மனிதன் முதலில் குகைகள் போன்றவற்றில் வசிக்க ஆரம்பித்து அவற்றின் தோற்றத்தைக் கொண்டு, அதைப்போலவே குடிசைகள் அமைக்க ஆரம்பிக்கிறான்.  இவ்வாறே முதலில் மனிதன் உறைகின்ற இடம் அமைகிறது.  பல்வேறு விதமான குடிசைகளை இருப்பிடங்களுக்கு ஏற்றவாறு அமைத்த மனிதன், அவற்றில், பல வேறுபாடுகளைச் செய்கிறான்.         

தோற்றம்

            குடிசைகள் புதர்போன்ற தோற்றத்தில் இருந்ததை புதல்போல் குரம்பை என்று அகநானூறு (315) கூறுகிறது.

மரங்களின் பயன்பாடு

சங்ககாலத்தில் அடர்ந்த காடுகள் இருந்தன.  சங்கத்தமிழர் காடுகளில் இருந்த மரங்களை (விறகிலிருந்து வீடு கட்டுவது வரை) அனைத்து நிலைகளிலும் அனைத்து வகைகளிலும் பயன்படுத்தினர். வேட்டை நாய்கள் குரைத்து விளையாடி வர வேட்டையில் வென்ற கானவன் மரக்காலில் சேர்த்துப்பிணித்த தன் குடிசையை நோக்கிச் சென்றான் என்று நற்றிணை (285) கூறுகிறது. இதனை,

            “மனைவாய் ஞமலி ஒருங்கு புடைஆட

            வேட்டு வலம் படுத்த உவகையன், காட்ட

            நடுகாற் குரம்பைத் தன் குடிவயிற் பெயரும்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

கழிகள்

            ஆடுகள் நின்று தின்பதற்காகத் தழைகள் கட்டின குறிய காலையுடைய குடில். அக்குடிலின் வாயில் பல கழிகள் சேர்த்து அமைக்கப்பட்ட கதவினைக் கொண்டதாக உள்ளது.  குடிலின் மேல் உள்ள கழிகளின் மீது வரகுக்கற்றை வேயப்பட்டிருக்கும், என்று கோவலரின் குடியிருப்பைப் பெரும்பாணாற்றுப்படை (147) உணர்த்துகின்றது. கழிகள் மிடைந்து புல்லால் வேயப்பட்ட குடிலை

            “……….. கழி மிடைந்து இயற்றிய

            புல்வேய் குரம்பை

என்ற அடிகளில் மலைபடுகடாம் (437) உணர்த்துகின்றது.

மூங்கில்

            மூங்கிலைக் கழிகளாப் பயன்படுத்தியதை வேழம்நிரைத்து என்று பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது.

ஒடு மரம்

ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக்கதவினையுடைய இல்லங்களின் முன்னர் வேட்டுவர் தீயைமூட்டி உடும்பை வாட்டுவர் என்று புறநானூறு (325) கூறுகிறது. இதனை,

            உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்

            சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. மரக்கோல்கள் கொண்ட கதவு படலை என்று அக்காலத்தில் அழைக்கப்பெற இக்காலத்தில் அது படல் என்று அழைக்கப்படுகிறது.  ஆடு, மாடுகளை அடைக்கும் குடிலின் கதவு கிராமங்களில் சில இடங்களில் மரக்கோல்களைக் கொண்டே இன்றும் அமைக்கப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது.

வெப்பம் மிக்க குடில்

            குடிலின் உள்ளே இருப்போர் வருந்துதலுக்குக் காரணமான வெப்பம் மிக்க குடிலைப்பற்றி, உறுவெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை என்று சிறுபாணாற்றுப்படை (174) குறிக்கிறது.

வறுமை மிக்க குடில்

            கூரையில் உள்ள கழிகள் வீழ்ந்து கிடக்க, சுவரில் கறையான் அரித்ததால் காளான் பூத்து விளங்க, அடுக்களையில் குட்டிகளை ஈன்ற நாய் பாலில்லாமல் வருந்தி குரைக்கும் வறுமை மிக்க குடிலை சிறுபாணாற்றுப்படை (132) கூறுகிறது.

மரக்கால் பந்தல்

            குடில்களுக்கு முன்னர் பந்தல் இருந்தது.  அப்பந்தல் மரக்கால்களால் அமைக்கப்பட்டிருந்தது.  குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடு துப்பிய விதைகள் பந்தலில் காணப்படும்.  அங்கு இடையன் தீயை மூட்டுவான் என்று புறநானூறு (324) கூறுகிறது.  இதனை,

            “குமிழ் உண்வெள்ளை பகுவாய் பெயர்த்த

            வெண்காழ் தாய வண்காற் பந்தர்

            இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்து

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

 பாசறை

            பாசறையும் மரக்கால்களைக் கொண்டு அமைக்கப்பட்டது.  கூவையிலையால் மூடப்பட்டது. இதனை, கூவை துற்ற நாற்கால் பந்தர் (புறம் 29) என்ற அடியால் உணரலாம். மேற்கண்ட செய்திகளிலிருந்து குடில்களில் மரங்கள் கதவாகவும், கழியாகவும் பயன்பட்டதை அறிய முடிகிறது.

சுவர்

            குடில்களுக்கு மண்ணால் ஆன சுவர் வைக்கப்பட்டிருந்தது. தரையை மெழுகுவது போல சுவற்றையும் மண்பூசி செய்யப்படுகிறது.

செம்மண் பூசுதல்

 தலைவியை  உடன்போக்கில் அழைத்துக்கொண்டு வரும் தலைவனின் தாய், அலங்கரிக்கப்பெற்ற புறச்சுவரில் செம்மண் பூசி, முற்றத்தில் மணலைப் பரப்பி, மாலைகளைத் தொங்கவிட்டு வீட்டினை அழகு செய்வாள் என்று அகநானூறு (195) கூறுகிறது.  இதனை,

            “………………. தாயே

            புனைமான் இஞ்சி பூவல் ஊட்டி

            மனைமணல் அடுத்து மாலை நாற்றி

என்ற அடிகள் உணர்த்துகின்றன. சுவரில் செம்மண் பூசியதால் சுவர் மண்சுவர் என்று அறியலாம்.  இக்காலத்தில் சுண்ணாம்பு பூசாத மண்சுவருக்கு பண்டிகை போன்ற நாட்களில் செம்மண் பூசும் வழக்கம் உள்ளது. செம்மண் பூசப்பட்ட இல்லத்தை செவ்வாய்ச் சிற்றில் என்று அகநானூறு (394) கூறுகிறது.

திருமணவிழாவின் போது எங்கும் மணல் பரப்பி, இல்லத்திற்குச் செம்மண் பூசி, பெண் எருமையின் கொம்பினை வைத்து வணங்குவர் என்று கலித்தொகை கூறுகிறது. இதனை,

            தருமணல் தாழப்பெய்து இல்பூவல் ஊட்டி

            எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும்

என்ற கலித்தொகை (114) அடிகள் உணர்த்துகின்றன. இல்லிற்குச் செம்மண் பூசுவர் என்பதன் மூலம் தரை, சுவர் போன்றவற்றிற்குச் செம்மண் பூசியிருப்பர் என்று உணரப் பெறுகின்றது.

சுண்ணாம்பு பூசுதல்

            குடிலின் இறப்பில் (தாழ்வாரத்தில்) சுண்ணாம்பு பூசியதை

            “……………. இறைமிசை

            மாரிச் சுதையின் ஈர்ம்புறத்து அன்ன

என்று அகநானூறு (346) கூறுகிறது. கலப்பையைச் சார்த்தி வைப்பதால் சுவர் தேய்ந்து காணப்பட்டது என்று பெரும்பாணாற்றுப்படை (188) கூறுகிறது.

குடில்களில் மண்சுவர் இருந்துள்ளது.  அதனைச் செம்மண், சுண்ணாம்பு பூசி அழகு செய்வர் என்று உணரப்பெறுகின்றது. சுவர் மண்சுவராக இருந்ததால் தேய்ந்து காணப்பெற்றது என்று அறியலாம்

குடிசையின் கூரைகள்

            பலவித புற்களையும் இலைகளையும் கொண்டு குடிசையின் கூரைகளை வேய்ந்துள்ளனர்.

புல்

புல்லால் வேயப்பட்ட சிறிய குடிசையினை புல்வேய் குரம்பை என்று அகநானூறும் (172), புறநானூறும் (120) உணர்த்துகின்றன. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊரில் புலால் நாற்றம் வீசியதை, புலால்அம் சேரி புல்வேய் குரம்பை என்று அகநானூறு (200) உணர்த்துகிறது. புல்லிய இலைகளால் வேயப்பட்ட குடிசைகளை உடைய ஊரை, புல்இலை வைப்பின் புலம் என்று பதிற்றுப்பத்து (15) கூறுகிறது.

            “ஊகம்புல்லால் வேயப்பட்ட சுவருடைய குடிசையை

            ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப்பின்

            என்று பெரும்பாணாற்றுப்படை (122) கூறுகிறது. இதைப்போலவே குன்றக் குறவன் புல்வேய் குரம்பை என்று ஐங்குறுநூறு (252) கூறுகிறது.  இது ஊகம்புல் என்று உரையாசிரியர் கருதுகிறார். எனவே, புல்லால் வேயப்பட்ட குடிசை என்றால் அது ஊகம்புல்லாக இருக்கவும் வாய்ப்புண்டு.

தருப்பைப் புல்

            மூங்கிலைக் கழிகளாக வைத்து, இடையில் மரக்கொம்புகளை வைத்து தாழை நாரால் கட்டி, தருப்பைப் புல்லால் வேய்ந்த வலைஞரின் குடிலை பெரும்பாணாற்றுப்படை (263) கூறுகிறது. மீனவர்களின் குடியிருப்பாதலால் அங்கு கிடைக்கும் தாழை மர நார் கட்டுவதற்கும், தருப்பைப்புல் (நாணற்புல்) வேய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது என்று அறியலாம்.

தாழை

            “தாழையால் வேயப்பட்ட குடிசையை

            தடந்தாட் தாழைக் குரம்பை

என்ற நற்றிணை (270) உணர்த்துகிறது.

முள்ளிச் செடி

            முள்ளிச் செடிகளால் வேய்ந்த குறுகிய வாசலையுடைய குடிசையை

            “முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை

என்று நற்றிணை (207) கூறுகிறது. நெய்தல் நில மக்கள் தருப்பை, தாழை, முள்ளி போன்றவற்றைக் குடிசையில் வேய்ந்தனர் என்ற கருத்து பெறப்படுகின்றது.

 ஈந்தின் இலை

            கொழுவிய மடலையும், வேல்போலும் நுனியையும் பொருந்திய ஈந்தின் இலையால் வேயப்பட்ட, முள்ளம்பன்றியின் முதுகு போன்ற புறத்தினை உடைய குடிசை, இதன்மேல் எலி, அணில் முதலியன திரியாமல் இருக்கும் என்று பெரும்பாணாற்றுப்படை (86) கூறுகிறது. இதனை,

            “……………….. கொழுமடல்

            வேற்றிலை அன்ன வைந்நுதி நெடுந்தகர்

            ஈத்துஇலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை

என்ற அடிகள் உணர்த்துகின்றன.  முள்ளம்பன்றியின் முதுகில் கூர்மையான முட்கள் குத்திட்டு நிற்பது போல குடிசையில் ஈந்தின் இலைகள் குத்திட்டு நின்றன.  இவ்வாறு இதை வேய்வது கடினம். எலி, அணில் போன்றவற்றால் வரும் தொந்தரவுகளைத் தடுக்க, தமக்குக் கிடைத்த பொருட்களைக் கொண்டே இயற்கையான முறையில், பாதுகாப்பு அரண்போன்று அமைத்துள்ளனர்.

வரகுத்தாள்

            வரகின் வைக்கோலால் வேயப்பெற்ற குடிசையை பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது. இதனை, கருவை வேய்ந்த கவின் குடிச் சீறூர் (191) என்ற அடி உணர்த்துகிறது. கழிகளுக்கு மேல் வரகுக்கற்றை வேயப்பட்டதை

            “செறிகழிக் கதவின்

            கற்றை வேய்ந்த (149)”

என்றும் பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.  இவை இரண்டுமே கோவலர்களின் குடிசைகள் என்பது குறிக்கத்தக்கது. முல்லை நிலத்தில் விளைந்த வரகு உணவாகவும், வரகுத்தாள் வேய்வதற்கும் பயன்பட்டது என்று அறியலாம்.

நெற்தாள்

            உழவர்களின் குடிசைகளில் வைக்கோல் வேயப்பட்டிருந்தது. இதனைப் பெரும்பாணாற்றுப்படை(225) கூறுகிறது. புதுவை வேய்ந்த கவிகுடில் என்ற அடி இதனை உணர்த்துகிறது.  உழவர்களாதலால் அங்கு நெல்லடித்த பின்னர் எஞ்சியுள்ள நெற்தாள் வீடு வேயப்பயன்பட்டது. இன்றும் பல இடங்களில் இதனை வீடு வேய்வதற்குப் பயன்படுத்துகின்றனர்.

நெற்கதிர்

நெற்கதிர்களைக் கூரையாக வேய்ந்து, கழிகளாகக் கரும்பைப் பயன்படுத்திய குடிலை

“செந்நெற் கதிர் வேய்ந்த

ஆய் கரும்பின் கொடிக்கூரை

என்ற அடிகளில் புறநானூறு (22) உணர்த்துகிறது.  மருத நில வளத்தை இவ்வாறு கூறியிருக்கலாம்.

பனை ஓலை

            சமையற் கூடத்தின் கூரை பனை ஓலையால் வேயப்பட்டிருந்தது என்று நற்றிணை (300) கூறுகிறது. இதனை,

            அட்டில் ஓலை தொட்டனை

என்ற அடி உணர்த்துகிறது. இன்றும் பனையோலைகளால் குடில்கள் வேயப்படுகின்றன.

தென்னை மடல்

            தென்னந்தோப்புகள் தோறும் தனித்தனியாக இருந்த உழவரின் வீடுகளைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.  இங்கு முற்றத்தில் மஞ்சள் இருக்கும்.  வீட்டைச் சுற்றிப் பூந்தோட்டங்கள் இருக்கும் தென்னையின் வாடிய மடலால் இதன்கூரை வேயப்பட்டிருக்கும். இதனை,

            “வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

            மஞ்சள் முன்றில் மணம்நாறு படப்பை

            தண்டலை உழவர் தனிமனை

என்ற அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (353) உணர்த்துகிறது. மருதநிலத்தில், தென்னை முதலியன நன்கு வளர்கின்றன. தோப்புகளுக்கு இடையில் உள்ள குடிசை. அதனால் நிறைய இடம் அங்கு இருக்க அவ்விடத்தில் பூந்தோட்டங்கள் இருந்தன என்று அறியலாம். வாடிய தென்னை மடல் வேயப்பயன்பட்டது என்பதை அறியலாம். இன்று தென்னை மடலைக் கீற்றுக்களாகப் பின்னி, கழிகளின் மேல் அதனைக் கட்டி, அதன்மேல் நெற்தாள் போன்றவற்றை வேய்கின்றனர். இன்றும் பல இடங்களில் வயல்களுக்கு நடுவில் குடிசை வீடுகள் உள்ளன.  வீடுகளைச் சுற்றித் தோட்டங்களும், மரங்களும் வளர்க்கப்படுகின்றன.

குறுகிய கூரை

            குறுகிய கூரையையுடை குடிசையையும், அதன் அருகில் மிளகுக்கொடி படர்ந்த தோட்டத்தையும் அகநானூறு (272)

            “…………. கறிஇவர் படப்பைக்

            குறிஇறைக் குரம்பை

என்ற அடிகளில் உணர்த்துகின்றது. வரகுத்தாள், நெற்தாள், ஈந்தின் இலை, ஊகம்புல், தாழைமடல் போன்றவை கிடைப்பதற்கேற்ப அவை குடிசைகளின் மேற்கூரையாகப் பயன்படுத்தப்பெற்றன என்று உணர முடிகிறது.

பரண்

            கானவர்கள் தம் தினைப்புனத்தில் காவலுக்கு இருப்பதற்காக மரங்களின் மீது பரண் அமைப்பர்.  இப்பரணுக்கு மேற்கூரை இருந்ததை நற்றிணை (306) உணர்த்துகிறது. இப்பரணின் மேற்கூரையில் புலித்தோல் வேய்ந்து இருந்ததையும் நற்றிணை (351) உணர்த்துகிறது.

வாயில்கள்

            குடிசைகளின் வாயில்கள் பெரும்பாலும் மிகவும் குறுகியதாகவே இருந்துள்ளன.  காட்டு விலங்குகள் குடிசைகளுக்குள் புகாமல் இருக்கவே இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கலாம் என்று அறியலாம். குனிந்து செல்லும்படியான தலைகுவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட பாலைநில ஊரைப் பற்றி அகநானூறு (329) குறிக்கிறது. இதனை, குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்ற அடி உணர்த்துகின்றது. முள்ளிச்செடிகளால் வேய்ந்த குறுகிய வாயிலையுடைய குடிசையை முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பை என்று நற்றிணை (207) உணர்த்துகிறது.குறுகிய வாயிலைக் கொண்ட மீனவர்களின் வீடுகளை குறுங்கூரைக் குடி என்று பட்டினப்பாலை (81) கூறுகிறது. குடில்களின் வாயில்கள் பெரும்பாலும் சிறியதாகவே இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. குறுகிய இறப்பிணையுடைய குடிசைகளை குறிஇறைக் குரம்பை என்று அகநானூறும் (210) புறநானூறும் (129) கூறுகின்றன.  இறப்பினை, இறவானம் என்று இக்காலத்தில் கூறுகின்றனர்.  இறப்பு மிகவும் குறுகியது என்பதால் வாயிலும் மிகவும் குறுகியது என்று உணரலாம்.

முற்றம்

            வீட்டின் முன்புறம் முற்றம் என்றும் முன்றில் என்றும் கூறப்பட்டது. முள்வேலிக்கு அருகில் பீர்க்கும், சுரையும் படர்ந்த வீட்டின் முற்றத்தை

            “……….. முள்மிடை வேலி

            பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்

            பீரை நாறிய சுரை இவர் மருங்கின்

என்று புறநானூறு (116) உணர்த்துகிறது.

நண்டுகள் விளையாடல்

            பரதவர்களின் வீட்டு முற்றத்தில் மணல் பரப்பப்பட்டிருக்கும். புலால் நாற்றம் வீசும். நண்டுகள் விளையாடும் என்று நற்றிணை (239) உணர்த்துகிறது.

பனைமரம்

            பனையின் கரிய அடிமரம் மறையுமாறு மணல் மிகுந்த முற்றத்தை

            “……………….. பெண்ணை

            மாஅரை  புதைத்த மணல்மலி முன்றில்”

என்று நற்றிணை (135) உணர்த்துகிறது.

புன்னை, தாழை மரங்கள்

            முன்றிலில் புன்னை மரமும், தாழை மரமும் இருந்தன அவற்றின் மணம் எங்கும் பரவின என்று நற்றிணை (49) கூறுகிறது. 

பலா

            குறிஞ்சி நிலத்தில்  முற்றத்தில் கிளைகள்தோறும் பழங்கள் தொங்குகின்ற பலாமரங்கள் இருந்தன என்பதை

            “சினைதொறும் தூங்கும் பயம்கெழு பலவின்

            சுளையுடை முன்றில்

என்ற அடிகளில் நற்றிணை (77) உணர்த்துகிறது. முன்றிலில் இருந்த பலாச்சுளைகளைத் தின்ற மந்தி, விதைகளைத் தரையில் பரப்ப, கொடிச்சி தன் தந்தையின் மலையைப் பாடிக்கொண்டே ஐவன வெண்ணெல்லைக் குற்றுவாள் என்பதை நற்றிணை (373) உணர்த்துகின்றது. மரை மான்கள் நெல்லிக்காயைத் தின்று முற்றத்தில் பரப்பும் என்று புறநானூறும் (170) மான்கள் நெல்லிக்காயை உண்ணும் முற்றத்தை குறுந்தொகையும் (235) கூறுகின்றன.

விளாமரம்

எயினரின் குடிசை முற்றத்தில் விளாமரமும் அங்கே மான்களும் கட்டப்பட்டிருந்தன என்று பெரும்பாணாற்றுப்படை (95) கூறுகிறது. இதனை,

            “பார்வை யாத்த பறைதாள் விளவின்

            நீழல் முன்றில் நில உரல் பெய்து

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

குரவைக்கூத்து

            முன்றிலில் இருந்த வேங்கை மரத்தின் அடியில் மக்கள் குரவைக் கூத்தாடுவர் என்பதை, வேங்கை முன்றில் குரவையும் கண்டே என்ற அடியில் நற்றிணை (276) உணர்த்துகிறது.

குறிபார்த்தல்

            மணல் பரப்பப்பட்ட முற்றத்தில் வேலனை அழைத்து கழங்கிட்டுக்குறி பார்ப்பர் என்பதனை

            “பெய்ம்மணல் முற்றம் கடிகொண்டு

            மெய்ம்மலி கழங்கின் வேலற் தந்தே

என்ற அடிகளில் நற்றிணை (268) உணர்த்துகிறது.

விளையாடுதல்

            குறவர்கள் முன்றிலில் விளையாடுவர் என்பதை நற்றிணை (44)  குறவர் அல்கு அயர் முன்றில் என்ற அடியில் உணர்த்துகிறது.

 கழங்காடுதல்

            கூரையுடைய நல்ல வீட்டின் முற்றத்தில் வளையணிந்த மகளிர் மணற்பரப்பில் கழங்கு விளையாடுவர். இதனை,

            “கூரை நல்மனைக் குறுந்தொடி மகளிர்

            மணல்ஆடு கழங்கின்

என்று நற்றிணை (79) உணர்த்துகிறது.

பறிகள்

            வலைஞரின் குடிசைக்கு முன்னால் மீனை வாரி எடுக்கும் பறிகள் இருந்ததை, பெரும்பாணாற்றுப்படை (265) பறியுடை முன்றில் என்று உணர்த்துகிறது.

கன்றுகள்

            வீட்டின் முற்றங்களில் பசுக்கன்றுகளை கட்டுவர், நெல் குற்றுவர் குரவைக் கூத்தாடுவர் என்பதால் முற்றம் பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும் எனக் கருத முடிகிறது.

மான்கள்

            வேட்டுவரின் குடிசை முன்னால் மான்கள் கட்டப்பட்டதைப் புறநானூறும் (320) கூறுகிறது.

உரல்

முற்றத்தில் உரல் இருந்துள்ளது. உரல் குடிலில் இருந்தால் உயர்த்திக் குற்றும்போது கூரையில் படும் என்பதற்காக வீட்டின் முன்னால் உரல்களை வைக்கும் பழக்கம் இன்றும் கிராமங்களில் உள்ளது.

தூய்மையற்ற முற்றம்

            செத்தைகள் மிகுந்து, தூய்மை செய்யப்பெறாத முற்றத்தை, காட்டொடு மிடைந்த சீயா முன்றில் என்று புறநானூறு (316) கூறுகிறது.

முற்றத்தை மெழுகுதல்

            மனைவி தன் கணவன் விண்ணுலகு அடைந்தபின் அவனுக்கு உணவிட விரும்பி, தன் கண்ணீரும், பசுஞ்சாணமும் கொண்டு முற்றத்தில் முறம் அளவு மெழுகுவதைப் புறநானூறு (249) கூறுகிறது. தெய்வத்திற்கு அயரும் குரவைக்கூத்து முதல், இறந்த கணவனுக்கு உணவு படைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வரை முற்றம் இன்றியமையாத பங்கு வகிக்கும் இடமாக இருந்தது என்று உணரப்பெறுகின்றது.

பந்தல்

            குடிசைகளுக்கு முன்னால் பந்தல் இருந்தது. பந்தலில் பொருட்களைத் தொங்க விடுவர், விருந்தினரைப் பேணுவர்.  சில கொடி வகைகளை வளர்த்து அவற்றைப் பந்தலாக்குவர்.  வளைந்த கால்களையுடைய பந்தலை அகநானூறு (394) கூறுகிறது. இதனை, முடக்கால் பந்தர் என்ற தொடர் உணர்த்துகிறது. குழந்தை பாலை உண்ணாமல் முற்றத்தில் உள்ள பந்தலுக்கு ஓடியதை நற்றிணை (110) கூறுகிறது. விருந்தினர் வந்து கொண்டே இருப்பதால் வீட்டில் ஏற்படும் நெருக்கத்தைக் குறைப்பதற்காகவும், ஒய்விற்காகவும் வீட்டின் முன்னர் பந்தலை அமைத்திருக்கலாம்.

கன்றுகளைப் பிணித்தல்

            சிறிய கால்களைக் கொண்ட பந்தலில், செழுமையான கன்றுகளைப் பிணித்துள்ளதைப் பெரும்பாணாற்றுப்படை (297) கூறுகிறது. இதனை செழுங்கன்று யாத்த சிறுதாட் பந்தர் என்ற அடி உணர்த்துகிறது.

பசுங்காய்கள்

            புன்னையின் கொம்பால் அமைக்கப்பட்ட பந்தலில் பசுங்காய்கள் தொங்குவதை

            “கொடுங்காற் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய

            பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்

என்று அடிகளில் பெரும்பாணாற்றுப்படை (266) உணர்த்துகிறது. பசுங்காய்கள் தொங்கும் என்பதால் கொடி வகைகளைப் பந்தலில் படர விட்டுள்ளனர் என்றும், அவை காய்த்துத் தொங்கின என்றும் அறியலாம்.

இசைக்கருவிகள்

            துடி என்னும் இசைக்கருவிகள் தொங்குகின்ற திரண்ட காலையுடைய பந்தலை

            கடுந்துடி தூங்கும் கணைக்காற் பந்தர்

என்று பெரும்பாணாற்றுப்படை (124) கூறுகிறது.

முஞ்ஞைக் கொடி, முசுண்டைக் கொடி

            வீட்டின் முற்றத்தில் முஞ்ஞைக் கொடியும், முசுண்டைக் கொடியும் வளர்ந்து, புதிதாகப் பந்தல் அமைக்க வேண்டாமல் அக்கொடிகளே பந்தல் போலக் காட்சியளிக்கும். பலரும் உறங்குவதற்கு அந்நிழல் பயன்படும் என்று புறநானூறு கூறுகிறது. (320) இதனை,

            “முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி

            பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. பலரும் உறங்குவர் என்பதால் பெரிய பந்தல் போல் முஞ்ஞையும், முசுண்டையும் படர்ந்திருந்தது என்று அறியலாம்.  இக்காலத்தில் முல்லை மல்லிகை போன்ற கொடிவகைகளை வீட்டிற்கு முன்னரும் பின்னரும் பந்தல் போல் படர விடுகின்றனர்.  கன்றுகளைப் பிணித்தல், விருந்தினரைப் பேணுதல், கொடி வகைகளைப் படர விடுதல் போன்ற பலவற்றிற்கும் முற்றத்தில் அமைந்திருந்த பந்தல் பயன்பட்டது என்பதை அறிய முடிகிறது.

 வேலி

            வீட்டைச் சுற்றிப் பலவகையான வேலிகளை அமைத்துள்ளனர்.  வீட்டைச் சுற்றி இருந்த முள்வேலியை எருமை தன் கொம்பினால் அகற்றியது. இதனை,

            கூர்முள் வேலி கோட்டின் நீக்கி

என்ற அடியில் அகநானூறு (46) உணர்த்துகிறது.

பீர்க்கங் கொடி

            வீட்டைச் சுற்றி கூர்மையான முள்வேலி இருந்ததையும், அதன்மேல் பீர்க்கங் கொடிகளைப் படர விட்டிருந்ததையும் நற்றிணை (277) கூறுகிறது. இதனை,

            “நுண் உள் வேலித் தாதொடு பொதுளிய

            தாறு படு பீரம்

என்ற அடிகள் உணர்த்துகின்றன. பீர்க்கங்கொடி படர்ந்த வேலியைப் பீர் இவர் வேலி என்று பதிற்றுப்பத்து (26) கூறுகிறது. வேலியில் மற்றச் செடிகளைவிட பீர்க்கங் கொடிகளையே அதிகம் படர விட்டிருந்தனர் என்ற கருத்து பெறப்படுகிறது.

முள் வேலி

முள்வேலியிட்ட, தொழுக்கள் நிறைந்த குடியிருப்புகளை

            “………. முள் உடுத்து

            எழுகாடு ஓங்கிய தொழுவுடை வரைப்பில்

என்று பெரும்பாணாற்றுப்படை (184) கூறுகிறது.

கழல் முள் வேலி

            கழல் முள்ளால் ஆன வேலியை கழல் முள் வேலி

என்று புறுநானூறு (306) கூறுகிறது. கழல்முள் போன்றவற்றாலும் வேலியை அமைப்பர் என்று அறியலாம்.

மூங்கில் முள்

            மூங்கில் முள்ளால் அமைந்த வேலியையுடைய குடியிருப்புகளை வேரல் வேலி என்று நற்றிணையும் (232) குறுந்தொகையும்(18) கூறுகின்றன.  இயற்கையாக இதுபோல் அமையும் வேலியை வாழ்வேலி என்றும், செயற்கையாக அமையும் வேலியை இடுமுள்வேலி என்றும் அழைத்துள்ளனர். வாழ்வேலியைப்பற்றி பெரும்பாணாற்றுப்படையும் வாழ்முள் வேலி (126) என்று குறிக்கிறது.

தாழை மரவேலி

தாழை மரங்களும் வேலியாக அமைந்திருந்தன. தாழை மரங்கள் வேலியாக இருந்ததை

நற்றிணை (363, 372) உணர்த்துகிறது.  குறிஞ்சி நிலத்தில் மூங்கில் வேலியாக இருந்தது போன்று நெய்தல் நிலத்தில் தாழை இருந்தது என்று அறியமுடிகிறது.

பனையோலை வேலி

            பனை மரங்களிலிருந்து விழும் பனையோலைகளைக் கொண்டு வேலி அமைத்த, மணல் பரந்த நெய்தல் நில முற்றத்தை நற்றிணை (354) உணர்த்துகிறது. குடிசையின் கூரை மட்டுமல்ல, வேலியும் பனையோலையால் அமைவதும் உண்டு என்று அறியலாம். பனை ஓலையோடு முட்கள் சேர்த்துக் கட்டப்பெற்ற வேலியையும் நற்றிணை (38) உணர்த்துகிறது. 

நொச்சி வேலி

            மனைக்கு வேலியாக நொச்சி மரம் இருந்ததையும், அதன் கிளையில் குயில் கூவும் என்பதையும் நற்றிணை (246) கூறுகிறது. இதனை,

            “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

            வினை மாண் இருங்குயில் பயிற்றலும் பயிற்றும்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

முல்லை வேலி

            வேலியைச்சுற்றி முல்லைக்கொடி படர்ந்திருந்ததை வேலி சுற்றிய வால்வீ முல்லை என்று அகநானூறு (314) கூறுகிறது. பீர்க்கங்கொடி வேலிகளின் மீது படர்ந்திருந்தது போல் முல்லைக் கொடியும் படர்ந்திருக்கலாம் என்று உணரமுடிகின்றது.

காந்தள் வேலி

குறிஞ்சி நிலத்தில் காந்தள் செடியும் இயற்கை வேலியாக இருந்துள்ளது.  இதனை, காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி என்று குறுந்தொகை (100) உணர்த்துகிறது.

பருத்திச்செடி

            பருத்திச்செடியும் வேலியாக இருந்துள்ளது. பருத்திச்செடி வேலியாக இருந்த ஊரை, பருத்தி வேலிச் சீறூர் என்று புறநானூறு (299,345) கூறுகிறது.

            எனவே, முள்வேலி, பனையோலை வேலி, மூங்கில்முள் வேலி, தாழை மர வேலி, நொச்சி மர வேலி, முல்லைக்கொடி வேலி, கழற்கொடிவேலி போன்ற பலவகை வேலிகள் இருந்துள்ளன என்று அறியப் பெறுகின்றது.  நில  அமைப்பிற்கு ஏற்றாற்போல் இவ்வேலிகள் இருந்தன.  விலங்குகளின் ஆபத்தில் இருந்து தவிர்க்கவே இவ்வாறு வேலியை அமைத்திருப்பர் என்ற கருத்து பெறப்படுகின்றது.

செடிகளும், மரங்களும்

            ஒவ்வொரு நிலத்திலும் அந்தந்த நிலத்திலுள்ள சிறப்பான செடிகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றன. இல்லத்தில் வயலைக்கொடி வளர்த்ததை இல் எழு வயலை என்று நற்றிணை (179) குறிக்கிறது.

குறிஞ்சி

ஓவியம் போன்ற இல்லத்தின் அருகில் குறிஞ்சிச் செடிகள் இருந்ததையும் அதன் மலர்களில் தேன் இருந்ததையும் நற்றிணை (268) உணர்த்துகிறது.

வயலை, நொச்சி

            வீட்டின் முன்னர் வயலைக்கொடியும், நொச்சி மரமும் இருந்ததை,

            “…………… வயலையும்

            மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்

என்ற அடியில் நற்றிணை (305) உணர்த்துகிறது.

பனை

            பனை மரங்கள் ஊரைச்சுற்றி இருந்தன என்று நற்றிணையும் (323), குறுந்தொகையும் (81) கூறுகின்றன.

மூங்கில்

            மூங்கில் மரங்கள் வளர்ந்த இடத்தில் இருந்த மலைக்குவடுகளுக்கு அருகில் இருந்த ஊரை மூங்கில் குவட்டிடையதுவே என்று குறுந்தொகை (179) கூறுகிறது.

தென்னை     

            மணம் கமழும் பூந்தோட்டங்கள் சூழுமாறு, தென்னை மரத்தோப்புகளுக்கு இடையில் உழவர்களின் வீடுகள் இருந்ததைப் பெரும்பாணாற்றுப்படை (353) கூறுகிறது.  இதனை,

            “வன்தோட்டுத் தெங்கின் வாடுமடல் வேய்ந்த

            மஞ்சள் முன்றில், மணம் நாறு படப்பை

            தண்டலை உழவர் தனிமனைச் சேப்பின்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

பூந்தோட்டங்கள்

            பூந்தோட்டங்களுக்கு அருகில் பாணர்களின் குடியிருப்பு இருந்ததை,

            “பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி

            அழுந்து பட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்

என்று மதுரைக்காஞ்சி (341) உணர்த்துகிறது. எனவே, வீட்டைச்சுற்றி அல்லது வீட்டின் அருகில் புன்னை, தாழை, விளா, பலா, வேங்கை, மூங்கில், பனை, ஆலமரம், நொச்சி முதலிய மரங்களும், குறிஞ்சி, முல்லை, காந்தள், பீர்க்கு, சுரை, வயலை, கழற்கொடி, முஞ்ஞை, முசுண்டை, பருத்தி முதலிய செடி கொடி வகைகளும் இருந்தன என்று அறிய முடிகின்றது. பலா, வேங்கை, முஞ்ஞை, முசுண்டை, கழற்கொடி முதலியவை முன்னரே வீடுகளின் அருகில் இருந்தமை உணர்த்தப் பெற்றது.

பறவைகள்

            வீடுகளில் சில வகையான பறவைகள் வளர்க்கப்பெற்றன.  அவை குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலியன.

குருவி

            குருவிகள் முற்றத்தில் உலர்த்திய புழுக்கலை உண்டு பொது இடத்தில் உள்ள நுண்ணிய புழுதியில் குடைந்து விளையாடி, தன் குஞ்சுகளோடு வீட்டின் இறைப்பில் தங்கியிருக்கும் என்று குறுந்தொகை (46) கூறுகிறது.  முற்றத்தில் நெல் போன்ற தானிய வகைகளை உலர வைத்திருக்கலாம் என்றும் அதைக் குருவிகள் உண்டிருக்கலாம் என்றும் அறியமுடிகிறது. வீட்டின் இறப்பில் குருவி இருந்ததை உள் இறைக் குரீஇ என்றும் (181) உள் ஊர்க் குரீஇ என்றும் (231) நற்றிணை உணர்த்துகிறது. இதனை மனை உறைக் குரீஇ என்று புறநானூறும் (318) உணர்த்துகிறது.

கோழி

            வீட்டில் கோழிகள் வளர்க்கப்பெற்றுள்ளன. இல்லத்தில் உறையும் கோழியின் பெடை, வேலிக்கு அப்பால் இருந்த காட்டுப் பூனையின் கூட்டம் மாலைக்காலத்தில் இல்லிற்கு வந்ததால், பாதுகாப்பாகப் புகுவதற்கு உரிய இடத்தை அறியாமல் துன்பத்துடன் தன் குஞ்சுகளை அழைத்துக் கூவிற்று என்று குறுந்தொகை (139) கூறுகிறது.

புறா

            புறாக்களும் வளர்க்கப்பெற்றுள்ளன. பாணன் விருந்தினராக மாலை நேரத்தில் வந்ததால் குடிலின் முன்னர் தினையைத் தூவி புறாக்களைப் பிடிப்பதற்கு முடியவில்லை என பாலை நிலத் தலைவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.

இதல்

            இப்பறவை கௌதாரி என்றழைக்கப்படுகிறது. பாணன் மாலைப்பொழுதில் வந்ததால் தினையைத் தூவி இதனைப் பிடிக்க முடியாமல் போனது.  இருப்பினும் முயலின் சுட்ட கறித்துண்டுகளைத் தருவோம் என்று பாலை நிலத் தலைவன் ஒருவனின் மனைவி கூறுவதாகப் புறநானூறு (319) கூறுகிறது.

இதனை

            “படலை முன்றில் சிறுதினை உணங்கல்

            புறவும் இதலும் அறவும் உண்கெனப்

            பெய்தற்கு எல்லின்று பொழுதே

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

கிளி

            இது அந்தணர்களின் வீடுகளில் வளர்க்கப்பெற்றது. கிளிகளுக்கு வேதத்தின் ஓசையைக் கற்பிக்கும் அந்தணர் வீடுகளைப் பெரும்பாணாற்றுப்படை (300) கூறுகிறது.  இதனை,

            வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்

            மறைகாப் பாளர் உறைபதி

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

            குருவி, கோழி, புறா, இதல், கிளி முதலிய பறவைகள் வீடுகளில் வளர்க்கப்பெற்றுள்ளன.  கோழி, புறா, இதல் முதலிய பறவைகள் உணவிற்கும் பயன்பட்டன.  குருவி, கிளி முதலியவை பொழுது போக்கிற்காக வளர்க்கப் பெற்றுள்ளன.  புறா, இதல் முதலியவை விருந்தினர் வந்தால் உடனடியாக உணவிற்குப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.  இவற்றை உணவிற்குப் பயன்படுத்த முடியாத நிலையில் முயல் போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர்.

 விலங்குகள்

            குடில்களில் பறவைகள் மட்டுமன்றி விலங்குகளும் பயன்கருதி வளர்க்கப்பெற்றுள்ளன.  பசு, எருமை, மரையா, மான், நாய், பன்றி முதலிய விலங்குகள் வளர்க்கப்பட்டதை அறிய முடிகிறது.

பசு

            இது  ஆயர்களின் வீடுகளில் பெருமளவில் வளர்க்கப்பட்டது.  ஆயர்கள் இதன் மூலம் வளமை அடைந்தனர்.  காலையில் பசுக்களை மேய்ப்பதற்காக ஓட்டிச்செல்வர். பசுவின் கன்றுகளை வீட்டில் கட்டி வைப்பர்.  தாயில்லாமல் வருந்தும் கன்றுகளிடம்,

            கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

            இன்னே வருகுவர் தாயர்

என்று ஆயர் மகள் கூறுவதாக முல்லைப்பாட்டு (15) கூறுகிறது. பசுக்களை மேய்ப்பதற்கு ஆயர்கள் ஓட்டிச் சென்றதை கலித்தொகை (106) கூறுகிறது. ஆயர்கள் ஏறு தழுவும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை முல்லைக்கலிப் பாடல்கள் உணர்த்துகின்றன.

            பசுக்களின் மூலம் ஆயர்கள் பால், வெண்ணெய், தயிர், மோர், நெய் முதலியவற்றை விற்று தங்கள் வாழ்க்கையை வளமாக்கினர்.

எருமை

            சிறுவர்கள் எருமைகளின் இனிய பாலை கறந்து கொள்வதற்காக எருமைக் கன்றுகளைத் தொழுவத்தில் விட்டு வைப்பர்.  எருமைகளின் மேலேறிக் கொண்டு விடியற்காலத்தில் அவற்றை மேய்த்து வைப்பர் என்று நற்றிணை (80) கூறுகிறது. நெய் விற்று வாழ்க்கை நடத்தும் ஆயர்மகள் பசும்பொன்னை விரும்பி வாங்காது எருமைகளையும், பசுக்களையுமே விலைக்கு வாங்குவாள் என்று பெரும்பாணாற்றுப்படை கூறுவதால் பொன்னைவிட எருமை, பசுக்களைப் போற்றினர் என்று அறிய முடிகிறது. இதனை,

            நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள்

            எருமை நல்ஆன் கருநாகு பெறூஉம் (164)

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மரையா

இது ஒருவகை காட்டுப்பசு என்று அறியப்பெறுகிறது.  மரையாவால் உண்ணப்பட்ட நெல்லி விதைகள் முற்றத்தில் கிடக்கும் என்று புறநானூறு (170) கூறுகிறது.  இதனை,

            மரை  பிரித்து உண்ட நெல்லிவேலி

            பரலுடை முன்றில்

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மான்

            வேடர்களின் வீடுகளில் இது வளர்க்கப்பட்டது. வீட்டில் வளர்க்கப்பட்ட பெண்மானைத் தழுவி, தன் இனத்தை விட்டுப் பிரிந்த ஆண்மான் விளையாடியதைப் புறநானூறு (320) உணர்த்துகிறது. 

நாய்

            வேட்டைக்குச் செல்லும் வேடர்கள், கானவர்கள் வேட்டை நாயை வளர்த்துள்ளனர்.  கானவன் முள்ளம்பன்றியைக் கொன்று, மனையிடத்தே உள்ள நாய்கள் எல்லாம் ஒருசேரப் பக்கத்தில் குரைத்து விளையாடி வர, மகிழ்வோடு இருப்பதை நற்றிணை (285) உணர்த்துகிறது. 

ஆடு

            ஆடுகள் வளர்க்கப்பெற்றுள்ளன.  வெள்ளாடு குமிழம்பழங்களை உண்டு, அதன் விதைகளைப் பந்தலருகில் துப்பும் என்று புறநானூறு (324) கூறுகிறது.  இதைப்போன்றே மரையாக்கள் நெல்லி விதையை முற்றத்தில் பரப்பியமை முன்னரே உணர்த்தப்பட்டது.

பன்றி

            கள்ளைச்சமைக்கின்ற மகளிர் வட்டிலைக் கழுவியதால் வடிந்த நீர் குழம்பிய, ஈரமாகிய சேற்றில் பெண்பன்றிகள் தங்கள் குட்டிகளோடு அளைந்து கொண்டிருக்கும்.  அவற்றுடன் புணர்ச்சியை விரும்பிப் போகாதபடி பாதுகாத்து, நெல்லையிடித்து மாவாக்கி அதை உணவாகக் கொடுத்துப் பலநாளும், குழியிலே நிறுத்தி வளர்த்த ஆண்பன்றிகள் இருந்ததாக பெரும்பாணாற்றுப்படை (339) கூறுகிறது. இப்பன்றிகள் உணவிற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவ்விலங்குகளைத் தவிர குதிரைகள், யானைகள் போன்றவைகளை மன்னர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தியுள்ளனர்.  கழுதைகளை உப்பு வணிகர் பயன்படுத்தியுள்ளனர்.  எனவே, இவ்விலங்குகளும் வளர்க்கப்பெற்றுள்ளன. விலைஞர் குடில்களின் முன் விலங்குகள் செறிந்து கிடந்தன என்று பட்டினப்பாலை (198) கூறுகிறது.

இதனால் நில அமைப்பிற்கு ஏற்றபடி அந்தந்த நிலங்களில் இருந்த விலங்குகள் அங்குள்ள மக்களால் வளர்க்கப்பெற்றுள்ளன.

தெரு

            பல இடங்களில் வீடுகள் முறைப்படி இல்லாமல் கூட்டங்கூட்டமாக இருந்துள்ளன.  இருப்பினும் சில சிற்றூர்களில் தெருக்கள் அமைத்துக் கட்டப்பட்ட வீடுகளும் இருந்துள்ளன. புலால் மணம் வீசும் சிறுகுடியின் தெருவை        மறுகு தொறு புலாவும் சிறுகுடி என்று நற்றிணை (114) கூறுகிறது. மணல் மிகுந்த அகன்ற நீண்ட தெருவும் நெய்தல் நிலத்தில் இருந்துள்ளதை நற்றிணை (319) உணர்த்துகிறது. மலர்களின் மகரந்தத்தாதுக்கள் நிறைந்த தெருவை,

            …….. அம்குடி சீறூர்த்

            தாது எரு மறுகின் என்று நற்றிணை (343) உணர்த்துகிறது. இவ்வூரில் தெருக்களின் இருபுறமும் மலர்ச்செடிகள் இருந்திருக்கலாம். இதுபோன்ற தெருக்கள் சில ஊர்களில் இருந்துள்ளன. நகரங்களில் பெரிய தெருக்கள் இருந்துள்ளன.

ஊர்கள்

            சிற்றூர்கள் பல இருந்துள்ளன. இவைகளும் நில அடிப்படையில் வேறுபாடுகளைக் கொண்டிருந்தன. அழகிய குடியிருப்புகளை உடைய சிற்றூரை அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு(367) குறிப்பிடுகிறது. பொதுமன்றங்களைக் கொண்ட அழகிய சிற்றூரை புன்தலை மன்றத்து அம்குடிச் சீறூர் என்றும் அகநானூறு (321) குறிக்கிறது. புல்லால் வேயப்பட்ட குடிசைகளையுடைய புலால்நாறும் ஊரை புலால்அம் சேரி புல்வேய் குரம்பை ஊர் என்று அகநானூறு (200) குறிக்கிறது. ஊகம்புல் போன்ற புற்களால் அங்குள்ள குடிசைகள் வேயப்பட்டிருக்கலாம். அங்குள்ளோர் வேட்டையாடி விலங்குகளைக் கொன்று, ஊரினருக்கும் இறைச்சியைப் பகுத்துத் தருவதால் அவ்வூரில் புலால் நாற்றம் இருந்திருக்கலாம். குனிந்து செல்லும்படியான தலை குவிந்துள்ள குடிசைகளைக் கொண்ட குடியிருப்புக்களை உடைய சிற்றூரை அகநானூறு (329) குவிந்த குரம்பை அம்குடிச் சீறூர் என்று உணர்த்துகிறது.

            விலங்குகள் வீட்டிற்குள் புகாதவாறு சிறிய வாயில்கள் இருப்பதால் அவ்வூர் காட்டு வழியில் இருந்தமையும், விலங்குகளின் ஆபத்தும் உணர முடிகின்றது. மலைச்சாரலில் அமைந்த ஊரை சாரற் சிறுகுடி என்று நற்றிணையும் (168) பல மலர்களையுடைய மலைச்சாரலில் உள்ள ஊரை பல்மலர்ச் சாரற் சிறுகுடி என்று குறுந்தொகையும் (95) கூறுகின்றன. காவற்காடு சூழ்ந்த சிற்றூரைக் குழு மிளைச் சீறூர் என்று நற்றிணை (95) கூறுகிறது. போரினால் அழிந்த வேலிகளையுடைய, ஆளில்லாமல் பொது மன்றம் இருக்கும் குடியிருப்புகளையுடைய சிற்றுரை

            அழிந்த வேலி அம்குடிச் சீறூர்

            ஆள்இல் மன்றத்து என்று நற்றிணை (346) கூறுகிறது. அகன்ற வயல்கள் சூழ்ந்த கொல்லைகளை உடைய ஊரை அகல்வயற் படப்பை அவன்ஊர் என்று நற்றிணை (365) கூறுகிறது. நெற்கதிர்கள் நிறைந்த ஊரை பிணிக்கதிர் நெல்லின் செம்மல் மூதூர் என்று புறநானூறு (97) கூறுகிறது.  மேற்கண்ட இரண்டும் வளம் நிறைந்த ஊர்கள் என்பது புலனாகிறது.

            உப்புப்பாத்திகளுக்கு அருகே கடற்கரைச் சோலையால் சூழப்பெற்ற ஊரை,

            நேர்கண் சிறுதடி நீரின் மாற்றி

            வானம் வேண்டா உழவின் எம்

            கானல்அம் சிறுகுடி

என்று நற்றிணை (254) குறிக்கிறது. மணல்மேடுகள் நிறைந்த ஊரை எக்கர் நண்ணிய எம்ஊர் என்று குறுந்தொகை (53) கூறுகிறது. கடற்கரையில் உள்ள குடியிருப்பை காமர் சிறுகுடி என்று நற்றிணை (299) கூறுகிறது. மேற்கண்டவை நெய்தல் நிலச்சிற்றூர்கள் என்று அறியமுடிகிறது.  உப்புபாத்திகளுக்கு அருகில் வீடுகள் இருந்தன என்று அறிய முடிகிறது. பாலைநிலத்தில் இருந்த அழகிய சிற்றூரை அத்தம் நண்ணிய அம்குடிச் சீறூர் என்று குறுந்தொகை (79) கூறுகிறது. பரற்கற்கள் மிகவும் அமைந்த செல்லுதற்கு அரிய வழியில் உமணர்களின் குடியிருப்பு இருந்ததை நற்றிணை (374) கூறுகிறது. சங்கத்தமிழர்கள் தமக்குக் கிடைத்த பொருட்களைக்கொண்டே குடிசைகளை அமைத்தனர். மரங்களை வைத்து மரக்கால் கொண்டு அமைக்கப்பட்ட குடிசை, மரக்கோல்களைக் கொண்டு அமைக்கப்பட்ட கதவு முதலியவற்றையும் காட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படாமல் இருக்க குடிசையின் வாயில்களை மிகவும் குறுகியதாகவும் அமைத்துள்ளார்கள்.

ஊகம்புல், தழைகள், கூவையிலை, ஈந்தின் இலை, வைக்கோல், வரகுத்தாள், தருப்பைப்புல், தென்னைமடல், தாழையின் தூறுகள், பனையோலை முதலியவற்றைக் கொண்டு சங்கத் தமிழர்கள் குடிசைகளை வேய்ந்துள்ளனர்.  இதில் ஈந்தின் இலையால் வேயப்படும் குடிசையில் எலி, அணில் முதலியன நுழைய முடியாதபடி இருந்துள்ளது. வீட்டில் பலவகையான பறவைகளையும் பசு, எருமை போன்ற விலங்குகளும் இருந்துள்ளன.  பலவகையான செடிகளும் மரங்களும் வீட்டைச்சுற்றி இருந்துள்ளன. 

            வீட்டின் சுவருக்கு செம்மண் பூசுதல், சுண்ணாம்பு பூசுதல் போன்றவை நடைபெற்றுள்ளன. வுpழாக் காலங்களில் முற்றத்தில் மணல் பரப்பப்பெற்றது.  வீட்டைக்காவல் காக்க காவலர்கள் இருந்தது போல், ஊரைக்காக்கவும் காவலர்கள் இருந்துள்ளனர்.  சங்கத் தமிழர் உறைந்த இடங்கள் பற்றி இவ்வாறு பல செய்திகளை அறிய முடிகிறது. ஐவகை நிலங்களும் தம்முள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டது போலவே ஐவகை நில மக்கள் வசித்த இடங்களும் மாறுபட்டவை என்று இதைப்போலவே ஊர்களும் குடியிருப்புகளும், வீடுகளும் அமைந்திருந்தன என்று அறிய முடிகிறது. சங்கத்தமிழர்கள் மேற்கண்டவாறு குடில்களை அமைத்தும், தாம் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு பயிரினங்களையும், உயிரினங்களையும் வளர்த்தும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர் என்பது எண்ணத்தக்கது.

முனைவர் அ. ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி,

காளிப்பட்டி, நாமக்கல்.

ஆசிரியரின் பிற ஆய்வுக்கட்டுரைகள்

1.சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

சங்க இலக்கியத்தில் நெற்பயிர் மேலாண்மை

            மேலாண்மை என்பது எந்த ஒரு செயலையும் முறையாகத் திட்டமிட்டு சரியாகவும் திறம்படவும் செய்து முடிப்பதே ஆகும். மனிதன் உயிர்வாழ அவசியமானது உணவு. கீரைகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள், தானியங்கள் எனப் பலவிதமான உணவு வகைகள் அன்றைய காலம் முதல் இன்றுவரை மக்களால் பயன்படுத்தப் பெறுகின்றன. சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்ட தினை, சாமை, வரகு, நெல் முதலிய தானிய வகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்ட தானியமாக நெல் அமைகிறது. மற்ற தானியங்களை விட நெல்லைப்பற்றிய பதிவுகள் கூடுதலாக உள்ளதும் இங்கு குறிக்கத்தக்கது. நிலத்திற்கு அணியென்ப நெல்லும் கரும்பும்” என்ற நான்மணிக்கடிகை (11) அடிகளுக்கு ஏற்ப மருத நிலத்தில் நெல் அதிகம் விளைந்தது. வயல்களை இருப்பிடமாகக் கொண்ட மருத நிலத்தில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் நீர்த்தேவையை நிறைவு செய்தன. நிலத்திற்கு அழகூட்டும் நெல்லும், கரும்பும் மருத நில மக்களின் வாழ்க்கையை உயரச்செய்தன. குறிஞ்சி நிலத்திலும் சில வகை நெல் வகைகள் பயிரிடப்பட்டுள்ளன.

            சங்க காலத்தில் இருந்த நெல் வகைகளும் சங்க கால மக்கள் நெல்லைப் பயன்படுத்தி மேலாண்மை முறைகளையும் இக்கட்டுரை உணர்த்துகிறது.

நெல் வகைகள்

            ஐவனநெல், தோரை நெல், மூங்கில் நெல் முதலிய நெல் வகைகள் குறிஞ்சி நிலத்திலும் வெண்ணெல், செந்நெல், முடந்தை நெல், சாலி நெல் முதலிய நெல் வகைகள் மருத நிலத்திலும் விளைந்தன.

ஐவனநெல்

            ஐவனம் எனப்படும் மலைநெல்லைக் கானவர்கள் அருவியை உடைய நிலத்தில் விதைப்பர். நெல் வளர்ந்ததும் இடையில் உள்ள களைகளான காட்டு மல்லிகைச் செடி, மரல் எனக் கூறப்பெறும் ஒருவகைக் கற்றாழை முதலியவற்றைப் பறித்து எறிவர். இதனை,

                        அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்

                        ”பருஇலைக் குளவியொடு பருமரல் கட்கும்

                        காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி

என்ற குறுந்தொகை அடிகள் (100) உணர்த்துகின்றன. இந்நெல்லை ஐவன வெண்ணெல் என்று கலித்தொகை (43) கூறுவதை

                        “ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து

என்ற அடியின் மூலம் அறியலாம். ஐவன நெல்லோடு இஞ்சி, மஞ்சள், மிளகு போன்றவை விளைந்தன என்று மதுரைக்காஞ்சி (288) குறிப்பதால் அதிக ஈரப்பதம் இல்லாத நிலங்களிலும் இந்நெல் விளைந்தது என அறியலாம்.

தோரைநெல்

            மதுரைக்காஞ்சி (287) தோரை என்னும் ஒரு வகை நெல்லைப்பற்றிக் கூறுகிறது. இந்நெல் மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்டது, குறுகிய கதிர்களையுடையது.

இதனை

                        கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை”

என்ற அடியால் உணரலாம்.

மூங்கில்நெல்

            மூங்கிலின் நெல்லைப் பாறை உரலுள் கொட்டி யானைத் தந்தத்தைக் கொண்டு இடித்து, வள்ளைப்பாட்டைப்பாடி சேம்பின் இலைகளில் புடைத்தனர் என்று கலித்தொகை (41) கூறுகிறது. இதனை

                        ஆடுகழை நெல்லை அறை உரலுள் பெய்து”

என்ற அடியால் உணரலாம். மூங்கிலரிசி, அவரைவிதை, மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லரிசி ஆகியவற்றைப் புளிக்கரைத்த உலையில் பெய்து புளியங்கூழினை ஆக்குவர் என்பதை மலைபடுகடாம் (435)

                        வேய்கொள் அரிசி மிதவை சொரிந்த

                        சுவல்விளை நெல்லின் அவரை அம்புளிங்கூழ்”

என்ற அடிகளில் உணர்த்துகிறது. மூங்கில் அரிசியோடு பிற பொருட்களைச் சேர்த்துச் சுவையாக உண்டதைப் போலவே இன்றும் கூட்டாஞ்சோற்றில் பலவித காய்கறிகள், தானியங்கள் இடம்பெறுகின்றன.

வெண்ணெல்

            வெண்ணெல்லை அரியும்போது உழவர்கள் தண்ணுமை முதலிய கருவிகளை முழக்கியவாறு பறவைகளை விரட்டுவர் என்பதை

                        வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை

                        பல்மலர்ப் பொய்கைப் படுபுள் ஒப்பும்;”

  என்ற (அகம்-204) அடிகள் உணர்த்துகின்றன.     தொண்டி என்னும் நகரத்தில் விளைந்த வெண்ணெல்            சிறப்புடையது என்று குறுந்தொகை (210)

                        ……………….. தொண்டி

                        முழுதுடன் விளைந்த வெண்ணெல்

            என்ற அடிகளில் உணர்த்துகிறது.

முடந்தைநெல்

            முடந்தை நெல் வளைந்த கதிர்களை உடையதாக இருக்கும் என்பதை

                        முடந்தை நெல்லின் விளைவயல் பரந்த”

                        “முடந்தை நெல்லின் கழையமல் கழனி”

            பதிற்றுப்பத்து (29இ32) உணர்த்துகிறது. இந்நெல் விளைந்த வளமிக்க ஊர்கள் அழிக்கப்பட்டன என்பதையும் அறிய முடிகிறது.

செந்நெல்

            செந்நெல்லின் அரிசி சற்றுச் சிவந்த நிறத்தில் இருக்கும் அந்தணர்கள் இல்லத்தில் இது பயன்படுத்தப்பெற்றதை

            ”ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை

            செந்நெல் அமலை வெண்மை வெள்இழுது

என்று குறுந்தொகை (277) உணர்த்துகிறது. மருதநில உழவர்கள் செந்நெல்லை விளைவித்தனர். பாண்மகள் வாளைமீனுக்கு மாற்றாக செந்நெல்லைப் பெறாமல் முத்துக்களையும் அணிகலன்களையும் பெறுவாள் என்பதை அகநானூறு (126)

                        “பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்

                        கழங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”

என்ற அடிகளில் உணர்த்துகிறது.

சாலிநெல்

            சாலி என்ற நெல் அதிகமாக விளைந்த ஊர் சாலியூர் என்றழைக்கப்பட்டது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சாலியூரைக் கைப்பற்றியதை மதுரைக்காஞ்சி (87) உணர்த்துகிறது. பொருநராற்றுப்படையும் (246) இந்நெல்லைப் பற்றிக்குறிக்கிறது.

கருடச்சம்பா (இராசான்னம்)

            இந்நெல் அந்தணர்களின் இல்லத்தில் பயன்படுத்தப்பெற்றது கருடச்சம்பா என்னும் அரிசியால் ஆக்கப்பெற்ற நெற்சோற்றையும், வெண்ணெயில் வெந்த மிளகுப்பொடியும் கறிவேப்பிலை கலந்த மாதுளங்காய்ப் பொரியலையும் மாங்காய் ஊறுகாய் போன்றவற்றை உணவாகப்பெறலாம் என்று பெரும்பாணாற்றுப்படை (305) கூறுகிறது. இதனை

            “சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

            சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

            உருப்புற பசுங்காய்ப் போழொடு கறிகலந்து

            நெடுமரக் கொக்கின் நறுவடி விதிர்த்த

            தகைமாண் காடியின் வகைபடப் பெறுகுவிர்

என்ற அடிகள் உணர்த்துகிறது.

உழவு செய்தல்

            உழவுத்தொழிலில் சிறந்த எருதுகளை நுகத்தில் பூட்டி, பெண் யானையின் வாயைப்போன்ற வளைந்த வாயையுடைய கலப்பையை உடும்பு முகம் போன்ற முழுக்கொழு மறையும்படி அமுக்கி உழுவர். இதனை

            “………………………. செஞ்சால் உழவர்

            நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி

            பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

            உடும்புமுக முழுக்கொழூ ஊன்றி

            தொடுப்பு எறிந்து உழுத

            என்ற பெரும்பாணாற்றுப்படை (198) அடிகள் உணர்த்துகின்றன.

நாற்று நடுதல்

            கரிய ஆனேறுகள் தம்முள் போரிட்டமையால் சேறாகிய வயலில், சேற்றைச் சமம்பட மிதித்த உழவர்கள் முடி நாற்றை நடுவதாகப் பெரும்பாணாற்றுப்படை (210)

                        “…………… வினைஞர்

                        முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்

            என்று உணர்த்துகிறது. உழவன் தன் உழத்தியருடன் நாற்று நடுவதற்குச் செல்வான் என்று நற்றிணையும் (60) கூறுகிறது.

            சேற்றைச் சமப்படுத்துவதும் நாற்று நடுவதும் இன்றும் இருந்தாலும் ஆண்கள் நாற்று நடும் வழக்கம் அரிதான ஒன்று. நடவுப்பணியில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். முக்கூடற்பள்ளு (126) நூலும் இதனையே உணர்த்துகிறது.

களை பறித்தல்       

            நெற்பயிர்களுக்கு இடையில் இருந்த களைகளைக் களைந்தும், நெய்தல் செடிகளை அப்புறப்படுத்தியும் களை பறித்தல் நடந்துள்ளதாகப் பெரும்பாணாற்றுப்படை (211) கூறுகிறது.

            கொண்டையணிந்த கூந்தலையுடைய உழத்தியர் நெல் வயலில் ஆம்பல், நெய்தல் செடிகளைக் களையாகப் பறிப்பர். வயலில் பிறழும் வாளைமீன் வயலைச் செப்பம் செய்யும் தளம்பு என்னும் கருவியால் துண்டிக்கப்படும் என்று புறநானூறு (61) கூறுகிறது. இதனை

                        “……………. செறுவின் தளம்பு தடிந்து இட்ட

                        பழன வாளை        

என்ற அடிகள் உணர்த்துகின்றன.   வயலில் களை பறிக்கும்போது தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். செப்பம் செய்யப்பயன்படும் கருவி என்பதால் பிற உழவுப்பணிகளுக்கும் இக்கருவி பயன்பட்டிருக்கலாம்.

காவல் செய்தல்

            வயலைக் காவல் புரியும் உழவரை “கழனிக் காவலர்” (280) என்று நற்றிணை குறிக்கிறது. நெல் விளைந்த வயலில் பறவைகளை விரட்டி, விளைந்த நெல்லைக் காத்துள்ளதை அறியமுடிகிறது. இதனை

                        நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்” (புறம்:29)

என்ற அடியால் உணரலாம்.

அறுவடை செய்தல்

            நெல்லரிவாரின் கையிலிருந்த அரிவாள்கள் மடங்கும்படி வளர்ந்த நெல்லைப் பற்றிப் பதிற்றுப்பத்துக் (19) கூறுகிறது. வெண்ணெல்லை அரிகின்ற உழவர்கள் வயலில் உள்ள பறவைகளை விரட்ட தண்ணுமை என்னும் இசைக்கருவியை முழக்குவர் என்பதை நற்றிணையும் (350) அகநானூறும் (40, 204) உணர்த்துகின்றன. பறவைகளை விரட்ட பறையைப் பயன்படுத்தியதை அகநானூறு (84) உணர்த்துகிறது.

            பறவைகளை விரட்டும் உழுகுடியோர் கீழே விழுந்த பனங்கருக்கை விறகாகக் கொண்டு கழியில் பிடித்த மீனைச் சுடுவர். அதனுடன் கள்ளை உண்டபின் தென்னையின் இளநீரை உதிர்ப்பர் என்பதை

                        நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்

                        ஓழிமடல் விறகின் கழிமீன் சுட்டு

                        வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்

                        இளநீர் உதிர்க்கும்;”

என்ற அடிகளில் புறநானூறு (29) உணர்த்துகிறது. மள்ளர் என்போர் நெல்லரிந்த செய்தியை நற்றிணை (400) உணர்த்துகிறது. நெற்கட்டு;களைக் கள்ளுண்டு களித்திருக்கும் களமர்கள் நெற்களங்களுக்குக் கொண்டு செல்வர் என்பதை

                        அரிஞர் யாத்த அலங்கு தலைப்பெருஞ் சூடு

                        கள்ளார் வினைஞர் களம்தொறும் மறுகும்”

என்று அகநானூறு (84) உணர்த்துகிறது. நன்கு அரிக்கப்பட்ட முதிர்ச்சியுற்ற மதுவை, ஆமை இறைச்சியோடு களமர் உண்பர். ஆரல் மீனின் வேகவைத்த கொழுப்பமைந்த துண்டைத் தம் கன்னத்தில் அடக்கிக்கொண்டு மதுவுண்டு மயங்கி இருப்பர் என்பதை

                        களமர்க்கு அரித்த விளையல் வெங்கள்

                        யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா

                        ஆரல் கொழுஞ்சூடு அம்கவுள் அடா”

என்ற அடிகளில் புறநானூறு (212) உணர்த்துகிறது.

            நெற்கதிரை அரிவோர் மடுவில் உள்ள மீன்களைப் பிடித்து அவற்றின் கொழுவிய துண்டங்களைக் களத்தில் இருந்தவாறே கடித்து வயிறார உண்டபின் நெற்கட்டுக்களைக் களத்தில் சேர்ப்பர் என்று அகநானூறு (236) கூறுகிறது. நீர்வளம் நிறைந்த பகுதியில் மீன்கள் இருந்ததால் அவற்றை உண்டு வேலையின் களைப்பைப் போக்கியுள்ளனர். இதே போல் வயலைக் காவல் புரியும் உழவர் ஆமை ஒட்டில் வைத்து நத்தையை உண்டனர் என்று நற்றிணை (280)

                        பழன யாமைப் பாசடைப் புறத்து

                        கழனிக் காவலர் சுரிநந்து உடைக்கும்”

என்ற அடிகளில் உணர்த்துகிறது. நெல் வயலில் பணியில் ஈடுபடுவோர் அங்குள்ள உணவுகளை, உழைப்பின் களைப்பு தீர உண்ட பின்னர் தங்கள் பணியினைத் தொடர்ந்துள்ளனர்.

ஊடுபயிர்

            பாணர் குலப்பெண்ணின் வட்டி நிறையுமாறு நெல் வயலில் விளைந்த பயற்றை உழவர்குலப்பெண் நிரப்புகிறாள் என்று ஐங்குறுநூறு (47) கூறுகிறது. நெல் வயலில் பயறு போன்றவற்றை பயிர் செய்துள்ளனர் என்று இதன் மூலம் உணரமுடிகிறது.

 நெல்லடித்தல்

            உழவர்கள் விடியற்காலை நேரத்தில் வைக்கோலைப் பிரித்துக் கடாவிட்டுத் தூற்றி எடுத்தனர் என்று அகநானூறு (37) உணர்த்துகிறது. செந்நெல்லின் தாளை அறுத்த உழவர்கள் அவற்றை மருதமரத்தின் நிழலில் போராகக் குவித்து வைத்து, அதைக் கடா விட்டு அடித்த பின்னர் நெல்லில் உள்ள வைக்கோல், தூசு முதலியவற்றைப் போக்கி அவற்றை உலர வைப்பர். கோடைக்காற்றில் தூற்றிக் குவித்த நெற்பொலிகள் மேருமலை போல் தோன்றும் என்று பெரும்பாணாற்றுப்படை (238) குறிக்கிறது.

இதனை

                        பகடுஊர்பு இழிந்த பின்றை துகள்தப

                        வையும் துரும்பும் நீக்கி பைதுஅற

                        குடகாற்று எறிந்த குப்பை வடபால்

                        செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றும்

            என்ற அடிகள் உணர்த்துகின்றன.   மலை போன்ற நெற்போர்களை அழித்துக் கடா விட்டு வளமையை உண்டாக்கும் உழவரைப்பற்றி மலைபடுகடாமும் (461) குறிக்கிறது.   நெல்லடிக்கும்போது உழவர்களுக்கும் பரதவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. கடலுக்கு அருகே உள்ள வயலில் நெல்லை அறுத்தனர். நெற்கதிர்ப் போரினைப் பிரித்துக் கடாவிட்டனர். கள்ளுண்டு களித்த அவ்வுழவர்கள் காளைகளை மாற்றி வேறு காளைகளைக்கொண்டு கடாவிட்டனர். பின்னர் நெல்லைத் தூற்றினர். பறந்து சென்ற துரும்புகள் அருகிலிருக்கும் உப்பு காயும் உப்பளத்திலுள்ள சிறிய பாத்திகளில் சென்று வீழ்ந்தது. உணவுக்கு இனிமை தரும் வெள்ளிய உப்பு பாழ்பட்டுப் போனமையால் நெய்தல் நில மக்கள் சினந்து, கழனி உழவருடன் மாறுபட்டுச் சேற்றுக்குழம்பினை எடுத்தெறிந்து கைகலப்பில் ஈடுபட்டனர். நரைத்து முதுமையுற்ற மருதநிலமக்கள் இருவரையும் அமைதியுறச்செய்து முற்றிய கள்ளின் தெளிவை பரதவர்க்குக் கொடுத்து அவரை மகிழ்வித்தனா.;

இதனை

                        “……………… பரதவர்

                        தீம்பொழி வெள்உப்புச் சிதைதலின் சினைஇ

                        கழனி உழவரொடு மாறுஎதிர்ந்து மயங்கி

                        இருஞ்சேற்று அள்ளல் எறி செருக் கண்டு

                        நரைமூ தாளார் கைபிணி விடுத்து

                        நனைமுதிர் தேறல் நுளையர்க்கு ஈயும்”

என்ற அகநானூற்று அடிகள் (366) உணர்த்துகின்றன.

            நெல்லடிக்கும்போது காளைகளுக்கு ஓய்வு அளித்து மாற்றி மாற்றிப் பயன்படுத்தியுள்ளனர். வயது முதிர்ந்தோர் நெற்களங்களில் பணிகளைப் பார்வையிடுவர். நெல்லில் சேற்றுக்குழம்பை எறிவதால் நெற்களம் சேறும் சகதியுமாக இருக்கும். உப்பளப் பணிகளுக்கு இடையூறு வந்ததால் நெற்களப் பணிகளுக்கு பரதவர் இடையூறு செய்தனர்.

            நெல்லை அறுவடை செய்வதிலிருந்து நெற்களங்களில் நெல்லை அடிப்பது வரை கள்ளின் பயன்பாடு மிகுதியாக இருந்துள்ளது. கடினமான வேலை என்பதால் உடற்சோர்வைப் போக்கக் கள்ளை அருந்தி நெற்களப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சடங்குகளில் நெல்

விரிச்சி கேட்டல்

            வயது முதிர்ந்த பெண்டிர் விரிச்சி (சகுனம்) கேட்கும் பொழுது நெல்லையும் முல்லை மலரையும் தெய்வத்தின் மீது தூவி விரிச்சி வேண்டி நிற்பர். இதனை

                        “…………… நெல்லொடு

                        நாழி கொண்ட நறுவீ முல்லை

                        அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

                        பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப”

என்ற அடிகளில் முல்லைப்பாட்டு (8) உணர்த்துகிறது மாலைக்காலத்தில் பெண்கள் நெல்லையும் மலரையும் தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கியதை நெடுநல்வாடை (43). உணர்த்துகிறது.

திருமணம்

            இன்று திருமணத்தில் மணமக்களின் தலையில் அரிசி தூவும் வழக்கம் உள்ளது. சங்க காலத்தில் மகளிர் நால்வர் கூடி தலைவியின் தலையில் நெல்லையும், மலர்களையும் நீரொடு தூவி வாழ்த்தினர். இதனை

                        நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

                        பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க”

என்று அகநானூறு (86) உணர்த்துகிறது.

            இன்றும் திருமணத்தில் சிலர் அரிசிக்கு மாற்றாக நெல்லைப் பயன்படுத்துகின்றனர். அரிசி முளைவிடாதது. நெல் முளைவிடும் தானியம். அதுவே மணமக்களுக்குப் பொருத்தமான ஒன்று என்கின்றனர்.

            மேற்கண்ட சடங்குகளில் பெண்களே நெல்லைப் பயன்படுத்தியவர்கள். நெல் மிக உயர்ந்த பொருளாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது என்பதை இவற்றான் உணரமுடிகிறது.

நெல்லுணவுகள்

            நெல்லைக் குற்றி, அதிலிருந்து அரிசி பெறப்பட்டது. நொய்யரிசி, நெல் மாவு, பொரி, அவல், அரிசி முதலிய வகைகள் சங்க காலத்தில் பயன்படுத்தப்பெற்றன.

நொய்யரிசி

            தலைவனின் பரத்தமையை வெறுத்து அவனோடு ஊடல் கொண்ட பெண்கள் நொய் அரிசியை முறத்தால் புடைத்துத் தாமே சமைத்து உண்டு தனிமையை மேற்கொண்டிருப்பர். இனிய மொழி பேசும் குழந்தைகள் பாலின்றி உலர்ந்த முலையைச் சுவைத்துப் பார்த்துப் பெரிதும் வருந்தி இருப்பர் என்பதை

                        செய்யோள் நீங்க சில்பதம் கொழித்து

                        தாம் அட்டு உண்டு தமியர் ஆகி

                        தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப”

என்ற அகநானூற்று அடிகள் (316) உணர்த்துகின்றன.

நெல்மா

            நெல்லை இடித்து நெல்மா உருவாக்கப்பட்டது. இம்மாவை ஆண்பன்றிக்குக் கொடுத்து அதைக்கொழுக்க வைத்தனர் என்று பெரும்பாணாற்றுப்படை (343) கூறுகிறது. குதிரைக்கு நெல்மாவு கொடுத்ததை அகநானூறு (340) உணர்த்துகிறது.

பொரி

            நெல்லை வறுத்து அதிலிருந்து நெற்பொரி பெறப்பட்டது. “செந்நெல் வான்பொரி” என்று குறுந்தொகை (53) இதனைக் குறிக்கிறது.

அவல்

            நெல்லை நீரில் ஊற வைத்து அதிலிருந்து அவல் இடித்தெடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. மருதநிலச் சிறுவர்கள் வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிலின் முற்றத்தில் கிடக்கும் உரலில் அவலை இடித்ததாகப் பெரும்பாணாற்றுப்படை (226) கூறுகிறது. நெல் விளைந்த கதிரை முறித்து பசிய அவலை இடிக்கும் பெண்ணை அகநானூறு (237) கூறுகிறது.

            மகளிர் அவலினை வாயில் அடக்கி நீராடுவர் என்று புறநானூறு (63) கூறுகிறது. இதனை

                        …………………. மகளிர்

                        பாசவல் முக்கி தண்புனல் பாயும்”

என்ற அடிகள் உணர்த்துகின்றன.

மேற்கண்ட உணவு வகைகள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நெல்லுணவில் அரிசியே முக்கியப்பங்கு வகிக்கிறது. அரிசியில் இருந்து பலவிதமான சோற்று வகைகள் பயன்படுத்தப்பெற்றன. அரிசியை வேகவைத்துச் சோறு பெறப்பட்டது. இன்சோறு, உப்பில்லாச்சோறு, உழுத்தஞ்சோறு, ஊன்சோறு, கொழுஞ்சோறு, செஞ்சோறு, நெய்ச்சோறு, புளிச்சோறு, பாற்சோறு, மூங்கிலரிசிச்சோறு எனப் பலவகை உணவுகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

இன்சோறு

            இனிப்புப் பொருட்களைச் சேர்த்தாக்கிய சோற்றுணவு இன்சோறு என்று அழைக்கப்பட்டதை மதுரைக்காஞ்சி (535) உணர்த்துகிறது.

உழுத்தஞ்சோறு

            அரிசியோடு உழுத்தப்பருப்பையும் இட்டு ஆக்கப்படும் சோறு உழுத்தஞ்சோறு என அழைக்கப்பட்டது. திருமணத்தில் இச்சோறு உண்ணப்பட்டதை அகநானூறு (86) உணர்த்துகிறது.

ஊன்சோறு

            சோற்றோடு ஊனைக்கலந்து ஆக்கினால் அது ஊன்சோறு ஆகும். பதிற்றுப்பத்தில் (45) இடம் பெறும் ஊன்துவை அடிசில் என்ற தொடர் இங்கு எண்ணத்தக்கது. மன்னர்கள் இரவலர்களுக்கு ஊன் சோற்றையே அதிகம் கொடுத்துள்ளனர்.

கொழுஞ்சோறு

            கொழுப்பு முதலியன கலந்து ஆக்கப்படும் சோறு கொழுஞ்சோறு எனப்பட்டது. கரும்பனூர் கிழான் இரவலர்களுக்குக் கொழுஞ்சோறு கொடுத்தான் என்று புறநானூறு (384) கூறுகிறது. இதனை

            “நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை” என்ற அடி உணர்த்துகிறது.

செஞ்சோறு

            செந்நெல்லரிசியால் ஆக்கப்பட்ட சோறு செஞ்சோறு எனப்பட்டது. இதனை “செந்நெல் வல்சி” என்று பதிற்றுப்பத்து (75) கூறுகிறது.

நெய்ச்சோறு

            நெய் மிகுதியாகக் கலந்து ஆக்கப்படும் சோறு நெய்ச்சோறு எனப்பட்டது. இதனை

            “நெய்ம்மலி அடிசில்” என்று குறிஞ்சிப்பாட்டு (204) கூறுகிறது.

புளிச்சோறு

            புளி அதிகம் கலந்து ஆக்கப்படும் சோறு புளிச்சோறு எனப்பட்டது. இச்சோறு இன்றும் பயன்படுத்தப்படுகிறது. எயினர் குலப்பெண் விருந்தினருக்கு இச்சோற்றைக் கொடுத்ததாக சிறுபாணாற்றுப்படை (175) கூறுகிறது. இதனை

                        “எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு” என்ற அடி உணர்த்துகிறது.

பாற்சோறு

            முல்லை நில மக்களுக்கு பால் அதிக அளவில் கிடைத்தது. பாலை உலைநீராகக் கொண்டு ஆக்கப்பட்ட சோறு பாற்சோறு எனப்பட்டது. இன்றும் சிலர் சர்க்கரைப்பொங்கல் வைக்கும்போது பாலை உலை நீராகப்பயன்படுத்துகின்றனர் பாலில் சமைத்த உணவை அகநானூறு (394) “பாலுடை அடிசில்” என்று கூறுகிறது.

            “………………. பாற்சோறு

            மூடநெய் பெய்து முழங்கை வழிவார

            என்ற திருப்பாவை (27) அடிகளும் இங்கு உணரத்தக்கன.

வெண்சோறு           

            வெண்ணெல் அரிசியைக்குற்றி பின்னர் அதனைப் புழுக்கி ஆக்கப்படும் சோறு வெண்சோறு என்று அழைக்கப்பட்டது. இதனை

                        “அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு”

என்று சிறுபாணாற்றுப்படை (194) கூறுகிறது.

மூங்கிலரிசிச்சோறு

            மலைவாழ் மக்கள் மூங்கில் நெல்லின் அரிசியைச் சோறாக்கினர், அவ்வாறு சோறாக்குவதற்கு மோர் உலை நீராகப் பயன்பட்டது என்று மலைபடுகடாம் (179) கூறுகிறது.

உப்பில்லாச்சோறு

            உப்பில்லாமல் சமைக்கப்பட்ட இச்சோறு இடுகாட்டில் ஈமச்சடங்கின்போது பயன்படுத்தப்பெற்றது. பிணத்திற்கு புலையனால் இச்சோறு கொடுக்கப்பட்டது.

இதனை

                        உப்பு இலாஅ அவிப்புழுக்கல்

                        கைக்கொண்டு பிறக்கு நோக்காது

                        இழிபிறப்பினோன் ஈயப்பெற்று

என்ற புறநானூற்று (363) அடிகள் உணர்த்துகின்றன. இன்றும் ஈமச்சடங்குகளில் நெல் பயன்படுத்தப் பெறுகின்றது.

கள்

நெல்லில் இருந்து கள் தயாரிக்கப்பட்டது. இது நறும்பிழி என்று அழைக்கப்பட்டது. கொழிக்கப்பட்ட குற்றாத அரிசியைக் களியாக்கிய பின்னர் அதனைக் கூழ்போலக் கரைத்து, தட்டில் இட்டு உலரும்படி ஆற்றி, நெல்முளையை இடித்து, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, இரண்டு பகலும் இரண்டு இரவும்; கழிந்த பின்னர் சாடியில் இட்டு வேகவைத்து, பன்னாடையால் வடிகட்டி, விரலால் துழாவிப் பிழியப்பட்டது. இதனை

                        அவையா அரிசி அம்களித் துழவை

                        மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி

                        பாம்புஉறை புற்றின் குரும்பி ஏய்க்கும்

                        பூம்புற நல்அடை அளைஇ தேம்பட

                        எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி

                        வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த

                        வெந்நீர் அரியல் விரல்அலை நறும்பிழி”

என்ற பெரும்பாணாற்றுப்படை அடிகள் (281) உணர்த்துகின்றன.

            கொழியல் அரிசி என்பது தவிடு போகாத அரிசி. விரலால் அலைத்துப் பிழியப்பட்ட அக்கள்ளைத் தளர்ச்சியான நிலையில் பருகினால் தளர்ச்சி நீங்குமாம். இரண்டு நாட்கள் இரவும் பகலும் ஊறிய கள்ளை வேக வைத்து, விரலால் அலைத்துப் பன்னாடையால் வடிகட்டிப் பயன்படுத்தினர். விரலால் அலைத்துப் பிழியப்பட்டதால் அக்கள் நறும்பிழி எனப்பட்டது. நெய்தல் நில மக்களின் விருந்தோம்பலை பெரும்பாணாற்றுப்படை கூறுவது போலவே இன்றும் நெய்தல் நிலங்களில் சோற்றிலிருந்து பெறப்படும் கள்ளாக “சுண்டக்கஞ்சி” விளங்குகிறது.

பண்டமாற்று

            சங்க காலத்தில் நெல்லும் உப்பும் ஒரே விலையுடையதாக இருந்தன. உமணப்பெண்கள் உப்பு விற்கும் பொழுது

                        நெல்லின் நேரே வெண்கல் உப்பு”

                        “நெல்லும் உப்பும் நேரே”

            என்று கூவி விற்பனை செய்வதை அகநானூறு (296,126) மூலம் அறியமுடிகிறது. உமணர்கள் மாட்டு வண்டிகளில் செல்ல, உமணப் பெண்கள் அருகில் உள்ள சேரிகளில் உப்பு விற்றுக்கொண்டே செல்வார்கள். படகுகளில் சென்று உப்பை விற்று நெல் கொண்டு வந்ததை

                        வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

                        நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”

என்ற அடிகளில் பட்டினப்பாலை (21) உணர்த்துகிறது.

            பாணர்குலப் பெண்ணின் வரால் மீனுக்கு முந்தைய ஆண்டு விளைந்த பழைய வெண்ணெல்லை மருதநிலப் பெண் தருவாள் என்பதை

                        வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள்

                        யாண்டுகழி வெண்ணெல் நிறைக்கும்”

என்று ஐங்குறுநூறு (48) கூறுகிறது.

            இன்னொரு பாணர்குலப்பெண் மீன்களைக் கொடுத்து மாற்றாக நெல்லை வாங்காமல், முத்துக்களையும் அணிகலன்களையும் பெற்றுச் செல்வாள் என்று ஐங்குறுநூறு (126) கூறுகிறது. இதனை

                        பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்

                        குறங்கு உறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்”

            என்ற அடிகளால் உணரலாம். நெல்லை விட விலை உயர்ந்த மீன் என்பதால் அப்பெண் நெல்லை வாங்கவில்லை.

            கானவன் வேட்டையாடி மான்தசையைக் கொடுக்க உழவர் மகளிரோ வெண்ணெல்லை முகந்து தருவர் என்று புறநானூறு (33) கூறுகிறது. ஆயர் மகளும் பால் பொருட்களை விற்று நெல் முதலிய உணவுப்பொருட்களைப் பெற்று தங்கள் சுற்றத்துடன் உண்பாள் என்று பெரும்பாணாற்றுப்படை (162)  கூறுகிறது.

ஈகை

            செல்வக்கடுங்கோ வாழியாதன் மரக்காலில் அளந்து இரவலர்களுக்கு நெல்லை வழங்கினான் என்று பதிற்றுப்பத்துக் (66) கூறுகிறது.

            அதியமான் செந்நெல்லை நெற்போரோடு கொடுப்பான் என்று புறநானூறு (390) கூறுகிறது. நெற்போரில் நெல்லைச் சேமித்து வைக்கும் வழக்கம் இருந்ததையும் நெல்லை ஈகையாகக் கொடுத்ததையும் இதன்மூலம் உணரமுடிகிறது.

            பெண்களுடன் ஆண்கள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் களைபறிக்கும் போது தளம்பு என்ற கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். வயலைக் காவல் காக்கும் வழக்கம் இருந்தது. நெல் அறுக்கும் போது பறவைகளை விரட்ட தண்ணுமை, பறை முதலிய இசைக்கருவிகள் பயன்பட்டன. நெல்வயலில் ஊடு பயிர் செய்யப்பட்டது. விடியற்காலை நேரத்தில் நெல்லடிக்கப்பட்டது, நெல்லால் பரதவர்களுக்கும் உழவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. பின்னர் கள் அருந்தி பரதவர் சமாதானம் அடைந்துள்ளனர்.

            நெல்லுடன் முல்லை மலர் தூவி பெண்கள் தெய்வத்தை வணங்கினர். திருமணச் சடங்குளில் முறையே நெல்; பயன்படுத்தப்பெற்றது. நொய்யரிசி, நெல்மாவு, பொரி, அவல், பல வகையான சோற்று வகைகள் பயன்பாட்டில் இருந்தன. இறப்புச் சடங்கில் உப்பில்லாச்சோறு பயன்படுத்தப்பெற்றது. நெல்லில் இருந்து கள் தயாரிக்கப்பட்டது.

நெல்லும் உப்பும் ஒரே விலையுடையதாக இருந்தாலும் உமணப்பெண்கள் உப்பை விற்று நெல்லை வாங்கிச்சென்றனர். நெல்லை நெற்போரில் சேமித்து வைக்கும் வழக்கம் இருந்துள்ளது.

            குறிஞ்சி, முல்லை, நெய்தல் நில மக்கள் தம் நிலத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு வந்து கொடுத்து மாற்றாக நெல்லை வாங்கிச்சென்றுள்ளனர். மருத நில மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் அங்கு விளைந்த நெல்லால் அவர்களுக்குக் கிடைத்தது. தம் நிலத்தில் விளைந்தவற்றை விற்ற மற்ற நில மக்களைப்போல அல்லாமல் மருதநில மக்கள் நெல்லை மற்ற இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யவில்லை. இதிலிருந்தே அக்காலத்தில்  நெல்லுக்கு இருந்த மதிப்பு உணரப்படுகிறது. சங்ககாலத்தில் இருந்த தானியங்கள் நெல்லுக்கு அடுத்த நிலையிலேயே போற்றப்பட்டு வந்துள்ளன. குறிஞ்சி நிலத்தில் சில நெல் வகைகள் விளைந்தாலும் மருதநிலத்தில் விளைந்த நெல்லே அதிகம் பேசப்படுகிறது.

நெல் பயிரிடுவது முதல் நெல் அறுவடை, பண்டமாற்று முதலிய பல நிகழ்வுகள் பதிவுகளாக உள்ளதாலும் மற்ற தானியங்களின் பதிவுகள் நெல்லின் அளவுக்கு இல்லாததாலும் அக்காலத்தில் நெல் சமூகத்தில் மிக உயர்வாக மதிக்கப்பட்டு வந்தமையை உணரலாம். திருமணம், விரிச்சி கேட்டல் போன்ற நிகழ்வுகளிலும் இறப்பு போன்ற நிகழ்வுகளிலும் நெல் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் நெல்லுக்கு இருந்த பெருமதிப்பு அறியப்படுகிறது. சங்ககாலத்தில் மற்ற தானியங்களை விட நெல்லே உயர்வானதாகக் கருதப்பட்டு பயன்படுத்தப்பெற்றது. ஈகையாகக் கொடுக்கப்படும் அளவிற்கு நெல்லின் மதிப்பு உயர்ந்திருந்தது. நெல் வயல்கள் இருந்த வளமிக்க ஊர்கள் பகை மன்னர்களால் அழிக்கப்பட்டதும் இங்கு எண்ணத்தக்கது எனவே சங்ககால மக்கள் நெல்லால் வாழ்ந்தும் மன்னர்கள் நெல்லால் வீழ்ந்தும் உள்ளனர் என்பதையும் உணர முடிகிறது.

நிலத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து பயிர் செய்யும் முறைகள், அதற்குரிய சூழல், தரமான விதைகள், நீர்ப்பாசனம், களையெடுத்தல், அறுவடைக்கு முன் பறவைகளை விரட்டுதல், அறுவடை செய்தல், சடங்குகளில் பயன்படுத்தப்பெற்றமை, பண்ட மாற்று, நெல்லில் இருந்து பெறப்பட்ட கள், அரிசியால் செய்யப்பட்ட பல்வேறு உணவு வகைள், நெல்லை இரவலர்களுக்கு ஈந்தமை போன்ற பல்வேறு நிலைகளில் சங்ககால மக்கள் நெல்லை மேலாண்மை செய்து வாழ்;ந்தனர் என்பதை இவற்றான் அறியமுடிகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் அ.ஜெயக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி

காளிப்பட்டி, நாமக்கல்-637501.

திறனாய்வுக் கொள்கைகள்

சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் ஏற்பக் காலந்தோறும் புதிய இலக்கியக் கோட்பாடுகள் இலக்கியங்களில் இடம் பெறுகின்றன. உலக. இலக்கியப் போக்கினைத் தழுவி அவற்றினை ஆராய்ந்த ‘ஏபிரம்’ என்ற அறிஞர் நான்கு விதமான இலக்கியக் கோட்பாடுகளை எடுத்துக் கூறுகிறார். அவையாவன.

1. அநுகரணக் கொள்கை

2. பயன்வழிக் கொள்கை

3. வெளிப்பாட்டுக் கொள்கை.

4. புறநிலைக் கொள்கை

இக்கோட்பாடுகளில் ஒன்று மட்டுமே குறிப்பிட்ட காலகட்டத்தில் இருந்தது. என்பது பொருளல்ல. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று மட்டுமே தலைமை பெற்றிருந்தது என்பர் ஜி. ஜான்சாமுவேல்

1.அநுகரணக் கொள்கை (MIMETIC THEORY)

அநுகரணம் என்பது ‘போலச் செய்தல்’ எனப்படும். எனவே இக்கொள்கையை, ‘போலச் செய்தல்’ என்னும் கொள்கை என்றும் அழைக்கின்றனர். இக் கொள்கையின்படி கலை, இலக்கியம் என்பன மனிதனால் நகல்களாகச் செய்யப்படுவன என்பதாம். உலகத்தின் அல்லது இயற்கையின் அல்லது மனித வாழ்வின் பிரதிபலிப்பு என்று கருதுகின்ற இலக்கியக் கோட்பாடுகளை இப்பிரிவில் அடக்கலாம். இக்கொள்கையைப் பின்பற்றியே அரிஸ்டாடில் ‘ஒரு நிகழ்வைப் பின்பற்றி அதுபோல அமைக்கப்பட்டதே நாடகம்’ என்கிறார். ஆனால் போலச் செய்வது என்பது புறஉலகக் காட்சிகளை அப்படியே படம்பிடித்துக் காட்டுவதன்று படைப்பாளன் தம் உள்ளத்தன்மைக்கும் விருப்பத்திற்கும் ஏற்பப் புறப் பொருள்களையும் காட்சிகளையும் அடிப்படையாகக் கொண்டுஅவை போன்ற ஒன்றைப் புதிதாகப் படைப்பதே ‘போலச் செய்தல்’ என்று திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர். இவ்வடிப்படையிலேயே டாக்டர் கைலாசபதி, ‘அரிஸ்டாடில்’ போன்றோர். அநுகரணம் என்பது கேவலம் வெறும் பிரதி செய்யும் முயற்சி எனக் கருதியவரல்லர், பிரபஞ்சத்தில் காண்பவற்றிலிருந்து வேண்டியவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றுக்கு இன்றியமையாத உருவத்தை இலக்கியக் கர்த்தா அளிக்கின்றான் என்பதே அவர்கள் கருத்தாகும் எனச் சுட்டுகிறார். அது மேலோட்டமாகப் பார்க்கும் நிலையில் இலக்கியப் படைப்புத் தொடர்பான கொள்கையாகத் தோன்றலாம். ஆனால் நுணுகி நோக்கினால் இது இலக்கியத்தை மதிப்பீடு செய்யும் வரைவிலக்கணம் என்பது புலனாகும்.

திறனாய்வுக் கொள்கைகளில் அநுகரணக் கொள்கையே முதன்மையானது. தொடக்க நிலைப் படைப்புகளில் இத்திறனாய்வுக் கோட்பாடே தலைமை இடம் பெற்றிருந்ததாகக் கருதுகின்றனர். கவிதையைக் காட்டிலும் நாடகம், சிறுகதை, புதினம் ஆகியவற்றில் நாம் அறிந்தோ அறியாமலோ இக்கொள்கையைக் கொண்டே பாத்திரங்கள். நிகழ்ச்சிகள் என்பனவற்றை மதிப்பீடு செய்கிறோம்.

2.பயன்வழிக் கொள்கை (PRIGMATIC THEORY)

இக்கொள்கை ‘போலச் செய்தல்’ என்ற கொள்கையைத் தொடர்ந்து எழுந்தது. அறிவியற் கொள்கையுடன் பெரிதும் ஒப்புமை உடையது. இலக்கியத்தைப் படிக்கும் சுவைஞருக்கு ஏற்படும் பயன்பாட்டினை அளவுகோலாகக் கொண்டு அதன் இயல்புகளையும், பண்புகளையும் ஆராய்வதே இக்கொள்கையின் நோக்கமாகும். படைப்பிற்கும் கலைஞனுக்கும் இடையிலான உறவு அதிகமாக வலியுறுத்தப்பட்ட காலத்தில் இக்கொள்கை பிற கொள்கைகளைவிட ஆதிக்கம் பெற்றிருந்தது.

தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியரே இக்கொள்கையை வலியுறுத்தியுள்ளார் எனக் கருதலாம். நூற்படைப்புக் குறித்து, ‘இருமென மொழியால் விழுமியது நுவலல்’ என்கிறார். ஒரு நூல் சுவைஞனைக் கவரும் வகையில் இசையோடு இணைந்த மொழி நடையும். விழுமிய பொருளும் அமையும் வகையில் படைக்கப்பட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும் மரபியலில் நூற்பாவினைக் கேட்போனுக்கு விளங்கும் வகையில் தெளிவாக அமைக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

தொல்காப்பியருக்குப் பின் வந்த நன்னூலார் இலக்கியப் படைப்பு சுவைஞனை அடைய வேண்டியதன் இன்றியமையாமையின மிகவும் விளக்கமாகக் கூறுகிறார். ‘கருங்கச் சொல்லல்’ என்ற நூற்பாவில் சுவைஞனைக் கவரும் பத்து அழகுகளை விளக்கமாக விளக்கிக் காட்டுகிறார்.

மேலும் சுவைஞனை மயங்க வைக்கக் கூடாது; பயனற்றவற்றை விரித்துப் பேசக்கூடாது என்றும் அறிவுரை கூறுகிறார் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை நலகுவது நூலின் பயன் என்ற பயன்வழிக் கொள்கை தண்டியலங்கார ஆசிரியராலும் பெரிதும் வலியுறுத்தப்படுகிறது.

எனவே இலக்கியத்தின் பயன் சுவைஞனது உள்ளத்தில் மகிழ்வுணர்வை ஊட்டுவதோடு அறிவுரை நல்கி, மனித சமுதாயத்தை நலவழிப்படுத்துவதே என்னும் அறநெறி சார்ந்த கோட்பாடும் இக்கால கட்டங்களில் வலுப்பெறுகின்றது எனக் குறிப்பிடுகிறார் ஜி. ஜான் சாமுவேல்.

3.வெளிப்பாட்டுக் கொள்கை : [EXPRESSIVE THEORY)

இக்கொள்கை உணர்ச்சிக் கொள்கை. அழகியற் கொள்கை என்பனவற்றோடு மிகுந்த உறவுடையது. படைப்பாளனின் கற்பனை, மனநிலை, ஆளுமை முதலியனவெல்லாம் தெளிவாக வெளிப்படுவதே இலக்கியத்தின் சிறப்பியல்பு என்பது இக்கொள்கையின் கருத்தாகும். பொருளைப் பாடி எடுத்துக் காட்டுவதே கவிதை என்னும் கொள்கைக்கு மாறாக கவிஞனின் அக உணர்ச்சிகளையும் அவன் மனத்தில் இடம்பெறும் உள்ளக்காட்சிகளையும் வெளிப்படுத்துவதே கவிதை என்கின்ற கோட்பாட்டை வெளிப்பாட்டுக் கொள்கையாளர் வலியுறுத்துகின்றனர்.

இக்கொள்கை 19-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஆங்கில, இந்திய இலக்கியப் படைப்புகளில் இடம் பெற்ற போதிலும் தமிழில் பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலகட்டத்திலேயே இக்கொள்கை தோற்றம் பெற்றுவிட்டது என்று குறிப்பிடுகின்றனர். பக்தி இலக்கியங்களில் படைப்பாளர்கள் தங்கள் உள்ளத்து உணர்ச்சிகளையும், பக்தி உணர்வினையும், ஆற்றொழுக்காகப் படைப்பு நுட்பம் சிறக்கப் படைத்துக் காட்டியுள்ளதனை அவ்விலக்கிய வகையினைப் படிப்போர் பெரிதும் உணர்வர்.

4.புறநிலைக் கொள்கை : [OBJECTIVE THEORY)

இக்கொள்கை வெளிப்பாட்டுக் கொள்கைக்கு முற்றிலும் மாறுதலானதாகும். இக்கொள்கையானது எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி மட்டுமே அறிந்து தெளிய வேண்டும் என்ற குறிக்கோளினை உடையது. இங்குப் பொருள் என்று சொல்லும் பொழுது புலனால் அறியும் பொருள், நூல் நுதலிய பொருள் என்பவற்றையே கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறார் டாக்டர். க. கைலாசபதி.

இக்கொள்கையின்படி ‘கலைப்படைப்பைக் கலைஞன், சுவைஞன், உலகம் ஆகியவற்றோடு இணைத்துக் காணாமல் அதை தனித்த ஒன்றாகச் சில விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு புறச்சார்பின்றிக் கவிதையை ஆய்வதை உயிர்நாடியாகக் கொண்டது’ என்று கூறுகிறார் ஜி. ஜான் சாமுவேல். இக்கொள்கை 18-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே மேனாடுகளில் அதிக அழுத்தம் பெற்றுள்ளது. தமிழ் இலக்கிய உலகில் இக்கொள்கை தற்காலத்தில் படிப்படியாக வலுப்பெற்று வருகின்றது. இவ்வாறு இத்துறையில் அமைந்த பல்வேறு கொள்கையினாலேயே இலக்கியத் திறனாய்வு குறித்துப் பல்வேறு விளக்கங்கள் நமக்குக் கிடைத்துள்ளன என்பதனை நாம் உணர்ந்து தெளிதல் வேண்டும்.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

தொடர்புடையன..

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

5.இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

6.இலக்கியத்திறனாய்வாளரின் தகுதிகள் | பணிகள்

இலக்கியத் திறனாய்வாளரின் தகுதிகள் | பணிகள்

இன்றையச் சூழலில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி வருகின்றன. அவற்றையெல்லாம் தரம் பிரித்து தகுந்தது இவையென இருப்பவைகள் சிலவேதான். நூல்களைத் திறனறிந்து பார்க்க திறனாய்வாளர்களும் விமர்சனர்களும் தேவைப்படுகின்றார்கள். அனைவராலும் திறனாய்வாளராகச் செயல்பட முடியாது. அவற்றிற்கென்று தனிப்போக்கும் நோக்குத்தன்மையும் பெற்றிருத்தல் அவசியமாகிறது. அவர்களே சிறந்த திறனாய்வாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தற்காலத்தில் வெங்கட்சாமினாதன், அசோகமித்திரன், அ. மார்க்ஸ், பொ. வேலுச்சாமி. பா. மதிவாணன், த. முருகேசபாண்டியன், க, பஞ்சாங்கம், ராஜ்கௌதமன் முதலியோர் நல்ல திறனாய்வாளர்களாகவும் விமரிசனம் செய்பவர்களாகவும் உள்ளனர்.  இங்கு திறானாய்வாளர்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று பேராசிரியர் இரா.மருதநாயகம் கூறுவது உற்றுநோக்கத்தக்கது.

திறனாய்வாளர்களிடையே அமைய வேண்டிய தகுதிகள் கீழ்க்கண்டவாறு தரப்படுகின்றன.

  1. திறனாய்வாளர், பல நூல்களைக் கற்றறிந்தவராகவும், பழுத்தப் புலமை உடையவராகவும், புதிது புதிதாய்ப் பயின்று இன்புறும் இயல்புடையவராகவும் இருத்தல் வேண்டும். விரிந்து பரந்துபட்ட நூலறிவு அவருக்கு மிகவும் இன்றியமையாதது.
  2. ஒரு மொழி நூல்களில் மட்டுமன்றிப் பலமொழி நூல்களிலும் இலக்கிய அனுபவம் பெற்றவராய் இருப்பது நல்லது. அப்போதுதான் இலக்கியம் பற்றிய மதிப்பீடுகளைத் திறம்பட வெளியிட முடியும்.
  3. கவிதை, நாடகம், புதினம் போன்ற எந்தத் துறையைப் பற்றித் திறனாய்வு செய்கின்றாரோ அந்தத் துறை சார்ந்த மற்றும் அதனோடு தொடர்புடைய பல நூல்களையும். கலை நுணுக்கச் செய்திகளையும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
  4. தான் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இலக்கியத்தைப் பன்முறை பயின்று பயின்று அதன் உயிர்ப்பான பகுதியைத் தெள்ளத் தெளிய உணர்ந்து கொள்ள வேண்டும்.
  5. நூலின் நிலையான பகுதிகள் எவை, நிலையில்லாத பகுதிகள் எவை என்பதைப் பகுத்தறிய வேண்டும்.
  6. பயில்வோர்க்கு மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய சிக்கலான பகுதிகள் நூலில் இருப்பின் அவற்றை வெளிப்படுத்திக் காட்டி மூலநூல் ஆசிரியரின் நோக்கத்தை நன்கு புரிய வைக்கவேண்டும்.
  7. இலக்கியம் படைத்தவர் சில கலை நுணுக்கங்களாலும்,  அறக்கோட்பாடுகளாலும் இயக்கப்பட்டிருந்தால் அவற்றைத் திறனாய்வாளர் தெரிந்து தெளிய வேண்டும்.
  8. கால வெள்ளத்தைக் கடந்து ஒரு நூல் வாழ்வதற்குரிய காரணங்களை. நூலாசிரியரின் படைப்பாற்றலை மற்றவர்களும் கண்டு மகிழும் வகையில் வெளிக் கொணர வேண்டும்.
  9. திறனாய்வாளர், நூலைப் பற்றிய ஒரு கருத்தைத் தன் சிந்தனைக்குள் அடைத்துக் கொண்டு அதை நிறுவுவதற்கான ஆதாரங்களை அரிதின் முயன்று வலிய இழுத்து வந்து வெளிப்படுத்தலாகாது. தன் படைப்பின் மூலம் நூலாசிரியர் வலியுறுத்துவதை வெளிக் கொணர்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
  10. நூலாசிரியரின் தனிச்சிறப்பினையும், உள்ளத்து உணர்வுகளையும், கற்பனைத் திறனையும் கண்டறிய முனைய வேண்டும்.
  11. வரலாற்றுப் பின்னணியையோ. குறிப்பிட்ட சமூகச் சூழலையோ மையமாகக் கொண்டு படைக்கப்பட்டிருந்தால் அப்பின்னணியை அல்லது சூழலைத் திறனாய்வாளன் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
  12. ஒரு நூலைச் சாதாரண மக்கள் சுவைத்து மகிழ்வதற்கும், கலைத்துறை வல்லுநர்கள் சுவைத்து மகிழ்வதற்கும் இடையே வேறுபாடு உண்டு. எனவே திறனாய்வாளர் இவ்வேறுபாட்டின் உண்மை நிலையை எடுத்துக் காட்டிப் பொதுமக்களின் சுவையுணர்வினை மேன்மேலும் பண்படுத்தி உயர் தரமான நிலைக்கு உயர்த்த வேண்டும்.
  13. ஒரு சிலர் அரைகுறைப் பயிற்சியால் ஒரு நூலின் தரத்தை குறைவாக மதிப்பிட்டு, சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களைப்  பரப்பிவிடக்கூடும். அக்கருத்துக்கள் மக்கள் மனதில் ஆழமாக வேரூன்றி அசைக்க முடியாதபடி நிலைத்து விடுதலும் உண்டு.  அந்நிலையில், திறனாய்வாளர், நூலுக்குரிய உண்மையான தகுதியை மதிப்பீடு செய்து மற்றவர் உணர்ந்து கொள்ளுமாறு தெளிவுப்படுத்த வேண்டும். பிழையாக மலிந்துவிட்ட தவறான கருத்துக்களைக் களைந்தெறிய வேண்டும்.
  14. புற்றீசல் போல வளர்ந்து வரும் இலக்கிய நூல்களுள் இறவாதத் தன்மை உடைய இலக்கியங்கள் இவை என்று சுட்டிக்காட்டும் துணிவு திறனாய்வாளருக்கு அமைய வேண்டும்.
  15. மானிடவியலின் கடந்த கால வரலாற்றைப் பற்றி அறிவு தெளிவு மிக்கவராகவும், அருள் ஒழுக்கம் பூண்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இவை போன்றன திறனாய்வாளருக்குரிய இன்றியமையா தகுதிகளாகக் கருதப்படுகின்றன.

திறனாய்வாளருக்குரிய பணிகள்

“இலக்கியத்தை நன்கு புரிந்து அனுபவிக்கும் இயல்பை வளர்ப்பதே இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாப் பணியாகும் என்று திறனாய்வுப் பணி குறித்து டி.எஸ். எலியட் என்பார் குறிப்பிடுகின்றார். இலக்கியத் திறனாய்வின் இன்றியமையாப் பணியினைக் காணும் போது உரையாசிரியர்களின் பணி திறனாய்வுப் பணியே என அறியலாம். திறனாய்வாளர்கள் செய்துள்ள பணிகளைக் கீழ்வருமாறு பகுத்துக் காட்டலாம்.

1 மூலநூற் பொருளைத் தெளிவாகக் காட்டுதல்.

2 அரிய சொல்லாட்சி, சொற்றொடர்களின் சிறப்பான பொருளை நன்கு விளக்கிக் காட்டல்.

3. இயல், இலம்பகம், அதிகாரம், காதை, படலம், போன்ற பல உட்பிரிவுகளை உடைய ஒரு நூலினுள் குறிப்பிட்ட ஓர் உட்பிரிவுக்குரிய சிறப்பிடத்தை நன்கு புலப்படுத்துல்.

4. நூல் நுவலும் கருத்துக்களைத் தொடக்கத்தில் தொகுத்துச் சொல்லுதல்.

5.நூற் பொருளால் ஏற்படக் கூடிய சிக்கலையும், முரண்பாடுகளையும் விளா-விடைமுறையில் தீர்த்து வைத்தல்; பயில்வோரின் ஐயத்தினைப் போக்கித் தெளிவுபடச் செய்தல்.

6. பிழையான கருத்துக்களைத் தக்கச் சான்றுடன் மறுத்தல்.

7.பாட பேதம் இருப்பின் அவற்றை வெளிக்கொணர்தல்.

8.குறிப்பிட்ட நூற்பொருளின் பின்னணியில் நமக்குத் தெரியா வண்ணம் மறைந்து கிடக்கும் அரிய செய்திகளை வெளிப்படுத்துதல்.

9.மூலநூலில் இடைச் செருகல் இருப்பின் அவற்றைக் களைந்து எறிய முற்படுதல்.

10. காப்பியம் போன்ற இலக்கிய வகையில் வரும் கதைக் கோப்பையும், பல்வகை மனிதரின் பல்வகைப் பட்ட பண்புகளையும் செயல்முறைகளையும் காவியக் கட்டுக்கோப்புக்கு ஏற்ற வண்ணம் இயைபு படுத்திக் காட்டல்.

11.நூலின் போக்கிற்குப் பொருத்தமானவை இவை என்றும், பொருத்தமற்றவை இவை என்றும் சுட்டிக்காட்டுதல்.

12 உவமை, உருவகம், உள்ளுறை, இறைச்சி போன்றவற்றை நயமுடன் விரித்துக் காட்டுதல்.

13. மூலநூலில் மறைந்துவிட்டதாகக் கருதப்படும் செய்யுள்களைக் கண்டறிந்து கூறுதல்.

14. இசை, நாடகம் போன்ற துறைகளைப் பற்றிய அரிய கலைச் செல்வங்களை ஆங்காங்கே கொண்டு வந்து வெளிப்படுத்தல்.

15. பழங்கால நாட்டுப்பாடல்,விடுகதைப் பாடல், பழமொழி போன்ற வாய்மொழி இலக்கிய வகைகளை உரையிற் செய்து அழியாது காத்தல்.

16. உரைகள் வாயிலாகத் தம் கால மக்களின் பழக்க வழக்கங்கள், நடைமுறைகள், பண்பாடு, அரசியல் மற்றும் சமுதாயச் சூழ்நிலைகள் ஆகியவற்றைப் படம்பிடித்துக் காட்டல், மேற்கண்ட போற்றப்படுகின்றன.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

தொடர்புடையக் கட்டுரைகள்

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

5.இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன?

இலக்கியக் கொள்கை – இலக்கியத் திறனாய்வு – இலக்கிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. எனினும் இவற்றுக்குள் சில வேறுபாடுகளும் உண்டு. காலந்தோறும் இலக்கியங்கள் படைக்கப்பட்டு அவ்வப்போது மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படுகின்றன. இலக்கியத்தைக் கற்கும் போதும், கற்பிக்கும்போதும் அதன் கால வரிசை தேவைப்படுகிறது. இலக்கிய ரசனையை விரும்பி அதில் உள்ள நன்மைகளை எடுத்துக் கூறுவதும் இலக்கியக் கல்வியில் அடங்குகிறது. இலக்கியம் காலந்தோறும் வெளிப்படுத்தும் நெறிமுறைகளையும் இது உணர்த்துகிறது. இவ்வாறு இலக்கியம் கற்றுக் கொள்ளக் கூடிய முறைகளில் வேறுபாடுகள் புலப்படுகின்றன.

இலக்கிய வரலாறும் ஓர் ஆய்வின் அடிப்படையில் தான் செய்யப்பட்டு ஒத்துக் கொள்ளப்படுகிறது. அதுபோல இலக்கியத் திறனாய்வும் சில விதிமுறை ஆய்வுகளின் வழியே நிகழ்கிறது. இலக்கியத் திறனாயவிற்கு முடிவு செய்யும் ஆற்றலும் உண்டு. இலக்கிய வரலாறு எழுதுவோரும் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்த முடிபுகளைக் கொண்டே படைக்கின்றனர். படைப்புப் பற்றியும் மதிப்பீடு பற்றியும் அறிந்து கொள்ளாமல் இலக்கிய வரலாறு எழுதப்படுவதில்லை. எனவே வரலாற்று அறிஞர்கள் இலக்கியத் திறனாய்வாளர்களாகவும் செயல்படுகின்றனர்.

ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் உருவான காலம் வெவ்வேறாக இருக்கும். தொகுக்கப்பட்ட காலமும் வேறுபடலாம். திறனாய்வு உதவியுடன் இவ்விலக்கியங்களின் காலத்தை அறியமுடியும். எனவே இலக்கிய வரலாறு சிறப்பாக அமையத் திறனாய்வு முறை தேவைப்படுகிறது. வரலாற்றுத் தொடர்பின்றி அமையும் திறனாய்வும் தவறாகி விடும். இந்த அடிப்படையில் இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு. இலக்கிய வரலாறு ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையன ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன என்று கூறலாம்.

திறனாய்வு என்றால் என்ன? அதன்  விளக்கம்

திறனாய்வு, விமர்சனம் என்னும் இருசொற்களும் இலக்கிய ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. இலக்கியத் திறனாய்வு என்பது இலக்கியத்தின் திறனை ஆய்தல் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சொல்லை முதன் முதலாக பேராசிரியர். அ. ச. ஞானசம்பந்தம் அவர்கள் தம்முடைய இலக்கியக் கலை என்னும் நூலில் பயன்படுத்தியுள்ளார்.

ஆங்கிலத்தில் CRITIC, CRITICISM என்னும் இரு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. பிரான்சிஸ்பேக்கன் என்பவர் தம்முடைய கட்டுரை ஒன்றில் CRITIC என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதுபோல ஜான்டிரைடன் என்னும் கவிஞர் CRITICISM என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். 1944-இல் ஆ.முத்துசிவன் விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார். கிரேக்கச் சொல்லான கிரிட்டிகோஸ் (KRITIKOS) என்னும் சொல்லிலிருந்து CRITICISM என்னும் சொல் உருவாக்கப்பட்டது. KRITIKOS என்பதன் பொருள். முடிபு கூற முடிந்த ஒன்று என்பர். ஒன்றை நடுநிலையோடு கவனித்துக் கூறப்படும் அனைத்தும் திறனாய்வு என்றும் அதனைச் செய்யும் அவர்களைத் திறனாய்வாளர் என்றும் கூறுவர்.

திறனாய்வு என்பதற்கு அறிஞர்களின் கருத்துகள்

  1. உலகில் சிறந்ததென்று உணர்ந்து சிந்திக்கப் பெறுவதைத் தன்னலமற்ற முறையில் அறிந்து பரப்புவதற்கு முயற்சி செய்வது திறனாய்வாகும் என்பர் மேத்யூ ஆர்னால்டு.
  2. கவிஞன் அல்லது வண்ண ஓவியனின் அறச் சிந்தனையை உணர்வதும், அதைப் பிரித்து அறிவதும், விளக்குவதும் திறனாய்வின் மூன்று படிநிலை’ என்பது வால்டர் பேட்டன் தரும் விளக்கம் ஆகும்.
  3. இலக்கியம் சிறந்ததா அல்லது குறையுடையதா என்பதைக் காண்பதே திறனாய்வு என்பர் விக்டர் யூகோ.
  4. ‘கலைஞன் எதைக் கூற முயல்கிறான்; அதில் எங்ஙனம் அவன் வெற்றி பெறுகிறான்? அவன் கூறுவது தகுதி உடையது தானா? என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண்பது திறனாய்வாகும்’ என்பர் ஸ்பிங்கான்.
  5. திறனாய்வாவது ஒரு கலையினை நுண்ணறிவு கொண்டு உணர்ந்து அதன் தரத்தினை மதிப்பீடு செய்வதாகும் என்பது சி.டி. வின்செஸ்டர் கருத்து ஆகும்.
  6. ஓர் இலக்கியத்தின் தரத்தினையும் குறைபாடுகளையும் இலக்கியத் திறனாய்வாளன் தன்னுடைய அறிவும் பயிற்சியும் கொண்டு அதைப் பற்றிய தன்னுடைய முடிவினை வழங்குவதே இலக்கியத் திறனாய்வு என்பார் வில்லியம் ஹென்றி அட்சன்.

இவ்வாறாக ‘திறனாய்வு’ என்பதற்குப் பொருள் விளக்கம் பலவாறு பெறப்படுகிறது.

இலக்கியத் திறனாய்வு

டாக்டர் மு. வரதராசனார் இலக்கிய ஆராய்ச்சி என்னும் தமது நூலில் ‘இலக்கியத் திறனாய்வு’ என்பதற்குக் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார். அவை,

  1. இலக்கியங்களில் காணும் உவமை, உணர்ச்சி, கற்பனை, வடிவம், பொருள் முதலியவற்றைக் கொண்டு இலக்கியக் கொள்கைகளை உருவாக்குவது.
  2. இலக்கியத்தின் பொது மற்றும் சிறப்பைக் காணுவது.
  3. இலக்கியம் வாழ்க்கைக்காகவா? கலை இன்பத்திற்காகவா? என்று ஆராய்வது.
  4. இலக்கியத்தை நுகரும் முறை கூறல்; நுகர்வோனுக்குரிய அடிப்படைத் தகுதியை வகுத்தல்.
  5. படைப்போன், நுகர்வோன் இருவருக்குமுள்ள இடைவெளி குறைவு என்பதை உணர்த்தல்.
  6. இலக்கியங்களை மேலும் படைக்கத் தூண்டுதல் போன்றனவாகும்.

திறனாய்வின் நோக்கம்

திறனாய்வின் நோக்கம் அல்லது பணி, அடிப்படையில் இலக்கியத்தை மையமிட்டது. திறனாய்வு வினாக்களை எழுப்பி, விடை தந்து, வினாக்களையும் எதிர் கொள்கிறது.

இலக்கியம் ஒரு கலையாக, ஒரு சாதனமாக ஒரு சக்தியாக வருணிக்கப்படுகிறபோது, அதனுடைய சாத்தியங்களையும், வழிகளையும் திறனாய்வு ஆராய்கிறது. இலக்கியம் ஒரு புதிராக வருணிக்கப்படுமானால் அந்தப் புதிரைத் திறனாய்வு விடுவிக்க முயல்கிறது. இலக்கியம் மக்களுக்கானது: மக்களைப் பற்றி பேசுகிறது; மக்களிடம் போகிறது: மக்களைப் பாதிக்கிறது என்று வருணிக்கப்படுமானால் திறனாய்வு அந்த உறவுகளை இனங்கண்டு விளக்குகிறது.

இலக்கியம் ஒரு காலத்தை, ஒரு இடத்தைப் பற்றி எழுந்திருக்கிறது என்று வருணிக்கும்போது அதன் கால, இட, அச்சுக்களை (TIME, SPACE, AXIS) திறனாய்வு ஆராய்கிறது. இலக்கியம் பிரத்தியேகமாகப் பல கூறுகளையும், பண்புகளையும், உத்திகளையும் கொண்டிருக்கிறது என்று வருணிக்கப்படுமானால் திறனாய்வு அதனை ஆழ்ந்து சென்று புலப்படுத்துகின்றது. இலக்கியம் பல செந்நெறிகளையும்(TRENDS], பல இலக்கியப் போக்குகளையும் (MOVEMENTS], பல கருத்துக்களையும் [CONCEPTS], கொண்டிருப்பது என்று வருணிக்கப்படுமானால், திறனாய்வு பொருத்தமான தளங்களில் காலூன்றி, இலக்கியத்தின் இந்த இயங்கு நிலைகளையும் கோணங்களையும் பகுத்து ஆராய்கிறது.

முடிவுரை

இவ்வாறு திறனாய்வு விசாலமான பணிகளையும் நோக்கத்தையும் கொண்டிருப்பதோடு, இலக்கியத்தை ஒரு தளமாகக் கொண்டு, திறனாய்வு ஒரு அறிவுத் தேடலாக அமைந்திருக்கிறது. அது மட்டுமன்றி இலக்கியத்தைக் காலம், இடம் என்ற பரிமாணங்களில் இடைவெளியை நிரப்பிப் புரிந்து கொள்ளுதலுக்குத் துணை நிற்கிறது. இலக்கியத்தை விளக்கி, மதிப்பீடு செய்து. வாசிப்புகளுக்குப் பல பரிமாணங்களைத் தருகிறது.

மூலம் : இலக்கியத்திறனாய்வு வகைகளும் வளர்ச்சியும் – பேரா இரா.மருதநாயகம்

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

ஐங்குறுநூற்றில் அன்னாய்வாழி பத்து – ஓர் ஆய்வு

பல்லாயிரம் ஆண்டுகளாக உயிரினங்களே இல்லாமல் பூமி வரண்டு போய் மலடாக இருந்தது. காலத்தின் மாற்றம் காரணமாக தட்பவெட்ப சூழ்நிலையின் அடிப்படையில் தண்ணீர் பூமியில் உருவானது. தண்ணீர் மண்ணோடு கலந்து சேறுயுடைத்தாகி ஈரம் கலந்த பூமியாய் மாறியது. அவற்றிலிருந்து ஓரறிவு உயிராகிய நுண்ணுயிர்கள் தோன்றியன. அதன் பின்னர் ஒவ்வொரு உயிராய்  பிறந்திருத்தல் வேண்டும். இப்படியாக இப்பூவுலகு பல ஆண்டுகாலம் கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சியடைந்து குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்கின்றனர் விஞ்ஞானிகள்.  

இவ்வாறு தோன்றிய மனித இனங்களுள் முதன்மையாக இருப்பவர்கள் பெண்களே ஆவார்கள். இவர்கள் மூலமாகத்தான் மனித இனத்தைப் பெருக்கிக் கொள்ள ஆயுத்தமானர்கள்.  இவ்வுலகத்தின் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு இரத்தச் சம்பந்தப்பட்ட மனிதர்கள் தேவைப்பட்டார்கள். இதனால் அக்காலத்திலே பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். நாடோடியாக வாழ்ந்து திரிந்த மனிதர்கள்  பெண்களை முன்னிறுத்தி தாய்வழிச் சமூகமாக வாழ்ந்து வந்தனர். தனக்கென ஒரு இடம், வயல், சமூகம், கிராமம், நாடு என்று வகுக்கும் பொழுது ஆண்கள் முன்னிலை வகிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இருப்பினும் அவர்களை மிக்க மன வலிமையுள்ளவர்களாகவும், வம்சத்தை விருத்தி செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.    வம்சத்தின் அடிவிழுதாக பெண்கள் விழங்கினார்கள். அக்காலத்தில் நடைபெறும் ஒவ்வொரு காரணங்களும் பெண்களின் நிலையறிந்தே செய்யப்பட்டுள்ளன என்பதையும், அனைத்து விதமான சடங்குகளும் அவர்களை முன்நிறுத்தியே நிகழ்த்துகின்றனர் என்பதை இன்றளவும் நம்மால் அறிய முடிகிறது. தமிழ்க்கடவுள் முருகன் என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் சிறுந்தெய்வங்களையே வணங்கி வருவதைக் காணலாம். அத்தெய்வங்கள் பலருக்கு குலந்தெய்வங்களாக  பெண் தெய்வங்கள் இருப்பதையும் அறியமுடிகிறது.  நம் பாரத நாட்டின் கங்கை, காவிரி என ஆறுகளின் பெயர்கள் பெண் பெயர்களாக இருப்பதும், முல்லை, செந்தாழை போன்ற பூக்களின் பெயர்களும் இருப்பதையும் உதாரணமாக காட்ட முடியும். இதனடிப்படையிலேயே அக்காலத்தில் பெண்கள் முதன்மைப் படுத்தப்படுகிறார்கள்.

பிற்காலத்தில் ஆணாதிக்கச் சமூகம் பெண்களை அடக்கி ஆள நினைத்தது. அதற்காக பெண்களை மனதளவில் வலிமையற்றவள் என நம்பவைத்தது. ஆண்கள் செய்யும் வேலைகளை தன்னால் செய்ய முடியாது என பெண்களை உணர செய்தனர். அதுதான் பெண்கள் வீழ்ச்சியடைவதற்கான முதல்படியாக அமைந்தது. சில நூறு வருடங்களுக்குப் பிறகுதான் தான் அடிமைப்பட்டு கிடக்கின்ற எண்ணம் அப்பெண்களுக்குத் தோன்றியது. பலப்போராட்டத்தின் விளைவாக இன்று பெண்கள்  சுதந்திரமாக  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை இன்றைய எதார்த்த வாழ்வின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 

சங்க இலக்கியங்கள் காலம் காட்டும் கண்ணாடி என்பார்கள்.  பழந்தமிழக இலக்கியங்கள் அக்கால மக்களின் அழகினை எடுத்தியம்புகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும். அக்கதையில் அனுபவம், நெகிழ்ச்சி, பாராட்டு, ஆசை, காதல், வீரம், அன்றாட மக்களின் வாழ்வியல் நெறிமுறைகள் என படிப்பவர்களை தலை நிமிர வைக்கும். சங்க இலக்கியங்கள் அகம், புறம் எனும் இரு கண்களைக் கொண்டது. அகத்திணையில் களவு, கற்பு என வாழ்க்கை நிகழ்வுகளைச் சுட்டுவார்கள். திருமணத்திற்கு பிறகு வாழும் கற்பு வாழ்க்கையில் சங்ககால தலைவி ஒருத்தி தன்னுடைய புகுந்த வீட்டின் பெருமையை பறைச்சாற்றுகின்றாள். ஒரு பெண் இப்படியும் இருப்பாளா? என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆசிரியர் அழகாக வடித்துள்ளார். ஐங்குறுநூற்றில் கபிலர் இயற்றிய இருநூற்று மூன்றாம் பாடல் மட்டும் இவ்வாய்வுக்கட்டுரைக்கு எடுத்துக்கொண்டு ஆராயப்படுகிறது.

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத்

 தேன் மயங்கு பாலினும் இனியஅவர் நாட்டு

  உவலைக் கூவற் கீழ

மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே”     (ஐங்குறுநூறு.203)

சங்ககால தலைவன் ஒருவனுக்குப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிந்தது. தலைவியும் அழகான பெண். தலைவன் வீட்டில் இருவரும்  இல்லறம் சிறக்க தங்களின் வாழ்க்கையைத் தொடங்குகின்றார்கள். ஓரிரு மாதங்கள் கழித்து அம்மாவின் ஞாபகம் தலைவிக்கு வருகின்றது. கணவனிடம் கேட்டு சம்மதம் பெறுகின்றாள். கணவன் அழைத்துச் செல்ல பிறந்த வீட்டை அடைகிறாள் தலைவி.

பிறந்த வீட்டிற்கு தலைவி வந்தவுடன் பெற்றோர்கள் மிக்க மகிழ்ச்சியில் திழைத்தார்கள். சொந்தங்கள், பக்கத்து வீட்டு தோழிகள், தெரிந்தவர்கள் என அனைவரும் தலைவியைப் பார்க்க வருகின்றார்கள். வருகின்ற பெண்கள் சும்மாதான் வருவார்கள். ஆனால் போகும் போது எதையாவது கொளுத்திப் போட்டுவிட்டு சென்று விடுவார்கள். அன்றும் அதைப்போலத்தான் தலைவியை மட்டும் தனியாக வீட்டிலுள்ள சமையலறைக்குள் இழுத்துச் சென்றார்கள். சமையலறைதான் பெண்களின் கோட்டை. நிறைய வீட்டுப் பெண்கள் சமையலறையில்தான் முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர். சமையலறைக்குள் தலைவியைச் சுற்றிலும் அத்தைமார்கள், அக்காமார்கள், தோழிமார்கள் எனத் திருமணமானப் பெண்கள் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அங்கே தலைவியிடம் குசலம் விசாரிக்கிறார்கள். ‘உன்னோட கணவன் நல்லா பாத்துகிறாரா?’ ‘உன்னுடைய மாமனார், மாமியார், கொழுந்தன், நாத்தி எல்லாம் நல்லா பேசுறாங்களா?’ ‘நல்லா சாப்பிடுறியா?’  ‘கணவன் வீட்டுல உனக்குச் சோறே போடறது இல்லையா? இப்படி எலும்பும் தோளுமா வந்திருக்க?’ ‘மழை பொழிந்ததா?’ ‘தலைவன் கூட சந்தோசமா இருக்கியா?’ என அடுக்கடுக்காய் கேள்விகள் தலைவியின் செவியினுள்ளே சென்று மனதிலே நின்றது. அதிலும் அந்த கடைசி கௌ்வி, அந்த அத்தை கேட்டாளே… அந்த கேள்வியைக் கேட்டவுடன் அனைவரும் சிரித்தனரே… அந்த கேள்வி தலைவிக்கு இதயத்தில் நுழைந்து வெட்கத்தை வரவழைத்தது.

என் கணவனுடைய நாடு வறட்சி மிகுந்து இருக்கும். எங்களுடைய வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு குளம் உண்டு. அக்குளம் வறட்சியினால் தண்ணீர் குறைந்து போய் சேறோடு மண்டிக்கிடக்கும். பக்கத்தில் இருக்கும் மரங்களின் தழைகள் அக்குளத்தில் விழுந்து அசுத்தமாக்கியன.  அந்த வழியில் செல்லும் விலங்கினங்கள் அக்குளத்தில் தழைகளால் சேறு படிந்த தண்ணீரை தன்னுடைய நாவால் நக்கி குடிக்குமாம்.  அப்படிப்பட்ட எச்சில் தண்ணீரைதான் நான் குடத்தில் எடுத்து வருவேன். அத்தண்ணீரின் சுவையானது. என்னுடைய பிறந்த வீட்டில் அம்மா பாசத்தோடு கொடுக்கக்கூடிய பசுவின் பாலோடும் காட்டில் இருந்து எடுக்கப்பட்ட தேனையும் சாப்பாட்டுடன் சேர்த்து கொடுப்பார்கள். இவை இரண்டும் கலந்த சுவையானது அமிழ்தை மிஞ்சும். அப்படிப்பட்ட உணவை விட தீஞ்சுவையைப் போன்று இனிமையாய் இருந்தது என்றாளாம். இதைக்கேட்ட அப்பெண்கள், புகுந்த வீட்டின் பெருமையை இதைவிட வேறெப்படி சொல்ல முடியும் என்று  வாயடைத்துப் போனார்களாம்.

அன்பும் பாசமும்

அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்”      ( நற்றிணை.110:9-10)

தலைவி மிகுந்த அறிவாற்றலையும் நல்லொழுக்கத்தையும் உடையவள். எதையும் ஆராய்ந்து அறிந்து செயல்படுபவள். எந்த சூழ்நிலையிலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்பவள். மணந்து கொண்ட தலைவனையும், தான் புகுந்த வீட்டில் உள்ள உறவுகளையும் எக்காலத்திலும் விட்டுக்கொடுக்காதவள். தன் குடி என நினைத்து நாளும் போற்றுபவள். வறட்சியான பகுதியில் வாழும் தலைவியின் பதில் சாமர்த்தியமானது. பெற்றோர்களை விட்டு என்றும் பிரியாத தலைவி முதன்முதலில் திருமணத்தால் பிரிகின்றாள்.  புது உறவு என்பதால் புதியதில் பிடிக்கவே செய்யும். போகப்போக கணவன் வீட்டுச் சூழலும் உறவுகளும் கசப்பைத்தான் வரவழைக்கும். சண்டையிட்டு தாய் வீடு திரும்பிய எத்தனையோ பெண்கள் உண்டு. ஐங்குறுநூற்று தலைவி தாய் வீட்டிற்கு வந்திருப்பது சண்டையிட்டுக் கொண்டு வந்தவள் இல்லை. தலைவனோடு சேர்ந்து தாயகம் வந்திருக்கிறாள்.

தலைவியின் பதிலையும், திருமணத்திற்குப் பின் முதன்முதலாய்  தாய் வீட்டிற்கு தலைவி வருகிறாள் என்பதைப் பார்க்கும் போது, இவர்கள் இருவருக்கும் ஓரிரு மாதங்கள் முன்புதான் திருமணம் நடந்திருக்க வேண்டும்.  அதனால் இவர்களுடைய திருமணம் பங்குனி மாதம் அல்லது சித்திரை மாதம் நடைபெற்றிருக்கலாம்.  திருமணம் முடிந்த கையோடு புகுந்த வீட்டிற்கு தலைவி வந்திருக்கிறாள். இம்மாதங்கள் கோடைகாலம். அதனால் அங்கு வறட்சி மிகுந்திருந்தது. ஏனெனில் அவ்வூரின்கண் ‘உவலை’ (குளம் அல்லது கிணறு) உண்டு என பாடல் அடிகள் கூறுகின்றது.  கண்டிப்பாக தண்ணீர் இருந்திருக்க வேண்டும். அக்குளம் மழைக்காலத்தில் தண்ணீரால் மிதந்து இருந்திருக்கும். தலைவி அக்குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றாள் எனில் ஊர்க்குளத்தில் மக்கள் அனைவரும் குடிக்க தண்ணீர் எடுத்திருக்க வேண்டும். குளம் இருப்பின் ஊர் பெரிய பரப்பளவு உடையதாகவும், மக்கள் கூட்டாக வாழக்கூடியர்களாகவும் இருந்திருப்பார்கள். கோயில், வழிபாடு, திருவிழாக்கள், கலைகள் என பண்பாடு சிறக்க வாழ்ந்திருப்பார்கள்.  தலைவியின் கூற்றுக்கு, கணவனின் உண்மையான காதலும் மட்டுமின்றி சொந்தபந்தங்களின் அன்பும், அவ்வூரில் நடைபெற்ற விழாக்களும் அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியும்தான், மான் போன்ற விலங்கினங்கள் நக்கி குடித்த எச்சில் தண்ணீரைக் கூட சுவையானதாக இருந்தது என்று தலைவி சொல்ல முடிந்தது.

ஆடி மாதப்பிரிவு

தலைவி தாய் வீட்டிற்கு வந்திருப்பது ஆடி மாத பிரிவே. ஆடி மாதம் கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் தாய்க்குக் குழந்தை பெற்றெடுப்பதில் சிரமம் அதிகமாகியுள்ளது.  ஒருசில நேரங்களில்  தாய்க்கும் குழந்தைக்கும் உயிர் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. இதன் காரணமாகவே தலைவனின் பெற்றோர் தலைவியை தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். 

மேலும், சித்திரை மாதம் குழந்தை பிறந்தால் அக்குடும்பத்திற்கு நல்லது இல்லை. குறிப்பாக சித்திரை மாதம் பிறக்கும் முதல் ஆண் குழந்தை பெற்றோர்களில் ஒருவர் இறப்பார்கள். இல்லெனில், தாய் தந்தை மறு திருமணம், வறுமை, பிரிவு, தனித்திருத்தல் ஆகியன நடக்கும். ஆனாலும் சித்திரை மாதத்தில் பிறந்த ஆண்மகன்கள் சிறந்த புத்திசாலியாக விளங்குவார்கள். எதையும் சாதிக்கும் திறனுடன் இருப்பார்கள். இவையெல்லாம் இருந்தாலும் பெற்றோர்கள் சரியான முறையில் வாழ முடியால் இருப்பதால் யாரும் சித்திரை மாதம் பிறக்கும் குழந்தையை வேண்டாம் என்பார்கள். இப்படிப்பட்ட காரணங்களால்தான் முதல் கரு ஆடி மாத்தில் உண்டாகி சித்திரையில் உதிக்க வேண்டாம் என்று அக்கால பெரியோர்கள் எண்ணினார்கள். இதற்கு மிகச்சான்றாக, மகாபாரதத்தில் கர்ணனின் பிறப்பைச் சுட்டிக்காட்டலாம். சூரியன் மகனாக அவதரித்தான். அவனின் தர்மமும் வீரமும் நாடறியும். பேராண்மையுடையவன். மாற்றத்திற்காகப் போராடி தீயவர்களோடு நட்பு கொண்டான். பெற்றதாய் தந்தை அருகில் இல்லாமல் தனிமைப் படுத்தப்பட்டவன்.

நீரின்றி அமையா உலகு

திருமணமான புதியதில் தம்பதியர் இருவருக்குள்ளும் சண்டை, சச்சரவு வருவது இயல்பே. இதனால் கணவனிடம் கோபித்துக்கொண்டு தாய் வீடு திரும்பும் பெண்கள் அதிகம். அந்தச் சண்டைகளை சமாளித்து வெற்றி காண்பவளே குடும்பத் தலைவியாக நிமிர்கிறாள்.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்”  (குறள்.133:10)

ஊடலுக்குப் பிறகே காமம் பிறக்கும் என்று வள்ளுவர் கூறுகின்றார்.  ஐங்குறுநூறு பாடலின் மூலம் தலைவன் உடைய வீடு வறுமையால் நிறைந்தது என்பதுபோல் உள்ளது. ஏனெனில் ‘தேன் மயங்கு பாலினும் இனிய’ என்று தாய் வீட்டில் தலைவி தேனும் பாலும் கலந்த சோற்றை உண்டாள் என்கிறார். அப்படிப்பட்ட உணவு கணவன் வீட்டில் இல்லை. இருப்பினும் தலைவனின் அன்பின் காரணமாக மானுண்டு எஞ்சிய கலங்கல் நீர் சுவையானது என்கிறாள்.

நீர்இன்று அமையா உலகம் போலத்” (நற்றிணை.1:6)

நீர்இன் றமையாது உலகுஎனின்” (குறள்.2:10)

            இவ்வுலகமானது நீரால் சூழப்பட்டது. மழைநீர், ஊற்று நீர் என எங்கும் பரவியிருக்கிறது. உயிரினங்களுக்கு மிக தேவையான உணவுப்பொருட்களில் தண்ணீர்தான் முதலிடம் வகிக்கின்றது. மேற்கூறியக் காரணங்களால் தலைவன் வீடும் வசதி படைத்தவர்கள்தான். கோடை வெப்பத்தின் காரணமாகவே தலைவியின் கூற்று அமைந்துள்ளது. தலைவியும் பிறந்த வீட்டில் புகுந்த வீட்டின் பெருமையைக் கூறுவதால், தலைவன் தலைவிக்கு வரதட்சணை பற்றி துன்புறுத்துவது இல்லை என்பது தெளிவாகிறது. 

முடிவுரை

ஐங்குறுநூற்றுத் தலைவி அறிந்தும் தெரிந்தும் இருக்கின்றாள். குடும்பம் நடத்துவதிலும், தன்னுடைய குடும்பத்தை யாரிடமும் விட்டுக்கொடுக்காமலும் இருப்பது அப்பெண்ணின் அறிவு முதிர்ச்சியைக் காட்டுகின்றது. அக்காலத்தில் தலைவனும் தலைவியும் பெண்வீட்டிற்கு சென்று வருவது என்பது சிலகாலம் மட்டும்தான் நிகழ்ந்துள்ளது. அதாவது பொங்கல் பண்டிகை, ஆடிமாத பிரிவு, திருவிழாக்காலங்களிலும்  சென்று வந்துள்ளனர். குடும்பத்தில் பெண் கல்வி அறிவு பெற்றவளாக இருந்து விட்டால் அக்குடும்பமானது சீரும் சிறப்பும் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களின் பங்கு இல்லாமல் எந்தவொரு நிகழ்வும் நடைபெறுவதில்லை. என்னாதான் நாகரிகம் மக்கள் அடைந்துவிட்டாலும் பாரம்பரியமிக்க தமிழ் மக்கள் தங்களுடைய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மறக்கவும் இல்லை. மறுத்துச் செல்வதும் இல்லை.

வறட்சி (கவிதை)

நடந்தேன் நிலத்தில்

நெருப்பில் நடப்பதை விட

கொடுமையாக!

 

நீண்ட

தென்னை,

பாக்கு மரங்கள்

தங்களுடைய தலையை

யாருக்கோ?

அடகு வைத்தாற் போல்

மொட்டையாக!

 

தவளை சத்தம் என்றும்

ஓயாத நிலையில்

இருந்த

அந்த கிணறு

கல்லும் காகிதமுமாக!

 

பூக்களை,

சிரிப்பாய்

சிரிக்க வைக்கின்ற

அந்த செடிகள்

இன்று வாடிப் போக!

பூவையர் கூந்தலில்

காகிதப் பூக்கள்!

 

பறவைகள் பசுமையைத் தேடி…

சிறகுகள் படபடத்தன!

 

எருதுகள்

கலப்பையை

மறந்து விட்டன!

 

சூரியன்

இந்த பூமியை

குத்தகைக்கு

எடுத்தாற் போன்று,

வெப்பத்தை

அதிகமாக கொட்ட!

 

விவசாயிகளின்

அறுவடை நிலத்தில்

காய்ந்த புல்லும்,

வெடிப்புள்ள மண்ணும்

மட்டுமே!

 

மக்கள், மாக்கள்

வறட்சி என்னும் சுமையை

தலையில் மட்டுமல்லாமல்

வயிற்றிலும் சேர்த்து

தாங்கிக்கொண்டு !

கவிஞர் முனைவர் க.லெனின்

1.புதுப்பொலிவு

ஆசாரக்கோவையில் உணவு உண்ணும் முறையும் நடைமுறைத் தேவையும்

மனித வாழ்விற்கு உணவு, உடை, உறைவிடம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கும் விளங்குகின்றது. இவற்றுள் முதலிடம் பெறுவது உணவாகும். “பசிவந்தால் பத்தும் பத்துபோகும்” என்று பசியின் கொடுமையைக் கூறுவர். தீரா பசித்துன்பத்தில இருக்கும் ஒருவன முன் பணமும், உணவும் இருக்குமானால் பசிப்பவளது கைமட்டுமல்ல உயிரும் சேர்ந்து உனவின் பக்கம் ஈர்க்கும். எனவே உயிர் வாழ உணவானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகின்றது. ஒருமனிதன் உடையும், உறைவிடமும் இல்லாமல் உயிர் வாழ முடியும் ஆனால் உணவில்லாமல் உயிர் வாழ முடியாது. இதன் விளைவாகவே உணவை முன்வைத்து வகைபாடு செய்துள்ளனர். உயிர் வாழத் தேவையான இவ்வுணவிற்கு நம் முன்னோர் முக்கியத்துவம் அளித்திருப்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆசாரக்கோவை என்னும் நீதி நூல் நாள் தோறும் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகளை அல்வகையில் றிவு பற்றி கூறும் பொழுது உணவு உண்ணும் முறை பற்றியும் குறிப்பிடுகின்றது. அக்கருத்துக்கள் எவ்வகையில் வாழ்விற்கு விழுமியங்களாகின்றன என்பதை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவு உண்ணும் முறையில் ஒழுக்கம்

ஆசாரம் என்பது ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். மனித வாழ்விற்குத் தேவையான ஒழுக்கங்களைக் கோவையாகக் கூறுவதால் இது ஆசாரக்கோவை எனப்பட்டது. இதில நன்நடத்தை, உடை உடுத்தல், உறங்குதல் மற்றும் உணவு உண்ணும் முறை பற்றி கூறப்படுகின்றது. இவற்றுள் உண்ணும் முறை பற்றி ஆசாரக்கோவை பல ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுகின்றது. சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து காலைக் கடன்களை முறையாக முடித்தபின் குளிர்ந்த நீரினால் குளித்தல் வேண்டும். உடலில் உள்ள ஈரத்தன்மை உஉலர்ந்தும் உலராமல் இருக்கும் முன் காக்கும் கடவுளுக்கு வழிபாடு செய்தல் இன்றியமையாததாகும். இதனை,

“நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து

உண்டாரே உண்டாரெனப்படுவர்” (ஆ கோ-18)

காலினீர் நீங்காமை உண்டிடுக” (ஆ.கோ-19)

என்னும் இப்பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. பின் விருந்தினருக்கும், நம்மை ஈன்றவர்களுக்கும், நாம் ஈன்ற குழந்தைகளுக்கும் மற்ற அறிணை விலங்குகளுக்கும் உண்ணப்போதுமான அளவு உணவை மன நிறைவோடு அளித்தல் வேண்டும் என்பதனை,

விருந்தினர் மூத்தோர் பசுசிறைபிள்ளை – (ஆகோ-21)

இப்பாடலடி விளக்குகின்றது. உண்ணத்துவங்கும்முன தூய்மையாகவும், எச்சில் படாதவகையிலும் முறை சமைக்கப்பட்ட உணாவை அருகில் வைத்து உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணும் பொழுது நீர் அருந்தும் நிலை ஏற்படின் ஒரு கையால் மட்டுமே நீர் அருந்தகல் வேலு எச்சூழலிலும் உணவு அருந்தும் பொழுது மகிழ்ச்சியோடு ஆடி அசைந்தோ, மனசோர்வுன் உறங்கும் நிலையிலோ, வேளைப் பளுவின் காரணமாக நின்றுகொண்டோ உல அருந்துதலைத் தவிர்த்தல் நலமாகும். என ஆசாரக்கோவை வழியுறுத்துகிறது.

பண்பாடும் உணவும்

பல வகைக் காய்கறிகளை வேக வைத்துச் சமைப்பது சமையல் அதேனோ வாழ்கையின் பல சூழ்நிலைகளில் அனுபவமடைந்தோ, மதியால் அறிந்தோ, மன பக்குவமடைகின்றது. இதனை ஒரு குழுவோ இனமோ ஏற்று வழி வழியாக கடைபிடிப்பதும் மூலம் பண்பாடு உருவாகின்றது. அவ்வாறு காண்கையில் ஆசாரக்கோவை வடமொழி நூல்ன் இருந்து கருத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளமையால் இந்த நூல் ஆரிய சமுதாயத்தில் பண்பாட்டுக் கூறுகள் காணப்படுகின்றன. சார்ந்ததன வண்ணமாதல் என்ற சித்தாங்பு கருத்திற்கிணங்க ஆரிய மரபை மற்ற இனத்தவரும் நன்மை கருதி பின்பற்ற தொடங்கில் எனலாம். ஆரியாகளது வருகையால் இவர்களுடைய பண்பாடானது தமிழாகளுடைய பண்பாட்டோடு கலந்தது. அதனால் தமிழர்கள் ஆரிய மரபுப்படி சில பழக்கங்களை நாள்தோறும் கடைபிடிக்கலாயினா. அதிகாலை எழுந்து தன் காலைக் கடன்களை முடித்து இறைவனுக்கும் மூத்தோர்க்கும். விருந்தினருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தனர். பிறகு தன் வயிற்றுக்கு உணவு அளிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது. இது மற்ற இனத்தவர் ஆரிய மரபைக் கடைபிடிப்பதற்கான சான்றாதாராமாகிறது.

அறிவியல்தன்மை

அறிவியல் என்பது உண்மைத்தன்மையை புலப்படுத்துவது. அறிவியல் வளர்ந்த கொண்டு செல்லும் பொழுது, கண்டு பிடிக்கப்படும் பொருளின் அளவு சிறிதாகிக் கொண் (Micro/Nano/Femto) போவதைக் காணமுடிகின்றது. அறிவியலின் நோக்கம் உண்மை. தன்மையை வெளிப்படுத்துவதாகும். இதில் காணக்கூடிய உண்மைகள் இலக்கியங்களிலு காணக்கிடக்கின்றன என்பதை நாம் அறிய முடிகிறது. அவ்வகையில் ஆசாரக்கோவை கூறு. உண்ணும் முறையில் சில அறிவியல் தன்மைகளை காணமுடிகின்றது.

மற்ற விலங்குகளிலிருந்து மனிதன் உண்ணும் முறையில் மாறுபடுகிறான். உண உண்பதற்கு காலநேர அடிப்படை வைத்து உண்பவன் மனிதன் மட்டுமே முறையாக உண உண்ணாததால் ஏற்படும் மலச்சிக்கலைக் இரவில் பாலியல் உறவில் இன்பம் துய வருந்துபவனது நிலைக்கு ஒப்பிடலாம்.

“இரவில் மனச்சிக்கல்

காலையில் மலச்சிக்கல்

மனிதனுக்கு கொடிய நோய்”

என்று கூறும் அளவிற்கு மலச்சிக்கல் கொடுமையானது. பலர் இந்நோயால் துபைப்பட கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இனிப்பை முதலில் உண்ணும் பொழுது இதில் சுரக்கு “சிலிவிரிக்” என்ற அமிலம் ஏற்கனவே இருக்கும் உணவுடன் கலப்பதற்கு பயன்படுகின்றன. இறுதியில் கசப்புச் சுவை உண்ணும் பொழுது இதில் உள்ள கிரிமி நாசினி குடலில் உள்ள புழக்களை அளிக்கின்றது. இதனால் வயிற்றுக் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன. எனவே கோளாரு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

நமது கவனம் சிதறும்படியாக, ஆடி அசைந்தோ, நின்றுகொண்டோ உணவு 4 அருந்துவதால் செரிமான நரம்புகள் முழுமையாக இயங்குவதில்லை. அதனால் செரிமானத் தன்மையில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவதுடன் வயிற்றுக்கோளாறுகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் அறிவியல் தன்மையோடு பொருந்தியுள்ளதை அறியமுடிகிறது.

உளவியல் தன்மை

மனித மனத்தைப்பற்றி ஆய்வது உளவியல் ஆகும். இவ்வுளவியல் மனிதனின் மனச்சிக்கலுக்குத் தீர்வுகாண உதவுகின்றது. மனிதன் ஒன்றிற்கு அடிமையாவதற்கான மூலகாரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆனால் நம் இலக்கியங்கள் வாழ்வதற்கு சில விதிமுறைகளையும் முதியோர்களிடம் நடந்துகொள்ளும் முறை பற்றியும் கூறுவதில் சில உளவியல் தன்மையைக் காண முடிகின்றது.

 பொதுவாகவே தினமும் குளித்தல் என்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் குளித்தால் உடல் தூய்மையடைவதுடன் மனமும் தூய்மை அடைகின்றது. அச்சமயத்தில் இறைவனை வணங்கினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்று எண்ணினர். தினந்தோறும் வழிபாடு செயவதினால் வாழ்க்கை முழுவதும் மகிழ்வோடு இருப்போம் என்ற மன உணர்வு அனைவரிடத்தும் காணமுடிகின்றது. இதனால் காலையில் குளித்து இறைவனை வழிபாடு செய்கின்றனர். பிறகு உண்ணும் இடம் பற்றிக் கூறும் பொழுதுஇ இடம்சுற்றி நீர் இறைத்தல் வேண்டும் என்பதனால் உண்ணும் இடம் தூய்மை அடைவதோடு அங்குள்ள தூசிகள் உணவில் விளாதவாறு பாதுகாக்க உதவுகின்றது. அக்கால மக்கள்தரையில் அமர்ந்து உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டனர். இவ்வாறு உளவியல் தன்மைகள் ஆசாரக்கோவையில் காணப்படுகின்றன.

முடிவுரை

தமிழ் இலக்கிய நீதிநூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவையில் மனித வாழ்வின் அன்றாட நடைமுறைகளான உண்ணுதல், உறங்குதல், செயல்படுதல் போன்ற அனைத்தும் வாழ்வியல் முறைகளுக்கும் ஏற்ற வழி முறைகளை கூறுகின்றது. அவற்றுள் உணவு உண்ணும் முறைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் அனைத்தும் நம் நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும், தட்பவெட்ப நிலைக்கு ஏற்பவும், அதேசமயம் அறிவியல் மற்றம் உளவியல் தன்மைகளோடும் பொருந்தக் கூறியிருப்பது இன்றும் வியக்கத்தக்கது. பழமை என்று அனைத்தையும் விளக்குதல் அறிவீனம். பழமையாயினும் மனிதனின் வாழ்முறைகளின் அடிப்படையை, ஒழுக்க நெறிகளை அறிவியல் தன்மையோடு கூறும் “ஆசாரக்கோவையைய் பின்பற்றுதல்” இன்றைய மாசு அடைந்த சூழல வாழ்நிலையில் ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடே.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்- 635 130.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

கூனி, கைகேயின் உரையாடல்கள் – ஃபிராய்டிய உளவியல் நோக்கு

எழுதிகச் சாங்கியம்

விடுதலைப் பண்ணையம்

மீமெய்ம்மையியல் (Surrealism)

மீமெய்ம்மையியல் என்றால் என்ன? (What is means surrealism )

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இக்கால கட்டம் வரை வளர்ந்து வந்துள்ள இலக்கிய இயக்கங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று மீமெய்ம்மையியல் (சர்ரியலிசம்) ஆகும். 1924-2 ஆண்டு ஆன்றிபிரெட்டன் (Andre Breton) என்பவர் இவ்வியக்கத்தின் தன்மை குறித்தும் இவ்வியக்கத்தினர் மேற்கொள்ளும் சிலநெறிகள் குறித்தும் ஓர் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டார். அவர் கருத்துப்படி, பேசும் அல்லது எழுதும் மொழியாலோ, அல்லது வேறுவகையாலோ உள்ளத்தின் அடித்தளத்தில் இயல்பாக ஊற்றெடுத்துப் பொங்கிவரும் சிந்தனை அல்லது உணர்ச்சிக்கோவையினை ஒளிவுமறைவின்றி உள்ளத்தில் எழுந்த வண்ணமே வடித்துக்காட்டுவது ‘சர்ரியலிசமாகும்” என்கிறார்.

இவ்வியக்கத்தின் வாயிலாகக் கலையுலகில் மனித மனத்திற்குப் புதியதொரு விடுதலையளிக்கும் திசைநோக்கி ஒரு புரட்சியை உருவாக்க முடியுமென்று அவர் நம்பினார். சர்ரியலிச இயக்கத்தின் வாயிலாக உள்ளார்ந்த உணர்வு நிலையின் உண்மை நடப்பினைப் புறவுலக நடப்போடு இயைய வைத்துக் காட்டமுடியும் என்று நினைத்தார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கவிதை உலகில் மட்டுமன்றிக் கலையுலகிலும் இவ்வியக்கம் ஊடுருவலாயிற்று.

மீமெய்ம்மையியலின் வரலாறு ( what is surrealism history )

இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில் மலர்ந்த கலைப் படைப்புக்களிலெல்லாம் ‘சர்ரியலிசத்தின்’ தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகின்றது. சப்பான், எகிப்து, யுகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா. செர்மனி. போலந்து, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, அர்ஜைன்டைனா, மெக்ஸிகோ. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய அனைத்திலும் ‘சர்ரியலிசக் கவிஞர்களும் கலைஞர்களும் ஓவியர்களும் ‘சர்ரியலிச’ மதிப்பீட்டாளர்களும் இருந்திருக்கின்றார்கள். இந்நாடுகள் அனைத்திலும் இவ்வியக்கத்தின்படி கலைஞனும் கவிஞனும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களென்றும் ஒருவரையொருவர் எதிர்நோக்கிச் செயல்படுகின்றனர் என்றும் கருதப்பட்டு வந்தது.

1949 ஆம் ஆண்டு ‘சர்ரியலிச’ இயக்கத்தின் மிகப்பெரிய கலைக்காட்சியொன்று பாரிஸ் மாநகரில் நடைபெற்றது. இதில் 24 நாடுகள் பங்கேற்றன. இதற்குமுன் 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்ரியலிச உலகக் கண்காட்சியில் 18 நாடுகள் பங்கேற்றிருந்தன. அந்நாடுகள் சர்ரியலிச இயக்கத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகளையும் கலைப்பொருட்களையும் கலைப்படைப்புகளையும் அப்பொருட்காட்சிக்கு அனுப்பியிருந்தன. இவ்விரண்டு பொருட்காட்சிகளாலும் ‘சர்ரியலிச’ இயக்கம் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கின்றது என்ற கருத்து நிலைநாட்டப்பட்டது.

கடந்த நாற்பதாண்டுகளாகச் ‘சர்ரியலிச’ இயக்கம் கவிதையிலும் மிக வேகமாக ஊடுருவியிருக்கின்றது. ‘கவிதை’ என்பது வெறும் முருகியல் சுவை இன்பக்கருவி மட்டுமன்று; துண்ணியல் இயற்கையறிவை அறிவதற்கு உரிய ஊற்றுக்களமும் ஆகும் என்பது உணரப்படலாயிற்று. இங்ஙனம் உணரப்பட்ட கருத்து மாற்றம் ‘சர்ரியலிச’ இயக்கத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாக எண்ணப்படுகின்றது. காதல் பற்றியும் வியப்பு வண்ணம் பற்றியும், ‘சர்ரியலார்’ கொண்ட கொள்கைகள் புதியதொரு மனோபாவத்தினை உருவாக்கப் பயன்பட்டன.

மீமெய்ம்மையியல் இயக்கத்தின் முன்னோடிகள்

சரியலிச இயக்கத்தின் முன்னோடிகளுள் பெரும்பாலோர் பிரான்சு நாட்டில் தோன்றினர். லூயிஸ் அரகன்- (Louis Aragon), அன்டோனின் ஆர்டாட் (Antonin Artaud) ஆன்றி பிரெட்டன் (Andre Breton), ஆமி சிசரே (Aime Cesaire), ரேனி சார் (Rane Char), ரேனி கிரீவல் (Rane Crevel), ராபர்ட் டெஸ்தாஸ் (Robert Desnos), பால்எலார்டு (Paul Eluard), ஜுலியன் கிராக் (Julien Gracq) மைகல் லெய்ரிஸ் (Michel Leiris), பெஞ்சமின் பேரட் (Benjamin Peret), பிரான்ஸிஸ் பிகாபியா (Francis Picabia), ரேமாண்ட் குயினியா (Raymond Qucneau) பிலிப் சோபால்ட் (Phillippe Soupault), டிரஸ்டன் ஜாரா (Tristan Tzara), ரிம்பாடு (Rimbard) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மீமெய்ம்மையியலின் போக்குகள்

கவிதையைப் பொறுத்தமட்டில் ‘சர்ரியலிசம்’ என்பது பொறிகளால் காணும் உலகத்தைக் கவிஞன் மிகவும் தெளிவாகக் கண்டு கொள்வதற்குரிய ஓர் அறிவுக்கருவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் வாழ்க்கையின் முக்கிய சிக்கல்களைத் தீர்க்கவும் மனித வாழ்வின் அமைப்புக்களை மாற்றியமைக்கவும் புரட்சிசெய்யத் தொடங்குகிறான். இம்முறையில் முனையும் கவிஞன். படைப்பில் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற யாப்புவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய விதியில்லை. புதிய விதிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமுமில்லை.

சர்ரியலிசக் கவிதையின் முக்கிய பொருள்கள்

            காதல், புரட்சி, வியப்பு, உரிமையுணர்வு, மனித ஆசையின் விசுவரூபம், உலகத்தை நையாண்டி செய்தல், அடிமனச் சிந்தனை உலகைக் காட்டல், கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி, மனமயக்கங்களைப் பற்றிய அறிவு, அடிமனத் தூண்டுதல்களால் இயல்பாக எழுதும்முறை ஆகியவை ‘சர்ரியலிச’ எழுத்தாளர்களால் உண்மை அறிவு வாயில்களாகப் போற்றப்படுகின்றன. உறக்கநிலைக்கும் விழிப்புநிலைக்கும் உரிய விளக்கங்களுக்கும் அவ்விளக்கங்களின் நுண்ணிய பகுப்பு முறைகளுக்கும் ‘சர்ரியலிச’ எழுத்தாளர்கள் மதிப்புக் கொடுக்கின்றனர். முருகியல் நினைப்புக்களினின்றும் பகுத்தறிவியல் கட்டுப்பாட்டினின்றும் விடுபட்டுச் சுயமாக எழுதும் எழுத்தானது உள்மனத்தின் இயக்கத்தைப் புலப்படுத்துகின்றது. ‘சர்ரியலிச’ புரட்சி என்பது தருக்கத்தையும் சமுதாய நடைமுறையையும் எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் மரபு வழிப்பட்ட விதிமுறைகளையும் எதிர்த்து நடப்பதாகும்.

‘சர்ரியலிசம்’ என்பது கவிதையோடு மட்டும் தொடர்புடையதன்று; நாடகம் நாவல், திரைப்படம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றோடும் தொடர்பு உடையதாகும்.  சர்ரியலிசு எழுத்தாளர் மனத்தில் தோன்றும் காட்சிகளையோ உணர்ச்சிகளையோ, தோன்றிய அவ்வண்ணத்திலேயே எழுதித்தீர்த்து விடுவது ஒன்றே தங்கட்கு உகந்தது என எண்ணுகின்றனர். அங்ஙனம் எழுதுவதன் வாயிலாக அறிவியக்கம், தருக்கம் (Logic) ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிநின்று உரிமையோடு கலையுலகில் தங்கட்குரிய பணியினைச் செய்து முடிப்பதாக அவர்கள் உணருகின்றார்கள். மனம் எப்படிச் செல்கின்றதோ அப்படி எழுதுவதே அவர்களின் நோக்கமாகும். சுருங்கச் சொல்லின், மனத்தின் வழியே சர்ரியலிசக் கவிஞனின் கலைஞனின் வழியாகும்.

பிரெட்டன் என்பவர் சர்ரியலிச கவிதைகளை பின்வருமாறு எழுதுகிறார்.  “வசதியாக ஓரிடத்தில் உட்கார்த்து கொள்ளுங்கள்; மனக் காட்சிகளை உணரும் மனோநிலையில் இருங்கள். உங்கள் புத்திசாலித்தனம் திறமை எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இலக்கியம் என்பது எல்லாவற்றிற்கும் இழுத்துக் கொண்டு போகும் சோக மிகுபாதை என்று சொல்லிக் கொள்ளுங்கள்; வேகமாக எழுதுங்கள்; எதைப்பற்றி எழுதுகிறோமென்று முன்யோசியாமலேயே எழுதுங்கள்; என்ன எழுதியிருக்கிறோம் என்று திரும்பப் படிக்கும் ஆசையின்றி எழுதுங்கள்.  முதல் வாக்கியம் தானாக வந்துவிடும். அடுத்த வாக்கியம் என்னவென்று முடிவு செய்வது கடினந்தான். ஆனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப் படக்கூடாது. நீங்கள் விரும்புகிற வரையிலும் எழுதிக் கொண்டேயிருங்கள். முணுமுணுப்பை நீங்கள் நம்பலாம். நீங்கள் ஏதோ செய்து விட்டீர்களென்று மௌனம் உங்களை ஆட்கொள்ளும்போது அடுத்த வார்த்தையை நீங்கள் எழுதுங்கள்.  வார்த்தைகளின் அர்த்தங்களில் சந்தேகம் வரும் போது ஏதேனும் ஓர் எழுத்தினை எழுதுங்கள். உதாரணமாக I என்ற எழுத்தினை எழுதுங்கள். அந்த எழுத்தை முதல் எழுத்தாக வைத்து அடுத்த வார்த்தையை உருவாக்குங்கள்.

‘ஹிஸ்ட்டீரியா நோய்’ சர்ரியலாரின் கவனத்தை மிகவும் ஈர்த்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கவிதைக் கண்டு பிடிப்பென்று பிரெட்டனும் ஆரகனும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, இந்நோயினால் பாதிக்கப்படும் ஒருவரின் மனநிலை சாதாரண மனிதர் ஒருவரின் மனநிலையை விட உயர்ந்ததாகும். ‘ஹிஸ்ட்டீரியா’ ஒரு நோய் என்று காணாமல், “மனிதனுக்கும் அவனை அடிமைப்படுத்த நினைக்கும் தருமநெறிகளுக்குமிடையே உள்ள தொடர்பு தூண்டப்படும் போது பிறக்கும் மனநிலை என்று கண்டனர். அவ்வாறே தற்செயலாக நடந்துவிடும் நிகழ்ச்சிகளுக்கும் ‘சர்ரியலார்’ மிக்க மதிப்புக் கொடுத்தனர். புறவுலகம் போலவே அகவுலகமும் சர்ரியலார்களுக்கு மிகமிக முக்கியமானது. ‘அசுவுலகு புறவுலகு, நனவுவகு கனவுலகு, நனவு நிலை – தனவற்றநிலை, சாதாரண மனிதனின் மனோநிலை அசாதாரண மனிதனின் மனோநிலை ஆகியவற்றில் உள்ள இரண்டு எல்லைக்கோடுகளையும் மனிதன் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கையின் முழுமையான யதார்த்தம், கண்ணுக்குத் தெரிவதைவிட மிகையான யதார்த்தம் – சர்ரியலிசம் சர்ரியலிச சிந்தனையாளனுக்குப் பிடிபடுகின்றது.

”சர்ரியலிச’ மென்பது அமைதியின்றி ஓயாது அலைகின்ற மனிதமனக் கூக்குரலின் பண்ணாக ஒலிக்கின்றது. மனித மனத்திற்கு அமைதி இங்கு மில்லை; அங்குமில்லை; எங்குமில்லை; ஆயினும் மனத்தின் அடித்தளத்தில் மாளாது அடித்துக் கொண்டேயிருக்கும் உணர்ச்சி அலையின் ஊடாக இழைந்தோடும் ஒரு சோகதேகத்தைத் தணித்து இதயத்தின் வேதனைக்குத் தீர்வு காண்பதற்கும் ‘சர்ரியலிசம்’ முயலுகிறது.  மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ வகையான தொடர்புகளைக் கட்டறுத்து மனிதனை விடுதலை வானில் பறக்கச்செய்ய முயலுகிறது. உலக வாழ்வில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத மரணம் பற்றியும், நிலையாமை பற்றியும் கவலையின்றி ஆராய முற்படுகின்றது. 

மனிதனின் உயிர் வாழ்வோடு ஒட்டி உறவாடும் இயற்கையான உணர்வினின்றும் ஊற்றெடுத்துப் பிலிற்றும் இன்ப உணர்வு, உள்மனத்தின் தூண்டுதல், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களைக் குறித்து மனித மனம் எண்ணும்போது எழும் ஒருவகை அவலக்குரல் ஆகியவை சர்ரியலிசவாதிகளால் பெரிதும் போற்றப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது, மனித ஆசை நிறைவேறுவதற்குரிய வழியில் கிடக்கும் தடைக்கற்கள் தகர்த்தபட வேண்டும் எனச் சர்ரியலார் கருதுகின்றனர்.  அந்தத் தடைக்கல் பெரும்பாலும் சமுதாயமாக கண்டிப்பாக இருக்கக் கூடும்.  இரக்கப்படாமல் மாற்றியே தீர வேண்டுமென்பது சர்ரியலாக கொண்டுள்ள திண்மையான எண்ணமாகும்.

மீமெய்ம்மை இயலின் தனிச் சிறப்பு

‘சர்ரியலிசம்’ என்பது சமயமும் அன்று; அரசியலும் அன்று; அறிவு என்பது இதுவரைக்கும் கொண்டிராதிருந்த ஒரு புதியகோலத்தை, சாதாரணமாக நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒருகோலத்தைத் தாங்கி வருவது என்று சர்ரியலிச ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பகுத்தறிவுப்பார்வையில் மட்டுமே உலகத்தைக் காண்பது என்பது சர்ரியலிசத்திற்கு உடன்பாடன்று. இன்றுள்ள சமுதாய நடப்பினால் பயன் இல்லையெனில் அந்நடப்புக்குப் பதிலாகப் புதியதொரு சமுதாய நடப்பினை உருவாக்கிப் பயன்காண இக்கொள்கையினர் விழைகின்றனர்.

சிலர் ‘சர்ரியலிசம்’ என்பதைக் கடவுள் இல்லாத அருளியல் நெறியாகக் கொள்வதாகவும் தெரிகின்றது. ஆனால் உலகத்தை மாற்றவேண்டுமென்று எண்ணுகின்ற ஒருவனது தணியாத தாகத்தினைச் சர்ரியலிசம் வெளிப்படுத்துகின்றது; தணிக்கவும் செய்கின்றது. மனித மனமானது அடைகின்ற ஒரு குறுப்பிட்ட மகோன்னதமான மனோபாவத்தை – இறப்பும் பிறப்பும் உண்மையும் கற்பனையும் இறந்த காலமும் நிகழ் காலமும் இல்லாதொழிந்து முரண்பாடு நீங்கி முருகியெழும் ஒருவகைப் புதிய மனோபாவத்தைச் ‘சர்ரியலிசம்’ குறிக்கின்றது. இதுவரைக்கும் வாழாத-வாழ்ந்து மனிதனை உருவாக்கிக் கண்டு காட்டாத புதியதொரு உண்மையாக நேசித்து இன்புறுவதாகிய ஒருபுரட்சியையும் சர்ரியலிசம் செய்கின்றது.

உள்ளதை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது நிழற்படக் கலையாகும். அக்கலை போன்றதே சர்ரியலிசமாகும். சர்ரியலிச எழுத்தாளன் தான்காண்பதை ஓரளவு மெருகேற்றிக் காட்ட வேண்டு மென்பதோ, ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் பணிந்து சிறிது மாற்றிக்காட்ட வேண்டுமென்பதோ, தான்காண்பதில் உள்ள பொருளில் அல்லது காட்சியில் அல்லது மனோபாவத்திலுள்ள மாசினைத்துடைத்துக் காட்ட வேண்டும் என்பதோ அவசியமன்று. ஒருவன் தனகனவில் காண்பது போன்ற காட்சி களை சர்ரியலார் தம் கலையிலும் படைத்துக் காட்டுகின்றனர். இங்ஙனம் படைத்துக் காட்டும்போது தருக்கச்சார்பு துறக்கப்படுகிறது. ஒன்றை நடைமுறைப்படுத்திச் சோதனை செய்து பார்த்தே ஏற்றுக்கொள்வது என்ற கொள்கைக்கு இடமில்லை. அன்றியும், ஒரே பொருளின், காட்சியின் வெவ்வேறான கூறுகளை அல்லது பிரிக்கப்பட்டுத் தனித்தனியே கிடக்கும் கூறுகளைச் சர்ரியலார் மதிக்கின்றனர்.  அந்த ஒவ்வொரு கூறுக்கும் ஒருவகை முழுமை உண்டு என்று எண்ணுகின்றனர். மனித உடம்பின் ஒரு பாதியை மட்டுமே ஓவியத்தில் சர்ரியலார் தீட்டிக் காட்டி யதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. ஒரு பாதி உடம்பைக் கொண்டு முழுவுடம்பின் தன்மையை ஊகித்தறிய முடியும் என்பது அவர்களின் கருத்து. ஆயின், ஒரு பொருளை அப்படியே முழுமையாகக் கண்டாலும் சரி, அல்லது அதையே பல்வேறு கூறுகளாகப் பிரித்துக் கண்டாலும் சரி அப்பொருளை முற்றிலும் மறைத்து விடுவது நோக்கம் அன்று.

பேராசிரியர் நா. வானமாமலை புதுக்கவிதை பற்றிய தம் நூலில், சர்ரியலிசம் தோன்றிய தொடக்கம் பற்றியும் அதற்குரிய கருப் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ள செய்திகள் சர்ரியலிச இயக்கத்தின் உயிர்ப்பான சில உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன.

இதுகாறுங் கூறியவற்றால் மீ மெய்ம்மையியல் (சர்யரிலிசம்) என்ற இயக்கத்தின் போக்கினைப் பற்றியும் உயிர்ப்பான தனிஇயல்புகள் பற்றியும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இவ்வியக்கம் பற்றிய அடிப்படை உண்மைகளைப் பின்வருவாறு பகுத்துக் காணலாம்.

(1) சர்ரிலிச இயக்கம் என்பது ‘உள்மனத்தின் தடையற்ற சுயஇயக்கம்: அஃதாவது, எண்ணங்களின் செயல்முறையைச் சொல்லாய், எழுத்தால் அல்லறு வேறு முறைகளினால் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான உள்மனத்தின் தடையற்ற சுயஇயக்கம் ஆகும். அழகியல், அறிவியல் போன்ற நெறிகளைப் புறந்தள்ளிவிட்டு அறிவு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத பொழுது எழும் சிந்தனையை எழுந்த அவ்வண்ணமே எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்துவது.

(2) மனிதனின் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை சாரியலிசம் மதிக்கின்றது.

(3) கனவு, உருவெளித் தோற்றம் (hallucination) உள்மனத்தின் இயக்கம், ஹிஸ்ட்டீரியா நோய், பைத்தியக்காரத் தளம், தற்கொலை, தற்செயல் நிகழ்ச்சிகள், திடீரென நிகழும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதில் சர்ரிலிசம் முன்னே நிற்கிறது. தூங்கும்பொழுதோ தூங்குவதாக நினைத்துக்கொள்ளும் பொழுதோ மனக்கண்ணிற்குப் புலப்படும் அதிசயமான, அற்புதமான அபூதமான காட்சிகளைத் தீட்டிக்காட்டவும் சர்ரியலிசம் தயங்குவதில்லை,

(4) ஒன்றை நராய்ந்து வெளிப்படுத்தும் நிலையிலின்று மாறி ஒருவன், ‘தன்னுடைய மனதிற்குள்ளே தானே மேற்கொள்ளும் சுயமான பிரயாணத்தின்போது உணர்ந்தவற்றை அறிவியக்கத்தின் பாரிசீலனைக்கு உட்படுத்தாமல் தூய்மையாக வெளியிட வேண்டும். அப்படி வெளியிடுவதே சரியானது உண்மையானது. இவ்வாறு சர்ரியலிசவாதிகள் நம்பு கிறார்கள்.  

(5). சர்ரியலிச இயக்கத்தினர் தத்தம் கால, சமுதாய நடப்புகளில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் கேடுகளையும் நகைப்புக்குரிய செயல்முறைகளையும் அவலக் காட்சிகளையும் உள்ளபடி எடுத்துக் காட்டுகின்றனர்.

(6) சர்ரியலிச இயக்கம் தோன்றுவதற்குக் கீழ்க்காணும் உணர்வுகளின் தாக்குதல் காரணமாய் இருந்திருக்கின்றது. ‘வாழ்க்கையில் ஏமாற்றப்பட்ட சோகம்; அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாக வெறுப்பு; தன் சக்திக்கு மீறிய புறவுலக நிகழ்வுகளில் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறதே என்ற ஆற்றாமை; தன் சோகங்களுக்குக் கைகொடுக்க எந்த தேவதூதனும் இறங்கி வரவில்லையே என்ற கசப்பான யதார்த்தம்; பவித்திரமானது எனப் பாராட்டி வந்த நம் கலாச்சாரமும் நாகரிகமும் இந்தப் படுகுழிக்கா நம்மை அழைத்து வந்திருக்கின்றது என்ற பயம்.

மீமெய்ம்மை இயலும் தமிழ் இலக்கியமும்

சர்ரியலிச ஓவியம் போன்ற இயக்கம் கவிதைத்துறையிலும் சிற்பம் ஏனைய கலைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள வரலாறு ஐரோப்பிய நாடுகளிலும் மேலை நாடுகளிலும் உண்டு. ஆயின் தமிழகத்தில் அவ்வியக்கம் அரும்பி மலர்ந்த வரலாறு இல்லை. காரணம் அதற்கேற்றதொரு சமுதாயச் சூழலோ நிகழ்ச்சிப் பின்னணியோ இங்கு நீண்ட காலமாக உருவாகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிய சர்ரியலிச இயச்சுத்தின் தாக்கமும் உணர்ச்சியும் ஏனைய நாடுகளில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் அங்கு இது நடந்து முடிந்த கதை. ஆயின் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக இது தொடங்கி வளரும் கதைபோல் உள்ளது. இவ்வியக்கம் நேரடியாக இங்குப் பேசப்படவுமில்லை; இலக்கிய ஆராய்ச்சி உலகில் தனியிடத்தைப் பெற்றிடவும் இல்லை. மறைமுகமாக இலைமறை காய்போல் சர்ரியலிச இயக்கத்தின் சாயல் மிக அண்மைக் காலத் தமிழ்ப் படைப்புக்களில் சிற்சில இடங்களில் இருப்பதுபோல் தெரிகின்றது. கவிஞர் சிலருடைய படைப்புக்களைப் பயிலும் போது, நாவலாசிரியர் படைப்புக்களின் சில பகுதிகளைப் பயிலும்போது சர்ரியலிச இயக்கம் பெற்றிருந்த சில முத்திரைகளைத் தற்செயலாக நம்மால் உணரமுடிகின்றது. இன்றைய புதுக்கவிதைவாணரின் சில கவிதைகளிலும் அழுகை போன்ற சில நாவல்களிலும் சர்ரியலிச இயக்கக் கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன. இனிஒரு சான்று காண்போம்.

கோயில் என்பதும் தெய்வம் என்பதும் புனிதமானவை என்று கருதப்பட்டன. இவற்றைக் குறைகூறிப் பேசுதற்கோ இவற்றுள் குறையிருப்பினும் ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்துவதற்கோ முன்னை நாளில் பெரும்பாலான எழுத்தாளர்கள் முயன்றது இல்லை. ஆயின், இன்று தனக்கே உரிய தனித்த மனோபாவத்தோடு தனிமனிதனையும் சமுதாயத்தையும் நோக்கித் தனித்திறன் மிக்க வகையில் தனிநடையில் சில அடிப்படை உண்மைகளை மிகவும் பச்சையாக வெளிப்படுத்தும் நாவலாசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன், கோவிலைச் சுற்றியும் தெய்வத்தைச் சுற்றியும் சூழ்ந்திருக்கின்ற மனிதக்கூட்டத்தின் போலித் தனத்தைத் தம்உள்ளம் உணர்ந்தபடி, சிறிதும் ஒளிவு மறைவின்றி, உள்மனத்தின் இயக்கம் தூண்ட, பின்வருமாறு உணர்த்தி யுள்ளார்,

“மாணவர் கல்வி பயனுடையதாக மாறவேண்டும்;

தொழிலாளிக்குப் பற்றாக்குறை குறைய வேண்டும்;

நிலம் அரசாங்கத்துக்கு அல்லது மக்களுக்கு உடைமையாக வேண்டும்.

கோயில் எதிர்ப்பு எழுந்து கொண்டு இருக்கிறது;

ஏன் கொள்ளையும் நடக்கிறது.

கடவுள்மேல் மனிதன் கொண்ட கோபம் அல்ல;

அதன் சொத்து சரியாக பராமரிக்கப் படவில்லை.

நல்ல பொதுக் காரியங்களுக்கு அது பயன்படவில்லை;

பிள்ளையில்லாதவர்கள் எழுதிய சொத்து;

கொள்ளை இலாபம் அடித்தவர்கள் குவித்தசொத்து;

அதனை நாட்டுப் பிள்ளைகள் படிக்கத்

தொழில்வளம் பெருக்கப் பயன்படுத்த வேண்டும்.

இப்படியே விட்டால் கொள்ளைக்காரர்கள்

புகுந்து கொள்ளையடிப்பார்கள்;

சிலைகளைத் திருடினார்கள்;

நகைகளைத் திருடுகிறார்கள்;

வெள்ளி பொன் எல்லாம் கொள்ளை போகிறது;

அரசாங்கம் அவற்றைக் கைப்பற்றித்

தெய்வங்களை இந்தநாட்டுக் காந்திகளாக

மாற்ற வேண்டும்;

தெய்வங்களுக்கு நகை ஏன்?

பொன் வைரம் இவை

யாருடைய பிரதிநிதிகள்?

செல்வச் சீமான்களின் வாழ்க்கையைக்

கோயில் சிலைகள் மேற்கொண்டுள்ளது.

அம்மன் சந்நிதியில்

சென்று தரிசிக்கும்

வீட்டு அம்மாக்கள் தாய்மார்கள்

கண்களைப் பறிப்பது எது?

ஜெகஜ் ஜோதியாக விளங்கும்

கல்லும் பொன்னும் தானே!

இவை அணிந்தால்தான்

பெண்ணுக்கு மதிப்பு என்பதை

இந்தக் கோவில் சிலைகள் கற்றுத் தருகின்றன.

அந்த நிலை மாறிக்

கோயிலில் வெறும் சிலைகள் இடம் பெற்றால் போதும்;

செல்வக் குவிப்பு அங்கே தேவை இல்லை;

அங்கே இறைவன் இருக்கட்டும்;

இறைவி இருக்கட்டும்;

அவர்கள் நமக்கு அருள் செய்யும் திருக்காட்சி அமைந்து கிடக்கும்;

ஏனோ இப்படி என் நினைவுகள் இயங்கிக் கொண்டிருந்தன?

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

புதுப்பொலிவு – கவிதை

கண்ணைச் சிமிட்டி

கைகால்களைத்

தாளமிட்டு

பெண் பிறப்பாய்…

இவ்வுலகில்

அம்மாவின்

முந்தானையைப்

பிடித்துக்கொண்டு

அழும் குழந்தையாய்…

கையைப்பிடித்துக்கொண்டு

பள்ளிக்குச் செல்லும்போது

சிறுமியாய்…

அம்மாவுடன் சண்டை

தம்பியுடன் சச்சரவு

அப்பாவுடன் சமாதானம்

விளையாட்டுப் பிள்ளையாய்…

விவரம் தெரிந்த பூவையாய்

கல்யாணம் பெண்களுக்கே

உரிய புதுப்பொலிவு!

கண்களில் சிரிப்பும்

உதட்டில் புன்னகையும்

கால் கட்டை விரல்

தரையில்

கோலம் போடுவதுமாய்…

பெண்ணாகப் பிறந்தவளுக்கு

பிள்ளைப்பேறு…

உண்மையின் விளக்காய்!

குடும்பச் சுமைகளை

உள்ளங்கையில்

தாங்கிய

இல்லத்தரசியாய்…

பெண்ணே – உனக்கு

எத்தனை பிறப்புக்கள்

ஒவ்வொரு பிறப்பிலும்

புதுப்புது பொலிவுடன்…

கவிஞர் முனைவர் க.லெனின்

கொடிமரத்தின் வேர்கள் கவிதையில் தேசியம்

முன்னுரை

உயிரினங்களில் மனிதனே அறிவு வளர்ச்சியால் மேலோங்கியுள்ளான். மனிதன் மொழி, இனம், சமூகம், நாடு என்று ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறான். தனது தன்னுடையது என்ற உரிமையோடு நாட்டைக் காப்பவனாக இருக்கின்றான். அதேசமயத்தில் உரிமைகள் பறிக்கப்படும்போது அதற்காகப் போராடுகிறான். உயிர்த் தியாகமும் செய்கின்றான். அவ்வுத்தமர்களை என்றும் போற்றி வணங்கும் பண்பாளர்களாக இலக்கியவாதிகள் உள்ளனர் என்பதைக் காட்டுமுகமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொடிமரத்தின் வேர்கள்

சமூகத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பும் இலக்கியங்கள். நாடகம் நாவல், சிறுகதை, கவிதை போன்றவையாகும். இதில் கவிதை மக்களுக்கு எளிதில் சென்றடையும். மேலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வைரமுத்து தேசிய அவலங்களை கொடிமரத்தின் வேர்கள் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் பதிவு செய்துள்ளார். இதில் அன்றைய அறிவியல் முன்னேற்றத்தின் விளைவுகளையும் தேசத்தியாகிகளின் நிலையையும், மக்கள் அமைதியின்றி போராடும் நிலை பற்றியும் வெளிப்படுத்துவதை இக்கவிதை தொகுப்பில் காணமுடிகின்றது.

சுதந்திரத்திற்குப்பின் தியாகி

இந்திய நாட்டு விடுதலைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்தனர் தியாகிகள். சுதந்திரப் போராட்டத்தில் எஞ்சிய தியாகிகள் வலுவிழந்த நிலையில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கிராமம் ஒன்றில் தியாகி ஒருவர் மந்திரி வரும் நாளன்று இறந்துபோனார். அவரின் உடல் மந்திர் வரும் சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று தொண்டர்களிடத்திலும் மந்திரியின் பாதுகாப்பிற்காக வந்த காவலர்களிடத்திலும் தியாக்பின் உடல் சுடுகாடு செல்ல சுடுகாடு கேட்டது.  அந்த அவல நிலையை.

ஒரு தியாசியின் பிணம்

சுடுகாடு வருவதற்குச்

சுதந்திரம் கேட்டது

கிடைத்ததா என்ன?

இவரைப் பற்றி

எழுதி வைக்கும்முன்

மகாத்மா பாவம்

மரித்துப் போனார்

என்ற இக்கவிதை அடிகள் தியாகியின் நிலையைத் தெளிவு படுத்துகிறது.

சிதை உண்ட இந்தியா

வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர் அரசர்களிடம் இருந்து ஒற்றுமையின்மையை அறிந்து கொண்டு, இந்தியாவைத் தன் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்திக் கொண்டனர். அடிமையில் கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரமாய் வாழ சுதந்திரம் தேவைப்பட்டது. ஆனால் சுதந்திரம் கிட்டிய இந்தியாவிற்கு இனம், மொழி, தொகுதி பங்கீடுகள். தேவைப்பட்டது என்பதனை,

அடிமை இந்தியா

தேசியம் கேட்டது

சுதந்திர இந்தியா

தேர்தல் கேட்டது

என்று அடிமை இந்தியா காசி முதல் கன்னியாகுமரி வரையிலான மனித ஒருமைப்பாட்டை வலியுறுத்தியது. அதன் விளைவாகத்தான் சுதந்திரமும் பெறமுடிந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த நம் மக்களோ இனம், மொழி என்ற அடிப்படையில் தங்களைப் பிரித்துக்கொண்டு, அவர்களுக்குள்ளேயே ஆட்சி புரிவதில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.  தங்களிடம் இருக்கும் இயற்கை வளங்களை மற்ற மாநிலத்திற்குப் பகிர்ந்தளிப்பதற்கு மனம் இன்றித்தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்கின்றனர். அன்று மக்களுக்காகப் போராடியவர்கள் தேசியம் கேட்டனர்; இன்று பணத்திற்கும். பதவிக்கும் போராடுபவர்கள் தேர்தல் கேட்கின்றனர். சுதந்திர இந்தியாவில் தேசியம் அழிந்து கொண்டிருப்பதை இக்கவிதை காட்டுகின்றது.

பூங்காவிற்குப் புதியசட்டம் பிச்சைக்காரனால்

மனிதன் செய்யும் தவறுகளைச் சரிசெய்யும் பொருட்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் தவறு செய்தவன் யாராக இருப்பினும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. அதே ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றையச் சூழலில், பசுமையான பூங்கா ஒன்றில் வெறுந்தட்டை கையில் கொண்ட பிச்சைக்காரனிடம் அவள் தட்டைப் போன்றே வயிறும் வெறுமையாக இருந்தது. அந்த பூங்காவிற்கு ஓய்வு எடுக்க வரும் மக்கள் பிச்சைக்காரனைப் பார்த்து வேறு பக்கம் திரும்பினர். அந்தத் தருணத்தில் காகம் ஒன்று கரைய அதன் ஓசையில் பசியில் வாடிக்கிடந்த அவன் திடுக்கிட்டான். மனிதன் போனால் போகட்டும், நான் உனக்கு பிச்சை இடுகின்றேன் என்பது போல ஒரு மரம் தன் மலரை அவனுக்கு பிச்சையிட்டது. அவன் அந்த மலரின் இதழை மெல்ல மெல்லத் புசிக்கத் தொடங்கினான். அடுத்தநாள் பூங்காவின் அறிவிப்புப் பலகையில் ஒரு வாசகம் பூக்கள் புசிப்பதற்கல்ல என்று எழுதப்பட்டது. இதில் இயற்கை காட்டும் பரிவு கூட மனிதர்களிடத்தில் இல்லை என்பதும் சட்டங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு பயன்படாத நிலையும் வெளிப்படுகின்றது.

காதலனுக்கு கடிதம்

இன்று உலகந்தோறும் பல தீவிரவாத செய்ல்கள் ஊடுருவி வருகின்றது. இது போன்ற தீவிரவாத அமைப்புகளினால் ஏராளமான மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர். இதைத் தடுக்க அரசு பாதுகாப்புப் படையை நியமித்திருக்கின்றது. அந்தப் பாதுகாப்புப் படையில் இருக்கும் வீரன் ஒருவனுக்கு அவன் காதலி கடிதம் எழுதுகிறாள். அதில்,

காதலா

நீயும் நானும்

ரகசியமாய் நடந்து போகும்

ராத்திரிச்சாலை

இப்போது வெடிகுண்டுகளின்

விதைப் பண்ணையாகிவிட்டது.

மரணத்திற்கு இங்கு யாரும் அஞ்சுவதில்லை.

என்றாலும் கூட உன்னை

நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

என் இனியவனே

எப்போதும் துப்பாக்கியை

நேசிக்கும் உனக்கு

எப்போதாவது என் நினைவு வந்ததுண்டா?

துப்பாக்கி எப்போது பூ பூப்பது

அப்போதுதான்

நீ என்னை நினைப்பாய்.

காதலனே – இப்போது

நான் திருமணத்தைக் காதலிக்கவில்லை – ஆனால்

பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஏனென்றால்

ஈழ யுத்தத்திற்கு

இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்

தம்பதிகளாய் இருப்பதிலும்

சுதந்திர ஈழத்தில்

கல்லறைகளாய் இருப்போம்

என்று தன் குமுறலைக் காதலனுக்கு அனுப்புவதாகக் காட்டுகின்றார் கவிஞர்.

புத்தாண்டு

சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நம் நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு வருகின்றது. இதை அறிந்த கவிஞன் தன் மக அழுத்தத்தை வெளிப்படுத்துகிறான். அறிவியல் வளர்ச்சியின் விளைவில் குளோனிங் முறையைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தையை எண்ணி வருந்துகின்றார். அக்குழந்தைகள் சொந்த பந்தங்கள் பற்றி அறிந்திருக்குமா ? இல்லை சொந்தம் என்றால் என்ன ? என்ற கேள்வி தான் எழுப்புமா ? இல்லை அக்குழந்தைக்கு தாய்ப்பால் தான் கிடைக்குமா ? என்று வருந்துகிறார். மேலும்.

“சோதனைக் குழாயில்

தாய்ப்பால் வடியுமா ?”

“கவலைகள் கழிந்த

நாடு கொண்டு வா”

கதவுகள் கழிந்த

நாடு கொண்டு வா”

அகிலம் துயில

படைதீ கொண்டு வா

என்று இனி வரும் புத்தாண்டில் நாம் நினைத்த அமைதியான நாடாக வேண்டும் என்கிறார். இக்கிவிதையின் மூலம் கவிஞன் ஒரு பற்றுக் கொண்டவராகத் திகழ்வதைக் காணமுடிகின்றது.

முடிவுரை

அக்காலத்தில் அந்நியரிடம் போராடினோம். அனால் இன்று அரசியல் வாதிகளிடம் போராட வேண்டியிருக்கிறது. மேலும் ஒன்றாக இருந்த இந்தியா இன்று சிதைந்து கிடக்கின்றது. இதற்கு மனிதனின் அதிகாரமும் ஆதிக்கமும் தான் காரணமாகின்றன. மனிதன் நாட்டைப் போலவே இனம், மொழி என்ற அடிப்படையில் பிரிந்து கிடக்கின்றான். தீவிரவாதிகள் தேசத்தை நேசித்திருந்தால் நாம் அணுகுண்டுகளைப் பற்றி யோசித்திருக்க வேண்டியதில்லை. எப்போது நிம்மதியாக உறங்குவோம் ? இந்த நூற்றாண்டிலாவது அது நடக்குமா? கொடிமரத்தின் வேர்களை அழிக்க நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து வேர்களைக் காப்பாற்றுவது நம் கடமைகளாகும். தீவிரவாதம் ஒழிய நாம் பாடுபட வேண்டும். இது போன்ற தேசப்பற்று புகட்டும் இலக்கியங்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்படவேண்டும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.எழுதிகச் சாங்கியம்

2.விடுதலைப் பண்ணையம்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »