Saturday, April 4, 2026
Home Blog Page 15

நிகண்டுகளில் நெய்தல் நிலப் பெயர்கள் | முனைவர் கி. சுமித்ரா

நிகண்டுகளில் நெய்தல்நிலப் பெயர்கள் - முனைவர் கி. சுமித்ரா
யற்கையோடு ஒட்டி வாழ்ந்தவன் தமிழன். எனவே, தான் தொடக்கக் காலத்தில் உறைவிடங்களை அமைத்து வாழத்தொடங்கிய இயற்கை நிலங்களின் பெயர்களையே தான் அமைத்த இடப்பெயர்களுக்குப் பெயரடைகளாக அமைத்துள்ளான். திவாகர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, பாரதிதீபம் நிகண்டு, சூடாமணி நிகண்டு, கைலாச நிகண்டு, அபிதானமணிமாலை, ஆசிரிய நிகண்டு ஆகிய ஏழு நிகண்டுகளில் மட்டும் நெய்தல்நிலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஏழு நிகண்டுகளில் இடம்பெறும் இடப்பெயர்களில் ஒன்றான நெய்தல்நிலப் பெயர்களை மட்டும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

சமுத்திரத்தின் பெயர்
திவாகர நிகண்டு       
     
“அத்தி, பௌவம், அளக்கர், ஆர்கலி,       
ஆழி, பெருநீர், அம்பரம், முந்நீர்…” (878)
1. அத்தி, 2. பௌவம், 3. அளக்கர், 4. ஆர்கலி, 5. ஆழி, 6. பெருநீர், 7. அம்பரம், 8. முந்நீர், 9. உப்பு, 10. வீரை, 11. சக்கரம், 12. சாகரம், 13. வேலை, 14. வெள்ளம், 15. மகாலயம், 16. நேமி,  17. சலநிதி, 18. வாரி, 19. சலதி, 20. அலை, 21. பாராவாரம், 22. உததி, 23. சமுத்திரம், 24. பரவை, 25. உவா, 26. நரலை, 27. புணரி, 28. வேலாவலயம், 29. கார்கோள், 30. வாரம், 31. வாருணம், 32. சிந்து, 33. வாரம், 34. அம்புராசி, 35. உவரி.

உரிச்சொல் நிகண்டு              
“நீர்புணரி நேமி பரவைவேலாவலய     
மார்கழி யத்தி திரைநரலை – வாரிதி…” (119)

1. நீர், 2. புணரி, 3. நேமி, 4. பரவை, 5. வேலாவலயம், 6. ஆர்கலி, 7. அத்தி, 8. திரை,  9. நரலை, 10. வாரிதி, 11. பாராவாரம், 12. பௌவம், 13. வேலை, 14. முந்நீர், 15. உவரி, 16. ஆழி, 17. வாரி, 18. கடல்
  
“கலராசி தோயநிதியம்பர முப்புச்    
சலநிதி யேயுததி சிந்து சலதி…” (120)
1. கலராசி, 2. தோயநிதி, 3. அம்பரம், 4. உப்பு, 5. சலநிதி, 6. உததி, 7. சிந்து,
8. சலதி, 9. வெள்ளம், 10. நதிபதி, 11. வரை, 12. எக்கர்

கரை, கடற்றிரை, நீர்க்குமிழி, நீர்நுரை
உரிச்சொல் நிகண்டு

“கூலம்பா ரந்தீரங்கோடு தடங்கரைகல் 
லோந்தரங்க மலைதிரை – வேலையிற்…” (121)
கரை        :       1. கூலம், 2. பாரம், 3. தீரம், 4. கோடு, 5. தடம்

கடற்றிரை     :       1. கல்லோம், 2. தரங்கம், 3. அலை

நீர்க்குமிழி     :       புற்புரம்

நீர்நுரை   :       பேனம்

கடலின் பெயர்
பாரதிதீப நிகண்டு

“பரவை யளக்கர் மகரா லையமத்தி பௌவமுந்நீர் 
நரலை சமுத்திரம் வேலா வலயம் நதிபதியே…” (256)
               
1. பரவை, 2. அளக்கர், 3. மகராவையம், 4. மத்தி, 5. பௌவம், 6. முந்நீர், 7. நரலை, 
8. சமுத்திரம், 9. வேலாவலயம், 10. நதிபதி, 12. திரை, 13. இறவாலையம், 14. கார்கோள்,
15. கவருப்பு, 16. சித்தலை, 17. அரிகூலம், 18. ராசி, 19. கடல், 20. வேலை, 21. ஆர்கலி,
22. வாருதி

கடல், கடற்றிரை

பாரதிதீப நிகண்டு

“மாவாரி வீரையுததி சலதி மகோததிபா 
ராவார நேமி பெருநீர் புணிரிமை யம்பரமே…” (257)
               
1. மாவாரி, 2. வீரை, 3. உததி, 4. சலதி, 5. மகோததி 6. பாராவாரம், 7. நேமி,
8. பெருநீர், 9. புணிரிமை, 10. அம்பரம், 11. பூவாடை, 12. சாகரம், 13. சக்கரம், 14. ஆழி,
15. புணரி

நீர்த்திரை, கடற்கரை, நீர்க்கரை
பாரதிதீப நிகண்டு

“தரங்கங்கல், வோலம் விசிகர மேயறல் தத்துமலை 
விரிந்தான் னீர்த்திரையாலண்பர் பாரமல் வேலையுட…” (258)
நீர்த்திரை   :   1. தரங்கங்கல், 2. வோலம், 3. விசிகரம், 4. அறல், 5. தத்துமலை

கடற்கரை   :   1. ஆலண்பர், 2. பாரமல், 3. வேலை, 4. அருங்கரை

நீர்க்கரை : 1. கோடணை, 2. கூலம், 3.அந்திரம், 4.அடர், 5.வரையார், 6.வசிசம், 7. புனல்

செய்கரை, மலைச்சாரல், முல்லைநிலக் கான்யாறு, ஆறு
பாரதிதீப நிகண்டு

“செங்குலை சேதுக் குரம்பிவை செய்கரை தெள்ளருவி 
யங்கிரிச் சாரல் வருமாறுபவை யருங்கலுழி…” (259)
செய்கரை       : 1. செங்குலை, 2. சேது, 3. குரம்பு

மலைச்சாரல் : 1. தெள்ளருவி, 2. கிரி

முல்லைநிலக் கான்யாறு : 1. கலுழி, 2. ஆறுத்தி, 3. குடிஞை

ஆறு               : சிந்துநதி

கழிமுகம், உப்பளம், காவிரி, பொருனை, ஆன்பொருனை
பாரதிதீப நிகண்டு
“புகல்புகரோடை யதோமுக மென்னிற் பொருந்துகழி 
முகமது வாகுமுகங்காய லாங்கழி மொய்யுப்பள…” (260)
கழிமுகம்         : 1. புகல், 2. புகரோடை, 3. அதோமுகம்
உப்பளம்            : 1. வாகுமுகம், 2. காயலாம், 3. கழிமொய்

காவிரி             : கானல்

பொருனை     : பொன்னி

ஆன்பொருனை : 1. மகவாணி, 2. ஆனி

கடலின் பெயர்
சூடாமணி நிகண்டு
           
“பரவைதெண் டிரையே சிந்து பௌவமே பாராவாரம் 
நரலையார் கலியே யுந்தி நதிபதியம்பு ராசி…” (361)
               
1. பரவை, 2. தெண்டிரை, 3. சிந்து, 4. பௌவம், 5. பாராவாரம், 6. நரலை, 7. ஆர்கலி, 8. உந்தி, 9. நதிபதி, 10. அம்புராசி, 11. குரவை, 12. சக்கரம், 13. கார்கோள், 14. வேலாவலயம், 15. முந்நீர், 16. அரி, 17. மகராலயம், 18. நீராழி, 19. அம்பரம்,
20. வேலை

வாரிதி யளக்கர் நீண்ட வாரியே யுததி யோதம் 
வீரையன் னவமே யத்தி வெள்ளஞ்சா கரமே யாழி…” (362)
               
1. வாரிதி, 2. அளக்கர், 3. வாரி, 4. உததி, 5. ஓதம், 6. வீரை, 7. அன்னவம், 8. அத்தி, 9.  வெள்ளம், 10. சாகரம், 11. ஆழி, 12. சலதி, 13. உப்பு, 14. சலநிதி, 15. சமுத்திம், 16. வாரணம், 17. உவரி

மண்ணிற் கடல் வகை, கடல் பெயர்
கைலாச நிகண்டு

“ஆர்கலி பௌவம் அளக்கர் அத்தி 
ஆழி பெருநீர் அம்பர முந்நீர்…” (382)
               
1. ஆர்கலி, 2. பௌவம், 3. அளக்கர், 4. அத்தி, 5. ஆழி, 6. பெருநீர், 7. அம்பரம், 8. முந்நீர், 9. விரை, 10. சகரம், 11. வேலை, 12. வெள்ளம், 13. சலதி, 14. உப்பு, 15. சமுத்திரம், 16.  நேமி, 17. வாரி, 18. நரலை, 19. மகராலையம், 20. உவரி, 21. பாராவாரம், 22. பரவை, 23. கார்கோள், 24. வாருணம், 25. சிந்து, 26. வாரம், 27. அம்புராசி, 28. சானவி, 29. புணரி, 30. சலநெதி, 31. ஓதம், 32. நெய்தல், 33. தரங்கி, 34. நீர், 35. தொன்னீர், 36. அரி, 37. மாநீர், 38. குரவை, 39. மகோததி, 40. பயோததி, 41. உததி, 42. காராழி, 43. உந்தி, 44. நதிபதி, 45. அலையிரத்தி, 46. நாகரம், 47. அவனியாடை, 48. வேலாவலயம், 49. மேகமோனை

கடற்பெயர், கடற்கடவுள் பெயர்
ஆசிரிய நிகண்டு
“பரவைதெண் டிரைவேலை பெருநீர்முன் னீருவரி           
பௌவனதி பதிவாரணம்…” (151)
               
1. பரவை, 2. தெண்டிரை, 3. வேலை, 4. பெருநீர், 5. முன்னீர், 6. உவரி, 7. பௌவம், 8. நதிபதி, 9. வாரணம், 10. பாருடை, 11. சமுத்திரம், 12. சக்கரம், 13. சலநதி, 14. பயோதரம், 15. வெள்ளம், 16. நரலை, 17. அரலை, 18. அலை, 19. ஆழி, 20. அரி, 21. அத்தி, 22. அம்பரம், 23. அம்புராசி, 24. சலராசி, 25. உந்தி, 26. அளக்கர், 27. ஆர்கலி, 28. உததி, 29. வாருதி, 30. மகோததி, 31. அன்னவம், 32. புணரி, 33. குரவை, 34. வருணம், 35. மணியாகரம், 36. வாராகரம், 37. சிந்து, 38. வரி, 39. உவா, 40. வீரை, 41. உப்பு, 42.வாரி, 43. சாகரம், 44. நேமி, 45. சலதி, 46. திரை, 47. ஓதம்,  48. கராலையம், 49. மகராலையம், 50. விரிநீர், 51. வேலாவலையம், 52. ஆரல், 53. பாராவாரம், 54.மிகுகார்கோள்

கடற்கடவுள் பெயர் : வருணன்

அபிதான மணிமாலை
“செந்நீர்ப் பவளந் திகழ்கடல் தெண்டிரை
முந்நீர் புணரி சமுத்திரம் சாகரம்…” (1223)
               
1. செந்நீர், 2. பவளம், 3. திகழ்கடல், 4. தெண்டிரை, 5. முந்நீர், 6. புணரி, 7. சமுத்திரம், 8. சாகரம், 9. கந்தி, 10. சலதி, 11. சக்கரம், 12. கலி, 13. ஆர்கலி, 14. உந்தி, 15. நதி, 16. பதி, 17. உததி, 18. பயோததி, 19. குரவை, 20. நரலை, 21. கார்கோள், 22. கலராசி, 23. பரவை, 24. மகோததி, 25. பயோநிதி, 26. வாரிதி, 27. உப்பு, 28. உவர், 29. ஓதம், 30. உவரி, 31. வாரி, 32. அப்பு, 33. நீராழி, 34. ஆழி, 35. சிந்து, 36. அளக்கர், 37. அலை, 38. அம்போதி, 39. அம்பரம், 40. அத்திவேலா, 41. வலயம், 42. அரி, 43. சலநிதி, 44. வாரணம், 45. வாருணம், 46. அருணவம், 47. அன்னவம், 48. அம்புதி, 49. நேமி, 50. கருநிறவேலை, 51. பெருநீர், 52. பௌவம், 53. பாராவாரம், 54. பரப்பு, 55. பயோததி, 56. வாரம். 57. வீரை, 58. மகராலயம்
திரையின் பெயர்கள்
கடற்றிரையின் பெயர்
திவாகர நிகண்டு
           
“ஓதமும், புணரியம், கடற்றிரையாகும்” (879) – 1. ஓதம், 2. புணரி

புணற்றிரைப் பொதுப்பெயர்
திவாகர நிகண்டு
               
“விசிகரம், தரங்கம், அறல், கல்லோகம், அலை,             
புணற்றிரைக்கு வரும் பொதுப்பெயரே” (880)
               
1. விசிகரம், 2. தரங்கம், 3. அறல், 4. கல்லோலம், 5. அலை

வெண்திரையின் பெயர்

கைலாச நிகண்டு      
           
“புணரியுமோதமும், பொங்கு கல்லோலமும்       
அலையுந் தரங்கமும் ஆழிவெண்திரையே” (383)
       
1. புணரி, 2. ஓதம், 3. பொங்கும், 4. கல்லோலம், 5. அலை, 6. தரங்கம், 7. ஆழி

விரிதிரையின் பெயர்
கைலாச நிகண்டு
“அறலுந் தரங்கமும் அலையுங் கல்லோலமும் 
விசிகரமும் புனலின் விரிதிரைப் பெயரே” (384)
       
1. அறல், 2. தரங்கம், 3. அலை, 4. கல்லோலம், 5. விசிகரம், 6. புனல், 7. விரிதிரை

உவர்த்திரை

கைலாச நிகண்டு                
“இருணம் உவர்த்திரை யென்மார் புலவர்” (392) – இருணம்

கடலலையின் பெயர்
அபிதான மணிமாலை
           
“கடலலை அறல் சீகரம் திரை தரங்கம்             
ஓதம் புணரி என்றோதப் படுமே” (1228)
       
1. அறல், 2. சீகரம், 3. திரை, 4. தரங்கம், 5. ஓதம், 6. புணரி

கடல் பேரலையின் பெயர்
அபிதான மணிமாலை
           
“கல்லென்றொலிக்குங் கடற் பெருந்திரைப்பெயர்             
உல்லோலம் கல்லோலம் என்றோதுப” (1229)
       
1. கல்லென்றொலிக்கும், 2. உல்லோலம், 3. கல்லோலம்      
திரையின் பெயர்
அபிதான மணிமாலை
           
“திரை அலை தரங்கம் சீகரம் வாரம்             
அறை கல்லோலம் அறல் எனப்படுமே” (1231)
       
1. திரை, 2. அலை, 3. தரங்கம், 4. சீகரம், 5. வாரம், 6. அறை, 7. கல்லோலம், 8. அறல்

உவர்நீரின் பெயர்
கைலாச நிகண்டு
           
“உறையென் றுரைப்பது உவர் நீராகும்” (387) – உறை

கரையின் பெயர்கள்
கடற்கரையின் பெயர்
திவாகர நிகண்டு
           
“வேலையும், பாரா வாரமுங்கடற்கரை” (881) – 1. வேலை, 2. பாராவாரம்

கைலாச நிகண்டு
           
“வரையணை கூலம் வாரம் பாரம்     
 தீரம் கோடுதிரைக் கடற்குரைத்தனரே” (385)
       
1. வரையணை, 2. கூலம், 3. வாரம், 4. பாரம், 5. தீரம், 6. கோடு, 7. திரை
அபிதான மணிமாலை
           
“நீரார் பரவை நெடுங்கரை வேலை             
பாரா வாரம் பாரம் என்ப” (1230)
       
1. நீரார், 2. பரவை, 3. நெடுங்கரை, 4. வேலை, 5. பாரா, 6. வாரம், 7. பாரம்
           
“ஆழி தீரம் அணை வரை பாரம்             
வாரம் விளிம்பு என வைக்கப்படுமே” (1232)
   
1. ஆழி, 2. தீரம், 3. அணை, 4. வரை, 5. பாரம், 6. வாரம், 7. விளிம்பு

கரைப்பொதுப்பெயர்

திவாகர நிகண்டு
           
“தீரம், பாரம், வரை, அணை, கோடு,           
கூலம், வார், புனற்கரைக்கு பொதுப்பெயர்” (882)
       
1. தீரம், 2. பாரம், 3. வரை, 4. அணை, 5. கோடு, 6. கூலம்

செய்கரையின் பெயர்
திவாகர நிகண்டு     
“குலையும், சேதுவும், குரம்பும், செய்கரை” (883) – 1. குலை, 2. சேது, 3. குரம்பு

அபிதான மணிமாலை
           
“செய்கரை குலை அணை சேது குரம்பே” (1233)                       
1. குலை, 2. அணை, 3. சேது, 4. குரம்பு

கரையின் பெயர்
கைலாச நிகண்டு
     
“குரம்புஞ் சேதுவும் குலையும் அணையும்       
வரம்புஞ்செய் கரையென வகுத்தனருளரே” (386)
       
1. குரம்பு, 2. சேது, 3. குலை, 4. அணை, 5. வரம்பு
உப்பளத்தின்பெயர்

திவாகர நிகண்டு
           
“காயல், உப்பளம், ஆகக் கருதுவர்” (889) – காயல்

கைலாச நிகண்டு
 
“கானலுங்கழியுங் கருதில் உப்பளம்” (389) – 1. கானல், 2. கழி
           
“அகர முப்பள மாகுமென்ப” (391) – அகரம்

அபிதான மணிமாலை
           
“உப்பளம் அளக்கர் அளம் உவளகம் கழி           
 உவர்க்களம் இருணம் இரிணம் உவர்த்தரை” (1227)
       
1. அளக்கர், 2. அளம், 3. உவளகம், 4. கழி, 5. உவர்க்களம், 6. இருணம், 7. இரிணம்

கழிமுகத்தின் பெயர்கள்
கழியின்பெயர்
திவாகர நிகண்டு
           
“காயலும், முகமும், கழியெனப்படுமே” (887) – 1. காயல், 2. முகம்

கைலாச நிகண்டு
           
“காயலென்பது கழிப்பெயராமே” (388) – காயல்
கழிமுகத்தின் பெயர்

திவாகர நிகண்டு
           
“அதோமுகம், புகாரோடு, அருவி, கூடல்,             
கழிமுகமென்று கருதல் வேண்டும்” (888)
                       
1. அதோமுகம், 2. புகவர், 3. அருவி, 4. கூடல்

கைலாச நிகண்டு
“அதோமுகம் புகாரே பிறாக் கழிமுகம்” (393) – 1. அதோமுகம், 2. புகார்

அபிதான மணிமாலை
           
“கழிமுகம் அதோமுகம் கயவாய் கயவு           
அழிவி கூடல் அரவி புகார் ஆம்” (1225)     
1. அதோமுகம், 2. கயவாய், 3. கயவு, 4. அழிவி, 5. கூடல், 6. அரவி, 7. புகார்

கழிகாயல்
அபிதான மணிமாலை
           
“கழி காயல் உப்பளம் கானல் முரம்பே” (1224) – 1. உப்பளம், 2. கானல், 3. முரம்பு

சூழ்கழியிருக்கை
அபிதான மணிமாலை  
 “சூழ்கழியிருக்கை கோணாமுகம் தோட்டி ஆம்” (1226) – 1. கோணாமுகம், 2. தோட்டி

மணலின் பெயர்கள்
புதுமணற் குன்று
கைலாச நிகண்டு
           
“புளின மென்பது புதுமணற் குன்றே” (390) – புளினம்

வெண்மணல்
திவாகர நிகண்டு
           
“வாலுகம், வெண்மணல்” (912) – வாலுகம்

கைலாச நிகண்டு
               
“வாலுகமென்பது வெண்மணலாகும்” (399) – வாலுகம் 
நுண்மணல்
கைலாச நிகண்டு
           
“அயிரென் கிளவி யாகு நுண்மணல்” (400) – அயிர்

கருமணல்
கைலாச நிகண்டு                
“அறலென்பது யலைநுணங்கு கருமணல்” (401) – அறல்

மணற்குன்றின் பெயர்
திவாகர நிகண்டு                 
“புளினம் மணற்குன்றே” (913) – புளினம்

நுண்மணலின் பெயர்
திவாகர நிகண்டு

“அதர், அயிர், நுண்மணல்” (914) – 1. அதர், 2. அயிர்

கருமணலின் பெயர்

திவாகர நிகண்டு                
“அறலே, அலைநுண் கருமணலாகும்” (916) – அறல்

அகராதி வடிவில் நிகண்டுகளின் நெய்தல்நிலப் பெயர்கள்
               
திவாகர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, பாரதிதீபம் நிகண்டு, சூடாமணி நிகண்டு, கைலாச நிகண்டு, அபிதானமணிமாலை, ஆசிரிய நிகண்டு ஆகிய ஏழு நிகண்டுகளில் மட்டும் நெய்தல்நிலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 ஏழு நிகண்டுகளில் இடம்பெறும் இடப்பெயர்களில் ஒன்றான நெய்தல்நிலப் பெயர்களை அகராதி வடிவில் அகரவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கீழே இடம்பெறும் அட்டவணையில் முதலில் இடப்பெயர்களும் அடுத்து அப்பெயருக்குரிய பொருள்களும், அடுத்து அந்நெய்தல்நிலப் பெயர்கள் எந்தெந்த நிகண்டுகளில் இடம்பெற்றுள்ளன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து நெய்தல்நிலப் பெயர்களில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய சொற்களை விட்டுவிட்டு ஒரு பதிவினை மட்டும் கணக்கில் கொண்டு 34 நெய்தல்நிலப் பெயர்கள், பொருள், இடம்பெறக்கூடிய நிகண்டுகள் என்ற வகையில் இவ்வட்டவணையில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.

அகர வரிசையில் நெய்தல்நிலப் பெயர்களின் அட்டவணை

வ.எண்.

சொல்

பொருள்

நிகண்டுப் பெயர்கள்

1

ஆறு

சிந்துநதி

பாரதிதீபம் 258

2

உப்பளம்

வாகுமுகம், காயலாம், கழிமொய், காயல், கானல், கழி, அகரம், அளக்கர், அளம், உவளகம், உவர்க்களம்,  இருணம், இரிணம்

பாரதிதீபம் 260

திவாகரம் 889

கைலாச நிகண்டு 389, 391

அபிதான மணிமாலை 1227

3

உவர்த்திரை

இருணம்

கைலாச நிகண்டு 383

4

உவர்நீர்

உறை

கைலாச நிகண்டு 387

5

கடலலை

அறல், சீகரம், திரை, தரங்கம், ஓதம்,  புணரி

அபிதான மணிமாலை 1228

6

கடலின் பெயர்

அத்தி, அத்திவேலா, அப்பு, அம்பரம், அம்புதி, அம்புராசி, அம்போதி, அரலை, அரி, அருணவம், அலை, அலையிரத்தி, அவனியாடை, அளக்கர், அன்னவம், ஆரல், ஆர்கலி, ஆழி, உததி, உந்தி, உப்பு,  உவரி, உவர், உவா,  ஓதம், கடல், கந்தி, கராலையம், கருநிறவேலை, கலராசி, கலி, காராழி, கார்கோள், குரவை, சகரம், சாகரம், சமுத்திரம், சலதி, சலநிதி, சலநெதி, சலராசி, சாகரம், சானவி, சிந்து, செந்நீர், தரங்கி, திகழ்கடல், திரை,  தெண்டிரை, தொன்னீர், நதி, நதிபதி, நரலை, நாகரம், நீராழி, நீர், நெய்தல், நேமி, பதி, பயோததி, பயோதரம், பயோநிதி, பரப்பு, பரவை, பவளம், பாராவாரம், பாருடை, புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகாலயம், மகோததி, மணியாகரம், மாநீர், மிகுகார்கோள், முந்நீர், மேகமோனை, வரி, வருணம், வலயம், வாரணம், வாரம், வாராகரம், வாரி, வாரிதி, விரிநீர், விரை, வெள்ளம், வேலாவலயம், வேலை

திவாகரம் 878

உரிச்சொல் 119, 120

பாரதிதீபம் 256

சூடாமணி 361, 362

ஆசிரிய நிகண்டு 151

அபிதான மணிமாலை1223

7

கடலின் பேரலை

கல்லென்றொலிக்கும், உல்லோலம், கல்லோலம்

அபிதான மணிமாலை 1228

8

கடல், கடற்றிரை

மாவாரி, வீரை, உததி, சலதி,  மகோததி  பாராவாரம், நேமி, பெருநீர், புணிரிமை, அம்பரம், பூவாடை, சாகரம், சக்கரம், ஆழி, புணரி, ஓதம்

பாரதிதீபம் 257

திவாகரம் 879

9

கடற்கடவுள்பெயர்

வருணன்

ஆசிரிய நிகண்டு 151

10

கடற்கரை

ஆலண்பர், பாரமல், வேலை, அருங்கரை

பாரதிதீபம் 258

11

கடற்கரையின் பெயர்

வேலை, பாராவாரம், வரையணை,  கூலம், வாரம், பாரம்,  தீரம், கோடு, திரை, நீரார்,  பரவை, நெடுங்கரை, வேலை, பாரா, ஆழி, தீரம், அணை,  வரை, விளிம்பு

திவாகரம் 881

கைலாச நிகண்டு 385

அபிதான மணிமாலை 1230, 1232

12

கடற்றிரை

கல்லோம், தரங்கம், அலை

உரிச்சொல்  121

13

கருமணல்

அறல்

கைலாச நிகண்டு 401

திவாகரம் 916

14

கரைப்பொதுப்பெயர்

தீரம், பாரம், வரை,  அணை, கோடு,  கூலம்

திவாகர நிகண்டு 882

15

கரையின் பெயர்

கூலம், பாரம்,  தீரம், கோடு,  தடம், குரம்பு, சேது,  குலை,  அணை,  வரம்பு

உரிச்சொல் 121

கைலாச நிகண்டு 385

16

கழிகாயல்

உப்பளம், கானல், முரம்பு

அபிதான மணிமாலை 1224

17

கழிமுகம்

புகல், புகரோடை, தோமுகம், காயல்,  கயவாய், கயவு, அழிவி, கூடல், அரவி, புகார்

பாரதிதீபம் 260

கைலாச நிகண்டு 388, 393

அபிதான மணிமாலை 1225

திவாகரம் 888

18

கழியின் பெயர்

காயல், முகம்

திவாகர நிகண்டு 887

19

காவிரி

கானல்

பாரதிதீபம் 260

20

சூழ்கழியிருக்கை

கோணாமுகம், தோட்டி

அபிதான மணிமாலை 1226

21

செய்கரையின் பெயர்

 குலை,  சேது,  குரம்பு, அணை, செங்குலை, சேது,  குரம்பு

திவாகர நிகண்டு 883

அபிதான மணிமாலை 1233

பாரதிதீபம் 258

22

திரையின் பெயர்

திரை, அலை, தரங்கம், சீகரம், வாரம், அறை,  கல்லோலம், அறல்

அபிதான மணிமாலை 1228

23

நீர்க்கரை

கோடணை, கூலம், அந்திரம், அடர், வரையார், வசிசம்,  புனல்

பாரதிதீபம் 258

24

நீர்க்குமிழி

புற்புரம்

உரிச்சொல் 121

25

நீர்த்திரை

தரங்கங்கல், வோலம், விசிகரம், அறல், தத்துமலை

பாரதிதீபம் 258

26

நீர்நுரை

பேனம்

உரிச்சொல் 121

27

நுண்மணல்

அயிர், அதர்

கைலாச நிகண்டு 400

திவாகரம் 914

28

புணற்றிரைப் பொதுப்பெயர்

விசிகரம், தரங்கம்,  அறல், கல்லோலம், அலை

திவாகரம் 880

29

பொருனை

பொன்னி

பாரதிதீபம் 260

30

மணலின் பெயர்

புதுமணற் குன்று

புளினம்

கைலாச நிகண்டு 390

திவாகரம் 912

31

மலைச்சாரல் வரும் ஆறு

தெள்ளருவி, கிரி

பாரதிதீபம் 258

32

விரிதிரையின் பெயர்

அறல், தரங்கம்,  அலை,  கல்லோலம், விசிகரம், புனல்,  விரிதிரை

கைலாச நிகண்டு 383

33

வெண்திரையின் பெயர்

புணரி, ஓதம்,  பொங்கும்,  கல்லோலம்,  அலை, தரங்கம், ஆழி

கைலாச நிகண்டு 383

34

வெண்மணல்

வாலுகம்

கைலாச நிகண்டு 399

திவாகர நிகண்டு 912

முடிவுரை
இக்கட்டுரையில் திவாகர நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, பாரதிதீபம் நிகண்டு, சூடாமணி நிகண்டு, கைலாச நிகண்டு, அபிதானமணிமாலை, ஆசிரிய நிகண்டு ஆகிய ஏழு நிகண்டுகளில் மட்டும் நெய்தல்நிலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்நெய்தல்நிலப் பெயர்கள் அனைத்தும் தொகுத்துரைக்கப்பட்டுள்ளன. நெய்தல்நிலம் சார்ந்த பெயர் என்பதை கடலின் பெயர், திரையின் பெயர், கரையின் பெயர், உப்பளத்தின்பெயர், கழிமுகத்தின் பெயர், மணலின் பெயர் போன்ற 34 நெய்தல்நிலம் சார்ந்த பெயர்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இன்றுள்ள இயந்திர யுகத்தாலும், புதுமை ஆக்கத்தாலும், இலக்கிய இலக்கண, நிகண்டு நூல்களில் கையாளப்பட்ட சொற்கள் அனைத்தும் நம் சமூக வழக்கினின்று மறைந்துக் கொண்டு வருகின்றன. எனவே அச்சொற்களை அறிந்து கொள்ளும் விதமாக ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்ஆய்வுகள் மூலம் அரிய சொற்களைத் தேடிக் கண்டறிந்து அவற்றையெல்லாம் தொகுப்பதாலும், தொகுத்த சொற்களுக்குப் பொருள் விளக்கம் காண்பதன் மூலமும் பல்வேறு அகராதிகளை உருவாக்க முடியும். அதற்கு முன்னோடி முயற்சியாகத்தான் இவ்ஆய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.
துணைநின்ற நூல்கள்
1.சுப்பிரமணியன், ச.வே., (ப.ஆ), தமிழ் நிகண்டுகள் தொகுதி – 1 & 2, மெய்யப்பன் பதிப்பகம், 53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001. முதற்பதிப்பு, டிசம்பர் – 2008.
2.சற்குணம், மா., தமிழ் நிகண்டுகள் ஆய்வு, இளவழகன் பதிப்பகம், புதிய எண் 16,  முதல் தளம், பாலாஜி நகர், இரண்டாவது தெரு, இராயப்பேட்டை, சென்னை – 14.
3.நாச்சிமுத்து, கி., தமிழ் இடப்பெயராய்வு, சோபிதம் பதிப்பகம், நாகர்கோயில். 1983.
4.சேதுப்பிள்ளை, ரா.பி., தமிழகம் ஊரும் பேரும், சீதை பதிப்பகம், 10/14, தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 5. முதற்பதிப்பு, பிப்ரவரி 2012.
5.ஜெயதேவன், வ., தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, ஐந்திணைப் பதிப்பகம், 282, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை – 5. முதற்பதிப்பு, 1985.
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் கி. சுமித்ரா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீ மூகாம்பிகை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்)
மல்லுப்பட்டி, பாலக்கோடு, தருமபுரி – 63

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் | வெ. கெளதம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள்-வெ. கெளதம்
முன்னுரை
                 
விளையாட்டு என்பது பொழுதுபோக்காகவும் வெற்றி தோல்வியை நிர்ணிக்கும் என்றாலும் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டு என்பது கிராமப்புறங்களில் நகர்புறங்களிலும்  வயது வேறுபாடு இன்றி சிறுவர் முதல் பெரியவர் வரை ஒன்று கூடி  விளையாண்ட காலகட்டம் அது. இன்று தொலைக்காட்சியை கைபேசி மற்றும் பல அடுக்கு கட்டிடங்கள் விளையாட்டினை முடக்கிவிட்டது அழித்துவிட்டது என்றைக்கு கூறலாம் இயற்கையோடு கலந்து ஓடி ஆடி விளையாடிய நோய் நொடி இல்லாமல்  வாழ்ந்த காலமும் அது தான். இந்த தலைமுறைக்கு விளையாட்டு பற்றியும் வியர்வை பற்றியும் ஏசி வகுப்பில் பாடம் எடுக்கப்படுகின்றன.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு             
தமிழர்களின் விளையாட்டு என்பது உடலும் வியர்வையும் சேர்ந்து ஆடுவது ஆகும். விளையாட்டின் போது உடல் வலிமை மனவலிமை ஆகியவை மேம்பட்டு இருந்தது. சிறுவர் முதல்  பெரியவர் வரை தனது சிந்தனைகளையும் பிறர் சிந்தனைகளையும் தோன்றினர் பொழுதுபோக்காகவும் அறிவியலாகவும்  இருந்தது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.
 
விளையாட்டுக்களின் வகைகள்               
விளையாட்டினை அவற்றை நிலையைக் கொண்டு வீர விளையாட்டு, பொழுதுபோக்கு விளையாட்டு, தனி நபர் விளையாட்டு, இருவர் விளையாட்டு, குழு விளையாட்டு,  சிறுவர் விளையாட்டு, சிறுமியர் விளையாட்டு, சிறுவர் சிறுமியர் செய்து விளையாடும் விளையாட்டு, மகளிர் விளையாட்டு, ஆடவர் விளையாட்டு, பொது விளையாட்டு என பல விளையாட்டுகளை கொண்டிருந்தது
      பொழுதுபோக்கு  விளையாட்டாகும் விளையாடினர். போட்டி மனப்பான்மை கொண்டு விளையாடினர் அக விளையாட்டு பர விளையாட்டு என இரண்டு வகையாகவும் பிரித்து விளையாடினர். இதில் உடல் திறன் அறிவுத்திறன்  மனமகிழ்ச்சி ஆகியவை மேம்பட்டு இருந்தது. விளையாட்டுகளில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தது விடாமுயற்சியும் இருந்தது

சிறுவர்கள் விளையாட்டுகள்         
சிறுவர்கள் ஒன்றாக ஆடிப்பாடி மகிழ்ந்து விளையாண்டு இருந்த காலகட்டம் அன்று ஒற்றுமையும் பலப்படுத்தியது இயற்கையோடு கூடி காலை மாலை இன்று வெயிலும் மழையிலும் விளையாட காலகட்டம் . ஆவியம் பம்பர விளையாட்டு தவிட்டு குச்சி கிளித் தட்டு கில்லி சைக்கிள் உப்பு விளையாட்டு கள்ளன் போலீஸ் விளையாட்டு கோலி கண்ணாடி குண்டு கால் தாண்டி கிட்டிப்புலி மந்தியோடுதல் பந்து விளையாட்டு ஒச்சியப்பன் தலைவனைக் கண்டுபிடித்தல் உருண்டை திருட்டை விளையாட்டு மாட்டுக்கால் திருவிளையாட்டு சைக்கிள் விளையாட்டு தேர் அல்லது சப்பர விளையாட்டு சாமி ஊர்வள விளையாட்டு மாட்டு விளையாட்டு வண்டி விளையாட்டு நுங்கு வண்டி விளையாட்டு குருடனை கொக்கு விளையாட்டு  ஐஸ் பால் ரெடி விளையாட்டு கல் எடுக்கும் விளையாட்டு  காற்றாடி பட்டம்  ஒத்தையா ரெட்டையா, தை தாத்தாதை, தைத்தக்கா தை, பட்டத்திரி எலியும் பூனையும் காக்கா குருவி குண்டு விளையாட்டு ஆடு விளையாட்டு சக்கர விளையாட்டு கண்ணாமூச்சி விளையாட்டு என சிறுவர்கள் சேர்ந்து விளையாடிய விளையாட்டுக்கள் இருந்தது
சிறுமியர்கள் விளையாட்டு
பூப்பறிக்க வருகிறோம், பூசணிக்காய் விளையாட்டு, உன் புருஷன் பெயர் என்ன, பூச்சொல்லி விளையாட்டு, ஒன்று பத்தி இருபத்தி,குச்சி குச்சி ராக்கம்மா, சோற்றுப் பானை விளையாட்டு, கலாக்காய் விளையாட்டு, பல்லாங்குழி,பொம்மை விளையாட்டு, என் தலைக்கு எண்ணெய் ஊத்து, கரகரவெண்டி, சமையல் விளையாட்டு,நொண்டி, கல்லாட்டம் குச்சி ஆட்டம்,  ராஜா ராணி, 

சிறுவர் சிறுமியர்  விளையாட்டுகள்
               
நொண்டி,நிலா பூச்சி,கிறுகிறு மாம்பழம், சாட்டு பூட்டு,கண்ணாமூச்சி,ஒரு தலையிலே ஆடுமேயுதாம்,யாருக்கு வேட்டை? பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு,  தட்டா மாலை, கும்மி, கோலாட்டம்,பாண்டி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி,பூப்பறிக்க வருகிறோம், கரகர வண்டி,சில்லுக் கோடு,கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை,நொண்டி, ராஜா மந்திரி

மகளிர் விளையாட்டு
பல்லாங்குழி, தட்டாங்கல்,தாயம்

ஆடவர் விளையாட்டு
கில்லி, சடுகுடு, உறியடித்தல், சேவல்,கட்டு, எருது கட்டு,சிலம்பாட்டம்,ஆடுபுலிஆட்டம்,
மஞ்சுவிரட்டு,சிலம்பம்,கபடி,வழுக்கு மரம்
 
சிலம்பாட்டம்
               
கையில் உள்ள கம்பினை  வீசி ஒலியெழுப்பும் விளையாட்டு  கம்பு வீசுதரன் காலடியை எடுத்து வைக்கும் முறை வேகமாக வீசும் திறன் இவை மூன்றுமே சிலம்பாட்டத்தின் முக்கியத்துவம் ஆகும்
சடுகுடு
    
சடுகுடு விளையாட்டு பழந்தமிழர் விளையாட்டை என்பர் கபடி என்றும் கூறுவர்
 
தாயம்
               
மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் தாயகம் ஒன்று விளையாடுவதற்கு வரைபடம் கட்டத்தில் தாயகட்டம் என்று சொல்வார்கள் உருட்டு கட்டை பகடைகளை பயன்படுத்துவார்கள் சோழியம் பயன்படுத்துவார்கள்
 
பல்லாங்குழி
           
பல்லாங்குழி என்பது பெண்கள் பருவம் அடைந்த பொழுது விளையாடத் தொடங்கும் விளையாட்டாகும் மரத்தில் அல்லது ஏதேனும் ஒரு உலோகத்தால் 7  குழியான கட்டையில் இருபக்கமும் இரு பெண்கள் உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு ஆகும்
 
தட்டாங்கல்
            
கல்லை மேலே தூக்கிப்போட்டு அது கீழே வந்து விழுவதற்குள் முன்பாக கைகளால் தரையில் தட்டி கல்லை பிடிக்கும் விளையாட்டை ஆகும்

கண்ணாமூச்சி
           
சிறுவர் சிறுவீர்கள் இணைந்து கண்களை மூடிக்கொண்டு விளையாடும் ஆட்டம் கண்களை மூடிக்கொண்டு சுற்றியும் இருக்கு நண்பர்களே கண்டுபிடிப்பது ஆகும்
 
நொண்டி விளையாட்டு
             
ஒரு காலனி பயன்படுத்தி ஆடும் ஆட்டம் நொண்டி விளையாட்டு ஆகும் ஒருவர் நொண்டி அடித்துக் கொண்டு மற்றவர்களை தொட்டு விளையாடு மாட்டமாகும். 

கிட்டிப்புள்
               
இது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டாகும் நீல குச்சி கிட்டி என இரண்டு வைத்திருப்பார்கள் நிலத்தில் சிறிது பள்ளம் தோண்டி அவற்றில் கிட்டியை வைத்து நீளக்குச்சியால் அடிப்பார்கள்
 
பம்பரம்
          
பம்பரம் எனும் விளையாட்டு  சாட்டையை எடுத்து பம்பரத்தில் சுழற்றி கையால் எடுக்க வேண்டும் அல்லது மற்றொரு பம்பரத்தை உடைக்க வேண்டும் ஒரு வட்டத்திற்குள் பம்பரம் விடுவதும் உண்டு

குண்டு விளையாட்டு         
கோழி விளையாட்டு என்றும் கூறுவர் நிலத்தில் குளிகை தோண்டி அதனை நோக்கி குண்டை வைத்து அடித்து விழச் செய்ய வேண்டும் கிராம மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டாகவும் இருந்தது

ஒத்தையா? இரட்டையா? விளையாட்டு 
       
கிராமங்களில் புளியங்கொட்டை முத்து அல்லது அவரை கையில் வைத்து மறைத்து விளையாடும் விளையாட்டு ஒத்தையா இரட்டையா என்பதை கண்டுபிடிப்பதை ஆகும்
 
பட்டம் விடுதல்      
கிராமங்களில் மட்டுமல்ல நகரங்களிலும் கூட இப்போது பட்டம் விடுவது என்பது பொழுது பார்க்க இருந்தது ஒரு காகிதத்தில் இரண்டு குச்சிகளை வைத்து நூல்களை கட்டி உயரம் பறக்க விடுவார்கள்

 கரகர வண்டி    
சிறுவர் சிறுமிகள் பலர் நின்று கொண்டு சுற்றிக்கொண்டு இருப்பார்கள் யார் கடைசியாக சுற்றுகிறார்களோ அவரை சென்றடைவர் கரகர வண்டி காமாட்சி வேண்டி என பாடிக்க கொண்டு விளையாடுவார்கள்
 
கள்ளன் போலீஸ் விளையாட்டு
        
கள்ளன் போலீஸ் அல்லது திருடன் போலீஸ் என்று சிறுவர்கள் ஒன்றாக அமர்ந்து விளையாடும் விளையாட்டு  களனாகும் போலீசாகவும் மாறி மாறி நடித்து விளையாண்டு தனது திறமையும் அறிவையும் வெளிப்படுத்துவார்கள்
 
கால் தாண்டி 
    
பச்சை குதிரை என்றும் கூறுவார்கள் காலை நீட்டி உட்காந்தவாறு கால் மேல் கால் வைப்பார் பின் கால் மேல் விரல் வைப்பான் பின் இரண்டு விரல் வைப்பார்கள் பின்பு குனிவான் மற்றவர்கள் அதனைத் தாண்டுவார்கள். அவன் மீது படாமல் தாண்டுவது இந்த விளையாட்டாகும்

உருண்டைத் திரண்டை விளையாட்டு 
        
விளையாட்டில் ஒருவன் குனிந்து கொள்வான்  அவன் முதலில் மீது மற்ற பையன் ஒருவன் கை மீது ஒருவன் வைத்துக் கொள்வான் தலைவனா இருப்பின் யாரிடமாவது ஒருவன் துரும்பு கொடுப்பான். அவன் அனைவரின் உருண்டை திரட்டு உள்ளங்கையை பிரட்டை எடப்பாடிக்கொண்டே கையை தேய்ப்பார் குனிந்தவன் யாரிடம் துரும்பு உள்ளது எனக் கூறிவிட்டால் அவன் குனிய வேண்டும்
 
சைக்கிள் விளையாட்டு
                  
இரண்டு பையன்கள் நின்று கொண்டு கைகளை கோர்த்துக்கொள்வார்கள் மூன்றாவது பையன் கைகோர்த்து இருப்பவன் மீது அமர்ந்து கொள்வான் அமர்ந்த பையன் சைக்கிளில் ஓடுவது போன்று காலை ஆட்டுவான் ஒரு எல்லைக்கு போக வேண்டும் எல்லைக்கு போனவுடன் மாறி மாறி உட்கார்பவர் முடிவு செய்யப்படுவார்
 
கல் எடுக்க விளையாட்டு
                           
ஒரு வட்டத்தில் ஒரு கல் இருக்கும் எத்தனை பேர் வேண்டுமானால் பங்கு பெறலாம் ஒவ்வொரு பக்கத்திலும் உள்ளவர்கள் எண்கள் உண்டு விளையாட்டு தலைவன் என்ன ஒன்று கூறினால் அந்தப் பக்கத்தில் அதே என் உள்ளவர் கல்லை எடுக்காவிட்டால் தோற்றவன் அவன் கல்லை எடுத்து விட்டால் தோற்றவன் பக்கத்தில் உள்ள ஜெயித்தவன் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் அதேபோன்று ஒரு பக்கத்தில் உள்ள நான்கு பேரும் கல்லை எடுத்து விட்டால் அவர்கள் வெற்றி பெற்றவர்
 
வட்டத்திரி     
பிள்ளைகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஒருவர் துணியை கையில் வைத்துக் கொண்டு அவர்களை சுட்டு சுற்றி வருவான் அப்போது குலை குலையை முந்திரிக்காய் என்று சொல்வார்கள் நிறைய பேர் இருப்பார்கள். ஒருவருக்கு பின்னால் போட்டுவிட்டு சுற்றி சுற்றி போடுவார்கள் துணியை எடுத்தவன் இவனைப்போலவே சுற்றி வருவான் துணியை எடுக்காவிட்டால் இது யாருக்குப் பின் உள்ளதோ அவனை துணியால் அடிப்பான்
 
எலியும் பூனையும்
     
எலியாக இருப்பவன் வட்டத்திற்குள்ளே இருப்பான் பூனையாக இருப்பவன் வட்டத்திற்கு வெளியே இருப்பான் பூனையாக வெளியே சுற்றிக் கொண்டிருப்பவன் உள்ளே நுழைய முயற்சிப்பான் துணி உள்ளே வந்துவிட்டால் எலிவேலியே சென்றுவிடும் போனாய் இருப்பவன் எலியை தொட்டுவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும் இவ்வாறு மீண்டும் மீண்டும் விளையாடுவது

ஆடு ஓநாய் விளையாட்டு
       
சிறுவர்கள் வரிசையாக ஒருவர் இருப்பினை ஒருவர் பிடித்துக் கொண்டு நிற்பார் ஒருவர் மற்றவர் சுற்றி சுற்றி வருவான் என் ஆட்டைக் காணமோ என நிற்பவர் கூறுவர் வரிசையில் இருந்து பிரிந்து நிற்பவனை தொடுவான் பின்பு தொட்டவன் சுற்றிவர வேண்டும் வரிசையாக நிற்பவர்களை ஆடுகளாகவும் சுற்றி இருப்பவர் ஓநாய்களாகவும் கருதுவதால் இவ்வாறு இந்த விளையாட்டு பெயர் உண்டானது
 
நிலாப்பூச்சி         
நிலா காலங்களில் விளையாடும் விளையாட்டு ஆகும் சிறுவனும் சிறுமியும் பிடித்து வருவாள் அவள் நிலா வெளிச்சத்தில் நின்று கொள்வாள் மற்றவர்கள் நிழலில் நின்று கொள்வார்கள் வெளிச்சத்திற்கு வந்தால் தொடுவார் வெளிச்சத்தில் உள்ள நிழலை தொட்டாலும் தொடுபவர்கள் பிடித்து கொண்டு வர வேண்டும்

பூசணிக்காய் விளையாட்டு
               
சிறுமிகள் விளையாடும் விளையாட்டு தரையில் அமர்ந்து ஒருவர் இருப்பினை மற்றொருவர் பிடித்துக் கொண்டு முதலில் இருக்கும் சிறுமி தோட்டக்காரன் கடைசியில் இருக்கும் சிறுமி பூசணிக்காய் ஒரு சிறுமி ராஜாவாகும் மற்றொரு சிறுமி சேவானாகவும் நடிப்பர் ஒவ்வொரு நடிப்பும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளது. பூசணிக்காய் விதை விதைத்தது முதல் அதை அறுவடை செய்யும் வரை ஒவ்வொன்றாக சொல்லி சொல்லி விளையாடுவார்கள்
.
மஞ்சுவிரட்டு
       
ஜல்லிக்கட்டு மாடு பிடி காளைப்போர் மஞ்சு விரட்டி  என பல பெயர்கள் உண்டு  பழந்தமிழ் ஏறுதழுவுதல் என்றும் வழங்கினர். பொங்கல் விழாவின்போது இவ் விளையாட்டு நடைபெறும் வெற்றி பெற்ற வீரனுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்படும் மாடு அல்லது காளையை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சென்று அதன் முதுகில் உள்ள பரிசு பொருளை எடுப்பது இந்த போட்டியாகும்
 
பொம்மை விளையாட்டு
                
பொம்மை துணி மரக்கட்டை மண் கல் போன்றவற்றில் பொம்மைகளை செய்து விளையாடுவார்கள் குழந்தைகள் சிறு வீடு கட்டி விளையாடுவதும் இந்த விளையாட்டு தான் சாப்பாடு செய்து விளையாடுவார்கள்

அம்மானை விளையாட்டு
     
பெண்கள் குழுவாக அமர்ந்து வினா விடை கேட்டு விளையாடுவது இதற்கு இறுதியில் அம்மானை என்று சொல்லி முடிப்பார்கள்
 
ஊஞ்சல் விளையாட்டு      
மரத்தடியில் அல்லது ஒரு இடத்தில் கயிறு கொண்டு ஊஞ்சல் கட்டி  அதில் அமர்ந்து விளையாடுவார்கள். ஊஞ்சல் மேலும் கீழும் போய்வரும்
 
முடிவுரை               
அந்த காலகட்டத்தில் விளையாட்டு என்பது பொழுதுபோக்காகவும் அறிவியல் ரீதியாகவும் பல நன்மைகளை செய்தது. ஏதேனும் ஒரு தேடலும் கட்டலும் அதிலிருந்து  இயற்கையோடு ஒன்றி வாழ்க காலகட்டங்களில்விளையாட்டுகளும் வாழ்வியலில் ஒன்றாக இருந்தது ஆனால் இன்று கைக்கும் கண்களுக்கும்  மட்டுமே விளையாட்டு நடைபெறுகிறது  தொலைபேசியில் விளையாடும் விளையாட்டு பொருளாதாரத்தையும் குழந்தைகளின் மனநிலையையும் மூளையின் செயல்பாட்டையும் குறைக்கிறது.இன்றைய விளையாட்டு ஓடவும் முடியாமல் விளையாடவும் முடியாமல் ஆட்களும் இல்லாமல் நான்கு சுவருக்குள் கூண்டுக்கிளியை போல வாழ்கிறது இந்த கால சமுதாயம் என்பது வேதனையாக ஒன்று. மீண்டும் இயற்கையோடு விளையாடப் பழகிக் கொண்டு வாழ வேண்டும்

துணை மற்றும் பார்வை நூல்கள்
1) நாட்டுப்புறவியல் ஆய்வு  – டாக்டர் சு.சக்திவேல்

2) நாட்டுப்புறவியல் – சு.சண்முகசுந்தரம்

3) அமைப்பியல் ஆய்வியல் நாட்டுப்புற விளையாட்டுகள் – முனைவர் செ.இளையராஜா

4) தமிழக கிராமிய விளையாட்டுக்கள் – குமரி ஆதவன்

 
ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியர்
 
வெ. கெளதம்
 
துறைத்தலைவர் மற்றும்
உதவிப் பேராசிரியர்

தமிழ்த்துறை

சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விஜயமங்கலம்

 

சங்க காலத் தொழிற்பிரிவில்  தூதுவர்கள் மற்றும் ஒற்றர்களின் வாழ்வியல் கூறுகளும் பணிகளும்

சங்க காலத் தொழிற்பிரிவில் தூதுவர்கள் - முனைவர். த. தினேஷ்
 முன்னுரை           
ங்கத்தமிழர்கள் காதலையும் வீரத்தையும் தங்களது இருகண்களாகப் போற்றினர். இத்தகைய காதல் பொருட்டும் வீரம் பொருட்டும் தூதுவிடும் முறை சங்ககாலம் தொட்டே நடைமுறையில் இருந்து வந்துள்ளதை அறிந்துகொள்ள முடிகின்றது. ஒருவருக்கொருவர் தங்களின் ரகசியக் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இவ்வகைத் தூதுமுறை உதவுகின்றது. தூது செல்வோர்களைத் தூதுவர் எனவும் வேவுபார்போர்களை ஒற்றர்கள் எனவும் சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்களின் வாழ்வியல் கூறுகளைப் பற்றியும் அரசமைப்பு முறைகளில் இவர்களின் பங்களிப்புகள் குறித்தும்  இவ்வாய்வுக்கட்டுரையில் காண்போம்.
தூதின் இலக்கணம்         
தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். தமிழ் இலக்கிய நூல்களான இலக்கண விளக்கம், பிரபந்தத்தீபிகை, முத்துவீரியம், இரத்தினச்சுருக்கம்நவநீதப்பாட்டியல் ஆகியவற்றில் தூது குறித்த  இலக்கணத்தைக் காணமுடிகின்றது. ஆனால் இது சங்ககாலம் தொட்டே வழக்கத்தில்  இருந்துவந்துள்ளது. மன்னர்கள் ஓலைச்சுவடிகளிலோ அல்லது பட்டுத்துணிகளிலோ செய்திகளை எழுதி தூதுவர்கள்ஒற்றர்கள் மூலமாகக் குதிரையில் அனுப்புவது  அக்காலத்தில்  வாடிக்கை.
தூதுவர்கள் 
               
தூது என்னும் தொழில் மிகவும் நல்லியல்புடைய ஒரு தொழிற்பிரிவாகும்.   இருநாட்டு மன்னர்களுக்கு இடையே பகை உண்டாகாமல் நல்லிணக்கத்தை ஏற்படுத்துபவரே தூதர் எனப்படுவர். தற்கால  வழக்கில் கூறினால் ‘Ambassador’ எனும் சொல் நிலைத் தூதர்களையும் ‘Envoy’  என்பது தற்காலகத் தூதரையும் குறிக்கும்.    தூதர்கள் கல்வி, போர், சந்து செய்வித்தல் (“ஓதல் பகையே தூதிவை பிரிவே”, தொல்.   பொருள்:25) என்னும் மூன்று காரணங்களை முன்னிட்டுத் தங்கள் தலைநகரை விட்டுப் பிரியலாம் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.  தூது உயர்ந்தோருக்கு உரியது.   உயர்ந்தோர் என்பதற்கு “ஒழுக்கத்தானும் குணத்தானும், செல்வத்தானும், ஏனையரினும் உயர்வுடையவராதலின் உயர்ந்தோர் ஆவர்”1 என்பது இளம்பூரணர் கருத்து ஆகும்.  தூதுத் தொழில் அரசியலிலும், போர்ச்சூழலிலுமே பெருமளவு நிகழ்ந்தது என்றாலும் அகவாயில்களாகத் தூது செல்வதும் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

சங்க காலத்தில் காணலாகும் புகழ்பெற்ற தூது அதிகமான் நெடுமானஞ்சியிடமிருந்து தொண்டைமானிடம் ஒளவையார் சென்ற தூதேயாகும். (புறம்.93) புறப்பாடல்களில் அரசர்கள் போர் குறித்த செய்திகளைச் சொல்லத் தூதுவரை அனுப்புவர்.   ஒருக்கால் மன்னன் போர் குறித்து வீரர் பலரும் வந்து சேருமாறு தூது விடுத்தான்.   தூதுவன் கூறிய செய்தியைக் கேட்டு வீரர் பலரும் திரண்டனர் எனப் புறநானூறு குறிப்பிடுகின்றது. (புறம். 284, 1-2), மேலும் பதிற்றுப்பத்து பாடலொன்றும் தூதுவரைப் பற்றி,

“ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று உரைஇ
இடுக திறையே புரவெதிர்ந்  தோற்கென
அம்புடை வலத்தர் உயர்ந் தோர் பரவ”            (பதிற்.  80:9-11)               
என ’நும்மைக் காக்குடம் பாதுகாவற் பணியை மேற்கொள்வோனாகிய என் இறைவனுக்கு நீரும் திறை இட்டுப் பணிவீராக’ என்று சொல்லி ‘உயர்ந்த பண்புடையவராகிய நின் தூதுவர் நின்னுடைய அருங்குணங்களை எல்லாம் பாராட்டி எடுத்துக்கூறுவர் என அரிசில் கிழார் இரும்பொறையினைப் பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.   இங்குத் தூதுவரைச் சிறந்த வலிமையானோர் என்றும் உயர்ந்த ஆற்றலுடையவர் என்றும் குறிப்பிடப்படுகின்றார்.
                வயலைக்கொடி போல வாடிய இடையினையும், வருத்தந்தோய்ந்த நடையினையும்  உடைய இளம் பார்ப்பான் இரவின்கண் வந்து உள்ளே சென்று சில சொற்களே சொன்னான்.  உடனே மதில் கோடற்கென்று வைத்திருந்த ஏணியையும், வாயில் கதவுக்கு வலியாக உள் வாயிற்படியிலே நிலத்தே வீழ இடும் மரமான சீப்பையும் களைந்துவிட்டனர்.   அதுபோன்றே வேந்தன் ஊர்ந்து செல்லும் யானையின் மணியும் களையப்பட்டது.   என்னும் கருத்தமைந்த பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது,

“வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே
ஏணியுஞ் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையு மணிகளைந் தனனே”         (புறம்.305)               
என்ற இப்பாடல் பார்ப்பான் தூது சென்றதற்குச் சான்றாக அமைந்துள்ளது.  வேந்தனொருவன் போருக்கு ஆயத்த நிலையில் இருந்தபொழுது, பார்ப்பான் சொன்ன செய்தியைக் கேட்டவுடன் ஏணியும், சீப்பும், யானையின் மணியும் களையப்பட்டன என்னும் செய்தியில் இருந்து பார்ப்பானும் தூது சென்றுள்ளனர் என்பது தெளிவு. இவர்கள் மட்டுமின்றி பாணர்கள், குறுநில மன்னர்கள், சீறூர் மன்னர்கள்.   புலவர்கள், முதலானோரும் தூது சென்றுள்ளனர்.   பண்டைய வேந்தர்கள் தம்முடைய ஆட்சி சிறக்க வேண்டி, நல்ல திறன் வாய்ந்த தூதுவர்களை நியமித்தனர்.    எனவே தூதருக்கும் – வேந்தருக்கும், தூதருக்கும் – அரசுக்கும்  இடையே நல்லுறவு இருந்ததால் இவர்கள் சங்க காலத்தில் மதிப்பு வாய்ந்து காணப்பட்டனர்.  எனவே   இவர்கள் முதல் நிலைத் தொழிற்பிரிவில் வைத்துப்போற்றப்பட்டனர்.

ஒற்றர்கள்               
பகை நாட்டின் / அண்டை நாட்டின் நிகழ்வுகளை அறிவதற்கு அரசர்கள் ஒற்றர்களைப் பயன்படுத்தினர்.  இவர்கள் ‘ஒற்றர்கள்’ அல்லது ‘வேவு பார்ப்போர்’ என அழைக்கப்பட்டனர். சந்தேகப்படாத மாற்று உருவத்துடன், பார்த்தவர்க்கு அஞ்சாமல், அறிந்ததை யாருக்கும் வெளிப்படுத்தாமல் இருப்பவனே ஒற்றன்.  பகை நாட்டின் திட்டங்கள், சூழ்ச்சிகள், அரசியல் நிகழ்வுகள் முதலானவற்றை அறிந்து அவற்றைத் தம் அரசர்களிடம் தெரிவித்தல் இவர்களின் பணியாகும்.
               
வேவு பார்ப்போரைத் தமிழ் மன்னர்கள் அதிக அளவில் பயன்படுத்தினர்.   இவர்களின் தொழில் ‘ஒற்று’ அல்லது ‘வேய்’ எனப்பட்டது.   நாட்டிலுள்ள நிலைகளை, மக்களின் நிலைகளை ஒற்றர்களின் மூலம் அரசு புரிபவன் அறிவானேயானால், அவன் மீதும் அரசின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துப் போற்றுவர்.  பிறநாடுகளுக்கு ஒற்றாடச் செல்வோர், பிறர் அறியாவண்ணம் உடை உடுத்தியும், பேசியும் பழகியும் நடித்தும் ஒழுகி வந்தாலும், சிலபோது பிறரால் அறிய நேர்வதுண்டு.   இந்நிலையில் துன்பத்தைத் தாங்கிக் கொள்ளத் துணிந்தும், உயிரைவிட துணிந்தும் தம் தொழிலைச் செய்வர்.
   
‘ஒற்றினாகிய வேயே’ (தொல் பொருள்:58) இதில் வேய் என்பது ஒற்றருடைய அறிக்கை, ஒற்று என்பது அவர்கள் செய்யும் தொழில் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.   புறத்தினையின் தொடக்க நிலையான நிரை கவர்வோரும், மீட்போரும் ஒற்றர்களை ஏவினர்.   இவ்வாறு “ஒற்றறிதல் நாட்டில் நெருக்கடி நிறைந்த காலங்களில் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் நிகழ்ந்து வந்துள்ளது”2.  எதிரிப் படைகளிடமிருந்து செய்திகளைத் திரட்டிவந்த ஒற்றர்க்கு நிறையப் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது.   மதுரைக்காஞ்சி குறிப்பிடும் ‘நாற்பெருங்குழுவில்’ஒற்றரும் ஒருவர் என்பார் நச்சர்.  

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் “அரசனின் அவையில் ஒற்றர்களுக்குத் தூதுவர்களைப் போல் அதிகாரமும், தகுதியும் வழங்கப்படவில்லை.   தூதர்கள் பொது நிர்வாக அதிகாரிகள், எனவே அவர்கள் மரியாதையாக நடத்தப்பட்டனர். ஆனால் “ஒற்றர்களோ ரகசிய வேவு வேலைப் பார்ப்பவர்கள்.   அவர்கள் அகப்பட்டால் உடனே கொல்லப்படுவர்”4  என்ற ராமச்சந்திர தீட்சிதரின் கருத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.
உறையூரை ஆண்ட நெடுங்கிள்ளி என்னும் சோழ மன்னன் இளந்தகன் என்னும் புலவர், ஒருவரை ஒற்றன் எனக்கருதிக் கொல்ல முற்பட்டான்.   (புறம்.   47) இதனை அறிந்த கோவூர்கிழார் கிள்ளிக்கு உண்மையினை எடுத்துக்கூறி அவ்விளந்தகனைக் காத்தார் என்பதை அறிய முடிகின்றது.
 அரசர் ஒரு செய்தியை அறிந்துவர மூன்று ஒற்றர்களை அனுப்புவர்.   அம்மூவருமே ஒருவரையொருவர் ஒற்றர் என அறியார்.   பின்னர் அவர்கள் மூவரும் அறிந்துவந்த செய்தியினைக் கேட்டு ஒப்பிட்டு உண்மையினை அறிவர். உள்நாட்டு மக்களையும் அயல்நாட்டு மக்களையும் மாறுவேடத்தில் வேவு பார்த்து வந்த இவர்கள் பல்வேறு வகைப்பட்ட சப்தங்களை ஏற்படுத்தி தங்களது செய்திகளைப் பரிமாறி வந்தனர்.    இவ்வாறாகத் தம் அறிவையும் திறமையும் பயன்படுத்திப் பணி செய்த ஒற்றர்களைப் பற்றிய சில குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.   எனவே இவர்கள் சமுதாயத்தில் மிக முக்கியத் தொழில்களில் தம் உயிரைப் பணையம் வைத்து ஒற்றர்களாகச் செயல்பட்டதால் இவர்கள் சங்க அடுக்கமைவுச் சமுதாயத்தில் முதல்நிலைத் தொழிற்பிரிவினர்களில் இருந்திருக்கலாம் எனக் கருத இடம் இருக்கின்றது.

குறிப்புகள்
1.இளம் பூரணர் (உரை), 1973, தொல்,பொருள்.28, கழகம், பக்.30.

2.நச்சினார்க்கினியார் (உரை), தொல், பொருள்.58. கழகம். சென்னை
3.நச்சினார்க்கினியார் (உரை),1974 பத்துப்பாட்டு, உ.வே.சாமிநாதையர் (பதி), ப.396. உ. வே. சாமிநாதர் நூல் நிலையம், சென்னை.

4.VRR.   Dikshiter : Mauryan polity, பக்.181.
5.https://www.tamilvu.org/ta/courses-degree-a031-a0311-html-a0311661-6941

பார்வை நூல்கள்
1.திவாகர நிகண்டு, திவாகரர்.

2.தமிழில் தூது இலக்கியம், முனைவர் வே.இரா.மாதவன்., அன்னம் பதிப்பகம், தஞ்சை-007.

3.பிரபந்தப் பாட்டியல் (மரபியல்-15), கு.சுந்தரமூர்த்தி, கழக வெளியீடு..

4.தொல்காப்பியம் (பொருளதிகாரம்), இளம்பூரணம், கழக வெளியீடு.
5.புறநானூறு, ஔவை துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம், சென்னை-14, 2015.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர். த. தினேஷ், 
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
வி. இ. டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

(வேளாளர் கல்வி நிறுவனம்)   ஈரோடு.


 

மழைக்காடும் மனிதமும் | சி.மேரி ஜீவிதா

மழைக்காடும் மனிதமும் சி.மேரி ஜீவிதா
ஆய்வுச்சுருக்கம்
  சமூகத்தில் ஒரு சிக்கல் முதிர்ந்து உச்சம் பெறும்போது அதனைக் களையும் வண்ணம் உருவெடுத்ததே இலக்கியங்கள்.இவ்விலக்கியங்கள் காலத்தின் தேவைக்கேற்பத் தன்னளவில் செயலாற்ற வேண்டிய கட்டாயத்துடன் தோற்றம் பெறுகின்றன. நவீனக் காலத்தில் சூழல் பாதுகாப்பின் அவசியம் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது.சூழல் என்பது உயிரியப் பன்மயம் என்பதை மறந்து விட்டது மனிதக் குலம்.உயிர்ம மண்டலத்தில் பல்லுயிர் ஓம்பல் நிலைத்து நிற்கும் போது தான் அவை நற்சூழலை நீடித்த முறையில் ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சி அறாது பார்த்து வரும்.
இயற்கையைப் பயன்படுத்தி அனைத்துத் தலைமுறைகளும் மகிழ்ந்து வாழ முடியும் என்ற பகுத்தறிவு மனிதரிடையே இல்லாமல் போய்விட்டது. தனது வாழ்நாளுக்கான மகிழ்ச்சியை மட்டும் கருத்தில் கொண்டு இயற்கையை சுய லாபத்திற்காக மனிதன் அழித்து வருகிறான். 
 இயற்கை வளங்களில் ஒன்றாகவும் இயற்கையையே பாதுகாக்கும் காரணிகளில் ஒன்றாகவும் விளங்கும் மழைக்காடுகள் தொடர்ந்து அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றன.மனித இனத்தின் சுயநலம், பேராசை, வியாபார நோக்கம், அரசியல், ஆடம்பரம்,அறியாமை போன்றவையே இதற்குக் காரணங்களாக அமைகின்றன.  உயிர்ச்செறிவு மிக்க மழைக்காடுகளின் அழிவுக்கான காரணங்களையும் விளைவுகளையும் ஆராய்ந்து அதைத் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் இவ்வாய்வின் வழி பெற முடிகின்றது.

முன்னுரை
  இலக்கியங்களே தொடக்கம் முதல் இன்று வரை மனிதக் குலத்தின் பிரதிபலிப்பாக இருந்து வருகின்றன. மனிதச் சமுதாயத்தின் அறிவுப்பரப்பும் ஆழமும் விரிந்து கொண்டே வருவதால் பல்வேறு துறை சார்ந்த இலக்கியங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சூழலியல்சார் சிந்தனைகள் படைப்புகளாக நவீனக் காலத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இயற்கையானது தன்னகத்தே நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு போன்ற ஐந்து காரணிகளை உள்ளடக்கியது. இவை ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவையும் கூட.இவற்றை பேணி பாதுகாக்காவிடில் பல்வேறு விபரீதங்களைச் சந்திக்கக்கூடும். இன்றளவிலும் அதை நம்மால் உணர முடிகின்றது. இயற்கையின் வளங்களில் ஒன்றான மழைக்காடுகள் வெகு நாட்களாக அழிக்கப்பட்டு வருவதைச் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் அவர்கள், “மழைக்காடுகளின் மரணம்”என்ற தனது படைப்பில் விளக்கியுள்ளார். அவரது கூற்றை சூழலியல்  நோக்கில் ஆராயும் பாங்கினைக் கட்டுரையில் காண்போம்.

சூழலியல் விளக்கம்
  ஓர் உயிரினம் தன்னைச் சுற்றியுள்ள காரணிகளுடன் நெருங்கியத் தொடர்புடையது. இந்தக் கூட்டமைப்பு தொடர்பைச் சுற்றுச்சூழல் என்று பொதுவாகக் கூற முடியும். சுற்றுச்சூழல் சார்ந்த அறிவியலைச் சூழலியல் (Ecology) என்று குறிப்பிடலாம். Ecology என்ற வார்த்தை Oikos என்ற கிரேக்கப் பதத்திலிருந்து தோன்றியது.Oikos என்றால் வீடு என்றும் logos என்பது அதைப்பற்றி அறிவது என்றும் அர்த்தம் கொள்ளப்படுகின்றது. 1868 இல் சூழலியல் என்ற வார்த்தையை முதலில்  ஹென்ஸ் ரெய்ட்டன் என்ற அறிஞர் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் (1866-1870) இல் எர்னெஸ்ட் ஹெக்கேல்  என்பவரே சூழலியலுக்கான இலக்கணத்தை வகுத்தவர் ஆவார். அவரது கூற்றுப்படி,
 
“சூழலியல் என்பது ஒர் உயிரினத்திற்கும் அதனைச் சூழ்ந்துள்ள  உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகளுக்கும் இடையிலான உறவு முறையாகும்” என்று கூறுகிறார்.
 ( சுற்றுச்சூழல் கல்வி,ப.எ.1 )
தமிழ் இலக்கியங்களில் சூழலியல்
சங்க இலக்கியங்கள் பலவும் ஆதி சமூகத்தினர் இயற்கையோடு இணைந்த வாழ்வை மேற்கொண்டதை எடுத்துரைக்கின்றன. நம்முடைய மூதாதையர்கள் இயற்கையை எப்போதும் தங்களது அக வாழ்க்கைக்குப் புறமாகப் பார்த்ததில்லை . சூழல் சார்ந்த தெளிவான அறிவுடன் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்திருந்தனர்.

தொல்காப்பியம்
தமிழின் தலைசிறந்த இலக்கண நூலாக விளங்குவது தொல்காப்பியம். இதனைத் தமிழ் உலகிற்கு அளித்த தொல்காப்பியர் ஐந்திரம் படைத்தவராக விளங்கியவர். ஐந்திரம் என்பது நிலம், நீர்,வளி, விசும்பு, நெருப்பு ஆகியவற்றை பற்றிய ஆழ்ந்த அறிவுடைமையாகும்.இதனாலேயே,

“நிலம் தீ நீர் வளி விசும்பாடைந்தும் கலந்த மயக்கம் உலகம்”    (தொல்.பொரு.635)
என்று கூறியுள்ளார். உலகம் தோன்றிய முறையை ஐம்பூதங்களின் இயல்பான சேர்க்கை என்று கூறியுள்ளார்.
தொல்காப்பியர் இன்றைய சூழலியல் பார்வையை அன்றே திணைக் கோட்பாட்டில் விளக்கிச் சென்றுள்ளார்.பொருள் அதிகாரத்தில் திணையியல் கோட்பாட்டை நிலத்தின் அடிப்படையில் வகுத்தளித்துள்ளார். திணை என்பதை வாழும் இடம்,புரியும் ஒழுகலாறு என்ற நோக்கில் ஐவகை திணையாகவும்,நால்வகை நிலமாகவும் வகுத்துள்ளார்.முதல், கரு, உரி என்ற மூன்று பொருட்களாக அந்நிலத்துக்கும் அங்கு வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பை விளக்கியுள்ளார். அவரது கருத்து இன்றைய சூழலியல் கருத்தோடு ஒத்திசைவாக அமைந்துள்ளது.

புறநானூறு
தொல்காப்பியரின் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக ஐம்பூதங்கள் சேர்ந்ததே இயற்கை என்னும் கருத்தை புறநானூறும் எடுத்துரைக்கின்றது.
“மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வழித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் 
என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை”   ( புறம்.பா.எ.2-5 )
திருக்குறள்
உலகப் பொதுமறை என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திருக்குறளிலும் சூழலியல் சார்ந்த சிந்தனைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

“மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய  தரண் ”  (திரு.பொரு.742)
என்பது வள்ளுவரின் குறள். இதில் நிலம், நீர், மழை, அடர்ந்த நிழல் உடைய காடு இவை நான்கும் அமைந்தது அரண் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.இவை உலக உயிர்களுக்குப் பாதுகாப்பாக விளங்குவதைச் சுட்டியும் காட்டுகின்றார்.
இதுபோன்று நம் இலக்கியங்கள் பலவும் இயற்கையின் தன்மையையும் சிறப்பினையும்  எடுத்துரைப்பதாக அமைந்துள்ளன.

மழைக்காடுகள்
காடுகள் பல்வேறு வகைப்படுத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக மழைக்காடுகள் விளங்குகின்றன. இக்காடுகள் ஓர் உயிர்மப் புதையல் என்று சூழலியல் எழுத்தாளர் நக்கீரன் கூறுகிறார். அழிந்துவரும் மழைக்காடுகள் பற்றி அவர் கூறுகையில், அமேசான் மற்றும் போர்னியோ மழைக்காடுகள் பற்றிச் சுட்டிக்காட்டி விளக்குகிறார்.
இக்காடுகள் அதன் அமைவு முறையால் பல்லுயிர் வாழக்கூடிய இடமாகவும் சுற்றுச்சூழலை வளமுடன் பாதுகாக்கக்கூடிய மிகச்சிறந்த காரணியாகவும் இருக்கின்றன. அதனைக் கீழ்க்காணும் பட்டியல் மூலமாக அறிய இயலும்.
மழைக்காடும் மனிதமும்
(மழைக்காடுகளின் மரணம்.ப.எ.10,22)
மழைக்காட்டின் அமைவு முறை
மழைக்காட்டின் மரங்கள் 200 அடி உயரம் வளரக்கூடியவை. உயரடுக்கு,கவிகை அடுக்கு, தாளடுக்கு, தரை அடுக்கு என்னும் நான்கு அடுக்குகளை உடையது.உயர்ந்த மரம், அதற்கடுத்தார் போல் குட்டை மரங்கள், அதற்கடுத்தார் போல் புதர் செடிகள், அடுத்ததாக செடி இனங்கள், தரையை மூடி இருக்கும் மூடாக்கு பயிர்கள் ,பின்னர் தரைக்குள் உள்ள கிழங்கு வகைகள், நீண்ட  கொடி இனங்கள் என்று  இங்கே வளர்கின்றன.இந்த அமைவு முறையால் சூரிய ஒளி ஊடுருவாத படி எப்போதும் நிழல் பரவி குளிர்ச்சியான சூழலையும் கொண்டு விளங்குகின்றன. இவ்வாறு வளிமண்டலம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் இக்காடுகளில் எப்போதும் லேசான தூரலோ மழையோ பெய்து கொண்டே  இருக்கும். ஆகவே தான் இக்காடுகள் மழைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.இத்தகைய மழைக்காடுகளை  நம் இலக்கியங்கள் அணிநிழற்காடு என்று குறிப்பிடுகின்றன.    (திரு.பொரு.742)
  இதனை,
“காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி  வருக்கை போழ்ந்து
தேமாங்கனி சிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங்கத மென்றிசையில் திசை போயதுண்டே”
    என்று  தென்னை (தெங்கு)பாக்கு (கமுகு) பலா (வருக்கை) மா, வாழை என்ற ஒரு வகையான அடுக்கு முறையைக் கூறி,சீவக சிந்தாமணியில் ஏமாங்கத நாட்டின் வளத்தை  திருத்தக்கத்தேவர் பாடியுள்ளார்.
  (திணையியல் கோட்பாடு.ப.எ. 40-42 )
மழைக்காட்டின் பயன்கள்
      மழைக்காட்டின் அமைவு முறையால் மரங்களிலும் புதர்களிலும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. மேலும் நீர் நில வாழ்விகளும் அதிகப்படியான நுண்ணுயிர்களும் வாழ்கின்றன. இங்குள்ள மரங்களின் அடர்த்தியால் மழை பெய்யும் போது மொத்தமாகத் தரையில் விழாமல் துளித்துளியாக இறங்குவதால் நிலத்தடி நீர் வளம் பாதுகாக்கப்படுகின்றது.மேலும் மரத்தில் உள்ள இலைகள் மற்றும் உயிரினங்களின் கழிவுகள்  கலந்து  தரைப்பரப்பில் சத்துள்ள உரமாக உருவாகின்றன. இதனால் அங்குள்ள மண், வளமானதாக உருவாகின்றது. ஆனால் இத்தகைய உரம் உருவாகி மண் வளம் பெறப் பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகின்றது. மேலும் தரைப்பரப்பு முழுவதும் மரங்களின் வேர்களாலும் செடிகளும் போர்த்தப்பட்டு இருப்பதினால் மண்ணரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. இத்தகைய மண்ணரிப்பில்லா இடத்தில் விழும் மழைநீரானது நிறமற்று காணப்படும்.இதையே வள்ளுவர் மணி நீர் என்று குறிப்பிடுகிறார்.        (திரு.742)
மழைக்காட்டின் மரணம்
காடழிப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பவை, பெரு வணிக நிறுவனங்களே ஆகும். இந்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி உலக நாடுகளுக்கிடையே வியாபார அரசியல் நடைபெற்று வருகின்றது. இதில்  நிதி நிறுவனங்களுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. இவர்களது சூழ்ச்சி வலையில் அறிந்தும் அறியாமலும் விழுந்த ஏழை நாடுகள் சுற்றுச்சூழலின் வில்லன்களாகப் பார்க்கப்படுகின்றனர். வருமானத்திற்காக மழைக்காடுகளை அழிப்பதால் ஏழை நாடுகளுக்கு இப்பெயர்.ஆனால் வெட்டப்பட்ட மரங்களை  இறக்குமதி செய்யும் வளர்ந்த நாடுகளுக்கோ இப்பெயர் பொருந்துவது இல்லை.

தொழிற்சாலைகள்
அமேசான் காட்டின் ஒரு பகுதியில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் சில ஆயிரம் மைல்கள் அழிக்கப்பட்டன. பின் அந்த ஆலைகள் இயங்குவதற்கு மின்சாரம் தயாரிக்க மரக்கரி எடுப்பதற்காக தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டன.
 
காகித ஆலை
காகித ஆலை அமைக்கவும் மேற்ச்சுட்டியவாறு   அமேசான் காடுகள் அழிக்கப்பட்டன. சுமார் 5600 சதுர மைல்கள் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன.இதுபோன்று பல மழைக்காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

ஆடம்பர நுகர்வு கலாச்சாரம்
கார் தயாரிக்க பயன்படுத்தப்படும் எஃகு போன்ற பொருட்களை தயாரிக்கும் ஆலைகள் இயங்குவதற்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. பணக்காரர்கள் சொகுசுப் பயணம் செல்ல தொடர்ந்து மரங்கள் இவ்வாறு வெட்டப்படுகின்றன.பியானோவின் தாளக்கட்டைகள் செய்ய ‘ஜெலுத்தோங் ‘என்ற மரம் வெட்டப்படுகின்றது. பியானோ இசைக்கப்படும் போது அதன் இன்னிசையில் நாம் மெய் மறக்கலாம். ஆனால் அதன் பின்புறம் உள்ள பல உயிரினச்  சூழலுக்கு தீங்கு விளைவிக்கிறோம் என்பதை மனிதர் அறியாதது போல் செயல்படுகின்றனர்.

கனிம வளங்கள்
நாம் பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் கனிமங்களால் ஆனது. உலோகக் கனிமங்கள், உலோகம் அல்லாத கனிமங்கள் இவற்றால் தயாரிக்கப்படும் பொருள்களுக்காகவும் அதன் பயன்பாட்டிற்காகவும் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன.

மேய்ச்சல் நிலங்கள்/ பண்ணை அமைப்பு
உணவு உற்பத்தி செய்யும் மேய்ச்சல் நிலங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்படுகின்றன. இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கப்பட்டு வளர்ந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் அதிக லாபம் அடைவது வணிக நிறுவனங்களே. மேய்ச்சல் நிலங்களுக்காக அழிக்கப்பட்ட காட்டின் பரப்பும் கால்நடைகளின் மேய்ச்சலால் வளம் இழந்த காட்டின் பரப்பும்  தரிசாக மாற்றப்படுகிறது.

வேளாண்மை
சோயா உற்பத்தி மற்றும் கொழுத்த வாழைப்பழங்களுக்காகவும் இக்காடுகள் அழிக்கப்படுகின்றன. அழிக்கப்பட்ட காட்டின் நிலப்பரப்பு அதிக உரச்செறிவு மிக்கதாக இருக்கும். இந்நிலத்தில் பயிரிடப்படும் பொருட்கள் அதிக சத்துள்ளதாகவும் அதிக விளைச்சலையும் கொடுக்கும். ஆனால் நாளடைவில் நிலத்தின் வளம் குறைந்து விடும். பின் அந்நிலங்கள் கைவிடப்பட்டு வேறு இடங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு  விளைநிலங்களுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதை,
”வேளாண்மைக்காகக் காடுகளை அழிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் போதுமான நிலங்கள் வெளியே உள்ளன” என்று கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த டேனியல் பிரிண்டிஸ் கூறியுள்ளார். இதிலிருந்து வேளாண்மை செய்ய வேண்டிய இடத்தை விட்டுவிட்டு காட்டை அழிப்பது மூடத்தனம் என்பது தெளிவாகிறது. (மழைக்காடுகளின் மரணம்.ப.எ.24 )
காட்டுத்தீ
காட்டுத்தீயினால் மழைக்காடுகள் அழிவது சொற்ப அளவில்  மட்டுமே. ஆனால் வியாபார அரசியலால் அழிவது தான் அதிகம். இயற்கையாக ஏற்படும் காட்டுத் தீயினால் விபரீதம் ஏற்படுவதைவிட நன்மைகளும் உண்டு. எவ்வாறெனில் காட்டில் உள்ள விதைகளில் சில வெப்பம் படும்போது மட்டுமே  விதை வெளிப்பட்டு முளைப்பு ஏற்படும்.மேலும் காட்டுத் தீயினால் எரியும் தாவரங்கள் சொற்ப அளவில் மட்டுமே உண்டு. அவையும் சாம்பல் உரமாக மக்கிப் பிற தாவரங்களுக்கு உரமாக மாறுகின்றது. செயற்கையாக ஏற்படுத்தப்படும் காட்டுத் தீக்குப் பின்னால் அப்பகுதியை பாதுகாப்பற்றது என அறிவித்து அதைக் கையகப்படுத்தும் வியாபார அரசியல் ஒளிந்துள்ளது.அநியாயமாகப் பல காட்டுவாழ் உயிரினங்கள் தீயில் கருகி மடிகின்றன. மேலும் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் பழங்குடிகளின் வாழ்விடம் பறிக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதரமும் முடக்கப்பட்டு தினக்கூலிகளாக மாற்றப்படுகின்றனர்.

காடழிப்பின் விளைவுகள்
மழைக்காட்டில் வெட்டுமர நிறுவனங்களால் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பின் எஞ்சிய துண்டுக் காடுகள் “பாதுகாக்கப்பட்ட கான் பகுதி” என்று அழைக்கப்படுகின்றன.ஆனால் இவற்றால் எந்த பயனும் இல்லை. காடு சுருக்கமடைவதால் உயிரினங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே முடக்கப்படும் கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் விலங்குகளின் வலசைப் பாதைகள் மாற்றம் பெறுகின்றன.மேலும் மகரந்தச் சேர்க்கை, விதைப்பரவல், உணவு சுழற்சித் தடை போன்றவை நடைபெறுகின்றது. மேலும் ஓடைகள், ஆறுகள் மாசுபடுகின்றன அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. 
வெட்டப்பட்ட காட்டிற்குள் நேரடியாக வெயில் தாக்குவதால்  தாவரங்கள் அழிவைச் சந்திக்கின்றன.ஒரு பெரிய மரத்தினை வெட்டி அது கீழே விழும் போது அதைச் சுற்றியுள்ள பல மரங்களும் தாவரங்களும் நுண்ணுயிர்களும் அழிக்கப்படுகின்றன. மேலும் மரங்களை நம்பி வாழ்கின்ற உயிரினங்கள் வாழ்விடத்தை இழக்கின்றன. இவ்வாறு  ஒரு சங்கிலித் தொடர்பு போன்று பல உயிர்களுக்கான அழிவு ஒரு மரத்தை வெட்டும்போது நிகழ்கின்றது.
இதுபோன்று செய்துவிட்டு மறு காடுவளர்ப்பு என்றும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்றும் பசப்புவது வியாபார அரசியலின் உச்சகட்ட தந்திரம் என்றே கூறலாம்.  இவ்வாறு ஒட்டுமொத்த உயிர் மண்டலத்திற்கும் எதிரான செயலைச் செய்வதினால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. பருவநிலை மாற்றத்தால் பல்வேறு வகையான இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.
ஒரு மரத்தை வெட்டி அதன் தலைமுறையை அழிப்பது  நாம் ஒவ்வொருவரும் நமது தலைமுறையை அழிக்க இப்போதே ஆயுதம் தயார் செய்து வைக்கிறோம் என்பதில் ஐயமில்லை.

கானகத்தின் மீட்பு
இவ்வுலகம் பன்மயத்தன்மை கொண்டது. அதுபோல ஒரு காடு நெடுங்காலம் தொடர்ந்து இயங்க வேண்டுமானால் அங்குள்ள மரங்கள், செடிகள், கொடிகள், உயிரினங்கள், நுண்ணுயிரிகள் அனைத்தும் வாழ வேண்டும் இல்லையென்றால் அதன் நிலை மாறி காடே அழிந்து விடும்.இது அனைத்து அமைப்புகளுக்கும் பொருந்தும். இதனை வலியுறுத்தும் விதமாக வள்ளுவர்,

“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”    (குறள் 322)
என்று கூறியுள்ளார்.உயிரியப் பன்மயத்தில் பல்லுயிர் ஓம்பி, இயைந்து வாழ்வதே சிறப்பான வாழ்வாகும்.
காடுகளை அழித்து வருமானம் ஈட்டுவதை விட காடுபடு பொருட்கள் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கும். இதனை,

“சிறு பொருள்களான பழங்கள் கொட்டைகள் நார் பஞ்சு மூலிகை வாசனை பொருட்கள் நச்சுப் பொருட்கள் மூங்கில் பிரம்பு என்னை ரப்பர் தேன் அரக்கு பிசின் இறந்த விலங்குகளின் தந்தம் மற்றும் தோல்” போன்ற 18 வகையான பொருட்களில் இருந்து அதிக வருமானம் ஈட்ட முடியும் என்கின்றனர் வல்லுநர்கள் .(மழைக்காடுகளின் மரணம்.ப.எ.9 )
முடிவுரை
இவ்வுலகம் தொடர்ந்து இயங்கக்கூடிய ஒரு இயங்கு தளம். இதில் அனைத்து உயிரினங்களும் அதற்கான பங்கினை ஆற்றி வருகின்றன.  இதில் ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை.  ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகவும்இருக்கின்றன.
ஆறறிவு படைத்ததால் மற்ற உயிரினங்களில் இருந்து மேலானவன் என்ற நிலையை மனிதன் அடைகிறான். ஆனால் அறிவியல், வளர்ச்சி என்ற எந்திரத்தனமான ஆற்றலினால் அறமற்ற அறிவு  நிலையை அடைந்து விட்டான். இயற்கை விதிகளை மறந்து விட்டு செயற்கைத் தன்மையான வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான். இந்நிலையில் இருந்து மீண்டு அனைத்து உயிரினங்களையும் மதித்து போற்றுகின்ற மாண்புடன் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வானாயின் நிகழ்காலமும் எதிர்காலமும் சிறப்பானதாய் அமையும்.

துணைநூல் பட்டியல்
முதன்மை நூல்
1.நக்கீரன்    –  மழைக்காடுகளின் மரணம்
                            
முதல் பதிப்பு – டிச. 2021
                            
வெளியீடு  – காடோடி பதிப்பகம்
                            
நன்னிலம் – 610105
, திருவாரூர் மாவட்டம்

துணைமை நூல்கள்
1 .  சுற்றுச்சூழல் கல்வி
      டாக்.சுசிலா அப்பாத்துரை
     முதல் பதிப்பு –  அக்.2005
     பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட் இராயப்பேட்டை
     சென்னை –  14

2.  திணையியல் கோட்பாடு
     பாமயன்
    முதற்பதிப்பு – நவ. 2012
    வெளியீடு  – தடாகம்
    திருவான்மியூர்
    சென்னை – 41

3. திருக்குறள்
    மாணிக்கவாசகன்,ஞா
    உமா பதிப்பகம், 58
    ஐயப்ப செட்டி தெரு
   மண்ணடி
   சென்னை- 600001 

4.தொல்காப்பியம் (தெளிவுரை )
    புலியூர் கேசிகன்
5. புறநானூறு ( மூலமும் உரையும் )
    புலியூர் கேசிகன்


 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சி.மேரி ஜீவிதா,
முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),
டாக்.என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,   
காளப்பட்டிகோயம்புத்தூர் – 48.
 

நிதர்சனம்|கவிதை|முனைவர் த. சுதாமதி

நிதர்சனம் முனைவர் த. சுதாமதி

📜 நானும்


எனது எண்ணங்களும்


ஒன்றாகவே பயணிக்க


ஒவ்வொரு நாளும்


ஓடிக்கொண்டிருக்கின்றோம்..!


 

📜 எனக்கு  வியப்புகள் பல உண்டு!


பல்வேறு சந்தர்ப்பங்களில்


துணிச்சல் மிக்கவர்கள்


வீரமான முடிவையும்


உயிரை துச்சமாக


மதிக்கும் மனதையும்


கொண்டவர்களாகவே


உள்ளார்கள்..!


 

📜 எனது


நம்பிக்கையும்


நான் கொண்ட


பார்வையும்


பலமானதுதான்..!


 

📜 ஆனாலும்!


சில நேரங்களில்


என்முன் தோன்றும்


மாயையை,


வாழ்வின் சூட்சமத்தை


அலங்கரிக்கவோ


நிறுத்தவோ


போராடுகிறேன்..!


 

📜 என்னுடைய


ஆத்ம மனத்திற்குள்


நிற்கும்


கம்பீரமானவர்கள் என்ற


எனது கணிப்புகள்


அனைத்தும்


தவிடு பொடி ஆகி விடுகிறது


உடற்கூறு ஆய்வின் போது..!


 

📜 நான்கு பேர்


முன்னிலையில்


நிர்வாணமாகக் கிடத்தப்படுவோம்


என்ற அச்சத்தினால்..!


 

📜 மீண்டும் நொறுங்குகிறேன்!


மீண்டும் அழுகின்றேன்!


மீண்டும் துவண்டு போகிறேன்!


நான்தான் வலிமையான


பெண்ணாச்சே..!


 

📜 பெண்ணென்றால்


வீழ்வதற்காகப் பிறந்தவளா?


வீழ்த்தப்பட…


கிள்ளி எறிய …


நான் ஒன்றும் பூவல்லவே..!


 

📜 ஆதி புருஷனானாலும்


எம் புருஷனானாலும்


எப்பேர்ப்பட்ட


எமகாதர்களையும்


எதிர்த்து நின்று


போரிடவே – மனம்


எண்ணுகிறது..!


 

கவிதையின் ஆசிரியர்

முனைவர் த. சுதாமதி


துறைத்தலைவர் ,

வணிக நிர்வாகவியல் துறை,

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


சேலம்-05.

 

அம்மாவின் கைவளையல்|கவிதை|ச. கார்த்திக்

அம்மாவின் கை வளையல் - கார்த்திக்

          தீர்வு


📜 நான் புத்தகத்தைத்


திறந்து வைத்தேன்


எனக்கு ஐயத்தை


எடுத்து வைத்தது..!


 

📜 நான் எழுத ஆரம்பித்தேன்


எனக்குச் சிந்தனையைத்


தேட வைத்தது..!


 

📜 நான் கண்ணீர்


எடுத்து வைத்தேன்


எனக்கு மழைநீர்


எடுத்து வைத்தது..!

 

📜 
நான் ஏரிகளில்


கட்டிடம் கட்டினேன்


மழை நீர்


செல்வதற்கே வழி இல்லை!


மழை வந்தால்
 

ஏரிகள் நிறைவதல்ல


என் வீடு நிறைகிறது!


 

📜 நீ இருக்கும் இருப்பிடமே!


நான் இருக்கும்


இருப்பிடம் அல்ல !


நீ பத்து மாடிக்கட்டிடத்தில் இரு !


நான் ஒன்பதாவது மாடி வரை !


 

📜 நான் சில நாள் இருப்பேன்


நான் சென்ற பிறகே !


நீ இரு


வருடத்திற்கு ஒரு முறை நான்


என்னுடைய வீடு தேடி வருவேன்..!


 

📜 என்னை வைத்தே
 

கண்ணீர் வேண்டாம்


உனக்கு, எனக்கு தீர்வு வேண்டும்!


 

         உண்மை


📜 காலத்திற்கு என் வீடு


தேடி வருகிறேன் !


சாலை ஓரம்


வீட்டிற்கு புகுந்த


மழை நீர் !


தன்னுடைய இருப்பிடம்


தேடி அலைகிறதே


இந்த பெரு வெள்ளம்..!


 

           கவிதை

📜 எழுதி எழுதிக் கொண்டேன்


எழுதி முடியவில்லை


திருந்தி திருந்திக் கொண்டேன்


திருந்தி முடியவில்லை


என்னுடைய குப்பைத்தொட்டி


நிறைந்ததே


அப்பொழுதே


என்னுடைய கவிதை


முழுமை பெற்றது.


 

அம்மாவின் கைவளையல்


📜 நான் வாழ வேண்டும்


நினைத்தே பருகினாள்


இப்போது !


நான் பருகினேன்


என் தாயின் முகத்தில் மகிழ்ச்சி


ஆனால்


தாய் உண்ண வில்லை!


நான் அறியவில்லை!


 

📜 என் தாய் நாள்தோறும்


வேலைக்குச் சென்றால்


நான் தினந்தோறும்


பள்ளிக்குச் செல்வேன் !


 

📜 என் அம்மாவின்


மூச்சி


அந்த அடுப்பின் புகையில்


கலந்தே


எரிய தொடங்குகிறதே !


 

📜 என் வீட்டின் சுவர்களிலே


சிறு சிறு சேமிப்பு


எங்க அம்மாவின்


கை வளையல் !

 

📜 என் தாயின் செயலே


நான் இந்த கவிதை


எழுதுவதற்கு !


 

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்,


முதுகலைத் தமிழ் முதலாமாண்டு,


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),


திருப்பத்தூர்.

கொங்கு நாடு|ஆய்வுக்கட்டுரை|வெ. கெளதம்

கெளதம் கொங்கு நாடு
முன்னுரை
               
     பழந்தமிழகம் சேர நாடு சோழநாடு பாண்டி நாடு என முப்பெரும் பிரிவுகளாக இருந்தது. சேர சோழ பாண்டிய நாடுகளேயன்றித் தமிழகத்தே கொங்கு நாடு,தொண்டை நாடு என்று இரு பிரிவுகள் உண்டு.இவற்றுள் கொங்கு நாடு என்னும் பிரிவு தொன்று தொட்டு இருந்து. சேர நாடு முதலிய 5 முறையே சேர மண்டலம், சோழ மண்டலம்,பாண்டிய மண்டலம், தொண்டை மண்டலம் எனவும் பெயர் பெற்று விளங்கியது.

கொங்கு நாடு
               
கொங்கு என்பதற்கு பல பெயர்கள் உண்டு. தேன் பூந்தாது குரங்கு என்று பெயர் உண்டு. குறிஞ்சி நிலம் முல்லை வளம்,மருதம் நிலமும் மிகுந்து காணப்பட்ட நாடு, மலையும் காடும் நிறைந்த நாடு தேன் மிகுந்த நாடு கொங்கு நாடு என்ற புகழ் பெற்றது. குன்று செழுநாடு என்றே சங்க கால புலவர்கள் புகழ் பாடி மகிழ்ந்தனார்.”குன்றும்,பல பின்னொழிய வந்தனன்” என்றனர். தேனும், பூந்தாதுகளும், குரங்குகளும் குறிஞ்சி நிலத்துக்குரியவை என்பர்.

சங்க இலக்கியத்தில் கொங்கு நாடு
”கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத்.தும்பி” (குறுந் *1)
இறையனார் பாடல் கொங்கு என்ற சொல்லைத் தேன் என்று பொருள் கொண்டு பாடினர். சிறுபாணாற்றுப் படையில்,

“கொங்கு கவர் நிலமும், செங்கண்சேல்” (சிறுபா*184)
எனக்கூறும். தேனை நுகர்கின்ற வண்டு என இதற்கு உ.வே.ச. உரைகூறினார்.  கொங்கு முதிர்நறு விழை” (குறிஞ்*83) என்ற குறிஞ்சிப்படல் பூந்தாது என்ற பொருளில் கூறியுள்ளார். தேன்நிறைந்த நாட்டை, கொங்குநாடு என்றே வழங்கினர். கொங்குநாட்டு அமைப்பு சங்ககாலத்திலேயே அமைந்துவிட்டது என்றும் கூறலாம்.
“கொங்கில் குரும்பில் குரக்குத்தளியாய்”   – ஊர்த்தொகை
“கொங்கே புகினும் கூறை கொண்டா றலைப்பாரில்லை” – அவிநாசித் தேவாரம்
“கொங்கில் அணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருனானை”  – பேரூர் கோவில் திருப்பதிகம்
“கோதைநனி யாண்ட தொரு கொங்குவள நாடு”
               
என்று அருணகிரிநாதர் பாட பின் திருப்பேரூர் புராண  ஆசிரியர் வர்ணித்து பாடியுள்ளார். அவிநாசிப்புராணம், கரூர்ப் புராணம், பவானிப்புராணம், திருச்செங்கோடுப் புராணம்,திருமுருகன்பூண்டிப்புராணம்      முதலியபுராணங்களில் கொங்கு நாடு பற்றி அருணகிரிநாதர் தனது பாடல்களில் பாடியுள்ளார்.

கொங்கு நாட்டின் எல்லைகள்
                 
கொங்குநாடு பழம்பெரும் நாடாகவும் பல சிறப்புகள் பெற்ற நாடாகவும் விளக்குகிறது. மேலும் பல குன்றுகளையும் காடுகளையும் கொண்டு மலை வளம் சிறந்த நாடாக திகழ்கிறது. நான்கு புறமும் மலைகளை அரனாக கொண்டு விளக்கு   பழனி மலையும்,மேற்கில் வெள்ளி( வெள்ளியங்கிரி)மலையும், வடக்கில் தலைமலை, பெரும்பாலை கிழக்கில் குளித்தலை,மதில் கரை என்று சொல்லப்படுகின்ற மதுக்கரையையும் எல்லையா கொண்ட கொங்குநாடு விளங்குகிறது. கொங்கு சோழர்கள் ஆட்சியில் கொங்கு நாடு ஏழு மண்டல பிரிக்கப்பட்டிருந்தது.கொங்கு நாட்டை அதிராச மண்டலம் என்று பிரித்தனர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு தோன்றியது காலகட்டில் இசைய நகர பேரரசு கொங்கு நாட்டை 24 நாடுகளாக பிரித்தது நாயக்க மன்னர்கள் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தார்கள்  என்ற செய்தியும் உண்டு. இலக்கியங்கள் ஆவணங்களும் பிற்கால கல்வெட்டுகளும் குறிப்புகளை தருகின்றன

கொங்கு மண்டல 24 நாடுகள்
               
கொங்கு நாட்டில் 24 நாடுகளும் இணை நாடுகளும் இணைந்துள்ளன என்பது பற்றி கொங்கு மண்டல சதகம் குறிப்பிட்டுள்ளது. அவை தற்கால அமைப்புப்படி கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், பல்லடம், பழனி, தாராபுரம், தர்மபுரி ஆகியன கொங்கு நாட்டில் அடங்கி இருந்தன.

1. பூந்துறை நாடு – ஈரோடு, திருச்செங்கோடு, வட்டங்கள்
2. தென்கரை நாடு – தாராபுரம், கரூர், வட்டப்பகுதிகள்
3. காங்கேய நாடு – தாராபுரம், காங்கேயம் பகுதிகள்
4. பொங்கலூர் நாடு – பல்லடம், தாராபுரம் வட்டப்பகுதிகள்
5. ஆரை நாடு – கோவை, அவினாசி, வட்டப்பகுதிகள்
6. வாரக்கா நாடு – பல்லடம், பொள்ளாச்சி வட்டப்பகுதிகள்
7. திருஆவின் நன்குடி நாடு – பழனி, உடுமலை, வட்டப்பகுதிகள்
8. மணநாடு – கரூர், வட்டம் தெற்கு பகுதி
9. தலையூர் நாடு – கரூரின் தெற்கு, மேற்குப் பகுதிகள்.
10. தட்டயூர் நாடு – குளித்தலை வட்டம்
11. பூவாணிய நாடு – ஓமலூர், தர்மபுரி வட்டப்பகுதிகள்
12. அரைய நாடு – ஈரோடு, நாமக்கல், பகுதிகள்.
13. ஒடுவங்கநாடு – கோபி வட்டம்
14. வடகரைநாடு – பாவனி வட்டம்
15. கிழங்கு நாடு – கரூர், குளித்தலை வட்டம்
16. நல்லுருக்கா நாடு – உடுமலைப்பேட்டை
17. வாழவந்தி நாடு – நாமக்கல் வட பாகம், கரூர்
18. அண்ட நாடு – பழனி வட்டம் , தென்கீழ்ப்பகுதி
19. வெங்கால நாடு – கரூர் வட்டம் , கிழக்குப்பகுதி
20. காவழக்கால நாடு – பொள்ளாச்சி வட்டம்
21. ஆனைமலை நாடு – பொள்ளாச்சி தென்மேற்கு
22. இராசிபுர நாடு – சேலம், ராசிபுரம், கொல்லிமலை
23. காஞ்சிக் கோயில் நாடு – கோபி, பவானிப் பகுதி
24. குறும்பு நாடு – ஈரோடுப் பகுதி
  
என்றவாறு கொங்கு மண்டலம் 24 பகுதிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

கொங்கு நாடு மலைகள்
               
ஒதியமலை, குருந்தமலை சிரவணம் பட்டிமலை, மருதமலை, ரத்தினகிரி, பாலமலை, பெருமாள்,வெள்ளியங்கிரிமலை, ஆனைமலை, பொன்மலை, திருமூர்த்தி மலை, செஞ்சேரிமலை  அழகுமலை, குமார மலை ஊதியூர்மலை, சிவன் மலை, சென்னிமலை, கைதித்தமலை, அலகுமலை,பெருமாள் மலை, தவளகிரி, குன்றத்தூர், பச்சை மலை, பவளமலை, பாலமலை,நாக மலை,ஊராட்சிக் கோட்டை மலை,மாதேசுவரன் மலை, சங்ககிரி, மோரூர் மலை, திருச்செங்கோடு, கொங்கணமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஏற்காடு, கந்தகிரி நாமக்கல் – கொல்லிமலை, கபிலர் மலை, நைனாமலை, தான்தோன்றி மலை, வெண்ணெய் மலை, புகழிமலை,ஐவர் மலை, பழனி மலை ,கொண்டல் தங்கி மலை என்று பல மலைகளையும் இயற்கை வளங்ளோடு கொண்டுள்ளது

கொங்கு நாட்டுக் கோட்டைகள்   
கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கொள்ளேகால், தணாய்க்கன், பொள்ளாச்சி, ஆனைமலை, திண்டுக்கல், தாராபுரம், பொன்னாபுரம், பெருந்துறை, எழுமாத்தூர், ஈரோடு, காங்கேயம், கரூர், விஜயமங்கலம், அரவக்குறிச்சி, பரமத்தி, பவானி, மோகனூர், நெருஞ்சிப்பேட்டை, மேட்டூர், சரம்பள்ளி ,காவேரிபுரம், சேலம், தகடூர், ராயக்கோட்டை, அமதன் கோட்டை, ஓமலூர், காவேரிப்பட்டினம், தேன்கனிக்கோட்டை,  பெண்ணகரம், பெரும்பாலை, சோழப்பாவு, தொப்பூர், அரூர், தென்கரைக்கோட்டை, ஆத்தூர், சேந்தமங்கலம், நாமக்கல்,  சங்ககிரி, கனககிரி,மகாராசக்கடை தட்டைக்கல் துர்க்கம், இரத்தினகிரி, சூளகிரி ஆகிய பகுதிகளில் கோட்டைகள் இருந்தன என்று வரலாற்று ஆய்வுகள் கூறுகிறது.
               
 14 ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோட்டைகள் பெருமையுடன் இருந்தன. குறுநில மன்னர்கள் ஆண்டனர். 15 ஆம் நூற்றாண்டுக்குப்பின் முகமதிய, ஆங்கிலேயப் படையெடுப்பால் அழிந்தன. திண்டுகள், நாமக்கல், கோட்டைகள் மட்டும் அழியாமல் இருக்கின்றன. சங்ககிரி, கிருஷ்ணகிரி, மகராஜக் கடை ஆகிய கோட்டைகள் சிதைந்துள்ளன. பிற முழுதும் சிதைந்து போயின. குறுநில மன்னர்களுடன் கோட்டைகளும் அழிந்து போயின என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கொங்கு நாட்டின் புனித நதி மற்றும் ஆறுகள்           
கொங்கு நாட்டு நதிகளும், புண்ணியத் தலங்களும், சிறப்பானவை. குடகிலே பிறந்த காவிரி கொங்கிலே தவழ்ந்து, சோழ நாட்டிலே தாயாகிச் சிறக்கின்றாள். கொங்கின் தவமணியாகப் பவனி வருகிறது. பவானியாறு, வெள்ளி மலையில் பிறந்து காஞ்சியாறு பேரூர், வழியாக வந்து நொய்யல் நதியாக, நொய்யல் காவிரியில் கலக்கிறது. ஆன் பெருனை என்று இலக்கியங்கள் புகழும் அமராவதி கரூர் அருகில் காவிரியில் கலக்கிறது. 
               
அவிநாசி, நாமக்கல், பவானி, வெண்ணைய் மலை, சென்னிமலை, கொல்லிமலை அறைப்பள்ளி, ஈசன், வேஞ்மாக்கூடல், திருமுருகன், பூண்டி, ஆகியன புண்ணியத்தலங்களாம். “கொங்கு மலிந்தால் எங்கும் மலியும்” என்பது பழமொழி.  கொங்கு நாடு சங்க காலம் தொட்டே வறட்சியும், வளமும், மாறி மாறிப் பெற்று வந்துள்ளது. மலைவளம் மிக்க கொங்கு நாடு மழை நலங் கெட்டு அவ்வப்போது வறட்சியாலும், வாடி வந்துள்ளது. இந்த நாடே வளமாகுமானால் தமிழகத்தின் எல்லா நாடுகளும் வளம் பெற்றிருக்கும் என்பதையே இப்பழமொழி உணர்த்தும்
               
சரவணபவனின் தொண்டர்களைப் புனித நீரால் தூய்மைப்படுத்தும் சண்முக நதி. கொல்லியாறு அறைப்பள்ளி ஈசன் திருவடி வணங்கி ஐயாறாக இழிந்து காவிரியில் கலக்கிறது. கொல்லி மலையின் கரைபோட்டான் ஆறு, பாலையாறு, வாழையாறு, நள்ளாயாறு, குடவாறு, தொப்பையாறு, திருமணிமுத்தாறு, ஆகிய நதிகளும் கொங்கு நாட்டில் புண்ணியத் தலங்கள் எங்கும் புகழ்பெற்றனவாம். திருப்பாண்டிக் கொடுமுடி, காஞ்சிவாய்ப் பேரூர் திரு ஆவின் நன்குடி, திருச்செங்கோடு, திருஆநிலைக் கரூர், ஆகியன பாடல் பெற்ற தலைங்களாம்.

தேவார பாடல் பெற்ற தலங்கள்
               
அவிநாசி, திருமுருகன் பூண்டி பவானி, திருச்செங்கோடு, கொடுமுடி கரூர், வெஞ்சமாக் கூடல் ஆகிய 7 திருத்தலங்களும்  அப்பர் சம்பந்தர் சுந்தர் ஆகியோர் தேவாரம் பாடுபட்ட திருத்தலமாகும்.

திருப்புகழ் பாட பெற்ற தலங்கள்
               
பழனி, செஞ்சேரிமலை, முட்டம்,கோவை, குருடிமலை, அவிநாசி, விஜயாபுரம், பழனி, கனககிரி, பேரூர், மருதமலை, ஓதிமலை, திருமுருகன் பூண்டி, விஜயமங்கலம், பவானி, கடபுரம், தீர்த்தமலை, கொங்கணகிரி, கொல்லிமலை, புகழிமலை, நெரூர், கண்ணாபுரம், சிவன்மலை, கீரனூர், திருச்செங்கோடு, சேலம், ராசிபுரம், ஏழுமலை கொடுமுடி, கரூர், காங்கேயம், சென்னிமலை, வெஞ்சமாக் கூடல் ஆகியோர்களில் திருப்புகழ் பாடப்பட்ட புனித தலங்களாக பார்க்கப்படுகிறது.. (கொ. நா. பு. கு)

கொங்கு நாட்டில் புராணம் பெற்ற தலங்கள்            
பேரூர்ப் புரணம், துடிசைப் புராணம், அவிநாசிப் புராணம், திருமுருகன் பூண்டிப் புராணம், பவானிப்புராணம் திருச்செங்கோடுப்புராணம் ,பூத்துறைப்புராணம், சென்னிமலைப்புராணம், சிவன்மலைப்புராணம், தாராபுரத்தலப்புராணம், திருமூர்த்தி மலைப்புராணம், பழனி தலப் புராணம், வெஞ்சமாக் கூடல் புராணம், கரூர்ப்புராணம், கொடுமுடிப்புராணம், குரக்குத்தளிப்புராணம், சேவூர்ப்புராணம், செஞ்சேரிகிரிப்புராணம், அன்னியூர் தலப்புராணம், கவசைப் புராணம், காரமடைப்புராணம், திருவெள்ளூர்ப்புராணம், தீர்த்தகிரிப்புராணம், கரபுரதலப் புராணம் ஆகிய புராணங்கள்  கொங்கு நாட்டில் இயற்றப்பட்டு எழுதப்பட்டது. (கொ. நா. பு. கு)

கொங்கு நாட்டில் சங்க கால தலைவர்கள் மற்றும் பிற்கால தலைவர்கள்
சங்க காலத் தலைவர்கள் 
 
பேகன், அதியமான், ஓரி, குமணன், கடிய நெடுவேட்டுவன், நன்னன், பூந்துறை, ஈந்தூர்க்கிழான், கொண்கானங் கிழான், விச்சிக்கோ, தாமன் தோன்றி கோன், மோகூர்ப் பழையன்
               
பழைய கோட்டைக் சர்க்கரை, அழகன் சர்க்கரை, பெரியன் சர்க்கரை, சேனாபதி சர்க்கரை, சம்மந்த சர்க்கரை, நல்லதம்பி சர்க்கரை, சொட்டைப்படை, மும்முடிப் பல்லவராயர், பல்லவராயன் சிறுவன், காடையூர் காங்கேயர், கொற்றை வேணாடுடையார், மோரூர் காங்கேயர், சூரிய காங்கேயன், பொப்பண காங்கேயன், காங்கேயன்,நல்லதம்பி காங்கேயன்,குமார காங்கேயன், மசக்காளி மன்றாடியார், முளசை வேலப்பன்,கோபண மன்றாடி, வணங்காமுடி வாணராயன், காளிங்கராயன்,, பாரியூரான், செய்யான் பல்லவராயன், உலகுடையன், ஐவேலசதி, அகளங்கன், பூத்துறைக் குப்பிச்சி, வணக்காமுடிக்கட்டி, அல்லாளன் இளையான், தொண்டை மான், அருமைப் பிள்ளை, தீரன் சின்னமலை, கொல்லி மழவன், சீயகங்கன், வரபதி யாட்கொண்டான், கொங்கு மங்கலை ஆகியோர் கொங்கு நாட்டில் சங்க கால தலைவர்கள் மற்றும் பிற்கால தலைவர்களாக சிறப்பாக ஆட்சி செய்து வந்தனர் பெரும் புகழும் வீரத்தையும் இந்த மண்ணில் விதைத்தனர். 

முடிவுரை
               
கொங்கு நாடு என்பது பல சிறப்புகளையும் புகழையும்   கொண்ட பகுதியே ஆகும். இங்கு இயற்கை வளமும் மலை வளமும் கனிம வளங்களை கொண்டு சிறப்பாக அமையப்பெற்றது. அனைத்து தொழில்களுக்கும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சமுதாயத்திற்கும் அடைக்கலம் கொடுத்து வாழ்விலே மேம்படுத்தி வந்தோரை வாழ வைத்து கொண்டு இருக்கிறது கொங்கு நாடு…

பார்வை நூல்கள் 
 
1.கொங்கு நாடு -புலவர் குழந்தை
 
2.கொங்கு நாட்டு வரலாறு -கோ. ம. இராமச்சந்திரன்  செட்டியார்

3.கொங்கு வேளாளர் கவுண்டர்களின்  வரலாறும் பண்பாட்டும்- கவியருவி தே. ப. சின்னசாமி கவுண்டர் M.A, M.Ed

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

வெ. கெளதம், 

துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விஜயமங்கலம்,

திருப்பூர் மாவட்டம்.

 

வள்ளலார் கூறும் அவாஅறுத்தல்|முனைவர் சி.உமாசாரதா

வள்ளலார் கூறும் அவா அறுத்தல் முனைவர் சி.உமா சாரதா
ABSTRACT
         
       The craving  just made everyone of the common creatures show up. Just to concieve and live on this planet, they dove into many inconveniences by taking up many birth and endured. They bear the wrong doings of the yester years other than the challenges they face while they live. The joy can be acquired just when we change our longings that established to us lead it branches and transform into desires. Just to assuage those material things, men continue to run looking for it and make their lives domination. Vallalar in his thiruvarutpa has broadcast approaches to achieve live the life of immortal vallalar has offered his experiences as tunes.
முனைவர் சி. உமா சாரதாKEY WORDS: Desire, elimination, salvation, eternal, run after desire, dwells on, chariot of desire, denied.
முன்னுரை
 
   அனைத்து உயிர்களின் பிறவிப் போக்கை ஆசை என்னும் விதைதான் முடிவு செய்கிறது என்கின்றன அறநூல்கள். தொடர்ந்து பிறந்து அல்லல்படாது ஒருவன் இருக்கவேண்டுமானால் அவன் அவா அறுத்தல் வேண்டும். இப்பிறவி இத்துடன் முடிந்துவிட வேண்டும். இறந்து விடுதல் வேண்டும். மீண்டும் பிறத்தல் கூடாது என்ற கோட்பாடு மக்களின் பொதுச்சிந்தனையாக உள்ளது. ஒருவனை வீழ்த்திக் கெடுக்க வல்லது ஆசை. ஆசை இல்லாது வாழ்தலே அறவாழ்க்கை ஆகும்.மனிதன் தன் மனம் போனப்போக்கில் ஆசைக்கென சில அளவீடுகளைக் கொண்டுள்ளான்.அளவான ஆசை, நியாயமான ஆசை, பேராசை என இன்னும் பல. சிற்றறிவுக் கொண்டு சிந்திக்கப்படும் இவற்றால் விளைவது துன்பமே என்கின்றனர் நம் முன்னோர்கள்.
               
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனான இறைவனை உணர்ந்து அறியவும் மானுடம் தழைக்கவும் தமிழில் ஞானப்பனுவல்கள்; அதிகமாக உள்ளது. அத்தகு ஞானப்பனுவல்கள் வரிசையில் வள்ளலார் அருளிய திருவருட்பா அறநெறி உணர்த்தும் ஓரு ஞான நூல் ஆகும். ஞானத்தில் உயர்ந்தோரே மக்களில் உயர்ந்தோர் ஆவர் என்ற கூற்றிற்கிணங்க மனிதன் முக்திப்பெற கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் ஒன்றான “அவா அறுத்தல்” பற்றி வள்ளலார் கூறும் பாடல்களை ஈண்டுக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பொருள்
               
பேராசை பெரு நட்டம் என்ற பழமொழி ஆகட்டும் ஆசையே துன்பத்திற்க்குக் காரணம் என்ற புத்த மொழி ஆகட்டும் அத்தனைக்கும் ஆசைப்படு, ஆசைப்படு அடைந்துவிடு என்ற நவீனக் குருமார்கள் மொழி ஆகட்டும் இவை எல்லாமே மனித மன எல்லைக்கு உட்பட்டதாக இருந்தாலும் இவற்றின் விளைவுகளைக் காலமே நிர்ணயிக்கும் என்பதே உண்மை ஆகும். ஆசையால் நிகழ்(புகழ்) வாழ்வில் மயங்கி உழன்று பின் இறந்து கர்ம வினையால் பிறவிப்பல எடுத்து அல்லல்பபடுதல் கூடாது என வள்ளலார் அறிவுறுத்திப் பாடியுள்ளார். தமிழில் அறநூல்களும் அதனைத் தொடர்ந்து வந்த பக்தி இலக்கியங்களும் ஆசைக் கொண்ட மனிதன் படும் இன்னல்களை எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. வள்ளலாரின் அருட்பாக்கள் பெண்ணாசைக் கூடாது, உடலை அழகெனப் புரத்தல் தவறு, உணவின் மீது அவா கொள்ளுதல் தவறு, பொருள் பற்று கூடாது, பிறர் பொருளை விரும்புதல் கூடாது, மோகம் தவிர் என அவா அறுத்தலை வலியுறுத்துகின்றன.

வள்ளலார் கூறும் அவா அறுத்தல் 
மனித வாழ்க்கையில் நொடிதோறும் அலைக்கழிக்கும் ஆசை வகைகளை வள்ளலார் எடுத்தோதி அவற்றின் தொடர்பை ஒழிக்க வேண்டுமென்கிறார். அவா மனப்பொறுமையைக் கெடுத்து துன்பம் உண்டாக்கும் என்பதை திருவருட்பா பாடல்கள் எடுத்தியம்புகின்றன. உயர்ந்தோர் சிலர் உய்தல் வேண்டி பூசைக் கடன்களைச் செய்ய யான் ஆசை மிக்குச் சோற்றுக்கடன் முடிக்கின்றேன் என்பதை,

“தலவாழ்க்கையிலே சார்ந்தவர் எல்லாம்தக்கமு போதினும்
தனித்தேசீலமார் புசைக்கடன் முடிக்கின்றார்
சிறியனேன் தவஞ்செய்வான் போலேஞால
மேலவர்க்குக் காட்டிநான் தனித்தேநவிலும்
இந்நாய்வயிற்றுனுக்கேகாலையாதியமுப் போதினும்
சோற்றுக்கடன்முடித் திருந்தனன் எந்தாய்” (திருவருட்பா- அவா அறுத்தல்:3353)

என்கிறார். அதாவது எந்தைப் பெருமானே மண்ணக வாழ்வு மேற்க்கொண்டவர் மூன்று காலத்தும் ஒழுக்கமுடன் பூசைக்கடன்களை முடிக்கின்றனர். ஆனால் நானோ வயிறு நிறைத்தற் பொருட்டு மூன்று பொழுதும் சோறுண்ணும் கடனையே முடிக்கின்றேன் என தன் அவா குறித்து இடித்துக் கூறிக்கொள்கிறார் வள்ளலார். மனிதன் போதும் என்ற சொல்லை உணவு உண்டு வயிறு நிறைந்தவுடன் மட்டுமே சொல்வது வழக்கமாகும். அப்படி அல்லாமல் உணவின் மீது உள்ள அவாவினால் மிக்கு உண்டால் உடல் நலம் கெட்டு அவனுக்கு துன்பமே வந்து சேரும். போதும் என்ற நிறைவை ஒருக்காலும் தராத இயல்பை உடைய ஆசையை ஒருவன் ஒழித்து விடுவானேயானால் அசைக்க முடியாத இயற்க்கை இன்பத்தை அந்நிலையே அவனுக்கு தரும் இதனை வள்ளுவர்,
“ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே 
பேரா இயற்க்கை தரும்”  (திருக்குறள்:அவா அறுத்தல்:370
என்கிறார்.

பேராசை நீக்கினால் வீடுபேறு கிட்டும்
                 
உணவின் மேல் உளதாகிய பேராசைக் குற்றத்தை வள்ளலார் கூறுகையில் எந்தை பெருமானே ஒருவனுக்கு உண்ணும் உணவிலே மிக ஆசை உண்டாயின் அவன் மேற்கொள்ளும் நல்ல தவங்கள் யாவும் நீர் பெருகியோடும் ஆற்றில் கரைத்த புளியைப் போல் நில்லாது கெட்டொழியும் என்று நல்லறிஞர் உரைத்த அறிவுரையைச் சிறிதும் கருத்தில் கொள்ளாமல் உன்னை வழிபடாமல்; சுவையமைந்த காரமும் சாரமும் உடைய சோற்றின் மீது பேராசைக் கொண்டேனே யான் என் செய்வேன் என்பதை,

“சோற்றிலேவிருப்பஞ் சூழ்ந்திடில்ஒருவன் துன்னுநல்தவம் எலாஞ்சுரங்கி
ஆற்றிலே கரைத்தபுளிஎனப் போம்என்றறிஞர்கள் உரைத்திடல்சிறிதும்
போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் பொருந்திய காரசாரஞ்சேர்
சாற்றிலே கலந்தசோற்றிலே ஆசைதங்கினேன் என்செய்வேன் எந்தாய்”
                                                                                            (திருவருட்பா- அவா அறுத்தல்; 3354)
எனப் புலம்புகிறார். பேராசை அழிவைத் தரும்
‘தன் ஆசை அம்பாய் உள்புக்குவிடும்’ (பழமொழி-363)
உணவின் மீது கொண்ட பேரவாவினால் வீடுபேறு அடையமுடியாது.
“பற்று எனும் பாசத் தளையும் பல வழியும்,
பற்று அறாது ஓடும் அவாத்தேரும் தெற்றெனப்,
பொய்த்துரை என்னும் புகை இருளம் – இம்மூன்றும்,
வித்து அற வீடும் பிறப்பு”               (திரிகடுகம் – 22)
அதாவது ஆசை என்ற பாச விலங்கும் பல வழிகளிலும் பல பொருள்களிலும் விருப்பம் கொண்டு ஓடும் அவாத்தேரும் பொய் பேசுதலும் நீங்கினால் தான் வீடுபேறு கிட்டும் என்கிறது திரிகடுகம்.

உணவின் மீது அவா அறுத்தல்
               
திருவருட்பாவில் 3353- வது பாடல் முதல் 3365 – வது பாடல்கள் வரை 13 பாடல்கள் உணவின் மீது கொண்ட அவாவினை விளக்கிக் கூறுகிறது.உணவின் மீது பேரவா கொண்டு அளவுக்கு மீறி உணவு உண்டோமேயானால் அது மிகு துன்பத்தை விளைவிக்கும்.உணவின் மீதான ஆசையைக் குறைத்து அளவாக உண்டு உடலைப் பேணி பாதுகாத்தால் உயிர் வாழும் காலமும் நீளும் வாழும் காலத்தில் இன்பம் மட்டுமே கிட்டும். இதனை
‘இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது’  (முதுமொழிக்காஞ்சி (8:6)  
என்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் பகுதியும் அதற்கு ஏற்ற உணவும் காலமும் ஆராயாது வேண்டியதோர் உணவை வேண்டியதோர் காலத்து வயிற்றுத் தீ அளவு அன்றி ஒருவன் உண்ணுவானாயின் அவன் நோய்வாய்ப்படுவான் என்பதை, 
“தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்,
நோயள வின்றிப் படும்”     (குறள்:மருந்து – 947) 
என்கிறது வள்ளுவம்.
உணவின் மீது உள்ள ஆசையால் கடவுளை மறந்ததாக வள்ளலார் புலம்பி பாடுகிறார். பசியோடு பலர் இருக்கையில் இரக்கமின்றி தான் நெய்யும் தயிரும் விரவிய நெற்சோறு உண்டதை வருந்திப்பாடியுள்ளார். தன் உணவுப் பண்பு நிலைத்து தவ உணர்வு சிதைந்தது இதனால்
‘அடிச்சிறுநாயேன் பேரையே உரைக்கில்
தவம் எலாம்ஓட்டம் பிடிக்கும் என்செய்வேன்’எந்தாய்  (திருவருட்பா – 3357
என்கிறார்.
‘வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க
வாய்ப்புள்ளேன்’ (திருவருட்பா -3358)
எனவும் இயம்புகின்றார். இதனால் சோற்றாசையும் செய்வதறியாமையாகிய குற்றமுடைமை தெரிவித்தவராகவும் விளங்குகின்றார். மேலும் துவையலும் பச்சடிசிலுமாகிய உண்டி வகைகளில் ஆசையுடைய குற்றத்தினையும் (திருவருட்பா – 3360) உண்டலும் மலம் கழித்தலுமே செயலாவது நினைந்து வருந்தியமையும் (திருவருட்பா – 3361) உள்ளே மலமும் ஊனாகிய புலாலும் நிறைந்துள்ளமையால் உடம்பை
‘மலப்புலைக் கூடு’ (திருவருட்பா – 3362)
என்றும் உணவின் ஆசையால்
‘துருப்பிடியிருப்புத் துண்டு போற்கிடந்து தூங்கினேன்’ (திருவருட்பா – 3363)
என பயன்படா நிலையும்
‘எனது முடிக்கடி புனைய முயன்றிலேன்’ (திருவருட்பா -3364)
என சிற்றுண்டி விளைவுற்று அலைந்தமையும் பாடியுள்ளார்.

வீடுபேற்றிற்கான வழி
மனிதன் தன் கர்மவினைகளிலிருந்து விடுபட அவா அறுத்தல் வேண்டும். இறைப்பற்று ஒழிய பிற பற்று கூடாது என சான்றோர் உரைத்ததை நாம் பின்பற்றுதல் அவசியம். நிலையில்லாது சுழல்வது வாழ்க்கை. நிலையாமையே உண்மை,
“என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்து விட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று சொல்லி புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
உன் பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை யுடையவனே”   (பட்டினத்தார்.பொதுப்பாடல் – 324)
     என்கிறார் பட்டினத்தார். அதே போல் இறைப்பற்று இல்லாமல் உணவின் மீதுக் கொண்ட ஆசையினால் தன்னை வள்ளலார் நாயினுக்கும் அடியேன் எனவும் சிற்றாசைக் கொண்டு அருளாசையை அதாவது இறையருளை பெறமுயற்சியின்றி வீணாகக்கிடந்தேன் எனவும் அழுதுபுலம்பியுள்ளார். உண்டி ஆசை பேரவாவாக இருப்பினும் எனைக்காப்பது இறைவா உன் கடன் என்பதை,

“உண்டியேவிழைந்தேன் எனினும் என்தன்னை உடையவ அடியனேன்
உனையேஅண்டியேஇருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன்அப்பநின்
ஆணைநின் தனக்கேதொண்டுறாதவர் கைச்சோற்றினை விரும்பேன்தூயனே
துணைநினை அல்லால்கண்டிலேன் என்னைக்காப்பதுன்
கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்”            (திருவருட்பா -3365)
உண்டியே விழுப்பம் என்றாலும் எனது உள்ளம் உனது திருவடியையே நினைந்து தோய்ந்திருந்தது என்றும் முக்காலத்தும் நீயே துணை. எனை காப்பது உன் கடன் என காப்பது உன் கடன் என இயம்புகிறார். இதனால் உண்டியாசை மிக்கோனாயினும் திருவருளாசை இல்லாதவன் அல்லன் என தன் பக்தி மாண்பை எடுத்துரைக்கிறார். சிற்றின்பங்களில் மனம் லயிக்காது பேரின்ப பேறான வீடுபேற்றினை அடைய இறைவனின் திருவருளாசை நமக்கு நிச்சயம் வேண்டும் என்கிறது திருவருட்பா. ஆசைக்கு அடிமைப்படுவதை
“ஆசைக் கடியா னகிலோ கத்தினுக்கும்
ஆசற்ற நல்லடியா னாவானே – ஆசை 
தனையடிமை கொண்டவனே தப்பாதுலகந்
தனையடிமை கொண்டவனே தான்” (நீதி வெண்பா -12)
என்று ஆசைக்கு அடிமைப்பட்டுக் கிடப்பவன் அனைத்து உலகத்திலும் மிகச்சிறந்த அடிமையாவான் மாறாக ஆசையை தனக்கு அடிமையாக்கி கொண்டவன் உலகத்தையே தன்கீழ் அடிமையாக்கிக் கொண்டவன் ஆவான் என்கிறது நீதி வெண்பா. திருமந்திரத்தில்,
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள்
ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” (திருமந்திரம் – 2615) 
என திருமூலர் பாடியுள்ளார். ஈசனோடு ஆயினும் ஆசை கூடாது என்கிறது திருமந்திரம். அதாவது விடுவது வேட்கையெனில் பெறுவது ஞானமாகிய வீடுபேறாகும் என்கிறது திருமந்திரம். இனி பிறவாதிருக்க இறைவனை மறவாதிருக்க மனிதனுக்கு அவா அறுத்தல் அவசியமாகிறது. மனித உயிர் வீடுபேறு என்னும் ஞானநிலையை அடைய நிலைத்த வழி அவா அறுத்தல் ஆகும்.

நிறைவுரை
               
வள்ளலார் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ பசித்திரு தனித்திரு விழித்திரு என மூன்று மந்திரங்களை உபதேசித்துள்ளார். சுகித்திருக்க உண்ணாமல் உயிர் வாழ உண்டு சிவ சிந்தனையுடன் தனித்திருந்து நீண்ட தூக்கம் ஒழித்து விழித்திருந்து மனிதன் உயர்கதியை அடையவேண்டும். நதிகள் கடலில் கலப்பது போல் மனித ஆத்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைதல் வேண்டும். மனிதன் தான் வாழும் காலத்தில் சிற்றின்பங்களில் மகிழ்ந்து உழன்று கிடப்பானேயானால் உய்தல் என்பது அவனுக்கில்லையாம். ஆகவே தனிமனிதன் ஒவ்வொருவருக்கும் அகத்தே தோன்றும் அவா என்னும் அறியாமை இருளைப் போக்கிட இறைச்சிந்தனை தேவைப்படுகிறது. திருவருட்பாவில் வள்ளலார் குறிப்பிட்டது போல் அவாவினை புறம்தள்ளி அகம் முழவதும் இறைவனை நிறுத்தி வாழ்வாங்கு வாழ்ந்து மரணமில்லாப் பெருவாழ்விற்கான வழியை தேட முயல்வதே மனிதக் குலத்தின் நோக்கமாக அமைய வேண்டும்.

தொகுப்புரை
               
உலகத்து உயிர்கள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையனவனாகும். நம் மனதில் தோன்றும் எண்ண அலைகளே சூழல்களை உருவாக்கும். மனித மனமானது நொடிக்கு நொடி எண்ணங்களை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. ஆகவே மனதை நன்முறையில் பேணுதல் அவசியமாகிறது. மனதில் ஆசைகள் தோன்றுவது இயல்பே.அவற்றை அடைவதற்கு அறவழியே சிறந்ததாகும். ஆசைகளை வேகமாக நிறைவேற்றும் பொருட்டு தீய வழியை நாடினால் வாழ்வனைத்தும் அல்லல்பட வேண்டியிருக்கும். மனம் கொண்ட பேராசையால் செயல் அனைத்தும் தீய வினைகளையே தோற்றுவிக்கும். அதன் விளைவாக வாழ்வில் நிம்மதி கெடும். வினைப்பயன் தொடர்வதால் மனிதன் இறந்தப்பின்னும் மறுபிறப்பெடுத்து மீண்டும் துன்பமானது தொடர நேரிடும். ஆகவே, வாழும் காலத்தில் தேவையற்ற ஆசைகளைத் தவிர்த்து இறைச்சிந்தனையுடன் அறவழி சென்றால் வள்ளலார் வகுத்த வழியில் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்.

பார்வை நூல்கள் :
1. முனைவர் ச.வே.சுப்பிரமணியன்(ப.ஆ)- திருவருட்பா- மெய்யப்பன் பதிப்பகம்

2. பரிமேலழகர் உரை – திருக்குறள்- சாரதா பதிப்பகம்

3. புலியூர் கேசிகன் – பழமொழி நானூறு – முல்லை நிலையம்

4. நல்லாதனார் (உரை)- திரிகடுகம் – சாரதா பதிப்பகம்

5. ச.மாணிக்கம் -நீதி நூல்கள் – நர்மதா பதிப்பகம்

6. ஞா.மாணிக்கவாசகன் (வி.உ)- திருமூலர் திருமந்திரம் – உமா பதிப்பகம்

7. அ.மாணிக்கம் – பட்டினத்தார் பாடல்கள் – வர்த்தமானன் பதிப்பகம்.

8.பேராசிரியர் ஐயன்பெருமாள் கோனார்-தமிழ்ச் செல்வம் (தொகுதி – 2)-பழனியப்பா பிரதர்ஸ்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.உமா சாரதா,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சேலம் – 05.

கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் உரிமைசார் பதிவுகள்|முனைவர் ந.மகாதேவி

கொங்குநாட்டுக் கல்வெட்டுகளில் உரிமைசார் பதிவுகள் -முனைவர் ந.மகாதேவி
முன்னுரை

      கொங்குநாடான ஈரோடு, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், தருமபுரி, முதலான மாவட்ட கல்வெட்டுகளில்  உரிமைகள் தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன. இது கி.பி.7 முதல் கி.பி.16 ஆம் நூற்றாண்டு வரை  கிடைக்கக்கூடிய கோயில் கல்வெட்டுகளில் அரசர்கள் சிலருக்கு உரிமைகள் வழங்கியுள்ளனர்.  அவ்வுரிமைகள் வரிசைகள் என்ற மாற்றுச்சொல்லால் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு மனிதனுக்கும் முறையாகக் கிடைக்கப் பெற வேண்டியவை அனைத்தும் உரிமைகள் எனலாம். அவ்வகையில் மனிதன் இவ்வுரிமைகளின்றிவாழ இயலாது எனக் கருதப்படும் அடிப்படையான தேவைகளைப் பெறுவதை  உரிமைகள் எனலாம். இந்த உரிமைகள் அவர்களுக்குக் கிடைத்த, அடிப்படையான, விட்டுக் கொடுக்க
இயலாத, மறுக்க இயலாத சில உரிமைகளாகக் கருதப்படுகின்றன. இவை, இனம், சமயம், பால், வயது,  ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருப்பதை அடிப்படை உரிமைகள் எனலாம். இவ்வுரிமைகள் கொங்குநாட்டுக்   
கல்வெட்டுகளில்  எவ்வகையில் இடம்பெற்றுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்வெட்டுகளில் உரிமைகள்
கொங்குச்சோழர், கொங்கு பாண்டியர் ஆகியோர் ஆட்சிக்காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் சிலகுடிகள், சில உரிமைகள் பெற்றதைக் கூறுகின்றன. இக்கல்வெட்டுகளில் வழங்கப்பெற்ற வரிசைகள் அனைவருக்கும் ஒரே வகையாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சில வரிசைகள் எல்லோருக்கும் வழங்கப்பெற்றது. சிலருக்குச் சிறப்பாக வழங்கப்பெற்றது.
இவற்றை நோக்குங்கால் தரப்பெற்ற வரிசைகள்

பொதுவான வரிசைகள் (பொது உரிமைகள்)
சிறப்பான வரிசைகள் (சிறப்பு உரிமைகள்)
என இரு வகையாகப் பாகுபடுத்திப் பார்க்க முடிகின்றது. இது வரிசை பெற்றவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு உடையவராக்குகின்றன.

பொதுவான உரிமைகள்
               
இவ்வுரிமைகளைப் பெற்றவர்கள் பார்ப்பார் (அந்தணர்), சிரிநிமந்தகாரர் (நிமித்திகர்), தேவரடியார், கம்மாளர், இடையர் ஆகியோர் ஆவார்கள். பொது வரிசைகளாகக் குறிப்பிடப்பட்ட அவற்றை அவர்கள் அனைவரும் பெறுகின்றனர்.

சங்கு, பேரிகை ஊதிக்கொள்ளல்
            
அவினாசியிலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு உரிமையுடைய கொல்லன், தச்சன், தட்டான் ஆகியோர் நல்ல நிகழ்வுகளுக்கும் தீய நிகழ்வுகளுக்கும் பேரிகை கொட்டிக்கொள்ளவும் சங்கு ஊதிக்கொள்ளவும் அரசன் உரிமை அளித்துள்ளன. இதனை,

“இவர்கள் நன்மைத் தீமைக்கு 
பேரிகையும் புகுந்து கொட்டி சங்கும்
ஊதக் கடவதாகவும் இவர்கள் மக்கள்
மக்கள் சந்திராத்த வரைக்கும்”1
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.
பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்படும் ஓர் இசைக்கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்த இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். சங்கு என்பது காற்று இசைக்கருவி. தமிழர் மற்றும் இந்திய இசையிலும்  கோயில் வழிபாட்டின் போதும் பயன்படுகிறது.

  அவர்களுக்கு  வழங்கப்பட்ட உரிமைகள் அவர்களின் தலைமுறை தலைமுறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்  என்பதைச்  சந்திரனும் சூரியனும் உள்ளவரை  எனக் குறிப்பிட்டுள்ளனர். இக்கல்வெட்டில் அரசன் பெயர் குறிக்கப்பெறவில்லை. ஆனால், மன்னனிடம்  உரிமை பெற்ற  பிறகே செயல்படக்கூடிய சூழலை நோக்கும்போது மக்கள் தாங்களாக எவற்றையும் செய்ய இயலாத சூழல் நிலவியுள்ளது.

கம்மாளர்களுக்கு உரிமை அளித்தல்
கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் அரசர், கம்மாளர்களுக்கு சில உரிமைகளை வழங்கியுள்ளார். அவை, நன்மை, தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ளவும்  பேரிகை வைத்துக்கொள்ளவும் தங்கள் புறப்பட்டுச் செல்லும் இடங்களுக்குக் காலணி அணிந்து கொள்ளவும் வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும் அரசர் உரிமை அளித்துள்ளதை,
 
“நன்மை தீமைக்கு இரட்டைச்
சங்கும் ஊதி
பேரிகை உள்ளிட்டனவும் 
கொட்டிவித்து கொள்ளவும்
தாங்கள் புறப்படவேண்டும்
இடங்களுக்குப்
பாத ரசஷ கோத்துக் 
கொள்ளவு தங்கள்
வீடுகளுக்குச் சாந்திட்டுக்“2
         
இச்சான்றுகள்  வழி உணரமுடிகின்றது. இவற்றை நோக்கும் போது சாதாரணமாக வீடுகளுக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்வதற்குக் கூட ஆரம்ப காலகட்டத்தில்  உரிமை பெற வேண்டிய சூழலும் கட்டாயமும் இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
               
கி.பி.1050 இல் பரகேசரி அபிமானசோழதேவனின் பன்னிரண்டாவது ஆட்சியாண்டில் திருமுருகன் பூண்டியில் குடியிருக்கும் மகாதேவர் கோயில் திருமடைவளாகத்திலிருக்கும் (கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடம்) தபசியர் (தவம்செய்பவர்கள்), தேவரடியார், உவச்சர் (மேளக்காரர்), நிமித்தக்காரா் (நிமித்திகர்) ஆகியோர் குதிரையில் ஏறிக் கொள்ளவும் பேரிகை, சேகண்டி கொட்டிக்கொள்ளவும் வீட்டிற்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும் சுவருக்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்ளவும் உரிமை அளித்துள்ளார் என்பதை,

“தபஸியர் தெவடியாற்கும் உவச்சர் 
நிமந்தக்கா(ர)ற்கும் குடுத்த
வரிசைகளாவன  
மெலெற்றம் இராசாயிராசநும் கிழெற்றம்
குதிரையு பெரிகை செகண்டியும்
கொட்டக் கடவதாகவும் இவர்கள்
அகங்கள் இரண்டாநிலையும்
இரட்டைத்தலைக்கடையும்
எடுத்துச் சான்தும் 
வாரிக்கொள்ளப் பெறுவார்களாகவும்“3
          
இச்சான்றுகளின்வழி அறியமுடிகின்றன.

சிறப்பு உரிமைகள்
 
சில தேவரடியார்கள் மற்றும் அரசுக் கருவூலத்தில் பொருளை வைத்த பார்ப்பனச் சான்றோர்கள் மட்டுமே சிறப்பு உரிமைகளைப் பெறுகின்றனர்.
     வீரராசேந்திர சோழனின்  பதினைந்தாவது  ஆட்சியாண்டில்  கி.பி.1222 இல்  வடபரிசார நாட்டைச்  சேர்ந்த பார்ப்பார் சான்றோர்க்கு அரசன் கொடுத்த ஓலையாவது பார்ப்பார் சான்றோர்கள் அரசன் பண்டாரத்தில் (கருவூலம்) பொருள் வைத்ததன் காரணமாக, இவர்களுக்கு சில உரிமைகளை அளித்துள்ளார். அவை,

📜 குதிரையின் மீது ஏறிக்கொள்ளும் உரிமை
📜 சீனக்குடை பிடித்துக் கொள்ளும் உரிமை
📜 சேகண்டி அடித்துக்கொள்ளும் உரிமை
📜 வீட்டிற்குச் சுண்ணாம்பு அடித்துக் கொள்ளும் உரிமை
📜 இரட்டைத் தலைக்கடை (வாயிற்படி) வைத்துக்கொள்ளும் உரிமை
📜 பச்சை நிறப் பட்டால் ஆன மேலாடை போர்த்துக் கொள்ளும் உரிமை
📜 படைகள் சூழ மன்னவன் உலா வரும்போது இவர்களும் அப்பொழுது  பொன்னராம்  பூண்டு  உடன்  வரும் உரிமை
📜 தங்கள் மக்களுக்குப் பொன்னாலான காறை என்னும் கையணி அணிவிக்கும் உரிமையைப் பெறல்
  
📜 திருமணத்திற்கு கட்டணங்கட்டி ஏரி ஊர் சூழ யானை, பல்லக்கு போன்ற உயர்வகை ஊர்தியில் ஏறி ஊர்வலம் வரும் உரிமை
📜திருமணத்திற்கும் கட்டணம் செலுத்தி ஊர்தியைப் பயன்படுத்தும் மரபு அக்கால கட்டத்திலிருந்துள்ளதை அறியமுடிகின்றன.
📜இவ்வுரிமைகளையெல்லாம் இவர்கள் சந்ததியனர் சந்திரனும் சூரியனும் உள்ளவரைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என  அரசர் உரிமையளித்துள்ளார்4.

அரசனின் கருவூலத்தில் பொருள் வைக்கக்கூடிய அளவுக்குச் செல்வந்தராக இருக்கும் சூழலில் மட்டுமே இவ்வுரிமையைப் பெறக்கூடிய நிலையைப் பெறுகின்றனர் எனும்போது அக்காலகட்டத்தில் நிலவிய அடிமைச்சூழலை உணரமுடிகின்றன.

கோயிலில் பணிபுரிய உரிமையளித்தல்
               
வீரராசேந்திரனின் ஐந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1212 இல் குறுப்பு நாட்டிலுள்ள உகாப்பாடி ஊரார் இராசராசபுரத்துச் சிவப்பிராமணர் ஆலங்காட்டுப் பாண்டி உடையானான சைவ சிகாமணிபரியன், விசைய மங்கலம் ஆத்ரேய கோத்திரம் ஆளவந்தி ஆகிய இருவருக்கும் அரசர் உரிமைகள் அளித்துள்ளார். அவை, இவ்வூரிலுள்ள தேவகோயிலுக்கும், பிள்ளையார் கோயிலுக்கும் உரிமையளித்து இவர்கள் பெறக்கூடிய உரிமைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பதை,

“இவிருவற்கும் கங்காணி செய்து குடுத்த 
பரிசாவது எங்களுர்த் தேவக்கோயிலும் 
பிள்ளையார் கோயிலும் மற்றும்
ஏழுவநமுனைப்பநவும் இவளுக்கு காணிசெய்து
 குடுத்தோமான்“5
என்ற வரிகள் மூலம் அறியமுடிகின்றன.

உரிமை அளித்தல்
            
வீரபாண்டியனின் பதினைந்தாவது ஆட்சியாண்டான கி.பி.1280 இல் காங்கயநாட்டிலும் பூந்துறைநாட்டிலும் கம்பளர்களுக்கு சில தடைகள் இருந்தன. அவற்றை நீக்கக் காரணமாக இருந்த அலுவலர் காளிங்கராயர் ஆவார். இதனை இக்கல்வெட்டின்கீழ் கையொப்பமிட்டுள்ளதின்வழி அறியலாம். நீக்கப்பட்ட தடைகள் பின்வருமாறு
”இரட்டைச் சங்கும்
ஊதிப் போதிகை உள்ளிட்டன கட்டுவித்துக்
கொள்ளவும் தாங்கள்
புறப்பட வேண்டுமிடங்களுக்குப் 
பாதரச கோத்துக் கொள்ளவும்
வீடுகளுக்குச்சா
சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம்”6
தேவைப்படும் காலங்களில் இரட்டைச்சங்கு ஊதிக்கொள்ளுதல், போதிகை உட்பட்ட பிற கருவிகளையும்  கொட்டுவித்துக்  கொள்ளுதல், தாங்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம்  காலணிகளை அணிந்து கொள்ளுதல் வீடுகளுக்குச் சாந்திட்டு வைத்துக் கொள்ளுதல் போன்ற உரிமைகளை அரசர் அளித்துள்ளதை மேற்கண்ட கல்வெட்டு வரிகள் மூலம் அறிய முடிகின்றது.  பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அடிப்படைத் தேவைகளைக்கூட அரசனிடம் உரிமை பெற்ற பிறகே செய்யக்கூடிய கட்டாயத்தில் இருந்துள்ளனர்.

முடிவுரை
📜உரிமை அளித்தலில் நிலவிய பொது உரிமை, சிறப்புரிமை என்ற பாகுபாடு அக்கால சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை உணரமுடிகின்றது.

📜அரசனின் கருவூலத்தில் பொருள் வைத்தவர்களுக்கு மட்டுமே அரசர் சிறப்புச் சலுகைகளை வழங்கியுள்ளார். இவற்றை நோக்கும்பொழுது பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களே சிறப்பு உரிமைகளைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.
📜இவை எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியனவாக அமைந்துள்ளன.
கொங்குச்சோழர், கொங்குப் பாண்டியர் கல்வெட்டுகளில் மட்டுமே உரிமைகள் பற்றியான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

துணைநூற் பட்டியல்

1. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.24

2. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.249

3. தென்னிந்தியக் கல்வெட்டுச் சாசனம், தொகுதி-30, ப.20

4. கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1, ப.6

5.  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-3, ப.17

6. ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-3, ப.90
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ந.மகாதேவி
தமிழ்த்துறை
வி.இ.டி. கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி
திண்டல், ஈரோடு.

 

சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல்|அ.அன்பரசன்

சங்கஇலக்கியத்தில் நிகழ்த்துக்கலைஞர்களின் வாழ்வியல்
ஆய்வுச் சுருக்கம்
லை மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், மனிதனை மற்ற உயிரினத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் ஒரு கருவியாகும். மனிதனின் அழகியல் உணர்ச்சியின் வெளிப்பாடும் கற்பனைத் திறனும் ஒன்று சேரும் நிகழ்வே கலையாக வடிவம் கொள்கிறது. கலையானது நிகழ்த்துக் கலை, நிகழ்வில்லாக் கலை என்று இரண்டு வகைப்படும்.
பண்டையத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் தன்னகத்தே கொண்ட சங்க இலக்கியத்தில் நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்க்கை முறை எவ்வாறு இருந்தது என்பதை ஆய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

திறவுச்செற்கள்
கலை – நிகழ்வில்லாக்கலை – நிகழ்த்துக்கலை – நிகழ்த்துக்கலைஞர்கள் – பாணர் – பாடினி – கூத்தர் – விறலி – பொருநர் – இயவர் – கிணைவர்.

முன்னுரை
சங்க இலக்கியங்கள் அக்காலத் தமிழர்களின் வாழ்வியலையும், அவர் தம் வாழ்வியலின் உட்கூறுகளான அரசமைப்பு, கொடைத்திறன், போர்த்திறன், கல்வி, கலை என்று பலவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அந்தவகையில் சங்ககாலத்தில் நிகழ்த்துக் கலைகளும்,கலைத் தொழிலாளர்களும் மிக உயர்வான இடத்தைப் பிடித்து அரசர் முதல் சாதாரன மக்களும் மதித்துப் போற்றும் விதத்தில் வாழ்ந்துள்ளனர். கலைஞர்கள் வறுமையால் வாடியப் போதும் ஒழுக்கம் தவறாதவர்களாகவும், மற்றவர்களுக்கு வழிக்காட்டும் நெறியாளராகவும் வாழ்ந்துள்ளனர். அவர்களுக்கு மிகுதியான கருத்துச் சுதந்திரம் இருந்துள்ளதையும் அறியமுடிகிறது. பாடித்திரியும் பறவைகளாக இசைப் பாடி வாழ்ந்த நிகழ்த்துக் கலைஞர்களான பாண்சமுகத்தினரின் வாழ்வியலை வெளிப்படுத்தும் விதமாக இந்த ஆய்வு அமைகிறது.

கலை

கலை என்பது தான் உருவாகிய சமூகத்தை அடையாளப்படுத்தும் கருவியாகும். மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி உணர்வுகளால் மனங்களை இணைக்கும் தன்மையுடையது, கலை வேறு மனித வாழ்க்கை வேறல்ல. கலைகள் அனைத்தும் மனித வாழ்கையில் இருந்து பெறப்பட்டவை. மனிதர்களைத் தவிர்த்துக் கலைகள் தனியாக உருவாகவோ, வாழவோ முடியாது.

கலை என்பது மனித உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு ஆகும். மனிதனின் அனைத்துக் கண்டுப் பிடிப்புகளுக்கும் அடிப்படையானது கலையே. கற்பனையும், இயற்கையும் ஒன்று சேர்ந்து உருவாகும் உணர்ச்சிகளின் வெளிப்பாடே கலை. மனித உள்ளத்தின் கவலைகளை மறக்கச் செய்யும் பண்புடையதே கலை ஆகும். ஒவ்வொரு மனிதனின் மனதின் அடிப்படையிலும், உணர்ச்சிகளின் அடிப்படையிலும் எதன் மீது மிகுந்த கவனத்தை உள்ளம் செலுத்துகிறதோ அதனையே உள்வாங்கி கலையாக மனித உணர்வானது வெளிப்படுத்துகிறது. கலையைப் பொதுவாக நிகழ்வில்லாக் கலை, நிகழ்த்துக் கலை என்று இரண்டு வகையாகப் பாகுப்படுத்தலாம்.

நிகழ்வில்லாக்கலைகள் (NON – PERFORMING ARTS)
               
பார்வையாளர்களை மையப்படுத்தாமல், தனிப்பட்ட இடத்தில் தமது கலைத்திறனை வெளிப்படுத்துபவர்கள் நிகழ்வில்லாக் கலைஞர்கள் ஆவர். கலையை நுகர்வோரை மையப்படுத்தாமல் கலையைப் படைப்பவர்களை மட்டும் மையமாகக் கொண்டுள்ள கலைகள் நிகழ்வில்லாக்கலைகள் ஆகும். இக்கலைகள் யாவும் படைத்து முடிக்கப்பட்டப் பின்பே பார்வையாளர்களைச் சென்றடையும். ஒரு முறை படைத்தால் போதும் இக்கலைகள் நீண்ட நாள்களுக்கு நிரந்தரமாக நிலைத்து நிற்கும் தன்மையுடையன.

சிற்பம்

ஓவியம்

தச்சுக்கலை

கட்டிடக்கலை

வார்ப்புக்கலை

மட்பாண்டக்கலை

ஆகியன சங்ககாலம் முதல் இன்றுவரையுள்ள நிகழ்வில்லாக் கலைகள் ஆகும்.

நிகழ்த்துக் கலைகள் (PERFORMING ARTS)
அரங்கத்தில் ஒரு கலைஞர் அல்லது பல கலைஞர்கள் சேர்ந்து தமது முகம், உடல், போன்ற அங்கங்களைக் கொண்டு ஒரு கலையை நிகழ்த்திக் காட்டுவது நிகழ்த்துக் கலை. நுண்மையான உறுப்புகளையும், நுண்ணியத் திறன்களையும், நுட்பமான உணர்வுகளையும் கொண்டது நிகழ்த்துக் கலை. ஒரு கலைஞன் தனது நுட்பமான கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தும் போது அது நிகழ்த்துக் கலையாக வடிவம் கொள்கிறது.

நிகழ்த்துக் கலைஞர்கள்
பார்வையாளர்களின் முன்பு கலைகளை நிகழ்த்திக்காட்டும் கலைஞர்கள் நிகழ்த்துக் கலைஞர்கள். இவர்கள் தாம் நிகழ்த்தும் கலைக்கு ஏற்ப தனது உடல், மொழி, உடை, ஒப்பனை போன்றவற்றை அமைத்துக்கொள்வர். இவர்களுக்குப் பக்கத்துணையாகச் செயல்படும் மேடையமைப்பாளர்கள், இசையாசிரியர்கள், இதரகலைஞர்களும் நிகழ்த்துக் கலையின் முக்கிய அங்கமாகவே விளங்குகிறார்கள். நிகழ்த்தப்படும் கலைகளனைத்தும் படைக்கப்படும் போதே பார்வையாளர்களைச் சென்றடைந்தாலும் நிரந்தரமற்றவைகளாக உள்ளன. நிகழ்த்தி முடிக்கப்பட்டதும் கலைஞர்களைப் போலவே கலைகளும் களைந்து விடுகின்றன.

இசை
கூத்து
நடனம்
நாடகம்
கழைக்கூத்து
பொம்மலாட்டம்   
ஆகிய கலைகள் நிகழ்த்துக் கலைகள் ஆகும்.

பாண்சமூகம்
சங்ககாலத்தில் பாண்சமூகத்திற்குள் பல்வேறு சமூகக் குழுக்கள் இருந்துள்ளன. பாணர்சமூகம் மிகவும் பரந்துவிரிந்த சமூகமாக இருந்துள்ளது. அவர்களுக்குள் பல தொழிற் பகுப்புகளும், படிநிலைகளும், தனித்தனி அடையாளங்களும் இருந்துள்ளது. சங்ககாலத்தில் நிகழ்த்துக் கலைஞர்கள் வெவ்வேறுப் பணிகளைச் செய்துள்ளனர். பாணர், பாடிணியர், பொருநர், விறலியர், கூத்தர், கோடியர், வயிரியர், கண்ணுளர், கிணைவர், துடியர், அகவுநர், கட்டுவிச்சியர், சென்னியர், இயவர் ஆகியவர்கள் முன்னிலையான நிகழ்த்துக் கலைஞர்கள். நிகழ்கலைச் சமூகத்தினரின் வாழ்வியல் பாங்கும், பொரளாதார நிலையும் சில பொதுவானப் பண்புகளைக் கொண்டிருப்பதால் இவர்களைப் பாண்சமூகத்தார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

பாணர்
பாணர்கள் இசைக்கலையில் வல்லவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் யாழ்  என்ற இசைக்கருவியை இசைத்துப் பாடுவதில் கைத்தேர்ந்தவர்கள். யாழ் இசைத்துப் பாடும் பாணர்களை அவர்கள் இசைக்கும் யாழை மையமாக் கொண்டு இரு வகையாகப் பிரிக்கலாம். இருபத்தொரு நரம்புகள் கொண்ட பெரிய அளவிளான யாழை இசைத்துப் பாடுபவர்கள் பெரும்பாணர் என்றும், ஏழு நரம்புகள் கொண்ட சிறிய அளவிலான யாழை இசைத்துப் பாடுபவர்கள் சிறுபாணர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவ்விருப் பாணர்களும் நாடு முழுவதும் உள்ள வள்ளல்களைத் தேடிச் சென்று அவர்களையும், அவர்களைச் சார்ந்த நிலச்சுவாந்தார்களையும் பார்த்து பாடிப் பரிசுப் பெற்றுத் தம் வாழ்வை நடத்தி வந்துள்ளனர். இசைப் பாடுவதையே தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால் பாணர்களின் வாழ்வோடு ஒன்றியே இசையும், கூத்தும் வளர்ந்துள்ளதை இலக்கியங்கள் மூலமாக அறியமுடிகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றின் வரிகளுக்கு ஏற்ப இவர்கள் தாம் செல்லும் ஊர்களை எல்லாம் தமது ஊராகவும் அங்கு வாழும் மக்களையெல்லாம் தமது உறவினராகவுமே நினைத்து வாழ்வினை நடத்தியுள்ளனர். மேற்கண்ட பாணர்கள் மட்டுமல்லாமல் இசைப் பாணர்கள், மண்டைப் பாணர்கள் என்ற பாணர்களும் சங்ககாலத்தில் வாழ்ந்துள்ளர்.

இசைப்பாணர்கள் என்பவர்கள் வாய்ப்பாட்டு இசைப்பவர்கள். இன்றைய சங்கிதக் கலைஞர்களுக் கெல்லாம் இசைப் பாணர்களே முன்னோடிகள். மண்டைப் பாணர்கள் தோற்கருவியை இசைப்பவர்கள். மண்டை என்பது அனைத்து விதமான பறையிசைக் கருவிக்கும் பொதுவான பெயராகும். இரவலர்கள் உணவைப் பெற்று உண்பதற்காக வைத்திருந்த பாத்திரத்திற்கும் மண்டை என்ற பெயர் வழக்கத்தில் இருந்துள்ளது. மண்டைப் பாணர்கள் தமது இசைக் கருவிகளை உணவுப் பெறும் பத்திரமாகவும் பயன் படுத்தியுள்ளனர்.
 
“கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்எனச்                    
———- ——–  ——- ——- ——                  
பொழுதுஇடைப் படாஅப் புலரா மண்டை                   
மெழுகுமெல் லடையில் கொழுநிணம் பெருப்ப” (புறம் – 103)
என்ற ஔவையார் பாடல் மூலம் பாணர்கள் அரண்மனைக்குச் சென்று மன்னர்களைப் பாடி முடித்தப்பின் அவர்கள் கொடுக்கும் கள், இறைச்சி,சோறு முதலிய உணவுகளை மண்டை என்ற தனது இசைக் கருவிகளிலையே பெற்று உண்டுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
                    
“பாணன் சூடிய பசும்பொன் தாமரை” (புறம் – 141)                    
“நைவளம் பழுநிய நயம்தெரி பாலை                    
“ கைவல் பாண்மகன் கடன்அறிந்து இயக்க” (சிறுபாண் – 36 – 37)

இசைப் பொழியும் பாண்கருவியை இசைப்பதையே தொழிலாகக் கொண்ட பாணர்கள் இசை விருந்தளிப்பதில் திறன் மிகுந்தவர்கள் என்பதும், இவர்கள் பாணன், பாண்மகன் என்ற பெயரால் அழைக்கப்பட்டமையும் மேற்கண்ட பாடல் வரிகளால் புலனாகிறது.
பாடினி
பாணன் என்ற ஆண்பால் கலைஞர்களோடு  அதிகம் இடம் பெறும் பெண்பால் கலைஞரின் பெயர் பாடினி. இவர்கள் பாணர்களின் மனைவி என்ற கருத்தும் உள்ளது. தம் கணவரோடு அவர்கள் செல்லும் இடமெல்லாம் தானும் சென்று தன் குரல் வளத்தால் இனிமையாகப் பாடும் பெண்பால் இசைக் கலைஞர்களாக விளங்கினர். பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய இருபாணாற்றுப்படைகளிலும் பாணர்களை விட பாடினியர்களைப் பற்றிய வர்ணணைச் செய்திகள் அதிகமாக உள்ளன.
                    
“அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்” (அகம் – 126)                   
“இன்நகை விறலியொடு மென்மெல இயலிச்” (புறம் – 70) 
“பெடைமயில் உருவின் பெருந்தகு பாடினி” (பொருநர் – 47)
மேற்கண்ட பாடல் அடிகள் மூலம் பாடினி மென்மையானவள், மிகுந்த அழகு நிறைந்தவள், அழகிய சொற்களைப் பேசுபவள், கலைக்காகவே தன்னை அர்பணித்துக் கொள்பவள் என்பதை உணரமுடிகிறது. பாணர்களைப் போலவே இசையில் வல்ல மகளிர்     பாடிணியர் என்று அழைக்கப்பட்டுள்ளனர். பாடினி என்பவள் இசைப்பாடுவதிலும், இசைக் கருவிகளை வாசிப்பதிலும், புலவர்கள் இயற்றித் தரும் பாட்டைப் பாடுவதிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதைப்  பின்வரும் பாடல் அடிகள் உணர்த்துகின்றன.
 
“மறம்பாடிய பாடினியும்மே” (புறம் – 11)                              
“பாடினி பாடும் வஞ்சிக்கு” (புறம் – 15)
இவர்கள் யாழ் இசைக்கு ஏற்றவாறு பண்ணோடு பாடுவதில் மிகுந்த திறம் வாய்ந்தவர்கள்.

கூத்தர்
பல வகையான இசைக் கருவிகளின் துணைக் கொண்டு நடனம் ஆடுபவர்கள் கூத்தர்கள். சங்ககாலத்தில் இக்கலையைத் தம் தொழிலாகக் கொன்டவர்களை மக்கள் கூத்தன், ஆடுகளமகன் என்று அழைத்துள்ளனர். இவர்கள் கூத்து நிகழ்த்திய அரங்கம் –ஆடுகளம் என்று அழைக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் கோவில் கலையரங்கங்களிலும், மக்கள் ஒன்றுகூடும்  அளவிற்கு வசதி நிறைந்த இடங்களிலும் இவர்கள்  தமது கூத்தினை நிகழ்த்தியுள்ளனர். விழாக்கள் இல்லாத காலங்களில் இவர்கள் அரசர்கள், வள்ளல்களிடத்தில் சென்று ஆடிப் பாடிப் பரிசு பெற்று தம் வாழ்வை நடத்தியுள்ளனர். ஓய்மா நாட்டை ஆண்ட நல்லியக்கோடனிடம் சென்று தான் விரும்பியதை எல்லாம் பரிசாகப் பெற்று வந்ததைச் சிறுபாணற்றுப்படை நன்கு விளக்குகிறது.

விறலி

பாடலுக்கும் இசைக்கும் ஏற்றவாறு தம் நுண்ணிய உடலசைவின் மூலம் வெளிப்படுத்தும் நடனக் கலையில் தேர்ச்சிப் பெற்ற பெண் நிகழ்த்துக் கலைஞர்களே விறலியர்கள். இன்றைய பரதநாட்டியம் என்ற ஆடல் கலையின் முன்னோடிகள் இவர்களே. இவர்கள் பாணர்கள், கூத்தர்கள், பொருநர்கள் ஆகிய மூன்றுவகைப் பட்ட ஆண்பால் நிகழ்த்துக் கலைஞர்களுடனும் தன் ஆடல் திறனைப் புரவலர்கள் மத்தியில் வெளிப்படுத்தி பரிசுப் பெற்று வந்துள்ளனர். மக்கள் இவர்களை விறலி, நடனமகள், கூத்தி, ஆடுமகள் என்ற பெயர்களில் அழைத்துள்ளனர்.
                    
“ஐதுவீழ் இகுபெயல் அரககொண்டு அருளி                    
நெய்கனிந்து இருளிய கதுப்பின் கதுப்புஎன                   
 ——- ———- ————–  ————                   
மடமான் நேக்கின் வாள்நுதல் விறலியர்” (சிறுபாண் –  13 – 31)
என்ற சிறுபாண்ணாற்றுப்படை பாடல் விறலியர்கள் இக்காலத் திரைப்படக் கலைஞர்களைப் போல கண் கவரும் உடல் அழகுடன் இருந்தமையைப் புலப்படுத்துகிறது.

பொருநர்
பாண்சமூகத்தின் ஒரு பிரிவினரான பொருநர்களில் ஏர்களம் பாடுவோர், போர்களம் பாடுவோர், பரணிப் பாடுவோர் என மூன்று வகைப் பொருநர்களாக இருந்துள்ளனர். பொருநர்கள் மற்ற வகை நிகழ்த்துக் கலைஞர்களிடமிருந்து சற்று வேற்றுமைக் கொண்டவர்களாக உள்ளனர்.
இவர்கள் அரசர்களோடும், பெருநிலக்கிழார்களோடும் மிக நெருங்கிய உறவுடையவராக இருந்துள்ளனர். போர்க்களத்திலும், அரண்மனையிலும் அரசர்களின் அருகிலேயே இருந்துள்ளனர். மற்ற நிகழ்த்துக் கலைஞர்களைவிட பொருநர்கள் வெளியிடங்களில் மிகக் குறைவாகவே திரிந்துள்ளனர் என்பதை பின்வரும் புறநானுற்றுப் பாடல் விளக்குகிறது,
                         
 “கடற்படை அடற்கொண்டி                          
மண்டுற்ற மறநோன் தாள்                         
 தண்சோழ நாட்டுப் பொருநன்                          
——–  ———  ———- ——-                          
அவற்பாடுதும் அவன்தாள் வாழியஎன” (புறம் – 382)
நான் வளமான சேழநாட்டைச் சார்த்த பொருநன். பகைவர்களைக் கடலில்  சென்று வென்று அவர்களின் கலங்களிலிருந்து கொண்டு வந்த செல்வங்கள் எங்களிடத்தில் உள்ளன. தலையணி அணிந்த நல்ல குதிரைகளின் தலைவனாகிய நலங்கிள்ளியின் பொருநர்கள் நாங்கள் அவனை மட்டுமே பாடுவோம் பிறரைப் பாடுவதில்லை. பிறரிடமிருந்து பரிசும் பெருவதில்லை என்று ஒரு பொருநன் பாடுகிறான். தாம் வெளிப்படுத்தும் கலைக்கும் தாம் நடித்து காட்டும் கதைக்கும் பொருந்துமாறு தமக்கு வேடமணிந்து கூத்தாடுபவர்களே பொருநர்கள். விழா நடக்கும் ஊர்களுக்குச் சென்று தம் கலைத்திறனை நிகழ்த்திக் காட்டியப் பின் தம் கலைக் கருவிகளோடு தம் ஊருக்குச் செல்லும் வழக்கம் உடையவர்கள் என்பதை
  
“அறாஅ யாணர் அகன்தலைப் பேரூர்                 
சாறுகழி வழிநாள் சோறுநசை உறாது                  
வேறுபுலம் முன்னிய விரகுஅறி பொருந” (பொருந – 1-3)  
என்ற பொருநராற்றுப்படை அடிகள் மூலம் அறியமுடிகிறது. வள்ளல்களின் அரண்மனைக்கு வைகறையில் சென்று தனது கிணைப் பறையை இசைத்து அவர்களதுப் புகழைப்பாடி அவர்களைத் துயில் எழுப்புதல் இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத் திருப்பள்ளி எழுச்சிக்கு பொருநர்களே முன்னோடிகளாக இருந்துள்ளனர்.
இயவர்
காற்றுக் கருவியான குழலை இசைக்கும் நிகழ்த்துக் கலைஞர்களே இயவர்கள். போர்களத்திற்குச் செல்லும் முன்பு முரசிற்கு வழிபாடு இக்கலைஞர்களாலே செய்யப்பட்டுள்ளது. இவர்கள் போர்களத்தில் ஆம்பல் பண்னை குழலில் இசைப்பார்கள் என்பதைப் நற்றிணையின் பாடல் அடிகள் பின்வருமாறு விளக்குகிறது.
                           
 “இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்                             
ஆம்பலங் குழலின் ஏங்கிக்” (நற்றி – 113)
போர்களம் கண்டுப் பகைவர்களை வென்று மீண்டு வரும் முரசிற்கு இரத்தப்பலிக் கொடுத்து அதனை முதலாவதாக இசைக்கும் உரிமையைப் பெற்றவர்கள் இயவர்களே என்பதை விளக்குகிறது பின்வரும் பதிற்றுப்பத்தின் பாடல்

“மண்உறு முரசம் கண்பெயர்த்து இயவர்    
 கடிப்புஉடை வலத்தா் தொடித்தோள் ஓச்ச” (பதிற்று – 19)

இயவர்களின் இசையானது யானைகள் மூங்கிலை உடைத்துச் செல்லும் ஒலியைப் போல் இருந்தது என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிகறது.
 
“நிழத்த யானை மேய்புலம் படர                      
கலித்த இயவர் இயல்தொட் டன்ன” ( மதுரை – 303 – 304)
இயவர்கள் பலவகைப்பட்ட இசைக்கருவிகளை இசைக்கும் திறன் பெற்றவர்கள், முரசிற்குப் பலிக்கொடுக்கும் உரிமை, முரசு அடிக்கும் உரிமை மற்றும் அரசனுக்கு மிக அருகில் இருக்கும் உரிமையைப் பெற்றவர்களாக இருந்துள்ளனர்.

துடியன்
துடி என்ற இசைக் கருவியை இசைப்பவர்கள் துடியர்கள். போரின் தொடக்கத்தைத் தெரிவிக்கத் துடி என்ற இசைக் கருவிப் போர்களத்தில் இசைக்கப்பட்டுள்ளது. துடியை இசைத்து வீரர்களுக்கு வீரஉணர்வு மேலோங்கும் படித் துடியை இசைத்துள்ளனர் துடியர்கள். போர்களத்தில் மன்னனது மார்பினைத் துளைத்த வேல் துடியனின் கையில் இருந்தது என்று புறுநாறுற்றுப் பாடல் சுட்டிக்காட்டுகிறது. துடியர்கள் அதிகமாக போர்களத்தோடும், அரசர்களோடும் கொண்டிருந்த நெருங்கியத் தொடர்பைப் பின் வரும் படல்கள் மூலம் அறியமுடிகிறது.
                  
 “ உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்“ (புறம் – 269)                  
 “துடியன் கையது வேலே” (புறம் – 285)
பாணன், விறலி, துடியன் என்று நிகழ்த்துக் கலைஞர்கள் ஒரே குழுவாகச் சேர்ந்து சென்று புரவலர்களைக் கண்டு பரிசுப் பெற்றுள்ளனர்.
மாங்குடிகிழார் என்ற புலவர் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்ற நான்கு குடிகளைச் சுட்டிக் காட்டுகின்றார்.
                    
 “துடியன் பாணன் பறையன் கடம்பனென்று                      
இந்நான் கல்லது குடியும் இல்லை” (புறம் – 335)
இதன் மூலமாக மாங்குடிகிழார் துடியன் என்ற கலைஞனையே முதலில் குறிப்பிடுகிறார். துடியர்கள் தொண்மையான குடிகள் என்பதும், மன்னர்களின் நேரடி ஆதரவைப் பெற்றவர்கள் என்பதையும் உணரமுடிகிறது.

கிணைவர்
கிணை என்பது பலவகைப் பட்ட தோற்கருவிகளில் ஒரு வகைப் பறைக் கருவியாகும். கிணைப் பறையை இசைப்பவர்கள் கிணைவர் என்று அழைக்கப்பட்டனர்.
                    
 “கணையர் கிணையர் கைபுனை கவணர்                       
விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட” (நற்றி – 108)
என்ற பாடல் அடிகள் கிணைவர்கள் வேளாண்மைப் பணியை மேற்கொண்டதை விளக்குகிறது. குறிஞ்சி நிலத்தில் பயிர்களை உண்ணும் யானைகளை விரட்டக் கிணைப் பறையை இசைத்தனர் என்பதையும் புலப்படுத்துகிறது.

நிகழ்த்துக் கஞைர்களின் வாழ்க்கை
பாணனும் அவன் மனைவியான பாடினியும் ஆறுகள், காடுகள், மலைகள் எனப் பலவற்றையும் கடந்துச் சென்று வள்ளண்மை நிறைந்த வள்ளல்களைக் கண்டு  பாணன் இசைக் கருவிகளை இசைத்து அவர்களைப் புகழ்ந்து பாட விறலி அதற்கேற்றவாறு நடனமாடி அவர்களிடமிருந்து  பரிசுப் பெற்று இல்வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இவர்களது இல்வழ்க்கை செந்நெறியில் நடைப் பெற்றக் காரணத்தால் கலைகள் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளன.
மதுரைக்குப் பக்கத்தில் வைகையாற்றின் நீர்த்துறைக்கு அருகில் பூந்தோட்டங்கள் நிறைந்த இடத்தில் பெரும்பாணர்களின் வீடுகள் அமைந்திருந்ததையும், அவா் தம் வீடுகளில் ஆடல், பாடல், சார்ந்த ஓசைகள் இடைவிடாது ஒலித்துக் கொண்டு இருந்ததையும்
             
“அவிர்அறல் வையைத் துறைதுறை தோறும்             
பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி             
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்“ (மதுரை – 340 – 342)
 
என்ற மதுரைக் காஞ்சிப் பாடல் வரிகள் மூலம் அறியமுடிகிறது.
நுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களைப் பாடினியும், விறலியும் அணிந்திருந்ததைப் பல சங்கப்பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. நன்னனைக் காணச் சென்றக் கூத்தர்களுடன் இருந்த விறலியர்கள் அணிந்திருந்த அணிகலன்களின் நேர்த்தியான தன்மையால் “இலங்குவளை விறலியர்” என்று அழைக்கப்பட்டனர். சங்ககால மக்களின் அணிகலன்கள் செய்யும் நேர்த்தியானக் கலைத்திறனுக்கும், பெண்கள் தம்மை அழகுப் படுத்திக் கொள்ளும் அழகியல் உணர்விற்கும்
           
 “இலங்குவளை விறலியர் நின்புறம் சுற்றக்” ( மலைப்படு – 46)

என்ற மலைப்படுகடாம் பாடல் அடிச் சன்றாக உள்ளது.
நிகழ்த்துக் கலைஞர்களின் வறுமைநிலை

சங்ககால நிகழ்த்துக் கலைஞர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்துள்ளனர். வறுமையைப் பேக்கிக் கொள்ள தாம் நாடிச் சென்ற வள்ளல்களையும், மன்னர்களையும் மருத்துவன், அருளாளன், மழை போன்றவன் என்று போற்றியுள்ளமையால் அவர்களின் வறுமையை அறியமுடிகிறது,
கிணை வாசிக்கும் கலைஞன் ஒருவனது குடும்பம் வறுமையால் வாடுகிறது. அவனது மனைவி, பிள்ளைகள் என்று குடும்பமே பசித் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். உவர்க்கும் உப்பும் இல்லாத வறுமை. அவனது மனைவி குப்பையில் இருந்த வேளைக் கீரையைப் பறித்தாள், உப்பில்லாமல் வேகவைத்ததோடு, அதை தம் குடும்பம் உண்பதை மாற்றார் கண்டுவிட்டால் தம் இல்லற வாழ்வை இழிவாகக் கருதுவார் என்பதால்  தன் விட்டுக் கதவை அடைத்துவிட்டு தன் சுற்றத்தோடு  தானும் உண்டுள்ளாள் என்பதைப் பின் வரும்  சிறுபாணாற்றுப்படை பாடல் மூலம் அறியமுடிகிறது.
               
“வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த                
குப்பை வேளை உப்பிலி வெந்ததை                 
——– ——— ——– ——-                
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்” ( சிறுபா – 136-139)
இல்லத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களும் திர்ந்தாலும் உப்பு மட்டும் இல்லை என்ற நிலை வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும் வழக்கம் இன்றளவும் தமிழர்களிடம் இருந்து வருகிறது, வீட்டில் உப்பும் இல்லாதா நிலை வரும் படியாகக் கலைஞர்கள் வறுமையில் வாழ்ந்துள்ளனர். ஆகவே தான் விருந்தோம்பல் சிறந்து விளங்கிய சங்கத் தமிழகத்தின் கிணைக் கலைஞனின் மனைவி பகிர்ந்து  உண்ணுதலையும் மறந்து, உண்பதற்கு உகந்த தன்மை இல்லாத குப்பை வேளைக் கீரையை உண்டாள் என்பதை அறியமுடிகிறது.

நிகழ்த்துக் கலைஞர்களை அரசர்கள் பாதுகாத்தமை
கரிகாலன் தன்னைப் புகழ்ந்துப் பாடிய பொருநர்க்கு நூல் சென்ற வழியை கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு நுட்பமான வேலைப்பாடு வாய்ந்த பாம்பு உரித்தத் தோல் போன்ற மென்மையான ஆடையை வழங்கினான் என்பதைப் பின்வரும் பாடல் அடிகள் கொண்டு அறியமுடிகிறது.
                    
“நோக்கு நூழைகல்லா நுண்மைய புக்கனிந்து                      
அரவுஉரி அன்ன அறுவைநல்கி” ( பொருநர் – 82- 83)
சங்ககால மன்னர்கள் பாணர்கள், பாடினியர்கள், விறலியர்கள், கூத்தர்கள், பொருநர்கள் ஆகிய கலைவாழ் மக்களைக் கனிந்த முகத்துடன் வரவேற்று நல்ல உடைகளையும், பல்சுவை உணவுகளையும் கொடுத்து உபசரித்தார்கள்.
  
“கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை               
 –————– ——– ———- ——-                
மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும்” (பெரும்பாணா – 471 – 480).
என்ற பாடல் அடிகள் தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையனின் அரண்மனையில் சமையல் கலையில் வல்லவன் சமைத்த பல்சுவை உணவுகளைப் பாணர்களின் பிள்ளைகளுக்குச் சிறிய வெள்ளிக் கலன்களிலும், பெரியவர்களுக்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் படைக்கப்பட்டதை நமக்கு உணர்த்துகிறது,
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்களும், பாரி, காரி, அதிகன் போன்ற சிற்றரசர்களும் தன்னை நாடி வந்த இசைத் தமிழ் பாணர்களையும், நாடகத் தமிழ் நிறைக்கூத்தர்களையும் புன்னகையுடன் வரவேற்று பக்கத்தில் இருந்து உணவு படைத்து, உயர்ந்த ஆடைகளையும் வழங்கியுள்ளனர். அவர்களைப் பல நாள்கள் தம் அரண்மனையிலேயே தங்கியிருக்கவும் செய்தனர். அவர்கள் வேண்டியப் போது அவர்களே மலைத்து நிற்கும்படி பரிசுகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

ஓய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக் கோடானது அரண்மனையின் வாயிற்கதவானது புலவர்களுக்கும், பொருநர்களுக்கும், பாணர்களுக்கும், கூத்தர்களுக்கும், அந்தணர்களுக்கும் தடையின்றி திறந்தே இருந்துள்ளதை விளக்குகிறது பின்வரும் பாடல்
  
“பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்               
அடையா வயில்அவன் அருங்கடைகுறுகி” (சிறுபாண் – 203-206).
நன்னன் என்ற குறுநில மன்னன் பகைவர்களிடமிருந்து தான் பெற்ற செல்வங்களையும், அணிகளன்களையும் புலவர், பாணர், கூத்தர் முதலிய கஞைர்களுக்கு மழை போல வழங்கியுள்ளான் என்பதைப் புலப்படுத்துகிறது
 
“தொலையா நல்லிசை உலகமொடு நிற்பப்            
வீயாது சுரக்கும்அவன் நாள்மகிழ் இருக்கையும்” (மலைபடு – 70 – 76)

என்ற மலைப்படுகடாம் பாடல் அடிகள்.

நிறைவுரை  

சங்ககால நிகழ்த்துக் கலைஞர்கள் வறுமையான சூழுலில் வாழ்ந்திருந்தாலும் மக்கள் முதல் மன்னர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களாலும் போற்றப்பட்டுள்ளனர். அவர்களது கலைகளும் பெரிதும் மதிப்போடு இருந்துள்ளது. அனால் இன்று நிகழ்த்துக் கலைஞர்களும், நிகழ்த்துக் கலைகளும் நலிவடைந்த நிலையே காணமுடிகிறது. நவின ஊடகங்களின் வருகையிலும் இயந்திரமயமான வாழ்கையும் இதற்கான காரணங்களாக அமைகின்றன. திருவிழாக்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் மட்டும் தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, நடனம். போன்றவை குறைந்த அளவில் மக்கள் மன்றங்களிலும், தொலைக்காட்சிகளிலும் நடத்தப்படுகின்றன. இன்றைய சூழலில் நிகழ்த்துக் கலைகளையும், கலைஞர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்த மக்களும், அரசும் முயற்சி செய்தால் பண்டைய நிகழ்த்துக் கலைகளையும், தமிழர் பண்பாட்டையும் அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க முடியும்.

துணைநூற்பட்டியல்

1.சுப்பிரமணியன் ச.வே முனைவர்  –  
சங்கஇலக்கியம் மூலமும் உரையும், (உரையாசிரியர்)
 – பத்துப்பாட்டு,  
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

2.மகாதேவன் . கதிர் முனைவர் –  சங்கஇலக்கியம் மூலமும் உரையும் ,  (உரையாசிரியர்), நற்றிணை,
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

3.மீனவன் . நா கவிஞர், முருகசாமி .தெ- சங்கஇலக்கியம் மூலமும் உரையும்,(உரையாசிரியர்- அகநானூறு,
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

4.இளங்குமரன் . இரா புலவர் -சங்கஇலக்கியம் மூலமும் உரையும், (உரையாசிரியர்)-
புறுநானூறு,
கோவிலூர் மடாலயம், கோவிலூர் 630 307, வர்த்தமானன் பதிப்பகம்,
 21, இரமகிருஷ்ணா தெரு,  தியாகராய நகர். சென்னை –  17.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
  அ.அன்பரசன், 
முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்),
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603,  
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்,
வேலூர் – 632 115.
 
அ.அன்பரசன்,   
உதவிப்பேராசிரியர், 
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, 
சண்முகா தொழிற்சாலை கலை அறிவியல் கல்லூரி, 
திருவண்ணாமலை – 606 603.
 
நெறியாளர்
முனைவர் மு.பாலமுருகன், 
இணைப்பேராசிரியர்,
ஆய்வுநெறியாளர், 
முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, 
      கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை – 606 603.

 

கல்கி |கவிதை|முனைவர் ச.திவ்யபாரதி

கல்கி முனைவர் ச.திவ்யபாரதி

📜 ஒரு நாள்…


கோபாலகர்கள்


யமுனா நதி அருகே


ஆநிரைகளை
மேய்த்துக் கொண்டிருக்க..!


 

📜 கண்ணனும் பலராமனும்


உடன் இருந்தார்கள்!


பசுக்களோ


தனது தாகத்தைத் தணிக்க


யமுனை நதி
 

நீரைப் பருகின..!


 

📜 சட்டென்று


மயங்கி விழுந்தன..


கோபாலகர்கள்
 

பயத்துடன் செய்வது


அறியாது திகைத்தனர் !


 

📜 கண்ணனை அழைத்தனர்


விரைந்தான் விலாசி


நீரெல்லாம்


விடம் பரவியது


மனமெல்லாம் பதறியது..!


 

📜 அம்மோ!


பாம்புகளின் தலைவன்! – என்று


அதிர்ந்த நண்பர்களை


ஆதரவாய் அனைத்துக் கொண்டான்!


ஆராவமுதன்


“ஆணவத்தோடு


காளிங்கன் தலைதூக்கி சீறினான்!


 

📜 ஆணவத்தை


அழிக்க வந்த ஆழியான் !


காளிங்கனின் தலையைத்


தூக்கி எறிய சீறினான்!


பகை மூண்டது போர் நீண்டது


பெற்றோரின் கண்ணீருக்கு


பேரரதரவாய் பிரகாசித்தான்
 

பலராமன்..!


 

📜 காளிங்கன்


தனது வலிய வாலால்


வல்லவனை கட்டினான்


விஷத்தை எல்லாம் கக்கினான்


கட்டுக்குள் அடக்கி விட முடியுமா?


ஆராவமுதனை..!


 

📜 தன் உருவத்தைப்


பெரிதாக்கினார்


சரீரத்தைச் சிகரம் ஆக்கினார்


யோகபாலன்..!


 

📜 சட்டென்று


படம் எடுத்த பாம்பின் பிடி


பட்டென்று நழுவியது


நயமாக நாகத்தின் மேல் ஏறி


நர்த்தனம் ஆடினான்


நீலமோகனன்..!

 


📜 இவன் சிறுவன் அல்ல


சிந்தனைக்கினியன்!


பாற்கடலில் வீற்றிருக்கும்


பரந்தாமன்!


என “கர்வம் தெளிந்தான்”


காளிங்கன்..!


 

📜 “நாகராஜா ரமணகத்


தீவிற்குச் செல்


ஆனந்தமாய் இரு” என


வரம் அளித்த வரையெடுத்தோன், 


காளிங்கன் தலைமேல்


திருபாதச் சின்னத்தைப் பதித்தான்!


அவனது ஆணவத்தை அழித்தான்!


 

📜 நாகஅரசனின்


கருட பயத்தை


நீக்கினான் நிமலன்!


பரந்தாமனின் பாதம்


சரண் அடைந்தான் – காளிங்கன்


பாக்கியமானான் பாம்பரசன்..!


 

📜 நாம் ஓதி உணர வேண்டிய


பாடம் இதோ!


நர்த்தனத்தில்


நாராயணன் நவின்ற


மறைமொழி இதோ!


அகங்காரம் அழிவை தரும் !


ஆணவம் இழிவைத் தரும் !


 

📜 மனமே!


மயக்கம் கொண்டு


மாயையில் சிக்காதே


மாயவன் வரவா? போகிறான் – என்ற


மமதையில் மிதக்காதே..!


 

📜 சலிப்புற்று வராமல்


இல்லை சாரங்கன்


சரணாகதியாகத் திருவடி


புகுவோர்க்கு அவன் இரங்கன்!


புராணக் கதையில்


பாம்பரசனுக்குப் பரம மோட்சம்


பாவம் புரிவோருக்கு


என்றும் இல்லை,


சாபவிமோசனம்


உடைத்தெறிவோம்


‘நான்’ எனும் அகங்காரத்தைத்


தஞ்சம் அடைவோம் தனுசாரியை..!

 


📜 ‘கிருஷ்ணம் வந்தே


தேவ தேவன் 


வந்தே கிருஷ்ணம்..!

 


                                                                                                                                   கவிதையின் ஆசிரியர்


                                                                                                                                முனைவர் ச.திவ்யபாரதி,


                                                                                                                                             உதவிப்பேராசிரியர்,


                தமிழ்த்துறை,
        

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    

சேலம் – 636 005.

 

காலம் பேசுகிறேன்|கவிதை|முனைவர் சி. உமா சாரதா

காலம் பேசுகிறேன் முனைவர் சி. உமா சாரதா

📜 மானிடரே


நான் தான் “காலம்” பேசுகிறேன்


எனக்கு நானே சுய அறிமுகம்..!


 

முனைவர் சி. உமா சாரதா

📜 ஏனெனில் காலம் அப்படி


எனக்கு கர்மா விதி

என்ற பெயரும் உண்டு
!

எனக்கு ஆதி – அந்தம் இல்லை

என்பது கணக்கு
!

நடுவில் மானிடருக்கு

இதில் ஏனோ? பிணக்கு
!

எனக்கு உருவம் கிடையாது !


அருவமும் கிடையாது !


என்னை யூகிக்க முடியாது!


கணிக்கவும் முடியாது !


என்னை நிர்ணயிக்க இயலாது !


வரையறுக்க இயலாது !


எனக்கு எல்லைகள் இல்லை !


வரம்புகளும் இல்லை !


எனக்கென்று தனிமுகம்


தனி குணம் இல்லை !


எவரிடத்தும் பாரபட்சமும் இல்லை !


எவர்மீதும் பச்சாதாபமும் இல்லை!


 

📜 மானிடரே!


உங்கள் ஆட்டத்தின்


உச்சத்தையும் பார்த்திருக்கிறேன்.


எல்லாம் அடங்கிய


மிச்சத்தையும் பார்த்திருக்கிறேன்


சுயநலத்திற்காகப்
 

பொதுநலம் பேணுபவரையும்


பொதுநலத்திற்காக
சு

யநலம் மறந்தவரையும் 


ஒருசேர கண்டிருக்கிறேன்..!


 

📜 ஒவ்வொரு முறையும்


இயற்கை விதிகளை


நீங்கள் மீறத் துடிக்கும் போதெல்லாம்


உங்களை கபளீகரம் செய்திருக்கிறேன்..!


 

📜 அன்பின் பலம் – பலவீனம்


ஒருமித்துக் கண்டிருக்கிறேன்!


இறைமையையும்


இயற்கையையும்


விஞ்சியவர்களைக்


கர்மபலன் கொண்டு


தண்டித்திருக்கிறேன்..!


 

📜 அறம் பிழைத்தவர்களை


“அறமே கூற்றாகும்” என


அழித்திருக்கிறேன் !


 

📜 நீதி மறந்தவர்களையும்


நீதி மறுத்தவர்களையும்


சுடும் நாக்கொண்டு


தகித்திருக்கிறேன்..!


 

📜 காலப்போக்கு


காலக்கொடுமை


காலம் செய்த தவறு


என்றெல்லாம்


என்னை சுட்டுகிறீர்கள்


என் மீது பழிசுமத்துகிறீர்கள்..!


 

📜 மானிடரே


மனிதன் அறவழிச் செல்ல


நான் பதித்துக் கொண்டிருக்கும்


சுவடுகள் – ஆயிரம் ஆயிரம்..!


 

📜 சுவடுகளை ஆராய்வதில்


அறிவு மிளிர்கிறது!


பின்பற்றச் சொன்னால்


அறிவு மறைகிறது..!


 

📜 மீண்டும் மீண்டும்


நான் உணர்த்த


விரும்பியதை


கண்டுணர்ந்தவர் மிகக் குறைவு..!


 

📜 கேள்விகள் உங்களிடத்தில்


பதில் தேடுவது என்னிடத்தில்


குழப்பம் நீங்கள் உருவாக்குவது


தெளிவு தேடுவது என்னிடத்தில்


எவ்வாறு?
 

 

📜 இறைபடைத்த


இயற்கையாயினும்


இயற்கை படைத்த


இறையாயினும்


மாற்றம் செய்து


அதன்வழி


தடுமாற்றம் கொண்டு


“காலம் மாறிப்போச்சு” என


வீண் பழி என் மீது ?


நியாயமா..?


 

📜 நான் எப்போது மாறினேன்


மாற்றம் தடுமாற்றம்


ஏமாற்றம் போன்ற


மானிட இலக்கணங்கள் எனக்கேது?


 

📜 என்னை அடையாளப்படுத்தி


இலக்கியம் படைத்தீர்கள்!


ஆனால்?


படித்தது நான் அல்லவே


படிப்பினை கற்றுத் தரும்


நான் படித்தது எங்கே யாரிடம்?


 

📜 என்னிடம்


உங்களைப் போலவே


ஆயிரம் ஆயிரம்


கேள்விகள் உண்டு!


பதிலை என்னுள்ளே


தேடித்தேடி தோற்றுப் போகிறேன்..!


தோல்வி பல கண்டாலும்


என் ஓட்டத்தில்


சிறு துவளளும் இல்லை!


தோல்வி கண்டு


சலனமும் இல்லை!


வெற்றி மீது எனக்கு


சபலமும் இல்லை..!


 

📜 ஓடிக்கொண்டிருக்கிறேன்


ஓடுவேன் இன்னும்!


காலமாகிய நான்


யாருக்காகவும்


காத்திருக்க வேண்டியதில்லை..!


 

📜 யார் சென்ற பாதையையும்


திரும்பிப் பார்க்கத் தேவையில்லை


பிறர்செல்லும்


பாதை குறித்து


அச்சம் ஏதும் எனக்கு இல்லை..!


 

📜 என்னை சரியாகப்  


பயன்படுத்தியதற்குப்


பரிசாக வெற்றி!


நழுவ விட்டவர்களுக்கு


வாய்ப்பாகக் காத்திருப்பு!


அலட்சியப்படுத்தியவர்களுக்கு


தண்டனையாக மன்னிப்பு!


 

📜 என் நோக்கம்


“என் கடன் பணி செய்து கிடப்பதே”


ஏனெனில்


நிகழ்பொழுதினை நம்புகிறேன் !


எஞ்சியவற்றை


இறையும் இயற்கையும் காக்கும்!


 

📜 நான் எந்நிலையிலும்


என் நிலையிலும்


சமநிலை தவறியதில்லை..!


 

📜 மானிடரே


தொழில்நுட்பத்தில்


தொலைவதை நிறுத்துங்கள்!


இறந்த காலத்தில்


புதைந்து போகாதீர்கள் !


எதிர்காலத்தை


எட்டிப் பிடிப்பதில்


குழம்பித் தவிக்காதீர் !


 

📜 நிகழ்காலத்தின்


நிதர்சனத்தை


அழகிய நினைவுகளால்


நிரப்புங்கள்..!


 

📜 அறம் மறவாதீர் !


அன்பினை கொடுத்துப் பெறுங்கள்!


இறைமையை உணருங்கள் !


இயற்கை தான்


நம்மை காத்துக் கொண்டிருக்கிறது


என்பதை மறவாதீர்கள் !


 

📜 சகமனிதனிடம்


மானுடம் பேணுங்கள்


உயிர்களிடத்தில்


உணர்வுடன் ஒன்றுங்கள்..!


 

📜 மானிடா!


வெற்றியில்


தன்னிலை மறக்காதே


தோல்வியில் துவண்டு அழியாதே..!


 

📜 வெற்றியைத் தலைக்கேற்றாதே


தோல்வியும் உன்னிடம்


தோற்றுப் போகும்


கிடைத்ததை கொடு


கொடுத்தவை கிடைக்கும்!


 

📜எப்போதும்


சிறு புன்னகையுடன் இரு !


சோகமும் சோர்ந்து போகும் !


இனிய வார்த்தைகள் பேசு!


பண்போடு பழகு !


நன்னடத்தை கொள் !


நல்லுறவு பேணு !


மாற்றத்தினை


உன்னிடத்தில் தொடங்கு!


 

📜 மாற மறுத்து


“காலம் மாறிவிட்டது”            


என என்மீது பழி சுமத்தாதே!


 

📜 மானிடரே !


இறுதியாக எச்சரிக்கிறேன்…


இறைவகுத்த


மானுட நலம்


ஏற்று நடந்தால்


என்னால் மதிக்கப்படுவாய் – மறுத்தால்


“வாமன அவதாரத்தை”


நினைவில் கொள்..!


 

📜 இயற்கை வகுத்த


நியதிகளை பேணி நடந்தால்


என்னால் போற்றப்படுவாய்


இல்லையேல்


“நெற்றிக்கண்ணின்” – வழி

அழிக்கப்படவாய்….!


மீண்டும் பேசுவேன்

இப்படிக்கு காலம்..!


 

கவிதையின் ஆசிரியர்


முனைவர் சி. உமா சாரதா,


உதவிப்பேராசிரியர்,


தமிழ்த்துறை,


சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


சேலம் – 05.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »