Monday, July 21, 2025
Home Blog Page 21

சிறுகதை என்றால் என்ன?

சிறுகதை

சிறுகதை என்றால் என்ன?

            சிறுகதை மிகப் பழமை சான்ற ஓர் இலக்கிய வகையாகும். இதன் வளர்ச்சிக்கு உரிய மூல ஊற்று. மாந்தரின் கதை கேட்கும் ஆர்வத்திலேயே முதலே கதை கேட்கும் இயல்பு இருந்திருக்கின்றது எனத் உள்ளது. மனித வரலாறு தொடங்கிய கால தெரிகின்றது. மனிதன் ஏன் கதையை விரும்பிக் கேட்கின்றான் என்பதும் ஒரு நல்ல வினா. இதற்குச் ‘சாமர் செட் மாம்’ என்பவர் விடை கூறுகின்றார். “உடைமை பற்றிய உணர்வு மனிதனிடத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருப்பது போலவே கதை கேட்கும் ஆர்வமும் மிக ஆழமாக வேரூன்றியிருக்கிறது. வரலாறு தொடங்கிய காலம் முதலே, ஒருவர் கதை சொல்வதைக் கேட்பதற்காகவே பலரும் நெருப்பைச் சுற்றிக் கூட்டமாக உட்காரும் பழக்கமோ அல்லது பொது இடத்தில் ஒன்றாக அமரும் பழக்கமோ, இருந்திருக்கின்றது. சிறுகதை என்றால் என்ன?

            வரலாற்றின்பழைமையோடுதொடர்புடையஇச் சிறுகதை ஒரு நல்ல கலையாக மிகுதியாக வளர்ந்தது பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் ஆகும். இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் 1800 ம் ஆண்டுக்குப் பிறகு படித்தவர் கூட்டம் பெருகவே அவர்களின் தேவைக்கேற்பப் பருவந்தோறும் வெளியிடப் பெற்ற எல்லா வகை இலக்கியங்களின் தேவையும் பெருகிற்று’என்பர் அறிஞர். நம் தமிழகத்திலும் இந் நூற்றாண்டின் தொடக்க முதல் இலட்சக் கணக்கான மக்கள் சிறுகதையை விரும்பிப் படிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது எனலாம்.


இக்கால இலக்கியங்களில் சிறுகதை பெறுமிடம்  

            இன்றைய இலக்கிய உலகில் சிறுகதைக்கென்றே ஒரு சிறப்பிடம் உள்ளது. நாகரிகம் முற்றிப் போக்குவரத்துக் கருவிகள் பெருகி மக்கள் மிக விரைந்து செயற்படும் இந்நாளில் பலருக்கும் படிப்பதற்கு வசதியாக உள்ள துறை சிறுகதையே ஆகும். இச் சிறுகதை எண்ணிக்கையிலும் வகையிலும் பலபடியாக வெளிவரும் இதழ்கள் பெரிதும் காரணமாக அமைகின்றன. ஒரு விரிந்து வளர்ந்து செல்வதற்கு நாடோறும் வாரந்தோறும் குறிப்பிட்ட இதழில் வெளியிடப் பெறும் சிறுகதையை அந்த இதழை எடுத்த மாத்திரத்திலேயே ஒரேவேகத்தில் படித்து .முடித்துவிடலாம்.

மற்றொன்று:


           
கருத்தாழம், நடைச்செறிவு முதலியன நிறைந்த விழுமிய பேரிலக்கியங்களை ஆழ ஊன்றி அமைதியாகப் படிப்பதற்குரிய பொறுமை பெரும்பாலோர்க்கு இன்று இல்லாமையும் சிறு கதையின் செல்வாக்குக்குக் காரணமாகின்றது. இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் போன்ற பண்பட்ட உயரிய இலக்கியங்களைக் கற்பதற்குரிய நேரமும் ஓய்வும் வசதியும் கல்வியும் இல்லாத இலட்சக்கணக்கான மக்கள் சிறுகதையைச் சிறிது நேரத்தில் படித்து முடித்துச் சிறியதொரு கலைப்பயனை விரைந்து பெற முடிகின்றது. எனவே, உயர்ந்த இறவாத பேரிலக்கியங் களையும், புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கும் இலக்கியப் பகுதிகளையும் கற்று மகிழ முடியாத இலட்சக்கணக்கான மக்கள் இன்று சிறுகதைகளைக் கற்று இன்புறும் நிலை ஏற்பட்டுள்ளது. சுருங்கக் கூறின் புதினம் போலவே சிறுகதையும் மக்கள் இலக்கியமாக மலர்ந்துள்ளது.

சிறுகதையின் விளக்கம்

            சிறுகதைஎன்றால்என்ன?சிறிய அளவில் அமைந்த கதையே சிறுகதையாகும்.

        இப்படி ஒரு வரையறையைச் சிறு கதைக்குச் சொல்ல ‘முடிந்தாலும் ‘அளவு’ என்பதிலே ஆசிரியர்களிடையே றுபாடு இருக்கின்றது. ஒரு பக்கம் அல்லது இருபக்க அளவில் அமைந்த சிறுகதையும் உண்டு: மிகப் பெரிய சிறுகதையும் உண்டு.  வெவ்வேறு ஆசிரியர் எழுதும் சிறுகதையின் அளவு வேறுபடினும் சிறுகதைக்கென்றே அமைந்த சில தன்மைகளும் கட்டுக் கோப்புகளும்தோன்றிவிட்டன. ஹெச்.ஜி. வெல்ஸ் என்பார் சிறுகதையைக் குறித்துப் பின்வருமாறு கூறியுள்ளார்.

            ஒரு சிறுகதை என்பது எளிமை சான்ற ஒரு படைப்பாக இருக்கின்றது; அல்லது இருத்தல் வேண்டும். ஏதாவது ஒரு சிறிய தெளிவானபயனை மட்டும் விளைவிக்க அது முயலுகின்றது. எடுத்த எடுப்பிலேயே பயில்வோரின் கவனத்தை ஈர்த்துப் பிடித்தல் வேண்டும். நெகிழ்ச்சியின்றி இயங்கி உச்சநிலை முடியும்வரை வாசகரின் முழுக் கவனத்தையும் ஒருமுகப்படுத்தி மேன்மேலும் ஆழமாக ஊன்றச் செய்ய வேண்டும். எதையும் மிக உன்னிப்பாகக் கவனிக்கும் மனிதனின் திறமை நீண்டநேரம் நீடிக்க முடியாது. சிறுகதைப் பயிற்சியிலும் இவ்வுண்மை பொருந்துவதாகும். ஆகவே, இடையீடோ சோர்வோ நேருவதற்கு முன்பாகவே சிறுகதை நன்கு வெடித்து முற்றுப் பெறுதல் வேண்டும்

     ஹெ ச்.இ. பேட்ஸ் என்பவர், “எழுதும் ஆசிரியர் எண்ணித் துணியும் வண்ணம் சிறுகதை எவ்வாறு வேண்டுமானாலும் அமையலாம்’ என்கின்றார் எனவே மேற்கூறிய கூற்றுகள் வாயிலாகச் சிறுகதை . என்பது அளவில் சிறியதாக அமையவேண்டும் என்பதும், தொடக்க முதல் முடிவுவரை நம் கவனத்தைச் சிக்கெனப் பிடித்து ஒருமுகப்படுத்திக் கலைப் பயனை விளைவிக்க வேண்டும் என்பதும், சிறுகதை சிறிய கதையாகவே அமைவது நல்லது என்பதும் நமக்கு நன்கு விளங்கும்.

புதினத்திற்கும் சிறுகதைக்கும் உரிய வேற்றுமை

            புதினம், சிறுகதை ஆகிய இரண்டிலும் உரையாடல் வருணனை, நிகழ்ச்சிக்குரிய பின்னணி முதலியவற்றால் ஒற்றுமைகள் உண்டு. வேறு வகையிற் சில வேற்றுமைகளும் உண்டு. அவற்றைப் பின்வருமாறு விளக்கலாம்.

1. புதினத்திற்குரிய கருப்பொருள், மனிதப் பண்பின் செயலின், வாழ்க்கையின் பல பகுதிகளையும் உள்ளடக்கியதாய் பண்பையோ செயலையோ வாழ்க்கையின் ஏதாவது ஒரு அமையலாம். சிறுகதைக்குரிய கருப்பொருளோ குறிப்பிட்டஒருகூற்றையோ மையமாகக் கொண்டு அமையும்.
2.வெவ்வேறு கதை மாந்தரின் பண்புகளுக்கும் செயல்களுக்கும் இடையே எழும் பல சிக்கல்களையும் விரித்துச் சென்று அச்சிக்கல்கள் படிப்படியாய் நீங்கி ஒரு முடிவு ஏற்படுவதனை நாவல் காட்டும். சிறுகதையோ, ஏதாவது ஒரு சூழ்நிலை அல்லது சிக்கலைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து வளர்ந்து சென்று, நாம் எதிர்பாரா நிலையில் ஓர் அதிர்ச்சியைத் தந்து கூடத் திடீரென்று முடியலாம்.
3.புதினம், நிகழ்ச்சியின் பெருக்காலும் கதை மாந்தரின் பண்பாலும் வாசகர்க்குப் பல்வகையான சிந்தனையையும் உணர்வையும் உண்டாக்க வல்லது; சிறு கதையோ, ஏதாவது ஒரு சிறிய நிகழ்ச்சியைச் சுற்றி அல்லது பண்பைச் சுற்றி வாசகரின் கவனம் முழுவதையும் ஈடுபடுத்தி அது சம்பந்தமாக ஓர் ஆழமான சிந்தனையை அல்லது உணர்வை எழுப்புவதாகும்.
4.புதினம் எழுப்பும் கலையார்வம் நீண்டநேரம் நீடித்து நிற்க வல்லது; அளவிலும் பெரியது. சிறுகதை எழுப்பும் கலையார்வமோ விரைந்து பெருகி விரைந்து நிறைவேறும் இயல்புடையது.
5.புதினத்தில், கதை மாந்தரின் பண்புகள், மன நிலைகள் படிப்படியாக வளர்ந்து செல்லுவதைக் காட்டுவதற்கு இடமுண்டு; சிறுகதையில் அவ்வாய்ப்பு இல்லை.
6.புதினம் வாழ்க்கையை அதன் பல்வேறு வடிவத்தோடும் சிக்கலோடும் படம்பிடித்துக் காட்ட வல்லது. சிறுகதையோ அவ்வகையில் அந்த அளவுக்கு வாய்ப்பு அற்றதாகும். காரணம், சிறுகதைக்குரிய களம் சிறியதாகும்.
7. நடைமுறை வாழ்வில் நாம் மனிதர் பலரையும் சந்திப்பது போலவே புதினத்திலும் சந்திக்க முடிகின்றது. அம்மனிதர் பல்வேறு உறவு முறைகளோடும் விருப்பு வெறுப்புகளோடும் அவ்வச்சூழ்நிலைக்கேற்ப ஒருவரோடு ஒருவர் பழகுகின்றனர்; பேசுகின்றனர்; செயற்படுகின்றனர். எனவே, இவர்களைப் பற்றி விரிவாக ஆழமாக நம்மால் நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. இறுதியில் இவர்களின் குறை நிறைகளைப்பற்றிச் சரியாகக் கவனிக்க முடிகின்றது. ஆயின் சிறு கதையில் இடம் பெறும் பாத்திரங்களைச் சிறிது நேரமே நம்மாற் காணமுடிகிறது. அவர்கள். நடமாடும் உலகமும் சூழ்நிலைகளும் சிறிது நேரமே நம் கண்களுக்குத் தெரிகின்றன. இதனால் யாரோ ஒருவரின் குறிப்பிட்ட பண்பு அல்லது செயலைப் பற்றி ஆழமான, ஆற்றல் மிக்க ஓர் உணர்வு நம் உள்ளத்தில் எழுகின்றது என்பது உண்மையே. ஆயினும் புதினத்தில் நடமாடும் மாந்தரைப் பற்றி நமக்குத் தோன்றும் ஒரு பெரிய விரிவான தெளிவான உணர்வோடு அதனை ஒப்பிட முடியாது.
8. மொத்தத்தில், புதினத்தின் அமைப்பு வேறு; சிறுகதையின் அமைப்புவேறு.
            பல பறவைகளும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து பறப்பது போன்றது புதினம். ஒரு பறவை மட்டும் தனித்துப் பறப்பது போன்றது சிறுகதை. பல்வகை வண்ணங்களைக் கொண்டு வரைந்த ஒரு பெரிய ஓவியம் போன்றது புதினம்; ஒன்றிரண்டு வண்ணங்களையே கொண்டு வரைந்த ஒரு சிறிய ஓவியம் போன்றது சிறுகதை,

       ஆடற்கலையில் வல்ல அழகு நங்கையர் பலர் கலையரங்கின் மீது கண்ணன் கதை முழுவதையும் நடித்துக் காட்டுவது போன்றதும் புதினம். கண்ணன் இன்னிசைக் குழல் எடுத்து ஊத எழும் இன்ப கீதத்தில் தன்னை மறந்து மயங்கித் தவிக்கும் ஏந்திழை ஒருத்தியின் நிலையை அரங்கின் மீது ஒருவர் நடித்துக் காட்டுவது போன்றதுசிறுகதை. பலவகை மரமும் செழித்தோங்கிய ஒரு தோப்புப் போன்றது புதினம்; தனி மரம் போன்றது சிறுகதை.

சிறுகதைக்குரியபொருள்

       இன்ன பொருளைத்தான் சிறு கதையில் அமைக்க வேண்டும் என்ற நியதி இல்லை. மனிதனின் ஆர்வத்தைத் தூண்டி எழுப்பிக் கலைவிருந்து அளிக்க வல்ல எதுவும் சிறு கதைப் பொருளாக அமையலாம். ஆயின், இப் பொருள் அனைத்தும் தோன்றுவதற்குரிய நிலைக்களங்கள் மனித வாழ்க்கையும் விலங்கு பறவை முதலானவற்றின் வாழ்க்கையும் மரஞ்செடி கொடி முதலானவற்றின் இயற்கை வாழ்கையுமாகும். இந்நிலைக் களங்களில் எங்கோ என்றோ யாரிடமோ அல்லது எதனிடத்தோ அல்லது எச் சூழலிலோ, ஏதோ ஒரு கூற்றைக் கூர்ந்து பார்க்கும் எழுத்தாளன் ஒருவனிடமிருந்து சிறு கதை அரும்புகின்றது

      பரபரப்பு ஊட்டவல்ல ஒரு சிறிய நிகழ்ச்சி அல்லது சூழ்நிலை, உள்ளங் கவரும் ஓர் அரிய காட்சி, ஒன்றோடொன்று நெருக்கமாகத் தொடர்புடைய நிகழ்ச்சிகளின் கோவை, ஒரு பாத்திரத்தின் ஏதாவது ஒரு கூறு. ஏதாவது ஒரு சிறிய வாழ்வின் ஏதாவது ஒரு சிறிய கூறு, அறம் பற்றி எழும் ஒரு சிக்கல் அமையலாம். இவை போலப் பிற இருப்பின் அவையும் சிறுகதைக்குரிய பொருளாகும்*


சிறுகதைக்குரிய கால எல்லை

        ஒரு சிறு கதையானது. அரை மணி நேர முதல் இரண்டு மணி நேரத்திற்குள் படித்து முடித்துவிடக் கூடியதாய் அமைய வேண்டும் என்கின்றார் உலகப் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் எட்கர் ஆலன்போ ‘ சிறு கதையைப் படித்துப் பார்க்கலாம் என்று அமருகின்றோம். அப்படி அமர்ந்தவுடன் முடியும் வரை படித்து முடித்துவிட்டுப் பின் எழக்கூடிய வண்ணம் சிறுகதை அமைய வேண்டும். சிறு கதையில் இடம்பெறும் நிகழ்ச்சிக்குரிய கால எல்லை இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாது. ஒரு மணி நேரத்தில் நடந்துமுடியும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். சில ஆண்டுகளாகிய பெரிய கால எல்லைக்குள் நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றியும் சிறு கதை அமையலாம். கதையாசிரியர் தம் சிறுகதைக் கட்டுக்கோப்புக் கலைத்திறத்தால், சிறு கதையில் இடம் பெறும் கால எல்லை, அக்கதையால் விளையக் கூடிய மொத்தப் பயனுக்குச் சிறிதும் இடர்ப்பாடு விளைவிக்கா வண்ணம் கதையை நடத்திச் செல்ல முடியும்.


சிறுகதைக்குரிய ஒருமைப்பாடு

     கதை அமைப்பின் தலையாய இயல்பு ‘ஒருமைப்பாடு’ ஆகும். ஒரு சிறுகதையின் ஒவ்வொரு பகுதியும் பொருத்தமாக அமைய வேண்டும். அக் கதையால் விளையும் உணர்ச்சி விளைவும் ஒருமுகப்பட்டதாக இருத்தல் வேண்டும். கதையின் ஒவ்வொரு பகுதியும் வளர்ந்து செல்லும் போது அப்பகுதியை அமைத்த ஆசிரியரின் உள்நோக்கம் அவரின் முழு நோக்கத்தை நோக்கி இயங்குவதாக அமைய வேண்டும். கதை மாந்தரின் செயல் முறைகள் முற்றுப் பெறும்போது இயற்கையான போக்கில் முற்றுப் பெறுவது போல நாம் உணர வேண்டும். அவ்வாறு முற்றுப் பெறுமாயின் கதையை ஆசிரியர், அமைத்தநோக்கும் நிறைவேறுகின்றது எனலாம். சிறு கதை என்னுங் இயற்கைச் சாயலோடு ஆசிரியர் அவிழ்க்கவும் வேண்டும்.சிறு கயிற்றில் முதலில் போட்ட முடிச்சை எளிமையாக, இனிமையாக இருத்தல் போலவே, அக்கதை நிகழ்ச்சிகளின் போக்கும் கதையை ஆசிரியர் படைத்ததின் நோக்கம் ஒருமுகப்பட்டதாய் ஒருமுகப்பட்டதாய், நம் கவனத்தையும் ஆர்வத்தையும் சிறிதும் சிதற அடிக்காமல், ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அழைத்துச் செல்வதாய் இருத்தல் வேண்டும்.

       சிறுகதை ஏதாவது ஒரு மையக் கருத்தை மட்டுமே விளக்குவதாய் இருத்தல் வேண்டும். அந்த ஒன்றும் காரண காரிய முறைப்படி வளர்ந்து முற்றுப் பெறுதல் வேண்டும். முழுக்க முழுக்க ஒருமுகப்பட்ட தன்மையோடு இயங்கி முற்றுப் பெறுதல் வேண்டும். ஒரு சிறு கதை மிக்க சுவையுடையதாக அமைய வேண்டுமாயின் இவ்வொருமுகவியல்பு மிக மிக இன்றியமையாததாகும். கதையின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் குறிப்பிட்ட ஓர் உணர்வே மிகுதியாக ஆட்சி செய்ய வேண்டும். கதையின் பின்னணி, கதை நிகழ்ச்சி முதலியன அனைத்தும் அந்த ஓர் உணர்வின் போக்கிலேயே நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். இதனை ‘உணர்ச்சி விளைவின் ஒருமைப்பாடு’ (Unity of Impression) எனலாம்

சிறுகதையின் அமைப்பு

           சிறு கதைக்குரிய பொருளானது குறிப்பிட்ட எல்லைக்குள் வேண்டுமளவுக்கு ஆற்றலோடு வளர்க்கப்படும் ஒன்றாக அமைய வேண்டும். இவ்வாறு வளர்க்கப்பட்டுள்ளது என்பதை எப்படி அறிவது? சிறுகதையைப் படித்தவர் மன நிறைவு பெற்றதையும் பெறாததையும் கொண்டு அறியலாம். சிறு கதையின் பொருளும்

            நோக்கமும் எவையாக இருப்பினும் அதன் இயல்பு மட்டும் ஒரு வகையில் உறுதியாக அமைய வேண்டும். அஃதாவது இந்தக் ததையை வளர்த்திருந்தாலும் எந்த விதப்பயனும் இருக்கப் போவதில்லை என்று வாசகர் உறுதியாக எண்ணும் அளவுக்குச் சிறு கதை முற்றுப் பெற்றிருத்தல் வேண்டும். ‘இதைப் பற்றி இன்னமும் கொஞ்சம் சொல்லாமற் போனதால் கதையின் சுவை குறைந்து விட்டது” என்று பயில்வோர் நினைக்குமாறு சிறுகதை அமையக்கூடாது. சிறுகதையின் பொருளும் வளர்ச்சியும் சுருக்கமாக. ஆனால், நிறைவு அளிக்கும் வகையில் அமைய வேண்டும். கதையின் பல பகுதிகளும்ஒன்றோடொன்றுபொருத்தமுற இயைபு பட்டுச் செல்லுதல் வேண்டும். அப்பகுதிகளுள் ஒவ்வொன்றும் கதையின் நோக்கத்தை நிறை வேற்றுவதற்கு இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். தேவைக்கு அதிகம் என்று எண்ண முடியாதபடிஇருத்தல்வேண்டும்.

சிறுகதையில் உரையாடலும் வருணனையும்

       சிறுகதையில் உரையாடல் நீளமாக இருத்தல் கூடாது; செறிவும் தெளிவும் பெற்று நெகிழ்ச்சியின்றி அமைய வேண்டும். உரையாடலின் ஒவ்வொரு பகுதியும் கதையின் மையக் கருத்திற்கும் நோக்கத்திற்கும் இன்றியமையாததாய் இருத்தல் வேண்டும். விறு விறுப்பான கதை வளர்ச்சியைத் தடை செய்யும்படியாகவோ, வாசகருக்குச் சலிப்பூட்டும் படியாகவோ, எந்த ஒரு பகுதியும் உரையாடலில் இடம் பெற்று விடலாகாது; மின்னலின் வீச்சைப் போலக் கதையின் உயிர்ப் பொருளைப் பிரதிபலிக்கும் வண்ணம் அழகான சில சொற்கள் அமைவது சிறப்புடையது. வாசகர்களின் சுவையுணர்வைக் கெடுக்கக்கூடிய, அல்லது, அவர்களின் கவனத்தைக் கதையின் போக்கிலிருந்து வேறுதிசைக்குத் திருப்பக்கூடிய எந்த ஒரு சொல்லும் உரையாடலில் இடம் பெறலாகாது.

            சிறுகதையில் வருணனை அடிக்கடி இடம் பெறுதலாகாது, ஒன்றிரண்டு இடங்களில் இடம் பெறலாம். அந்த வருணனையும் கதையால் உருவாக இருக்கும் முழுப் பயனுக்கு ஏதாவது ஒரு வகையில் பயன்படுவதாய் இருக்க வேண்டும். கதை மாந்தரின் பண்பினை அல்லது செயலினை மறைமுகமாகச் சுட்டிக் காட்டும் முறையிலோ அல்லது அப்பண்பையும் செயலையும் குறித்துக் கட்டியங் கூறும் முறையிலோ அமையலாம். சிறு கதைக்குச் செறிவும் ஒருமுகப் போக்கும் இன்றியமையாதவையாதலின், வருணனையும் இவற்றைச்  சிறிதும் கெடுக்கா வண்ணம் இடம்பெறுதல் வேண்டும்.

            வருணனை, அளவாற் பெருகிவிடாது, சிறியதாய் இருத்தல் வேண்டும். கதையில் நடமாடும் மாந்தரை அவரவர்க்கே உரிய இடம், சூழல் முதலியவற்றோடு தொடர்புபடுத்திக் காட்டும் முறையிலும் வருணனை அமையலாம். எப்படிப் பார்க்கினும் கதையாசிரியர் தாம் திட்டமிட்டு எடுத்துக் கொண்ட கருத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்றும் முறையிலேயே வருணனையும்அமையவேண்டும்.

சிறுகதைக்குரிய குறிக்கோள்


            சிறு கதைக்குக் குறிக்கோள் உண்டா? ஆம், உண்டு. என்ன குறிக்கோள்? சிறிது நேரத்திற்கேனும் வாசகரின் கவனம் முழுவதையும் ஈர்த்துப் பிடித்து அவர்க்குக் கலைச் சுவையை வழங்குவது தான். இயற்கை வாழ்வின் ஒரு கூற்றை, யாரேனும் ஒருவரின் பண்பை அல்லது செயலை, ஏதேனும் ஒன்றன் இயக்கத்தை அல்லது செயற்பாட்டை எங்கோ ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் ஒரு இரகசியத்தைக் கலைச்சுவை சிறிதும் குன்றா வண்ணம் வெளிப்படுத்துவதே சிறுகதையின் நோக்கம் அல்லது குறிக்கோள் எனலாம். அறப் பண்பு, நீதிபோதனை, தத்துவ விளக்கம், சிந்தனைப் புரட்சி, சமுதாயச் சீர்திருத்தம் முதலியனவும் சிறு கதைக்குரிய குறிக்கோளாக அமையலாம். ஆயின் அவையும் சிறு கதைக் கலைத்திறன்களோடு வெளிப்பட

வேண்டும்.

ஸ்டீவன்சன் காட்டும் மூன்று வகையான சிறுகதைகள்

        சிறு கதையை எழுதுவதற்குரிய வழிகளை மூன்றாகச் சொல்லுவார் ஸ்டீவன்சன் கருப்பொருளை முதலில் நினைத்து வைத்துக் கொண்டு அக்கருப் (Stevenson). கதைக்குரிய சிறுகதைக்குள் சேர்க்கலாம். இரண்டாவது வழி; ஒரு குறிப்பிட்ட குணச் சித்திரத்தை மனத்திற் கொண்டு அதை விளக்கிக் காட்டுவதற்குரிய நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் அமைக்கலாம். மூன்றாவது வழி ஆசிரியர் தம் உள்ளத்தில் ஒரு குறிப்பிட்ட உணர்வைத் தோற்றுவித்த ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலைக் கொண்டே சிறு கதையை அமைக்கலாம்; அச் சூழலும் உணர்வும் கதையில் நன்கு வெளிப்படுவதற்கு ஏற்ற வண்ணம் மனிதரையும் செயல்களையும் படைத்துக் கொள்ளலாம் இவ்வகையில் நோக்கும்போது சிறு கதையை மூன்றாகப் பிரிக்கலாம்.

            முதல் வகையைக் கருவால் வந்த கதை (The Story of plot)என்றும், இரண்டாம் வகையைக் குணச் சித்திரத்தால் வந்த கதை (The Story of Character) என்றும் மூன்றாம் வகையை உணர்ச்சிப் பதிவால் வந்த கதை (The Story of Impression) என்றும்சொல்லலாம் என்பர்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?

நாவல்-என்றால்-என்ன

நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது?


            பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வளரத் தொடங்கி இந்நூற்றாண்டில் மிகப் பரவலான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்திருப்பது நாவலாகும். முறையாகக் கற்று அறிவு பெற்றோரும் சாதாரண அறிவு நாவலுக்கும் சிறுகதைக்குமே உண்டு. கலைத் துறையில் சிறிது படைத்தோரும் இலட்சக்கணக்கில் எடுத்துப் படிக்கும் சிறப்பானது நேரம் பொழுது போக்க விரும்புவோர்க்குச் சிறுகதையும் நீண்ட நேரம் பொழுதுபோக்க பயன்படுகின்றன. போக்குவரத்துச் சாதனங்கள் அதிகமாகி, வேகமாக இயங்கி வரும் இன்றைய மக்கள், கவிதை வடிவத்தில் அமைந்த காவியத்தைப் படிப்பதற்குரிய நேரமும் பொறுமையும் போன்று செயற்படுவதாய் உரைநடையில் உள்ள நாவலை ஒன்றிப் பார்க்க வல்ல உணர்வும் இல்லாத காரணத்தால், காவியம் விரைந்து எடுத்து விரும்பிப் படித்து முடிக்கின்றனர்; கதை, கதை மாந்தரின் உணர்ச்சிப் போராட்டங்கள், செயல் முறைகள் முதலியன நிறைந்த காவியத்தால் அடையும் பயனை நாவலால் அடைந்துவிடுகின்றனர். நாவல் என்றால் என்ன? நாவலின் வரையறை யாது? 

            ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செல்லும்போதோ, பேசத் துணைக்கு யாரும் இல்லாத போதோ, வேலையின்றிச் சும்மா இருக்கும் நிலையில் தம் உள்ளத்தைக் கலை உலகில் செலுத்த விரும்பும் போதோ, நாவல் இன்றைய மக்களுக்கு எளிதில் கைகொடுத்து உதவுகின்றது. இன்று பொதுவாக, அதிகமாக விற்பனையாகும் இலக்கிய வகைகளுள் சிறு கதையும் நாவலும் அடங்கும் எனலாம். பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றோரும், நாவல்களைப் படிப்பதிலும் படைப்பதிலும் ஆராய்வதிலும் ஆழமான ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கிலாந்து நாட்டிலும் அமெரிக்க நாட்டிலும் நம் இந்திய  நாட்டிலும் நாவல் துறையானது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் நாவல் பொது மக்களிடையே ஆற்றல் மிகுந்த ஒரு கலைக் கருவியாகப் பயன்பட்டுள்ளது. ஆங்கில துறையானது இங்கிலாந்து நாட்டின் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப வேகமாக வளர்ந்தது. அந்நாட்டு மக்களும் அதனை விரும்பிப் போற்றினர். நாள்தோறும் இயங்கும் மனித வாழ்வின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டும் சிறப்பு இதற்கு உண்டு என்று கருதப்பட்டது.

            இன்றைய நம் தமிழகத்திலும் நாவல் துறையானது. நன்கு வளர்ந்து வருகின்றது. மனித வாழ்வின் பலவகைக் கோலங்களையும் சமுதாயத்தின் பல்வகைச் சித்திரங்களையும் உளவியல் முறையில் மனிதனுக்கு ஏற்படும் போராட்டங்களையும் அரசியல் பொருளாதாரச் சிந்தனைகளின் மாற்றத்தையும் பிறவற்றையும் நமக்குக் காட்டும் வண்ணம் இன்றைய தமிழ் நாவல்கள் அமைந்துள்ளன. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் இக்கால கட்டத்தில் நாவலுக்குரிய ஒரு பொற்காலம் தோன்றுவதற்குரிய அடையாளங்கள் தெரிகின்றன. இன்று எழும் தமிழ் நாவல்கள் அனைத்துமே தரம் உடையன என்று ஏற்றுக் கொள்வதற்குத் தடை ஏற்படினும் பெரும்பாலானவை நல்ல நாவல்களாக விளங்குகின்றன எனலாம். இறவாத பேரிலக்கியங்களைக் கற்று மகிழும் ஒரு சாரார் போலவே நாவல்களைப் படித்து மகிழும் ஒரு சாராரும் இன்று ஒரு கட்சி போல வளர்ந்து வருகின்றனர். இதனால் இன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் ஆட்சி செய்கின்றது.


நாவல் என்றால் என்ன?

          சிறு கதையிலிருந்து வேறுபட்டு. பல நிகழ்ச்சிகளையும், செயல்களையும் தன்னகத்தே கொண்டு கதை மாந்தரின் பண்புகளுக்கு ஏற்ப ஒரு கதையை வளர்த்துச் சென்று ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் உரைநடை இலக்கிய வகையே நாவலாகும். இவ்வாறு நாவலை ஓரளவு வரையறை செய்ய முடிகின்றதே அன்றி முழுமையாகவும் நாவலின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாகவும் உள்ள ஒரு வரையறை தருவது கடினம். சிறு கதையிலும், கதையும், கதை மாந்தரும் உண்டு என்றாலும் மாந்தர் பலரின் பண்பையும் தனி மனித சமுதாய வாழ்வின் நிகழ்ச்சிகளையும் நாவலில் அமைத்துக் காட்டுகின்ற அளவுக்குச் சிறு கதையில் அமைத்துக்காட்ட இயலாது. சிறுகதை அளவால் சிறியது. மிகப் பெரிய சிறுகதை உண்டு என்றாலும் நாவலைப் போல ஒரு பெரிய களத்தைக் கொண்டு இயங்குவது சிறு கதைக்கு இயலாதது.

            சிறுகதையானது, நாவலை நோக்க, கதை மாந்தர் மிகச் சிலரையே உடையது; நாவல் பலரை உடையது. சிறுகதை குறுகிய காலத்தில் படித்து முடிக்கத்தக்கது; நாவல் படிப்பதற்குச் சிறுகதையை விட அதிக நேரம் வேண்டும். சிறுகதையில் சிக்கல் குறைவு; நாவலில் சிக்கல் மிகுதி. சிறுகதை நம் கவனத்தைச் சிறிய எல்லையிலேயே நிறுத்திச் சுவை பயந்து முடிவது; நாவலோ நம் கவனத்தை ஒரு பரந்த எல்லைக்குள் வளர்த்துச் சென்று பல்வகை உணர்வுக்கும் இடனாகி முடிவது. சிறுகதை ஒரு கல் என்றால், நாவலை ஒரு மலை என்று சொல்லலாம். சிறுகதை ஒரு வீணையின் ஒரு நரம்பில் எழும் நாதம் போன்றது; நாவல் பண் கலந்த ஓர் இசைப் பாட்டுப் போன்றது. சிறுகதை சிறிய ஓவியம் போன்றது. நாவல் ஒரு பெரிய ஓவியம் போன்றது. சிறுகதை ஓர் ஊரிலிருந்து அடுத்த ஊருக்கு அல்லது இரண்டு மூன்று ஊருக்கு அப்பால் உள்ள ஓர் ஊருக்குப் போவது போன்றது. நாவல் முந்நூறு, நானூறு மைல்கள் பயணம் செய்வது போன்றது. சிறு கதைக்கும் நாவலுக்கும் பொதுவான சில கூறுகள் உண்டு. எனினும் அமைப்பிலும் கதையைப் பின்னிக் கொண்டு செல்லும் முறையிலும் இரண்டுக்குமிடையே வேறுபாடு உண்டு. மா. இராமலிங்கம் என்பார், சிறுகதைக்கும் நாவலுக்குமிடையே யுள்ள வேறுபாட்டைக் குறித்து, சிறுகதையைப் படிப்பது வீட்டுக்குள் அமர்ந்த வண்ணம் ஜன்னல் வழியே வெளியுலகை எட்டிப் பார்ப்பது போன்றது. நாவலைப் படிக்கும் அனுபவம் . வேறானது. ஒரு கிராமத்திற்குச் சென்று அங்கு நடக்கும் தேர்த் திருவிழாவைச் சுற்றிக் காண்பது போல, நாவலில் பல்வேறு எனக் குறிப்பிடுவது அனுபவங்களையும் உணர்கிறோம்,” ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

        நாவலில் பல சிறுகதைகள் இருக்கலாம், இதனால் சிறுகதை பல சேர்ந்தால் நாவலாகும் என எண்ணலாகாது. நாவல் தனக்கென்றே அமைந்த ஒரு பெரிய களம் உடையது. ஒரு பெரிய அனுபவ ஊற்றாக அல்லது வாழ்க்கையின் வெளிப்பாடாகக் கலைஞரால் படைக்கப்படுவது; சுருங்கக் கூறின், நாவல் ஒரு பெரிய கதையையும், கதை மாந்தர் பலரையும் கொண்டது; தனி மனிதன் அல்லது சமுதாய வாழ்க்கையின் பல பகுதிகளையும் சித்திரித்துக் காட்டுவது. இங்ஙனம் சித்திரித்துக் காட்டுவதற்குக் கதையே நாவலுக்குக் களம் ஆகும். ஓவியத்திற்குத் திரை போலவும் நடனக் கலைக்கு அரங்கு போலவும் நாவலுக்குக் களமாக அமைவது கதையேயாகும்.


நாவலுக்குரிய கதையும் கதைக்கோப்பும் (Plot)

        பொதுவாக நோக்கும்போது நாவல் என்பது கதையே. இக்கதை சுவையாகவும் நாவல் படிப்போரின் உணர்வுக்கு வளமான விருந்தாகவும் அமையவேண்டும். கதையின் தொடக்கமும் நடுவும் வாசகரின் ஆர்வத்தைக் கதையின் முடிவு. வரை நீட்டிக்க வல்லதாய் இருத்தல் வேண்டும். நாவலின் கதைப் பகுதி ஒவ்வொன்றும் அடுத்துவரும் கதைப் பகுதியைப் படிப்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நாவலின் ஒரு நிகழ்ச்சியிலிருந்து மற்றொரு நிகழ்ச்சி வளர்ந்து செல்லும்போது கதைக்குரிய இன்றியமையா இயல்புகள் இவை. இயைந்து செல்வதாகவும் இருத்தல் வேண்டும். நிகழ்ச்சிகளின் போக்கானது கதை என்றால் அந்நிகழ்ச்சிகள் காரண காரியப்படி நிகழ்வதைக் கதைக்கோப்பு (plot) எனலாம்.

        ஈ.எம். ஃபாஸ்ட்டர் என்பார் கதைக்கும் கதைக் கோப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பின்வருமாறு விளக்கியுள்ளார். கதை என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அது அது நடந்த கால எல்லைக்கு ஏற்ப விளக்குவதாகும். கதைக்கோப்பு என்பதும் நிகழ்ச்சியைக் குறிப்பதே! ஆயின் காரண காரியப்படி நிகழ்ச்சி அமைவது முக்கியமாகும். ‘அரசன் இறந்தான் பின் அரசியும்  இறந்தாள்-இது ஒரு கதை. “அரசன் இறந்தான். அவ்வேதனை தாங்க முடியாமல் அரசியும் இறந்தாள்.”—இது ஒரு கதைக் கோப்பு. இதிலும் கால எல்லை காட்டப்படுகின்றது. அதே நேரத்தில் காரண காரியம் பற்றிய உணர்வு மேலோங்கி நிற்கிறது ‘ கதையில் குறிப்பிட்ட ஒவ்வொரு நிகழ்ச்சியைப் படிக்கும்போதும் அதற்குப் பிறகு என்ன நடந்தது? என்ன நடந்தது? என்ற அறிய ஓர் ஆவல் பிறக்கின்றது. இந்த ஆவலைத் தீர்த்துச் செல்லும் முறையில் அமைவதே கதையாகும். ஆயின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஏன் நடந்தது?. ஏன் நடந்தது? என்று அறிய விரும்பும் ஆவலை நிறைவேற்றும் வண்ணம் அமைவது கதைக் கோப்பாகும். வேறுவகையில் கூறின், நிகழ்ச்சியின் வளர்ச்சி கதையாகவும், அவ்வளர்ச்சிக்குரிய காரண காரிய முறைமை கதைக் கோப்பாகவும் அமைகின்றது. ஒரு நாவல் ஆசிரியர் கதையை அமைப்பது எளியது. ஆயின் கதைக் கோப்பை வெற்றிகரமாக அமைப்பது அரியது. நாவலாசிரியர் முன்னதை அமைப்பதற்கு ஓரளவு அறிவு பெற்றிருந்தால் போதும். பின்னதை அமைப்பதற்கு நல்ல அறிவுக் கூர்மையும் நினைவாற்றலும் வேண்டும்.


கதைக்குரிய பொருள்

       நாவலுக்குரிய கதைப் பொருள் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை. நாவலாசிரியர் தம் உள்ளம் விரும்பிய எதை வேண்டுமாயினும் கதைக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். மனித வாழ்க்கையில் நிகழ்ந்த ஏதேனும் ஒரு பெரிய நிகழ்ச்சி, சிக்கல் நிறைந்த ஒருவரின் வாழ்க்கைப் பகுதி, வரலாற்றுத் தொடர்புடைய சில உண்மைகள், ஒரு நாட்டில் நீண்ட காலம் வழங்கி வந்த புராணச் செய்தி, அன்றாடப் பொது வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள், நாவலாசிரியரின் சொந்த அனுபவங்கள், உளவியல் தொடர்புடைய சில சிக்கல்கள் முதலியன நாவலுக்குரிய கதைப் பொருளாக அமையலாம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஓரளவு தகுதி படைத்த பல்வகை இலக்கியங்களின் கருப்பொருள்களை ஆராய்ந்து, ஒரு முடிவுக்கு வந்தார். முப்பத்தாறு வகை கதைக் கோப்பே உண்டு. என்று கண்டுபிடித்தார்.

         டேவிட் டெய்ச்சஸ் என்பவர், நாவலைக் குறித்துப் பேசும்போது ‘இன்றைய நாவலாசிரியருக்கு இரண்டு வகையான முக்கிய சிக்கல்கள் உண்டு’ என்கின்றார். ஒன்று, வாழ்க்கை நடப்பின் போக்கைப் பற்றியது. மற்றொன்று, உளவியல் பற்றியது. முன்னையது அனுபவத்தின் தரத்தோடு தொடர்புடையது; அனுபவத்தில் சிறப்பாக உள்ளதைச் சித்திரித்துக் காட்டுவது. பின்னையதாகிய உளவியல் சிக்கல் மனிதனின் உள்ளப் பாங்கினைப் பற்றியது. காலத்தோடு அதற்குரிய தொடர்புபற்றியது. இன்றைய நாவலாசிரியர் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயல்பைத் தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிட அவ்வியல்பினைத் தோற்று வித்தற்குக் காரணமாக அமைந்த பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதையில் சித்தரித்துக் எவ்வாறாயினும் இன்றைய வாழ்க்கையின் போக்கு, பொருள்களையும் இன்றைய நாவலாசிரியர் தம் கதைப் உளவியல் ஆகிய இரண்டைச் சுற்றியும் அமையும் அத்தனைப் பொருளாகக் கொள்ள முடியும்.

 கதை மாந்தர்கள்

            ஒரு நாவலில் பல நிகழ்ச்சிகளும் பல செயல்களும் நடந்த செயலோடும் தொடர்புடையவர் யார் என்பது முக்கியமாகும். வண்ணம் உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியோடும், ஒவ்வொரு குறிப்பிட்ட ஒரு செயல் அல்லது, நிகழ்ச்சி வளர்ந்து செல்லுவதற்குக் கதை மாந்தர் எவ்வெவ்வாறு துணை புரிகின்றனர் என்பதும் நாவலில் நன்கு விளங்க வேண்டும். இக்கதை மாந்தர் உண்மை உலகில் நடமாடுவது போலவே நாவலிலும் நடந்து கொள்கின்றனர். உண்மை உலகில் நாவலாசிரியர் தாம் கண்ட மனிதர்களின் இயல்புகளையும் பண்புகளையும் தாம் எழுதப் புகுந்த நாவலின் அமைப்பிற்கும் போக்கிற்கும் ஏற்றபடி ஓரளவு மாற்றியும் வளர்த்தும் படைத்துக் காட்டுகின்றார்; நாவலை எடுத்துப் படிப்போர் உண்மை உலக மனிதரைக் காண்பது போலவே நாவலில வரும் கதைமாந்தரையும் காணச் செய்கின்றார்.

            நாவலுக்குக் கதை மாந்தராக வருவோர் முழுக்க முழுக்க உயர்ந்த ஒரு பண்புக்கு இடமாக அமையலாம்; அல்லது குறைவும், நிறைவுமாக அமைந்த மனித இயல்புகளோடு விளங்கலாம். நாவலாசிரியர், கதையில் எத்தகைய பண்புடைய மனிதரைக் காட்ட வேண்டும் என்று விரும்புகின்றாரோ, அந்தக் குறிப்பிட்ட பண்பு நிலைக்கு ஏற்பக் கதை மாந்தரின் இயல்புகளைச் சித்திரித்துக் காட்டுகின்றார். நாவலாசிரியர் தம் நாவலில் தாம் விரும்பிய . அளவுக்குக் கதை மாந்தரைப் படைத்துக் காட்டலாம். ஆயின் கதை மாந்தர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனித்தன்மையோடும் செயற கதை மாந்தரின் புறத்தோற்றங்களை மட்டும் அன்றி அவர்களின் முறையோடும் இயங்குவது இன்றியமையாதது. நாவலாசிரியர் குறிப்பிட்ட கதை மாந்தர் தொடக்கம் முதல் முடிவு வரை கதைக்கோப்பை வளர்த்தலுக்குரிய குறிப்பிட்ட சில பண்புகளோடு, அக இயல்புகளையும் வெளிப்படுத்த முயல்வது சிறப்புடையது இயல்புகளோடு இயங்குவது அவசியம் ஆகும்.

            ஓர் உண்மை உலகில் நடமாடும் மனிதர்களை நாவலில் நடமாட விடும்போது அவர்களின் பண்புச் சித்திரங்களில் தெளிந்த அமைப்பும் மெருகும் இருத்தல் வேண்டும். நாவலில் வரும் கதை மாந்தரின் செயல்கள் அவர்களின் பண்புகளுக்கேற்ற செயல்களே நம்புமாறு செய்வது நாவலாசிரியரின் என்று நாம் முக்கியபணியாகும். சாமர் செட்மாம் என்பவர், நாவலாசிரியர் கதை மாந்தரைப் படைத்துக் காட்டும் முறையைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார். எழுத்தாளர்கள் எப்பொழுதுமே மூலத்தைப் பிரதி செய்வதில்லை. தான் ஒன்றைக் காண்கிறபோது, தன்னுடைய கவனத்தைக் கவர்ந்த சிலவற்றையும், கற்பனையில் மின்னலிட்ட சிலவற்றையும் ஒன்றாகச் சேர்த்தே பாத்திரத்தை உருவாக்குகிறார்கள். தன்னுடைய படைப்பு முழுக்க முழுக்க மூலத்தைப் போலவே இருக்க வேண்டும் என்று அதிகமாகக் கவலைப்படுவதில்லை.’

            நாவலாசிரியர் உண்மை உலகில் தாம் காணும் எவரேனும் ஒருவரின் பண்புகளை மட்டுமே நாவலில் வரும் மனிதர் ஒருவரிடம் அமைக்க வேண்டும் என்பதில்லை. தாம் பார்த்த மனிதர் பலரின் பண்புகள் பலவும் கூட்டிக் கதை மாந்தர் ஒருவரை உருவாக்கலாம். வேறுவகையில் கூறின், குறிப்பிட்ட கதை  மாந்தரின் முன் மாதிரியாக ஒருவர் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, பலராகக் கூட இருக்கலாம். நாவலாசிரியர் தம் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களைக் காட்டுவதும் உண்டு. இம்முறையில் அமையும் கதை மாந்தர், கொண்டு அவற்றின் பிரதிபலிப்பாகக் கதை மாந்தரைப் படைத்துக் 6 நாவல் படிப்போரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுத் திகழ்வர். நாவலாசிரியர் எப்படிப்பட்ட கதைப் பாத்திரத்தைப் கலந்து தானே அதுவாய், அதுவே தானாய் அமைந்து முழு ஈடுபாட்டுடன் படைக்க முயலவேண்டும். நாவலில் வரும் படைத்துக் காட்டினும் அப்பாத்திரத்தின் நிலையோடு இரண்டறக் பாத்திரங்கள் குறித்து, “எனது நாவல்களில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவை ஓரிடத்திலே தலை காட்டிவிட்டு மறைவதாயினும் சரி, அல்லது கதையின் அடிமுடிவரையிலும் நடமாடுபவை சரி அவையெல்லாம்—பரிவாரம் என்னுடனேயேயிருக்கும். நான் எங்குச் சென்றாலும் என் கூடவே அவைகளும் வரும்.’ என்று ஒருவர் கூறுவது ஈண்டு நம் சிந்தனைக்குரியது.

            நாவலில் வரும் பல்வேறு பாத்திரங்களும் சில பொதுவான இயல்பினைக் கொண்டிருப்பினும் மொத்தத்தில் ஒவ்வொன்றும் ஏனைய பாத்திரங்களினின்றும் நன்கு வேறுபட்டுத் தனித்து நின்று விளங்கவேண்டும். ஒருவரைப் பற்றிய பண்பு ஓவியம் ஏனைய கதை மாந்தரின் பண்பு ஓவியங்களிலிருந்து ஏதேனும் ஒரு வகையில் நன்கு வேறுபட்டிருத்தல் வேண்டும். இல்லையேல் கதை மாந்தர் படைப்பால் வரும் சுவை கெட்டுவிடும். கதை மாந்தரை இப்படித்தான் படைத்துக் காட்ட வேண்டும் என்று முடிந்த முடிவாக எதுவும் சொல்ல இயலாது. நாவலாசிரியர் பலராக, அவர்களின் மனநிலையும் நோக்கமும் பல படியாக அமைகின்றன. ஆதலின் அன்னோரால் படைக்கப் பெறும் கதை மாந்தரும் பலபடியாக இருக்கலாம். கதை மாந்தர் உண்மை உலகில் காண்பது போலவே இருப்பினும் நாவலுக்குரிய நோக்கத்தையும் போக்கையும் வளர்த்துச் செல்வதற்குரிய பண்பிலே நன்கு ஊன்றி நின்று அப்பண்பு நாவலின் முடிவு வரைக்கும் சிதையாவாறு விளங்கவேண்டும். இதனை நோக்கும்போது நாவலில் வரும் கதை மாந்தர் அன்றாட வாழ்வில் நாம் காணும் மனிதரைப் போல இருப்பினும் அந்நிலைக்கு ஓரளவு அப்பாற்பட்டும் நிற்கின்றனர்
எனலாம்.

இருவகைக் கதை மாந்தர்

            நாவலில் இடம் பெறும் கதை மாந்தரை ஈ.எம். ஃபாஸ்ட்டர் (Round Characters) இருவகைப்படுத்துகின்றார். ஒருவகையினரை முழுநிலை மாந்தர் என்றும் மற்றொரு வகையினரை ஒரு நிலை மாந்தர் (Flat Characters) என்றும் குறிப்பிடுகின்றார்.

            முழு நிலை மாந்தர் என்போர், நாவலின் தொடக்கம் முதல் முடிவுவரை வருபவராகவும், பண்பு வகையில் முழுப்பரிணாம வளர்ச்சியுடையவராகவும், ஆழமான குறிக்கோள் கொண்டவராகவும் அமைவர்; நாவலைப் படித்து முடிக்கும்போது, அக்கதை மாந்தரைப் பற்றிய முழுமையான ஒரு பண்பு ஓவியம் நமக்குக் கிடைக்கின்றது; எந்தச் சில பண்புகள் ஒரு குறிப்பிட்ட கதை மாந்தரிடத்து ஆசிரியரால் அமைக்கப்பட்டிருக்கின்றனவோ, அந்தச் சில பண்புகளுக்கேற்பச் செயற்பட்டு நல்ல குணச்சித்திரங்களாக விளங்குவர். திரு.மா. இராமலிங்கம் முழு நிலை மாந்தர் குறித்துக் கூறுவது ஈண்டு எண்ணத்தக்கது. “முப்பரிமாணக் காட்சி தருவார்கள் இவர்கள். உருவத்தாலும், கருத்தாலும் மெல்ல மெல்ல மாறி வளர்ந்து முழு நிலை மாற்றம் கொள்வர். இவர்களது தோற்றம் மட்டும் அல்லாமல் உள்ளம், உணர்ச்சி, தாபம், கொள்கை, கோட்பாடு எல்லாமே முறையான வளர்ச்சியைப் பெற்று மிளிரும், ‘இதய நாதம் கிருஷ்ண பாகவதர் ‘அகல் விளக்கு’ சந்திரன், ‘சித்திரப் பாவை’ ‘ஜீவகீதம்’ நச்சி, ‘வளைக்கரம்’ சுஜாதை முதலான பாத்திரங்களை ஆனந்தி, ‘பொன் விலங்கு’ பாரதி, ‘செம்பருத்தி, சட்டநாதன்,
உதாரணமாகக் காட்டலாம்.

            முழு நிலை மாந்தர் நாவலில் இடம் பெறும்போது, அவர்களின் மன நிலையில் ஏற்படும் மாற்றங்களையும், மன வளர்ச்சியையும் பண்பு நலன்கள் மேன்மேலும் வளர்ந்து சென்று நிலையை அவர்கள் அடையும்போது, வாசகர், அவ்வுச்ச நிலை ஓர் உச்ச நிலையை அடைவதையும் காணலாம். இவ்வுச்ச மிக இயல்பாக அமைந்த ஒன்று எனவும், குறிப்பிட்ட கதை மாந்தரைப் பொறுத்த அளவில் தவிர்க்க முடியாத ஒன்று எனவும் உணர வைப்பது நாவலாசிரியரின் முக்கிய கடமையாகும். அவ்வாறு உணரவைக்க முடியவில்லை எனில் முழுநிலை மாந்தர் ஒரு நிலை மாந்தராகப் போய்விடுவர். கூற்றுப்படி, ஈ.எம். ஃபாஸ்டர் அடையாளம் முழுநிலை மாந்தர்க்குரிய அம்மாந்தரைப் பற்றிய ஓவியம் அறிவார்ந்த முறையில் படிப்போர்க்கு வியப்பூட்டுவதே ஆகும். வியப்பூட்டவே இல்லையெனில், ஒரு நிலை மாந்தர் என்று அவரைக் கொள்ள வேண்டியதுதான். அறிவார்ந்த முறையில் நம்மைத் தெளிவுறுத்த முடியவில்லையெனில் ஒரு நிலைமாந்தராக இருந்தும் முழுநிலை மாந்தர் போலக் காட்டிக் கொள்வதாக நாம் கொள்ள வேண்டியதுதான். முழுநிலை மாந்தர், நாவலைப் பொறுத்த அளவில் ஒரு முழுமையான வாழ்வை உடையவர் ஆவர்.’

            ஒரு நிலை மாந்தர், மேற்கூறிய முழுமையான மாந்தரினின்றும் வேறுபட்டோர் ஆவர். இவர்கள் நாவலில் ஆழமான பண்பின் பிரதிபலிப்பு ஆகாமல் ஏதேனும் ஒரு வேடிக்கையான இயல்பினைவராய் இடை இடையே
 வந்து போவர். நகைச் சுவையாக ஏதாவது ஒன்றைப் பேசுவது, வேடிக்கையாக ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டுப் போவது. மனிதரிடத்துப் பரவலாக வேரூன்றியிருக்கும் ஒரு தீய இயல்பின் விபரீதமாக ஏதாவது ஒரு கேட்டைச் செய்துவிட்டு நகருவது வடிவமாக வந்து செயல்படுவது போன்ற தன்மைகளை ஒரு நிலை மாந்தரிடத்துக் காணலாம். சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட பழக்க வழக்கம் கதை மாந்தர் ஒருவரிடத்தே அமைந்து அவர் வரும்போதெல்லாம் அப்பழக்க வழக்கமும் கூடவே வருவதுண்டு. எப்போதோ சில சமயங்களில் இத்தகையோர் நாவலில் தோன்றினும் குறிப்பிட்ட அந்தப் பழக்க வழக்கம் அவருடன் சேர்ந்தே இடம் பெறுவதால் அவரை எண்ணும் போதெல்லாம் எண்ணி அப்பழக்க வழக்கத்தோடு சேர்த்தே நாமும் மகிழுகின்றோம். இவரிடத்தில் அமைந்த சில தனிப்போக்குகள் மட்டும் சுவையாக அமைந்து வாசகரை இன்புறுத்தும். ஈ. எம். ஃபாஸ்ட்டர் என்பார், ஒரு நிலை மாந்தரைப் பற்றிப் பின்வருமாறு கூறுகின்றார், “பதினேழாம் நூற்றாண்டில் ஒரு நிலை மாந்தர் வேடிக்கை மனிதர் என அழைக்கப்பட்டனர். அவர்களை ஒரு குறிப்பிட்ட வகையாகக் கொள்ளலாம். அல்லது வேடிக்கை மனிதர் அழைக்கலாம். நாவலாசிரியர் இம் மனிதரைப் படைக்கும்பொழுது ஒரே ஒரு குறிப்பிட்ட கருத்து அல்லது இயல்போடு மட்டுமே படைத்துக்காட்டுகின்றனர். இவரிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தன்மைகள் இருக்கத் தொடங்குமாயின் இவர்கள் முழு நிலை மாந்தர் ஆவதற்குரிய தகுதியைப் பெறத் தொடங்கி விடுவர்.

நாவலாசிரியர் கதை மாந்தரின் பண்புகளையும் செயல்களையும் வெளிப்படுத்துவதற்குப் பின் வரும் முறைகளைக் கையாளலாம்.

1.ஆசிரியர் கதை மாந்தரைச் சார்புடன், அல்லது சார்பின்றிப் பார்க்கின்றவர் என்ற முறையில் கதைப் பாத்திரங்களுக்கு அப்பாற்பட்டுத் தனித்து நின்று கதை மாந்தரைக் குறித்து விரித்து விளக்கிச் சொல்லலாம்.

2.ஆசிரியர் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று, ஆனால் வெளிப்படையாகத் தெரியாமல், உள்ளுரயிருந்து கதை மாந்தரைச் சித்திரிக்கலாம்.

3.கதை மாந்தரில் ஒருவராக ஆசிரியர் தம்மையே
மாற்றிக் கொண்டு, மற்றவர்களின் உள்நோக்கங்களைப் பற்றி ஓர் ஆவல் எழும் வண்ணம் கதை மாந்தரைக் காட்ட முயலலாம்.

 4.இவையல்லாத, ஆயின், இவற்றுக்கு இடைப்பட்ட வேறு சில நிலைகளும் உண்டு.

கதை மாந்தரைப் படைப்பதில் சில பொதுவான முறைகள்

            நாவலாசிரியர் தம் நாவலுக்குரிய கதை மாந்தரைப் படைப்பதில் மிக்க சுய உரிமை கொள்ள முடிகின்றது. பாட்டு வடிவிலுள்ள காவியம், நாடகம் ஆகியவற்றில் கதை மாந்தரைப் படைப்பதற்குரிய அத்துணை அருமைப்பாடு நாவலில் படைக்கும் போது இல்லையெனலாம். ஆசிரியர் தாம் நினைத்தபடி சிலரைத் தம் கற்பனை உலகில் படைக்கலாம்; ஒவ்வொருவருக்கும் தாம் விரும்பியபடி ஒரு பெயரைத் தரலாம்; ஒவ்வொருவரையும் இன்ன இன்ன பால் வகையைச் சார்ந்தவர் என வரையறுக்கலாம்; ஒவ்வொருவருக்கும் சில குறிப்பிட்ட தோற்றங்களையும், நடை உடை பாவனைகளையும் வழங்கலாம்; தக்க குறியீடுகளைப் பயன்படுத்திக் கதை மாந்தரைப் பேச வைக்கலாம்; அவர்களுள் சிலரை நிலையான பண்பு உடையோராக நிறுத்தலாம். கதை மாந்தருடைய மனத்தின் அடித் தளத்தில் ஆழ்ந்து கிடக்கும் ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புகள், அவர்கள் காணும் கனவுகள், அவர்கள் பெறும் இன்ப துன்பங்கள், கதை மாந்தரிடத்து வெளிப்படையாகச் சொல்ல முடியாதபடி அமைந்திருக்கும் மிக இரகசியமான சில மனோபாவங்கள் இவ்வண்ணம் மனித இயற்கையை வெளிப்படுத்துவது நாவலின் ஆகியவற்றை ஆசிரியர் திறம்பட வெளிப்படுத்த முயல வேண்டும். தலையாய பணிகளுள் ஒன்றாகும்.

            நாவலில் வரும் கதை மாந்தர் உள்ளும் புறமுமாக இன்னின்னவாறு உள்ளனர் என்பது நமக்கு நன்கு விளங்குவதால் வரலாற்றில் வரும் மாந்தரைவிடத் தெளிவாகக் காணப்படுகின்றனர்; நம் நெருங்கிய நண்பர்களையும் விட நெருக்கமாகத் தெரிகின்றனர்; அவர்களைப் பற்றிச் சொல்ல முடிவதெல்லாம் சொல்லப்பட்டு விடுகின்றன; அவர்கள் குறைவுடையவர்களாக இருந்தாலும் சரி, உண்மை இல்லாதவர்களாய் இருந்தாலும் சரி, அவர்களைப் பற்றிய இரகசியம் எதுவும் இல்லை. உண்மை உலகில் நம் நண்பர்கள் கூடச் சில இரகசியங்களை வைத்திருப்பார்கள்; வைத்திருத்தல் வேண்டும். காரணம் இந்த நிலவுலகத்தில் வாழ்க்கைக்குரிய கட்டுப்பாடுகளில் இரகசியமும் ஒன்றாகும். நாவலில் இந்த நிலை இல்லை.

உரையாடல்

            நாவலில் இடம் பெறும் உரையாடல்கள், கதை மாந்தரின் இயல்புகளையும் பண்புகளையும் நன்கு வெளிப்படுத்து வனவாகவும் விறு விறுப்பு உடையனவாகவும் இருத்தல் வேண்டும். உரையாடலின் எந்த ஒரு பகுதியும் கதையின் விளக்கத்திற்கோ வளர்ச்சிக்கோ துணை செய்வதாய் இருத்தல் வேண்டும். நாவலைப் படிப்போர்க்குச் சலிப்பு ஊட்டக் கூடிய எதுவும் உரையாடலில் இடம் பெறலாகாது. நாடகத்தில் அமைவது போலவே நாவலிலும் உரையாடல் சுவையாக அமைய வேண்டும்; கதை மாந்தரின் செயல்களையும் கதை நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் பாங்கிலும் அமையலாம்;

            கதை மாந்தரின் உள்ளப்பாங்கு, நடைமுறை, அன்னோர் வாழும் செயற்படும் சூழ்நிலை, நிகழ்ச்சியின் போக்கு முதலியவற்றிற்கு ஏற்ற வண்ணம் பொருத்தமாகவும் அமைய வேண்டும்.

சூழலமைப்பு (Settings)

            நாவல்கள் பலவகைப்படும். நிகழ்ச்சிகள் மிக்க நாவல் (novel of action), பண்பு நலன் விளக்கும் நாவல் (novel of character) விளக்கமும் வருணனையும் மிக்க நாவல் (picturesque novel) நாடகப் போக்கினதாகிய நாவல் (dramatic novel) என நாவல் நால்வகைப்படுமென்பர் திறனாய்வாளர். 13 இவற்றுள் எந்த வகை நாவலை ஆசிரியர் எழுதுகின்றாரோ அந்த வகைக்கு ஏற்றபடி பொருத்தமாகச் சூழலமைப்பும் அதன் விளக்கமும் இடம்பெற வேண்டும். வரலாற்று நாவலைப் பொறுத்த அளவில் அந்த நாவலால் குறிக்கப்படும் காலச் சூழ்நிலைக்கேற்ற பின்னணியே அமைதல் வேண்டும். அக்கால மக்களின் நடை உடை பழக்க வழக்கங்களையே கதையின் பின்னணியில் நாவலாசிரியர் அமைத்தல் வேண்டும்.

நன்றி

இலக்கியத் திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

காளமேகப் புலவரின் வரலாறு

காளமேகப்-புலவரின்-வரலாறு

      தமிழ்ப் புலவர் பலருடைய வாழ்க்கை வரலாறுகள், ஓரளவிற்குச் சுவையான புனைகதைகளைப் போலவே நம் நாட்டில் நிலவி வருகின்றன. வியத்தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து, ஒரு வகைத் தெய்வீக இணைப்புடனே அவை வழங்குகின்றன. ‘சுவிதை நயத்தையும், அக்கவிதைகள் காட்டும் பொருள் வளத்தையும் தெய்வீகச் சிந்தனைகளோடு சேர்த்தே நாம் அறிந்து உணர வேண்டும்’ என்ற உயரிய நினைவே இவற்றுக்குப் பெரும்பாலும் காரணமாக இருக்கலாம். புலவர் வரலாறுகளைப் பற்றியவரை, நிலையானவொரு பகுதியாக இன்னொன்றும் விளங்கி வருகிறது. அது, அவர்கள் காலத்தையும் வரலாற்றையும் பற்றி அறிஞரிடையே நிகழும் வாதப் பிரதிவாதங்கள். இந்த இரு வகையான பொது அம்சங்களிலும் காளமேகப் புலவரின் வரலாறும் எள்ளளவும் குறைந்துவிட வில்லை.

            திருக்குடந்தைப் பகுயிலே, வடமரான பிராமணர் மரபிலே தோன்றியவர் இவர் என்பர். அவ்வூரிற் பிறந்த சோழியப் பிராமணர் என்றும் சிலர் உரைப்பர். நூற்றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றாகத் திகழ்வது பாண்டி நாட்டுத் ‘திருமோகூர்’ என்னும் தலம் அந்தத் தலத்திலே கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குக் ‘காளமேகப் பெருமாள்’ என்று பெயர். அந்தக் கோயிற் பரிசாரகராயிருந்த ஒருவருடைய மகனார் இவர் எனவும் சிலர் உரைப்பர். இவர் மோகூர்ப் பெருமாளைப் பாடியிருப்பதனையும், அப்பெருமாளின் பெயரும் காளமேகமாக இருப்பதனையும் இக் கருத்திற்குச் சான்றாகவும் அவர்கள் காட்டுவர்.

            இவர்களுடைய கருத்துப்படி ‘காளமேகம்’ என்பது இவருடைய இயற்பெயரே ஆகின்றது. மற்றையோர் இதனை ஏற்பதில்லை. தேவியின் அருளினாலே ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிதைகளையும் கார்மேகத்தைப் போலப் பொழிதலைத் தொடங்கிய பின்னரே இப்பெயர் இவருடைய சிறப்புப் பெயராக அமையலாயிற்று என்பார்கள் அவர்கள்.

“வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்

வீசு கவிகாள மேகமே – பூசுரா

வீண்தின்ற வெவ்வழலில் வேகுதே பாவியேன்

மண்தின்ற பாணமென்ற வாய்”

என்ற செய்யுளை அதிமதுரகவி செய்தனர். இதன் முதல் அடியில் குறிப்பிடப்பெறும் வரதா என்ற சொல்லைக் கொண்டு, அதுவே இவருடைய இயற்பெயராகலாம் என்பர் திரு.மு. இராகவய்யங்கார் அவர்கள். இவருடைய இளமைப் பருவம் எத்தகைய சிறப்பும் இன்றிக் கழிந்திருக்க வேண்டும் என்றே கொள்ளலாம். இவர், பிற்காலத்துப் பரிசாரகத் தொழிலில் அமர்ந்திருந்ததனை எண்ணினால், அவ்வாறு கருதுவதற்கு இடமும் உண்டாகின்றது.

பரிசாரகர் வரதன்

            வரதன், தமக்கு வயது வந்ததும், தமக்கு ஏற்ற ஒரு பணியினை நாடித் தம் ஊரிளின்றும் வெளியேறிவிட்டார். பலவிடங்கட்கும் சென்று வேலை தேடித் திரிந்தவர், இறுதியில் திருவரங்கத்துப் பெரியகோயிலை அடைந்தார். அங்கு, அவருக்குப் பரிசாரகர் வேலைதான் கிடைத்தது. கோயில் மடைப்பள்ளி அலுவல்களில் இந்தப் பரிசாரகர் பணியும் ஒன்று. உணவு அங்கேயே கழிந்துவிடும் கிடைக்கிற சிறு ஊதியம் மிச்சம். அதனால் வரதன் திம்மதியாக அவ்வேலையில் இருந்தார். இருந்தாலும், அவருடைய கட்டடிளமைப் பருவம், அப்படி நிம்மதியுடன் நிரந்தரமாக இருக்குமாறு அவரை விட்டுவிடவில்லை. விதி, அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கிற்று.


மோகனாங்கியின் தொடர்பு

            திருவரங்கம் பெரியகோயில் ஒரு பிரசித்தி பெற்ற திருமால் திருப்பதி அதனருகே, சிறிது தொலைவிலே திருவானைக்காத் திருக்கோயில் உள்ளது. இது பிரபலமான சிவன்கோயில். சம்புகேசு வரராகச் சிவபிரான் இங்கே கோயில் கொண்டிருக்கின்றார். சம்புகேசுவரர் கோயிலும் ஒரு பெரிய கோயில், இங்கேயும் பணியாட்கள் மிகுதியாக இருந்தனர். இறைவனின் முன்பு ஆடியும் பாடியும் தொண்டு செய்து வருவதை மரபாகக் கொண்ட தேவதாசியர் பலரும் அந்நாளில் இந்தக் கோயிலில் இருந்தனர். அவர்களுள் மோகளாங்கி என்பவளும் ஒருத்தி. இவள் நல்ல அழகி; நடனத்திலும் வல்லவன்,


            அழகு கொஞ்சிக் குடிகொள்ளும் இளமைப் பருவமும் மோகனாங்கிக்கு அப்போது அமைந்திருந்தது. இயல்பிலேயே அழகியான மோகனாங்கிக்கு. இளமைப் பருவத்தின் செழுமையான பூரிப்பு மேலும் அதிகமான கவர்ச்சியை அளித்தது. அவளைக் கண்டதும் வரதன் அவள்பால் மையல் கொண்டனர். அவளை அடைவதற்கும் முற்பட்டனர். அவளும் அவருடைய அழகிலே மயக்கமுற்றாள். அவர் கருத்திற்கும் இசைந்தாள். இருவர் வாழ்வும் ஒன்றாகிக் கனிந்து, அளவற்ற இன்பநாதத்தை ஒலித்துக் கொண்டிருந்தது. வரதன், ஒரு பெருமாள் கோயில் பரிசாரகர், மோகனாங்கி, ஒரு சிவன் கோயில் தாசி. அவர்களின் உறவு சைவர், வைணவர் ஆகிய இருந்திறத்தாராலும் வெறுக்கப்பட்டது. ஆளால், அதைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள் உள்ளம் ஒன்று கலந்துவிட்டபின், உலக விவகாரங்களை நினைப்பதற்கு அங்கு இடமே இல்லை.


கேலியும் ஊடலும்


            ஒரு சமயம், மார்கழி மாதத்தில், சம்புகேசுவரர் கோயிலில் திருவெம்பாவைப் பாராயணம் நடந்து கொண்டிருந்தது. கோயில் தாசிகள் பலரும் கூடி இனிமை ததும்பப் பாடிக் கொண்டிருந்தனர். ‘உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பாடலை அவர்கள் பாடத் தொடங்கினார்கள். ‘எம்கொங்கை நின் அன்பர்அல்லார் தோள் சேரற்க’, என்ற அடியினைப் பாடுவதற்கு இயலாதபடி மோகனாங்கி திணறினாள். எப்படி அவளால் பாட முடியும்? அவள் உறவு கொண்டிருப்பதோ ஒரு வைணவருடன். ஆகவே, அவன் மனம் சஞ்சலத்தில் சிக்கிக் கொள்ள, அவள் செயலற்று நின்றுவிட்டாள். இயல்பாகவே அவள் கொண்டிருந்த பொருத்தமற்ற உறவினை வெறுத்து வந்த அந்தப் பெண்கள், மோகனாங்கியைச் கட்டி, அப்போது வெளிப்படையாகவே பழிக்கத் தொடங்கி விட்டனர். ‘எப்படியடீ உன்னால் பாடமுடியும்?’ என்ற அவர் களின் ஏளனமான கேள்வி மோகளாங்கியை வாட்டி வதைத்தது. மோகனாங்கி சிலையானாள். அவள் தோழியர் கும்மாள மீட்டனர்; கைகொட்டிச் சிரித்தனர். அவர்களின் குறும்புகளால் அவளது வேதனைத் தீ சுவாலையிட்டு எரியத் தொடங்கிற்று. தூய சிவபக்தி அவளை அப்போது ஆட்கொள்ள, அவள் ஒரு முடிவுக்கு வந்தவளாகத் தன் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள்.

 மூடிய கதவம்

         “வாயிற் கதவைச் சார்த்திவிடு; வரதர் இன்றிரவு வந்தால் உள்ளே நுழைவதற்கு இடம் தரவேண்டாம். சிவன் கோயில் தாசியாகிய நான், வைணவரான அவருடன் திருவரங்கத்துக் கோயில் பரிசாரகரான அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்த உறவு அனைத்தும் இன்றோடு முடிந்தது” என்று தன் வேலைக்காரியிடம் கூறிவிட்டுப் படுக்கையில் படுத்தும் உறக்கங் கொள்ளாமல் தான் செய்த சிவ அபசாரச் செயலை நினைத்து வருந்தியவளாகத் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் மோகனாங்கி. வழக்கம்போல் வரதன் வந்தார். “மோகனா” என அன்புடன் அழைத்தவாறே கதவைத் தட்டினார். கதவு மெல்லத் திறந்தது. வேலைக்காரி எதிரே நின்றாள். தன் தலைவியின் நிலையைச் சுருக்கமாகச் சொல்லி விளக்கினாள். வரதன் நிலைகலங்கினார். தம்முடைய உறவுக்கு இடையூறாகத் தம் மதக்கொள்கை இருப்பதை நினைத்தார். ஒரு முடிவுடன் விரைந்து சென்றார். அந்த முடிவுக்கு வந்ததுமே அவர் முகம் தானாக மலர்ந்தது. அவரிடம் புதியதொரு மிடுக்கும் எழுந்தது. அவர் நடையிலே என்றுமில்லாத ஒரு விரைவும் காணப்பட்டது.

 அன்பின் ஆற்றல்

            மறுநாள் பொழுது விடிந்ததும் வரதன் சம்புகேசுவரர் கோயிலை நாடிச் சென்றார். தாம் சிவசமயத்தை ஏற்றுக் கொள்ளுவதற்கு விரும்புவதாகக் கூறினார். அவருடைய முடிவைக் கேட்டு அங்கிருந்தோர் அதிசயித்தனர். ஆனாலும், வைணவர் ஒருவர், தாமே வலிய வந்து சிவநெறியை ஏற்க விரும்புவதை மகிழ்வுடன் வரவேற்றனர். அவருக்குச் சிவதீட்சை செய்துவைத்துச் சிவசமயத்திற் சேர்த்துக் கொள்வதற்கான சடங்குகளையும் உடனே செய்து வைத்தனர். வரதன் சைவசமயி ஆயினார். அவரைச் சம்புகேசுவரர் கோயிற் பரிசாரகராகவும் அவர்கள் நியமித்தனர்.  சிவ சின்னங்கள் உடல் முழுவதும் பொலிவுடன் விளங்கத் தம் அன்புடையாளைக் காணச் சென்றார் வரதன். அவள் கொண்ட ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. அகமும் முகமும் மலர் அவரை வரவேற்று உபசரித்தாள். தளக்காக அவர் சைவராக மாறின செயல், அவள் உள்ளத்தே நிரம்பி நின்றது. அவரை ஆர்வத்துடன் தழுவி, அவரது காதலன்பின் பெருமைக்கு அடிமையாகிப் போற்றி இன்புற்றாள். வரதனும் கவலை தீர்ந்தவராகிக் களிப்பிலே திளைத்திருந்தார்.


தேவி உபாசகன்

            தேவி உபாசகன் ஒருவன் தனக்கு நிறைந்த புலமையைத் தந்தருளுமாறு ஒரு சமயம் தேவியை வேண்டுவானாயினான். திருவாளைக் காவிலே. சம்புகேசுவரரின் தேவியாகக் கோயில் கொண்டிருக்கும் அம்பிகையின் திருமுன்னே, இரவு பகலாகநோன்பு இயற்றியும் வந்தான். அவனுடைய கடுமையான உபாசனை, தேவியின் திருவுளத்தேயும் அவனுக்கு அருளவேண்டும் என்னும் கருணையினை உண்டாக்கிற்று. தேவி, ஒரு சிறு பெண்ணாக வடிவு எடுத்தாள். இரவின் நடுச்சாம வேளையிலும் கண்ணுறங்காதவனாகத் தியானத்திலே இருந்த அந்த உபாசகனின் முன்னே சென்று நின்றாள். அவள் திருவாயிலே தாம்பூலம் நிறைய இருந்தது. அதனை அவள் மென்றுகொண்டும் இருந்தாள். “அன்பளே! நின் வாயைத் திற, இதனை நின் வாயில் உமிழ்கின்றேன். நீ நினைத்த சக்தியை அடையப் பெறுவாய்” என்றாள் தேவி, அவன் கண்விழித்தான். எதிரே நின்ற சிறுபெண்ணின் வடிவைக் கண்டான். அவள் வாய் நிறையத் தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டிருந்த நிலையையும் கண்டான். ‘தன் தவத்தைக் கலைக்கவந்த பெண்’ என்று தவறாகக் கருதி மயங்கினான். அவளைக்கடிந்து வெருட்டவும் முற்பட்டான். ‘ஏடீ, சிறு பெண்ணே! என்னிடம் வந்து என் தவத்தைக் கலைத்து, என்னைக் கெடுக்கவோ நினைத்தனை. உடனே இங்கிருந்து அகன்று போய்விடு, இன்றேல், நான் என்ன செய்வேனோ எனக்கே தெரியாது’ என்று கூச்சலிட்டான்,

            நிறைவான அறிவு பெறுவதற்கு உரிய நற்காலம் அவனுக்கு வரவில்லை என்பதைத் தேவி அறிந்தாள். தான்கொண்ட அந்த வடிவுடனேயே திரும்புவாளானாள், வழியிலே ஒரு மண்டபத்தே உறங்கியிருந்த வரதனைக் கண்டாள். அவனுடைய நல்லூழ் அவள் நினைவிற்பட்டது. அவன் அருகே சென்று, அவனைத் தட்டி எழுப்பினாள். அருள் பெற்றான் ‘இன்று எனக்குக் குடவரிசைப் பணி உளது. இரவில் வீடு திரும்புவதற்கு நெடுநேரமாகும். தங்கள் பணி முடிந்த பின், அம்மன் கோயில் மண்டபத்தே எனக்காகக் காத்திருங்கள். நானும் அங்கே வருகிறேன். இருவரும் ஒன்றாகவே வீட்டுக்குப் போய்விடலாம்’ இப்படிச் சொல்லியிருந்தாள், அன்று மாலை மோகனாங்கி. அவன் விருப்பப்படியே, தம் பணி முடிந்ததும், மண்டபத்தே சென்று வரதர் அவளுடைய வருகையை எதிர் பார்த்தபடி காத்திருந்தார். அங்கேயே படுத்து அயர்ந்து உறங்குபவரும் ஆயினார்.

            மோகனாங்கி தான் சொன்னபடியே மண்டபத்திற்கு வந்தாள். அவர் உறங்கிக் கிடப்பார் என்று நினையாத அவள். அவரைக் காணாமையால், அவர் வீட்டிற்கே போயிருப்பார் எனக் கருதித் தானும் சென்றுவிட்டாள். கோயிலாரும், குடவரிசை முடிந்தபின், கோயிற் பெருங் சுதவை மூடித் தாளிட்டு விட்டனர். அந்த நிலையிலேதான், தேவி அவரிடத்தே சென்றனள். வரதரை எழுப்பி, ‘வாயைத் திற’ என்றதும், அவர் வாய் தானாகவே எவ்வித மறுப்புமின்றித் திறந்து கொண்டது. தேவியும் தன் வாயின் தாம்பூலச்சாற்றை அவர் வாயில் உமிழ்ந்துவிட்டுச் சென்றாள். அந்தக் கணமே, வரதராகிய பரிசாரகரின் உள்ளத்தில் பெரியதொரு உத்வேகம் எழுந்தது. கடல் மடை திறந்தாற் போன்று அவர் கவிமழை பொழியலானார்; அவருடைய அந்தப் புதிய சக்தியை நினைந்ததும், அவருக்கே வியப்பாக இருந்தது. தேவியின் கருணைப் பெருக்கை எண்ணி அவளைப் பாமாலையால் போற்றினார்.


காளமேகம் ஆயினார்


            பொழுது விடிந்ததும், பழைய பரிசாரகராக வரதர் இல்லை. முத்தமிழ் தவழ்த்துவரும் செஞ்சொற் கவிஞராக அவர் விளங்கினார். தம் அன்புக் காதலியிடம் சென்று தம்முடைய கவித்திறனைக் காட்டினார். தேவியின் திருவருளையும் விளக்கமாக உரைத்தார். அவளும் அதனைக் கேட்டதும், தேவியின் திருவருளைப் போற்றிப் பேரின்ப வயத்தினளாயினாள். அன்று முதல், ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பொழியும் காளமேகமாக ஆயினார் வரதன். தமக்கு அருள்பாலித்த தேவியின் கருணைக்கு நன்றியாகத் ‘திருவானைக்கா உலா’ என்னும் அரியதொரு பிரபந்தத்தைச் சொற்கவையும் பொருட் சுவையும் மிளிரும்படியாக இயற்றினார். உலாவின் இனிமை அறிவுடையோரை ஆட்கொள்ள, அன்று முதல் அனைவரும் கவி காளமேகம் என்றே அழைக்கலாயினர்,”

தல யாத்திரை

            திருவானைக்காவிலே தம் அன்பிற்கு உரியவளான மோகனாங்கியுடன் சில காலம் இன்புற்று இருந்த பின்னர் தமிழகம் முழுவதும் சென்று தம் கவிதை வெள்ளத்தைப் பரப்பிவர வேண்டுமென்னும் பேரவா இவருக்கு எழலாயிற்று. அதனால், அவனிடத்தே பிரியாவிடை பெற்றுத் தமிழ் நாடெங்கணும் காளமேகம் செல்வாராயினார். செல்லும் இடங்களில் எல்லாம் கவிமழை பொழிந்து, தமிழகம் முற்றும் தம்மைப் போற்றப் புகழ்க்கொடியும் நாட்டினார். பின்னர், மீண்டும் திருவானைக்காவிற்கே வந்து மோனாங்கியுடன் இன்பமாக வாழ்ந்திருந்தார்.

திருமலைராயன்

            தஞ்சை மாவட்டத்துக் கடற்கரையோரத்தே, நாகைக்குச் சில கல் தொலைவிலே விளங்கும் திருமலைராயன் பட்டினம் என்னும் ஊரினைத் தலைநகராகக்கொண்டு, அந் நாளையிலே ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் திருமலைராயன். விஜயநகர மன்னர்கட்கு உட்பட்ட தலைவனாக அவன் அந்தப் பகுதியை ஆண்டுவந்தான் (கி.பி.1455-1468). அவன் தெலுங்கு மொழியிளன். எனினும் அவன்பால் தமிழார்வமும் நிரம்ப இருந்தது. தமிழ்ப் புலவர்கள் பலரைத் தன் அவையிலே வைத்து அவன் உபசரித்து வந்தான். அவனுடைய தமிழன்பின் சிறப்பையும், வள்ளன்மை யினையும் கேட்டறிந்தார் காளமேகம். தாமும் சென்று அவனைச் காணவும், அவனைப் பாடி பரிசில்பெற்று வரவும் விரும்பினார். அந்த விருப்பத்தைச் செயற்படுத்துவதற்கான தக்க நேரத்தையும் எதிர்பார்த்திருந்தார்!.

தண்டிகைப் புலவர்கள்

            மேற்சொன்ன திருமவைராயன் அவையிலே, அறுபத்து நான்கு புலவர்கள் ‘தண்டிகைப் புலவர்கள்’ என்ற சிறப்புடன் திகழ்ந்தனர்.அரசனால் அளிக்கப்பெற்ற விருதான பல்லக்குகளிலே அமர்ந்து அவர்கள் செல்வார்கள். அதனால் தண்டிகைப் புலவர்கள் ஆயினர். அந்தச் சிறப்பும் செழுமையும் அவர்க ளிடத்தே புலமையைக் காட்டினும் செருக்கினையே பெருக்கிக் கொண்டிருந்தன. தம் அரசனின் உதவியை நாடிவரும் பிறபுலவர் சுளை எல்லாம் வஞ்சகமாக மடக்கிக் தலைகவிழச் செய்து, அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

            வறுமையிலே வாடி. அரசனின் உதவியை எதிர்பார்த்தவர்க ளாகவும், புலமையால் அரசனிடத்தே பரிசுபெறுவதை விரும்பியவ ராகவும் வந்த புலவர்களுட் பலர், இந்தத் தண்டிகைக் கூட்டத்தினரின் செயலினால் மனங்குன்றி, யாதும் பெறாதே வருத்தமுடன் திரும்பிச் செல்வாராயினர். இந்த கும்பலின் கொடுஞ்செயல் பற்றிய செய்தி தமிழகத்தின் எப்புறத்தும் பரவி இருந்தது. ‘இவர்கள் செருக்கினை அடக்கி இவர்களுக்குத் தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டும்’ எனக் காளமேகம் நினைத்தார். அதிமதுரக் கவி இந்தத் தண்டிகைப் புலவர்களின் தலைவராகத் திகழ்ந்தவர் அதிமதுரக் கவிராயர் என்பவர். மிகவும் இனிதான கவிதைகள் இயற்றலிலே வல்லவர் அவர். அதனால் அரசன் அவருக்கு மனமுவந்து அளித்த விருதே ‘அதிமதுரக் கவிராயர்’ என்பது. அந்தப் பெயருக்கு ஏற்றவாறே புலமைச் செறிவு உடையவராகவும் அதிமதுரம் விளங்கினார். இவருடைய சொந்த ஊர் ‘திருக்கோயிலூர்’ என்பர். இதற்குச் சான்றாகக் ‘கோவன் மதுரா’ எனஒரு செய்யுளில் வருவதனையும் காட்டுவர். திருக்கோயிலூர் மலையமான்களுக்கு உரியதாகப் புகழுடன் விளங்கியதோர் ஊராகும். இந்நாளில், தென்னாற்காட்டு மாவட்டத்தே உள்ளது. இவ்வூரவரான இப்புலவர், தம்முடைய கவிவன்மையினாலே, திருமலை ராயளின்பாற் சென்று, அவன் அன்பைப்பெற்று, அவன் அவைப் புலவர் தலைவராகவும் விளங்கிவந்தனர்.

            புலமைச் செறிவுடையவர் எனினும், ஒருவர் அகந்தைப் பெருநோய்க்கு இடங்கொடுத்தால் அவர் புகழடைதல் கூடுமோ! அந்த நிலைக்கு அதிமதுரமும் உள்ளாயிருந்தனர். அரசன் அளித்த தகுதியும், செல்வ சம்பத்துகளும் இவரை அகந்தையுடையோராக ஆக்கியே அலைக்கழித்தன. இவருடைய செருக்கை அடக்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணமும் காளமேகத்திற்கு எழுந்தது. அது நிறைவேறத் தொடங்கும் காலமும், திருமலைராயன் பட்டினத்து முத்துக் குளித்தலின் தொடக்கத்துடன் வரலாயிற்று,

முத்து வேண்டும்

            நாட்டின் பல பகுதிகளிலும், திருமலைராயன் பட்டினத்து முத்துக்குளித்தலைப் பற்றிய செய்தி பரவலாயிற்று, அங்கு தன்முத்துக்கள் பல கிடைத்தும் வந்தன. அவற்றை வாங்கும் பொருட்டுப் பல திசையினரும் அங்குச் செல்வாராயினர். அப்படிச் சென்று வந்தவர்களுள் ஒருவர் மோகனாங்கியிடம் சென்று, தாம் கொண்ட சிறந்த முத்துக்களைக் காட்டினர். அவற்றைக் கண்டதும், அவளுடைய உள்ளத்தே ஆசைப்புயல் கால்கொள்ளலாயிற்று. அவள் பெண் அல்லவா! திருமலைராயனைக் கண்டு, அவனால் அளிக்கப் பெறும் பரிசினைப் பெற்றுவர வேண்டும் என்ற ஆர்வமும், அவன் அவைத் தலைவரான அதிமதுரத்தை வென்று செருக்கொழித்து வரவேண்டும் என்ற தினைவும் கொண்டிருந்த காளமேகத்திடத்தே, மோகனாங்கி, ஒருநாள் தன் முத்து விருப்பத்தையும் பக்குவமாகச் சொன்னாள். ”சுவாமி! திருமலைராயன் பட்டினத்திற்குப் போய் ஒரு முத்துமாலைக்குத் தேவையான அளவு முத்துக்கள் பெற்று வாருங்களேன்” என்றாள் அவள். அவரும் அதற்கிசைத்தவராக அன்றே தம் பயணத்தைத் தொடங்கினார்.

கண்ட சாட்சி

            பல நாட்கள் நடந்து, பல ஊர்களையும் கடந்து, ஒரு நாள் காலை வேளையிலே திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார் காளமேகம். அந்த ஊரின் வளமையைப் பறைசாற்றுவன போல மாடிவீடுகள் இருபுறமும் வானத்தைச் சென்று முத்தமிட முயல்வனபோலத் திகழ்ந்த ஒரு தெரு வழியே அவர் சென்று கொண்டிருந்தார். ஒரு பெரிய ஊர்வலம் அப்போது எதிரே வந்துகொண்டிருந்தது.

            மங்கல பேரிகைகள் ஜாம் ஜாமென்று முழங்க, சுற்றிலும் மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்திப்போற்ற, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பெற்ற பல்லக்கு ஒன்றிலே அமர்ந்தபடி, அதிமதுரக் கவிராயர் அந்த ஊர்வலத்தின் நடுநாயகமாக வந்து கொண் டிருந்தார். அவரைத் தொடந்து அறுபத்து மூன்று பல்லக்கு களிலும் புலவர்கள் அமர்ந்து வந்தனர். கட்டியக்காரன், ‘அதிமதுரக் கவிராய சிங்கம் பராக்’ என்று கூறிவர, அத்த முழக்கம் அனைவராலும் தொடர்ந்து முழக்கப்பெற்ற முழக்கொலி வானதிர எழுந்து கொண்டிருந்தது. தமிழ்வாணர்கள் செல்லும் தகவுடைய அந்தப் பெருமிதத்தைக் கண்ட கவிஞரின் உள்ளம் பூரிப்படைந்தது. திருமலைராயனின் தமிழார்வத்தை உள்ளத்தாற் போற்றினார். ‘தமிழறிந்தாரின் நல்வாழ்வே தமிழின் தமிழரின் நல்வாழ்வாகும்’ என்பதனை உணர்ந்து, செயலிலேயும் அதை நிறைவேற்றி வந்த திருமலைராயனின் செயல் அவரைப் பெரிதும் ஆட்கொண்டது, நடுத்தெருவில் தம்மை மறந்தவராக மெய்மறந்து நின்று கொண்டிருந்தார்  காளமேகம்.

எதிர்பாராத சம்பவம்


            கட்டியக்காரர்களுன் ஒருவன், தமிழ் மயக்கத்தால் மெய் மறந்து நின்ற காளமேகத்தைக் கண்டான். அனைவரும் முழக்கும் அதிமதுரக் கவிராய சிங்கத்தின் புகழ் வாசசுத்தை அவர் கூறாது நிற்பதறிந்து வெகுண்டான். அவரருகே சென்று, தன் கைத்தடியினாலே தட்டி அவர் மயக்கத்தைக் கலைத்து, “நீயும் கவிராயரைப் புகழும் முழக்கத்தைப் பிறருடன் முழக்குவாயாக” என்றான். காளமேகம் வெகுண்டார். எனினும் நோவவேண்டியது அவனையன்று என்பதனை அறிந்த அவர், அதிமதுர மென்றே அகிலம் அறியத்துதிமதுர மாயெடுத்துச் சொல்லும்-புதுமையென்ன காட்டுச் சரக்குலகிற் காரமில் லாச்சரக்குக் கூட்டுச் சரக்கதளைக் கூறு- என்ற செய்யுளை உடனே சொன்னார். ‘அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு: அதை எதற்காக இப்படிப் போற்றி முழக்க வேண்டும்?” என்ற ஏளனம் செய்யுளில் எதிரொலித்தது. கட்டியக்காரன் அவரைப் புலவர் என்று அறிந்து கொண்டான். அந்தச் செய்யுளையும் நடந்த சம்பவத்தையும் அதிமதுரத்திடம் சென்று சொன்னான். அவர் அதனைக் கேட்டதும், ஏளனம் செய்தவரைத் தலைகுனிய வைக்க எண்ணினார். அவர் யாவரென அறிந்து வருமாறு அந்த ஏவலனைப் பணித்துவிட்டு, ராஜசபையை நோக்கிச் சென்றார். சூழ்ச்சிக்கு முனைதல் அரசவையினை அடைந்த அதிமதுரம், வழியிடையே தாம் கண்ட புதிய கவிராயரையும், அவர் சொன்ன செருக்கான அந்தச் செய்யுளையும் தண்டிகைப் புலவர்கட்கும் அரசனுக்கும் மிக வருத்தத்தோடு எடுத்துச் சொன்னார். அவரை எப்படியும் அவமானப்படுத்தி அனுப்பவேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

        காளமேகத்தைப்பற்றி அறியச் சென்ற கட்டியக்காரன் அவைக்கு வந்தான், கவிராயரே தந்த ஒரு சீட்டுக்கவியினை அதிமதுரத்திடம் தந்து நின்றான். அதனைப் படித்ததும் அதிமதுரம் மேலும் சினம் கொண்டார், அதனைப் படித்த அரசனும் அறிந்த பிறரும் அவ்வாறே ஆயினர். அவையில் வந்தனர். ‘அந்தப் புலவரை உடனே இங்கு கொண்டு வருக. நம் அவைப்புலவர் பெருமானைப் பழித்த அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கட்டி இழுத்தாயினும் கொணர்க’ என்று ஆணையிட்டுத் தன் ஏவலரைப் போக்கினாள் திருமலைராயன். அவர்களும் காளமேகத்தை அணுகி அரசனின் ஆணையைக் கூற அவரும் நிகழ்ந்திருக்கும் குமுறலை எண்ணியவாறே அவர்களைத் தொடர்த்தார். அரசவையிலே நுழைந்தார் காளமேகம், மன்னனை வாழ்த்தினார். தாம் கொண்டு வந்திருந்த எலுமிச்சம் பழத்தை அவளிடம் அளித்தார். அதனை வாங்கிய அவன், அவருக்கு இருக்கை அளித்து உபசரியாமல் வாளாயிருந்தான். காளமேகம் அதனைக் கண்டு சிரித்தார். அதிமதுரத்தின் சூழ்ச்சி வலையிலே அரசனும் சிக்கியிருந்த உண்மையைக் கண்டார். தமக்கு உதவும் தேவி அகிலாண்டவல்லி கோயில் கொண்டிருக்கும் திசையை நோக்கிக் கரங்குவித்து தியானித்தார். அதன்பின் தமக்கொரு இருக்கை அருளுமாறு கலைமகளை வேண்டிப் பாடினார்.

            அப்போது திருமலைராயன் வீற்றிருந்த சிம்மாசனமே ஒருபுறமாக வளர்ந்து பெருகிற்று. பெருகி வளர்ந்த அந்தப் புறத்தே சென்று கம்பீரமாக அமர்ந்துகொண்ட காளமேகம், தமக்குத் துணை செய்த கலைவாணியை மீண்டும் போற்றினார். கண்டோர் அனைவரும், அவருடைய தெய்வீக சக்தியைக் கண்டு, எதுவும் சொல்லுவதற்கு வாயெழாமல் திகைப்புற்றிருந்தனர். காளமேகமோ அங்கிருந்த புலவர்களைச் சுட்டி, ‘நீவிர் யாவரோ?’ என்று மிகவும் கனிவாகக் கேட்டனர். அவர்கள் ‘யாம் சுவிராயர்கள்’ என்றனர். ‘கவிராயர்’ என்ற பதத்தினைக் ‘குரங்குகள்’ என்று பொருள்கொண்டு காளமேகம் கேலியாக உரையாடப் புலவர்கள் பெரிதும் சீற்றங்கொண்டனர். ‘நீவிர் யாவரோ?’ என்று அவர்கள் கேட்க, இவர் ‘யாமே காளமேகம்’ என, அதனைக் ‘கார்மேகம்’ எனப்பொருள் கொண்டு அவர்களும் ஏளனம் செய்தனர். அதனைக் கேட்டதும் கவிபாடுதலில் தாம் காளமேகம் என்று ஒரு செய்யுனைக் கவிஞர் சொல்லினர்.

            அதிமதுரக் கவிராயர், ‘எம்போல் நீவிர் விரைவாகக் கவிபாட வல்லீரோ? என்னும் பொருள்பட, ‘மூச்சு விடு முன்னே’ என்ற செய்யுளைச் சொல்வக் காளமேகம் ‘அதனினும் விரைவாகப் பாடுவோம்’ என்று பொருள்படும் ‘அம்மென்னும் முன்னே’ என்ற செய்யுளைச் சொல்லினர். அரிகண்டம் காளமேகத்தின் செயலினால் சினம் மிகுதியாகப் பற்றித் தம்மை எரிக்க, அதிமதுரம், ‘நீர் அரிகண்டம் பாடி எம்மை வெற்றிபெற இசைகின்றீரா?’ என்றனர்.  ‘அரிகண்டமோ? அதன் முறைமை எப்படியோ? சொன்னால், யாம் அதன்பின் எம் இசைவைச் சொல்வோம்’ என்றனர் காளமேகம். “கழுத்திலே சுத்தியைக் கட்டிக்கொள்ள வேண்டும். கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் செய்யுள் சொல்ல வேண்டும்; சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப்பிழை இல்லாமலும் இருக்க வேண்டும். பிழைபட்டால் கழுத்து வெட்டப்படும்; வென்றால் பாராட்டப் பெறுவார்கள்’ என்று விளக்கினார் அதிமதுரம். அதனைக் கேட்டுக் காளமேகம் கதிகலங்கிப் போவார் என்று எதிர்பார்த்த அதிமதுரம் திடுக்கிட, ‘அரிகண்டம் ஒரு பெரிதோ? ‘யாம் எமகண்டமே பாடி உங்களை வெல்வோம்’ என்று காளமேகம் முழங்கினார். ‘எமகண்டமோ’ என்ற திகைப்புடன் அதிமதுரம் வினவ, காளமேகம் அதனை விளக்கினார்.


எம கண்டம்

            பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழம் உடையதாகப் பூமியிலே ஒரு பெரிய குழியினை முதலிலே வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நாற்றப் பெறும். அவற்றின் மேலாக, நாற்புறமும் சட்டமிட்டு, அச் சட்டங்களின் நடுப்பகுதியிலே இரு குறுக்குச் சட்டங்களை இடவேண்டும். அந்தக் குறுக்குச் சட்டங்கள் சந்திப்பதும், குழிக்கு நடுவே மேலேயிருப்பதுமான பகுதியிலே இரும்புச் சங்கிலிகளால் தாழவிடப்பெற்ற உரியொன்று தொங்கும். குழியினைப் பருத்த புளியங்கட்டைகளால் நிரப்பி, அதன் நடுவிடத்தே ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பரையை வைத்து, அதனுள் அரக்கு, மெழுகு, குங்குலியம் போன்றவைகளை இடவேண்டும். கட்டைக்கு நெருப்பிட்டு, அந்த எண்ணெய்க் கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கும் பருவத்திலே, போட்டி விடுபவர் அந்த உரியிற் சென்று அமர்ந்து கொள்வார். நயமான எஃகினாலே அடித்ததும், கூர்மையாகச் சமைத்ததும், பளபளவென்று தீட்டப்பெற்றதுமான எட்டுக் கத்திகளைச் சங்கிலியிற் கோர்த்து, அப்படி உரியிலிருப்பவர் தம் கழுத்தில் நான்கும், இடையில் நான்குமாகக் கட்டிக் கொள்வார்.

            குழியின் நான்கு முனைகளிலும் நாற்றியிருக்கிற தூண்களருகே நான்கு யானைகளை நிறுத்தி, அந்தக் கத்திகளிற் கோர்த்த சங்கிலிகளை அவற்றின் துதிக்கைகளினாற் பற்றியிருக்கும் படியும் செய்யவேண்டும். இந்த நிலையிலே, உரியிலிருப்பவர், கொடுக்கப்பெறும் குறிப்புகளின்படி எல்லாம் அரை நொடி அளவிற்குள்ளாக ஏற்ற செய்யுட்களைச் சொல்லி வருவார். அச் செய்யுட்கள் பிழைபட்டாலோ, அன்றி அவர் செய்யுளே கூறத் தவறினாலோ, யானைகள் பற்றியிருக்கும் சங்கிலிகளை இழுக்க கழுத்தும் இடையும் துண்டிக்கப்பட்டு, அவர் உடல் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரையுள் வீழ்த்தப்படும். இதுவே எமகண்டம் பாடுவது என்பது. இதனை நீர் செய்வதற்கு வல்லீரோ?” என்றனர் காளமேகம்.


வென்ற கவிஞர்

            அதிமதுரத்திற்கு அதனைக் கேட்டதும் நடுக்கம் எடுத்தது. அத்தகைய போட்டியை நினைக்கவே அச்சம் எழுந்தது. காளமேகத்தையே அதனிடத்து ஈடுபடுத்திவிட நினைத்தார். “எம்மைப் பாடுவீரா? எனக் கேட்கும் நீர்தாம் அங்ஙனம் பாட வல்லீரோ?” என்றார். காளமேகம் அதற்கு இசையவே, திருமலைராயன் போட்டிக்கான ஏற்பாடுகளை எல்லாம் விரைவாகச் செய்தான். போட்டி பற்றிய செய்தி நாற்றிசையும் பரவிற்று.

திருமலைராயன் பட்டினத்தே நிகழும் அந்த வைபவத்தைக் கண்டு களிப்பதற்கெனப் பெரியதொரு புலவர் கூட்டமும் வந்து திரண்டது. போட்டியும் தொடங்கிற்று. அதிமதுரமும் அவரைச் சேர்ந்த தண்டிகைப் புலவர்கள் அறுபத்து நால்வரும் பற்பல குறிப்புகளைக் கொடுத்தனர். அவற்றுக்கு எல்லாம் ஏற்ற செய்யுட்களைச் சொல்லியபடி கம்பீரமாக வீற்றிருந்தார் காளமேகம், போட்டியில் அவர் வெற்றிபெற்றார் என்றும் அறிவித்தனர். போட்டியில் வெற்றிபெற்ற பின்னரும், அவரைப் போற்றி உபசரியாது அலட்சியப்படுத்தினான் திருமலைராயன். தன் அவைப் புலவர்களை அவர் அவமானப் படுத்திவிட்டார் என்ற நினைவே அவன்பால் நிரம்பி நின்றது. காளமேசும் அரசனின் செயலைக்கண்டு மனங்குமுறினார், இவர் கவிதையுள்ளம் கனலும் உள்ளமாயிற்று. அவ்வூர் அப்படியே அழியுமாறு வசை பாடினார். தாம் விரும்பிவந்த முத்துக்களையும் மறந்து வெளியேறினார். பல இடங்கட்கும் சென்று மீண்டும் திருவாரூர் வந்து தியாகராசப் பெருமானை வழிபடுபவராகச் சில நாட்கள் அவ்விடத்தே தங்கியிருந்தார்.

மண்தின்ற பாணம்

            அப்படித் தங்கியிருந்த நாளிலே, அதிமதுரக் கவிராயரும் திருவாரூர்ப் பெருமாளைத் தரிசிக்க வந்திருந்தார். பெருமானைப் போற்றிச் செய்யுள் செய்ய நினைத்த அவர் ‘நாணென்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தான்,’ என்று தொடங்கி, மேலே முடிக்கும் வகையறியாதவராய் மதிற்சுவரில் எழுதிவிட்டுச் சென்றிருந்தார். பிற்றைநாள் வந்தவர், தம் செய்யுள் முடிக்கப் பெற்றிருந்ததைக் கண்டதும் வியந்து நின்றார். நானொன்றால் நஞ்சிருக்கும் நற்சாபம் கற்சாபம் பாணந்தாள் மண்தின்ற பாணமே-தாணுவே சீராரூர் மேவும் சிவனேநீ யெப்படியோ
 நேரார் புரமெரித்த நேர் என்ற அந்தச் செய்யுளின், ‘மண் தின்ற பாணம்’ என்ற வாசகம் அவரை அப்படியே மெய்ம்மறக்கச் செய்தது. அதனை எழுதியவர் காளமேகமே என்று அறிந்த அவர், அவர் புலமைச் செறிவை வியந்து உளமாறப் பாராட்டி உவந்தார். தாமும் பிற புலவர்களும் சேர்ந்து அவரை எதிர்த்து வாதிட்டதெல்லாம் அவர் நினைவில் அலையலையாக எழுந்தன, கவிராயரின் சாபத்தினாலே மண் மாரியுற்று அழிந்த திருமலைராயன் பட்டினத்தையும் நினைத்துக் கொண்டார். தம்முடைய தவறான போக்கே அதற்கெல்லாம் காரணமாயிற்று என நினைத்து வருந்தினார்.

            அவர் உள்ளத்தே காளமேகத்தின்பாற் கொண்டிருந்த பகைமையும் மறையலாயிற்று, புதியதொரு அன்பும் மதிப்பும் ஊற்றெடுக்க வாயிற்று. அவரைக் காண விரும்பி அவர் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்தார். ஆனால், அதற்குள் காளமேகம் புறப்பட்டு வேற்றூர் சென்று. விட்டதறித்தார், வருத்தமுடன் திரும்ப வேண்டியதாயிற்று. காலமும் சூழ்நிலையும் மனத்து எழுகின்ற ஆணவ நினைவுகளை எப்படியோ மாற்றிவிடுகின்றன. அந்த அதிசய சக்திகள், அதிமதுரத்தையும் காளமேகத்தைப் பாராட்டும் உயரிய நிலைக்குக்கொண்டு செலுத்தின.


மறைவும் துயரமும் பல


            திருவாரூரிலிருந்து புறப்பட்டார் காளமேகம். ஊர்களுக்கும் சென்று வழிபட்டவராகத் திருவாளைக்காவிளை முடிவிற்சென்று சேர்ந்தனர். அங்கே மோகனாங்கியிடம் நடந்ததைக் கூறினார். அவளும் முத்தினை மறந்து அவருடைய செயலைப் போற்றிப் புகழ்ந்தாள். இருவருடைய வாழ்வும் இப்படியே சிலகாலம் இன்பமுடன் நடந்து கொண்டிருந்தது. காளமேசுத்திற்கு வயதுமுதிர்ச்சியின் தளர்வும், சோர்வும் தொத்திக்கொள்ளத் தொடங்கின. சுவிமழை பொழிந்த காளமேகம், கவிச்சுவையால் கல்விவல்வோரையும் தலை வணங்கிப் போற்றச்செய்த புலவர்பெருமான், ‘வசை பாட காளமேகம்’என்ற இசையோடு வாழ்ந்த தமிழ் வீறு உடையார், ஒரு நாள் உடற்கூட்டைவிட்டு நீங்கினர். மோகனாங்கி மட்டும் அன்று கதறிக் கண்ணீர் சொறியவில்லை, அவருடைய மோகனக் கவி இனிமையிலே தினைத்த தமிழகம், தமிழ்ப் புலவர் உலகம். முழுவதுமே சுதறிக் கண்ணீர் பெருக்கியது.


அதிமதுரப் பாடல்

            அதிமதுரக் கவியின்காதுகளிலும் இந்தத் துயரச் செய்தி சென்று விழுந்தது. வேதனைக் கடலிலே சிக்கி அவர் மனம் மீளாத்துயருற்றது. அப்போது அவர் பாடிய கவிதை மிகவும் உருக்கமானது.

வாச வயல் நந்தி வரதா திசையனைத்தும்

பூசு கவிகாள மேகமே-பூசுரனே விண்தின்ற

வெவ்வழலில் வேகுதே பாவியேன் மண்தின்ற

பாணமென்ற வாய்.

            என்பது அந்தச் செய்யுள். ‘மண் தின்ற பாண மென்ற வாய்’ என்று சொல்லித் துயருற்றுப் புலம்பினார் அவர். இப்படித் தமிழ் நாவலர் சரிதையிலே விளங்குகிறது இந்தத் திருவாரூர் நிகழ்ச்சி. இது இரட்டையர்கட்கும் இவர்க்கும் நடைபெற்றதாகவும் சிலர் கூறுவர். 

 நன்றி –        புலியூர்க் கேசிகன்

உங்களை வித்தியாசப்படுத்துங்கள் | தன்னம்பிக்கை கட்டுரை

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

          இலக்கை கொண்டு வாழும் உங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும். அதாவது குடும்ப உறவுகள் நண்பர்கள் என்று அவர்களிடம் வளைந்து கொடுக்கலாம். ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை. நீர்நிலைகளில் பார்த்திருப்பீர்கள் நாணல் புல் உயரமாக நீரில் வளரும் ஒருவகை புல். அது எவ்வளவு புயலடித்தாலும்கூட அந்தக் காற்று அடிக்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும். ஆனால் உடையாது. காற்று சென்றவுடன் முன்பு போலவே எழுந்து நிற்கும். அதன் தண்டு உறுதியாக இருக்காது. அதே சமயம் மரங்கள் உறுதியான கிளைகளுடன் நன்றாக வேரூன்றி நிற்கும், பலமாகக் காற்றடித்தால் வளைந்து கொடுக்காது உடைந்து விடும். எனவே மனித வாழ்க்கையும் அப்படித்தான். உண்மையான நேர்மையானவர்களிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அநீதி, அதிகாரம், கொடுமை போன்றவை நடக்கும் இடத்தில் எதிர்த்து நில்லுங்கள். அவை ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இது உங்களின் தேசமல்லவா, இந்தத் தேசம் உங்கள் கண் முன்னே பணபலத்தாலும் பதவி அதிகாரத்தாலும் அமைதியை இழக்கலாமா! எதிர்மறையான செயல்பாடுகளைத் தேசத்தின் உள்ளே ஒருபோதும் நுழைய விடாதீர்கள்.

இது உங்கள் தேசம்

         இது உங்கள் தேசம். உங்கள் நாடு, உங்கள் ஊர், உங்களின் சுற்றத்தார் என்பதை நினைவில் வையுங்கள். இந்த உலகத்தில் நடக்கும் நியாய அநியாயங்களுக்கும் உங்களுக்கும் பங்கு உண்டு என்ற உண்மையை அறிந்து கொள்ளுங்கள். அதே வேளையில் உங்களின் இலட்சியம் என்ன என்பதை மறவாதீர்கள்.

        நீங்கள் எத்தனையோ நபர்களிடம் பழகியிருப்பீர்கள். அவர்கள் வேறுமாதிரி கூட இருக்கலாம். இலட்சியமே அற்றவர்களாக தீயபழக்கங்களைக் கொண்டவர்களாக தீயன பேசுபவராகவும் இருக்கலாம். அவர்களின் பேச்சை, சிந்தனையை, செயல்பாடுகளை நீங்கள் அருகிருந்தும் பார்க்கலாம். ஆனால் அவர்களால் உங்களின் இலட்சியம் மாறக்கூடாது. நீங்கள் எடுத்துக்கொண்ட செயலில் தொடர்ந்து உழைக்க வேண்டும். உங்களின் சுவாசமும் இலட்சியத்தையே சுவாசிக்க வேண்டும். வெற்றி பெறுவதற்கான தனல் உடல் முழுவதும் பரவி கனன்று கொண்டே இருக்க வேண்டும்.

இடற்பாடுகள் மனதை மாற்றக்கூடாது

      ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஆறு ஒன்று அழகாகச் சலனமே இல்லாமல் அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. அப்பகுதி மக்கள் அந்த ஆற்றைக் கடந்துதான் வெளியில் செல்ல வேண்டும். ஒரு நாள் துறவி ஒருவர் அந்த ஆற்றைக் கடப்பதற்காக நீரில் இறங்கி நடக்கத் துவங்கினார். அப்போது ஒரு தேள் ஒன்று நீரில் அடித்து வரப்பட்டது. அது தன்னை காப்பாற்றுமாறு கத்தியது. துறவி சில நொடிகள் யோசித்தார், தேள் கூறியது நான் உங்களை கொட்டமாட்டேன். எனக்கு உதவுங்கள் என்று பதறியது. அந்தத் துறவி தேள்மீது அனுதாபம் கொண்டு தன் உள்ளங்கையில் அதனை ஏந்திக்கொண்டு நீரில் நடையை தொடர்ந்தார். தேளுக்கு நிம்மதி. அப்பாடா தப்பித்தோம்! பிழைத்தோம் என்று பெருமூச்சு விட்டது. சிறிது தூரம் நடந்தார் துறவி, அவரின் கையில் தேள் கொட்டிவிட்டது. துறவி தேளைப்பார்த்தார் மீண்டும் நடந்தார், மீண்டும் தேள் கொட்டியது. துறவி ஆற்றின் மறுகரையை அடைவதற்குள் மீண்டும் கொட்டி விட்டது. துறவி அமைதியாகவே சென்று சேர்ந்தார். தேளை தரையில் விட்டார். அவ்வேளை அவரின் கையில் நஞ்சு ஏறிக்கொண்டே இருந்தது. தேள் கேட்டது “நான்தான் கொட்டி விட்டேனே மீண்டும் எதற்காக என்னை காப்பாற்றினிர்? என்று கேட்டது.

துறவியானவர் பதிலுக்கு மறுகேள்வி கேட்டார். என்னை கொட்ட மாட்டேன் என்று கூறிவிட்டு நீ ஏன் கொட்டினாய்” என்றார்.  “கொட்டக்கூடாது என்றுதான் நினைத்தேன் ஆனால் அதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டது. துறவி கூறினார் “மற்றவர்களை கொட்டுவது உன்னுடைய இயல்பு. தமக்கு எது நடந்தாலும் தான்கொண்ட முடிவில் மாறாமல் இருப்பது என்னுடைய இயல்பு என்று கூறினார். எனவே தமக்கு வரும் துன்பங்களால் உங்களின் முடிவு மாறக்கூடாது.

உங்களை வித்தியாசப்படுத்துங்கள்

      உலகில் எல்லா வகையான மக்களும் வாழ்கிறார்கள். எல்லோரிடமும் பழகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் மனிதர் இப்படியும் இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். அவர்களில் இருந்து எந்த முறையால் செயல்பாட்டால் வித்தியாசப்படுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். எனவே உங்களின் குணத்தையோ இலக்கையோ மாற்றாமல் உறுதியாக செயல்படுங்கள்.

நீங்கள் உங்கள் செயல்பாடுகளில் சரியாகச் செய்து அதாவது, உங்கள் மனதிற்கு திருப்தி வரும் அளவிற்கு கடமை ஆற்றியும் அது உங்களின் குடும்பமாக இருந்தாலும் சரி அலுவலகமாக இருந்தாலும் சரி மற்றவர்கள் குறை கூறுகிறார்கள் என்றால் அதற்காக வேதனைபடாதீர்கள். குறை பார்ப்பவரின் பார்வையிலும் மனத்திலும் இருக்கலாம். ஒருசெயல் சரியாகச் செய்யப்பட்டு அதுகுறை கூறப்படுகிறது என்றால் அது செயலில் அல்ல. கூறுபவர் மனதில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் எந்தவித குறையும் கூறக்கூடாது என்றும் எதிர்பார்க்காதீர்கள். நல்ல செயல்களைப் பாராட்டும் மனநிலையில் உள்ளவர்கள் இங்கு சிலரே ஆவர். கசப்பான எண்ணங்களையும் தீய சிந்தனைகளையும் மனதில் நிரப்பிக்கொண்டு உலாவரும் மனிதர்களிடம் நல்ல சொற்களை எதிர்பார்க்க முடியாது. குறைகூறுவதும் அவமானப்படுத்துவதும்தான் அவர்களிடம் வெளிபட முடியும். மாலை வேளையில் மலரும் மல்லிகையின் நறுமணத்தை குப்பைகளை நிரப்பி வைத்துள்ள இடத்தில் எதிர்பார்க்க கூடாது. இதை புரிந்து கொண்டு செயல்படுங்கள்.

நீங்கள் செல்லும் பாதை அது அடைய வேண்டிய இலக்கு அதனால் உண்டாகும் சமூக நன்மை இவற்றில் உங்களை நிலை நிறுத்திக்கொண்டு பாடுபடுங்கள். வெற்றி உங்கள் கைகளுக்கு எட்டும் தூரம்தான்.

இந்த உலகில் நடக்கும் எந்த இயற்கை மாற்றமும் ஒரு நபரின் செயல்பாடுகளும் வசைகளும் உங்களை வந்தடைந்தாலும் நீங்கள் செல்லும் மார்க்கத்திலிருந்து மாறக்கூடாது.

யாருடையச் சொற்களும் எந்தச் செயல்பாடுகளும் உங்களின் மனநிலையை மாற்ற இயலவில்லை என்றால் நீங்கள்தான் உன்னதமானவர்.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்

 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

13.விருட்சத்தின் விதை – வெற்றி

விருட்சத்தின் விதை – வெற்றி

விருச்சத்தின்-விதை-வெற்றி

விருட்சத்தின் விதை – வெற்றி

            மனித  வாழ்வில் நடக்கும் அனைத்து வகையான செயல்களுக்கும் ஏதோ ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும். மனிதர்களில் பலர் சமுதாயத்தில் புலம்புவதைப் பார்க்கலாம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. நான் மட்டுமே இவ்வளவு துன்பங்களை அனுபவிக்கின்றேன் என்று வேதனைபடுவார்கள். ஆனால் அந்த இடர்பாடுகளில் இருந்து, தம்மை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று முயற்சிப்பதில்லை.

         இன்னல்கள் எந்த ரூபத்தில் வந்தாலும் அதிலிருந்து மீண்டு வர எதிர்நீச்சல் போட வேண்டும். அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும். வெற்றி என்ற மரத்தின் விதை என்பது அவரவர் வாழ்வில் பட்ட அவமானங்களும் தோல்விகளும் துன்பங்களும் ஆகும். தீக்குச்சி பெட்டிக்குள் இருக்கும் வரை அமைதியாக இருக்கும். அதை வெளியே எடுத்து உரசிவிட்டோம் என்றால் அதன் சக்தியை அது காட்டி விடும்.

துன்பத்திலிருந்து மீட்டெடுங்கள்

     சமுதாயத்தில் அவமானப்பட்ட இழப்பாக இருக்கலாம். கொடுக்கப்பட்ட அநீதிகள் செய்யப்பட்ட அக்கிரமங்கள், அதனால் உண்டாகும் பாதிப்புகள் என்று பலவற்றை உரமாக்கி வெற்றியின் விருட்சம் வளர்கிறது.

        நான் அறிந்த பெண் ஒருவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. அங்கு கணவன் வீட்டில் தனக்கு அன்புதான் கிடைக்கும் என்று நினைத்தவளுக்கு அடிமைத்தனத்தைப் பரிசாக்கினார்கள். மணம் செய்து கொண்ட கணவனே நீயா? நானா? என்று போட்டிக்கு நிற்பது. மட்டம் தட்டி பேசுவது இவ்வாறு பல இன்னல்கள். அந்தச் சிறுவயதில் தான் படித்தே ஆகவேண்டும் என்று படித்தாள் அப்பெண். இதற்கிடையில் கருவுற்றிருந்தாள் அவள். இருப்பினும் வெறி கொண்டு படித்தாள்.  இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தன்னை மீட்டுக்கொள்வது சரியாகும் என்று தெளிவாக முடிவெடுத்தாள். மாதங்கள் சென்றன பல அரசாங்க தேர்வுகளை எழுதுவாள். குழந்தை பிறக்கும் மாதமும் பிறந்தது. ஆனாலும் இப்பெண் ஓய்வெடுக்கவில்லை. அவள் எதிர்பார்த்த தேர்வும் வந்தது. அத்தேர்வுக்கு மூன்று நாட்கள் இருக்கும் போது குழந்தை பிறந்துவிட்டது. எனினும் அப்பெண் தேர்வு எழுத சென்று வெற்றியும் பெற்றார். அரசு அதிகாரியாகப் பணியில் அமர்த்தப்பட்டார். இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது. அப்பெண்பட்ட அவமானங்கள்தான் அவளின் மனதில் உள்ள வேகத்தையும் புத்தியில் உள்ள ஆற்றலையும் வெளிப்படுத்தியது. அவ்வாறில்லாமல் அவரின் கணவர் வீட்டில் நன்றாகக் கவனித்திருந்தால் அவர் அந்தச் சுகத்திலேயே சுகம் கொண்ட வாசனையில் மயங்கும் வண்டு போல இருந்திருப்பாரோ என்னவோ! அவரின் ஆற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமைந்திருக்காது. அதனால் துன்பத்தில் இருக்கீறீர்கள் என்றால் அதிலிருந்து எழுந்துவர முயற்சிக்க வேண்டும் இதுதான் விதியென்று இருக்கலாகாது.

உங்கள் உரிமை உங்கள் கையில்

           சமூகத்தில் எத்தனையோ முதலாளிகள் மக்கள் பலரை தம்நிலத்தில் வேலை செய்பவரை ஆயுள் முடியும்வரை அடிமைகளாகவே வைத்திருப்பர். அவரிடம் அதிகமான உழைப்பைப் பெற்றுக்கொண்டு குறைந்த ஊதியம் கொடுப்பது. அவர்களுக்குப் போதவில்லை என்றால் வட்டிக்கு கடன் கொடுப்பது. அந்தக் கடனை கட்டுவதற்குள் புதிதாகக் கடனை பெற்று விடுவார்கள். எனவே இறுதிவரை கடனை அடைக்கவே முடியாமல் வாழ்நாள் முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்துவிடுவர். இம்மாதிரியான மக்களுக்காகப் பாரதிதாசன் குரல் கொடுக்கிறார் “ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால், ஓர் நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ” என்று அடிமைத்தனத்திலிருந்து வருவதற்கு யோசனை கூறுகிறார். ஓடப்பர் என்பவர் உழைக்கும் மக்கள். அந்த உழைப்புக்கு தகுந்த ஊதியம் வேண்டும் என்று கேட்பது அவர்களின் உரிமை. எனவே அவர்களின் உரிமையை எதிர்த்து கேட்டால் உயரப்பராய் இருக்கும் முதலாளிகளுக்கு வேறுவழியே இல்லை. சமாதானத்திற்கு ஏழை மக்கள் கூறும் நிபந்தனைகளுக்கு வந்தே ஆகவேண்டும். எனவே தமக்கு சேரவேண்டிய ஊதியத்தைக்கூட  கேட்டுப்பெறவில்லை என்றால் யார்வந்து முன்நிற்பது? ஆதலால் அவரவர் உரிமை அவரவர் கையில் உள்ளது.

உழைத்தால்தான் மனிதன்

            மனிதர்களில் சிலர் மற்றவரின் உழைப்பை உறிஞ்சி உண்டு தன்உடலை பெருக்கிக்கொள்வார்கள். இவர்கள் மனித உருவில் பிறந்த அஃறிணை என்றே கூறலாம். உங்களுக்குத் தேவையான பொருட்களை நீங்கள்தான் ஈட்ட வேண்டும். அதைவிடுத்து மற்றவர் உழைத்துச் சம்பாதித்த பொருளை தனதென்று சொந்தம் கொண்டாடி வாழ்வது என்ன வாழ்க்கை. இதில் என்பாட்டன் எனக்கு சம்பாதித்து வைத்துள்ளார் நான் உழைக்க வேண்டியதில்லை என்பார்கள். மனிதனாகப் பிறந்தவன் தனக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் என்று எல்லாவற்றையும் உழைப்பால் பெருக்கிக் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் பாடல் ஒன்று கூறுகிறது. அதாவது தலைவியானவள் தோழியிடம் கூறுகிறாள் பொருள் ஈட்ட சென்றுள்ள தலைவன் கூறுவதாக, “உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்” என்று கூறிச் சென்றுள்ளார் எனத் தலைவனை பெருமைப் படுத்துகிறாள் தலைவி. அதாவது முன்னோர்கள் சேர்த்து வைத்துச்சென்ற ஆஸ்தியை அழித்து உண்பவன் உயிருள்ள மனிதனாக்க் கருதப்படமாட்டான் என்று பொருள்படும். தெளிவாகக் கூறவேண்டுமென்றால் மற்றவர் சேர்த்து வைத்த ஆஸ்தியை உழைக்காமலேயே இருந்து கொண்டு விற்று உண்பவன் பிணமாவான் என்று தெளிவாகச் சங்கப்பாடல் கூறுகிறது. உடலானது என்றாவது ஒருநாள் நெருப்புக்கு இறையாகிவிடும் இது உண்மை. அவ்வாறான உடலைக் கொண்டு உழைத்தால் என்ன? இவர்கள் நரகத்தில் இருக்க வேண்டியவர்கள் தவறிப்போய் மனிதனாகப் பிறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.

இன்பமடைய துன்பப்படுங்கள்

        ஒரு கோவிலில் வயதான மூதாட்டி ஒருவர் தூய்மை செய்யும் பணியை ஏற்று அதை ஒரு சேவையாக செய்தாள். அவளுடன் அவர் பேத்தியும் இருந்தாள். பேத்தியும் தூய்மை செய்யும் பணியை செய்து வந்தாள்.

இருவரும் கோவிலில் கொடுக்கும் அன்னதானத்தை உண்டு அங்கேயே வாசம் செய்தனர். இவ்வாறு சில வருடங்கள் சென்றன. அந்த மூதாட்டி படுக்கையில் இருந்து சில மாதங்களில் காலமானார். அந்த இருபது வயதான குமரிக்குத் திருமணம் நடந்தது. அவளுடைய கணவன் “நீ குப்பை பொறுக்கியவள்தானே” என்று சதா இழிவாகப் பேசி வந்தார். வருடங்கள் சில கடந்தன. இவளும் பொறுத்துப் பார்த்து இவனுடன் வாழ்வதற்குக் கோவிலில் குப்பை பொறுக்குவதே மேல் என்று புறப்பட்டுக் கோவிலுக்கு வந்துவிட்டாள். வந்தவள் கோவில் பொறுப்பாளரைப் பார்த்து உண்மையைக் கூறி தனக்கு வேலை கொடுக்குமாறு கேட்டாள். அவரும் அவளின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு வேலையும் கொடுத்தார். சில வருடங்கள் சென்றன. அந்தக் கோவில் நிர்வாகப் பொறுப்பு வேறு ஒருவர் கைக்கு மாறியது. அவர் பொறுப்பேற்றதும் சில நிபந்தனைகளை வைத்தார். கோவிலில் வேலை செய்பவர்கள் குறைந்தது எட்டாம் வகுப்பு தேரியிருக்க வேண்டும். அவர் வைத்த நிபந்தனைகளில் இதுவும் ஒன்று. இதை கேட்டதும் அந்தப்பெண்ணிற்கு தலையில் இடி விழுந்ததைப் போல உணர்ந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சில நாட்களில் கோவிலில் இருந்து வெளியேற்றப்பட்டாள். வெளியே வந்தவள் சிறிது தூரம் நடந்தாள். வயிறு பசித்தது. இன்னும் சிறிதுதூரம் நடந்தாள் கண்கள் கலங்கி, அங்கு எட்டும் தூரத்திற்கு எந்த உணவகமும் இல்லை. என்ன செய்வது என்று ஒரு மரநிழலில் அமர்ந்து கொண்டாள். பின்னர் எழுந்து சிறிது தூரம் நடந்தாள் முடியவில்லை. அங்கு ஒரு பாறை தென்படவே அதன் மீது ஏறி சுற்றிலும் பார்வையிட்டாள் எங்கும் ஓட்டல் என்பது கிடையாது. இந்தக் கோவிலுக்குக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு வந்தால் பசித்தால் என்ன செய்வார்கள் என்று யோசித்தாள். அவளுக்கு அந்தப் பசியிலும் மனதில் ஒரு பொறி தட்டியது. நாம் இந்த இடத்தில் ஒரு தள்ளுவண்டியில் இட்லி கடை வைத்தால் என்ன? என்று சிந்தித்தாள். பணம் வேண்டுமே யாரிடம் கேட்பது. அப்போது பழைய கோவில் நிர்வாகி நினைவுக்கு வரவே அவரிடம் சென்று உதவி கேட்டாள். அவர் பாராட்டி உதவி செய்தார். ஒரே வாரத்தில் அங்கு ஒரு இட்லி கடை உருவாகிவிட்டது. ஒரே வருடத்தில் அது ஓட்டலாக மாறியது. அந்த உணவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அயராத உழைப்பால் அருகில் இருக்கும் ஊரிலும் இதன்கிளை ஒன்றும் துவக்கப்பட்டது. அம்மன் இட்லி கடை என்று துவக்கப்பட்டு அதுசில வருடங்களில் இரண்டு நான்கானது, நான்கு பத்தானது. ஓட்டல் முதலாளி ஆகிவிட்டாள் அந்த பெண்மணி.

         அந்த அளவிற்கு உயர்ந்ததுள்ள அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நீங்கள் இத்தனை ஓட்டல்களுக்கு முதலாளியாக உயர்ந்துள்ளீர். இன்னும் அதிகமாகப் படித்திருந்தால்? எங்கு சென்றீருப்பீர்கள்,  “அதிகமாகப் படித்திருந்தால் நான் கோவிலில் குப்பை பொறுக்கும் வேலையை சுத்தமாகச் செய்துகொண்டு இருந்திருப்பேன்” என்றார்.

      வரும் அவமானங்களும் துன்பங்களுமே வெற்றி விருட்சத்திற்கான விதை என்பதை உணருங்கள். ஒருவரின் வாழ்வில் நேரும் இடர்பாடுகளும் அவமானங்களும்தான் அவரை வெற்றிநிலைக்கு உந்தி தள்ளுகின்றன.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

12.அமைதியான அணுகுமுறை

இதயம் பேசுகிறது | சிறுகதை

இதயம்-பேசுகிறது

மத்தியான நேரம். உச்சி வெயில் மண்டையப் பிளந்தது. ரெங்கநாயகி கிழவி வேகவேகமாய் ஆத்தூர் பேருந்து நிலையத்திற்கு வேர்க்க விறுவிறுக்க வந்து கொண்டிருந்தாள். மனதிலே இறுக்கம். தளர்ந்த நடை. தோலெல்லாம் சுருங்கிப்போய் கூன் விழுந்திருந்தது. மூக்கு நுனி கண்ணாடி கீழே விழாத படிக்கு நூலால் கட்டி கழுத்தில் மாட்டியிருந்தாள். கிழவியின் வெள்ளையாகிப்போன உதடுகள் இன்று தடித்தும் வறண்டுபோயும் இருந்தன. உடம்பெல்லாம் வியர்வால் நனைந்திருந்தது. மனசு படபடத்தது. சோர்வால் கால்கள் தழுதழுத்தன. சுருண்டு கீழே விழுந்தாள் ரெங்கநாயகி கிழவி. இதயம் பேசுகிறது | சிறுகதை

மக்கள் கூட்டமாய்க் கூடினார்கள். முகத்தில் தண்ணீர் தெளித்து டீ வாங்கிக்கொடுத்தார் ஒருவர். ஆவிப்பறக்க டீயை வாயில் வைத்து உறிஞ்சினாள். டீயின் சுவையை உணர்ந்தாலும் மனம் மட்டும் எங்கேயோ அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“பாட்டிம்மா… எங்க போகனும்” என்றார் டீ வாங்கிக்கொடுத்தவர்.

தஞ்சாவூர்” என்று மெதுவாகக் கூறினாள்.

“இந்த நேரத்திற்குத் தஞ்சாவூர்க்கு நேரடியாகப் பேருந்து இல்லை. அதனால் பெரம்பலூர் சென்று அதன்பிறகு தஞ்சாவூர் செல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவரே பெரம்பலூர் பேருந்தில் ஏற்றியும் விடுகிறார். பேருந்து வேகமாய் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்கிறது. ஜன்னல் சீட்டில் உட்காந்திருக்கும் ரெங்கநாயகி கிளவிக்கு மரங்களெல்லாம் பின்னால் செல்வது என்னவோபோல் இருந்தது.

“ஞா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணேன். ஒத்த பொம்பள குழந்தைய பெத்துப் போட்டுட்டு ஒரேடியா போயிட்டா. அதுக்கப்புறம் மருமவனும், குழந்தைய என்கிட்ட விட்டுட்டு வேற ஒருத்தியை கல்யாணமும் பண்ணிகிட்டான். ஜானகின்னு பெரு வச்சு நான்தான் வளத்தேன். நாலு மாட்ட வச்சிகிட்டு பேத்தியையும் படிக்க வச்சேன். அப்பப்ப மருமவனும் பாத்துட்டுப் போவும். அந்தக் குட்டிய வளர்க்கிறதுக்கு நான் பெரும்பாடு பட்டேன். அவ வயசுக்கு வந்தப்ப அப்படியே அவுங்க அம்மாவ உரிச்சு வைச்ச மாதிரி நின்னா. நான் அவள பாத்துட்டு அழுதிட்டேன். என்னோட பொண்ண உசிரோட பார்க்கிற மாதிரி இருந்தது”

பன்னிரண்டாவது படிச்சிட்டு இருந்தா. மத்த புள்ளைங்க மாதிரி அவளுக்கு பள்ளிக்கூடம் போறதுக்கு சைக்கிள் வாங்கி கொடுத்தேன். ஒருநாள் போனு வேணுமுன்னு கேட்டு அழுதா. அந்தக் குட்டியின் அழுகைய பார்க்க முடியாம காசு கொடுத்துப் போனு வாங்கிக்கச் சொன்னேன். அப்புறம் எப்ப பார்த்தாலும் போனையே நோண்டிகிட்டு இருப்பா. நானும் அந்த டப்பாவை தூக்கி போடும்பேன். நான் அவளோட நடவடிக்கைய பார்த்துப் பயப்பட்டேன்.  படிப்பு முடிஞ்சவுடனே, அவுங்க அப்பன்கிட்ட சொல்லி ஒரு கல்யாணத்த முடிச்சுப்புடனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். கடைசி பரீட்சை எழுத போன புள்ள, சாயுங்காலம் ஆகியும் வீட்டுக்கு வரவே இல்ல. நானும் இப்ப வந்துருவா அப்ப வந்திருவான்னு நினைச்சிட்டு, மாட்ட அவுத்து தண்ணீயெல்லாம் காட்டிட்டு இருந்தேன். மனசுக்குள் ஏதோ குத்தி தொளைக்கிற மாதிரி இருந்தது. இருட்டு ஆகிடுச்சு. ரெண்டு நாளாகியும் ஜானகிய கண்டுபிடிக்க முடியல. அப்பத்தான் மளிகைக்கடைக்கார கோபாலு,

“உங்க பேத்தியும் படிக்க வந்த தஞ்சாவூர்க்கார பையனும் ஒன்னா சுத்திக்கிட்டு இருந்தாங்க. எனக்கென்னுமோ அவன்தான் உங்க பேத்திய தஞ்சாவூர்க்கு கூட்டிட்டு ஓடியிருக்கனும்” என்றான்.

ரெங்கநாயகி கிழவியின் முகம் வேர்த்துக் கொட்டியது. கண்களிலிருந்து கண்ணிர் வழிந்தோடியது. பித்துப் பிடித்தது போன்று நினைவுகளை ஞாபகப்படுத்திக்கொண்டிருந்தாள்.

“பாட்டிம்மா டிக்கெட் எடுங்க… எங்க போவுனும்…” கண்டக்கர் கேட்டார்.

       கிழவி தன்னுடைய இடுப்பிலிருந்த சுருக்குப் பையைத் தேடினாள். கைகள் மட்டும் இடுப்பைத் தடவியதே தவிர சுருக்குப் பையைக் காணவில்லை. கண்களை உருட்டி சுற்றிலும் பார்த்துத் தேடினாள். சுருக்குப் பை ஆத்தூரில் மயங்கி விழும்போதே விழுந்து விட்டதே. இப்போது எப்படி கிடைக்கும். கிழவி விழிப்பதைப் பார்த்த கண்டக்டர்,

       “காசு இருக்கா இல்லையா…”

“இல்லை” என்று கிழவி தலையாட்டியவுடன்,

“ஏ.. கிழவி காசு இல்லாம எதுக்கு வண்டியில ஏர்ற.. இது என்ன உங்கொப்ப வீட்டு பஸ்ஸா..? டிரைவர் வண்டிய நிறுத்துப்பா… கிழவி நீ கீழ இறங்கிக்கோ…”

 கிழவி கீழே இறங்க எழுந்திருக்கப்போனாள். பக்கத்தில் உட்காந்திருந்த பெண் ஒருத்தி, “கண்டக்டர்,  பாட்டிக்குப் பெரம்பலூர் டிக்கெட் ஒன்னு கொடு” என்றாள். கிழவியும் அப்பெண்ணின் முகத்தைப் பார்த்தவாறே உட்காந்தாள். மீண்டும் ஜன்னல் வெளியே மரங்கள் பின்னால் நகர்ந்து கொண்டிருந்தன.

பேருந்து பெரம்பலூர் வந்து விட்டது. ரெங்கநாயகி கிழவி வண்டியிலிருந்து கீழே இறங்கினாள். கையில் நையா பைசா கூட இல்லை. எப்படி தஞ்சாவூர் போறது. வயித்த வேறு கிள்ளுது. சோத்தவிட பேத்தி ஜானகிதான் முக்கியம். தஞ்சாவூர் போயே ஆகனும். சோர்ந்து உட்காந்துவிட்டாள். காசு இல்ல. உடம்பும் வயிறும் ஒத்துழைக்கணும் இல்லையா? எப்படியெல்லாம் வாழ்ந்தவள் ரெங்கநாயகி. இன்று வேறுவழியில்லாமல் பிச்சையெடுக்க ஆரமித்து விட்டாள். சிலர் முறைத்தார்கள், ஏளனமாய் சிரித்தார்கள், இல்லை போ என்றார்கள், முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் ஏராளம். பாவமாய் பார்த்து இரக்கப்பட்டுச் சிலர் காசு போட்டார்கள். வடித்து வடித்துக் கொட்டியவள். வாடிவதங்கி பிச்சையெடுத்துக் கொண்டிருக்கிறாள். வாய்விட்டு அழவில்லை அவ்வளவுதான்.

இரண்டு மூன்று நாளுக்குள்ளாகக் கையில் இருந்த காச வைத்துக்கொண்டு தஞ்சாவூர்க்குப் பேருந்தைப் பிடித்து விட்டாள். ஜானகியின் முகம் மட்டும் கிழவியின் உள்ளத்தில் ஆணி அடித்தார் போன்று பதிந்திருந்தது. எப்பாடுபட்டாவது ஜானகியை மீட்டு மருமவனின் கையில் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தாள்.

“இந்தக் குட்டி ஏ இப்படி செஞ்சா.. நா அவளுக்கு என்ன குற வைச்சன். ஞா பொண்ணு மாதிரி நல்லதான பாத்துக்கிட்டன். அவுங்க அப்பங்காரன், எங்கடி ஞா பொண்ணுன்னு கேட்டா நான் எப்படி திருப்பி கொடுப்பேன். ஐயோ கடவுளே! என்ன சோதிக்கிறதுல உனக்கு அவ்வளவு சந்தோசமா? ஞா குட்டிய என்கிட்ட திருப்பி கொடுத்துரு” பேருந்தில் அமர்ந்து கொண்டு மனதில் நினைப்பவையெல்லாம் வாய்விட்டு அடுத்தவர்கள் கேட்கும் அளவிற்குப் பேசிக்கொண்டிருந்தாள். மற்றவர்கள் கிழவியை ஒருமாதிரியாகவே பார்த்தார்கள்.

தஞ்சாவூர் பேருந்து நிலையம். எப்படியும் ஜானகிய கண்டுபிடிச்சே ஆகனும். கிழவியின் மனதில் வேறொன்றும் இருக்கவில்லை. தன்னோட குலதெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டாள். தஞ்சாவூர் நகரத்தெருக்களில் வெற்றுக்கால்களோடு நடக்க ஆரமித்தாள். ஒரு சந்தையும் விட்டுவிடவில்லை. யாராவது ஜானகி மாதிரி சின்னபொண்ணா போனாங்கன்னா, உடனே வேகமாய்ச் சென்று பின்னால் தொட்டு மூஞ்சைப் பார்ப்பாள். இதுபோல போவோரும் வருவோரையும் நிறையமுறை பார்த்து விட்டாள். ஜானகி மட்டும் அவள் கண்களில் தென்படவில்லை. கிழவிக்கு மனதில் உறுதி இருந்தது. ஜானகியை அவுங்க அப்பாவிடம் சேர்த்து விட முடியும் என்று நம்பினாள்.

“ஐயா… பன்னிரண்டாவது படிக்கிற சின்ன பொண்ணு. ஒல்லியா செவப்பா இருப்பா. வலதுபக்கம் உதட்டுக்கு மேல சின்னதா ஒரு மச்சம் இருக்கும். நேர்வாக்கு எடுத்து தலவாரியிருப்பா.. ஞா பேத்தி ஐயா.. தஞ்சாவூர்க்கார பையனோட ஓடி வந்துட்டாளாம். நீங்க பாத்திங்களா? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” சாலையில் நின்றுகொண்டு கிட்டதட்ட பைத்தியக்காரி போல ஒவ்வொருத்தராய் நிறுத்திக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஏதாவது போட்டா இருக்குமா பாட்டி?” சாலையில் ஒருத்தர்.

“போட்டா… இருந்ததுப்பா.. ஆனா.. சுருக்குப் பை தொலைஞ்சிருச்சி” என்றாள் கிழவி. ஒவ்வொரு வார்த்தையும் யோசனை பண்ணி பண்ணி சொன்னாள்.

“போன் நம்பர் ஏதாவது தெரியுமா?”

“அந்தக் குட்டிக்கிட்ட போனு இருக்கு. ஆனா நம்பர் தெரியாதே!”

நின்று கொண்டிருந்தவர் கிளம்ப தயாரானார். கிழவியும் அவரின் பின்னாலயே சென்றாள். தன்னிடம் விசாரித்ததால் நம்பிக்கை கொண்டாள் கிழவி. ஆனார் அவர் அங்கு நின்று கொண்டிருந்த பேருந்தில் ஏறி சென்று விடுகிறார். கிழவிக்கு ஆதரவாகப் பேசியவர். அந்தத் தம்பியைப் பிடித்தால் ஜானகியைக் கண்டுபிடிக்க உதவி செய்வார் என்று நினைத்தாள். அதனால் பேருந்து பின்னாலயே ஓடினாள். வேகமாக ஓடியதால் மூச்சு இரைத்தது. அப்படியே நின்று விட்டாள்.

“ஏ ஜானகி குட்டி எங்கடி இருக்க. நான் உன்ன எங்கடி தேடுவ.. எங்கிட்ட வாடி.. நான் பெத்த மொவளுக்கு மொவளே!  என்ன இப்படி பொலம்ப விட்டுட்டியேடி.. சிறுக்கி மொவளே! அடியே குட்டி…” சாலையில் நின்றுகொண்டு அழ ஆரம்மித்தாள்.

ரொம்ப தூரம் நடந்து வந்தததால் ரெங்கநாயகி கிழவிக்குத் தான் எந்த இடத்தில் நிற்கின்றோம் என்றுகூட தெரியவில்லை. அந்தச் சாலையில் கிழக்கும் மேற்குமாய் இருபுறங்களிலும் பேருந்துகளும் லாரிகளும் கார்களும் இருசக்கர வாகனங்களும் சைக்கிளில் செல்வோரும் கடந்துக்கொண்டிருந்தன. நடந்து செல்வோர் இங்கிட்டும் அங்கிட்டுமாய் போய்க்கொண்டிருந்தார்கள். 

“எல்லோரும் போறாங்க வராங்க இந்தக் கூட்டத்துல ஞா பேத்தி எங்க இருக்கான்னு தெரியலையே? அடியே குட்டி… எங்கடி இருக்க நீ” வேகமாகவே கத்தினாள் கிழவி.

இப்போது கிழவியின் கண்களுக்குத் தூரத்தில் ஜானகி மாதிரி ஒரு பெண் தெரிந்தாள். உடனடியாகச் சாலையைக் கடக்க முயன்றாள். அந்நேரத்தில் வேகமாகவும் நேராகவும் வந்த ஒரு வண்டி கிழவியின் மெல் மோதியது. தலை தரையில் விழுந்தது. தார்ச்சாலையில் இரத்தம் வழிந்தோடியது. கிழவியின் கண்கள் மட்டும் விழித்திருந்தது. கிழவியைச் சுற்றிக் கூட்டம் கூடினார்கள். விபத்து நேர்ந்த வண்டியிலிருந்து கீழே இறங்கி வந்தாள் ஜானகி. கூட்டத்தினுள் நுழைந்து அடிபட்டது யாருக்கு என்று பார்த்தாள். ஜானகிக்குத் தலை சுற்றுவது போல் இருந்தது.

“பாட்டி நீயா… இங்க எப்படி வந்த…” கத்தினாள் ஜானகி. ரெங்கநாயகி கிழவியின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். கிழவியின் கண்கள் ஜானகியை உற்று நோக்கின. அவளின் கண்களைப் பார்த்தப்படியே மெல்ல மூடினாள் கிழவி. ஜானகியின் மடியெல்லாம் இரத்தம். சத்தம் போட்டுக் கத்தினாள்.

“உனக்கு பாரமா இருக்கக் கூடாதுன்னுதானே ஓடியாந்தன். பெத்துப்போட்டுட்டு எங்க அம்மாக்காரியும் போயிட்டா… எங்கப்பங்காரனும் இன்னொருத்திய தேடிட்டு போயிட்டான். வயசாயியும் நீதான என்ன கண்ணும் கருத்துமா வளத்த.. கொஞ்சநாள்ள உன்ன ஞா கூட கூட்டிட்டுப் போயிடலாமுன்னு நினைச்சேனே… ஐயோ கிழவி ஞா ஊர்லய வந்து செத்தப்போவ… இந்தப் பழிய நா காலம் பூரா சுமந்துட்டு திரியனுமா… குருட்டு கிழவி… எழுந்திருடி…” என்று கிழவியின் கன்னத்தில் ரெண்டு அறை விட்டாள். உடலை குழுக்கினாள்.

“என்ன பெத்த கிழவி… எழுந்திருச்சி வாடி… ” கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் மல்க வானத்தை நோக்கி இரு கைகளையும் நீட்டி ஒப்பாரி வைத்தாள் ஜானகி. அங்கு கூடியிருந்தவர்களின் அனைத்து கண்களும் குளமாயின.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

 

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

           இக்காலத் திறனாய்வாளர் இலக்கியத்திற்குரிய உணர்ச்சிகளைப் பற்றிப் பலவாறு ஆராய்ந்து வருகின்றனர். அச்சம், அவலம், நடுக்கம், இரக்கம், காதல், வீரம் எனப் பலவாறாக இலக்கிய உணர்ச்சிகளைப் பிரித்து அறிகின்றனர். தமிழ் மொழியைப் பொறுத்த அளவில் மிகப் பழங்காலத்திலேயே தொல்காப்பியர் மனித மனத்தில் தோன்றும் முக்கிய உணர்ச்சிகளை எண் வகையாகக் கண்டறிந்து அவை புறத்தே புலனாகும் வண்ணங்களை விளக்கி உள்ளார். உணர்ச்சிகள் பற்றி அவர் கூறுவன இடம் பற்றியும், காலம் பற்றியும் எழும் பல்வேறு வகையான இலக்கியங்களுக்கும் பொருந்தி வருவனவாக உள்ளன. அவர் கூறும் எண்வகை உணர்ச்சிகளுள் மனிதனின் உணர்ச்சிகள் அனைத்தும் அடங்கும் எனலாம். தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்.


            உணர்ச்சியினைத் தொல்காப்பியர் மெய்ப்பாடு என்று குறிக்கின்றார். மெய்ப்பாடாவது மற்றவர்க்குப் புலனாகும் வண்ணம் மெய்யின் கண் (உடம்பின் கண்) வெளிப்படுவதாகும். இளம்பூரணர், ‘மெய்யின் கண் தோன்றுதலின் மெய்ப்பாடு ஆயிற்று என்பார். ‘ அஃதாவது அச்சம், வெகுளி போன்ற உணர்வுகள் உள்ளத்தின்கண் முதற்கண் தோன்றிப் பின் காண்போர்க்குத் தெரியும் வண்ணம் மெய்யின்கண் படுதலாகும். செய்யுள் செய்யும்போது சுவைபடச் செய்வதற்கு இம்மெய்ப்பாடுகள் இன்றியமையாதன என்பது முன்னையோர் கருத்தாகும்.

தொல்காப்பியர் கூறும் இலக்கிய உணர்ச்சிகள்

            இனி, தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகளைக் காண்போம்.


நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகை யென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”

(மெய்ப்பாட்டியல்.3)

அஃதாவது நகை, அழுகை, இழிப்பு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என மெய்ப்பாடு என் வகைப்படும். செயிற்றியனார் என்பார்,


“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்

மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே”


என்று கூறியிருப்பதும் ஈண்டு உணரத்தக்கது.

எட்டு வகையான உணர்ச்சிகள்

            எண்வகை உணர்ச்சிகளை எடுத்துக்காட்டிய தொல்காப்பியர் ஒவ்வொரு மெய்ப்பாடும் இன்னின்ன காரணங்களால் எழுவன என்பதையும் விளக்கிச் சொல்லியுள்ளார். இன்றைய திறனாய்வுத் துறையில் நுழைவோர் தொல்காப்பியரின் செய்திகளை அறிந்து கொள்வது பயன் மிக்கதாகும்.
தொல்காப்பியர் கருத்துப்படி,

♣ நகை என்பது எள்ளல், இளமை பேதைமை, மடைமை ஆகியவை காரணமாக எழும்

♣ அழுகை என்பது பிறர் தன்னை எளியன் ஆக்கு தலாகிய இழிவு, இழவு, தளர்ச்சியாகிய அசைவு, வறுமை ஆகியவை ஏதுவாகப்பிறக்கும்.

♣ இளிவரல் என்பது மூப்பு, பிணி, வருத்தம், நல்குரவாகிய மென்மை ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣மருட்கை என்பது புதுமை பெருமை (பெருத்தல்), சிறுமை (மிகவும் நுண்ணியவாம்தன்மை). ஒன்றன் பரிணாமமாகிய ஆக்கம் ஆகியவை காரணமாகப் பிறக்கும்

♣ அச்சமாகிய மெய்ப்பாடு, அணங்கு (தெய்வம்), விலங்கு, கள்வர், இறை (ஆசான், தந்தை) ஏதுவாகப் பிறக்கும்.

♣ பெருமிதமாகிய மெய்ப்பாடு, கல்வி, தறுகண்மை (வீரம்) புகழ், கொடை ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

♣வெகுளி என்பது உறுப்பறை (அங்கமாயினவற்றை அறுத்தல்), குடிகோள் (கீழ்வாழ்வாரை நலிதல்), அலை (அலைத்தல் வைதலும் புடைத்தலும்), கொலை புலன் (ஐம்புல நுகர்ச்சி) மகளிரொடு புணர்தல், விளையாட்டு ஆகியவை காரணமாகப் பிறக்கும்.

♣ உவகையாவது. செல்வம், ஆகியவை ஏதுவாகப் பிறக்கும்.

மேற்கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளோடு வேறு வகையான பல மெய்ப்பாடுகளையும் தொல்காப்பியர் குறித்துக் காட்டுகின்றார்.

அவையாவன:

உடைமை: ஒரு பொருளுக்கு உடைமை கொண்டதால் நிகழும் மன நிகழ்ச்சி.

இன்புறல்: நண்பராகிப் பிரிந்து மீண்டும் வந்தோரைக் கண்ட வழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது.

நடு நிலைமை: சமன்செய்து சீர்தூக்கும் கோல் போலமைவது.

அருள்: எல்லா உயிரிடத்தும் அன்பு செய்தல்.

தன்மை: சாதி இயல்பு.

அடக்கம்: மனமொழி மெய்களால் அடங்குதல்.

வரைவு: செய்யத் தக்கனவும், நீக்கத் தக்கனவும் அறிந்து ஒழுகும் ஒழுக்கம்.

அன்பு: பழகுவாரிடம் செல்லும் ஒருவகைப் பற்று.

கைம்மிகல் :  குற்றமாயினும் குணமாயினும் அளவின் மிகுதல்

நலிதல்: பிறரை நெருக்குதல்.

சூழ்ச்சி: எண்ணங் காரணமாக நிகழும் நிகழ்ச்சி.

வாழ்த்தல் :  பிறரை வாழ்த்துதல்

நாணல்: தமக்குப் பழியாய் வருவனவற்றைச் செய்யாமை

துஞ்சல்: உறக்கம்

அரற்று :  உறக்கத்தின் கண் வரும் வாய்ச்சோர்வு.

கனவு :  நனவு போல ஒன்றைக் காண்பது.

முனிதல் :  வெறுத்தல்

நினைத்தல்: கழிந்ததனை நினைத்தல்.

வெரூஉதல்: அச்சம் போல நீண்ட நேரம் நில்லாது திடீரென்று தோன்றி மறைவதோர் குறிப்பு. இதனைத் ‘துணுக்கு” என்பர்.

மடி: சோம்புதல்.

கருதல்: மனத்தால் ஒன்றைக் குறித்தல்.

ஆராய்ச்சி :  ஒரு பொருளைக் குறித்து அதன் இயல்பு எத்தன்மையது என ஆராய்தல்.

விரைவு: ஒன்றைச் செய்ய நினைத்து அது நிறைவேறக் காலத்தாழ்வு நேரின் அதன் பயனை எய்யா நிலையில் விரைந்து முடித்தல் வேண்டுமெனக் குறித்த மன நிகழ்ச்சி.

உயிர்ப்பு: முன்புவிடும் அளவு இன்றி மூச்சினை நீளவிடுதல்.

கையாறு: காதலர் பிரிந்தால் வரும் துன்பம் போல்வது.

இடுக்கண்: துன்பமுறுதல்.

பொச்சாப்பு: மறத்தல்

பொறாமை: பிறர்க்கு ஆக்கம் முதலாயின உண்டாகும்போது அதனைப் பொறுக்காமையினால் நடக்கும் மன  நிகழ்ச்சி.

வியர்த்தல்: தன் மனத்தில் சினம் தோன்றும் போது பிறப்பதோர் புழுக்கம்

ஐயம்: ஒரு பொருளைக் கண்டபோது இன்னது எனத் துணியாத நிலைமை.

மிகை: ஒருவனை நல்ல வண்ணம் மதிக்காமை.

நடுக்கம்: ஏதேனும் ஒரு பொருளை இழக்கின்றோம் என எண்ணுவதால் நடக்கும் மன நிகழ்ச்சி

            மேற்கூறிய மெய்ப்பாடுகள் பலவும் மாந்தரின் உண்மை வாழ்க்கையில் பெரும்பாலும் நிகழ்வனவாகும். மனித வாழ்க்கை பற்றி வரும் இலக்கியத்திலும் அம் மனிதரின் உணர்வுகள் இடம் பெறக்கூடும். ஆதலின், தொல்காப்பியர் காட்டும் மேற்கூறிய மெய்ப்பாடுகள் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளாகவே கொள்ளலாம். இன்றைய இலக்கியத் திறனாய்வில் இன்னமும் விளக்கப்படாமல் இருக்கும் சில உணர்ச்சிகளும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாட்டியலில் உள்ளனவாதலின் இம் மெய்ப்பாட்டியல் திறனாய்வுத் துறையில் மேன் மேலும் ஆராய வேண்டிய ஒன்றாகும். எவ்வாறாயினும் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியல் வாயிலாக உணர்த்தும் உணர்ச்சிகள் அனைத்தும் இலக்கிய உணர்ச்சிகளே.

இலக்கிய உணர்ச்சிகளை மதிப்பிடுதல்

            ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறக் கூடும் உணர்ச்சிகளுக்கு முதற்காரணமாக விளங்குபவர் அவ்வகை இலக்கியப் படைப்பாளரே ஆவர். படைப் பாளரின் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்து வெளிப்படும் அளவில் படைப்பாளர் முதற்காரணமாக விளங்குகின்றார். படைப்பாளரின் உணர்ச்சியானது கலை வடிவம் பெற்ற பிறகு அவ்வுணர்ச்சிக்கு மீண்டும் ஆளாவது பயில்வோரின் மனமே ஆகும்.

            படைப்பவரின் மனம் உணர்ந்து வெளியிட்டது போலவே பயில்வோரின் மனமும் உணர்ந்து பயன்பெறுமாயின் இலக்கிய வகை வெற்றி பெற்றது எனக் கொள்ளலாம். எனவே, படைப்பவருக்கும் பயில்பவர்க்கும் இடையே உள்ள கலைஉலக ஓர் இலக்கிய வகையில் இடம் பெறும் உணர்ச்சிகளானவை வெற்றிடத்தை நிறைவு செய்யும் ஒரு கருவி எனலாம். கலை வடிவாக விளங்கும் உணர்ச்சியானது பயில்வோரை எந்த அளவுக்கு ஈர்த்து இசைவித்து இயக்குகின்றதோ அந்த அளவுக்கு இலக்கியப் படைப்பில் உணர்ந்து உணர்த்தும் உணர்ச்சிகளைப் பொதுவாக சில நெறிமுறைகளைக் கொண்டு ஆற்றலுடன் விளங்குவதாகக் கொள்ளலாம். படைப்பாளர் தம் மதிப்பிட முடியும்.

            இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சியாவது, படைப்பாளரின் உள்ளத்தில் கொழுந்துவிட்டெரிந்து எழுத்தாய் வழிந்தோடிக் கலைவடிவம் பெற்றவுடன் அழகுருவம் பெற்றுப் பயில்வோரின் உள்ளத்தே பற்றிப் படர்ந்து மீண்டும் செயற்படும் ஒன்று எனலாம். கலை உருவம் மலர்வதற்கு எந்த உணர்ச்சி காரணமாக இருந்ததோ அந்த உணர்ச்சியே பயில்வோரின் கலை அனுபவத்திற்கும் காரணமாகின்றது. உணர்ச்சியின் இயல்பும் தரமும் கூடக்கூட அஃது இடம்பெறும் இலக்கியத்தின் சிறப்பும் கூடுகின்றது. அவ்வாறாயின் இலக்கியத்தில் வரும் உணர்ச்சிகளுக்கென்று அமைந்த இயல்பும் தரமும் யாவை என அறிதல் வேண்டும் குறிப்பிட்ட ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட ஒரு முறையில் உருவாகித் தோன்றும் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியானது அக்குறிப்பிட்ட சூழ்நிலையோடு அக்குறிப்பிட்ட முறையில் மிகப் பொருத்தமாகவும் மிக இயற்கையாகவும் இலக்கியப் படைப்பில் வெளிப்படுவதே அவ்வுணர்ச்சியின் இயல்புக்கு உரிய அளவுகோல் எனலாம்.

            மனித உள்ளங்கள் அனைத்துக்கும் பொதுவாய் இருப்பதும்; இடவேறுபாடு. காலவேறுபாடு ஆகியவற்றைக் கடந்து மனித உள்ளத்தை இளகச் செய்து இயக்க வல்லதாய் இருப்பதும் இலக்கிய உணர்ச்சியின் தரத்திற்குரிய அளவுகோல் எனலாம். உணர்ச்சி நன்றாக உள்ளது என்பதற்கு அடையாளம் பயில்வோரின் கவனத்தை ஆழமாக ஈர்ப்பதே ஆகும். ஆழமாக ஈர்ப்பதோடு முருகியல் சுவையோடும் கலந்து வருமாயின் மிக்க பயன் விளைகின்றது. உணர்வைப் பெருக்கி உள்ளத்தை ஈர்ப்பதோடு பண்பால் உயர்த்தவும் செய்யுமாயின் அவ்வுணர்ச்சி தலையாய உணர்ச்சி எனலாம். இந்நிலையில் கலைப்படைப்பில் ஈடுபடும் நாம் உணர்வால் நெகிழ்ந்து உள்ளத்தால் உயருகின்றோம்.

            கவிதையாயினும் நாடகமாயினும் காவியமாயினும் புதினமாயினும் மேற்கூறிய தலையாய உணர்ச்சிகளோடு விளங்கும்போது மனித சமுதாயம் கலையால் பண்பட்டு உயருகின்றது. இப்பண்பாட்டை உருவாக்கவல்ல உணர்ச்சிகளை நல்ல தரமான உணர்ச்சிகள் எனலாம். இலக்கியத்தில் இடம் பெறும் நல்ல உணர்ச்சி என்பது படைப்பாளரின் கலையாக்கத் திறனுக்கு ஒரு முத்திரையாய், ஒரு நல்ல அடையாளமாய் விளங்குகின்றது. எனவே, உணர்ச்சிப் பகுதிகள் மிகுதியாக வரும் இலக்கியமானது வெற்றி பெறுவது அதன் ஆசிரியர் அவ்வுணர்ச்சிகளின் இயல்பையும் தரத்தையும் நன்கு அறிந்து கலையாக வடித்தெடுக்கும் ஆற்றலைப் பொருத்ததாகும்.

            வின்செஸ்டர் என்பார் பின்வரும் ஐவகை உணர்ச்சிகளை உடைய இலக்கியம் நெடிது வாழும் எனக் குறிக்கின்றார்:

1. நியாயமான, தக்க உணர்ச்சி; நல்ல காரணத்திற்காக நல்ல வகையில் அமைவது.

2. ஆற்றலுள்ள உணர்ச்சி; ஆசிரியரின் உள்ளத்து உண்மையை ஒட்டியது; ஆழம் உடையது.

3.தொடர்ந்து ஒரு நிலையாக அமையும் உணர்ச்சி; பொருந்தாததும் வேண்டாததும் இடையில் புகாதவாறு அமைவது; வலிந்து பல கோணங்களை விளக்குமாறு பலவகை உணர்ச்சிகள் கூடி கொண்டு வரப்படாமல் இயல்பாக அமைவது

4 வாழ்க்கையின் காரணமாகவோ, புலனின்பம் காரணமாகவோ அமையும் அமைதல்,

5, மிக விழுமிய உணர்ச்சியாய் அமைதல்; பொருள்கள் உணர்ச்சிகளைவிட உயர்வுடையதாய், நீதியின் காரணமாகவோ அறத்தின் காரணமாகவோ அமைதல்

            இலக்கியத்தில் பலப்பல வகையான உணர்ச்சிகள் இடம் பெறலாம்; எனினும் அவற்றுள் சிலவே படைப்பாளர் பலராலும் விரும்பிக்காட்டப் படுவனவாகவும் பயில்வோரால் விரும்பிப் பயிலப்படுவனவாகவும் உள்ளன. அச்சம், நடுக்கம், காதல், இரக்கம் ஆகிய உணர்ச்சிகள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகள் குறித்து டாக்டர் மு.வரதராசனார் கூறுவது ஈண்டுச் சிந்தித்தற்குரியது.

            ‘இலக்கியத்தில் பலவகையான உணர்ச்சிகளும் இடம் பெறுகின்றன. எனினும், மகிழ்ச்சி. வேடிக்கை, கவலையற்ற மனநிறைவு முதலியவற்றைவிட, அச்சம், துயரம், கவலை முதலிய உணர்ச்சிகளை உடைய இலக்கியம் விரும்பிப் படிக்கப்படுகிறது. சேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்களை விடத் துன்பியல் நாடகங்கள் மிகப் போற்றப்படுகின்றன. நாடக மேடையில் இன்பக் காட்சிகளைவிடத் துன்பக் காட்சிகளைக் காணும்போது, மக்கள் உள்ளம் ஒன்றியவராய் உள்ளனர். காரணம் என்ன? கலைஞரின் உள்ளம், அச்சம், துயரம் முதலிய உணர்ச்சிகளால் பெரிதும் தாக்குண்டு ஆழ்ந்து உணரும் நிலை எய்துகிறது. அவர்கள் படைக்கும் கலைகளிலும் அந்த உணர்ச்சிகள் ஆழமும் ஆற்றலும் உடையனவாக அமைகின்றன. ஆகவே, கலையை நுகரும் மக்களும் அவற்றில் ஆழ்ந்து ஒன்றிவிடுகின்றனர்.

            உணர்ச்சிகளுள் எந்த ஓர் உணர்ச்சியைக் கலைஞர் தம் படைப்பில் அமைத்துக் காட்டினாலும் அவ்வுணர்ச்சியின் இயல்பும் தரமும் நன்கு அமைந்து பயில்வோரின் உணர்வுக்கு நல்ல கலைவிருந்தாய் அமைவது இன்றியமையாதது இங்ஙனம் அமைவதற்கு அடிப்படையாக, படைப்பாளர் முதற்கண் அதன்கண்ட ஆழத்தோய்ந்து நீடுநினைந்து கலைக்குரிய கட்டுக்கோப்புடன் வெளிப்படுத்துதல் வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தூண்டுதலால் எழுத்தாளரின் உணர்ச்சி தட்டி எழுப்பப்படினும் அவர் அவ்வுணர்ச்சிக்கு ஆளாவது போலவே நல்ல வடிவத்தோடு அதனை வெளிப்படுத்தக் கூடிய மன நிலையோடு கட்டுப் படுத்தவும் வேண்டும்.

            அப்போதுதான் குறிப்பிட்ட ஓர் உணர்ச்சி தம் உள்ளத்தே ஆழப்பதிந்து தாக்கும்போது அத்தாக்குதலால் தான் சிதறுண்டு போகாமல் ஒருமுகப்பட்டு நின்று நல்ல வடிவம் தந்து படைத்துக்காட்ட முடியும். இந்தக் கலை வித்தகம் எழுத்தாளனிடம் அமைந்திருப்பதால்தான், பாட்டிற்கு ஓர் ஒலி நயமும் காவியத்திற்கு ஓர் இயைபும் நாடகத்திற்கு நல்ல ஒருமைப்பாடும் புதினத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கமும் சிறுகதைக்கு ஒருமுக இயல்பும் அமைய முடிகின்றது. இல்லையேல் இவற்றில் அமையக்கூடும் அறிவுக் கூறும் உணர்ச்சிக் கூறும் ஒன்றோடொன்று முட்டி மோதி முரண்பட்டு நின்று கலையின் கட்டுக்கோப்பைக் குலைத்துவிடும். வோர்ஸ் வொர்த்து என்பார் கவிதையைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”இயற்கையாக எழுந்து கரை புரண்டோடும் ஆற்றல்சால் உணர்வுகளை அமைதி நிலையில் மீண்டும் நினைவுக்குக் கொணர்ந்து வெளிப்படுத்துவதே கவிதை” என்று கூறியது ஈண்டுச் சிந்தனைக்கு உரியதாகும்.

            கவிதை, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகள் பலவற்றுள் வரும் உணர்ச்சிகளைப் பொதுவாக இரண்டாகப் பகுக்கலாம். ஒருவகை: இலக்கியக் கலைஞன் தான் உணர்ந்த உணர்ச்சிகளாகவே வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் மற்றொரு இலக்கியக் கலைஞன் தான் படைத்துக்காட்டும் கதை வகை மாந்தரின் உணர்ச்சிகளாக வெளிப்படுத்தும் உணர்ச்சிகள். இவை இரண்டுக்கும் படைப்பாளனின் கலைமனமே ஊற்றுக்களம் எனினும் அவன் எடுத்துக் கொள்ளும் இலக்கிய வகையின் அமைப்பிற்கேற்ப, தான் கலந்தும் கலவாதும் இருக்கின்றான். ஆதலின் உணர்ச்சிகளை மேற்கூறிய வண்ணம் இரண்டு விதமாகப் பிரிக்க முடிகின்றது. இனி இரண்டு சான்றுகளைக் காணலாம்.

காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறியபோதெல்லாம் பயந்தேன்

ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்

கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்.

வீணுறு கொடியர் கையினில் வாளை விதிர்த்தல் கண்(டு) என்என  வெருண்டேன்.

(ஆறாந்திருமுறை, பிள்ளைப் பெரு விண்ணப்பம்-60)


            இப்பாட்டு அருட் பிரகாச வள்ளலார் உயிர்கள் படுந்துன்பத்தைக் கண்டு இரங்கி வருந்திய நிலையில் தம் உணர்ச்சிகளாகவே பாடிய பாட்டாகும்.


நின்மகன் ஆள்வான் நீ இனிது ஆள்வாய் நிலமெல்லாம்

உன்வயம் ஆமே ஆளுதி தந்தேன் உரைகுன்றேன்

என் மகன் என்கண் என்உயிர் எல்லா உயிர்கட்கும்

நன்மகன் இந்தநாடு இறவாமை நய என்றான்.

(அயோத்தியா காண்டம், கைகேயிசூழ்வினைப் படலம்-36)


            பரதன் நாடாள இராமன் காடாள வேண்டும் என்று கைகேயி வரங் கேட்டவுடன் துணுக்கமுற்று வேதனையால் வெய்துயிர்த்துத் தன் மகன் நாடு கடந்து செல்லாதிருக்கவாவது உதவுமாறு அவளைக் கெஞ்சிக் கேட்கும் தயரதனின் உணர்ச்சிகளாகக் கம்பர் பாடியுள்ள பாட்டாகும் இது.

            மேற்கூறிய இரண்டு வகையில் அல்லாது மூன்றாவது முறையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகையில் இடம்பெறும் உணர்ச்சிப் பகுதிகளைப் புரிந்து கொள்ள முடியும். உணர்ச்சிக்கு உட்பட்ட ஒன்றோ அல்லது ஒருவரோ அங்ஙனம் உட்பட்ட பிறகு அடையும் மெய்ப்பாடுகளை வருணனை முறையில் விரித்தோ விளக்கியோ இலக்கியக் கலைஞர் காட்டலாம். இவ்வாறு காட்டும் போதும் மாந்தரின் அல்லது மற்றவற்றின் உணர்ச்சியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


வாங்கினள் முலைக்குவையில் வைத்தனள் சிரத்தால்

தாங்கினள் மலர்க்கண் மிசை ஒற்றினள் தடந்தோள்

வீங்கினள் மெலிந்தனள் குளிர்ந்தனள் வெதுப்போ(டு)

ஏங்கினள் உயிர்த்தனள் இது இன்னது எனல் ஆமே

சுந்தர காண்டம், உருக்காட்டு படலம், 66


            கணையாழியை அனுமன் இராகவன் கொடுத்தனுப்பிய சீதையிடத்தில் கொடுத்தவுடன் அவள் பெற்ற உள்ளத்து உவகையினைக் கம்பர் ஈண்டுச் சித்திரித்துக் காட்டுகின்றார். உணர்ச்சியால் நிகழும் செயல் முறை பற்றிய இத்தகைய ஓவியங்கள் வாயிலாகவும் நாம் இலக்கியத்தில் இடம் பெறும் உணர்ச்சிகளைக் கண்டுகொள்ள முடிகிறது. சிறப்பாக, காவியம், புதினம் போன்ற இலக்கிய வகைகளில் கதை மாந்தரின் நடிப்பு அல்லது செயல் முறைகளை இலக்கியக் கலைஞர் தாமே விரித்துக் காட்டுவதின் வாயிலாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர்.

            எல்லா வகை இலக்கியங்களிலும் உணர்ச்சிகள் இடம் பெறலாம். எனினும் காவியம் நாடகம் போன்றவற்றில், அவை இன்றியமையாதனவாகும் வயலுக்கு உரம்போலவும் பாட்டுக்குப் பண் போலவும், இலக்கியக் கலைஞனின் கருத்துக்கு வளமூட்டி வலிவும் பொலிவும் ஊட்டுவது உணர்ச்சியேயாகும். புதினம், நாடகம் போன்றவற்றில் கருத்துக்கும் இடம் உண்டு; உணர்ச்சிக்கும் நிறைய இடம் உண்டு. காரணம் அவற்றில் பெரும்பாலும் ஒருவரோ, இருவரோ இடம் பெறுவதில்லை; பல்வகைமாந்தரும் இடம் பெறுகின்றனர்.

            அதனால் பல்வகை நிகழ்ச்சிக்கும் செயல்களுக்கும் நிரம்ப வாய்ப்பு ஏற்படுகின்றது இந்நிகழ்ச்சிகளையும் செயல்களையும் கலை ஒருமைப்பாடு அமையுமாறு நடத்திச் செல்வதற்குக் காவியக் கலைஞர் அல்லது புதின எழுத்தாளர்க்கு நல்ல வளமான கற்பனை வேண்டும். எனவே பலவற்றையும் ஒன்றோடொன்று இயைபுற அமைத்துக் கலையின் கட்டுக்கோப்பு சிறிதும் சிதையாவண்ணம் படைத்துக் காட்டுவதாகிய கற்பனைக்கு மிகுதியான இடம் காவியம், புதினம் போன்றவற்றில் இருப்பதால் இவற்றைக் கற்பனை இலக்கியம் என்றும் சொல்லலாம். இக்கற்பனை இலக்கியங்களில் கதை மாந்தர் தத்தமக்கே உரிய வண்ணம் பலப்பல வகையாக அமைந்த வெவ்வேறு உள் நோக்கங்களாலும் உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டுச் செயல்படுகின்றனர்.

            அச்செயற்பாடுகளுக்கு ஏற்ற வண்ணம் நிகழ்ச்சிகளும் பெருகிக் கொண்டே செல்கின்றன. சுருங்கக் கூறின், செயல் முறைகளுக்கு அடிப்படையாக அமையும் கதை மாந்தரின் உணர்ச்சிச் சிக்கல்கள்; கற்பனை இலக்கிய வகைகட்கு இன்றியமையாதனவாகும். படைக்கும் இலக்கியக் கலைஞர் தாம் படைத்துக் காட்டும் ஒவ்வொரு கதை மாந்தராகவும் தாமே மாறி நின்று கூடுவிட்டுக் கூடு பாய்ந்து அவரவர்க்கு உண்டாக வல்ல உணர்ச்சியின் தன்மையை நன்கு அறிந்து நல்ல தரத்தோடு கலை வடிவமாக வடித்தெடுத்துக் காட்ட வேண்டும்.

நன்றி

ஆசிரியர் : இலக்கியத்திறனாய்வு, டாக்டர் சு.பாலச்சந்திரன்

அமைதியான அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

அமைதியான அணுகுமுறை

         உங்களின் வாழ்க்கையில் சோம்பலை விரட்டிவிட்டீர்கள் என்றால் அதன் இறுதியில் கிடைப்பது முன்னேற்றத்தின் தொடக்கம்தான். ஒன்றின் முடிவு இன்னொன்றின் தொடக்கமாகும். இப்போது நீங்கள் செய்வதற்கு கண்முன்னே ஆயிரம் கடமைகள் காத்துக்கொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் மாற்றி அதைப்போன்று கற்பனை செய்து பாருங்கள். உங்களின் அகக்கண்களின் மூலம் உங்களால் செய்யப்பட்ட சமுதாய மாற்றம் தெளிவாகத் தெரியும்.

          நிதமும் இந்தச் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளைச் சரிசெய்ய நீங்கள் சிந்தனை செய்து கொண்டு அதனால் ஏற்படும் மாற்றங்களை கண்முன்னே கொண்டு வாருங்கள். சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவது என்றால் அது அவ்வளவு எளிதல்ல. எத்தனை தடைகள், எதிர்ப்புகள், வசைகள், இன்னல்கள் பலவும் நிகழும். அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் சலைக்காமல் மீண்டும் முன்னேற்றத்தைத் தொடர வேண்டும். நன்றாகக் கவனியுங்கள். நல்ல காரியம் செய்யும்போது ஒவ்வொரு படிநிலையிலும் மற்றவர்களால் இடையூறுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால்தான் நீங்கள் வெற்றிபெறும் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

இலக்குகளின் பாதைகள்

        இலக்கை நோக்கி பயணம் செய்யும் போது உங்களுக்கு எந்தவித தடைகளும் எதிர்ப்புகளும் இல்லாமல் நீங்கள் பாதையை கடந்துவிட்டீர்கள் என்றால் வந்த பாதையை விட்டு விலகி வேறுபாதையில் பயணிக்க வேண்டும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் என்பது வெற்றியைப் பெறுவதில் மட்டுமல்ல, அதை அடைவதற்கு கடந்து வந்த பாதையில் சவால்களைச் சமாளித்துக் கற்றுக்கொண்ட பாடங்கள், அனுபவங்கள், பழகிய மனிதர்கள், மாமனிதர்கள், சுரண்டல்காரர்கள், கண்முன்னே நமது பொருட்களைப் பறிக்கும் கடத்தல் பேர்வழிகள் என்று பலவிதமான மனிதர்களை அறிந்துகொண்ட சந்தர்ப்பங்கள் சுவாரஸ்யமானவை. இவற்றையெல்லாம் நீங்கள் எத்தனை பல்கலைக்கழகங்களுக்குச் சென்றாலும் கற்றுக் கொள்ள இயலாது.

வருவது துன்பமல்ல சவால்

         இலக்கின் பாதையில் துன்பங்களை பேச்சுக்களை மனிதர்களைச் சந்திக்கின்ற போது இதற்குமுன் இந்த அனுபவம் பெற்றிருக்க மாட்டீர்கள். முதன்முறை எதிர்கொள்ளும்போது திரும்பி சென்றுவிடலாமா? என்று தோன்றும். இவற்றை முடிக்க நம்மால் இயலுமா? போன்ற பல வினாக்கள் முன்னே வந்து நிற்கும். எவை வந்தாலும் நிறைவான வெற்றியால் பெறும் மாற்றத்தை எண்ணிப்பாருங்கள். உங்களுக்கு கஷ்டங்களை சமாளிக்கும் திறன் தானாகவே வரும். எப்போதுமே துன்பங்களை வேதனையோடு எதிர்பார்க்காதீர்கள். அவற்றை சவாலாக ஏற்றுச் செயல்படுங்கள். பார்த்துவிடலாம்! என்று மனதிற்கு ஒரு போட்டியை ஏற்படுத்துங்கள். அப்போது மனதில் ஒரு வேகம் ஆற்றல் உண்டாகும். மீண்டும் மீண்டும் இதையே பின்பற்றுங்கள். இவ்வாறு தொடர்ந்து மனதிற்கு சலிப்பே வராமல் பார்த்துக்கொண்டால் நாளடைவில் வெற்றி என்பது உங்களின் அருகில் வந்து விடும். வெகுதூரத்தில் இல்லை என்பதை உணர்வீர்கள்.

          உங்களுடைய ஆற்றலை யாரால் உணர்ந்து கொள்ள முடியுமோ அவர்களின் முன்னே செயல்படுத்த வேண்டும். உங்கள் செயல்பாடுகளின் அருமை யாருக்கு புரிகிறதோ அவர்களின் கருத்துக்களைச் செவிமடுத்துச் செயல்படுங்கள். ஒரு வெற்றியை நீங்கள் பெறவேண்டும் என்றால் அதற்கு சிலரின் ஒத்துழைப்பாவது உறுதியாகத் தேவைப்படும். எனவே மற்றவரிடம் உங்கள் கருத்துக்களை நீங்கள் கூறுவதைப் பொறுத்தே உங்கள் மீது அவர்களுக்கு உதவவேண்டுமா? வேண்டாமா? என்பதை தீர்மானிக்கும். முதல் சந்திப்பிலேயே உங்கள் மீது உயர்ந்த அபிப்பிராயம் உண்டாகுமாறு நடந்தது கொள்ளுங்கள்.

அமைதியான அணுகுமுறை

      நீங்கள் சமுதாயத்திற்காகச் செய்யப்போகும் செயல்கள் அதனால் அங்கு வாழும்மக்கள் பெறப்போகும் நன்மைகள் இவற்றையெல்லாம் செய்வதற்கு உங்களைத் தூண்டும். தேசப்பற்று போன்றவற்றை அவரின் மனம்குளிர எடுத்துக்கூறுங்கள். அமைதியாகக் கனிவான பேச்சில் உங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்ற நம்பிக்கையை உதவுபவர்க்கு உருவாக்குங்கள். உங்களின் ஆற்றலை உணர்ந்து உதவும் அவர்களை அருகிலேயே வைத்திருங்கள்.

       நீங்கள் வெற்றியை அடைந்து விடுவீர்கள் என்று உங்கள் மனம் நம்பிவிட்டால் போதும் நீங்கள் சாதனையாளர்தான். இதை மற்றவர்க்கு கூறி நம்பவைக்க முடியாதா? முடியும். எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஐம்பத்திரண்டு வயதான நபர் ஒருவர். அவரிடம் “இந்த வயதில் சிகரத்தை ஏற உங்களால் எவ்வாறு முடிந்தது? கடினமாக இல்லையா? ஏறுவதற்குக் கால்கள் தடுமாறவில்லையா?” என்று கேட்டதற்கு அவர் “மலை ஏறும்போது என் கால்கள் தடுமாறவில்லை. ஏறுவதற்கு எந்தவித கஷ்டமும் இருக்கவில்லை. ஆனால் இந்தச் சிகரத்தின் உச்சியை அடையமுடியும் என்று என்மனதை நம்ப வைத்ததுதான் எனக்கு கடினமாக இருந்தது. மற்றப்படி இது எனக்கு எளிமையாகவே இருந்தது” என்று கூறினார். உங்கள் மனதை நம்பவைப்பது முன்னேற்றத்தின் அடுத்தபடியாகும். சமுதாயத்திற்காக வரும் துன்பங்களைத் தாங்கிக்கொள்ள மனதிற்குப் பயிற்சி அளித்து தயார் படுத்துவது அடுத்தபடியாகும். செல்லும் பாதையில் படிகள் இருந்தால் ஏறி சென்றுவிடுவீர்கள். முட்கள் இருந்தால் என்ன செய்வீர்? பாதையில் முட்கள், பாறைகள், பள்ளத்தாக்குகள் என்று நிறைய இருக்கும். அவை உங்களுக்குத் தடைகள் அல்ல, நீங்கள் சாதிப்பதற்கான சவால்கள் என்பதை உணருங்கள்.

மற்றவர்க்காக ஒன்றை செய்வதற்கு நீங்கள் தயாரா!

          நமது நாட்டில் விடுதலைப் போராட்ட வீரர்களைக் கவனித்தீர்கள் என்றால் ஒன்று புரியும். அவர்கள் எதையும் தனிப்பட்ட அவர்க்கென்று செய்யவில்லை மற்றவர்களுக்கு செய்தனர். ஆங்கிலேயர்கள் நம்மக்களை அடிமை செய்த போது அவர்கள் குறைந்த எண்ணிக்கையே இருந்தனர். இந்தியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். வெள்ளைக்காரர்களைக் கையால் அடித்தே துரத்தியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. நம் மக்கள் நமக்கென்ன என்று இருந்ததால் சிலநூறு வருடங்கள் அவர்கள் நம்மை அடிமைப் படுத்திவிட்டனர். அதனை முறியடிக்க யாரேனும் முன்வர வேண்டுமல்லவா வந்தனர். திலகர், கோகலே, சுபாஸ்சந்திரபோஸ், காந்தி, நேரு, செக்கிழுத்த செம்மல் போன்றோர் வந்தனர். இவர்கள் அனைவரும் தமக்காகப் போராடவில்லை, பிறருக்காகப் போராடினர். கொடிகாத்தகுமரன் அடிபட்டு குருதி பெருகி கீழே விழும் நிலையிலும் கொடியை விடாமல் பிடித்துக்கொண்டு முழக்கம் செய்தார். இவர்களைக் கவனித்தால் சமுதாயத்தின் மீதும் தேசத்தின் மீதும் கொண்ட அக்கறை அடுத்து வரும் சந்ததியினர் மீது கொண்ட பற்று இவையெல்லாம் அவர்களின் மனதில் வியாபித்து இருந்தன. அவர்களை செயல்பட வைத்தன.

நெருப்புக் கோழியின் குணம் வேண்டாம்

         ஒரு செயலை மற்றவர்க்காகத்தான் செய்கிறோம். அதனால் எந்தத் துன்பமும் வராது என்று நினைத்து நீங்கள் செயலை ஆரம்பித்தால் நெருப்புக் கோழியின் செயலைப் போல ஆகிவிடும். அந்த நெருப்புக் கோழி தனது எதிரிகள் தன்னை தாக்க துரத்தும் போது காத்துக்கொள்ள ஓடிச்சென்று ஒரு குழிக்குள் தன் தலையை புதைத்துக் கொள்ளுமாம். அது தன் உருவம் வெளியே யாருக்கும் தெரியாது என்று நினைக்க எதிரிகளான வேடர்கள் எளிமையாகப் பிடித்து விடுவார்களாம். அவ்வாறுதான் நீங்கள் நினைப்பதும். தொடங்கும் செயல் எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி அறிந்து கொண்டு அல்லது அதைப்பற்றி தெரிந்தவர்களிடம் சென்று கருத்துக்களை அவர்களின் அனுபவங்களை சேகரித்துத் தன்னை தயார்படுத்திக் கொண்ட பின்னரே செயலில் இறங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ஒருவர் கூறும் கருத்துக்களை அப்படியே நம்பி விடவும் கூடாது. எந்த அளவிற்கு இவை உண்மையான செய்திகள் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று மெய்யானவற்றை  சிந்தனை செய்து தெளியவேண்டும்.

         உங்களை மற்றவர்கள் புகழ வேண்டும். போற்ற வேண்டும். பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த செயலையும் செய்யாதீர்கள். எதையும் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்வதே தியாக மனப்பான்மை.

       ஒன்றைப் பெறுவதற்காக இன்னொன்றைச் செய்வது சேவையாகாது. அது பண்டமாற்று முறையே ஆகும். உங்களின் மதிப்பு மிகுந்த செயல்களை வியாபாரமாக மாற்றி விடாதீர்கள்.

      உங்களால் என்ன நன்மைகளைச் சமுதாயத்திற்கு செய்ய முடியுமோ அதனைச் செய்யுங்கள். ஆர்வத்துடன் விடாமுயற்சியுடன் செயல்படுங்கள். சோகங்களைச் சவாலாக எதிர்கொள்ளும் நீங்கள்தான் சமுதாயத்தின் நாயகன் இதில் ஐயமில்லை.

இக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் நா.சாரதாமணி,

எழுத்தாளர்.

 

மேலும் பார்க்க..

1.மனதை ஊக்கப்படுத்துங்கள்

2.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

3.மாற்றி யோசியுங்கள்

4.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

5.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

6.சோம்பலை நெருங்க விடாதீர்கள்

7.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

8.உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

9.அமைதியான அணுகுமுறையைக் கடைபிடியுங்கள்

10.செயல்பாடு உங்கள் மதிப்பை  உயர்த்தும்

11.நம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்

முருகனின் அறுபடை வீடுகள்

முருகனின் அறுபடை வீடுகள்

முருகனின் அறுபடை வீடுகள்

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம்

இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர்

மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி)

நான்காம் படைவீடு : திருவேரகம் (சுவாமிமலை)

ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்)

ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

 

முதற்படைவீடு : திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம்

            சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேற் பெருமா னின் சிறப்பான உறைவிடங்கள் ஆறு இந்த ஆறு உறைவிடங்களில் முதலாவது உறைவிடம் திருப்பரங் குன்றம்: இதுவே முதற்படைவீடு. மதுரைக்கு மேற்கே சுமார் ஐந்து மைல் தூரத்தில் திருப்பரங் குன்றம் இருக்கின்றது. இந்நகரத்தின் மத்தியில் உள்ள மலை சிவலிங்க வடிவிலமைந்து விளங்குகின்றது. இதனால் இம்மலை “பரங்குன்று” என அழைக்கப்படுகின்றது. இதையே “மாடமலி மறுகில் கூடற்குடவயின்” குன்று என திருமுருகாற்றுப்படையும் கூறுகின்றது?

            இக்குன்றிலிருந்து தவமியற்றிய குன்றக்குமரனுக்கு பார்வதி சமேதராகப் பரமசிவன் காட்சியளித்தார் என் றும், காட்சியளித்த திருநாளே தைப்பூசத் திருநாள் என்றும், இந்நாளில் பரமசிவனையும் முருகப்பெருமா னையும் மெய்யன்போடு வணங்குபவர்கள் இகபர சுகங்களைப் பெறுவர் என்றும் புராணவரலாறு கூறுகின்றது.

            சிவபெருமான், உமாதேவியார், பிரமா, விஷ்ணு முதலான தேவர்கள் கண்டுகளிக்கவும். உலகம் உவப் பவும் குமரக்கடவுள் இந்திரன் மகளாம் தேவகுஞ் சரியை இக்குன்றில் திருமணம் புரிந்தார்; இவையும் இவைபோன்ற திருவருட் செயல்களும் இத்திருத் தலத்தின் மகிமையை அறியத்தருவன.

            இக்குன்றின் வடபால் மலையைக் குடைந்து அமைந் துள்ள கோயிலில் மூல மூர்த்தியாகிய குமரக்கடவுள் ஞானஒளிகாலும் வேலைத் தமது கையில் தாங்கி தேவ சேனா தேவியுடன் எழுந்தருளி அடியார்க்கருள்புரியும் காட்சியும்; கீழ்த்திசையில் தொட்டதும் பாவங்களைப் போக்கும் சரவணப்பொய்கையும்; தென்பால் உமை யாண்டார் கோயிலும்; மேல்திசையில் பஞ்சபாண்ட வர் குகையும் மலை உச்சிக்குச் செல்லும் வழியும்; மலை உச்சியில் காசி விசுவநாதர் ஆலயமும், காசி நீர்ச் சுனைத் தீர்த்தமும் இத்தலத்திற் சிறப்பாகத் தரிசிக்கவுள்ளன.

            சரவணப்பொய்கைக்கு அருகிலுள்ள பஞ்சாட்சரப் பாறையிலிருந்து நக்கீரர் சிவபூசை செய்து தவமியற்றினார் என்பதை நினைவூட்டுமுகமாக இவ்விடத்தில் அமைந்துள்ள நக்கீரர் கோயிலையும், நக்கீரர் தவவலி மையை உலகறியச் செய்யுமுகமாக சுப்பிரமணியப் பெருமான் தம் கைவேலால் தென்பரங்குன்று மலைப் பாறை பிளந்த சுவட்டையும் இன்றுங் காணலாம்.

            சம்பந்தர், சுந்தரர், நக்கீரர், அருணகிரிநாதர் முதலான மெய்யடியார்கள் பாடிய திருவருட்பாடல் களும், திருப்பரங்கிரிப் புராணமும் இத்தலமகிமையை என்றும் விளங்கச் செய்கின்றன.

இரண்டாம்படை வீடு : திருச்செந்தூர் (திருச்சீரலைவாய்)

திருச்செந்தூர்
           திருச்செந்தூர்


           திருநெல்வேலிக்குக் கிழக்கே சுமார் நாற்பது மைல் தூரத்தில் “திருச்சீரலைவாய்” இருக்கின்றது. இத்தலத்தைத் தமிழ் ஈழக்குடாக்கடல் அலைகள் ஓயாது தழுவிக் கொண்டிருக்கின்றன. இதுவே திருச்செந்தூர். இரண் டாம்படை வீடு.

            அலைகள் தழுவும் இப்பதியை நக்கீரர், திருமுரு காற்றுப் படையில் “உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச் சீர் அலைவாய்” என விதந்து கூறியுள்ளார்.

            ”பருமணி வயிரமுத்தம் பலவளம் பிறவும் ஆழித்

             திரைஎறி அலைவாய் ஆகும் செந்திமா நகரம்”

என, கந்தபுராணம் தந்த கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகளும் சிறப்பித்துச் சொல்லியுள்ளார்.

            தேவர்களைத் துன்பக்கடலிலாழ்த்திய சூரபத்மனுடன் பாலசுப்பிரமணியப்பெருமான் போருக்கு எழுந்தருளிவரும் போதுவழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும்கிரௌஞ்ச மலையையும் அழித்துத்திருச்செந்தூரையடைந்து இங்கு விஸ்வகர்மாவினால் வகுக்கப்பட்ட ஆலயத்தில் எழுந்தரு ளினார். இங்கு தேவகுருவாகிய வியாழபகவான் சுப்பிர மணியப்பெருமானுக்குப்பூசைசெய்து பூசித்தார். திருச்செந்தூரில் சுப்பிரமணியப் பெருமான் தங்கியிருந்து அசுரர்களின் வரலாறுகளையெல்லாம் கேட்டறிந்து, சூரனை யுந் துணைவரையும் நல்வழிப்படுத்தி ஆட்கொள விரும் பினார். இதற்காக வீரவாகு தேவரை சூரபத்மனிடம் தூதனுப்பி அறிவுரைகளை வழங்கச்செய்தார். அறிவுரை களின் ஆற்றலை அறியாத சூரபத்மன் ஆணவ முனைப்பின் வழியே சென்று கொண்டிருந்தான். இதைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமையைச் செய்யக்குமாரக் கடவுள் திருச்செந்தூரிலிருந்து போருக்குப் புறப்பட்டு வெற்றி ஈட்டி மீண்டும் திருச்செந்தூர் வந்து தங்கினார் என்பது புராணவரலாறு.

            போரில் மாமரமாய் நின்ற சூரபத்மன் பிளவுபட்ட டம் மாப்பாடு இது திருச்செந்தூரிலிருந்து ஆறுமைல் தூரத்தில் கடற்கரையோரமாகவுள்ளது. இந்த இடத் தில் இன்றும் மாமரங்கள் வளர்வதில்லை எனக் கூறுகின்றர்கள்.

            சூரசங்காரம் முடிந்ததும் சுப்பிரமணியப் பெருமான் இப்பதியில் எழுந்தருளி சிவபூசை செய்தார். சிவபூசைக் கான தீர்த்தத்தை தமது கைவேலினால் தோற் தார். இதுவே ஸ்கந்தபுஷ்கரணி தீர்த்தம். பொழுது நாழிக்கிணறு என்னும் பெயருடன் விளங்கு கின்றது. இங்கு எழுந்தருளியுள்ள மூல மூர்த்தியாகிய பாலசுப்பிரமணியர் அபயம், வரதம், உருத்திராக்கம். புஷ்பம் விளங்கும் திருக்கரங்களுடன், சிவபூசை செய்யும் தியானத் திருக்கோலத்தி லெழுந்தருளியிருந்து அடியார் களுக்கு அருள்பாலிக்கின்றார். இத்திருக்கோலம் இத் தலத்திற்கே உரித்தான தனித்திருக்கோலமாக விளங்குகின்றது.

            அடியார்க்கெளியவராகிய சுப்பிரமணியப் பெருமான் ஆறுமுகங்களுடனும் பன்னிரு திருக்கரங்களுடனும் கெந் திலில் எழுந்தருளியுள்ள புதுமையை – மெய்ம்மையை அறிந்து அனுபவித்த நக்கீரர் ஆறுமுகங்களிலும் பொலிந்துள்ள முருகனது அருட்கருணையை இப்படிச்சொல்லி எம்மையும் முருகனிடத்து அழைத்துச் செல்கின்றார்.

மா ருள் ஞாலம் மறு இன்றி விளங்கப்

பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம்

ஆர்வலர் ஏத்த அமர்ந்துனிது ஒழுகிக்

காதலின் உவந்த வரம்கொடுத்தன்றே, ஒருமுகம்

மந்திர விதியின் மரபுளி வழாஅ அ

ந்தணர் வேள்விஓர்க் கும்மே ஒருமுகம்

எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித்

திங்கள் போலத் திசைவிளக்கும்மே, ஒருமுகம்

செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்

கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே, (ஒருமுகம் )

குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின்

மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே”

-திருமுருகாற்றுப்படை

 

மூன்றாம் படைவீடு : பழநி (திருவாவினன்குடி)

பழனி
             பழனி


            திருமகள், காமதேனு. ரியன், பூமாதேவி, அக்கினிதேவன் முதலானோர் முருகப்பெருமானை நினைத்து தவஞ்செய்த இடம் (திரு இனன்குடி) திருவாவினன்குடி. இது பழநி முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடு.

            பழநிமலை அடிவாரத்தில் திருவாவினன்குடி ஆலய மும் இதன் வடகீழ்ப் பகுதியில் சரவணப் பொய்கை யும் இருக்கின்றன. சிவகிரியான பழநிமலை உச்சியில் ஞான தண்டாயுதபாணி எழுந்தருளி அடியார்களுக்கு அருள் புரிகின்றார். சுமார் நானூற்றைம்பது அடி உயர மான சிவகிரியென்னும் பழநிமலை உச்சியில் தண்டா யுதபாணியாக முருகப்பெருமான் எழுந்தருளிக் காட்சி தருகின்றார். தண்டாயுதபாணியாகவிருந்தருள் புரி யும் முருகன் திருக்கோலத்தைப் பழநிப் புராணத்தி லுள்ள கீழ்க்காணும் பாடலால் அறிந்து சிந்தை செய்வோம்.


“ஆரநூபுர வடியு முடிமிசை யொண்மீக் குடுமியழகுந்தண்டு

சேரவோர் கரனுமொக்கல் சேர்த்தியதோர் கரனுமெழில் – சிறக்க மென்றார்ப்

பாரணாதிபர் விபுதர் பரவு சிவகிரிவருபச் சிமத்துவாரச்

சேரர்கோ னாலயத்தினின்றிலகு பரஞ்சுடரைச் சிந்தை – செய்வாம்.’

            பழநிமலையைச் சுற்றிப் பிரகாரம் அமைந்துள்ளது. முருகனை வேண்டி இங்கு வரும் அடியார்கள் கிரிப்பிர தக்ஷிணம் செய்வதிலும் தவறார்.

            ஆண்டிக் கோலத்தில் எழுந்தருளிக் காட்சி தரும் முருகப்பெருமானைத் தரிசனம்செய்ய அடியார்கள் மலை உச்சிக்கு நடந்தும் மின்சார இழுவை வண்டியிலும் செல்வார்கள். திருத்தொண்டு செய்யும் யானை செல் லும் ஒருவழிப் பாதையும் ம்மலையில் உண்டு. நடந்து செல்லுமடியார்கள் தங்கிச் செல்ல மடமும் தாகசாந்தி செய்யத் தண்ணீர்ச்சாலைப் பந்தர்களும் உண்டு.

            மலைமீது ஏறிச் செல்பவர்கள் முதலில் இடும்பன் சந்நிதியைத் தரிசித்தே மேல் செல்வார்கள். இந்த இடும்பனே முதலில் காவடி கட்டி வந்து முருகப்பெரு மானின் திருவருள் பெற்றதாகவும், அன்று முதலே அடியார்கள் முருகனுக்குக் காவடி எடுத்துச் சென்று வழிபட்டு அருள் பெருக்கும் வழக்கம் ஏற்பட்டதாக வும் நம்பிக்கை நிலவி வருகின்றது.

            மலையின் அடிவாரத்தில் இருக்கும் பெரிய கோயில் திருவாவினன்குடி எனப்படும் படைவீடு. பழநிக்குச் செல்லும் அடியார்கள் அடிவாரத்தில் காட்சிதரும் கந்தனையும் மலைமேல் காட்சி கொடுக்கும் பழநியாண் டவரையும் தரிசித்து நல்லருள் பெறுவார்கள்.

 

நான்காம் படைவீடு : திருவேரகம் (சுவாமிமலை)

சுவாமி-மலை
            சுவாமி-மலை


           முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் நான்கா வது படைவீடு சுவாமிமலை. இதுவே திருவேரகம், அருணகிரிநாத சுவாமிகள் தாம் அருளிய திருப்புகழில்

“ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு

வாமிம லைப்பதி மெச்சிய சித்தஇ

ராஜத லக்ஷண லக்ஷமி பெற்றருள் பெருமாளே”    

            எனக்கூறி, அற்புதமிக்க திருவேரகமே சுவாமிமலை என் பதைத் தெளிவு பெறச் செய்துள்ளார்கள். இத்திருப்பதி கும்பகோணத்திலிருந்து ஐந்து மைல் தூரத்தில் இருக்கின்றது.

            முருகப்பெருமான் கயிலையங்கிரியில் நவவீரர் முத லானவர்களுடன் ஒரு நாள் விளையாடிக் கொண்டிருந் தார். அப்பொழுது அங்கு வந்த தேவர்கள் அனைவரும் முருகனை வணங்கிச் சென்றனர். பிரமா முருகப் பெரு மானை இளையோன் என எண்ணி வணங்காது சென்றார். பிரமாவின் செருக்கை அடக்கத் திருவுளங்கெண்ட முரு கப் பெருமான், வீரவாகு தேவர் மூலம் பிரமாவை அழைத்து வேதம் ஓதும்படி பிரமாவைப் பணித்தார்: பிரமாவும் “ஓம்” எனக்கூறிவேதத்தை ஓதத்தொடங்கி னார். முருகப்பெருமான் பிரமா வேதம் ஒது தலை நிறுத்தி முதற்கூறிய “ஓம்” என்னும் சொல்லுக்குப் பொருள் கூறும்படி கட்டளையிட்டார். பிரணவமந்திர சொரூபி யாகிய சுந்தவேளே பொருளைக் கேட்டார் என்பதை எண்ணித் திகைத்து நின்றார் பிரமா. படைப்புத் தொழி லைச் செய்யும் பிரமா “ஓம்” என்பதன் பொருளை அறி யாதிருத்தல் தவறெனக் கூறி, நான்கு தலைகளிலும் குட் டிச் சிறையிலிட்டார். பின்னர் தேவர்கள் படைப்புத் தொழில் செய்ய பிரமாவை அனுமதிக்குமாறு சிவபெரு மானை வேண்டினர். சிவபெருமான் பிரமாவை சிறை நீக்கஞ் செய்ய எண்ணினார். இதை அறிந்த முருகப் பெருமானும் பிரமாவைச் சிறையிலிருந்து விட்டார்.

            பிரமா அறியமுடியாத பிரணவத்தின் பொருளை கந்தவேள் அறிந்துள்ளதால் இதனைத் தனக்கு உபதேசிக் கும்படி சிவபெருமான் முருகனை வேண்டினார். முருகப் பெருமான் குருமூர்த்தியாகத் தந்தையின் மடி மீதெ ழுந்தருளி, சிவபெருமான் திருச்செவியில் பிரணவப் பொருளை உபதேசித்துக் குருநாதன், சுவாமிநாதன் என் னும் திருநாமங்களைப் பெற்றார்.

            சிவபெருமானுக்குக் குருமூர்த்தியாக இருந்து பிரண வப் பொருள் உபதேசித்த இடம் காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள சுவாமிமலையாகிய திருவேரகம் என்னும் இத்திருப்பதியே. தை அருணகிரிநாதர்

குருவா யரற்கு மூபதேசம் வைத்த

குகனே குறத்தி – மணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து

குடகா விரிக்கு – வடபாலார்

திருவே ரகத்தி லுறைவா யுமக்கொர்

சிறுவா கரிக்கு – மிளையோனே

திருமால் தனக்கு மருநா வரக்கர்

சிரமே துணித்த – பெருமாளே

            என விதந்து கூறி மகிழ்கின்றார். சுவாமி மலைமேல் எழுந்தருளிய முருகனை வழிபடச் செல்லும் அடியார்கள் அறுபது படிகளில் ஏறிச் சுவாமி சந்நிதானத்தை அடைவர். படி ஏறத் தொடங்கும் போது முதற்படியில் தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து வழிபாடாற்றிய பின்னர் ஏனைய படிகள் வழி ஏறிச் செல்வர். இது பண்டைநாள் வழக்கு. கந்த புராண நிகழ்ச்சிகளை நினைவூட்டும் பல சித்திரங்களை இங்கு சுவர்களில் காணலாம். தினமும் இப்பதிக்குப் பெருந்திரளான அடியார்கள் வந்து சுவாமிநாதப் பெரு மானான முருகனை வணங்கி நல்லருள் பெறுகின்றார்கள்.


ஐந்தாம் படைவீடு : திருத்தணி  (குன்றுதோறாடல்)

திருத்தணி
         திருத்தணி


            மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலப்பகுதி: வளம் நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியை முருகப் பெருமான் விரும்பியுறையும் ஐந்தாம்படை வீடாகக் கொண்டருளினார். ஆறுமுகப் பெருமான் குன்றுகள் தோறும் சென்று விளையாடுவதற்கான உட்பொருள் ஆன்மாக்களின் உய்யுநெறிக்கு வழிகாட்டலேயாகும். உலக அமைப்பையும் தோற்றத்தையும் ஆழ நோக்குவார்க்குக் “கல்தோன்றி மண் தோன்றாக் காலம்” என்ற முதுமொழி உலகில் மலையே முதலில் தோன்றியதாக நினைவுறுத்தும். முதற் பொருளான முருகப் பெருமானும் உலகில் முதற் தோற்றுவித்த மலைகளில் சென்று விளையாடி ஆன்மாக்களுக்கு அருள் பாலிக்கின்றார். மாணிக்கவாசகரும் மலைமேல் இறை வனை நினைந்து ‘ஆராத இன்பம் அருளுமலை போற்றி” என உள்ளம் உருகிப் பாடுகின்றார்.

            குன்றுதோறாடலில் மலை, ஆற்றங்கரை, சோலை, காடு, குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி, மரத்தடி முதலான எல்லா இடங்களிலும் அமைந்துள்ள முருகப் பெருமான் திருக்கோயில்கள் யாவும் இடம்பெறும் என்பர். குன்றுதோறாடல் என்னும் தலைப்பில் அருண கிரிநாதர் திருப்புகழில் பல திருப்பதிகளைப் பாடியுள் ளார்; இவற்றுள் தமிழ் நாட்டிலுள்ள திருத்தணி, வயலூர், சுருளிமலை, இளஞ்சி, குன்றக்குடி, விராலி மலை. ஈழநாட்டிலுள்ள கதிர்காமம் முதலான திருப் பதிகள் விசேடமானவை,

            இலங்கையின் தென்கீழ்த் திசையில் கதிர்காமத் திருப்பதி உளது. ஈழநாட்டிலுள்ள காலத்தால் முற் பட்ட முருகனாலயங்களுள் இதுவும் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டளவில் இராசசிங்கன் என்னும் அரசன் இத் தலம் கட்டுவதற்கு உதவியாயிருந்தான் எனச் சரித் திரக்காரர் கூறுகின்றார்கள்.

            கந்தகழி என்னும் திருநாமத்தைப் பெற்ற முருகன் பெயருக்கேற்ற தன்மையில் கதிர்காமத்தில் விக்கிரக மில்லாமலும், வேறு உருவமில்லாமலும், வேறெவ் வித சின்னமாக இல்லாமல் அருவாய் நிற்கும் நிலையில் வணங்கப்படுகின்றான். இதனாலேயே இலங்கை, இந் தியா யா ஆகிய இடங்களிலுள்ள முருகன் ஆலயங்களுள் கதிர்காமம்
தனித்தன்மை பெற்று விளங்குகின்றது.

 அதிருங் கழல்ப ணிந்து – னடியேனுன்

அபயம் புகுவ தென்று – நிலைகாண

இதயந் தனிலி ருந்து – க்கிருபையாகி

இடர்சங் கைகள்க லங்க – அருள்வாயே

எதிரங் கொருவ ரின்றி – நடமாடும்

பதியெங் கிலுமி ருந்து – லுமைபாலா

இறைவன் தனது பங்கி – விளையாடிப்

பலகுன் றிலும மர்ந்த – பெருமாளே


            இவ்வாறு பல குன்றுகளிலுமமர்ந்த குமரப் பெரு மானின் திருவருளால் நாமும் குன்றத பேரின்பப் பெருவாழ்வைப் பெறுவோம் என்பதை வலியுறுத்தி அருணகிரிநாத சுவாமிகளும் பாடித் துதிக்கின்றார்.


ஆறாவது படை வீடு : பழமுதிர் சோலை (அழகர் கோயில்)

பழமுதிர்ச்சோலை
         பழமுதிர்ச்சோலை


           முதிர்ந்த பழங்களை எந்நாளும் உடமையாகக் கொண்டுள்ளது பழமுதிர்சோலை. பல அறிஞர்கள் திருமாவிருஞ்சோலை எனப்படும் அழகர்கோயில்தான் பழமுதிர்சோலை என்று கூறுகின்றனர். இங்குள்ள மலை அழகர்மலை. இம்மலையில் ஊற்றெடுத்து வருகின்ற ஆறு. சிலம்பாறு. இத்திருத்தலம் மதுரைக்கு வடக்கே பன் னிரண்டு மைல் தூரத்தில் இருக்கின்றது. ஆறாவது படை வீடாகிய பழமுதிர்சோலையில் எழுந்தருளி அருள் பாலிக்கும் முருகப்பெருமானை நக்கீரர் ” பழமுதிர்சோலை மலை கிழவோனே” என வாழ்த்தி வளம் பெற்றார்.


            ஒளவையார் ஒருமுறை மதுரை செல்லும்போது பழமுதிர்சோலை வழியாகச் சென்றார் என்றும். தமிழ்க் கடவுளரான முருகப்பெருமான் தமிழ்த் தாயா ரான ஓவைப் பிராட்டியார் மூலம் உலகு உய்ய உயர் வான நெறியைப் போதிக்க விரும்பி, மாட்டுக்காரச் சிறுவன் வேடந்தாங்கி ஔவையார் செல்லும் வழியி லுள்ள நாவல் மரத்திலிருந்து பழங்களை உதிர்த்தபோது, ஒளவையார் பொறுக்கி எடுத்து மண் ஊதி உண்ண முயன்றார். அப்பொழுது சிறுவன் ஒளவையாரைப் பார்த்து பாட்டி பழம் சுடும் நன்றாக ஊதி ஆறியபின் உண்ணுங்கள் என்றான். ஔவையார் சிறுவன் மதிநுட் பத்தை விதந்து, தனது அறிவுக் குறைவை எண்ணி வருந்தினார். வருந்திய ஔவையார் முன் சிறுவனான முருகக்கடவுள் காட்சி கொடுத்து, ஒளவையாரிடம் இவ்வுலகத்தில் கொடியது எது? இனியது எது? பெரியது எது? என்னும் வினாக்களை வினாவி, தம் அருள் வழி ஒளவையார் விடை கூறவைத்தார் என்பது வரலாறு

தொல்காப்பியத்தின் நூன் மரபின் இடமும் சிறப்பும்

தொல்காப்பியத்தின்-நூன்-மரபின்-இடமும்-சிறப்பும்

தொல்காப்பியத்தின் நூன் மரபின் இடமும் சிறப்பும்

மூவகைக் கருத்துகள்

            தொல் காப்பிய எழுத்ததிகார முதல் இயலாகிய நூன்மரபின் பெயர்க்காரணம், தொல் காப்பியத்தில் அதன் இடம். சிறப்பு ஆகியவை பற்றிப் பழைய உரையாசிரி யர்களிடையேயும் இன்றைய ஆய்வாளர்களிடையேயும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

            இவ்வேறுபட்ட கருத்துகளை மூன்று வகைப்படுத்தலாம். அவை,

1.எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்ட தொல்காப்பியம் என்னும் நூல் முழுமைக்கும் பொதுவான இலக்கணம் கூறுவது. அதனால் நூன்மரபு எனப்பட்டது.

2.எழுத்ததிகாரத்திற்கு மட்டும் உரிய இலக்கணத்தினைத் தொகுத்து உணர்த்துவது.

3. நூலினது மரபுபற்றிய பெயர்களைக் கூறுவதனால் நூன்மரபு என்னும் பெயர் பெற்றது.   என்பன.

நச்சினார்க்கினியர் கருத்து

            மேற்கூறிய மூன்றனுள் முதற்கருத்தினை நச்சினார்க்கினியர் ஒருவர் மட்டுமே கொண்டுள்ளார். அவர் உரைப்பகுதி பின்வருமாறு:

 ‘இத்தொல்காப்பியம் நூற்கு மரபாந்துணைக்கு வேண்டுவனவற்றைத் தொகுத்து உணர்த்தின மையின் நூன்மரபு என்னும் பெயர்த்தாயிற்று.

            ஆயின் நூல் என்றது ஈண்டு மூன் றதிகாரத்தையும் அன்றே? இவ்வோத்து மூன்றதிகாரத்திற்கும் இலக்கணமாயவாறென்னை யெனின், எழுத்துக்களது பெயரும் முறையும் இவ்வதிகாரத்திற்கும் செய்யுளியற்கும் ஒப்பக் கூறியது. ஈண்டுக் கூறிய முப்பத்து மூன்றினைப் பதினைந்தாக்கி ஆண்டுத் தொகை கோடலின் தொகை வேறாம்.  அளவு, செய்யுளியற்கும் இவ்வதி காரத்திற்கும் ஒத்த அளவும் ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும். கூறிய மாத்திரை இரண்டற்கும் ஒத்த அளவு. ஆண்டுக்கூறும் செய்யுட்கு அளவு கோடற்கு ஈண்டைக்குப் பயன்தராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு. அஃது ‘அள பிறந்துயிர்த்தலும்’ (67.33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டு மாட்டெறியு மாற்றான் உணர்க. இன்னும் குறிலும் நெடிலும் மூவகையினமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் இவ்வதிகாரத்திற்கும் ஒப்பக் கூறியன. குறைவும் இரண்டற்கும் ஒக்கும். கூட்டமும் பிரிவும் மயக்கமும் இவ் வதிகாரத்திற்கே உரியவாகக் கூறியன. ‘அம் மூவாறும்’ (67.22) என்னும் சூத்திர முதலியவற்றான் எழுத்துகள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின் சொல்லதி காரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினா ராயிற்று. இங்ஙனம் மூன்றதிகாரத்திற்கும் இலக்கணம் கூறுதலின் இவ்வோத்து நூலினது இலக்கணம் கூறியதாயிற்று. நூல் என்றது தொல்காப்பியம் என்னும் பிண்டத்தை” (எ.1.நச்சி.உரை).

            நச்சினார்க்கினியர் கருத்தைப் பின் வருமாறு தொகுத்துக் கூறலாம்: நூன்மரபு மூன்றதிகாரங்களாய் அமைந்த காப்பியம் என்னும் பிண்டவகை தொல் நூல் முழுமைக்கும் மரபை அல்லது இலக்கண மாயவற்றைத் தொகுத்து உணர்த்துகிறது. அது பின்வருமாறு:

(அ)எழுத்துக்களது பெயர், முறை ஆகி யன செய்யுளியற்கும் எழுத்ததி காரத்திற்கும் பொதுவாகக் கூறியது.

(ஆ) அளபில் குறிற்கும், நெடிற்கும் கூறி யது பொது. அளபெடை செய்யு ளியலை எதிர்நோக்கியே கூறப் பட்டது.

(இ)குறில், நெடில், வல்லெழுத்து, மெல் லெழுத்து, இடையெழுத்து, ஆய்தம் ஆகியவை செய்யுளியலில் வண்ணத் திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் பொது.

(ஈ) எழுத்துக்களின் மாத்திரைக் குறைவைப்பற்றிய செய்திகள்
எழுத்து, பொருள் இரண்டதிகாரத்திற்கும் பொது.

(உ) எழுத்துக்களின் கூட்டம் (உயிரும் மெய்யும் கூடுதல்), பிரிவு போன்ற செய்திகள் எழுத்ததிகாரத்திற்கே உரியவை.

(ஊ) மயக்கம் எழுத்துக்கள் கூடிச் சொல் லாவதைக் கூறுவதால், எழுத்ததி காரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் பொது.

இளம்பூரணர், வேங்கடராஜுலு ரெட்டியார் கருத்து

            இரண்டாவது கருத்தினை இளம்பூரணரும் வேங்கட ராஜுலு ரெட்டியாரும் கொண்டுள்ளனர். இளம்பூரணர், “இவ்வதிகாரத்திற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான் தொகுத்து உணர்த்துதலின் நூன்மரபு என்னும் பெயர்த்து. இதனுட் கூறுகின்ற இலக்கணம் மொழியிடை எழுத்திற்கன்றித் தனி நின்ற எழுத்திற்கென உணர்க” (எ.1.இளம்.) என்றுகூறுகிறார்.
            வேங்கடராஜுலு ரெட்டியாரும் முதற்கண் தனி (1944), “இவ்வதிகாரத்தின் இவ்வியலில் பெரும்பாலும் யெழுத்துக்களின் மரபினையுணர்த்துதலின் இவ்வியல் நூன்மரபு என்னும் பெயர் பெற்றது” என்று கூறி, மேலும் சிவஞான முனிவர் கருத்தை மறுத்தபின், தொடர்ந்து “எழுத்துக்களின் இயல்பே இவ்வியல் முழுவதும் கூறப்பட்டதனால் இஃது எழுத்து மரபு என்றவாறாயிற்று என்றல் அமைவுடையது, மொழியின் இயல் புணர்த்திய இயல் மொழி மரபு எனப் பட்டவாறுபோல” என்று கூறுகிறார். பின்னர், இவ்வியல் தனி எழுத்துக்களின் இயல்பினையே உணர்த்தியது என்பதனை, இவ்வியல் செய்தி முழுவதையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறி விளக்குகிறார். ஆயினும், அவரே “மேற்கூறியவாறு இவ்வியல் முழுவதும். எழுத்தின் இலக்கணமே கூறப்பட்டதாயின், இவ் வியலுக்கு எழுத்து மரபு எனப் பெயரிடாது நூன் மரபு எனப் பெயரிட்டது என்னையெனின், நூல் என்றது ஈண்டு எழுத்தினையே குறித்தது என்று கோடல் அமைவுடையதாகும். இப் பொருட்குத் தக்க மேற்கோள் இப்போழ்து அறியப் பட்டிலதாகலின் இன்னும் ஆராய வேண்டுவதாயுளது” (சிவலிங்கனார் பதிப்பு 1980:28-30) எனக் கூறி முடிக்கிறார்.

சிவஞானமுனிவர் கருத்து 

            மூன்றாவது கருத்து சிவஞான முனிவரால் கூறப்பட்டு சுப்பிரமணிய சாஸ்திரியாரால் தழுவப்பட்டது. சிவஞான முனிவர் தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியில் (ஆறுமுக நாவலர் பதி. 1956:26,27), ‘அஃதாவது, நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல். எனவே, இதுவும் இவ் வோத்துட் கூறும் சூத்திரங்களுக்கெல்லாம் அதிகாரம் என்பது பெறப்பட்டது. மலை, கடல், யாறு, குளம் என்றற்றொடக்கத்து உலக மரபு பற்றிய பெயர் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து, குறில், நெடில், உயிர், மெய் யென்றற்றொடக் கத்துப் பெயர்கள் நூலின்கணாளுதற் பொருட்டு முதனூலாசிரியனாற் செய்து கொள்ளப்பட்டமையின், இவை நூன்மரபு பற்றிய பெயராயின வென வறிக. ஏனையோத்துக்களின் விதிக்கப்படும் பெயர்களும் நூன்மரபு பற்றி வரும் பெயராதல் உய்த்துணர்ந்து கோடற்கு முன்வைக்கப்பட்டது.

            “இப்பெற்றியறியாத உரையா சிரியர்முதலியோர். இவ்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத் தினை ‘ஒராற்றான் தொகுத்துணர்த்துதலின் நூன் என்னும் பெயராயிற்று என் மரபு பாரும், இவ்வோத்துட் கூறப்படும் விதிகள் மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகலின் நூன் மரபென்னும் பெயராயிற்று என்பாரும் ஆயினார். இவ்வதிகாரத்துட் கூறும் எழுத்திலக்கணத்தைத் தொகுத் துணர்த்தலாற் பெற்ற பெயராயின் அதிகார மரபெனப்படுவதன்றி நூன் மரபெனப் படாமையானும், இவ்வோத் துட் கூறப்பட்டன செய்கையோத்திற்கும் பொருளதிகாரத்துட் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி மூன்றதி காரத்திற்கும் பொதுவாகாமையானும் அவை போலியுரையாதலறிக” என்கிறார். இவரைத் தழுவியே சுப்பிரமணிய சாஸ்திரியாரும் (1937:3) ‘நூற்கு இன்றியமையாத மரபுபற்றிய குறிகளை விதிக்கும் இவ்வியலுக்கு “நூன்மரபு” எனப் பெயரிட்டது மிகப் பொருத்தம்’ என்று கூறுகிறார்.


            சிவஞான முனிவர் இளம்பூரணர் கருத்தைப் பெயர்ப் பொருத்தமின்மை என்ற அடிப்படையில் மறுக்கிறார். நச்சினார்க்கினியரின் ‘நூல் முழுமைக்கும் இலக்கணம் கூறுவது’ என்ற கருத்தை முற்றப்பொருந்தாமை என்ற அடிப் படையில் மறுக்கிறார். எழுத்ததிகாரப் புணர்ச்சி பற்றிப் பேசும் இயல்களுக்கும், பொருளதிகாரத்தில் செய்யுளியலுக்குமே யன்றி மற்ற தொல்காப்பியப் பகுதிகளுக்கு நூன்மரபு பொதுவன்று என்பது சிவஞான முனிவர் கருத்து. ஆனால், சிவஞான முனிவரது ‘நூலினது மரபு பற்றிய பெயர்களைக் கூறுவது என்ற கருத்தை வேங்கடராஜுலு ரெட்டியார் மறுக்கி றார். ஆயின், சிவஞான முனிவர் கூறியவாறு நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதலின் நூன்மரபு எனப்பட்டது” என்று கொள்ளுதல் அமையும் எனின், அவ்வாறு கோடல் ஓராற்றான் அமையுமாயினும், அவர் கூறியவாறு (எழுத்தின் பெயர்க ளேயன்றி) நூன்மரபு பற்றிவரும் பெயர் அனைத்தும் ஈண்டுக் கூறப்படாமை குன்றக் கூறலாம் ஆதலானும், இவ்வியலுட் கூறுவது தனிநின்ற எழுத்துக்களின் இலக்கணமேயாகலானும், அதுவும் உண்மைப் பொருளாதல் இன்று” (சிவலிங்கனார் பதி. 1980:29). இதன் கருத்து, எழுத்திலக்கணம், பற்றிய மரபுப் பெயர்கள் மட்டுமே இங்குக் கூறப்பட்டனவேயன்றிச் சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் பற்றிய மரபுப் பெயர்கள் இங்குக் கூறப்படாமையின் நூலினது மரபு பற்றிய பெயர்களைக் கூறுவது இவ்வியல் என்று கொள்வது பொருந்தாது என்பதாகும்.

ஒப்பீடு

            மேலே கூறப்பட்ட மூவகைக்கருத்துக்களில், இளம்பூரணர் கருத்தைப் (1.2) பெயர்ப் பொருத்த மின்மை அடிப்படையில் சிவஞான முனிவர் மறுத்தார் (1.3). இளம் பூரணரைத் தழுவும் வேங்கடராஜுலு ரெட்டியாரும் இப்பெயர்ப் பொருத்த மின்மையை உணர்ந்து, இங்கு நூல் என்பது எழுத்தினையே குறித்தது எனக் கொள்ள வேண்டும் என அமைதி கூறுகிறார். இருப்பினும் அப்பொருளில் ஆளப்பட்ட மேற்கோள் இல்லை என்பதை அவர் ஒத்துக் கொள்கிறார். இது அவர் கருத்தில் வன்மை இல்லை என்பதைக் காட்டி விடுகிறது.

            பெயர்ப் பொருத்தமின்மை மாத்திரமன்றி, “எழுத்திலக்கணத்தை தொகுத்துணர்த்துதல்” ஓராற்றால் (எ.1.இளம்) என்ற கருத்தும் பொருத்த மில்லாததே. எழுத்ததிகாரப் பிறப்பியல் செய்திகள் இங்குப் பேசப்படவில்லை. புணர்ச்சிபற்றிப் பேசும் இயல்களுக்கு இங்குக் கூறப்பட்ட செய்திகள் கருவியாவ தன்றி அவற்றின் செய்திகள் இங்குத் தொகுத்துணர்த்தப் படவில்லை. எனவே இவ்வகையிலும் இளம்பூரணர் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை.


            “நூலினது மரபு பற்றிய பெயர் கூறுதல்” என்ற சிவஞான முனிவர் கருத்து வடமொழி இலக்கண மரபினை உட்கொண்டு கூறப்பட்டது. சம்ஜ்ஞைகள் எனப்படும் இலக்கணக் கலைச்சொற்களை முதற்கண் விளக்குவது பாணினீய மரபு. அம்மரபில் நல்ல பயிற்சியுடைய சிவஞான முனிவர் தொல்காப்பிய முதல் இயலிலும் அம்மரபே பின்பற்றப் பட்டிருப்பதாகக் கருதுகிறார். அதே போன்ற பின்னணி யுடைய சுப்பிரமணிய சாஸ்திரியாரும் (1939:3) இக்கருத்தைத் தழுவி உரை செய்தார். இக்கருத்து பொருத்தமற்றது என்பதை வேங்கடராஜுலு ரெட்டியார் மற்ற அதிகாரங்களுக்குரிய மரபுப் பெயர்கள் கூறப்படாமையைக் காட்டி மறுக்கிறார் (1.3). மற்ற அதிகாரங் களுக்குரிய மரபுபற்றிய பெயர்களே யன்றி எழுத்ததிகாரத்திற்குரிய ஓரெழுத்தொரு மொழி, ஈரெழுத்தொருமொழி, தொடர் மொழி (எ.45), புணர்ச்சி (GT.142). நிறுத்த சொல், (6.108). திரிபு. இயல்பு (67.109).. மெய்பிறிதாதல், மிகுதல், குறித்துவருகிளவி குன்றல் (எ.110), வேற்றுமை, அல்வழி, சாரியை (எ.113) போன்ற பல மரபு பற்றிய குறியீடுகளும் நூன்மரபில் கூறப் படவில்லை எனவே நூல் முழுமைக்கும் உரிய மரபுப் பெயர்கள் மட்டுமன்றி எழுத்ததிகாரமுழுவதற்கும் உரிய மரபு பற்றிய பெயர்கள் கூட முற்றிலுமாகப் பேசப்படவில்லை என்ற அடிப்படையில் சிவஞான முனிவர் கருத்து பொருந்தாதாகின்றது.

            நூன்மரபு தொல்காப்பியம் தொகுத்துணர்த்துவது என்னும் நூல் முழுமைக்கும் இலக்கண மாயவற்றைத் என்று கூறும் நச்சினார்க்கினியரே, மூவகை உரையாசிரியர்களுள் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகளைக் காட்டுகிறார். அவை எவ்வாறு பிற அதிகாரங்களுடன் தொடர்புடையன என்பதையும் பொருத் திக் காட்டுகிறார் (1.1). பெயர்ப் பொருத்தத்தை. தொலகாப்பியம் எவ்வகை நூலுள் அடங்கும் என்பதைக் கூறியதன் மூலம் குறிப்பாக உணர்த்துகிறார். ஆனால், சிவஞான முனிவர், அக்கருத்தை, இவ்வியலில் கூறப்பட்டவை செய்கை யோத்துக்களுக்கும் (புணர்ச்சி பேசும் இயல்கள்) செய்யுளியலுக்கும் மட்டும் கருவியாவதன்றி மூன்றதிகாரத்திற்கும் பொதுவாகாது எனக் கூறி மறுக்கிறார். எனினும் இம்மறுப்பு சொல்லதிகாரத் திற்கும் நூன் மரபிற்கும் நச்சினார்க்கினியர் காட்டிய தொடர்பை உட்கொள்ளவில்லை.

தொல்காப்பிய ஆய்வின் அடிப்படை

            மாறுபட்ட இக் கருத்துக் களில் முற்றிலும் பொருத்தமானது எது? அல்லது இம்மூன்றும் அல்லாத வேறொரு பொருத்தமான விளக்கம் கூற இயலுமா? என்று முடிவு செய்யுமுன் தொல்காப்பிய ஆய்வின் சில அடிப்படைக் கூறுகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது.

            தொல்காப்பியம் எழுதப்பெற்றுப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே, இன்று நமக்குக் கிடைத்துள்ள தொல்காப்பிய உரைகள் எழுதப்பெற்றன. இவ்வுரைகளின் துணையின்றித் தொல்காப்பியத்தை நாம் புரிந்துகொள்ள இயலாது எனினும், உரையாசிரியர் கருத்தையே தொல் காப்பியர் கருத்தாகக் கொள்வது. முடிந்த முடிபாகக் கொள்வதும் அவர் கருத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளத் தடையாய் அமையும். தொல்காப்பியத்தைத் தொல் காப்பியத்தின் மூலமே-அதாவது முன்னும் பின்னும் அந்நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலேயே புரிந்துகொள்ள முயலுவதும் அதற்குத் துணையாக மாத்திரம் உரைகளைக் கொள்வதுமே தொல்காப்பிய ஆய்வை அறிவியல் அடிப்படையில் கொண்டு செல்வதுடன் தொல்காப்பியர் கருத்தை உணரவும் துணைபுரியும். இவ்வடிப்படை யில், நூன்மரபு பற்றிய உரையாசிரியர் கொள்கைகளை மதிப்பீடுசெய்ய நூல் பற்றிய தொல்காப்பியர் கொள்கை யையும், ‘மரபு’ என்ற பெயரைத் தொல் காப்பியர் பயன்படுத்து மாற்றையும், நூன்மரபில் கூறப்பட்ட செய்திகளுக்கும் தொல்காப்பியத்தின் மற்ற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பையும் ஆராய்தல் அவசி யமாகிறது. இவ்வாய்வின் பயனாய்க் கிடைக்கும் முடிபுகள் நூல் மரபின் பெயர்ப்பொருத்தம், தொல்காப்பியத்தில் அதன் இடம், உரையாசிரியர் கருத்துகளின் பொருத்தம் ஆகியவற்றை இயல்பாக விளக்கிவிடும்.

தொல்காப்பியரின் நூல் அடிப் பற்றிய கொள்கை

            தொல்காப்பியர் நூல் பற்றிய செய்திகளைப் பொருளதி காரச் செய்யுளியல், மரபியல் ஆகிய இரு இயல்களில் பேசுகிறார்.செய்யுளியலானது நூல்களை, உள்ளமைப்பின் படையில் வகைப்படுத்துகிறது (பொ. 468-474). மரபியலானது, நூல்களைப் பிற நூல்களின் சார்பின்மை, சார்புடைமை என்ற அடிப்படையில் முதனூல், வழிநூல் என வகைப்படுத்தி, பின்னர், நூலின் உள்ளமைப்பினை விரிவாகக் கூறுகிறது (பொ.639-656). இவ்விரண்டு இயல்களிலும் கூறப்பட்ட செய்திகளில் செய்யு ளியலில் கூறப்பட்ட செய்திகளே இங்குத் தொடர்புடையன.

            நூலின் பொது இயல்பு பின்வரு மாறு: “நூல் என்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பெரருளோடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமல் கருதிய பொருளைத் தொகையானும் வகையானும் காட்டி. அதனகத்து நின்றும் விரிந்த உரையோடு பொருத்தமுடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு (பொ.468:இளம்). அந்நூல் நான்கு வகையை உடையது (பொ.469). அவை யாவன, ஒரு பொருளைக் குறித்துக் கூறும் சூத்திரத்தான் நூலாவன; இனமாகிய பொருள்கள் சொல்லப்படும் ஒத்தினால் நூலாவன; இனங்கள் பலவற்றையும் கூறும் படலத்தான் இயல்வன; சூத்திரம், ஒத்து, படலம் என்ற மூன்றுறுப்புகளையும் கொண்டு பிண்டமாவன என நான்கு வகைப்படும் (பொ.470). இவ்வாறு நூல் களை வகைப்படுத்தி இவ்வகைகளுக்கு அடிப்படையான சூத்திரம், ஓத்து, படலம் ஆகியவற்றின் இயல்புகளை விளக்குகிறார் தொல்காப்பியர் (பொ.471-473). இம்மூன்று உறுப்புகளையும்
தன்மையை உடைய நூல் அடக்கிய பிண்டம் எனப்படும் (பொ.474) எனவும் விளக்குகிறார்.


            சூத்திரத்தான் நூலாகியதற்கு இறையனார் களவியலும், ஒத்தினால் நூலாவதற்குப் பன்னிருபடலம், புறப் பொருள் வெண்பாமாலை போன்றவை படலத்தால் நூலாவதற்குத்களும், தண்டியலங்காரம், போன்றவையும் மூன்றுறுப்புகளையும் யாப்பருங்கலம் எடுத்துக்காட்டாய் அமையும். சூத்திரம், ஒத்து, படலம் என்ற அடக்கிய பிண்ட வகை நூலிற்கு எடுத்துக்காட்டாய் அமைவது தொல்காப்பியம்.’

            எனவே பிண்டவகையாய் அமைந்த தொல்காப்பியம் என்னும் நூலின் முதல் ஓத்தின் பெயராகிய ‘நூன்மரபில்’ உள்ள ‘நூல்’ என்னும் சொல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று படலங்களையும், இருபத்தேழு ஓத்துக்களையும், ஆயிரத்து அறுநூற்றுப் பத்து சூத்திரங்களையும் கொண்ட நூல் முழுவதையும் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். அவ்வாறன்றி ஓர் அதிகாரத்தை மட்டும் குறிப்பிடுவதாகக் கொள்வது தொல்காப்பியர் கொள்கையுடன் மாறு பட்டு அவர் நூலின் உறுப்பாகிய ஒரு பகுதிக்கே செல்லும். நச்சினார்க்கினியர் இதை உணர்ந்தே ‘நூல் என்றது தொல் காப்பியம் என்ற பிண்டத்தை” (எ.1.நச்சி, எனக் குறிப்பிடுகிறார்.

            ஆகையால், தொல்காப்பியரது நூல்பற்றிய கொள்கையின் அடிப்படையில் நூன்மரபு தொல்காப்பிய இலக்கணம் மூன்றதிகாரங்களுக்கும் கூறுவது என்று கொள்வதே பொருத்த முடையதாகும்.

‘மரபு’ என்னும் பெயர்

            ‘மரபு என்னும் பெயர் நூன்மரபு, மொழி மரபு, தொகை மரபு, விளி மரபு என்ற நான்கு யல்களின் தலைப்பில் வருகிறது. நான்கனுள், முதல் மூன்றும் எழுத்ததிகாரப் இந்பகுதிகள். விளிமரபு மட்டும் சொல்லதி காரப்பகுதி. மரபு என்ற சொல்லை நூலினுள் பல இடங்களில் தொல்காப்பியர் பயன்படுத்துகிறார். இச்சொல்லின் பல பொருள்களுள் ‘இலக்கணம்’, ‘தன்மை’ அல்லது ‘இயல்பு’ என்பதும் ஒன்று. உரையாசிரியர்களும் இப்பொருள் கூறு கின்றனர். ”சார்ந்துவரல் மரபின் மூன்று” (எ.1.4) என்ற தொடருக்கு, ‘சார்ந்து வருத லாகிய இலக்கணத்தினையுடைய மூன்று’ கூறுகின்றார். இளம்பூரணர் உரை நச்சினார்க்கினியரும் இலக்கணம் என்றே பொருள் கொள்கின்றார். “அம்மரபு ஒழு கும் மொழிவயினான” (எ.418.3) என்ற இடத்தில், “அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து” என இளம்பூரணர் நச்சி னார்க்கினியர் இருவரும் பொருள்கொள் கின்றனர். ‘மயங்கல் கூடாதம் மரபின” (சொ.11.3), “ஏனைப்பெயரே தத்தம் மரபின’ (சொ.172.5) முதலாய பல இடங்களிலும் ‘மரபு’ என்ற பெயர் ‘இலக்கணம்’ என்ற பொருளில் வழங்கப் பட்டுள்ளது. இயல் தலைப்புகளுக்குப் பொருள் கூறுமிடத்தும் விளிமரபு என்ப தற்கு ‘விளிவேற்றுமையின் இலக்கணம் உணர்த்துவது’ என்ற பொருளை இளம் பூரணர், தெய்வச்சிலையார் இருவரும் கூறுகின்றனர். எனவே, ‘மரபு’ என்ற பெயருக்கு ‘இலக்கணம்’ எனப் பொருள் கொள்வது பொருத்தமானதாகும். இவ் வடிப்படையில், ‘நூன்மரபு’ என்பது ‘நூலினது இலக்கணம்’ அல்லது ‘நூலிற் ரிய இலக்கணம்’ எனப் பொருள்படும்.

நூன்மரபில் கூறப்பட்டுள்ள செய்திகளும் தொல்காப்பியத்தின் மூன்று அதிகாரங்களும்

            இனி, நூன் மரபில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் அதன்பெயர்ப் பொருத் தத்தையும் இடத்தையும் ஆராய்தல் வேண்டும்.

செய்திகள்
            நூன்மரபு, எழுத்துக்கள் சார்ந்துவரல் மரபின் மூன்றும் அல்லாத இடத்து முப்பது; சார்ந்து வரல் மரபின குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் என்ற மூன்று என எழுத்துக்களின் தொகை பற்றிப் பேசுகிறது (எ.1,2.). குற்றெழுத்தும் நெட்டெழுத்து மாய் அமைந்த பன்னிரண்டு உயிர்கள் (எ.3,4,8). வல்லெழுத்தும், மெல்லெழுத் தும், இடையெழுத்துமாய் அமைந்த பதினெட்டு மெய்கள் (எ.9,19-21) என எழுத்துக்களின் வகை பற்றிப் பேசுகிறது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளபின (எ.3); நெட்டழுத்துகள் இரண்டுமாத்திரை அளபின (எ.4). ஓர் எழுத்து மூன்று மாத்திரை பெறாது (எ.5). அவ்வாறு மூன்று மாத்திரையுடைய அளபெடை எழுத்துப்பெற வேண்டின் அவ்வளபுடைய எழுத்துக்களைக் கூட்டி ஒலிக்கவேண்டும் (எ.6). மாத்திரை என்பது ‘கண்ணிமைப் பொழுது’, ‘கைந்நொடிக்கும் ஒலி’ ஆகியவற்றை அளவாகக் கொண்டது (எ.7). மெய்களும் சார்ந்து வரும் மூன்றும் அரைமாத்திரை ஒலிப்பன (Gr.11,12). மகரமெய் சில இடங்களில் அரையள பினும் குறுகி ஒலிக்கும் (எ.13). இவ் வெழுத்துக்களின் அளவு மொழிக்கு உரியது; இவ்வெழுத்துக்கள் இசையில் பயன்படும்பொழுது இவ்வள பைக் கடந்து ஒலித்தல் உண்டு. அது இசை நூலின்பாற்பட்டது (61.33). இவ்வாறு அளபு பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. பின், வடிவு பற்றிப் பேசும்பொழுது, மகரம் உட்பெறு புள்ளியுடன் (எ.14), எல்லா மெய்களும் புள்ளிபெறும் (எ.15). எகர ஒகரக் குறில்களும் அவ்வாறு புள்ளிபெற்றுவரும் (எ.16); உயிர்மெய்கள் புள்ளி இல்லாமல் அகரத்துடனும், வடிவு வேறுபட்டு மற்ற உயிர்களுடனும் வழங்கும் (எ.17); அவை, மெய் முன்னும் உயிர் பின்னுமாக ஒலிக்கப்படும் என்று கூறுகிறது. பின், பதினெட்டு மெய்களும் தம்மொடு பிறவும், தம்மொடு தாமும் மயங்கு முறை விளக்கப்படுகிறது (எ.22-30). இறுதியாக, சுட்டாகவும், வினாவாகவும் வரும் எழுத்துக்கள் கூறப்படுகின்றன (எ.31.32). இவ்வாறு, எழுத்துக்களின் தொகை, வகை, அளவு, வடிவு, மயக்கம் முதலியன பற்றியும்; அவற்றுட் சில சுட்டும் வினாவுமாய் வருவது பற்றியும் நூன்மரபு பேசுகிறது.

            மேலே கூறப்பட்ட செய்திகளுள் பெரும்பாலானவை எழுத்துக்களைப் பற்றிய செய்திகள் என்ற அடிப்படையில் எழுத்த திகாரத்திற்கு உரியவை. எனினும் மற்ற இரு அதிகாரங்களுக்கும் உரியவையும், அடிப்படையான பல தொடர்புடையவையும், வகையில் பயன்படுபவையும் ஆகும். இச் செய்திகளுக்கும் மற்ற அதிகாரங்களுக்கும் உள்ள தொடர்பை மூவகைப்படுத்தலாம்.

(1)மூன்று அதிகாரங்களுக்கும் அடிப்படையானவை.

(2)பிற அதிகாரங்களை எதிர் நோக்கிக் கூறப்பட்ட எழுத்து பற்றிய செய்திகள்.

(3)பிற அதிகாரங்களில் மாட்டெறியப்பட்டோ மாட்டேறு இன்றியோ பயன்படுத்தப்படுபவை.


மூன்று அதிகாரங்களுக்கும் அடிப்படையான செய்திகள்

எழுத்துக்களே, வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழிக்கு, மேல்நிலை அலகுகளைவாக்கும்(Basic Units)உரு அடிப்படை
அலகுகள் எழுத்துக்கள் தனித்தோ தொடர்ந்தோ சொல்லாகும்.  இக்கருத்தினை, நன்னூலார்,

‘எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்

பதமாம்” . . .(நன்.128).

என வெளிப்படையாகக் கூறுகிறார். தொல்காப்பியர் இவ்வாறு வெளிப்படையாகக் கூறாவிடினும், இவ்வுண்மையை நன்குணர்ந்தவர் என்று காட்டும் வகையில் எழுத்தையும் சொல்லையும் தொடர்புபடுத்தி நூல் செய்கிறார்.
            சொல்லதிகாரத்தில் ‘எழுத்து’ என்ற சொல்லை ‘விகுதிகளைக்’ குறிக்கப் பயன் படுத்துகிறார். இருதிணை மருங்கின் ஐம்பால் அறிய

ஈற்று நின்றிசைக்கும் பதினோ

தோற்றம் தாமே வினையொடு வருமே -சொ.10

            தம் வினைக்கியலும் எழுத்தலங் கடையே-(சொ.62.4) எழுத்து, சொல்
நிலையில் பயன்படுவது இங்கு உட் கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,

மொழிப்பொருட் காரணம் விழிப்  பத்தோன்றா—சொ.388

எழுத்துப் பிரிந்திசைத்தல் வணியல் பின்றே-சொ.389

வடசொற்கிளவி வடவெழுத்தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே-சொ.395

            இந்நூற்பாக்கள் எழுத்தாலாவது சொல் என்ற கருத்தை உட்கொண்டு தொல்காப்பிய ரால் இயற்றப்பட்டுள்ளமை வெளிப்படை.

            செய்யுட்கும் அடிப்படை அலகு எழுத்தே என்பது எழுத்தினைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகக் கூறியிருப்பதி லிருந்தும் (பொ.310), அவ்வெழுத்துக்கள் தனித்தும் இணைந்தும் அடுத்தநிலை அலகாகிய அசையை உருவாக்குவதிலிருந்தும் (பொ.312-318) புலனாகும். எழுத்துக்களால் ஆகிய அசைகள் சீராகின்றன. சீர்களால் ஆகும் அடியும் தொல்காப்பியரால் எழுத்தின் அடிப்படையிலேயே வரையறுத்து வகைப்படுத்தப்படுகிறது (பொ.344-351).

            எனவே, எழுத்துக்களின் தொகை, வகை, அளபு, மயக்கம் போன்ற செய்திகள் மூன்றதிகாரத்திற்கும் அடிப்படையானவை என்பது தெளிவாகும்.

சொல், பொருள் அதிகாரங்களை எதிர்நோக்கிக் கூறப்பட்ட செய்திகள்

            நூன்மரபில் கூறப்பட்ட பெரும்பாலான செய்திகள் மூன்றதிகாரங்களுக்கும் பொது வானவை. ஆனால் சில செய்திகள் பிற அதிகாரங்களில் கூறப்படும் இலக்கணத்தை எதிர்நோக்கியே கூறப்பட்டவை.

            அளபெடை சொல்லதிகாரத்தையும் பொருளதிகாரத்தையும் மனத்தில் கொண்டே நூன்மரபில் விளக்கப்பட்டது. சொல்லதி காரத்தில் விளிமரபில் அளபெடை பயன்படுகிறது (சொல்.122,132,138,146). தொல்காப்பியர் அளபெடைப் பெயர்கள் விளிக்கும்பொழுது எவ்வாறு வழங்கும் என்று கூறுவதுடன்,

உளவெனப்பட்ட எல்லாப்பெயரும்

அளபிறந்தனவே விளிக்குங்காலைச்

சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான் (சொ.149).

            என்று அளபெடைப் பெயரல்லாத மற்றப் பெயர்களும் சேய்மை விளியில் அளபெடையாய் வழங்குவதைக் குறிப்பிடுகிறார். பின்னர், இடையியலிலும் (சொ.276) ஒளகாரம் அளபெடுத்தும் அளபெடையின்றியும் பொருள் வேறுபாடு காட்டிக் குறிப்பிடைச் சொல்லாய் வருவதைப் பற்றிப் பேசுகிறார்.’

அடுத்து, பொருளதிகாரம், செய் யுளியலில் ‘அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே” (பொ.325) என்று அளபெடை அசைநிலை பெற்று அலகு பெற்று வருவதைக் கூறுகிறார். பின்னர் அளபெடையின் அடிப்படையில் அள பெடைத்தொடை என்ற தொடையையும் (பொ.394, 402), அளபெடை வண்ணம் என்ற வண்ணம் ஒன்றினையும் (பொ.514, 520) வகுக்கிறார். இவை, தெளிவாக, அளபெடை நூன்மரபில் வகுக்கப்பெற்றது சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத் திலும் பயன்படுத்துவதற்காகவே என்பதைக் காட்டும். எழுத்ததிகாரத்தில், மொழி மரபில்,

குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும்

நெட்டெழுத் திம்பர் ஒத்த குற்றெழுத்தே (எ.41),

என ஓசை குன்றுமிடத்து அளபெடை வரும் எனக் கூறுவதும் பின் பொருளதிகாரத்தில் அளபெடை அசையாய் அலகு பெறுவதை மனத்திற்கொண்டே யாகும். இங்கு, நச்சி னார்க்கினியர் “இஃது எதிரதுபோற்றல் பற்றிச் என்னும் உத்தி செய்யுளியலை நோக்கி “நீட்டம் வேண்டின்” (எ.6) என முற்கூறிய அளபெடை யாமாறு கூறுகின்றது என்று விளக்குகிறார். இவ்விரு இடங்கள் தவிர எழுத்ததிகாரத்தில் அளபெடையைப் பற்றி வேறெங்கும் பேசாமையும் அது மற்ற அதிகாரங்களை எதிர்நோக்கியது என்பதனை வலியுறுத்துகின்றது.


சொல், பொருள் அதிகாரங்களில் பயன்படுத்தப்பெறும் நூன்மரபுச் செய்திகள்

முன் கூறியதுபோல, நூன்மரபுச் செய்திகள் மாட்டெறியப் பட்டோ மாட்டேறு இன்றியோ சொல், பொருள் அதிகாரங்களில் பயன்படுத்தப் பெறுகின்றன.

சொல்லதிகாரத்தில்

            எழுத்தே வழக்கிற்கும் செய்யுளிற்கும் அடிப்படை அலகு என்றும், அதைத் தொல்காப்பியர் உணர்ந்திருந்தார்) என்றும் மேலே (4.2) கண்டோம். அவ்வுண்மை யைக் காட்டுவது போல, எழுத்து என்ற குறியீட்டையும் அவற்றின் வகைகளையும் சொல்லிலக்கணம் கூறும்பொழுது பெரிதும் பயன்படுத்து கின்றார். மேல் (4.2) காட்டப்பெற்ற சில இடங்களுடன் (சொ.10,62) பின் வரும் நூற்பாவிலும் எழுத்து என்ற சொல்லை விகுதி என்ற பொருளில் சொல்லதிகாரத்தில் பயன் படுத்துகிறார்.

இயற்பெயர் முன்னர் ஆரைக்கிளவி

பலர்க்குரி எழுத்தின் வினையொடு வருமே (சொ.268)

“பலர்க்குரி எழுத்து” என்ற தொடர்பலர்பால்
விகுதியாகிய சொல்லைக் குறிக்கிறது. சொல்லதிகார விளிமரபில், நூன் மரபில் கூறப்பட்ட எழுத்தின் வகைகள், பெயர்கள் பலவும் பெரிதும் பயன் படுத்தப்படுகின்றன. பின்வரும் நூற்பாக்கள் அதனைக் காட்டும்.

அவைதாம்
உ ஐ ஒ என்னும் இறுதி

அப்பால் நான்கே உயர்திணை மருங்கின்

மெய்ப்பொருள் சுட்டிய விளிகொள் பெயரே (தொ.117).

உகரந்தானே குற்றியலுகரம் (சொ.120)

ஏனை உயிரே உயர்திணை மருங்கின் தாம்விளி கொள்ளா என்மனார் புலவர் (சொ.121)

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகும் செயற்கைய என்ப (சொ.122)

னரலள என்னும் அந்நான் கென்ப புள்ளியிறுதி விளிகொள் பெயரே
(சொ.125)

            இங்கு இ,உ,ஐ,ஒ,ன,ர,ல,ள போன்ற எழுத்துக்களையும் உயிர், புள்ளி, பெடை, குற்றியலுகரம் போன்ற எழுத்து வகைகளின் பெயர்களையும் பயன்படுத்து கின்றார். விளியின் இலக்கணம் சொற் களின் ஈற்றெழுத்துக்களையும் அடையும் மாற்றங்களையும் பேசாமல் கூற இயலாது.

அவை பற்றியும்

இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும் (சொ.118)

ஓவும் உவ்வும் ஏயொடு சிவணும் (சொ.119)

நின்ற ஈற்றயல் நீட்டம் வேண்டும் (சொ.141.2)

            போன்ற நூற்பாககள் இவ்வுண்மையைப் புலப்படுத்துகின்றன.
விளிமரபு மட்டுமன்றி, சொல்லதி காரத்தின் மற்ற இயல்களிலும் எழுத்து மாற்றங்கள் பேசப்படும்பொழுது நூன் மரபுச் செய்திகள் பயன்படுகின்றன.

அவற்றுள்

செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு

மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்

அவ்விடன் அறிதல் என்மனார் புலவர் (சொ.233)

 கு ஐ ஆன் என வரூஉம் இறுதி

அவ்வொடும் சிவணும் செய்யுளுள்ளே (சொ.104)

அந்நாற் சொல்லும் தொடுக்குங்காலை

வலிக்கும் வழிவலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்

விரிக்கும்வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்

நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்

நாட்டல்வலிய என்மனார் புலவர் (சொ.397)

முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்

அன்னிலை மரபின் மெய்யூர்ந்து வருமே (சொ.445)

            இவை அனைத்தும் நூன்மரபில் கூறப்பட்ட எழுத்துக்கள், அவை பற்றிய செய்திகள், குறியீடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் சொல்லிலக்கணம். மேலே கூறப்பட்ட (4.1) காட்டப்பட்டதுபோல் நூன்மரபில் சுட்டு, வினா பற்றிய சொல்லிலக்கணச் செய்தியையும் கூறுகிறார். இவை இடைச் சொற்கள். அவற்றில், சுட்டுக்களும் ஆகாரவினாவும் அறிமுகப்படுத்தப்பட்டு நூன்மரபிலேயே விட்டதால், சொல்லதிகாரஇடையியலில் மீண்டும் பேசப்படவில்லை. ஆனால் ஏகார 252). ஓகாரங்களாகியஇடைச் சொற்கள் வினாப் பொருள் தவிர வேறு பொருளிலும் வருவதால், மீண்டும் இடையியலில் பேசப்படுகின்றன (சொ.251, சுட்டின் இலக்கணம் கூறப்படாவிடினும், பல இடங்களில் சொல்லதிகாரத்தில் சுட்டடியாகப் பிறந்த சொற்களைக் குறிக்கச் ‘சுட்டு’ என்னும் பெயர் பயன் படுத்தப்படுகிறது.

பொருளொடு புணராச் சுட்டுப் பெயராயினும் (சொ.37)

சுட்டு முதலாகிய காரணக் கிளவி

சுட்டுப் பெயரியற்கையிற் செறியத்  தோன்றும் (சொ.40)

தான்என பெயரும் சுட்டு முதற் பெயரும் (சொ.134)

இது தெளிவாக,செய்திகளைநூன்மரபிற் கூறிய மனத்திற்கொண்டே
சொல்லதிகாரத்தில் இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர் என்பதைக் காட்டுகிறது.

பொருளதிகாரத்தில்

            செய்யுள் அமைப்பிற்கு எழுத்தும் அளவும் இன்றி யமையாதவை. அதனாலேயே தொல் காப்பியர் முப்பத்திரண்டு செய்யுள் உறுப்புகளில் முதல் இரண்டாக மாத்திரை யையும் எழுத்தையும் சேர்த்துள்ளார் (பொ.310). ஆனால், மற்றச் செய்யுள் உறுப்புகளை ஒவ்வொன்றாக விளக்கும் தொல்காப்பியர்
மாத்திரையையும் எழுத்தினையும் அவ்வாறு விளக்காது. அடுத்த நூற்பாவில்
அவற்றுள்

மாத்திரை வகையும் எழுத்தியல் வகையும்

மேற்கிளந்தனவே என்மனார் புலவர் (பொ.311)

            என மாட்டெறிந்து கூறுகிறார். இம் மாட்டேறு தெளிவாக நூன் மரபிற்கே யாம். ஏனெனில், மாத்திரை, எழுத்து பற்றிய செய்திகள் பொருளதிகாரத்தில் வேறெங்கும் கூறப்படவில்லை. மற்றச் செய்யுள் உறுப்புகளாகிய அசைவகை, அடி, தொடை ஆகியவை மேலே (4.2) குறிப்பிட்டதுபோல இவ்வாறு மாட்டெறிந்து கொள்ளப்பட்ட எழுத்து, அளவு இவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. இவற்றை விளக்க நூன்மரபில் வரையறுக்கப்பட்ட குற்றெழுத்து (குறில்), நெட்டெழுத்து (நெடில்), மெய் (ஒற்று), குற்றியலிகரம், குற்றியலுகரம் முதலியவை பயன்படு கின்றன. குறில், நெடில் ஆகியவை தனித்தும் ஒற்றடுத்தும் வரின் நேர சை எனவும், குறிலிணை, குறில், நெடில் ஆ கியவை தனித்தும் ஒற்றடுத்தும் வரின் நிரையசை எனவும் பெயர்பெறும் (QUT.312). இவ்விருவகை அசைகள் இருவகை உகரத்தோடு இயைந்துவரின் நேர்பு, நிரைபு எனப் பொருள்பெறும். ஆனால் குறிலிணை உகரம் இங்கு வராது (பொ.313). தனிக்குறில் முதலசையாக மொழி சிதைத்து வராது (பொ.315) குற்றியலிகரம் ஒற்றெழுத்துப் போல அலகு பெறாது (பொ.316). குற்றியலுகரமும் முற்றியலுகரமும் ஒற்றோடு வந்து அசையாக நிற்கவும் பெறும் (பொ.318).

            அடிகள் எழுத்துக்களின் எண்ணிக் கை அடிப்படையில் வகுக்கப்படுகின்றன (பொ.343-351). நான்கெழுத்து முதல் ஆறெழுத்துவரை உள்ளது குறளடியாகும் (பொ.344). ஏழெழுத்து சிந்தடிக்கு அளவு. ஒன்பதெழுத்து
அதன்மேல் எல்லை (பொ.345). பத்து முதல் பதினான் கெழுத்து நேரடியில் அளவு (பொ.346). நெடிலடி பதினைந்திலிருந்து பதினேழு எழுத்து உடையது (பொ.347). எழுத்தின் அடிப்படையில் அடிவரையறை செய்யும் பொழுது உயிரில்லாத ஒற்றெழுத்துக்கள் (பொ.351). இவ்வாறு, எழுத்தே அடிவரையறைக்கும் அடிப்படையாகிறது. எண்ணப்படமாட்டா தொடையின் வரையறையிலும் எழுத்தியைபு பயன்படுகிறது (பொ.393- 406). அடிகள் தோறும் முதல் எழுத்து ஒன்றிவரின் மோனையாம் (பொ.397). இரண்டாம் எழுத்து ஒன்றினால் எதுகையாம் (பொ.398). இவ்விரு தொடைகளுக்கும் எடுத்த எழுத்தேயன்றி இனவெழுத்து ஒன்றிவருதலும் உரியதாகும் (பொ.399). அளவுதோறும் ஈற்றெழுத்து ஒன்றிவரின் அது இயைபுத்தொடை எனப்படும் (பொ.401). அடிதோறும் அளபெடைவரின் அளபெடைத்தொடை (QUTT.402). மற்ற பொழிப்பு, ஒரூஉ போன்ற தொடைகளும் எழுத்தொன்றுதல் அடிப்படையில் (பொ.403,404). வகுக்கப்படுகின்றன

            மற்றொரு செய்யுள் உறுப்பாகிய வண்ணத்தின் வரையறையிலும் நூன் மரபில் கூறப்பட்ட எழுத்தின் வகைகள் பின்வருமாறு பயன்படுகின்றன. வல்லெழுத்து மிக்கு வருவது வல்லிசை வண்ணம் (பொ.517). மெல்லெழுத்து மிக்கு வருவது மெல்லிசை வண்ணம் (பொ.518). இயைபு வண்ணம் இடை யெழுத்து மிக்கு வரும் (பொ519). அளபெடை பயின்றுவரின் அது அள பெடை வண்ணமாகும் (பொ.520). நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்தும், குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்தும் பயின்று வரும் (பொ.521.522). நெட்டெழுத்தும் குற்றெழுத்தும் ஒப்பக் கலந்துவரின் அது சித்திர வண்ணத்தின்பாற்படும் (பொ.523). ஆய்தம் பயின்று வந்தால் அது நலிபு வண்ணம் எனப்படும் (பொ. இவ்வாறு வல்லெழுத்து, லெழுத்து, இடையெழுத்து, குற்றெழுத்து, நெட்டெழுத்து. 524). அளபெடை மெல் ஆகிய எழுத்து வகைகள் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளன.

இவ்வாறு செய்யுளியல் நூன்மரபுச் செய்திகளைப் பெரிதும் பயன்படுத்துகிறது.

முடிவுரை

            நூன்மரபிற் கூறப்பட்ட செய்திகள் தொல்காப்பியம் முழுவதற்கும்
இன்றியமையாதவை என்பதையும். எழுத்ததிகாரம் அல்லாத பிற இரண்டு அதிகாரங்களிலும் தொல்காப்பியரால் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதையும் மேற்கூறிய செய்திகள் தெளிவுறக் காட்டு கின்றன. இவ்வடிப்படையில் நூன்மரபு நூல் முழுவதற்கும் இலக்கணம் கூறுவது; உரிய செய்திகளைத் தொகுத்துக் கூறுவது என்ற நச்சினார்க்கினியர் கருத்து வலியுறு கின்றது. எனினும் சிவஞான முனிவர் நூன்மரபுச் செய்திகள் பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்கு மாத்திரமே கருவியாகின்றன என்பதை கினியரை மறுப்பதற்குச் நச்சினார்க் சான்றாகக்,

குறிப்புகள்

1.ஒ.நோ.பொ.474 இளம்பூரணர் உரை. இளம்பூரணர், இங்கு, ”மூன்றுறுப் படக்குதலாவது சூத்திரம் பலவுண்டாகி ஓத்தும் படலமும் இன்றாகிவரினும், ஓத்துப் பலவுண்டாகி படலமின்றி வரினும், படலம் பலவாகி வரினும் பிண்டமென்று பெயராம் என்றவாறு. இவற்றுட் சூத்திரத்தாற் பிண்டமாயிற்று இறையனார் களவியல். ஓத்தினாற் பிண்டமாயிற்று பன்னிரு படலம். அதி காரத்தாற் பிண்டமாயிற்று இந்நூல்காட்டுகிறார் (1.3). நூன் மரபுச் செய்திகள் பொருளதிகார பேசப்படாமைக்குக் இயல்கள் பிறவற்றில் காரணம்
பின் வருமாறு: தொல்காப்பியத்தில் எழுத்து, சொல்லதிகாரங்களும் பொருளதிகாரத்தில் செய்யுளியலும் வழக்கும் செய்யுளுமாய் அமைந்த மொழியின் (Formal Structure) பற்றிய வடிவமைப்பு செய்திகளை ஆராய்பவை. பொருளதிகாரத்தின் பிற யல்கள் மொழியின் உள்ளடக்கம் (Content) அல்லது மொழி கூறும் பொருண்மையின் அமைப்பு, பாகுபாடு பற்றி ஆராய்பவை. அங்கே வடிவமைப்பு பற்றிய செய்திகள் இயல்பே.
பயன்படாதது வடி ஆனால், மொழியின் வமைப்பு விதிகளைப் பயன்படுத்தி உருவாகும் தொடர்புகளும், செய்யுளுமே மொழியின் உள்ளடக்கத்தை அல்லது பொருண்மையைத் தெரிவிக்கப் பயன்படுவதால் நூன்மரபில் கூறப்பட்ட வடிவமைப்பு பற்றிய செய்திகள்பொருளதிகாரத்தின் பிற இயல்களுக்கு மறைமுகமாகப்  பயன்படுவனவே.


            எனவே, நூல் என்ற சொல்லிற்குத் தொல்காப்பியரை ஒட்டிக் வேண்டிய பொருளின் அடிப்படையிலும் நூன்மரபிற் கூறப்பட்ட செய்திகளின் அடிப்படையிலும் இவ்வியல் நூன் முழுவதற்கும் உரியதும், அடிப்படையாய் அமைந்து பயன்படும் இன்றியமையாச் சிறப்புடையதும் ஆகும்.என்றுகொள்க’, கூறுகிறார். என்று இவ்வாறு பொருள் கொள்வது தொல் காப்பியச் சூத்திர வரிசை முறைக்குப் பொருத்தமாக இல்லை. நூலின் இயல்பை விளக்கி (468) அது நால்வகைப்படும். (469) என்று கூறி அந்நூல்வகைகள் சூத்திரத்தான், ‘ஓத்தினான், ம்மூன்று உறுப்படக்கிய பிண்டத்தான் யல்வன (470) என்று கூறுகிறார். எனவே இம் மூன்றுறுப்புக்களுள் உறுப்போ இரண்டு உறுப்போ மாத்திரம் படலத்தான் ஓர் கொண்டநூல்களையும் பிண்டம் என்று வழங்குவது தொல்காப்பிய நூற்பாவின் நேர் பொருளோடு மாறுபடுகிறது.


2.’மரபு’ என முடியும் நான்கு இயல் தலைப்புக்களுள், நூன்மரபு, நூலினது இலக்கணம்’, மொழி மரபு ‘மொழியினது இலக்கணம்’, விளிமரபு ‘விளியினது இலக்கணம்’என வேற்றுமைத் தொகையாய்ப் பொருத்தமாய் அமை
கின்றன. ஆனால், தொகைமரபு ‘தொகையினது இலக்கணம்’ எனப் பொருள்படாது. அது ‘தொகையாகிய இலக்கணம்’ என விரித்துப் பண்புத் தொகையாய்க் கொள்ளின் அதுவும் பொருத்தமாக அமைகிறது.

3. இளம்பூரணர், சேனாவரையர்,

சுருக்கக் குறியீடுகள்

இளம் – இளம்பூரணர் உரை

எ – எழுத்ததிகாரம்

சொ – சொல்லதிகாரம்

மேற்கோள் நூல்கள்

1.ஆறுமுகநாவலர், (1956) பதி. சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த தொல்காப்பியச் சூத்திர விருத்தி, சென்னை.

2.சிவலிங்கனார், ஆ. (1980) பதி. தொல் காப்பியம்-நூன்மரபு உரைவளம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

3.சுப்பிரமணியசாஸ்திரி, (1937) தொல்காப்பியம்-எழுத்ததிகாரம்-குறிப்புரை, திருச்சிராப்பள்ளி.

4.தொல்காப்பியம், எழுத்ததிகாரம்,இளம்பூரணர் உரை (1955), சைவசித்தாந்த
நூற்பதிப்புக்கழகம், சென்னை.

5.தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினார்க் கினியர் உரை (1972). சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

6.தொல்காப்பியம், சொல்லதிகாரம், பூரணர் உரை
இளம் (1963)சைவசித்தாந்த நூற் நச்சினார்க்கினியர் ஆகியோர்,


ஈரளபிசைக்கும் இறுதியில் உயிரே

ஆயியல் நிலையும் காலத்தானும்

அளபெடை யின்றித்தான் வரு காலையும்

உளவென மொழிப பொருள் வேறுபடுதல்

குறிப்பின் இசையின் நெறிப்படத் தோன்றும் (சொ.276).

            என்ற நூற்பா ஔகாரத்தைக் குறிப்பதாகக் கொள்ளத் தெய்வச்சிலை யார் இதனை ஔ ஒழிந்த மற்ற நெடில் அளபெடுத்தும் அளபெடாதும் குறிப் பிடைச் சொல்லாய் வருவதைக் குறிப்பிடுகிறார்.
அவ்வாறுபொருள்கொள்ளினும் அளபெடை இங்கு பயன் பெற்றிருப்பதில் மாற்றம் இல்லை.

நச்சி.  – நச்சினார்க்கினியர் உரை

பதி.    – பதிப்பாசிரியர்

பொ. –            பொருளதிகாரம்.

பதிப்புக் கழகம், சென்னை.

7.தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனாவரையர் உரை (1938). பதி. சி.கணேசையர், சுன்னாகம்.

8.தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச் சிலையர் உரை (1929) கரந்தைத் தமிழ்ச் சங்கம், கரந்தை.

9.தொல்காப்பியம், சொல்லதிகாரம், நச்சினார்க்கினியர் உரை (1962) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

10.தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை (1953) சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

11.வேங்கடராஜுலு ரெட்டியார், வே.(1944), தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி.
சென்னை (ஆ.சிவலிங்கனார் (பதி.) 1980 – இல் எடுத்தாளப்பட்டது).

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

க.பாலசுப்பிரமணியன்

வெளிவந்த இதழ் மற்றும் ஆண்டு :  தமிழ்க்கலை, தமிழ் 2, கலை 2 : 3, 1984

புறநானூற்றில் பார்ப்பன வாகை

புறநானூற்றில்-பார்ப்பன-வாகை

முன்னுரை

            சங்க கால மக்கள் தங்கள் வாழ்க்கை இயல்பினை இரு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கின்றனர். ஒன்று அகம்; மற்றுது புறம் அகம் காதலையும் புறம் வீரத்தையும் குறிக்கும் எனப்பொதுவாகக் கூறப்படுகிறது. அகம், காதலைக் குறித்தாலும் புறம், வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரம் என்பது முதன்மையான ஒன்றாகக் கருதப்பட்டு பிற ஒழுகலாறுகள் குறித்த செய்திகளும் புறத்தில் அடங்குகின்றன. அகமும் புறமும் சில கூறுகளில் ஒப்பு நோக்கிக் கூறப்படுகின்றன. அகத்திணைகளான கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகியன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி ஆகியவற்றோடு ஒப்புமையாக்கப்பட்டு உணரப்படுகின்றன. ஏழாக உரைக்கப்பட்ட புறத்திணைகள் தொல்காப்பிய காலத்திற்குப் பிறகு பன்னிரண்டாக விரித்துரைக்கப்படுகின்றன. பாடாண், காஞ்சி தவிர புறத்தின் மற்ற திணைகள் போர் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றன போரில் வெற்றி பெற்ற நிகழ்வினை உரைக்கின்ற வாகைத்திணையில் அமைந்துள்ள பார்ப்பன வாகை குறித்த கருத்துக்களை முன்வைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. புறநானூற்றில் பார்ப்பன வாகை

சாதிப்பிரிவுகள்

            சங்ககாலம் பழமையானது மட்டுமில்லாமல் தமிழர்களின் உயர்வான வாழ்க்கை நெறிமுறைகளைப் பறைசாற்றும் காலம் எனலாம். சங்ககாலச் சமுதாயத்தில் பல்வேறு சாதிப்பிரிவினர் இடம்பெற்றிருக்கின்றனர். நால்வகை வருணம் பேசப்பபடுகின்றன. ஆனால் சாதி வெறி உணர்வு பேசப்படவில்லை, குறவர், வேட்டுவர், ஆயர், கானவர், உழவர், பரதவர், நுளையர், எயினர், மறவர் எனச் சுட்டப்பட்ட தமிழ்க்குடிகள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது” (தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் – வாழ்வியல் – ப.5) குடிகள் நில அடிப்படையில் தத்தம் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இத்தகைய குடிகளில் பார்ப்பனர் இடம்பெறவில்லை. இருப்பினும் சங்கச் சமுதாயத்தில் பார்ப்பணர்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர். ஐம்பெருங்குழுவில் இடம்பெறும் புரோகிதர் பார்ப்பனராக இருக்கலாம். சங்ககாலத்தில் சாதிகள் இருந்தன. ஆனால் வேற்றுமைகள் பெரிதாகப் பாராட்டப்படவில்லை.

சங்க காலப் பார்ப்பனர்கள்

            பார்ப்பனர்கள், அந்தணர், ஐயர் என்று அழைக்கப்படுகின்றனர். நால்வகை வருணத்தில் பிராமணர் எனச் சுட்டப்படும் சொல் வழக்கு சங்க இலக்கிய நூல்களில் எங்கும் இடம்பெறவில்லை. அந்தணர் என்றும் பார்ப்பார் என்றும் சுட்டப்படுவதை சங்க இலக்கியங்களில் காணலாம். அந்தணர் என்ற சொல் பார்ப்பனரை மட்டும் குறிக்கவில்லை என்பதற்கு

                                    அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

                                    செந்தண்மை பூண்டொழுக லான்                         (குறள். 30)

என்ற வள்ளுரின் வாய்மொழி சான்றாக அமைகிறது. பார்ப்பனர் அல்லாதவர்ககளும் சிறப்பான குணநலன்களால் அந்தணர் என்று அழைக்கப்படலாம் என்ற கருத்திணை இக்குறட்பா எடுத்துரைக்கின்றது. ஐயர் என்ற சொல் தலைவர், உயர்ந்தோர், சான்றோர், என்பதைக் குறிக்கின்றன. பார்ப்பனர் என்ற சொல்லே பிராமணரைக் குறிப்பிடும் சொல்லாகும்.

பார்ப்பார்க்குரிய செயல்களும் இருப்பியல் நிலையும்

            முப்புரிநூல், கரகம், முக்கோல் மணை ஆகியவற்றை உடையவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தமையை தொல்காப்பியம் பொருளதிகார நூற்பா மரபியல் : 71 எடுத்துரைக்கின்றது. சங்க கால அகவாழ்வில் கற்பின்கண் தலைவன், தலைவியரிடையே நிகழும் ஊடலில், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களுள் ஒருவராகப் பார்ப்பார் குறிப்பிடப்படுகிறார். இதனைத் தொல்காப்பியக் கற்பியல் நூற்பா (191) சுட்டிக் காட்டுகின்றது.

            பார்ப்பார்க்குரிய செயல்கள் ஆறென மொழிவதை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகின்றது. தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுந்த உரையிலும் இதனைக் காணலாம். அவை ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்

                                                ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்

                                                முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி

                                                ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்

                                                அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க

என்ற சிலப்பதிகார அடிகளாலும் (கட்டுரை காதை 67-70) அந்தணர்க்குரிய அதாவது பார்ப்பார்க்குரிய செயல்களை அறியமுடிகிறது.

            பார்ப்பனருள் பெரியவரைக் கொண்டு வேள்விகள் நடத்தப்பெற்றிருக்கின்றன, வேள்வியின் இறுதியில் பார்ப்பனப்புலவன் தம் மனைவியுடன் துறக்கம் அடைந்ததாகவும் நம்பப்படுகிறது. இச்செய்தியை பதிற்றுப்பத்து உரைக்கின்றது. (பதிகம்-3) பார்ப்பனச் சிறுவர்கள் குடுமியுடன் இருந்ததை ஐங்குறுநூறு வழி (202:2-3) அறிய முடிகிறது. அரசனுக்காகப் பார்ப்பனர்கள் தூது சென்றிருக்கிறார்கள். இதனை அகநானூறு தெரிவிக்கின்றது. போரினைத் தடுக்கும் முறையிலும் செயல்பட்டிருக்கின்றார்கள். அரசர்களுக்கு நிலையாமையை எடுத்துரைத்து அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள், கபிலர், பரணர், நக்கீரர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலான புலவர்களாகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றனர். அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் பணிவுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பார்ப்பனர்கள் அரசர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றனர். போர் ஏற்படும் சூழலில் பாதுகாப்பான பகுதியில் சென்று தங்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைத்தல் கொடிய பாவமாகக் கருதப்பட்டிருக்கின்றது.

                                                பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்

                                                வழுவாய் மருங்கிய கழுவாயும் உள

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் (34:3-4) மேற்கண்ட கருத்தினை அறிவிக்கின்றது. அரசர்களுடைய அரண்மனையில் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் சென்று வர உரிமை இருந்திருந்தது. எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனை,

                                                “அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

                                                கடவுள் மால் வரை கண்விடுத் தன்ன

                                                அடையா வாயில்…..

            என்ற சிறுபாணாற்றுப்படையின் (204-206) பாடலடிகள் குறிப்பிடுகின்றன. தங்களுடைய கடமைகளைச் செய்யும் பொருட்டு தங்கள் இருப்பிடத்தில் வேள்வித் தூண் நடுதலை

                                                கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த

                                                வேள்வித் தூணத் தசைஇ

என்று பெரும்பாணாற்றுப்படை (315-316) குறிப்பிடுகின்றது.

            அரசரை விடவும் அந்தணர்கள் – பார்ப்பனர்கள் உயர்ந்தவராகப் கருதப் பட்டிருக்கின்றார்கள். இதனை,

                                                சிறந்த வேதம் விளங்கப் பாடி

                                                விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

                                                நிலமமர் வையத் தொருதா மாகி

                                                உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்

                                                அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்

                                                பெரியோர்……..

என்று மதுரைக்காஞ்சி (468-473) எடுத்துரைக்கின்றது. இத்தகைய தன்மையுடைய அந்தணரை – பார்ப்பனரை அரசன் துணையாகக் கொண்டு வாழ்ந்தால் பெரும்புகழ் அடையலாம் என்ற கருத்தினை,

                                                அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி

                                                ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று

                                                நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்

                                                திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ

            என்ற பதிற்றுப்பந்து (மூன்றாம் பத்து 4: 8-1) பாடலடிகள் மூலம் அறியலாம். சங்க காலப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நடப்பவர்களுக்குப் புகழ் கிட்டும் என்ற கருத்தியல் தளத்தினடிப்படையிலும், பார்ப்பனர்கள் மேல் நிலையில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.

வாகைத்திணையும் பார்ப்பன வாகையும்

            சங்க காலத் தமிழரின் போர் நெறிமுறைகள் குறிப்பிடத்தக்க முறையில் அமைந்தனவாகும். போர் திடீரென ஏற்படாமல் ஒரு சில முன்னறிவிப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆநிரை கவர்தல் மூலம் போருக்கான சூழல் உருவாகத்தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற்று போர்ச்சூழல் உருவாக்கப்படுகிறது. இருதிறப் படைகளும் போரில் ஈடுபட, வாகை சூடுவது ஒருவர் மட்டுமே. அவரது இயல்பை எடுத்துரைக்கும் புறத்திணையாக வாகைத்திணை அமைகிறது.

வாகைத் திணையின் இலக்கணத்தை.,

                                                தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

                                                பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப

என்று தொல்காப்பியம் (தொல்,பொருள் புறத்திணையியல்-15) வரையறுக்கின்றது. இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர். “அது கேடில்லாத கோட்பாட்டினை யுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல்” என்று (தொல்.பொருள்.புறத்திணையியல் ப.27) கூறுகிறார். “வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தாரும், அறிவரும், தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர்” என்று நச்சினார்க்கினியர் உரை (தொல் பொருள். புறத்திணையியல் ப.347) கூறுகின்றார். இவற்றினின்று வாகை என்பதற்கு மற்றவர்களிடமிருந்து தன்னுடைய மேம்பட்ட தன்மையின் மிகுதிப்பாட்டைக் கூறுவதை இலக்கமணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய மிகுதிப்பாட்டை மேம்படுத்திக் கூறுபவர்களாக பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என எழுவரை அடக்கியதே வாகைத்திணையாகும். இதனைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

                                                அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                                ஐவகை மரபின் அரசர் பக்கமும்

                                                இருமுன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                                மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                                நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

                                                நாலிருவழக்கின் தாபதப் பக்கமும்

                                                பாலறி மரபின் பொருநர் கண்ணும்

                                                அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையின்

                                                தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.

என்று (தொல்.பொருள்.புறத். 16) கூறுகிறார். எழுவரின் மிகுதித் தன்மையே வாகை எனப்படுகிறது. இந்நூற்பா வாகைத் திணையின் பாகுபாடாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற அறுதொழிலின் மிகுதியைக் குறிப்பதாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனக் பக்கம் என்று வாகையின் பாகுபாடாகத் தொல்காப்பியர் கூற, பிற்காலத்து எழுந்த புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பன வாகை, பார்ப்பன முல்லை என்று இரு துறைகளை எடுத்துரைக்கின்றது. இவை இரண்டும் வாகைத் திணையின் துறைகளாக அமைகின்றன. ஒன்று வேள்வியினால் சிறப்புடையவனையும் மற்றொன்று போர் தடுக்கச்சென்றவனின் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது.

            பார்ப்பன வாகையின் இலக்கணத்தினை புறப்பொருள் வெண்பாமாலை

கேள்வியாற் சிறப்பெய்தி யானை

வேள்வியான் விறன் மிகுத்தன்று

என்று (வாகைப்படலம்.9) வரையறுக்கின்றது. “கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை யாகத்தான் வெற்றியைப் பெருக்கியது” என்று நூலாசிரியர் உரை (பு.வெ.மா.106) வகுக்கின்றார். யாகம் செய்த சிறப்பு வெற்றியாகிறது; வாகையாக அமைகிறது. பார்ப்பனன் செய்த யாகத்தின் சிறப்பு பார்ப்பன வாகையாகிறது. புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியார் யாகம் செய்தலின் சிறப்பைக் குறிக்கும் வகையில்

                                                ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்

                                                வேதங் கரை கண்டான் வீற்றிருக்கும் – ஏதம்

                                                சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த

                                                விடுசுடர் வேள்வி யகத்து

என்ற பாடலைச் சான்று காட்டி விளக்குகிறார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கத்தில் கூறப்பட்ட வேட்டல் (வேள்வி செய்தல்) என்பதற்கு புறநானூற்றில் அமைந்த ஆவூர் மூலங்கிழார் பாடலை (168) இளம்பூரணர் மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார். புறநானூற்றில் இரண்டு பாடல்கள் மட்டுமே பார்ப்பன வாகைத் துறையில் அமைந்த பாடல்கள் (166-305) ஆகும். ஆவூர் மூலங்கிழார் சோணாட்டுப் பூஞ்சாற்றுப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடுகிறார். தன்மனைவியருடன் சிறப்பாகப் பெரு வேள்வி செய்த கௌணியன் விண்ணந்தாயனின் மிகுதிப்பாட்டை – வேள்வி செய்த திறத்தைப்பாராட்டி,

                                                                           நன்றாய்ந்த நீணிமிர்சடை

                                                                         முது முதல்வன் வாய்போகா

                                                                        தொன்றுபுரிந்த வீரிரண்டின்

                                                                        ஆறுணர்ந்த வொருமுதுநூல்

                                                                        இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையுமுட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக

வினைக்கு வேண்டி நீபூண்ட

புலப்புல்வாய் கலைப்பச்சை

சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய

மறங்கடிந்த வருங்கற்பின்

அறம் புகழ்ந்த வலை சூடிச்

சிறு நுதற்பே ரகலல் குற்

சில சொல்லிற் பல் கூந்தலின்

நலைக்கொத்த நின் றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில் கேட்பக்

காடென்றா நாடென்றாங்

கீரேழி னீடமுட்டாது

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் றிருந்தேந்து நிலை

என்றுங் காண்கதில் லம்ம யாமே குடாஅது

பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்

உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்

செல்வ லத்தை யானே செல்லாது

மழைய ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவள ரிமயம் போல

நிலீ இய ரத்தை நீ நிலமிசை யானே

என்று நெடிய வாழ்த்துப்பா (புறம் 166) பாடுகிறார். அறம் ஒன்றை மேவி நான்கு கூறுகளை உடைய, ஆறு அங்கத்தை உடைய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோரை புறச்சமயத்தாருடைய மிகுதியைச் சாய்க்க இருபத்தொரு வேள்வித்துறையை எத்தவிதக்குறையும் இன்றி தம் ஏவல் கேட்டுச் செயல்படும் துணைவியருடன் நீரைப்போல நெய்யை ஊற்றி பல வேள்விகளைச் செய்து விருந்தினைப் போற்றிய உன்னுடைய மிகுதியான சிறப்பு மே;படுவதாகுக. இமயமலை போல் வாழ்க என்று ஆவூர் மூலங்கிழார், வேட்டலின் மிகுதியை – கௌணியன் விண்ணந்தாயனின் வேள்விச் சிறப்பை பார்ப்பன வாகைத் துறையில் பாடுகின்றார். பார்ப்பனனின் மேம்பட்ட வேள்விச் சிறப்பு அவனுடைய வெற்றியாக அமைகிறது.

பார்ப்பன வாகையும் பார்ப்பன முல்லையும்

            மதுரை வேளாசான் பாடிய புறநானூற்றுப்பாடல் (305) பார்ப்பன வாகைத்துறையில் அமைந்த மற்றொரு பாடலாகும். இப்பாடல் போர் எழுந்த சூழலில் போரைத் தவிர்க்கும் பொருட்டு தூதுச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் உரைக்கப்பட்ட பார்ப்பன வாகைத்துறையின் இலக்கணம் இப்பாடலுக்குப் பொருந்தி வரவில்லை. வாகைத்திணையில் பார்ப்பன முல்லை என்பது,

                                    கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கும்

                                    நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத் தன்று

என்று புறப்பொருள் வெண்பாமாலை (வாகைத்திணை-18) இலக்கணம் உரைக்கின்றது. இரு அரசர்களிடையே எழுந்த மாறுபாட்டை வேதம் அறிந்த பார்ப்பனன் தன்சொல் முறையால் மாற்றுகிற தன்மையைச் சொல்லுவது என்பதே பார்ப்பன முல்லைத்துறையாகும்.

மதுரை வேளாசான் பாடிய,

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்

உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே

ஏணியுஞ் சீப்பு மாற்றி

மாண்வினை யானையு மணிகளைந் தனவே

என்ற புறநானுற்றுப்பாடல் பார்ப்பனவாகைத் துறையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றுப்பாடலுக்கு உரை வகுத்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் துறை விளக்கம் தருகையில்,

            இது பார்ப்பன வாகையெனத்துறை வகுக்கப்பட்டுள்ளது. பார்ப்பன வாகையாவது கேள்வியாற் சிறப்பெய்தி யானை வேள்வியான் விறன் மிகுத்தன்று (பு.வெ.மா.8-9) எனப்படுகிறது. இது பார்ப்பன முல்லை யென்றிருப்பின் சீரிதாம்…இதன்கண் பார்ப்பான் வந்து சொல்லிய சொல் சிலவென்றும் போரொழிந் ததென்றும் கூறுவது இது பார்ப்பன முல்லை யாதலை வற்புறுத்துகின்றது (புறம்.தொகுதி.பக் 209-210) என்று கூறுகிறார். பிள்ளை அவர்களின் விளக்கம் சரியானதுதான் என்றாலும் புறநானூற்றுப்பாடலில் கூறப்பட்ட துறை பார்ப்பன வாகையாக இருக்கின்றது. இப்பாடலில் பார்ப்பனனின் மிகுதி உரைக்கப் பட்டிருகின்றது. அதாவது சொல்வன்மை உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

                                    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

                                    இகல்வெல்லல் யாருக்கும் அரிது (குறள்.647)

என்பது வள்ளுவம். சொல்வன்மை படைத்தவரை யாராலும் வெல்லமுடியாது. யாராலும் வெல்ல முடியாத சொல்வன்மை படைத்த பார்ப்பனன் என்ன கூறினான் என்பது உரைக்கப்படவில்லை. அவன் பேசியது சில சொற்களே. அதனால் உடனடியாகப் போர் விலக்கப்பட்டிருக்கின்றது. எதிர் நாட்டரசன் தன் நாட்டிற்குள் வராது இருக்க ஆணிகள் நிறைந்த சீப்பு வடிவத்திலான கருவி கோட்டை வாசலில் வைக்கப்படும். எதிரியைத் தாக்குவதற்கு நூல் போன்ற கருவிகளை எடுத்துச்செல்வர். போர்க்கோலம் பூண்ட யானை முதலான படைகள் அணிவகுக்கும். இந்நிலையில் பார்ப்பனன் வந்து பேசிய சொற்கள் சில மட்டுமே. அதன் பின்னர் உடனடியாக ஏணியும் சீப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. போர்க்கோலம் பூண்ட யானைகளின் மணிகள் முதலானவை களையப்பட்டுவிட்டன. பார்ப்பானின் சொல்வன்மை பார்ப்பன வாகையா? பார்ப்பன முல்லையா? என்ற வினா எழுகிறது. பாடல் பார்ப்பன வாகைத்துறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பன முல்லையின் இலக்கணம் தான் பொருந்துகிறதே தவிர பார்ப்பன வாகையின் இலக்கணம் பொருந்தவில்லை. வேள்வியின் சிறப்பு எதுவும் இப்பாடலில் கூறப்படவில்லை. சொல்வன்மையின் சிறப்பு உரைக்கப்பட்டிருக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் தான் பார்ப்பனவாகை, பார்ப்பன முல்லை ஆகிய துறைகள் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம்’ என்பதோடு மட்டும் அமைகிறது. அறுவகையில் ஒன்றான வேள்விசெய்தல் பார்ப்பன வாகையாகிறது. ஆனால் பார்ப்பன முல்லையை ஆறுவகையில் ஓதுவித்தலுடன் தொடர்பு படுத்தலாம்.

ஓதலும் ஓதுவித்தலும் கல்வியறிவா? நான்மறை அறிவா? என்பது வினாவிற்கு உரியது. கல்வியறிவு என எடுத்துக்கொண்டாலும் தான் கற்ற கல்வி மூலமாக பிறருக்கு வாழ்வதற்கு ஏற்ற எந்தத் தீங்கும் இல்லாத அறிவுரையாகச் சொல்லத்தெரிந்த அறிவாக இருந்தால் அவ் அறிவு போற்றப்படவேண்டிய ஒன்று. வேத அறிவு என்பது வேதங்களைப் பற்றிய அறிவா? வேதங்கள் மூலம் தான் பெற்ற அறிவா? என்பது வினா. மதுரை வேளாசான் பாடல், புறப்பொருள் வெண்பா மாலையின் பார்ப்பன முல்லைத் துறைக்கும் பொருத்தமானது என்று கூறப்பட்டாலும் பார்ப்பனவாகை என்ற துறையில் பாடல் வகுக்கப்பட்டது ஏன்? புறப்பொருள் வெண்பா மாலையில் வகுக்கப்பட்ட துறை, சங்க இலக்கியப் புறநானூற்றுப் பாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் கவனத்தில் கொள்ளவில்லையா? என்ற வினாவையும் எழுப்புகிறது. இருப்பினும் பார்ப்பன வாகைத்துறை என வகுக்கப்பட்டிருப்பது சரியென்று கூறவும் இடம் இருக்கின்றது.

ஆளுமை என்பதற்கு சொல்லப்படும் விளக்கம், எந்த ஒரு சூழலையும் தன்னுடையதாக்கிக் கொள்வதே ஆளுமை என்றாகிறது. இத்தகைய ஆளுமைப்பண்பு உயரியதாகக் கொள்ளப்படுகிறது. ஆளுமைப்பண்பிற்காகக் கூறப்படும் வரையறைகளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளுகிற பண்பைப் பார்ப்பனர் பெற்றிருக்கலாம். எந்த சூழலையும் தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிற தனித்தன்மையுடைய பார்ப்பனன் சொல்லிய சொற்கள் சில. சொற்கள் சிலவாக இருந்தாலும் கேட்பவரை அதன்படி கேட்டு நடத்தக்கூடிய வகையில் இருப்பது வாகையாக அமைகிறது.

“குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினின்றும் வேறுபடமிகுத்து மேம்படுதல் வாகைத் திணையின் ஒழுகலாறாம்”. என்ற (முனைவர் கோ.சிவகுருநாதன், வாகைத்திணை, ப.17) வாகைத்திணையின் இலக்கணத்திற்கு வெள்ளை வாரணனார் கூறுகிற உரைவிளக்கம் இங்குக் குறிப்பிடத்தக்கது. தத்தமக்குரிய அறிவு என்பதன் அடிப்படையில் கேட்டாரைப் பிணிக்கும் தகையவாய் பார்ப்பனன் சொல் அமைந்து பார்ப்பன வாகையான மதுரை வேளாசான் பாடல் அமைவதை ஏற்கலாம்.

தொகுப்புரை

            சங்க காலச் சமூகத்தில் சாதிகள் இருந்திருக்கினறன. ஆனால் சாதி வேற்றுமைகள் பாராட்டப்படவில்லை. அரசர்களுக்கு அடுத்த நிலையில் பார்ப்பனர்கள் இருந்திருக்கின்றனர். பார்ப்பார் அந்தணர் என்று குறிப்பிடப்பட்ட பிராமணர்கள் மேல்நிலையில் இருந்திருக்கின்றனர். அகவாழ்வில் வாயில்களாகவும் புறவாழ்வில் அறிவுரை கூறுபவர்களாகவும், வேள்வி செய்விப்பவர்களாகவும் விளங்கினர். புறத்திணைகளுள் ஒன்றான வாகைத்துறை வாகைத்திணையில் பார்ப்பன வாகைத்துறை, பார்ப்பன முல்லைத் துறை என இரு துறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், புறநானூற்றில் இரண்டு பாடல்கள் பார்ப்பனவாகைத் துறையில் அமைந்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிற பார்ப்பன வாகை இலக்கணத்தின்படி ஒரு பாடலும், பார்ப்பன முல்லைதுறை இலக்கணத்தின்படி ஒரு பாடலும் அமைந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பன முல்லை என துறை ஒன்றின் பெயர் இடம் பெறவில்லை. வள்ளுவர் கூறிய வாய்மொழியின் படியும் வெள்ளை வாரணனார் வாகைத் திணைக்கு உரைத்த உரையின் படியும் பார்ப்பன வாகைத்துறையிலேயே அப்பாடலை வகுத்துக்கூறலாம். பார்ப்பன வாகை எந்தச் சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் பார்ப்பனனின் வெற்றியாக அமைகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

தமிழ் இணைப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

அரசு கலைக்கல்லூரி

உடுமலைப்பேட்டை

மேலும் பார்க்க,

புறநானூறு கூறும் வாழ்வியல் சிந்தனைகள்

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

காரைக்கால் அம்மையார்

 காரைக்கால் அம்மையார்


காரைக்காலில் வணிகர் குலத்தில் பிறந்தவர் புனிதவதியார் ஆவார். இவர் குழந்தைப் பருவத்திலேயே சிவபெருமான் மீதும் அடியவர்கள் மீதும் அரும்பக்தி கொண்டிருந்தார்.

புனிதவதியைப் பெற்றோர் நாகப்பட்டினத்திலே இருந்த பரமதத்தன் என்பவருக்கு மணம் செய்து வைத்தனர். தன் அருமை மகளைப் பிரிய மனம் இல்லாத புனிதவதியின் தந்தை இருவரும் காரைக்காலியே இல்லறம் நடத்தும்படிக் கூறினார். இருவரும் மிக்க மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். ஒருநாள் பரமதத்தன், நண்பர் தந்ததாகக் கூறி இரண்டு மாம்பழங்களை வீட்டிற்குக் கொண்டு வந்தான். மதிய உணவிற்கு அவற்றைப் பரிமாறும்படிக் கூறிவிட்டு சென்றான்.

அடியவர் வேடம் 

ற்று நேரத்தில் புனிதவதியின் வீட்டு வாசலில் ஒரு அடியவர் வந்து நின்றார். அடியவருக்கு உணவு அளிக்க சமையல் முடிந்தபாடில்லை. எனவே, புனிதவதியார் கணவன் தந்த இரண்டு மாம்பழங்களிலே ஒன்றை அடியவருக்குத் தந்தார்.மதிய உணவு உண்ண வந்த பரமதத்தன் மாம்பழத்தைக் கேட்டான். புனிதவதியார் ஒரு மாம்பழத்தை அரிந்து தந்தார். அதை உண்ட பரமதத்தன், மாம்பழத்தின் சுவையில் மகிழ்ந்து மற்றொரு மாம்பழத்தையும் கொண்டு வரும்படிக் கேட்டான். புனிதவதியார் நெஞ்சம் பதைத்தார். கணவருக்கு என்ன பதில் சொல்வேன் என்று நடுங்கினார். தான் அன்றாடம் வணங்கும் இறைவனின் முன் சென்று, அழுது தொழுதார். அக்கணமே சிவனருளால் அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. அதை அரிந்து தன் கணவருக்குத் தந்தார் புனிதவதியார்.

மாம்பழம்

அதை உண்ட பரமதத்தன், “முதலில் உண்ட மாம்பழத்தில் இத்தனை சுவையில்லை. சுவை மிகுந்த இப்பழம் யார் தந்தது?” என்று கேட்டான். புனிதவதியாரும் வேறு வழியின்றி நடந்த உண்மைகளைக் கூறினார். இரண்டாவதாகக் கணவர் உண்டது சிவனருளால் பெற்ற மாம்பழம் என்றார்.

சைவநெறியில் அத்துணை பக்தியில்லாத பரமதத்தன் அதனை நம்பவில்லை. அவன் புனிதவதியாரிடம், “நீ அத்துணை பக்தி நிரம்பியவள் என்றால் சிவபெருமானிடம் இன்னுமொரு மாம்பழம் பெற்றுக் காட்டு!” என்று கூறினான்.புனிதவதியாரும் இறைவனிடம் வேண்டினார். இன்னொரு மாம்பழம் வந்தது. பரமதத்தன் பேரதிர்ச்சி அடைந்தான்.

தெய்வீக சக்தி கொண்ட புனிதவதியாரோடு இனிதான் இல்லறம் நடத்த முடியாது என்று கருதினான். அதை வெளியில் கூறாமல் புனிதவதியாரைத் தொடாமலேயே வாழ்ந்தான். சிறிதுநாள் கழித்து, வாணிபம் செய்யும் பொருட்டு பாண்டி நாடு சென்ற பரமதத்தன், அங்கு வேறொரு பெண்ணை மணம் செய்து கொண்டான். இதைப் புனிதவதியார் அறியவில்லை.

பேய் உருவம்

ஆனால் சிறிது நாட்களுக்குப் பிறகு புனிதவதியாரின் சுற்றத்தார் இதை அறிந்து, புனிதவதியாரை பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்தனர். பரமதத்தனிடம் சேர்ப்பித்தனர். ஆனால் பரமதத்தனோ, “இவள் தெய்வசக்தி கொண்டவள். இவளோடு என்னால் குடும்பம் நடத்த முடியாது!” என்று கூறினான். அதைக்கேட்டு மனம் வருந்திய புனிதவதியார் சிவபெருமானிடம், “என் கணவர் விரும்பாத இந்த உடல் பேய் வடிவமாக மாற அருள வேண்டும்!” என்று வேண்டினார். மறுகணமே புனிதவதியார் பேய் உருவை அடைந்தார். அவ்வுருவிலேயே சிவனைத் தொழுதார். பதிகங்கள் பாடினார்.

இவ்வாறிருக்கையில் புனிதவதியாருக்கு திருக் கயிலையைக் காணும் ஆசை உண்டானது. அவர் தலையாலேயே நடந்து திருக்கயிலையை நோக்கிச் சென்றார். அவ்வாறு செல்கையில் வழியிலேயே சிவபெருமான் உமையன்னையுடன் புனிதவதியாருக்கு திருக்காட்சி தந்தார். புனிதவதியார் தலையால் நடந்து வரும் காரணத்தை இறைவன் கேட்டார். திருக்கயிலையிலே தனக்கு இடம் தரவேண்டும் என்று பதிலுரைத்தார் புனிதவதியார்.

திருக்கயிலை அடைதல்

சிவபெருமானும், ‘அம்மையே! யாம் ஊர்த்துவ தாண்டவம் புரிகின்ற திருவலங்காட்டில் வீற்றிருந்து பதிகங்கள் பாடிக் களிப்பாயாக. உற்ற நேரத்தில் கயிலை வந்தடைவாய்!” என்று அருளினார். புனிதவதியாரும் தலையால் நடந்து சென்றே திருவாலங்காட்டை அடைந்தார். அங்கே இறைவனின் அருகில் அமர்ந்தார். பதிகங்கள் பாடிக் கொண்டிருந்தார். இறுதியில் சிவலோகம் சென்றடைந்தார். காரைக்கால் அம்மையார் என்ற பெயருடன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இணைந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »