Sunday, April 5, 2026
Home Blog Page 32

பெண் கல்வி

பெண் கல்வி

பெண் கல்வி


            19-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரை இந்தியப் பெண்களின் முன்னேற்றத்திற்காக இடைவிடாது எடுக்கப்பட்ட முயற்சி பெண்கல்விக்கே ஆகும் இம் முயற்சியில் கிருத்துவப் பாதிரிமார்களும் ஆங்கிலேய அரசாங்கமும், சமூகச் சீர்திருத்தவாதிகளும் முழு முயற்சியுடன் ஈடுபட்டனர்.

            1813-ஆம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனிச் கல்வி சட்டம் இந்தியர்களுக்குக் கல்வியளிக்க வேண்டுமென வற்புறுத்தினாலும், பெண்கல்வியை வற்புறுத்தவில்லை. இந்தியச் சமூகத்தில் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்லவும், சமூக வாழ்வில் ஆண்களுடன் பழகவும் தடை இருந்ததாலும், அவர்களுக்கு இளவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றதாலும், கல்வி கற்பது இயலாததாயிற்று அதனால் பெண்கள் கல்வி பயிலப் பெண்களுக்கெனத் தனியான பள்ளிகளும், அவற்றில் கற்பிக்க ஆசிரியைகளும் தேவைப்பட்டனர் கிருத்துவ மதத்தினர் 1818-ஆம் ஆண்டிலிருந்து பெண் கல்விக்காகப் பாடுபட்டனர்.

            ஆனால் அது வெற்றியடையவில்லை 1818-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்திலிருந்து ஆசிரியைகள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டுப் பெண்களுக்கெனத் தனிப்பட்ட பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1824 வரை பெண் கல்விக்கு முக்கியமாகப் பாடுபட்டவர்கள் இவர்களேயாவர் பெண்கள் மூடிய வண்டிகளில் பள்ளிகளுக்கு அழைத்து வரப்பட்டுத் திரும்பவும் தத்தம் வீடுகளில் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டனர். இத்தகைய பள்ளிகளில் ஐந்து வகுப்புகளிலும் 400 பெண்களே கல்வி பயின்று கொண்டிருந்தனர். ஆயினும், இவ்வாறு பெண்களுக்குத் தனியான பள்ளிகள் ஆரம்பிக்கப்படும் முன்னரே சமூகத்தின் மேல் நிலையிலுள்ள பெண்கள் தங்கள் வீடுகளிலேயே கல்விப் பயிற்சி பெற்று வந்தனர் என்பதும் கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.

            பெரும்பாலான பள்ளிகள் கிருத்துவப்பாதிரிமார்களாலும் ஆங்கிலேயர்களாலும் நடத்தப்பட்டதால், அக்கல்வி இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்றதாக அமையவில்லை. மேலும், கிருத்துவப்பள்ளிகளில் சேர்ந்த இளைஞர்களை அவர்கள் கிருத்துவமதத்திற்கு மாற்ற முயன்றனர். அதனால் இந்திய வாழ்க்கை முறைக்கு ஏற்ற கல்வியை அளிக்க இந்திய சமூக சீர்திருத்தவாதிகள் முனைந்தனர். பிரம்ம சமாஜம் பெண் கல்வியை வற்புறுத்தியது. பிற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஆரிய சமாஜம் குருகுல முறையைக் கடைப்பிடித்துக் கல்வி புகட்டியது.

            ஈஸ்வர சந்திர வித்யாசாகர், புதேன் மதத்தினரின் ஆதரவுடன் 1849-இல் பெண்களுக்காக கொல்கொத்தாவில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பெண் கல்விக்கு வங்காளத்தில் தயானந்த சரஸ்வதி முயற்சி எடுத்தார். மஹாராஷ்டிராவில் ரானடே முயற்சிகள் எடுத்தார்.

            1850-இல் டல்ஹௌஸி பிரபு சமூக மாற்றத்திற்குப் பெண் கல்வி மிகவும் அவசியமென்று வலியுறுத்தினார். அவரது கருத்துக்களை 1854-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட சார்லஸ் உட் என்பவரின் அறிக்கை (Charles Wooode’s Despatch) விளக்கியது. அது ஆண்களுக்கு அளிக்கப்படும் கல்வியைவிடப் பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வி வாழ்க்கைக்குத் தேவையாகும் எனக் கூறியது. இவரது அறிக்கை பெண்கல்வி வளர்ச்சியில் முக்கியமான மைல் கல்லாகும். கல்வியை, முக்கியமாகப் பெண் கல்வியை ஆதரிப்பது அரசின் கடமை என அது வலியுறுத்தியது.

            இவரது அறிக்கையே, 19- ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட கல்வித் திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது 1854-ஆம் ஆண்டு உட்ஸ் அறிக்கையின்படி, பெண் பள்ளிகளும், கல்வி கற்கும் பெண்களும் மிகக் குறைவு. 1870-இல் நகராட்சியும், அதன் நிதிக் குழுவும் அமைக்கப்பட்ட பிறகு, பெண்கல்வி முன்னேற்றமடைந்தது. அவை பெண்களுக்குப் பயிற்சிப்பள்ளிகள் ஆரம்பித்தன. 1882-இல் கல்விக்குழு (Education Commission) தனது அறிக்கையில் சிறு பெண்கள் மட்டுமின்றி 12 வயதுக்குக் குறைந்த பெண்களுக்கும் கல்வி புகட்டப் பரிந்துரைகள் அளித்தது.

            அதற்குப் பள்ளிகளில் ஆசிரியைகளையும், பெண் பார்வையாளர்களையும் (inspectress) நியமிக்கப் பரிந்துரைத்தது விதவைப் பெண்கள் கல்வி கற்க பணஉதவி அளிக்க வேண்டுமென வற்புறுத்தியது.

            பெண்களுக்கும், ஆண்களுக்கும் அவரவர் வாழ்க்கைக்கேற்றவாறு வெவ்வேறு பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு பயிற்சியளிக்க வேண்டுமெனப் பரிந்துரைத்தது. இதன் பரிந்துரைகள் 1913-இல் செயல்படுத்தப்பட்டன. ஆயினும், 1818-ல் 133 பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருந்தனர் மிகவும் ஆண்குழந்தைகளுக்கு 6 பெண் குழந்தைகள் என்ற விகிதத்திலேயே முன்னேறிய மாகாணங்களில்கூட 98 சதவிகிதப் பெண் குழந்தைகள்
பள்ளிக்குச் செல்லவில்லை.

            1857-இல் கொல்கத்தா, சென்னை, பம்பாய் ஆகிய நகரங்களிலும், 1882-இல் பஞ்சாபிலும், 1889 இல் அலகாபாத்திலும் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டன கிருத்துவப் பாதிரிகளாலும் பெண்களுக்காக இரண்டு கல்லூரிகள் தொடங்கப்பட்டன. அவற்றில் ஒன்று பாளையங்கோட்டையில் உள்ள சாராடக்கர் கல்லூரி; மற்றொன்று லக்னோ கல்லூரி டொன்டோ கேசப் கார்வே 1908-இல் பெண்களுக்காக ஒரு பள்ளியை ஆரம்பித்தார். பின்பு ஸ்ரீமதி நாதிபாய் தாமோதர் தாக்ரே இந்தியப் பெண்கள் பல்கலைக்கழகத்தை 1910-இல் ஆரம்பித்தார்.


இவை தவிர, மன்னராட்சி நடைபெற்ற மாநிலங்களில் தனிப்பட்ட மன்னர்களாலும் கொள்ளப்பட்டன. கேரள மன்னராலும், மைசூர் மன்னராலும் முயற்சிகள் எடுத்துக் பெண்களுக்காகக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ரமாபாய் ரானடே விதவைகளுக்காகவும், அனாதை விதவைகளுக்காகவும் இன மக்கள் பெண்கல்விக்கு முக்கிய
பள்ளிகள் தொடங்கினார். பார்சி தொண்டாற்றினர்.


            அக்கால கட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்றுவந்த பெண்களின் எண்ணிக்கை கீழ்வருமாறு:


ஆண்டு                                            பள்ளிகளில் படித்த பெண்கள்

1854                                                                 25000
1881                                                                 117000
1892                                                                 127000
1902                                                                 256000



தொழிற்கல்விக் கல்லூரிகளிலும் பயின்று வந்தனர். 1902 ஆம் ஆண்டு 169 பெண்கள், கல்லூரிகளிலும், 87 பேர் ஆசிரியைகளாகவும், செவிலித்தாயார்களாகவும், மருத்துவர்களாகவும் பணிபுரிந்தனர். சிலர்மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியா சுதந்திரமடையும் வரை கல்வியறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் கீழ்க்கண்டவாறு இருந்தது.


ஆண்டு                                கல்வியறிவு பெற்ற பெண்களின் விகிதம்

1891                                                                             0.5

1901                                                                             0.7

1911                                                                             1.1

1921                                                                             1.9

1931                                                                             2.4

1941                                                                             6.9


            இந்தியா சுதந்திரமடையுமுன்பு இந்தியக் கல்வியின் முன்னேற்றத்தை ஆராய்ந்த குழு, ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே விதமான கல்வி அளிக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்தது.

            இந்தியப் பெண்களின் கல்வி வெவ்வேறு காரணங்களுக்காக வலியுறுத்தப்பட்டது. ஆரம்ப காலங்களில் பெண்களின் திருமண வயதை உயர்ந்த அது முக்கியமான வழியாகக் கருதப்பட்டது இக்கருத்தை ஈஸ்வரச் சந்திர வித்யாசாகர் வலியுறுத்தினார். விதவைகளுக்கு மனவலிமையையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கக் கல்வி தேவை எனவும் கருதினார். சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்கள் தங்களது குடும்பப் பெண்கள் ஆங்கிலேயர்களின் பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டு, அவர்களுடன் பழகக் கல்வி அவசியம் என வற்புறுத்தினர். பெண்களின் கல்வி, அவர்கள் ஆரியமதக் கோட்பாடுகளையும், கிரியைகளையும் புரிந்துகொண்டு, அவற்றைச் சரியான முறையில் இந்தியக் கலாச்சாரத்தின் கடைப்பிடிக்க உதவும் என மறுமலர்ச்சியில் ஈடுபட்டவர்கள் கருதினர். மாறிவரும் சமூக, அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து கொண்டு, அவற்றிற்கேற்பக் முன்னேற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெண்கல்லியை வலியுறுத்தினர்.

            ஆயின், இக்காலகட்டத்தில் அனைவரும் ஆண் பெண் இருபாலரில் பங்குகளும் வேறுபட்டவை என்றும், அவர்கள் தங்கள் கடமைகளைச் சரியான முறையில் நிறைவேற்றக் கல்வி அவசியம் எனவும் கருதினர்.

            இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் கடைப்பிடிக்கப்பட்ட பழக்க வழக்கங்களின் காரணமாகப் பெண் கல்வியில் ஏற்பட்ட முக்கியமான முன்னேற்றம் பெண்களின் மருத்துவக் கல்வியாகும் ஆரம்பகாலத்தில் ஆங்கிலேயப் படைவீரர்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக இந்தியாவில் மருத்துவர்களை உருவாக்க ஆங்கிலேயர்கள் 1826-இல் பம்பாயிலும், 1827-இல் சென்னையிலும் மருத்துவப் பயிற்சிப்பள்ளிகளை ஆரம்பித்தனர். அதன்பிறகு, சென்னை, கொல்கத்தா, பம்பாய் முதலிய நகரங்களில் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கினர்.

            இந்தியாவில் பெண்களுக்கு ஆரம்பக் கல்வியை வலியுறுத்திய நாட்களிலிருந்தே, இந்தியப் பெண்கள் மருத்துவத்துறையிலும் பயின்று பட்டம் பெற வேண்டிய அவசியம் இருந்தது. அதற்குச் சில காரணங்கள் உண்டு. அக்காலத்தில் குழந்தைப் பேற்றின்போது இறந்த பெண்களும், குழந்தைகளும் மிக அதிகம். பெண்கள் உடல் உணவிற்கும் இளவயதிலேயே மணமாகி, அவர்கள் உடல் முழு வளர்ச்சியடையுமுன்னரே  தாயாகிக், குழந்தைப் பேற்றை அடையும் நிலைக்கு உள்ளாயினர். குடும்பத்தில் பெண்களின் நலத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும், சத்தான முக்கியத்துவம் அளிக்கப்படாமையால், பெரும்பாலான பெண்கள் இரத்தச் சோகைக்கு உள்ளாகியிருந்தனர். பிள்ளைப்பேறு அறிவியல் பயிற்சியற்ற தாதிகளின் மேற்பார்வையில், சுகாதாரமற்ற சூழ்நிலையில் நிகழ்ந்தது அதனால் குழந்தைப் பேற்றின்பொழுது நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி பெரும்பாலான பெண்களும், அவர்களுடைய குழந்தைகளும் மரணமடைந்தனர்.

            அக்காலத்தில் ஆண் மருத்துவர்கள் இருப்பினும், பெண்களை அவர்கள் அணுக முடியாத காரணத்தினால் அம்மருத்துவர்கள் பெண்களை இந்நிலையிலிருந்து காப்பாற்ற இயலவில்லை. இப்பரிதாபகரமான நிலையிலிருந்து பெண்களைக் காப்பாற்றப் பெண் மருத்துவர்கள்
தேவைப்பட்டனர்.

            ஆரம்பகாலங்களில் கிருத்துவப் பாதிரிப் பெண்களும், இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுப் பெண்களும் மருத்துவப்பயிற்சி பெற்று, இந்தியப் பெண்களுக்கு உதவ ஆரம்பித்தனர். இதில் ஐடா ஸ்டர் (lda Scuder) என்ற கிருத்துவப் பாதிரிப் பெண்ணின் முயற்சி குறிப்பிடத்தக்கது. அவர் வேலூரில் 1900-ஆம் ஆண்டு ஆரம்பித்த சிறிய மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை, இன்று மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கின்றது. இந்தியப் பெண்களை மருத்துவக் கல்லூரியில் சேர்த்து பயிற்சி பெற்ற மருத்துவர்களாக உருவாக்குவதற்காகச் சமூகச் சீர்திருத்தவாதிகளும், கிருத்துவப் பாதிரிமார்களும், ஆங்கிலேய அரசாங்கமும் பெரு முயற்சி எடுத்துக் கொண்டன. பெண்கள் மருத்துவக் கல்லூரியில் கற்பதற்காகத் தனி இடங்கள் ஒதுக்கப்பட்டன.

             கல்விக் கட்டணத்தில் அவர்களுக்குச் சலுகை அளிக்கப்பட்டது. 1880-களில் வங்காளம், பம்பாய், சென்னை முதலிய ஊர்களில் பெண்கள் மருத்துவக் கல்லூரிகளில் பயின்று பட்டம் பெற்றனர். ஆண்களுடன் சேர்ந்து படிப்பது அக்காலச் சமூகச் சூழலில் மிகவும் கடினமாக இருந்ததால், பெண்களுக்கெனத் தனியான மருத்துவக் கல்லூரிகள் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் லூதியானா, டில்லி, ஆக்ரா, வேலூர், சென்னை முதலிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டன. இதைத் தவிர, டாப்ரின்ஸ் நிதி (Dafferin’s fund) என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அது பெண் மருத்துவர்களை உருவாக்கப் பெண் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், பெண்களுக்கான மருத்துவமனைகள் கட்டவும் நிதியுதவி அளித்தது. இவ்வாறாக, இந்தியாவில் பெண் மருத்துவர்களை உருவாக்கப் பல்வேறு விதங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்ப காலத்தில் இத்துறையில் பெண்கள் பயின்று, பட்டம் பெற்று, மருத்துவராவதற்குச் சமூகத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக்கள் இருந்தன. பெண்களை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய குடும்பங்களை அவர்களது உறவினர்களும், சாதியினரும் விலக்கி வைத்தனர் ஆனால், பெண் மருத்துவர்களின் சேவை பல இந்தியப் பெண்களின் உயிரைக் காக்கக் காரணமாக இருந்தது. காலம் செல்லச் செல்ல, மருத்துவத் தொழிலில் பெண்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.

             அவர்கள் சமூகத்தில் உயர்ந்த இடத்தையும் பெற்றனர். மருத்துவத் தொழில் பெண்களுக்கு உகந்த தொழிலாகவும் கருதப்பட்டது. இவ்வாறாக, இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற பெண்களின் சதவிகிதம் மிகக்குறைவான முன்னேற்றத்தைக் கண்டு கொண்டிருந்த நாட்களிலேயே, ஆண்களுக்கிணையாகப் பெண்கள் மேம்பட்ட கல்வியாகக் கருதப்படும் மருத்துவக் கல்வியில் பயிற்சி பெற்று தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கினர்.

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

சண்டேசுர நாயனார் புராணம்

சண்டேசுர நாயனார்

சண்டேசுர நாயனார்


            சோழநாட்டிலுள்ள திருச்சேய்ஞலூரில் வேதியர் குலத்தில் எச்சதத்தர் என்பவரின் மகனாகப் பிறந்தவர் விசாரசருமர் ஆவார். இவர் தனது பால்ய பருவத்திலேயே முற்பிறவியின் தொடர்ச்சியாய் வேதங்கள் அனைத்தும் அறிந்திருந்தார். அதைக் கண்ட அவ்வூர் மக்கள் அனைவரும் அவரைப் போற்றினர்.

            எச்சதத்தர், தனது புதல்வர் விசாரசருமரை வேதபாட சாலைக்கு அனுப்பினார். ஆனால், விசாரசருமர் ஒருநாள் பாடசாலை செல்லும் வழியில் மேய்ந்து கொண்டிருக்கும் பசுக்களைக் கண்டார். தன் பஞ்ச கவ்யங்களாலும் இறைவனின் பூசைக்கு உதவும் பசுக்களின் பெருமையை நினைத்தார். தான் வேதங்களைப் படிப்பதைவிட பசுக்களை மேய்ப்பதையே அருந்தவம் என்று கருதினார்.

            உடனே அவர், அப்பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த இடையனிடம் சென்று, இனி பசுக்களைத் தானே மேய்ப்பதாகக் கூறினார். இடையனும், ஏற்கனவே விசாரசரு மரை அறிந்திருந்ததால் ஒப்புக் கொள்ள வேண்டியதாயிற்று. பிறகு, ஏனைய மக்களிடமும், அந்தணர்களிடமும் அனுமதி பெற்று விசாரசருமர் அப்பசுக்களை மண்ணியாற்றங்கரையில் மேய்த்து வந்தார்.

            விசாரசருமர் மேய்க்கத் தொடங்கிய பிறகு பசுக்கள் அதிகப் பாலை சுரந்தன. அவை அவ்வப்போது பாலை மண்ணில் சொரிந்தன. இதைக்கண்ட விசாரசருமர், இப்பாலை சிவபெருமானுக்கு அபிடேகம் செய்யலாமே! என்று கருதினார். அவர் பசுக்கள் சொரியும் பாலை, குடங்களில் ஏந்தினார். மண்ணியாற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் வடித்தார். ஆலயமும் எழுப்பினார். குடத்தில் நிரப்பிய பாலை அம்மண் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வணங்கி னார். நாள்தோறும் இவ்வாறு செய்வது விசாரசருமரின் வழக்கமாயிற்று.

ஒருநாள் இதை அவ்வூரிலுள்ள ஒருவன் கண்டான். அவன், ‘விசாரசருமர் பாலை மண்ணில் வீணாக்குகிறார்!’ என்று நினைத்து, பசுக்களின் உரிமையாளர்களிடமும் அவ்வூர் அந்தணர்களிடம் சென்று தெரிவித்தான். அவர்களும் எச்சதத்தரிடம் வந்து, அவரது புதல்வர், பாலை வீணாக்கு வதாகக் கூறினர்.

எச்சதத்தர், அவர்களிடம் இனி இவ்வாறு நடக்காது என்றும் தான் விசாரசருமரைக் கண்டிப்பதாகவும் கூறி அனுப்பினார். அவ்வூர் மக்கள் தன் புதல்வரைப் பற்றி குற்றம் சாட்டுவது உண்மையா? என்பதை அறிய விரும்பிய எச்ச தத்தர், மறுநாள் விசாரசருமருக்குத் தெரியாமல் அவர் பின்னே சென்று, ஒரு மரத்தின் மேலே ஏறி மறைந்திருந்தார்.

வழக்கம்போலவே விசாரசருமர் பசுக்களின் பாலை குடத்தில் ஏந்தினார். மண்ணால் லிங்கம் வடித்தார். அபிஷேகம் செய்யத் தொடங்கினார். அதைக்கண்ட எச்சதத்தார் கோபம் கொண்டார். மரத்தை விட்டுக் கீழே இறங்கினார். ஒரு கம்பை எடுத்து விசாரசருமரின் முதுகில் அடித்தார். தகாத வார்த்தைகளால் திட்டினார். அங்கிருந்த பால்குடங்களைக் காலால் எட்டி உதைத்தார்.

எச்சதத்தரின் செயலைக் கண்ட விசாரசருமருக்கும் கடுங்கோபம் வந்தது. “பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வைத்திருந்த பாலை வீணாக்கியவர் என் தந்தையானாலும் நான் மன்னிக்க மாட்டேன்!” என்றபடி ஒரு கோடரி எடுத்து எச்சதத்தரின் இரு கால்களையும் வெட்டி எறிந்தார்.

அக்கணமே சிவபெருமான் உமையன்னையுடன் விடை வாகனத்தில் அங்கே எழுந்தருளினார். ”அன்பனே! எம் மீது கொண்ட பக்தியால் தந்தை யென்றும் பாராமல் அவரது கால்களை வெட்டினாய்! இனி யாமே உனக்குத் தந்தை! உன்னைத் திருத்தொண்டர்களின் தலைவராக்கினேன். நான் உண்பது, உடுப்பது எல்லாம் உனக்கே சேரும்படி சண்டேசுர பதவி தந்தோம்!” என்று கூறியபடி, தன் திருமுடியிலுள்ள கொன்றை மலரை எடுத்து விசாரசருமருக்குச் சூடினார். விசாரசருமரும் சண்டேசுர பதவி அடைந்தார். விசாரசருமரால் கால்கள் வெட்டப்பட்டதால் எச்சதத்தரும் தூய்மை அடைந்து, சிவபதம் சேர்ந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

18.திருக்குறிப்புத் தொண்டர்

19.திருநாவுக்கரசு சுவாமிகள்

திருநாவுக்கரசு சுவாமிகள் | அப்பர்

திருநாவுக்கரசர் நாயனார்

திருநாவுக்கரசு சுவாமிகள்


            திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாரூரில், வேளாளர் மரபில் பிறந்தவர் மருள்நீக்கியார். பின்னாளில் திருநாவுக்கரசராக உயர்ந்தவர் இவரே ஆவார். இவரது தந்தையார் புகழனார். தாய் மாதினியார். தமக்கையின் பெயர் திலகவதியார். திலகவதியாரை, கலிப்பகை நாயனார் என்ற சேனாதி பதிக்குத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் கருதினர். ஆனால் திருமணம் நிகழவிருந்த காலத்தில் கலிப்பகையார் போருக்குச் சென்று இறந்தார்.

இந்நிலையில் புகழனாரும், மாதினியாரும் அடுத்தடுத்து உயிர் நீத்தார்கள். அதனால் மனம் உடைந்த திலகவதியார் தானும் உயிர் துறக்க எண்ணினார். ஆனால் தம்பி மருள்நீக்கியாரைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத காரணத்தால், தன் முடிவை மாற்றிக் கொண்டார் திலகவதியார். இல்லறத்தில் ஈடுபட்டுக் கொண்டே அறவாழ்வு வாழ்ந்து வந்தார். மருள்நீக்கியாரும் தமக்கையைப் போலவே சமுதாயப் பணிகளைச் செய்து வந்தார்.

இந்நாளில் வடநாட்டிலுள்ள பாடலிபுத்திரம் சென்ற மருள்நீக்கியாரை, சமணர்கள் சமண மதத்தில் இணைத்தனர். தருமசேனர் என்ற பெயரையும் சூட்டினர். தன் தம்பி சமண மதத்தைச் சார்ந்துவிட்டதை அறிந்து, சிறந்த சிவபக்தையாக விளங்கிய திலகவதியார், தம் தம்பியாரை சைவ மதத்திற்கு மாற்றும்படி சிவபெருமானை வேண்டினார். அவ்வாறே செய்வதாக இறைவரும் வாக்கருளினார்.

சிவபெருமானது திருவுள்ளத்தால் தருமசேனரின் வயிற்றில் சூலை நோய் வந்தது. அந்நோயைத் தீர்க்க, சமணர்கள் அரும்பாடு பட்டும் அச்சூலை நோய் குணமாகவில்லை. எனவே அவர்கள் அம்முயற்சியைக் கைவிட்டனர்.

தருமசேனருக்கு, தம் தமக்கையின் நினைவு வந்தது. தமக்கைக்குச் செய்தி அனுப்பினார். ஆனால் திலகவதி யாரோ, தான் சமண மடத்திற்கு வரமுடியாது என்று கூறிவிட்டார். எனவே, தருமசேனர் தென்னகம் புறப்பட்டார். திலகவதியாரின் திருவதிகை மடத்தை வந்தடைந்தார்.

திலகவதியார் தம்பி தருமசேனருக்குத் தீட்சை அளித்தார். இருவரும் வீரட்டானேசுவரர் ஆலயம் சென்று தொழுதனர். அங்கு தருமசேனர், ‘கூற்றாயினவாறு விலக்ககிலீர்’ என்ற திருப்பதிகத்தைப் பாட, அவரது சூலை நோய் விலகியது.

எம்பெயரில் தீம் பதிகம் பாடியதால் இனி, ‘நாவுக்கரசு’ என்று அழைக்கப் பெறுவாய் என்ற அசரீரியும் எழுந்தது. சிவபெருமான் கருணையை எண்ணி மெய்சிலிர்த்தார் நாவுக்கரசர். பிறகு, இராவணனுக்கு அருள்புரிந்த திருவட்டிறத்தை துதிக்கத் தொடங்கினார். மனம், வாக்கு, காயம் மூன்றாலும் பெருமானைத் தொழுதார். ஆலயங்களில் புதர்களை நீக்கி உழவாரப் பணி செய்தார். தன்னை இறைவனின் அடிமையாகவேக் கருதினார் நாவுக்கரசர்.

அவ்வேளையில், சமண மதத்தை விட்டுவிட்டு, சைவ மதத்திற்கு மாறிவிட்ட நாவுக்கரசர் மீது சமணக் குருக்கள் கோபம் கொண்டனர். சமணத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த மன்னனிடம், பலவாறு பொய் கூறினர். மன்னன், நாவுக்கரசரை இழுத்து வரும்படிக் கூறினான். நாவுக்கரசரும், ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்ற பதிகத்தைப் பாடி வந்தார்.

வஞ்சகம் கொண்ட சமணர்கள் மன்னனிடம், நாவுக்கரசை சுண்ணாம்பு சுடும் நீற்றறையில் அடைக்க வேண்டும் என்று கூறினர். மன்னனும் அவ்வாறே கட்டளையிட்டான். நீற்றறைக்குள் தள்ளப்பட்ட நாவுக்கரசர், ‘மாசில் வீணையும்’ என்ற திருக்குறுந்தொகையைப் பாடினார். ஏழு நாட்கள் கழித்துப் பார்க்கையில், எவ்விதத் துன்பமுமின்றி அமர்ந்திருந்த நாவுக்கரசரைக் கண்ட சமணர்கள் திகைத்தனர்.

மன்னரிடம் கூறி நாவுக்கரசருக்கு நஞ்சை ஊட்டச் செய்தனர். நஞ்சும் பலனற்றுப் போனது. பிறகு யானையை விட்டு மிதிக்கக் கூறினர். நாவுக்கரசரோ, ‘யான் வீரட்டநாதன் அடியவன்; அஞ்சுவது யாதொன்றுமில்லை, அஞ்ச வருவதுமில்லை’ என்று பாடினார். யானை அவரை வலம் வந்து வணங்கிப் போயிற்று.

மனம் கொதித்த சமண வஞ்சகர்கள், மன்னரிடம் கூறி நாவுக்கரசரின் உடலோடு கல்லைக் கட்டி, கடலில் எறியும்படிச் செய்தனர். ‘கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே’ என்று பாடினார் நாவரசர். கல் கடல் மீது மிதந்தது. மெதுவாய் நகர்ந்து திருப்பாதிரிப் புலியூரை அடைந்தது. நாவரசர் அங்குள்ள பெருமானையும் அன்னையையும் பாடி, சிலகாலம் களித்திருந்தார்.

            பிறகு, திருவதிகைக்குத் திரும்பினார். பல திருப்பதிகங்களைப் பாடிப் பரவசம் அடைந்தார். இந்நிலையில் பல்லவ மன்னனும் நாவரசரின் பெருமையை உணர்ந்தான். திருவதிகை வந்து அவரை வணங்கினான். அடியவரானான். மன்னன் திருவதிகையிலே குணபர வீச்சரம் என்னும் சிவாலயம் கட்டினான்.

            நாவுக்கரசர் பல சிவத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார். திருப்பெண்ணாகடத்திலுள்ள திருத்தூங்கானை மாடம் சென்று அங்குள்ள இறைவரிடம், “அடியேன் உடல் சமணத் தொடர்புடையது. இவ்வுடலோடு நான் உயிர் வாழ மாட்டேன். என் உடலில் சூலம் மற்றும் இடப முத்திரை பொறித்து அருள வேண்டும்!” என்று வேண்டி பதிகம் ஒன்றைப் பாடினார். சிவனருளால் சிவகணம் ஒன்று தோன்றி, நாவரசரின் தோளில் சிவ முத்திரைகளைப் பொறித்தது.

            சுவாமிகள் சிவனருளை எண்ணி உருகி நின்றார். பின், தில்லை முதலிய பல திருத்தலங்களுக்குச் சென்று வணங்கினார். தில்லை வீதியில் படுத்து உருண்டபடியே தில்லையைக் கடந்தார். பின் சீர்காழியைச் சென்றடைந்தார்.

சீர்காழியில் உமையன்னையிடம் ஞானப்பால் உண்ட திருஞான சம்பந்த மூர்த்தி பெருமானைப் பற்றி கேட்டறிந்து, அவரை வழிபட நினைத்தார். சம்பந்தப் பெருமானைச் சந்தித்தார். அவரது திருவடியில் விழுந்து வணங்கினார். அது கண்டு பதறிய சம்பந்தப் பெருமான், ‘அப்பரே!’ என்றழைக்க, ‘அடியேன்’ என்றார் நாவரசர். அந்நாளிலிருந்து நாவுக் கரசரை அப்பர் என்றும் மக்கள் அழைக்கலாயினர்.

நாவரசரும், சம்பந்தப் பெருமானும் திருமடத்தில் பலநாள் தங்கியிருந்து சிவபிரானைப் பாடிக் களித்தனர். இருவரும் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடினர். சம்பந்தர் சீர்காழிக்குத் திரும்ப, நாவரசர் பல திருத்தலங்களுக்குச் சென்று இறைவனை வணங்கி, பின் திங்களூரைச் சென்றடைந்தார். திங்களூரில் தன் பெயரில் அன்னசாலை, தண்ணீர்ப் பந்தல் போன்றவைகள் நடத்தி அரும்பணி செய்துவந்த அப்பூதி அடிகளைப் பற்றி அறிந்து மெய்யுருகினார்.

அப்பூதி அடிகளின் வீட்டில் அமுதுண்ணச் சென்றார். அந்நேரத்தில், பாம்பு தீண்டி இறந்து போன அப்பூதி அடிகளாரின் மூத்தப் புதல்வனது உடலை, சிவாலயத்தின் முன் கொண்டு வைத்து திருப்பதிகம் பாடினார். அவனும் உயிர் பெற்று எழுந்தான்.

பின்னர் திருவாரூர் முதலிய தலங்களுக்குச் சென்று திருப்புகலூர் வந்தடைந்தார். அங்கு முருக நாயனார், சிறுத்தொண்ட நாயனார், நீலநக்க நாயனார், சம்பந்தப் பெருமான் போன்ற அடியார்களைச் சந்தித்து பரவசம் எய்தினார்.

அதன் பிறகு அப்பரும் சம்பந்தரும் திருவீழிமிழலை சென்று அங்குள்ள இறைவரை வழிபட்டனர். அக்காலத்தில் நாட்டில் மழையின்றி பஞ்சம் உண்டாகியிருந்தது. எனவே இறைவர் இருவருக்கும் தினமும் ஆளுக்கொரு படிக்காசு தந்தான். அதைக்கொண்டு இருவரும் பல அடியவர்களுக்கு அமுது படைத்து உதவினர்.

அவ்விருவரும் திருமறைக்காடு என்னும் வேதாரணி யம் சென்றனர். அங்குள்ள திருக்கோயிலின் திருக்கதவு, வேதங்களால் பூசிக்கப்பட்டு அடைக்கப்பட்டுக் கிடந்தது. யாராலும் திறக்க இயலவில்லை. ஆதலால் அதன் அருகில் வேறொரு சிறிய வாசல் அமைத்து, அடியவர்கள் அதன் வழியே சென்று இறைவனை வணங்கி வந்தனர்.

அதைப்பற்றி அறிந்த நாவரசரும், சம்பந்தரும் அத்திருக் கதவை திறந்து மூட எண்ணினர். அப்பர், “பண்ணினேர்… கண்ணினால் உமைக்காண கதவைத் திண்ணமாகத் திறந்தருள் செய்மினே” என்று பாடினார். நெடுங்காலமாகப் பூட்டிக் கிடந்த அக்கதவு திறந்தது. அதன்பிறகு சம்பந்தர் திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கியதுமே, கதவு மீண்டும் மூடிக் கொண்டது. நாள்தோறும் திருக்கதவு திறந்து, மூடவேண்டும் என்பதற்காகவே அவ்விருவரும் அவ்வாறு செய்தனர்.

அன்றிரவு நாவுக்கரசருக்கு மனதில் ஒரு ஏக்கம் பிறந்தது. தான் நெடுநேரம் பதிகம் பாடிய பின்பே இறைவன் கதவைத் திறந்தார். ஆனால் சம்பந்தர் பாடத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கதவை அடைத்துவிட்டாரே! என்பதே அந்த ஏக்கம். அதை நினைத்துக் கொண்டே நாவுக்கரசர் உறங்கினார்.

அப்போது இறைவன் அடியவர் கோலத்தில் வந்து, நாவுக்கரசரை எழுப்பி, ‘திருவாய்மூரில் பதிகத்தைத் தொடர வா!’ என்று கூறிவிட்டு நடந்தார். நாவரசரும் எழுந்து அவர் பின்னால் சென்றார். அவர், அவ்வடியவரை நெருங்க நினைத்தும் அது இயலவில்லை. அவ்வடியவர் இறைவனே என்று உணர்ந்தார் நாவரசர். அவ்வடியவர் நேராகக் கோயில் ஒன்றைக் காட்டி அதனுள் நுழைந்தார். கதவு அடைத்துக் கொண்டது. அந்நேரத்தில் விழித்த சம்பந்தரும் அப்பர் சென்றதை அறிந்து அவர் பின்னால் வந்தார்.

            உடனே நாவுக்கரசர், “இறைவனே! உன் திருவுள்ளத்தை அறியாமல் கதவைத் திறந்த எனக்கு காட்சி அளிக்க மறுக்கலாம். ஆனால் சிறிதுநேரம் பாடியே கதவை அடைத்த சம்பந்தப் பெருமானுக்கு காட்சிதர மறுக்கலாமோ?” என்று வேண்டினார். சிவபெருமான் இருவருக்கும் காட்சி அளித்தார்.

            ஒருமுறை, பாண்டிய மன்னர் நெடுமாறன் சமணர்களின் பிடியில் சிக்கிக் கொண்டு சைவத்தை விலகி நின்றான். அவரைச் சைவத்திற்கு மாற்றும்படி அரசியார் மங்கையர்க்கரசியும், அமைச்சர் குலச்சிறையாரும் சம்பந்தப் பெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.

சம்பந்தப் பெருமானும் புறப்பட ஆயத்தமானார். அப்போது நாவுக்கரசர் சம்பந்தரிடம், “சமணர்கள் கொடியவர்கள். எனக்குப் முன்பு பல கொடுமைகள் புரிந்துள்ளனர். எனவே நீர் அவர்களிடம் செல்ல வேண்டாம். இன்று நாள்வேறு நன்றாய் இல்லை” என்றார்.

            அதற்கு சம்பந்தர், “நாளும் கோளும் அடியவர்க்கு இல்லை” என்று கூறிவிட்டு, மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சமணர்களை வென்று மன்னரை சைவம் தழுவச் செய்தார். ஒருமுறை திருப்பழையாறையிலுள்ள வடதளி என்னும் சிவாலயத்திற்குச் சென்றார் நாவுக்கரசர். அங்கு சமணர்கள் சிவலிங்கத்தை மூடி மறைத்து, அதை சமண விமானமாக மாற்றியிருந்தனர். அதைக் கண்ட நாவரசர், ‘இறைவனைத் தொழாமல் திரும்ப மாட்டேன்’ என்று சபதம் செய்தார். இறைவன் மன்னனின் கனவில் தோன்றி, சமணர்கள் சிவலிங்கத்தை மூடி மறைத்ததைக் கூறினார்.

            உண்மையறிந்த மன்னன் நாவுக்கரசரிடம் வந்து வணங்கினான். திருக்கோயிலைத் திறந்தான். அங்கிருந்த ஆயிரம் கொடிய சமணர்களை யானையால் மிதிக்கச் செய்து கொன்றான். திருப்பழையாறையிலிருந்து
நாவுக்கரசர் பல சிவத்தலங்கள் சென்று வணங்கினார். பதிகங்கள் பாடினார். பின் திருப்பைஞ்ஞீலியை நோக்கிப் புறப்பட்டார். வழியில் பசியாலும் தாகத்தாலும் தவித்தார். அப்போது வழியில் குளம் ஒன்று தென்பட்டது. தாகம் தணித்த சுவாமிகளுக்குப் பசி அடங்கவில்லை.

            அப்போது ஒரு திருநீறணிந்த அந்தணர், நாவரசருக்குத் தன் கையிலிருந்த சோற்றுப் பொதி அளிக்க,நாவுக்கரசர் பசியாறினார். அந்த அந்தணர், தானும் பைஞ்ஞீலிக்குப் போவதாகக் கூறினார். இருவரும் நடந்தார்கள். அவ்வூர் திருக்கோயிலின் அருகில் வந்தவுடன் அவ்வந்தணர் மறைந்தார். இறைவனே அந்தணர் உருவில் வந்துள்ளார் என்று உணர்ந்த அப்பர்சுவாமிகள் மெய்சிலிர்த்தார்.

            பின் தொண்டை நாட்டிலுள்ள பல சிவாலயங்களைத் தரிசித்தவர், திருக்காளத்தி சென்று காளத்திநாதனையும், கண்ணப்பரையும் தொழுதார். தென்கயிலையான திருக்காளத்தியைத் தரிசித்த சுவாமிகள், வடகயிலை நோக்கிப் புறப்பட்டார். வழியில் ஸ்ரீசைலம், மாளவம் போன்ற தலங்களைத் தரிசித்து காசி சென்றடைந்து அங்கும் வணங்கினார்.

            நாவுக்கரசருக்கு வயது முதிர்ந்திருந்ததாலும், நெடும் பயணம் மேற்கொண்டதாலும் அதற்கு மேல் நடக்க இயலாதவராய் விழுந்தார். அப்போது இறைவன் ஒரு பொய்கையை அங்கே உருவாக்கினார். ஒரு முனிவரின் தோற்றம் கொண்டு அப்பரின் முன் வந்து நின்றார்.

அவர் நாவரசரிடம், “இக்கொடிய காட்டிற்கு எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சுவாமிகளும், “திருக் கயிலையைத் தரிசிக்கவே வந்தேன்” என்று பதில் கூறினார்.

            உடனே அம்முனிவர், “கயிலையைத் தரிசிப்பது தேவர்க் கும் கடினமானது. அதனால் நீர் திரும்பிச் செல்லலாம்” என்று கூறினார்.

ஆனால் சுவாமிகளோ, “கயிலையைக் காணாமல் திரும்ப மாட்டேன்!” என்று உறுதியாய்ப் பதிலளித்தார். உடனே முனிவராக வந்த சிவபெருமான், “அடியவரே! இப்பொய்கையில் மூழ்கி எழுந்திருங்கள். நாம் கயிலைக் கோலத்தை திருவையாற்றில் காட்டுவோம்” என்று கூறி மறைந்தார்.

            முனிவராக வந்தவர் இறைவனே என்று உணர்ந்த அப்பர் சுவாமிகள், மெய்ச்சிலிர்த்து கைகூப்பினார். பொய்கையில் மூழ்கினார். திருவையாற்றில் எழுந்தார். அங்குள்ள திருக்கோயிலை திருக்கயிலையாகக் கண்டார். இறைவனின் திருவருளை நினைத்து பல திருத்தாண்ட கங்களைப் பாடினார். அவ்விடத்தில் பலநாட்கள் தங்கியிருந்து சிவப்பணி செய்தார்.

பின் திருப்பூந்துருத்தி வந்த சுவாமிகள், அங்கு வந்த சம்பந்தப் பெருமானைப் பற்றிக் கேட்டறிந்தார். அடியவர் கூட்டத்தைச் சேர்ந்து, அடியவரில் ஒருவராகி சம்பந்தரது பல்லக்கைத் தூக்கிச் சுமந்தார். “அப்பர் எங்கே?” என்று தேடிய சம்பந்தர், சுமை தூக்கியாக இருந்த அப்பரைக் கண்டு வணங்கினார். பின், தான் மதுரையில் சமணர்களை வென்றதையும், மன்னரை சைவத்திற்கு மீட்டதையும் கூறினார்.

            பாண்டி நாட்டின் பெருமையை சம்பந்தர் வாயிலாகக் கேட்டறிந்த அப்பர், பாண்டி நாட்டிற்குச் சென்றார். அரசியாரும், கூன் நிமிர்ந்த மன்னரும், அமைச்சர் குலச்சிறையாரும் சுவாமிகளிடம் வந்து அவரைப் பணிந்தனர். பிறகு தென்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்த அப்பர் சுவாமிகள், திருப்புகலூர் வந்து சேர்ந்தார்.

            திருப்புகலூரில் உறைந்தருளும் பெருமானைத் தொழுது, பல தாண்டகங்களையும், விருத்தங்களையும் பாடி அருளினார். பிறகு இறைவனை நினைத்தே சித்தநிலை கொண்டார். அவர் சித்தத்தைக் கலைக்க இறைவர் செய்த சோதனைகளிலும் சுவாமிகள் வென்றார். காணும் பொருளெல்லாம் சிவமென்று இருந்த அப்பர் சுவாமிகள், ஒரு சித்திரை மாதம் சதய நட்சத்திர நாளில் சிவனடி சேர்ந்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

18.திருக்குறிப்புத் தொண்டர்

திருக்குறிப்புத் தொண்டர் நாயனார்

திருக்குறிப்புத் தொண்டர்

திருக்குறிப்புத் தொண்டர்


            காஞ்சிபுரத்தில் வண்ணார் குலத்தில் பிறந்தவர் இவர். சிவனடியார்கள் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அடியவர்கள் ஏதும் கூறாமலேயே, அவர்கள் உடுத்திய ஆடையைப் பெற்று, அதைத் துவைத்துத் தந்தார். இவ்வாறு அடியவர்களின் திருக்குறிப்பை அறிந்து, திருத்தொண்டு புரிந்த இவரை மக்கள் திருக்குறிப்புத் தொண்டர் என்று அழைக்கலாயினர்.

            இவரது பெருமையை உலகிற்கு உணர்த்த திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். தானே ஒரு அடியவர் வேடத்தில், அழுக்கேறிய காவி உடுத்தி, நாயனாரின் முன் வந்தார். அது குளிர்காலம். நாயனாரும் வழக்கம்போல் அடியவரிடம் வந்தார். ஆடையைத் தரும்படியும், தான் துவைத்துத் தருவதாகவும் வேண்டினார்.

            அடியவரோ, தன்னிடம் இந்த ஒரு ஆடையே இருப்பதாகவும், மாலைக்குள் துவைத்துத் தருவதாக இருந்தால் மட்டுமே ஆடையைத் தருவேன் என்றும் கூறினார். இரவில் குளிரும் என்பதால் அதற்குள் ஆடையைத் தரவேண்டும் என்றும் கூறினார்.

            நாயனாரும் சம்மதித்தார். உடனே அடியவர் கோவணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, தன் ஆடையை அவிழ்த்து நாயனாரிடம் தந்துவிட்டுச் சென்றுவிட்டார். நாயனாரும் மிக்க மகிழ்ச்சியோடு அடியவரின் துணியைத் துவைக்கச் சென்றார்.

நாயனாரைச் சோதிக்க விரும்பிய சிவபிரான் கருமேகங்களை உண்டாக்கினார். கடும் அவ்விடத்திலே மழையைப் பெய்வித்தார். ஆடையைத் துவைத்த நாயனார் அதை உலர வைக்க இயலாது தவித்தார். மாலைக்குள் அடியவருக்கு ஆடையைத் தரவேண்டுமே என்று பதைத்தார். ஆனால் மழை நின்றபாடில்லை. அடியவர் சொன்ன மாலை நேரமும் வந்தது.

திருக்குறிப்புத் தொண்டர், ‘அடியவர் வேண்டியபடி என்னால் துணியைத் துவைத்துத் தர இயலவில்லை. பாவம், அடியவர் என்னால், குளிர் தாங்காது துன்பம் அடைவாரே!’ என்ற எண்ணம் கொண்டு துடித்தார். துணி துவைக்கும் கல்லில் தன் தலையை மோதி உயிர்விடத் துணிந்தார். சிவபெருமான் தன் கையால், நாயனாரின் தலையைத் தடுத்துப் பிடித்தார்.

மறுகணமே சிவபெருமான், உமையன்னையுடன் இடப வாகனத்தில் தோன்றினார். திருக்குறிப்புத் தொண்டரிடம், “அடியவரே!  உமது பெருமையை உலகிற்கு அறிவிக்க நாம் செய்த சோதனையே இது!” என்று வாக்கருளினார். திருக்குறிப்புத் தொண்டரை சிவபதம் சேர்த்தார்.


கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

17.திருநாளைப்போவார் புராணம்

நெஞ்சு பொறுக்குதிலையே | சிறுகதை |முனைவர் க.லெனின்

நெஞ்சு-பொறுக்குதில்லையே

“நெஞ்சு பொறுக்குதிலையே!”

         தெருவில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அச்சிறுவர்கள் போடும் சத்தம் அத்தெருமுழுக்க கேட்டது. தெருவின் வடமேற்குப் பகுதியில் வேப்பம்மரம் ஒன்று இருந்தது. அந்த வேப்பமரத்தைச் சுற்றிலும் பத்துப்பேர் கொண்ட கும்பல் ஏதோ ஒரு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசுவது யாருக்கும் புரியவும் இல்லை. அவர்களை அங்கிருக்கும் மற்ற மக்களும் கண்டுகொள்வதாகவும் இல்லை. அந்தக் கும்பலில் ஒரு பையனும் பொண்ணும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். பையனுக்கு இருபது வயசு இருக்கலாம். பொண்ணுக்குப் பதினாலு வயது இருக்கலாம்.

     “டே… வாங்கடா… இங்க கல்யாணம் ஒன்னு நடக்குது” என்று அங்கிருந்த சிறுவன் ஒருவன் கத்தினான். அடுத்தவினாடி அத்தனை சிறுவர்களும் வேப்பமரத்தடியில் இருந்தார்கள். மாப்பிள்ளை வெறும் மஞ்சள் கயிற்றை எடுத்து அப்பெண்ணின் கழுத்தில் கட்டினான். கூடியிருந்தவர்கள் வெறுங்கையைத் தட்டினார்கள். சிலர் சாப்பாட்டுத் தகரத்தட்டை குச்சியால் தட்டி சத்தத்தை எழுப்பினார்கள். சிறுவர்கள் அனைவரும் ஓ.. வென்று கத்தினார்கள். அவர்களின் கல்யாணம் அவ்வளவே.  சிறுவர்களும் அவரவர் வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.

காலம் கடந்து இன்றைக்கு,

       சித்திரை மாசமன்னாலே போதும் இவர்கள் எங்கிருந்துதான் வருவார்களோ தெரியாது. கூட்டங்கூட்டமாய் வந்து விடுவார்கள். தண்ணீர் எங்கு இருக்கிறதோ அங்கேயே தங்கி விடுவார்கள். இவர்களுக்கென்று ஊர் கிடையாது. நிரந்தர இடம் கிடையாது. தனக்கென சொந்தபந்தமும் கிடையாது. பொதுவா மக்கள் இவங்களை நாடோடிகள்ன்னு கூப்பிடுவாங்க. ஒருசிலபேர் பிச்சை எடுத்துச் சாப்பிடுறதால பிச்சைக்காரங்கன்னும் சொல்லுவாங்க.

       உடம்புல முடி அதிகமா இருக்கும். குளிக்க மாட்டாங்க. ஆம்பிளைங்க சட்டை போட மாட்டாங்க. பொம்பளைங்க மேல ஒரு உடுப்பு. கீழ ஒரு உடுப்பு அவ்வளவுதான். வாய் கொடுத்தம்மன்னா மீள முடியாது. கிட்டக்க போனா குப்புன்னு வாடை அடிக்கும்.

      அந்த ஊருக்குப் பிச்சைக்கார கூட்டங்களோடு பாஞ்சாலையும் தன் மகனோடு வந்திருந்தாள். பாஞ்சாலைக்கு என்ன தெரியும். கூட இருக்கிறவங்க எங்க போனாலும் அவளும் பின்னாலே போயிடுவா.. வேற என்ன பன்றது. ஆலமரத்தடியில் அவரவர்களும் ஒவ்வொரு இடமாய் பிடித்தார்கள். பாஞ்சாலையும் தனக்கென ஒர் இடத்தைப் பிடித்துக்கொண்டாள். தன்னுடைய மூட்டைக்குள் வைத்திருந்த பெரிய  துணிக்கற்றை எடுத்தாள். நான்கு மூலைகளிலும் கால்கள் ஊன்றி மூங்கிலை வளைத்து அதன்மேல் துணியைப்போட்டு மூடினாள். துணிவீடு ஒன்றை உருவாக்கிவிட்டிருந்தாள் பாஞ்சாலை. அதற்குள்  மற்றவர்களும் ஆளுக்கொரு துணி வீட்டினைக் கட்டிக்கொண்டார்கள். எப்பொழுதும் அதற்கான பொருட்களை அவர்கள் தங்களுடனே எடுத்துச் செல்வார்கள். வந்த நேரம் சாயங்காலம் ஆனதால் தற்போது இருட்டியிருந்தது. மகனை அழைத்துக்கொண்டு துணிக்கூண்டுக்குள் போய்ப்படுத்துக்கொண்டாள்.  நிலவு நடு வானத்தைத் தொட்டிருந்தது. அங்கு காற்று குளிர்ந்து மென்மையாய் வீசியது. எந்தச்சத்தமும் இல்லாமல் அந்த இரவு அமைதியாயிருந்தது.

      “அம்மா பசிக்கு… அம்மா பசிக்கு…” என்று மகன் அமுதன் அழுதது பாஞ்சாலைக்குக் கேட்டது. தூக்கத்தில் இருந்தவாறே தன்னுடைய ஜாக்கெட்டை அவிழ்த்து ஒருபக்க மார்பினை அமுதனின் வாயில் வைத்தாள். அமுதனும் மார்பு காம்பை சுவைத்தபடியே தூங்கிப்போனான்.

        “எத்தனை நாளுக்குத்தான் இப்படி அமுதனை ஏமாற்ற முடியும். குழந்தையில பசிக்கிதுன்னு அழுதபோது பால் கொடுத்தேன். பாலு வத்திப்போச்சு. சோறு ஒழுங்கா சாப்பிட்டாதானே பாலும் சுரக்கும். சோத்துக்கு எங்க போறது. வேலை செஞ்சு பொழைக்கலாம்முன்னு வேலை கேட்டு போனா.. என்னைய மேலும்கீழும் பார்த்துச், “சோப்பு வாங்கி தரன். குளிச்சிட்டு பிரஷா வான்னு” கூப்பிடுறான். அப்படி வாழ்றதுக்கு நான் பிச்சையே எடுக்கலாம்ன்னு மனசு சொல்லிச்சு. அப்புறம் எப்படி? குழந்தை பசின்னு கேட்டா உடனே மார்போடு அணைச்சிக்குவேன். என் இரத்தத்தைதான் உணவா கொடுக்கிறன். உடம்புல இருக்கிற உப்ப சப்பிகிட்டே அவனும் தூங்கிடுவான். ஏன்னா என் பொறப்பு அப்படி?” அமுதனுக்குப் பால் கொடுத்துக்கொண்டே விட்டத்தை அண்ணாந்து பார்த்தாள். மீண்டும் மனதால் யோசிக்க ஆரம்பித்தாள்.

          நான் எப்படி பொறந்தன். எப்படி வளந்தன்னே எனக்கு ஞாபகம் இல்லை. ஏதோ எப்படியோ வளந்தேன். ஒருநாள் வேப்பமரத்தடியில எனக்கும் அவருக்கும் கல்யாணம் ஆச்சி. அது கல்யாணமின்னு கூட எனக்கு தெரியாது. ஆனா ஏதோ எனக்குன்னு ஒருதுணை இருக்கிறதா அவரை நினைச்சிக்கிட்டேன். பிச்சை எடுத்து வாழற பொழப்ப விட்டுட்டு அவருகூட வேலைக்கு போயி சம்பாரிச்சு நல்லா வாழனுமுன்னு நினைச்சேன். இத அவருகிட்ட எத்தனையோ தரவா சொல்லியும் இருக்கேன். அவரும் நேரம் வரட்டும் பாத்துக்கலாம் என்பார். நான் அப்ப ஆறு மாசம். ஒருநாள் காலையில அவரோட துணியை மட்டும் எடுத்து வைச்சிட்டுருந்தார்.

“என்னங்க… ஏதாவது வேலையா” என்றேன்

“ஆமாம் பாஞ்சாலை! வேலதான். போயிட்டு இருட்டருதுக்குள்ள வந்துடுறேன்”

       பாஞ்சாலையின் நெற்றியிலும் வயிற்றிலும் முத்தம் கொடுத்துக் கிளம்பியவன்தான் இன்று அமுதனுக்கு ஆறுவயசு ஆகுது. இன்னும் வரவே இல்லை. போனவன் போனவன்தான். நான் ஒரு கிறுக்கிமவ.  இருட்டருதுக்குள்ள வந்திடுவேன்னு சொன்னா… அப்புறம் எதுக்கு வேட்டின்னு கேட்க தோணல. பாஞ்சாலையின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது. தூக்கம் வராமல் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

       அமுதனுக்கு விவரம் தெரிஞ்சா நான் என்ன பன்றது. என் மகன இந்த நாற வாழ்க்கையை வாழ வைக்ககூடாது என்று நினைத்தாள். பாஞ்சாலை எப்போது தூங்கினாள் என்றே தெரியவில்லை.

       அந்த ஊறு பாஞ்சாலைக்குப் புதுசு. இதற்குமுன் அங்கு வந்ததாக நினைவில்லை அவளுக்கு. மற்ற பெண்களோடு குளத்திற்குத் தண்ணீர் எடுக்க அவளும் சென்றிருந்தாள். வெயில் காலமாக இருந்தாலும் பச்சை பசேல் வயலும். தண்ணீரும் இருந்தது. அவுங்க ஆளுங்களுக்கு எப்படி தெரியுமோ தெரியாது. எப்படியாவது தண்ணீர் இருக்கக்கூடிய இடத்தைக் கண்டுபிடித்து வந்து விடுவார்கள். ஊரும் வளமாகவே காணப்பட்டது.

       ஆலமரநிழலில் ஒருபக்கம். அங்கே ஒருத்தர் சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அவருபேரு பிச்சை. அந்தக்கூட்டத்தில் வயசானவர். விவரமானவரும் கூட. காலையிலேயே அவருக்கு முன்னால் ஐந்தாறு சிறுவர்கள். அச்சிறுவர்களில் அமுதனும் ஒருவன். பிச்சை எப்படி எடுக்க வேண்டும் என்று வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார்.

              “பசங்களா… நான் சொலறத கவனமா கேளுங்க?”

              “சரிங்க தாத்தா.. சொல்லுங்க” என்றார்கள் அனைத்துச் சிறுவர்களும்.

       பிச்சை எடுக்க போகும்போது நேரம் அறிஞ்சு போகனும். அப்பதான் சோறு போடுவாங்க. காலையிலகாட்டியும் வீட்டு முன்னால போயி நின்னாக்க… வீட்டுக்காரங்க திட்டுவாங்க.. நம்மள பாத்தவுடனையே வெரட்டுவாங்க. அதனால காலையில வீட்டுல இருக்கிறவங்க எல்லாம் சாப்பிட்டு முடிச்சதும், அவுங்க மீதியை கீழ கொட்டிடலாமுன்னு நினைப்பாங்கள்ள அந்தச்சமயத்துல போயி பிச்சை எடுக்கனும். கண்டிப்பா அப்ப நமக்கு சோறு போடுவாங்க.. மதியானம் போகக்கூடாது. ஏன்னா? அந்த நேரத்துலதான் அவுங்க தூங்கிட்டு இருப்பாங்க. நாம தொந்தரவு பண்ணக்கூடாது. அப்படி பண்ணா அடுத்தவாட்டி போகும்போது திட்டி அனுப்பிடுவாங்க.

       இரவு நேரத்திலையும் ஒன்பது மணிக்கு மேல பிச்சை எடுக்க போகனும். அப்பத்தான் அவுங்கயெல்லாம் சாப்பிட்டு பாத்திரத்த கழுவும்போது நாம போனா பிச்சை போடுவாங்க.

              “அது எப்படி தாத்தா சரியா போறது?” என்றான் ஒரு சிறுவன்

       அது முடியாதுதான். ஆனா ஒரு வீட்டுல இல்லாட்டியும் இன்னொரு வீட்டுல கண்டிப்பா நான் சொன்ன மாதிரிதான் நடக்கும். ஆனா ஒன்னா சேர்ந்து போககூடாது. தனித்தனியே போனாதான் பாவமா பாத்துச் சோறு போடுவாங்க. சரி… இங்க நாலு தெருதான் இருக்கு. பிரிஞ்சு போயி சோறு வாங்கியாங்க என்றார் பிச்சை.

              “தாத்தா நாங்க கேட்டா சோறு போடுவாங்களா” என்றான் மற்றொரு சிறுவன். “அப்படின்னா வயித்துக் காஞ்சி செத்துப்போங்கடா” கோபமானார் பிச்சை.

       ஆளுக்கொரு தட்டை எடுத்துக்கொண்டு சிறுவர்கள் பிச்சை எடுக்கப்போனார்கள். அமுதனும் அவர்கள் கூடவே ஒட்டிக்கொண்டான். நான்கு தெருக்களிலும் பிரிந்து கொண்டார்கள். வாகை மரத்து வாசல் வீட்டின் முன் அமுதனும் கூடவே இன்னொரு பையனும் நின்றார்கள். இச்சிறுவர்களை அந்த வீட்டு சிறுவன் மாணிக்கம் வச்சக்கண்ணு வாங்காமலே பார்த்துக் கொண்டிருந்தான். அந்நேரம் வீட்டிலிருந்து மாணிக்கத்தின் அம்மா வெளியே வந்தார்கள்.

              மேல் சட்டையில்லாத கிழிந்த டவுசரும் கருத்த உருவமாய் நின்றிருந்தார்கள். பக்கத்தில் இருந்தவன் அமைதியாய் பாவமாய் நின்றிருக்க அமுதன் மட்டும் “பிச்சை தாத்தா சோறு வாங்கியாற சொன்னாங்க. எனக்கு பசிக்கு” என்றான்.

       மாணிக்கத்தின் அம்மாவிற்கு ஒன்றும் புரியவில்லை. “யாருப்பா பிச்சை தாத்தா” ன்னு கேட்டாங்க.

       “அவரு பிச்சை தாத்தா.. பிச்சை தாத்தா..” என்றான் அமுதன். மாணிக்கத்தின் அம்மா என்ன நினைத்தாலோ என்னவோ மனதிலே சிரித்துக்கொண்டு உள்ளே போய் சாப்பாட்டுடன் வெளியே வந்தாள். இரண்டு தட்டுகளிலும் கொஞ்சம் சாப்பாடும் குழம்பும் ஊற்றினாள். வாகை மரத்து அடியிலே நின்று அந்த உணவை அள்ளி அள்ளி இருவரும் சாப்பிட்டார்கள். அமுதனின் உதடு, கன்னம், சட்டையில்லாத வயிறு எல்லாம் சோறாயிருந்தது. அதை அருவருப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

       காலை வெயில் ஏறிக்கொண்டிருந்தது. தண்ணீர் இறக்கி வைத்துவிட்டு கூண்டிற்குள் வந்தாள் பாஞ்சாலை. தூங்கிகொண்டிருந்த மகனை காணவில்லை. வெளியே வந்து,

“மங்கா அக்கா… என் மகன பாத்தியா…”

“அவன் பிச்சையோட நின்னுட்டு இருந்தாண்டி” என்றாள் அவள்.

       பாஞ்சாலைக்குக் கோபம் தலைக்கேறியது. இந்தக் கிழட்டுமூதி சின்ன பசங்கள அனுப்பி பிச்சயெடுத்துச் சாப்பிடறது. அதுக்கு ஞா மகன்ந்தா கிடைச்சானா.. கறுவிக்கொண்டே ஆலமரத்து அடுத்த மூலைக்குச் சென்றாள். பிச்சையின் முன்னாடி முன்னைப் போலவே அனைத்துச் சிறுவர்களும் நின்றிருந்தார்கள்.

              “பிச்சை தாத்தா… அமுதன் இன்னிக்கு என்னாமா பிச்சை எடுக்குறா தெரியுமா? நானே அசந்திட்டன். அனைவரும் வாய்விட்டு சிரித்துக்கொண்டனர்.

              “அமுதா… இங்க வாடா… ” பாஞ்சாலையின் குரல் வேகமாய் ஒலித்தது. அமுதனும் அம்மாவைப் பார்த்தவுடன் வேகமாய் ஓடிச்சென்று கால்களைக் கட்டிக்கொண்டான். தலையைத் தாழ்த்தி மகனைப் பார்த்தாள். வயிறு கொஞ்சமாய் மேடாயிருந்தது. பாஞ்சாலைக்கு அப்பாடா என்றிருந்தது.

              “யோ பிச்சை.. ஞா புள்ளைய கெடுக்கிறதே நீதான்யா.. நாந்தான் ஞா புள்ள கூட பேசாத பேசாதன்னு சொல்றன். அவன பிச்சையெடுக்க அனுப்பாத.. பழக்காதன்னு சொல்றன்ல்ல! அப்புறம் ஏ? சும்மா பேசிப்பேசி பிச்சையெடுக்க வைக்கிற. ஏற்கனவே ஒருத்தன ஞா தலையில கட்டி வைச்ச. அவனும் என்னை நட்டாத்துல விட்டுட்டு போயிட்டான்” பாஞ்சாலையின் கோபம் வெடித்தது. பிச்சை எதுவும் பேசவில்லை. அமைதியாகவே இருந்தார். அமுதன் பிச்சை எடுப்பது பாஞ்சாலைக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. நிலைகெட்ட இவர்களைப் நினைந்து நெஞ்சு பொறுக்கமுடியாமல் தவித்தாள். தான்தான் மானம் கெட்டுப்போய் பிச்சை எடுக்கிறோமே. தன்மகனும் எடுக்கனுமா என்பாள். இந்தக் கூட்டத்திலிருந்து எப்படியாவது மகனை பிரித்து வெளியேறிவிட வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்ளுவாள். தன்மகனை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு கூண்டிற்குள் சென்றாள்.

       மகனை மார்போடு அணைத்துக்கொண்டாள். மகனின் வயிறு ஓரளவிற்கு நிரம்பியிருந்தை நினைத்து சந்தோசப்பட்டாள். பாஞ்சாலையின் வயிறு இன்னும் காய்ந்துபோய்தான் இருந்தது.  கருத்த உடம்புதான் அமுதனுக்கு. அவனிடம் சட்டை இல்லை. கால்டவுசர் மட்டுந்தான் அணிந்திருந்தான். அதுவும் பின்பக்கத்தில் சின்னதா ஓட்டை வேறு. பாஞ்சலை டவுசரில் எவ்வளவு தைத்துப்பார்த்தும் ஓட்டை மட்டும் மூடியதாகத் தெரியவில்லை. இனிமேலும் தைக்கவும் முடியாது. அந்த அளவிற்கு துணி நைஞ்சு போயிருந்தது. இதைவிட்டால் இன்னொரு துணி இருக்கு. அதுவும் இப்படித்தான் இருக்கு. பாஞ்சாலை ரொம்பவும் வருத்தப்பட்டாள்.

       சிலநேரங்களில் அமுதன் நடந்து செல்லும்போது அவனுடைய பின்பக்கத்தில், “டே தபால்பெட்டி டா..” என்று பேப்பரைக் கிழித்துப் போடுவார்கள். தபால் வந்திருக்கிறதா என்று கையை உள்ளேவிட்டுப் பார்ப்பார்கள். அமுதன் அழுவான். அம்மாவிடம் வந்து திக்கிதிக்கி சொல்லுவான். பாஞ்சாலை ரொம்பவும் நொந்து கொள்ளுவாள். அமுதனுக்கு வாடாமல்லி கலர்ல பாக்கெட் வச்ச சட்டை போட்டுப் பாக்கனுமுன்னு பாஞ்சாலைக்கு ரொம்ப நாள் ஆசை.

       பாஞ்சாலை எப்போதும் பகலில் பிச்சை எடுக்க செல்ல மாட்டாள். இரவு நேரத்தில்தான் பிச்சை எடுக்கச் செல்வாள். அமுதன் குழந்தையாக இருக்கும்போது அவனையும் தூக்கிக் கொண்டுதான் செல்வாள். ஆனால் இப்போதெல்லாம் அமுதனை கூண்டிற்குள்ளே படுக்க வைத்துவிட்டுத்தான் பிச்சையெடுக்கவே வருகிறாள். பிச்சை எடுத்த உணவை இரவும் அடுத்தநாள் காலையும் வைத்துக்கொள்ளுவாள்.  வாகை மரத்து வீட்டில் பிச்சைக்காக ஏங்கி நிற்கிறாள் பாஞ்சாலை. வீட்டின் முன் சின்னசின்ன விளையாட்டு சாமான்கள் சிதறிக்கிடக்கின்றன. சிறிதுநேரத்தில் மாணிக்கத்தின் அம்மா உணவைப் போட்ட விட்டு திரும்புகிறாள்.

              “அம்மா… எனக்கு ஆறு வயசுல ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு தகுந்த மாதிரி பழைய கிழிஞ்ச சட்டை ஏதாவது இருந்தா கொடுங்கம்மா” என்றாள்.

              பாஞ்சாலையையே பார்த்துக்கொண்டிருந்த அப்பெண், வீட்டினுள்ளே சென்று மாணிக்கத்தின் பழைய சட்டையும் பேண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள். “இது என்னோட பையனோடது. இப்ப பத்தல. சும்மாதான் வீட்டுல இருக்கு. எங்கையாவது கீழ போடலாமுன்னு வைச்சிருந்தேன். நீ உன் புள்ளைக்குப் போட்டு விடு” என்றாள் மாணிக்கத்தின் அம்மா.

       பாஞ்சாலையின் மனதில் நினைத்த மாதிரியே வாடாமல்லி கலர்ல சட்டை இருந்தது. மனம் சந்தோசப்பட்டாள். மகனுக்குப் உடனே போட்டுப்பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டாள். அன்றைய இரவு நன்றாகச் சாப்பிட்டாள். நிம்மதியாக உறங்கினாள்.

       சித்திரை வெயில் ரொம்பவும் வெக்கையாக இருந்தது. அக்னி நட்சத்திரம் வேறு. ஆலமரத்தடியில் இருக்கின்றபோது வெயில்கூட அந்தளவிற்கு தெரிவதில்லை. அந்த ஊர்க்காரர்கள் இதுபோன்ற நாட்களில் இங்குதான் உட்காந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போது இங்கு யாரும் வரமுடியாது. இது அவர்களுக்குள் பெரும் நெருப்பாய் எரிந்து கொண்டிருந்தது. பிச்சைக்காரர்கள் கூட்டம் தொந்தரவு தாங்க முடியல. அந்தப்பக்கமே போக முடியல. ஒரே நாத்தம்.  ஆலமரத்துத் திடலயே நாசப்படுத்தி வச்சிருக்காங்க.  அப்பப்ப அந்த ஊரில் இந்தப் பேச்சுத்தான் அதிகமாயிருந்தது.

       ஒருநாள் சாயங்காலம். பாஞ்சாலை ஒரு ஓரமாய் துணி அலசிக்கொண்டிருந்தாள். திடிரென்று அலறல் சத்தம். ஓடிவந்து எட்டிப்பார்த்தாள். பிச்சைக்காரக்கூட்டத்தில் இரண்டொருவர் சாரயம் குடித்துவிட்டு பெரும் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இந்த வீட்டுப்பெண்களுடன் அந்த வீட்டுப் பெண்களும் சேர்ந்து அடித்துக்கொண்டார்கள். கற்கள் மேலே பறந்தன. யார்யார் மேலேயும் போய் விழுந்தன. பாஞ்சாலையின் கூண்டில் கூட ஒருகல் வந்து விழுந்தது. “ஐயோ.. பிள்ளையாச்சே” என்று பதறி ஓடினாள். பிச்சை எவ்வளவு தடுத்துப்பார்த்தும் அவர்கள் கேட்பதாகயில்லை. கைக்கால்கள் ஆட்டம் ஆடின. கெட்ட வார்த்தைகள் படையெடுத்து வந்தன. கிராம மக்கள் எல்லாம் கடும் கோபத்தில் இருந்தார்கள்.

       ஊர்ப்பெரியவர் வந்தார். சண்டையிட்ட இருவருக்கும் கன்னத்தில் பளார் என்று ஆளுக்கொரு அறை விட்டார். கன்னத்தில் கை வைத்தபடியே அவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். கொஞ்சநேரத்தில் அந்த இடமே காலியானது. அடித்து விரட்டப்பட்டார்கள். ஆளுக்கொரு திசையாய் ஓட்டம் பிடித்தார்கள். பாஞ்சாலையும் மகனைத் தூக்கிக்கொண்டு கண்ணுமுண்ணு தெரியாமல் ஓடினாள்.

       இரண்டு நாளைக்கு அப்புறம் அந்தக்கிராமத்தில் பிச்சைக்காரர்கள் யாருமே இல்லை. ஏரி கருவேல காட்டுக்கு நடுவே பாஞ்சாலையும் மகனும் மட்டுமே தனித்து இருந்தார்கள். இனி பிச்சக்காரக் கும்பலுடன் போகக்கூடாது. மகனுக்காக இந்த ஊரிலே வாழனும்முன்னு முடிவு பண்ணா. முதல்ல தன்னோட தோற்றத்த மாத்தனுமுன்னு நினைச்சா. ஏரி மதகுல நல்லா மூழ்கி குளிச்சி. தன்னோட அடையாளத்த அழிச்சா. சாதாரண பொம்பளைங்க மாதிரி தன்னை மாத்திகிட்டா.

       ஏரி ஓரமாவே துணி கூண்ட அமைச்சிகிட்டா பாஞ்சாலை. மகனுக்கு வாடாமல்லி சட்டையைப் போட்டு அழகு பார்த்தா. பிச்சை எடுக்க கூடாது. வேலைக்கு போகனுமுன்னு முடிவு பண்ணா. அங்க இருக்கிற பண்ணைகிட்ட வேல கேட்டுப் போனா பாஞ்சாலை.

       அமுதன் ஆலமரத்துக்கு அடியில வந்து நின்னான். அந்த இடமே மாறியிருந்தது. ஊர்மக்கள் சிலர் அங்க உங்காந்திட்டு பேசிட்டு இருந்தாங்க. ஒரு மூலையில சின்னப்பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. அங்க போயி நின்னான். அந்தப் பசங்க எல்லாம் அமுதனைப் பார்த்தாங்க.

“உன் பேரு என்னடா” என்றான் ஒரு சிறுவன்.   “அமுதன்” என்றான்.

       என்னா அமுதாவா… ஆம்பிளை பேரு வைக்கச்சொன்னா பொம்பள பேரு வச்சிருக்காங்க… கிண்டலாய் சிரித்தார்கள் அனைவரும். அக்கூட்டத்தில் மாணிக்கமும் ஒருவன்.

“டே.. மாணிக்கத்தோட சட்டையைப் போட்டிருக்காண்டா…” ஒரு சிறுவன்

“டே… மாணிக்கம் இந்தப் பிச்சைக்கார பையன் உனக்கு உறவாடா?” இன்னொருவன்

        “மாணிக்கமும் இந்த அமுதாவும் அண்ணன் தங்கச்சிடா” கேலியும் கிண்டல்களும் அதிகமாகவே இருந்தன. அமுதனுக்கு பாதி புரிந்து புரியாமலும் இருந்தது. மாணிக்கம் கொஞ்சம் பெரிய பையன் ஆதலால் கோபம் தலைக்கேறியது. கோபத்தின் எல்லைக்கே சென்றான். ஓடி வந்து எகிறி அமுதனின் நெஞ்சியிலே ஒர் ஒதை விட்டான். பதைபதைத்துக் கீழே விழுந்தான் அமுதன்.

“பிச்சைக்கார பயலே… கழுட்டுடா என் சட்டையை.. யார்ற உனக்கு கொடுத்தது. திருடிகிட்டு வந்தியாடா… பிச்சைக்கார பயலே..”

கீழே விழுந்த அமுதனின்மேல் மாணிக்கம் உட்காந்திருந்தான். அமுதனின் சட்டையையும் பேண்டையையும் கழட்டி நிர்வாணப்படுத்தியிருந்தான்.

“இவன் ஆம்புள பையன்தான்டா… மீண்டும் நக்கல்.

       அங்கே உட்காந்திருந்தவர்கள் சிறுவர்களின் சண்டையைப் பார்த்து ஓடிவருகிறார்கள். அதற்குள் அமுதன் வீட்டிற்கு நிர்வாணமாகவே ஓடுகிறான். மகன் அழுது கொண்டே நிர்வாணமாக ஓடி வருவதைக் கண்ட பாஞ்சாலைக்கு ஒரு நிமிடம் வயிற்றில் புளியைக் கரைத்தது. ஓடி வந்தவன் அம்மாவை இறுகக்கட்டிக்கொண்டான். தேம்பி தேம்பி அழுதான். “அடிச்சு… அடிச்சு.. ஒதச்சி.. ஒதச்சி.. தள்ளி.. கீழ.. பிச்சைக்கார பயலே” தேம்பலில் வார்த்தைகள் வரவில்லை. என்ன நடத்திருக்கும் என்று பாஞ்சாலை ஊகித்துக் கொண்டாள். மகனை மார்போடு அணைத்துக்கொண்டாள். அவனின் அழுகையை நிறுத்த அவளுக்கு வேறு ஆயுதமும் இல்லை. இந்த உலகத்தில் போராடித்தான் வெற்றியைத் தொடமுடியும் என்று நினைத்துக்கொண்டாள்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

எழுத்தாளர்

பாரதிதாசனும் பாரதியாரும் – ஒரு பார்வை

பாரதியாரும் பாரதிதாசனும் -ஒரு பார்வை

முன்னுரை

சாதி ஒழித்திடல் ஒன்று – நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் – மற்றப்

பாதி துலங்குவ தில்லை

சாதி களைந்திட்ட ஏரி – நல்ல

தண்டமிழ் வாளினைத் தூக்கும்!

என்றுரைப் பார் என்னி டத்தில் – அந்த

இன்ப உரைகளென் காதில்

இன்றும் மறைந்திட வில்லை – நான்

இன்றும் இருப்ப தனாலே


            எனப் பாரதிதாசன் பாரதியாரின் பெரிய உள்ளத்தைப் புலப்படுத்தினார். கனித்தமிழ் மொழியைக் களை நீக்கி வடித்த கவிஞன் பாரதி; களை நீக்கிய கழனியில் கனிக்காடு கண்டவர் பாரதிதாசன். விடுதலைத் தீ கொழுந்து விட்டெரிந்த காலத்தில் பிறந்தவர்கள் இருவரும். ஆயினும் நாட்டு விடுதலையை மையப் பொருளாகக் கொண்டு சோதி மிக்க நவ கவிதை’ படைத்தவர் முன்னவர். ‘எளிய நடையில் புதிய நூல்கள்’ இயற்றியவர் பின்னவர். தமிழ்க் கவிதை உலகம் புதிய பாதையில் செல்ல வழிகோலியவர் பாரதி என்றால் தனக்குப் பின்னால் ஒரு பாட்டுப் பட்டாளம் தொடர அகன்ற வழித்தடம் அமைத்தவர் பாரதிதாசன் எனலாம்.

            பாரதியார் வழியைப் பின்பற்றியவர் பாவேந்தர். ஆயினும் பாரதியாரின் கருத்துக்களுக்கு அரண்பட்டும், முரண்பட்டும் பாடியுள்ள நிலையையும் காண்கிறோம். பாரதியாரைக் ‘கவிஞர்’ எனக் கொள்ளாத புலவர் கூட்டத்தில் அவர் ‘உலக மகாகவி ‘உயர் கவி’ என அவர் பாடல் வரிகளாலேயே நிறுவியவர் பாரதிதாசன். இவ்விருவரிடையே இருந்த தொடர்பில் பாரதிதாசனின் இலக்கிய ஆளுமையை இக்கட்டுரை விளக்குகிறது.


முதல் சந்திப்பு


            பாரதியார் பாரதிதாசன் முதல் சந்திப்பு இப்படித் தொடர்கிறது. 1908 செப்டம்பர் வாக்கில் பாரதியார் புதுவை செல்கிறார். அவரால் ‘வல்லூறு நாயக்கர்’ எனக் குறிப்பிடப்படும் வேணு நாயக்கர் திருமணப் பந்தலில் பாட்டுக் கச்சேரி பாடகரில் சனக சுப்புரத்தினமும் ஒருவர். கணீர்க் குரலில், ‘வீர சுதந்திரம் வேண்டி நின்றார். பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்னும் பாரதியார் பாடலைப் பாடினார் சுப்புரத்தினம் வேணு நாயக்கர், ‘இன்னும் பாடு சுப்பு’ என்றார். \தொன்று நிகழ்ந்த தனைத்தும்- எனத் தொடங்கும் பாடலையும் பாடினார். கூட்டத்தில் இருந்தவர்களில் கனக சுப்புரத்தினத்தால் ‘ரவி வர்மாப் படப் பரமசிவம்’ குறிப்பிடப்படுபவரும் ஒருவர். வேணு நாயக்கர் சுப்புரத்தினத்திடம், “அவங்க ஆர் தெரியுமில்ல’ என்று கேட்கிறார். தெரியாது என்பதற்குள் ரவிவர்மப் படப் பரமசிவம், ‘நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களோ? என வினவினார். `சுப்புரத்தினம், ‘கொஞ்சம்’ என்றார் ரவிவர்மாப் படம் `உணர்ந்து பாடுகிறீர்கள்’ என்றார். வேணு நாயக்கர், ‘அவங்க தானே’ ‘அந்தப் பாட்டெல்லாம் போட்டது. சுப்பிரமணிய பாரதி என்று சொல்றாங்கல்ல! என்று கனக சுப்புரத்தினத்துக்குப் பாரதியாரை அறிமுகப்படுத்துகிறார். பாரதியார் வேணுவிடம், ‘ஏன் இவரை நம் வீட்டுக்கு நீ அழைத்து வரலே? என வினவுகிறார்’ இந்தத் தொடர்பு ‘நாளும் வளர்’ நட்பாக மலர்ந்து பாரதியாரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது.


பாரதியார் தொடர்புக்கு முன்


            பாரதியாரைச் சந்திக்கும் முன்பே திருப்புளிசாமி ஐயாவிடமும். பங்காருப் பத்தரிடமும், புலவர் புஅ பெரியசாமிப் பிள்ளையிடமும் தமிழ் கற்று வண்ணப் பாடல்கள் பாடும் அளவிற்குத் தமிழ் இலக்கிய, இலக்கணப் புலமையுடன் திகழ்ந்தார், சுப்புரத்தினம் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றினார் அப்படிப் பாடியவை தாம். மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு, ஸ்ரீ சிவ சண்முகன் கடவுள் பஞ்சரத்தினம், ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது என்பவை அப்போதிருந்த சுப்புரத்தினத்தின் நிலையை அவரே கூறுகிறார்.


‘விபூதி நாமங்களைப் போட்டுக் கொண்டு பஜனை மடங்களில் பாடியும். ஆடியும் கேவலமாகக் காலம்போக்கிக் கொண்டிருந்த என்னை இன்றுள்ள நிலைக்குக் கொண்டு வந்தவர் பாரதியார் தான்? இதனால், பட்டை நாமப் பாகவதராக விளங்கிய சுப்புரத்தினத்தை எளிய நடையில் கவிபாடும் மக்கள் கவிஞராக மட்டுமல்லாமல் மதிப்புடைய மனிதராகவும் ஆக்கிய பெருமை பாரதியாரையே சாரும்.

            அக்காலத்தில் சுப்புரத்தினம் பாடிய பக்திப் பாடல்களும், மக்களுக்குக் கடவுளைச் சுட்டிக் காட்டும் விதத்திலும் கடவுள் அருளைப் பெற மக்களைத் தூண்டி ஆயத்தப்படுத்தும் விதத்திலும் அமைந்திருந்தன.


பாரதியார் தொடர்புக்குப்பின்

            பாரதியார் இல்லத்தில் ஒருநாள், வ.வே.சு. அய்யரும் மற்றும் பல நண்பர்களும் குழுமியிருந்தனர். அப்பொழுது ‘சுப்புரத்தினம் ஒரு கவி. அவனுக்குக் கவி பாட வரும்’ என்று பாரதிதாசனை அறிமுகப்படுத்தினார் பாரதியார். வ.வே.சு அய்யரும், சிலரும் ஏளனத்தோடு `சுப்பு ஒரு கவியா? என்று ஐயுற்றுச் சோதிக்கும் முறையில், ‘அப்படியானால் ஒரு பாட்டுப் பாடட்டுமே’ என்று கேட்டுக் கொண்டனர். பாரதியாரும் ‘சுப்பு! நீ பாடு எனக் கம்பீரமான குரலில் கட்டளையிட்டார். அப்போது பாடிய பாடலே,


எங்கெங்கு காணினும் சக்தியடா – தம்பி

ஏழு கடல் அவள் வண்ணமடா – அங்குத்

 தங்கும் வெளியினிற் கோடியண்டம் – அந்தத்

தாயின் கைப்பந்தென ஓடுதடா.


எனத் தொடங்குவது எல்லோரும் வியந்தனர். பாரதியார் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் கவிதா மண்டலத்தைச் சார்ந்த கனக சுப்புரத்தினம் எழுதியது’ என்னும் குறிப்போடு சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்’ அதில் வெளிவந்தது. பாரதியார் தனது ‘தராசு’ கதைக் கட்டுரையிலும் இப்பாடலுக்கு ஒரு பின்னணியைக் காட்டி வெளியிட்டுள்ளார்.


            பாரதியார் புதுவையில் தங்கி இருந்த காலம் பத்தாண்டுகள். ஆசிரியர் பணி முடித்து வீடு திரும்பும்போது பல நாள்களில் மாலையிலும் பணியில்லா நாள்களில் காலையிலும் பாரதியார் இல்லம் செல்வது சுப்புரத்தினம் வழக்கம். பாரதியார் கவிதைகளைச் சுவைப்பதிலும், அவரோடு கலந்துரையாடுவதிலும் மகிழ்வுடன் கலந்து கொள்வார். பாரதியார் மீது அளவு கடந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார். தனக்குப் புதிய வழிகாட்டிய குருவாகவே மதித்தார். பாரதியார் தொடர்பால் தான் பெற்ற பயனை,

முப்பது ஆண்டு முடியும் வரைக்கும் நான்

எழுதிய அனைத்தும் என்ன சொல்லும்

கடவுள் இதோ என்று மக்கட்குக் காட்டிச்

சுடச்சுட அவனருள் துய்ப்பீர் என்னும்

ஆயினும் கடவுள் உருவம் அனைத்தையும்

தடவிக் கொண்டுதான் இருந்ததென் நெஞ்சம்

பாடலிற் பழமுறை பழநடை என்பதோர்

காடு முழுவதும் கண்டபின் கடைசியாய்ச்

சுப்பிரமணிய பாரதி தோன்றியென்

பாட்டுக்குப் புதுமுறை புதுநடை காட்டினார்.

எனக் காட்டியுள்ளார்.

பாரதிதாசன் ஆனது

சுப்பிரமணியனாயிருந்தவர் பாரதி பட்டம் பெற்றுச் சுப்பிரமணியப் பாரதி என்றான பின்னர் அன்றைய அரசியல் சூழலில் சக்திதாசன், காளிதாசன், ஷெல்லிதாசன் என்னும் புனைபெயர்களில் கவிதை கட்டுரை எழுதி வந்தார். ஆயினும் பாரதியார் என்பது நிலைத்தது. சுப்புரத்தினமும் கே.எஸ். பாரதிதாசன் என்ற புனை பெயரில் தேசசேவகன், தேசபக்தன், ஆனந்த போதினி, புதுவைமுரசு, கலைமகள், சுதேசமித்திரன், சுதந்திரன், திருச்சியிலிருந்து வந்த `நகரதூதன்’ முதலிய ஏடுகளுக்குக் கவிதை கட்டுரைகளை எழுதி வந்தார். கிண்டற்காரன். கிறுக்கன் என்ற பெயர்களிலும் எழுதியுள்ளார். பாரதியார் தாசத் தன்மையோடு பெயர் வைத்துக்கொண்டது போலவே சுப்புரத்தினமும் பாரதிதாசன் எனப் புனைப்பெயர் கொண்டார். இதனை, ‘நான் பாரதிதாசன் என்ற புனைபெயர் வைத்துக் கொண்டுள்ளேன். அதற்குள்ள காரணம் அப்போது அவர் என்னுள்ளத்தில் முதலிடம் பெற்றிருந்ததுதான்.

சாதிக்கொள்கையை நன்றாக உண்மையாக எதிர்த்தவர் பாரதியார் தாம்.. சென்ற காலத்தில் அவருக்கு முன் இவ்வாறு சாதிக் கொள்கையை எதிர்த்தவரை நான் கண்டதில்லை. பாரதி, எதிர்த்துப் பணிபுரியத் தொடங்கிய பன்னாட்களுக்குப் பின்னரே பெரியார் இயக்கம் தோன்றியது எனத் தம் புனைபெயர்க்கான காரணத்தைப் புலப்படுத்தினார். ஆயினும் அடிமை மனப்பான்மையைக் குறிக்கும் ‘தாசன்’ என்னும் சொல்லையும் பார்ப்பனச் சாதியினராகிய ‘பாரதியின். பெயரையும் இணைத்துப் பாரதிதாசன்’ எனக் கொண்டிருந்தது பலரது எதிர்ப்பையும் கிளப்பிற்று. பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா? என மறுப்பெழுதும் அளவுக்கு வளர்ந்தது. ‘எவருக்கும் தாசனாக இருக்க விரும்பாத நீங்கள் பாரதிக்கு மட்டும் ஏன் ஆனீர்கள்’ எனப் பொதுவுடைமை இயக்கத்தவர் வினவியதற்கு ‘அடிமைப் புத்தியை விரும்பாத நானே ஒருவருக்குத் தாசன் என்று சொல்லிக் கொள்வேன் என்றால் அவர் எவ்வளவு உயர்ந்தவராக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்து அறிந்து கொள்க என விடையிறுத்தார். 

அய்யருக்கு அடிமையா? என்று வினவியவருக்கு ‘ஆமாண்டா நான்  பாரதிக்கு அடிமை தாண்டா’ நான் என்றென்றும் உளமாரப் போற்றி வழிபடுகின்ற தெய்வம் இந்த அய்யர். அன்பும் பண்பும் தமிழுணர்வும் ஒருங்கு சேர்ந்த பொன்னுருவம் அவர். பாரதியாருக்கு நான் தாசனாக இருப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சபேனை? இந்த வினாவிளை யார் விடுத்தாலும் எனக்குக் கோபம் வரும்’ என்று மறுப்புரைத்துப் பிறர் வாயடைத்துள்ளார். அதன் பின் இவ்வெதிர்ப்பு எழாது அடங்கியே போயிற்று.


பாரதியார் பற்றிப் பாரதிதாசன்

பாரதியார் கவிதைகளைச் சுவைத்துச் சுவைத்து மகிழ்ந்த பாவேந்தர், பாரதி பாட்டின் சொற்களில் படித்த பாவேந்தர் கவிதைகள் தோன்றிய சூழல், அவர் கொள்கை, பாடுபொருள், படைப்பின் மேன்மை, தனக்கு வழிகாட்டிய பான்மை, பாரதியார் பிற பெரியார்களோடு கொண்டிருந்த தொடர்பு, உலக மகாகவி, புதுயுகக் கவி ஆகிய பொருண்மை நிலைகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிக் குவித்த குயில் ஆவார்.

‘உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்’ பாரதியைப் பற்றித் ‘திங்களைக் கண்ணிலான் சிறப்புறுத்தல் போல் சிற்சில கூறத் தொடங்கிய பாவேந்தர்.

தமிழின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்

இமைதிற வாமல் இருந்த நிலையில்

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங்கிடக் கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்

பைந் தமிழ்த் தேர்ப் பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ சிந்துக்குத் தந்தை

குவிக்கும் கவிதைக் குயில் இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு

நீடுதுயில் நீக்கப் பாடி வந்தநிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ

கற்பனை ஊற்றாம் கதையின் தையல்

திறம்பாட வந்த மறவன் புதிய

அறம்பாட வந்த அறிஞன் நாட்டிற்

படரும் சாதிப் படைம ருந்து,

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன். என்னென்று சொல்வேன்

 என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ்பா ரதியால் தகுதி பெற்றதும்

என்று பாரதியின் மேன்மையை எடுத்துரைத்தார். பாரதியாரின் முழு அளுமையும் இப்பகுதியில் பாடப்பட்டுள்ளதைக் காணலாம்.  ‘பாரதியார் சொல்லிய சொல்லையே’ வைத்துப் பாடல்களில் பாடி அவரது கவிதைத் திறத்தைச் சுட்டிக் காட்டிப் ‘பாரதியார் உலககவி என நிலை நாட்டினார். சில சான்றுகள்.


பழைய நடை பழங்கவிதை பழந்த மிழ்நூல்

பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை

ஞான ரதம் போலொரு நூல் எழுதுதற்கு

நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்

போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?

மனிதர் யாரும் ஒருநிகர்

சமானமாக வாழ்வமே என்றறைந்தார் அன்றோ

பன்னீராயிரம் பாடிய கம்பனும்

இப்பொது மக்கள்பால் இன்தமிழ் உணர்வை

எழுப்பிய துண்டோ? இல்லவே இல்லை!

முனைமுகத்து நில்லேல் முதியவள் சொல்லிது

முனையிலே முகத்துநில் பாரதி முழக்கிது

பொன்னிகர் தமிழுக்குப் புதுமெரு கேற்றித்

தமிழரைத் தமிழில் பற்று மிகும்படி


            செய்த பாரதியாரின் பிறந்த நாள், நினைவு நாள் இரண்டு நாள் விழாவையும் எப்படிக் கொண்டாட வேண்டும் தெரியுமா? பாவேந்தர் கூறுவதைக் கேளுங்கள்.


இறந்தநாள் பிறந்தநாள் என்பன மட்டுமா?

பாரதி நாட்டுப் பிரிவினை எதிர்ப்புநாள்

பாரதி இந்தி எதிர்ப்புநாள் பாரதி

ஆங்கில எதிர்ப்புநாள் பாரதி அறிவுநாள்

பாரதி தமிழிலக் கியநாள் பாரதி

பச்சைத் திருநாள் பலவும் பாரதி

விழாவே ஆகும் விடாது நடத்தலாம்.


            தமிழை இகழ்ந்தவனைத் தாய்தடுத்தாலும் விடேன்’ என்றார் பாவேந்தர். ஆனால் பாரதியார் என்ன கூறினாராம்? பாவேந்தர் பாடுகிறார்.


தமிழை இகழ்ந்தவன் தமிழன் அல்லன்

மனிதனும் அல்லன் என்று வண்டமிழ்

இலக்கியம் இனிக்க இனிக்கக் குவித்தவர்

பாரதி அல்லால் பாரினில் வேறெவர்?

            பாரதியார் தமிழ்மொழிக்குச் செய்தவை என்ற வகையில் கருப்பொருள், தமிழ்ச்சிறப்பு, தமிழிசை என்பன. கவிதை நடை ரிக்ஷாக்காரநான்கினைக் கணக்கிட்டுள்ளார் பாவேந்தர். அவை : நடை. னுக்கும் புரிகின்ற வகையில் எளிமையாய் எழுத வேண்டும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வீழ்ந்த தமிழகம், பாவேந்தர் பாரதி யாரின் பாட்டுக்கு வரும்வரை எழுந்திருக்கவே இல்லை. கடவுளைப் பற்றிப் பாடும் நெறிமாறி இயற்கையைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் பாடுவதாய் அமைந்தது.

சப்பானியக் கவிதை ஈடுபாடு

            பாரதியார் 1916இல் ‘ஜப்பானிய கவிதை என்னும் தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது, சப்பானியப் புலவர் உயோநோகுச்சி கல்கத்தா இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரைக் கருத்துக்களை முதன்மைப்படுத்தியது. அதில் :

            ‘சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் ஜப்பானியக் கவிதையின் விசேஷத் தன்மையென்று நோகுச்சிப் புவலர் சொல்வதுடன் ஆங்கிலேயரின் கவிதை இதற்கு நேர்மாறாக நிற்கிறது’ என்றும் சொல்லுகிறார். நமக்குள்ளே திருக்குறள் இருக்கிறது. கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள், கிழக்குத் திசையின் கவிதையிலேயே இவ்விதமான ரஸம் அதிகந்தான். தமிழ்நாட்டில் முற்காலத்திலே இது மிகவும் மதிப்பெய்தி நின்றது.

 
            இதனால் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் போக்கு முற்காலத்தில். தமிழ்நாட்டில் மதிப்பெய்தியிருந்தது என அறிய வாய்க்கிறது. பாரதியார் அயர்லாந்துக் கவிஞர் வெர்ஹேரனின் ஒரு ஹொக்குப் (ஹைகூ) பாட்டின் ஆங்கில வடிவத்தை அறுசீர் விருத்த யாப்பில்,

மயங்கினேன் முயங்கிலள் பரீசு

வாய்ந்தது எழில் மறந்திலேன் காவின். . .


            என மொழி பெயர்த்து அமைந்திருந்தார். இப்பாடலைப் பாரதிதாசன் கேட்டதும் புறநானூற்றை எடுத்து வந்து பாரதியாரின் எதிரில் வைத்து ‘இந்நூலிற் காணப்படும் பாடல்கள் அனைத்தும் ஹொக்குப் பாடல்களே’ என்றார். இதனால் பாரதியார்க்கு ‘ஹொக்குப்’ பாட்டின் மீது ஈடுபாடு இருந்தது என்பதை அறிகிறோம்.


பாரதிதாசன் பற்றிப் பாரதியார்


            பாரதியைப் பற்றிப் பாவேந்தர் பாடிய பாடல்கள் பேச்சிலும் கட்டுரையிலும் எழுதியவை ஏராளம். அந்நாளில் புகழ்பெற்ற பாகவதர் பலாப்புத்தூர் சீனிவாச ஐயங்கார் பாரதியாரை அணுகி இராமன் கதையைப் பொதுமேடையில் பாடுவதற்கேற்ப இசைப்பாடலாகச் செய்து தருமாறு கேட்டார். பாரதி அருகிலிருந்த பாவேந்தரைச் சுட்டி, இவர் இந்த காரியத்தை நன்கு செய்வார் என்றார். பாகவதர் ஐயுற, அவர் சிறந்த கவிஞர், சந்தேகப்படாதீர்கள்’ என்று தெளிவூட்டினார். பாவேந்தரும், பாகவதர் கேட்டவாறே இசைப்பாக்கள் ஆக்கித் தந்தார்.

பாரதியாரின் பழந்தமிழ் அறிவு

            பாரதியார் காலத்தில், தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ நாடெங்கும் பரவவில்லை. அப்போது தான் வெளிவரத் தொடங்கின. பிறர் எழுத்தையும், பேச்சையும் கண்டும், கேட்டும் தமிழின் பெருமையை வியந்து போற்றியுள்ளார் பாரதியார்.


            1920இல் மதுரைத் தமிழ்ச்சங்க ஏடான ‘செந்தமிழில்’ ‘சிலப்பதிகாரம் பற்றிய கட்டுரையைப் பாரதியார் படித்து விட்டுச் சிலப்பதிகாரச் சுவையில் மனம் பறிகொடுத்தார். அதனால், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்றும், ‘சேரன் தம்பி சிலம்பு இசைத்ததும்’ என்றும் பொதுப்படக் கூறினார்.

புதுவையில் திரு.வி.க ஆற்றிய சொற்பொழிவில் சிலப்பதிகாரச் சுவையையும், திரு.வி.க.வின் நடையழகையும் புகழ்ந்து போற்றினார் பாரதியார்.

பொதுவினர்க்குச் சிலப்பதிகாரச் சுவையை

நடையழகைப் புகலும் போதில்

இதுவையா பேச்சென்பேன்: பாரதியார்

கை கொட்டி எழுவார். வீழ்வார்.

            என்றார் பாவேந்தர். பாரதியார் திரு.வி.க. பேச்சினைக் கேட்டுக் கைத்தட்டி மகிழ்ந்தது போல் வேறெவர் பேச்சுக்கும் கைதட்டியதில்லை என்றார் பாவேந்தர்.

            புதுவையில் (1935இல்) நிகழ்ந்த பாரதி விழாவிற்கு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்றார். பாவேந்தர் தம்முரையில் ‘பாரதிக்கு இலக்கணம் தெரியாதென்று சிலர் சொல்லுகின்றனர். அவர்களுடைய கருத்து தவறானது; பாரதிக்கு இலக்கணப் புலமை உண்டு என்றார். முடிவுரையில் நாவலர் சோமசுந்தர பாரதியார் எனக்கு என்னென்ன தெரியுமோ அத்தனையும் பாரதிக்கும் தெரியும். இதன் மேலும் பாரதிக்குத் தனித்தன்மை அவரிடம் சிறந்த கவிதை வளமிருக்கும். சும்பப் பயல்கள்தான் பாரதிக்கு அது தெரியாது இது தெரியாது இலக்கணம் தெரியாது என்று வெறுமனே சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்றார்.

            நாவலர்பாரதியார் தமிழ் நன்கு கைவரப் பெற்றவர் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் அறிந்தவை பாரதியாரும் அறிந்தவைதான் என்பது தெளிவாகிறது. பிற்கால இலக்கியங்களில் தமிழகத்தைப் பார்த்தது கிடையாது. நான் தமிழர் நாகரிகம், தமிழரின் இலக்கியங்கள் முதலியவற்றை ஆராய வாய்ப்பிருந்ததில்லை. ‘பண்டைத் தமிழகத்தைப் பார்க்க வேண்டுமானால் நான் சங்க நூல்களில்தான் காணவேண்டும். ஆனால் போன ஆண்டு (1920) வரைக்கும் எனக்குப் பழந்தமிழ் நூல்களில் தொல்காப்பியம், அகம், புறம் பற்றிய நூல்கள் பற்றி ஒன்றும் தெரியாது. உண்மை அறிந்து கொண்ட பிறகே தமிழகத்தை எங்கள் தந்தையர் நாடு என்று சொன்னேன்” என்று பாரதியார் தனக்கு இருந்த சங்க இலக்கிய அறிவை வெளிப்படுத்தியுள்ளார்.


பாடற் கருத்துகளில்

            பாடு பொருளிலும், பாடு முறையிலும் பா நடையிலும் பாரதியார் வழியைப் பின்பற்றிய பாவேந்தர், பாரதியார் கருத்துக்களை மேலும் விளக்கம் செய்து பல பாடல்கள் பாடியுள்ளார். பல கருத்துக்களில் வேறுபட்டும், முரண்பட்டும் பாடியுள்ளவற்றையும் காண்கிறோம். இவ்வேறுபாடுகளும், தமிழை முன்னெடுத்த பாரதியைப் போலத் தமிழரை முன்னெடுத்த பெரியாரின் தன்மான இயக்கத் தினாலும் சிந்தனை மாற்றத்தாலும் மனப்பான்மை வளர்ச்சியாலும் ஏற்பட்டனவாகும்.

            குறிக்கோள், மக்களைப் பாடுதல், பாட்டுலகப் புதுமை, பெண் விடுதலை, கைம்மைக் கொடுமை, குழந்தை மணம், சாதியொழிப்பு, இசைத்தமிழ் வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, புராண நம்பிக்கையொழிப்பு, வாழ்ந்து காட்டுந்திறன் ஆகிய கூறுகளில் பாவேந்தர் பாரதியாரைப் பின்பற்றிச் செல்கிறார்.

நாடு, வடமொழி நூல்கள், தெய்வச் சார்பு, பொதுவுடைமை போற்றல், தமிழின் தோற்றம், குறிக்கோள் வெளிப்பாடு ஆகிய கூறுகளில் பாரதிதாசன், பாரதியாருடன் வேறுபட்டு விளங்குகிறார்.


நாடு


            இந்தியா ஒரு நாடு, பாரதநாடு இதுவே நம் நாடு என்ற கொள்கை இருவரும் பாரத நாட்டைப் பாடிய போதிலும் பாரதியார்
உடையவர்.


பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினை வகற்றாதீர்

என்றார். பாரதிதாசன்

தமிழ் நாடுதான் மேலான நாடு

தமிழர்க் கெல்லாம் மற்றவை காடு

என்றார்.

நான் திராவிடன் என்று நவில்கையில்

தேன்தான் நாவெலாம் வான்தான் என் புகழ்

            எனப் பாவேந்தர் பாடினார். ஆனால் பாரதியாருக்கோ திராவிடம், திராவிடர் என்ற சொற்களைக் கேட்டாலே பிடிக்காது. ‘பொய்யும் புலையுமாகத் திராவிடர் என்றும் ஆரியர் என்றும் உள்ள பழைய
சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்கள் கற்பித்துக் கொண்டு வீண்சண்டைகள் வளர்ப்பதனால் ஹிந்து சமூகத்துக்கே கெடுதி விளையக் கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது’ என்றார்.


உலகநோக்கு


            பாரதியார் தம் காலத்தில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளையும் அவற்றால் நாம் கொள்ள வேண்டிய படிப்பினைகளையும் பாட்டாலும் உரையாலும் உரைத்துள்ளார். சோவியத்து இரசியாவில் ஜார் மன்னன் வீழ்ந்த பின் எழுந்த யுகப் புரட்சியை ‘ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி எனப் பாராட்டினார். பெல்ஜியம் நாட்டிற்கு வாழ்த்துப் பாடினார். பிஜித் தீவிலே கரும்புத் தோட்டத்தில் தமிழ்ப் பெண்கள் படுந்துயரத்தை நெஞ்சுருக வடித்தார். எனவே, உலக மக்களிடையே இருந்த சிக்கல்களை ஆராய்ந்தறியும் உலக நோக்கு கொண்டவராகப் பாரதியார் விளங்கினார் எனலாம். பாவேந்தர் உலகநோக்கில் பாரதியாரையும் விஞ்சி நின்றார். இருவரையும் ஒப்பிட்டு ஆய்வு செய்தவர்களில் சிலர் பாரதிதாசன் பரந்த நோக்கம் இல்லாதவர் என முடிவு செய்தனர். அக்கருத்தினை மாற்றிப் பாரதிதாசன் உலகநோக்கு மிக்கவர் என்பதைச் சான்றுகளோடு ‘பாவேந்தரின் உலகநோக்கு’ என்னும் நூல் நிறுவியுள்ளது.


சீன எதிர்ப்பு

சீனனால் வருந் தொல்லை தில்லிக் காரத்

தீயருக்கு மட்டுமன்று நமக்குந்தானே

என்றும்.

இலங்கைத் தமிழர் உரிமை

சிங்களர்க் குள்ள இலங்கையின் உரிமை

செந்தமி ழர்க்கும் உண்டு

என்றும்

சீனாகுமாய்த் தீவு மேற் குண்டு வீசியதை

குமாய்த்தீவு மேற்சீனர் குண்டுமேல் குண்டு

 டமார் டமார் என்று போட்டார்கள்

என்றும்,

அமெரிக்கா சப்பான் மீது குண்டு வீசியதன் விளைவை

இன்னும் ஓர் நூறாண்டுக்கு

இரண்டூரின் சுற்றுப்பக்கம்

ஒன்றுமே முளையா தாமே

வாழ்தலும் ஒண்ணாதாமே


            என்றும் பாடி உலக நிலைமைக்குக் கவலை கொள்கிறார்.!

சாதியொழிப்பு


            சாதிகளை நிலை நாட்டிப் போற்றும் பார்ப்பனர் இனத்தில் பிறந்தபோதும், பார்ப்பனத்தன்மை எள்ளளவும் இல்லா தவர் பாரதியார். பெரியார் சாதியொழிப்பு இயக்கத்திற்கு வித்திடும் முன்னரே, ‘சாதி வேரைப் பொசுக்குங்கள்’ என்றவர். அதனால் அவர் வாழ்வில் பட்ட இன்னல்கள் எண்ணில் அடங்கா.


சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

சாதிக் கொடுமைகள் வேண்டாம் – அன்பு

தன்னில் செழித்திடும் வையம்


            எனச் சாதிக் கொடுமைகளை ஒழிக்க வழிகாட்டினார். தன் வாழ்விலும் கடைப்பிடித்தார். பூணூலை அறுத்தெறிந்தார். சாதி வேறுபாடுகளைச் சாய்க்க ‘ஆறில் ஒரு பங்கு’ நூலை எழுதி உழவுத் தொழிலை மேற்கொள்ளும் பள்ளர், பறையர் முதலானவர்க்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.? பாரதியார் கடைப்பிடித்த சாதியொழிப்பை,

மேலவர் கீழவர் இல்லை – இதை

மேலுக்குச் சொல்லிட வில்லை

நாலு தெருக்களின் கூட்டில் மக்கள்

நாலாயிரத்தவர் காணத்

தோலினில் தாழ்ந்தவரென்று – சொல்லும்

 தோழர் சமைத்ததை உண்பார்


எனப் பாவேந்தர் பாடிப் பெருமை கொள்வார்.  `தன் மகள் தாழ்ந்த சாதிப் பையனை விரும்பி மணம் செய்து கொள்வதைக் கண்டு ஆனந்தப்பட வேண்டும்’ எனத் தம்மிடம் தெரிவித்ததாகப் பாவேந்தர் கூறியுள்ளார்.

பெண் விடுதலை, பெண்ணடிமை ஒழிப்பு

பெண் ஒரு கண்மற் றாண் ஒரு கண் என

உணரப் பாடிய உயர்கவி பாரதி


எனப் பாரதி பெண்ணையும் ஆணையும் சமமாகப் பாவித்ததைப் பாவேந்தர் பாடியுள்ளார்.

மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்

எட்டும் அறிவினில் ஆணுக் கிங்கேபெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி


எனப் பாரதியார் பெண்ணடிமை ஒழியவும், பெண் விடுதலை பெறவும் பாடியதற்கும் மேலாகப்,


பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம்என் கின்றீரோ?

மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை

பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே

ஊமை என்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும்

ஆமை நிலமைதான் ஆடவர்க்கும் உண்டு.


            எனப் பாடிப் பெண்ணடிமை ஒழிப்புக்கு முத்திரை பதித்தவர் பாவேந்தர்.

தமிழின் தோற்றம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

எனத் தமிழ்மொழி உயர்வைப் பாடிய பாரதி தமிழின் தோற்றத்தைத்  தமிழ்த்தாயே கூறுவதாக அமைத்துக் கூறியது எண்ணத்தக்கது.


ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

மூன்று குலத் தமிழ்மன்னர் என்னை

மூண்ட நல்லன்போடு நித்தம் வளர்த்தார்

ஆன்ற மொழிகளி னுள்ளே –உயர்

ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்.


            தமிழைச் சிவன் உருவாக்கினான்; அகத்தியன் இலக்கணம் செய்தான் வடமொழிக்கு நிகராக வாழ்ந்தேன் என்று தமிழின் தோற்றத்தைக் கூறியிருப்பதையும், வடமொழிக்கு உயர்வு தந்திருப்பதையும் அறியலாம்.

ஆனால் பாவேந்தரோ

சும்மாதான் சொன்னார் உன்னை

ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே

..தமிழர் தங்கள்

தலைமுறை தலைமு றைவந்து

அடுக்கின்ற தமிழே பின்னர்

அகத்தியர் காப்பியர்கள்

கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக் கிளைதொத்தும் கிளியே வாழி


            என அழகின் சிரிப்பில் கிளி வண்ணனையில் தமிழை ஒருவர் தோற்றுவிக்கவில்லை; தமிழர் காலந்தோறும் அடுக்கியதால் தோன்றி வளர்ந்தது. அகத்தியர் தமிழைக் கெடுத்தார் என உண்மையைக் கூறியுள்ளார்.


தமிழின் உயர்வு


            ‘சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே’ என்றும், ‘வானம் அறிந்ததனைத்தும் அறிந்து வளர்தமிழ்’ என்றும் ‘தெள்ளுற்ற தமிழமுது’ என்றும் தமிழின் இனிமை, உயர்வு ஆகியவற்றைப் பாடிய பாரதியார் காலத்திற்கேற்பத் தமிழ் பெற வேண்டிய வளர்ச்சிகளையும் பட்டியலிடுகிறார்.


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

            என்றார். பாவேந்தரும் தமிழுக்குச் செய்ய வேண்டிய பணிகளை வணிகர், தமிழ்ப் புலவோர், மாணாக்கர் முதலியோர்க்குக் கூறுவனவாய்த் ‘தமிழியக்கமே’ படைத்தார். ‘தமிழை என்னுயிர் என்பேன்’ ‘தமிழும் நானும் மெய்யாய் உடலுயிர் கண்டீர் ‘தமிழ் என் அறிவினில் உறைதல் ‘வெள்ளம்போல் தமிழர் கூட்டம்’ எனத் தமிழர் பற்றியும், ‘தமிழ்நாடு கண்டீர், ‘உயிரை, உணர்வை வளர்ப்பது தமிழே’ எனத் தமிழ் பற்றியும், தான் மேலான நாடு தமிழர்க்கெல்லாம் மற்றவை காடு’ எனத் தமிழ்நாடு பற்றியும் பாடியவர் பாவேந்தர்.

தனித்தமிழ் நூல்

பாரதியார் காசிக்குச் சென்றிருந்தபோது (1898, 1902) ஈசுவரலால் என்பவர் அறிமுகம் கிட்டியது. ‘பாரதி தமிழ்க் கவிஞர்’ என்றறிந்த  ஈசுவரலால் வியந்தார். சமஸ்கிருதம் மட்டும்தான் தனிமொழி, தமிழ் என்று ஒரு மொழியும் உண்டோ? ‘சமஸ்கிருதம் பெற்ற பிள்ளைதானே தமிழ்’ எனவே தமிழைச் சமஸ்கிருதம்’ என்ற கருத்துத் தெரிவித்தது பாரதியாருக்குப் பிடிக்கவில்லை. அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதி


ஈசு                  :  தமிழில் நூல்கள் உள்ளனவா?

பாரதி            : உள்ளன,

ஈசு                  :  தமிழிலா?

பாரதி            : ஆம், தமிழில் தான்,

ஈசு                  : இன்னும் ஒரு கேள்வி தனித்தமிழிலா?

பாரதி            :  ஆம். தனித்தமிழில்தான்

`இன்றைய தமிழ் நூல்களில் சில தமிழ்ச் சொற்களே காணப்படுவதால் ஒரு தனித்தமிழ்ப் பாட்டினை இயற்றித் தருமாறு பாரதிக்குக் கோரிக்கை விடுத்தார். அதனையேற்றுத் தம் தமிழாற்றல் விளங்க,


காற்றென்று சொல்வதோ ராற்றல் மற்றுக்

கனலென்று சொல்வதோ ராற்றல்

மாற்ற மிலாததோர் விண்ணும் இம்

மண்ணும் புனலுமோ ராற்றல்


            எனத் தொடங்கும் பாடலைப் பாடி தனித்தமிழில் பாட்டியற்ற முடியும் என்பதைப் பாரதியார் நிறுவினார். பாவேந்தரின் தொடக்க கால நூல்களில் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பினும், ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழியக்கம்’ முதலிய நூல்கள் தனித்தமிழில் இயற்றப்பட்டுள்ளமை அறிந்து இன்புறத்தக்கது.


இசைத்தமிழ் மறுமலர்ச்சி

            தமிழ்நாட்டில் தெலுங்கு, இந்துஸ்தானி முதலிய மொழிகளில் பாடியதால் தமிழரின் செவியைத் துளைத்தது என்றும், றுமையாகக் கேட்ட தமிழரின் செவி தோற்காது அன்று ‘இரும்புக் காதே என்றும் சாடிய பாரதி, தமிழிசை இயக்கத்தின் பணியை இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கினார். ‘எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தங்களையும் பொதுஜனங்கள் விரும்பும் மெட்டுகளையும்’ வலியுறுத்திய பாரதியார்.

மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால்

ஊனுருகப் பாடுவதில் ஊறிடுந்தேன் வாரியிலும்

ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும்

கோற்றொடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும்

பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும்


            நெஞ்சைப் பறிகொடுத்த பாரதியார்.மக்களிடம் இருந்த கும்மிப்பாட்டு, அம்மானைப் பாட்டு முதலிய பாடல்களின் இசையைத் தம் பாடல்களில் பாடி முழங்கினார். ‘தியாகர் வேண்டாம் பாரதியாரே வேண்டும்’, எனக் குறிப்பிட்ட பாவேந்தர் ‘தமிழிசை இயக்கத்தின் தந்தை’ என்றே பாரதியாரைக் குறிப்பிட்டார். இசையில் பாடுவதற்குரிய இசைக்குறிப்புகளைத் தம் பாடல்களில் குறிப்பிட்டதோடு தாமும் பாரதியார் போலவே பாடுவதில் வல்லவர் ஆனார். இதற்கு ‘இசையமுது’ நூலே சான்றாகும். ஏற்றப்பாட்டு, தாலாட்டு, தொழிலாளர்கள் பாட்டு முதலியவற்றைப் பாடி இசைத் தமிழை
வளர்த்தார்.


தோயுந்தேன் நிகர் தமிழாற்

பாடாமே தெலுங்கிசையைச்

சொல்லிப் பிச்சை

ஈயுங்கள் என்பீரோ.

செந்தமிழ் இசைப்பாடல்

இல்லையெனச் செப்புகின்றீர் மானமின்றிப்

பைந்தமிழில் இசையின்றேல்

பாழ்ங்கிணற்றில் வீழ்ந்துயிரை மாய்த்த லன்றி

எந்தமிழில் இசையில்லை

எந்தாய்க்கே உடையில்லை என்ப துண்டோ?


எனத் தமிழில் பாடுவதைப் பாவேந்தர் வற்புறுத்துகிறார். ‘கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என ஆணையிட்டார் பாவேந்தர்.


முடிவுரை


            இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர்களாகிய பாரதியாரும் பாவேந்தரும் ஒரே காலத்தில் வாழ்ந்தனர், உணர்வால் ஒன்றினர். பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைத் தம்வழிப்படுத்தி பாவேந்தருக்கோ ஒரு பாட்டுப் பட்டாளமே தொடர்ந்தது. மக்களைப் உய்யும் வழிகாட்டினர். பாரதியாருக்கு ஒரு பாவேந்தர் கிட்டினார். பாடி மக்களிடம் செல்லாக் கவிதைகள், செல்லாக் கவிதைகளே எனத் தெளிந்தனர்.

            பாவேந்தர் பல துறைகளில் தம் இலக்கிய ஆளுமையைப் பதித்தவர் ; தமிழுக்குச் செய்ய வேண்டிய செயல்பாடுகளைத் ‘தமிழியக்கத்தில்’ காட்டியவர்; ‘நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்’ எனக் குடும்ப விளக்கில் ஒளியேற்றியவர்; பாரதியாரின் பாடல் அடிகளை வைத்தே பாடல் இயற்றிப் பாரதியாரின் பெருமையை உலகறியச் செய்து அவர் ‘ஓர் உலககவி’ ஒப்பற்ற கவி என நாட்டியவர். தமிழ் உள்ளவரை இருவரும் தமிழர் நெஞ்சில் நிற்பர். தமிழ் இலக்கியத்தின் எல்லா வடிவங்களையும் சமுதாய மாற்றத்திற்கான வெடி மருந்து களாய்ப் பயன்படுத்திய தனித்தன்மையும் பாரதிதாசனுக்கே உரியது.

தமிழனுக்கே வீழ்ச்சியில்லை; தமிழன் சீர்த்தி

தாழ்வதில்லை! தமிழ்நாடு தமிழ் மக்கள்

தமிழன் என்னும் பேருணர்ச்சி இந்நாள் போலே

தமிழ்நாட்டில் எந்நாளும் இருந்ததில்லை!

தமிழர்க்குத் தொண்டு செய்யும் தமிழனுக்குத்

தடைசெய்யும் நெடுங்குன்றும் தூளாய்ப் போகும்

தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை

தமிழ்த் தொண்டன் பாரதிதாசன் செத்த துண்டோ?


சான்றெண் விளக்கம்


1.இரா.இளவரசு – இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன், ப. 13-14,

2. ச.சு.இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.55,

3. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.30

4.ச.சு. இளங்கோ –  பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.48,-31,

5. இரா.இளவரசு – நிறைந்த அன்புடன் . அணிந்துரைகள் ப.119-120,

6. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.103,

7. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.57,

8. இரா. இளவரசு – பாவேந்தரின் உலகநோக்கு ப. 4, 50, 82, 62,

9. ச.சு. இளங்கோ – பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.149,

10.ச.சு. இளங்கோ-பாரதிதாசன் பார்வையில் பாரதி ப.105

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்.பி.தமிழகன்

இலக்கியங்களில் மயில்

இலக்கியங்களில் மயில்

    சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், நம்முடைய இந்திய தேசத்தில் மட்டுமே மயில் காணப்பட்டது. உலகில் வேறு எங்கும் இப்பறவை இல்லை என்றே கூறலாம். மயிலின் அழகினைச் கண்டு அலெக்சாண்டர் சுமார் 200 மயில்களைக் கிரேக்க நாட்டுக்கு எடுத்துச் சென்றார். அதன் பிறகே, மயிலினம் ஆப்பிரிக்கா ஐரோப்பா, கிழக்காசியா போன்ற நாடுகளிலும் பெருகி வளர்ந்தது. உலகத்துக்கே மயிலினத்தைக் கொடுத்த பெருமை இந்தியாவைச் சாரும். 1963-ம் ஆண்டு மார் மாதம் முதல் மயில் இந்தியாவின் தேசியப்பறவை என்ற அந்தஸ்தைப் பெற்றது. நம் நாட்டில் பறவைகளைப் பற்றிப் பேச்சு எழும்போதெல்லாம் மயிலின் பெயரே முதலில் இருக்கலாயிற்று மயிலைப் பிடிப்பதும் கொல்வதும் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.

மயிலின் சிறப்பு

    மழை பெய்யும் காலங்களில் மயில், தோகை விரித்து ஆடும். மழையை வரவேற்கும் வகையில் மகிழ்ந்து நடனமாடும். மேலும், மயிலின் நடனம் மழை வருவதை அறிவிக்கும் அறிகுறியாகும். பறவை இனங்களுக்கு ஒரு காவலாளி போலப் பணியாற்றுகிறது. காட்டிற்கு பறவைகளை தொலைவில் வரும்போதே அறியும் திறன் மயிலுக்கு உண்டு. மயிலின் அகவலைக் கேட்டதும், வேட்டையாட யாரேனும் வந்தாலும் அல்லது வேட்டை மிருகங்கள் வந்தாலும் அதனை வெகு மற்ற சிறு விலங்குகளும் பறவைகளும் எச்சரிக்கையடைந்து, மறைவிடங்களில் பதுங்கிக் கொள்ளும். இவ்வாறு மயில் பாதுகாப்புப் பணியைச் செய்கிறது.

     மயிலின் இறகைக்கொண்டு விசிறி செய்யலாம். அந்தக் காலத்தில் அரசர்களின் இருபுறமும் இரண்டு பேர், மயிலிறகினால் செய்த பெரிய விசிறியைக் கொண்டு வீசுவார்கள். நன்றாகக் காற்று வரும். கிருஷ்ணர் தலையில் மயிலிறகு வைத்து அலங்கரித்திருப்பார். அதற்கு ‘பீலி’ என்று பெயர். பூசைப்பொருட்களுடன் மயிலிறகை வைப்பதும் வழக்கத்தில் இருந்தது.

மயிலும் தெய்வமும்

        மயில், சரஸ்வதி தேவியின் வாகனம். சரஸ்வதி தேவி கல்வியை அருள்பவள். அவளுடைய வாகனமாகிய மயிலின் இறகைப் புத்தகத்தில் வைத்தால் கல்வி வளரும் என்ற வழக்கம் மக்களிடையே நம்பிக்கையாக இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சரஸ்வதி தேவிக்கு மட்டுமில்லாமல், முருகனுக்கும் மயில்தான் வாகனம். அதனால்தான் முருகனை மயில்வாகனன் என்று போற்றுகிறார்கள். இதைத்தவிர மயிலுக்கு வேறு பல சிறப்புகளும் உண்டு.

    மிகப் பழைமையான காலத்திலிருந்தே மயிலைப் பல விதங்களில் சிறப்பித்திருக்கிறார்கள். சிலருடைய கொடிகளில் மயில் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. அதாவது ‘ஸ்கந்தகுப்தன்’ என்ற அரசன் போர்க்களத்தில் வெற்றியடைந்த வீரர்களுக்கு மயிலின் உருவம் பொறிக்கப்பட்ட தங்கப் பதக்கங்களை அறிவித்ததை அறியமுடிகிறது. ஷாஜஹான் என்ற அரசன் தங்க மயிலாசனத்தில் அமர்ந்திருந்தான். தங்க மயிலாசனத்தில் வைரங்களும் ரத்தினங்களும் இன்னும் பல விலை உயர்ந்த கற்களும் பதிக்கப்பெற்றிருந்தன. அவை அழகான மயில் உருவில் இருப்பதைக் காணலாம். இந்த மயிலாசனம் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.

    மயில் அழகான பறவை மட்டுமில்லாமல் கலை நயமும் கொண்டது. ‘மயில் நடனம்’ என்றொரு நடனமே இதற்கு புகழ். மயில் பலவிதத்திலும் நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. சிறு பூச்சிகள். புழுக்களைத் தின்கிறது. பாம்புகளைக் கொன்றுவிடும் தன்மை மயிலுக்கு உண்டு. அதனால்தான் மயில் இருக்கும் இடங்களில் பாம்பு வருவதில்லை. மயில் இருக்கும் இடங்கள் பசுமையான வளமான பூமியாக இருக்கும். ஏறத்தாழ மூவாயிரம் வகையான பறவைகள் நம் தேசத்தில் இருக்கின்றன. ஆனால் மயிலைப் போன்ற அழகான பறவை எங்கும் காண இயலாது. மயிலாப்பூர், மயிலாடுதுறை என்ற ஊர்களும் மயிலின் சிறப்பை உணர்த்துகிறது.

அகராதியில் மயிலின் சிறப்பு

    ‘மெய்யப்பன் தமிழ் அகராதி’ மயிலுக்கு, பறவை வகை, செடி வகை, சிறுமர வகை, இருக்கை வகை என்று விளக்கம் தருகிறது. ‘வரலாற்றுமுறை தமிழ் இலக்கியப் பேரகராதியில் மயில் குறிஞ்சி நிலக்கருப்பொருளான பறவை என்கிறது. ‘திவாகர நிகண்டு குமரன் ஊர்தி மயிலும் யானையும் என்று கூறுகிறது.

அபிதான சிந்தாமணி

        ஒரு மயில் ஒரு அழகான பறவை. இது உஷ்ணமான நாடுகளின் காடுகளில் உள்ளது. இது பசுமை கொண்டையுண்டு. இதன் அழகு கோழியின் அழகு போலிருக்கும். கழுத்து நீண்டும் இறக்கைகள் மஞ்சள், நீலம் பொன்னிறங் கலந்த சிறகுகளையுடையது. இதன் தலை சிறியது. உச்சியில் குறுகியுமிருக்கும். இதற்கு நான்கு விரல்கள் பெற்ற நீண்ட கால்கள் உண்டு. வால் பல கண்கள் போன்ற புள்ளிகளைப் பெற்று மிக நீண்டிருக்கும். இது குளிர்ந்த மேகத்தைக் கண்டும், தன் பெட்டையைக் கண்டுகளித்த காலத்தும், சிறகை வட்டமாக விரித்துக் களிப்புடன் ஆடுதலைப் பார்க்க அழகாக இருக்கும். பெண் பறவைகளுக்கு நீண்ட வாலும் கொண்டையுமில்லை. இது புழு, பூச்சிகளைத் தின்னும், பாம்பையும் கொத்திக் கொல்லும் இவ்வினத்தில் வெள்ளை மயிலும் உண்டு.

    இந்து தேசத்து நடிக்கும் பறவை இது. உயர்ந்த கோழி போன்ற உருவுடையது. கழுத்து நீளமானது. ஆணுக்கு உச்சியில் கொண்டையும், தோகை மிக நீண்டும் பசுமை கலந்து பொன்னிறமாய் கண்கள் பெற்றிருக்கும், இதன் முதுகு வெண்மை, கருமை, செம்மை கலந்தது. இதன் பேடுகளுக்குத் தோகைகளில்லை. இது இரு சந்திகளிலும் தோகை விரித்தாடும். மயில் விருதுசேனன் கொடியாகவும் இருந்துள்ளது என்பதை அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

இலக்கியத்தில் மயில்

    மயிலைக் கேகயம், கேதாரம், மஞ்ஞை, கலாபம், மயூரம் போன்ற பல்வேறு பெயர்களில் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இவற்றுள் பெரும்பான்மையாகப் பயன்படுத்துவது ‘மயில்’ மட்டுமே. மற்ற பெயர்களெல்லாம் இலக்கிய வடிவில் மட்டுமே தன் தடத்தை ஆங்காங்கே பதிவுசெய்துள்ளன.

எட்டுத்தொகையில் மயில்

        சங்க இலக்கியமான எட்டுத்தொகை நூல்களில் மயில் பற்றிய தகவல்கள் சாலக்கிடைக்கின்றன. பெரும்பாலும் இயற்கை வர்ணனைகளில், பெண்களின் அழகுக்கு மட்டுமே மயிலைப் பயன்படுத்தியிருப்பதைக் கீழ்க்காணும் பாடல்களின் மூலம் தெளிவாகக் காணலாம்.

நற்றிணை

வேங்கை வீஉகும் ஓங்குமலைக்காட்சி

மயில் அறிபு அறியா மன்னோ  (நற்.13-8)

என்ற பாடல் அடிகள் உயர்ந்த மலையில் உள்ள கூட்டில் இருக்கும் மயில்கள் அறியாது என்று கருதி கிளிகள் தினைக்கதிர்களைக் கவர்ந்து செல்லும் நிகழ்வைக் குறிப்பிடுகின்றன. மேலும்,

மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (நற். 11.5)

என்ற வரியில் மயிலின் அடி போன்ற இலையையும் கடுமையான கதிராக அமைந்த பூங்கொத்துக்களையும் உடைய நொச்சி என்று மயிலை நொச்சி மரத்துக்கு ஒப்பிட்டுள்ளனர்.

விசும்பு ஆடுமயில் கடுப்ப (நற். 222-4)

என்ற அடியில் ஆகாயத்தில் பறக்கும் மயிலைத் தலைவிக்கு ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளனர்.

இமையில் மடக்கணம் போல (நற்.248-8)

என்ற பாடலடி மேகக்கூட்டம் இடிமுழக்கத்துடன் மழை பொழிவதைப் பார்த்து மயில் ஆரவாரிப்பதைக் கூறுகிறது.

ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல் வர (நற்.262-2)

என்ற வரி நிலத்தில் கருங்காக்கணத்தின் கண் போன்று மலரும் கரிய மலர் வாடைக்காற்று வீசுவதால் ஆடுகின்ற மயிலின் தோகை அசைவது போலத்தோன்றுவதைக் குறிப்பிடுகின்றது.

கலிமயில் கலாவத்து அன்ன, இவள்

ஒலிமென் கூந்தல் நம்வயினானே (நற்.265-8)

என்ற பாடல் வரிகள் மயிலின் தோகையைப் போல மெல்லிய கூந்தலை உடையவள் தலைவி என்று மயில் தோகையானது தலைவியின் கூந்தலுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. மேலும்,

மயில் ஓரன்ன சாயல் (நற்.301-4)

எனும் அடி, தலைவி மயிலைப் போன்ற சாயலை உடையவள் என்று கூறுகிறது.

மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும் (நற். 305-2)

என்பதற்கு மயிலின் அடியை ஒத்தது நொச்சி மரம் என்று பொருள் தரப்படுகின்றது. மேற்சுட்டிய நற்றிணைப்பாடல்களின் மூலம் தலைவியின் அழகு நொச்சி மரம், தலைவியின் கூந்தல் போன்றவற்றிற்கு மயிலை உவமையாகப் புலவர்கள் கூறியுள்ளது புலப்படுகிறது.

குறுந்தொகையில் மயில்

காமம் செப்பாது கண்டது மொழிமோ

யிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் (குறுந். 2-3)

என்ற வரிகளில் தலைவன் தலைவியின் அழகை மயிலோடு ஒப்புமைப்படுத்திக் கூறுவதைக் காணலாம்.

மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி (குறுந்.138.3)

‘மயிலின் கால் விரல் போன்ற பிரிவுள்ள இலைகளை உடைய
நீல மணிபோன்ற பூங்கொத்துக்கள் உள்ள நொச்சி மரம்’ என்னும் கருத்தை மேற்கண்ட பாடல் அடி தருகின்றது. மேலும்,

மென்மயில் எருத்தின் தோன்றும்

புன்புல வைப்பிற் கானத்தானே (குறுந். 183-6)

            எனும் வரிகளில் காயாமரத்தை மயிலின் கழுத்தோடு ஒப்பிட்டுள்ளார் புலவர்.

கலிமயில் கலாவத்தன்ன இவள்

ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே (குறுந். 225-6)

            என்ற பாடல் அடிகளில் தோகையை விரித்தாடும் மயில் போன்ற சாயலை உடைய தலைவியின் கூந்தல் தலைவனுக்கு மட்டுமே உரிமையானது என்று கூறப்படுகின்றது.

ஆடுமயில் அகவும் நாடன் நம்மொடு

நயந்தனன் கொண்ட கேண்மை (குறுந். 264-3)

            எனும் அடிகளில், ‘தோகை அசையும்படி நடந்து ஆடுகின்ற மயில்கள் அகவும் மலைநாடனுடன் நாம் கொண்ட நட்பு பசலை படர்ந்தாலும் அப்பசலை நீண்ட நேரம் இருக்காது என்பதை உணர்த்துகிறது’ எனும் கருத்து குறிஞ்சி நிலத்தின் மயில் ஆடிக்கொண்டிருக்கும் காட்சியைப் புலப்படுகின்றது.

ஐங்குறுநூறு காட்டும் மயில்

அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும்

பூக்கஞல் ஊரன் சூள்இவண் (ஐங்.8.3-4)

            என்ற பாடல் வரிகள் பூக்கள் நிரம்பிய மாமரத்தின் மீது அழகான மயில்கள் வாழும் ஊரினை உடைய தலைவனின் சூளுரை மெய்யாகட்டும். அதாவது மாஞ்சோலைக்கு மயில் அணி செய்தது போல தலைவன் இல்லறத்திற்கு தலைவி அணியாகட்டும்.

மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் (ஐங்.291-1)

மயில்கள் ஆலப் பெருந்தேன் (ஐங்.292-1)

        இவற்றுள் மயில்கள் இருக்கும் மலைநாட்டுத் தலைவனின் சிறப்பு கூறப்படுகிறது. மேலும் ஐங்குறுநூற்றில் மயில்கள் பற்றிய செய்தி அதிகம் இடம்பெறுவதால் மஞ்ஞைப்பத்து என்ற பெயரிலே இப்பதிகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பதிற்றுப்பத்துச் சுட்டும் மயில்

பழனக்காவிற் பசுமயிலாலும் (பதி. 8-9)

 எனும் அடி, பெண்கள் மருத மரத்தில் ஏறிநின்று நெற்கதிர்களைக் கொய்ய வரும் பறவைகளை ஓட்டுவதற்காக விளிக்குரலெடுத்து இசைப்பார்கள். அதைக்கேட்டுப் பொழில்களில் இருக்கும் பசுமை நிறமுடைய மயில்கள் ஆடுவதைச் சுட்டுகின்றது.

பரிபாடலில் மயில்

திகழ்பொறிப் பீலி அணிமயில் கொடுத்தோன் (பரி.5-60)

என்னும் பாடல் வரியில் இந்திரன் அழகுடைய மயிலை சேவலாக்கி முருகனுக்குக் கொடுத்த செய்தியைக் காண முடிகின்றது.

மலைய இனங்கலங்க மலைய மயிலகவ (பரி. 6-4)

        என்ற வரி மழைபெய்வதால் மயில்கள் ஆடுவதைச் சுட்டுகிறது.

விறல் வெய்யோ னூர்மயில் வேனிழனோக்கி (பரி. 8-67)

மணியும் கயிறு மயிலுங் குடாரியும்  (பரி. 8-100)

என்ற பாடல் வரிகள் வெற்றியையே விரும்பும் முருகப்பெருமானின் ஊர்ந்து செல்லும் வாகனமாகிய மயிலையும் முருகப்பெருமானை வழிபடுவோர் மணி, கயிறு, மயில், கோடரி, யானை ஊர்தி போன்றவற்றைக் கொண்டு சென்று வழிபடுவதையும் குறிப்பிடுகின்றன.

மண்சீர் மயிலிய லவர்  (பரி. 9-56)

ஒருவர் மயிலொருவர் ஒண்மயிலோடால (பரி. 9-41)

இவ்வரிகள் மயில் போர் செய்வதையும், வள்ளியை மயிலோடு ஒப்பிடுவதையும் உணர்த்துகின்றன.

சிகை மயிலாய்த் தோகை விரித்தாடுநரும் (பரி. 9-64)

எனும் இவ்வரி மகளிர் மயில்களாக மாறித் தோகை விரித்து ஆடுவதைக் கூறுகிறது.

மாமயிலன்னார் மறையிற் புணர்மைந்தர் (பரி. 11-41)

என்ற பாடல் வரி சிறந்த மயில் போன்ற மகளிர் என்று குறிப்பிடுகிறது. மேலும்,

மணி மருணன்னீர்ச்சினை மடமயில் அகவ (பரி. 15-40)

என்னும் பாடல் வரியில் மயில் அகவுவது தாளவொலி, முழவொலி போல் இருப்பதைக் காணலாம்.

வெண்சுடர் வேல்வேள் விரைமயின் மேல் ஞாயிறுநின் (பரி. 18-26)

இவ்வரி முருகன் வேகமாகச் செல்லக்கூடிய மயிலின் மேல் ஏறி வருவதைச் சுட்டுகிறது. இதனால் மயில் வேகமாகச் செல்லக்கூடிய பறவை என்பதும் தெளிவாகிறது. மேலும்,

மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை (பரி. 19-7)

மடமயிலோரும் அனைவரோடு நின் (பரி. 19-21)

எனும் வரிகள், ஆடுகின்ற அழகிய மயில்போன்று இருக்கின்ற வள்ளியை முருகன் மணம் செய்து கொள்வதைச் சுட்டுகின்றன. மேலும், பாண்டியன் மடமயில் மனையவரோடும் மடப்பமுடை மயில் போன்ற சாயலையுடைய தன் மனைமாரோடும் வலம் வருவதையும் சுட்டுகின்றன.

மந்துற்றாய் வெஞ்சொன் மடமயிற் சாயலை (பரி. 20-69)

என்ற பாடல் வரி பரத்தை தான் செய்த பாவம் தீர்தல் பொருட்டு மடப்பமுடைய மயில் போன்ற மென்மையையுடைய தலைவியை வணங்க வேண்டும் என எண்ணியதைக் குறிப்பிடுகிறது.

அகநானூறு காட்டும் மயில்

எம்வெங் காமம் இயைவது ஆயின்

மெய்ம்மலி பெரும்பூண், செம்மற் கோசர்

கொம்மைஅம் பசுங்காய்க் குடுமி விளைந்த

பாகல் ஆர்கைப் பறைக்கண் பீலித்

தோகைக் காவின் துளுநாடன்ன (அகம். 15)

        என்ற பாடல், தலைவியானவள், தோழிகளும் நானும் வருந்த நன்னனின் பாழி என்றும் கட்டுக்காவல் மிக்க இடத்தைக் கடந்து தந்தையையும் மறந்து பெரிய மனையையும் துறந்து தலைவனுடன் புறப்பட்டுச் சென்றாள். அவள் சென்ற காட்டுவழியானது, இருப்பைப் பூவை தின்ற வாயுடன் நிலம் புழுதி பறக்க விரைந்து சென்று கொன்றைப் பழத்தைக் கோதும் வலிமையான கைகளையுடைய கரடிக் கூட்டம் திரியும்வழி. அச்சம் பொருந்திய வழியில் செல்லு என் மகளுக்கு உண்மையே பேசும் கோசர் வாழும், பாகற்காயைத் தின்னும் தோகை மயில்கள் நிரம்ப உள்ள, பொருளின்றி வாழ்வோரைப் பாதுகாக்கும் பண்புடைய துளுநாட்டு மக்களை போல அங்கு உள்ள ஊர்களின் மக்கள் அறிந்தவர்களாக இருக்கட்டும் எனும் கருத்தைத் தருகின்றது. மேலும்,

மடமயில் அன்ன என் நடைமெலி பேதை

தோள்துணை யாகத் துயிற்றத் துஞ்சாள்

வேட்டக்கள்வர் விசியுறு கடுங்கண்

சேக்கோள் அறையும் தண்ணுமை

கேட்குநள் கொல் எனக் கலுழும் என் நெஞ்சே  (அகம். 63-15)

என்ற பாடல் அச்சம் தரும் காட்டினைக் கடந்து சென்றவள் கன்றுகளைக் காணாமல் இரு பசுக்களை வீடுகளுக்குக் கொண்டு வந்து சேர்க்க விரைந்த நடையை உடைய வெட்சி வீரர் ஆரவாரிக்கும் சிற்றூரில் இரவில் முதுமைப் பெண்டிர் வாழும் குடிசையில் தங்கிய மயில் போன்ற அடிக்கப்பெறும் பறையின் ஒலியைக் கேட்டுத் தூங்காது அழுவாளோ என்று நினைத்து ஏங்கும் என்மகள் அவன் தோளில் அணைந்து வேட்டையாடுவோர் காளைகளைக் காப்பாற்றும் போது என் நெஞ்சினை எண்ணி வருந்துகிறேன் என்பதில் மயிலின் மென்மைத் தன்மையைப் பெண்ணுக்கு உவமைப்படுத்தியது புலனாகிறது.

பீலிசூட்டிய பிறங்குநிலை நடுகல்

வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்

மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர்

கழிப்பிணிக் கறைத்தோல் நிரைகண் டன்ன

உவல்இடு பதுக்கை ஆள்உகு பறந்தலை (அகம். 67-10)

என்னும் பாடல் தோழி! தலைவன் பொருள் தேடச் சென்ற வழியின் கொடுமை எத்தகையது என்பதைக் கேள். வானம்பாடிப் பறவை பாடியும் மேகம் மழை பெய்யாது போனதால் மரங்கள் இலைகள் உதிர்ந்து பொலிவிழந்தன. கற்குவியல்களும் நெல்லி மரங்களும் உடைய இடங்களில் வெட்சியார் கொண்டு சென்ற ஆநிரைகளை மீட்டுச் சென்று நடத்திய போரில் இறந்த கரந்தை இரவுப் பொழுதில் கையில் வில்லும் அம்புமாய் இடுக்கிய பார்வையுடன், கரந்தை வீரர்கள் வீரர்களுக்கு அவர்களின் பெயர்கள் எழுதி நடப்பெற்ற நடுகற்களுக்கு மயில்தோகை சுட்டியிருப்பதை
அறியலாம்.

மந்தி நல்அவை மருள்வன நோக்க

கழைவளர் அடுக்கத்து இயலி ஆடும் மயில் (அகம். 32-8,9)

பூத்த பூக்களில் உள்ள தேனை உண்ணும் வண்டுகளின் இனிமையான ஓசை யாழ்போல்
கேட்டது.இவ்வாறு பல இசைகளைக் கேட்ட குரங்குகள் பார்வையாளர்களை வியப்புடன் பார்த்தன. காட்டில் மயில்கள் அவைக்களத்தில் ஆடும் மகளிரைப்போன்று ஆடிய செய்தி இங்கும் பதிவாகியுள்ளது.

நல்நாள் பூத்த நாகுஇள வேங்கை

நறுவீ ஆடிய பொறிவரி மஞ்ஞை

நனைப்பசுங் குருந்தின் நாறுசினை இருந்து

துணைப்பயிர்ந்து அகவும் துணைதரு தண்கார்

வருதும், யாம் எனத் தோற்றிய (அகம். 25-10-14)

கார்ப்பருவம் வந்துவிட்டது. மலைச்சாரலில் ஈன்ற பெண் யானையின் பசியைப் போக்க ஆண் யானை மூங்கிலின் முளையைக் கொண்டு வந்து உண்ணச் செய்யும் திறையன் என்பவனது வேங்கட மலையில் அன்று பூத்த வேங்கை மரப் பூக்களின் பூந்தாது படிந்த புல்லிகளுடன் கூடிய மயில் குருந்தமரக் கிளையில் இருந்து குளிர்ச்சி பொருந்திய கார்காலம் வந்து விட்டதால் தலைவர் உறுதியாக வருவார். இங்கு மயில் காலத்தை அறிந்து வெளிப்படுத்தக்கூடிய பறவையாக சங்ககாலத்தில் இருந்ததை அறியமுடிகின்றது.

அருஞ்சுரம் இறந்தனள் என்ப – பெருஞ்சீர்

அன்னி குறுக்கைப் பறத்தலை திதியன்

தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணிய

நன்னர் மெல்இணர்ப் புன்னை போலக்

கடுநவைப் படீஇயர் மாதோ களிமயில்

குஞ்சரக் குரல குருகோடு ஆலும் (அகம். 145-10-15)

என்ற பாடல் வரிகளில் மயிலை வீட்டில் வளர்த்த செய்தி புலப்படுத்துகிறது.

களிமயிற் கலாவத் தன்ன தோளே (அகம். 152-14)

எனும் வரி தித்தன் வெளியன் என்பவனது நண்பன் நன்னன் ஏழில் என்னும் மலையின் பக்கமலையாகிய பாழி என்ற இடத்திலுள்ள மயிலின் தோகையைப் போன்றது தலைவியின் வளைந்த சுருண்ட கூந்தல் என்று இப்பாடல் சுட்டுகிறது.

வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி (அகம். 158-5)

இவ்வரி, ஒரு பெண் மலையிலிருந்து இறங்கும் மயில்போலத் தளர்ந்து நடந்து பரணில் இருந்து இறங்கி வரக்கண்டேன் என்று தோழி செவிலியிடம் கூறுவதாய் இப்பாடல் அமைந்துள்ளது.

கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப்பெடை

அயிரியாற்று அடைகரை வயிரின் நரலும்

காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்

வல்லே வருவர் போலும் வென்வேல்

இலைநிறம் பெயர ஓச்சி மாற்றோர் (அகம். 177-10-4)

        என்ற பாடல், மலைச்சாரலில் சுரபுன்னைமரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றின் கிளைகள் வாட கிடந்ததால் பாறைகள் சுடும். அங்கு நிறைந்த கர்ப்பத்தோடு உள்ள பெண் மயில் நீர் கிடைக்காமல் இக்கோடைக்காலத்தில் வெயில் தணிந்துவிட்ட மாலை நேரத்திலும் பகல் முழுவதும் வெயிலில் அயிரி என்னும் ஆற்றங்கரையில் ஊதப்படும் ஊது கொம்பு போலக் கூவுவதைக் காட்டுகின்றது.

ஒல்குஇயல் மடமயில் ஒழித்த பீலி (அகம்.281-4)

எனும் அடி, தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்ததைக் கூறும்பொழுது மோரிய மரபினர் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வரும்போது வடுகரைத் துணையாகக் கொண்டனர். அந்த வடுகர் வளைந்து நடக்கும் நடையை உடைய மயில், தன் சிறகினின்று உதிர்த்த தோகையைத் தம் வில்லில் சுற்றியிருப்பர். அதனால் அது பல கண்களைத் திறந்து பார்ப்பதுபோல் தோன்றி வெற்றி இலக்கை அடையும். வடுகர் மயிலிறகினை வில்லில் பொருத்தியிருந்த செய்தியை இங்குக் காணமுடிகிறது.

மயிலினம் பயிலும் கானம் (அகம். 3474-6)

தலைவன் தலைவியின் பசலையைப் போக்க நீ உதவுக என்று பாகனிடம் கூறுகிறான். அதாவது கூர்மையான பற்களையும் ஒளிபொருந்திய நெற்றியினையும் உடைய மகளிரது ஒழுங்குபட்ட தோளி என்னும் விளையாட்டைப் போன்று மயிலினங்கள் கூடி ஆடி இயங்கும் மரங்கள் அடர்ந்த காட்டு வழியில் நீ விரைந்து செல்க என்று இப்பாடல் உணர்த்துகிறது.

இனமயில் அகவும் கார்கொள் வியன் புனத்து (அகம். 334-1)

            கார்காலத்தில் மயில் கூட்டங்கள் அகவிக் கொண்டிருக்கும் தன்மையை இப்பாடல் குறிப்பிடுகிறது.

ஆடுமயில் முன்னது ஆக, கோடியர்

விழவுகொள் மூதூர் விறலி (அகம். 352-4)

        பெரிய பலாப்பழத்தினை ஆண் குரங்கு கையில் வைத்திருக்கும். அருவிகள் ஒலிக்கும் கற்பாறையில் ஆடும் மயில் தன் முன்னே நிற்க, கூத்தர் விழாக் கொண்டாடும் முதுமை வாய்ந்த ஊரில் விறலியின் பின் நின்று முழவை இயக்குபவன் என்று இப்பாடல் மூலம் மயிலின் சிறப்பை அறியலாம்.

காமர் பீலி ஆய்மயில் தோகை (அகம். 358-2)

        நீல மணிபோன்ற நிறம் கொண்ட கழுத்தினையும் பீலிகள் நிறைந்த தோகையினையும் உடைய மயில்கள் இனிய குரல் கொண்டு தாளத்திற்கேற்ப ஆடும் தன்மை கொண்டவை.

மடமயிற் குடுமியின் தோன்றும் நாடன் (அகம். 368-7)

        குன்றின் பக்கத்தில் நீண்ட அடியை உடைய மரங்களில் இளைய மயிலின் உச்சியின் மேல் உள்ள குடுமி போல் தோன்றும் மலைநாட்டை உடைய தலைவன். இங்கு, மயிலின் குடுமியை மலைக்கு ஒப்பிட்டுக் கூறுவதை அறியமுடிகிறது.

கிள்ளையும் தீம்பால் உண்ணா மயில் இயல் (அகம். 369-4)

காமர் பீலி ஆய்மயில் தோகை (அகம். 378-5)

எனும் வரிகள், மலைவாழ் ஆடுகளின் கொம்புடைய இளைய கடாக்களின் ஒலியை கேட்டு மயில்கள் அஞ்சி ஓடும் என்றும், ஆடும் களத்தில் ஒலிக்கும் கொம்பு போன்று அம்மயில்கள் ஒலித்து அருகிலுள்ள மூங்கிலின் பகுதியில் தங்கியிருக்கும் என்றும் மயில் பற்றிய செய்திகளைச் சுட்டுகின்றன. மேலும்,

தன் ஓான்ன ஆயமும், மயில் இயல்

என் ஓரன்ன தாயரும் (அகம். 385-1)

ஆடுமயில் பீலியின் பொங்க (அகம். 385-14)

இதில், மயில் போன்ற சாயலை உடைய என் மகள் மயிற்சாந்து பூசி எல்லாச் சிறப்புகளையும் செய்து திருமணம் நடக்கச் செல்லாதவளாய் தலைவனுடன் சென்றாள் என்கிறாள் செவிலி.

நனவுறு கட்சியின் நல்மயில் ஆல் (அகம். 392-17)

        தினைப்பயிரை மேய்ந்த யானைக்கூட்டம் நிலைகெட்டு ஓடும்படி பரணில் இருந்து கானவ வீசிய கவண் கல்லின் கடுமையான ஓசை எங்கும் ஒலித்தது. அதைக் கேட்டு அழகிய மயிலும் இடியோசை என எண்ணியது. இவ்வாறாகச் சங்க இலக்கியங்கள் காட்டும் மயில் தலைவியி அழகு, நொச்சிமரம், முல்லைக்கொடி போன்ற வர்ணனைகளாகவும் உவமைகளாகவும் பெரும்
பாலான இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

        ஒரு சில பாடல்கள் மட்டும் மயில்கள் போர் செய்வதற்கும் அதன் தோகையைப் போ செல்லும் வில்லில் பொருந்தியதையும் சுட்டுகிறது. அழகுகளில் ராணியாகப் போற்றப்படும். அழகோடு மயிலானது பெண்களின் ஒப்பிடப்பட்டுள்ளமையும் போர்க் கருவியா இருந்துள்ளமையும் தெளிவாகிறது.

புறநானூறு காட்டும் மயில்

மணிமயில் உயரிய மாறா வென்றிப்

பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்என (புறம். 56:7-8)

        இப்பாடலில் பிணி என்பது மயிலை குறிக்கின்ற சொல்லாகும். மன்னனைப் புகழ்ந்து பாடும் இடத்து கடவுளும் நீயே காவலனும் நீயே என்று கூறி அழகிய மயிலைக் கொடியாக உடைய குன்றாத வெற்றி வேலேந்திய மயிலேறும் முருகவேளும் என்று கூறப்படுகிறது.

பயில்பூஞ் சோலை மயிலெழுந்து ஆலவும் (புறம். 116:10)

        பாரி இறந்த துயர் பொறுக்காது பூமலர் விரிந்த புதுமலர்ச் சோலையில் மயில் எழுந்து ஆடியது என்பதைப் புலவர் மேற்கண்ட வரியில் கூறுகிறார். மேலும்,

மென்மயில் புனிற்றுப்பெடை கடுப்ப நீடி (புறம். 120: 6)

எனும் வரியால் மெல்லிய மயிலினது ஈன்றணிய பெட்டை போல ஒங்கி, பாரி என்ற செய்தி பெறப்படுகின்றது.

மடத்தகை மாமயில் பனிக்கும் என்றருளி (புறம். 142: 1)

        மேலணிந்திருந்த போர்வையை எடுத்து, அந்த மயிலுக்குப் போர்த்தி அருளிய பேகனின் சிறப்பு எனும் அடியில், மென்மைச் சாயலுடைய மயில் குளிரால் வருந்தும் என்று எண்ணித் தன் சுட்டப்படுகின்றது.

கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன (புறம். 146: 8)

        எனும் அடியில், அணிமணி புனைந்த பேகனின் மனையாள், தோகை மயில் விரித்தது போன்று கூந்தல் வாசப் புகை மணம் பெறவும், குளிர்ந்த மணம் தரும் மாலை சூடி மகிழவும், உனது தேர் உன் மனைவியை விரைந்து சென்று காணுமாக என்று பேகனிடம் அரிசில்கிழார் உரைக்கிறார்.

இல்வழங்கு மடமயில் பிணிக்கும் (புறம். 252: 4)

எனும் அடி, ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் அழகு மயில் போன்ற இளம் பெண்களைக் கவர்பவன் என்பது குறித்துக் கூறுகின்றது. இங்கு மயில் என்பது பெண்களைக் குறிக்கின்றது. மேலும்,

அணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்து (புறம். 264:3)

அழகிய மயில் தோகையும் அணிவித்துப் பெயரும் எழுதி கல்லும் நட்டுவிட்டனரே! போரில் மன்னன் இறந்ததை அறியாமல் பாணர் கூட்டம் பரிசில் பெற வருவதற்கு இனிமேல் வழியுண்டோ என்று உரைக்கிறார்.

மயில் அம்சாயல் மாஅயோளொடு (புறம். 318: 23)

உணவாக்கப் பறித்து வந்த கீரை வாடி வதங்க, காட்டிலிருந்து வெட்டி வரப்பட்ட விறகுக் கட்டைகள் பற்ற வைக்கப்படாமல் உலர, மயில் போன்ற சாயலுடைய அழகிய மனைவியோடு கூடிவாழும், பெருந்தகையாளன் ஊர் அவன் போரில் துன்பத்துக்காளானானென்றால் பசியால் வாடி வருந்தும் எனும் செய்தி மேற்கண்ட பாடலடியின் தொடர்ச்சியாக வருவதை அறியமுடிகிறது.

கலித்தொகையில் மயில்

கல்மிசை மயில் ஆல, கறங்கி ஊர் அலர் தூற்ற

தொல்நலம் நனிசாய நம்மையோ மறந்தைக்க (பாலை. 27)

        என்ற பாடல் அதோ! மயில் பார்! அழகிய தோகை விரித்தாடும் மயில் ஆடுகிறது. அது என்னைப் பார்த்து உன் மேனி வண்ணம் எங்கே? வனப்பு எங்கே? என்று கேட்டு இகழ்வது போலிருக்கிறது என்று தலைவன் பிரிவால் வாடும் தலைவி தோழியிடம் புலம்புவதாக அமைந்துள்ளது.

நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி

உருவது போலும் என் நெஞ்சு எள்ளித்

தொகுபு உடன் ஆடுவ போலும், மயில் கையில் (பாலை. 33)

        என்ற பாடல் வரி மயில் தோகை விரித்து ஆடுவதைக் குறிப்பிடுகிறது.

நெடுமிசைச்சூழும் மயில் ஆலும் சீர (பாலை. 36)

        எனும் பாடல் வரியில் இளவேனில் காலத்தில் வெண் கடம்ப மரத்தில் ஒரு மயில் அமர்ந்திருக்கிறது. அது தன் அழகிய தோகையை விரித்து ஆடுகிறது. ஆடும் மயிலைக் காண்கிறாள் ஒரு பெண். அவளுக்கு மயில் ஆடுவது மகளிர் ஆடுவது போல் தோற்றமளிப்பதை உணர்த்துகிறது.

மெல்ல இயலும் மயிலும் அன்று

சொல்லத் தளரும், கிளியும் அன்று (குறி. 55)

என்ற பாடல்வரியில் மகளிரின் நடைக்கு மயிலை ஒப்பிட்டுக் கூறியுள்ளதை அறியமுடிகிறது.

ஆய்தூவி அனம் என, அணிமயிற் பெடை என

தூது உண் அம்புறவு என துதைந்த நின் எழில் நலம் (குறி. 56)


            அன்ன நடை மயில் போன்ற சாயல் என்று பெண்ணுக்கு மயில் அழகை ஒப்பிட்ட
கூறியுள்ளனர்.

மாவென்ற மடநோக்கின், மயில் இயல், தளர்பு ஒல்கி (குறி. 57)

இந்தப் பாடல்வரியும் மயில் அழகோடு தலைவியை ஒப்புமைப்படுத்திக் கூறியுள்ளது.

மயில் எருத்து உறழ் அணிமணி நிலத்துப் பிறழ

பயில் இதழ் மலர் உண்கண் (முல். 108)

வலை உறு மயிலின் வருந்தினை, பெரிது என

தலையுற முன் அடிப் பணிவான் போலவும் (நெய்.128)

எழில் அஞ்சு மயிலின் நடுங்கி, சேக்கையின்

அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே (நெய்.137)

            மேற்கண்ட பாடல்களின் வாயிலாக மயில் பெண்களின் அழகை வர்ணிக்கவும், அ உணர்த்துவதைக் காணலாம். கலித்தொகைப் பாடல்கள் பெண்களின் அழகோடு மட்டு இழந்த நிலையில் தோகை உதிர்ந்த மயில் போல என் அழகும் இழந்துவிட்டது என்பதை ஒப்புமைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளதை அறியலாம். கோலக் கலாபம் விரித்தாடும் நீல மயிலின் தோற்றத்தை நடமாடும் விறலியர்க்கு உவமைய கூறுவர் பண்டைப் புலவர்கள்.

பத்துப்பாட்டில் மயிலின் சிறப்பு

திருமுருகாற்றுப்படை

மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு

செய்யன் சிவந்த ஆடையன், செவ்வரைச்

செயலைத்தண்கதளிர் துயல்வரும் காதினள் (திருமுருகாற்றுப்படை, 205)

        முருகப் பெருமானானவன் மயிலை ஊர்தியாகக் கொண்டவன், நெடிய உருவம் படைத்தவன், சிவந்த ஆடையை உடையவன், தொடி என்னும் அணியைத் தோளில் அணிந்தவன் இப்படிப் மகளிருக்கு முதற்கை கொடுத்து, மலைகள் தோறும் சென்று விளையாடுதல் முருகக் கடவுளின் நிலைத்த குணமாகும்.

பொருநராற்றுப்படை

பெடைமயில் உருவின், பொருந்தகு பாடினி (பொருந. 47)

        உச்சி வேளையில் நடத்தலைத் தவிர்த்தலால் பெடைமயில் அருகு நின்ற மயில் போலும் சாயலையுடைய கல்விப் பெருமைமிக்க பாடினி.

மடக்கண்ண மயில் ஆல (பொருந. 190)

குறிஞ்சி நிலப் பறவையாகிய மயில் மருத நிலத்துக் காஞ்சி மரத்திலும், மருத மரத்திலும் இருந்தது என்பார்கள்.

சிறுபாணாற்றுப்படை

மயில், மயிற் குளிக்கும் சாயல், சாஅய் (சிறு. 16)

அழகு மிக்க விறலியருடன் இளைப்பாறும் இரவலன் விறலியரை வர்ணிக்கும் பொழுது அவளின் கருங்கூந்தலைக் கண்டு மழைமேகம் என நினைத்துக் களி கொண்ட மயில்கள் பலவும் கூடி நீலமணி போலுங் கண்ணினையுடைய தோகைகளை விரித்து ஆடுவதைப் போன்று ‘இவர் மென்சாயற்கு ஒவ்வேம்’ என்று நாணி மறைதற்குக் காரணமாகிய கட்புலனாகிய மென்மை உடையவள் விறலியாவாள்.

கருநனைக் கணமயில் அவிழவும் (சிறு.165)

            விறலியும் இரவலனும் முல்லை நிலத்தைச் சார்ந்த வேலூரினை அடைவர். அங்கே அவர்களைப் பவழம் கோத்தாற் போன்று பூத்திருக்கும் கருநிறக் காயாவின் அரும்பு, மயிலின் கழுத்துப் போன்று மலர்ந்திருப்பதைக் கண்டார்கள்.

மணிமயில் கலாபம் மஞ்சுஇடைப் பரப்பி (சிறு.265)

நல்லியக்கோடனது மலையின் புகழினை விளக்கும் முகமாக மென்தோளும் துகில் அணிந்த அல்குலும், ஆடிய சாயலும் உடைய மகளிர் அகிற்புகை ஊட்டுதற்பொருட்டு விரித்த கூந்தலைப் போன்று, மயில் தன் தோகையை விரித்து ஆடுதற்குக் காரணமான கருமேகங்கள் வெண்மேகமாகிய
மஞ்சின் இடையே தவிழ்கின்ற மலை.

மதுரைக்காஞ்சி

மயிலகவு மலிபொங்கர் (மது.கா.333)

மயில்கள் ஆரவாரிக்கும் பொழில் பகுதியாகும்.

மயிலிய லோரும் மடமொழி யோரும் (மது. கா. 418)

மயிலின் தன்மையை உடையோரும் மடப்பத்தையுடைய மொழியினை உடையோர்.

நன்மா மயிலின் மென்மெல இயலிக் (மது. கா. 608)

நன்றாகிய பெருமையையுடைய மயில்போல மெத்தென மெத்தென நடந்து சென்ற முதற்சூல் கொண்ட பெண்கள்.

அன்னங் கரைய அணிமயில் அகவப் (மது. கா. 675)

வண்டாழங் குருகினுடைய சேவல்களின் விருப்பத்தையுடைய அன்னச் சேவல்களும் தமக்குரியா பேடைகளை அழைப்ப அதேபோல் அழகிய மயில்கள் பேடைகளை அழைப்ப.

மயிலோ ரன்ன சாயல் மாவின் (மது. கா. 706)

        மயிலோடு ஒரு தன்மைத்தாகிய மென்மையினையுடைய பெண் என்று இப்பாடல் குறிப்பிடுகிறது.

நெடுநல்வாடை

கலிமயில் அகவும் வயிர்மருள் இன்னிசை (நெடு. 99)

        அரண்மனையின் தோற்றத்தை விளக்கும் பொருட்டு அங்கே அயலிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும்.

பட்டினப்பாலை

மயிலியல் மானோக்கிற் (பட்டினப்பாலை, 149)

        பட்டினப்பாலை தெருக்களில் மயிலின் இயலினையும் மான் போன்ற பார்வையினையும் உடைய மகளிர் இருந்தனர் என்பதாகும்.

கடையெழு வள்ளல்களுள் பேகன்

        மயில் உடுத்துமா? போர்த்துமா என்று அறியாமல் அது மழைமேகங்கண்டு ஆடுவதைப் பார்த்து குளிருக்கு நடுங்குவதாகக் கருதி மனம் நடுங்கினான் மன்னன் பேகன். தான் நடுங்கிக் கொண்டே மயில் நடுக்கம் தீர்ப்பதற்குத் தன் போர்வையை வழங்கினான். பேகனுக்குத் தமிழ் இலக்கியத்தில் அழியா வாழ்வளித்துத் தந்தது மயில்.

மயில் ஆட்டத்தில் மனம் பறிகொடுத்த பாவலர் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் குறிஞ்சிக் கபிலர். களித்தாடும் மயிலைக் கண்டார் தம் எண்ணத்திரையில் வண்ண ஓவியமாகத் தீட்டினார். அதனைச் சொல் ஓவியமாக்கித் தமிழ் உலகுக்குத் தந்தார். அகம் 82-வது பாடலில் மயில் பற்றிய சிறப்பை இவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அற இலக்கியத்தில் மயில்

பழமொழி நானூறு

முன்னை உடையது காவாது இகழ்ந்து இருந்து பி

ன்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் இன்இயற்கைப்

பைத்து அகன்ற அல்குலாய் – அஃதால் அவ்வெண்ணெய்மேல்

வைத்து, மயில் கொள்ளுமாறு (பழ. நா.325)

        இனிய இயல்பையும் அகன்ற அல்குலையும் உடைய பெண்ணே! செல்வம் திரண்டு இருந்தபோது அதனைக் காப்பாற்றாமல் அழிய விட்டுவிட்டுப் பின்னர் மீண்டும் செல்வம் சேர்க்க முயலுவது மயிலின் தலைமேல் வெண்ணெயை வைத்து அது வெயிலில் உருகி மயிலின் கண்களை மறைத்துவிடும்போது மயிலைப் பிடித்து விடலாம் என்று நினைப்பதற்கு ஒப்பாகும்.

துயிலும் பொழுதே தொடு ஊன் மேற்கொண்டு

வெயிலில் வரிபோழ்தின் வெளிப்பட்டார் ஆகி

அயில் போலும் கண்ணாய்! – அடைந்தாள் போல் காட்டி

மயில் போலும் கள்வர் உடைத்து (பழ. நா.353)

வேல் போன்ற கூரிய கண்ணை உடையவளே, மக்கள் அனைவரும் உறங்கும் நள்ளிரவில் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே உள்ளவற்றைத் திருடிச் சென்றுவிடும் கள்வர், சற்றே ஓய்வு கொண்டு பகலில் நல்லவர் போல் வெளிப்படுவர், நான்கு பேருடன் கூடிப் பழகுவர். பாம்பைப் பற்றி விழுங்கி நல்லவர்போல் நடிக்கும் மயில் போன்ற கள்வர் இத்தகையோரை உடையது இந்நாடு. மயில் போன்ற கள்வர் என்ற அழகிய உவமைத் தொடர் அக்கால நிலைமையைக் காட்டுகிறது.

திருக்குறள்

“பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்” (குறள். 475)

        மயில்பீலி இலேசாக இருக்கும் என்று கருதி மிகுதியாக ஒரு வண்டியில் ஏற்றிச் சென்றால் அவ்வண்டியின் அச்சாணி முறிந்துவிடும். அதேபோன்று தன் வலிமையினை உணராது பெரிய செயல்களைச் செய்ய நினைப்பவனும் வெற்றிபெறாது வீழ்ந்துவிடுவான் என்பது இக்குறளின் பொருள். அதாவது ஒருவனுடைய வன்மையை வெற்றிபெறச் செய்வதற்கு மயிலின் தோகை இங்கு உவமிக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. மேலும் மயிலின் தோகை பஞ்சுபோல இலேசாக இருப்பதும் இவற்றினூடாகக் காணலாம்.

பக்தி இலக்கியம் சுட்டும் மயில்


பக்தி இலக்கியத்தில் திருஞானசம்பந்தர் பதிகத்தில் பாண்டியனின் வெப்புநோயைத் தீர்க்க சமணர்கள் அவன் உடலை மயிற்பீலியால் தடவிய செய்தி புலப்படுகிறது. இதன் வாயிலாக மயில் தோகை குளிர்ச்சி பொருந்தி நோய் தீர்க்கும் மருந்தாகவும் பயன்பட்டிருப்பதை இங்குக் காண முடிகிறது.

காப்பியத்தில் மயில்

கயிலை நன் மலையிறை மகனை நின் மதிநுதல்

மயிலியல் மடவரல் மலையர்தம் மகளிர் (சிலம்பு: குன். குரவை. 15: 6-7)

என்ற பாடல் வரியில் மயில் பற்றிய செய்தி பெண்களோடு ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளதைக் முடிகிறது.

இராமாயணம்

மயிலின் குஞ்சுகளுள் தலைக்குஞ்சே தனிப் பேரழகினது என்றும், தலைமைக்குரியது என்றும். கூறுவர். ஆதலால் மூத்தவர்க்கு அரசுரிமையுடைய முடிமன்னர் குலம் மயின்முறைக்குலம் ‘மயின்முறைக்குலத்துரிமையை மாற்றாதே’ என்று தயரதன் அவளிடம் மண்டியிட்டுக் கிடந்தது. எனப்பெற்றது. அக்குலத்து வந்தவன் கேகயன் ஆனான். அவன் மகள் கைகேயி ஆனா இராமகாதைச் செய்தி குறிப்பிடுவதிலிருந்து மயிலின் சிறப்பு புலப்படுகிறது.

சிற்றிலக்கியத்தில் மயில்

திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சியில்

காடை வருகுது கம்புள் வருகுது காக்கை வருகுது கொண்டைக்

குலாத்தியும் மாடப் புறாவும் மயிலும் வருகுது மற்றொரு சாரியாய்

என்ற பாடல் வரிகளில் பலவகையான பறவையின் வருகையுடன் மயிலின் சிறப்பையும் குறிப்பிட்டிருப்பது சிங்கன் கூற்று வழிக் காணமுடிகிறது.


இக்கால இலக்கியத்தில் மயில்

பாரதியார் கவிதையில் மயில்

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள்

பாரத நாடு

நன்மையி லேயுடல் வன்மையிலே – செல்வப்

பன்மையிலேமறத் தன்மையிலே

பொன்மயி லொத்திரு மாதர்தங் கற்பின்

புகழினி லேயுயர் நாடு – இந்தப்

பாருக்குள்ளே நல்ல நாடு – எங்கள் பாரத நாடு


பாரதியார், பாரதநாடு என்ற கவிதையில் பொன்மயிலை மாதர்களின் கற்பிற்கு இணையாக வைத்துப் பேசுகிறார் என்பதை அறியமுடிகிறது.

பாரதிதாசன் கவிதையில் மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே!

அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்

கருங்குயிலிருந்து விருந்து செய்யக்

கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்

தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்

அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்

தாடுகின்றாய் அழகிய மயிலே!

உனது தோகை புனையாச் சித்திரம்

ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை

உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடுகின்றாய், அலகின் நுனியில்

வைத்த உன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!

சாயல் உன் தனிச் சொத்து! எஸபாஷ் கரகோஷ்ம்!

ஆயிரம் ஆயிரம் அம் பொற்காசுகள் ஆயிரம் ஆயிரம்

அம்பிறை நிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம்

ஆன உன் மெல்லுடல் ‘ஆடல்’உன் உயிர் இ

வைகள் என்னை எடுத்துப் போயின!

இப்போது ‘என் நினைவு’ என்னும் உலகில்

மீண்டேன் உனக்கோர் விசயம் சொல்வேன்

நீயும் பெண்களும் ‘நிகர்’ என்கின்றார்.


            பாரதிதாசன் தன்னுடைய கவிதைத் தொகுப்பில் மயிலின் தன்மை பற்றி விரிவாக விவரித்துக் கூறியுள்ளார். மயிலின் தோற்றம், நடை, பார்வை, மெல்லுடல், ஆடல், சாயல், தோகை முதலியவற்றை எல்லாம் வர்ணித்து அதனை அவரின் நினைவில் வைத்து இறுதியாக மயிலானது பெண்களுக்கு நிகர் என்று எடுத்துக் கூறியுள்ளார். மேலும்,

‘பதுக்க முடியாப்

பவுன் முத்திரை நீ

ஒதுக்க முடியா

ஓவியத் திரை நீ

நட்டுவம் இன்றி

நடத்தும் கலை நீ

கொட்டு முழக்கின்றிக்

குதிக்கும் சிலை நீ!

அழகு நடன

அரும்பத வுரை நீ

மெழுகுப் பச்சையின்

மின் அனல் நுரை நீ

உயிராய்க் கிடைத்த

ஒளிப்புதை யல் நீ!

அயராது மகிழ்வேன்

ஆடுக மயில் நீ!

என்ற இப்பாடலில் மயில் கவிஞரின் பார்வைக்கும் பாட்டுக்கும் விருந்தாய்ச் சிறந்தது. அழகிய அதன் தோகையைக் கண்டு வியந்து மகிழ்கிறார். அழகிய சொல் வீச்சில் வியத்தகு மயில் காட்சி பியைப் படம் பிடித்துள்ளார் கவிஞர். மயிலின் காட்சி பதுக்கமுடியாத பவுன்முத்திரையாகவும், ஒதுக்க முடியாத ஓவியத் திரையாகவும், நட்டுவம் இன்றி நடத்தும் கலையாகவும், கொட்டு முழக்கின்றிக் குதிக்கும் சிலையாகவும், நீலத்தோகையின் நேர் துறைமுகமாகவும், அழகுநடன அரும்பத உரையாகவும், மழைக்காலத்தின் மருமகப்பிள்ளையாகவும், உயிராய்க் கிடைத்த ஒளிப் புதையலாகவும் காட்சியளித்து மகிழ்ச்சியைத் தருகிறது.

இக்காலக்கட்டங்களில் மயில்


ஆஸ்திரேலியாவின் மயில்’ எனப்படும் யாழ்ப் பறவையின் அன்பு வாழ்க்கையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இனப்பெருக்கக் காலத்தில் ஆண்பறவை ஒவ்வொன்றும் தனக்கென்று ஒரு எல்லையை அமைத்துக்கொண்டு அதை வரையறுத்துக் கொள்கிறது. ஒரு பறவை மற்றொரு நீளமான அழகிய தோகையையும், இனிய குரலையும் பெற்றிருக்கும். ஆண் மயில் முறையாகக் பறவையின் எல்லைக்குள் ஊடுருவிச் செல்லாது என்பதையும் இங்கு பதிவு செய்யலாம். ஆண்பறவை மண்ணைத் தோண்டி எடுத்து இலைகளையும் கொண்டு உயரமாக மேடை ஒன்று அமைத்து அதில் காலையிலும் மாலையிலும் இனிய குரல் எழுப்பிப்பாடும். தனது கூரிய நீண்ட நகங்களால் ஏறிநின்று கொண்டு அழகுத் தோகையை விரித்து பெண்ணைக் கவர்வதற்காக ஒயிலாக ஆடும் தன்மை, மயிலின் அன்பு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்றது.

உளவியலில் மயில்

        ‘யெங்’எனும் விலங்கியல் அறிஞர் ஆண் மயிலில் காணப்படும் நீண்ட அழகிய இறகுகள் பாலினப் பண்பாக அமைந்து பெண்ணைக் கவருவதற்காகவே அமைந்துள்ளது என்கிறார். மயிலின் ஆட்டம் கவர்ச்சிமிக்கது. அவ்வாட்டமே கூத்துக்கலைக்கு வித்து ஆகியது. மயில் அழகாக ஆடி மகிழ்ந்த இடம் அதன் பெயரால் வழங்கப்படுவதாயிற்று. மயிலாடுதுறை, மயிலாடும்பாறை, மயிலம், மயிலாப்பூர் என்பவையே அவை.

        மயிலின் ஆட்டக் கவர்ச்சி மக்களை அன்றி மற்ற உயிரினங்களையும் ஆடச்செய்தது. ‘கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி’ ஆடுவதை ஔவையாரும், ‘மந்தி குதித்தாடும் மயிலாடு துறையை` ஞானசம்பந்தரும், ‘மயிலாடும் அரங்கில் மந்தி நோக்குவதைச் சாத்தனாரும் பதிவு செய்துள்ளனர். மயிலின் அழகில் அதனை தெய்வத் திருவூர்தியாக்கி முருகனை மயிலேறும் மாணிக்கமாக்கிக் கோடி கோடி அடியார்களைத் தேடித் தேடி வணங்க வைத்தது. ‘வேலும் மயிலும்
துணை’ என்ற அடைக்கலமாகவும் மாறியது.

மயிலும் உவமைக்காட்சியும்

        தமது பண்டைய இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றில் மரபுவழி தொட்டு காட்சிப்படுத்தப்பட்ட இலக்கணக் குறிப்புகள், கவிதைகள், உவமைகள் காணப்படுகிறது. இவற்றில் இயற்கையில் காணப்படும் விலங்கினங்கள், பறவைகள் எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாகப் பறவைகளின் குணாதிசயங்களை ஒப்பிட்டும், உவமைப்படுத்தியும் பல படைக்கப்பட்டன. பறவைகளின் வரிசையில் மிகவும் குறிப்பிடும்படி
இலக்கியங்கள் உவமையாக இருப்பது மயிலாகும். மயிலின் குணாதிசியங்கள் மற்றும் பண்புகளைக்கொண்டு பெண்களின் பண்பு நலனுடன் வமைப்படுத்தித் தமிழ் மரபுவழி இலக்கணங்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மயிலானது பண்டைய வரலாற்று நூல்களில் ஒரு உவமைப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக பன்னிரு குறிப்புகளில்

“மயிலார் சாயல் மாது”

“மயிலினோர் இயல்”

என்று உருவுவமை காட்டி மகளிரை மயிலின் சாயலுக்கு ஒப்பாகவும் மற்றும் நடையை மயிலின் நடையுடன் உவமைப்படுத்தப்பட்டதற்கு சான்றாகும். மேலும், இயங்குயிர்கள் தொகுப்பில்

“நிகரில் மயிலாரிவர்”

“மயில் சாயநல்லாள்”

            என்று பெண்களை ஒப்புமைப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணக் குறிப்புகளில் உவமை உருவகம், அணிகள் பகுதியில் மயிலின் இயல்புகளை எடுத்துக்கொண்டு உதாரண வார்த்தைகள் உருவாக்கப்பட்டுள்ளது.


“இரவலர்க்கீத்தலையானினும் ஈயர்” (திருமந்திரம், 2765 – 1139)

        இந்த வரியின் பொருளானது பெண்களின் பாதம் மயிலின் இறகுகள் போன்று மென்மையாகக் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

முருகப்பெருமானின் வாகனமாகத் திகழும் மயில் வாகனத்தை “மயிற்பரி” என்றும் உச்சிக்குடுமி உடைய ஆண் மயிலை “சிகண்டி” என்றும் ஆன்றோர் கூறுவர்;

இதில் “தோகைவாம்பரி உகைத்தவன் (முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், சிறுதேர் : 4:4) நூலில் ஸ்ரீ குமரகுருபர அடிகளாகும்,

தோகைமயிற்பரியானே” (திருக்குன்றக்குடிப்பதிகம்) என்று பாம்பன் சுவாமிகளும் குறிப்பர். இம்மயில் ஓங்காரத்தின் குறியீடு என்பார் அருணகிரியார்.

“ஆனதனிமந்த்ரரூபநிலைகொண்டது
ஆடுமயில் என்பது அறியேனே”

முருகனின் தலமான குன்றக்குடி திருமலையை மயிலுக்கு ஒப்பாக உயர்வுபடுத்தி, மலை ஏறும் திருப்படிகள் மயிலின் தோகையாக திருக்கோயிலின் தளம் முதுகாக பெருமானும் பெருமாட்டியரும் எழுந்தருளியுள்ள கருவறை திருக்கோபுரம் கொண்ட குடுமியாகக் கண்டு மகிழலாம். எனவே, இம்மலையானது மயில் மலை இமயூரகிரி, சிகிமலை, சிகண்டிமலை என்று பெயரிட்டு இலக்கியங்கள் மயிலை சிறப்பு செய்கின்றன.

முடிவுரை


            பாரத நாட்டின் தேசியப்பறவை மயில். மிக அழகான பறவை. தோகை விரித்தாடும் இயல்பானது தோகையில் நீலக் கண்களும் தலையில் குஞ்சம் போன்ற பட்டுக் கொண்டையும் இதன் சிறப்புகளாகும். மயில் தேசியப்பறவையாதலால் அவற்றை வீட்டில் வளர்ப்பதற்கோ, கொல்லுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிச் செய்தால் அவர்களுக்குத் தக்க தண்டனையும் கொடுக்கப்படுகிறது என்பதிலிருந்து மயிலுக்கான முக்கியத்துவம் புலப்படுகிறது. ஆறுமுகப்பெருமான் பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மயில் தேசியப்பறவையாகவும், முருகன் ஊர்தியாகவும், சரஸ்வதி விராலிமலை முருகன் கோயிலில் காணப்படுவதை மாலை மலர் இதழ் வெளியிட்டுள்ளதையும் வாகனமாகவும், விருதுசேனன் கொடியாகவும் இருந்துள்ளமை இலக்கியங்களில் பதிவாகியுள்ளதைக் ‘ காணமுடிகிறது. மேலும் ஸ்கந்த குப்தன், ஷாஜகான் போன்றவர்களால் மயிலின் சிறப்பு மிளிர்கிறது.

பிற சிறு விலங்குகளுக்குக் காவலனாகவும் பாம்பைக் கொல்லும் திறனும் மயிலுக்கு உண்டு என்பது புலனாகிறது. சங்க இலக்கியங்கள் மயிலை நொச்சி, முல்லைக்கொடி, பெண்கள், நடனமாடும் விறலியர் போன்றவற்றின் அழகுக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளன. தெய்வமான வள்ளியின் அழகை உவமிப்பதிலிருந்து மயிலின் சிறப்பு வெளிப்படுகின்றது. அழகை உவமைப்படுத்திக் கூறுவதற்கு மட்டுமே மயிலைப் பயன்படுத்திய சங்க இலக்கியங்கள் ஒரு சில இடங்களில் மயிற் போர் செய்வதற்கும், போர்க்கருவியான வில்லில் மயில் தோகையைப் பயன்படுத்தியிருப்பதையும் பதிவு செய்துள்ளன. மேற்கூறியவற்றினை நோக்கும்போது மயில் அனைத்துச் செயல்களிலும் திறன் வாய்ந்திருப்பதை அறியலாம். மேலும் எல்லாக் காடுகளிலும் பறவைகளுக்கும், விலங்கினங்களுக்கும் பாதுகாப்புச் செய்வதோடு அவை உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையான நீர்த் தொட்டிகளும், பயிரினங்களும் விளைவிக்கப்படுகின்றன. இவற்றுள் மயிலிற்கு மிளகாய் மிகவும் பிடித்தமான உணவு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. முதுமுனைவர் கி.முத்துச்செழியன்

Ph.D., D.Sc., FNABS., FZSI., FPBS., FIEF (Canada).,

மேனாள் துணைவேந்தர், பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

ஆலோசகர், அதியமான் கல்வி நிறுவனங்கள், ஓசூர் – 635 130.

நூல் :தேசியம் கண்ட தெசியப்பறவை

பதிப்பகம் : NCBH

செய்தியின் இயல்புகள் | Nature of the News

செய்தியின் இயல்புகள் | Nature of the News

செய்தியின் இயல்புகள்

            ஒன்று செய்தியா இல்லையா வென்பதை முதலில் செய்தியாளர் தீர்மானித்து செய்திகளைச் சேகரிக்கின்றனர். அவர் திரட்டுகின்ற எல்லாம் செய்திகளாக வெளிவருவதில்லை. ஆசிரியர் குழு செய்திகள் எனக் கருதுவதே செய்தித்தாளில் அச்சாகின்றன. செய்தித்தாளில் அச்சாகும் எல்லாவற்றையும் வாசகர்கள் செய்திகளாக எண்ணுவதில்லை. சிலவற்றை தேவையற்றவை என்று படிக்காமல் ஒதுக்குகின்றனர். ஆனால் பொதுவாக ஒன்றைச் செய்தி மதிப்புடையதாகக் கருத அதில் என்னென்ன தன்மைகள் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டுக் கூறலாம்.


1. கால அண்மை (Timeliness) :

            செய்திகள் ‘சுடச்சுட’ இருக்க வேண்டும். புதுமலர்களைப் பெண்கள் விரும்புவது போல புதிய செய்திகளையே மக்கள் படிக்க விரும்புகின்றனர். ‘காலம்’ என்பது செய்திக்கு உயிர் மூச்சு; காலம் கடந்த செய்தி உயிரற்ற உடல் போன்றது. அதற்கு மதிப்பு இல்லை.


2. இட அண்மை (Proximity) :

            தங்களுக்கு அருகில், தங்களைச் சுற்றி நடப்பதில் இயல்பாக மக்களுக்கு ஆர்வம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒருவர் தில்லியில் நடைபெற்ற ஒன்றைவிட சென்னையில் நடைபெற்ற ஒன்றைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகின்றார். பக்கத்து மாநிலத்தில் ஆட்சி மாறுவதைப் பற்றிச் சாதாரண மக்கள் கவலைப்படுவதில்லை. தங்களது மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்பட்டால் அதுவே பொதுப் பேச்சாகின்றது.


3.உடனடியானவை (Immediacy) :

            செய்திகளை உடனுக்குடன் தர வேண்டும். முதலில் வரும் செய்திக்கு மதிப்பு அதிகம். ஆதலால் தான் செய்தித்தாட்கள் செய்திகளை முதலில் பெற்று (Scoop) வெளியிடப் போட்டியிடுகின்றன. செய்திகளை முந்தித் தரும் இதழ்கள் மக்களிடம் செல்வாக்குப் பெறுகின்றன.

4. முதன்மையானவை (Prominence) :

            எவை நாட்டில் முதன்மையான இடத்தையும், புகழையும் பெறுகின்றனவோ அவை செய்திகளாகப் போற்றப்படுகின்றன. முதன்மை பெறும் மனிதர்கள்,இடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை செய்தித்தாளில் இடம் பெறுகின்றன.

5. அளவு (Size) :

            செய்தியின் கருப்பொருள் மட்டுமல்ல, அது தொடர்புடைய மக்களின் பரப்பளவை ஒட்டியும் செய்தியாகின்றது. புகழ்பெற்ற எழுத்தாளரின் இறுதி ஊர்வலத்தில் பத்துப்பேர் மட்டுமே கலந்து கொண்டால் செய்தி ஓர் அமைச்சரை வரவேற்க இருவர் மட்டுமே வந்திருந்தால் செய்தியாகின்றது. முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனின் யாருடைய இறுதி இறுதி ஊர்வலத்தில், இதுவரை சென்னையில் ஊர்வலத்திலும் கூடாத அளவிற்கு மக்கள் சேர்ந்ததும் குறிப்பிடத்தக்க செய்தியாகின்றது.


6. நிகழ்விடத்திலேயே கிடைப்பவை (Spot News) :

            ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து நேரடியாக பங்கு பெற்றவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் தரும் செய்தி சிறப்பிடம் பெறுகின்றது. விபத்து நடந்த இரயிலில் பயணம் செய்து, உயிர்த்தப்பியவர், விபத்தைக் கண்ணால் கண்டபடி விவரிப்பது சிறப்புச் செய்தியாகும்.


7. விளைவுகளை உடையவை (Consequences) :

பின் விளைவுகளை ஏற்படுத்தும் எந்த நிகழ்ச்சியும் நடவடிக்கையும் மக்களின் ஆர்வத்தை தூண்டும் செய்திகளாகின்றன. நாட்டுடைமையாக்கினால் பல பொருளாதார வங்கிகளை விளைவுகளை ஒருவரை அந்தச் எதிர்பார்க்கலாம். ஒரு கட்சியில் புகழ்பெற்ற கட்சியிலிருந்து விலக்கினால் அரசியல் விளைவுகள் ஏற்படும்.

8. வியப்புக்குரியவை (Oddity):

செய்தியில் புதுமையானதாக, வியப்பிற்குரியதாக ஏதாவது இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அதனை அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஒருவன் தனது குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் அழித்துவிட்டால் அது நடைமுறை இயல்புக்கு மாறுபட்ட செய்தியாகின்றது.


9. மோதுபவை (Conflict):

முரண்படுபவையும் மோதுபவையும் செய்தியின் தன்மையைப் பெறுகின்றன. மனமொத்து வாழ்கின்ற கணவனும் மனைவியும் செய்தியாவதில்லை. ஆனால் விவாக விலக்கு செய்தியாகின்றது.


10. ஐயப்பாட்டிற்குரியவை (Suspense) :

ஏன், எதனால் நடைபெற்றதென்று வெளிப்படையாகத் தெரியாதவற்றில் செய்திகள் உள்ளன. குற்றங்களைப் பற்றிய செய்திகள் இப்படிப்பட்டவைகளாகும்.


11. உணர்வு பூர்வமானவை (Emotional Appeal):

மக்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய நிகழ்ச்சிகளை உடனடியாக செய்தித்தாட்கள் வெளியிட வேண்டும். இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் சுடப்பட்டதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க…

1.செய்திகள் என்றால் என்ன? What is NEWS?



நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள் | தன்னம்பிக்கை கட்டுரை

நம்பிக்கையுடன்-நடந்து-கொள்ளுங்கள்

நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

          உலகில் வெற்றி பெறுவது சாதனை படைப்பது போன்றவை தனி ஒரு மனிதரால் செய்ய இயலாது. உதாரணமாக “ஒரு மாணவன் பனிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம். டிவி சேனல்கள் மிக கம்பீரமாகச் செய்திகளைப் பரப்பும். இந்தச் சாதனைக்குக் காரணம் அந்த மாணவன் மட்டுமே அல்ல. அவன் படித்த பள்ளி தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பாட ஆசிரியர்கள், அவன் பிறந்த ஊர் சூழல், அவனது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் என்று ஒரு கூட்டமே உள்ளது. எனவே வெற்றி என்பது என் உழைப்பால் மட்டுமே கிடைத்தது என்று ஒருவர் கூறினால் அது உண்மையாகாது. வெற்றி பெற நினைப்பவர் தன்னை சுற்றி இருப்பவர்களின் நேசத்தையும் பாசத்தையும் பெற வேண்டும். அதற்காக அவர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். மற்றவர்களின் ஆதரவை பெற்றால் மட்டுமே சாதனை படைக்க முடியும்.

நேசத்திற்கு நடிப்பு வேண்டாம்

        மனமானது  ஆணவம், அதிகாரம், பொறாமை, வஞ்சம் போன்ற  தீயவழியில் இழுத்துச் செல்கின்ற இவ்வகை குணங்களை விடுத்து நேர்மை, உண்மை, நட்பு, நன்மை, நேசம், அன்பு, பாசம், பெருந்தன்மை போன்ற நற்குணங்களை மட்டுமே பெற்றிருக்க வேண்டும். நேர்மையான குணங்களைப் பெறுவது எளிதல்ல. வாழ்வில் பல துன்பங்களைச் சந்தித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். அவ்வாறு நற்குணங்களைப் பெற்றுள்ள நீங்கள் மற்றவரிடம் நேசமுடன் நடந்துகொள்ள வேண்டும். இனிமையாகப் பேச வேண்டும். சிலர் மற்றவருடன் இனிமையாகப் பேசுவார்கள், ஆனால் வேற்று மனிதரிடம் அவர்களைப் பழித்துப் பேசுவார்கள். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவரிடம் நேசம் கொள்வதைப்போல நடிப்பார்கள். ஒன்றை கவனியுங்கள். நடிப்பு என்பது சினிமாவிற்கு ஒத்து வருமே தவிர வாழ்கைக்கு அது ஆகாது. நடிப்பும் நீண்ட நாட்களுக்கு நிகழ்த்த முடியாது. உண்மை வெளிப்படும்போது மதிப்பே போய்விடும். மற்றவரின் மனம் நோகாமல் பேச வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் ஒரு வழியைக் கையாளுங்கள். மற்றவர்களால் உங்களுக்கு கோபம் வருகிறது. அவர்களைத் திட்டவேண்டும் போல இருக்கிறது என்றால் நீங்கள் அவரை பேச நினைக்கும் சொற்களை மற்றவர்கள் உங்கள் மீது பிரயோகித்தால் உங்கள் மனம் எவ்வாறெல்லாம் துன்பமடையும் என்று நினைத்து பாருங்கள். அப்போது மற்றவர்களைக் கடுமையாக பேச தோன்றாது. இதை எப்போதும் கைக்கொண்டால் பிறகு நீங்கள் கடுமையாகப் பேசமாட்டீர்கள் என்றால் இனிமையாக மட்டுமே பேசுவீர்கள்.

      மற்றவருடன் எந்தவித நடிப்பும் இல்லாமல் நேசமுடன் பேச தேர்ந்து விட்டால் நீங்கள் தான் வெற்றியாளர்.

நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

         இங்கு பேச்சின் மூலம் பலர் சாதனை புரிந்துள்ளனர். மற்றவரின் ஒத்துழைப்பை பெறுங்கள். சிலரிடம் நேசமுடன் பேசும்போது அவர்கள் உங்கள் மீது சில நம்பிக்கைகளை வைத்துவிடுவார்கள் அதற்கு துரோகம் செய்யாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் கேட்கும் சிலவற்றையாவது செய்துதர வேண்டும். உங்களுடன் பழகும் சிலர் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் கூறாமல் நீங்களே புரிந்து கொண்டு செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் அவ்வாறான நபர்களிடம் சிறிது கவனமாக இருக்க வேண்டும். ஒன்று அவர்களுக்கு என்ன தேவை என்பதை குறிப்பாகவோ, மற்றவர் மூலமாக அறிந்து கொண்டு செய்துவிட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக மனதில் நினைத்துக் கொண்டு கோபத்தை சேர்த்து வெறுப்பை உருவாக்கி உங்கள் மீது உங்களை சூழ்ந்துள்ள மற்றவர்களை பகைகொள்ளுமாறு செய்து உங்களுக்கு எதிராகச் செயல்களை செய்வதற்குத் திட்டங்கள் பலவற்றைத் தீட்டிக்கொள்வர். அதனால் கவனமாக இருக்க வேண்டும். மற்றவருடன் பேசும் போது அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். கடுமையான சொற்களைத் தவிர்த்துவிட்டு, உயர்வான சொற்களைப் பயன்படுத்துங்கள்.

துன்பத்தை  மாற்றும் சொற்கள்

        சொற்களைப் பயன்படுத்துவது ஓரு கலை. சிற்பியானவன் உளியைக் கொண்டு சிலையைச் செதுக்குவது போன்றது. சொற்களைக் கையாலும்விதம் உன்னதமானது. படித்த வரலாற்று செய்தி ஒன்று. ஒருமுறை மைசூரை ஆண்ட அரசர் தன்னைவிட சிறிய நாடுகள் மீது போர்தொடுத்துக் கைப்பற்றினார். போர் செய்ய இயலாத குறுநில மன்னர்கள் கப்பம் செலுத்தினர். அவருக்கு வரி செலுத்தாமல் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை பெண் அரசியார் ஒருவர் ஆட்சி செய்தார். அரசர் கப்பம் கட்டவேண்டும் இல்லையென்றால் என்னுடன் போர்தொடுக்க வேண்டுமென்று எழுதி அந்த நாட்டின்மீது போர் தொடுப்பதாக ஓலை ஒன்றை அனுப்பி வைத்தார். அதற்கு அந்த அரசியார் பதில் ஒன்று எழுதுகிறாள். “அரசே பணிவான வணக்கங்கள். நீங்கள் விடுத்த ஓலையை பார்த்தேன். அரசே! நீங்கள் பெரிய போர்ப்படை வைத்திருப்பவர். ஆனால் என்னுடையது சிறிய நிலப்பரப்பு. எனவே தங்களுக்குக் கப்பம் கட்ட இயலாது. நான் இவ்வாறு கூறுவதால் நீங்கள் கோபம் கொண்டு படையெடுத்து வாருங்கள். அதைப்பற்றி எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. உங்களுக்கே அவமானம் வந்து சேரும். ஏனென்றால் தாங்கள் என்மீது போர்செய்து வெற்றிபெற்று விட்டீர்கள் என்றால் உலகில் உள்ள அரசர்கள், சிற்றரசர்கள், மக்கள் என்று அனைவரும் இவர் ஒரு பெண்ணுடன் போர்செய்து வெற்றி பெற்றுள்ளார். இது ஒரு வெற்றியா? என்று கேலியாகப் பேசுவார்கள். அவ்வாறில்லாமல் தாங்கள் என்னிடம் மோதி தோல்வியை அடைந்துவிட்டால் போயும்போயும் ஒரு பெண்ணுடன் தோற்றுவிட்டானே இந்த அரசன் என்று தங்களை மிகவும் இழிவாகப் பேசுவார்கள். ஆகவே நீங்கள் என்மீது போர் தொடுத்து வந்தால் ஒரு மாமன்னருடன் மோதுகிறேன் என்ற பெருமை என்னை வந்து சேரும். நான் வெற்றி தோல்வி எதைப்பெற்றாலும் பெருமையே ஆகும். ஆனால் தாங்கள் என்னுடன் மோதி வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் சிறுமை தங்களுக்கே என்பதை நான் தெரிவிக்கின்றேன். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட பின்னராவது என்மீது போர் தொடுப்பதைத் தவிர்த்து விடுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் போரை தவிர்த்து விடுவீர்கள். ஏனென்றால் தாங்கள் எதையும் சிந்தித்தே செய்வீர்கள் என்பதை நான் முன்னரே அறிந்துள்ளேன். மாமன்னர்க்கு வணக்கம்” என்று எழுதி முடித்துவிட்டு ஓலையை தூதுவன் மூலம் அனுப்பி வைத்தாள். அந்த அரசியாருக்கு போர் தவிர்க்கப்பட்டது. கப்பமும் கட்டவில்லை.

       இவ்விடம் அந்தச் சொற்களை எத்தனை சீராக, தந்திரமாகப் அப்பெண் கையாண்டுள்ளார் என்பதை கவனியுங்கள். போரை தவிர்த்தால் மட்டுமே நீங்கள் சிந்தித்து செயலாற்றுபவர் என்று எழுதி அரசரை வேறு வழியில்லாமல் போரைத் தவிர்ப்பதே முடிவு என்ற நிர்ப்பந்தத்திற்கு கொண்டு வந்துவிட்டாள். இதுதான் சொற்களைக் கையாளும் விதம் ஆகும்.

ஆபத்தை உண்டாக்கும் சில சொற்கள்

        வெறுமனே ஒருவருடன் உரையாடாமல் சொற்களைக் கவனமாக கையாளுங்கள். சிலப்பதிகாரம் காப்பியத்தைக் கேள்விப்பட்டு இருக்கலாம். கண்ணகியின் கால்சிலம்பு கோவலன் கையில் பார்த்தவுடனே கள்ளத்தனம் செய்த கொல்லன் கோவலனை கள்வன் என்று கூறுகின்றான். உண்மை அறியாத பாண்டிய மன்னன் “கள்வனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க” என்று கூறிவிடுகிறான். அதாவது “சிலம்பு கொண்டு அக்கள்வனைக் கொணர்க” என்று கூறப்போய் “கள்வனைக் கொன்று” என்று பாண்டிய மன்னன் விசாரணை செய்யாமலேயே தீர்ப்பை வழங்கிவிடுகிறான். கோவலன் கொல்லப்பட்ட செய்தி கண்ணகியை எட்டுகிறது. அவள் தன் கால்சிலம்பை எடுத்துக்கொண்டு பாண்டியனுடன் வழக்காட வருகிறாள். கண்ணகியைக் கண்ட மன்னன் “யாரையோ! நீ மடக்கொடியோய்?” என்று வினவ” தேரா மன்னா செப்புவது உடையேன்” என்று தொடங்குகிறாள். அதாவது தெளிவில்லாத சரியாகத் தீர்ப்பு வழங்காத மன்னா என்று பொருள். இவ்வாறு சொற்களைக் கையாளுவது என்பது ஒரு கலை. அது வெற்றி அடையும் உங்களுக்கு மிகவும் அவசியம்.

ஆறடி மனிதனையும் பெட்டிப்பாம்பாய் அடங்கச் செய்வது நாக்குதான். அந்த நாவை அடக்கி சொற்களைச் சரியாகக் கையாண்டால் நீங்கள்தான் மிகவும் சிறப்பானவர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.
 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

செய்திகள் என்றால் என்ன? What is NEWS?

செய்திகள்-என்றால்-என்ன-What-is-news

            “எது செய்தி?” என்று இலக்கணம் வகுப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால், எவை செய்தியாகின்றன என்பதைப் பட்டியல்போட்டுக் காட்டுவதன் மூலம், செய்திக்கு விளக்கம் முயலலாம். தாம்சன் பவுண்டேஷனின் ஆசிரியர் குழுவின் ஆய்வு மையம் (Editorial study Centre of Thomson Foundation) செய்தியாகக் கூடிய இருபது வகைகளை தொகுத்தளித்திருக்கின்றது. அவை எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியவை. ஆதலால் அவற்றை விளக்கிக் கூறலாம்.


1. புதுமையானது (Novelty) :

            எது இதுவரை இல்லாமல் இப்பொழுது புதுமையாக நடக்கின்றதோ ஏனெனில் அது செய்தியாகின்றது. புதுமைக்கு மக்களைக் கவரும் ஆற்றல் மிகுதி நொண்டிப் பெண் நாட்டியம் ஆடினால் அது செய்தி. பாம்புகளோடு ஒருவர் தங்கி இருந்தால் – அது புதுமை. ஆதலால் அது செய்தி,


2. மனிதத் தாக்கம் (Personal Impact):

            சராசரி வாசகருக்குச் சுவையூட்டுவதும், அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியதும் செய்தியாக உருவெடுக்கின்றது. பங்கீட்டில் வழங்கும் சீனியின் அளவைக் கூட்டுதல், வேலை நிறுத்தத்தின் விளைவாகப் பேருந்துகள் ஒடாமை, தாங்கள் விரும்பும் நடிகரின் திருமணம் போன்றவற்றை
எடுத்துக்காட்டாகக் கூறலாம்.


3. உள்ளூர் நடவடிக்கைகள் (Local affairs) :

            தூரத்தில் நடை பெறுகின்ற ஒரு நிகழ்ச்சியைவிட உள்ளூரில் நடைபெறும் ஒன்றினை அறிந்து கொள்வதில்தான் வாசகர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். உள்ளூரில் தீ விபத்தில் நான்குபேர் இறந்திருப்பார்கள். அதே நேரத்தில் வெளிநாட்டில் 400 பேர் ஒரு பலமாடிக் கட்டிடம் இடிந்து இறந்திருப்பார்கள். இரண்டு நிகழ்ச்சிகளில் உள்ளூர் விபத்துப் பற்றி அறிந்து கொள்வதில் தான் வாசகர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருக்கும்.

4. பணம் (Money) :

            பணத்தோடு தொடர்புடையன செய்திகளாகின்றன. அரசின் வரவு-செலவுத் திட்டம், புதிய வரிகள், விலைகள் ஆகியவை செய்திக்குரிய கருப் பொருட்களாகும்.


5. குற்றம் (Crime) :

            நாட்டில் நடைபெறும் குற்றங்களைப் பற்றிய செய்திகள் ‘சூடான செய்திகளாகும்’ (Hot News), கொள்ளை, கொலை, கற்பழிப்பு, திருட்டு போன்றவற்றை அறிந்து கொள்ள பலரும் விரும்புகின்றனர். ஆதலால் அவை பற்றிய விவரங்கள் செய்திகளாகின்றன. குற்றச் செய்திகள் கதைகள் போல இருப்பதால், அவற்றைப் பலரும் படிக்கின்றனர்.


6. பால் (Sex) தொடர்பானவை :

            ஆண்-பெண் பால உணர்வு தொடர்பானவற்றில் மனித குலத்திற்கு எப்பொழுதும் ஒர் ஈடுபாடு இருக்கின்றது. மிகவும் மரியாதைக்குரிய இதழ்கள் கூட பால் உணர்வுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன. செய்திகளுக்கே மிகுதியாக இடம் ஒதுக்குவதிலிருந்தே. இவற்றின் செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட முக்கியவத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.


7. மோதல் (Conflict) :

            இருவரோ, இரண்டு அணிகளே மோதிக்கொள்ளும் பொழுது செய்தி பிறக்கின்றது. மோதலையும், முடிவையும் அறிந்து கொள்வதில் மக்கள் அக்கறை காட்டுகின்றன. கணவன்-மனைவி சண்டை, தொழிலாளர் போராட்டம், இருநாடுகளுக்கு இடையில் சண்டை போன்றவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.

8. சமயம் (Religion) :

            சமயம் சார்ந்தவற்றைப் பற்றியவை மக்களைக் கவர்கின்றன. நாத்திகர்கள் கூட சமயத்தலைவர்களைப் பற்றியும், மடங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். காஞ்சி சங்கராச்சாரியார் ஒருவர் பதவி துறந்து போக முயன்றதால் அது செய்தியாகின்றது. போப்பின் தேர்தலை உலகமே அறிந்து கொள்ள விரும்புகின்றது.


9. அழிவும் (Disaster) துயரமும் (Tragedy) :

            எங்காவது அழிவு ஏற்பட்டால் அது செய்தியில் இடம் பிடிக்கின்றது. கப்பல் மூழ்குதல், இரயில் கவிழ்தல், தீ விபத்து போன்றவை மக்களின் இதயத்தைத் தொடுகின்றன. துயரமானவை நடக்கின்ற பொழுதும், அவை மக்களிடம் இரக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. காந்தியடிகள், கென்னடி, இந்திராகாந்தி ஆகியோர் கொல்லப்பட்டவை உலகையே உலுக்கிய செய்திகள். பெருந்தலைவர் காமராசர், புரட்சித்தலைவர் எம்.ஜி. இராமச்சந்திரன் போன்றோர் மறைவுச் செய்தி நாட்டையே துயரத்தில் ஆழ்த்தியது.


10. நகைச்சுவை (Humour) :

மக்களின் நகைச்சுவைக்குத் தீனியாகக் கூடியவற்றைச் செய்தியாகக் கருதலாம். நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால், அதனைச் செய்தித்தாளில் வெளியிடுவார்கள். அவற்றைப் படித்து மக்கள் ரசிப்பார்கள்.


11. மனித ஆர்வமானவை (Human Interest) :

            பொதுவாக மனிதர்களோடு தொடர்புடைய இன்ப, துன்ப நிகழ்ச்சிகள் செய்திகளாகும் தகுதியுடையன. ஒருவர் பணத்தைத் தொலைப்பதும்; ஒருவருக்கு பரிசு கிடைப்பதும்; உத்தரப் பிரதேசக் காட்டில் ஓநாய்ப் பையனைக் கண்டுபிடித்ததும் செய்தியாகின்றன.


12. ஏழைகளைப் பற்றியவை (The Under Dog) :

            ஏழை எளியவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் செய்திகளாகின்றன. எடுத்துக்காட்டாக, ஒர் ஏழைக் குடும்பம் வறுமையில் விட்டால் உடனே செய்தியாக நஞ்சுண்டு மாண்டு
தாளாமல் வெளியிடப்படுகின்றது.


13. மர்மம் (Mystery) :

            உடனடியாகப் புரியாத மர்மமானவை எங்கு நடந்தாலும் அவை செய்தி மதிப்பைப் பெறுகின்றன. ஓரிடத்தில் காயங்களோடு ஓர் உடல் கிடந்தால், அதனைப்பற்றி அறிய எல்லோரும் எப்படிக்கொல்லப்பட்டார்” விரும்புவார்கள். “அது யாருடைய உடல், ” என்பன போன்றவற்றைச் சுவையான செய்திகளாக வெளியிடலாம்.

14. ஆரோக்கியம் (Health):

            உடல் நலத்தோடு தொடர்பானவை மக்களின் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. குணமாக முடியாத நோய் குணமானால் அதனை அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர். மந்திர, தந்திரங்களால் நோய் குணப்படுத்தப்பட்டால் உடனே அது செய்தியாக வெளிவருகின்றது. உடல்
நலக்குறிப்புகளுக்குத் தனி இடம் இருக்கின்றது.

15. அறிவியல் (Science) :

            அறிவியல் விந்தைகளும் சாதனைகளும் செய்திகளாக வடிவெடுக்கின்றன. முதன் முதலில் உலகைச் சுற்றி வந்த விண்வெளி வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள மக்கள் விழைகின்றனர். புதிய கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிப்பாளர்களும் செய்தித்தாளில் இடம் பெறுகின்றனர். நோபெல் பரிசு பெற்ற அறிவியலறிஞர்களை உலகம் முழுவதும் அறிந்து பாராட்டுகின்றது.

16. பொழுது போக்கு (Entertainment) :

            திரைப்படங்கள், நாடகங்கள், விளையாட்டுக்கள் போன்ற பொழுது போக்குக்குத் துணை செய்கின்றவை பற்றிய விவரங்களை அறியும் ஆர்வம் இயல்பாக மக்களிடம் இருக்கின்றது. ஆதலால் தான் திரைப்படங்களைப் பற்றிய பல்வேறு வகையான செய்திகளும் எப்பொழுதும் சுவை தருவனவாக உள்ளன. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள், ஆட்டக்காரர்கள் மீது மக்கள் காட்டும் இடையறா ஆர்வத்தைப் பார்க்கின்றோம்.


17. புகழ்பெற்ற மக்கள் (Famous People) :

            சமுதாயம், சமயம், அரசியல், விளையாட்டு, திரைப்படம் போன்ற துறைகளில் புகழ்பெற்ற மனிதர்கள் பற்றிய எந்த விவரமும் செய்தியாகின்றது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் போன்றவர்களும் புகழ் பெற்று விட்டால் செய்தியில் இடம் பிடிக்கின்றனர்.


18. தட்பவெப்ப நிலை (weather) :

            மழை பெய்தல், புயலடித்தல் போன்றவை மக்களைப் பாதிக்கின்றன. நமது நாட்டில் பருவமழை தவறினால் வேளாண்மை பாதிக்கின்றது. இங்கிலாந்து மக்கள் எப்பொழுதும் தட்பவெப்பநிலையை அறிந்து கொள்ளத் துடிப்பார்களாம். ஏனெனில் அவர்களது மாலை நிகழ்ச்சிகள் பாதிக்கக் கூடாதென்ற கவலை அவர்களுக்கு.


19.உணவு (Food) :

            மனிதன் உயிர் வாழ இன்றியமையாதது உணவு. உணவுப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டால், அதன் காரணங்களை அறிய மக்கள் முயல்கின்றனர். உணவுப்பொருட்களின் விலை ஏற்றம் மக்களைப் பாதிக்கின்றது. ஆதலால் இவை பற்றிய செய்திகளை நாளிதழ்கள் வெளியிடுவது தேவையாகும்.


20. சிறுபான்மையினர் (Minorities) :

            ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மைச் சமுதாயத்தினர் இருக்கின்றனர். நமது நாட்டில் மலைவாசிகளைச் சிறுபான்மையினராகக் கருதலாம். சிறுபான்மையினரை மற்றவர்கள் நடத்தும் முறைகளும், சிக்கல்களும் செய்தி மதிப்பைப் பெறுகின்றன.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

1.இதழியலின் தொழில் வாய்ப்புக்கள் என்னென்ன?

2.இதழியலாளரின் தகுதிகள் யாவை?

இந்தியப் பெண்களின் சமூகநிலை | (Social status of Indian women )

இந்திய பெண்களின் சமூகநிலை

இந்தியப் பெண்களின் சமூகநிலை

(Social status of Indian women )

            மேலைநாடுகளில் பெண்ணியக் கருத்துக்கள் காலப்போக்கில் வளர்ந்து மாறுபாட்டைந்ததைக் கண்டோம். இதற்கு முக்கியக் காரணம் அந்நாடுகளில் மாறிவரும் சமூகச் சூழலுக்கியைந்தவாறு பெண்ணியக் கருத்துக்களும் மாறுபாடடைந்ததாகும். பெண்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சியும், தங்கள் நிலையை மாற்ற இவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் இதற்கு வழிகோலின

            இதற்கு மாறாக, பெண்ணியக் கருத்துக்கள் இந்தியாவில் வெளிநாட்டுத் தொடர்புகளின் மூலம் ஏற்பட்டவையாகும். பெண்களின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்களை ஆட்சியாளர்களும், சமூக சீர்திருத்தவாதிகளுமே வெளியிட்டனர். பெண்கள் முன்னேற்றத்திற்கு உகந்தவை என்று தாங்கள் கருதியவற்றைப் பல திட்டங்களின் மூலமும், சட்டங்களின் மூலமும் செயற்படுத்த விழைந்தனர். இவர்கள் பெரும்பாலும் ஆண்களே ஆவர். ஆரம்ப காலங்களில் பெண்களின் பங்கேற்பு மிகவும் குறைந்த அளவிலேயே இருந்தது.

            இந்தியப் பெண்ணியத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது, இந்தியா சுதந்திரமடையுமுன்பு உள்ள காலம்; இரண்டாவது, இந்திய சுதந்திரத்திற்குப் பின் உள்ள காலம் காலகட்டத்தில் இந்தியப் பெண்ணியவாதிகள் ஆங்கிலேயர்களின் ஆளுகைக்குட்பட்டுச் செயலாற்றினர். இரண்டாவது காலகட்டத்தில் அவர்கள் சுதந்திரமாகச் செயலாற்ற முடிந்தது. ஆயின், இரு காலகட்டங்களிலும் இந்தியப் பெண்ணியம் பெரும்பாலும் செயற் திட்டங்களாகவே உள்ளது) அவ்வாறே இந்தியப் பெண்ணியம் இங்கு விளக்கப்படுகின்றது.


இந்தியப் பெண்களின் சமூக நிலை (1947-ஆம் ஆண்டு வரை)

            இந்தியச் சமூகத்தின் ஆரம்ப காலங்களில் இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றிச் சரியான முறையில் விளக்கத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. இக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட இலக்கியங்களும், சரித்திரச் சான்றுகளுமே துணை நிற்கின்றன. மேலும் அதிகமான சான்றுகள் கிடைக்குமாயின் இப்பொழுது கூறப்பட்டுள்ள கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். அல்லது அவற்றை மேலும் உறுதிப்படுத்திக் கூறுமாறும் அமையலாம். ஆயின், 19-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில அரசாலும், கிருத்துவ மதத்தினராலும், சமூக சீர்திருத்தவாதிகளாலும் தொகுக்கப்பட்ட செய்திகள் அக்கால கட்டத்தில் பெண்களின் சமூக நிலையை ஓரளவு எடுத்துக் காட்டுகின்றன. அதனால் ஆரம்ப காலங்களில் உள்ள பெண்களின் நிலையைச் சுருக்கமாகக் கூறி, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பு வரை உள்ள இந்தியப் பெண்களின் நிலை சற்று விரிவாக விளக்கப்படுகின்றது.


தொடக்க காலக் கண்ணோட்டம்


            வரலாற்று நோக்கில் இந்தியப் பெண்களின் சமூக நிலையை நோக்கும்பொழுது சமூகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் நிலை மேம்பட்டே இருந்தது என்று கருதக் காரணங்கள் உள்ளன சமூகத்தின் ஆரம்ப காலகட்டங்களில் தாய்வழிச் சமூகம் வழக்கில் இருந்தது என்ற கொள்சை இக்கருத்தை ஆதரிக்க முக்கியக் காரணமாகும்.

            இந்தியப் பெண்களின் சமூக நிலையை வரலாற்று நோக்கில் ஆராய விழைந்த அல்டேகர் (Altekar), கோசாம்பி (Kosambi), குர்யே (Ghurye), ராதா குமுத் முகர்ஜி (Radha Kumud Mokerji) முதலிய சமூக அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் வேதகாலங்களில் பெண்களின் நிலை மேன்மையுற்றிருந்தது என்பதைச் சில ஆதாரங்களோடு விளக்குகின்றனர்.(ரிக் வேதத்தில் காணப்படும் சில பாடல்கள் அக்காலத்தில் வாழ்ந்த சில பெண்களால் இயற்றப்பட்டவை. இவ்வாறு பெண்கள் இயற்றிய இருபது பாடல்கள் ரிக்வேதத்தில் காணப்படுகின்றன. அக்காலப் பெண் தத்துவவாதிகள், ‘பிரமவதனிகள்’ என்றழைக்கப்பட்டனர்) கோஷா, ரோமசா, லோபாமுத்திரா போன்றவர்கள் அவ்வாறான பிரம்மவதனிகள் ஆவர். மேலும், கார்க்கி, லசக்னவி, மைத்ரேயி போன்றவர்களும் பொது விவாதங்களில் கலந்து கொண்ட தத்துவ ஞானிகள் ஆவர்.

            வேத காலத்தில் பெண்களும் ஆண்களைப் போன்று குருகுலவாசத்திற்கனுப்பப்பட்டு, ஆண்களுக்கிணையாகக் கல்வி பயின்றனர். அவர்களுக்கும் ஆண்களைப் போன்று உபநயனம் என்ற சடங்கு செய்யப்பட்டு, அவர்களும் இரண்டாவது பிறவி பெற்றவர்களாகக் கருதப்பட்டனர். அவர்களுக்கு 16 வயதிற்குப் பின்பே திருமணங்கள் நடைபெற்றன. திருமணத்திற்கு முற்பட்ட காலகட்டத்தினை அவர்கள் அறிவை மேம்படுத்துவதற்கே பயன்படுத்தினர்.

            மேலும், பெண்கள் தங்கள் மனத்துக்கு இயைந்த கணவன்மார்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தனர். பெண்கள் விவசாயம், நெசவுத் தொழில், மட்பாண்டம் வனைதல் போன்ற தொழில்களிலும் ஆண்களுக்கிணையாகப் பணிபுரிந்தனர். ஆண்களைப் போலவே வில், அம்பு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்திப் போரிட்டனர். அவர்கள் ஆசிரியர்களாகவும், பாடகிகளாகவும், அதிகாரிகளாகவும் பணி புரிந்தனர். தாய் வழிப் பெயரையே சூட்டும் பழக்கம் அக்காலத்தில் வழக்கில் இருந்தமை, தாய்வழிச் சமூகம் அக்காலத்தில் இருந்தது என்பதற்குச் சான்றாக விளங்குகின்றது. இவ்வாறான காணரங்களினால் வேத காலத்தில் பெண்களின் நிலை உயர்வாக இருந்தது என்பது இவ்வறிஞர்களின்
கருத்தாகும்.

            தமிழ்நாட்டில் பெண்களைப் பற்றிய ஆதாரங்கள் முதல் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியங்களிலும் (கி.மு. 200 முதல் கி.பி. 200 ஆண்டு வரை) காணக் கிடக்கின்றன. தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் காட்டவில்லை. அவை ஆண்களுக்கு என்று சில இயல்புகளையும் பெண்களுக்கென்று சில குணங்களையும் வரையறுத்துக் காட்டுகின்றன. வீரம், தலைமை தாங்கும் பண்பு முதலியவை ஆண்களுக்குரியவை என்று அவற்றை உயர்த்திக் காட்டுகின்றன. அதே சமயம் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்பவை பெண்களுக்குரிய குணங்கள் என்று கூறிப் பெண்கள் இவற்றுடன் வாழ்வதே அவர்களுக்கு அழகு என்று வலியுறுத்துகின்றன. மேலும், சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும்.

            அகம் என்னும் பிரிவு ஆண், பெண் உறவுகளைப் பற்றிக்கூறும். இங்கு பெண் தலைவியாவாள். இப்பிரிவில் ஆண் பெண் உறவுகளான காதல், இல்லறம், ஊடல், பிரிவு, மக்களைப் பேணுதல் போன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பகுதிகள் விளக்கப்படுகின்றன. புறம் என்ற பகுதியில் தலைவன் ஆண் ஆவான். இப்பகுதியில் வீட்டிற்கு வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளான போரிடுதல், பொருளீட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இவ்வாறாகத் துறைகளைப் பாகுபடுத்தியதில் தவறெதுவும் இல்லை. ஆயின், இவ்வாறு பாகுபடுத்தியதன் மூலம் பெண்களுக்கென்று பாகுபடுத்திய இயல்புகளும் அதைச் சார்ந்த கடமைகளும் சமூக மதிப்பீட்டில் தாழ்ந்தவை; ஆண்களுக்குரிய இயல்புகளும் அதைச் சார்ந்த கடமைகளும் உயர்வானவை என்ற ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் ஆண் பெண் இனத்தாருக்கிடையே நிலைபெறக் காரணமாயுள்ளன.

            சங்க நூல்களும், அதன் பின்னர் தோன்றிய காப்பியங்களும் பெண்களின் கற்பின் மேன்மையைப் புகழ்ந்துரைக்கின்றன. அவை, பெண்களின் கற்பின் திறம் பற்றியும், பெண்கள் கற்பைத் தங்கள் தனிப்பெருங்குணமாகப் போற்றிப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன. அவ்வாறான தனிப்பெருங் குணமாகிய கற்பை, ஆண்களும்  கடைப்பிடிக்க வேண்டுமென அவை வலியுறுத்தவில்லை. அதற்கு மாறாக, ஆண்கள் எத்தனை பெண்களோடும் பாலுறவு கொள்ளலாம்; இவ்வாறு, நடந்து கொள்வது அவர்களது தனித்த உரிமை என்றும் விவரிக்கின்றன.

 
            காலம் செல்லச் செல்ல, இந்தியப் பெண்களின் நிலை மேலும் வீழ்ச்சியுற்று அவர்கள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாயினர். அதனால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நிலவிய இந்தியப் பெண்களின் சமூக நிலையுடன் ஒப்பிடும் பொழுது சங்ககாலப் பெண்களின் நிலை ஓரளவு மேம்பட்டே இருந்தது என்பதனை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், சங்க நூல்களில் காணப்படும் களவொழுக்கம் அக்காலச் சமூகம் பெண்களுக்குத் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளித்திருந்தது என்பதைக் காட்டுகின்றது.

            தங்களது விருப்பத்திற்குப் பெற்றோர் உடன்படவில்லையெனில் தாங்கள் விரும்பிய ஆண்மகனுடன் ‘உடன்போக்கு’, மேற்கொண்டு தங்கள் உரிமையை நிலைநாட்டவும் அவர்கள் மனவலிமை பெற்றிருந்தனர். இதைத்தவிர, பெண்கள் வீரத்திலும் சிறந்து விளங்கினர் என்பதற்குச் சங்க இலக்கியங்கள் சான்றுகள் அளிக்கின்றன. வீரத்தில் சிறந்த தாய்மார்களைச் சங்க இலக்கியங்களில் காண்கிறோம். சங்க காலத்தில் பெண்பாற் புலவர்கள் நிறையவே இருந்திருக்கின்றனர்.


            ஆயினும், ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி என்ற சமூக நீதி முறையும், ஆண் உயர்ந்தவன் பெண் தாழ்ந்தவள் என்ற கருத்தும் சங்க காலம் முதல் தமிழர் சமூகத்தில் காணப்படுகின்றன. இவை காப்பிய காலங்களில் மேலும் வலிமையுற்று பெண்களின் நிலை வீழ்ச்சியுறக் காரணமாயின. காப்பிய நூல்களைத் தொடர்ந்து வந்த நீதி நூல்கள், ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றிப் பெண்கள் தீய குணங்கள் நிறைந்தவர்கள் என்றும், ஆண் மக்களால் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்றும், விலக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றும் வலியுறுத்துகின்றன. தமிழில் எழுதப்பட்ட நீதி நூல்கள் வடமொழி நீதி நூலாகிய மனுதர்ம சாஸ்திரத்தின் கருத்துக்களை வலியுறுத்துகின்றன.

            இதற்குக் காரணங்கள் என்ன என்பதைச் சமூகவியலாரும், பெண்ணியவாதிகளும் ஆராயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுதான் காரணம் என்று வலியுறுத்திக் கூறப் பல்வேறு கால கட்டங்களில் ஏற்பட்ட சமூகப் பொருளாதாரக் கலாச்சார மாற்றங்களை விளக்கும் சான்றுகள் நமக்கு இல்லை. ஆயினும், இவைகளும் காரணங்களாக இருக்கலாம் என்று கூறச் சில ஆதாரங்கள் உள்ளன.


            இந்தியாவில் ஏற்பட்ட பல்வேறு போர்களை இதற்கு ஒரு முக்கியக் காரணமாகக் கூறலாம். இருநாடுகளிடையே போர் நிகழ்ந்து முடிந்த பின்பு வெற்றி பெற்ற வேந்தனின் வீரர்கள், தங்கள் வெற்றிக் களிப்பின் ஒரு பகுதியாக தோல்வியுற்ற நாட்டு மன்னனைக் கைது செய்து இழிவுபடுத்துவதும், அந்நாட்டுப் பொருட்களைச் சூறையாடுவதும் காலங்காலமாக வழக்கிலிருந்து வருகின்றன. இவை தவிர, தோல்வியுற்ற நாட்டு மன்னரின் மனைவியரையும், அந்நாட்டுப் பெண்களையும் கவர்ந்து சென்றும், நாட்டுப் பெண்களை இழிவுபடுத்தினர்.

        தோல்வியுற்ற இழிவுபடுத்துவதன் மூலம் அந்நாட்டை இழிவுபடுத்துவதாகக் கருதினர். இவ்வாறு இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகள் அடிக்கடி போர்களைச் சந்திக்க நேர்ந்தபொழுது, அந்நாட்டுப் பெண்கள் வேற்றரசனால் இழிவுபடுத்தப்படுவதற்கு முன்பாக உடன்கட்டை ஏறும் வழக்கத்தை மேற்கொண்டனர். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின்மீது படையெடுத்து வந்த அலெக்சாண்டர் என்னும் கிரேக்க அரசர் உடன்கட்டை ஏறும் பழக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்து வந்ததாகக் குறிப்பிடுகின்றார். காலப்போக்கில் ஒரு சமூகத்தின் பெண்களும், அவர்களது கற்பும் அச்சமூகத்தின் ஆண் மக்களால் காக்கப்பட வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது.

         பெண்கள் சுந்திரமாக வாழ்ந்த நிலை மாறி, ஒரு பெண், ‘அவள் ஆயுட்காலம் முழுவதும் காக்கப்பட வேண்டியவள்’, என்ற கருத்து உருவாயிற்று இதை மனுநீதி போன்ற நூல்கள் ஒரு திருமணத்திற்க முன்பாகத் தந்தையாலும், திருமணத்திற்குப் பின் அவள் கணவனாலும், முதுமைக் காலத்தில் அவளது மகனாலும் காப்பாற்றப்பட வேண்டியவள் என்று வலியுறுத்தின. பெண்கள்  
அவர்களின் வாழநாள் முழுவதும், ஆண்களால் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலை உருவாகியபொழுது இளம் வயதில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கமும் வழக்கில் வந்தது. ஒரு தந்தை தான் பெற்ற பெண்குழந்தையின் பாதுகாவற் பொறுப்பைக் கூடியவிரைவில் திருமணத்தின் மூலம் அடுத்தவர்களிடம் ஒப்படைக்கவே முற்பட்டான்.

       இவ்வாறாகப் பெண்கள் வலிமையற்றவர்கள்; அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற கருத்துக்கள் வலிமையுற்றதால் திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைந்தது. பெண்கள் பிறந்தது முதல் கணவன்மார்களுக்குத் தொண்டு செய்து அடிமைகளாக வாழவும், அவர்கள் மூலமாகக் குழந்தைகள் பெற்று வளர்க்கவும், கணவன் வீட்டாரிடம் அடங்கி ஒடுங்கி வாழவுமே பயிற்றுவிக்கப்பட்டனர். இதுவே அவர்களது வாழ்க்கைக் கல்வியாயிற்று. மனத்தையும், அறிவையும் வளப்படுத்தும் கல்வியறிவைப் பெறுவதும், பொது வாழ்வில் ஈடுபடுவதும் தேவையற்றவையாயின.

       மேலும், இளவயதிலேயே திருமணங்கள் நடைபெற்றமையால் திருமணமான பின்பு பள்ளிக்குச் சென்று கல்வியறிவு பெறுவதும் யலாத ஒன்றாயிற்று. பெண்களின் உலகம் வீடும் அதைச் சார்ந்த இடமுமே என்று வட்டம் சிறுத்துச் சிறுத்து, வெளி உலகிற்கு அவர்கள் வருவதும் வெளி உலக வாழ்வில் பங்கு கொள்வதும் காலப்போக்கில் தடை செய்யப்பட்டன. மேலும், வெளியுலகம் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக இருந்ததால் பெண்களை வீட்டிற்குள் அடைத்துப் பூட்டி வைக்கும் வழக்கமும் நடைமுறைக்கு வந்தது.

      இவை தவிர, கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்தே வைதீக எதிர்ப்பு மதங்களாகிய ஜைன மதமும், பௌத்த மதமும் பிரபலமாயின. இம்மதங்கள், இவ்வுலக வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கும் துறவு வாழ்வை வாழ்க்கை முறையாகக் கொண்டவையாகும். ஆண்கள் மட்டுமே துறவு வாழ்விற்கு உரியவர்களாகக் கருதப்பட்டனர். அவ்வாழ்க்கை முறைக்கு, இல்லற வாழ்க்கையும், அதற்குத் துணையான பெண்களும் எதிரிகளாகக் கருதப்பட்டனர். அதனால் அம்மதங்கள் பெண்களையும், பெண்களின் தொடர்பினையும் வெறுத்து ஒதுக்க வேண்டுமெனப் போதித்தன. அவ்வாறான வாழ்க்கை முறைக்குச் சாதகமாகப் பெண்களை இழிவுபடுத்திப், பெண்கள் காமம் நிறைந்தவர்கள், இழிவானவர்கள், வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று போதித்தன. மனுதர்ம சாஸ்திரம் முதல் பின்வந்த எல்லா நீதிநூல்களிலும் இவ்வாறான கருத்துக்களே பரவிக் கிடக்கின்றன.

     இவ்வாறான காரணங்களினால் காலம் செல்லச் செல்ல, பெண்களுக்கு வெளியுலகத் தொடர்பு அறுபட்டுப் போயிற்று. அவர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது. உரிய உரிமைகள் அளிக்கப்படவில்லை. இவற்றைத் தவிர, பெண்கள் பிறந்தது முதல் இறப்பது வரை பல்வேறுபட்ட கொடுமைகளுக்கும் உள்ளாயினர்.

       கி.பி. 16-ஆம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த கிருத்துவ மதத்தினரும், ஐரோப்பியர்களும், இந்திய நாட்டை இந்திய மக்களின் பழக்க ஆண்ட ஆங்கிலேயர்களும் வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், சமூக நியதிகளையும் எழுதி வைத்துள்ளனர். இச்செய்திகள் அவர்கள் நம் நாட்டினரைப் புரிந்து கொண்டு அவர்களுடன் பழகவும், மதமாற்றம் செய்யவும், பின்பு நம் நாட்டினரை ஆளவும் தேவைப்பட்டன. இவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் அக்கால இந்தியப் பெண்களின் வாழ்க்கை நிலையையும் உணர்த்துகின்றன; அவை இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகளையும் வெளிப்படுத்துகின்றன.

 

நன்றி

இக்கட்டுரையானது பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், ச.முத்துச்சிதம்பரம் என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது.



 

குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம் | சிறுகதை

குள்ளமணி ஒலிப்பெருக்கி நிலையம்

   அந்தக் கிராமத்தில் மொத்தம் நூறு வீடுகள்தானிருக்கும். இரண்டு வீதி நாலு சந்து அவ்வளவே. ஊருக்கு நடுவே கோவில். கோவிலில் முன்வாசல் தவிர சுற்றுப்பகுதிகள் அனைத்தும் கருவேல முட்களால் சூழ்ந்துதான் இருந்தது. போனவாரம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்ல சாமிக்கு பூஜை நடந்தது. அந்தப் பூஜையில ஒரு அம்மாவுக்கு சாமி வந்து ஆடுச்சி. அப்போ, “என்னை வடம் புடிச்சி இழுத்து வையுங்கடா… இல்லன்னா காய்ஞ்சிரும்மடா” ன்னு சொல்லிருக்கு. ஊர்க்காரங்க அத்தனைப் பேரும் பயந்து போயி அடுத்த நாளே கோவிலுக்கு முன்னால வந்து உட்காந்துட்டாங்க. நெத்தி முழுக்க விபூதியை அப்பிக்கொண்டு அனைவருக்கும் நேரெதிரே அமர்ந்திருந்தார் பண்ணையார். எல்லாத் தலையும் வந்துருக்கான்னு ஒருமுறை தலைச்சுற்றிப் பார்த்தார். அந்தக் கிராமத்துல இருக்குற அத்துன ஆம்பிள பொம்பளன்னு எல்லாம் அங்கதான் இருந்தாங்க.

“நம்ம ஊரு கோவில் திருவிழா மூணு வருஷத்துக்கு ஒரு தரம் நடத்திட்டு வரோம். இந்தச் சித்திரை வந்தா மூணு வருஷம் முடியப்போகுது. அதான் ஆத்தாளும் குறியா சொல்லிருக்கு” என்றார் பண்ணையார்.

குந்தியிருந்த மக்களும் நின்னுட்டு இருந்த மக்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதான் யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் தலையை மட்டும் ஒருதரம் ஆட்டி பண்ணையார் சொல்லுக்கு ஆமாம்! போட்டார்கள்.

“இந்த வருஷமும் கோவில் திருவிழாவை நல்லா நடத்திப்புடுவோம். ஆனா சாமி சொன்ன மாதிரி புதுசா ஒரு தேர செஞ்சி ஊர் முழுக்க சுத்தி வர வச்சிப்புடுவோம்” என்றார் நாச்சியப்பன்.

ஒரு தேரு செய்யுனுமுன்னா எவ்வளவு ஆகும் தெரியுமா? நீ பாட்டுக்கு தேர செய்யி… அத செய்யின்னு சொல்லிப்புட்டு போயிடுவ. யாரு செய்யுறது. யாரு நோட்ட அவுக்குறது.. என்றார் சுப்பையா. இப்படித்தான் போன தரம் வாணவேடிக்கை நடத்தனுமுன்னு சொல்லிப்புட்டு, கடைசியா சுப்பையாகிட்ட வசூல் பண்ணிட்டாங்க. அதான் எங்க நம்மல இழுத்து வுட்டுடுவாங்கன்னு பயப்படுறாரு.

“சுப்பையா கொஞ்சம் அமைதியா இரு. நாச்சியப்பன் சொல்றது சரிதான். நாமும் தேர் செஞ்சி இழுப்போமே. ஆகுற செலவுல பாதியை நான் ஏத்துக்குறேன். மீதிய ஊர் மக்கள் கிட்ட வசூல் பண்ணிக்கலாம். நான் சொல்றது சரின்னா சொல்லுங்க உடனே வடகத்திக்கார ஆசாரியை வரச்சொல்லலாம் என்றார் பண்ணையார். மீண்டும் எல்லோரும் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துத் தலையை முன்பக்கமாக ஆட்டிக்கொண்டனர்.

“கோவில் திருவிழாவுக்கு என்னென்ன பண்ணனும்முன்னு சொல்லுங்கப்பா…” என்றார் சுப்பையா.

ஒருவர் கரகாட்டம் என்றார். ஒருவர் ஒயிலாட்டம் என்றார். மற்றொருவர் மயிலாட்டம் வைக்கலாம் என்றார். இன்னொருவர் பறையாட்டம் வைத்தால் நல்லா இருக்கும் என்றார்.

கோலம் போடனும் மாவு அரைக்கனும் பொங்கல் வைக்கனும் ராட்டினம் சுத்தனும் வளையல் வாங்கனும் கொலுசு அணியனும் தாவணிப் போடனும் என நீண்டுக்கொண்டேப் போனது பெண்களின் ஆசைகள்.

கலர் கண்ணாடி வாங்கனும் ஊதி வாங்கனும் ஐஸ் சாப்பிடனும் சிறுவர்களும் தனக்கு வேண்டியதைச் சொன்னார்கள்.

“அனைத்திக்கும் ஏற்பாடு செய்யனும்” என்றார் பண்ணையார்.

“எத்தன வருஷம்தான் இருட்டுல நிக்கிறது. இந்த வருஷமாவது முதல்ல கரண்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க..” என்றார் நாச்சியப்பன்.

“புதுசு புதுசா ஏதாவது சொல்லிட்டு இருக்கானே இந்த நாச்சி… இவன என்ன செய்ய..” என்று பொறுமினார் சுப்பையா.

“என்ன நாச்சியப்பா.. ஒரேயடியா சொன்ன எப்படி? தேரு செய்யனுமுன்னு சொன்ன.. சரி. இப்ப கரண்டு எப்படி?” – பண்ணையார்.

“அண்ணே.. கரண்டு வர வழிய நான் சொல்றண்ணே..” என்றார் நாச்சியப்பன்

ஆறு மாதத்திற்கு முன்….

       மணமகளே மணமகளே வா வா… வலது காலை எடுத்து வைத்து வா வா… என்று ஒலிபெறுக்கியில் பாட்டு பாடிக்கொண்டிருந்தது. பண்ணையார் மகளுக்கு கல்யாணம். பட்டணத்தில் பிஎஸ்.சி படித்து முடித்தவள். கூட படிக்கும் பையனுடன் காதல். பையன் வீடு வசதியும் நாகரிகமும் உடையவர்கள். இருட்டில் தீப்பந்தம் பிடித்து வெளிச்சம் தேடுகின்ற ஊரில் பெண் எடுக்க வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டார் மணமகனின் பெற்றோர்களும் உறவினர்களும். இறுதியில் வென்றது காதல். கிட்டத்தட்ட பத்துக் கிலோமீட்டர் தூரம் வரை ஒயர் மூலமாகக் கரண்ட் எடுக்கப்பட்டு பண்ணையாரின் வீடு சீரியல் பல்புகளால் பளபளன்னு மின்னியது. அப்ப நம்ம ஊரே ராத்திரியில பளிச்சின்னு இருந்திச்சி. அதேபோல கோவில் திருவிழாவுக்கும் கரண்ட் கொண்டு வந்து ரேடியோ செட்டு கட்டிப்புடனும் என்று நாச்சியப்பன் தனக்கு என்ன தேவையென்று சொல்லிவிட்டார்.

       அந்த ஊருல பண்ணையார் வீட்டு கல்யாணத்தப்பத்தான் ரேடியோ செட்டு போட்டிருந்தார்கள். அதுவும் மாப்பிள்ளையின் தயவால். யாருமே ரேடியாவையோ ஒலிபெருக்கியையோ கூட பார்த்ததும் இல்லை. அப்படி ஒன்று இருப்பதாக கேள்விபட்டதாகவோ தெரியவில்லை. அந்த ஊரில் வசிக்கும் ஒயர்மேன் மட்டும் பட்டணத்திற்குச் சென்று சினிமா பார்த்து விட்டு கிராமத்து மக்களுக்கு கதைகதையாய் சொல்லுவான். எல்லாரும் அவனுடைய வாயையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். அந்தக் கிராமத்து மக்கள் பலருக்கு இவன் ரொம்ப கற்பனைவாதி. அதான் இல்லாததை இருக்கின்ற மாதிரி சொல்லுறான் என்று நினைத்துக்கொண்டார்கள். ஒயர்மேன் சொல்வது அனைத்தும் பொய்யே என்று நம்பினார்கள். ஆனால் பண்ணையார் வீட்டு கல்யாணத்தில் ஒலிபெருக்கியைப் பார்த்தவுடன் கிராமத்து மக்கள் அனைவரும் வாயடைத்துப்போனார்கள்.

       நீளமான கூம்பு வடிவிலான ஒலிபெருக்கி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கல்யாண வீட்டின் முன்னால் கட்டப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் முன்னால் தாடையில் கை வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்தக்கூட்டத்தில் குள்ளமணியும் ஒருத்தன். கருப்பா குண்டா இருப்பான். ஒரு காலு சின்னதா இருக்கும் அவனுக்கு. அதனால குனிஞ்சு குனிஞ்சு பெரியகாலை கையால் பிடித்துதான் நடப்பான். சின்ன வயசுல கேலியும் கிண்டலும் நெறைய இருந்தது. இப்பல்லாம் அது குள்ளமணிக்கு பழகிடுச்சு. நல்லா பேசுவான். யாரும் அவன்கிட்ட வாயைக் கொடுத்து மீள முடியாது. எப்பவும் எதையாவது பண்ணிக்கிட்டே இருப்பான். ஊருல ஏதாவது நடந்ததுன்னா அதுக்கு ஆயிரம் கேள்விகளைக் கேட்பான். அவன் கேட்க நினைக்கின்ற ஒரு கேள்விக்கும் கூட பதில் வராது. ஆனாலும் குள்ளமணி கேள்வியை கேட்கிறதுக்கு நிறுத்தவே இல்லை.

அன்னிக்கு ரேடியோ செட்ட போட்டு ஒலிபெருக்கியில் பாட்டு வந்தவுடனேயே முதல் ஆளாய் கல்யாண வீட்டு முன்னாடி நின்னுட்டான். கூட்டமும் கூடுச்சி.  எப்படி பாடுது? யாரோ உள்ளே இருந்து பாடுறாங்களோ? யார் அவன்?  அவனைப் பார்ப்பதற்காக ஒலிபெருக்கியை ஒரு சுற்றுசுற்றி வந்து பார்த்தான் குள்ளமணி. யாரும் இல்லை. அந்த ஒலிபெருக்கியிலிருந்துதான் பாட்டும் சத்தமும் வருகிறது. குள்ளமணி பட்டணத்திலிருந்து வந்திருக்கும் ரேடியொ செட் ஆளுடன் ஒட்டிக்கொண்டான். கல்யாணத்திற்கு வந்த கிராம மக்கள் அனைவரும் கொஞ்ச நேரம் ஒலிபெருக்கியின் முன்னால் நின்றுவிட்டுத்தான் போனார்கள். பலர் சாப்பிட கூட போகாமல் வாசலில் கட்டியிருக்கும் ஒலிபெருக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு அது புதுமையாக இருந்தது. ஒயர்மேன் தம்பி சொன்னது சரிதான்னு பெரிசுங்க சிலர் பேசிக்கொண்டார்கள். ஒலிபெருக்கியின் முன்னால் சின்ன பசங்களெல்லாம் கால் வலிக்க ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

நாச்சியப்பன் பண்ணையார் மகளுக்கு நடந்த திருமணத்தால் வந்த கரண்டையும் ஒலிபெருக்கியையும் பற்றி நினைவுப்படுத்தினார். ஊர் மக்கள் எல்லோரும் ஆமாம்! ஆமாம்! என்றார்கள். மற்ற விஷியத்தில் நாச்சியப்பனைத் திட்டிய சுப்பையா கூட இப்பொழுது நாச்சியப்பன் சொல்லுறது சரிதான் என்றார்.

“நம்மள வச்சு இவனுங்க காரியத்த சாதிக்கிறானுங்களேன்னு” பொறுமிக்கொண்டார் பண்ணையார்.

“சரி கரண்ட்ட இழுத்துப்புடுவோம். ரேடியோ செட்டுக்கும் சொல்லிப்புடுவோம்“ என்றார் பண்ணையார். அனைவருக்கும் மகிழ்ச்சி.

“ரேடியோ செட்டு போடுறுதுன்னு முடிவாயிடுச்சி. அது நம்ம குள்ளமணிகிட்டயே சொல்லி புடுவோம்” என்றார் நாச்சியப்பன்.

“அங்கிட்டு இங்கிட்டுன்னு கடைசியா தன்னோட அக்கா பையனுக்கு வியாபாரத்த பண்ணிட்டாருய்யா…” என்றான் கூட்டத்தில் ஒருத்தன். இப்ப எல்லோருக்கும் புரிந்து விட்டது. நாச்சியப்பனோட அக்கா மகன்தான் குள்ளமணி.

“யார்ற சொன்னது. யார்ற அது?” என்று அதட்டிவிட்டு நாச்சியப்பன்,  “நான் ஏதோ நம்ம ஊரு பையன் ஒருத்தன் பட்டணத்துக்கு போயி ஒலிபெருக்கி கடை வச்சிருக்கான். யாரோ ஒருத்தனுக்கு காசு கொடுத்துக் கூட்டியாரதவிட நம்ப பையனுக்கு செஞ்சா நல்லாயிருக்குமேன்னு தான் சொன்னேன்” என்றார். அதற்கு மேல் யாரும் அதைப்பற்றி பேசவில்லை. கோயில் கூட்டம் அத்தோடு கலைந்தது.

விழாவிற்காக நோட்டிஸ் அடிக்கப்பட்டது. நோட்டிஸில் பின்பக்கத்தில்  இறுதியில் ஒரு கட்டம் கட்டி, கோவில் தேர் திருவிழாவிற்கு ரேடியோ செட் உபயம் “குள்ளமணி ஒலிபெருக்கி நிலையம்” உரிமை – திரு.குள்ளமணி அவர்கள் என்று போடப்பட்டிருந்தது.

குள்ளமணிக்கு தலைகால் புரியவில்லை. வானத்துக்கும் பூமிக்கும் குதித்தான். இந்த ஊரில் தன்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஆனால் தன்னுடைய பெயர் ஊர்பொது கோவில் நோட்டிஸில் இடம் பெற்றுவிட்டது என்பதுதான். அவனுடைய நண்பர்கள் அவன் வீட்டுப்பக்கம் போவதையே தவிர்த்தனர். அப்படியே செல்ல நேர்ந்தாலும் அந்த வீதிப்பக்கம் செல்லாமல் இரண்டு வீதி தள்ளியே சென்றார்கள். அவனுடைய கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் பேசியே கொன்று விடுவான் என்ற பயம்.

கரண்ட் இழுக்கப்பட்டது. இந்த ஊர் இன்னும் ஏழு நாளைக்கு கதிரவனை வானத்திலிருந்து இழுத்து வைத்தாற்போன்று இரவில் ஜொலிக்க வேண்டும் என்று குள்ளமணி எண்ணினான். தன்னோட நண்பர்களை அவர்கள் வீடு சென்றே பார்த்தான்.   முகம் பார்த்துக்கொண்டன. கண்கள் தரையை நோக்கின. மனம் – மனம் விட்டு பேசியன. கால்கள் ஒன்றாகச் சேர்ந்து ஊர்ப்பொது இடத்தில் நின்றன.

ஊர் முமுக்க சீரியல் பல்புகளால் மின்னியது. கோவில் முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.  ஒருத்தன் கோவில் வேப்ப மரத்தில் ஏறி சீரியல் பல்புகளைத் தொங்க விட்டான். அம்மன் சிலையையே சீரியல் பல்புகளால் அலங்கரித்து ஊருக்குப் பொதுவில் மிக உயரமாக வைக்கப்பட்டது.  ஒரு சந்து விடாமல் ஒலிபெருக்கியை இழுத்துக் கட்டினார்கள். அவ்வப்போது நண்பர்களை அழைக்க ஒலிபெருக்கியில் “மாணிக்கம் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும். சரவணன் எங்கிருந்தாலும் கோவிலுக்கு வரவும் எனப் பயன்படுத்திக் கொண்டார்கள். இப்போது குள்ளமணிதான் அங்கு பெரிய ஆளாகப்பட்டான். மைக் பிடித்து பேச வேண்டுமென்றால் குள்ளமணியைக் கூப்பிடு… சவுண்ட் வைக்க குள்ளமணியைக் கூப்பிடு… அம்மன் பாட்டு போட குள்ளமணியைக் கூப்பிடு… எல்லாம் அவனுடைய பாடாகவே இருந்தது. அவன் இரவுபகல் என்று பாராமல் கோவிலில் ரேடியோ செட்டுக்கிட்டேயே படுத்துக்கொண்டான். உடல் உபாதைக்கு மட்டுமே அப்பப்ப  வெளியே சென்று வருவான். மத்தபடி சாப்பாடு கூட கோவில்லதான்.

அன்னைக்கு வெள்ளிக்கிழமை. சாயங்காலத்துல பொங்கல் வைக்கனுமுன்னு காலையிலயே மைக்குல, “இன்னிக்கு சாயுங்காலம் அம்மனுக்கு பொங்கல் வைக்கனும். மதியம் மூனு மணியிலிருந்தே கோவிலுக்கு வந்துருங்க. வரும்போதே உங்களுக்கு தேவையான எல்லாத்தையும் கொண்டு வந்துருங்க. குழி மட்டும் கோவில்ல ரெண்டு பக்கங்களிலும் அடுப்புகளுக்காகத் தோண்டி வைக்கப்பட்டுள்ளன. கோவிலுக்குத் தேவையான எதுவானாலும் தானமாகக் கொடுக்கலாம்” என்று சொல்லியாச்சு.

கிராமத்துல எல்லா வீடுகள்ளேயும் ஒரே கூட்டம். ரெண்டு மூனு பேர் இருக்குற வீடுகள்ள கூட எட்டு பேர் பத்து பேர்ன்னு சொந்தகாரங்க நிரம்பி வழிஞ்சாங்க. அன்னைக்கு காலையில ஒன்பது மணி இருக்கும். கோவிலுக்கு முன்னால இருக்குற குழாயில நல்ல தண்ணி வந்துச்சு. ஊருல இருக்கிற கிணறெல்லாம் கொஞ்சம் உப்பு கரிக்கும். மண்ணு அப்படி! இந்தத் தண்ணி பக்கத்துல இருக்குற மலையில இருந்து வருது. இந்தத் தண்ணிதான் மலைக்குக் கீழ இருக்குற ஐந்தாறு கிராமங்களுக்கும் போகும். வாரவாரம் வெள்ளிக்கிழமை மட்டும்தான் வரும். குடிக்கிறதுக்கு மட்டும் இந்தத் தண்ணியைப் பிடிச்சு ஒரு வாரம் வச்சுக்குவாங்க.

ஊர் பொம்பளைங்க எல்லாம் தண்ணி பிடிக்க ஓடி வந்தாங்க. அதுக்குள்ள குடமும் குண்டானுமாக அந்த இடம் முழுமையானது. கடா முடான்னு சத்தம். கீச்சு மூச்சுன்னு சத்தம். என்ன நடந்ததோ தெரியல ஒரு அம்மா தண்ணியைத் தூக்கி இடுப்புல வச்சிகிட்டு வாயில என்னவெல்லாம் வந்ததோ தெரியல அதையெல்லாத்தையும் திட்டிக்கிட்டே போச்சு. தண்ணிப்புடிக்கிற இடத்துல இப்ப கூட்டம் அதிகமாயிடுச்சு. கோவிலுக்கு வந்த சொந்தகாரங்களும் தண்ணிப்பிடிக்க ஆளுக்கொரு குண்டானோடு வரிசையா நின்னுட்டு இருந்தாங்க.

திட்டிட்டு போன அம்மா திரும்ப நேரா தண்ணி குழாய்க்கிட்ட வந்து குடத்த வச்சுது. ஏற்கனவே வைத்திருந்த குடம் நிரம்பியவுடன் வரிசையில் நிற்கின்ற மற்றொரு அம்மா குடம் வைக்கப் போனது. திட்டிட்டு போன அம்மா,

“நான்தான் வப்பன். நானு ஒரு குடம்தான் புடிச்சுருக்கன். இன்னும் ரெண்டு குடம் புடிச்சிட்டுத்தான் யாருக்குன்னாலும் வுடுவேன்”

வரிசையில் நின்ற அம்மா…

“அதெப்படி நாங்க நின்னுட்டே இருப்பமா? நீங்க மகாராணியாட்டம் நேரா வந்து புடிச்சிட்டு போவிங்களாம். குடத்த எடுடி…” குடத்தைத் தட்டிவிட்டு இவருடைய குடத்தைக் குழாயின் முன்னால் வைத்தார். இரண்டு பேருக்கும் பெரும் குழாயடி வாய்ச்சண்டை ஆரம்பமானது.

“நீ யாருன்னு எனக்கு தெரியாதாடி.. சிறுக்கி மவளே”

“யாருடி சிறுக்கி.. நீதான் சிறுக்கி… ஒ.. வீட்டுக்கு அப்பப்ப ஒருத்தன் வந்துட்டு போரானே எனக்கு தெரியாதாடி?”

“நீ மட்டும் யோக்கியமாடி….. தேவி….. ” அதற்குமேல் இருவரும் அவர்களுடைய குடும்பத்தை ஏலம் விட்டுக்கொண்டிருந்தார்கள். கோவிலுக்கு முன்னால் சண்டையிடாதீர்கள். இப்படி பேசாதீர்கள் என்று சில ஆண்கள் வந்து சண்டையை நிறுத்த முயற்சி செய்தார்கள். மூக்கு அறுபட்டு ஏண்டா வாயைக்கொடுத்துப் புண்ணாக்கிக் கொண்டோம் என்று நினைத்து ஒதுங்கிப் போனார்கள்.

 வெளியூரிலிருந்த வந்திருந்த ஆண்களும் பெண்களும் முகம் சுழித்துப்போனார்கள். தண்ணீர் பிடிக்க வந்த சிலர் வெறும் குண்டானோடு வீட்டுக்கு வந்தனர். தண்ணீர் வந்து கொண்டிருந்த குழாயை இரண்டு பெண்களும் பிடித்து ஆட்டி ஆட்டியே பிடிங்கியிருந்தார்கள். தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வெறுமனே மண்ணை நனைத்து வழிந்தோடியது. சண்டையிட்ட பெண்களும் அமைதியாயினர்.  அவர்கள் இருவரும் குடத்தை எடுத்துக்கொண்டு  தங்களின் வீடுகளுக்கு நடையைக் கட்டினார்கள். எப்படியாவது ஒரு குடமாவது தண்ணீரை பிடித்தே ஆக வேண்டும் என்று நினைத்து வரிசையில் காத்துக்கொண்டிருந்தவர்களின் பாதங்களை ஈரமாக்கியது. கொஞ்ச நேரத்தில் பட்டாசு வெடித்து ஓய்ந்தது போல இருந்தது.

அவ்வளவுதான் யாரும் இதை கேட்கவில்லை. கவனிக்கவில்லை. நாளைக்கு நாம் சொன்னதை சொல்லவில்லை என்று சொன்னால் கூட யாரால் இவர்களை நிருபிக்க முடியும். காலம் கடந்து விட்டது. கடந்த காலத்திற்கு சென்று மீண்டும் குழாயடி சண்டையில் என்ன நடந்தது? யார் மேல் தப்பு? யார் யார் என்னன்ன பேசினார்கள்? என்று யாராலும் சொல்ல முடியுமா என்ன? ஆமாம் யாராலும் சொல்ல முடியாது. கரண்ட் வராமால் இருந்திருந்தால். ஒலிபெருக்கி வராமல் இருந்திருந்தால்.. விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. காலையில் குள்ளமணி உடல் உபாதைக்காகச் சென்றுவிட… அந்நேரம் பார்த்துச் சிறுவர்கள் சிலர் ரேடியொ செட்டில் எதையோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு நடந்ததை அப்படியே அம்மன் கேசட்டில் பதிவாகிவிட்டது.

அன்று மாலை கோவிலில் இருந்து பொதுமக்களுக்கு எப்போதும் போல் மீண்டும் மைக் மூலமாகப் பொங்கல் வைப்பதற்கு முன்னேற்பாடாகச் சொல்லப்பட்டன. அடுத்த சில வினாடிகளில் அம்மன் பாடலை குள்ளமணி தன்னுடைய ஒலிபெருக்கியில் ஓடவிட்டான். அன்று காலையில் நடந்த பதிவு செய்யப்பட்ட குழாயடி சண்டை முழுவதும் கோவில் ரேடியோ மூலம் ஒலிபரப்பப்பட்டது. மீண்டும் ஊர் முழுக்க பெண்கள் இருவரின் வாய்ச்சவடால்கள் அரகேற்றப்பட்டன. நிம்மதியாக இருந்த பெண்கள் இருவரும் கோவிலில் இருக்கும் குள்ளமணி ஒலிபெருக்கியை நோக்கி ஓடி வந்தார்கள்.

 

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »