Monday, July 21, 2025
Home Blog Page 32

வறட்சி (கவிதை)

நடந்தேன் நிலத்தில்

நெருப்பில் நடப்பதை விட

கொடுமையாக!

 

நீண்ட

தென்னை,

பாக்கு மரங்கள்

தங்களுடைய தலையை

யாருக்கோ?

அடகு வைத்தாற் போல்

மொட்டையாக!

 

தவளை சத்தம் என்றும்

ஓயாத நிலையில்

இருந்த

அந்த கிணறு

கல்லும் காகிதமுமாக!

 

பூக்களை,

சிரிப்பாய்

சிரிக்க வைக்கின்ற

அந்த செடிகள்

இன்று வாடிப் போக!

பூவையர் கூந்தலில்

காகிதப் பூக்கள்!

 

பறவைகள் பசுமையைத் தேடி…

சிறகுகள் படபடத்தன!

 

எருதுகள்

கலப்பையை

மறந்து விட்டன!

 

சூரியன்

இந்த பூமியை

குத்தகைக்கு

எடுத்தாற் போன்று,

வெப்பத்தை

அதிகமாக கொட்ட!

 

விவசாயிகளின்

அறுவடை நிலத்தில்

காய்ந்த புல்லும்,

வெடிப்புள்ள மண்ணும்

மட்டுமே!

 

மக்கள், மாக்கள்

வறட்சி என்னும் சுமையை

தலையில் மட்டுமல்லாமல்

வயிற்றிலும் சேர்த்து

தாங்கிக்கொண்டு !

கவிஞர் முனைவர் க.லெனின்

1.புதுப்பொலிவு

ஆசாரக்கோவையில் உணவு உண்ணும் முறையும் நடைமுறைத் தேவையும்

மனித வாழ்விற்கு உணவு, உடை, உறைவிடம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக கும் விளங்குகின்றது. இவற்றுள் முதலிடம் பெறுவது உணவாகும். “பசிவந்தால் பத்தும் பத்துபோகும்” என்று பசியின் கொடுமையைக் கூறுவர். தீரா பசித்துன்பத்தில இருக்கும் ஒருவன முன் பணமும், உணவும் இருக்குமானால் பசிப்பவளது கைமட்டுமல்ல உயிரும் சேர்ந்து உனவின் பக்கம் ஈர்க்கும். எனவே உயிர் வாழ உணவானது மிகவும் இன்றியமையாத ஒன்றாகின்றது. ஒருமனிதன் உடையும், உறைவிடமும் இல்லாமல் உயிர் வாழ முடியும் ஆனால் உணவில்லாமல் உயிர் வாழ முடியாது. இதன் விளைவாகவே உணவை முன்வைத்து வகைபாடு செய்துள்ளனர். உயிர் வாழத் தேவையான இவ்வுணவிற்கு நம் முன்னோர் முக்கியத்துவம் அளித்திருப்பதை இலக்கியங்கள் காட்டுகின்றன. ஆசாரக்கோவை என்னும் நீதி நூல் நாள் தோறும் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகளை அல்வகையில் றிவு பற்றி கூறும் பொழுது உணவு உண்ணும் முறை பற்றியும் குறிப்பிடுகின்றது. அக்கருத்துக்கள் எவ்வகையில் வாழ்விற்கு விழுமியங்களாகின்றன என்பதை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவு உண்ணும் முறையில் ஒழுக்கம்

ஆசாரம் என்பது ஒழுக்கத்தைக் குறிப்பதாகும். மனித வாழ்விற்குத் தேவையான ஒழுக்கங்களைக் கோவையாகக் கூறுவதால் இது ஆசாரக்கோவை எனப்பட்டது. இதில நன்நடத்தை, உடை உடுத்தல், உறங்குதல் மற்றும் உணவு உண்ணும் முறை பற்றி கூறப்படுகின்றது. இவற்றுள் உண்ணும் முறை பற்றி ஆசாரக்கோவை பல ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுகின்றது. சூரியன் உதிப்பதற்கு முன் எழுந்து காலைக் கடன்களை முறையாக முடித்தபின் குளிர்ந்த நீரினால் குளித்தல் வேண்டும். உடலில் உள்ள ஈரத்தன்மை உஉலர்ந்தும் உலராமல் இருக்கும் முன் காக்கும் கடவுளுக்கு வழிபாடு செய்தல் இன்றியமையாததாகும். இதனை,

“நீராடிக் கால்கழுவி வாய்பூசி மண்டலஞ்செய்து

உண்டாரே உண்டாரெனப்படுவர்” (ஆ கோ-18)

காலினீர் நீங்காமை உண்டிடுக” (ஆ.கோ-19)

என்னும் இப்பாடலடிகள் தெளிவுபடுத்துகின்றன. பின் விருந்தினருக்கும், நம்மை ஈன்றவர்களுக்கும், நாம் ஈன்ற குழந்தைகளுக்கும் மற்ற அறிணை விலங்குகளுக்கும் உண்ணப்போதுமான அளவு உணவை மன நிறைவோடு அளித்தல் வேண்டும் என்பதனை,

விருந்தினர் மூத்தோர் பசுசிறைபிள்ளை – (ஆகோ-21)

இப்பாடலடி விளக்குகின்றது. உண்ணத்துவங்கும்முன தூய்மையாகவும், எச்சில் படாதவகையிலும் முறை சமைக்கப்பட்ட உணாவை அருகில் வைத்து உண்ணுதல் வேண்டும். அவ்வாறு உண்ணும் பொழுது நீர் அருந்தும் நிலை ஏற்படின் ஒரு கையால் மட்டுமே நீர் அருந்தகல் வேலு எச்சூழலிலும் உணவு அருந்தும் பொழுது மகிழ்ச்சியோடு ஆடி அசைந்தோ, மனசோர்வுன் உறங்கும் நிலையிலோ, வேளைப் பளுவின் காரணமாக நின்றுகொண்டோ உல அருந்துதலைத் தவிர்த்தல் நலமாகும். என ஆசாரக்கோவை வழியுறுத்துகிறது.

பண்பாடும் உணவும்

பல வகைக் காய்கறிகளை வேக வைத்துச் சமைப்பது சமையல் அதேனோ வாழ்கையின் பல சூழ்நிலைகளில் அனுபவமடைந்தோ, மதியால் அறிந்தோ, மன பக்குவமடைகின்றது. இதனை ஒரு குழுவோ இனமோ ஏற்று வழி வழியாக கடைபிடிப்பதும் மூலம் பண்பாடு உருவாகின்றது. அவ்வாறு காண்கையில் ஆசாரக்கோவை வடமொழி நூல்ன் இருந்து கருத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளமையால் இந்த நூல் ஆரிய சமுதாயத்தில் பண்பாட்டுக் கூறுகள் காணப்படுகின்றன. சார்ந்ததன வண்ணமாதல் என்ற சித்தாங்பு கருத்திற்கிணங்க ஆரிய மரபை மற்ற இனத்தவரும் நன்மை கருதி பின்பற்ற தொடங்கில் எனலாம். ஆரியாகளது வருகையால் இவர்களுடைய பண்பாடானது தமிழாகளுடைய பண்பாட்டோடு கலந்தது. அதனால் தமிழர்கள் ஆரிய மரபுப்படி சில பழக்கங்களை நாள்தோறும் கடைபிடிக்கலாயினா. அதிகாலை எழுந்து தன் காலைக் கடன்களை முடித்து இறைவனுக்கும் மூத்தோர்க்கும். விருந்தினருக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்தனர். பிறகு தன் வயிற்றுக்கு உணவு அளிக்கும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது. இது மற்ற இனத்தவர் ஆரிய மரபைக் கடைபிடிப்பதற்கான சான்றாதாராமாகிறது.

அறிவியல்தன்மை

அறிவியல் என்பது உண்மைத்தன்மையை புலப்படுத்துவது. அறிவியல் வளர்ந்த கொண்டு செல்லும் பொழுது, கண்டு பிடிக்கப்படும் பொருளின் அளவு சிறிதாகிக் கொண் (Micro/Nano/Femto) போவதைக் காணமுடிகின்றது. அறிவியலின் நோக்கம் உண்மை. தன்மையை வெளிப்படுத்துவதாகும். இதில் காணக்கூடிய உண்மைகள் இலக்கியங்களிலு காணக்கிடக்கின்றன என்பதை நாம் அறிய முடிகிறது. அவ்வகையில் ஆசாரக்கோவை கூறு. உண்ணும் முறையில் சில அறிவியல் தன்மைகளை காணமுடிகின்றது.

மற்ற விலங்குகளிலிருந்து மனிதன் உண்ணும் முறையில் மாறுபடுகிறான். உண உண்பதற்கு காலநேர அடிப்படை வைத்து உண்பவன் மனிதன் மட்டுமே முறையாக உண உண்ணாததால் ஏற்படும் மலச்சிக்கலைக் இரவில் பாலியல் உறவில் இன்பம் துய வருந்துபவனது நிலைக்கு ஒப்பிடலாம்.

“இரவில் மனச்சிக்கல்

காலையில் மலச்சிக்கல்

மனிதனுக்கு கொடிய நோய்”

என்று கூறும் அளவிற்கு மலச்சிக்கல் கொடுமையானது. பலர் இந்நோயால் துபைப்பட கொண்டிருப்பதை அறிய முடிகிறது. இனிப்பை முதலில் உண்ணும் பொழுது இதில் சுரக்கு “சிலிவிரிக்” என்ற அமிலம் ஏற்கனவே இருக்கும் உணவுடன் கலப்பதற்கு பயன்படுகின்றன. இறுதியில் கசப்புச் சுவை உண்ணும் பொழுது இதில் உள்ள கிரிமி நாசினி குடலில் உள்ள புழக்களை அளிக்கின்றது. இதனால் வயிற்றுக் கோளாறுகள் தடுக்கப்படுகின்றன. எனவே கோளாரு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

நமது கவனம் சிதறும்படியாக, ஆடி அசைந்தோ, நின்றுகொண்டோ உணவு 4 அருந்துவதால் செரிமான நரம்புகள் முழுமையாக இயங்குவதில்லை. அதனால் செரிமானத் தன்மையில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் மலச்சிக்கல் ஏற்படுவதுடன் வயிற்றுக்கோளாறுகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் அறிவியல் தன்மையோடு பொருந்தியுள்ளதை அறியமுடிகிறது.

உளவியல் தன்மை

மனித மனத்தைப்பற்றி ஆய்வது உளவியல் ஆகும். இவ்வுளவியல் மனிதனின் மனச்சிக்கலுக்குத் தீர்வுகாண உதவுகின்றது. மனிதன் ஒன்றிற்கு அடிமையாவதற்கான மூலகாரணம் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குத் தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ஆனால் நம் இலக்கியங்கள் வாழ்வதற்கு சில விதிமுறைகளையும் முதியோர்களிடம் நடந்துகொள்ளும் முறை பற்றியும் கூறுவதில் சில உளவியல் தன்மையைக் காண முடிகின்றது.

 பொதுவாகவே தினமும் குளித்தல் என்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் குளித்தால் உடல் தூய்மையடைவதுடன் மனமும் தூய்மை அடைகின்றது. அச்சமயத்தில் இறைவனை வணங்கினால் வேண்டும் வரங்கள் கிட்டும் என்று எண்ணினர். தினந்தோறும் வழிபாடு செயவதினால் வாழ்க்கை முழுவதும் மகிழ்வோடு இருப்போம் என்ற மன உணர்வு அனைவரிடத்தும் காணமுடிகின்றது. இதனால் காலையில் குளித்து இறைவனை வழிபாடு செய்கின்றனர். பிறகு உண்ணும் இடம் பற்றிக் கூறும் பொழுதுஇ இடம்சுற்றி நீர் இறைத்தல் வேண்டும் என்பதனால் உண்ணும் இடம் தூய்மை அடைவதோடு அங்குள்ள தூசிகள் உணவில் விளாதவாறு பாதுகாக்க உதவுகின்றது. அக்கால மக்கள்தரையில் அமர்ந்து உண்ணுவதையே வழக்கமாகக் கொண்டனர். இவ்வாறு உளவியல் தன்மைகள் ஆசாரக்கோவையில் காணப்படுகின்றன.

முடிவுரை

தமிழ் இலக்கிய நீதிநூல்களுள் ஒன்றான ஆசாரக்கோவையில் மனித வாழ்வின் அன்றாட நடைமுறைகளான உண்ணுதல், உறங்குதல், செயல்படுதல் போன்ற அனைத்தும் வாழ்வியல் முறைகளுக்கும் ஏற்ற வழி முறைகளை கூறுகின்றது. அவற்றுள் உணவு உண்ணும் முறைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது ஆசாரக்கோவை கூறும் கருத்துக்கள் அனைத்தும் நம் நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும், தட்பவெட்ப நிலைக்கு ஏற்பவும், அதேசமயம் அறிவியல் மற்றம் உளவியல் தன்மைகளோடும் பொருந்தக் கூறியிருப்பது இன்றும் வியக்கத்தக்கது. பழமை என்று அனைத்தையும் விளக்குதல் அறிவீனம். பழமையாயினும் மனிதனின் வாழ்முறைகளின் அடிப்படையை, ஒழுக்க நெறிகளை அறிவியல் தன்மையோடு கூறும் “ஆசாரக்கோவையைய் பின்பற்றுதல்” இன்றைய மாசு அடைந்த சூழல வாழ்நிலையில் ஒரு ஆக்கப்பூர்வமான செயல்பாடே.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்- 635 130.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

கூனி, கைகேயின் உரையாடல்கள் – ஃபிராய்டிய உளவியல் நோக்கு

எழுதிகச் சாங்கியம்

விடுதலைப் பண்ணையம்

மீமெய்ம்மையியல் (Surrealism)

மீமெய்ம்மையியல் என்றால் என்ன? (What is means surrealism )

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இக்கால கட்டம் வரை வளர்ந்து வந்துள்ள இலக்கிய இயக்கங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்று மீமெய்ம்மையியல் (சர்ரியலிசம்) ஆகும். 1924-2 ஆண்டு ஆன்றிபிரெட்டன் (Andre Breton) என்பவர் இவ்வியக்கத்தின் தன்மை குறித்தும் இவ்வியக்கத்தினர் மேற்கொள்ளும் சிலநெறிகள் குறித்தும் ஓர் ஆய்வு அறிக்கையினை வெளியிட்டார். அவர் கருத்துப்படி, பேசும் அல்லது எழுதும் மொழியாலோ, அல்லது வேறுவகையாலோ உள்ளத்தின் அடித்தளத்தில் இயல்பாக ஊற்றெடுத்துப் பொங்கிவரும் சிந்தனை அல்லது உணர்ச்சிக்கோவையினை ஒளிவுமறைவின்றி உள்ளத்தில் எழுந்த வண்ணமே வடித்துக்காட்டுவது ‘சர்ரியலிசமாகும்” என்கிறார்.

இவ்வியக்கத்தின் வாயிலாகக் கலையுலகில் மனித மனத்திற்குப் புதியதொரு விடுதலையளிக்கும் திசைநோக்கி ஒரு புரட்சியை உருவாக்க முடியுமென்று அவர் நம்பினார். சர்ரியலிச இயக்கத்தின் வாயிலாக உள்ளார்ந்த உணர்வு நிலையின் உண்மை நடப்பினைப் புறவுலக நடப்போடு இயைய வைத்துக் காட்டமுடியும் என்று நினைத்தார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கவிதை உலகில் மட்டுமன்றிக் கலையுலகிலும் இவ்வியக்கம் ஊடுருவலாயிற்று.

மீமெய்ம்மையியலின் வரலாறு ( what is surrealism history )

இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு நாடுகளில் மலர்ந்த கலைப் படைப்புக்களிலெல்லாம் ‘சர்ரியலிசத்தின்’ தாக்கம் இருப்பதாக எண்ணப்படுகின்றது. சப்பான், எகிப்து, யுகோஸ்லேவியா, செக்கோஸ்லோவேகியா. செர்மனி. போலந்து, ஸ்வீடன், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, அர்ஜைன்டைனா, மெக்ஸிகோ. அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய அனைத்திலும் ‘சர்ரியலிசக் கவிஞர்களும் கலைஞர்களும் ஓவியர்களும் ‘சர்ரியலிச’ மதிப்பீட்டாளர்களும் இருந்திருக்கின்றார்கள். இந்நாடுகள் அனைத்திலும் இவ்வியக்கத்தின்படி கலைஞனும் கவிஞனும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களென்றும் ஒருவரையொருவர் எதிர்நோக்கிச் செயல்படுகின்றனர் என்றும் கருதப்பட்டு வந்தது.

1949 ஆம் ஆண்டு ‘சர்ரியலிச’ இயக்கத்தின் மிகப்பெரிய கலைக்காட்சியொன்று பாரிஸ் மாநகரில் நடைபெற்றது. இதில் 24 நாடுகள் பங்கேற்றன. இதற்குமுன் 1938-ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்ரியலிச உலகக் கண்காட்சியில் 18 நாடுகள் பங்கேற்றிருந்தன. அந்நாடுகள் சர்ரியலிச இயக்கத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகளையும் கலைப்பொருட்களையும் கலைப்படைப்புகளையும் அப்பொருட்காட்சிக்கு அனுப்பியிருந்தன. இவ்விரண்டு பொருட்காட்சிகளாலும் ‘சர்ரியலிச’ இயக்கம் உலகில் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருக்கின்றது என்ற கருத்து நிலைநாட்டப்பட்டது.

கடந்த நாற்பதாண்டுகளாகச் ‘சர்ரியலிச’ இயக்கம் கவிதையிலும் மிக வேகமாக ஊடுருவியிருக்கின்றது. ‘கவிதை’ என்பது வெறும் முருகியல் சுவை இன்பக்கருவி மட்டுமன்று; துண்ணியல் இயற்கையறிவை அறிவதற்கு உரிய ஊற்றுக்களமும் ஆகும் என்பது உணரப்படலாயிற்று. இங்ஙனம் உணரப்பட்ட கருத்து மாற்றம் ‘சர்ரியலிச’ இயக்கத்தில் ஒரு முக்கிய திருப்பு முனையாக எண்ணப்படுகின்றது. காதல் பற்றியும் வியப்பு வண்ணம் பற்றியும், ‘சர்ரியலார்’ கொண்ட கொள்கைகள் புதியதொரு மனோபாவத்தினை உருவாக்கப் பயன்பட்டன.

மீமெய்ம்மையியல் இயக்கத்தின் முன்னோடிகள்

சரியலிச இயக்கத்தின் முன்னோடிகளுள் பெரும்பாலோர் பிரான்சு நாட்டில் தோன்றினர். லூயிஸ் அரகன்- (Louis Aragon), அன்டோனின் ஆர்டாட் (Antonin Artaud) ஆன்றி பிரெட்டன் (Andre Breton), ஆமி சிசரே (Aime Cesaire), ரேனி சார் (Rane Char), ரேனி கிரீவல் (Rane Crevel), ராபர்ட் டெஸ்தாஸ் (Robert Desnos), பால்எலார்டு (Paul Eluard), ஜுலியன் கிராக் (Julien Gracq) மைகல் லெய்ரிஸ் (Michel Leiris), பெஞ்சமின் பேரட் (Benjamin Peret), பிரான்ஸிஸ் பிகாபியா (Francis Picabia), ரேமாண்ட் குயினியா (Raymond Qucneau) பிலிப் சோபால்ட் (Phillippe Soupault), டிரஸ்டன் ஜாரா (Tristan Tzara), ரிம்பாடு (Rimbard) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மீமெய்ம்மையியலின் போக்குகள்

கவிதையைப் பொறுத்தமட்டில் ‘சர்ரியலிசம்’ என்பது பொறிகளால் காணும் உலகத்தைக் கவிஞன் மிகவும் தெளிவாகக் கண்டு கொள்வதற்குரிய ஓர் அறிவுக்கருவி என்று கருதப்படுகிறது. இதனால் அவன் வாழ்க்கையின் முக்கிய சிக்கல்களைத் தீர்க்கவும் மனித வாழ்வின் அமைப்புக்களை மாற்றியமைக்கவும் புரட்சிசெய்யத் தொடங்குகிறான். இம்முறையில் முனையும் கவிஞன். படைப்பில் வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்ற யாப்புவிதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய விதியில்லை. புதிய விதிகளைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமுமில்லை.

சர்ரியலிசக் கவிதையின் முக்கிய பொருள்கள்

            காதல், புரட்சி, வியப்பு, உரிமையுணர்வு, மனித ஆசையின் விசுவரூபம், உலகத்தை நையாண்டி செய்தல், அடிமனச் சிந்தனை உலகைக் காட்டல், கனவுகளைப் பற்றிய ஆராய்ச்சி, மனமயக்கங்களைப் பற்றிய அறிவு, அடிமனத் தூண்டுதல்களால் இயல்பாக எழுதும்முறை ஆகியவை ‘சர்ரியலிச’ எழுத்தாளர்களால் உண்மை அறிவு வாயில்களாகப் போற்றப்படுகின்றன. உறக்கநிலைக்கும் விழிப்புநிலைக்கும் உரிய விளக்கங்களுக்கும் அவ்விளக்கங்களின் நுண்ணிய பகுப்பு முறைகளுக்கும் ‘சர்ரியலிச’ எழுத்தாளர்கள் மதிப்புக் கொடுக்கின்றனர். முருகியல் நினைப்புக்களினின்றும் பகுத்தறிவியல் கட்டுப்பாட்டினின்றும் விடுபட்டுச் சுயமாக எழுதும் எழுத்தானது உள்மனத்தின் இயக்கத்தைப் புலப்படுத்துகின்றது. ‘சர்ரியலிச’ புரட்சி என்பது தருக்கத்தையும் சமுதாய நடைமுறையையும் எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் மரபு வழிப்பட்ட விதிமுறைகளையும் எதிர்த்து நடப்பதாகும்.

‘சர்ரியலிசம்’ என்பது கவிதையோடு மட்டும் தொடர்புடையதன்று; நாடகம் நாவல், திரைப்படம், ஓவியம், சிற்பம் ஆகியவற்றோடும் தொடர்பு உடையதாகும்.  சர்ரியலிசு எழுத்தாளர் மனத்தில் தோன்றும் காட்சிகளையோ உணர்ச்சிகளையோ, தோன்றிய அவ்வண்ணத்திலேயே எழுதித்தீர்த்து விடுவது ஒன்றே தங்கட்கு உகந்தது என எண்ணுகின்றனர். அங்ஙனம் எழுதுவதன் வாயிலாக அறிவியக்கம், தருக்கம் (Logic) ஆகியவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகிநின்று உரிமையோடு கலையுலகில் தங்கட்குரிய பணியினைச் செய்து முடிப்பதாக அவர்கள் உணருகின்றார்கள். மனம் எப்படிச் செல்கின்றதோ அப்படி எழுதுவதே அவர்களின் நோக்கமாகும். சுருங்கச் சொல்லின், மனத்தின் வழியே சர்ரியலிசக் கவிஞனின் கலைஞனின் வழியாகும்.

பிரெட்டன் என்பவர் சர்ரியலிச கவிதைகளை பின்வருமாறு எழுதுகிறார்.  “வசதியாக ஓரிடத்தில் உட்கார்த்து கொள்ளுங்கள்; மனக் காட்சிகளை உணரும் மனோநிலையில் இருங்கள். உங்கள் புத்திசாலித்தனம் திறமை எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். இலக்கியம் என்பது எல்லாவற்றிற்கும் இழுத்துக் கொண்டு போகும் சோக மிகுபாதை என்று சொல்லிக் கொள்ளுங்கள்; வேகமாக எழுதுங்கள்; எதைப்பற்றி எழுதுகிறோமென்று முன்யோசியாமலேயே எழுதுங்கள்; என்ன எழுதியிருக்கிறோம் என்று திரும்பப் படிக்கும் ஆசையின்றி எழுதுங்கள்.  முதல் வாக்கியம் தானாக வந்துவிடும். அடுத்த வாக்கியம் என்னவென்று முடிவு செய்வது கடினந்தான். ஆனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப் படக்கூடாது. நீங்கள் விரும்புகிற வரையிலும் எழுதிக் கொண்டேயிருங்கள். முணுமுணுப்பை நீங்கள் நம்பலாம். நீங்கள் ஏதோ செய்து விட்டீர்களென்று மௌனம் உங்களை ஆட்கொள்ளும்போது அடுத்த வார்த்தையை நீங்கள் எழுதுங்கள்.  வார்த்தைகளின் அர்த்தங்களில் சந்தேகம் வரும் போது ஏதேனும் ஓர் எழுத்தினை எழுதுங்கள். உதாரணமாக I என்ற எழுத்தினை எழுதுங்கள். அந்த எழுத்தை முதல் எழுத்தாக வைத்து அடுத்த வார்த்தையை உருவாக்குங்கள்.

‘ஹிஸ்ட்டீரியா நோய்’ சர்ரியலாரின் கவனத்தை மிகவும் ஈர்த்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய கவிதைக் கண்டு பிடிப்பென்று பிரெட்டனும் ஆரகனும் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் கருத்துப்படி, இந்நோயினால் பாதிக்கப்படும் ஒருவரின் மனநிலை சாதாரண மனிதர் ஒருவரின் மனநிலையை விட உயர்ந்ததாகும். ‘ஹிஸ்ட்டீரியா’ ஒரு நோய் என்று காணாமல், “மனிதனுக்கும் அவனை அடிமைப்படுத்த நினைக்கும் தருமநெறிகளுக்குமிடையே உள்ள தொடர்பு தூண்டப்படும் போது பிறக்கும் மனநிலை என்று கண்டனர். அவ்வாறே தற்செயலாக நடந்துவிடும் நிகழ்ச்சிகளுக்கும் ‘சர்ரியலார்’ மிக்க மதிப்புக் கொடுத்தனர். புறவுலகம் போலவே அகவுலகமும் சர்ரியலார்களுக்கு மிகமிக முக்கியமானது. ‘அசுவுலகு புறவுலகு, நனவுவகு கனவுலகு, நனவு நிலை – தனவற்றநிலை, சாதாரண மனிதனின் மனோநிலை அசாதாரண மனிதனின் மனோநிலை ஆகியவற்றில் உள்ள இரண்டு எல்லைக்கோடுகளையும் மனிதன் புரிந்து கொள்ளும் போது வாழ்க்கையின் முழுமையான யதார்த்தம், கண்ணுக்குத் தெரிவதைவிட மிகையான யதார்த்தம் – சர்ரியலிசம் சர்ரியலிச சிந்தனையாளனுக்குப் பிடிபடுகின்றது.

”சர்ரியலிச’ மென்பது அமைதியின்றி ஓயாது அலைகின்ற மனிதமனக் கூக்குரலின் பண்ணாக ஒலிக்கின்றது. மனித மனத்திற்கு அமைதி இங்கு மில்லை; அங்குமில்லை; எங்குமில்லை; ஆயினும் மனத்தின் அடித்தளத்தில் மாளாது அடித்துக் கொண்டேயிருக்கும் உணர்ச்சி அலையின் ஊடாக இழைந்தோடும் ஒரு சோகதேகத்தைத் தணித்து இதயத்தின் வேதனைக்குத் தீர்வு காண்பதற்கும் ‘சர்ரியலிசம்’ முயலுகிறது.  மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் எத்தனையோ வகையான தொடர்புகளைக் கட்டறுத்து மனிதனை விடுதலை வானில் பறக்கச்செய்ய முயலுகிறது. உலக வாழ்வில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத மரணம் பற்றியும், நிலையாமை பற்றியும் கவலையின்றி ஆராய முற்படுகின்றது. 

மனிதனின் உயிர் வாழ்வோடு ஒட்டி உறவாடும் இயற்கையான உணர்வினின்றும் ஊற்றெடுத்துப் பிலிற்றும் இன்ப உணர்வு, உள்மனத்தின் தூண்டுதல், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட சிக்கல்களைக் குறித்து மனித மனம் எண்ணும்போது எழும் ஒருவகை அவலக்குரல் ஆகியவை சர்ரியலிசவாதிகளால் பெரிதும் போற்றப்படுகின்றன. இவ்வகையில் நோக்கும்போது, மனித ஆசை நிறைவேறுவதற்குரிய வழியில் கிடக்கும் தடைக்கற்கள் தகர்த்தபட வேண்டும் எனச் சர்ரியலார் கருதுகின்றனர்.  அந்தத் தடைக்கல் பெரும்பாலும் சமுதாயமாக கண்டிப்பாக இருக்கக் கூடும்.  இரக்கப்படாமல் மாற்றியே தீர வேண்டுமென்பது சர்ரியலாக கொண்டுள்ள திண்மையான எண்ணமாகும்.

மீமெய்ம்மை இயலின் தனிச் சிறப்பு

‘சர்ரியலிசம்’ என்பது சமயமும் அன்று; அரசியலும் அன்று; அறிவு என்பது இதுவரைக்கும் கொண்டிராதிருந்த ஒரு புதியகோலத்தை, சாதாரணமாக நம்மால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒருகோலத்தைத் தாங்கி வருவது என்று சர்ரியலிச ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். பகுத்தறிவுப்பார்வையில் மட்டுமே உலகத்தைக் காண்பது என்பது சர்ரியலிசத்திற்கு உடன்பாடன்று. இன்றுள்ள சமுதாய நடப்பினால் பயன் இல்லையெனில் அந்நடப்புக்குப் பதிலாகப் புதியதொரு சமுதாய நடப்பினை உருவாக்கிப் பயன்காண இக்கொள்கையினர் விழைகின்றனர்.

சிலர் ‘சர்ரியலிசம்’ என்பதைக் கடவுள் இல்லாத அருளியல் நெறியாகக் கொள்வதாகவும் தெரிகின்றது. ஆனால் உலகத்தை மாற்றவேண்டுமென்று எண்ணுகின்ற ஒருவனது தணியாத தாகத்தினைச் சர்ரியலிசம் வெளிப்படுத்துகின்றது; தணிக்கவும் செய்கின்றது. மனித மனமானது அடைகின்ற ஒரு குறுப்பிட்ட மகோன்னதமான மனோபாவத்தை – இறப்பும் பிறப்பும் உண்மையும் கற்பனையும் இறந்த காலமும் நிகழ் காலமும் இல்லாதொழிந்து முரண்பாடு நீங்கி முருகியெழும் ஒருவகைப் புதிய மனோபாவத்தைச் ‘சர்ரியலிசம்’ குறிக்கின்றது. இதுவரைக்கும் வாழாத-வாழ்ந்து மனிதனை உருவாக்கிக் கண்டு காட்டாத புதியதொரு உண்மையாக நேசித்து இன்புறுவதாகிய ஒருபுரட்சியையும் சர்ரியலிசம் செய்கின்றது.

உள்ளதை அப்படியே படம் பிடித்துக்காட்டுவது நிழற்படக் கலையாகும். அக்கலை போன்றதே சர்ரியலிசமாகும். சர்ரியலிச எழுத்தாளன் தான்காண்பதை ஓரளவு மெருகேற்றிக் காட்ட வேண்டு மென்பதோ, ஏதேனும் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிப் பணிந்து சிறிது மாற்றிக்காட்ட வேண்டுமென்பதோ, தான்காண்பதில் உள்ள பொருளில் அல்லது காட்சியில் அல்லது மனோபாவத்திலுள்ள மாசினைத்துடைத்துக் காட்ட வேண்டும் என்பதோ அவசியமன்று. ஒருவன் தனகனவில் காண்பது போன்ற காட்சி களை சர்ரியலார் தம் கலையிலும் படைத்துக் காட்டுகின்றனர். இங்ஙனம் படைத்துக் காட்டும்போது தருக்கச்சார்பு துறக்கப்படுகிறது. ஒன்றை நடைமுறைப்படுத்திச் சோதனை செய்து பார்த்தே ஏற்றுக்கொள்வது என்ற கொள்கைக்கு இடமில்லை. அன்றியும், ஒரே பொருளின், காட்சியின் வெவ்வேறான கூறுகளை அல்லது பிரிக்கப்பட்டுத் தனித்தனியே கிடக்கும் கூறுகளைச் சர்ரியலார் மதிக்கின்றனர்.  அந்த ஒவ்வொரு கூறுக்கும் ஒருவகை முழுமை உண்டு என்று எண்ணுகின்றனர். மனித உடம்பின் ஒரு பாதியை மட்டுமே ஓவியத்தில் சர்ரியலார் தீட்டிக் காட்டி யதும் ஈண்டுக் குறிப்பிடத் தக்கது. ஒரு பாதி உடம்பைக் கொண்டு முழுவுடம்பின் தன்மையை ஊகித்தறிய முடியும் என்பது அவர்களின் கருத்து. ஆயின், ஒரு பொருளை அப்படியே முழுமையாகக் கண்டாலும் சரி, அல்லது அதையே பல்வேறு கூறுகளாகப் பிரித்துக் கண்டாலும் சரி அப்பொருளை முற்றிலும் மறைத்து விடுவது நோக்கம் அன்று.

பேராசிரியர் நா. வானமாமலை புதுக்கவிதை பற்றிய தம் நூலில், சர்ரியலிசம் தோன்றிய தொடக்கம் பற்றியும் அதற்குரிய கருப் பொருள்களைப் பற்றியும் கூறியுள்ள செய்திகள் சர்ரியலிச இயக்கத்தின் உயிர்ப்பான சில உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன.

இதுகாறுங் கூறியவற்றால் மீ மெய்ம்மையியல் (சர்யரிலிசம்) என்ற இயக்கத்தின் போக்கினைப் பற்றியும் உயிர்ப்பான தனிஇயல்புகள் பற்றியும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். இவ்வியக்கம் பற்றிய அடிப்படை உண்மைகளைப் பின்வருவாறு பகுத்துக் காணலாம்.

(1) சர்ரிலிச இயக்கம் என்பது ‘உள்மனத்தின் தடையற்ற சுயஇயக்கம்: அஃதாவது, எண்ணங்களின் செயல்முறையைச் சொல்லாய், எழுத்தால் அல்லறு வேறு முறைகளினால் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான உள்மனத்தின் தடையற்ற சுயஇயக்கம் ஆகும். அழகியல், அறிவியல் போன்ற நெறிகளைப் புறந்தள்ளிவிட்டு அறிவு எந்தக் கட்டுப்பாடும் விதிக்காத பொழுது எழும் சிந்தனையை எழுந்த அவ்வண்ணமே எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெளிப்படுத்துவது.

(2) மனிதனின் அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட உண்மைகளை சாரியலிசம் மதிக்கின்றது.

(3) கனவு, உருவெளித் தோற்றம் (hallucination) உள்மனத்தின் இயக்கம், ஹிஸ்ட்டீரியா நோய், பைத்தியக்காரத் தளம், தற்கொலை, தற்செயல் நிகழ்ச்சிகள், திடீரென நிகழும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்றுக் கொள்வதில் சர்ரிலிசம் முன்னே நிற்கிறது. தூங்கும்பொழுதோ தூங்குவதாக நினைத்துக்கொள்ளும் பொழுதோ மனக்கண்ணிற்குப் புலப்படும் அதிசயமான, அற்புதமான அபூதமான காட்சிகளைத் தீட்டிக்காட்டவும் சர்ரியலிசம் தயங்குவதில்லை,

(4) ஒன்றை நராய்ந்து வெளிப்படுத்தும் நிலையிலின்று மாறி ஒருவன், ‘தன்னுடைய மனதிற்குள்ளே தானே மேற்கொள்ளும் சுயமான பிரயாணத்தின்போது உணர்ந்தவற்றை அறிவியக்கத்தின் பாரிசீலனைக்கு உட்படுத்தாமல் தூய்மையாக வெளியிட வேண்டும். அப்படி வெளியிடுவதே சரியானது உண்மையானது. இவ்வாறு சர்ரியலிசவாதிகள் நம்பு கிறார்கள்.  

(5). சர்ரியலிச இயக்கத்தினர் தத்தம் கால, சமுதாய நடப்புகளில் காணப்படும் அனைத்துக் குறைபாடுகளையும் கேடுகளையும் நகைப்புக்குரிய செயல்முறைகளையும் அவலக் காட்சிகளையும் உள்ளபடி எடுத்துக் காட்டுகின்றனர்.

(6) சர்ரியலிச இயக்கம் தோன்றுவதற்குக் கீழ்க்காணும் உணர்வுகளின் தாக்குதல் காரணமாய் இருந்திருக்கின்றது. ‘வாழ்க்கையில் ஏமாற்றப்பட்ட சோகம்; அர்த்தமற்ற ஒரு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பதாக வெறுப்பு; தன் சக்திக்கு மீறிய புறவுலக நிகழ்வுகளில் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுகிறதே என்ற ஆற்றாமை; தன் சோகங்களுக்குக் கைகொடுக்க எந்த தேவதூதனும் இறங்கி வரவில்லையே என்ற கசப்பான யதார்த்தம்; பவித்திரமானது எனப் பாராட்டி வந்த நம் கலாச்சாரமும் நாகரிகமும் இந்தப் படுகுழிக்கா நம்மை அழைத்து வந்திருக்கின்றது என்ற பயம்.

மீமெய்ம்மை இயலும் தமிழ் இலக்கியமும்

சர்ரியலிச ஓவியம் போன்ற இயக்கம் கவிதைத்துறையிலும் சிற்பம் ஏனைய கலைத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள வரலாறு ஐரோப்பிய நாடுகளிலும் மேலை நாடுகளிலும் உண்டு. ஆயின் தமிழகத்தில் அவ்வியக்கம் அரும்பி மலர்ந்த வரலாறு இல்லை. காரணம் அதற்கேற்றதொரு சமுதாயச் சூழலோ நிகழ்ச்சிப் பின்னணியோ இங்கு நீண்ட காலமாக உருவாகவில்லை. இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி முடிய சர்ரியலிச இயச்சுத்தின் தாக்கமும் உணர்ச்சியும் ஏனைய நாடுகளில் இருந்திருக்கின்றன. ஒருவகையில் அங்கு இது நடந்து முடிந்த கதை. ஆயின் தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த இருபது, முப்பது ஆண்டுகளாக இது தொடங்கி வளரும் கதைபோல் உள்ளது. இவ்வியக்கம் நேரடியாக இங்குப் பேசப்படவுமில்லை; இலக்கிய ஆராய்ச்சி உலகில் தனியிடத்தைப் பெற்றிடவும் இல்லை. மறைமுகமாக இலைமறை காய்போல் சர்ரியலிச இயக்கத்தின் சாயல் மிக அண்மைக் காலத் தமிழ்ப் படைப்புக்களில் சிற்சில இடங்களில் இருப்பதுபோல் தெரிகின்றது. கவிஞர் சிலருடைய படைப்புக்களைப் பயிலும் போது, நாவலாசிரியர் படைப்புக்களின் சில பகுதிகளைப் பயிலும்போது சர்ரியலிச இயக்கம் பெற்றிருந்த சில முத்திரைகளைத் தற்செயலாக நம்மால் உணரமுடிகின்றது. இன்றைய புதுக்கவிதைவாணரின் சில கவிதைகளிலும் அழுகை போன்ற சில நாவல்களிலும் சர்ரியலிச இயக்கக் கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன. இனிஒரு சான்று காண்போம்.

கோயில் என்பதும் தெய்வம் என்பதும் புனிதமானவை என்று கருதப்பட்டன. இவற்றைக் குறைகூறிப் பேசுதற்கோ இவற்றுள் குறையிருப்பினும் ஒளிவுமறைவின்றி அம்பலப்படுத்துவதற்கோ முன்னை நாளில் பெரும்பாலான எழுத்தாளர்கள் முயன்றது இல்லை. ஆயின், இன்று தனக்கே உரிய தனித்த மனோபாவத்தோடு தனிமனிதனையும் சமுதாயத்தையும் நோக்கித் தனித்திறன் மிக்க வகையில் தனிநடையில் சில அடிப்படை உண்மைகளை மிகவும் பச்சையாக வெளிப்படுத்தும் நாவலாசிரியர் டாக்டர் ரா. சீனிவாசன், கோவிலைச் சுற்றியும் தெய்வத்தைச் சுற்றியும் சூழ்ந்திருக்கின்ற மனிதக்கூட்டத்தின் போலித் தனத்தைத் தம்உள்ளம் உணர்ந்தபடி, சிறிதும் ஒளிவு மறைவின்றி, உள்மனத்தின் இயக்கம் தூண்ட, பின்வருமாறு உணர்த்தி யுள்ளார்,

“மாணவர் கல்வி பயனுடையதாக மாறவேண்டும்;

தொழிலாளிக்குப் பற்றாக்குறை குறைய வேண்டும்;

நிலம் அரசாங்கத்துக்கு அல்லது மக்களுக்கு உடைமையாக வேண்டும்.

கோயில் எதிர்ப்பு எழுந்து கொண்டு இருக்கிறது;

ஏன் கொள்ளையும் நடக்கிறது.

கடவுள்மேல் மனிதன் கொண்ட கோபம் அல்ல;

அதன் சொத்து சரியாக பராமரிக்கப் படவில்லை.

நல்ல பொதுக் காரியங்களுக்கு அது பயன்படவில்லை;

பிள்ளையில்லாதவர்கள் எழுதிய சொத்து;

கொள்ளை இலாபம் அடித்தவர்கள் குவித்தசொத்து;

அதனை நாட்டுப் பிள்ளைகள் படிக்கத்

தொழில்வளம் பெருக்கப் பயன்படுத்த வேண்டும்.

இப்படியே விட்டால் கொள்ளைக்காரர்கள்

புகுந்து கொள்ளையடிப்பார்கள்;

சிலைகளைத் திருடினார்கள்;

நகைகளைத் திருடுகிறார்கள்;

வெள்ளி பொன் எல்லாம் கொள்ளை போகிறது;

அரசாங்கம் அவற்றைக் கைப்பற்றித்

தெய்வங்களை இந்தநாட்டுக் காந்திகளாக

மாற்ற வேண்டும்;

தெய்வங்களுக்கு நகை ஏன்?

பொன் வைரம் இவை

யாருடைய பிரதிநிதிகள்?

செல்வச் சீமான்களின் வாழ்க்கையைக்

கோயில் சிலைகள் மேற்கொண்டுள்ளது.

அம்மன் சந்நிதியில்

சென்று தரிசிக்கும்

வீட்டு அம்மாக்கள் தாய்மார்கள்

கண்களைப் பறிப்பது எது?

ஜெகஜ் ஜோதியாக விளங்கும்

கல்லும் பொன்னும் தானே!

இவை அணிந்தால்தான்

பெண்ணுக்கு மதிப்பு என்பதை

இந்தக் கோவில் சிலைகள் கற்றுத் தருகின்றன.

அந்த நிலை மாறிக்

கோயிலில் வெறும் சிலைகள் இடம் பெற்றால் போதும்;

செல்வக் குவிப்பு அங்கே தேவை இல்லை;

அங்கே இறைவன் இருக்கட்டும்;

இறைவி இருக்கட்டும்;

அவர்கள் நமக்கு அருள் செய்யும் திருக்காட்சி அமைந்து கிடக்கும்;

ஏனோ இப்படி என் நினைவுகள் இயங்கிக் கொண்டிருந்தன?

1.புனைவியல்

2.பழமைவாதம்

3.நடப்பியல்

4.இயற்கையியல்

புதுப்பொலிவு – கவிதை

கண்ணைச் சிமிட்டி

கைகால்களைத்

தாளமிட்டு

பெண் பிறப்பாய்…

இவ்வுலகில்

அம்மாவின்

முந்தானையைப்

பிடித்துக்கொண்டு

அழும் குழந்தையாய்…

கையைப்பிடித்துக்கொண்டு

பள்ளிக்குச் செல்லும்போது

சிறுமியாய்…

அம்மாவுடன் சண்டை

தம்பியுடன் சச்சரவு

அப்பாவுடன் சமாதானம்

விளையாட்டுப் பிள்ளையாய்…

விவரம் தெரிந்த பூவையாய்

கல்யாணம் பெண்களுக்கே

உரிய புதுப்பொலிவு!

கண்களில் சிரிப்பும்

உதட்டில் புன்னகையும்

கால் கட்டை விரல்

தரையில்

கோலம் போடுவதுமாய்…

பெண்ணாகப் பிறந்தவளுக்கு

பிள்ளைப்பேறு…

உண்மையின் விளக்காய்!

குடும்பச் சுமைகளை

உள்ளங்கையில்

தாங்கிய

இல்லத்தரசியாய்…

பெண்ணே – உனக்கு

எத்தனை பிறப்புக்கள்

ஒவ்வொரு பிறப்பிலும்

புதுப்புது பொலிவுடன்…

கவிஞர் முனைவர் க.லெனின்

கொடிமரத்தின் வேர்கள் கவிதையில் தேசியம்

முன்னுரை

உயிரினங்களில் மனிதனே அறிவு வளர்ச்சியால் மேலோங்கியுள்ளான். மனிதன் மொழி, இனம், சமூகம், நாடு என்று ஓர் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறான். தனது தன்னுடையது என்ற உரிமையோடு நாட்டைக் காப்பவனாக இருக்கின்றான். அதேசமயத்தில் உரிமைகள் பறிக்கப்படும்போது அதற்காகப் போராடுகிறான். உயிர்த் தியாகமும் செய்கின்றான். அவ்வுத்தமர்களை என்றும் போற்றி வணங்கும் பண்பாளர்களாக இலக்கியவாதிகள் உள்ளனர் என்பதைக் காட்டுமுகமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொடிமரத்தின் வேர்கள்

சமூகத்தின் பிரச்சனைகளை எடுத்தியம்பும் இலக்கியங்கள். நாடகம் நாவல், சிறுகதை, கவிதை போன்றவையாகும். இதில் கவிதை மக்களுக்கு எளிதில் சென்றடையும். மேலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் வைரமுத்து தேசிய அவலங்களை கொடிமரத்தின் வேர்கள் என்ற கவிதைத் தொகுப்பின் மூலம் பதிவு செய்துள்ளார். இதில் அன்றைய அறிவியல் முன்னேற்றத்தின் விளைவுகளையும் தேசத்தியாகிகளின் நிலையையும், மக்கள் அமைதியின்றி போராடும் நிலை பற்றியும் வெளிப்படுத்துவதை இக்கவிதை தொகுப்பில் காணமுடிகின்றது.

சுதந்திரத்திற்குப்பின் தியாகி

இந்திய நாட்டு விடுதலைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்தனர் தியாகிகள். சுதந்திரப் போராட்டத்தில் எஞ்சிய தியாகிகள் வலுவிழந்த நிலையில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கிராமம் ஒன்றில் தியாகி ஒருவர் மந்திரி வரும் நாளன்று இறந்துபோனார். அவரின் உடல் மந்திர் வரும் சாலை வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என்று தொண்டர்களிடத்திலும் மந்திரியின் பாதுகாப்பிற்காக வந்த காவலர்களிடத்திலும் தியாக்பின் உடல் சுடுகாடு செல்ல சுடுகாடு கேட்டது.  அந்த அவல நிலையை.

ஒரு தியாசியின் பிணம்

சுடுகாடு வருவதற்குச்

சுதந்திரம் கேட்டது

கிடைத்ததா என்ன?

இவரைப் பற்றி

எழுதி வைக்கும்முன்

மகாத்மா பாவம்

மரித்துப் போனார்

என்ற இக்கவிதை அடிகள் தியாகியின் நிலையைத் தெளிவு படுத்துகிறது.

சிதை உண்ட இந்தியா

வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர் அரசர்களிடம் இருந்து ஒற்றுமையின்மையை அறிந்து கொண்டு, இந்தியாவைத் தன் ஆட்சியின் கீழ் அடிமைப்படுத்திக் கொண்டனர். அடிமையில் கிடந்த இந்தியாவிற்கு சுதந்திரமாய் வாழ சுதந்திரம் தேவைப்பட்டது. ஆனால் சுதந்திரம் கிட்டிய இந்தியாவிற்கு இனம், மொழி, தொகுதி பங்கீடுகள். தேவைப்பட்டது என்பதனை,

அடிமை இந்தியா

தேசியம் கேட்டது

சுதந்திர இந்தியா

தேர்தல் கேட்டது

என்று அடிமை இந்தியா காசி முதல் கன்னியாகுமரி வரையிலான மனித ஒருமைப்பாட்டை வலியுறுத்தியது. அதன் விளைவாகத்தான் சுதந்திரமும் பெறமுடிந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த நம் மக்களோ இனம், மொழி என்ற அடிப்படையில் தங்களைப் பிரித்துக்கொண்டு, அவர்களுக்குள்ளேயே ஆட்சி புரிவதில் சண்டையிட்டுக் கொள்கின்றனர்.  தங்களிடம் இருக்கும் இயற்கை வளங்களை மற்ற மாநிலத்திற்குப் பகிர்ந்தளிப்பதற்கு மனம் இன்றித்தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்கின்றனர். அன்று மக்களுக்காகப் போராடியவர்கள் தேசியம் கேட்டனர்; இன்று பணத்திற்கும். பதவிக்கும் போராடுபவர்கள் தேர்தல் கேட்கின்றனர். சுதந்திர இந்தியாவில் தேசியம் அழிந்து கொண்டிருப்பதை இக்கவிதை காட்டுகின்றது.

பூங்காவிற்குப் புதியசட்டம் பிச்சைக்காரனால்

மனிதன் செய்யும் தவறுகளைச் சரிசெய்யும் பொருட்டுச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அதில் தவறு செய்தவன் யாராக இருப்பினும் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற கொள்கை வகுக்கப்பட்டது. அதே ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்றையச் சூழலில், பசுமையான பூங்கா ஒன்றில் வெறுந்தட்டை கையில் கொண்ட பிச்சைக்காரனிடம் அவள் தட்டைப் போன்றே வயிறும் வெறுமையாக இருந்தது. அந்த பூங்காவிற்கு ஓய்வு எடுக்க வரும் மக்கள் பிச்சைக்காரனைப் பார்த்து வேறு பக்கம் திரும்பினர். அந்தத் தருணத்தில் காகம் ஒன்று கரைய அதன் ஓசையில் பசியில் வாடிக்கிடந்த அவன் திடுக்கிட்டான். மனிதன் போனால் போகட்டும், நான் உனக்கு பிச்சை இடுகின்றேன் என்பது போல ஒரு மரம் தன் மலரை அவனுக்கு பிச்சையிட்டது. அவன் அந்த மலரின் இதழை மெல்ல மெல்லத் புசிக்கத் தொடங்கினான். அடுத்தநாள் பூங்காவின் அறிவிப்புப் பலகையில் ஒரு வாசகம் பூக்கள் புசிப்பதற்கல்ல என்று எழுதப்பட்டது. இதில் இயற்கை காட்டும் பரிவு கூட மனிதர்களிடத்தில் இல்லை என்பதும் சட்டங்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு பயன்படாத நிலையும் வெளிப்படுகின்றது.

காதலனுக்கு கடிதம்

இன்று உலகந்தோறும் பல தீவிரவாத செய்ல்கள் ஊடுருவி வருகின்றது. இது போன்ற தீவிரவாத அமைப்புகளினால் ஏராளமான மக்கள் அழிந்து கொண்டிருக்கின்றனர். இதைத் தடுக்க அரசு பாதுகாப்புப் படையை நியமித்திருக்கின்றது. அந்தப் பாதுகாப்புப் படையில் இருக்கும் வீரன் ஒருவனுக்கு அவன் காதலி கடிதம் எழுதுகிறாள். அதில்,

காதலா

நீயும் நானும்

ரகசியமாய் நடந்து போகும்

ராத்திரிச்சாலை

இப்போது வெடிகுண்டுகளின்

விதைப் பண்ணையாகிவிட்டது.

மரணத்திற்கு இங்கு யாரும் அஞ்சுவதில்லை.

என்றாலும் கூட உன்னை

நினைத்துக்கொண்டிருக்கின்றேன்.

என் இனியவனே

எப்போதும் துப்பாக்கியை

நேசிக்கும் உனக்கு

எப்போதாவது என் நினைவு வந்ததுண்டா?

துப்பாக்கி எப்போது பூ பூப்பது

அப்போதுதான்

நீ என்னை நினைப்பாய்.

காதலனே – இப்போது

நான் திருமணத்தைக் காதலிக்கவில்லை – ஆனால்

பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

ஏனென்றால்

ஈழ யுத்தத்திற்கு

இன்னுமோர் போராளி தேவை

அடிமை ஈழத்தில்

தம்பதிகளாய் இருப்பதிலும்

சுதந்திர ஈழத்தில்

கல்லறைகளாய் இருப்போம்

என்று தன் குமுறலைக் காதலனுக்கு அனுப்புவதாகக் காட்டுகின்றார் கவிஞர்.

புத்தாண்டு

சுதந்திரம் பெற்ற காலம் முதல் ஒவ்வொரு ஆண்டும் நம் நாடு பல்வேறு பிரச்சனைகளைச் சுமந்து கொண்டு வருகின்றது. இதை அறிந்த கவிஞன் தன் மக அழுத்தத்தை வெளிப்படுத்துகிறான். அறிவியல் வளர்ச்சியின் விளைவில் குளோனிங் முறையைப் பயன்படுத்திப் பிறக்கும் குழந்தையை எண்ணி வருந்துகின்றார். அக்குழந்தைகள் சொந்த பந்தங்கள் பற்றி அறிந்திருக்குமா ? இல்லை சொந்தம் என்றால் என்ன ? என்ற கேள்வி தான் எழுப்புமா ? இல்லை அக்குழந்தைக்கு தாய்ப்பால் தான் கிடைக்குமா ? என்று வருந்துகிறார். மேலும்.

“சோதனைக் குழாயில்

தாய்ப்பால் வடியுமா ?”

“கவலைகள் கழிந்த

நாடு கொண்டு வா”

கதவுகள் கழிந்த

நாடு கொண்டு வா”

அகிலம் துயில

படைதீ கொண்டு வா

என்று இனி வரும் புத்தாண்டில் நாம் நினைத்த அமைதியான நாடாக வேண்டும் என்கிறார். இக்கிவிதையின் மூலம் கவிஞன் ஒரு பற்றுக் கொண்டவராகத் திகழ்வதைக் காணமுடிகின்றது.

முடிவுரை

அக்காலத்தில் அந்நியரிடம் போராடினோம். அனால் இன்று அரசியல் வாதிகளிடம் போராட வேண்டியிருக்கிறது. மேலும் ஒன்றாக இருந்த இந்தியா இன்று சிதைந்து கிடக்கின்றது. இதற்கு மனிதனின் அதிகாரமும் ஆதிக்கமும் தான் காரணமாகின்றன. மனிதன் நாட்டைப் போலவே இனம், மொழி என்ற அடிப்படையில் பிரிந்து கிடக்கின்றான். தீவிரவாதிகள் தேசத்தை நேசித்திருந்தால் நாம் அணுகுண்டுகளைப் பற்றி யோசித்திருக்க வேண்டியதில்லை. எப்போது நிம்மதியாக உறங்குவோம் ? இந்த நூற்றாண்டிலாவது அது நடக்குமா? கொடிமரத்தின் வேர்களை அழிக்க நினைக்கும் தீய சக்திகளிடம் இருந்து வேர்களைக் காப்பாற்றுவது நம் கடமைகளாகும். தீவிரவாதம் ஒழிய நாம் பாடுபட வேண்டும். இது போன்ற தேசப்பற்று புகட்டும் இலக்கியங்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்படவேண்டும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை.சிவக்குமார்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் 635 130.

ஆசிரியரின் பிறக்கட்டுரைகள்

1.எழுதிகச் சாங்கியம்

2.விடுதலைப் பண்ணையம்

இயற்கையியல் (Naturnlism)

இயற்கையியல் (Naturnlism)

இயற்கையியல்’ (Nataralism) என்ற சொல்லுக்குப் பொருள் ‘இயற்கையின்படி இருப்பது அல்லது இயங்குவதும் என்பதாகும். ‘இயற்கையியல்’ என்ற இலக்கிய இயக்கமாவது, கலை அல்லது இலக்கியத்தில், வாழ்க்கையை ஒரு குறிக்கோள் முறையில் தீட்டிக்காட்டாமல், இயற்கையில் உள்ளபடியே முழுமையாகத் தீட்டிக்காட்டும் முயற்சியை நோக்கிப் படைப்பாளர் செல்வதாகும்.

இயற்கையியல் இயக்கம்

இயக்க அடிப்படையில் பிரெஞ்சு நாட்டில் சில நாவல்கள் எழுந்தன, அந்நாவல் படைப்பாளருள் தலைமையிடம் வகிப்பவர் எமிலி ஜோலா (Emile Zola) என்பவராவார். இவ்வியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னைய காலக்கட்டத்தில் எழுந்து அந்நூற்றாண்டின் இறுதிவரை வளர்ந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை மலர்ந்திருந்தது.

இயற்கையியல் (Naturalism) பற்றி அறிஞர்களின் கூற்றுகள்

கிரேக்க நாட்டுத்தத்துவத்தைப் பொறுத்தவரை ‘இயற்கையியல்’ என்ற சொல்லின் பழைய பொருள் இன்பத்தைத் துய்த்தல்’ என்பதாகும்.

  • ஹால்பக் (Holbach) என்பவர் கருத்துப்படி,

“இயற்கையியல்“ என்பது ஒழுங்குபட்ட ஒரு முறையான தத்துவமாகும். இதன்படி மனிதன் என்பவன் அண்டம் என்னும் மிகப்பெரிய பொறியினுள் ஒரு சிறுஉறுப்பாவான். அவ்வண்டப் பொறியானது இயற்கையை நிர்ணயம் செய்வதுபோல், அவனது வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது. அவ்வியற்கையோ, இடமும் காலமும் கடத்த தத்துவங்களாலும் நுண்பொருள் பண்புகளாலும் தெய்வீக சக்திகளாலும் இயங்காது இயற்கையாய் தன்னிச்சையாய் இயங்கும் ஒன்றாகும்.  

  • G. Gaorge என்பவர்,  இவ்வுலகம் பற்றி வெவ்வேறு வசையான இரு கருத்துக்கள் உண்டு என்கிறார்.

1. ஒருவகை, நாம் காணும் இயற்கைக்கு அப்பாற்பட்டு அல்லது நாம் காணும் இயற்கைக்குள் இருக்கும் ‘கடவுள்’ அல்லது ஆத்மாவைப்பற்றி உலவும் சமயக்கொள்கைகளாகும்.

2. இரண்டாம் வகை, தன்னில்தானே இயங்குவதாக, தன்னைத்தானே வெளிப்படுத்திக்கொள்கின்ற இயற்கையின் செயற்பாடு பற்றி நிலவிடும் பொருளியல் (Materialism), இயற்கையியல், நடப்பியல் ஆகியவற்றின் சார்பாக விளங்கும் கொள்கைகளாகும். இயற்கையைக் கடந்திருக்கும் ஒரு சக்தியின்பால் நம்பிக்கை கொள்வோர் இந்த உலகத்தையும் மனித இயற்கையையும் விளங்கிக்கொள்வதற்கு அல்லது விளக்குவதற்குப் பொருளியியல் பாகுபாடுகளோ, தூயஇயற்கைக் கோட்பாடுகளோ போதாது என எண்ணுகின்றனர்.  இவ்வகையினர் சிந்தனைப்படி இயற்கையென்பதும், மனிதஇயற்கை என்பதும் நன்கு வேறுபட்டவையாக பிரித்து அறியத்தக்கனவாவும் இருக்கின்றன.

இயற்கையியல்வாதிகளோ இயற்கை என்பதனைத் தூயஇயற்கை நெறிமுறைகளாலேயே விளங்கிக்கொண்டு விளக்கமுடியும் எனக் கருதுகின்றனர். இவ்வகையில் இவர்களுக்கும் நடப்பியல்வாதி அல்லது பொருளியல்வாதிகளுக்கும் இடையே ஓரளவு ஒற்றுமை உண்டு.

  • டிட்ராட் (Diderot) என்பவரின் கூற்றுப்படி,

இயற்கையியல்வாதிகள் என்பவர்கள் கடவுளை நம்பாதவர்கள் என்றும் பொருளியல் சாரத்தில் (Material substance) மட்டும் நம்பிக்கை உடையவர்கள் என்றும் கருதினார். 1839 ஆம் ஆண்டு செயின்ட். பியூவி (Sainte-Beuve) என்பவர், ‘இயற்கையியல்’ என்பதை விளக்கும்போதெல்லாம் அதனருகே அடைப்புக்குள் ‘Materialism’ என்பதைப் பயன்படுத்தினார். இதனால் ‘இயற்கையியல்’ என்பதும் ‘பொருளியல்’ என்பதும் ஏறக்குறைய ஒன்று என்ற கருத்து உளவலாயிற்று.

  • அரை நூற்றாண்டுக்குப்பின் 1882ஆம் ஆண்டு காரோ (Caro) என்ற தத்துவஞானி, ‘தெய்வீகஇயல்’ என்பதற்கு மாறுபட்ட ஒன்றாக இயற்கையியலைக் கொண்டார்.

இந்த உலகம் இயற்கை மயமாக இருக்கின்றது. இது உயிர்ப்புமிக்கதும் ஒழுங்குபட்டதும் ஒன்றோடொன்று இயைபுபட்டதுமான ஓர் அமைப்பினை உடையது. இதில் பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மரஞ்செடி கொடிகள் இயங்குகின்றன. நட்சத்திரங்கள் மின்னுகின்றன. கற்கள் கிடக்கின்றன. இவையாவும் இப்பேரண்டத்திற்குள்ள உயிரியக்கப் பெருவாழ்வினுள் ஒவ்வோர் அங்கம் வகிக்கின்றன. முன்னர் இன்பநுகர்ச்சியையும் பொருளியலையும் குறித்து வந்த ‘இயற்கையியல்’ மேற்கூறிய வண்ணம், இயற்கை, அண்டம், பூதவியல், உயிரியல் ஆகிய பொருளுணர்ச்சி அனைத்தையும் தாங்கி வழங்கிவரத் தொடங்கிற்று. நாளடைவில் புதியதொரு பொருள்வன்மை பெற்று இலக்கிய உலகோடு தொடர்புகொண்டு இலக்கிய ஆராய்ச்சியாளரின் நீடிய ஆராய்ச்சிக்குரியதாயிற்று.

இவ்வியற்கையியலைப் போற்றும் இயற்கையியல்வாதியர் (Naturnlists), ஓவியக்கலையைப் பொறுத்தமட்டில், இயற்கையின் உண்மை வடிவங்களை அப்படியே திரைச்சீலையில் வரைந்து காட்டவே விரும்பினர். அதாவது, இயற்கையில் படைக்கப்பட்ட ஒன்றைப் பார்த்து அதுபோலவே இயற்கை வண்ணம் முழுதுமாகத் தெரியும்படி வரைந்துகாட்ட விரும்பினர். ஆயின், வரலாற்றுத் தொடர்பாகவோ உருவகத் தொடர்பாகவோ உள்ள எதையும் வரைந்துகாட்ட விரும்பவில்லை.

இவ்வியற்கையியல்வாதிகளாகிய ஓவியக்கலைஞர்களால் பிரெஞ்சு நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், இயற்கையியல் என்பது நுண்கலை உலகத்தோடு தொடர்புகொள்ளலாயிற்று. பாட்லியர் (Baudelaire) போன்றோரால் ஊக்குவிக்கப்பெற்றது. இனி, இலக்கியத்தில் இடம்பெற்ற ‘இயற்கையியல்’ எவ்வெவ்வகையில் அமைந்திருந்தது எனக்காண்போம்.

மனிதனை விலங்காகக் காட்டும் இயற்கையியல்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் உலகத்தில் நேர்ந்த புதிய கண்டுபிடிப்புகளும் முறைகளும் (the new Physics of Newton, the Biology of Darwin, Sociology of of Herbert Spencer) தொழில் வளர்ச்சியும் புரட்சியும் அக்காலகட்டத்தில் வாழ்ந்த இலக்கியவாணர்களையும் பாதித்திருக்கின்றன. அறிவியல்துறை பற்றிய முக்கிய சில கொள்கைகளானவை,

1.மனிதனையும் மனிதனின் இயற்கைப் பண்புகளையும் இலக்கியத்தில் படைத்துக் காட்டும் எழுத்தாளர் சிலரால் மேற்கொள்ளப்பட்டன.

2. மனிதன் உயர்வாக வைத்துப் போற்றப்படும் நிலைபோலவே, அவனுக்கு இயல்பாக அமைந்த சில விலங்கு உணர்ச்சிகளின் அடிப்படையில் பொதுவாக அவனியங்கும் நிலையும் எழுத்தாளர் சிலரால் சித்தரிக்கப்பட்டது.

டார்வின் கண்டுபிடித்த  ‘உள்ளது சிறத்தல்’ என்னும் கொள்கை இயற்கையியல்வாதிகளைப் படைப்புத்துறையில் பெரிதும் இயக்கியுள்ளது. இயற்கையியல்வாதிகள் மனிதனை ஒரு சாதாரண விலங்கினைப் போல நோக்கியும் அவ்விலங்குத்தன்மை கொண்டு அவன் நடந்து கொள்ளக்கூடும் நடைமுறைகளை எடுத்துக்காட்டியும் அவனது உயரிய நோக்கமென்னும் வலையினின்றும் அவனை விடுவித்து விளக்கியும் உள்ளனர்.

மனிதனைக் குறிக்கோள் நிலையில் வைத்துக்காட்ட முனைந்த புனைவியல்வாதிகள்போல் அல்லாது இயற்கையியல்வாதிகள் மனிதனை விலங்கு நிலையிலேயே வைத்துக் காட்டினர். மனிதன் உயரிய தெய்வீகப் பேராற்றலின் படைப்பாகக் காட்டப்படாமல், விலங்கு நிலையினின்றும் ஓரளவே ‘உயர்ந்திருக்கின்ற ஓரினமாகக் காட்டப்பட்டான். வாழ்க்கையும் ஒரு பெரியதொடர் போராட்டமாகவே காட்டப்பட்டது.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதனென்ற கருத்தும், குரங்கிலிருந்து வளர்ந்த மனிதன் மறுபடியும் மனிதநிலையினின்றும் தாழக்கூடும் என்ற கருத்தும் எழுத்தாளர் சிலரால் இலக்கியத்தில் ஏற்றப்பட்டன. ‘மனித விலங்கு’ (The human animal) என்னும் ஒரு நாவல் 1913ஆம் ஆண்டு சார்பென்டிர் (Charpentier) என்பவரால் இயற்றப்பட்டது. ‘உள்ளது சிறத்தல்’ என்னும் இயற்கைநியதி புறக்கணிக்கப்பட்டு உள்ளதும் கெடுதல்’ என்னும் போக்கும் மனித வாழ்க்கையைப் பொறுத்தஅளவில் இலக்கியத்துறையில் ஏற்படலாயிற்று.

பிரெஞ்சுமொழியில் இப்போக்கினை உடைய நாவல்கள் சில எழுந்தன. பின்னாளில் ஃபிராய்ட் என்பார் விளக்கியதற்கேற்ப, மனிதனானவன் ஒரு குறிப்பிட்ட நெருக்கடி வரும்போது அல்லது ஒரு குறிப்பிட்ட இடர்ப்பாட்டிற்கு ஆளாகும்போது அல்லது பாலுணர்வுக்கு இரையாகும்போது அல்லது குடியில் ஆழும்போது அவன் உள்ளத்தின் அடித்தளத்தில் புதைந்துகிடக்கும் காட்டுமிராண்டி நிலைக்குத் திரும்பி விடுகின்றான்.  இதனால் இயற்கையியல் முறையில் எழுந்த இலக்கியங்களில் காணப்பட்ட காட்சிகளுக்குரிய மூலங்கள் விலங்கு உலகத்தினின்றும் அவ்வுலகம் பற்றிய சொற்கோவையினின்றும் பெறப்பட்டன. இதன் விளைவாக இயற்கையியல்வாதிகள் சினத்திற்கும் ஆளாயினர்.

இயற்கையியல் நாவல்களில் இயற்கை நியதிபற்றி அல்லது இயற்கைச் சூழல்களையொட்டி மனிதனைச் சித்தரித்துக் காட்டுவதே முக்கிய நோக்கமாக இருந்தன. இவ்வகை எழுத்தாளர்கள் தத்தம் சொத்தப் படைப்புரிமையைப் பெரிதும் விட்டுக்கொடுத்துப் படைப்புக்குரிய சூழ்நிலைகளுக்கே தங்களை ஆளாக்கிக்கொண்டனர். இவர்கள் படைத்த நாவல்களில் வரும் சுதாநாயகர்களும் இப்படியே இருந்தார்கள்.

கிராமிய இயற்கையியல் (Rural Naturalism)

கிராமியச் சூழலில் வாழ்ந்து வயல்வெளிகளில் பாடுபட்டுப் பயிர் செய்யும் உழவர்கள் வாழ்வும் அவர்க்கென்று அமைந்த தனித்த கிராமியப் பண்புகளும் இயற்கையியல் இலக்கியத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இவ்வகை நாவல்களில், உளவியல் முறையில் உழவர் பெருமக்களின் உள்ளம் எவ்வெவ்வேறு செயற்படுகின்றது. தங்களைச் சுற்றியிருக்கும் தங்களின் தொழிற்களமாகிய நிலத்தோடு எவ்வெவ்வாறு அவர்கள் போராடுகின்றார்கள் என்பனவும் அழகுறக் காட்டப்பட்டன. சுருங்கக்கூறின் கிராமியச்சூழலை ஒட்டி உளவியல் இலக்கியம் (Pastoral Literature) உருவானது. இவ்வகையில் அமெரிக்கநாட்டு எழுத்தாளர்களாகிய ஹாம்லின் கார்லண்டு (Hamlin Garland), வில்லா கேதர் (Willa Cather), எல்லன் கிளாஸ்கோ (Fllen Glasgow), பால்க்னர் (Faulkner)ஆகியோரின் படைப்புக்கள் குறிப்பிடத்தக்கவை.

ருசிய நாட்டில் டால்ஸ்டாயின் நாடகம் ஒன்றும் (The Powcr of Darkness), கார்க்கியின் (Gorkey) நாடகம் ஒன்றும் (The Lower Depths) உழவர்க்குரிய காம இச்சையையும் அக்காலக்கட்டத்தில் அவர்தம் செயற்போக்கினையும் விளக்கியுள்ளன. இவ்வகை இயற்கையியல் நாடகங்களில், நடுத்தர வர்க்கமாகிய உழவர் அல்லது உழைப்பாளர் கூட்டம் பற்றிய நடப்பியல் செய்திகளும் அவர்களிடையே நிகழும் நிகழ்ச்சிகளும் இவர்கள் அல்லாத ஏனைய கூட்டத்தார்க்கும் புலனாகும்படி அமைத்துக் காட்டப்பட்டன. சுருங்கக் கூறின், இயற்கையியல் நாவல்களும் நாடகங்களும் இயற்கையோடு இயைந்த கிராமிய வாழ்வைப் பிரதிபலித்தன.

நடப்பியல் – இயற்கையியல் வேறுபாடு

நடப்பியல் (Realism) என்பதும் இயற்கையியல் என்பதும் ஒருவகையில் ஒத்திருப்பினும் அவற்றை ஒன்றென்று கொள்வது பொருத்தமன்று. நடப்பியல் என்பது, உண்மைக் கூறுகளைத் தனித்த ஒருவர் காணும் கண்ணோட்டத்தோடு கலைப்பண்போடு நமக்குக் காட்டுவதாகும். பல்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த பல்வேறு எழுத்தாளர்கள் உண்மையை உள்ளபடி கண்டு வந்த கண்ணோட்டத்தோடு தொடர்புடையது நடப்பியலாகும். ஆயின், இயற்கையியல் என்பதோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலக்கிய இயக்க வரலாற்றில் முக்கிய இடம் பெறுவதும் முருகியல் சார்பு கொண்டதுமான ஓர் இயக்கமாகும். பொருள்களைப் பார்க்கும் பார்வையோடு மட்டும் இயற்கையியல் தொடர்புடையதன்று. மனம்,  அம்மனத்தை இயக்கும் பொருள் வண்ண உலகம், இந்த இரண்டோடும் தொடர்புடைய அனைத்துவகை இயக்கங்களுக்கும் இயற்கைக் காரணங்களே பொறுப்பாகும் என்று கருதும் கோட்பாட்டோடு தொடர்புடையதாகும்.

கலையுலகத்தைப் பொறுத்த அளவில் பொருளியல் கோட்பாட்டோடு தொடர்புடைய இயற்கையியல் எமிலி ஜோலா (Emile Zola), ப்ளாபெர்ட் (Flaubert) கெய் டிமாப்பசான் (Guy de Maupessant) ஆகியோரின் நாவல் படைப்புக்களில் நன்கு வெளிப்படுத்தப்படுகின்றது.

இயற்கையியல் இயக்கத் தொடர்பான செய்திகள்

எமிலி ஜோலா என்பவருக்கு முன்னால் கிளாட் பெர்னார்டு (Claude Bernard) என்பவர் இயற்கையியல் பற்றிய முருகியல் கோட்பாடுகளின் (Naturalistic Aesthetics) அடிப்படையை விளக்கி உள்ளதாக நாம் அறிய வருகின்றோம். ஜோலா ஓர் எழுத்தாளனுக்கு அறிவுறுத்தும் செய்தியாவது

உண்மை இயலை ஒரு விஞ்ஞானியைப் போல உற்று நோக்கி அவ்வண்ணமே சிந்தித்து எழுத வேண்டும். ஒன்று எப்படி இருக்கின்றது என்று கண்டால் போதும். அது ஏன் இருக்கின்றது என்று காணவேண்டியதில்லை.

இவ்வகை நோக்குடைய இயற்கையியல்வாதிகள் தனிப்பாட்டு வகையை விரும்பியதைவிட நாடக வகையை அல்லது நாவல் வகையைப் பெரிதும் விரும்பினர். காரணம், இவற்றுள் சில கதைப்பாத்திரங்களைப் படைத்துக்காட்டி, அவை குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு உட்பட்டு அச்சூழ்நிலைகளால் தாக்குறும் இயற்கை நிலையில் அவை செயல்படும் திறத்தை இயற்கை வண்ணம் மிக வெளிப்படுத்திக் காட்டமுடியும் என்பதே.

இயற்கையியல் என்பது தொடக்கத்தில் பழங்கால கிரேக்கநாட்டில் வழங்கிய ஒரு கோட்பாட்டோடு தொடர்பு கொண்டு பின்னாளில் விஞ்ஞான முறையில் வளர்ந்து காலப்போக்கில் இலக்கியம் என்னும் எழில் நங்கையோடு தொடர்பு கொள்ளலாயிற்று. ஓரளவு கருத்து வகையில் வளரத் தொடங்கிய இயற்கையியல் என்னும் கோட்பாடு நாளடைவில் இலக்கியத் திறனாய்வு உலகில் ஆராய்ச்சியாளர்க்குரிய ஓர் இயக்கமாக மலர்ந்தது. இவ்வியக்கம் வெவ்வேறு நாடுகளில் அவ்வப்போது இலக்கியப் பூங்கொடியில் படரித் தொடங்கிக் கண்ணுக்கினிய புதிய சில சிந்தனை மலர்களைக் கலை உலகிற்கு வழங்கியது. இலக்கியம் செழித்த ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பாலும் இவ்வியக்கம் இடம் பெற்றதாயினும் சிறிதுசிறிது கொள்கையளவில் இதற்குரிய விளக்கம் வேறுபட்டிருந்தது என்பதையும் இலக்கிய ஆராய்ச்சி வரலாற்று முறையால் நாம் அறிய வருகின்றோம்.

இவ்வியக்கம் முதன்முதலாகப் பிரான்சு நாட்டில் தோன்றியது. பின்னர் இங்கிலாந்து நாட்டிற்குப் பரவியது. ஆயினும் பிரான்சு நாட் டில் வளர்ந்திருந்த இயற்கையியல் என்ற இலக்கிய இயக்கம் சிறிது வேறுபட்டு இங்கிலாந்து நாட்டில் வளர்ந்து வந்தது. மொத்தத்தில் பிரான்சு நாட்டில் பெற்றிருந்த அவ்வளவு செல்வாக்கினை இவ்வியக்கம் இங்கிலாந்தில் பெறவில்லை. ஐரோப்பிய நாடுகளை விட சமுதாயப் பொருளாதாரத் துறைகளில் அதிகமான மாற்றங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஏற்பட்டமையின். இயற்கையியல் இயக்கத்திற்கும் அதிக செல்வாக்கு ஆண்டு ஏற்பட்டது. ஆயினும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ‘இயற்கையியல்’ என்பது இருபதாம் நூற்றாண்டின் ‘ஒருவகை புதிய நடப்பியல் (a new Realism ) என்று வழங்கப்பட்டதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இயற்கையியல் இலக்கிய இயக்கம் செர்மானிய நாட்டிலும் பல்வகை நிலைகளில் பரவலாகப் படர்ந்திருந்தது. இயற்கையியல் இலக்கியச் சார்பு கொண்ட சில நாவல்களும் நாடகங்களும் செர்மானிய நாட்டில் எழுந்தன. செர்மானிய இயற்கையியல்வாதிகளுக்கு இப்சனும் டால்ஸ்டாயும் முன் மாதிரிகளாக அமைந்தனர்.

ஐவகை இயற்கையியல்

இயற்கையியல் தத்துவ முறையிலும் பரிணாமவளர்ச்சிக் கொள்கை முறையிலும் இலக்கியத்துறையில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘இயற்கையியல்’ இயக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சார்பு மிக்கதாயினும், அது குறித்து வழங்கும் பல குறிப்புகளையும் செய்திகளையும் விரிவாக ஆராயும் போது, பொது நிலையில் கீழ்க்கண்ட ஐந்து வகையாகப்  பிரித்துக் காட்டப்படுகின்றன.

(1) தத்துவவழி இயற்கையியல் (Philosophical Naturalism)

(2) அறிவியல் கொள்கைப்படி மனிதனைக் காட்டும் இயற்கையியல்

     (டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கை)

(3) கிராமிய இயற்கையியல் (Rural Naturalism)

(4) உள்ளதை உள்ளபடி (Realism) காட்டும் இயற்கையியல்

(5) அறிவியல்கூறு புலனாகும் இயற்கையியல்

முடிவுரை

இலக்கிய ஆராய்ச்சித் துறையில் தமிழ்மொழியைப் பொறுத்த மட்டில் இவ்வியக்கம் இடம் பெறுவதற்குரிய அல்லது செல்வாக்குப் பெறுவதற்குரிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஆயினும், உலக நாடுகள் பலவற்றுக்கும் பொது வாக வளர்ந்து வரும் இலக்கியத் திறனாய்வுத் துறையில் இவ்வியக்கம் பற்றிய சிந்தனைகளுக்கும் ஓரிடம் உண்டு.

நடப்பியல் (Realism)

இதற்கு மற்றொரு பெயர்களாக மெய்ம்மை இயல் / குறிக்கோள் நிலை (Idealism) என்றும் அழைப்பர்.

இலக்கியத் திறனாய்வாளர்கள் சிந்தனையில் நீண்ட காலமாக ஆய்வுக்குரிய ஒரு முக்கிய இலக்கியக் கோட்பாடாக இருந்து வருகின்றது. உலகெங்கும் உள்ள பல்வேறு இலக்கியங்களில் காணப்படும் செய்தியாக விளங்குவதுமாகிய நடப்பியல் இன்றைய நிலையில் பரவலான முறையில் விளக்கப்பட்டு வருகின்றது.

இலக்கிய இயக்கங்களுள் ஒன்றாகிய புனைவியல் என்பதற்கு எதிராக இவ்வியக்கம் எழுந்தது என்ற கருத்துடையாரும் உண்டு. இந்நடப்பியலும் குறிக்கோள் நிலையும் (Idealism) கவிதை, நாடகம், காவியம், புதினம் முதலிய பலவகை இலக்கிய வகைகளோடு தொடர்புடையன. ஓரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் படைப்பவனுடைய மன நிலைக்கும் உலகிற்கு அவன் வழங்க விரும்பும் கலைப்படைப்பின் தன்மைக்கும் ஏற்றபடி, நடப்பியலும் குறிக்கோள் நிலையும் மிகுந்தோ குறைந்தோ காணப்படுகின்றன.  இவ்விரண்டையும் இலக்கியப் படைப்பாளர் எவ்வெவ்வகையில் கடைப்பிடிக்கின்றனர் என ஒருவாறு நாம் இலக்கியப் படைப்புகள் வாயிலாக அறிய முடியலாமே அன்றி இவற்றைத் தம்படைப்புகளில் பயன்படுத்தும் உரிமையை தாம்கட்டுப்படுத்த இயலாது. இனி, நடப்பியம் பற்றிய சில தனிச் செய்திகளையும் நடப்பியல் குறிக்கோள் நிலை ஆகியவற்றுக்கிடையே உள்ள வேற்றுமைகளையும் காண்போம்.

நடப்பியல் ஒரு வரையறை

நடப்பியல் பற்றிய பல செய்திகளை நோக்கும்போது, பொதுவாக நடப்பியல் என்பது சாதாரண மனித மனத்திற்குத் தோன்றும் வண்ணம் நடைமுறையிலே உள்ளதை உள்ளபடி காட்டுவதோடு தொடர்புடைய கலைக்கூறாகும். இங்ஙனம் ‘பிரின்ஸ்டன் கலைக் களஞ்சியம்’ கூறுவதைச் சற்று வேறுவகையாகச் சுருக்கமான முறையிலும் விளக்கலாம். நடைமுறையில் உள்ளதை உள்ளவாறு அழகுறச் சித்தரித்துக் காட்டுவது நடப்பியல் என்று கொள்ளலாம். நடப்பியல் பாங்கில் படைக்கப்படும் ஒருகுறிப்பிட்ட இலக்கிய வகையில் சாதாரண மனிதர் இடம் பெறுவர். சாதாரண சூழ்நிலைகள் இடம்பெறும். சாதாரண செயல்முறைகள் சுவையாக விளக்கப்படும். சாதாரண பின்னணிகள் சித்தரிக்கப்படும்.  

ஒரு கடற்கரையில் நாம் காணும் காட்சிகள், ஒரு கல்லூரியில் நாள்தோறும் காணப்படும் நடைமுறைகள், ஒரு தொழிற்சாலையில் நாம் பார்க்கும் காட்சிகள், ஒரு சாலை ஓரத்தில் ஏழைமக்கள் மேற்கொள்ளும் எளிய வாழ்க்கை முறைகள், ஒரு பொது அலுவலகத்தில் காணப்படும் நடவடிக்கைகள், சமுதாய அளவில் பல்வேறு நிலையினரும் நாள்தோறும் இயங்கும் இயக்க நிலைகள், குடிசை வாழ்மக்கள் ஒவ்வொரு நாளும் வறுமைக்கிடையே போராடிக்கொண்டு வாழ்ந்து செல்லும் நிலைகள் முதலியன ஆங்காங்கே உள்ளபடி அழகுறச் சித்தரித்துக்காட்டப்படுவது நடப்பியலாகும்.

நடப்பியலில் பின்பற்றப்படும் முறைகள்

எந்தவகை இலக்கியம் நடப்பியலின்படி படைக்கப்படுகிறதோ அந்தவகை இலக்கியத்தில் மிகையான கற்பனை கலந்த காட்சிகள், அளவுக்கு மீறிய உவமை, உருவகங்கள் முதலியன தவிர்க்கப்படுகின்றன.

கவிதை, நாடகம், காவியம், புதினம், புதுக்கவிதை முதலியவற்றுள் ஏதேனும் ஒரு வகையில் நடப்பியலை வெளிப்படுத்தலாம். ஆயின் நடப்பியல் என்பது பெரும்பாலும் வருணனை முறையில் அமையும் இலக்கியங்களில் (Descriptive Literature) மிகுதியாக வழங்கும். நடப்பியல் முறைமை கவிதையில் குறைவாக இடம்பெறும்; காவியத்தில் சற்று மிகுதியாகும்; சிறுகதை நாவல்களில் அதிகமாகும்; சமூகவியல் நாவல்களில் மிக அதிகமாகும்; நாடகத்திலும் அதிகம் ஆகும்; இன்று எழுந்து வளர்ந்து பெருகும் புதுக்கவிதையிலும் மிகுதியாக இடம்பெறத்தொடங்கியுள்ளன.

ஏதேனும் ஒன்று நடப்பியல் முறையில் சொல்லப்படுகிறது என்பதற்கு இரண்டு வகையான அடிப்படைகள் உள்ளன.

ஒன்று: மனித ஆற்றலுக்கும் செயலுக்கும் உட்பட்டதாக, நம்மால் முடியக் கூடியதாகத் தெரிய

வேண்டும். (it is Possible)

இரண்டாவது: பெரும்பாலும் நடக்கக் கூடியதாக இருக்க வேண்டும். (It is Probable)

நடப்பியலைக் கண்டு காட்டும் எழுத்தாளர் அல்லது இலக்கியப் படைப்பாளர் தாம் நடப்பியலில் காண்பதைச் சொல்லுவதோடு அந்நடப்பு தம் மனத்தே தோற்றுவிக்கும் சிந்தனை அல்லது உணர்ச்சிகளையும் இணைத்துச் சொல்லலாம். நடப்பியல் என்பது பொருளோடு (Content) தொடர்புடையதா அல்லது வழங்கும் முறையோடு (Form) தொடர்புடையதா என்ற ஒரு விவாதமும் எழுகின்றது. பொதுநிலையில், நடப்பியலைப் பொருளோடு வழங்கும் முறையோடும் தொடர்புடையதாகக் கொள்வதே தக்கதென்று தெரிகின்றது.

சோசலிச நடப்பியல் (Socialist Realism)

இன்றைய நிலையில் நடப்பியல் என்பதன் மிக முக்கிய வளர்ச்சியாக ‘சோசலிஸ நடப்பியல்’ கருதப்படுகின்றது. இதன் சில முக்கிய கோட்பாடுகளை டாக்டர் ந.பிச்சமுத்து பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

(1) பொது உடைமைத் தத்துவத்தில் பற்று

(2) மக்கள் தொண்டு

(3) சுரண்டப்பட்ட வர்க்கச் சார்பு

(4) தொழிலாளர்களின் போராட்டங்களில் நெருக்கமான பிணைப்பு

(5) சோசலிஸ்ட் மனிதாபிமானம்

(6) அனைத்துலகப் பார்வை

(7) சமுதாயம் முன்னோக்கித்தான் வளர முடியும் என்னும் நன்னம்பிக்கை

(8) சடங்கியல், அக நோக்குவாத இயற்பண்புவாத மறுப்பு, பழமை எதிர்ப்பு ஆகிய கூறுகள்.

நடப்பியலும் குறிக்கோள் நிலையும்

நடப்பியலைச் சுவையாகப் படைத்துக்காட்ட முடிவது போலவே குறிக்கோள் நிலையையும் சுவையாகப் படைத்து காட்டமுடியும். உள்ளபடி கூறுவதில் உண்மை வாழ்க்கையின் பிரதிபலிப்பு இருப்பதால் அனுபவவகையில் ஒருவகைச்சுவை ஏற்படுகிறது. குறிக்கோள் நிலையிலோ விழுமிய வாழ்க்கையின் பிரதிபலிப்பு இருப்பதால் மேலோங்கிய மனித உணர்வுக்கும் பண்பாட்டுக்கும் அடிப்படையான ஒருவகை விழுமிய மனஉணர்வு எழுகின்றது.

நடப்பியல் என்பது நடைமுறை வாழ்வின் பல பகுதிகளையும் சிறப்பாகக் கொண்டு இயங்குவது. குறிக்கோள் நிலையோ மனித சக்தியின் மிக உயர்ந்த எல்லைகளை எட்டிப்பிடிக்க முனையும் மிக அரிய வாழ்வு ஓவியங்களை நமக்குக் காட்டுவது. நடப்பியல் மனிதன் இன்னவனாக இருக்கின்றான் என்று காட்டுவதற்குத் துணைசெய்வது போலவே குறிக்கோள் நிலையும் அவள் இன்னவனாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி மிக மேலோங்கிய நிலைக்கு அழைத்துச் செல்வதற்குத் துணை செய்கின்றது.

நடப்பியல் தனக்குரிய சில பயன்களைக் கலை உலகில் விளைவிப்பதுபோலவே குறிக்கோள் நிலையும் கலை உலகில் சில பயன்களை விளைவிக்கின்றது. நடப்பியல், அன்றாட வாழ்வைச் சித்தரித்துக் காட்டும் புதினம், சிறுகதை போன்ற இலக்கிய வகைகளின் தோற்றத்திற்குக் காரணமாக அமைவது போலவே குறிக்கோள் நிலையும் இராமாயணம் போன்ற மிக அற்புதமான குறிக்கோள் நிலைக்காவியங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு இவ்விரண்டையும் ஒருவகையாக அவ்வவற்றின் தன்மை நோக்கியும் பயன் நோக்கியும் பிரித்தறிய முடிகின்றது.

இன்றைய இலக்கியப் படைப்பாளர் பலரும் புதினம், சிறுகதை போன்ற இலக்கிய வகைகளில் நடப்பியலை மிகுதியாக அமைத்துக்காட்டுகின்றனர். குறிக்கோள் நிலையில் எழுதப்படும் நாடகங்கள் காவியங்கள் புதினங்களும் சிலரால் இயற்றப்படுகின்றன. கலையின் பொதுவான அமைப்பிற்கும் நீண்டகாலச் சுவை விருந்திற்கும் இந்த இரண்டும் இன்றியமையாதன. இலக்கியப் படைப்பில் நடப்பியல் மிகுந்து குறிக்கோள் நிலை இல்லாது போயின் கலையின் விழுமிய பயன் இல்லாது போய்விடும். இதனால் உண்மை வாழ்வினை நம்மால் அறிய முடியுமேயன்றி உயர்ந்த வாழ்வினை நம்மால் அறிந்து கொள்ள இயலாது. அவ்வாறே இலக்கியப் படைப்பில் குறிக்கோள் நிலை மிகுந்து நடப்பியல் இல்லாது போய்விடின் கலையின் சுவை கெட்டுவிடும். கலைஞன் படைத்த படைப்பு சாரமற்றுப் போய்விடும். எனவே, மனித வாழ்வில் உள்ளதைக் காட்டும் பாங்கும் உயர்ந்ததைக் காட்டும் பாங்கும் கலைஞரிடம் அமைவது இன்றியமையாதது. மொத்தத்தில் நடப்பியலும் குறிக்கோள் நிலையும் கூடிக் கலைவாழ்வின் முழுப்பயனையும் நமக்கு நல்குகின்றன.

நடப்பியல் வகைப்படி இலக்கியங்கள்

நடப்பியலின்படி, மனித மனத்தின் சாதாரண எல்லைக்கு உட்பட்ட அளவிற்கே கலையுலகக் காட்சியானது அமைத்துக் காட்டப்படுகின்றது. இவ்வுண்மை நிலைப்படி, பொருளாசையால் போகும் ஒருவனின் மனநிலைகளைச் சித்தரித்துக் காட்டி அவன் வாழ்வில் அடையும் வீழ்ச்சியை விளக்கும் ஒரு புதினத்தை இயற்றலாம். அரசியல் உலகில் தன்னிகரில்லாத செல்வாக்கைப் பெற்று உடனிருந்தவரின் சூழ்ச்சியால் வீழ்ந்துபோன தலைவன் ஒருவனின் அரசியல் வரலாற்றைக் குறித்து ஒரு புதினத்தைப் படைத்துக் காட்டலாம்.

இன்றைய உலகில் விஞ்ஞான வளர்ச்சியினாலும் பொதுவாழ்க்கைச் சிக்கலினாலும் எழுத்துள்ள புதிய வாழ்க்கை நிலைகளை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு புதினத்தைப் படைக்கலாம். நடப்பியல் பற்றி இவ்வகையில் நாடகங்களையும் இயற்றலாம். ஓர் அலுவலகத்தில் பணிபுரியும் சிலரிடையே உள்ள நட்பு, பகைமை ஆகிய உணர்வுகளையும் அவ்வுணர்வுகளால் எழும் அலுவலகப் போராட்டங்களையும் நன்கு புலப்படுத்தும் வகையில் ஒரு நாடகத்தை இயற்றலாம். உளவியல் முறையில் ஒருவனுக்கு நிகழும் சிக்கல்களைச் சித்தரித்துக் காட்டும் நடப்பியல் நாடகத்தை இயற்றலாம்.

இவ்வாறே இன்றைய பொது வாழ்க்கையில் அன்றாடம்  காணப்படும் சிச்கல்களை எடுத்துக் காட்டும் முறையில் ஒரு காவியத்தை இயற்றலாம்.

புதினத்தில் பெயர்களையும் நாட்களையும் தவிர ஏனைய ஒவ்வொன்றும் உண்மையாகும். வரலாற்றில் பெயர்களையும் நாட்களையும் தவிர வேறு எதுவும் உண்மை யில்லை எனக் கூறப்படுவது, நடப்பியலைப் புதினமானது எந்த அளவுக்கு மிகுதியாகக் கொண்டிருக்கின்றது என்பதை நமக்குக் காட்டவல்லதாகும். இவ்வகையில் புதின ஆசிரியர் தனது புதினத்திற்கு எடுத்துக்கொண்ட பொருளை கலையாகப் படைந்து வழங்குவதில் மிக்க உரிமைகளை எடுத்துக் கொள்ளலாம். தனக்குக் கிடைத்த செய்திகளைப் புதுமையாகவும் வியக்கத்தக்க முறையிலும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அவர் புதியதாகவே சிலவற்றைக் கண்டுபிடிக்கலாம்.

ஆயினும் வாழ்வு பற்றிய அடிப்படையான பெரிய நிகழ்ச்சிகளையும் வாழ்வின் ஆற்றல்களையும் மறவாது போற்றி ஓரளவு குறிக்கோள்நிலை உடையவராக இருப்பது நல்லது. இவ்வகையில் கலைஞனின் படைப்பு பிழையுடையதாய் இருப்பின் அது சிறந்ததன்று என்று நாம் தயக்கமின்றிக் கூறலாம்.

நடப்பியலைப் படைத்துக் காட்டவேண்டும் என்பதற்காகத் தனிமனிதனிடத்தும் சமுதாயத்திலும் உள்ள குறைகளை மிகுதிப்படுத்தி அளவுகடந்த மனவிகற்பங்களுக்கு பு இடமளித்துப் படைக்க வேண்டும் என்பதில்லை. உள்ள குறைகளையே கலை வண்ணம் தோன்றும்படி அழகுறச் சித்தரித்து, அக்குறைகளை எடுத்துக்காட்டுவதன் நோக்கம் திருத்தமுனையும் கோட்பாடு என்பதைப் புலப்படுத்தி, குறைகளைக் கடந்து கலைஞனின் நல்ல நோக்கம் வெளிப்படுமாறு செய்யவேண்டும். அழுக்கடைத்த சமுதாயத்தைக் காட்டுவது நடப்பியலுக்கு ஒத்ததே ஆகும். ஆயின் சமுதாயத்தின் அழுக்கு மட்டுமே தெரியும்படியாகக் காட்டிவிட்டுச் சமுதாயச் சீர்திருத்தம் என்பதையே புறக்கணித்துவிடக்கூடாது. இவ்வுண்மை புதினத்திற்கு மட்டும் அன்றிச் சிறுகதை, கவிதை போன்ற ஏனைய இலக்கிய வகைகளுக்கும் பொருந்துவதாகும்.

இருவகையான நடப்பியலார்

இங்கு ராபர்ட்  ஃப்ராஸ்ட்(Robert Frost) இருவகையான நடப்பியலார் (Realists) பற்றிக் கூறுவதைக் காண்போம். பொதுவாக இரண்டு வகையான நடப்பியல்வாதிகள் இருக்கிறார்கள்.

ஒருவகையினர், இதுவே உண்மையான உருளைக்கிழங்கு என்பதைக் காட்டுவதற்காக அந்த உருளைக்கிழங்கில் உள்ள ஏராளமான அழுக்கை மட்டுமே காட்டுகின்றனர்.

மற்றொரு வகையினர், அழுக்குள்ள உருளைக்கிழங்கைக் காட்டிச் சுத்தம் செய்வதிலும் மன நிறைவு பெறுகின்றனர்.  நானோ இரண்டாம் வகையினரைச் சாரவே விரும்புகிறேன். என்னைப் பொறுத்தஅளவில் கலையானது வாழ்வுக்குச் செய்வதெல்லாம் அதைச் சுத்தப்படுத்துவதே ஆகும். அழுக்கைத் துடைத்து அதற்கு ஒருநல்ல வடிவம் கொடுப்பதேயாகும்.

நடப்பியலோடும் குறிக்கோள் நிலையோடும் விளங்கும் தமிழ் இலக்கியங்கள்

இந்தியாவின் இருபேர் இதிகாசங்கள் என்று கருதப்படும் இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டினுள் பாரதம் நடைமுறை வாழ்வை மிகுதியாகக் காட்டுவதாகவும், இராமாயணம் விழுமிய வாழ்வின் உயரிய நிலைகளைக் காட்டுவதாகவும் அறிஞர் கூறுவர். பாரதத்தில் சமுதாய அரசியல் பொருளாதாரத் துறைகளோடு தொடர்புடைய பல செய்திகள் நடப்பியலின்படி காட்டப்படுகின்றன. நடைமுறைச் சமுதாய அரசியல் வாழ்வில் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் பழகி வெவ்வேறு வகையான உள்தோக்கத்தால் இயக்கப்பட்டு ஒவ்வொரு வகையாகச் செயல்படும் முறைமையானது நடப்பியலின் பண்பினைப் பெரிதும் பெற்றுள்ளது.

இராமாயணத்திலோ கதை மாந்தர் பலரும் பல் உயரிய மனநிலைகளோடு வாழ்ந்து உயரிய மனிதப் பண்பாட்டின் உச்சநிலையை எடுத்துக்காட்டும் வண்ணம் சித்தரிக்கப்படுகின்றனர். சான்றாக இராமாயணத்தில் வரும் கம்ப நாயகனாகிய இராமன் சாதாரண மனிதரின் இயல்புடையவனாக, சாதாரண வாழ்க்கை வாழ்பவனாக விளங்கவில்லை. மானிடம் முழுமைக்கும் ஒரு மாபெரும் வழிகாட்டியாய் விளங்குதற்குரிய மிகஅரிய மனநிலைகளோடு வாழ்ந்து, காவியம் படிப்பாரை மிக விழுமிய குறிக்கோள் ஒன்றுக்கு அழைத்துச் செல்லும் அற்புதத் தலைமகனாக விளங்குகின்றான். இராமனுக்குத் தம்பியாக வரும் பரதனும் இலக்குவனும் மனித உலகில் நாம் சாதாரணமாகக் காணக்கூடிய தம்பியரல்லர். தம்பியர் என்னும் இலக்கணத்திற்கே மிக விழுமிய இலக்கியமாக விளங்குவோராவர். தாயின் உரை கேட்டுத் தந்தையால் வழங்கப்பட்ட நாட்டைத் தனக்கு உரியதன்று என்ற காரணத்தால் தீவினை என்று துறந்து, சிந்தனையை முகத்தில் தேக்கித் தன் அண்ணனாகிய இராமனைத் தேடிச் சென்ற பரதனைப் பார்த்துக் குகன்

“ஆயிரம் இராமர்கள் நின்கேழ் ஆவரோ தெரியினம்மா” எனப் பாராட்டுவது பரதனைக் குறிக்கோள் நிலையில் கம்பநாடர் படைத்துக் காட்டியதால் அன்றோ! இராமன்பால் சேர்ந்துகொண்ட விபீடணன் கும்பகர்ணனைப் பார்த்து அவனையும் அறமூர்த்தியாகிய இராமனோடு சேர்ந்து கொள்ளுமாறு சொல்லும்போது,

நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள் வளர்த்துப் பின்னைப்

போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடா தங்குப் போகேன்

தார்க்கோல மேனிமைந்த என்குறை தவிர்திஆகில்

கார்க்கோல மேனி யானைக் கூடுதி விரைவின்

என்று கூறுவதும் கும்பகர்ணன் என்னும் கதாபாத்திரம் ‘செஞ்சோற்றுக் கடன் கழிப்பது’ என்னும் பண்பாட்டுக்கு ஓர் உறைவிடமாய்த் தனக்கென்று அமைந்த ஒரு மாபெரும் குறிக்கோளுடன் வாழ்ந்ததால் அன்றோ!

சிலப்பதிகாரத்தில் கண்ணகி என்னும் கதைப்பாத்திரம் கற்பின் கொழுந்தாய்ப் பெண்ணின் பெருமைக்கு ஓர் அரிய மணிவிளக்காய் விளங்குவதும் இளங்கோவடிகள் கண்ணகியைக் குறிக்கோள் நிலையில் வைத்துக் காட்டியதால் அன்றோ!

திருக்குறளில் குறிக்கோள் நிலையில் அமைந்த பலப்பல குறட்பாக்களைக் காணலாம். சாதாரண மனிதனால் எளிதிற் கடைப்பிடிக்க முடியாததும் மிக உயர்ந்த பண்பாடு படைத்தவராலேயே கடைக்கொள்ளப்படுவதுமான மிக விழுமிய அறநெறிகளைக் காண்கின்றோம். சான்றாக சில வற்றைக் காண்போம்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று. (குறள்.308)

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க் கல்லால் அரிது.  (குறள்.235)

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்

 இல்லெனினும் ஈதலே நன்று.  (குறள்-222)

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார் (குறள்-989)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கட் படின். (குறள் – 217)

குறிக்கோள் நிலையில் அன்பு, அருள், வீரம், காதல், மானஉணர்ச்சி போன்ற பலப்பல பண்புகளை அவற்றின் உச்சநிலைக்கு வளர்த்துச்சென்று காட்டலாம். சான்றாக மனோன்மணிய நாடகத்தில் வரும் புருடோத்தமன் வாய்மை, வீரம், காதல் ஆகிய உணர்வுகளின் முழுமையையும் முழுவளர்ச்சியினையும் காட்டவரும் கதைநாயகன் ஆவான். குறிக்கோள் நிலைப்படுத்துவது என்பது ஒன்றை மிகச்சிறந்ததாகக் காட்டுவது மட்டும் அன்று. ஒன்றினை அதன் முழுமை தோன்றப் பலவற்றிற்கும் சான்றாய் விளங்கும் வண்ணம், நிலையான உதாரணமாய் எடுத்துக் காட்டக் கூடிய வகையில் படைத்துக் காட்டுவதும் ஆகும்.

1.புனைவியல் (Romanticism)

2.பழமைவாதம் (Primitivism)

பழமைவாதம் (Primitivism)

பிரிமிடிவிஸம் எனப்படும் பழமைவாத இலக்கிய இயக்கம் மேலை நாடுகளில் இருபதாம் நூற்றாண்டில் வளர்ந்த புதியபாணிக் கலை இயக்கத்தில் (Modern Art) தோன்றிய ஒரு வகையான உருவவாதப் போக்காகும். ஹென்றி ரூசோ (Henri Roussew 1844-1910) வின் படைப்புக்கள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகக் கருதப்படுகின்றன.

பழமைவாதக் கொள்கை

தொல்பழங்காலச் சழுதாயத்திற்குரிய கலை இலக்கியப் பாணிகளை, அதாவது வளர்ச்சியடையாத, எளியையான, குழந்தைத்தனமான, மிகவும் எளிதான பாணிகளைப் பின்பற்றுவதன் மூலம் பழமையைப் போற்றுவது இதன் கொள்கை.

குகைகளில் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் ஆடுமாடுகளை வரைந்த பாணியிலும் அவன் ஆண், பெண் உருவங்களை எவ்வாறு ஆடையணியின்றி வரைந்திருப்பானோ அவ்வகையில் ஓவியங்களை வரைவதும், இந்த அடிப்படையில் இலக்கியங்களைப் படைப்பதும் எனலாம்.

இந்த அடிப்படையில் பழமைவாதம் வரலாற்றுப் பூர்வமாக வளர்த்து வந்துள்ள கலை இலக்கிய விதிமுறைகளையும் உத்தி வகையில் நாம் பெற்றிருக்கிற வெற்றிகளையும் துணிவாக மறுப்பதாகும்.

 இப்பழமைவாதம் எதையும் மிகைப்படுத்தலும், எதார்த்த நிலையை விளக்குவதாகச் சித்தரிக்கப்படும் தனிநபர் விளக்கத்தில் செயற்கையே சிறந்ததெனக் காட்டிப் போலிச்செல்வாக்குப் பெற முயலும் ஒருவகைப் போக்காகும்.

பழமைவாதம்

 பழங்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் ஏதோ ஒரு அம்சத்தை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு அதைப் பொற்காலம் எனப் போற்றுவதும் இப்பழமைவாதத்தின் ஒரு கூறாகும்.  இப்பழமைவாதத்தின் சிலகூறுகள் சர்ரியலிஸத்தின் ஒரு கூறாக இருப்பதும் அறியத்தக்கது.

தமிழில் பெருஞ்சித்தனார் கவிதைகளும் உரை நடைகளும் இப்பழமை வாதத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். தமிழ் உரைநடை எவ்வளவோ, வேகமும் விறுவிறுப்பும் ஆழமும் அகலப்பார்வையும் நிறைந்ததாய் வளர்ந்துவிட்ட இந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் சங்ககால நடையில் எழுதுவது அவர் இயல்பு.  இதைப் பழமை வாதம் எனலாம்.

பார்வை நூல்

1.இலக்கிய இயக்கங்கள் – ந.பிச்சமுத்து

1.புனைவியல் (Romanticism)

புனைவியல் (Romanticism)

ரொமாண்டிசிஸம் எனப்படும் புனைவியலின் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுவது கடினம். புனைவியலின் இலக்கணம் ஐரோப்பாவின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கோணத்தில் விளக்கப்பட்டுள்ளன.

புனைவியல் என்றால் என்ன?

Romanticism என்னும் இச்சொல் ரொமான்ஸ் அல்லது நாவல் என்று பொருள்படும். Romanz என்னும் பழைய பிரஞ்சுச் சொல்லின் அடிப்படையாகப் பிறந்தது.  Romantic ஒரு காலத்தில் வீர தீரச் செயல்கள் நிறைந்த, உணர்ச்சி வயப்படுத்துகிற, கட்டுக்கடங்காத கற்பனை நிறைந்த செய்திகளைக் கொண்ட இலக்கிய வகையைக் குறிக்கும்.

ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் காதல், வீரம், இயற்கை, இறந்த நிகழ்ச்சிகள், தனிமனித முக்கியத்துவம், தன்னுணர்ச்சிப் புலப்பாடு, எல்லாவற்றுக்கும் மேலாகக் கற்பனைச் சார்வு ஆகிய கூறுகள் மிகுந்துள்ள படைப்புகளைப் புனைவியல் கலை இலக்கியம் எனலாம். ஆகவே இதைப் புனைவியல் என்பது பொருந்தும்.

புனைவியலின் இலக்கணம்

இடைக்காலத்தில், இது முன்மை மரபியலுக்கு எதிராகத் தோன்றி வளர்ந்துள்ளது. தானென்னும் தன்முனைப்புடைய தனிநபர் ஆளுமை, தீவிரமான சமுதாய எதிர்ப்பு, அறியமுடியாத புதிர்த்தன்மை, உணர்ச்சிவயப்பாடு, கற்பனை,  உலகச்சஞ்சரிப்பு, வழக்கத்திலுள்ள சட்ட விதிகளிலிருந்தும் மரபுகளிலிருந்தும் முழுமையான சுதந்திரம் ஆகியன இவற்றைப் புனைவியலின் இலக்கணங்களாகச் சொல்லலாம்.

புனைவியல் பற்றி அறிஞர்களின் கருத்துகள்

  • பிரான்சு நாட்டில் விக்டர் ஹியூகோ (Victor Hugo,1802-1885)  என்பவர் இலக்கியத்திற்கு முன்மை மரபு விதிக்கப்பட்டிருந்த தடைகள், விதிமுறைகள் ஆகியவற்றிலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதும் அரசியல் கருத்துக்களை அரசியல்வாதிகளால் புரட்சிகரமாக ஆதரிப்பதும் ஆகிய இலக்கியத் தாராள வாதத்தை (libralism in literature) வலியுறுத்துகிறார்.
  • ஹென்ரிச் ஹெய்னே (Heinrich Heine, 1797-1856) என்னும் ஜெர்மானியர் கலை, இலக்கியத்திலும் வாழ்க்கையிலும் இடைக்காலப் பழைமைக்குப் புத்துயிரளித்தலே புனைவியலின் நோக்கம் என்கிறார்.
  • வால்டர் பாட்டர் (Watter Pater, 1839-1894) என்னும் ஆங்கில எழுத்தாளர் வழக்கத்திலிருந்த புனைவியலழகில் புதுமை சேர்ப்பது என்று கூறுகிறர்.

வேறுசிலர் புனைவியல் இயக்கம் என்பது விரும்பத்தகாத எதார்த்தத்திலிருந்து தப்பி ஓடுதல் என்று விளக்குகிறார்கள்.

  • வேட்ஸ் வொர்த் (words worth) முதல் ஸர் வால்டர் ஸ்காட் (sir watter scot) வரை மாறுபட்ட நோக்கும் போக்கும் உடைய எழுத்தாளர்களின் படைப்புக்கள் இப் புனைவியலுக்குள் அடங்குவதால் இதன் இலக்கணத்தை வரையறுத்துக் கூறுவது கடினமே.
  • சுருங்கச் சொன்னால் புனைவியல் முன்மை மரபியலுக்கு எதிர்ப்பாக எழுந்து எதார்த்தவாதத்திற்கு மறுப்பாக அமைந்த ஒரு இலக்கிய இயக்கம் எனலாம். புனைவியல் பற்றித் திறனாய்வாளர் தி. க. சிவசங்கரன் அவர்கள் கூறும் கருத்துக்களும் மனங்கொளத்தக்கவை.

இலக்கியத்தில் புனைவியல்

ஆங்கிலத்தில் வேட்ஸ்வார்த், கோல்ரிஜ், பைரன், ஷெல்லி, கிட்ஸ், போ –  போன்றவர்கள் புனைவியல் கவிஞர்களாகக் கருதப்படுகின்றனர். ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட் (As you like it) என்பதும் புனைவியல் நாடகமாகக் கருதப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் பாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம், கந்தபுராணம் போன்றவைகள் புனைவியல் கூறுகள் காணப்படுகின்றன.  

விக்கிரமாதித்தன் கதை. திருவிளையாடல் புராணம், மதனகாமராசன் கதை, பிரதாப முதலியார் சரித்திரம், கல்கியின் பொன்னியின் செல்வன், பாத்திபன் கனவு, கலைஞர் கருணாநிதியின் புதையல் போன்ற நூல்களையே புனைவியல் இலக்கியங்களாகச் சொல்லலாம்.

அதீத கற்பனைவாதம்

ரொமாண்டிஸசிம் என்பதை அதீத கற்பனைவாதம் என்று சொல்லலாம். இன்றைய வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளையும் கொடுமைகளையும் துயரங்களையும் நேருக்குநேர் காண மறுத்து அவற்றிலிருந்து தப்பியோடி ஒரு சொர்கத்தீவில் திளைத்துக் கொண்டிருப்பதே அதீதக் கற்பனைவாதம்.

இப்போக்கு இன்றைய பத்திரிக்கைகளில் மக்களின் பார்வையைத் திசை திருப்புவதற்கும், அவர்களது போராட்ட உணர்வுகளை மழுங்கடிப்பதற்கும் ஒரு சிறந்த ஆயுதமாக இது பயன்படுகிறது.

ரெவல்யூஷனரி ரொமாண்ட்டிசிஸம் என்பது மனித வாழ்வில் சுரண்டலும், அநீதியும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கக் கூடாது எனக்கருதும் புதுமை எழுத்தாளர்கள் தாம் கனவுகாணும் எதிர்காலச் சமுதாயம் எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்கு அதீதக் கற்பனாவாதத்தைப் பயன்படுத்துகின்றனர். அப்போது “புரட்சிகரமான அதீதக் கற்பனாவாதம்” (ரெவல்யூஷனரி ரொமண்ட்டிசிசம்) என்ற புதுப்பெயரைப் பெறுகிறது.

பாரதியின் பாஞ்சாலிசபதத்தையும் பாரதிதாசனின் புரட்சிக் கவிதையையும் மாக்சிம் கார்க்கியின் ‘புயல் பறவையின் கீதம்’ போன்ற படைப்புக்களையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.!

முடிவுரை

            இன்றைய மக்களுக்கு சொல்லக்கூடிய கருத்துகளில் நிறைய மாற்றங்கள் தேவைப்பட்டன.  அதற்காகப் படைப்பாளர்கள் தன்னுடைய கற்பனை திறத்தால் புதியதொரு படைப்பினை உண்டாக்கினர். அவைகள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு செய்தியை சொல்லிக்கொண்டே இருந்தன.  மனித எண்ணத்திற்கு அப்பாற்பட்டவையாக இவ்புனைவியல் என்பது இயங்கிக்கொண்டிருக்கிறது எனலாம்.

பார்வை நூல்

1.இலக்கிய இயக்கங்கள் – ந.பிச்சமுத்து

அன்பின் ஐந்திணை

கால்கள் ரெண்டும் நடுக்கத்தில் வௌவௌத்துப் போயிருந்ததன. கண்களை இறுக மூடிக்கொண்டேன். மனசு முழுதும் பயம். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஹாஜியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். ஹாஜியின் கையில் இருந்த ஈரம் என் இதயத்தை ரணமாக்கியது. எங்கையோ நன்றாக வாழக்கூடியப் பெண் ஹாஜி. என்னை காதலித்தப் பாவத்திற்காக மலையுச்சியில் தற்கொலை செய்து கொள்வதற்காக நின்று கொண்டிருக்கிறாள். ரெண்டு பேரும் நிறைய அழுதாகிவிட்டது. இனிமேல் எங்களால் வாழவே முடியாது என்ற பட்சத்தில்தான் இந்த முடிவினை எடுத்துள்ளோம். கடைசியாகக் கண்களைத் திறந்து என் ஆருயிர் காதலியை ஒருமுறை பார்த்தேன். அவள் நன்றாகக் கண்களை மூடிக்கொண்டிருந்தாள். கிட்டதட்ட பதினாறாயிரம் அடி உயரத்தில் நின்று கொண்டிருந்த எங்களின் மேல் சில்லென்ற காற்று பரவியது. இருப்பினும் அவளின் முகம் கண்ணீராலும் வியர்வையினாலும் சோர்ந்து காணப்பட்டது. இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டேன். “ஹாஜி…. ஐ..ஐ.. லவ்..லவ்..லவ்.. யு..” என்று உரக்க கத்தினேன். அவளும் பதிலுக்கு ”ஐ லவ் யு மகிழன்” என்றாள். இந்த வார்த்தையை அவளிடம் முதன்முதலாக நான் கேட்ட போது எப்படி மகிழ்ந்தேன் தெரியுமா? இப்பொழுது நினைத்தாலும் மனசு இனிக்கிறது. மீண்டும் அதே வார்த்தையைக் கேட்கின்றேன். ஹாஜியை இனிமேல் என்னால் பார்க்க முடியாது. அவளுடன் சேர்ந்து வாழவும் முடியாது. எங்கள் வாழ்க்கை இத்துடன் முடிந்தது. இப்படி இன்னும் என்னன்னவோ நினைக்கத் தோன்றியது. என்னாடா சாவும் போது வழவழன்னு பேசறான்னு நினைக்கிறிங்களா? காலத்தின் சூழ்நிலைகள் நம்மை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி வைக்கும். அன்று நானும் அப்படித்தான் ஆகியிருந்தேன். ரெண்டு பேரும் ஒரே முடிவுடன் உச்சி மலையில் இருந்து குதிக்கத் தயாரானோம். மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு எகிறிய போது, பின்னால் இருந்து ஒரு முரட்டு கை என் வலக்கையை அழுத்திப் பிடித்து இழுத்தது.

            ரெண்டடி பின்னால் வந்து விழுந்தவுடன்தான் கண்களைத் திறந்து பார்த்தேன். என் மேலேயே ஹாஜியும் வந்து விழுந்தாள். எங்களின் முன்னால் வெள்ளை உடை அணிந்த ஃபாதர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரின் முகம் மிகவும் பிரகாசமாயிருந்தது. அவரின் பக்கத்தில் நின்ற இருவர் கறுப்பாகவும் குண்டாகவும் இருந்தார்கள். அவர்கள்தான் எங்களை இழுத்துப் போட்டிருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு சிஸ்டரும் நின்னுட்டு இருந்தாங்க.  அப்போ அந்த சிஸ்டர் என் கன்னத்தில் ”ப்ளார்” என்று அறை விட்டார்கள். கையை இடுப்பில் வைத்துக் கொண்டு என்னை முறைத்துப் பாரத்தார் சிஸ்டர். கன்னத்தில் கை வைத்தப்படி கண் கலங்க அவர்களை உற்றுப்பார்த்தேன். ஹாஜி என் கைகளை இறுகப்பற்றிக்கொண்டாள்.

            கொடைக்கானல் மலைப்பிரதேசம். ஆங்காங்கு பள்ளங்களும் காடுகளும் பெரியபெரிய கற்களும் நிறைந்த பகுதி. அப்போது வலுக்கட்டாயமாக அவர்களின் வாகனத்தில் ஏற்றப்பட்டோம். கொஞ்சநேரப் பயணத்திற்குப் பிறகு தேவலாயத்திற்கு வந்து சேர்ந்தோம். சின்னதா ஒரு கோயில். இல்ல… சர்ச்.. ஆமாம்! தேவாலாயம். அந்த தேவாலாயத்திற்கு உள்ளே சில பெஞ்சுக்களைக் கடந்து நாங்கள் இருவரும் அமர்தோம். எங்களின் முன்னால் சென்று கொண்டிருந்த ஃபாதர் திரும்பி அந்தக் குண்டர்களை நோக்கி அவர்களிடம் எதுவும் கேட்க வேண்டாம். இயேசுவின் பிள்ளைகளான அவர்களைத் தனியாக விடுங்கள் என்றார். தனியாக விடுங்கள் என்றபோது சிஸ்டரை நோக்கித்தான் சொன்னார். இப்போது எங்களைத் தவிர அங்கு யாரும் இல்லை.

            சிறிதுநேர மௌனத்திற்கு பிறகு கத்தி அழுதேன். இன்னும் வேகமாக கத்தி அழுதேன். “மகிழன் அழாத… மகிழன்… சொன்னா கேளு.. அழாதா…” என்று என்னை ஆறுதல்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஹாஜி.

            “இல்ல ஹாஜி… நான் தப்பு பண்ணிட்டேன். போராடி ஜெயிக்கத் தெரியாதவன் எதுக்காக காதலிக்கனும். அதுவும் மதம் மாறி. என்னோட ஆசிரியர் ஜெய்க்குமார் அடிக்கடி சொல்லுவாரு தற்கொலை செய்யிறது கோழைத்தனம். இந்த உலகத்துல மனுசனா பிறந்ததுக்கே லாயக்கு இல்லாதவன்தான் அப்படிச் செய்வான்னு சொல்லுவாரு. அவருடைய மாணவன் நானா இப்படி செய்யத் துணிந்தேன். நான் மட்டும் சாவுறது இல்லாமா உன்னையும் சேர்த்து கொல்ல நினைச்சேனே! நான் பாவி.. நான் கொலைகாரன் ஹாஜி. என்னை மன்னிச்சுடு” என்று தேம்பி தேம்பி அழுதான் மகிழன். மகிழனின் கண்களையே பார்த்துக்கொண்டு அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தாள் ஹாஜி.

“ஒன்னுமில்ல மகி.. ஒன்னுமில்ல மகி..” – ஹாஜி

“நாம இனி ஒன்னா வாழனும். சாகக் கூடாது. வாழ்க்கையில போராடுவோம். ஜெயிக்கிற வரை போராடுவோம்” என்றான்.

அவர்கள் இருவரும் அமைதியாக தனக்கு எதிரேயுள்ள இறைவன் ஏசுநாதரின் திருமுகத்தையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். இறைவனின் முகம் அவர்களுக்குள் ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னால் இருந்துவந்த ஃபாதர் “என்ன குழந்தைகளா எப்படி இருக்கீங்க?” என்றார்.

“நல்லா இருக்கேன் ஃபாதர்” என்றான் மகிழன்.

“நீ எப்படிம்மா இருக்க..” என்றார்.

“நான் நல்லா இருக்கேன் ஃபாதர். ஆனா.. மகிதான் கொஞ்சம் மனசு உடைஞ்சு இருக்கான்” என்றாள் ஹாஜி.

ஃபாதர் கொஞ்சநேரம் அமைதியாக இருந்தார். அவருடையக் கையில் சின்னதா சிலுவை ஒன்று இருந்தது. வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டார். “சரி.. நான் இப்ப உங்கள எதுவும் கேட்கல. ரெண்டு நாள் ஆகட்டும். எங்க தேவாலயத்துக்குப் பின்னால ஒரு வீடு இருக்கு. அங்க தங்கிக்கிங்க என்றார். தேவாலயத்தில் மூன்று வேலையும் நல்ல சாப்பாடு. நிம்மதியான தூக்கம். அங்கு இருப்பவர்கள் அனைவரும் அவர்களிடையே அன்பு பாராட்டினார்கள். தேவாலயத்திற்கு தினமும் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து ஆண்டவரை வணங்கிச் சென்றனர். மகிழன் அங்கு வருகின்றவர்களைப் பார்க்கும் போது நம்முடைய உறவினர்கள் யாராவது வருவார்களா என்று எண்ணுவதும் உண்டு. அந்த தேவாலயப் படிக்கட்டில் சிறிது நேரம் மௌனமாக அமர்ந்திருந்தான். பிறகு வேகமாக பின்னால் இருந்த தன் வீட்டிற்குச் சென்றான். ஹாஜி அங்குள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். “ஹாஜி எனக்கு போரடிக்குது. கொஞ்சநேரம் வெளியப் போயிட்டு வரேன்” என்றான். அவளிடமிருந்து ம்..என்ற ஒலி மட்டுதான் வந்தது. ஆனால் கண்களில் காதலை வைத்துக்கொண்டு மனசில் வலியோடுதான் அவளும் இருந்தாள். அந்த நிலையில் மகிழனை தனியாக அனுப்புவது பிடிக்கவில்லை. ஆனால் இப்போது மகிழனின் முகத்தில் சாகனும் என்ற சலனம் அறவே போயிருந்ததை அவளால் உணர முடிந்தது. 

கால் போன வாக்கில் கொடைக்கானலைச் சுற்றித்திரிந்தான். எந்த இடத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை. நாய் மாதிரி அலைந்தான். நாயும் எங்கே போய் விட்டாலும் மறுபடியும் தேடிக்கொண்டு வீட்டுக்கே வந்துவிடும் என்பார்கள். அதுபோலத்தான் மகிழனும் வேட்டை நாயைப் போல வேட்டையாட எண்ணினான். அந்த வேட்டை பெரியதாக இருக்கவேண்டுமென எண்ணினான்.

மாலை நேரம். அந்தக் கடையில் கூட்டம் அலை மோதின. கடையை நெறுங்க நெறுங்க வாசனை மூக்கை துளைத்தது. பனையாரக் கடை. வயதான இரண்டு பெண்களும் ஒரு ஆணும் கடையின் உள்ளே இருந்தார்கள். ஒரு பெண் பனையாரச் சட்டியில்  மாவை ஊற்றினாள். இன்னொரு பெண் பக்கத்தில் இருந்த பெரியப் பானையில் இருந்த அரிசி மாவினைக் கரைத்துக்கொண்டிருந்தாள். அந்த ஆண், வாடிக்கையாளருக்கு கையில் காசை வாங்கி பனையாரத்தை காகிதத்தில் சுற்றிக்கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கும் ஆசையாய் இருந்தது. அம்மாவின் கைச்சுவையில் பனையாரம் தின்றது ஞாபகம். கைப்பையில் ஒரு இருபது ரூபாய் இருந்தது.

“இருபது ரூபாய்க்கு பனையாரம் தாங்கண்ணா” என்றேன். அந்தக் கூட்டத்தின் நடுவே நானும் பனையாரம் வாங்கிட்டு வெளியே வந்தேன். இருட்டு சூழ ஆரபித்தது. இதற்கு மேல் இங்கு இருக்கக் கூடாது என மனதில் நினைத்துக் கொண்டேன். அப்பொழுதுதான் ஹாஜியின் நினைப்பு வந்தது. “ஐயோ பாவம்! ஹாஜி என்ன பண்ணுவாள். காலையில் வந்தேன். நான் இல்லாததை நினைத்து எப்படி வருந்தியிருப்பாள். ஹாஜியை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் இதயத்தை கூரிய முள்ளால் குத்துவது போன்று இருந்தது.

வீட்டிற்குள் நுழைத்த போது ஹாஜி தலையில் முக்காடிட்டபடி அல்லாவை வணங்கி கொண்டிருந்தாள். பிராத்தனை முடியும் வரை எதுவும் பேசாமல் மெதுவாகச் சென்று அவளுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டான். பிராத்தனை முடித்த ஹாஜி மகிழனைக் கண்டவுடன் கட்டிக்கொண்டாள். வேகமாக அழுதாள். தன் பற்களால் மகிழனின் தோள் பட்டையின் எலும்பை இறுகக் கடித்தாள்.

“ஹே… ஹாஜி என்ன பன்ற வலிக்குது..”

“என்ன விட்டுட்டு எங்கப் போன? நேரமாகியும் நீ வராததை நினைச்சு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா?”

“சாரிடா.. இனிமேல் உன்னை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன். இது சத்தியம்” என்றான். “இந்தா உனக்காக பனையாரம் வாங்கிட்டு வந்தேன். சாப்பிடு” என்றான். ஆளுக்கொரு பனையாரமாக எடுத்துச் சாப்பிட்டார்கள்.

ஹாஜி சாப்பிட்டுக்கொண்டே, “ஃபாதர் சாயுங்காலம் வந்தார். நம்மளபத்தி கேட்டார். நானும் சொன்னேன். நமக்கு கல்யாணம் பண்ணி வைக்கரதாவும், உனக்கு ஒரு வேலை வாங்கி தரதாகவும் சொன்னார். நீ என்ன சொல்லுற மகி” என்றாள். மகிழன் யோசனையில் ஆழ்ந்தான்.

“அப்பா.. அம்மா.. ஞாபகம் வரலியா ஹாஜி..”

“எப்படி வரமாலிருக்கும். எங்க வாப்பாவை பாக்கனும் போல இருக்கு. அம்மா மடியில படுத்து தூங்கனும். அண்ணாகிட்ட சண்டை போடனும்ன்னு தோனுது. ஆனா.. இப்ப எதுவும் முடியாது” என்று முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு சொன்னாள்.

“உனக்கு மகி… நீ எப்படி ஃபீல் பன்ற..”

“நானும்தான். ஆனா! வாழ்க்கையில நாம ஜெயிக்கனும். அதுக்கு என்ன பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்”

“ஃபாதர் சொன்ன மாதிரி வேலைக்கு போங்க.. நானும் ஏதாவது ஒரு வேலைக்குப் போறேன்”

மகிழன் அதன்பிறகு எதுவும் பேசவில்லை. தனித்தனியாக ஆளுக்கொரு படுக்கையில் படுத்துக்கொண்டார்கள். விளக்கு அணைக்கப்பட்டது. அவன் கண்களை மூடிக்கொண்டான். ஹாஜியும் கண்ணயர்ந்தாள்.  இப்போது அவனுடைய முகமெல்லாம் வியர்த்தது. அந்த சாலையின் வளைவு அழகாயிருந்தது. நிழலொடு கூடிய அற்புதமான இடம். அருவிலிருந்து கொட்டுகிற தண்ணீர் அதன் பக்கத்தில் எப்போதும் ஊற்றிக்கொண்டே இருந்தது. அங்கே அவனின் கைகளையும் கால்களையும் யாரோ கட்டி உச்சி மலையிலிருந்து கீழே தூக்கிப்போட்டார்கள். மேலிருந்து கீழே விழும்போது தலையெல்லாம் சுற்றியது. அடிவயிறு கொலகொலவென்று ஏதோ செய்தது. பெரிய பாறையில் தலை மோதி சுக்கு நூறானது. “ஹாஜி… ” என்றவாறு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான். ஹாஜியும் விழித்துக்கொண்டாள்.  உடபெல்லாம் வியர்வையால் நனைந்து போயிருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஹாஜி அவசரமாக ஓடி தண்ணீர் கொண்டு வந்தாள். அந்த டம்ளரில் ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்தான். அவனுடைய கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள் அவள். அவனுடையத் தோளில் சாய்ந்து மேல்கையில் தன்னுடைய சிவந்த உதடுகளைப் பதித்து கண்ணீர் கரைய இரண்டு கண்களையும் மூடினாள்.

“ஹாஜி என்கூடவே இருப்பியா… என்னவிட்டு போகமாட்டியே..”

“கண்டிப்பா போக மாட்டேன் மகி” அவனின் முகம் இப்பொழுது மலர்ந்திருந்தது. விடியற்காலையில் எழுந்தவுடன் இருவரும் ஃபாதரை பார்க்கச் சென்றார்கள். தூக்கக் கலக்கத்தில் அதுவும் அந்த நேரத்தில் அவர்களை அங்கு பார்த்தவுடன் கொஞ்சம் பதறித்தான் போனார்.

“என்னாச்சு மகிழன்” – ஃபாதர்

“நாங்க தனியா ஒரு கடை போடலாமுன்னு இருக்கோம்” – மகிழன்.

“கடையா? புரியல எனக்கு? என்ன கடை? எப்படி நடத்துவீங்க? எங்க நடத்துவீங்க? பணம் வேண்டாமா?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டேச்சென்றார் ஃபாதர்.

“நீங்க கேட்கிறது சரிதான் ஃபாதர். சின்னதா ஹோட்டல் நடத்தலாமுன்னு இருக்கோம். எங்க அப்பா ஊர்ல ஹோட்டல்தான் வச்சிருக்கார். நான் நல்லா சமைப்பேன். எங்ககிட்ட கையில ஒன்னும் இல்ல. அதுக்கு உங்க உதவி மட்டும் வேணும். அதுக்காக, அன்னிக்கு எங்கள மலை உச்சியில் இருந்து காப்பாற்றின போது ரெண்டு பேரு உங்ககூட இருந்தாங்க இல்ல… அவுங்கள எங்க கூட அனுப்பனும். அப்புறம் மளிகைக் கடை, பாத்திரக்கடை, மற்றப் பொருட்கள் வாங்குவதற்கு நீங்க சொன்னதா சொல்லி கடன் கொடுக்கனும். தப்பா நினைச்சுக்காதீங்க..! கண்டிப்பா சாயுங்காலத்திற்குள் எல்லா கடனையும் அடைச்சு உங்க பேர காப்பாத்திருவேன்” என்றான்.

யோசித்துவிட்டு, “உன்னோட துடிப்பு புரியுது. உங்களுக்கு நானே காசு தரனே. அப்புறமா கொடுங்களேன்” என்றார்.

“இல்ல ஃபாதர். யாருன்னே தெரியாத எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிட்டிங்க. இனிமேல் உங்ககிட்ட இருந்து நாங்க கேட்கிற இது ஒன்னு மட்டும் போதும் ஃபாதர்” என்றான். அதற்கு மேல் ஃபாதரால் ஒன்றும் பேச முடியவில்லை. சரியென்று ஒத்துக்கொண்டார். ஆனால் அந்த பையன் எங்கே கடை போடுவான். எப்படி கடை நடத்துவான் என்று புதிராக இருந்தது அவருக்கு.

அகஸ்டினும், ஸ்டீபனும் வந்து விட்டார்கள்.  ஹாஜியுடன் சேர்ந்து மகிழன் நேற்று பாரத்த, கனவில் கண்ட அந்த இடத்திற்குச் சென்றான். தேவாலயத்திலிருந்து கொண்டு வந்த கத்தியால் நால்வரும் அந்த இடத்தை சீர் செய்ய ஆரமித்தார்கள்.  இரண்டு மணி நேரத்திற்குள் அந்த இடம் மேலும் அழகாய் மின்னியது. மேற்கு நோக்கி வரும் சாலையானது சற்று வளைந்து வடக்குப் பக்கமாகச் செல்லும் பாதை. அந்த வளைவில் உள்ள மரங்களைத் தூண்களாக்கி பந்தல் போட்டாகி விட்டது. ஒருசில செடிக்கொடிகளை வெட்டியவுடன் பின்னால் இருந்த அருவி நன்றாகத் தெரிந்தது. அருவி தண்ணீர் இவர்களின் பின்பக்க கடை வாசலை நனைத்து சென்றது. 

ஃபாதர் சொல்லியதாக மளிகைப் பொருட்கள், பாத்திரம் என வாங்கினார்கள். எல்லாவற்றையும் கடைக்குக் கொண்டு சென்றார்கள். கடையில் ஹாஜியோடு துணைக்கு  ஸ்டீபனையும் வைத்துவிட்டு அகஸ்டினோடு மகிழன் வெளியேச் சென்றான்.

தமிழகத்தில் தவிர்க்க முடியாத சுற்றுலாதலம் கொடைக்கானல். நிறைய பேருந்துகள். தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்களிருந்தும் மக்கள் வந்து கொண்டே இருந்தார்கள். நிறையக் கடைகள். விற்பனை நிலையங்கள், டூரீஸ்ட்டுகள், பேக் – கார்கள், ஹோட்டல்கள் என திரும்புகிற திசைகள் எல்லாம் கூட்டம்தான். அவர்கள் நின்ற எதிர் திசையில் ஒரு பேருந்து வந்து கொண்டிருந்தது.

“அகஸ்ட்டின் அந்த பேருந்தை எப்படியாவது நிறுத்துங்கள்” – மகிழன்

அகஸ்ட்டின் அந்த பேருந்து முன்னால் போய் நின்று கை அசைத்தார். வண்டியின் வேகம் குறைந்து நின்றது. டிரைவர் சீட்டுக்கு ஓடினான் மகிழன்.

“சார்.. மதியம் சாப்பாடு ரெடியாயிருக்கு.. மத்த இடத்துல கொடுக்கிறத விட பத்து ரூபா குறைச்சே கொடுங்க. இல்லன்னா… உங்களுக்கு என்ன சமையல் பிடிக்கும்முன்னு சொல்லுங்க. சைவம், அசைவம்  எதுவாயிருந்தாலும் உடனே செஞ்சு கொடுத்துடுவோம். எங்ககிட்ட உள்ளூர் ஆள் இருக்கு. அவங்கள உங்கக் கூட அனுப்பி இந்த கொடைக்கானலையே இலவசமா சுத்தி காண்பிக்கிறோம்” என்று ஒருசில வினாடிகளுக்குள் சொல்லி முடித்தான் மகிழன். அதற்குள் பின்னால் நின்று கொண்டிருந்த பேருந்து ஹார்ன் அடித்துக் கொண்டேயிருந்தது.

“இல்லப்பா… நாங்க ஏற்கனவே புக் பண்ணிட்டோம்” என்று சொல்லி முடிப்பதற்குள் வண்டியை டிரைவர் நகர்த்த ஆரமித்தார். மகிழன் அந்த டிரைவருக்கு நன்றியைக் கூறிவிட்டு அடுத்தப் பேருந்தை நெருங்கினான். ஒன்று, இரண்டு, மூன்று என வரிசையாய் எல்லா பேருந்துகளிலும் ஒரே பதில்தான்.

“கொடைக்கானல் பெரிய டூரீஸ்ட் ஏரியா. அதுதான் எல்லாம் புக் ஆகியே வருது. ஆனாலும் காலையிலிருந்து உன்னோட முயற்சியும், தன்னம்பிக்கையும், செய்யுற வேலையில கவனம், ஆர்வத்தையும் பாக்குறன். கண்டிப்பா முயற்சி பண்ணிக்கிட்டே இருப்போம். நமக்கு ஒரு பேருந்து கூடவா கிடைக்காமல் போயிடும் தம்பி” என்றார் அகஸ்டின். இப்பொழுது மணி காலை பதினொன்றை தாண்டியிருந்தது. ஹாஜியின் நினைப்பு அவ்வப்போது மகிழனுக்கு வந்துவந்து சென்றது. அப்பொழுது மீண்டும் ஒரு பேருந்து வந்துகொண்டிருந்தது. பேருந்து முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மகிழன் டிரைவரிடம் பேசினான். டிரைவர் புதியவர் ஆதலால் எங்கே சாப்பிடுவது, தங்குவது, சுற்றிப்பார்ப்பது என தெரியாமல் வந்திருக்கிறார்கள். மகிழன் பேசியது டிரைவருக்கும், அப்பேருந்தின் தலைவராக இருக்கும் ஒருவருக்கும் பிடித்துப் போனது. சரி என்று ஒத்துக்கொண்டார்கள். என்னன்ன சாப்பாடு என்று குறிப்பெடுத்துக்கொண்டார்கள். சைவம், அசைவம் என இரண்டுமே அந்தக் குறிப்பில் இருந்தது. ரெண்டு மணிக்கு உணவு செய்யப்பட்டுவிடும் என்றும், கூடவே சுற்றிக் காண்பிபதற்கு அகஸ்ட்டினையும் அனுப்பி வைத்தான். அந்த தலைவர் மகிழன் கையில் குறிப்பிட்டத் தொகையை திணித்து முன்பணமாக வைத்துக்கொள் என்றார். மகிழன் இந்நேரம் மகிழ்ந்துதான் போனான். மகிழன் பேசியதையும், சாமர்த்தியமாக நடந்து கொண்டு முன்பணம் பெற்றுக்கொண்டதையும் நினைத்து “நல்ல புத்திசாலி பையன்தான்” எனப் பெருமைப்பட்டுக்கொண்டார் அகஸ்டின்.

ஹாஜி-மகிழன்-ஸ்டீபன் ஆகிய மூவரும் விரைவாக வேலையைப் பார்க்க ஆரமித்தார்கள். மகிழனுக்கு நெருப்பும் கரண்டியும் புதிதல்ல. சோறு, குழம்பு, பொறியல், சிக்கன் வறுவல், முட்டை, மீன் குழம்பு, மீன் வறுவல் என வரிசையாய் செய்தாகிவிட்டது. ஹாஜிக்கு உண்மையாலும் நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும். இஸ்லாமியப் பெண்களுக்கு அசைவ சமையல் பற்றிச் சொல்லித்தர வேண்டுமா? சமையலில் மகிழனுக்கு அங்கங்கு நிறைய டிப்ஸ்களைக் கொடுத்து அசத்தினாள். இறுதியாக அடுப்பில் ரசம் முட்டைக்கொதி வந்து வாசனை அவ்விடம் முழுவதும் பரவியது. பேருந்தும் சரியான நேரத்திற்கு வந்து பயணிகள் இறங்கினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு உணவு பரிமாறும் வேலையும், பயணிகளின் சிரிப்பொலியும், வாசனையுமே நிறைந்திருந்தது.

குளுமையான இடம். நிறைவான சாப்பாடு. நல்லத்தண்ணீர். அவர்களுக்குப் பிடித்துத்தான் போயிருந்தது. பேசியதை விட நூறு ரூபாயை அதிகமாகவே கொடுத்துவிட்டுச் சென்றார் பேருந்து தலைவர்.

“தம்பி.. நான் டூரிஸ்ட் புரொக்கர். நானும் இப்பதான் தொழில் ஆரமிச்சேன். கொடைக்கானல் புதுசுதான். இங்க யாராவது ஆள் போட்டு பாத்துக்கனுமின்னு நினைச்சேன். உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. அதனால தினமும் ரெண்டு மூணு வண்டி வரும் அவுங்களுக்கு சாப்பாடு போட்டு சுத்தி காண்பிச்சிரு. உனக்கு தர வேண்டிய கமிஷன் மற்றும் சாப்பாட்டு காசும் கொடுத்திடுறேன்” என்றார்.

மகிழனுக்கு தலைகால் புரியவில்லை. “ரொம்ப நன்றி சார்” என்றான். பேருந்து புறப்பட்டது. முதல் நாளே நம்ம தொழில் வளர விதை போட்டாச்சு என்ற சந்தோசம்.  பாத்திர பண்டம் என அனைத்துக்கும் பணத்தைப் பிரித்து வைத்தனர். சமையலில் மீதியானப் பொருள்களை வண்டியில் ஏற்றினார்கள்.   ஃபாதர் அங்கு வந்தார். அகஸ்டினும், ஸ்டீபனும் மகிழனைப் புகந்து தள்ளினார்கள்.

“இந்த இடத்துல நானே செட் போட்டு தரேன். நகராட்சிகிட்ட பேசி உரிமையும் வாங்கிதரேன்” என்றார். அகஸ்டின், ஸ்டீபன் இருவருக்கும் அவர்களுக்குண்டான கூலியைப் பிரித்துக் கொடுத்தான். ஃபாதரின் காரிலே மகிழனும் ஹாஜியும் தேவாலயத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் இருவரையும் பார்த்த ஃபாதர் இறைவனே தன்னிடம் அனுப்பி வைத்ததாக கருதினார்.

அன்று இரவு. ஆளுக்கொரு படுக்கையில் படுத்திருந்தனர். விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. ஆனால் இருவரும் பேசிக்கொண்டனர். அவளுக்கு மகிழனை நினைக்கும் போதெல்லாம் புதிராகவே தெரிந்தான். அவனை நேசித்தது முதல் இன்று வரை அப்படித்தான் இருந்தான். மற்றவர்களுக்கு கற்பனைக்கு எட்டாத சில விஷியங்களைக் கூட செய்து காட்டக்கூடிய திறமைப் படைத்தவன். நிறைய பேசுவான். அவன் கூட இருந்தா ஒரு நல்ல எனர்ஜி கிடைக்கும். தற்கொலை பத்திக்கூட அவன்தான் முதல்ல என்கிட்ட பேசினான். அவன் சொன்னப்ப பயம்தான் முதல்ல கண்ணுக்கு தெரிஞ்சுது. எங்க காதல் வீட்டுல எல்லாம் தெரிஞ்சு என்னை அடிச்சாங்க. எங்க சொந்தகாரங்க மகிழனையும் அடிச்சும் மிரட்டியும் இருக்காங்க. எப்படியோ வீட்டை விட்டு வெளிய வந்து நான்தான் கொடைக்கானல் போயி செத்து போலாம்ன்னு ஐடியா கொடுத்தேன்.  ப்பா.. என்னன்வோ ஆகிடுச்சு. மனசுக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு.

“நம்ம ஹோட்டலுக்கு என்ன பேரு வைக்கலாம் மகிழன்” – ஹாஜி

“எம்மதமும் சம்மதம். சாதிகள் வேரோடு அழிய ஒற்றுமை மனிதரிடத்தில் பிறக்க வேண்டும். ஒற்றுமை வலுபெற வேண்டுமானால் அன்பால் மட்டுமே மானுடம் ஜெயிக்கும். அதனால் அன்பின் ஐந்திணை என்று வைக்கலாம் என எண்ணுகிறேன்” என்றான் மகிழன்.

ஹாஜி படுக்கையை விட்டு எழுந்து தலையை உயர்த்தி மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

ஏழு அண்ணன்களும் ஒரு தங்கையும்

ஓர் ஊரில் ஏழு அண்ணன்மார்களும் ஒரு தங்கையும் சந்தோசமாக வாழ்ந்த வந்தார்கள். அண்ணன்கள் ஏழு பேரும் காட்டிற்கு வேலைக்குப் போவார்கள். அவர்களுக்கு தங்கைதான் சாப்பாடு கொண்டு செல்வாள். மூத்த ஆறு அண்ணன்களும் சட்டியில் இருக்கும் சாப்பாட்டை வழித்து வழித்து உண்பார்கள்.

            ஏழாவது அண்ணன் மட்டும், ஐயோ… தங்கைக்கு சாப்பாடு இல்லையே என்று தனக்கு போடப்பட்ட சாப்பாட்டில் பாதியைத் தனக்கு வேண்டாம் என்று வேண்டுமென்றே வைத்து விடுவான். தங்கையும் அண்ணன் வைத்திருந்த அந்தச் சாப்பாட்டை உண்பாள்.

            ஆறு அண்ணன்களை விடவும் ஏழாவது அண்ணன் மீதுதான் அதிகம் பாசம் கொண்டிருந்தாள். அவனும் தங்கச்சியின் மேல் அளவு கடந்த பாசத்தை வைத்திருந்தான். ஆறு அண்ணன்மார்களுக்கும் திருமணமும் நடைபெற்றது. ஏழாவது அண்ணனுக்கு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார்கள். ஆனால் அவன், தங்கைக்கு திருமணம் செய்து செய்து வைத்த பிறகே தான் திருமணம் செய்துகொள்வதாகக் கூறினான்.

            ஒருநாள் எப்போதும் போலவே தங்கைக்காரி அனைத்து அண்ணன்களுக்கும் உணவு சமைக்கிறாள்.  அன்று காலை அவள் வீட்டு புழக்கடியில் பாம்பு ஒன்று வந்தது. அந்தப் பாம்பை அடித்து நன்றாகக் கழுவி  தலை வேறாகவும் உடம்பு வேறாகவும் வெட்டுகிறாள். வெட்டிய பாம்பு கறித்துண்டுகளை அழுதபடியே அடுப்பில் வைத்து சமைக்கிறாள்.

            ஆறு அண்ணன்களுக்கும் நல்ல உணவையும் ஏழாவது அண்ணனுக்கு மட்டும் பாம்பு கறி உணவையும் புட்டியில் எடுத்து வைக்கிறாள். காட்டுக்குச் சென்றவுடன் சாப்பிடுவதற்கு ஆறு அண்ணன்களை மட்டும் அழைக்கின்றாள். ஏழாவது அண்ணன் மட்டும் இன்னும் நெல்லு வயலுக்குத் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்தான்.

            ஆறு அண்ணன்களும் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டு வேலைப்பார்க்க வயலுக்குச் செல்கின்றனர். அதன்பிறகே கடைசி அண்ணனைக் கூப்பிடுகிறாள். தட்டு நிறைய வெள்ளையான சாப்பாட்டைப் போட்டு பாம்பு கறியை ஊற்றுகிறாள்.  சாப்பிட்ட அண்ணன்காரனுக்கு கசப்பு தோன்றவே, மனதில்  பாசக்கார தங்கச்சி விஷத்தையா வைக்கப்போகிறாள். அப்படியே வச்சாலும் ஆசையுடனே செத்தும் போகலாம் என்று உணவை அள்ளி அள்ளி சாப்பிட்டான்.

            கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வாயில் நுரை தள்ளி மல்லாந்து செத்துப்போகிறான் கடைசி அண்ணன்.

            சில மாதங்களுக்குப் பிறகு தங்கச்சிக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. ஆறு அண்ணன்களும் ஆறு அண்ணிமார்களும் திருமணத்தை தடபுடலாக நடத்துகின்றனர். சாப்பாடு வரவேற்பு என அசத்துகின்றனர்.

விடிந்தால்  கல்யாணம். மணமகள் ஜோடனைக்கு மல்லிகைப் பூ மட்டும் எங்கேயும் கிடைக்க வில்லை. ஊர் முழுவதும் கேட்டாச்சு… பாத்தாச்சு…. பொண்ணு பூ இல்லாம வெறும் தலையா நின்னா…

அப்போ! யாரோ ஒருத்தர், “அம்மாடி உங்க அண்ணன புதைச்ச இடத்துல மல்லி பூவா பூத்துருக்கு. வேணுமின்னா போயி பறிச்சுக்க புள்ள” என்றார்கள்.

            அண்ணன் செத்த சமாதிக்குத் தங்கச்சிக்காரி ஓடுகிறாள். அண்ணன் கால்மேட்டுல விழுந்து அழுகிறாள்.

புதைச்ச மண்ணுல மல்லிகைப் பூவா பூத்துருக்கு. ஒன்னொன்னா பறிச்சா.. ஊசியால கோத்தா… மல்லிகைப் பூ மாலையைக் கழுத்துல  போட்டா… கழுத்துல போட்டவுடனே மல்லிகைப்பூ பாம்பா மாறிப்போச்சு. கழுத்துல இருந்து வெளியே எடுத்துப் பார்த்தா மல்லிகைப்பூவா இருக்கு. மீண்டும் கழுத்துல போட்டா பாம்பா மாறுது.

            அழுது ஒப்பாரி வைக்குறா….

            அதுக்கு மண்ணுக்குள்ள இருக்குற அவுங்க அண்ணன் பாடுகிறான்,

                        “வாழ அண்ண! அடிச்சிருக்கு

                        வடநாடு போயிருக்கும்

                        ரெட்டி இரு கொண்டைக்கு

                        நிலைக்குமா என் பூ !

                        பலிக்குமா என் பூ! – என்கிறான். தங்கச்சிக்காரியும்,

            “சிரிக்கி அண்ணிமாருங்க பண்ண வேல இது. சொத்துக்கு ஆசப்பட்டு பண்ணிய காரியம் இது. நான் இந்த ஊருல ஒருத்தன காதலிச்சேன். அத அண்ணிமாருங்க ஆறு பேரும் பாத்துட்டாங்க. எனக்கு அந்த பையன கட்டி வைக்கனுமுன்னா உன்னை கொல்லச்  சொன்னாங்க…” மூக்கைச் சிந்தி அழுதாள்.

            நீ கொல்லவில்லை ஆனாலும் நாங்க அவன  (உன்னை) கொல்லத்தான் போறோம்ன்னு சொன்னாங்க..

            “அவுங்க கையில நீ சாவுறதவிட நானே உன்னை கொன்னுடலாமுன்னு நினைச்சேன். அண்ணே”

            “உன் பசிய எனக்கு கொடுத்தியே அண்ணே… எனக்கு கல்யாணம் ஆகப்போகுதுண்ணே… உன்னோட மாலை என் கழுத்துல ஏறனும் அண்ணே… அதுதான் எனக்கு நீ கொடுக்கிற பரிசு அண்ணே.. ” என்று நீண்ட ஒப்பாரியை வைத்து விட்டு மல்லிகைப் பூ மாலையை கழுத்தில் சூடினாள். இப்போது மாலையாய் தொங்கிக் கொண்டிருந்தது அவளுடைய கழுத்தில்.

            அவளுக்கு அண்ணனின் வாழ்த்தில் கல்யாணம் நடந்தேறியது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

புறநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்

பண்டைய தமிழ் நாகரீகம், மொழிச் சிறப்பு பண்பாட்டு கலாச்சாரம் முதலானவற்றை அறிய விரும்புவோர்க்குச் சான்றாதரமாக, செய்தி ஊற்றாக விளங்குவது சங்க இலக்கியம். சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் வரும் வீர மறவர்களின் வாழ்க்கை முறைகளாகப் போர்ச் செய்திகள், வாழ்க்கை விழுமியங்கள், அரசமரபு போன்றவற்றை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

முன்னுரை

மனித சமுதாய வரலாறு ஒவ்வொரு சமுதாயத்திலும் வரலாற்றுக்கு முற்பட்ட தூலத்தில் அரசு என்பது இருந்ததில்லை எனக்காட்டுகிறது. ஆங்காங்குப் பழங்குடிக் குழுக்களும், குலஅமைப்புகளும் இருந்து மக்கள் கூட்டங்களை நெறிப்படுத்தி வழிகாட்டின. அவை சமுதாயத்திற்கு வழிகாட்டி நெறிபடுத்தத் தேவையான விதிகளையும். உறவுகளையும், ஒழுகலாறுகளையும் பண்புகளையும் படைத்துக்கொண்டன. அரசு தோன்றிய பிறகு அவை அறநெறிகளாகவும், பழக்கவழக்கங்களாகவும் காலத்திற்கேற்ப மாறி புதுபொலிவுடன் இன்றளவும் நின்று நிலவி பெருமை சேர்த்து வருகின்றன. உழைப்பு, நேர்மை, அறம், வாயமை, உண்மை, இன்னா செய்யாமை, ஒப்புரவு போன்ற பண்புகள் எல்லாம் இவ்வாறு உருபெற்று தொடர்வனவே, புறநானூறு பொங்கிவரும் வீரத்தின் புலனாறு செந்தமிழ் மறவரின் வரலாறு செங்கழல் அணிந்த வேந்தர்களின் சீற்றம் குருதியாக, வெகுளியால் வஞ்சினமிக்க வீரர்கள் புகுந்து விளையாடிய போர்க்களப்பாடல்கள் புறநானூற்றில் பதிவாகியுள்ளன. ஆழ்ந்தகன்ற அறிவுடன் கூடிய செறிவு மிக்க அறப்பாடல்களும் வாழ்க்கைக்கு விதியாகியுள்ளன. மொத்தத்தில் பண்டைத் தமிழர் வரலாற்று ஆவணம் இந்நூல் இத்தகைய புறநானூறு கிடைத்திராவிடில் பண்டைத்தமிழகம் வீரப்பண்பாட்டை அறிந்து கொண்டிருக்க வாய்ப்புக் கிட்டியிருக்காது. போர் நாகரீகத்தைப் புரிந்து கொள்ளவும் வாய்ப்புக் கிட்டியிருக்காது.

மூவேந்தர் பற்றிய செய்திகள்

மூவேந்தரைப் பற்றிய பாடல்களில் சேரர், பாண்டியர், சோழர் என்று வரிசை மாற்றிய முறையில் முதல் பதினெட்டுப்பாடல்கள் உள்ளன. புவியியல் முறைப்படி இம்முறைவைப்பே சரியானதாகும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் அரசர்க்கும், பிறர்க்கும் அறநிலையை எடுத்துக்கூறும் பாடல்களும், பாணாற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றப்படைப் போன்ற ஆற்றுப்படைச் செய்யுள்களும் இடையிடையே அமைந்து காணப்படுகிறன. பெரும்பாலான இடங்களில் திணை, துறை முதலிய அமைப்பில் பாடல்களுக்கிடையேத் தொடர்பு காணப்படுகிறது. மக்கட்சமுதாயம் போர்ப்பற்றியச் சிந்தனையில் மூழ்கியிருந்தக் காலம் தொன்மையான காலம் அடிப்படை வாழ்விற்குப் போரே ஆணிவேர் என்று மனிதன் எண்ணியிருந்தக்காலமாகக் கருதப்படுகிறது. பண்டைக்கால வாழ்விற்குப் போர் அடித்தனமாக அமைந்திருப்பதை வரலாறும், இலக்கியமும் எடுத்துக்காட்டுகின்றன. தொல்காப்பிய புறத்திணையியலில்,

“ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று உலகத் தியற்கை”(தொல்.நூற்:76)

 என்ற அடிகள் தொன்று தொட்டு மனிதர் முரண்பட வாழ்ந்த நிலை தொடர்ச்சியானது என்பதை உணர்த்துகின்றது. போருக்காக மக்களிடையே நிலவி வந்த நோக்கம் தலைமைப் பற்றியதாகவே இருந்தது. செல்வம், செல்வாக்கு, புகழ், அறம், அதிகாரம், செருக்கு, சீனம் முதலிய அனைத்து நிலைகளிலுமே போர்ப்பற்றிய எண்ணம் மக்களிடையே ஊடுருவியிருந்தது. போரில் ஏற்படும் விளைவுகள் அவ்வக்காலங்களில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததையும் சங்கப் பாடல்களிலிருந்து அறியமுடிகிறது.

போரின் தொடக்க நிலை

ஆநிரைகளை கொள்ளலும், மீட்டலுமே போர் நாகரீகத்தின் தொடக்க நிலைகளாகும். தேவையான செல்வத்தை ஈட்டி அதனைத் தக்க வைத்துக் கொள்ளவும் தேவையான இடத்திற்கு மேலும் தன் பரப்பை விரிவு படுத்திக்கொள்ளவும், இனக்குழுத்தலைவன் தன் கூட்டத்திற்கானப் போதிய இடமும் வளமும் தேவை என்பதன் காரணம் கருதியும் போர்ப்புரியத் தொடங்கினான்.

“வையங் காவலர் வழிமொழிந் தொழுகப் போகம்

வேண்டிப் பொது சொற் பொறாஅ

திடஞ்சிறி தென்னும் ஊக்கம் துறப்ப” (புறம்.8)

என்னும் புறநானூற்றுப் பாடலடிகள், சேரமான் கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன் தன் குடிமக்களின் வசதிக்காக, ஊக்கம் துரப்ப பிறநாட்டின் இடங்களைக் கவர் முற்பட்டமையைக் கூறுவதாக அமைந்துள்ளமையைக் காணமுடிகிறது. தன ஆணைக்கு மாற்றார் அடிபணிய வேண்டும், தன் செங்கோலும் வெண்குடையும் போற்றப்பட வேண்டும், இவற்றிற்குரிய மதிப்பினை பிறர் தருதல் வேண்டும் முதலிய எண்ணங்கள் மன்னன் மனதில் ஓங்கியிருந்துள்ளது. அனைத்தும் தன் ஆட்சிக்கு. உட்படவேண்டும் என்ற உணர்வும் இதிலடங்கும் நிரை கவர்தலிலிருந்து, நிலம் கவரும் நோக்கிற்கு மாறிய காலகட்டம் என்பதை அறியமுடிகிறது, “போர் இயல்பானது. பொதுவாக மனித குலத்திற்கு ஒத்தது. அது தன்னைத்தானே விளைவித்துக் கொள்ளும் என்றெல்லாம் சமூக இயலாரும். மானுட இயலாறும் கருதுவர் என்று டாக்டர் ந.சுப்பிரமணியன் குறிப்பிடுகின்றார்.

போர் வீரர்கள்  

வீரர்கள் என்றும், மறவர்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள் சான்றோன் என்ற சொல்லாலும் சங்க இலக்கியத்துள் குறிக்கப்பட்டுள்ளனர்.

  “தேர்தர வந்த சான்றோர் எல்லாம் ” (புறம்.63)

எனவரும் பாடலடிகளில் பாங்கினை அறிய முடிகிறது. இதனையே பதிற்றுப்பத்து

“நோய்புரித் தடக்கைச் சான்றோர்”(பதிற்று 14)

எனப் பதிற்றுப்பத்து ஆசிரியர் இங்கே குறிப்பிட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது. புறப்பாடல்களின் மூலம் இளைஞருக்குச் சிறுவயது முதலே சினவுணர்ச்சியும் மறப்பண்பும் இருந்தமையை அறியமுடிகின்றது. போரிலே வெற்றிபெறும் வீரர்க்குப் பரிசும், நிலமும் தருவதுப் பற்றியச் சிந்தனையைப் புறப்பாடல்கள் சில குறிப்பிடுகின்றன. மாற்றான் நாட்டைக் கொள்ளையிடுதல் போன்ற நிகழ்வுகளோடு மன்னனுடன் வீராகள் பங்கேற்றனர். பகைவரது வயலில் புகுந்துக் கொள்ளையிட்டும், பகைவர் நாட்டை அனிபூட்டியும் அழித்தனர். இதனால் வீரர்களுக்கு நிலம் கிடைத்தது. மன்னன நிலம் தந்தபோது வளமிக்க மருதநிலத்தைக் கேட்டுப்பெற்றனர் வீரரின் உரிமை இங்கு நிலைநாட்டப் பெறுவதை இதன் மூலம் அறியலாம்.

போர் நடப்பதற்கான சிலச் சூழ்நிலைகளையும் ஆசிரியர்கள் வரையறுத்துள்ளனர்,

“1.சாதிமுறைச் சமுதாய உணர்ச்சி

2.அமைதி மனத்திற்கு வறட்சி உண்டாக்குதல்

3.வீரமும் துணிச்சலும்

4.மனிதற்கு இயற்கையான போரிடும் தன்மை

5.தற்காப்பு நியமம்

6. வெகுளியும், பொறாமையும்

7. மீதூரும் உள்ளக்கிளர்ச்சி” 1

போன்ற காரணங்களாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளார்கள். இதன் அடிப்படையில்தான் போர் ஆரம்பமாகிறது. இப்படி தனிமனிதனின் மேலோங்கிய எண்ணங்களினால் போர்க்களங்கள் உண்டாகின்றன.

ஆட்சியின் ஆளுமை

ஆட்சியில் மன்னரிடையே வீரம், மானம் பெரிதாகக் கரதப்பட்டது. சேரமான் கணைக்கால் இரும்பொறை செங்கணாணால் சிறைபிடிக்கப்பட்டப்பின் காவலரிடம் நீகேட்டுக் காலந்தாழ்த்தி வரும்படி ஆனதற்கும், இரந்து பெறவேண்டியது எண்ணியும் உயிர் துறந்தான். இதனை தொண்டைமான் இளந்திரையனின் பாடலில்,

“கால்பார் கோத்து ஞாலத்தியக்கும்

காவற் சாகா டுகைப்போன்

மாணின் ஊறின் றாகி யாறினுது படுமே”(புறம்.185)

எனவரும் பாடலில் ஆட்சியென்னும் சக்கரத்தை செலுத்துவோன் மாட்சிமை பெற்றிருத்தல் வேண்டும். இல்லாவிட்டால் பகை என்னும் சேற்றில் அழுந்தி அழிய நேரிடும் என்பதை இப்பாடல் உணர்த்துகிறது. எனவே சான்றோர் வகுத்த நெறிப்படி ஆட்சி அமைய வேண்டும் என்பதை இக்கருத்து உணர்த்துகிறது. போர்களத்துப் பொருவதும், வெற்றி கொள்வதும் மன்னாக்குப் பொழுது போக்கு அதே சமயம் தாம் செய்த போரின் விளைவுகளை, அழிவுகளை, அவலங்களை எண்ணி அமைதியுற்றனரா என்னும் செய்திப் புறப்பாட்டில் காண்பது அரிதாக உள்ளது போருக்கு ஊக்கியப் புலவர்கள் சிலர், மன்னனின் போர் வெற்றியைத் தணிவித்து வாழ்க்கையில் இனிது காணுமாறு தூண்டியுள்ளதை, மழைப் பொயத்தாலும், நாடு வறுமையுற்றாலும் மக்களின் இயற்கையான செயல்வினைகள் பாழ்பட்டு முறைபிறழ்ந்தாலும் இவ்வுலகம் மன்னரைப் பழிக்கும் என்பதை சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின் சிறப்பினைப் பற்றி இளங்கோவடிகள் கூறுவது இங்கே நினைவுக்கூறத்தக்கது.

“மழைவளங் கரப்பின் வான்பேரச்சம்

பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம்

குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி” (சிலம்பு 25)

எனவரும் பாடலடிகள் மன்னனுடைய ஆட்சியின் அருமைபற்றி விளக்கும் விதமாக அமைந்துள்ளது.

பாசறையில் அரசன்

ஓர் அரசன் போருக்குச் செல்லும்போது எதிரி நாட்டுக்கு அருகில் பாசறை அமைத்து அப்பாசறையில் இரவில் தங்கி பகலில் போரிடுவான் என்பது இங்கு குறிப்படத்தக்கது பகலில் போரிட்டு இரவில் போரிடாமையைப் பண்டைத் தமிழர் மரபாகக் கொண்டிருந்தனர். புலவர் பெருங்குன்றூர்கிழார் படைகளின் இரவு காலச் செயலினைக் குறிக்கும் பாடல்வழி, பகற்காலப் போரின் கடுமையை உய்த்துணர வைக்கின்றார். நெடுநல்வாடை இரவு நேரத்தில் பாசறைகளில் காயமுற்ற வீரர்களுக்கு ஆறுதல் சொல்லும் அரசரின் கடமை உணர்வையும், செயல்களையும் எடுத்தியம்புகின்றது. நெடுஞ்செழியன் வாடைக்காற்றுடன் மழைத்துளியும் வீசுகின்ற இரவு நேரத்திலும், படைத்தலைவன உதவியுடன் சென்றுக் காயமுற்ற வீரர்களைக் கண்டு ஆறுதல் கூறினான் என்ப,

 “நூல்கால் யாத்த மாலை வெண்குடை

துவ்வென்று அசைஇ, தாதுளி மறைப்ப

நுளளென யாமத்தும் பள்ளி கொள்ளான்,

சிலரொடு திரிதரும் வேந்தன்,

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே” (நெடுநல்.184-188)

அக்கால மன்னர்களிடத்தில் பகை அரசனிடம் போர்ச்செய்து நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வு இருப்பினும், அவர்களுக்குள்ளே சில விதிமுறைகளுக்கு உட்பட்டே போர் நடந்தேறியது. இதனால் பகலில் போரிடுவதும், இரவில் போரை நிறுத்துவதும் வழக்கமாயிருந்துள்ளன என்பது புலனாகிறது மேலும், “அக்காலத்தில் தகுந்த காரணமின்றிப் பண்டைத் தமிழ் மன்னர்கள் போரிலே தலையிடமாட்டார்கள். போரால் பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவதில்லை. படைகளும் பண்டங்களும்தான் போர்க்களத்திலே பாழாகும். பொதுமக்களுக்கு அறிவித்தப் பின்னரே போரினைத் தொடங்குவார்கள்”2 என்று சாமி.சிதம்பரனார் கூறுவதிலிருந்து அறியலாம்.

புலவர் பெருமை

மன்னை பாசறையில் தங்கியிருந்த காலத்தில்கூட புலமைக்குப் பெருமதிப்பு கொடுத்தான். எனவே சங்ககால புலவர்களின் நிலை செம்மையுடையதாக இருந்தது. புலவர்களின் சீர்மிகு பண்பாலும், உரிமைக் காரணமாகவும் மன்னனை அவன் என்றும் புலவனை அவர் என்றும் வழங்கியிருப்பதை சங்கப்பபாடலகளின்வழி அறியலாம் அதேபோல் மன்னனும் தமிழ்ப் புலவர்களால் பாடப்பெறுவதையேத் தனக்குரியத் தகுதியாகக் கருதினான் புலவர் நாவிற்கு மதிப்பிருந்தக் காரணத்தாலேயேப் புலவர்கள் தங்களைப் பெருமையாக எண்ணிக் கொண்டதுண்டு. இத்தகையப் புலவர்கள் அரண்மனையில் சென்றுப் பாடுவது மட்டுமின்றி. பகைநாட்டிடத்தேப் பாசறை அமைத்துத் தங்கியிருந்த மன்னனிடமும் சென்று பாடி பரிசில்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

மனிதர் வாழ்ந்த விதத்தை உணர்த்தும் இலக்கியம், வாழவேண்டிய நெறியையும் காட்டலைலது புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டவை வெறும் போர்க்களச் செய்திகள் மட்டும் அல்ல. புறச்சிந்தனையில், அறச்சிந்தனையின் ஆணிவேர் செறிந்திருக்கக்காணலாம் பேரிலக்கியமாக கருதப்படும் புறத்தில் வாழ்வியல் சிந்தனைகள் அறநெறிக்கு அடிப்பயைானவையாக அமைகின்றன. அதாவது. சமுதாயம் என்பது தனி மனிதர்கள் சேர்ந்த கூட்டமைப்பாகும். தனிமனிதர்கள் செய்யும் அறங்கள் சமுதாய மேம்பாட்டை உருவாக்குகின்றன. சமுதாயத்தில் மக்களால் தனிமனித அறத்தை தடைப்பிடிக்கப்படும் அறங்கள் சமுதாய அறங்களாகும். அகப்பொருளிலும், சமுதாய அறத்தை புறப்பொருளிலும் காணமுடிகிறது. பண்டைத்தமிழர்கள் மறுவுணர்வுடன், அறவுணர்வும் உடையவர்களாகத் திகழ்ந்துள்ளனர். மொத்தத்தில் புறநானூறு சங்கத்தமிழர்களின் வீரவாழ்க்கையினை எடுத்தியம்பும் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்கின்றது என்பதை உணரமுடிகின்றது.

சான்றெண் விளக்கம்

1.சங்ககால வாழ்வியல், டாக்டர் ந.சுப்பிரமணியன், நியூ செஞ்சுரி புக் பவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு 2010, ப.159.

2. மேலது.ப.161 3.எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம் சென்னை. இரண்டாம் பதிப்பு: 2008, ப.217.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் பு.எழிலரசி,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை, செயின்ட் ஜோசப் மகளிர் கல்லூரி,

ஓசூர் 635 109.

எட்டுத்தொகையில் அறம்

பெண்ணியக் கோட்பாடுகள்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »