Wednesday, June 3, 2026
Home Blog Page 32

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் | பகுதி – 2

நாட்டு நலப்பணித்திட்டம்

நாட்டுநலப்பணித்திட்டத்தின்கீழுள்செயல்திட்டங்களாவன

 அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

தேர்ந்தெடுத்து கொண்ட பகுதிகளில் பணிகள்:

            நாட்டுநலப்பணி திட்ட வழிகாட்டி குறிக்கோளின்படி இத்திட்டத்தின் அலகுகள் ஒவ்வொன்றும் தாங்கள் நலப்பணித்திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்நடைமுறையில் அவை ஒரு கிராமம் அல்லது ஒரு குடிசை பகுதி அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை தேர்ந்தெடுத்துத் கொள்கின்றன. சம்பந்தப்பட்ட பகுதிகள் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்ற அதிகார பூர்வமான அல்லது மரபு ரீதியான தலைவர்கள் கலந்து ஆலோசனை செய்து பணிக்காலத்தை தீர்மானித்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களின் ஆதரவு, நல்லிணக்கம், இடத்தின் அருகாமை முதலி கணக்கில் கொண்டு அவற்றின் அடிப்படையில் பணிக்காலம் தெர்ந்தெடுக்கப்படும்.

            அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் பால்வாடி எனப்படும் குழந்தை காப்பகங்கள் தொடங்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் துணைகொண்டு நடத்தப்படும். நோய் தடுப்பு மருத்துவ பிரசார பணிகள், பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல், சுற்று சூழல் சுகாதாரம், விவசாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துதல் மருத்துவ நலன் மற்றும் சுகாதாரம் குறித்து நிகழ்ச்சி திட்டங்கள். போர்கால நடவடிக்கைகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நூலகங்கள்/புத்தக வங்கிகள் முதலியவற்றை உருவாக்குதல். மாநில மண்டல்களை துவக்குதல், இளைஞர் சங்கங்கள், பால் சேகரிக்கும் மையங்கள் தொடங்குதல் முதலியவை நாட்டு நலப்பணித்திட்டதின் கீழ் மேற்கொள்ளப்படும் சில செயல்பாடுகள்.

            கிராம மக்களுக்கு வங்கி கடன் கிடைக்க வழி செய்தல், மக்களுக்கு போய்வர மிக அத்தியாவசியமான சாலைகள் அமைத்தல், பராமரித்தல், முதலிய பணிகள் பல்வேறு கல்லூரிகளிலும் கிராமங்களிலும் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட பிரிவுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு நலப்பணித்திட்ட பிரிவு பூங்காக்களை வளர்த்தல், பராமரித்தல், இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்டப் பணிகளில் ஈடுபாடு / கிராமங்களில் இறைவிழாக்களை நடத்துதல், காய்கறி தோட்டம் வளர்த்தல், மருத்துவ நலத் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு, பண்டிகைக்கால கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், ரயிலில் பயண சீட்டு வாங்காமல் போய் வருபவர்களை திடீர் என சோதனை செய்து கண்டுபிடித்தல் / கைதிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், முதலமைச்சர் சத்துணவு கூடங்களுக்கு விஜயம் செய்தல் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து சமாதான பேரொளி கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல், பார்தினியச் செடிகளை அழித்தல், இவை பிற நாட்டு நலப்பணித்திட்டம் செய்து வரும் பணிகள்.


பொது மக்களுக்கு எழுத்தறிவுத் திட்டம்

            உலக அளவில் நமது நாட்டில் ஜனத்தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது நாட்டின் முன்னேற்ற பாதையில் முக்கிய தடைக்கல்லாகி இருப்பது மக்களின் எழுத்தறிவற்ற நிலையே என்று கருதப்படுகிறது. உலகின் 69 எண்ணிக்கை நாடுகளோடு உடன் நோக்கில் நமது நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுஎன்பது நம் எல்லோருக்கும் கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. உலகிலிலுள்ள 85.7 கோடி படிப்பறிவற்ற மக்களில் நம் நாட்டில் இருப்பவர்கள் 44 கோடியாகும். 1981ஆம் வருட புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 36.23 சதவீதம்தான். நம் நாட்டிலுள்ள 220.89 மில்லியன் படித்தவர்களில் 3.5 மில்லியன் பேர் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள்.


            இந்தியாவில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களின் எண்ணிக்கை 15 லட்சம். தமிழ்நாட்டில் 1.7 லட்சம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளனர். நாட்டு நலப்பணித் திட்டத்தால் செயலாக்கப்பட்ட 2 லட்சம் அங்கத்தினர்களை எழுத்தறிவு திட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துறை செய்துள்ளது. ஒரு தொண்டர் ஒருவருக்கு எழுத்தறிவு புகட்டவேண்டும் என்ற முறையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இயங்குகிறார்கள். முதியோர் கல்விக்கான மாநில பள்ளிசாரா கருவாலயத்திலிருந்து நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களுக்கு தேவையான கற்பிக்கும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் எழுத்தறிவு பணிக்கு கையேடு என்றழைக்கப்டும். இந்த எழுத்தறிவு பைகளில், கீழ் கண்டவை உள்ளன.


1. அட்டைகள் அல்லது அடிப்படை எழுத்தறிவு பயிற்சி பொருந்திய ஒரு தொகுதி.

2.எழுத்தறிவு பயிற்சி பெறுவதில் வாழ்க்கையோடு சம்பந்தமுடைய விஷயங்களை அடங்கிய ஒரு சிறு புத்தகம், பாடப்புத்தகங்களோடு சேர்த்து அதிகப்படி வாசிப்பிற்காகவும் அறிவு விளக்கத்திற்காகவும் தரப்படுகிறது.

3. மதிப்பாய்வு தாள்….

4. ஆசிரியர் வழிகாட்டி நூல்.

5. கற்பவர் குறித்து தனிப்பட்ட விவரங்களும் கற்பிக்கப்படும் விஷயமும்.

6. நான்கு அஞ்சலட்டைகள், இரண்டு ஆரம்ப உபயோகத்திற்காக. இரண்டு கல்வி காலகட்டத்தின் இறுதி உபயோகத்திற்காக.

            சமுக நலப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் பாமர மக்களின் எழுத்தறிவு பெறும் முயற்சிகளில் முழு முனைப்போடு பங்கெடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இரண்டு, மூன்று நபருக்கு மேலாக கூட கற்றுத்தருகிறார்கள், அப்படி எழுத்தறிவு பெற்றவர்கள் தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள் பேருந்துகளிலுள்ள பெயர் பலகைகளை படிக்கிறார்கள். செய்தித்தாள்களை படிக்க முயற்சி செய்கிறார்கள். கிராமங்களில் ஐந்தாம், நான்காம் வகுப்பு படித்தவர்கள் கூட எழுத தெரியாமல் இருப்பதை காணமுடிகிறது. அத்தைகைய குழந்தைகளும் நாட்டு நலப்பணித்திட்டதில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

            தரநிலைச் சான்றிதழ்கள் (எத்தனை பேர்களை எழுத்தறிவுக் கொண்டவர்களாக்கினார்கள் என்ற எண்ணிக் கையை அடிப்படையாகக் கொண்டு) மாவட்ட முதியோர் கல்வி அதிகாரி, செயல் திட்ட அதிகாரி அல்லது கல்லூரித் தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆயருடன் ஆலோசனை நடத்தி பிறகு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சான்றிதழ்களின் தரநிலை பின்வருமாறு 1. மூன்று அல்லது மூன்று பேருக்கு மேல் எழுத்தறிவூட்டியவர்களுக்கு முதற்நிலைச் சான்றிதழ்கள். 2. இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் எழுத்திறிவூட்டியவர்களுக்கு இரண்டாம் நிலை அல்லது (பி கிரேடு) நிலை சான்றிதழ்கள். 3 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு எழுத்திறிவூட்டியவர்களுக்கு மூன்றாம் நிலை அல்லது (சி கிரேடு) சான்றிதழ்கள்.


எல்லோருக்கும் மருத்துவ உதவி

            கிராம மக்கள் அனைவருக்குமான உடல் நல மருத்துவ பரிசோதனைக்கு நாட்டு நலப்பணி திட்ட அமைப்புகள் அரசாங்க மருத்துவ மனைகளிலிருந்து மருத்துவர்களின் உதவி பெற்று முகாம்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

பின்வரும் மருத்துவ நல செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

 1. எல்லா குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பூசிகள், மருந்துகள்.

2.கிராம மக்கள் அனைவருக்கும் அம்மை தடுப்பூசிகள் மற்றும்  தொற்றுநோய் தடுப்பூசிகள், மருந்துகளும் கிடைக்கச்செய்தல்

3. குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தகுந்த தம்பதிகளை தேர்ந்தெடுத்தல்,

4.எல்லோருக்கும் நோய்குறி சோதனையும் அதன் தொடர்ச்சியாக நோய்க்காரணிகளான நுண்ணுயிர்களை தகுந்த மருந்துகளின் மூலம் அழித்தல்

5.தொழுநோய்/காசநோய்/சர்க்கரை வியாதிகள் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கிறதா என்று கண்டறியும் மருத்து பரிசோதனைகள் அனைத்தும் கிராமத்து மக்களுக்கும் கிடைக்க செய்தல். பரிசோதனைக்கு பின் தொடர்
நடவடிக்கை ஏற்பாடு செய்தல்.


சத்துணவு திட்டம்

            கிராமத்து மக்களுக்கு அவர்களுடைய பகுதியில் கிடைக்கும் பல்வேறு வகையிலான உணவு பொருட்களிலிருந்த பெறக்கூடிய ஊட்டச்சத்துப் பற்றி அறிவூட்டுதல்.  தாய்பாலின் தேவையையும் பயன்பாட்டையும் எடுத்துரைத்தல் / குழந்தை வளர்ப்பு பற்றி அறிவூட்டுதல். இந்தப் பணியில் சுகாதார ஊழியர்களின் உதவியையும் தேவையெனில் பெற்றுக்கொள்ளலாம்.
 

            எலுமிச்சை மரம், பப்பாளி மரம், முருங்கை மரம், வாழை மரம், கீரை வனக மற்றும் பல இலைகள் கூடிய காய்கறி, செடிகளடங்கிய காய்கறித் தோட்டம் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக வேண்டியதை மேற்படி சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அம்சமாக கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் சுகாதாரம்

            குறைந்த செலவிலான பாராபள்ளி / நச்சுதடை மலக்குழியை தங்கள் வீட்டில் அமைத்துகொள்ளும்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் செயலூக்கம் தர வேண்டும். சுற்றுச் சூழல் சுகாதாரத்தை பராமரித்துப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் உரக் குழிகளைக் கொண்டிருத்தல் அவசியம்.

மாற்று சக்தி வன ஆதார வழிகளைப் பயன்படுத்துதல் (Alternative Energy Sources)

            இயற்கை எரிவாயு முதலான மாற்று சக்திவள ஆதாரங்களைக் கைக்கொள்ளுதல், புகைவராத அடுப்புகளை யோகித்தல், சூரிய வெப்பத்தில் இயங்கும் சூரிய அடுப்பை கிராம மக்களிடையே பிரபலமாக்குதல் முதலிய வேலைகள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்..

குடும்ப வரவு செலவு திட்டமிடுதலும், சிறு சேமிப்பும்

            கிராமத்து மக்கள் தங்கள் குடும்பத்தின் வரவு, செலவுக் கணக்கை திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியம் பற்றி நாட்டு தல பணித்திட்ட தொண்டர்கள் அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்கள். தவிர சிறு சேமிப்புப் திட்டத்தில் சேர்ந்து பணம் | சேமிப்பதிலுள்ள பயன்களையும் சேமிப்பின் அவசியம் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்து சேமிக்க வேண்டுமென்ற செயலூக்கமளித்து வருவதையும் தங்கள் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.


சாலை செப்பனிடுதல்

            கிராம மக்களின் உதவியோடு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் தங்கள் வழக்கமாக முகாம்கள் சமயம் அல்லது சிறப்பு முகாம்கள் சமயம் பொருவாரியான மக்களின் பங்கேற்போடு கிராமத்தின் இணைப்புச் சாலை மற்றும் செல்வழிச் சாலைகளைச் செப்பனிடுவார்கள். இந்த சாலைகள் போக்குவரத்திற்கும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கும், பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும் பிற பல வேலைகளுக்கும் உதவும்.


வீடுஇல்லாதவர்களுக்குவீடு

     நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஏழை எளியவர்களுக்கு வீடுகள் கட்டிதரும் பொருட்டு மாவட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார்கள். இவர்களுடைய முயற்சிக்கு ஒரு உதாரணம் பின்வருமாறு : ஆழ்வார் குறிஞ்சியிலுள்ள பரமகல்யாணி கல்லூரியிலும் நாட்டு நலப்பணி திட்டத்தினர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் (நாகர்மூலம் கோவில்) தங்களுடைய சிறப்பு முகாம் திட்டத்தின் சமலம் கட்டுவதற்கான கச்சாபொருட்களை வேறு வழிகளின் திரட்டி அதன்வழி ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு இல்லம் கட்டினார்கள். இதுபோன்று வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை கட்டி தருகின்றனர்.

கலைநிகழ்ச்சிகள்

            கிராமங்களில் அங்குள்ள நாட்டுநலப் பணித்திட்டம் கிளைகளினால் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். உள்ளூரிலுள்ள கலையார்வம் மிக்கவர்களைக் கொண்டு கலைநிகழச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கிராமத்து மக்களுக்கும் செயலூக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் முதலியன பல்வேறு முக்கிய தினங்கள் கிராமத்து மக்களின் ஒத்துழைப்போடும். பங்கேற்போடும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் கொண்டாடப்படவேண்டும். வருடா வருடம் வரும் பல்வேறு பண்டிகை தொடர்பான விழாக்கள், கொண்டாட்டங்களில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஊர் மக்களோடு ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும்.


மரம் நடுதல்

            நமது நாட்டின் தட்ப வெப்ப சீர்குலையாமலிருக்கவும், பஞ்சம் பட்டினியிலிருந்து நம்மைக் நிலைகள் காத்துக் கொள்ளவும், மண் வளத்தையும், பாதுகாத்துக் கொள்ளவும், மரம் நடுதல் முக்கியமே. தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றவும், மரங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் ஒவ்வொரு வருடமும் மரம் நடும் செயல் திட்டம் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரி வளாகத்திலும் பல்கலைக்கழகங்களிலும் கிராமங்களிலும் பணி செய்யத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பகுதிகளிலும் இந்த தொண்டர்கள் வனத்துறையின் ஒத்துழைப்போடு பல மரங்களை நட்டு வருகிறார்கள், இளைய சமுதாயத்தினரின் திறமையும் ஆற்றலும், ஆர்வமும் இந்தியாவை பசுமையாக்குகின்றன.


நிவாரணப்பணிகள்

            இயற்கையன்னை தனது சீற்றத்தை அள்ளிக் கொட்டியதில் புயலும் சூறாவளியுமாய் மக்களுக்கு சொல்லொனத் துன்பங்கள் ஏற்பட்டது. இயற்கை தந்த சவுக்கடியின் வலி அளப்பறியது. அதன்வினையால் மனிதர்கள் வீடிழந்து நிற்கின்றனர். எப்பொழுதெல்லாம் வேதனையும், துயரமும்ஆதரவற்ற நிலைமையும் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாட்டு நல பணித்திட்டத்தினர் உதவி செய்கின்றார். அவ்விதமே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உள்ளூர் மக்களிடமிருந்து பழைய துணிமணிகள் நன்கொடைகள் சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அப்படி சேகரிக்கப்பட்ட துணிமணிகள் பிற பல பொருட்கள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. குடிசைகளில் வாழும் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை சரியான முறையில் தரப்படவும், குடிசைகள் கட்டுதல் மற்றும் சேதத்திற்குள்ளானவைகளை பழுது பார்த்தல் முதலிய பணிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுதல், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உதவி செய்ய முன் வந்தது கிராம மக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

            1977 நவம்பர் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த பாபட்லா தாலுக்காவிலும் பிரகாசம் மாவட்டத்திலுள்ள சீராளா தாலுக்காவிலும் 10,000 பேருக்கும் மேலாக இறந்தது மட்டுமல்லாமல் மக்களின் உடமைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டப்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300 நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் நிவாரணப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இவர்கள் 300 கோணிப்பைகளில் ஏறத்தாழ 1,50,000 ரூபாய் பெறுமானமுள்ள புதுத் துணிகள், 70 சாக்கு மூட்டைகளில் அரிசி, 24 கோணி மூட்டைகளில் புதிய பாத்திர பண்டங்கள், மருந்துகள் முதலியவற்றை குறிப்பிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிப் பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளால் தரப்பட்ட அளவுக்கு மேலாக சேகரித்து வழங்கினார்கள். காவலி பகுதியிலுள்ள தொண்டர்கள் நாகாலந்தா பகுதியிலிருந்து 20 சடலங்களை ஜவஹர் பாரதியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்ட அகற்றினார்கள். அதே கிராமத்தில் இருந்த வேறு 60 நாட்டு நலப் பணித்திட்ட அங்கத்தினர்கள் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சினி சீமாவிலிருந்த கடற்கரையை ஒட்டிய ஒரு மீனவ கிராமமான கங்கமேஸ்வரத்திற்கு நாகாலந்தாவிலிருந்து செல்லும் சாலையை சீர்படுத்தித்தந்தார்கள். இதுபோல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் திண்டுக்கல் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்தனர். இதே மாதிரியான நெருக்கடி கால நிவாரணப் பணிகள் நாடெங்கும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

தகவல்

            அரசாங்கம் தாமதமாக தொகையை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செலுத்தும் காலங்களில் நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் முடங்கி கிடக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அக்காலங்களில் சில கல்லூரி/பள்ளி நிறுவனங்கள் முன்பணம் கொடுத்து திட்டங்கள் குறித்த நேரத்தில் செயல்பட உதவி செய்கின்றன. இது தவிர சில நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வேறு சில நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெற்று சமுதாய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.

நிர்வாக அமைப்பு முறை
                                                               NSS நிர்வாக அமைப்பு முறை

பயிற்சி மையங்கள்


            ஒரு தொழிலை நன்கு செய்ய, பயிற்சி இன்றியமையாதத காணப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்தி அரசாங்கம் பல பயிற்சி நிறுவனங்களை நாடு முழுவதும் நிறு அதற்கு தேவையான பண உதவியையும் செய்து வருகிறது.

நாட்டு நலப்பணித்திட்டத்தில் பயிற்சிகள் கீழ் கண்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகின்றன


திட்ட ஒருங்கிணைப்பனப்பாளர் பயிற்சி


1. துணை திட்ட ஆலோசகர், உதவி திட்ட அலுவலர், இளைஞர் அலுவலர், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில தொடர்பு அலுவலர்.

2.கல்லூரி முதல்வர்கள், மேல்நிலை பள்ளி தலைமை
ஆசிரியர்கள், ஆசிரியைகள்

3. நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள்

4. மாணவத் தொண்டர்கள்


நாட்டு நல பணித்திட்டத்தில் புதிய திட்டங்கள் – மாற்றங்கள் ஏற்படும் பொழுது புத்துணர்வுப் பயிற்சி திட்ட மேலாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. கல்லூரி முதல்வர்களுக்கும், மேல்நிலை பள்ளி தலமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நாட்டு நல பணித்திட்ட கொள்கைகள், பண ஒதுக்கீடு கையாளும் முறை ஆகியவற்றை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வெவ்வெறு துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சமுதாய பணியை குறித்து அனுபவம் இருக்காது. இதை மனதில் கொண்டு அவர்களுக்கு இரண்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு10நாள் முதல் நிலை பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து புத்துணர்வு பயிற்சிக்காக (5 நாட்கள்) அனுப்பப்படுகிறார்கள்.


கீழ்கண்ட மையங்கள் நாட்டு நலப் பணித்திட்டதிற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுகிறது.


பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

மாநில நிர்வாக அமைப்பு முறை
                                                           மாநில நிர்வாக அமைப்பு முறை


இம்மையங்கள் மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தவிர பல விதமான காலத்திற்கு ஏற்ற ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. பொதுவாககல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், மேல் பள்ளிகளிலும் நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட மதிப்பீடு செய்கின்றன. கீழ்க்கண்ட மையங்கள் பயிற்சி மற்ற மத்திய ஆராய்ச்சிமையங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1. சமுதாயப் பணித்துறை, டில்லி பல்கலைக்கழகம்

 2. டாடா விஞ்ஞான பயிலகம் மும்பை

3. சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8

4.ராமகிருஷ்ணா தொண்டு நிறுவனம், கொல்கத்தா

            இம்மையங்கள் பி.எச்.டி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்து வருகின்றது. அதை தவிர நாட்டி நலப்பணித்திட்டத்தை சார்ந்த பலபுத்தகங்களை வெளியிடுகின்றன. இம்மையங்கள் பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கு மேல்நிலை பள்ளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை கொடுத்து வருகின்றன.

முதல் நிலைப் பயிற்சியில் கீழ் கண்ட தலைப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

1. நாட்டு நலப் பணித்திட்டத்தின் வரலாறு, தத்துவம், வளர்ச்சி

2. தொடர்பணிகள் செயலாற்று முறை

 3. சிறப்பு முகாம்கள் நடத்தும் முறை ஆளுமை வளர்ச்சி

4.சமூக காடுகள்

5.முதலுதவி

6.சமுதாயபணி

7.தாய்சேய நலபராமரிப்பு

8.சாலைபாதுகாப்புபணி

9. பண ஒதுக்கீடு கையாளும் முறை

10.கிராமம்,குடிசைபகுதிகளைத் தத்து எடுக்கும் முறை

11.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

12. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி போன்ற பலவிதமான பாடங்கள்.

13.சமுதாயஆராய்ச்சி

14.ஊனமுற்றோருக்குமறுவாழ்வு

15.ஊரகவளர்ச்சி

16.நகரவளர்ச்சி

            சமுதாயப் பணியை தகுதியான முறையில் செய்வதற்கு கலந்துரையாடல் மூலமாக கொடுக்கப்படுகிறது. நாட்டு நல வகுப்பில் பயிற்றுவிக்கும் பயிற்சியும் களப்பணி பயிற்சியும் பணித்திட்ட அலுவலர்கள் களப்பணிக்காக எஸ்.ஓ.எஸ். குழந்தைகள்கிராமம் தாம்பரம், ஜெர்மன் தொழுநோய் மருத்துவமனை -ஷெனாய் நகர், பொது சுகாதார நிறுவனம் – பூந்தமல்லி போன்ற இடங்களுக்கு செல்லுகிறார்கள்.

புத்துணர்ச்சி பயிற்சிக்காக வரும் நாட்டு நலப்பணித்திட்ட  கொண்டு 5 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

1.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

2. சுற்று சூழல் விழிப்புணர்ச்சி

3. நீர்பிடிப்பு பகுதி, மற்றும் நீர்வளம்

4. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி

5. உடல் ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு

6. இளம் குற்றவாளிகளுக்கு சீர்திருத்த முறை

7. ஆலோசனை கொடுக்கும் முறை

8. மனித உரிமைகள்

9. இளைஞர்கள் நலம்


நிதி

            இந்திய அரசு பல்கலைக்கழகங்களின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பல்வேறு அர்த்தமுள்ள பயன் வாய்ந்த, ஆக்கபூர்வாமான செயல் திட்டப் பணிகளில் பங்கெடுக்க உதவியாய் நாட்டு நலப் பணி திட்டங்களை நடைமுறைபடுத்தவும், தொடர் பணிகளுக்கும் சிறப்பு முகாமிற்கும் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.


            இந்த திட்டமானது மத்திய மாநில அரசின் நிதியுதவியோடு நடத்தப்படுகின்றது. அதில் மத்திய அரசு பன்னிரெண்டு பங்கில் 7 பங்கையும், மீதி ஐந்து பங்கினை மாநில அரசும் கொடுக்கின்றது. தற்போது 1,70,000 தொண்டர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், உள்ளனர். மத்திய அரசு தங்களது பங்கையும் சேர்த்து மாநிலதிட்ட  தங்களது பங்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கின்றது. இந்த தொகையில் மாநில அரசு 5/12 கொடுக்கின்றது. மீதி பங்கை மத்திய அரசு தருகின்றது. தற்போது தொடர் பணிகளுக்காக ரூ 160/ ம் சிறப்பு முகாம்களுக்கு ரூ. 300/- செலவழிக்கப்படுகிறது. பள்ளி இயக்குனருக்கும் அளிக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் இத்தொகையை மாநில அரசு கல்லூரிகளில் இயக்குனருக்கு பகிர்ந்து கொடுக்கின்றார்.

            பல்கலைக்கழகங்கள் பயிற்சி பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கும் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் முகாம்களுக்குான திட்டங்களை பல்கலைக்கழகங்களின் அளவில் நடத்துகின்றன. திட்ட அலுவலர்களுக்கு மத்திய அரசால் ஊக்கத்தொகையை கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ. 400/- மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரூ.200/- வழங்கப்படுகின்றது. இந்த தொகையைானது அவர்கள் நிர்வாக செயல்கள் மற்றும் பணிபுரிபவர்களை நடத்தி செல்வதற்காக வழங்கப்படுகிறது. அத்தொகையானது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து முடிவு எடுக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப | பயிலகங்களில் ஒரு அணிக்கு 100 மாணவ மாணவிகள் சேர்க்கப் படுகிறார்கள். பள்ளிகளில் 50 மாணவ, மாணவியர் ஒரு அணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஒரு அணிக்கு அமர்த்தப்படுகிறார். அரசாங்கத்தினரால் கொடுக்கப்படும் தொகையானது மாணவர்களுடைய களப்பணி, போக்குவரத்து செலவிற்காகவும் மேலும் திட்டப்பணிகளுக்கும் பயண்படுத்தப்படுகின்றன.


பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு தங்கள் தொகையை தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்தில் அனுப்புகின்றன. ஆனால் சில மாநிலங்கள், மிக தாமதமாகவே பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அனுப்புகின்றன. நமது மாநிலத்தில் இம்மாதிரியான தாமதங்கள் ஏற்படுவதில்லை.

 

மேலும் பார்க்க..

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் – பகுதி – 1

 

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

           ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் குழந்தைகள் மற்றும் இளைய சமுதாயத்தினரின் வளர்ச்சியையும், மேம்பாட்டையும் சார்ந்திருக்கிறது. இந்த குறியிலக்கு, இளைஞர்களை வளர்த்தெடுப்பதற்கான செயல்திட்டங்கள் அமைப்புத் திட்டங்கள், நிகழ்ச்சி நிரல்கள் முதலியவற்றின் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்துகிறது. சக்தி குவிந்த, ஆற்றல் வாய்ந்த இந்த முன்னேற்றத்திற்குரிய உந்துசக்திகளையும், வழிகாட்டுதல்களையும் இளைஞர்கள் தங்கள் எதிர் நோக்கியிருக்கிறார்கள். இவர்கள் தங்கள் ஆளுமையை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் சொந்தக்கால்களில் நிற்கவும் கல்வியை நாட வேண்டியது அத்தியாவசியம் என்று பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள். இன்று பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழுந்தைகளுக்குப் பல வசதிகளை செய்து தருவதோடு அவர்களுடைய எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றித் தந்து விடுகிறார்கள். எனவே குடும்ப நிர்வாகம் என்பதில் இளைய தலைமுறையின் பொறுப்பு அதிகமிருப்பதில்லை. தவிர சமூக விஷயங்களிலும் அவர்கள் பங்கேற்றல் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கிறது. நகர மயமாக்கப்பட்ட சமூகத்தின் ஒரு உள்ளார்ந்த தன்மை இது. இந்த கணிப்பொறி யுகத்தில் தவிர்க்க முடியாத நிலை இது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த உண்மையைக் கணக்கில் கொண்டால் இளைய தலைமுறையினரின் ஆளுமையை சமுதாயப் பணிகளின் மூலம் வளர்க்கும் பொறுப்பு கல்வி நிறுவனங்களைச் சார்ந்ததாகிறது. சமுதாயப் பணிகள் இளம் வயதிலேயே வாழ்வுண்மைகளை மனப்பக்குவத்தை உடையவர்களாக இளைய தலைமுறையினரை அறிந்துணரும் மேம்படுத்துகிறது என்று சொன்னால் மிகையாகாது.

‘நாம் முன்பு தொண்டு கொண்ட
வேள்வியில் அன்று நீ கொண்ட கோல….”

            என்ற சேக்கிழார் வரிகளுக்கேற்ப பல பெற்றோர்கள் சமுதாயத்து தொண்டின் மதிப்பை உணர்ந்து தங்கள் ஆருயிர் செல்வங்களை பொதுத் தொண்டு மற்றும், நாட்டு நலப்பணித் திட்டத்திலும் ஈடுபடுத்துகின்றனர். ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணித் திட்டத்தைப் பயில்வோரின் எண்ணிக்கையை வருடத்திற்கு 10% என்ற அளவில் இந்த செயல்திட்டத்தின் தரம், நிர்வாகம் முதலியனவற்றின் முக்கியத்துவத்தில் கவனம் செலுத்தி, விரிவாக்கத்தோடு கூட வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமூகம் என்பது ஒரு தனி மனிதனை மட்டும் உள்ளடக்கியதல்ல; பாரதியாரின் வரிகள்,

அனைத்து கெள் உன்னை சங்கமம் ஆக்கு
மானிட சமுத்திரம் நானென்று கூவு போல, அஃது

ஒரு சமுத்திரம் அம்மானிட சமுத்திரத்தில் புதிய 20 அம்ச கல்வி திட்டம் சங்கமம் ஆகும் போது மேன்மேலும் சமுதாயபணி வளர வழி வகுக்கிறது.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றமும் வளர்ச்சியும்

தோன்றிற் புகழோடுத் தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

-திருவள்ளுவர்


ஆம் சமுதாயப்பணி திட்டங்கள் விநாடிப் பொழுதில் மறையும் நீர் குமிழி போல அல்லாமல் அதன் தொண்டு தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிறது. ஆங்கிலேய கல்வி முறை ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்து நடக்கும்படியாக அதிகாரிகளை உருவாக்கித தருவதான குறுகிய நோக்கங்கள், அடங்கிய குறிக்கோள்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்தது. நமது நாடு சுதந்திரமடைந்த பின்னரும் இந்த கல்வி முறை தொடர்ந்தது. இந்த கல்விமுறை தான் படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிவாளிகள், பொது ஜனங்கள் ஆகிய பிரிவினர்களுக்கிடையேநிலவும் பெரிய இடைவெளிக்கு காரணம். எனவே ஏட்டுக் கல்வியோடு தனிமனிதன் என்ற அளவிலும், சமூக அங்கத்தினர் என்ற வகையிலும் முழுமை உடையவனாக்கும் பயிற்சியும் மாணவர்களுக்குத் தரப்பட வேண்டியது அவசியம் என்று சுதந்திரத்திற்குப் பின்னர் சிந்தனையெழுந்தது.

தவிர அரசாங்கம் மற்றும் கல்வியாளர் ஆகிய இருதரப்பினருமே மேற்குறிப்பிட்ட சிந்தனையெழுச்சியின் விளைவாக, கல்வியின் எல்லா நிலைகளிலும், இன்றியமையாத ஒரு பிரிவாக சமூக மற்றும் தேசியப் பணிகள் சில பலவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதினார்க்ள் நற்பண்புகள், கட்டுப்பாடு, உடலுழைப்பின் உயர்வில் நம்பிக்கை முதலியவற்றை மாணவர்கள் மனதில் உருவாக்கவும் மேம்படுத்தவும் இளைய சமுதாயத்தினரிடம் தங்கள் சமூகப் பொறுப்பு குறித்த நினைப்பை வளர்த்தெடுக்கவும் சமூக நலத்திட்டம் மற்றும் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்த கல்விப்பயிற்சி முக்கிய கருவியாக உபயோகப்படும் என்று நம்பப்பட்டது.

நமது நாடு சுதந்திரமடைந்ததிலிருந்தே சமுதாய நலப்பணியை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது என்ற கருத்து நாட்டின்முன்பு பரிசீலனைக்கென வைக்கப்பட்டது. இளைஞர்களால் சமூதாயப்பணி மேற்கொள்ளப்படுவது என்ற ஆலோசனையை இராதாகிருஷ்ணன் ஆலோசனைக் குழுதான் முதலில் முன்வைத்தது என்றாலும் அது சோதனைத்திட்ட முயற்சியின் அடிப்படையில் ஒரு தன்னார்வ அணுகுமுறையை உருவாக்கி தந்தது. இந்த பரிந்துரையின் பலனாய் உழைப்பாற்றல் மற்றும் சமூக நலப்பணி முகாம்கள் அமைக்கப்பட்டன.


            1955-ல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு மாணவர்களால் சமுதாயப்பணி மேற்கொள்ளப்படுதல் என்ற கருத்தை முதல் மந்திரிகளின் முன் வைத்து 19 வயதிலிருந்து 22 வயதான எல்லா இளைஞர்களும் மங்கையரும் தேசத்திற்கான சமுதாயப்பணிகளில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை கூறினார். அதற்குக் தேவைப்பட்ட மிக அதிகசெலவுகளையும் நிர்வாக இயந்திரங்களையும் கருதி நேழு அவர்கள் இந்த திட்டம் ஆரம்பத்தில் பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கு மட்டும் இருக்கட்டும் என்றும், அந்த மாணவ மாணவியர் பட்டப் படிப்பை முடிக்கும் வரை குறிப்பிட்ட சில துறைகளில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு சமுதாயப் பணியாற்ற வேண்டுவதை மேற்குறிப்பிட்ட திட்டம் மூலம் கட்டாயமாக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்..டாக்டர். சி .டி. தேஷ்முக் தலைமையில் ஒரு குழு நாட்டு நலப்பணித் திட்டங்குறித்து பரிசீலிக்கவும் அதன் பேரில் நிலையான சில பரிந்துரைகள் முன் வைக்கவுமாய் அமைக்கப்பட்டது. இந்த குழுவானது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை படித்து கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ சேரும் நிலையிலுள்ள எல்லா மாணவர்களுமே 9 முதல் 12 மாதங்களுக்கு சமூகப் பணி செய்ய வேண்டியது அத்தியாவசியமாக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது.மேற்படி சமூக நலப்பணித்திட்டத்தில் கொஞ்சம் ராணுவப் பயிற்சி, சமூக நலப்பணி, உடலுழைப்பு மற்றும் பொதுக்கல்வி முதலியவை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. பல நிலைகளில் இந்த திட்டம் பரீசீலிக்கப்பட்டது என்றாலும் இறுதியில் அதன் செலவினம் மற்றும் நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிரமங்கள் முதலியவற்றை எண்ணி திட்டம் கைவிடப்பட்டது. தவிர இந்தத் திட்டம் சமூக நலப்பணியை கட்டாயமாக்கியதும் கல்வி கற்பதற்காகும் வருடங்கள் இந்த திட்டத்தினால் ஒரு வருடம் அதிகமாகக் கூடிப்போனதும் பொது மக்களிடையே ஆதரவைப்பெற முடியாமல் இந்த திட்டம் கைவிடப்பட்டதற்கு ஒரு காரணமாகிறது.


            1960ஆம் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் கே. ஜி. சாயிதேன் ஆண்டில் இந்திய அரசின் யுகோஸ்லாவியா, செக்கோஸ்லாவாகியா, ஜெர்மெனி, ஜப்பான், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் நாட்டு நலப்பணிகள் நடந்தேறும் விதங்களைக் கண்டறிந்தார். அவருடைய ஆய்வலசல்கள் இை பள்ளிப்படிப்பை முடித்து வேலைக்கோ அல்லது மேற்படிப்புக் இளைய தலைமுறையினர் காகப் பல்கலைகழகத்திற்கோ செல்லும் முன்னர் ஒரு வருட காலம் நாட்டு நலப்பணிகளை அவர்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்பதால், நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற தேஷ்முக் ஆலோசனை குழுவின் பரிந்துரை வரவேற்கப்படவில்லை. கல்வி பயிலும் காலக்கட்டத்தில் ஒரு இறுக்கமற்ற அமைப்புத் திட்டம் பள்ளிகளிலும், கல்லூரிகளிலுமான பாடத்திட்டங்களுக்கு இணையாகத் தரப்படும் நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி என்ற கல்வி முறை பரிந்துரை செய்யப்பட்டது. மேல் ஆரம்பநிலைக் கல்விக் கட்டத்திலிருந்து தொடங்கி பல்கலைக்கழகப் படிப்பிலும் தொடர்வதாய் இந்த நாட்டு நலப்பணித் திட்டப் பயிற்சி அமைய வேண்டும் என்றும் அப்படியிருந்தால் தான் இளம் பருவத்திலிருந்தே தகுந்த கண்ணோட்டங்களும், கருத் தோட்டங்களும் வளர்த்தெடுக்கப்பட்டு எல்லா இளைய தலைமுறையினரையும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் கருதப்பட்டன.

நாட்டு நலப்பணித்திட்டம் தோற்றம்

            தேசிய கல்வி குழுமம் (1964–66) பள்ளிக்கும், சமூகத்திற்கும் இடையே தொடர்பு ஏற்படுத்தித் தரவேண்டியதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது. மாணவர்கள் அவர் தம் கல்விகாலகட்டத்தின் எல்லா நிலைகளிலும் ஏதாவது ஒரு சமூகப்பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியம் என்பது இந்த குழுமத்தின் பரிந்துரையில் ஒன்று. 1967 ஏப்ரல் மாதம் நடந்த மாநில கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த பரிந்துரை கவனத்தில் கொள்ளப்பட்டது. பல்கலைக்கழகப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் ஏற்கனவே தன்னார்வத்தின் அடிப்படையில் இயங்கிவரும் தேசிய மாணவர் படைப்பிரிவில் சேர்ந்துகொள்ள அனுமதிக்கப்படலாம் என்றும் இந்த பிரிவிற்கு ஒரு மாற்றாக நாட்டுநலப்பணித்திட்டம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய செயல்திட்டத்தை மாணவ சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தலாம் எனவும் இந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள் பரிந்துரை செய்தார்கள். 1967ல் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாடு இந்தப்பரிந்துரையை வரவேற்றது. 1967ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் நாள், காந்திஜியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டச் சமயம் அப்பொழுது மத்திய அரசின் கல்வி அமைச்சராக இருந்த டாக்டர். வி.கே.ஆர்.வி.ராவ் எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கி 39 பல்கலைக்கழகங்களில் 40,000 மாணவர்களை அங்கத்தினராகச் சேர்த்துக்கொண்டு நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பை துவக்கி வைத்தார்.

            சமூகத்தின் நடப்புண்மைகளை மாணவ சமுதாயம் அறிந்துகொள்ள வழிவகுப்பதன் மூலம் கல்வி என்பது சமூகத்தினின்று பிரித்து நிற்பது என்ற கண்ணோட்டத்தையும், நடப்புநிலையையும், சீர்ப்படுத்துவதே இந்த பயிற்சி திட்டத்தின் முக்கிய நோக்கம். நேரடி அனுபவத்தின் மூலம் சமுதாய பிரச்சினைகளை பற்றி அறியவும், ஆராய்ந்து அலசவும் அதிக அளவில் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருவதன் மூலம் அந்த வாய்ப்புகளின் வழி அத்தகைய பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகளை பற்றியும் புரிதலை மாணவர்களிடையே உருவாக்க வாய்ப்பளிப்பதன் மூலமும் அத்தகைய நடவடிக்கைகளில் மாணவு சமுதாயம் முனைப்போடு இறங்கி பணியாற்ற உத்வேகமளிப்பதன் மூலமும் மேற்குறிப்பிட்ட இடைவெளியை சரிப்படுத்தப் புகுந்தது, இந்த திட்டம். சேவை வழி கல்வி என்ற கூடுதல் பரிமாணத்தை நமது கல்வி திட்டத்திற்கு நாட்டுநலப்பணித்திட்டம் வழங்குகிறது.

நாட்டு நலப்பணித்திட்ட நோக்கங்கள்

            நோக்கமில்லா செயல் ஏக்கம் தரும் ஆகவே நாட்டுநலப்பணித்திட்டம் கீழ்காணும் நோக்கங்களை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.


1. மாணவர்களின் சமூகப்பிரச்சினையைத் தட்டியெழுப்புதல் பொது மக்களோடு, பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை மாணவ சமுதாயத்தினருக்கு வழங்குதல்.

2. மாணவர்களை, வன்முறையற்ற ஆக்கப்பூர்வமான சமூகத்தைச்சார்ந்த நடவடிக்கைளில் ஈடுபடுத்துதல்

3. மாணவர்கள் அவர்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்த சமுதாயத்தினை பற்றியும், சமூக அரசியல்சார் மற்றும் பொருளாதார நடப்புண்மைகளை எதிர்கொள்வதன் மூலம் அறிவுவிளக்கம் பெறச் செய்தல்.

4. அவர்களுடைய அறிவாற்றலை அவ்வப்பொழுது உருவாகும் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் உபயோகப் படுத்தும்படிச் செய்தல்.

5.ஜனநாயகமேற்கொள்வதற்கானரீதியான தலைமைப் பொறுப்புகளை திறமைகளை மாணவசமுதாயத்தினரிடம் வளர்த்தெடுத்தல்,

            பொதுவாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் குறிக்கோள்களும், இலக்குகளும் கல்வி மற்றும் சேனை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பணித்திட் ஈடுபடுவதன் வாயிலாக மாணவர்களின் கண்ணோட்டமும் சமூகத்தின் எதார்த்த நிலை அல்லது நடப்புண்மைகளை பற்றி அவர்களின் திறன் தெளிவா வாக மதிப்பிடுதலும் மேம்படுத்தப்படவேண்டும் என்பது முக்கிய குறிக்கோள்களாகக் கொள்ளப்படுகிறது. இப்படி செய்வதின் பலனாய் கல்வியை சமூகத்தோடு இணைத்து மாணவர்களின் சமூகச்சாரி செய்யும். தன்னை பற்றி தான் சார்ந்த சமுதாயத்தை பற்றி அறிதல் வாழ்க்கைக்கு அவன் கற்கும் கல்வியை சம்பந்தமுடையதாக மூலம் ஏற்படுத்துவதும் அப்படி பெறப்பட்ட கருத்தில் அறிவுக்கான செயலாக்க தளத்தைத் தருவதும், இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தின் இரண்டாவது குறிக்கோள் அதனுடைய நலப்பணியை ஒரு முகப்படுத்தலோடு தொடர்புடையது.சமூகங்களை வெறுமே கல்வி கற்க தேவையான தீவனமாக மட்டும் பார்த்து அவற்றின் பிரச்சனைகளை தீர்ப்பதில் உதவ அக்கறை காட்டாமல் பயன்படுத்திக்கொள்வது. மனிதநேயம் அற்ற போக்கு, இந்த – கண்ணோட்டத்தின் விளைவாய் மாணவர்கள் சமுதாயத்திற்கு சேவை செய்வது, புறக்கணிக்கப்படமுடியாதது. அதற்கும் மேலாய் இந்த பணி மாணவரின் கடமையாய் கருதப்படவும், செய்தேஆகவேண்டிய, தவிர்த்துவிடலாம் என்றுநினைக்ககூடாத தலையாய கடமையாய் கொள்ளப்படவேண்டியது அவசியம்.

நாட்டு நலப்பணித்திட்ட பொதுக்கொள்கைகள்

பூவினைசூடாவிட்டால்
பூவைக்கு பொலிவே இல்லை


            திட்டங்களில் கொள்கைகள் இல்லாவிட்டால் திட்டத்திற்கு மதிப்பே இல்லை. எனவே இத்திட்டம் பல பொதுக் கொள்கைகளை உள்ளடக்கியதாக இருக்கிறது. நாட்டு நலப்பணித்திட்டம் என்பது அடிப்படையில் ஒரு கல்வி திட்டமாகும். மாணவ மாணவியர். ஆசிரியர்கள் ஆகிய இரு சாராரும் வாழ்வுண்மைகளைக் கண்டறிய எதிர் கொள்ள வைக்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் கிராமங்களிலும், நகர்ப்புற பகுதி களிலும் நிலவும் ஆழமைவுகளை ஆய்ந்தறியவும், புரிந்துகொள்ளவும், கொள்வதோடு மனித அளவிலும், பொருளளவில லுமா வளர்ச்சிக்குத் தகுந்த தேவை அடிப்படையிலான திட்டங்களைத் தீட்டவும் வேண்டும்.

அவர்கள் தேவையான சில பல விஷயங்களை அறிந்து கொண்டவர்களாக்கிக் கொள்ள வேண்டும். தேவையா திறன்களைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதோடு, திட்டம் தீட்டுதல் மற்றும் செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துதல் முதலியவற்றையும் கற்றுத் தர வேண்டும். இந்த திட்டத்தின் முழுப்பயன் என்ற விதத்தில் மாணவு’ மற்றும் ஆசிரிய விருப்பார்வத் தொண்டர்கள் ஒரு தேசியத் ” கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்வதோடு நாளைய குடிமகன்கள் என்ற அளவில் தங்கள் ஆளுமைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டுவருடகால தொடர்ச்சியான செயல் திட்டங்கள், அவற்றிற்கிடையே ஒரு சிறப்பு முகாம் திட்டம் முதலியவைதனக்குத் திருப்தியளிக்கும் படியான நலப்பணி ஈடுபாட்டிற்குரிய ஒரு ஒருங்கிணைந்த வழிமுறை அல்லது அணுகுமுறையாக உபயோகப்படுத்தப்படண்ேடும்.


நாட்டு நலப்பணித் திட்டத்தின்உள்ளடக்கம்

  நாட்டு நலப்பணித்திட்டத்தின் பொதுக்கருத்துக்கு ஏற்ற விதத்தில் ஒரு கல்வி நிறுவனம் நேரிய வலுவான ஒரு செயல் திட்டத்தை வளர்த்தெடுக்க கீழே தரப்பட்டுள்ள படிநிலைகளை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியமாகிறது. “எண்ணிதுணிகக்கருமம்” என்ற வள்ளுவரின் கூற்றுங்கிணங்க தனக்குத்தானே குறிக்கோள்களை வகுத்துக்கொண்டு அதன் வழியே செல்ல வழி வகுக்கிறது. கல்லூரிக்கு அருகாமையிலேயே கிராமம் அல்லது’குடிசைவாரிய பகுதிகளை தேர்ந்தெடுத்து சேவை செய்யவேண்டும்.

சமூக மற்றும் பொருளாதாரக் ‘ கண க்கெடுப்புகளைத் (SURVEY) தாங்கள் தத்தெடுத்த கிராமங்களிலாவது அல்லது குடிசை வாரிய பகுதிகளிலாவது மேற்கொள்ளுதல். மேற்கொண்ட கணக்கெடுப்பு/அல்லது ஆராய்ச்சிகளின் மூலம் சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளை கண்டறிந்து ஆவண ‘ செய்யமுயற்ச்சித்தல்.

‘தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும், மக்களிடமும் அரசாங்க நிறுவனங்களிடமும் தொடர்பு கொண்டு அவர்களின் ‘செயல்பாடு திட்டங்களின் முன்னுரிமைகளைக் கண்டறிதல். மக்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களுடைய பிரச்சனைகளுக்குத் தகுந்த திட்டம் தீட்டுதல்

அந்த செயல் திட்டங்களை ஆக்க பூர்வமான வழியில் நடை முறைப் படுத்துவதற்கென மூன்றிலிருந்து ஐந்து வருட காலகட்டத்திற்குரிய ஒரு அமைப்புத் திட்டத்தினை வரைந்து கொள்ளவும் அவ்வப்பொழுது அதன் விளைவு அல்லது தாக்கம் பற்றி மதிப்பாய்வு நடத்த திட்டம் தீட்டிக் கொள்ளவும். எந்த ஒரு திட்டத்தையும் எழுத்துருவில் வடித்து, மனித மற்றும் பொருட்கள் அளவிலான தேவையான வள ஆதாரங்களையும் வழிவகைகளையும் கைக்கொண்ட பிறகு ஒரு சிறப்பு முகாம் நடத்துவதற்கான செயல் திட்டம். அப்படி தீட்டப்படும் திட்டம் செயலாக்கம் பெற்றதாக, இரண்டு அல்லது மூன்று – மாதங்களுக்கு முன்னதாகவே அத்தகையதொரு திட்டத்தைத் – தீட்டுவதும், அதற்கான வழிவகைகளைக் கைக்கொள்வதும் அவசியமாகியது.

            பணி செய்யும் இடங்களைப் படிப்படியாக அதிகரித்து பலருக்கு பயன்படுமாறு திட்டங்களை அமைத்தல்* நாட்டு நலப்பணித் திட்டத்தில் பங்கேற்கும் அனைத்துத் தொண்டர்களையும் சுழல்முறை அடிப்படையிலோ அல்லது செயல்திட்ட அடிப்படையிலோ அணிகளாக இயங்கச் செய்யபோதுமான எண்ணிக்கையில் வேறு செயல்திட்டங்களும்
இருக்கலாம்.


நாட்டுநலப்பணித்திட்டத்தின் கீழுள்ள செயல் திட்டங்களாவன

 
அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

அ.தொடர்பணிகள்

            மாணவ தன்னார்வத் தொண்டர்கள் ஒவ்வொரு வாரமும் ஓய்வு நேரங்களில் சமூக நலப்பணி நடவடிக்கைகளி பங்கெடுக்கிறார்கள் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் தங்கள் கல்லூரிப் படிப்பிற்காகும் காலகட்டத்தின் ஒரு வருடத்தி என்று குறைந்த பட்சம் 120 மணிநேரமாவது சமூக நலப்பணிக் திட்டங்களில்உழைப்புஎதிர்பார்க்கப்படுகிறார்கள்.வேண்டும் நல்க சமூக சேவைத் திட்டங்களில் மாணவர்களைப் பங்கேற்கச் செய்யும் நோக்கங்களாவன உள்ளு கொள்வதும், (1) தாங்கள் வாழும் சமூக சூழலைப் பற்றிய தங்கள் அறிதலை மாணவர்கள் ஆழமாக்கி பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தங்களிடம் வளர்த்துக் கொள்வதும் செயல் திட்டங்களைத் தீட்டுவதில் ஆற்றல் பெற்றவர்களாகவும் மக்கள் பிரச்சினைகளில் சிலவற்றைத் தீர்க்கவும் குறைக்கவும் ஜனத்தொகையில் பலதரப்பட்ட பிரிவுகளோடு இணக்கமாய் செயலாற்றவும். ஒத்துழைக்கவும் கற்றுக்கொள்வது முதலியனவாகும். நாட்டு நல பணித்திட்டத்தில்
நிலைத்த முழு முதற் செயல்பாடுகள் :


1.நிறுவனம்சார்ந்தசேவைகள்

2.மருத்துவநலப்பணிகள்

3. தேர்ந்தெடுக்கும் பகுதிகளில் பணிகள் (தத்தெடுத்த)

4.சமூகசுற்றாய்வு

5. விபத்து அல்லது திடீர் இடர் நிர்வாகம்.. (Disaster Relief)


(1) நிறுவனம் சார்ந்த சேவைகள்

            நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் பள்ளிகள், அனாதை இல்லங்கள், இளங்குற்றவாளிகள் கல்வி நிலையம்,  ஊனமுற்றோருக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள் ஆதரவற்றோர் இல்லங்கள், சீர்திருத்தப்பள்ளிகள், பிற்பாதுகாப்பு இல்லங்கள், முதலிய நிறுவனங்களுக்குச் சென்று சமுதாயப்பணி/செய்து வருகிறார்கள்.


(2)பள்ளிகள்

            சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நலிந்த ‘ பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டத் தொண்டர்கள் சேவை செய்கிறார்கள். தவிர, மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்பனையையும், படைப்பாற்றலையும் வளர்த்தெடுக்க இயலாதவர்களாய்இருப்பின்அவர்களுக்கு மாணவர்கள் நலப்பணிசெய்யப்போகிறார்கள்.


பள்ளிகளின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஆற்றி வரும் பலதரப்பட்ட சேவைகள் கீழே தரப்பட்டுள்ளன


1. குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருதல்.

2. பள்ளியிலிருந்து பாதியில் நின்று விடுபவர்களைப் (school dropout) பற்றி ஆய்ந்தலசி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர செய்தல்.

3. மாணவர்களுக்குப் புதிர்ப் போட்டிகள் ஏற்பாடு செய்தல்.

4. விளையாட்டுகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி பரிசுகளும் வழங்குதல்.

5. குழந்தைகளுக்காக விடுமுறை முகாம்கள் ஏற்பாடு செய்தல்

6. ஏழை, எளிய மாணவர்களின் வீடுகளுக்கு விஜயம் செய்து குழந்தைக்கும், அதன் பெற்றோருக்கும் ஆலோசனை கூறல், உதவிகள் கிடைக்கும் வழி வகைகளை எடுத்துக் கூற, – பரிந்துரைத்தல், பொருளாதார உதவி கிடைப்பதற்கான உத்திரவாதம் போன்றவற்றின் மூலம் குழந்தைக்கு உதவி செய்ய முயலுதல்.

7 மருத்துவ நலப் பணி மருத்துவப் பயிற்டு போ வகுப்புகளை ஏற்பாடு செய்தல்.

8. தேவைப்பட்டால் குழந்தைகள் குறித்த கணக்கெடுத்தல்

பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும், பிரிவினருக்காக உள்ள நிறுவனங்கள்!


            மேல் குறிப்பிட்ட நிறுவனங்கள் தாய், தந்தையர அனாதை குழந்தைகளுக்கு, அல்லது ஆதரவற்றோருக்கு இளங்குற்றவாளிகளுக்கு, பிச்சைக்காரர்களுக்கு முதியோர்களுக்கு என்று தொடரும் பல நலிந்த பிரிவினருக்குரியதாக இருக்கலாம். இந்த குழுக்கள் அல்லது பிரிவினர், சமூகத்தின் பிற பிரிவுகளிலிருந்து மாறுபட்டணாக அந்த விதத்தில் அவர்களுக்கு நிறுவனத்தை சார்ந்த பராமரி பாதுகாப்பும் தேவைப்படுகிறது. நாட்டுநலப் பணிதிட்ட தொண்டர்கள் மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்டிருப்பது போன்ற சேவைகளைச் செய்து வருகிறார்கள்

 1. உடை உணவு, மருத்துவ உதவி முதலியவற்றை பெறுவதற்காக உள்ளுர் வள ஆதாரங்களைத் திரட்டுதல்,

 2. ஓய்வு, நேரத்தை மகிழ்ச்சியாகப் கழிக்க மனமகிழ் திட்டங்களும், பாட்டுப் போட்டிகளும் நடத்துதல்,

3. கல்வித் திட்டங்கள் ஏற்பாடு செய்தல்.


உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், ஊனமுற்றோர்களுக்கான சேவை

            வாய் பேச முடியாத, காதுகேளாதோருக்கான, சேவை நிறுவனங்கள், பார்வை இழந்தோருக்கான இல்லங்கள், மனநோயாளிகளுக்கான மையங்கள், மற்றும் கை, கால் ஊனமுற்றவர்களுக்கான அமைப்புகள் போன்ற நிறுவனங்களில் நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மேற்கொள்ளும் பணிகள் பின்வருமாறு.

1. பார்வையற்றவர்களுக்குப் படித்துக்காட்டுதல் / எழுதித்தருதல்  

2. ப்ரெயில் மொழியில் பார்வையற்றவர்களுக்கும் பாடங்களை தயாரித்தல்.

3. உதட்டசைவு, வாசிப்பு மற்றும் சமிக்ஞைகள் வாசிப்பு முதலியவற்றைப் பயின்று அதன்மூலம் காது கேளாதோருடன் உரையாடுதல்.

4.பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தடை

5. ஊனமுற்றோருக்கு கடிதம் எழுதித்தருதல்,

6.இந்த பிரிவினரின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும்
உறவினர்களைத் தொடர்பு கொள்ளுதல்,

7. மேற்குறிப்பிட்ட நிறுவன அதிகாரிகளுக்கு நிதித்திரட்டும்
பணிகளில் உதவி புரிதல்,


மருத்துவப்பணிகள்

            நகரிலுள்ள கல்லூரிகள், பள்ளிகளிலுள்ள நாட்டு நலப்பணித்திட்டத் தொண்டர்கள் மருத்துவமனைகளிலும் சேவை செய்து வருகிறார்கள். அரசாங்க மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளுக்கும், மருந்துகளுக்கு மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் வருவதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த மருத்துவமனைகளில் போதுமான ஊழியர்களும் இல்லை. எனவே இங்கு நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின்
பணிகள்மருத்துவமனைக்கு உள்ளும் புறமும் தேவைப்படும் பணிகளாகும்.:

மருத்துவமனைக்கு உள்ளே

1. நோயாளிக்கு வழிகாட்டிகளாக பணிபுரிவது, நோயாளிகள் பெயர், முதலான விவரங்களைப் பதிவு செய்வதில் உதவி, மருந்துகள் வழங்குவதில் உதவி, தவிர மருத்துவர்களுக்கும், செவிலியருக்கும் உதவி புரிபவர்களாக இயங்குவது.

2. வார்டுகளைப் பராமரிக்கும் பணி, நோயாளிகளுக்கு உணவு ஊட்டுவதில் உதவி செய்வது, அவர்களுக்கு கடிதங்கள், எழுதிக் தந்து உதவுவது அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல்.

3. அங்க ஊனத்துறை : கைவினைத் தொழில்கள் கற்றுத்தருதல், பொம்மைவங்கிகள், நூலகங்கள், முதலியவற்றை நோயாளிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

4. அயன் மருத்துவம் மற்றும் வாழ்க்கைத் தொழில் சார மருத்துவம் : உடற்பயிற்சிகளை செய்வதில் நோயாளிகளுக்கு உதவுதல்.

5. இரத்த வங்கி : நோயாளிகளின் உறவினர்களிட இரத்ததானம் கொடுக்க ஊக்கப்படுத்துதல், X இரத்ததானம் செய்ய ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாக வேலை


மருத்துவமனைக்கு வெளியேயான பணிகள்

1. குழந்தைகள் நல மருத்துவக் காப்பகங்களில் உதவி.

2. நோய்தடுப்பு பிரசாரப் பணிகள்.

3. கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் சுகாதார நலக் கல்ல
நிகழ்ச்சிகள்.
4. சுற்றுச் சூழல் சுகாதார செயல் ஊக்கப் பணிகள்.

5. கண் மருத்துவ முகாம்கள், பல் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு. செய்தல், தொழுநோய் பற்றிய பிரசாரப் பணிகள் செயலாக்க
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்.

6.குடும்ப கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற ஊக்குவித்தல்

இதன் தொடர்ச்சி அடுத்த  இதழில்….

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

     பத்திரிகைகள் சுதந்திரத்தோடும் பொறுப்போடும் நடந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் அமைந்த முதல் பத்திரிகைக் குழு (Press commission) நாட்டிலுள்ள பத்திரிகைகளின் நிலையையும் தரத்தையும் பற்றி ஆராய்ந்தது. சில நன்கு அமைந்த செய்தித்தாட்கள் உயர்ந்த தரத்தோடு வி செயல்பட்டாலும், பெரும்பாலான பத்திரிகைகள் தங்களது விற்பனையைக் கூட்டும் வாணிபநோக்கில் ‘தரக்குறைவாகவும்’ பண்பற்ற முறையிலும் தனிமனிதர்களைத் தாக்கும் வகையிலும் மஞ்சள் இதழியல் ‘போக்கிலும்’ எழுதுவதாகச் சுட்டிக்காட்டியது. பத்திரிகை மன்றம் (PRESS COUNCIL)

            பத்திரிகைக் குழு “பத்திரிகைகளின் சுதந்திரத்தைக் கட்டிக் காக்கவும், இதழியல் தொழிலில் ஈடுபட்ட அனைவரிடமும் பொறுப்புணர்ச்சியையும் தொண்டு மனப்பான்மையையும் வளர்க்கவும்” ஒரு பத்திரிகை மன்றத்தை (Press council) அமைக்க வேண்டுமென்று பரிந்துரைத்தது. ஸ்வீடனில் 1916இல் முதல் தடவையாக பத்திரிகை மன்றத்தை அமைத்தனர். இதனைப் பின்பற்றி உலகில் பல்வேறு நாடுகளிலும் பத்திரிகை மன்றங்களை அமைத்திருக்கின்றனர். இப்பொழுது 40 நாடுகளில் பத்திரிகை மன்றங்கள் உள்ளன.

சட்டப்பின்புலம்

            நமது நாட்டில் முதல் பத்திரிகைக் குழுவின் (Lok ) பரிந்துரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவையில் sabha) பத்திரிகை மன்ற மசோதாவை’க் (Press Council Bill) கொண்டு வந்தனர். ஆனால் பொதுத் தேர்தலுக்காக 1957 ஏப்ரலில் நாடாளுமன்றம் கலைக்கப் பெற்றதால் மசோதா சட்டமாகாமல் செயலற்றுப் போனது.

            எட்டாண்டுகளுக்குப் பிறகு தேசிய ஒற்றுமை மன்றம் (National Integration Council), பத்திரிகை மன்றம் அமைக்க வேண்டிய தேவையை வலியுறுத்தியது. இதன்படி 1965-இல் ‘பத்திரிகை மன்றச் சட்டத்தை’ (The Press Council Act) நிறைவேற்றியது. இந்திய பத்திரிகை மன்றத்தை 1966 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள் அமைத்தனர். இதன் தலைவராக நீதிபதி ஜே.ஆர். மதோல்கார் (J.R. Madhoíkar) பொறுப்பேற்றார். பத்திரிகை மன்றத்தின் அமைப்பினில் சிறிது மாற்றம் செய்து, அதன் காலத்தை நீட்டிக் கொண்டிருந்தனர். 1975இல் நாட்டில் நெருக்கடி நிலையை அறிவித்தபொழுது குடியரசுத் தலைவர் 1975 டிசம்பர் 8-இல் ஓர் ஆணை பிறப்பித்து,1976 ஜனவரி 10 முதல் பத்திரிகை மன்றத்தை நீக்கினார். பத்திரிகை மன்றம் திறமையாகச் செயல்படவில்லை என்று காரணம் கூறி ‘ பத்திரிகை மன்றம் (நீக்குதல்) சட்டத்தை’ (The Press Council Repeat Act) 1976இல் நிறைவேற்றினர்.


            நெருக்கடி நிலை நீங்கிய பிறகு. 1978-இல் பத்திரிகை மன்றச்சட்டத்தை மறுபடியும் கொண்டு வந்தனர். இந்தச் சட்டம் 1979 மார்ச்சு ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இப்பொழுது பத்திரிகை மன்றத் தலைவராக நீதிபதி ஏ.என்.சென் (Justice A N sen) இருக்கின்றார்.


அமைப்பு முறை

             பத்திரிகை மன்றத்தில் ஒரு தலைவரும் 28 உறுப்பினர்களும் இருப்பார்கள். உறுப்பினர்களில் 20 பேர் பத்திரிகையாளர்களாகவும்  5 பேர் நாடாளுமன்றத்தைச் சேர்ந்தவர்களாகவும், 3 பேர் கல்வி, அறிவியல், சட்டம், இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் சிறப்பறிவு பெற்றவர்களாகவும் இருப்பார்கள்.

            பத்திரிகை மன்றத்தின் தலைவரை, நாடாளுமன்ற மேலவைத் தலைவர், மக்களவைத் தலைவர், பத்திரிகை மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஓர் உறுப்பினர் ஆகியவர்களைக் கொண்ட குழு தீர்மானிக்கும். பத்திரிகை மன்றம் சில நீதிமன்றப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் உயர்மட்ட நீதிமன்ற (Supreme court) நீதிபதிகளையே பொதுவாக பத்திரிகை மன்றத் தலைவராக நியமிக்கின்றனர்.


மன்றத்தின் பணிகள்

            பத்திரிகையின் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதும், செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்களின் தரத்தைக் காத்து மேம்படுத்துவதும் பத்திரிகை மன்றத்தின் தலையாய் நோக்கமாதலால், அதனை நிறைவேற்றும் வகையில் மன்றம் பணிகளை மேற்கொள்கின்றது.

            மன்றம், செய்தித்தாட்களும், செய்தி நிறுவனங்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய நெறி முறைக் கோட்பாடுகளை உருவாக்கித் தர வேண்டும். செய்தித்தாட்களும் செய்தி நிறுவனங்களும் சுதந்திரமாகச் செயல்பட உதவுவதும் மன்றத்தின் பணியாகும். செய்தித் தாட்களும் செய்தி நிறுவனங்களும் இதழியலாளர்களும் பொது நல நாட்டத்தோடும், பொறுப்போடும் உரிமை உணர்வோடும் பணி செய்யத் துணை செய்ய வேண்டும். இதழ்களை வெளியிடுவதில் ஈடுபட்டுள்ள எல்லாப் பிரிவினரிடமும் உருவாக்க முயல வேண்டும்.

            மன்றம், பத்திரிகைகளின் அமைப்புமுறை, செய்தித்தாட்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் உடைமை குவிதல் நிலை ஆகியவற்றை ஆராய்ந்து, பத்திரிகைகள் சுதந்திரமாகச் பரிந்துரைகளைச் செய்ய வேண்டும். வெளிநாட்டு உதவிகளைப் பெறும் செயல்பட வேண்டிய மதிப்பிட்டுக் கூறும் பணியும் இந்த மன்றத்தினுடையதாகும்.


செயல்பாடு

    பத்திரிகை மன்றம் அதனிடம் வரும் குற்றச்சாட்டுக்களை விசாரித்துத் தீர்ப்பளிக்கின்றது. வரையறுத்த அதிகாரத்திற்குள் 1966 1981 வரை இம்மன்றம் 800 குற்றச்சாட்டுகளை விசாரித்துள்ளது. இவற்றில் 214 குற்றச்சாட்டுகள் பத்திரிகை சுதந்திரம் தொடர்பானவைகளும் மத்திய மாநில அரசுகளின் மீது பத்திரிகைகள் கொண்டு வந்தவைகளுமாகும். 566 குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளின் மீது தனிமனிதர்களும், நிறுவனங்களும், மத்திய, மாநில முடிவுகளை அரசுகளும் கொண்டு வந்தவை.  மன்றத்தின் முடிவுகளை பல செய்தித்தாட்களில் வெளியிடுகின்றனர்.


    பத்திரிகை மன்றம் இதழியலாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வரையறுத்துக் கூறவில்லை. காலப்போக்கில் வருகின்ற வழக்குகளை விசாரித்துக் கூறுகின்ற தீர்ப்புகளின் அடிப்படையில் நெறிமுறையினை உருவாக்க இயலுமென்று கருதுகின்றது. பத்திரிகைகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பத்திரிகை மன்றம் ஒரு பாலமாக விளங்குகின்றது.


மதிப்பீடு

            பத்திரிகை மன்றத்திற்கு இதழ்களைக் கட்டுப்படுத்த, தண்டிக்க போதுமான அளவு அதிகாரம் வழங்கப்பெறவில்லை. ஆதலால் அவை திறமையாகப் பணிபுரிய இயலவில்லை என்று கருதுகின்றனர். பத்திரிகை மன்றத்தை, “இது ரப்பர் பற்களைக் கொண்ட காகிதப் புலி’ ; ” தெளிவற்ற அதிகாரமற்ற ஓர் அமைப்பு” என்றெல்லாம் தொடக்க காலத்தில் வர்ணித்தனர். ஆனால் பத்திரிகை மன்றம் இப்பொழுது ஆற்றல் பெற்று வளர்ந்து வருகின்றது. இதன் தேவையை எல்லாத்தரப்பினரும் உணர்ந்துள்ளனர். பத்திரிகை சுதந்திரத்தையும் தரத்தையும் காக்கக் கூடிய நிறுவனமாக பத்திரிகை மன்றம் இருப்பதால், இதனை வலுவானதாக்கி, திறமையாகச் செயல்படத்தக்க சூழ்நிலையை உருவாக்கித் தருவது இந்தியப் பத்திரிக்கை வளர்ச்சிக்குத் துணை செய்யும்.

பத்திரிகை மன்றம் (Press council)

            நமது நாட்டில் பத்திரிகை மன்றத்தை அமைத்த பொழுது, அது, “செய்தித்தாட்களும, செய்தி நிறுவனங்களும், செய்தியாளர்களும் உயர்ந்த தொழில் தரத்தை நிலைநாட்டும் வகையில் பின்பற்ற வேண்டிய ‘நடத்தைக் கோட்பாட்டை’ (Code of Conduct) உருவாக்கித் தர வேண்டும்,” என்று எதிர்பார்த்தனர். ஆனால் பத்திரிகை மன்றமோ, “காலப்போக்கில்தான அறக்கோட்பாட்டை உருவாக்க இயலும்,” என்று கருதியது

            1966 இல் பத்திரிகை மன்றம் செய்தித்தாட்கள் பின்பற்றத் தக்க சில வழிமுறைகளைத் தொகுத்து, 10,000 செய்தித்தாட்களுக்கும் இதழ்களுக்கும் அனுப்பியது. அந்த தொகுப்பில், சமுதாயத்தின் உண்மையான, சட்டத்திற்குட்பட்ட தேவைகளையும் குறைகளையும் எடுத்துரைக்கும் இதழ்களுக்கும் உரிமையை ஏற்றுக் கொண்டு ஆனால் கீழ்க்கண்டவற்றை விலக்க வேண்டும் என்று தொகுத்துக் கூறுகின்றது

சாதி தொடர்பான நிகழ்ச்சிகளையோ விவரங்களையோ மிகைப்படுத்தியோ, சிதைத்தோ கூறுதல்; உண்மைகளைப் போல சரி பார்க்காத வதந்திகளையோ ஐயப்பாடுாடுகளையோ ஊகங்களையோ பரப்புதல்; அவற்றைப் பற்றி விமாசித்தல்.

இலக்கிய நயத்தோடு அமைய வேண்டுமென்றோ  எதுகை மோனைக்காகவோ, அழுத்தம் தருவதற்காகவோ செய்திகளையோ, கருத்துக்களையோ வெளியிடும் பொழுது,பண்படாத, கட்டற்ற மொழிநடையைப் பயன்படுத்துதல்;


உண்மையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைகளைத் தீர்க்கும் வழிமுறையாக, ஆத்திரப்படும் சூழ்நிலையில் கூட வன்முறைக்கு ஆக்கமும் ஊக்கமும் தருதல்.


ஒரு குறிப்பிட்ட சமுதாயம் அல்லது சாதியின் உறுப்பினர்கள் என்பதற்காக, அதுவும் குறிப்பாக அவர்களது நடத்தைப்பற்றிக் குற்றச்சாட்டுகள் இருக்கும் பொழுது, தனிமனிதர்களையோ, சமுதாயங்களையோ குதர்க்கமாகவோ, பொய்யாகவோ தாக்கி எழுதுதல்;

பல்வேறு சமுதாயங்களின் உறுப்பினர்கள் தற்செயலாக ஈடுபட்டிருக்கும் நிகழ்ச்சிகளுக்குத் தவறாக சாதி வண்ணம் பூசுதல்;

சாதிகளுக்கிடையில் வெறுப்பையோ,கெட்டஎண்ணங்களையோ,அவ நம்பிக்கை உணர்வையோஏற்படுத்தக் கூடியவற்றிற்கு அழுத்தம் கொடுத்தல்;

உண்மைக்குப் புறம்பானவற்றை அச்சப்படுத்தும் வகையில் வெளியிடுதல்; சாதிகள், வட்டாரங்கள், மொழிப் பிரிவினருக்கிடையில் கசப்பான தொடர்புகளை ஏற்படுத்தக் கூடிய செய்திகள், கருத்துக்கள் பற்றி வெறி ஏற்றும் விமரிசனங்களை வெளியிடுதல்;

சமுதாய ஒற்றுமையைப் பாதிக்கும் செய்திகளுக்கு, உணர்ச்சியைத் தூண்டுவதற்காக நடந்தவற்றை மிகைப் படுத்தியோ, பெரிய செய்தித் தலைப்புகளோடோ வேறுபட்ட எழுத்துக்களில் அச்சிட்டோ வெளியிடுதல்;


பல்வேறு மதங்களைப் பற்றியோ, நம்பிக்கைகளைப் பற்றியோ, அவற்றின் நிறுவனங்களைப் பற்றியோ மரியாதையற்ற, மட்டம் தட்டுகின்ற, கேவலப்படுத்துகின்ற கருத்துரைகளைக் கூறுதல்.

நிறைவுரை

            இதழ்கள் தங்களது வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சில அறவிதிகளை ஏற்றுச் செயல்படுதல் தேவையாகும். அறவழி நிற்கும் இதழ்கள் தான் மக்களின் மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்றுச் சிறக்கும்.


நன்றி

இதழியல் கலை – டாக்டர் மா.பா.குருசாமி

நோக்கு என்றால் என்ன?

நோக்கு-என்றால்-என்ன

            ‘நோக்கு’     என்னும் சிந்தனை செய்யுள் பற்றியது. செய்யுளியலின் முதல் நூற்பாவில் செய்யுள் உறுப்புக்கள் பற்றிக் கூறும் தொல்காப்பியர் ‘நோக்கு’ என்பதைப் பத்தாம் உறுப்பாக வைத்துள்ளார். நோக்கு வடிவம் சார்ந்த உறுப்புக்களுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது. நோக்கு என்பது ஒரு கருத்தைச் சொல்லுங்கால் வரிசையாக இயையுமாறு தொடர்ந்து செல்வது எனக் கூறப்படுகிறது. இடையில் முறிவு இன்றி ஒரு போக்காகக் கருத்துச் செல்லுமாறு ‘நோக்கு’ ஆகும். யாதானும் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காமல் அதனையே நோக்கி நின்ற நிலை நோக்கு’ என்பது இளம்பூரணர் கருத்து.” இது செய்யுளின் ஓரடியிலும் அல்லது பா முழுதும் அமையலாம். இந்நோக்கு மாத்திரை, எழுத்து, அசை, சீர், அடி என்ற ஐவகைக் கூறுகளும் இணைந்துருவாகும் ஓர் இலக்கியச் சிறப்பு என்று ச.வே.சுப்பிரமணியன் ‘இலக்கிய வகையும் வடிவும்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.


‘மாத்திரை முதலா அடிநிலை காறும்
நோக்குதற் காரணம் நோக்கு எனப்படுமே‘       

            என்று நோக்கு என்பது பற்றித் தொல்காப்பியர் விளக்குகின்றார். இதன்கண் ‘அடிநிலை காறும்` என்றதனான் ஓர் அடிக்கண்ணும் பல அடிக்கண்ணும் இந்நோக்கு அமையும் என்பது இளம்பூரணர் கருத்து. இது ஒரு நோக்காக ஓடுதலும், பல நோக்காக ஓடுதலும் இடையிட்டு ஓடுதலும் என மூவகைப்படும்.

            ஒரு செய்யுள் முழுவதும் ஆற்றொழுக்காகப் பொருள் அமைந்து நிற்றல் என்பது ஒரு நோக்காக ஓடுதலாகும். பல நோக்காக ஓடுதல் என்பது செய்யுள் ஆங்காங்கு நின்று பொருள் முடிவதாகும். இடையீட்டு நோக்குதல் என்பது செய்யுளில் ஓரிடத்து நின்ற சொல் பிறிதோரிடத்துச் சென்று இயைந்த பொருள் தருதலாகும். செய்யுளில் எத்தனை அடிகள் இருப்பினும் அவற்றில் அமைந்துள்ள மாத்திரையும் எழுத்தும், அசையும் சீரும் ஆகிய எல்லாம் மீண்டும் நோக்கி நோக்கிப் பயன் கொள்ளும் வகையில் வற்றாத அறிவின் ஊற்றாய்ப் புதியபுதிய கருத்துக்களைத் தருவனவாய் இருத்தல் வேண்டும். அதுவே நோக்கு என்னும் உறுப்பாகும்.

            மாத்திரை முதல் அடிநிலை வரை சொல்லப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் இந்நோக்கு நிலைக்கு உதவுவனவாய் அமைதல் வேண்டும். ‘படைப்போன் படைப்பு வன்மையால் நோக்கு அமையப் படைப்பானெனினும், அது துலங்குவது, வெளிப்படுவது, பாராட்டப்படுவது, நிறைகுறை அறியப்படுவது நோக்குவோன் இடத்திலேயாம். எனவே இக்கோட்பாட்டிற்கு ‘நோக்கு’ எனப் தமிழண்ணல் குறிப்பிடுகின்றார்.” நோக்கு என்ற சொல் தமிழ் பெயரிட்டது. இன்று நோக்கினும் புதுமையாக உள்ளது’ என்று பல இலக்கியத்தில் பயிற்சியுடைய சொல்லாகும். திருக்குறளில் இடங்களில் வந்துள்ளது. காதலர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளுதலை ‘நோக்கு’ என்னும் சொல்லால் அவர் குறிக்கிறார்.


முல்லை வைந்நுனை தோன்ற இல்லமொடு
பைங்கால் கொன்றை மென்பிணி அவிழ
இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பின்
பரலவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக்
கருவி வானம் கதழுறை சிதறிக்
கார்செய் தன்றே கவின்பெறு கானம்
குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி
நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப்
பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மான்பினைத் தேரன்
உதுக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்
கறஞ்கிசை விழவின் உறந்தைக் குணாது
நெடும்பெருங் குன்றத்து அகன்ற காந்தள்
போதவிழ் அலரின் நாணும்
ஆய்தொடி அரிவைநின் மாண்நலம் படர்ந்தே”
           

           என்ற செயயுள் ஒரு நோக்காக ஓடிப் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளதால் இது ஒரு நோக்காக அமைந்த நோக்குச் செய்யுளாகும். இச்செய்யுளில் முல்லை என்ற சொல் தொடங்கிப் ‘படர்ந்தே’ என்னும் சொல் முடிய ஒரே வரிசையாக நின்று பொருள் இயைவதைக் காண முடிகிறது.

            முல்லை வைந்நுனை தோன்ற; மென்பிணி அவிழ; இரலை தெறிப்ப; புலம்பு புறக் கொடுப்பக் கழுதறை சிதறிக் கானம் கார் செய்தன்று; காந்தள் நாறும் அரிவை; நின் நலம் படர்ந்து வள்பரிய, வதிந்த பறவை பேதுறல் அஞ்சி, ஆர்த்ததேரனாய் நாடன் தோன்றும்! இதுவே இதன் வாக்கிய முடிபு. மேலும் இச்செய்யுளின்கண் அமைந்துள்ள சொற்களும் சொற்றொடரும் சிறந்த கருத்துக்களையும் குறிப்பால் உணர்த்துவதையும் நோக்க முடிகிறது. அதனாலும் இஃது நோக்கு என்பதன் பாற்படும்.

நன்றி

இலக்கியத்திறனாய்வு இசங்கள் – கொள்கைகள் – அரங்க.சுப்பையா

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும் | Duties and Responsibilities of a Journalist

பத்திரிக்கையாளரின்-பணிகளும்-பொறுப்பகளும்

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும்

       செய்தியாளர் உண்மையில் தகவல்களைப் பரப்பும் சமுதாயக் கல்வியாளராகப் பணியாற்றுகின்றார். ஒரு வகையில் அவரது பணி சமுதாயத் தொண்டாகும். மக்களாட்சியில், நாட்டின் அன்றாட நடப்புக்களை உடனுக்குடன் தெரிவித்து, மக்கள் விழிப்போடு செயல்படத் தூண்டுகின்ற பணியை செய்தியாளர் மேற்கொள்கின்றார்.

கடினமானபணி

            செய்தியாளரின் பணிமிகவும் கடினமானதாகும். இருபத்தி நான்கு மணிநேரமும் அவர் விழிப்போடு செய்திகளைத் தேடி அலைய வேண்டும். எங்கிருந்து செய்தி, எப்படி வெடித்துச் சிதறுமென்று கூறமுடியாது. நாளிதழில் ஒவ்வொருசெய்தியாளர்*செல்ல இடத்தையும் (Beat)’ என்ன ‘பணி (Assignment) வேண்டுமென்பதையும் தலைமைச் செய்தியாளர் ஒதுக்குவார். பணியைச் செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டும், ‘தூங்காடை கல்வி, துணிவுடைமை” உள்ள செய்தியாளர்கள் கருமமே கண்ணாய் உழைத்தால் சிறப்பாகச் செய்திகளைத் தேடிக் கண்டு திரட்டித் தந்து புகழ் பெற முடியும்.

ஆபத்தான பணி

            செய்தியாளர் நடக்கும் பாதையில் மலர்கல் தூவப்பட்டிருப்பதில்லை, நெருஞ்சி முள் காட்டிற்குள் பயில்பவர்களைப் போன்றே செய்தியாளர்கள் பணிபுரியவேண்டியுள்ளது. உண்மைகளை வெளிக்கொணரும் பணியைச் செய்வதால், அதனால். பாதிக்கக் கூடியவர்கள் எப்பொழுதும் செய்தியாளர்களுக்குப் பாதகங்கள் செய்யத் தயங்கமாட்டார்கள். செய்தியாளர்கள் அடிதடிக்கும், அவமானத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர். செய்தியாளர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.செய்தியாளர்களைத் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சிகளும் கூட நடைபெற்றிருக்கின்றன.

             செய்தியாளரின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் கூறலாம். 1988 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நமது நாட்டின் தலைமையமைச்சர் ஒய்வெடுக்க இலட்சத்தீவுகளுக்குச் சென்றார். அவரோடு சென்றவர்கள் பற்றிய சில விவரங்களை அரசு வெளியிடவில்லை. 7.1.88 வியாழக்கிழமை இலட்சத்தீவிலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் வந்து புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கொச்சி விமானதளத்தில் இறங்கினார். இதனை புகைப்படம் எடுத்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ Indian Express’ புகைப்படக்காரர் ஜீவன் ஜோஸ் (Jeevan Jose) அமிதாப்பச்சன் தடுத்திருக்கின்றார். அதற்கு மேலும் புகைப்படம் எடுக்கவே, தாக்கி, விலை உயர்ந்த புகைப்படக்கருவியைப் பறிக்க முயன்றிருக்கின்றார். நடிகரோடு ஒரு வெளிநாட்டுக்காரரும் உடன் இருந்து இருக்கின்றார். 8.1.88 வெள்ளிக்கிழமை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் புகைப்படங்களோடு இச்செய்தி வெளியாகியுள்ளது. இதிலுள்ள இடர்ப்பாட்டின் கடுமையைச் சொற்களால் விளக்க இயலாது.

செய்தித் திரட்டும் பணி

            எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்து, அந்த செய்தி உண்மையானதா என்பதை அறிந்து, செய்தி மூலத்தை அணுகி, செய்தியைத் திரட்டி தருவது தான் செய்தியாளர் பணி. காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்படுகின்ற செய்தியாளர் வெற்றி பெறுகின்றார்.

    செய்தியைத் திரட்டுவதில் சில நிலைகள் உள்ளன

      முதலாவதாக செய்தியாளர் செய்திக்குத் தன்னை வெளிப்படுத்திக் (Exposure கொள்ள வேண்டும். அதாவது செய்தியின் மூலத்தோடு நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தால் செய்திக்குரிய நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்து, நேரடியாக செய்தியைப் பெற வேண்டும். அல்லது செய்தி மூலமாக இருப்பவரை அணுகி செய்தியை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

       இரண்டாவதாக, நடந்தவற்றை பார்க்க (Perception) கவனித்து நோக்க வேண்டும். உண்மையை அறிந்து எழுத இப்படி வேண்டும். விருப்பு, வெறுப்பின்றி நேரடியாகக் காணக்கூடியவற்றைக் பார்வையிடுதல் துணை செய்கின்றது. அறிக்கைகளாகவோ, புள்ளி விவரங்களாகவோ செய்திகள் கிடைத்தால் அவற்றைப் புரிந்து படித்து, அவற்றிலுள்ள செய்திகளை மட்டும் தெளிவான முறையில் வழங்குவது செய்தியாளர் பணி.

       மூன்றாவதாக, பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் (Retention) வேண்டும். செய்தியாளருக்கு பதித்துக் கொள்ள நினைவாற்றல் என்பது கைவந்த கலையாக மாற வேண்டும். முதலில் குறிப்புகள் எடுத்துக் கொண்டு பின்பு விரித்து எழுத நினைவாற்றல் துணை செய்கின்றது. பதிவு செய்யும் கருவிகளை (Tape Recorder)பயன்படுத்தலாம்.

      நான்காவதாக, கிடைக்கின்ற விவரங்களில் எவை சரியானவை என்பதைத் தீர்மானித்து தெரிந்தெடுக்க (Selective Judgement) வேண்டும். எந்த நிலையிலும் செய்தியில் பொய்மை கலந்து விடக் கூடாது. “ஐயத்துக்குரியதை விட்டுவிட வேண்டும்” (when in Doubt,Leaveit out) என்பது செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஒன்று.

      ஐந்தாவதாக, எதனைப் பெரிது படுத்தித் (Amplify) தரவேண்டும் என்பதை அறிந்து, அதனையே செய்தியாக, சரியான கோணத்தில் எழுதித் தர வேண்டும். நிறைய விபரங்களை சேகரித்து இருக்கலாம்.எல்லாவற்றையும் செய்தியாக்கவேண்டியதில்லை.முக்கியமானவற்றையும்,குறிப்பிடத்தக்க மனிதர்களையும் சேர்த்து, பின்னிப் பிணைத்து சுவையான, பயனுள்ள செய்திகளை படைத்து தருதல் செய்தியாளர் பணியாகின்றது.

பொறுப்புக்கள்

            செய்தியாளர் மேற்கொள்வது சமுதாயப் பொறுப்பான பணியாகும். செய்தித்தாட்களில் வெளிவருவனவற்றை “அச்சிட்டது நம்பிப் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். உண்மையாகவே”, இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் வகையில் செய்தியாளர் நடந்து கொள்ள வேண்டும்.

       சிலசெயல்கள் உண்மையில் நடந்திருக்கலாம், அதற்கான தக்கு ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியேவெளியிட்டால் சில தனிமனிதர்களோ, சமுதாயமோ பாதிக்கப்படுமானால்,அவற்றை வெளியிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, கற்பழிப்புச் செய்தியில் கற்பழிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடுவது நல்லதல்ல. சாதி, சமயப் பூசலைத் தூண்டி சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக் கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.

      கூடியவரை தங்களது செய்தி மூலங்களை இரகசியங்களாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளர்கள் கடமையாகும். சான்றுகளை வெளியிடாமல் வைத்துக்கொள்ள சட்டப் பாதுகாப்பும் இருக்கின்றது. சில வேளைகளில் செய்திகளைத் தருகின்றவர்கள் தங்களை. வெளிக்காட்டிக்
கொள்ள விரும்புவதில்லை.

      நேர்காணல் பேட்டி (Interview) மூலம் விவரங்களைச் சேகரிக்கும்பொழுது, பேட்டியாளர் வெளியிட வேண்டாமென்றக் குறிப்போடு விளக்கத்திற்காகச் சிலவற்றைக் கூறலாம். அவை சுவையானதாக இருந்தாலும் அவற்றைச் செய்தியில் சேர்க்கக் கூடாது.

       செய்தியாளர் தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காப்பது என்றும் அவரது கடமையாகும். தான் சேகரிக்கும் செய்திகளை தனது நிறுவனத்திற்கே தர வேண்டும். வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி திரட்டிய செய்திகளைச் செய்தியாளர் பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க..

1.பத்திரிகைச் சட்டங்கள் |PRESS LAWS

2.இதழியல் விளக்கமும் இலக்கணமும்

சிறுகதை என்றால் என்ன?

சிறுகதை

சிறுகதை என்றால் என்ன?

            சிறுகதை மிகப் பழமை சான்ற ஓர் இலக்கிய வகையாகும். இதன் வளர்ச்சிக்கு உரிய மூல ஊற்று. மாந்தரின் கதை கேட்கும் ஆர்வத்திலேயே முதலே கதை கேட்கும் இயல்பு இருந்திருக்கின்றது எனத் உள்ளது. மனித வரலாறு தொடங்கிய கால தெரிகின்றது. மனிதன் ஏன் கதையை விரும்பிக் கேட்கின்றான் என்பதும் ஒரு நல்ல வினா. இதற்குச் ‘சாமர் செட் மாம்’ என்பவர் விடை கூறுகின்றார். “உடைமை பற்றிய உணர்வு மனிதனிடத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பது போலவே கதை கேட்கும் ஆர்வமும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே, ஒருவர் கதை சொல்வதைக் கேட்பதற்காகவே பலரும் நெருப்பைச் சுற்றிக் கூட்டமாக உட்காரும் பழக்கமோ அல்லது பொது இடத்தில் ஒன்றாக அமரும் பழக்கமோ, இருந்திருக்கின்றது. சிறுகதை என்றால் என்ன?

            வரலாற்றின்பழைமையோடுதொடர்புடையஇச் சிறுகதை ஒரு நல்ல கலையாக மிகுதியாக வளர்ந்தது பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் ஆகும். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் 1800 ம் ஆண்டுக்குப் பிறகு படித்தவர் கூட்டம் பெருகவே அவர்களின் தேவைக்கேற்பப் பருவந்தோறும் வெளியிடப் பெற்ற எல்லா வகை இலக்கியங்களின் தேவையும் பெருகிற்று’என்பர் அறிஞர். நம் தமிழகத்திலும் இந் நூற்றாண்டின் தொடக்க முதல் இலட்சக் கணக்கான மக்கள் சிறுகதையை விரும்பிப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது எனலாம்.


இக்கால இலக்கியங்களில் சிறுகதை பெறுமிடம்  

            இன்றைய இலக்கிய உலகில் சிறுகதைக்கென்றே ஒரு சிறப்பிடம் உள்ளது. நாகரிகம் முற்றிப் போக்குவரத்துக் கருவிகள் பெருகி மக்கள் மிக விரைந்து செயற்படும் இந்நாளில் பலருக்கும் படிப்பதற்கு வசதியாக உள்ள துறை சிறுகதையே ஆகும். இச் சிறுகதை எண்ணிக்கையிலும் வகையிலும் பலபடியாக வெளிவரும் இதழ்கள் பெரிதும் காரணமாக அமைகின்றன. ஒரு விரிந்து வளர்ந்து செல்வதற்கு நாடோறும் வாரந்தோறும் குறிப்பிட்ட இதழில் வெளியிடப் பெறும் சிறுகதையை அந்த இதழை எடுத்த மாத்திரத்திலேயே ஒரேவேகத்தில் படித்து .முடித்துவிடலாம்.

மற்றொன்று:


           
கருத்தாழம், நடைச்செறிவு முதலியன நிறைந்த விழுமிய பேரிலக்கியங்களை ஆழ ஊன்றி அமைதியாகப் படிப்பதற்குரிய பொறுமை பெரும்பாலோர்க்கு இன்று இல்லாமையும் சிறு கதையின் செல்வாக்குக்குக் காரணமாகின்றது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற பண்பட்ட உயரிய இலக்கியங்களைக் கற்பதற்குரிய நேரமும் ஓய்வும் வசதியும் கல்வியும் இல்லாத இலட்சக்கணக்கான மக்கள் சிறுகதையைச் சிறிது நேரத்தில் படித்து முடித்துச் சிறியதொரு கலைப்பயனை விரைந்து பெற முடிகின்றது. எனவே, உயர்ந்த இறவாத பேரிலக்கியங் களையும், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும் இலக்கியப் பகுதிகளையும் கற்று மகிழ முடியாத இலட்சக்கணக்கான மக்கள் இன்று சிறுகதைகளைக் கற்று இன்புறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுருங்கக் கூறின் புதினம் போலவே சிறுகதையும் மக்கள் இலக்கியமாக மலர்ந்துள்ளது.

சிறுகதையின் விளக்கம்

            சிறுகதைஎன்றால்என்ன?சிறிய அளவில் அமைந்த கதையே சிறுகதையாகும்.

        இப்படி ஒரு வரையறையைச் சிறு கதைக்குச் சொல்ல ‘முடிந்தாலும் ‘அளவு’ என்பதிலே ஆசிரியர்களிடையே றுபாடு இருக்கின்றது. ஒரு பக்கம் அல்லது இருபக்க அளவில் அமைந்த சிறுகதையும் உண்டு: மிகப் பெரிய சிறுகதையும் உண்டு.  வெவ்வேறு ஆசிரியர் எழுதும் சிறுகதையின் அளவு வேறுபடினும் சிறுகதைக்கென்றே அமைந்த சில தன்மைகளும் கட்டுக் கோப்புகளும்தோன்றிவிட்டன. ஹெச்.ஜி. வெல்ஸ் என்பார் சிறுகதையைக் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.

            ஒரு சிறுகதை என்பது எளிமை சான்ற ஒரு படைப்பாக இருக்கின்றது; அல்லது இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவானபயனை மட்டும் விளைவிக்க அது முயலுகின்றது. எடுத்த எடுப்பிலேயே பயில்வோரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும்வரை வாசகரின் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் ஆழமாக ஊன்றச் செய்ய வேண்டும். எதையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கும் மனிதனின் திறமை நீண்டநேரம் நீடிக்க முடியாது. சிறுகதைப் பயிற்சியிலும் இவ்வுண்மை பொருந்துவதாகும். ஆகவே, இடையீடோ சோர்வோ நேருவதற்கு முன்பாகவே சிறுகதை நன்கு வெடித்து முற்றுப் பெறுதல் வேண்டும்

     ஹெ ச்.இ. பேட்ஸ் என்பவர், “எழுதும் ஆசிரியர் எண்ணித் துணியும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம்’ என்கின்றார் எனவே மேற்கூறிய கூற்றுகள் வாயிலாகச் சிறுகதை . என்பது அளவில் சிறியதாக அமையவேண்டும் என்பதும், தொடக்க முதல் முடிவுவரை நம் கவனத்தைச் சிக்கெனப் பிடித்து ஒருமுகப்படுத்திக் கலைப் பயனை விளைவிக்க வேண்டும் என்பதும், சிறுகதை சிறிய கதையாகவே அமைவது நல்லது என்பதும் நமக்கு நன்கு விளங்கும்.

புதினத்திற்கும் சிறுகதைக்கும் உரிய வேற்றுமை

            புதினம், சிறுகதை ஆகிய இரண்டிலும் உரையாடல் வருணனை, நிகழ்ச்சிக்குரிய பின்னணி முதலியவற்றால் ஒற்றுமைகள் உண்டு. வேறு வகையிற் சில வேற்றுமைகளும் உண்டு. அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம்.

1. புதினத்திற்குரிய கருப்பொருள், மனிதப் பண்பின் செயலின், வாழ்க்கையின் பல பகுதிகளையும் உள்ளடக்கியதாய் பண்பையோ செயலையோ வாழ்க்கையின் ஏதாவது ஒரு அமையலாம். சிறுகதைக்குரிய கருப்பொருளோ குறிப்பிட்டஒருகூற்றையோ மையமாகக் கொண்டு அமையும்.
2.வெவ்வேறு கதை மாந்தரின் பண்புகளுக்கும் செயல்களுக்கும் இடையே எழும் பல சிக்கல்களையும் விரித்துச் சென்று அச்சிக்கல்கள் படிப்படியாய் நீங்கி ஒரு முடிவு ஏற்படுவதனை நாவல் காட்டும். சிறுகதையோ, ஏதாவது ஒரு சூழ்நிலை அல்லது சிக்கலைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து வளர்ந்து சென்று, நாம் எதிர்பாரா நிலையில் ஓர் அதிர்ச்சியைத் தந்து கூடத் திடீரென்று முடியலாம்.
3.புதினம், நிகழ்ச்சியின் பெருக்காலும் கதை மாந்தரின் பண்பாலும் வாசகர்க்குப் பல்வகையான சிந்தனையையும் உணர்வையும் உண்டாக்க வல்லது; சிறு கதையோ, ஏதாவது ஒரு சிறிய நிகழ்ச்சியைச் சுற்றி அல்லது பண்பைச் சுற்றி வாசகரின் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தி அது சம்பந்தமாக ஓர் ஆழமான சிந்தனையை அல்லது உணர்வை எழுப்புவதாகும்.
4.புதினம் எழுப்பும் கலையார்வம் நீண்டநேரம் நீடித்து நிற்க வல்லது; அளவிலும் பெரியது. சிறுகதை எழுப்பும் கலையார்வமோ விரைந்து பெருகி விரைந்து நிறைவேறும் இயல்புடையது.
5.புதினத்தில், கதை மாந்தரின் பண்புகள், மன நிலைகள் படிப்படியாக வளர்ந்து செல்லுவதைக் காட்டுவதற்கு இடமுண்டு; சிறுகதையில் அவ்வாய்ப்பு இல்லை.
6.புதினம் வாழ்க்கையை அதன் பல்வேறு வடிவத்தோடும் சிக்கலோடும் படம்பிடித்துக் காட்ட வல்லது. சிறுகதையோ அவ்வகையில் அந்த அளவுக்கு வாய்ப்பு அற்றதாகும். காரணம், சிறுகதைக்குரிய களம் சிறியதாகும்.
7. நடைமுறை வாழ்வில் நாம் மனிதர் பலரையும் சந்திப்பது போலவே புதினத்திலும் சந்திக்க முடிகின்றது. அம்மனிதர் பல்வேறு உறவு முறைகளோடும் விருப்பு வெறுப்புகளோடும் அவ்வச்சூழ்நிலைக்கேற்ப ஒருவரோடு ஒருவர் பழகுகின்றனர்; பேசுகின்றனர்; செயற்படுகின்றனர். எனவே, இவர்களைப் பற்றி விரிவாக ஆழமாக நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இறுதியில் இவர்களின் குறை நிறைகளைப்பற்றிச் சரியாகக் கவனிக்க முடிகின்றது. ஆயின் சிறு கதையில் இடம் பெறும் பாத்திரங்களைச் சிறிது நேரமே நம்மாற் காணமுடிகிறது. அவர்கள். நடமாடும் உலகமும் சூழ்நிலைகளும் சிறிது நேரமே நம் கண்களுக்குத் தெரிகின்றன. இதனால் யாரோ ஒருவரின் குறிப்பிட்ட பண்பு அல்லது செயலைப் பற்றி ஆழமான, ஆற்றல் மிக்க ஓர் உணர்வு நம் உள்ளத்தில் எழுகின்றது என்பது உண்மையே. ஆயினும் புதினத்தில் நடமாடும் மாந்தரைப் பற்றி நமக்குத் தோன்றும் ஒரு பெரிய விரிவான தெளிவான உணர்வோடு அதனை ஒப்பிட முடியாது.
8. மொத்தத்தில், புதினத்தின் அமைப்பு வேறு; சிறுகதையின் அமைப்புவேறு.
            பல பறவைகளும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து பறப்பது போன்றது புதினம். ஒரு பறவை மட்டும் தனித்துப் பறப்பது போன்றது சிறுகதை. பல்வகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த ஒரு பெரிய ஓவியம் போன்றது புதினம்; ஒன்றிரண்டு வண்ணங்களையே கொண்டு வரைந்த ஒரு சிறிய ஓவியம் போன்றது சிறுகதை,

       ஆடற்கலையில் வல்ல அழகு நங்கையர் பலர் கலையரங்கின் மீது கண்ணன் கதை முழுவதையும் நடித்துக் காட்டுவது போன்றதும் புதினம். கண்ணன் இன்னிசைக் குழல் எடுத்து ஊத எழும் இன்ப கீதத்தில் தன்னை மறந்து மயங்கித் தவிக்கும் ஏந்திழை ஒருத்தியின் நிலையை அரங்கின் மீது ஒருவர் நடித்துக் காட்டுவது போன்றதுசிறுகதை. பலவகை மரமும் செழித்தோங்கிய ஒரு தோப்புப் போன்றது புதினம்; தனி மரம் போன்றது சிறுகதை.

சிறுகதைக்குரியபொருள்

       இன்ன பொருளைத்தான் சிறு கதையில் அமைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. மனிதனின் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பிக் கலைவிருந்து அளிக்க வல்ல எதுவும் சிறு கதைப் பொருளாக அமையலாம். ஆயின், இப் பொருள் அனைத்தும் தோன்றுவதற்குரிய நிலைக்களங்கள் மனித வாழ்க்கையும் விலங்கு பறவை முதலானவற்றின் வாழ்க்கையும் மரஞ்செடி கொடி முதலானவற்றின் இயற்கை வாழ்கையுமாகும். இந்நிலைக் களங்களில் எங்கோ என்றோ யாரிடமோ அல்லது எதனிடத்தோ அல்லது எச் சூழலிலோ, ஏதோ ஒரு கூற்றைக் கூர்ந்து பார்க்கும் எழுத்தாளன் ஒருவனிடமிருந்து சிறு கதை அரும்புகின்றது

      பரபரப்பு ஊட்டவல்ல ஒரு சிறிய நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை, உள்ளங் கவரும் ஓர் அரிய காட்சி, ஒன்றோடொன்று நெருக்கமாகத் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் கோவை, ஒரு பாத்திரத்தின் ஏதாவது ஒரு கூறு. ஏதாவது ஒரு சிறிய வாழ்வின் ஏதாவது ஒரு சிறிய கூறு, அறம் பற்றி எழும் ஒரு சிக்கல் அமையலாம். இவை போலப் பிற இருப்பின் அவையும் சிறுகதைக்குரிய பொருளாகும்*


சிறுகதைக்குரிய கால எல்லை

        ஒரு சிறு கதையானது. அரை மணி நேர முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடக் கூடியதாய் அமைய வேண்டும் என்கின்றார் உலகப் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் எட்கர் ஆலன்போ ‘ சிறு கதையைப் படித்துப் பார்க்கலாம் என்று அமருகின்றோம். அப்படி அமர்ந்தவுடன் முடியும் வரை படித்து முடித்துவிட்டுப் பின் எழக்கூடிய வண்ணம் சிறுகதை அமைய வேண்டும். சிறு கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிக்குரிய கால எல்லை இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாது. ஒரு மணி நேரத்தில் நடந்துமுடியும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். சில ஆண்டுகளாகிய பெரிய கால எல்லைக்குள் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். கதையாசிரியர் தம் சிறுகதைக் கட்டுக்கோப்புக் கலைத்திறத்தால், சிறு கதையில் இடம் பெறும் கால எல்லை, அக்கதையால் விளையக் கூடிய மொத்தப் பயனுக்குச் சிறிதும் இடர்ப்பாடு விளைவிக்கா வண்ணம் கதையை நடத்திச் செல்ல முடியும்.


சிறுகதைக்குரிய ஒருமைப்பாடு

     கதை அமைப்பின் தலையாய இயல்பு ‘ஒருமைப்பாடு’ ஆகும். ஒரு சிறுகதையின் ஒவ்வொரு பகுதியும் பொருத்தமாக அமைய வேண்டும். அக் கதையால் விளையும் உணர்ச்சி விளைவும் ஒருமுகப்பட்டதாக இருத்தல் வேண்டும். கதையின் ஒவ்வொரு பகுதியும் வளர்ந்து செல்லும் போது அப்பகுதியை அமைத்த ஆசிரியரின் உள்நோக்கம் அவரின் முழு நோக்கத்தை நோக்கி இயங்குவதாக அமைய வேண்டும். கதை மாந்தரின் செயல் முறைகள் முற்றுப் பெறும்போது இயற்கையான போக்கில் முற்றுப் பெறுவது போல நாம் உணர வேண்டும். அவ்வாறு முற்றுப் பெறுமாயின் கதையை ஆசிரியர், அமைத்தநோக்கும் நிறைவேறுகின்றது எனலாம். சிறு கதை என்னுங் இயற்கைச் சாயலோடு ஆசிரியர் அவிழ்க்கவும் வேண்டும்.சிறு கயிற்றில் முதலில் போட்ட முடிச்சை எளிமையாக, இனிமையாக இருத்தல் போலவே, அக்கதை நிகழ்ச்சிகளின் போக்கும் கதையை ஆசிரியர் படைத்ததின் நோக்கம் ஒருமுகப்பட்டதாய் ஒருமுகப்பட்டதாய், நம் கவனத்தையும் ஆர்வத்தையும் சிறிதும் சிதற அடிக்காமல், ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும்.

       சிறுகதை ஏதாவது ஒரு மையக் கருத்தை மட்டுமே விளக்குவதாய் இருத்தல் வேண்டும். அந்த ஒன்றும் காரண காரிய முறைப்படி வளர்ந்து முற்றுப் பெறுதல் வேண்டும். முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப் பெறுதல் வேண்டும். ஒரு சிறு கதை மிக்க சுவையுடையதாக அமைய வேண்டுமாயின் இவ்வொருமுகவியல்பு மிக மிக இன்றியமையாததாகும். கதையின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் குறிப்பிட்ட ஓர் உணர்வே மிகுதியாக ஆட்சி செய்ய வேண்டும். கதையின் பின்னணி, கதை நிகழ்ச்சி முதலியன அனைத்தும் அந்த ஓர் உணர்வின் போக்கிலேயே நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். இதனை ‘உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு’ (Unity of Impression) எனலாம்

சிறுகதையின் அமைப்பு

           சிறு கதைக்குரிய பொருளானது குறிப்பிட்ட எல்லைக்குள் வேண்டுமளவுக்கு ஆற்றலோடு வளர்க்கப்படும் ஒன்றாக அமைய வேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? சிறுகதையைப் படித்தவர் மன நிறைவு பெற்றதையும் பெறாததையும் கொண்டு அறியலாம். சிறு கதையின் பொருளும்

            நோக்கமும் எவையாக இருப்பினும் அதன் இயல்பு மட்டும் ஒரு வகையில் உறுதியாக அமைய வேண்டும். அஃதாவது இந்தக் ததையை வளர்த்திருந்தாலும் எந்த விதப்பயனும் இருக்கப் போவதில்லை என்று வாசகர் உறுதியாக எண்ணும் அளவுக்குச் சிறு கதை முற்றுப் பெற்றிருத்தல் வேண்டும். ‘இதைப் பற்றி இன்னமும் கொஞ்சம் சொல்லாமற் போனதால் கதையின் சுவை குறைந்து விட்டது” என்று பயில்வோர் நினைக்குமாறு சிறுகதை அமையக்கூடாது. சிறுகதையின் பொருளும் வளர்ச்சியும் சுருக்கமாக. ஆனால், நிறைவு அளிக்கும் வகையில் அமைய வேண்டும். கதையின் பல பகுதிகளும்ஒன்றோடொன்றுபொருத்தமுற இயைபு பட்டுச் செல்லுதல் வேண்டும். அப்பகுதிகளுள் ஒவ்வொன்றும் கதையின் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கு இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். தேவைக்கு அதிகம் என்று எண்ண முடியாதபடிஇருத்தல்வேண்டும்.

சிறுகதையில் உரையாடலும் வருணனையும்

       சிறுகதையில் உரையாடல் நீளமாக இருத்தல் கூடாது; செறிவும் தெளிவும் பெற்று நெகிழ்ச்சியின்றி அமைய வேண்டும். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் கதையின் மையக் கருத்திற்கும் நோக்கத்திற்கும் இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். விறு விறுப்பான கதை வளர்ச்சியைத் தடை செய்யும்படியாகவோ, வாசகருக்குச் சலிப்பூட்டும் படியாகவோ, எந்த ஒரு பகுதியும் உரையாடலில் இடம் பெற்று விடலாகாது; மின்னலின் வீச்சைப் போலக் கதையின் உயிர்ப் பொருளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அழகான சில சொற்கள் அமைவது சிறப்புடையது. வாசகர்களின் சுவையுணர்வைக் கெடுக்கக்கூடிய, அல்லது, அவர்களின் கவனத்தைக் கதையின் போக்கிலிருந்து வேறுதிசைக்குத் திருப்பக்கூடிய எந்த ஒரு சொல்லும் உரையாடலில் இடம் பெறலாகாது.

            சிறுகதையில் வருணனை அடிக்கடி இடம் பெறுதலாகாது, ஒன்றிரண்டு இடங்களில் இடம் பெறலாம். அந்த வருணனையும் கதையால் உருவாக இருக்கும் முழுப் பயனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுவதாய் இருக்க வேண்டும். கதை மாந்தரின் பண்பினை அல்லது செயலினை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் முறையிலோ அல்லது அப்பண்பையும் செயலையும் குறித்துக் கட்டியங் கூறும் முறையிலோ அமையலாம். சிறு கதைக்குச் செறிவும் ஒருமுகப் போக்கும் இன்றியமையாதவையாதலின், வருணனையும் இவற்றைச்  சிறிதும் கெடுக்கா வண்ணம் இடம்பெறுதல் வேண்டும்.

            வருணனை, அளவாற் பெருகிவிடாது, சிறியதாய் இருத்தல் வேண்டும். கதையில் நடமாடும் மாந்தரை அவரவர்க்கே உரிய இடம், சூழல் முதலியவற்றோடு தொடர்புபடுத்திக் காட்டும் முறையிலும் வருணனை அமையலாம். எப்படிப் பார்க்கினும் கதையாசிரியர் தாம் திட்டமிட்டு எடுத்துக் கொண்ட கருத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் முறையிலேயே வருணனையும்அமையவேண்டும்.

சிறுகதைக்குரிய குறிக்கோள்


            சிறு கதைக்குக் குறிக்கோள் உண்டா? ஆம், உண்டு. என்ன குறிக்கோள்? சிறிது நேரத்திற்கேனும் வாசகரின் கவனம் முழுவதையும் ஈர்த்துப் பிடித்து அவர்க்குக் கலைச் சுவையை வழங்குவது தான். இயற்கை வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் அல்லது குறிக்கோள் எனலாம். அறப் பண்பு, நீதிபோதனை, தத்துவ விளக்கம், சிந்தனைப் புரட்சி, சமுதாயச் சீர்திருத்தம் முதலியனவும் சிறு கதைக்குரிய குறிக்கோளாக அமையலாம். ஆயின் அவையும் சிறு கதைக் கலைத்திறன்களோடு வெளிப்பட

வேண்டும்.

ஸ்டீவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகள்

        சிறு கதையை எழுதுவதற்குரிய வழிகளை மூன்றாகச் சொல்லுவார் ஸ்டீவன்சன் கருப்பொருளை முதலில் நினைத்து வைத்துக் கொண்டு அக்கருப் (Stevenson). கதைக்குரிய சிறுகதைக்குள் சேர்க்கலாம். இரண்டாவது வழி; ஒரு குறிப்பிட்ட குணச் சித்திரத்தை மனத்திற் கொண்டு அதை விளக்கிக் காட்டுவதற்குரிய நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் அமைக்கலாம். மூன்றாவது வழி ஆசிரியர் தம் உள்ளத்தில் ஒரு குறிப்பிட்ட உணர்வைத் தோற்றுவித்த ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலைக் கொண்டே சிறு கதையை அமைக்கலாம்; அச் சூழலும் உணர்வும் கதையில் நன்கு வெளிப்படுவதற்கு ஏற்ற வண்ணம் மனிதரையும் செயல்களையும் படைத்துக் கொள்ளலாம் இவ்வகையில் நோக்கும்போது சிறு கதையை மூன்றாகப் பிரிக்கலாம்.

            முதல் வகையைக் கருவால் வந்த கதை (The Story of plot)என்றும், இரண்டாம் வகையைக் குணச் சித்திரத்தால் வந்த கதை (The Story of Character) என்றும் மூன்றாம் வகையை உணர்ச்சிப் பதிவால் வந்த கதை (The Story of Impression) என்றும்சொல்லலாம் என்பர்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?

நாவல்-என்றால்-என்ன

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?


            பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வளரத் தொடங்கி இந்நூற்றாண்டில் மிகப் பரவலான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்திருப்பது நாவலாகும். முறையாகக் கற்று அறிவு பெற்றோரும் சாதாரண அறிவு நாவலுக்கும் சிறுகதைக்குமே உண்டு. கலைத் துறையில் சிறிது படைத்தோரும் இலட்சக்கணக்கில் எடுத்துப் படிக்கும் சிறப்பானது நேரம் பொழுது போக்க விரும்புவோர்க்குச் சிறுகதையும் நீண்ட நேரம் பொழுதுபோக்க பயன்படுகின்றன. போக்குவரத்துச் சாதனங்கள் அதிகமாகி, வேகமாக இயங்கி வரும் இன்றைய மக்கள், கவிதை வடிவத்தில் அமைந்த காவியத்தைப் படிப்பதற்குரிய நேரமும் பொறுமையும் போன்று செயற்படுவதாய் உரைநடையில் உள்ள நாவலை ஒன்றிப் பார்க்க வல்ல உணர்வும் இல்லாத காரணத்தால், காவியம் விரைந்து எடுத்து விரும்பிப் படித்து முடிக்கின்றனர்; கதை, கதை மாந்தரின் உணர்ச்சிப் போராட்டங்கள், செயல் முறைகள் முதலியன நிறைந்த காவியத்தால் அடையும் பயனை நாவலால் அடைந்துவிடுகின்றனர். நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது? 

            ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும்போதோ, பேசத் துணைக்கு யாரும் இல்லாத போதோ, வேலையின்றிச் சும்மா இருக்கும் நிலையில் தம் உள்ளத்தைக் கலை உலகில் செலுத்த விரும்பும் போதோ, நாவல் இன்றைய மக்களுக்கு எளிதில் கைகொடுத்து உதவுகின்றது. இன்று பொதுவாக, அதிகமாக விற்பனையாகும் இலக்கிய வகைகளுள் சிறு கதையும் நாவலும் அடங்கும் எனலாம். பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றோரும், நாவல்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆராய்வதிலும் ஆழமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டிலும் அமெரிக்க நாட்டிலும் நம் இந்திய  நாட்டிலும் நாவல் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் நாவல் பொது மக்களிடையே ஆற்றல் மிகுந்த ஒரு கலைக் கருவியாகப் பயன்பட்டுள்ளது. ஆங்கில துறையானது இங்கிலாந்து நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப வேகமாக வளர்ந்தது. அந்நாட்டு மக்களும் அதனை விரும்பிப் போற்றினர். நாள்தோறும் இயங்கும் மனித வாழ்வின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டும் சிறப்பு இதற்கு உண்டு என்று கருதப்பட்டது.

            இன்றைய நம் தமிழகத்திலும் நாவல் துறையானது. நன்கு வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வின் பலவகைக் கோலங்களையும் சமுதாயத்தின் பல்வகைச் சித்திரங்களையும் உளவியல் முறையில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டங்களையும் அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளின் மாற்றத்தையும் பிறவற்றையும் நமக்குக் காட்டும் வண்ணம் இன்றைய தமிழ் நாவல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில் நாவலுக்குரிய ஒரு பொற்காலம் தோன்றுவதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. இன்று எழும் தமிழ் நாவல்கள் அனைத்துமே தரம் உடையன என்று ஏற்றுக் கொள்வதற்குத் தடை ஏற்படினும் பெரும்பாலானவை நல்ல நாவல்களாக விளங்குகின்றன எனலாம். இறவாத பேரிலக்கியங்களைக் கற்று மகிழும் ஒரு சாரார் போலவே நாவல்களைப் படித்து மகிழும் ஒரு சாராரும் இன்று ஒரு கட்சி போல வளர்ந்து வருகின்றனர். இதனால் இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் ஆட்சி செய்கின்றது.


நாவல் என்றால் என்ன?

          சிறு கதையிலிருந்து வேறுபட்டு. பல நிகழ்ச்சிகளையும், செயல்களையும் தன்னகத்தே கொண்டு கதை மாந்தரின் பண்புகளுக்கு ஏற்ப ஒரு கதையை வளர்த்துச் சென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் உரைநடை இலக்கிய வகையே நாவலாகும். இவ்வாறு நாவலை ஓரளவு வரையறை செய்ய முடிகின்றதே அன்றி முழுமையாகவும் நாவலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ள ஒரு வரையறை தருவது கடினம். சிறு கதையிலும், கதையும், கதை மாந்தரும் உண்டு என்றாலும் மாந்தர் பலரின் பண்பையும் தனி மனித சமுதாய வாழ்வின் நிகழ்ச்சிகளையும் நாவலில் அமைத்துக் காட்டுகின்ற அளவுக்குச் சிறு கதையில் அமைத்துக்காட்ட இயலாது. சிறுகதை அளவால் சிறியது. மிகப் பெரிய சிறுகதை உண்டு என்றாலும் நாவலைப் போல ஒரு பெரிய களத்தைக் கொண்டு இயங்குவது சிறு கதைக்கு இயலாதது.

            சிறுகதையானது, நாவலை நோக்க, கதை மாந்தர் மிகச் சிலரையே உடையது; நாவல் பலரை உடையது. சிறுகதை குறுகிய காலத்தில் படித்து முடிக்கத்தக்கது; நாவல் படிப்பதற்குச் சிறுகதையை விட அதிக நேரம் வேண்டும். சிறுகதையில் சிக்கல் குறைவு; நாவலில் சிக்கல் மிகுதி. சிறுகதை நம் கவனத்தைச் சிறிய எல்லையிலேயே நிறுத்திச் சுவை பயந்து முடிவது; நாவலோ நம் கவனத்தை ஒரு பரந்த எல்லைக்குள் வளர்த்துச் சென்று பல்வகை உணர்வுக்கும் இடனாகி முடிவது. சிறுகதை ஒரு கல் என்றால், நாவலை ஒரு மலை என்று சொல்லலாம். சிறுகதை ஒரு வீணையின் ஒரு நரம்பில் எழும் நாதம் போன்றது; நாவல் பண் கலந்த ஓர் இசைப் பாட்டுப் போன்றது. சிறுகதை சிறிய ஓவியம் போன்றது. நாவல் ஒரு பெரிய ஓவியம் போன்றது. சிறுகதை ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு அல்லது இரண்டு மூன்று ஊருக்கு அப்பால் உள்ள ஓர் ஊருக்குப் போவது போன்றது. நாவல் முந்நூறு, நானூறு மைல்கள் பயணம் செய்வது போன்றது. சிறு கதைக்கும் நாவலுக்கும் பொதுவான சில கூறுகள் உண்டு. எனினும் அமைப்பிலும் கதையைப் பின்னிக் கொண்டு செல்லும் முறையிலும் இரண்டுக்குமிடையே வேறுபாடு உண்டு. மா. இராமலிங்கம் என்பார், சிறுகதைக்கும் நாவலுக்குமிடையே யுள்ள வேறுபாட்டைக் குறித்து, சிறுகதையைப் படிப்பது வீட்டுக்குள் அமர்ந்த வண்ணம் ஜன்னல் வழியே வெளியுலகை எட்டிப் பார்ப்பது போன்றது. நாவலைப் படிக்கும் அனுபவம் . வேறானது. ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு நடக்கும் தேர்த் திருவிழாவைச் சுற்றிக் காண்பது போல, நாவலில் பல்வேறு எனக் குறிப்பிடுவது அனுபவங்களையும் உணர்கிறோம்,” ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

        நாவலில் பல சிறுகதைகள் இருக்கலாம், இதனால் சிறுகதை பல சேர்ந்தால் நாவலாகும் என எண்ணலாகாது. நாவல் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது. ஒரு பெரிய அனுபவ ஊற்றாக அல்லது வாழ்க்கையின் வெளிப்பாடாகக் கலைஞரால் படைக்கப்படுவது; சுருங்கக் கூறின், நாவல் ஒரு பெரிய கதையையும், கதை மாந்தர் பலரையும் கொண்டது; தனி மனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டுவது. இங்ஙனம் சித்திரித்துக் காட்டுவதற்குக் கதையே நாவலுக்குக் களம் ஆகும். ஓவியத்திற்குத் திரை போலவும் நடனக் கலைக்கு அரங்கு போலவும் நாவலுக்குக் களமாக அமைவது கதையேயாகும்.


நாவலுக்குரிய கதையும் கதைக்கோப்பும் (Plot)

        பொதுவாக நோக்கும்போது நாவல் என்பது கதையே. இக்கதை சுவையாகவும் நாவல் படிப்போரின் உணர்வுக்கு வளமான விருந்தாகவும் அமையவேண்டும். கதையின் தொடக்கமும் நடுவும் வாசகரின் ஆர்வத்தைக் கதையின் முடிவு. வரை நீட்டிக்க வல்லதாய் இருத்தல் வேண்டும். நாவலின் கதைப் பகுதி ஒவ்வொன்றும் அடுத்துவரும் கதைப் பகுதியைப் படிப்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நாவலின் ஒரு நிகழ்ச்சியிலிருந்து மற்றொரு நிகழ்ச்சி வளர்ந்து செல்லும்போது கதைக்குரிய இன்றியமையா இயல்புகள் இவை. இயைந்து செல்வதாகவும் இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கானது கதை என்றால் அந்நிகழ்ச்சிகள் காரண காரியப்படி நிகழ்வதைக் கதைக்கோப்பு (plot) எனலாம்.

        ஈ.எம். ஃபாஸ்ட்டர் என்பார் கதைக்கும் கதைக் கோப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு விளக்கியுள்ளார். கதை என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அது அது நடந்த கால எல்லைக்கு ஏற்ப விளக்குவதாகும். கதைக்கோப்பு என்பதும் நிகழ்ச்சியைக் குறிப்பதே! ஆயின் காரண காரியப்படி நிகழ்ச்சி அமைவது முக்கியமாகும். ‘அரசன் இறந்தான் பின் அரசியும்  இறந்தாள்-இது ஒரு கதை. “அரசன் இறந்தான். அவ்வேதனை தாங்க முடியாமல் அரசியும் இறந்தாள்.”—இது ஒரு கதைக் கோப்பு. இதிலும் கால எல்லை காட்டப்படுகின்றது. அதே நேரத்தில் காரண காரியம் பற்றிய உணர்வு மேலோங்கி நிற்கிறது ‘ கதையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியைப் படிக்கும்போதும் அதற்குப் பிறகு என்ன நடந்தது? என்ன நடந்தது? என்ற அறிய ஓர் ஆவல் பிறக்கின்றது. இந்த ஆவலைத் தீர்த்துச் செல்லும் முறையில் அமைவதே கதையாகும். ஆயின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏன் நடந்தது?. ஏன் நடந்தது? என்று அறிய விரும்பும் ஆவலை நிறைவேற்றும் வண்ணம் அமைவது கதைக் கோப்பாகும். வேறுவகையில் கூறின், நிகழ்ச்சியின் வளர்ச்சி கதையாகவும், அவ்வளர்ச்சிக்குரிய காரண காரிய முறைமை கதைக் கோப்பாகவும் அமைகின்றது. ஒரு நாவல் ஆசிரியர் கதையை அமைப்பது எளியது. ஆயின் கதைக் கோப்பை வெற்றிகரமாக அமைப்பது அரியது. நாவலாசிரியர் முன்னதை அமைப்பதற்கு ஓரளவு அறிவு பெற்றிருந்தால் போதும். பின்னதை அமைப்பதற்கு நல்ல அறிவுக் கூர்மையும் நினைவாற்றலும் வேண்டும்.


கதைக்குரிய பொருள்

       நாவலுக்குரிய கதைப் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. நாவலாசிரியர் தம் உள்ளம் விரும்பிய எதை வேண்டுமாயினும் கதைக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, சிக்கல் நிறைந்த ஒருவரின் வாழ்க்கைப் பகுதி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், ஒரு நாட்டில் நீண்ட காலம் வழங்கி வந்த புராணச் செய்தி, அன்றாடப் பொது வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் முதலியன நாவலுக்குரிய கதைப் பொருளாக அமையலாம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஓரளவு தகுதி படைத்த பல்வகை இலக்கியங்களின் கருப்பொருள்களை ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வந்தார். முப்பத்தாறு வகை கதைக் கோப்பே உண்டு. என்று கண்டுபிடித்தார்.

         டேவிட் டெய்ச்சஸ் என்பவர், நாவலைக் குறித்துப் பேசும்போது ‘இன்றைய நாவலாசிரியருக்கு இரண்டு வகையான முக்கிய சிக்கல்கள் உண்டு’ என்கின்றார். ஒன்று, வாழ்க்கை நடப்பின் போக்கைப் பற்றியது. மற்றொன்று, உளவியல் பற்றியது. முன்னையது அனுபவத்தின் தரத்தோடு தொடர்புடையது; அனுபவத்தில் சிறப்பாக உள்ளதைச் சித்திரித்துக் காட்டுவது. பின்னையதாகிய உளவியல் சிக்கல் மனிதனின் உள்ளப் பாங்கினைப் பற்றியது. காலத்தோடு அதற்குரிய தொடர்புபற்றியது. இன்றைய நாவலாசிரியர் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயல்பைத் தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிட அவ்வியல்பினைத் தோற்று வித்தற்குக் காரணமாக அமைந்த பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் சித்தரித்துக் எவ்வாறாயினும் இன்றைய வாழ்க்கையின் போக்கு, பொருள்களையும் இன்றைய நாவலாசிரியர் தம் கதைப் உளவியல் ஆகிய இரண்டைச் சுற்றியும் அமையும் அத்தனைப் பொருளாகக் கொள்ள முடியும்.

 கதை மாந்தர்கள்

            ஒரு நாவலில் பல நிகழ்ச்சிகளும் பல செயல்களும் நடந்த செயலோடும் தொடர்புடையவர் யார் என்பது முக்கியமாகும். வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியோடும், ஒவ்வொரு குறிப்பிட்ட ஒரு செயல் அல்லது, நிகழ்ச்சி வளர்ந்து செல்லுவதற்குக் கதை மாந்தர் எவ்வெவ்வாறு துணை புரிகின்றனர் என்பதும் நாவலில் நன்கு விளங்க வேண்டும். இக்கதை மாந்தர் உண்மை உலகில் நடமாடுவது போலவே நாவலிலும் நடந்து கொள்கின்றனர். உண்மை உலகில் நாவலாசிரியர் தாம் கண்ட மனிதர்களின் இயல்புகளையும் பண்புகளையும் தாம் எழுதப் புகுந்த நாவலின் அமைப்பிற்கும் போக்கிற்கும் ஏற்றபடி ஓரளவு மாற்றியும் வளர்த்தும் படைத்துக் காட்டுகின்றார்; நாவலை எடுத்துப் படிப்போர் உண்மை உலக மனிதரைக் காண்பது போலவே நாவலில வரும் கதைமாந்தரையும் காணச் செய்கின்றார்.

            நாவலுக்குக் கதை மாந்தராக வருவோர் முழுக்க முழுக்க உயர்ந்த ஒரு பண்புக்கு இடமாக அமையலாம்; அல்லது குறைவும், நிறைவுமாக அமைந்த மனித இயல்புகளோடு விளங்கலாம். நாவலாசிரியர், கதையில் எத்தகைய பண்புடைய மனிதரைக் காட்ட வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அந்தக் குறிப்பிட்ட பண்பு நிலைக்கு ஏற்பக் கதை மாந்தரின் இயல்புகளைச் சித்திரித்துக் காட்டுகின்றார். நாவலாசிரியர் தம் நாவலில் தாம் விரும்பிய . அளவுக்குக் கதை மாந்தரைப் படைத்துக் காட்டலாம். ஆயின் கதை மாந்தர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மையோடும் செயற கதை மாந்தரின் புறத்தோற்றங்களை மட்டும் அன்றி அவர்களின் முறையோடும் இயங்குவது இன்றியமையாதது. நாவலாசிரியர் குறிப்பிட்ட கதை மாந்தர் தொடக்கம் முதல் முடிவு வரை கதைக்கோப்பை வளர்த்தலுக்குரிய குறிப்பிட்ட சில பண்புகளோடு, அக இயல்புகளையும் வெளிப்படுத்த முயல்வது சிறப்புடையது இயல்புகளோடு இயங்குவது அவசியம் ஆகும்.

            ஓர் உண்மை உலகில் நடமாடும் மனிதர்களை நாவலில் நடமாட விடும்போது அவர்களின் பண்புச் சித்திரங்களில் தெளிந்த அமைப்பும் மெருகும் இருத்தல் வேண்டும். நாவலில் வரும் கதை மாந்தரின் செயல்கள் அவர்களின் பண்புகளுக்கேற்ற செயல்களே நம்புமாறு செய்வது நாவலாசிரியரின் என்று நாம் முக்கியபணியாகும். சாமர் செட்மாம் என்பவர், நாவலாசிரியர் கதை மாந்தரைப் படைத்துக் காட்டும் முறையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். எழுத்தாளர்கள் எப்பொழுதுமே மூலத்தைப் பிரதி செய்வதில்லை. தான் ஒன்றைக் காண்கிறபோது, தன்னுடைய கவனத்தைக் கவர்ந்த சிலவற்றையும், கற்பனையில் மின்னலிட்ட சிலவற்றையும் ஒன்றாகச் சேர்த்தே பாத்திரத்தை உருவாக்குகிறார்கள். தன்னுடைய படைப்பு முழுக்க முழுக்க மூலத்தைப் போலவே இருக்க வேண்டும் என்று அதிகமாகக் கவலைப்படுவதில்லை.’

            நாவலாசிரியர் உண்மை உலகில் தாம் காணும் எவரேனும் ஒருவரின் பண்புகளை மட்டுமே நாவலில் வரும் மனிதர் ஒருவரிடம் அமைக்க வேண்டும் என்பதில்லை. தாம் பார்த்த மனிதர் பலரின் பண்புகள் பலவும் கூட்டிக் கதை மாந்தர் ஒருவரை உருவாக்கலாம். வேறுவகையில் கூறின், குறிப்பிட்ட கதை  மாந்தரின் முன் மாதிரியாக ஒருவர் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பலராகக் கூட இருக்கலாம். நாவலாசிரியர் தம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களைக் காட்டுவதும் உண்டு. இம்முறையில் அமையும் கதை மாந்தர், கொண்டு அவற்றின் பிரதிபலிப்பாகக் கதை மாந்தரைப் படைத்துக் 6 நாவல் படிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுத் திகழ்வர். நாவலாசிரியர் எப்படிப்பட்ட கதைப் பாத்திரத்தைப் கலந்து தானே அதுவாய், அதுவே தானாய் அமைந்து முழு ஈடுபாட்டுடன் படைக்க முயலவேண்டும். நாவலில் வரும் படைத்துக் காட்டினும் அப்பாத்திரத்தின் நிலையோடு இரண்டறக் பாத்திரங்கள் குறித்து, “எனது நாவல்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவை ஓரிடத்திலே தலை காட்டிவிட்டு மறைவதாயினும் சரி, அல்லது கதையின் அடிமுடிவரையிலும் நடமாடுபவை சரி அவையெல்லாம்—பரிவாரம் என்னுடனேயேயிருக்கும். நான் எங்குச் சென்றாலும் என் கூடவே அவைகளும் வரும்.’ என்று ஒருவர் கூறுவது ஈண்டு நம் சிந்தனைக்குரியது.

            நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்களும் சில பொதுவான இயல்பினைக் கொண்டிருப்பினும் மொத்தத்தில் ஒவ்வொன்றும் ஏனைய பாத்திரங்களினின்றும் நன்கு வேறுபட்டுத் தனித்து நின்று விளங்கவேண்டும். ஒருவரைப் பற்றிய பண்பு ஓவியம் ஏனைய கதை மாந்தரின் பண்பு ஓவியங்களிலிருந்து ஏதேனும் ஒரு வகையில் நன்கு வேறுபட்டிருத்தல் வேண்டும். இல்லையேல் கதை மாந்தர் படைப்பால் வரும் சுவை கெட்டுவிடும். கதை மாந்தரை இப்படித்தான் படைத்துக் காட்ட வேண்டும் என்று முடிந்த முடிவாக எதுவும் சொல்ல இயலாது. நாவலாசிரியர் பலராக, அவர்களின் மனநிலையும் நோக்கமும் பல படியாக அமைகின்றன. ஆதலின் அன்னோரால் படைக்கப் பெறும் கதை மாந்தரும் பலபடியாக இருக்கலாம். கதை மாந்தர் உண்மை உலகில் காண்பது போலவே இருப்பினும் நாவலுக்குரிய நோக்கத்தையும் போக்கையும் வளர்த்துச் செல்வதற்குரிய பண்பிலே நன்கு ஊன்றி நின்று அப்பண்பு நாவலின் முடிவு வரைக்கும் சிதையாவாறு விளங்கவேண்டும். இதனை நோக்கும்போது நாவலில் வரும் கதை மாந்தர் அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதரைப் போல இருப்பினும் அந்நிலைக்கு ஓரளவு அப்பாற்பட்டும் நிற்கின்றனர்
எனலாம்.

இருவகைக் கதை மாந்தர்

            நாவலில் இடம் பெறும் கதை மாந்தரை ஈ.எம். ஃபாஸ்ட்டர் (Round Characters) இருவகைப்படுத்துகின்றார். ஒருவகையினரை முழுநிலை மாந்தர் என்றும் மற்றொரு வகையினரை ஒரு நிலை மாந்தர் (Flat Characters) என்றும் குறிப்பிடுகின்றார்.

            முழு நிலை மாந்தர் என்போர், நாவலின் தொடக்கம் முதல் முடிவுவரை வருபவராகவும், பண்பு வகையில் முழுப்பரிணாம வளர்ச்சியுடையவராகவும், ஆழமான குறிக்கோள் கொண்டவராகவும் அமைவர்; நாவலைப் படித்து முடிக்கும்போது, அக்கதை மாந்தரைப் பற்றிய முழுமையான ஒரு பண்பு ஓவியம் நமக்குக் கிடைக்கின்றது; எந்தச் சில பண்புகள் ஒரு குறிப்பிட்ட கதை மாந்தரிடத்து ஆசிரியரால் அமைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்தச் சில பண்புகளுக்கேற்பச் செயற்பட்டு நல்ல குணச்சித்திரங்களாக விளங்குவர். திரு.மா. இராமலிங்கம் முழு நிலை மாந்தர் குறித்துக் கூறுவது ஈண்டு எண்ணத்தக்கது. “முப்பரிமாணக் காட்சி தருவார்கள் இவர்கள். உருவத்தாலும், கருத்தாலும் மெல்ல மெல்ல மாறி வளர்ந்து முழு நிலை மாற்றம் கொள்வர். இவர்களது தோற்றம் மட்டும் அல்லாமல் உள்ளம், உணர்ச்சி, தாபம், கொள்கை, கோட்பாடு எல்லாமே முறையான வளர்ச்சியைப் பெற்று மிளிரும், ‘இதய நாதம் கிருஷ்ண பாகவதர் ‘அகல் விளக்கு’ சந்திரன், ‘சித்திரப் பாவை’ ‘ஜீவகீதம்’ நச்சி, ‘வளைக்கரம்’ சுஜாதை முதலான பாத்திரங்களை ஆனந்தி, ‘பொன் விலங்கு’ பாரதி, ‘செம்பருத்தி, சட்டநாதன்,
உதாரணமாகக் காட்டலாம்.

            முழு நிலை மாந்தர் நாவலில் இடம் பெறும்போது, அவர்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும், மன வளர்ச்சியையும் பண்பு நலன்கள் மேன்மேலும் வளர்ந்து சென்று நிலையை அவர்கள் அடையும்போது, வாசகர், அவ்வுச்ச நிலை ஓர் உச்ச நிலையை அடைவதையும் காணலாம். இவ்வுச்ச மிக இயல்பாக அமைந்த ஒன்று எனவும், குறிப்பிட்ட கதை மாந்தரைப் பொறுத்த அளவில் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் உணர வைப்பது நாவலாசிரியரின் முக்கிய கடமையாகும். அவ்வாறு உணரவைக்க முடியவில்லை எனில் முழுநிலை மாந்தர் ஒரு நிலை மாந்தராகப் போய்விடுவர். கூற்றுப்படி, ஈ.எம். ஃபாஸ்டர் அடையாளம் முழுநிலை மாந்தர்க்குரிய அம்மாந்தரைப் பற்றிய ஓவியம் அறிவார்ந்த முறையில் படிப்போர்க்கு வியப்பூட்டுவதே ஆகும். வியப்பூட்டவே இல்லையெனில், ஒரு நிலை மாந்தர் என்று அவரைக் கொள்ள வேண்டியதுதான். அறிவார்ந்த முறையில் நம்மைத் தெளிவுறுத்த முடியவில்லையெனில் ஒரு நிலைமாந்தராக இருந்தும் முழுநிலை மாந்தர் போலக் காட்டிக் கொள்வதாக நாம் கொள்ள வேண்டியதுதான். முழுநிலை மாந்தர், நாவலைப் பொறுத்த அளவில் ஒரு முழுமையான வாழ்வை உடையவர் ஆவர்.’

            ஒரு நிலை மாந்தர், மேற்கூறிய முழுமையான மாந்தரினின்றும் வேறுபட்டோர் ஆவர். இவர்கள் நாவலில் ஆழமான பண்பின் பிரதிபலிப்பு ஆகாமல் ஏதேனும் ஒரு வேடிக்கையான இயல்பினைவராய் இடை இடையே
 வந்து போவர். நகைச் சுவையாக ஏதாவது ஒன்றைப் பேசுவது, வேடிக்கையாக ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டுப் போவது. மனிதரிடத்துப் பரவலாக வேரூன்றியிருக்கும் ஒரு தீய இயல்பின் விபரீதமாக ஏதாவது ஒரு கேட்டைச் செய்துவிட்டு நகருவது வடிவமாக வந்து செயல்படுவது போன்ற தன்மைகளை ஒரு நிலை மாந்தரிடத்துக் காணலாம். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கம் கதை மாந்தர் ஒருவரிடத்தே அமைந்து அவர் வரும்போதெல்லாம் அப்பழக்க வழக்கமும் கூடவே வருவதுண்டு. எப்போதோ சில சமயங்களில் இத்தகையோர் நாவலில் தோன்றினும் குறிப்பிட்ட அந்தப் பழக்க வழக்கம் அவருடன் சேர்ந்தே இடம் பெறுவதால் அவரை எண்ணும் போதெல்லாம் எண்ணி அப்பழக்க வழக்கத்தோடு சேர்த்தே நாமும் மகிழுகின்றோம். இவரிடத்தில் அமைந்த சில தனிப்போக்குகள் மட்டும் சுவையாக அமைந்து வாசகரை இன்புறுத்தும். ஈ. எம். ஃபாஸ்ட்டர் என்பார், ஒரு நிலை மாந்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார், “பதினேழாம் நூற்றாண்டில் ஒரு நிலை மாந்தர் வேடிக்கை மனிதர் என அழைக்கப்பட்டனர். அவர்களை ஒரு குறிப்பிட்ட வகையாகக் கொள்ளலாம். அல்லது வேடிக்கை மனிதர் அழைக்கலாம். நாவலாசிரியர் இம் மனிதரைப் படைக்கும்பொழுது ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது இயல்போடு மட்டுமே படைத்துக்காட்டுகின்றனர். இவரிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மைகள் இருக்கத் தொடங்குமாயின் இவர்கள் முழு நிலை மாந்தர் ஆவதற்குரிய தகுதியைப் பெறத் தொடங்கி விடுவர்.

நாவலாசிரியர் கதை மாந்தரின் பண்புகளையும் செயல்களையும் வெளிப்படுத்துவதற்குப் பின் வரும் முறைகளைக் கையாளலாம்.

1.ஆசிரியர் கதை மாந்தரைச் சார்புடன், அல்லது சார்பின்றிப் பார்க்கின்றவர் என்ற முறையில் கதைப் பாத்திரங்களுக்கு அப்பாற்பட்டுத் தனித்து நின்று கதை மாந்தரைக் குறித்து விரித்து விளக்கிச் சொல்லலாம்.

2.ஆசிரியர் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று, ஆனால் வெளிப்படையாகத் தெரியாமல், உள்ளுரயிருந்து கதை மாந்தரைச் சித்திரிக்கலாம்.

3.கதை மாந்தரில் ஒருவராக ஆசிரியர் தம்மையே
மாற்றிக் கொண்டு, மற்றவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி ஓர் ஆவல் எழும் வண்ணம் கதை மாந்தரைக் காட்ட முயலலாம்.

 4.இவையல்லாத, ஆயின், இவற்றுக்கு இடைப்பட்ட வேறு சில நிலைகளும் உண்டு.

கதை மாந்தரைப் படைப்பதில் சில பொதுவான முறைகள்

            நாவலாசிரியர் தம் நாவலுக்குரிய கதை மாந்தரைப் படைப்பதில் மிக்க சுய உரிமை கொள்ள முடிகின்றது. பாட்டு வடிவிலுள்ள காவியம், நாடகம் ஆகியவற்றில் கதை மாந்தரைப் படைப்பதற்குரிய அத்துணை அருமைப்பாடு நாவலில் படைக்கும் போது இல்லையெனலாம். ஆசிரியர் தாம் நினைத்தபடி சிலரைத் தம் கற்பனை உலகில் படைக்கலாம்; ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பியபடி ஒரு பெயரைத் தரலாம்; ஒவ்வொருவரையும் இன்ன இன்ன பால் வகையைச் சார்ந்தவர் என வரையறுக்கலாம்; ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட தோற்றங்களையும், நடை உடை பாவனைகளையும் வழங்கலாம்; தக்க குறியீடுகளைப் பயன்படுத்திக் கதை மாந்தரைப் பேச வைக்கலாம்; அவர்களுள் சிலரை நிலையான பண்பு உடையோராக நிறுத்தலாம். கதை மாந்தருடைய மனத்தின் அடித் தளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், அவர்கள் காணும் கனவுகள், அவர்கள் பெறும் இன்ப துன்பங்கள், கதை மாந்தரிடத்து வெளிப்படையாகச் சொல்ல முடியாதபடி அமைந்திருக்கும் மிக இரகசியமான சில மனோபாவங்கள் இவ்வண்ணம் மனித இயற்கையை வெளிப்படுத்துவது நாவலின் ஆகியவற்றை ஆசிரியர் திறம்பட வெளிப்படுத்த முயல வேண்டும். தலையாய பணிகளுள் ஒன்றாகும்.

            நாவலில் வரும் கதை மாந்தர் உள்ளும் புறமுமாக இன்னின்னவாறு உள்ளனர் என்பது நமக்கு நன்கு விளங்குவதால் வரலாற்றில் வரும் மாந்தரைவிடத் தெளிவாகக் காணப்படுகின்றனர்; நம் நெருங்கிய நண்பர்களையும் விட நெருக்கமாகத் தெரிகின்றனர்; அவர்களைப் பற்றிச் சொல்ல முடிவதெல்லாம் சொல்லப்பட்டு விடுகின்றன; அவர்கள் குறைவுடையவர்களாக இருந்தாலும் சரி, உண்மை இல்லாதவர்களாய் இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றிய இரகசியம் எதுவும் இல்லை. உண்மை உலகில் நம் நண்பர்கள் கூடச் சில இரகசியங்களை வைத்திருப்பார்கள்; வைத்திருத்தல் வேண்டும். காரணம் இந்த நிலவுலகத்தில் வாழ்க்கைக்குரிய கட்டுப்பாடுகளில் இரகசியமும் ஒன்றாகும். நாவலில் இந்த நிலை இல்லை.

உரையாடல்

            நாவலில் இடம் பெறும் உரையாடல்கள், கதை மாந்தரின் இயல்புகளையும் பண்புகளையும் நன்கு வெளிப்படுத்து வனவாகவும் விறு விறுப்பு உடையனவாகவும் இருத்தல் வேண்டும். உரையாடலின் எந்த ஒரு பகுதியும் கதையின் விளக்கத்திற்கோ வளர்ச்சிக்கோ துணை செய்வதாய் இருத்தல் வேண்டும். நாவலைப் படிப்போர்க்குச் சலிப்பு ஊட்டக் கூடிய எதுவும் உரையாடலில் இடம் பெறலாகாது. நாடகத்தில் அமைவது போலவே நாவலிலும் உரையாடல் சுவையாக அமைய வேண்டும்; கதை மாந்தரின் செயல்களையும் கதை நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாங்கிலும் அமையலாம்;

            கதை மாந்தரின் உள்ளப்பாங்கு, நடைமுறை, அன்னோர் வாழும் செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் பொருத்தமாகவும் அமைய வேண்டும்.

சூழலமைப்பு (Settings)

            நாவல்கள் பலவகைப்படும். நிகழ்ச்சிகள் மிக்க நாவல் (novel of action), பண்பு நலன் விளக்கும் நாவல் (novel of character) விளக்கமும் வருணனையும் மிக்க நாவல் (picturesque novel) நாடகப் போக்கினதாகிய நாவல் (dramatic novel) என நாவல் நால்வகைப்படுமென்பர் திறனாய்வாளர். 13 இவற்றுள் எந்த வகை நாவலை ஆசிரியர் எழுதுகின்றாரோ அந்த வகைக்கு ஏற்றபடி பொருத்தமாகச் சூழலமைப்பும் அதன் விளக்கமும் இடம்பெற வேண்டும். வரலாற்று நாவலைப் பொறுத்த அளவில் அந்த நாவலால் குறிக்கப்படும் காலச் சூழ்நிலைக்கேற்ற பின்னணியே அமைதல் வேண்டும். அக்கால மக்களின் நடை உடை பழக்க வழக்கங்களையே கதையின் பின்னணியில் நாவலாசிரியர் அமைத்தல் வேண்டும்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

காளமேகப் புலவரின் வரலாறு

காளமேகப்-புலவரின்-வரலாறு

      தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள், ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. ‘சுவிதை நயத்தையும், அக்கவிதைகள் காட்டும் பொருள் வளத்தையும் தெய்வீகச் சிந்தனைகளோடு சேர்த்தே நாம் அறிந்து உணர வேண்டும்’ என்ற உயரிய நினைவே இவற்றுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். புலவர் வரலாறுகளைப் பற்றியவரை, நிலையானவொரு பகுதியாக இன்னொன்றும் விளங்கி வருகிறது. அது, அவர்கள் காலத்தையும் வரலாற்றையும் பற்றி அறிஞரிடையே நிகழும் வாதப் பிரதிவாதங்கள். இந்த இரு வகையான பொது அம்சங்களிலும் காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிட வில்லை.

            திருக்குடந்தைப் பகுயிலே, வடமரான பிராமணர் மரபிலே தோன்றியவர் இவர் என்பர். அவ்வூரிற் பிறந்த சோழியப் பிராமணர் என்றும் சிலர் உரைப்பர். நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழ்வது பாண்டி நாட்டுத் ‘திருமோகூர்’ என்னும் தலம் அந்தத் தலத்திலே கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குக் ‘காளமேகப் பெருமாள்’ என்று பெயர். அந்தக் கோயிற் பரிசாரகராயிருந்த ஒருவருடைய மகனார் இவர் எனவும் சிலர் உரைப்பர். இவர் மோகூர்ப் பெருமாளைப் பாடியிருப்பதனையும், அப்பெருமாளின் பெயரும் காளமேகமாக இருப்பதனையும் இக் கருத்திற்குச் சான்றாகவும் அவர்கள் காட்டுவர்.

            இவர்களுடைய கருத்துப்படி ‘காளமேகம்’ என்பது இவருடைய இயற்பெயரே ஆகின்றது. மற்றையோர் இதனை ஏற்பதில்லை. தேவியின் அருளினாலே ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிதைகளையும் கார்மேகத்தைப் போலப் பொழிதலைத் தொடங்கிய பின்னரே இப்பெயர் இவருடைய சிறப்புப் பெயராக அமையலாயிற்று என்பார்கள் அவர்கள்.

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்

வீசு கவிகாள மேகமே – பூசுரா

வீண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்

மண்தின்ற பாணமென்ற வாய்”

என்ற செய்யுளை அதிமதுரகவி செய்தனர். இதன் முதல் அடியில் குறிப்பிடப்பெறும் வரதா என்ற சொல்லைக் கொண்டு, அதுவே இவருடைய இயற்பெயராகலாம் என்பர் திரு.மு. இராகவய்யங்கார் அவர்கள். இவருடைய இளமைப் பருவம் எத்தகைய சிறப்பும் இன்றிக் கழிந்திருக்க வேண்டும் என்றே கொள்ளலாம். இவர், பிற்காலத்துப் பரிசாரகத் தொழிலில் அமர்ந்திருந்ததனை எண்ணினால், அவ்வாறு கருதுவதற்கு இடமும் உண்டாகின்றது.

பரிசாரகர் வரதன்

            வரதன், தமக்கு வயது வந்ததும், தமக்கு ஏற்ற ஒரு பணியினை நாடித் தம் ஊரிளின்றும் வெளியேறிவிட்டார். பலவிடங்கட்கும் சென்று வேலை தேடித் திரிந்தவர், இறுதியில் திருவரங்கத்துப் பெரியகோயிலை அடைந்தார். அங்கு, அவருக்குப் பரிசாரகர் வேலைதான் கிடைத்தது. கோயில் மடைப்பள்ளி அலுவல்களில் இந்தப் பரிசாரகர் பணியும் ஒன்று. உணவு அங்கேயே கழிந்துவிடும் கிடைக்கிற சிறு ஊதியம் மிச்சம். அதனால் வரதன் திம்மதியாக அவ்வேலையில் இருந்தார். இருந்தாலும், அவருடைய கட்டடிளமைப் பருவம், அப்படி நிம்மதியுடன் நிரந்தரமாக இருக்குமாறு அவரை விட்டுவிடவில்லை. விதி, அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கிற்று.


மோகனாங்கியின் தொடர்பு

            திருவரங்கம் பெரியகோயில் ஒரு பிரசித்தி பெற்ற திருமால் திருப்பதி அதனருகே, சிறிது தொலைவிலே திருவானைக்காத் திருக்கோயில் உள்ளது. இது பிரபலமான சிவன்கோயில். சம்புகேசு வரராகச் சிவபிரான் இங்கே கோயில் கொண்டிருக்கின்றார். சம்புகேசுவரர் கோயிலும் ஒரு பெரிய கோயில், இங்கேயும் பணியாட்கள் மிகுதியாக இருந்தனர். இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்து வருவதை மரபாகக் கொண்ட தேவதாசியர் பலரும் அந்நாளில் இந்தக் கோயிலில் இருந்தனர். அவர்களுள் மோகளாங்கி என்பவளும் ஒருத்தி. இவள் நல்ல அழகி; நடனத்திலும் வல்லவன்,


            அழகு கொஞ்சிக் குடிகொள்ளும் இளமைப் பருவமும் மோகனாங்கிக்கு அப்போது அமைந்திருந்தது. இயல்பிலேயே அழகியான மோகனாங்கிக்கு. இளமைப் பருவத்தின் செழுமையான பூரிப்பு மேலும் அதிகமான கவர்ச்சியை அளித்தது. அவளைக் கண்டதும் வரதன் அவள்பால் மையல் கொண்டனர். அவளை அடைவதற்கும் முற்பட்டனர். அவளும் அவருடைய அழகிலே மயக்கமுற்றாள். அவர் கருத்திற்கும் இசைந்தாள். இருவர் வாழ்வும் ஒன்றாகிக் கனிந்து, அளவற்ற இன்பநாதத்தை ஒலித்துக் கொண்டிருந்தது. வரதன், ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கி, ஒரு சிவன் கோயில் தாசி. அவர்களின் உறவு சைவர், வைணவர் ஆகிய இருந்திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆளால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் உள்ளம் ஒன்று கலந்துவிட்டபின், உலக விவகாரங்களை நினைப்பதற்கு அங்கு இடமே இல்லை.


கேலியும் ஊடலும்


            ஒரு சமயம், மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பாடலை அவர்கள் பாடத் தொடங்கினார்கள். ‘எம்கொங்கை நின் அன்பர்அல்லார் தோள் சேரற்க’, என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாட முடியும்? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். ஆகவே, அவன் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள, அவள் செயலற்று நின்றுவிட்டாள். இயல்பாகவே அவள் கொண்டிருந்த பொருத்தமற்ற உறவினை வெறுத்து வந்த அந்தப் பெண்கள், மோகனாங்கியைச் கட்டி, அப்போது வெளிப்படையாகவே பழிக்கத் தொடங்கி விட்டனர். ‘எப்படியடீ உன்னால் பாடமுடியும்?’ என்ற அவர் களின் ஏளனமான கேள்வி மோகளாங்கியை வாட்டி வதைத்தது. மோகனாங்கி சிலையானாள். அவள் தோழியர் கும்மாள மீட்டனர்; கைகொட்டிச் சிரித்தனர். அவர்களின் குறும்புகளால் அவளது வேதனைத் தீ சுவாலையிட்டு எரியத் தொடங்கிற்று. தூய சிவபக்தி அவளை அப்போது ஆட்கொள்ள, அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.

 மூடிய கதவம்

         “வாயிற் கதவைச் சார்த்திவிடு; வரதர் இன்றிரவு வந்தால் உள்ளே நுழைவதற்கு இடம் தரவேண்டாம். சிவன் கோயில் தாசியாகிய நான், வைணவரான அவருடன் திருவரங்கத்துக் கோயில் பரிசாரகரான அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த உறவு அனைத்தும் இன்றோடு முடிந்தது” என்று தன் வேலைக்காரியிடம் கூறிவிட்டுப் படுக்கையில் படுத்தும் உறக்கங் கொள்ளாமல் தான் செய்த சிவ அபசாரச் செயலை நினைத்து வருந்தியவளாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் மோகனாங்கி. வழக்கம்போல் வரதன் வந்தார். “மோகனா” என அன்புடன் அழைத்தவாறே கதவைத் தட்டினார். கதவு மெல்லத் திறந்தது. வேலைக்காரி எதிரே நின்றாள். தன் தலைவியின் நிலையைச் சுருக்கமாகச் சொல்லி விளக்கினாள். வரதன் நிலைகலங்கினார். தம்முடைய உறவுக்கு இடையூறாகத் தம் மதக்கொள்கை இருப்பதை நினைத்தார். ஒரு முடிவுடன் விரைந்து சென்றார். அந்த முடிவுக்கு வந்ததுமே அவர் முகம் தானாக மலர்ந்தது. அவரிடம் புதியதொரு மிடுக்கும் எழுந்தது. அவர் நடையிலே என்றுமில்லாத ஒரு விரைவும் காணப்பட்டது.

 அன்பின் ஆற்றல்

            மறுநாள் பொழுது விடிந்ததும் வரதன் சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தாம் சிவசமயத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு விரும்புவதாகக் கூறினார். அவருடைய முடிவைக் கேட்டு அங்கிருந்தோர் அதிசயித்தனர். ஆனாலும், வைணவர் ஒருவர், தாமே வலிய வந்து சிவநெறியை ஏற்க விரும்புவதை மகிழ்வுடன் வரவேற்றனர். அவருக்குச் சிவதீட்சை செய்துவைத்துச் சிவசமயத்திற் சேர்த்துக் கொள்வதற்கான சடங்குகளையும் உடனே செய்து வைத்தனர். வரதன் சைவசமயி ஆயினார். அவரைச் சம்புகேசுவரர் கோயிற் பரிசாரகராகவும் அவர்கள் நியமித்தனர்.  சிவ சின்னங்கள் உடல் முழுவதும் பொலிவுடன் விளங்கத் தம் அன்புடையாளைக் காணச் சென்றார் வரதன். அவள் கொண்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அகமும் முகமும் மலர் அவரை வரவேற்று உபசரித்தாள். தளக்காக அவர் சைவராக மாறின செயல், அவள் உள்ளத்தே நிரம்பி நின்றது. அவரை ஆர்வத்துடன் தழுவி, அவரது காதலன்பின் பெருமைக்கு அடிமையாகிப் போற்றி இன்புற்றாள். வரதனும் கவலை தீர்ந்தவராகிக் களிப்பிலே திளைத்திருந்தார்.


தேவி உபாசகன்

            தேவி உபாசகன் ஒருவன் தனக்கு நிறைந்த புலமையைத் தந்தருளுமாறு ஒரு சமயம் தேவியை வேண்டுவானாயினான். திருவாளைக் காவிலே. சம்புகேசுவரரின் தேவியாகக் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் திருமுன்னே, இரவு பகலாகநோன்பு இயற்றியும் வந்தான். அவனுடைய கடுமையான உபாசனை, தேவியின் திருவுளத்தேயும் அவனுக்கு அருளவேண்டும் என்னும் கருணையினை உண்டாக்கிற்று. தேவி, ஒரு சிறு பெண்ணாக வடிவு எடுத்தாள். இரவின் நடுச்சாம வேளையிலும் கண்ணுறங்காதவனாகத் தியானத்திலே இருந்த அந்த உபாசகனின் முன்னே சென்று நின்றாள். அவள் திருவாயிலே தாம்பூலம் நிறைய இருந்தது. அதனை அவள் மென்றுகொண்டும் இருந்தாள். “அன்பளே! நின் வாயைத் திற, இதனை நின் வாயில் உமிழ்கின்றேன். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்” என்றாள் தேவி, அவன் கண்விழித்தான். எதிரே நின்ற சிறுபெண்ணின் வடிவைக் கண்டான். அவள் வாய் நிறையத் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருந்த நிலையையும் கண்டான். ‘தன் தவத்தைக் கலைக்கவந்த பெண்’ என்று தவறாகக் கருதி மயங்கினான். அவளைக்கடிந்து வெருட்டவும் முற்பட்டான். ‘ஏடீ, சிறு பெண்ணே! என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து, என்னைக் கெடுக்கவோ நினைத்தனை. உடனே இங்கிருந்து அகன்று போய்விடு, இன்றேல், நான் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது’ என்று கூச்சலிட்டான்,

            நிறைவான அறிவு பெறுவதற்கு உரிய நற்காலம் அவனுக்கு வரவில்லை என்பதைத் தேவி அறிந்தாள். தான்கொண்ட அந்த வடிவுடனேயே திரும்புவாளானாள், வழியிலே ஒரு மண்டபத்தே உறங்கியிருந்த வரதனைக் கண்டாள். அவனுடைய நல்லூழ் அவள் நினைவிற்பட்டது. அவன் அருகே சென்று, அவனைத் தட்டி எழுப்பினாள். அருள் பெற்றான் ‘இன்று எனக்குக் குடவரிசைப் பணி உளது. இரவில் வீடு திரும்புவதற்கு நெடுநேரமாகும். தங்கள் பணி முடிந்த பின், அம்மன் கோயில் மண்டபத்தே எனக்காகக் காத்திருங்கள். நானும் அங்கே வருகிறேன். இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குப் போய்விடலாம்’ இப்படிச் சொல்லியிருந்தாள், அன்று மாலை மோகனாங்கி. அவன் விருப்பப்படியே, தம் பணி முடிந்ததும், மண்டபத்தே சென்று வரதர் அவளுடைய வருகையை எதிர் பார்த்தபடி காத்திருந்தார். அங்கேயே படுத்து அயர்ந்து உறங்குபவரும் ஆயினார்.

            மோகனாங்கி தான் சொன்னபடியே மண்டபத்திற்கு வந்தாள். அவர் உறங்கிக் கிடப்பார் என்று நினையாத அவள். அவரைக் காணாமையால், அவர் வீட்டிற்கே போயிருப்பார் எனக் கருதித் தானும் சென்றுவிட்டாள். கோயிலாரும், குடவரிசை முடிந்தபின், கோயிற் பெருங் சுதவை மூடித் தாளிட்டு விட்டனர். அந்த நிலையிலேதான், தேவி அவரிடத்தே சென்றனள். வரதரை எழுப்பி, ‘வாயைத் திற’ என்றதும், அவர் வாய் தானாகவே எவ்வித மறுப்புமின்றித் திறந்து கொண்டது. தேவியும் தன் வாயின் தாம்பூலச்சாற்றை அவர் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள். அந்தக் கணமே, வரதராகிய பரிசாரகரின் உள்ளத்தில் பெரியதொரு உத்வேகம் எழுந்தது. கடல் மடை திறந்தாற் போன்று அவர் கவிமழை பொழியலானார்; அவருடைய அந்தப் புதிய சக்தியை நினைந்ததும், அவருக்கே வியப்பாக இருந்தது. தேவியின் கருணைப் பெருக்கை எண்ணி அவளைப் பாமாலையால் போற்றினார்.


காளமேகம் ஆயினார்


            பொழுது விடிந்ததும், பழைய பரிசாரகராக வரதர் இல்லை. முத்தமிழ் தவழ்த்துவரும் செஞ்சொற் கவிஞராக அவர் விளங்கினார். தம் அன்புக் காதலியிடம் சென்று தம்முடைய கவித்திறனைக் காட்டினார். தேவியின் திருவருளையும் விளக்கமாக உரைத்தார். அவளும் அதனைக் கேட்டதும், தேவியின் திருவருளைப் போற்றிப் பேரின்ப வயத்தினளாயினாள். அன்று முதல், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பொழியும் காளமேகமாக ஆயினார் வரதன். தமக்கு அருள்பாலித்த தேவியின் கருணைக்கு நன்றியாகத் ‘திருவானைக்கா உலா’ என்னும் அரியதொரு பிரபந்தத்தைச் சொற்கவையும் பொருட் சுவையும் மிளிரும்படியாக இயற்றினார். உலாவின் இனிமை அறிவுடையோரை ஆட்கொள்ள, அன்று முதல் அனைவரும் கவி காளமேகம் என்றே அழைக்கலாயினர்,”

தல யாத்திரை

            திருவானைக்காவிலே தம் அன்பிற்கு உரியவளான மோகனாங்கியுடன் சில காலம் இன்புற்று இருந்த பின்னர் தமிழகம் முழுவதும் சென்று தம் கவிதை வெள்ளத்தைப் பரப்பிவர வேண்டுமென்னும் பேரவா இவருக்கு எழலாயிற்று. அதனால், அவனிடத்தே பிரியாவிடை பெற்றுத் தமிழ் நாடெங்கணும் காளமேகம் செல்வாராயினார். செல்லும் இடங்களில் எல்லாம் கவிமழை பொழிந்து, தமிழகம் முற்றும் தம்மைப் போற்றப் புகழ்க்கொடியும் நாட்டினார். பின்னர், மீண்டும் திருவானைக்காவிற்கே வந்து மோனாங்கியுடன் இன்பமாக வாழ்ந்திருந்தார்.

திருமலைராயன்

            தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையோரத்தே, நாகைக்குச் சில கல் தொலைவிலே விளங்கும் திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரினைத் தலைநகராகக்கொண்டு, அந் நாளையிலே ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் திருமலைராயன். விஜயநகர மன்னர்கட்கு உட்பட்ட தலைவனாக அவன் அந்தப் பகுதியை ஆண்டுவந்தான் (கி.பி.1455-1468). அவன் தெலுங்கு மொழியிளன். எனினும் அவன்பால் தமிழார்வமும் நிரம்ப இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலரைத் தன் அவையிலே வைத்து அவன் உபசரித்து வந்தான். அவனுடைய தமிழன்பின் சிறப்பையும், வள்ளன்மை யினையும் கேட்டறிந்தார் காளமேகம். தாமும் சென்று அவனைச் காணவும், அவனைப் பாடி பரிசில்பெற்று வரவும் விரும்பினார். அந்த விருப்பத்தைச் செயற்படுத்துவதற்கான தக்க நேரத்தையும் எதிர்பார்த்திருந்தார்!.

தண்டிகைப் புலவர்கள்

            மேற்சொன்ன திருமவைராயன் அவையிலே, அறுபத்து நான்கு புலவர்கள் ‘தண்டிகைப் புலவர்கள்’ என்ற சிறப்புடன் திகழ்ந்தனர்.அரசனால் அளிக்கப்பெற்ற விருதான பல்லக்குகளிலே அமர்ந்து அவர்கள் செல்வார்கள். அதனால் தண்டிகைப் புலவர்கள் ஆயினர். அந்தச் சிறப்பும் செழுமையும் அவர்க ளிடத்தே புலமையைக் காட்டினும் செருக்கினையே பெருக்கிக் கொண்டிருந்தன. தம் அரசனின் உதவியை நாடிவரும் பிறபுலவர் சுளை எல்லாம் வஞ்சகமாக மடக்கிக் தலைகவிழச் செய்து, அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

            வறுமையிலே வாடி. அரசனின் உதவியை எதிர்பார்த்தவர்க ளாகவும், புலமையால் அரசனிடத்தே பரிசுபெறுவதை விரும்பியவ ராகவும் வந்த புலவர்களுட் பலர், இந்தத் தண்டிகைக் கூட்டத்தினரின் செயலினால் மனங்குன்றி, யாதும் பெறாதே வருத்தமுடன் திரும்பிச் செல்வாராயினர். இந்த கும்பலின் கொடுஞ்செயல் பற்றிய செய்தி தமிழகத்தின் எப்புறத்தும் பரவி இருந்தது. ‘இவர்கள் செருக்கினை அடக்கி இவர்களுக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும்’ எனக் காளமேகம் நினைத்தார். அதிமதுரக் கவி இந்தத் தண்டிகைப் புலவர்களின் தலைவராகத் திகழ்ந்தவர் அதிமதுரக் கவிராயர் என்பவர். மிகவும் இனிதான கவிதைகள் இயற்றலிலே வல்லவர் அவர். அதனால் அரசன் அவருக்கு மனமுவந்து அளித்த விருதே ‘அதிமதுரக் கவிராயர்’ என்பது. அந்தப் பெயருக்கு ஏற்றவாறே புலமைச் செறிவு உடையவராகவும் அதிமதுரம் விளங்கினார். இவருடைய சொந்த ஊர் ‘திருக்கோயிலூர்’ என்பர். இதற்குச் சான்றாகக் ‘கோவன் மதுரா’ எனஒரு செய்யுளில் வருவதனையும் காட்டுவர். திருக்கோயிலூர் மலையமான்களுக்கு உரியதாகப் புகழுடன் விளங்கியதோர் ஊராகும். இந்நாளில், தென்னாற்காட்டு மாவட்டத்தே உள்ளது. இவ்வூரவரான இப்புலவர், தம்முடைய கவிவன்மையினாலே, திருமலை ராயளின்பாற் சென்று, அவன் அன்பைப்பெற்று, அவன் அவைப் புலவர் தலைவராகவும் விளங்கிவந்தனர்.

            புலமைச் செறிவுடையவர் எனினும், ஒருவர் அகந்தைப் பெருநோய்க்கு இடங்கொடுத்தால் அவர் புகழடைதல் கூடுமோ! அந்த நிலைக்கு அதிமதுரமும் உள்ளாயிருந்தனர். அரசன் அளித்த தகுதியும், செல்வ சம்பத்துகளும் இவரை அகந்தையுடையோராக ஆக்கியே அலைக்கழித்தன. இவருடைய செருக்கை அடக்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் காளமேகத்திற்கு எழுந்தது. அது நிறைவேறத் தொடங்கும் காலமும், திருமலைராயன் பட்டினத்து முத்துக் குளித்தலின் தொடக்கத்துடன் வரலாயிற்று,

முத்து வேண்டும்

            நாட்டின் பல பகுதிகளிலும், திருமலைராயன் பட்டினத்து முத்துக்குளித்தலைப் பற்றிய செய்தி பரவலாயிற்று, அங்கு தன்முத்துக்கள் பல கிடைத்தும் வந்தன. அவற்றை வாங்கும் பொருட்டுப் பல திசையினரும் அங்குச் செல்வாராயினர். அப்படிச் சென்று வந்தவர்களுள் ஒருவர் மோகனாங்கியிடம் சென்று, தாம் கொண்ட சிறந்த முத்துக்களைக் காட்டினர். அவற்றைக் கண்டதும், அவளுடைய உள்ளத்தே ஆசைப்புயல் கால்கொள்ளலாயிற்று. அவள் பெண் அல்லவா! திருமலைராயனைக் கண்டு, அவனால் அளிக்கப் பெறும் பரிசினைப் பெற்றுவர வேண்டும் என்ற ஆர்வமும், அவன் அவைத் தலைவரான அதிமதுரத்தை வென்று செருக்கொழித்து வரவேண்டும் என்ற தினைவும் கொண்டிருந்த காளமேகத்திடத்தே, மோகனாங்கி, ஒருநாள் தன் முத்து விருப்பத்தையும் பக்குவமாகச் சொன்னாள். ”சுவாமி! திருமலைராயன் பட்டினத்திற்குப் போய் ஒரு முத்துமாலைக்குத் தேவையான அளவு முத்துக்கள் பெற்று வாருங்களேன்” என்றாள் அவள். அவரும் அதற்கிசைத்தவராக அன்றே தம் பயணத்தைத் தொடங்கினார்.

கண்ட சாட்சி

            பல நாட்கள் நடந்து, பல ஊர்களையும் கடந்து, ஒரு நாள் காலை வேளையிலே திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார் காளமேகம். அந்த ஊரின் வளமையைப் பறைசாற்றுவன போல மாடிவீடுகள் இருபுறமும் வானத்தைச் சென்று முத்தமிட முயல்வனபோலத் திகழ்ந்த ஒரு தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்தார். ஒரு பெரிய ஊர்வலம் அப்போது எதிரே வந்துகொண்டிருந்தது.

            மங்கல பேரிகைகள் ஜாம் ஜாமென்று முழங்க, சுற்றிலும் மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்திப்போற்ற, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பெற்ற பல்லக்கு ஒன்றிலே அமர்ந்தபடி, அதிமதுரக் கவிராயர் அந்த ஊர்வலத்தின் நடுநாயகமாக வந்து கொண் டிருந்தார். அவரைத் தொடந்து அறுபத்து மூன்று பல்லக்கு களிலும் புலவர்கள் அமர்ந்து வந்தனர். கட்டியக்காரன், ‘அதிமதுரக் கவிராய சிங்கம் பராக்’ என்று கூறிவர, அத்த முழக்கம் அனைவராலும் தொடர்ந்து முழக்கப்பெற்ற முழக்கொலி வானதிர எழுந்து கொண்டிருந்தது. தமிழ்வாணர்கள் செல்லும் தகவுடைய அந்தப் பெருமிதத்தைக் கண்ட கவிஞரின் உள்ளம் பூரிப்படைந்தது. திருமலைராயனின் தமிழார்வத்தை உள்ளத்தாற் போற்றினார். ‘தமிழறிந்தாரின் நல்வாழ்வே தமிழின் தமிழரின் நல்வாழ்வாகும்’ என்பதனை உணர்ந்து, செயலிலேயும் அதை நிறைவேற்றி வந்த திருமலைராயனின் செயல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டது, நடுத்தெருவில் தம்மை மறந்தவராக மெய்மறந்து நின்று கொண்டிருந்தார்  காளமேகம்.

எதிர்பாராத சம்பவம்


            கட்டியக்காரர்களுன் ஒருவன், தமிழ் மயக்கத்தால் மெய் மறந்து நின்ற காளமேகத்தைக் கண்டான். அனைவரும் முழக்கும் அதிமதுரக் கவிராய சிங்கத்தின் புகழ் வாசசுத்தை அவர் கூறாது நிற்பதறிந்து வெகுண்டான். அவரருகே சென்று, தன் கைத்தடியினாலே தட்டி அவர் மயக்கத்தைக் கலைத்து, “நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைப் பிறருடன் முழக்குவாயாக” என்றான். காளமேகம் வெகுண்டார். எனினும் நோவவேண்டியது அவனையன்று என்பதனை அறிந்த அவர், அதிமதுர மென்றே அகிலம் அறியத்துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக் கூட்டுச் சரக்கதளைக் கூறு- என்ற செய்யுளை உடனே சொன்னார். ‘அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு: அதை எதற்காக இப்படிப் போற்றி முழக்க வேண்டும்?” என்ற ஏளனம் செய்யுளில் எதிரொலித்தது. கட்டியக்காரன் அவரைப் புலவர் என்று அறிந்து கொண்டான். அந்தச் செய்யுளையும் நடந்த சம்பவத்தையும் அதிமதுரத்திடம் சென்று சொன்னான். அவர் அதனைக் கேட்டதும், ஏளனம் செய்தவரைத் தலைகுனிய வைக்க எண்ணினார். அவர் யாவரென அறிந்து வருமாறு அந்த ஏவலனைப் பணித்துவிட்டு, ராஜசபையை நோக்கிச் சென்றார். சூழ்ச்சிக்கு முனைதல் அரசவையினை அடைந்த அதிமதுரம், வழியிடையே தாம் கண்ட புதிய கவிராயரையும், அவர் சொன்ன செருக்கான அந்தச் செய்யுளையும் தண்டிகைப் புலவர்கட்கும் அரசனுக்கும் மிக வருத்தத்தோடு எடுத்துச் சொன்னார். அவரை எப்படியும் அவமானப்படுத்தி அனுப்பவேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

        காளமேகத்தைப்பற்றி அறியச் சென்ற கட்டியக்காரன் அவைக்கு வந்தான், கவிராயரே தந்த ஒரு சீட்டுக்கவியினை அதிமதுரத்திடம் தந்து நின்றான். அதனைப் படித்ததும் அதிமதுரம் மேலும் சினம் கொண்டார், அதனைப் படித்த அரசனும் அறிந்த பிறரும் அவ்வாறே ஆயினர். அவையில் வந்தனர். ‘அந்தப் புலவரை உடனே இங்கு கொண்டு வருக. நம் அவைப்புலவர் பெருமானைப் பழித்த அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கட்டி இழுத்தாயினும் கொணர்க’ என்று ஆணையிட்டுத் தன் ஏவலரைப் போக்கினாள் திருமலைராயன். அவர்களும் காளமேகத்தை அணுகி அரசனின் ஆணையைக் கூற அவரும் நிகழ்ந்திருக்கும் குமுறலை எண்ணியவாறே அவர்களைத் தொடர்த்தார். அரசவையிலே நுழைந்தார் காளமேகம், மன்னனை வாழ்த்தினார். தாம் கொண்டு வந்திருந்த எலுமிச்சம் பழத்தை அவளிடம் அளித்தார். அதனை வாங்கிய அவன், அவருக்கு இருக்கை அளித்து உபசரியாமல் வாளாயிருந்தான். காளமேகம் அதனைக் கண்டு சிரித்தார். அதிமதுரத்தின் சூழ்ச்சி வலையிலே அரசனும் சிக்கியிருந்த உண்மையைக் கண்டார். தமக்கு உதவும் தேவி அகிலாண்டவல்லி கோயில் கொண்டிருக்கும் திசையை நோக்கிக் கரங்குவித்து தியானித்தார். அதன்பின் தமக்கொரு இருக்கை அருளுமாறு கலைமகளை வேண்டிப் பாடினார்.

            அப்போது திருமலைராயன் வீற்றிருந்த சிம்மாசனமே ஒருபுறமாக வளர்ந்து பெருகிற்று. பெருகி வளர்ந்த அந்தப் புறத்தே சென்று கம்பீரமாக அமர்ந்துகொண்ட காளமேகம், தமக்குத் துணை செய்த கலைவாணியை மீண்டும் போற்றினார். கண்டோர் அனைவரும், அவருடைய தெய்வீக சக்தியைக் கண்டு, எதுவும் சொல்லுவதற்கு வாயெழாமல் திகைப்புற்றிருந்தனர். காளமேகமோ அங்கிருந்த புலவர்களைச் சுட்டி, ‘நீவிர் யாவரோ?’ என்று மிகவும் கனிவாகக் கேட்டனர். அவர்கள் ‘யாம் சுவிராயர்கள்’ என்றனர். ‘கவிராயர்’ என்ற பதத்தினைக் ‘குரங்குகள்’ என்று பொருள்கொண்டு காளமேகம் கேலியாக உரையாடப் புலவர்கள் பெரிதும் சீற்றங்கொண்டனர். ‘நீவிர் யாவரோ?’ என்று அவர்கள் கேட்க, இவர் ‘யாமே காளமேகம்’ என, அதனைக் ‘கார்மேகம்’ எனப்பொருள் கொண்டு அவர்களும் ஏளனம் செய்தனர். அதனைக் கேட்டதும் கவிபாடுதலில் தாம் காளமேகம் என்று ஒரு செய்யுனைக் கவிஞர் சொல்லினர்.

            அதிமதுரக் கவிராயர், ‘எம்போல் நீவிர் விரைவாகக் கவிபாட வல்லீரோ? என்னும் பொருள்பட, ‘மூச்சு விடு முன்னே’ என்ற செய்யுளைச் சொல்வக் காளமேகம் ‘அதனினும் விரைவாகப் பாடுவோம்’ என்று பொருள்படும் ‘அம்மென்னும் முன்னே’ என்ற செய்யுளைச் சொல்லினர். அரிகண்டம் காளமேகத்தின் செயலினால் சினம் மிகுதியாகப் பற்றித் தம்மை எரிக்க, அதிமதுரம், ‘நீர் அரிகண்டம் பாடி எம்மை வெற்றிபெற இசைகின்றீரா?’ என்றனர்.  ‘அரிகண்டமோ? அதன் முறைமை எப்படியோ? சொன்னால், யாம் அதன்பின் எம் இசைவைச் சொல்வோம்’ என்றனர் காளமேகம். “கழுத்திலே சுத்தியைக் கட்டிக்கொள்ள வேண்டும். கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் செய்யுள் சொல்ல வேண்டும்; சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை இல்லாமலும் இருக்க வேண்டும். பிழைபட்டால் கழுத்து வெட்டப்படும்; வென்றால் பாராட்டப் பெறுவார்கள்’ என்று விளக்கினார் அதிமதுரம். அதனைக் கேட்டுக் காளமேகம் கதிகலங்கிப் போவார் என்று எதிர்பார்த்த அதிமதுரம் திடுக்கிட, ‘அரிகண்டம் ஒரு பெரிதோ? ‘யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வோம்’ என்று காளமேகம் முழங்கினார். ‘எமகண்டமோ’ என்ற திகைப்புடன் அதிமதுரம் வினவ, காளமேகம் அதனை விளக்கினார்.


எம கண்டம்

            பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழம் உடையதாகப் பூமியிலே ஒரு பெரிய குழியினை முதலிலே வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நாற்றப் பெறும். அவற்றின் மேலாக, நாற்புறமும் சட்டமிட்டு, அச் சட்டங்களின் நடுப்பகுதியிலே இரு குறுக்குச் சட்டங்களை இடவேண்டும். அந்தக் குறுக்குச் சட்டங்கள் சந்திப்பதும், குழிக்கு நடுவே மேலேயிருப்பதுமான பகுதியிலே இரும்புச் சங்கிலிகளால் தாழவிடப்பெற்ற உரியொன்று தொங்கும். குழியினைப் பருத்த புளியங்கட்டைகளால் நிரப்பி, அதன் நடுவிடத்தே ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பரையை வைத்து, அதனுள் அரக்கு, மெழுகு, குங்குலியம் போன்றவைகளை இடவேண்டும். கட்டைக்கு நெருப்பிட்டு, அந்த எண்ணெய்க் கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கும் பருவத்திலே, போட்டி விடுபவர் அந்த உரியிற் சென்று அமர்ந்து கொள்வார். நயமான எஃகினாலே அடித்ததும், கூர்மையாகச் சமைத்ததும், பளபளவென்று தீட்டப்பெற்றதுமான எட்டுக் கத்திகளைச் சங்கிலியிற் கோர்த்து, அப்படி உரியிலிருப்பவர் தம் கழுத்தில் நான்கும், இடையில் நான்குமாகக் கட்டிக் கொள்வார்.

            குழியின் நான்கு முனைகளிலும் நாற்றியிருக்கிற தூண்களருகே நான்கு யானைகளை நிறுத்தி, அந்தக் கத்திகளிற் கோர்த்த சங்கிலிகளை அவற்றின் துதிக்கைகளினாற் பற்றியிருக்கும் படியும் செய்யவேண்டும். இந்த நிலையிலே, உரியிலிருப்பவர், கொடுக்கப்பெறும் குறிப்புகளின்படி எல்லாம் அரை நொடி அளவிற்குள்ளாக ஏற்ற செய்யுட்களைச் சொல்லி வருவார். அச் செய்யுட்கள் பிழைபட்டாலோ, அன்றி அவர் செய்யுளே கூறத் தவறினாலோ, யானைகள் பற்றியிருக்கும் சங்கிலிகளை இழுக்க கழுத்தும் இடையும் துண்டிக்கப்பட்டு, அவர் உடல் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரையுள் வீழ்த்தப்படும். இதுவே எமகண்டம் பாடுவது என்பது. இதனை நீர் செய்வதற்கு வல்லீரோ?” என்றனர் காளமேகம்.


வென்ற கவிஞர்

            அதிமதுரத்திற்கு அதனைக் கேட்டதும் நடுக்கம் எடுத்தது. அத்தகைய போட்டியை நினைக்கவே அச்சம் எழுந்தது. காளமேகத்தையே அதனிடத்து ஈடுபடுத்திவிட நினைத்தார். “எம்மைப் பாடுவீரா? எனக் கேட்கும் நீர்தாம் அங்ஙனம் பாட வல்லீரோ?” என்றார். காளமேகம் அதற்கு இசையவே, திருமலைராயன் போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லாம் விரைவாகச் செய்தான். போட்டி பற்றிய செய்தி நாற்றிசையும் பரவிற்று.

திருமலைராயன் பட்டினத்தே நிகழும் அந்த வைபவத்தைக் கண்டு களிப்பதற்கெனப் பெரியதொரு புலவர் கூட்டமும் வந்து திரண்டது. போட்டியும் தொடங்கிற்று. அதிமதுரமும் அவரைச் சேர்ந்த தண்டிகைப் புலவர்கள் அறுபத்து நால்வரும் பற்பல குறிப்புகளைக் கொடுத்தனர். அவற்றுக்கு எல்லாம் ஏற்ற செய்யுட்களைச் சொல்லியபடி கம்பீரமாக வீற்றிருந்தார் காளமேகம், போட்டியில் அவர் வெற்றிபெற்றார் என்றும் அறிவித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற பின்னரும், அவரைப் போற்றி உபசரியாது அலட்சியப்படுத்தினான் திருமலைராயன். தன் அவைப் புலவர்களை அவர் அவமானப் படுத்திவிட்டார் என்ற நினைவே அவன்பால் நிரம்பி நின்றது. காளமேசும் அரசனின் செயலைக்கண்டு மனங்குமுறினார், இவர் கவிதையுள்ளம் கனலும் உள்ளமாயிற்று. அவ்வூர் அப்படியே அழியுமாறு வசை பாடினார். தாம் விரும்பிவந்த முத்துக்களையும் மறந்து வெளியேறினார். பல இடங்கட்கும் சென்று மீண்டும் திருவாரூர் வந்து தியாகராசப் பெருமானை வழிபடுபவராகச் சில நாட்கள் அவ்விடத்தே தங்கியிருந்தார்.

மண்தின்ற பாணம்

            அப்படித் தங்கியிருந்த நாளிலே, அதிமதுரக் கவிராயரும் திருவாரூர்ப் பெருமாளைத் தரிசிக்க வந்திருந்தார். பெருமானைப் போற்றிச் செய்யுள் செய்ய நினைத்த அவர் ‘நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்,’ என்று தொடங்கி, மேலே முடிக்கும் வகையறியாதவராய் மதிற்சுவரில் எழுதிவிட்டுச் சென்றிருந்தார். பிற்றைநாள் வந்தவர், தம் செய்யுள் முடிக்கப் பெற்றிருந்ததைக் கண்டதும் வியந்து நின்றார். நானொன்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தாள் மண்தின்ற பாணமே-தாணுவே சீராரூர் மேவும் சிவனேநீ யெப்படியோ
 நேரார் புரமெரித்த நேர் என்ற அந்தச் செய்யுளின், ‘மண் தின்ற பாணம்’ என்ற வாசகம் அவரை அப்படியே மெய்ம்மறக்கச் செய்தது. அதனை எழுதியவர் காளமேகமே என்று அறிந்த அவர், அவர் புலமைச் செறிவை வியந்து உளமாறப் பாராட்டி உவந்தார். தாமும் பிற புலவர்களும் சேர்ந்து அவரை எதிர்த்து வாதிட்டதெல்லாம் அவர் நினைவில் அலையலையாக எழுந்தன, கவிராயரின் சாபத்தினாலே மண் மாரியுற்று அழிந்த திருமலைராயன் பட்டினத்தையும் நினைத்துக் கொண்டார். தம்முடைய தவறான போக்கே அதற்கெல்லாம் காரணமாயிற்று என நினைத்து வருந்தினார்.

            அவர் உள்ளத்தே காளமேகத்தின்பாற் கொண்டிருந்த பகைமையும் மறையலாயிற்று, புதியதொரு அன்பும் மதிப்பும் ஊற்றெடுக்க வாயிற்று. அவரைக் காண விரும்பி அவர் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்தார். ஆனால், அதற்குள் காளமேகம் புறப்பட்டு வேற்றூர் சென்று. விட்டதறித்தார், வருத்தமுடன் திரும்ப வேண்டியதாயிற்று. காலமும் சூழ்நிலையும் மனத்து எழுகின்ற ஆணவ நினைவுகளை எப்படியோ மாற்றிவிடுகின்றன. அந்த அதிசய சக்திகள், அதிமதுரத்தையும் காளமேகத்தைப் பாராட்டும் உயரிய நிலைக்குக்கொண்டு செலுத்தின.


மறைவும் துயரமும் பல


            திருவாரூரிலிருந்து புறப்பட்டார் காளமேகம். ஊர்களுக்கும் சென்று வழிபட்டவராகத் திருவாளைக்காவிளை முடிவிற்சென்று சேர்ந்தனர். அங்கே மோகனாங்கியிடம் நடந்ததைக் கூறினார். அவளும் முத்தினை மறந்து அவருடைய செயலைப் போற்றிப் புகழ்ந்தாள். இருவருடைய வாழ்வும் இப்படியே சிலகாலம் இன்பமுடன் நடந்து கொண்டிருந்தது. காளமேசுத்திற்கு வயதுமுதிர்ச்சியின் தளர்வும், சோர்வும் தொத்திக்கொள்ளத் தொடங்கின. சுவிமழை பொழிந்த காளமேகம், கவிச்சுவையால் கல்விவல்வோரையும் தலை வணங்கிப் போற்றச்செய்த புலவர்பெருமான், ‘வசை பாட காளமேகம்’என்ற இசையோடு வாழ்ந்த தமிழ் வீறு உடையார், ஒரு நாள் உடற்கூட்டைவிட்டு நீங்கினர். மோகனாங்கி மட்டும் அன்று கதறிக் கண்ணீர் சொறியவில்லை, அவருடைய மோகனக் கவி இனிமையிலே தினைத்த தமிழகம், தமிழ்ப் புலவர் உலகம். முழுவதுமே சுதறிக் கண்ணீர் பெருக்கியது.


அதிமதுரப் பாடல்

            அதிமதுரக் கவியின்காதுகளிலும் இந்தத் துயரச் செய்தி சென்று விழுந்தது. வேதனைக் கடலிலே சிக்கி அவர் மனம் மீளாத்துயருற்றது. அப்போது அவர் பாடிய கவிதை மிகவும் உருக்கமானது.

வாச வயல் நந்தி வரதா திசையனைத்தும்

பூசு கவிகாள மேகமே-பூசுரனே விண்தின்ற

வெவ்வழலில் வேகுதே பாவியேன் மண்தின்ற

பாணமென்ற வாய்.

            என்பது அந்தச் செய்யுள். ‘மண் தின்ற பாண மென்ற வாய்’ என்று சொல்லித் துயருற்றுப் புலம்பினார் அவர். இப்படித் தமிழ் நாவலர் சரிதையிலே விளங்குகிறது இந்தத் திருவாரூர் நிகழ்ச்சி. இது இரட்டையர்கட்கும் இவர்க்கும் நடைபெற்றதாகவும் சிலர் கூறுவர். 

 நன்றி –        புலியூர்க் கேசிகன்

உங்களை வித்தியாசப்படுத்துங்கள் | தன்னம்பிக்கை கட்டுரை

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

          இலக்கை கொண்டு வாழும் உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அதாவது குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று அவர்களிடம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை. நீர்நிலைகளில் பார்த்திருப்பீர்கள் நாணல் புல் உயரமாக நீரில் வளரும் ஒருவகை புல். அது எவ்வளவு புயலடித்தாலும்கூட அந்தக் காற்று அடிக்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும். ஆனால் உடையாது. காற்று சென்றவுடன் முன்பு போலவே எழுந்து நிற்கும். அதன் தண்டு உறுதியாக இருக்காது. அதே சமயம் மரங்கள் உறுதியான கிளைகளுடன் நன்றாக வேரூன்றி நிற்கும், பலமாகக் காற்றடித்தால் வளைந்து கொடுக்காது உடைந்து விடும். எனவே மனித வாழ்க்கையும் அப்படித்தான். உண்மையான நேர்மையானவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி, அதிகாரம், கொடுமை போன்றவை நடக்கும் இடத்தில் எதிர்த்து நில்லுங்கள். அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது உங்களின் தேசமல்லவா, இந்தத் தேசம் உங்கள் கண் முன்னே பணபலத்தாலும் பதவி அதிகாரத்தாலும் அமைதியை இழக்கலாமா! எதிர்மறையான செயல்பாடுகளைத் தேசத்தின் உள்ளே ஒருபோதும் நுழைய விடாதீர்கள்.

இது உங்கள் தேசம்

         இது உங்கள் தேசம். உங்கள் நாடு, உங்கள் ஊர், உங்களின் சுற்றத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களுக்கும் உங்களுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்களின் இலட்சியம் என்ன என்பதை மறவாதீர்கள்.

        நீங்கள் எத்தனையோ நபர்களிடம் பழகியிருப்பீர்கள். அவர்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம். இலட்சியமே அற்றவர்களாக தீயபழக்கங்களைக் கொண்டவர்களாக தீயன பேசுபவராகவும் இருக்கலாம். அவர்களின் பேச்சை, சிந்தனையை, செயல்பாடுகளை நீங்கள் அருகிருந்தும் பார்க்கலாம். ஆனால் அவர்களால் உங்களின் இலட்சியம் மாறக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் சுவாசமும் இலட்சியத்தையே சுவாசிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான தனல் உடல் முழுவதும் பரவி கனன்று கொண்டே இருக்க வேண்டும்.

இடற்பாடுகள் மனதை மாற்றக்கூடாது

      ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஆறு ஒன்று அழகாகச் சலனமே இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் வெளியில் செல்ல வேண்டும். ஒரு நாள் துறவி ஒருவர் அந்த ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கி நடக்கத் துவங்கினார். அப்போது ஒரு தேள் ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அது தன்னை காப்பாற்றுமாறு கத்தியது. துறவி சில நொடிகள் யோசித்தார், தேள் கூறியது நான் உங்களை கொட்டமாட்டேன். எனக்கு உதவுங்கள் என்று பதறியது. அந்தத் துறவி தேள்மீது அனுதாபம் கொண்டு தன் உள்ளங்கையில் அதனை ஏந்திக்கொண்டு நீரில் நடையை தொடர்ந்தார். தேளுக்கு நிம்மதி. அப்பாடா தப்பித்தோம்! பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டது. சிறிது தூரம் நடந்தார் துறவி, அவரின் கையில் தேள் கொட்டிவிட்டது. துறவி தேளைப்பார்த்தார் மீண்டும் நடந்தார், மீண்டும் தேள் கொட்டியது. துறவி ஆற்றின் மறுகரையை அடைவதற்குள் மீண்டும் கொட்டி விட்டது. துறவி அமைதியாகவே சென்று சேர்ந்தார். தேளை தரையில் விட்டார். அவ்வேளை அவரின் கையில் நஞ்சு ஏறிக்கொண்டே இருந்தது. தேள் கேட்டது “நான்தான் கொட்டி விட்டேனே மீண்டும் எதற்காக என்னை காப்பாற்றினிர்? என்று கேட்டது.

துறவியானவர் பதிலுக்கு மறுகேள்வி கேட்டார். என்னை கொட்ட மாட்டேன் என்று கூறிவிட்டு நீ ஏன் கொட்டினாய்” என்றார்.  “கொட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டது. துறவி கூறினார் “மற்றவர்களை கொட்டுவது உன்னுடைய இயல்பு. தமக்கு எது நடந்தாலும் தான்கொண்ட முடிவில் மாறாமல் இருப்பது என்னுடைய இயல்பு என்று கூறினார். எனவே தமக்கு வரும் துன்பங்களால் உங்களின் முடிவு மாறக்கூடாது.

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

      உலகில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள். எல்லோரிடமும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர் இப்படியும் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களில் இருந்து எந்த முறையால் செயல்பாட்டால் வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே உங்களின் குணத்தையோ இலக்கையோ மாற்றாமல் உறுதியாக செயல்படுங்கள்.

நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சரியாகச் செய்து அதாவது, உங்கள் மனதிற்கு திருப்தி வரும் அளவிற்கு கடமை ஆற்றியும் அது உங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அதற்காக வேதனைபடாதீர்கள். குறை பார்ப்பவரின் பார்வையிலும் மனத்திலும் இருக்கலாம். ஒருசெயல் சரியாகச் செய்யப்பட்டு அதுகுறை கூறப்படுகிறது என்றால் அது செயலில் அல்ல. கூறுபவர் மனதில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தவித குறையும் கூறக்கூடாது என்றும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல செயல்களைப் பாராட்டும் மனநிலையில் உள்ளவர்கள் இங்கு சிலரே ஆவர். கசப்பான எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் மனதில் நிரப்பிக்கொண்டு உலாவரும் மனிதர்களிடம் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது. குறைகூறுவதும் அவமானப்படுத்துவதும்தான் அவர்களிடம் வெளிபட முடியும். மாலை வேளையில் மலரும் மல்லிகையின் நறுமணத்தை குப்பைகளை நிரப்பி வைத்துள்ள இடத்தில் எதிர்பார்க்க கூடாது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

நீங்கள் செல்லும் பாதை அது அடைய வேண்டிய இலக்கு அதனால் உண்டாகும் சமூக நன்மை இவற்றில் உங்களை நிலை நிறுத்திக்கொண்டு பாடுபடுங்கள். வெற்றி உங்கள் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.

இந்த உலகில் நடக்கும் எந்த இயற்கை மாற்றமும் ஒரு நபரின் செயல்பாடுகளும் வசைகளும் உங்களை வந்தடைந்தாலும் நீங்கள் செல்லும் மார்க்கத்திலிருந்து மாறக்கூடாது.

யாருடையச் சொற்களும் எந்தச் செயல்பாடுகளும் உங்களின் மனநிலையை மாற்ற இயலவில்லை என்றால் நீங்கள்தான் உன்னதமானவர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

விருட்சத்தின் விதை – வெற்றி

விருச்சத்தின்-விதை-வெற்றி

விருட்சத்தின் விதை – வெற்றி

            மனித  வாழ்வில் நடக்கும் அனைத்து வகையான செயல்களுக்கும் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மனிதர்களில் பலர் சமுதாயத்தில் புலம்புவதைப் பார்க்கலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் மட்டுமே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றேன் என்று வேதனைபடுவார்கள். ஆனால் அந்த இடர்பாடுகளில் இருந்து, தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.

         இன்னல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர எதிர்நீச்சல் போட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். வெற்றி என்ற மரத்தின் விதை என்பது அவரவர் வாழ்வில் பட்ட அவமானங்களும் தோல்விகளும் துன்பங்களும் ஆகும். தீக்குச்சி பெட்டிக்குள் இருக்கும் வரை அமைதியாக இருக்கும். அதை வெளியே எடுத்து உரசிவிட்டோம் என்றால் அதன் சக்தியை அது காட்டி விடும்.

துன்பத்திலிருந்து மீட்டெடுங்கள்

     சமுதாயத்தில் அவமானப்பட்ட இழப்பாக இருக்கலாம். கொடுக்கப்பட்ட அநீதிகள் செய்யப்பட்ட அக்கிரமங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்று பலவற்றை உரமாக்கி வெற்றியின் விருட்சம் வளர்கிறது.

        நான் அறிந்த பெண் ஒருவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அங்கு கணவன் வீட்டில் தனக்கு அன்புதான் கிடைக்கும் என்று நினைத்தவளுக்கு அடிமைத்தனத்தைப் பரிசாக்கினார்கள். மணம் செய்து கொண்ட கணவனே நீயா? நானா? என்று போட்டிக்கு நிற்பது. மட்டம் தட்டி பேசுவது இவ்வாறு பல இன்னல்கள். அந்தச் சிறுவயதில் தான் படித்தே ஆகவேண்டும் என்று படித்தாள் அப்பெண். இதற்கிடையில் கருவுற்றிருந்தாள் அவள். இருப்பினும் வெறி கொண்டு படித்தாள்.  இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வது சரியாகும் என்று தெளிவாக முடிவெடுத்தாள். மாதங்கள் சென்றன பல அரசாங்க தேர்வுகளை எழுதுவாள். குழந்தை பிறக்கும் மாதமும் பிறந்தது. ஆனாலும் இப்பெண் ஓய்வெடுக்கவில்லை. அவள் எதிர்பார்த்த தேர்வும் வந்தது. அத்தேர்வுக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது குழந்தை பிறந்துவிட்டது. எனினும் அப்பெண் தேர்வு எழுத சென்று வெற்றியும் பெற்றார். அரசு அதிகாரியாகப் பணியில் அமர்த்தப்பட்டார். இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது. அப்பெண்பட்ட அவமானங்கள்தான் அவளின் மனதில் உள்ள வேகத்தையும் புத்தியில் உள்ள ஆற்றலையும் வெளிப்படுத்தியது. அவ்வாறில்லாமல் அவரின் கணவர் வீட்டில் நன்றாகக் கவனித்திருந்தால் அவர் அந்தச் சுகத்திலேயே சுகம் கொண்ட வாசனையில் மயங்கும் வண்டு போல இருந்திருப்பாரோ என்னவோ! அவரின் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்திருக்காது. அதனால் துன்பத்தில் இருக்கீறீர்கள் என்றால் அதிலிருந்து எழுந்துவர முயற்சிக்க வேண்டும் இதுதான் விதியென்று இருக்கலாகாது.

உங்கள் உரிமை உங்கள் கையில்

           சமூகத்தில் எத்தனையோ முதலாளிகள் மக்கள் பலரை தம்நிலத்தில் வேலை செய்பவரை ஆயுள் முடியும்வரை அடிமைகளாகவே வைத்திருப்பர். அவரிடம் அதிகமான உழைப்பைப் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியம் கொடுப்பது. அவர்களுக்குப் போதவில்லை என்றால் வட்டிக்கு கடன் கொடுப்பது. அந்தக் கடனை கட்டுவதற்குள் புதிதாகக் கடனை பெற்று விடுவார்கள். எனவே இறுதிவரை கடனை அடைக்கவே முடியாமல் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்துவிடுவர். இம்மாதிரியான மக்களுக்காகப் பாரதிதாசன் குரல் கொடுக்கிறார் “ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” என்று அடிமைத்தனத்திலிருந்து வருவதற்கு யோசனை கூறுகிறார். ஓடப்பர் என்பவர் உழைக்கும் மக்கள். அந்த உழைப்புக்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்று கேட்பது அவர்களின் உரிமை. எனவே அவர்களின் உரிமையை எதிர்த்து கேட்டால் உயரப்பராய் இருக்கும் முதலாளிகளுக்கு வேறுவழியே இல்லை. சமாதானத்திற்கு ஏழை மக்கள் கூறும் நிபந்தனைகளுக்கு வந்தே ஆகவேண்டும். எனவே தமக்கு சேரவேண்டிய ஊதியத்தைக்கூட  கேட்டுப்பெறவில்லை என்றால் யார்வந்து முன்நிற்பது? ஆதலால் அவரவர் உரிமை அவரவர் கையில் உள்ளது.

உழைத்தால்தான் மனிதன்

            மனிதர்களில் சிலர் மற்றவரின் உழைப்பை உறிஞ்சி உண்டு தன்உடலை பெருக்கிக்கொள்வார்கள். இவர்கள் மனித உருவில் பிறந்த அஃறிணை என்றே கூறலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள்தான் ஈட்ட வேண்டும். அதைவிடுத்து மற்றவர் உழைத்துச் சம்பாதித்த பொருளை தனதென்று சொந்தம் கொண்டாடி வாழ்வது என்ன வாழ்க்கை. இதில் என்பாட்டன் எனக்கு சம்பாதித்து வைத்துள்ளார் நான் உழைக்க வேண்டியதில்லை என்பார்கள். மனிதனாகப் பிறந்தவன் தனக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் என்று எல்லாவற்றையும் உழைப்பால் பெருக்கிக் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் பாடல் ஒன்று கூறுகிறது. அதாவது தலைவியானவள் தோழியிடம் கூறுகிறாள் பொருள் ஈட்ட சென்றுள்ள தலைவன் கூறுவதாக, “உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்” என்று கூறிச் சென்றுள்ளார் எனத் தலைவனை பெருமைப் படுத்துகிறாள் தலைவி. அதாவது முன்னோர்கள் சேர்த்து வைத்துச்சென்ற ஆஸ்தியை அழித்து உண்பவன் உயிருள்ள மனிதனாக்க் கருதப்படமாட்டான் என்று பொருள்படும். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவர் சேர்த்து வைத்த ஆஸ்தியை உழைக்காமலேயே இருந்து கொண்டு விற்று உண்பவன் பிணமாவான் என்று தெளிவாகச் சங்கப்பாடல் கூறுகிறது. உடலானது என்றாவது ஒருநாள் நெருப்புக்கு இறையாகிவிடும் இது உண்மை. அவ்வாறான உடலைக் கொண்டு உழைத்தால் என்ன? இவர்கள் நரகத்தில் இருக்க வேண்டியவர்கள் தவறிப்போய் மனிதனாகப் பிறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

இன்பமடைய துன்பப்படுங்கள்

        ஒரு கோவிலில் வயதான மூதாட்டி ஒருவர் தூய்மை செய்யும் பணியை ஏற்று அதை ஒரு சேவையாக செய்தாள். அவளுடன் அவர் பேத்தியும் இருந்தாள். பேத்தியும் தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள்.

இருவரும் கோவிலில் கொடுக்கும் அன்னதானத்தை உண்டு அங்கேயே வாசம் செய்தனர். இவ்வாறு சில வருடங்கள் சென்றன. அந்த மூதாட்டி படுக்கையில் இருந்து சில மாதங்களில் காலமானார். அந்த இருபது வயதான குமரிக்குத் திருமணம் நடந்தது. அவளுடைய கணவன் “நீ குப்பை பொறுக்கியவள்தானே” என்று சதா இழிவாகப் பேசி வந்தார். வருடங்கள் சில கடந்தன. இவளும் பொறுத்துப் பார்த்து இவனுடன் வாழ்வதற்குக் கோவிலில் குப்பை பொறுக்குவதே மேல் என்று புறப்பட்டுக் கோவிலுக்கு வந்துவிட்டாள். வந்தவள் கோவில் பொறுப்பாளரைப் பார்த்து உண்மையைக் கூறி தனக்கு வேலை கொடுக்குமாறு கேட்டாள். அவரும் அவளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வேலையும் கொடுத்தார். சில வருடங்கள் சென்றன. அந்தக் கோவில் நிர்வாகப் பொறுப்பு வேறு ஒருவர் கைக்கு மாறியது. அவர் பொறுப்பேற்றதும் சில நிபந்தனைகளை வைத்தார். கோவிலில் வேலை செய்பவர்கள் குறைந்தது எட்டாம் வகுப்பு தேரியிருக்க வேண்டும். அவர் வைத்த நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. இதை கேட்டதும் அந்தப்பெண்ணிற்கு தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சில நாட்களில் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டாள். வெளியே வந்தவள் சிறிது தூரம் நடந்தாள். வயிறு பசித்தது. இன்னும் சிறிதுதூரம் நடந்தாள் கண்கள் கலங்கி, அங்கு எட்டும் தூரத்திற்கு எந்த உணவகமும் இல்லை. என்ன செய்வது என்று ஒரு மரநிழலில் அமர்ந்து கொண்டாள். பின்னர் எழுந்து சிறிது தூரம் நடந்தாள் முடியவில்லை. அங்கு ஒரு பாறை தென்படவே அதன் மீது ஏறி சுற்றிலும் பார்வையிட்டாள் எங்கும் ஓட்டல் என்பது கிடையாது. இந்தக் கோவிலுக்குக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்தால் பசித்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தாள். அவளுக்கு அந்தப் பசியிலும் மனதில் ஒரு பொறி தட்டியது. நாம் இந்த இடத்தில் ஒரு தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்தால் என்ன? என்று சிந்தித்தாள். பணம் வேண்டுமே யாரிடம் கேட்பது. அப்போது பழைய கோவில் நிர்வாகி நினைவுக்கு வரவே அவரிடம் சென்று உதவி கேட்டாள். அவர் பாராட்டி உதவி செய்தார். ஒரே வாரத்தில் அங்கு ஒரு இட்லி கடை உருவாகிவிட்டது. ஒரே வருடத்தில் அது ஓட்டலாக மாறியது. அந்த உணவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அயராத உழைப்பால் அருகில் இருக்கும் ஊரிலும் இதன்கிளை ஒன்றும் துவக்கப்பட்டது. அம்மன் இட்லி கடை என்று துவக்கப்பட்டு அதுசில வருடங்களில் இரண்டு நான்கானது, நான்கு பத்தானது. ஓட்டல் முதலாளி ஆகிவிட்டாள் அந்த பெண்மணி.

         அந்த அளவிற்கு உயர்ந்ததுள்ள அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நீங்கள் இத்தனை ஓட்டல்களுக்கு முதலாளியாக உயர்ந்துள்ளீர். இன்னும் அதிகமாகப் படித்திருந்தால்? எங்கு சென்றீருப்பீர்கள்,  “அதிகமாகப் படித்திருந்தால் நான் கோவிலில் குப்பை பொறுக்கும் வேலையை சுத்தமாகச் செய்துகொண்டு இருந்திருப்பேன்” என்றார்.

      வரும் அவமானங்களும் துன்பங்களுமே வெற்றி விருட்சத்திற்கான விதை என்பதை உணருங்கள். ஒருவரின் வாழ்வில் நேரும் இடர்பாடுகளும் அவமானங்களும்தான் அவரை வெற்றிநிலைக்கு உந்தி தள்ளுகின்றன.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

இதயம் பேசுகிறது | சிறுகதை

இதயம்-பேசுகிறது

மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு நூலால் கட்டி கழுத்தில் மாட்டியிருந்தாள். கிழவியின் வெள்ளையாகிப்போன உதடுகள் இன்று தடித்தும் வறண்டுபோயும் இருந்தன. உடம்பெல்லாம் வியர்வால் நனைந்திருந்தது. மனசு படபடத்தது. சோர்வால் கால்கள் தழுதழுத்தன. சுருண்டு கீழே விழுந்தாள் ரெங்கநாயகி கிழவி. இதயம் பேசுகிறது | சிறுகதை

மக்கள் கூட்டமாய்க் கூடினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து டீ வாங்கிக்கொடுத்தார் ஒருவர். ஆவிப்பறக்க டீயை வாயில் வைத்து உறிஞ்சினாள். டீயின் சுவையை உணர்ந்தாலும் மனம் மட்டும் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“பாட்டிம்மா… எங்க போகனும்” என்றார் டீ வாங்கிக்கொடுத்தவர்.

தஞ்சாவூர்” என்று மெதுவாகக் கூறினாள்.

“இந்த நேரத்திற்குத் தஞ்சாவூர்க்கு நேரடியாகப் பேருந்து இல்லை. அதனால் பெரம்பலூர் சென்று அதன்பிறகு தஞ்சாவூர் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவரே பெரம்பலூர் பேருந்தில் ஏற்றியும் விடுகிறார். பேருந்து வேகமாய் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. ஜன்னல் சீட்டில் உட்காந்திருக்கும் ரெங்கநாயகி கிளவிக்கு மரங்களெல்லாம் பின்னால் செல்வது என்னவோபோல் இருந்தது.

“ஞா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணேன். ஒத்த பொம்பள குழந்தைய பெத்துப் போட்டுட்டு ஒரேடியா போயிட்டா. அதுக்கப்புறம் மருமவனும், குழந்தைய என்கிட்ட விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணமும் பண்ணிகிட்டான். ஜானகின்னு பெரு வச்சு நான்தான் வளத்தேன். நாலு மாட்ட வச்சிகிட்டு பேத்தியையும் படிக்க வச்சேன். அப்பப்ப மருமவனும் பாத்துட்டுப் போவும். அந்தக் குட்டிய வளர்க்கிறதுக்கு நான் பெரும்பாடு பட்டேன். அவ வயசுக்கு வந்தப்ப அப்படியே அவுங்க அம்மாவ உரிச்சு வைச்ச மாதிரி நின்னா. நான் அவள பாத்துட்டு அழுதிட்டேன். என்னோட பொண்ண உசிரோட பார்க்கிற மாதிரி இருந்தது”

பன்னிரண்டாவது படிச்சிட்டு இருந்தா. மத்த புள்ளைங்க மாதிரி அவளுக்கு பள்ளிக்கூடம் போறதுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். ஒருநாள் போனு வேணுமுன்னு கேட்டு அழுதா. அந்தக் குட்டியின் அழுகைய பார்க்க முடியாம காசு கொடுத்துப் போனு வாங்கிக்கச் சொன்னேன். அப்புறம் எப்ப பார்த்தாலும் போனையே நோண்டிகிட்டு இருப்பா. நானும் அந்த டப்பாவை தூக்கி போடும்பேன். நான் அவளோட நடவடிக்கைய பார்த்துப் பயப்பட்டேன்.  படிப்பு முடிஞ்சவுடனே, அவுங்க அப்பன்கிட்ட சொல்லி ஒரு கல்யாணத்த முடிச்சுப்புடனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசி பரீட்சை எழுத போன புள்ள, சாயுங்காலம் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்ல. நானும் இப்ப வந்துருவா அப்ப வந்திருவான்னு நினைச்சிட்டு, மாட்ட அவுத்து தண்ணீயெல்லாம் காட்டிட்டு இருந்தேன். மனசுக்குள் ஏதோ குத்தி தொளைக்கிற மாதிரி இருந்தது. இருட்டு ஆகிடுச்சு. ரெண்டு நாளாகியும் ஜானகிய கண்டுபிடிக்க முடியல. அப்பத்தான் மளிகைக்கடைக்கார கோபாலு,

“உங்க பேத்தியும் படிக்க வந்த தஞ்சாவூர்க்கார பையனும் ஒன்னா சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னுமோ அவன்தான் உங்க பேத்திய தஞ்சாவூர்க்கு கூட்டிட்டு ஓடியிருக்கனும்” என்றான்.

ரெங்கநாயகி கிழவியின் முகம் வேர்த்துக் கொட்டியது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது. பித்துப் பிடித்தது போன்று நினைவுகளை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தாள்.

“பாட்டிம்மா டிக்கெட் எடுங்க… எங்க போவுனும்…” கண்டக்கர் கேட்டார்.

       கிழவி தன்னுடைய இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் தேடினாள். கைகள் மட்டும் இடுப்பைத் தடவியதே தவிர சுருக்குப் பையைக் காணவில்லை. கண்களை உருட்டி சுற்றிலும் பார்த்துத் தேடினாள். சுருக்குப் பை ஆத்தூரில் மயங்கி விழும்போதே விழுந்து விட்டதே. இப்போது எப்படி கிடைக்கும். கிழவி விழிப்பதைப் பார்த்த கண்டக்டர்,

       “காசு இருக்கா இல்லையா…”

“இல்லை” என்று கிழவி தலையாட்டியவுடன்,

“ஏ.. கிழவி காசு இல்லாம எதுக்கு வண்டியில ஏர்ற.. இது என்ன உங்கொப்ப வீட்டு பஸ்ஸா..? டிரைவர் வண்டிய நிறுத்துப்பா… கிழவி நீ கீழ இறங்கிக்கோ…”

 கிழவி கீழே இறங்க எழுந்திருக்கப்போனாள். பக்கத்தில் உட்காந்திருந்த பெண் ஒருத்தி, “கண்டக்டர்,  பாட்டிக்குப் பெரம்பலூர் டிக்கெட் ஒன்னு கொடு” என்றாள். கிழவியும் அப்பெண்ணின் முகத்தைப் பார்த்தவாறே உட்காந்தாள். மீண்டும் ஜன்னல் வெளியே மரங்கள் பின்னால் நகர்ந்து கொண்டிருந்தன.

பேருந்து பெரம்பலூர் வந்து விட்டது. ரெங்கநாயகி கிழவி வண்டியிலிருந்து கீழே இறங்கினாள். கையில் நையா பைசா கூட இல்லை. எப்படி தஞ்சாவூர் போறது. வயித்த வேறு கிள்ளுது. சோத்தவிட பேத்தி ஜானகிதான் முக்கியம். தஞ்சாவூர் போயே ஆகனும். சோர்ந்து உட்காந்துவிட்டாள். காசு இல்ல. உடம்பும் வயிறும் ஒத்துழைக்கணும் இல்லையா? எப்படியெல்லாம் வாழ்ந்தவள் ரெங்கநாயகி. இன்று வேறுவழியில்லாமல் பிச்சையெடுக்க ஆரமித்து விட்டாள். சிலர் முறைத்தார்கள், ஏளனமாய் சிரித்தார்கள், இல்லை போ என்றார்கள், முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் ஏராளம். பாவமாய் பார்த்து இரக்கப்பட்டுச் சிலர் காசு போட்டார்கள். வடித்து வடித்துக் கொட்டியவள். வாடிவதங்கி பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாள். வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.

இரண்டு மூன்று நாளுக்குள்ளாகக் கையில் இருந்த காச வைத்துக்கொண்டு தஞ்சாவூர்க்குப் பேருந்தைப் பிடித்து விட்டாள். ஜானகியின் முகம் மட்டும் கிழவியின் உள்ளத்தில் ஆணி அடித்தார் போன்று பதிந்திருந்தது. எப்பாடுபட்டாவது ஜானகியை மீட்டு மருமவனின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தாள்.

“இந்தக் குட்டி ஏ இப்படி செஞ்சா.. நா அவளுக்கு என்ன குற வைச்சன். ஞா பொண்ணு மாதிரி நல்லதான பாத்துக்கிட்டன். அவுங்க அப்பங்காரன், எங்கடி ஞா பொண்ணுன்னு கேட்டா நான் எப்படி திருப்பி கொடுப்பேன். ஐயோ கடவுளே! என்ன சோதிக்கிறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா? ஞா குட்டிய என்கிட்ட திருப்பி கொடுத்துரு” பேருந்தில் அமர்ந்து கொண்டு மனதில் நினைப்பவையெல்லாம் வாய்விட்டு அடுத்தவர்கள் கேட்கும் அளவிற்குப் பேசிக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் கிழவியை ஒருமாதிரியாகவே பார்த்தார்கள்.

தஞ்சாவூர் பேருந்து நிலையம். எப்படியும் ஜானகிய கண்டுபிடிச்சே ஆகனும். கிழவியின் மனதில் வேறொன்றும் இருக்கவில்லை. தன்னோட குலதெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டாள். தஞ்சாவூர் நகரத்தெருக்களில் வெற்றுக்கால்களோடு நடக்க ஆரமித்தாள். ஒரு சந்தையும் விட்டுவிடவில்லை. யாராவது ஜானகி மாதிரி சின்னபொண்ணா போனாங்கன்னா, உடனே வேகமாய்ச் சென்று பின்னால் தொட்டு மூஞ்சைப் பார்ப்பாள். இதுபோல போவோரும் வருவோரையும் நிறையமுறை பார்த்து விட்டாள். ஜானகி மட்டும் அவள் கண்களில் தென்படவில்லை. கிழவிக்கு மனதில் உறுதி இருந்தது. ஜானகியை அவுங்க அப்பாவிடம் சேர்த்து விட முடியும் என்று நம்பினாள்.

“ஐயா… பன்னிரண்டாவது படிக்கிற சின்ன பொண்ணு. ஒல்லியா செவப்பா இருப்பா. வலதுபக்கம் உதட்டுக்கு மேல சின்னதா ஒரு மச்சம் இருக்கும். நேர்வாக்கு எடுத்து தலவாரியிருப்பா.. ஞா பேத்தி ஐயா.. தஞ்சாவூர்க்கார பையனோட ஓடி வந்துட்டாளாம். நீங்க பாத்திங்களா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” சாலையில் நின்றுகொண்டு கிட்டதட்ட பைத்தியக்காரி போல ஒவ்வொருத்தராய் நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏதாவது போட்டா இருக்குமா பாட்டி?” சாலையில் ஒருத்தர்.

“போட்டா… இருந்ததுப்பா.. ஆனா.. சுருக்குப் பை தொலைஞ்சிருச்சி” என்றாள் கிழவி. ஒவ்வொரு வார்த்தையும் யோசனை பண்ணி பண்ணி சொன்னாள்.

“போன் நம்பர் ஏதாவது தெரியுமா?”

“அந்தக் குட்டிக்கிட்ட போனு இருக்கு. ஆனா நம்பர் தெரியாதே!”

நின்று கொண்டிருந்தவர் கிளம்ப தயாரானார். கிழவியும் அவரின் பின்னாலயே சென்றாள். தன்னிடம் விசாரித்ததால் நம்பிக்கை கொண்டாள் கிழவி. ஆனார் அவர் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி சென்று விடுகிறார். கிழவிக்கு ஆதரவாகப் பேசியவர். அந்தத் தம்பியைப் பிடித்தால் ஜானகியைக் கண்டுபிடிக்க உதவி செய்வார் என்று நினைத்தாள். அதனால் பேருந்து பின்னாலயே ஓடினாள். வேகமாக ஓடியதால் மூச்சு இரைத்தது. அப்படியே நின்று விட்டாள்.

“ஏ ஜானகி குட்டி எங்கடி இருக்க. நான் உன்ன எங்கடி தேடுவ.. எங்கிட்ட வாடி.. நான் பெத்த மொவளுக்கு மொவளே!  என்ன இப்படி பொலம்ப விட்டுட்டியேடி.. சிறுக்கி மொவளே! அடியே குட்டி…” சாலையில் நின்றுகொண்டு அழ ஆரம்மித்தாள்.

ரொம்ப தூரம் நடந்து வந்தததால் ரெங்கநாயகி கிழவிக்குத் தான் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்றுகூட தெரியவில்லை. அந்தச் சாலையில் கிழக்கும் மேற்குமாய் இருபுறங்களிலும் பேருந்துகளும் லாரிகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும் சைக்கிளில் செல்வோரும் கடந்துக்கொண்டிருந்தன. நடந்து செல்வோர் இங்கிட்டும் அங்கிட்டுமாய் போய்க்கொண்டிருந்தார்கள். 

“எல்லோரும் போறாங்க வராங்க இந்தக் கூட்டத்துல ஞா பேத்தி எங்க இருக்கான்னு தெரியலையே? அடியே குட்டி… எங்கடி இருக்க நீ” வேகமாகவே கத்தினாள் கிழவி.

இப்போது கிழவியின் கண்களுக்குத் தூரத்தில் ஜானகி மாதிரி ஒரு பெண் தெரிந்தாள். உடனடியாகச் சாலையைக் கடக்க முயன்றாள். அந்நேரத்தில் வேகமாகவும் நேராகவும் வந்த ஒரு வண்டி கிழவியின் மெல் மோதியது. தலை தரையில் விழுந்தது. தார்ச்சாலையில் இரத்தம் வழிந்தோடியது. கிழவியின் கண்கள் மட்டும் விழித்திருந்தது. கிழவியைச் சுற்றிக் கூட்டம் கூடினார்கள். விபத்து நேர்ந்த வண்டியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ஜானகி. கூட்டத்தினுள் நுழைந்து அடிபட்டது யாருக்கு என்று பார்த்தாள். ஜானகிக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.

“பாட்டி நீயா… இங்க எப்படி வந்த…” கத்தினாள் ஜானகி. ரெங்கநாயகி கிழவியின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். கிழவியின் கண்கள் ஜானகியை உற்று நோக்கின. அவளின் கண்களைப் பார்த்தப்படியே மெல்ல மூடினாள் கிழவி. ஜானகியின் மடியெல்லாம் இரத்தம். சத்தம் போட்டுக் கத்தினாள்.

“உனக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னுதானே ஓடியாந்தன். பெத்துப்போட்டுட்டு எங்க அம்மாக்காரியும் போயிட்டா… எங்கப்பங்காரனும் இன்னொருத்திய தேடிட்டு போயிட்டான். வயசாயியும் நீதான என்ன கண்ணும் கருத்துமா வளத்த.. கொஞ்சநாள்ள உன்ன ஞா கூட கூட்டிட்டுப் போயிடலாமுன்னு நினைச்சேனே… ஐயோ கிழவி ஞா ஊர்லய வந்து செத்தப்போவ… இந்தப் பழிய நா காலம் பூரா சுமந்துட்டு திரியனுமா… குருட்டு கிழவி… எழுந்திருடி…” என்று கிழவியின் கன்னத்தில் ரெண்டு அறை விட்டாள். உடலை குழுக்கினாள்.

“என்ன பெத்த கிழவி… எழுந்திருச்சி வாடி… ” கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் மல்க வானத்தை நோக்கி இரு கைகளையும் நீட்டி ஒப்பாரி வைத்தாள் ஜானகி. அங்கு கூடியிருந்தவர்களின் அனைத்து கண்களும் குளமாயின.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

 

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

           இக்காலத் திறனாய்வாளர் இலக்கியத்திற்குரிய உணர்ச்சிகளைப் பற்றிப் பலவாறு ஆராய்ந்து வருகின்றனர். அச்சம், அவலம், நடுக்கம், இரக்கம், காதல், வீரம் எனப் பலவாறாக இலக்கிய உணர்ச்சிகளைப் பிரித்து அறிகின்றனர். தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் மிகப் பழங்காலத்திலேயே தொல்காப்பியர் மனித மனத்தில் தோன்றும் முக்கிய உணர்ச்சிகளை எண் வகையாகக் கண்டறிந்து அவை புறத்தே புலனாகும் வண்ணங்களை விளக்கி உள்ளார். உணர்ச்சிகள் பற்றி அவர் கூறுவன இடம் பற்றியும், காலம் பற்றியும் எழும் பல்வேறு வகையான இலக்கியங்களுக்கும் பொருந்தி வருவனவாக உள்ளன. அவர் கூறும் எண்வகை உணர்ச்சிகளுள் மனிதனின் உணர்ச்சிகள் அனைத்தும் அடங்கும் எனலாம். தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்.


            உணர்ச்சியினைத் தொல்காப்பியர் மெய்ப்பாடு என்று குறிக்கின்றார். மெய்ப்பாடாவது மற்றவர்க்குப் புலனாகும் வண்ணம் மெய்யின் கண் (உடம்பின் கண்) வெளிப்படுவதாகும். இளம்பூரணர், ‘மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடு ஆயிற்று என்பார். ‘ அஃதாவது அச்சம், வெகுளி போன்ற உணர்வுகள் உள்ளத்தின்கண் முதற்கண் தோன்றிப் பின் காண்போர்க்குத் தெரியும் வண்ணம் மெய்யின்கண் படுதலாகும். செய்யுள் செய்யும்போது சுவைபடச் செய்வதற்கு இம்மெய்ப்பாடுகள் இன்றியமையாதன என்பது முன்னையோர் கருத்தாகும்.

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

            இனி, தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் காண்போம்.


நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

(மெய்ப்பாட்டியல்.3)

அஃதாவது நகை, அழுகை, இழிப்பு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என மெய்ப்பாடு என் வகைப்படும். செயிற்றியனார் என்பார்,


“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே”


என்று கூறியிருப்பதும் ஈண்டு உணரத்தக்கது.

எட்டு வகையான உணர்ச்சிகள்

            எண்வகை உணர்ச்சிகளை எடுத்துக்காட்டிய தொல்காப்பியர் ஒவ்வொரு மெய்ப்பாடும் இன்னின்ன காரணங்களால் எழுவன என்பதையும் விளக்கிச் சொல்லியுள்ளார். இன்றைய திறனாய்வுத் துறையில் நுழைவோர் தொல்காப்பியரின் செய்திகளை அறிந்து கொள்வது பயன் மிக்கதாகும்.
தொல்காப்பியர் கருத்துப்படி,

♣ நகை என்பது எள்ளல், இளமை பேதைமை, மடைமை ஆகியவை காரணமாக எழும்

♣ அழுகை என்பது பிறர் தன்னை எளியன் ஆக்கு தலாகிய இழிவு, இழவு, தளர்ச்சியாகிய அசைவு, வறுமை ஆகியவை ஏதுவாகப்பிறக்கும்.

♣ இளிவரல் என்பது மூப்பு, பிணி, வருத்தம், நல்குரவாகிய மென்மை ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣மருட்கை என்பது புதுமை பெருமை (பெருத்தல்), சிறுமை (மிகவும் நுண்ணியவாம்தன்மை). ஒன்றன் பரிணாமமாகிய ஆக்கம் ஆகியவை காரணமாகப் பிறக்கும்

♣ அச்சமாகிய மெய்ப்பாடு, அணங்கு (தெய்வம்), விலங்கு, கள்வர், இறை (ஆசான், தந்தை) ஏதுவாகப் பிறக்கும்.

♣ பெருமிதமாகிய மெய்ப்பாடு, கல்வி, தறுகண்மை (வீரம்) புகழ், கொடை ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

♣வெகுளி என்பது உறுப்பறை (அங்கமாயினவற்றை அறுத்தல்), குடிகோள் (கீழ்வாழ்வாரை நலிதல்), அலை (அலைத்தல் வைதலும் புடைத்தலும்), கொலை புலன் (ஐம்புல நுகர்ச்சி) மகளிரொடு புணர்தல், விளையாட்டு ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣ உவகையாவது. செல்வம், ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

மேற்கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளோடு வேறு வகையான பல மெய்ப்பாடுகளையும் தொல்காப்பியர் குறித்துக் காட்டுகின்றார்.

அவையாவன:

உடைமை: ஒரு பொருளுக்கு உடைமை கொண்டதால் நிகழும் மன நிகழ்ச்சி.

இன்புறல்: நண்பராகிப் பிரிந்து மீண்டும் வந்தோரைக் கண்ட வழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது.

நடு நிலைமை: சமன்செய்து சீர்தூக்கும் கோல் போலமைவது.

அருள்: எல்லா உயிரிடத்தும் அன்பு செய்தல்.

தன்மை: சாதி இயல்பு.

அடக்கம்: மனமொழி மெய்களால் அடங்குதல்.

வரைவு: செய்யத் தக்கனவும், நீக்கத் தக்கனவும் அறிந்து ஒழுகும் ஒழுக்கம்.

அன்பு: பழகுவாரிடம் செல்லும் ஒருவகைப் பற்று.

கைம்மிகல் :  குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல்

நலிதல்: பிறரை நெருக்குதல்.

சூழ்ச்சி: எண்ணங் காரணமாக நிகழும் நிகழ்ச்சி.

வாழ்த்தல் :  பிறரை வாழ்த்துதல்

நாணல்: தமக்குப் பழியாய் வருவனவற்றைச் செய்யாமை

துஞ்சல்: உறக்கம்

அரற்று :  உறக்கத்தின் கண் வரும் வாய்ச்சோர்வு.

கனவு :  நனவு போல ஒன்றைக் காண்பது.

முனிதல் :  வெறுத்தல்

நினைத்தல்: கழிந்ததனை நினைத்தல்.

வெரூஉதல்: அச்சம் போல நீண்ட நேரம் நில்லாது திடீரென்று தோன்றி மறைவதோர் குறிப்பு. இதனைத் ‘துணுக்கு” என்பர்.

மடி: சோம்புதல்.

கருதல்: மனத்தால் ஒன்றைக் குறித்தல்.

ஆராய்ச்சி :  ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மையது என ஆராய்தல்.

விரைவு: ஒன்றைச் செய்ய நினைத்து அது நிறைவேறக் காலத்தாழ்வு நேரின் அதன் பயனை எய்யா நிலையில் விரைந்து முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி.

உயிர்ப்பு: முன்புவிடும் அளவு இன்றி மூச்சினை நீளவிடுதல்.

கையாறு: காதலர் பிரிந்தால் வரும் துன்பம் போல்வது.

இடுக்கண்: துன்பமுறுதல்.

பொச்சாப்பு: மறத்தல்

பொறாமை: பிறர்க்கு ஆக்கம் முதலாயின உண்டாகும்போது அதனைப் பொறுக்காமையினால் நடக்கும் மன  நிகழ்ச்சி.

வியர்த்தல்: தன் மனத்தில் சினம் தோன்றும் போது பிறப்பதோர் புழுக்கம்

ஐயம்: ஒரு பொருளைக் கண்டபோது இன்னது எனத் துணியாத நிலைமை.

மிகை: ஒருவனை நல்ல வண்ணம் மதிக்காமை.

நடுக்கம்: ஏதேனும் ஒரு பொருளை இழக்கின்றோம் என எண்ணுவதால் நடக்கும் மன நிகழ்ச்சி

            மேற்கூறிய மெய்ப்பாடுகள் பலவும் மாந்தரின் உண்மை வாழ்க்கையில் பெரும்பாலும் நிகழ்வனவாகும். மனித வாழ்க்கை பற்றி வரும் இலக்கியத்திலும் அம் மனிதரின் உணர்வுகள் இடம் பெறக்கூடும். ஆதலின், தொல்காப்பியர் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளாகவே கொள்ளலாம். இன்றைய இலக்கியத் திறனாய்வில் இன்னமும் விளக்கப்படாமல் இருக்கும் சில உணர்ச்சிகளும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாட்டியலில் உள்ளனவாதலின் இம் மெய்ப்பாட்டியல் திறனாய்வுத் துறையில் மேன் மேலும் ஆராய வேண்டிய ஒன்றாகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் வாயிலாக உணர்த்தும் உணர்ச்சிகள் அனைத்தும் இலக்கிய உணர்ச்சிகளே.

இலக்கிய உணர்ச்சிகளை மதிப்பிடுதல்

            ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறக் கூடும் உணர்ச்சிகளுக்கு முதற்காரணமாக விளங்குபவர் அவ்வகை இலக்கியப் படைப்பாளரே ஆவர். படைப் பாளரின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்து வெளிப்படும் அளவில் படைப்பாளர் முதற்காரணமாக விளங்குகின்றார். படைப்பாளரின் உணர்ச்சியானது கலை வடிவம் பெற்ற பிறகு அவ்வுணர்ச்சிக்கு மீண்டும் ஆளாவது பயில்வோரின் மனமே ஆகும்.

            படைப்பவரின் மனம் உணர்ந்து வெளியிட்டது போலவே பயில்வோரின் மனமும் உணர்ந்து பயன்பெறுமாயின் இலக்கிய வகை வெற்றி பெற்றது எனக் கொள்ளலாம். எனவே, படைப்பவருக்கும் பயில்பவர்க்கும் இடையே உள்ள கலைஉலக ஓர் இலக்கிய வகையில் இடம் பெறும் உணர்ச்சிகளானவை வெற்றிடத்தை நிறைவு செய்யும் ஒரு கருவி எனலாம். கலை வடிவாக விளங்கும் உணர்ச்சியானது பயில்வோரை எந்த அளவுக்கு ஈர்த்து இசைவித்து இயக்குகின்றதோ அந்த அளவுக்கு இலக்கியப் படைப்பில் உணர்ந்து உணர்த்தும் உணர்ச்சிகளைப் பொதுவாக சில நெறிமுறைகளைக் கொண்டு ஆற்றலுடன் விளங்குவதாகக் கொள்ளலாம். படைப்பாளர் தம் மதிப்பிட முடியும்.

            இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சியாவது, படைப்பாளரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து எழுத்தாய் வழிந்தோடிக் கலைவடிவம் பெற்றவுடன் அழகுருவம் பெற்றுப் பயில்வோரின் உள்ளத்தே பற்றிப் படர்ந்து மீண்டும் செயற்படும் ஒன்று எனலாம். கலை உருவம் மலர்வதற்கு எந்த உணர்ச்சி காரணமாக இருந்ததோ அந்த உணர்ச்சியே பயில்வோரின் கலை அனுபவத்திற்கும் காரணமாகின்றது. உணர்ச்சியின் இயல்பும் தரமும் கூடக்கூட அஃது இடம்பெறும் இலக்கியத்தின் சிறப்பும் கூடுகின்றது. அவ்வாறாயின் இலக்கியத்தில் வரும் உணர்ச்சிகளுக்கென்று அமைந்த இயல்பும் தரமும் யாவை என அறிதல் வேண்டும் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட ஒரு முறையில் உருவாகித் தோன்றும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியானது அக்குறிப்பிட்ட சூழ்நிலையோடு அக்குறிப்பிட்ட முறையில் மிகப் பொருத்தமாகவும் மிக இயற்கையாகவும் இலக்கியப் படைப்பில் வெளிப்படுவதே அவ்வுணர்ச்சியின் இயல்புக்கு உரிய அளவுகோல் எனலாம்.

            மனித உள்ளங்கள் அனைத்துக்கும் பொதுவாய் இருப்பதும்; இடவேறுபாடு. காலவேறுபாடு ஆகியவற்றைக் கடந்து மனித உள்ளத்தை இளகச் செய்து இயக்க வல்லதாய் இருப்பதும் இலக்கிய உணர்ச்சியின் தரத்திற்குரிய அளவுகோல் எனலாம். உணர்ச்சி நன்றாக உள்ளது என்பதற்கு அடையாளம் பயில்வோரின் கவனத்தை ஆழமாக ஈர்ப்பதே ஆகும். ஆழமாக ஈர்ப்பதோடு முருகியல் சுவையோடும் கலந்து வருமாயின் மிக்க பயன் விளைகின்றது. உணர்வைப் பெருக்கி உள்ளத்தை ஈர்ப்பதோடு பண்பால் உயர்த்தவும் செய்யுமாயின் அவ்வுணர்ச்சி தலையாய உணர்ச்சி எனலாம். இந்நிலையில் கலைப்படைப்பில் ஈடுபடும் நாம் உணர்வால் நெகிழ்ந்து உள்ளத்தால் உயருகின்றோம்.

            கவிதையாயினும் நாடகமாயினும் காவியமாயினும் புதினமாயினும் மேற்கூறிய தலையாய உணர்ச்சிகளோடு விளங்கும்போது மனித சமுதாயம் கலையால் பண்பட்டு உயருகின்றது. இப்பண்பாட்டை உருவாக்கவல்ல உணர்ச்சிகளை நல்ல தரமான உணர்ச்சிகள் எனலாம். இலக்கியத்தில் இடம் பெறும் நல்ல உணர்ச்சி என்பது படைப்பாளரின் கலையாக்கத் திறனுக்கு ஒரு முத்திரையாய், ஒரு நல்ல அடையாளமாய் விளங்குகின்றது. எனவே, உணர்ச்சிப் பகுதிகள் மிகுதியாக வரும் இலக்கியமானது வெற்றி பெறுவது அதன் ஆசிரியர் அவ்வுணர்ச்சிகளின் இயல்பையும் தரத்தையும் நன்கு அறிந்து கலையாக வடித்தெடுக்கும் ஆற்றலைப் பொருத்ததாகும்.

            வின்செஸ்டர் என்பார் பின்வரும் ஐவகை உணர்ச்சிகளை உடைய இலக்கியம் நெடிது வாழும் எனக் குறிக்கின்றார்:

1. நியாயமான, தக்க உணர்ச்சி; நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.

2. ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.

3.தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உணர்ச்சி; பொருந்தாததும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி கொண்டு வரப்படாமல் இயல்பாக அமைவது

4 வாழ்க்கையின் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் அமைதல்,

5, மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய், நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்

            இலக்கியத்தில் பலப்பல வகையான உணர்ச்சிகள் இடம் பெறலாம்; எனினும் அவற்றுள் சிலவே படைப்பாளர் பலராலும் விரும்பிக்காட்டப் படுவனவாகவும் பயில்வோரால் விரும்பிப் பயிலப்படுவனவாகவும் உள்ளன. அச்சம், நடுக்கம், காதல், இரக்கம் ஆகிய உணர்ச்சிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகள் குறித்து டாக்டர் மு.வரதராசனார் கூறுவது ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

            ‘இலக்கியத்தில் பலவகையான உணர்ச்சிகளும் இடம் பெறுகின்றன. எனினும், மகிழ்ச்சி. வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றைவிட, அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளை உடைய இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது. சேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களை விடத் துன்பியல் நாடகங்கள் மிகப் போற்றப்படுகின்றன. நாடக மேடையில் இன்பக் காட்சிகளைவிடத் துன்பக் காட்சிகளைக் காணும்போது, மக்கள் உள்ளம் ஒன்றியவராய் உள்ளனர். காரணம் என்ன? கலைஞரின் உள்ளம், அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அவர்கள் படைக்கும் கலைகளிலும் அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையனவாக அமைகின்றன. ஆகவே, கலையை நுகரும் மக்களும் அவற்றில் ஆழ்ந்து ஒன்றிவிடுகின்றனர்.

            உணர்ச்சிகளுள் எந்த ஓர் உணர்ச்சியைக் கலைஞர் தம் படைப்பில் அமைத்துக் காட்டினாலும் அவ்வுணர்ச்சியின் இயல்பும் தரமும் நன்கு அமைந்து பயில்வோரின் உணர்வுக்கு நல்ல கலைவிருந்தாய் அமைவது இன்றியமையாதது இங்ஙனம் அமைவதற்கு அடிப்படையாக, படைப்பாளர் முதற்கண் அதன்கண்ட ஆழத்தோய்ந்து நீடுநினைந்து கலைக்குரிய கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்துதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தூண்டுதலால் எழுத்தாளரின் உணர்ச்சி தட்டி எழுப்பப்படினும் அவர் அவ்வுணர்ச்சிக்கு ஆளாவது போலவே நல்ல வடிவத்தோடு அதனை வெளிப்படுத்தக் கூடிய மன நிலையோடு கட்டுப் படுத்தவும் வேண்டும்.

            அப்போதுதான் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி தம் உள்ளத்தே ஆழப்பதிந்து தாக்கும்போது அத்தாக்குதலால் தான் சிதறுண்டு போகாமல் ஒருமுகப்பட்டு நின்று நல்ல வடிவம் தந்து படைத்துக்காட்ட முடியும். இந்தக் கலை வித்தகம் எழுத்தாளனிடம் அமைந்திருப்பதால்தான், பாட்டிற்கு ஓர் ஒலி நயமும் காவியத்திற்கு ஓர் இயைபும் நாடகத்திற்கு நல்ல ஒருமைப்பாடும் புதினத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கமும் சிறுகதைக்கு ஒருமுக இயல்பும் அமைய முடிகின்றது. இல்லையேல் இவற்றில் அமையக்கூடும் அறிவுக் கூறும் உணர்ச்சிக் கூறும் ஒன்றோடொன்று முட்டி மோதி முரண்பட்டு நின்று கலையின் கட்டுக்கோப்பைக் குலைத்துவிடும். வோர்ஸ் வொர்த்து என்பார் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இயற்கையாக எழுந்து கரை புரண்டோடும் ஆற்றல்சால் உணர்வுகளை அமைதி நிலையில் மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்து வெளிப்படுத்துவதே கவிதை” என்று கூறியது ஈண்டுச் சிந்தனைக்கு உரியதாகும்.

            கவிதை, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகள் பலவற்றுள் வரும் உணர்ச்சிகளைப் பொதுவாக இரண்டாகப் பகுக்கலாம். ஒருவகை: இலக்கியக் கலைஞன் தான் உணர்ந்த உணர்ச்சிகளாகவே வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றொரு இலக்கியக் கலைஞன் தான் படைத்துக்காட்டும் கதை வகை மாந்தரின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகள். இவை இரண்டுக்கும் படைப்பாளனின் கலைமனமே ஊற்றுக்களம் எனினும் அவன் எடுத்துக் கொள்ளும் இலக்கிய வகையின் அமைப்பிற்கேற்ப, தான் கலந்தும் கலவாதும் இருக்கின்றான். ஆதலின் உணர்ச்சிகளை மேற்கூறிய வண்ணம் இரண்டு விதமாகப் பிரிக்க முடிகின்றது. இனி இரண்டு சான்றுகளைக் காணலாம்.

காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறியபோதெல்லாம் பயந்தேன்

ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்

கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்.

வீணுறு கொடியர் கையினில் வாளை விதிர்த்தல் கண்(டு) என்என  வெருண்டேன்.

(ஆறாந்திருமுறை, பிள்ளைப் பெரு விண்ணப்பம்-60)


            இப்பாட்டு அருட் பிரகாச வள்ளலார் உயிர்கள் படுந்துன்பத்தைக் கண்டு இரங்கி வருந்திய நிலையில் தம் உணர்ச்சிகளாகவே பாடிய பாட்டாகும்.


நின்மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலமெல்லாம்

உன்வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன்

என் மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும்

நன்மகன் இந்தநாடு இறவாமை நய என்றான்.

(அயோத்தியா காண்டம், கைகேயிசூழ்வினைப் படலம்-36)


            பரதன் நாடாள இராமன் காடாள வேண்டும் என்று கைகேயி வரங் கேட்டவுடன் துணுக்கமுற்று வேதனையால் வெய்துயிர்த்துத் தன் மகன் நாடு கடந்து செல்லாதிருக்கவாவது உதவுமாறு அவளைக் கெஞ்சிக் கேட்கும் தயரதனின் உணர்ச்சிகளாகக் கம்பர் பாடியுள்ள பாட்டாகும் இது.

            மேற்கூறிய இரண்டு வகையில் அல்லாது மூன்றாவது முறையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறும் உணர்ச்சிப் பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உணர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றோ அல்லது ஒருவரோ அங்ஙனம் உட்பட்ட பிறகு அடையும் மெய்ப்பாடுகளை வருணனை முறையில் விரித்தோ விளக்கியோ இலக்கியக் கலைஞர் காட்டலாம். இவ்வாறு காட்டும் போதும் மாந்தரின் அல்லது மற்றவற்றின் உணர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தால்

தாங்கினள் மலர்க்கண் மிசை ஒற்றினள் தடந்தோள்

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ(டு)

ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே

சுந்தர காண்டம், உருக்காட்டு படலம், 66


            கணையாழியை அனுமன் இராகவன் கொடுத்தனுப்பிய சீதையிடத்தில் கொடுத்தவுடன் அவள் பெற்ற உள்ளத்து உவகையினைக் கம்பர் ஈண்டுச் சித்திரித்துக் காட்டுகின்றார். உணர்ச்சியால் நிகழும் செயல் முறை பற்றிய இத்தகைய ஓவியங்கள் வாயிலாகவும் நாம் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளைக் கண்டுகொள்ள முடிகிறது. சிறப்பாக, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகளில் கதை மாந்தரின் நடிப்பு அல்லது செயல் முறைகளை இலக்கியக் கலைஞர் தாமே விரித்துக் காட்டுவதின் வாயிலாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

            எல்லா வகை இலக்கியங்களிலும் உணர்ச்சிகள் இடம் பெறலாம். எனினும் காவியம் நாடகம் போன்றவற்றில், அவை இன்றியமையாதனவாகும் வயலுக்கு உரம்போலவும் பாட்டுக்குப் பண் போலவும், இலக்கியக் கலைஞனின் கருத்துக்கு வளமூட்டி வலிவும் பொலிவும் ஊட்டுவது உணர்ச்சியேயாகும். புதினம், நாடகம் போன்றவற்றில் கருத்துக்கும் இடம் உண்டு; உணர்ச்சிக்கும் நிறைய இடம் உண்டு. காரணம் அவற்றில் பெரும்பாலும் ஒருவரோ, இருவரோ இடம் பெறுவதில்லை; பல்வகைமாந்தரும் இடம் பெறுகின்றனர்.

            அதனால் பல்வகை நிகழ்ச்சிக்கும் செயல்களுக்கும் நிரம்ப வாய்ப்பு ஏற்படுகின்றது இந்நிகழ்ச்சிகளையும் செயல்களையும் கலை ஒருமைப்பாடு அமையுமாறு நடத்திச் செல்வதற்குக் காவியக் கலைஞர் அல்லது புதின எழுத்தாளர்க்கு நல்ல வளமான கற்பனை வேண்டும். எனவே பலவற்றையும் ஒன்றோடொன்று இயைபுற அமைத்துக் கலையின் கட்டுக்கோப்பு சிறிதும் சிதையாவண்ணம் படைத்துக் காட்டுவதாகிய கற்பனைக்கு மிகுதியான இடம் காவியம், புதினம் போன்றவற்றில் இருப்பதால் இவற்றைக் கற்பனை இலக்கியம் என்றும் சொல்லலாம். இக்கற்பனை இலக்கியங்களில் கதை மாந்தர் தத்தமக்கே உரிய வண்ணம் பலப்பல வகையாக அமைந்த வெவ்வேறு உள் நோக்கங்களாலும் உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டுச் செயல்படுகின்றனர்.

            அச்செயற்பாடுகளுக்கு ஏற்ற வண்ணம் நிகழ்ச்சிகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. சுருங்கக் கூறின், செயல் முறைகளுக்கு அடிப்படையாக அமையும் கதை மாந்தரின் உணர்ச்சிச் சிக்கல்கள்; கற்பனை இலக்கிய வகைகட்கு இன்றியமையாதனவாகும். படைக்கும் இலக்கியக் கலைஞர் தாம் படைத்துக் காட்டும் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அவரவர்க்கு உண்டாக வல்ல உணர்ச்சியின் தன்மையை நன்கு அறிந்து நல்ல தரத்தோடு கலை வடிவமாக வடித்தெடுத்துக் காட்ட வேண்டும்.

நன்றி

ஆசிரியர் : இலக்கியத்திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »