Wednesday, June 3, 2026
Home Blog Page 15

Sanga Ilakkiyam Thotte Thangam| Mrs.Guna.Priyanka

சங்க இலக்கியம் தொட்டே தங்கம்_குணா.பிரியங்கா

“ சங்க இலக்கியம் தொட்டே தங்கம்”

Abstract
 

         In the Culture of Tamil sangam age literally known as golden Age. In Tamil literature marriage earrings ceremony function for girls like religious and rational belief gold to come prominent place in life of Tamil which we couldn’t  separated people with gold.Gold (phoon) remarkable item of Tamil life which was male, female used to wear where are ornament. They used gold as a utensils and they gifted gold as a precious gift. Because it was considered as valuable metal of all. Still now middle class family allocates one part of savings in gold. Once in society of women those who  were the lot of ornaments considered as a high class people. But the  gold we used buy forprestigious purpose and saving purpose. Gold which was entering in life of human as valuable things now day asking your life of human which it was unvaluable. Thus it’s a fact of life.

ஆய்வுச்சுருக்கம்
         

     தமிழர்களின் சங்க காலத்தை “தங்க காலம்” என்பார்கள். சங்க இலக்கியங்களிலும், திருமணம், செவிக்கு பொன் சேர்ப்பு விழா போன்ற அனைத்து சடங்கு முறைகளிலும் தங்க ஆபரணங்கள் தவிர்க்க இயலாத ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது . ஆண்கள் ,பெண்கள் அணியும் அணிகலன்களாகவும், புழங்கு பொருளாகவும், பரிசு பொருளாகவும் பொன்னையே உபயோகித்ததால் சிறப்பு வாய்ந்த மதிப்புமிக்க பொருளாகவும் பொன்னே இருந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம். தங்கம் அதிகம் அணிந்த பெண்கள் உயர்தர வர்க்கத்தினராக சமுதாயத்தால் கருதப்படுகிறது. மதிப்பிற்காகவும், தேவைக்காகவும் வாங்கப்பட்ட தங்கம் தற்போது உயிர் பலியையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்துகிறது. தங்கம் தற்போது மதிப்பு மிகவும் உயர்ந்துள்ளதால் விளிம்பு நிலை மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.


முன்னுரை
         

      பொன்னான வாக்கு, பொன்மனச் செம்மல் போன்ற சிறந்த உவமையாக பொன்னையே கூறுவோம். பொன் என்றால் ஒரு தங்கத்தாது. பொன் என்னும் பெயர்ச்சொல் மினுக்கம் உள்ள ஒருவகை உலோகத்தாது. சங்க காலம் முதல் இதிகாச கதைகளிலும், புராணங்களிலும், தங்கத்தின் பயன்பாடு இருந்துள்ளது.  இதனை தற்போது விரிவாகக்  காணலாம்.


முதற் பயன்பாடு
         

        சங்ககாலத்தில் இருந்தே நம்மோடு ஒன்றிப் பிணைந்த ஒன்று தெய்வ வழிபாடு. தெய்வ வழிபாட்டின் போது அருளாளர்களின் உருவ சிலைக்கு அணிவிப்பதற்கு மட்டுமே பொன்னாளான நகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு அரசர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
 

கானவர் பொன்புனை பகழி செப்பங் கொண்மார்” (குறுந்தொகை )
         

          பொன்னால் அழகுறச் செய்த அம்பினைச் செம்மையாக்கும் கருமார் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார்.  காலப்போக்கில் சக மனிதர்களின் பயன்பாட்டிற்கும் தங்கம் வந்துள்ளது. மொகஞ்சதாரோவில் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய நகைகள் மிகவும் மென்மையானதாகவும், நுணுக்கமானதாகவும் மாறியது. முகலாயர்கள் காலத்தில் உச்சத்தை தொட்ட நகைக்கு முலாம் பூசும் தொழில்நுட்பம் பண்டைய நகரமான டாக்ஸிலாவில் கண்டுபிடிக்கப்பட்டது.


பரிசம் போடுதல்
         

      பரியம் ( மூங்கிலால் பின்னப்பட்ட வட்ட வடிவிலான தாம்பூலம்) பரிசத்தில்  வைத்து பெண்ணுக்கு கொடுக்கப்படும் பொன்னாலான அணிகலன்களின் பரிசுத்தொகுப்பு. சிலப்பதிகாரத்தில் பரிசம் என்பது ஆணின் பெற்றோர்கள் மணப்பெண்ணுக்கு வழங்கும் பொன்னாலான அணிகலன்களின் சீர்வரிசை. புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு அளிக்கும் நம்பிக்கை. பொதுவாக மனிதர்களின் பயன்பாட்டில் இருந்த தங்கம் பெண்ணுக்கு அணிகலன்களாக கொடுக்கப்பட்டது.
 

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்” (குறுந்தொகை – 21)


        பொன்னாற் செய்த அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களை பற்றி ஓதலாந்தையார் கூறியுள்ளனர்.


சங்க இலக்கியத்தில் தங்கம்
         

பொன் வேய்ந்த சோழன்” -பரந்தகச்சோழன். பொன்னையே கூரையாக வேய்ந்ததால் பொன்வேய்ந்த சோழன் என்ற பெருமைக்குரியவர்.
 

மும் முன்னா வீழ்ந்த முடிகள் உதித்தமாப்

பொன் உரைக்கல் போன்ற குழம்பு” (முத்தொள்ளாயிரம் 99 )
                  

       மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடி இருந்த முடி சிதறி கிடந்தது. மாறனின் குதிரை அந்தப்  பொன் முடிகளைக் காலால் இடறியது. அதனால் அந்த குழம்புகள் பொன்னை உரைத்து பார்க்கும் கட்டடக் கல் போல காணப்பட்டது.

விறகொப் மாக்கள் பொன்பெற் றன்னதோர்”  (புறநானூறு)
         

     விறகுக்குச் சென்றவர் பொன்  பெற்று வந்தார் என்று கோவூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை புகழ்ந்து பாடியுள்ளார்.
 

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார் கோதையைக்”     (முத்தொள்ளாயிரம் )
         

   தேர்ந்தெடுத்த ஆபரணங்களையும் தங்க நகைகளையும் மார்பில் அசைந்தாடுகின்ற மாலையையும் அணிந்த சேரன் கோதை என்று சேரன் பொன்னாலான ஆபரணங்களை அணிந்துள்ளார் என்று கூறுகிறது.


“பொன்னணி யானைத்  தொன் முதிர் வேளீர்” (புறநானூறு )
         

     யானைக்கும் பொன் அணிவிக்கப்பட்டுள்ளது என்பதை பொன்னணிந்த யானை என்று மாங்குடி கிழார் கூறியுள்ளார்.


அந்தணர் ஆவோடு பொன் பெற்றார்” (முத்தொள்ளாயிரம் )
         

     இளங்கிலைவேல் கிள்ளியிடமிருந்து, அந்தணர்கள், பசுமாடு மற்றும் பொன் பரிசீல்களை பெற்றுச் சென்றன.   பொன் இழைகளில் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன என்பதைப்
“பொன்புனை உடுக்கை போன்” என்று பரிபாடலில் கூறியுள்ளார்.


“தாமரைக் கவரியும் தமணிய அழைப்பையும்”
         

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் செல்வரின் அரச வீதியைக் குறிப்பிடுகையில் பொன்னால்  செய்த வெற்றிலை பெட்டியும் இருந்ததாகக் கூறியுள்ளார். பொன்னாலும் நவமணிகளாலும் ஆன அணிகலன்கள் தமிழர்களிடையே மதிப்பு மிகுந்ததாகக் காணப்பட்டுள்ளது


“ஆர்ப்படுத்த செம்பொன் பதிபடுப்பு முத்தமிழ் நூல்” (முத்தொள்ளாயிரம் )
         

      பார்- நிலம் படுப்ப- காணப்படும் செம்பொன்- தங்கம்.  பாண்டிய மண்ணைத் தோண்டினால் செம்பொன் கிடைக்கும்.  காட்டைத் தோண்டும்போது பரிமுகம் பதித்த பொன் கிடைக்குமாயின் அது நீரூற்றுள்ள இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளன.


“பொன் போலும் புதல்வர்ப் பெறாஅ தீரும்”  ( புறநானூறு-9 )

         பொன் போலும் பிள்ளைகளைப் பெறாதீரும் என் அன்புக் கடி விடுவதும் என்று பொன்னை உவமையாக பாடியுள்ளார்  நெட்டிமையார்.   பண்டமாற்று முறையில் மிளகை பெறுவதற்காக தங்கத்தை ஈடாக கொடுத்துள்ளனர்.


“ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து”  (திருக்குறள் -155)
         

      தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார். ஆனால் பொறுத்தவரைப் பொன் போல் மனதுள் வைத்து மதிப்பார் என்று பொன்னை சிறப்பித்து தெய்வப் புலவரும் கூறியுள்ளார்.


இக்காலத்தில் தங்கம்          

           தமிழ்நாட்டில்தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம். சிறுசேமிப்பின் மூலம் சிறுகச்சிறுக சேர்த்து மிகப்பெரிய தொகையாக வந்தவுடன் தங்க ஆபரணங்களையே வாங்குகின்றனர். மாதச் சம்பளத்திற்கு மற்றும் அன்றாட வேலை செய்பவர்களுக்கு சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம்.  உணவு உடை இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சேமிப்பின் மிகப்பெரிய தொகையை தங்கத்திற்காகவே சேமிக்கப்படுகின்றன.
           

        ஆபரணங்களாக அறிவிப்பதற்காக மட்டுமின்றி  உடனடி பணத்தேவை ஏற்படும்போது அடகு வைத்து அல்லது அதனை விற்று பணம் பெரும் நோக்கத்துடனும் தங்கத்தில் முதலீடு  செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அடகு வைத்தல் மற்றும் விற்று பணம் பெரும் நோக்கத்தோடு தங்க ஆபரணங்கள் வைத்திருப்பதால் களவு, கொள்ளை, நகைப் பறிப்பு போன்ற குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. தங்கத்திற்காக அதிக அளவு கொலைகள், விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் வெளியில் செல்ல தயக்கம் ஏற்படுகின்றது.


முடிவுரை
          

    வரதட்சணையாக தங்கத்தைத் தவிர்த்து கல்வியை பெண்ணுக்கு நம்பிக்கையாக அளிக்கப்பட வேண்டும். பல சவரங்கள் பெண்ணுக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்டாலும்  அது சில காலங்களிலே அழிந்து விடக்கூடும். பெண்ணுக்கு கல்வியே இறுதி வரை  ஏற்றம் தரும்.
 

பார்வை நூல்கள்:

1.குறுந்தொகை -இரா.அறவேந்தன், காவ்யா பதிப்பகம் முதல் பதிப்பு 2012


2.சிலப்பதிகாரம் – புலியூர்கேசிகன்,  சரண் பதிப்பகம் மூன்றாம் பதிப்பு 2023


3.புறநானூறு –  ஔவை. துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம்  முதற்பதிப்பு 2015


4.முத்தொள்ளாயிரம் – கிழக்கு பதிப்பகம்


5.பரிபாடல்

6.திருக்குறள்

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி.குணா.பிரியங்கா,

தமிழாசிரியர்,

கூடல் நகர், நல்லூர் சாலை,

ஓசூர்.

 

Naattupura Nambikaigal|V.Gowtham

நாட்டுப்புற  நம்பிக்கைகள் வெ. கெளதம்

Abstract

      If we saw the basic common elements of the folk, their beliefs and customs were unwavering. Their feelings and their beliefs were inseparable. They believed that some of the events in human life were unacceptable when the human mind was unacceptable. Beliefs have been created by the people and have been spreading from one generation to another. From birth to death, they lived with many beliefs.

முன்னுரை 
                 

        நாட்டுப்புற மக்களின் அடிப்படை பொதுக் கூறுகளாக பார்த்தோம் என்றால் அவர்களின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அசைக்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் உணர்வுகளும் அவர்களின் நம்பிக்கைகளும்  பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்கு காரணம் கற்பிக்க இயலாத பொழுது மனித மனமானது சிலவற்றை ஏற்றுக்கொள்ளாத இருந்தது  அதிலும் ஒரு நன்மை தான் என நம்பிக்கை கொண்டிருந்தனர். நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு காலம் காலமாக ஒரு தலைமுறைகளிடமிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவி இருந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை பல நம்பிக்கைகளை கொண்டு வாழ்ந்து வந்தனர்.
 

நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள்  

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது இடது கண் துடித்தால் நல்லதல்ல
 

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது வலது கண் துடித்தால் நல்லதல்ல
 

சிரிக்கும் பொழுது இடது கன்னத்தில் குழி விருந்தால் அதிர்ஷ்டம்
 

வாழை மரம் தெற்கு நோக்கிக் குலை தழுதல் கூடாது
 

பயணம் செய்யும்பொழுது யானையைக் காண்பது நல்லது
 

தலையணை மீது உட்காரக்கூடாது
 

சுப காரியம் போது ஒற்றைத் தும்பல் ஆகாது
 

கர்ப்பிணிகளின் தலைக்கு மேலே கோழி பறக்க கூடாது
 

வெள்ளியன்று சுமங்கலிகள் பிறர் மனைவியை தாக்குதல் கூடாது
 

கம்மல் வளையல் போன்ற நகைகளை சுமங்கலிகள் இரவில் கழட்டுதல் கூடாது
 

சுப காரியங்கள் பேசும் பொழுது கோவில் மணி அடித்தால் நல்லது.


வெள்ளிக்கிழமை கண்ணாடி வளையல் உடைதல் கூடாது


கர்ப்பிணிகள் பெண்கள் கடல் தாண்டி போகக்கூடாது மலையேறும் கூடாது


மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மலை ஏறக்கூடாது.

பிணத்தின் பின் செல்லுதல் கூடாது


அடுப்புக்கரி விறகுகளை வெள்ளிக்கிழமையில் வாங்க கூடாது


ஊசி வெள்ளிக்கிழமையில் கடையில் விற்கக் கூடாது


ஈர ஆடைகளை அணிந்து கொண்டு நல்ல காரியங்களை செய்யக்கூடாது


விக்கலை நிறுத்த விக்கி கொண்டிருப்பவர் அதிர்ச்சி அடையும்படி பொய்யான தகவலை சொல்வார்கள்


துக்கம் விசாரித்த வீட்டிற்கு வருபவர்களை வாருங்கள் என வரவேற்க கூடாது


துக்க வீட்டில் இருந்து புறப்படும் போது திரும்ப (அ) சென்று வருகிறேன் என சொல்லக்கூடாது


நம் செருப்புகளையும் ஆடைகளையும் புனித தளங்களில் தொலைத்து விட்டால் நம் பாவங்கள் போகும்


அன்னத்தை வீசிய கூடாது


அமாவாசை நாளில் முடி வெட்டக்கூடாது


பயணம் ஏற்படும் போது ரத்தக்காயம் ஏற்பட்டால் பயணத்தை தொடரக்கூடாது


தூரத்தில் உள்ள உறவினர் துன்பம் ஏற்பட்டால் நமக்கு நெஞ்சம் படபடக்கும்


புத்தாடைகளை மஞ்சள் தடவி அணிதல் வேண்டும்


சுமங்கலி பெண்களின் நல்ல புடவையைக் குறுக்கே கிழிக்கக் கூடாது


வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கை தேய்த்து கழுவ கூடாது பூஜை அறை சுத்தம் செய்யக்கூடாது


பசு மாடு ஆடு ஆகியவற்றை காலால் உதைக்கக் கூடாது


தலைப்பிள்ளையை தத்து கொடுக்க மாட்டார்கள்


பயணம் செய்யும்போது காக்கை எச்சம்மிடக்கூடாது


வவ்வால் வீட்டுக்குள் பறக்க கூடாது. தேன்கூடு வீட்டுக்குள் கட்டினால் ஆகாது


இரவில் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது


யணம் செய்யும்போது நீர் நிறைத்து  வருதலும் திருநீர் அணிந்து வருதலும் நல்லது


பிள்ளையார் சாமி திருடிக் கொண்டு வந்து வைக்கலாம் நல்லது


சாமி வணங்கும்போது  சாமி மீது உள்ள பூ கீழே விழுந்தால் நல்லது நடக்கும்


உப்பும் நீரும் வெள்ளிக்கிழமை வாங்கினால் தனம் பெருகும்


பயணம் செய்யும்போது கருடன் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் செல்வது நல்லது


புது பெண்ணை ஆடி மாசம் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாட்டார்கள்


வீட்டில் மகாபாரதம் படித்தால் சண்டை உண்டாகும்


தலையில் இரட்டைச் சொல்லிக் கொண்டவனுக்கு அதிர்ஷ்டம் இல்லாதவன்


வியாபார நிறுவனங்களில் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து தாளம் போடக்கூடாது


மாலை நேரத்தில் விளக்கு ஏற்றியவுடன் யாரும் அழுக கூடாது வீட்டில் குத்து விளக்கை வலது புறம் பார்த்து ஏற்றினால் நல்லது தெற்கு புறம் ஏற்றக்கூடாது


சுவாமி விளக்கிற்கு கடலை எண்ணெய் ஊற்றக்கூடாது


அரிசியை அளந்து போடும் முன் லாபம் என்று சொல்லி அழைப்பார்கள்

குலதெய்வ வழிபாட்டு முறை சுப காரியங்களை தொடங்குவது நல்லது

விபூதியை கடையில் வாங்கி மற்றவர்களுக்கு இலவசமாக கொடுக்க கூடாது


விரத நாட்களில் அசைவம் உண்ணக்கூடாது


வீட்டின் வாயில் படியில் நின்று பணத்தை தரக் கூடாது


கிராமத்தில் மழை வர வேண்டும் என கழுதைக்கு திருமணம் செய்து வைப்பார்கள்


குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தை சுற்றி வருவார்கள்


வீட்டில் ஆண்டிக் கோலம் துர்க்கை அம்மன் காளி ஆகி படங்களை வைக்கக் கூடாது


பணம் கொடுக்கும் போது அது தவறி கீழே விழுந்தால் லாபம் என்று நினைப்பார்கள்


நல்ல காரியங்களுக்கு போகும் போது மூவராக சேர்ந்து போகக்கூடாது


வைகுண்ட ஏகாதசி என்று இறந்தவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை


புது பானை உடைந்தால் அபசகுனம்
 நாய் ஊளையிட்டால்  அந்த பகுதியில் யாருக்காவது மரணம் நேரிடும்


தொடையைத் தட்டிக் கொள்ளுதல் ஆகாது


தாழ்ப்பாளை ஆற்றினால் வீட்டில் சண்டை வரும்


செவ்வாய் வெறும் என்று கூறுவார்கள்


திருமணம் ஆகி வரும் மணப்பெண் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும்


படுத்திருப்பவர்களை தாண்டக்கூடாது


வாசப்படியில் நின்று கொண்டு பொருளை வாங்கவோ கொடுக்கவும் கூடாது


சாப்பிட்ட கையால் எழுதி எடுக்கக் கூடாது


உள்ளங்கையில் சோறு போடாமல் சாப்பிட வேண்டும்


சாப்பிட்ட இலை தட்டு கை ஆகியவை உலர விடக்கூடாது


கரப்பான் பூச்சி வீட்டில் அதிகம் இருந்தால் வீட்டில் செல்வம் பெருகும்


உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது


புண்ணியம் செய்தவருக்கு தான் சிவலோகம் கட்டும்


குளவி கூடு கட்டி இருந்தால் வீட்டில் யாரேனும் கருத்தரிப்பார்கள்


பசுவை அடித்தால் பெரும்பாவம்
 பெண்கள் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருக்க கூடாது


வீட்டில் முளைப்பாலிகை செழிப்பாக வளர்ந்தால் வாழ்வு செழுமையாக இருக்கும்


கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய சந்திர கிரகணத்தின் போது காய்கறிகள் நறுக்கக்கூடாது

உணவு சாப்பிடக்கூடாது
 ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை மருந்து சாப்பிட ஆரம்பிக்கலாம்


வந்திருக்கும் விருந்தினருக்கு விருந்தளிக்கும் போது கீரை சமைத்து போட்டால் விருந்தினர் ஊர் திரும்ப வேண்டும் என்று பொருள்


விருந்தினருக்கு  வீட்டில் பாவக்காய் செய்யக்கூடாது


புண்ணியம் செய்தவருக்கு சிவலோகம் கிட்டும்

தீமை செய்தவருக்கு இறந்த பிறகு நரகம் செல்வார்கள்


பசுவை அடித்தால் பெரும்பாவம்


குயிலின் கூட்டைக் கலைத்தல் பெரும்பாவம்


குழந்தைகளுக்கு குலதெய்வத்தின் பெயரை வைத்தால் எந்த விதத் தீங்கும் வராது என நம்புவார்கள்


குழந்தை இல்லாத பெண்கள் அம்மன் கோவில் தொட்டில் கட்டுவார்கள்


துதியை திதியை பஞ்சமி சப்தமி தசமி திரியோதசி ஆகியவற்றில் திருமணம் நடைபெற வேண்டும்


புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமண நாட்களுக்கு ஏற்ற நாட்கள்


வளர்பிறையில் திருமணம் செய்வது நல்லது


வெள்ளிக்கிழமைகளில் பெண்ணை திருமணம் செய்து அழைத்துச் செல்ல மாட்டார்கள்


விவசாய நிலத்தில் சோளக்காட்டு பொம்மையை வைத்தால் பயிர்களுக்கு கண் திருஷ்டி வராது என நம்புவார்கள்


துலாம் ராசிக்காரர்கள் வைர மோதிரம் அணிவது சிறப்பு


கடக ராசிக்காரர்கள் முத்து அணிவது நல்லது


புதன் ராசிக்காரர் மரகதம அணிவது நல்லது


வியாழராசிக்காரர் புஷ்பராகம் அணிந்தால் நல்லது


மகரக் கும்ப ராசிக்காரர்கள் நீலம் அணிவது நல்லது


கேது தோஷம் உடையவர்கள் வைடூரியம் அணிவது நல்லது


ராகு ராசியில் பிறந்தவர்கள் கோமேதகம் அணிதல் நல்லது


சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம் அணிதல் நல்லது


செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவளம் அணிதல் நல்லது


வசிய மருந்து உதவியால் சேர்ந்து வாழும் குடும்பத்தையோ நண்பர்களையோ பிரிக்கலாம் என்பார்கள்


நல்ல காரியத்திற்கு செல்லும் போது மூன்று பேர் சேர்ந்து போகக்கூடாது


நல்ல காரியத்துக்கு போகும் போது சகுனம் பார்ப்பார்கள்


குதிரையின் லாடத்தை வாசலின் முன்பு ஆணி அடித்து வைத்தால் தீய ஆவிகள் வராது


வீட்டு வாசல் முன் எலுமிச்சை கரித்துண்டு  மிளகாய் கருப்பு கயிறு ஆகவே கட்டினால் கண் திருஷ்டி உள்ளே வராது


வாசப்படியில்  பெண்கள் அமரக்கூடாது


சித்திரை மாதத்தில் மகன் பிறந்தான் நல்லதல்ல


ஆடி மாதத்தில் தலை பிள்ளை பிறப்பது நல்லதல்ல


அம்மாவாசை அன்று பிறக்கும் பிள்ளை சுட்டியாக இருப்பான்


அமாவாசையில் பிறந்தால் திருட்டு குணம் இருக்கும்


வெள்ளிக்கிழமை பௌர்ணமி அன்று பெண் குழந்தை பிறந்தால் நல்லது


வீட்டில் நல்ல காரியம் நடக்கும் போது மற்றவர் வீட்டு பெரிய காரியங்களுக்கு செல்லக்கூடாது


அரச வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைப்பார்கள்


அரச மரத்தை  சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும்


எந்த ஒரு காரியம் செய்யும் போதும் குலதெய்வத்தை நினைத்து செய்தால் நல்லதே நடக்கும்


பெண்கள் கூந்தலை விரித்து போடக்கூடாது
 சாப்பிடும் போது தும்புதல் கூடாது


ஆண்கள் விரல் நகம் கடித்துக் கொண்டே இருக்கக் கூடாது


காசி யாத்திரை மேற்கொண்டவர் தனக்கு பிடித்த உணவு ஏதேனும் ஒன்றை இனி பயன்படுத்தக் கூடாது என்று காசியில் சொல்லி  விட்டு விட வேண்டும்

முடிவுரை 
      

     நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை அல்ல அது அவர்களின் நம்பகமான அசைக்க முடியாத நம்பிக்கையாகும். நாட்டுப்புற மக்கள் வாழ்வியலில் சிறந்த அனுபவமும் முதியோர்களின் வழிநடத்தலும் அவர்கள் மேற்கொள்ளும் சடங்கு சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்பற்றி வருகின்றனர்
 

துணை நூல்கள்  :
 

1) நாட்டுப்புற நம்பிக்கைகள் :ம. மீனாட்சி சுந்தரம்


2) நாட்டுப்புறவியல் : சு. சண்முகசுந்தரம்


3) நாட்டுப்புற இயல் ஆய்வு : டாக்டர் சு.சக்திவேல்


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


வெ. கெளதம் 


துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,


தமிழ்த்துறை,


சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விஜயமங்கலம்
, திருப்பூர் மாவட்டம்.

 

Neerin Thuimai Nithiya Vazhvin Thaimai|Dr.N.Dharmaraj

நீரின் தூய்மை நித்திய வாழ்வின் தாய்மை

“நீரின் தூய்மை நித்திய வாழ்வின் தாய்மை”

Abstract
               

      It is defined as the main ingredient of the most important requirements for man to survive, which is why air water land is the main components of the environment and the resources that can last life. In 2005, in 2005, the International Freshwater Year was recommended in 2005, but it is an undeniable fact that the people of our Indian people are less than the Western people, but in this article we will look at the troubles facing the human race.


முன்னுரை
               

  நீரின் முக்கியத்துவம் கருதி 2005ஆம் ஆண்டு சர்வதேச நன்னீர் வருடமாக பரிந்துரைக்கப்பட்டது ஆயினும் நீரின் முக்கியத்துவத்தின் விழிப்புணர்வு மேலைநாட்டு மக்களிடம் இருப்பதைவிட நம் இந்திய மக்களிடம் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மையாகும் இந்த அலட்சிய போக்கால் மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


நீரின் முக்கியத்துவம்
               

     நாகரீக வளர்ச்சி அடைய நீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது பெரும்பாலான நாடுகள் என்னை மற்றும் கனிம வளத்தின் இருப்பினை அறிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு நீரின் இருப்பினை தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை எந்த ஒரு நாட்டில் நீர்வளம் மிகுதியாக காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதில்லை நீர் ஆதார மற்றும் அதன் இருப்பு போன்றவற்றை மதிப்பீடு செய்வதின் வாயிலாக ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கான சீரிய திட்டங்களை தீட்ட முடியும் என்பது திண்ணம்.இருப்பினும் மக்கள் தொகை உயர்வு காரணமாக நன்னீருகான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவற்றுடன் தொழிற்சாலை விவசாய வீட்டு தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது பூமியின் பரப்பை மேம்படுத்துதல் தட்பவெட்பம் மற்றும்  மாசை குறைத்தலில் நீர் முக்கிய பங்கு வகுக்கின்றது. தாவரங்களில் ஆற்றல் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது புவிபரப்பில் சுமார் 71% பரவியுள்ள நீர்நிலைகளின் தொகுப்பே நீர்க்கோலம் என்று அழைக்கப்படுகிறது இதில் மிகப் பரந்த அளவில் பெருங்கடல்களும் குறைந்த பகுதிகளாக குளங்கள் ஆறுகள் மற்றும் அணைக்கட்டுகளிலும் பரவி உள்ளன. புவியின் இரு துருவங்களிலும் பரவியுள்ள பணிப் படிவுகளும் இவற்றுள் அடங்கும். நீர் கோலமானது மனித இனத்திற்கு பல்வேறு வகைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை உணர்ந்து செயல்படுவது மானுட பொறுப்பாகும்.


நீர் வளத்தின் பண்பாடு
               

    வேறுபட்ட காலநிலை கூறுகள். மாறுபாடுகள் நிறைந்த புவி அமைப்பு போன்ற காரணங்களினால். நம் நாட்டின் மழை பொழிவானது ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு வடகிழக்கு பருவக்காற்றுகளின் மூலமே கிடைக்கின்றது.
                கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக திறந்த நீர் நிலைகளில் குறிப்பாக குளம் ஏரி ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களில் உள்ள நீரானது நீராவிப் போக்கு மூலம் மிகுதியாக ஆவியாகி விடுகின்றது. மேலும் அதிக மக்கள் தொகை. தொழிற்சாலை வளர்ச்சி. விவசாய வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தர உயர்வினாலும் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதை கருத்தில் கொண்டு நமது நாட்டு நீர்வள வல்லுனர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து நீரின் வளத்தை மதிப்பிட்டு வீணாக ஓடுகின்ற மழை நீரை அணைக்கட்டுகள் மூலம் சேமித்து நீர் பற்றாக்குறையை ஓரளவு போக்கி வருகின்றனர்.


மேற்பரப்பு நீர் வளம்               

       இந்தியாவின் மேற்பரப்பு நீர்வளத்தை மூன்று வகையாக பிரித்துள்ளனர் அவை மிகப்பெரும் ஆற்று படுகைகள் இடைநிலை ஆற்று படுகைகள் சிறிய ஆற்றுப்படுகைகள் ஆகும் ஆற்றுப்படுகைகளின் தன்மைக்கேற்ப நீர் வளத்தின் இருப்பு பயன்பாடும் மாறுபடுகின்றன நீர் வளத்தை அதிகமாக பயன்படுத்தும் ஆற்றுப்படுகைகளில் முதன்மையானது காவேரி ஆற்று வடிகால் ஆகும் இந்த ஆற்றுப்படுகையில் 96 சதவீத நீரானது பயன்படுத்தப்படுகின்றது இதற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் ஆறுகளில் குறிப்பிடத்தக்கவை கிருஷ்ணா பொன்னாரு சிந்து நதி முதலியன ஆகும்.


நிலத்தடி நீர்வளம்               

        இந்தியாவில் கடின பாறை வகைகள் பறந்து காணப்படுகின்றன இதன் மேற்பரப்பு நிலத்தடி நீர் வளம் மேற்பரப்பு நீர் வளத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்து காணப்படுகின்றது மொத்த நிலத்தடி நீர் இருப்பு தோராயமாக 198 மில்லியன் கன மீட்டர் ஆகும் இதில் நாம் வெறும் 41% நீரை பயன்பாட்டுக்கு உபயோகிக்கிறோம் இதற்கு முக்கிய காரணங்கள் மாறுபட்ட நிலமைப்பும் கடின நீர் தன்மையும் ஆகும் ஒவ்வொரு வருடமும் நிலத்தடி நீர் வளத்துக்கு 670 கன கிலோமீட்டர் மழை நீர் கிடைக்கின்றது இதே அளவு நிலத்தடி நீரை நம் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம் மேலே குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எடுத்தால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் வளம் குறைந்து அல்லது வற்றி போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.


தமிழ்நாட்டின் நீர் வளம்
               

        தமிழ்நாட்டில் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வளம் மிகக் குறைவாக காணப்படுகின்றது ஆனால் விவசாய மற்றும் அதைச் சார்ந்து தொழில்களுக்கு நீர் மிகுதியாக தேவைப்படுகின்றது இதன் காரணமாக நமது மாநிலத்தில் நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நீரை பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்துகின்றது அதாவது தோராயமாக 92 சதவீத மேற்பரப்பு நீர் மற்றும் 60% நிலத்தடி நீர் பல்வேறு உபயோகங்களுக்காக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.


மனிதனின் நீர் தேவைகளும் பயன்பாடுகளும்               

    மனிதனின் அன்றாட தேவைகளுள் நீர் இன்றியமையாத ஒன்றாகும். நீர் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 350 கன கிலோ மீட்டர் நீரானது மனிதனுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதில் சுமார் 75% நீரானது மனிதனின் உணவு உற்பத்திக்கு தேவைப்படுகின்றது.
               

      விவசாயத்திற்கு அடுத்தபடியாக மின் உற்பத்திக்கு 6.2% தொழிற்சாலைகளுக்கு 5.7% நீரும் பயன்படுத்தப்படுகின்றது மனிதனின் அன்றாட தேவைகளுக்காகவும் கால்நடை பராமரிப்புக்காகவும் 4.3 சதவீத நீர் செலவிடப்படுகிறது மீதமுள்ள 1.3% நீரானது நீர் போக்குவரத்து நீர் மின் உற்பத்தி மீன் வளர்ப்பு சுற்றுலா போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது இவ்வாறெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த நீரை மாசுபடுத்துவதால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.


நீரின் மதிப்பு           

      நீ இயற்கை வளங்களில் ஒன்றாகும். இது இயற்கை தந்த கொடையாக கருதப்படுகிறது. மனிதனின் அனைத்து செயல்பாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நீரின் மதிப்பு என்பது அதில் இருக்கும் வளங்களை பொறுத்தது அல்ல ஆனால் நீரை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மேலாண்மையை பொறுத்து அமைகிறது இப்படிப்பட்ட நீரின் மதிப்பை உணராமல் பயன்படுத்துவதால் மாசடைகிறது நீரின் மாசு நேரிடையாக வாழும் உயிரினங்களை பாதிக்கின்றது.


நீர் மாசுபடுதலை தடுக்கும் சட்டம்
               

     கிபி 1974 ஆம் ஆண்டு நீர் சட்டம் இயற்றப்பட்டது. நீரின் தன்மையை நிலை நிறுத்தவும் மற்றும் மாசு  அடையாது தடுக்கவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நிபந்தனைகளான வெளி அமைப்புகள் மாசுபடுதல் சாக்கடை கழிவுகள் ஓட்டை வணிக கழிவுகள் போன்றவை பற்றியும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன இந்த  நிபந்தனைகளுக்கு உட்படாமலும் மனசாட்சிக்கு பயப்படாமலும் செய்யும் செயல்களால் தான் நீர் மாசடைகிறது.


நீரும் மனித நலனும்
               

     மக்களின் உடல்நலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தின் தூய்மை பொருத்தே அமையும். தூய்மையான இந்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் பல நோய்கள் மனித நலனின் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன மனித சுற்றுச்சூழலில் ஏற்படும் சில குறிப்பிட்ட மாற்றங்கள் பல நோய்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றன.
 

              இந்த வகையான மாற்றங்களில் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் மனித உடல் நலனின் பலவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக. நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் மனிதச் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு தொற்று நோய்களின் நோய் பரப்புகளுக்கு சொர்க்கமாக மாறுகிறது. அத்தகைய அதிரடி மாற்றம் நமது சூழலாகிய காற்று நீர் உணவு ஆகியவற்றை மாசுபடுத்தி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கிறது.


நீரை பற்றிய விழிப்புணர்வு
               

     நீரை பயன்படுத்தும் விதம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றால் நோய் உண்டாகும் அபாயம் உருவாகும். பொதுவாக வளரும் நாடுகளில் 80 சதவீத நோய்கள் நீரினால் தோன்றி பரவக்கூடியவை. மனிதக் கழிவினால் ஆறுகள் 90% மாசடைகிறது.
                நமது நாட்டிலேயே கேரளாவின் இறப்பு சதவீதமானது தேசிய சராசரிக்கு கீழ் உள்ளது. இதற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் கல்வி அறிவும் சுற்றுச்சூழ்நிலை சுகாதாரமும் ஆகும்.
 

நீரால் பரவும் நோய்கள்
               

      மலேரியா யானைக்கால் மூளைக்காய்ச்சல் காலரா போன்ற எண்ணில் அடங்கா நோய்கள் பரவும் நிலை உயர்ந்துள்ளன. பின் நோய்கள் பரவுவதற்கு பூச்சிக்கொல்லிக்கும் நீர் பாசன நீருக்கும் இடையே சில ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளன. இவை நவீன விவசாயத்தின் எதிர்மறை விளைவுகளாகும். நோயை உண்டாக்கும் காரணிகளுக்கிடையேயான எதிர்ப்பு ஆற்றல் தண்ணீர் தேக்கம் மற்றும்  ஒப்பு அடர்த்தியாகியென உயர்ந்துள்ளன இவை நீரினால் பரவும் நோய்களுக்கு ஏதுவாக இருக்கின்றன
.

நீரை மாசுபடுத்தும் காரணிகள்
               

      இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது ஆகும். அதன் உயிரியல் வேதியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் மாசுபடுவதையே நீர் மாசுபடுதல் என கூறுகிறோம். இந்த வகையில் மாசுபடுத்தும் காரணிகள் என்று எடுத்துக் கொண்டால் வீட்டு சாக்கடைகள். தொழிற்சாலை கழிவுநீர் விவசாயக் கழிவுகள் மிதவை உயிரிகளின் வளர்ச்சி டிடர்ஜெண்டுகள் கன உலோகங்கள் வெப்பம் கதிரியக்க தனிமங்கள் என்னை போன்றவைகள் ஆகும் .


மனித நலனில் நீரின் பங்கு
               

       குடிநீர் மற்றும் அன்றாட பயன்படுத்தும் நீரானது தரக்கட்டுப்பாட்டுடன் நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகள் மற்றும் மனித நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் வேதிப்பொருட்கள் இன்றி இருக்க வேண்டும். பூமியின் நிலத்தடியில் கிடைக்கும் நீர் நகரத்தில் குடியேறிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. நிலத்தடி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும்  குடிநீரானது சாக்கடை வீட்டு கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் அடிக்கடி மாசுபடுகிறது. தொழிற்சாலை கழிவுகள் வேறுபட்ட நச்சு கரிம கனிம மாசுகளை கொண்டிருப்பதால் இவை எளிதில் சிதைவதில்லை.
               

       குடிநீர் மலங்கலால் மாசுபடுவதே சில முக்கிய நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. உதாரணமாக டைபாய்டு காலரா பாக்டீரியா வயிற்றுப்போக்கு உட்காய்ச்சல் இரைப்பை குடல் சார்ந்த ஒவ்வாமை நோய்கள் சல்மோநெல்லா சேப்டிசீமியா போன்றவை மலக் கழிவுகளால் பரப்பப்படுகின்றன என்பதை உணர வேண்டும்
.

முடிவுரை
               

     நீரின் முக்கியத்துவம் அவற்றின் பயன்பாடு மற்றும் நீர் ஆதாரங்களில் ஏற்படும் மாசுக்களால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதை இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித இனத்தின் விழிப்புணர்வு அற்ற தன்மைகளாலும் தொழிற்சாலையின் வளர்ச்சியினாலும் நீர் மாசடையும் விதம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும் விவரிக்கப்பட்டவைகளின் நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்து எதையும் முன்னெச்சரிக்கையோடும் அளவோடும் பயன்படுத்தினால் மனித குலத்திற்கு நன்மை உண்டாகும்.


சான்றாதார நூல்கள்

1.சுற்றுச்சூழல் அறிவியல் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிப்பு.


2.சுற்றுச்சூழல் கல்வி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிப்பு.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ந.தர்மராஜ்


இணைப் பேராசிரியர்,

செயின்ட் ஜோசப் கல்லூரி(கலை மற்றும் அறிவியல்)
,

கோவூர், சென்னை.

 

என் சுவாச மரமே|ம.அநிஷா நிலோஃபர்

என் சுவாச மரமே ம.அநிஷா நிலோஃபர்

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்|முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்_முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

♟️ வானம் 


மேகக் கூட்டங்களை வைத்து
ச்

சிலுவைப்பாதை நிகழ்த்துகிறது!


 

♟️பறவையின்
அலகுகளாய்

ஆணிகள்!


 

♟️ஆணியை


ஒற்றை அடியில் 


இறக்கும் சுத்தி!


 

♟️அழகான


முட்களாலான கிரீடம்!


 

♟️அறையப்பட


வழுவழுப்பான சிலுவை!


 

♟️மேலெழுப்பிட


சொரசொரப்பான கயிறு!


 

♟️காயங்களைத்


தொட்டு முத்திக்க


சாரை சாரையாகக் கூட்டம்!


 

♟️திரண்டு திரண்டு

வரும்
முகில்கள் !


 

♟️காற்றின் கைகளால்


மாரடித்துப் புலம்புகின்றன!


 

♟️தந்தையின் கையில்


ஆவியை ஒப்படைக்க


எதிர்பார்க்கும் கண்கள் !


 

♟️வானமெங்கும்


தென்படுகின்றன

தளர்தசைக்காய் !


 

♟️எச்சூரியவாறு 


மெல்ல நகரும் முதலைகள்!


 

♟️ஆடைகளைப்


பங்கிட்டுக் கொள்வோர் 


சூழ்ந்து நிற்கின்றனர்!


 

♟️இப்படி 


சுற்றம் சூழ


வருகை தந்து

எல்லோருக்கும்


எல்லாமுமான


அநாதி அன்பை


கொள்ளையாட நிற்கையில்


இரண்டு பக்கமும் 


கள்வர்களாக மரிக்க


ஆளில்லாமல் 


கலைந்து தேடச் சென்றது 


மேகக் கூட்டம்!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் அ எபநேசர் அருள் ராஜன் 

உதவிப் பேராசிரியர் 

தமிழ்த்துறை 

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி)

 சிவகாசி

 

இப்படிக்கு மழை!|சி. தெய்வானை  சிவகுமார்

இப்படிக்கு மழை_சி. தெய்வானை சிவகுமார்

💧மழையாக! 


நிலத்தில் விழுந்து,


பல காடு மேடுகளைக் கடந்து,


பள்ளங்களைக் கடந்து


வேகமாக உருண்டோடும்


என்னில் – பல அழுக்குகளையும்


சேர்த்துக் கொண்டே செல்கிறேன்..!


 

💧நான் போகும் வழியோ,


என்னை முள்ளாகத்

தாக்கி கிழிக்கிறது!


அனைத்தையும்


பொறுத்துக் கொண்டு


ஓடிக்கொண்டே இருக்கிறேன்..!


 

💧நான் போய்


சேருமிடமோ சமுத்திரம்


பல காடு மேடுகளைக்


கடந்து வந்த எனக்கு


சமுத்திரத்தின்


ஆழத்தைக் கண்டு பயம்..!


 

💧ஏனென்றால்


நான் கொண்டு வந்த


அழுக்குகளை விட


சமுத்திரத்தின் ஆழத்தில்


எண்ணிலடங்கா


அழுக்குகள் உள்ளதைக் கண்டு,


மழையாக


இந்த பூமிக்கு வந்தபோது


என் சுவையோ வேறு!


 

💧ஆனால்


தற்போது நான்


சேர்ந்த இடமோ


என்னையும்


அதன் சுவைக்கு ஏற்றவாறு


மாற்றிவிட்டது.


 

💧இப்படி


மேடு பள்ளங்களையும்


ஏற்ற இறக்கங்களையும்


பல குப்பைகளையும்


என்னோடு


பயணித்துக் கொண்டு


அடித்து வந்த என்னையும்,


சமுத்திரம்


அதன் சுவைக்கு ஏற்றவாறு


மாற்றிவிட்டது..!


 

💧இவ்வுலகத்தில்


பயணிக்கும்


மக்கள் அனைவரும்


வெவ்வேறு குணங்களோடு


வருகிறார்கள்..!


 

💧 இறுதியாக


அவர்கள் தேர்ந்தெடுக்கும்


தொழிலோ!


கல்வியோ!


இப்படி ஏதோ,


ஒரு துறையில்


பயணிக்கும் போது


தன் நிலையில் இருந்து மாறி


அவர்களுக்கு


ஏற்றார் போல் மாறி விடுகின்றனர்,


என்பதை விட மாற்றி விடுகிறார்கள்


என்பது நிதர்சனமான உண்மை


இப்படிக்கு மழை..!


கவிதையின் ஆசிரியர்

சி. தெய்வானை  சிவகுமார்,
 

உதவி பேராசிரியர்,  

தமிழ்த்துறை,


ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


பர்கூர்,

கிருஷ்ணகிரி.

 

காதலாய் ஒரு முத்தம் | வெ. கெளதம்

காதலாய் ஒரு முத்தம் வெ. கெளதம்

 

காதலாய் ஒரு முத்தம்!

💋 காதலிக்கும் போது
 

ஒரு வேலையும் தெரியாது உனக்கு
 

எனக்காக கற்றுக் கொண்டாய் 
 

திருமணமானதும் எனக்காக..!


 

💋 வீட்டில் நீ பாவம்


காத்திருக்கும் அழுக்குத் துணிகள்
 

கழுவாத பாத்திரங்கள்


அடுத்த வேலை – சமையல் 
 

எனக்கும் பல பணிவிடைகள்
 

குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும்


பல பணிவிடைகள் செய்தாய்..!
 

 

💋 நான் உன்னை


பாதி இரவில்


விழித்துப் பார்த்தால்
 

களைத்துப்  போய்


குழந்தைப்  போல
 

உறங்கிக் கிடப்பாய்..!


 

💋 Sorry
 !

உன்னை அறியாமல்


தூங்கும்பொழுது


ஒரு முத்தம் கொடுத்து


தூங்கி விடுகிறது
 

என் காமம் (காதல்)
 

பல இரவுகளில்…!


 

பேருந்து பயணத்தில் !


🚌 உனக்கு தெரியாது
 

நாம் அருகருகே  அமர்ந்து
 

நெடுதூரம் பயணித்த போது
 

உன் காதல் பார்வையும்
 

உன் மூச்சுக்காற்றும்
 

ஓராயிரம் பூகம்பத்தையும்      


ஒட்டுமொத்த புயலையும்
 

உள்வாங்கியது போல


உணர்ந்தேன்..!
 

 

🚌 நீ பார்க்கும் இடங்கள்


உன் பார்வைகளை


நேரில் வாங்கத்


திறமை இல்லாமல்


திக்கு முக்காடிப் போனேன்..!
 

 

🚌 கதைப்  புனைகளையும் பேசி
 

ஜன்னலுக்கு வெளியே பார்த்தும்


எனக்கு தெரியாமல்
 

என்னை ரசிப்பதும்


கைகள் கோர்க்க ஆசை தான்


அதற்கு முதலில் ஏங்கியது


இருவரின் விரல்கள்..!
 

 

🚌 தோள்களில் 


சாய்ந்து கொள்ள


தலை ஏங்கியது 


அனைவரும் உள்ளார்


எனக் கண்கள் தயங்கியது


இறங்குமிடம் வந்தவுடன்


மீண்டும் தொடரக்கூடாதா 


இந்த பயணம் என்று


ஏங்கிய இதயங்கள்
 

இறங்கியவுடன்


மீண்டும் இந்த பயணம்


எப்போது  எனக் கேட்க துடிக்கும்

உதடுகள்..!


 

🚌 போகும்போது 


பார்க்கும் அந்த நொடிகள்


இமைகளுக்கும்  ஓய்வில்லாமல்


அந்த ஒரு நொடி


பயணத்தில்


நினைத்தேன்  


நீயே எனது வாழ்க்கை


பயணம் என்று..!


கவிதையின் ஆசிரியர்

வெ. கெளதம்


துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்


தமிழ்த்துறை


சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி


விஜயமங்கலம்

 

மகுடம் சூட்ட மார்க்கம் உண்டு! | நவநீதனா ச

மகுடம் சூட்ட மார்க்கம் உண்டு! நவநீதனா ச

👑 திங்களிலே பிறந்தவளாய்,


தென்பொதிகைச் சீமாட்டி!…


 

👑 மையலிலே திளைத்தவளாய்,


அவளுக்காக இவள்!…


 

👑 சீமையிலும் சிங்காரியாய்ச்


சீமாட்டியவள், பைந்தமிழே!…


 

👑 தாலாட்டிச் சீராட்டி,


தங்கமென வளர்ப்பாளை,


 

👑 தங்கசிங்க ஆசனத்தில்,


கம்பீரத் தோற்றத்திலே,


 

👑செங்கமல நாயகிபோல் 


செந்தாமரைத் தடக்கையால் 

 

👑 தாங்கித் தாங்கியே!


சிற்றுளியாய் வெற்றிகளைப்


 

👑பொழிந்திடும் அன்னைக்கு 


மணிமகுடஞ் சூட்டலிலே,


 

👑 மாணிக்க ரத்தினமாய் 


மாளா(றா)த காதலினால் 

 

👑 செம்பிராட்டி ஒளிர்வாளே!


சொக்கத் தங்கங்களாய்!…


 

👑 கோடிகள் கூறினாலும்,


கோபுரத்தில் ஏற்றினாலும்,


 

👑 செம்மொழியாள் அவளிற்கு 


உவமைகள் சொல்வதிலே,


 

👑கோடிகளாய்த் தயக்கங்களே!


இணையாகா இன்பத்திற்கு,


 

👑 இணையான உவமை கூற


வேறென்ன மொழியிலடீ?!


 

👑 உம் குழவி தேடிடுவாள்,


பேருவமைகளை!!…


 

👑 திகட்டாத் திரவியமாய்,


திரண்டு நிற்பதிலே 


உமக்கென்ன அத்துனை ஆனந்தம்?!


 

👑 உவமைக்கு உருவகமாய் 


அணிகளாவது சொல்லிவிடு!


 

👑 எம் பெயரிணைக்காப் புத்தகமாய்,


உம் பெயரிலே, 


 

👑 பரிசு விழைகிறேன்! காதல் கூறாக் கவியே!!…

 

கவிதையின் ஆசிரியர்

நவநீதனா ச


கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

Elakana Paadanool Uruvaakathil Nanool Perum Idam|Dr.G.Vijayakumari

இலக்கணப் பாடநூல் உருவாக்கத்தில் நன்னூல் பெறும் இடம்

Abstract

                After the arrival of the Europeans, the textbooks were taught based on Nunnool.    Grammar Question, Grammar Summary, Grammar, Grammar, Grammar, Grammar, Grammar, Children’s Word Grammar, Balance Grammar, Preschool Grammar, Balapadam, the grammar question, grammar, grammar, grammar, grammar, grammar, grammar, grammatical, grammar, preschool grammar, preschool grammar, Palapadam. Scholars who praised the excellence of grammar have been attributed to many reasons for the nineteenth -century. The textbooks written by Visakha Perumalaiyar, Mazhavai Mahalingaiyar, Arumuga Navalar, G. U. Pope, etc., the authors who wrote the grammar textbooks, the importance of the above-mentioned four scholars, and the textbooks written by them have been examined in detail in this article.

இலக்கணப் பாடநூல் உருவாக்கத்தில் நன்னூல் பெறும் இடம்

 ஆய்வுச்சுருக்கம்

     ஐரோப்பியர்கள் வருகைக்குப் பிறகு அக்காலத்தில் பாடநூல்கள் நன்னூலை அடிப்படையாக கொண்டு பாடம் கற்பிக்கப்பட்டன. மாணவர்கள் எளிமையாக கற்றுக் கொள்வதற்கு இலக்கண வினா விடை, இலக்கண சுருக்கம், இலக்கண நூலாதாரம், இலக்கணச் சிந்தாமணி, இலக்கணத் திரட்டி, இளைஞர் பயில் இலக்கணம்,  சிற்றிலக்கியம், சிறுவர் சொல் இலக்கணம், பால போத இலக்கணம், பாலர் இலக்கணம், பாலபாடம் ஆகிய தலைப்புகளில் நூல்களைச் சுருக்கி தரப்பட்டுள்ளது. இலக்கணத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாராட்டிய அறிஞர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நன்னூலுக்கு பல உரைகள் தோன்ற காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

                விசாகப்பெருமாளையர்,        மழவை மகாலிங்கையர், ஆறுமுக நாவலர், ஜி யூ போப் முதலானவர்கள் இயற்றிய பாடநூல்கள் பற்றியும் இலக்கண பாடநூல் இயற்றிய ஆசிரியர்களையும் மேற்குறிப்பிட்ட நான்கு அறிஞர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் இயற்றிய பாட புத்தகங்கள் குறித்தும் விரிவாக இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

முன்னுரை

   தமிழ்க்கல்வி வரலாற்றில் நன்னூல் ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். அக்காலக் கல்வியை அறிந்துகொள்ள உதவும் இந்நூல் பவணந்தி முனிவரால் பதிமூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நன்னூல் அனைவராலும் எளிமையாக படிக்க முடியாது என்பதால் இலக்கண வினா விடைகளும், இலக்கணச் சுருக்கப் பதிப்புகளும், காண்டிகையுரைகளும், விருத்தியுரைப் பதிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. ஐரோப்பியர் காலத்தில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், அரசாங்கப் பள்ளிகளிலும், அரசாங்க ஆதரவுபெற்ற பள்ளிகளிலும் நன்னூல் கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதனால் பல பாடநூல்கள் உருவாக்கம் பெற்றன.


இலக்கண பாடநூல்கள்

     பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கணம் முழுமையாகக் கற்றுத்தப்பட்டது. அந்தப் பாடநூல்கள் பல்வேறு தலைப்புகளில் இயற்றப்பட்டன. அவை இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, இலக்கண நூலாதாரம், இலக்கணச் சிந்தாமணி, இலக்கணத் திரட்டு, இளைஞர் பயில் இலக்கணம், சிற்றிலக்கணம், சிறுவர் சொல் இலக்கணம், பாலபோத இலக்கணம், பாலர் இலக்கணம், பாலபாடம், முதலான தலைப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மூன்று நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நூல்களின் பட்டியல்களை வைத்துபார்க்கும்போது 1870க்கு பிறகுதான் அதிகமான பாடநூல்கள் இயற்றப்பட்டுள்ளன என்று தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் நன்னூலை அடியொற்றி இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்களில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், சொற்றொடர் அதிகாரம், தொடர்மொழி அதிகாரம், பிரயோகவியல், ஒழிபியல், அனுபந்தம், பகுபதமுடிபு, சூசனம் எனும் இயல்களில் நன்னூல் இலக்கணம் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருசில நூல்களில் மட்டும் நூற்பா எண் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற நூல்களில் உரைநடை வடிவம், வினா விடை வடிவம், எடுத்துக்காட்டு, சூசனம், அனுபந்தம், பயிற்சி வினா, பகுபதமுடிபு, நிறுத்தற்குறி, இயல்கள் மாற்றம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
 

   பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் ஏற்றாற்போல் இலக்கணச் சுருக்க நூல்களில் இயல்களைச் சுருக்கி இயற்றியதாகவும் மழவை மகாலிங்கையர், விசாகப்பெருமாளையர் கூறிய முன்னுரைகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. நன்னூலார் கூறாத எடுத்துக் காட்டுகள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜி. யூ. போப்பையர் எழுதிய நூல்களில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் புதுமையாகவும் எளிமையாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.

   மொழியறிவைப் புரிந்து கொள்ள நன்னூல் ஒரு முக்கியமான இலக்கண நூலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்பட்டது.
தொடக்கக் காலப் பள்ளிக்கூடங்களில் அடிப்படையான இலக்கணம் மட்டும் போதிக்கப்பட்டது. அவை சிறுவர் சொல் இலக்கணம், நவமணி இலக்கணம், அரிச்சுவடி, நவமணி  திரட்டு, குழந்தைகளுக்கான இலக்கணம், வாக்கிய இலக்கணம் என்ற பெயர்களில் இயற்றப்பட்டிருந்தன.
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலக்கணம் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தால் ஆசிரியர்கள் இலக்கண நூல்களைச் சுருக்கமாகவும் ,வினா விடை முறையில் இயற்றினார்கள் என்றும் நூலாசிரியர் இயற்றிய முன்னுரை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆறாம் வகுப்புகளுக்குப் பாலபாடம், இலக்கண வினா விடை, இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன.


      பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர். இவர் 1852ஆம் ஆண்டில் மாணவர்களுக்காக தாம் எழுதிய பாலபோத இலக்கணம் நூலின் பாயிரத்தில் உரைநடை நூல்கள் ஏன் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடுகிறார்.
இலக்கண இலக்கியக் கணிதப் பூகோளக் ககோளாதி நூல்களையெல்லாம் இக்காலத்து இத்தேசத்தை யாளுகின்ற இங்கீலீஷ் காரர்களும், அவர்கள் வசிக்கும் கண்டத்திலுள்ள ஏனையயோர்களும் செய்யுளில் இயற்றிக் கற்பிப்பவதை விட்டு, வசனங்களிலே தெளிவுற இயற்றிச் சிறுவர்க்குக் கற்பித்துக் கொண்டு வருகின்றனர். அதனால் அக்கண்டத்தில் வாழும் சிறுவர்கள் சில நாட்களிலே பல நூல்களைக் கற்றுப் பல விஷயங்களையும் உணர்ந்து பல தொழில்களையும் இயற்றும் திறமுடையராகின்றனர்.
இத்தேசத்தார் இந்நூல்களை யெல்லாம் செய்யுளில் செய்து அவற்றிற்குச் சில சொற்களால் உரையியற்றிச் சிறுவர்க்குக் கற்பித்து வருகின்றனர்.

     இவ்வாறு செய்யுளில் இயற்றப்பட்ட நூல்கள், நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றன்றிக் கற்கப்படாவாம். ஆகவே, அவற்றுள் ஒரு நூலைக் கற்பதற்கு நெடுநாள் செல்லுகின்றது. செல்லவே பல நூல்களைக் கற்றுணர்ந்து எந்தொழில்களையுஞ் செய்யத் தக்கவர்களாவது அரிதாம்.
இதனால் இந்நாட்டுச் சிறுவர்கள் தங்கள் வாழ்நாட்கள் வீழ்நாட் படாமற் சில நாட்களில் அப்பல நூல்களையும் கற்றறிந்து எத்தொழில்களையும் செய்யத் தக்க வல்லாமை அடைவதற்கு. அந்நூல்களையெல்லாம் உலக வழக்கியற் சொற்களால் உரை வசனமாகத் தெளிவுறச் செய்து கல்விச் சாலைகளிலே உபயோக முறும்படி செய்தல் நன்று (விசாகப்பெருமாளையர்: 1834: 31.
என்று பாலபோத இலக்கண நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  இலக்கண பாடப்புத்தகம் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டதற்கு இதுவே போதுமான சான்றுகள். நான்காம் வகுப்பு மாணவர்களுக்கும் எளிமையாகப் புரியும் வகையில் இந்த இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் நன்னூலுக்குப் பல உரைகள் தோன்ற காரணங்கள்

        பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாயின அப்பொழுது நிறுவனங்கள் சார்ந்த கல்வி பரவலாக்கப்பட்டது. 1867க்கு பிறகுதான் தமிழ் இலக்கணப் பாடப்புத்தகங்கள் அரசாங்கச் சட்டபடி பாடத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டன. பாடத்திட்டம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே தமிழ் இலக்கணப் பாடநூல்கள் தோற்றம் பெற்றன. அரசாங்கச் சட்டமாக்கப்பட்ட பிறகு இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
பொதுவாக இலக்கணப் பாடம் எளிய உரையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி நன்னூலுக்குச் சுருக்க நூல்கள் தோற்றம் பெற்றன. நன்னூல் காண்டிகையுரை, விருத்தியுரை கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டன.
நன்னூலுக்குப் பல சுருக்க உரைகள் தோன்றுவதற்கான காரணங்களை இலக்கணக் கொத்து நூலிலும், சங்கரநமச்சிவாயர் உரைப்பதிப்புகளிலும், உ.வே. சா. என் சரித்திரத்திலும், பவானந்தம் பிள்ளையின் நன்னூல் காண்டிகைவுரைகளிலும் அறிந்துகொள்ளமுடிகிறது.


                பல உரைகள் ஒரு நூலுக்கு எழுதப்படும்போது அந்நூல் பெருமை பெறுகிறது. இவ்வாறு பெருமைபெற்ற நூல்களுள் ஒன்று நன்னூல், நன்னூலுக்கு உரைகள் பல்கியமைக்குப் பிறிதொரு காரணமும் இருக்கிறது. சமயப் போட்டியின் விளைவாகவும், நன்னூலுக்கு உரைகள் எழுதப்பட்டன. தொல்காப்பியம் உரை பல பெற்றதற்குக் காரணம், புரியாமை, நன்னூல் உரை பல பெற்றமைக்குக் காரணம், சமயப் போட்டி நன்னூல் பழைய உரை சமணச் சமயச் சார்பானது. சமணர் உரையால் நன்னூலும் உட்பட்டது (அறவாணன்: 1977: 84,85).
என்று நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றுவதற்குக் காரணம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கணப் பாடநூல்கள் அச்சிடப்பட்டதால் நன்னூக்கு மட்டும் பல உரைகள் எழுதப்பட்டன. மேலும்,
ஐரோப்பியர்களும், கத்தோலிக்க, புரொட்டஸ்டண்டு கிறிஸ்தவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில், நன்னூல் மொழி பெயர்ப்புகளையும் பதிப்புகளையும் வெளியிட்டார்கள், அவ்வெளியீடுகள் அனைத்தும் சமயப் போட்டியின் விளைவுகள் அல்ல. எனினும் சமய நலனையும் ஓரளவு கருத்தில் கொண்டு அவை வெளியிடப்பட்டன. சமயத் தொண்டிற்காக வருகின்ற பாதிரிமார்கள் உள்நாட்டு மொழியைப் பயில வழிகாட்டியாக அவை ஆக்கப்பட்டன.

        இவ்வாறு சமய ஆர்வத்தால் மட்டுமன்றி, பிறிதொரு வகையாலும் நன்னூல் உரைகளும், பதிப்புகளும் தோன்றின. இவ்வாறு தோன்றினதற்கு தன்மைக் காரணம், அக்காலத்தில் தோன்றிய கல்வி நிறுவனங்களே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதியில் பள்ளியளவிலும். கல்லூரி அளவிலும் நன்னூல் பாட நூலாக்கப்பட்டது. இவற்றின் நோக்கம் நன்னூலில் கூறப்படுகின்ற செய்திகளை எளிமையாக்கிப் புரிய வைப்பதே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்காரணம் பற்றியே நிரம்பப் உரைகள் வந்தன என்பதை விட, நிரம்ப பதிப்புகள் வந்தன எனலாம் இவை பெரும் பாலும் வணிக நோக்கில் வெளியானவை (தனிநாயகம் அடிகளார்: 1999: 15).
என்று பள்ளிகளில் நன்னூல் பாடமாக்கப்பட்டதையும், உரைகள் பல தோற்றம் பெற்றதற்குக் காரணம் அக்காலத்தில் தோன்றிய கல்வி நிறுவனங்களே என்றும் மேலே கூறியதன் மூலம் அறிந்துக் கொள்ளமுடிகிறது.


இலக்கணத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாராட்டிய அறிஞர்கள்

           மொழியின் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் முழுமையாகக் கற்றுக் கொள்வதற்கு இலக்கணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழில் ஏறத்தாழ எழுபத்திரண்டு இலக்கண நூல்கள் தோன்றின. இவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பற்றி பேசுவது இவற்றுள் ஏறத்தாழ முப்பத்து மூன்று இலக்கண நூல்கள் மறைந்து விட்டன (தனிநாயகம் அடிகளார்: 1999:15)
மேற்கண்ட மறைந்த இலக்கண நூல்களின் பெயரும் சிற்சில நூற்பாக்களுமே இன்று கிடைக்கின்றன. இவைபோக எஞ்சிய முப்பத்தொன்பது இலக்கண நூல்களில் மிகச் சில நூல்கள் மட்டும் இன்று பாராட்டப்படுகின்றன. அவ்வாறு பாராட்டப்படுவனவற்றுள் நன்னூலும் ஒன்று.
நன்னூற் பொருளையும், பெயரையும் தம் நூலில் தக்க இடத்தில் அமைத்துப் பாராட்டிய இலக்கியங்கள் பல. அவை புரபுலிங்கலீலை, திருவெங்கையுலா, திருத்தணிகையுலா, கோடிச்சுரக் கோவை, தமிழ் விடு தூது என்பன (Subramanian:1975:2)
நன்னூல் பற்றிய புகழ்மொழிகள் என்ற தலைப்பில் இலக்கணத் தேவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தின் வழித் தமிழ்த்தேர்வு நடத்திய ஐரோப்பியர், நன்னூலைக் கட்டாயப் பாடமாக அமைந்திருந்தனர். என்றி பவர் (1876), எச். ஸ்டோக் (1830), வால்றர் சாய்சு (1858), டி. பிரதர்டன் (1848), டாக்டர் ஜி.யூ. போப்பையர் (1857) ஆகியோர்கள் இந்நூலைப் புகழ்ந்து போற்றினார்கள்.
ஆங்கிலத்தில் பல்லோராலும் மொழிபெயர்க்கப் பட்ட முதல் இலக்கண நூல் இதுதான். டாக்டர் கால்டுவெல் நன்னூலையே தம் ஒப்பிலக்கண ஆய்வுக்கு மேற்கொண்டார்.

      இருபதாம் நூற்றாண்டு மொழியியல் ஆய்விலும் நன்னூல் அறிவியல் முறையில் அமைக்கப்பட்ட இலக்கணம் என்று பாராட்டப்படுகிறது (அறவாணன்: 1977: 44).
நன்னூல் இலக்கணம் இத்துணைச் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
டாக்டர் போப்பையர் உரை (கி.பி. 1857) பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் போப்பையரின் பெருமை தமிழ்நாட்டில் விதானமிட்டது. அவர்தம் இலக்கண நூல் ஒவ்வொரு மாணாக்கர் கையிலும் பொலிவதாயிற்று. யான் முதன் முதல் பயின்ற இலக்கணம் இவருடையதே. என்பது தமிழ்த் தென்றல் திரு. வி. க. வின் பொன்னுரை. (அறவாணன் :1977: 210)
இலக்கண வினா விடை நூல் இயற்றியதில் ஜி.யூ.போப்பையர் உரைபணி தற்றிய சிறப்புக் குறியதாகப் போற்றப்படுகிறது.
நன்னூல் இத்துணைச் சிறப்புகள் பெறக் காரணங்கள் எவை? சொல்காப்பியர் 946 நூற்பாக்களில் 2046 அடிகளில் கூறிய செய்திகளைச் சுருக்கி விளக்கம் குன்றாமல் 462 நூற்பாக்களில் 1029 அடிகளில் கொடுத்தமை நூலை நடத்திச் செல்லும் முறை தருக்க நெறிக்கு உட்பட்டு இருக்கின்றமை எளிதில் மனதில் பதியும் பாங்கு கொண்ட நூற்பா அகவல் யாப்பில் நூலை ஆக்கியமை, நூற்பாவில் ஆளப்பட்ட சொற்கள் இல்லாமலும் அரிய சொற்களாய் இல்லாமலும் அமைந்தமை. நூற்பா அடிகள் பல்காமல் சொற்கள் பல்காமல் பெரும்பான்மையான நூற்பாக்கள், மூன்று நான்குவரிகளுக்கு மிகாது, திட்ப நுப்பம் செறிந்து விளங்குகின்றமை, தமிழ் மொழி மரபுகளைப் புறக்கணியாமலும், புதிய செய்திகளைப் புறக்கணியாமலும் வேற்றுமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமலும் அமைந்தமை (அறவாணன் :1977: 44).
என்று நன்னூல் இலக்கணப் பாடநூல்கள் அமைந்தமைக்குச் சிறப்பு காரணங்கள் என்று கூறமுடிகிறது.
   

துணைநூல் பட்டியல்கள்

1.அரவிந்தன் மு.வை 1968 உரையாசிரியர்கள் சிதம்பரம் மு.ப மணிவாசகர் பதிப்பகம் சென்னை.

2.அறவாணன் க.ப. 1977 எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் சென்னை பாரி நிலையம்

3.ஆறுமுகநாவலர் – நன்னூற் காண்டிகையுரை பவணந்தி முனிவர் பகுதி-2

     

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஞா. விஜயகுமாரி


உதவிப் பேராசிரியர்


அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி


மீனம்பாக்கம் சென்னை -61

 

பச்சோந்தி மனிதர்கள்| முனைவர் இரா.செல்வராணி

பச்சோந்தி மனிதர்கள் முனைவர் இரா.செல்வராணி

பிரியமானதோழி|சிறுகதை|முனைவர் ஆ.கௌசல்யா

பிரியமான தோழி -முனைவர் ஆ.கௌசல்யா
     மூங்கில் தாங்கல் என்ற கிராமத்தில் சிறுவயது முதல் கவிதா காவியா இருவரும் தோழிகள். கவிதா அறிவுநுட்பம் நிறைந்தவள்  காவியா கொஞ்சம் வெகுளியானவள்.  கவிதா என்ன சொல்கிறாளோ அதை அப்படியே கேட்டு நடப்பவள்.
           
காவியா பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினாள் கவிதாவோ ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தாள். காவியா அன்றாட நிகழ்வுகளைக்  கவிதாவிடம் கூறி அவள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடக்கக்கூடியவள். ஒரு நாள் பள்ளியில் காவியா வகுப்பு முடித்து விட்டு வந்தாள் அவளை அழைத்த தலைமை ஆசிரியர் எந்த காரணமும் இல்லாமல் கடுமையாகத் திட்டுகிறார் காவியாவுக்கு ஒன்றும் புரியவில்லை வருத்தத்துடன் வீடு திரும்பியவள் கவிதாவிடம் பள்ளியில் நடந்ததைக் கூறி மிகவும் வருந்துகிறாள். அதற்கு கவிதா வருந்தாதே உன் தலைமை ஆசிரியருக்கு உன்னைப் பிடிக்காத காரணத்தால் அப்படி நடந்து கொள்கிறார். அதனால் நீ அவர் வியக்கும் வண்ணம் ஏதாவது செய் இதனை நினைத்து சோர்வடையாதே எஎன் காவியாவுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுகிறாள் கவிதா. காவியாவும் தோழியின் அறிவுரை படி நடக்க ஆரம்பிக்கிறாள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு தன் சொந்தக் கவிதையை வாசித்து பெரும் பாராட்டு வாங்குகிறாள் இதனைக் கேள்வியுற்ற தலைமை ஆசிரியர் காவியாவிடம் உனக்குள் இவ்வளவு திறமை இருக்கா என வியந்து பாராட்டினார் காவியாவுக்கு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள்.
மாலை வீட்டிற்கு வந்ததும் கவிதாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்கிறாள் . கவிதா ஏன் இவ்வளவு சந்தோசம் எனக் கேட்க பள்ளியில் தலைமையாசிரியர் தன்னைப் பாராட்டியதைக் கூறுகிறாள். கவிதா நான் தான் சொன்னேன் அல்லவா நீ ஏதாவது சாதித்துக் காட்டு அப்போது தான் உனக்குள் இருக்கும் திறமை வெளியில் தெரியும் இன்று திட்டுபவர் ஒரு நாள் பாராட்டி பேசுவார் என்று அதுதான் நடந்துள்ளது. கோவிலிலிருந்து வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் ஒரு வயதான அம்மா பசியால் வாடி வருவோர் போவோரிடம் சாப்பாடு கேட்கிறாள் அதனைக் கண்ட காவியா அந்த அம்மாவிற்கு கையிலிருந்த முப்பது ரூபாய்க்கு இட்லி வாங்கிக் கொடுத்து விட்டு இருவரும் வந்தனர். இதுபோலவே கவிதாவின் அறிவுரைகளைக் கேட்டு நல்ல வழியில் பல வெற்றிகளை அடைகிறாள். இவ்வாறே காலங்கள் கடந்தன.
ஒருநாள் காவியா பள்ளிக்குச் சென்று விட்டாள் அந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை கவிதா உடல்நலம் சரியில்லாமல் கம்பெனிக்குச் செல்லவில்லை தூங்கிக் கொண்டிருந்தாள் காவியா வீட்டிலிருந்து ஏதோ ஒரு சத்தம் கேட்டது கவிதா மெதுவாக எழுந்து சென்று பார்த்தாள் காவியாவின் அம்மா மயங்கிய நிலையில் கிடக்க உடனே கவிதா ஒரு ஆட்டோவில் அம்மாவை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குச் சென்றாள் அங்கிருந்த மருத்துவர்கள் சோதித்துப் பார்த்து விட்டு அம்மா ரொம்ப வீக்கா இருக்காங்க உடனே ஏ பாசிட்டிவ் இரத்தம் ஏத்த வேண்டும் என்கிறார்கள் கவிதா உடல்நலம் சரியில்லாமல் இருப்பதைப் பொருட்படுத்தாமல் தனது இரத்தமும் அதே வகை இரத்தம் தான் என இரத்தம் கொடுத்து காவியாவின் அம்மாவை காப்பாற்றி விடுகிறாள் மாலை வீட்டிற்கு வந்ததும் காவியா மருத்துவமனை சென்று தன் அம்மாவைப் பார்க்க 
           
அம்மாவும் நடந்ததைக் கூற காவியா கவிதாவை வியப்போடு பார்த்து உன்னைப் போல் ஒரு தோழி எனக்கு கிடைத்தது இறைவன் கொடுத்த வரம் என மகிழ்கிறாள்.பிறகு இருவரும் அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். என்றுமே இணைபிரியாமல் இருந்தனர்.

சிறுகதையின் ஆசிரியர்,

முனைவர் ஆ.கௌசல்யா 

உதவிப் பேராசிரியர்   
 
தமிழ்த் துறை   

   ஜெ.எச்.ஏ.அகர்சன் கல்லூரி 
சென்னை -60

 

இயற்கை சாரல்|ஹைக்கூ|ச. கார்த்திக்

இயற்கை சாரல் - ஹைக்கூ-கார்த்திக்

🌳எந்தவொரு பறவையும்


தன்னுடைய இருப்பிடத்தைத்


தேடி தேடிச் செல்கிறது!


 

🌳நான் எங்குச் சென்றாலும்


எனக்கு முன்


நிழல் செல்கிறது!


 

🌳மழை வந்தால்


ஏரிகள் நிறைவதல்ல


என் வீடு நிறைகிறது!


 

🌳பறவையின் கண்களுக்கு


மனிதன் எல்லாம்


சிறு எறும்பு போல்!


 

🌳புதைத்த பின்னர்


முளைக்கவில்லை


என் வீடு ஜீவன்!


 

🌳 தாயின் முகத்தில் அழுகை


காந்தியின் முகத்தில் சிரிப்பு


இந்த மருத்துவமனை!

 


🌳 மரத்தின் இலைகள்


பூமிக்குச் செல்லும் முன்


காற்றில் நடனமாடுகிறது!


 

🌳மரத்தைச் சுற்றி விழுந்த


இலைகள் காண்போம்


அதை மரத்தின்


துளிர்(கள்) காண்பதில்லை!

 


🌳கடலின் அலைகள்


என் கால் பாதத்தில்

முத்தம் மிட்டு செல்கிறது!


 

🌳கடலில் துள்ளிக்கொண்டிருக்கும்


மீன்கள்


என் வீட்டின் சமையலறையில்


வெந்துக்கொண்டு இருக்கிறது!


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),

திருப்பத்தூர்.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »