Saturday, April 4, 2026
Home Blog Page 13

Pazhankudi Makkalin Vunavu Muraikal|Dr.S.Prabakaran

பழங்குடி மக்களின் உணவு - முனைவர் சு. பிரபாகரன்

“பழங்குடி மக்களின் உணவு முறைகள்”

Abstract
           

      Aboriginal people have been living in a landscape for a long time. They live their lives with their own customs, language, and land with their own practices, flags, wood, and animals. They have separate arts for themselves and the principles of God, religion, and the world. They have separate methods in individual life, relationship systems, and smooth life. They are not getting much from contemporary people, lack a money-based economy, and have not accepted any new products that have been developed by contemporary industry. Since these people live in conjunction with nature, the food system of these people was natural. This article makes this article about the Tamil tribes of Malayali, Paliyar, Patar, Cholakar, and the people.


முன்னுரை       

    பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டு பன்னெடுங்காலமாக ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும் உறவு முறைகளிலும் சுமூகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள் வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றார்கள். இம்மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற காரணத்தினால் இம்மக்களின் உணவு முறையும் இயற்கையானதாகவே இருந்தது. இக்கட்டுரையானது தமிழகப் பழங்குடிகளான மலையாளி, பளியர், படகர், சோளகர், குறவர் மக்களான உணவு முறைகள் குறித்து இக்கட்டுரை ஆய்கின்றது.


உணவு – விளக்கம்       

      உணவு என்பதில் ‘உண்’ என்பதே அடிச்சொல்லாக அமைகிறது. அடிச்சொல்லை ஆதாரமாகக் கொண்டு உயிரினங்கள் உண்ணப்படும் அனைத்துமே உணவு எனக் கருதலாம். உயிரினங்கள் உண்ணப்படும் உணவானது காலத்திற்கு ஏற்ப உணவாகவும் , மருந்தாகவும் பயன்படுகிறது.


உணவின் இன்றியமையாமை
         

       உணவு  ஒரு சமுகத்தின்  ஒழுக்கத்தை  நிர்ணயிக்கும்   பண்பாக  அமைகின்றது. மழை இல்லாமல் இரண்டாண்டுகள் சென்றால் ஏற்படும் பஞ்சத்தினால்  கொள்ளை, கொலை போன்ற  சமூகச் சீர்கேடுகள் நடக்கின்றன. எனவே உணவு என்பது சமூகத்தின் பண்பாட்டோடு தொடர்புடையதாக உள்ளது. பண்பாட்டுப் பிழை ஏற்படுவதால் பசியை நோய் என்று பழந்தமிழர் குறித்துள்ளனர். இதனாலேயே புறநானூறு பண்ணன் வள்ளலை “பசிப்பிணி மருத்துவன் எனக் குறித்துள்ளது. உணவின் பிண்டமாகிய உடம்பு உயிரைச் சுமந்து கொண்டிருக்க வேண்டுமானால் அதற்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சே. நமச்சிவாயம் கூறுகின்றார் மேலும்,


’ உண்டிகொடுத்தோ ருயிர் கொடுத்தாரே

உண்டி முதற்றே யுணவின் பிண்டம்’     (புறம்; 18:19:20)

என்று குடபுலவியனாரும்,


மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே   (மணி.11:95-96)


       என்று சாத்தனாரும் உணவு கொடுத்துப் பசியை நீக்குதல் நலம் எனக் குறித்துள்ளனர்.  


பழங்குடி மக்களின் உணவு முறைகள்

      பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் சூழலுக்கேற்ப உணவுமுறைகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் காட்டில் கிடைக்கும் பழங்களையும் காய்களையும் ஆரம்பகாலத்தில் உண்டு வாழ்ந்தனர். அடுத்து வேட்டைமூலமும் வேளாண்மை மூலமும் தங்களுக்கு வேண்டிய உணவுகளைப் பெற்றனர். மலையாளிப் பழங்குடி மக்கள் பலா, அன்னாசி, வாழை, கொய்யா, களி, கஞ்சி மற்றும் கேழ்வரகு அடை ஆகியவற்றையும் உண்கின்றனர். வீட்டின் முன்பு வளரும் காய், கீரை, வகைகள் மற்றும் ஏதேனும் பயறு வகைகளையும் கேழ்வரகு உணவோடு சேர்த்துக் கொள்கின்றனர். கேழ்வரகின் இரும்புசத்து இவர்களின் திடகாத்திர உடலமைப்பிற்கும் கடின உழைப்புக்கும் உறுதுணையாக உள்ளது. பன்றி, மான், கரடி போன்றவற்றையும் வேட்டையாடி உணவுக்காகப் பயன்படுத்துகினறனர்1 என்று கு.சின்னப்பபாரதி கூறுகின்றார்.


        மேலும் மலையாளி இனமக்கள் முற்காலத்தில் கிழங்கு, தேன், கனி, முதலியவற்றை உணவாக உண்டு வந்துள்ளனர். பின்பு தானியங்களைப் பயிரிட்டு தானிய உணவினை உட்கொள்ள ஆரம்பித்தனர். வரகு கஞ்சியினை இம்மக்கள் முக்கிய உணவாக உட்கொண்டனர். மேலும் திணை, வரகு, பனிவரகு,  கம்பு போன்ற தானிய வகைகளையும் மொச்சை, பருப்பு, வகைகளான அவரை, மொச்சை, கருமொச்சை, செம்மொச்சை ஆகியவற்றையும் தங்களுடைய அன்றாட உணவில் பயன்படுத்துகின்றனர்.  கீரை வகைகளையும் காய்கறி வகைகளையும் பயன்படுத்துகின்றனர். அவ்வபோது சிறிய பறவை வகைகளையும் காட்டுப்பன்றி, காட்டுக்கோழி, உடும்பு,  முள்ளம் பன்றி கறியினை இம்மக்கள் முக்கிய உணவாக உட்கொள்வதோடு விருந்து உபசரணைக்கும் பயன்படுத்துகின்றனர். மேலும் கோதம்பு முதலிய பலவகை உணவு தானியங்களையும் உணவுப்பொருட்களாக உட்கொள்கின்றனர். இவ்வாறு உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டதற்கு சமவெளிப் பகுதிமக்களுடன் கொண்ட தொடர்பே முக்கியக் காரணம் எனலாம். மலையாளி இனமக்கள் தங்கள் மரபு வழி உணவை மட்டுமல்ல மரபு சார்பண்பாட்டையும் இழந்துள்ளனர்2 என்று அ. நடராஜன் கூறுகின்றார். மேலும்  இம்மக்கள் உடும்பு, காட்டுப்பன்றி, மான், புனுகுபூனை, முயல், முள்ளம்பன்றி, காட்டுக்கோழி, காட்டுப்பறவைகளை வேட்டையாடி காட்டில் இருக்கும் கடும்பாறையின் மேல் போட்டு இயற்கை முறையில் கடும்வெயில் சூட்டில் வேகவைத்து உண்டு வாழ்ந்தனர்.


       இது சமைத்தலின் ஆரம்ப நிலையாகும். சமைத்தலின் அடுத்த படிநிலையாக பாறை குழிகளின் வேட்டை விலங்கின் மாமிசத்தை இட்டு சுற்றிலும் தீயிட்டு சுட்டுத் திண்ணும் உணவுமுறை உருவானது எனலாம் இதனை விளக்கும் விதமாக புறநானூறு,


முயல் சுட்ட ஆயினும் தருகுவோம்”  – புறம். 319-8
         

பளியர் இனப் பழங்குடி மக்கள் காட்டில் கிடைக்கும் கிழங்கு வகைகள், தேன், பலா, பச்சைக் கடலை போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றனர். பன்றி, மான், முயல், காட்டுக்கோழி போன்றவற்றை வேட்டையாடியும் உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். மேலும் காட்டுப்பழங்கள், ஈச்சம்பழம், தேன் ஆகியவற்றுடன் மான், பன்றி போன்றவற்றையும் வேட்டையாடி உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர்3. படகர் இனப்பழங்குடி மக்கள் பாலும் நெய்யும் கலந்த பொங்கலை உண்டதாகக் குறஞ்சித்தேன் புதினத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலும் வெல்லமும் நெய்யும் சேர்த்துப் பொங்கலை மணக்க மணக்கத் தையல் இலையில் (மினிகே இலைகள்) முதியவலானப் பாட்டி ரங்கனுக்குப் படைத்தாள்4 என்று கூறப்பட்டுள்ளது. 

         இதன் மூலம் படகரின மக்களின் உணவு முறையை அறிந்து கொள்ளலாம். மேலும் இம்மக்கள் தங்கள் காடுகளில் கடுமையாக உழைத்து அதன் மூலம் கிடைத்தவற்றையே உணவாகக் கொண்டனர். சாமை, ராகி, கோதுமை, கஞ்சே இவற்றைக் களியாகச் செய்து உண்கின்றனர். இவர்கள் ஒரே வகை உணவை இரு வேளைகளிலும் உண்பர். உழைக்கும் நேரங்களில்  தேநீர் அல்லது காப்பி, கோதுமை, மாவினால் செய்யப்பட்ட உணவு முதலியவற்றை உண்கின்றனர்  என்று க. பார்வதி கூறுகின்றார்5. படகர் இன மக்கள் இன்றைய சூழலில் அரிசியை முக்கிய உணவாகக் கொண்டுள்ளனர் என்றும் அறியமுடிகிறது. சோளகர் பழங்குடி மக்கள் ராகியை விளைவித்து அத்துடன் சில காய்கறிகளையும் சேர்த்து உண்டனர்.
சமீப காலமாக அரிசி  இவர்களின் முக்கிய உணவாக மாறி வருகின்றது. இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பீன்ஸ், அவரை, ஆகியவற்றையும் சேகரிக்கும் தேன் போன்றவற்றையும் சேர்த்து உண்கின்றனர்6 என்று ச. பாலமுருகன் தனது புதினத்தில் கூறுகின்றார். குறவர் இனப் பழங்குடி மக்கள் புறா, முயல், காட்டுப்பூனை, பன்றி, வெள்ளை எலி, கீரிப்பிள்ளை, கொக்கு, அணில் போன்றவற்றை வேட்டையாடி, உணவாக உட்கொண்டனர். குறிப்பாக பாண்டியக் கண்ணன். “அணிலை பிடித்து, அல்லது உறித்து உப்பு தடவி சுட்டு கள்ளுடன் சேர்த்து சாப்பிடுவது” போன்றவற்றை குறவர் பழங்குடி மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்7 என்று கூறுகிறார்.


          மேலும் குறவர் இன மக்கள்  பண்டைய காலத்தில் கிழங்கு, தேன், கனி, விலங்குகளின் இறைச்சி போன்றவற்றை  உணவாக உட்கொண்டனர். குறப்பெண்கள் கடமானின் தசையும் பன்றித் தசையும் உடும்புக் கரியையும் புளியோடு கலந்து உலை நீரில்  மோரை வார்த்து மூங்கிலின் அரிசியை உலையில்  இட்டு வெண்சோறு சமைத்து உண்டனர். பின் பாம்புக் கறியையும் சாப்பிட்டனர்.  பாம்பைப் பிடித்து அதன் தோலை உரித்து அதிலுள்ள நச்சு தன்மையை நீக்கி உண்டனர். பாம்பின் நெய் மூட்டு வலிக்குப் பயன்படுத்தி வந்தனர். இன்றைய குறவர் இன மக்கள் நெல், வரகு, கம்பு, திணை, கேழ்வரகு, கிழங்கு, சாமை முதலியவறை உண்டு வருகின்றனர். விலங்கு கறியான ஆமை, காடை, கெளதாரி, உடும்பு, வெற்கீரி, அணில், கொக்கு, உள்ளான், ஆலாவு மைனா, குட்டியான் ( குருட்டுக் கொக்கு) கோழி, கொக்கு, காட்டுக்கோழி, ஆடு, காட்டுப்பூனை, காணாங்கொத்தி, பன்றி ஆகியவற்றையும் உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர்8  இவ்வாறு பழங்குடி மக்கள்  வாழ்விடச் சூழல் பிற மக்கள் தொடர்பு நிலை போன்றவற்றின் அடிப்படையில் உணவுமுறை அமைந்துள்ளது.
 

முடிவுரை         

            பழங்குடி மக்களின் உணவு முறையானது அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது. இவர்கள் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்ற காரணத்தினால் ஆரம்ப காலத்தில் காடுகளிலும், மலைகளிலும் கிடைக்கும் காய்களையும், பழங்களையும் உண்டு வாழ்ந்தனர். அடுத்து வேட்டை மூலமும், வேளாண்மை மூலமும் தங்களுக்கு வேண்டிய உணவுகளைத் தாங்களே உற்பத்தி செய்யது பயன்படுத்தினர். இன்றையச் சூழலில் நவீன வளர்ச்சி, உலகமயமாக்கல், நகரமயமாக்கல், நகர மக்களின் தொடர்பு போன்றவற்றின் காரணமாக இம்மக்கள் பல்வேறு உணவுக்குப் மாறியுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகின்றது.


மேற்கோள் நூல்கள்

1.கு. சின்னப்பபாரதி, சங்கம், ப.66


2.அ. நடராஜன், கொல்லிமலை மலையாளிகளின் வாழ்வியல், பக், 47-48


3.கொ.மா. கோதண்டம், குறிஞ்ஞாம்பூ, ப.6


4.இராஜம்கிருஷ்ணன், குறிஞ்சித்தேன், ப.67


5.க. பார்வதி, படகர் வாழ்வியல், ப.67


6.ச. பாலமுருகன், சோளகர்தொட்டி, ப.186


7.பாண்டியக்கண்ணன், சலவான், ப.50


8.மு. சத்தியமூர்த்தி, கிருஷ்ணகிரி மாவட்ட குறவர் பழங்குடி மக்கள் வாழ்வியல்,
   முனைவர்பட்ட ஆய்வேடு, பக்.54-55


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சு. பிரபாகரன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

தூய வளனார் கல்லூரி (கலை மற்றும் அறிவியல்),

கோவூர், சென்னை – 600 128.

 

Neithal Thinai Mayakkamum Perazhivom|Dr.N.Dharmaraj

நெய்தல் திணை மயக்கமும் பேரழிவும்

“நெய்தல் திணை மயக்கமும் பேரழிவும்”

Abstract
           

      In today’s modern period, the state of human life has been undergoing various changes. Human lifestyle is gifted to them as a state of emergency, urgent pleasure, and emergency. The purpose of the article is to explore this, although there are many issues (economic extremism) in today’s world, but a common problem for all countries.


ஆய்வுச் சுருக்கம்
         

       இன்றைய நவீன காலகட்டத்தில் மனித வாழ்க்கையின் நிலை பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகி உள்ளது. மனித வாழ்க்கை முறையானது அவசர தேவை, அவசர இன்பம், அவசர முடிவு என்ற அவசரகதியான நிலை பேரழிவை அவர்களுக்கு பரிசாக தரவுள்ளது. இன்றைய உலக நாடுகளில் பல்வேறு பிரச்சனைகள் (பொருளாதார தீவிரவாதம்) போன்றவை காணப்பட்ட போதிலும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது” புவி வெப்பமடைதல்” என்ற நிகழ்வாகும். இதைப் பற்றி ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாகும்.


முன்னுரை         

         இந்தப் புவி வெப்பமடைதல் என்ற நிகழ்வுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது தொடர்பான ஆய்வு முடிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. இருந்த போதிலும், கட்டுரை பூவி வெப்பமடைவதற்கான காரணங்களையும், அதனால் தோன்றக்கூடிய விளைவுகளையும் கூற உள்ளது. குறிப்பாக, நெய்தல் திணை மயக்கத்தால் ஏற்படக்கூடிய விளைவே இப்பவி வெப்பமடைதலுக்கான முக்கிய காரணம்; அதனால் பேரழிவு ஏற்படும் என்பதை விளக்குவதே நோக்கமாக்கும். 


நெய்தல் திணை விளக்கம்
         

        தமிழ் இலக்கியத்தில் கடலும் கடல் சார்ந்த இடத்தையும் நெய்தல் நிலம் என்பார்கள். பூமி உருண்டையை சுற்றியுள்ள பெரும்  பகுதியான உப்பு நீரை தான் கடல்கள் என நாம் அழைக்கின்றோம். இது சுயமான பூக்கோல அமைப்பாகும். கடலின் ஆழமான உட்பகுதிக்கும் கரைகளுக்கும் விசேஷமான புவியியல் கட்டமைப்பு உள்ளது. கடல் நீரின் ரசாயன உள்ளடக்கமும் அதில் காணப்படும் பௌதிக நிகழ்ச்சி போக்குகளும் தனித்தன்மை வாய்ந்தவை. கடலின் அடியில் உள்ள நிலப் பகுதிக்கு குறிப்பிட்ட உள்கட்டமைப்பும் வெளி வடிவங்களும் உள்ளன. புவியியல் நிகழ்ச்சி போக்குகளால் உண்டாகும் இந்த வெளிவடிவங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. இவை கடல் அடியாளத்தின் கட்டமைப்பிலும் வெளிப்படுகின்றன. கடல் அடித்தளத்தின் வடிவங்கள் நான்காக பகுக்கப்பட்டுள்ளன. அவை

1. கண்டதிட்டு

2. கண்ட சாய்வு

3. கண்ட கீழ்ப்பகுதி

4. கடல் படுகை என்பதாகும்.
         

கண்டத்திட்டு எனப்படுவது சாதாரணமாக கண்டத்தின் ஓரமாக இருக்கும் ஆழமில்ல கடற்பரப்பு. இது கடல் நீரில் கீழ்ப்பகுதி வரை செல்லும் கண்டத்தின் பகுதியாகும். பெரும்பாலும் இது கடலால் மூழ்கடிக்கப்பட்ட கரையோர சமவெளியாக இருக்கும். கடல் மட்டம் இன்று உள்ளதை விட குறைவாக இருந்தபோது நிலவிய பண்டைய ஆற்றுப்பள்ளத்தாக்குகள். கரையோரங்களில் சுவடுகள் இங்கு காணப்படும்.
         

கண்ட சாய்வு என்பது  கண்டத்திட்டின் வெளி விளிம்பிலிருந்து கடலின் ஆழத்தை நோக்கிய கடல் அடித்தளத்தின் சாய்வு இது புவி அமைப்பு முறைகேட்ப பல்வேறு கடல்களில் இச்சாய்வு மாறுபடுகிறது.

கண்ட கீழ்ப்பகுதி என்பது கண்ட ஆய்விற்கும் கீழ்ப்பகுதியில் கடல்படுகைக்கும் இடையில் உள்ள பகுதி.

கடல் படுகை என்பது கடல் அடித்தளத்தின் மிகப் பரவலான பகுதி; அதிக அளவு கூறுபடுத்தப்பட்ட புடைப்புகளைக் கொண்டது.  இங்கு மலைகள், ஆழ்நீர் பள்ளங்கள், குன்றுகள், சமவெளிகள் உள்ளன. எல்லா கடல்களிலும் நடுக்கடலில் மலைத்தொடர்கள் தெளிவாக காணப்படுகின்றன.
         

     இன்று அறிவியலானது பல்துறை ஆராய்ச்சியின் மூலம் கடலில் உள்ளே ஒரு பிரதேச பகுதி காணப்படுகின்றது என்பதை இவ்வாறு தெளிவுபடுத்துகின்றது. இத்தகைய விளக்கத்தையும் குறிக்கும் விதமாக, தவறின் பழம் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் முதற்பொருள் என்ற பாகுபாட்டில் வருணன் மேய பெருமடல் உலகம் என்று பூதமாக குறைத்துள்ளது  பூடகமாக உரைத்துள்ளது. இது எப்படி எனில், தொல்காப்பிய அகத்திணையிலே கடல் என்பதை குறிக்க படுதிரை முந்நீர் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என நில வகைப்பாட்டில் உரைக்கின்ற பொழுது மட்டும் தொல்காப்பியர் தெளிவாக பெருமணல் என்று கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் சுட்டியுள்ளது; அவருடைய புவியியல் அறிவினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இத்தகைய கடலையும் அதனை சார்ந்த இடத்தையும் நெய்தல் என்ற கடல்
         

      வாழ் தாவரத்தின் பெயரை குறியீடாக வைத்திருப்பது தொல்காப்பியருக்கு முன்பே மரபாக இருந்துள்ளது என்பது இளம்பூரணரின் கருத்தாகும். ஆகையினால் இக்கட்டுரை கடல் கடல் சார்ந்த பகுதியை தமிழ் இலக்கிய மரபுப்படி நெய்தல் எனவும், சில இடங்களில் கடல் தேவை கருதி எனவும் பயன்படுத்தப்படுகிறது.


நெய்தல் நிலத்தின் பயன்பாடு        

            நெய்தல் நிலத்தினுடைய பயன்பாடு என்பது கற்காலத்தே தொடங்கிவிட்ட நிகழ்ச்சியாகும். மனித உணவிற்கும் போக்குவரத்திற்கும் பல்வேறு வசதிகளுக்கும் பயன்பட்ட நெய்தல் நிலத்தின் முக்கிய பணி சூழலைக் கட்டுப்படுத்துதல் என்பதாகும்.
 உலகில் மூன்றில் துருவப் பகுதிகள் தவிர்த்து இரண்டு பங்கு கடல் சூழப்பட்டுள்ளது. உலகில் பருவ நிலைகளை, அதாவது தட்பவெப்பத்தை கடல் கட்டுப்படுத்துகின்றது. இதற்கு காரணம் வளிமண்டலத்தை தாண்டிய பிரபஞ்ச பகுதியில் இருந்து வரும் மின்னோட்டம் கடலில் பாய்கின்றது. இதனை கடலானது பூமியின் நன்மைக்காக, குறிப்பாக உயிரினங்களின் நன்மைக்காக, புவியின் நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள வெப்பத்தை துருவப் பகுதிக்கும், அவ்வாறே துருவப் பகுதி உள்ள குளிரை நில நடுக்கோட்டு பகுதிக்கும் கொண்டு வந்து, தட்பவெப்பத்தை நிலை நிறுத்துகின்றது. இச்செயலுக்கு மிக முக்கியமான காரணியாக விளங்குவது கடல் நீரின் உப்பு தன்மையே ஆகும். கடல்நீர் என்பது வீரியமற்ற முற்றிலும் ஒரே மாதிரியான திரவமாகும். இதில் 96.5% நீர், சுமாராக 3.5 உப்புகள் மிகச் சிறிய அளவு திடப்பொருள்களின் துகள்கள் கரைந்த நிலையில், வாயுக்கள் அங்கத கூட்டுப் பொருள்களாக உள்ளன.


இதழ் திணை மயக்கம் மாசுபாடு திரிபு       

      நெய்தல் திணை மயக்கம் என்பது இங்கு நெய்தல் நிலமாச்சுபாடு திரிபையும் அதற்கான காரணங்களையும் சுட்டுதல்.  சாதாரண குப்பை கழிவு நீர் முதற்கொண்டு அணுக்கழிவு ஏவுகணை கழிவு எல்லாமும் கொட்டுகின்ற குப்பை தொட்டி கடல் என்ற நிலை உருவாகியுள்ளது. புதிய கண்டுபிடிப்பு மேம்பாடு போன்றவைகளில் ஒன்றான கடலிலே கால்வாய் தோண்டுதல் இதன் காரணமாக ஆழிப்பேரலையை தடுக்கும் இயற்கை அறனும் கடல் வாழ் உயிரினங்களின் உணவு மூலமாக விளங்கும் பவள பாறைகளும் சேதமுறுகின்றன. இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.  புதிய கடற்கரை கடலோர மண்டலங்கள் என கடற்கரை பகுதிகளை நவீனப்படுத்துதல் என்ற செயல் பழந்தமிழர் வாழ்க்கையின் எச்சமாக இருக்கக்கூடிய பரதவ மக்களுடைய வாழ்க்கையையும் அவரது குடியிருப்புகளையும் அளிக்கின்றது. அழிக்கிறது.
         

     இதைப்போல இன்னும் கடலை மாசுபடுத்துகின்ற நிகழ்வுகளை கூறிக் கொண்டே போகலாம். இலக்கியத்திலே திணை மயக்கும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது; ஆனால் உண்மை வாழ்வில் அது நிகழ்ந்தால் மிகுந்த ஆபத்தை தரும்.


நெய்தல் நில மயக்கமும் பேரழிவும்       

      புவி வெப்பமடைதல் தொடர்பாக இரு கோட்பாடுகள் அறிஞர்கள் இடையே முன்வைக்கப்படுகின்றன.


1. தானாகவே அதிகரிக்கும் முடிவு இறுதியில் பேரழிவு.

2. திடீரென வந்து தாக்கும் பேரழிவு என்பதாகும்.

3. தானாக அதிகரிக்கும் முடிவு பேரழிவு
         

        உலகம் வெப்பமடைவதற்கான காரணமாக கூறப்படுவது, துருவப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டம் அதிகரிப்பதாலும், இதன் விளைவாக வளிமண்டலத்தில் கலக்கும் நீராவி அளவு அதிகரித்து அவை பசுமை இல்லா வாய்வாக மாறி சூரியனிடமிருந்து வெப்பத்தை ஏற்று பூமியின் மீது அனுப்புகின்றன. இதனால் புவி வெப்பமடைகிறது. இது சுழற்ச்சியாக நடந்து, பனிப்பாறைகள் மேலும் உருகுதல், கடல் மட்டம் உயர்தல், நீராவியின் அளவு அதிகரித்தல், இதன் விளைவு காலநிலை மாற்றம், கடைசியில் பேரழிவு.

திடீரென வந்து தாக்கம் பேரழிவு
         

       மேலே கூறியவாறு பனிப்பாறைகள் உருகி கடல் நீருடன் கலந்து ஆவியாகி பசுமை இல்லா வாய்வாக மாறுதல் பூமி வெப்பம் அதிகரித்து அதிகமாக பனிப்பாறைகள் உருகுகின்றன இந்நிலையில் இது மற்றுமொரு வகையான
           

    ஆபத்தினை தருகின்றது இந்நிகழ்வு கடலின் உப்பு தன்மையினை குறைக்க வைக்கின்றது பனிப்பாறைகளில் தூய நீர் கடல் நீருடன் கலப்பதால்  கடல் மின்கடத்தும் தன்மையை இழக்கும் இதனால் காலநிலை சீராக்கும் என்ற கடலின் முக்கிய பணி தடைப்பட்டு புவி வெப்பமும் குளிரும் இடமாறும் தன்மை போகும் குறிப்பாக அமெரிக்கா ஐரோப்பிய கண்டம் உள்ளிட்ட நாடுகள் கடும் குளிரில் சிக்கும் அபாயம் உள்ளது தற்பொழுது வரலாறு காணாத பனிப்பொழிவு அமெரிக்காவில் உள்ளது குறிப்பிடத்தக்கது இதனால் உணவு உற்பத்தி மின்சாரம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் மேலும் பெரும்புயல் வெள்ளம் தாக்கும் இதனால் கடலோரங்கள் கடலில் மூழ்கும் இத்தகைய நெய்தல் நில மயக்கத்தால் பூமியில் வரலாற்றில் கூறியுள்ளது போல நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு பேரழிவு ஏற்படும் நிலை உள்ளது இதனையே கவிஞர் சுரதா


பொடி மணல் உலகை சூழ்ந்த

போர்க்கடல் மாந்தர் தம்மை

வடிந்திடா நீரினாலே வஞ்சிக்கும்

நெய்தல் நீர் இயற்கை எழில்
         

    என்று குறிப்பிட்டுள்ளார். அன்று தொல்காப்பியன் நெய்தல் திணைக்காக வகுத்த இரங்கலம்  இரங்கலும்இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருள் வருங்கால மக்களின் வாழ்வில் வர நேரிடும் என்ற அச்சம் தோன்றுகின்றது.


பார்வை நூல்கள்

1. கடல்களும் மனிதனும் ப.ஸ்லோகின்
 மொழிபெயர்ப்பு: இரா பாஸ்கரன்
 முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ விற்பனையாளர், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.


2. நெய்தல் முகம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இதழ் நாகப்பட்டினம்


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் ந. தர்மராஜ்,  

இணைப் பேராசிரியர், 

செயின்ட் ஜோசப் கல்லூரி (கலை மற்றும் அறிவியல்), 

கோவூர்- சென்னை.

 

Vethakkannin Keerthanai Nadakangalil Isaiyum Porunmaiyum|Dr.T.R.Hebzibah Beulah Suganthi

வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்களில் இசையும் பொருண்மையும்

வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்களில் இசையும் பொருண்மையும்


Abstract
               

         In the 18th and 19th centuries, Keerthanai drama emerged as a notable development within Tamil dramatic literature. Among these Keerthanai dramas, Vethakkan’s Aadhi Nandavanap Pralayam and Aadhi Nandavanam Meetchi are notable for their adaptations of Milton’s Paradise Lost and Paradise Regained. This study critically examines the literary and musical dimensions of these Keerthanai dramas. It specifically investigates the structural and contextual aspects of the three primary components of Keerthanai: Pallavi, Anupallavi, and Charanam. Through a thorough analysis, the paper provides a nuanced critique of the musical and literary elements present in Keerthanai dramas and introduces novel insights into the compositional frameworks of Vethakkan’s works. Furthermore, this research elucidates the cultural and contextual impacts of Aadhi Nandavanap Pralayam and Aadhi Nandavanam Meetchi, thereby offering a comprehensive re-evaluation of the literary significance of Tamil Keerthanai dramas.


Keywords: Keerthana Drama, Musical Elements, Tharu, Pallavi, Saranam, Rhythm


ஆய்வுச் சுருக்கம்
         

        நாடக இலக்கியங்களின் வளர்ச்சியாக 18,19 ஆம் நூற்றாண்டில் கீர்த்தனை நாடக இலக்கியங்கள் தோன்றின.இக்கீர்த்தனை நாடக இலக்கியங்களில் அ.வேதக்கண் எழுதிய ஆதி நந்தவனப் பிரளயம், ஆதி நந்தாவன மீட்சி ஜான் மில்டனின் சொர்க்கம் நீக்கம், சொர்க்கமீட்சியும் தழுவி எழுதப்பட்டனவாகும்.இக்கட்டுரை, இக்கீர்த்தனை நாடகங்களில் இலக்கிய மற்றும் இசைத் தன்மைகளை ஆராய்கிறது.குறிப்பாக் கீர்த்தனையில் பயின்று  வரும் பல்லவி, அனுபல்லவி, மற்றும் சரணம் ஆகிய மூன்று பிரிவுகளின் அமைப்பு மற்றும் அவற்றின் பொருத்தப்பாட்டினை ஆராய்கிறது. இந்த ஆய்வில், கீர்த்தனை நாடகங்களில் உள்ள இசை மற்றும் இலக்கியவியல் பரிமாணங்கள் பற்றிய ஆழமான விமர்சனங்கள், மற்றும் வேதக்கண்ணின் படைப்புகளில் உள்ள பாடல்களின் அமைப்புகளைப் பற்றிய புதிய தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. மேலும், “ஆதி நந்தவனப் பிரளயம்” மற்றும் “ஆதி நந்தவனம் மீட்சி” ஆகிய நாடகங்களின் கலாச்சார மற்றும் தொகுதித் தாக்கங்களைப் பகுப்பாய்வு செய்யும் இந்த ஆராய்ச்சி, தமிழ் கீர்த்தனை நாடகங்களின் இலக்கிய மதிப்பைப் புதிய முத்திரையுடன் விளக்குகிறது.


தரவுச்சொற்கள்

கீர்த்தனை நாடகம், இசைத் தன்மைகள், தரு, பல்லவி, சரணம், தாளக்கட்டு


முன்னுரை
         

       தமிழ் நாடக இலக்கியங்களில் கீர்த்தனை நாடக இலக்கியமும் ஒரு வகை. இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என முத்தமிழின் முழு வடிவாய்க் கீர்த்தனை நாடகங்கள் விளங்குகின்றன. இக் கீர்த்தனை நாடகங்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வளர்ச்சி அடைந்தன. அக்கீர்த்தனை நாடகங்களுள், அ. வேதக்கண் எழுதிய ஆதி நந்தவனப் பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி என்ற கீர்த்தனை நாடகத்தில் இடம் பெறும் கீர்த்தனைப்பாடல்கள் இவண் ஆராயப்படுகிறது.


அ.வேதக்கண்
         

        அ. வேதக்கண் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோயிலான்விளை என்னும் ஊரில் 1832 ஆம் ஆண்டு மே மாதம் ஓர் இந்துக் குடும்பத்தில் பிறந்தவர்.இந்து மதப் பாரம்பரிய முறைப்படி வளர்க்கப்பட்டவர். இவர் தம்  தொடக்கக் கல்வியை நெய்யூர் போர்டிங் பள்ளியில் பயின்றார். பின் நாகர்கோவில் இறையியல் பள்ளியில் இறையியல் கல்வியை முடித்தார். இறையியல் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், மலையாளம் ..முதலிய மொழிகளைக் கற்று அறிந்த இவர் மேலும் மூன்று மொழிகளைத் தாமே முயன்று கற்று  ஏழு மொழிகளில் பேசும் திறன் உடையவராக விளங்கினார். பன்மொழி அறிஞராகத் திகழ்ந்த இவர் தமிழ் மொழியில் 13 நூல்களை எழுதியுள்ளார்.
         

        உலகப் புகழ் பெற்ற படைப்பாளர்களின் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்களில் ஒருவரான  ஜான் மில்டன் எழுதிய Paradise Lost, Paradise Regained ஆகிய நூல்களைத் தழுவி அருள் திரு அ. வேதக்கண் ஆதி நந்ததாவனப் பிரளயம், ஆதி நந்தாவன மீட்சி என்னும் கீர்த்தனை நாடகங்களைப் படைத்துள்ளார். ஆதிநந்தவனப் பிரளயம் 1862ஆம் ஆண்டில் முதல் பதிப்பாகவும் 1868 இல் இரண்டாம் பதிப்பாகவும் இலண்டன் மிஷனரிஅச்சகம் பதிப்பித்தது. இதன் சிறப்புக் கருதி கிறித்தவ இலக்கிய சங்கம் ஏறத்தாழ ஒரு  நூற்றாண்டு கழித்து 1992ஆம் ஆண்டு மறுபதிப்பாக வெளியிட்டது.


ஆதி நந்தவன பிரளயமும் சுவர்க்க நீக்கமும்
         

        கிறித்தவ விவிலியத்தில் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும் முக்கியத்துவம் பெறுவது போல சொர்க்க நீக்கமும் சொர்க்கமீட்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. பழைய ஏற்பாட்டில் ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியும் கனியைச் சாத்தானின் வஞ்சனையால் உண்டு தேவ கட்டளையை மீறி பாவம் செய்து சொர்க்கத்தை விட்டு நீக்கப்படுகிறார்கள். சாத்தானின் பேச்சுக்கு இணங்கி தேவர்களைப் போல் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டு அறிவு மரத்தின் கனியை உண்டதால் நன்மை தீமை பற்றிய  அறிவு, தீவினை, நோய், முதுமை, சாவு ஆகியவற்றிற்கு உள்ளாகிறார்கள். பூலோகத்தில் பாவத்திற்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் உலகின் முதல் மனிதர்கள். இவ்வாறு பாவம் செய்து சாத்தானுக்கு அடிமைகளாய்க் கிடந்த மனிதர்களை மீட்க இயேசு மனிதனாக உலகில் வந்து சாத்தானின் சோதனைகள் யாவற்றையும் வென்று மனிதர்களைப் பாவத்தில் இருந்து மீட்டு இழந்த சுவர்க்க வாழ்வை மீட்டுக் கொடுக்கிறார். ஜான் மில்டன் கிறித்தவ விவிலியத்தை மூலமாகக் கொண்டு paradise lost, paradise Regained  என்ற நூல்களை எழுத, வேதக்கண் ஜான் மில்டனின் காப்பியங்களையே தம் கீர்த்தனை நாடகங்களுக்கு மூல நூலாகக் கொண்டு இரு கீர்த்தனை நாடகங்களாகப் படைத்துள்ளார்.


கீர்த்தனை நாடகம்

         ஒரு வரலாற்றைக் கீர்த்தனைகளினால் நாடகத் தன்மை விளங்க எழுதுவதை நாடகக் கீர்த்தனைகள் எனலாம். கீர்த்தனைகள் இசைப்பாடல்கள் இராகத்தாளங்களுடன் அமைபவையாகும். இக்கீர்த்தனைப் பாடல்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் முப்பிரிவுகளை உடையவை. கீர்த்தனைப்பாடல்கள் அனுபல்லவி இன்றியும் வரும். நாடகத் தன்மை செயல்பாடுகள் உணர்ச்சி வேகங்களைக் கொண்டு அமையும் இக்கீர்த்தனை நாடகங்கள் கீர்த்தனைகளை மிகுதியாக கொண்டு நாடக இயல்புகளுடன் எழுதப்பட்டுள்ளன.  நாடகக் கீர்த்தனைகள் தமிழ் மொழியில் ஒரு இலக்கியமாக 18,19 ஆம் நூற்றாண்டுகளில் மக்களின் பேராதரவுடன் நன்கு விளங்கின. கீர்த்தனங்களுடன் ஈரடி கண்ணிகளால் அமைந்த இசைப் பாடல்களும் கதை விளக்க குறிப்புகளாலான விருத்தங்களும் நாடகக் கீர்த்தனைகளில் இடம்பெறுவது மரபு. கீர்த்தனைப் பாடல்களைத் தரு என்றும் அழைப்பர் தமிழ் மொழியில் பல நாடக கீர்த்தனைகள் எழுதப்பட்டு இசைவாணர்களால் இன்னிசை பொழிவுகளாகப்  (காலட்சேபம்) பல நாட்கள் தொடர்ந்து ஆவல் ததும்ப சுவைக்கும் மக்கள் முன்பு மிகவும் இனிமையாக இசையுடன் விளக்கப்படும். பெரும்பாலும் நாடறிந்த நல்ல வரலாறுகளையே நாடகக் கீர்த்தனைகளாக எழுதுவது வழக்கம் (ஏ.என். பெருமாள்,தமிழர் இசை,ப.85).


கீர்த்தனை நாடகங்கள்
         

        அருணாச்சல கவிராயர் எழுதிய இராம நாடக கீர்த்தனையைத் தொடர்ந்து கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதிய நந்தனார் சரித்திர கீர்த்தனை, இயற்பகை நாயனார் சரித்திரம், திருநீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்கால் அம்மையார் சரித்திரம் ஆகிய  கீர்த்தனை நாடகங்களைத் தொடர்ந்து இசுலாமியர்களும்  கிறித்தவர்களும் தங்கள் சமய கருத்துக்களைப் பரப்பும் பொருட்டு கீர்த்தனை நாடகங்களை எழுதினர். வீரமாமுனிவர் தேம்பாவணிக் கீர்த்தனை , தேம்பாவணிக் கீர்த்தனை இரண்டாம் காண்டம் என்ற இரு கீர்த்தனை நாடகங்களை எழுதியுள்ளார்.  அ.வேதக்கண் எழுதிய  இரண்டு கீர்த்தனை நாடகங்களும் வேதக்கண்ணால் மக்களிடம் காலட்சேபம் செய்து பாடப்பட்டன.


ஆதி நந்தவன பிரளயம் கீர்த்தனை  நாடக நூல்அமைப்பு
        

         பலதரப்பட்ட சிறந்த பண் அமைப்பும், தாளக்கட்டும் உடையனவாய் இசைக்கப்படும் கீர்த்தனைகள் ஆசிரியர் தம் இசைப் புலமையை வெளிக்காட்டும் மொழி திறன்கள் ஆகும். கீர்த்தனையில்  பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முப்பிரிவுகளில் பல்லவியே கரு; இதன் தொகை விரிவுகளே பின்வரும் அனுபல்லவி, சரணங்கள். எனவே பல்லவி இன்றி கீர்த்தனைகள் அமைவதில்லை ஆயின் அனுப்பல்லவி இன்றிக் கீர்த்தனைகள் அமைந்துள்ளன. சரணங்கள் கீர்த்தனையின் விளக்கப் பகுதியாகும். சரணம் முடிந்தவுடன் பல்லவியைத் தொடர்ந்து பாடுதல் வேண்டும். ஆதி நந்தவனப் பிரளயத்தில் 39 கீர்த்தனைகளும் ஆதி நந்தாவனமீட்சியில் 41 கீர்த்தனைகளும் தோடயப் பகுதியில் 3 கீர்த்தனைகளும் ஆக மொத்தம் 83 கீர்த்தனைகள் இடம் பெற்றுள்ளன.


கீர்த்தனை
         

        கீர்த்தனை என்ற சொல்லுக்கு ‘கீர்த்தி’ என்பது அடிச்சொல். இது ‘புகழ்’ எனப் பொருள்படும். தமிழில் ‘இசை’ என்ற சொல்லுக்கு ‘புகழ்’ எனப் பொருள் இருப்பது இங்கு கருதத்தக்கது. கீர்த்தனை என்னும் சொல் வடிவம் இடைக்காலத்தில் தோன்றியது; கீர்த்தியைப் பாடுவது கீர்த்தனை.


சீர்-புகழ்,கீர்-புகழ்,(சீர்=கீர்),

கீர்+த்+த்+இ=கீர்த்தி,

கீர்த்தி+அன்+ஐ=கீர்த்தனை         

       மாந்தன் தன் அறிவுக்கு எட்டிய அளவில் அறிந்து போற்றிப் புகழும் இன்னிசைப் பாடலே கீர்த்தனை எனப்படும். கீர்த்தனை, கிருதி, கீதம் என்பன பொதுவாக ஒன்றெனக் கருதப்பட்டாலும் அவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. கீதம் என்பதும் இசைப் பாடலே; எனினும் கீதத்தில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற பிரிவுகள் இல்லாமல் ஒரே பாடலாக அமைந்திருக்கும். கீர்த்தனை, கிருதி என்பவற்றுள் கீர்த்தனையே இலக்கியச் சிறப்பு உடையது; கிருதியில் இலக்கிய மேன்மை குறைவு; ஆனால் இசைத் திறம் அதிகம். கிருதிகளுக்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூவமைப்பு இன்றியமையாதது. கீர்த்தனைகள் அனுபல்லவி இல்லாமலும் வருவதுண்டு. கிருதியில் இசைத்திறம் அதிகமாக இருக்கும்; கீர்த்தனையில் பக்தி திறம் அதிகமாக இருக்கும். (எஸ்.சௌந்தர பாண்டியன்; தமிழில் கீர்த்தனை இலக்கியம்; ப.27) கீர்த்தனை என்ற பெயர் அமைய கீர்த்தனை தோன்றிய காலச் சூழல் காரணம் எனக் கருதலாம்.


பல்லவி
         

        கீர்த்தனைப் பாடலின் திரண்ட கருத்தைப் பல்லவியிலேயே அறிய இயலும். மீண்டும் மீண்டும் பாட இனிமை பயக்க வல்லன பல்லவிகள்; அனுபல்லவி பாடிய பின்பும் சரணம் பாடிய பின்பும் பல்லவியை மீண்டும் பாட வேண்டும். கீர்த்தனை ஆசிரியர் இக்கருத்தை உட்கொண்டே பல்லவியை அமைப்பர்.
பல்லவி ஓரடியிலும் அமைவதுண்டு. பெரும்பாலும் ஈரடியிலேயே பல்லவிகளை அமைப்பர். வேதக்கண் ஓரடியிலான பல்லவி அமைந்த பாடல்களையும் ஈரடியிலான பல்லவி அமைந்த பாடல்களையும் அமைத்துள்ளார்.


ஓரடியில் அமைந்த பல்லவி

‘மகனே நீயே ஒரு செய்தி வகை கேளாயே’ (ஆதி நந்தாவனப் பிரளயம்,ப.15)

மற்றும்
‘ஓசன்னா! சிம்மாசன னே! பாவமோசன்னா!’ (மேலது,ப.20)

ஈரடியில் அமைந்த பல்லவி

இந்தப் புத்தி எண்ணிட வேண்டாம் -ஆதமே

வீணில் இந்தப் புத்தி எண்ணிட வேண்டாம்   (மேலது,ப.105)

      என்பன போன்ற ஈரடியில் அமைந்த பல்லவி பாடல்கள் பல உள்ளன.


இயைபுத் தொடை நயம்
         

     பல்லவியில் கையாளப்படும் அதே இயைபுத் தொடை அனுபல்லவி, சரணங்களில் பெரும்பாலும் வருவதில்லை. அடியின் ஈற்றொலி ஒற்றுமைப்பட வருவதே
இயைபுத் தொடையாகும்.
 

‘ஏன் ஐயா மறுக்க வேணும் 

பாணம் ஊண் ஒறுக்கவேணும்?’ (ஆ.மீட்சி.ப.160)
           

      எனும் பல்லவியில் ‘வேணும்’ என்ற சொல் ‘ஈற்று’ச் சொல்லாக வந்தமையைக் காணலாம். இவ்வாறு வருவதே இயைபுத்தொடையாகும்.’வேணும்’என்ற சொல்லுக்கு இணைந்த  சொல்லாக வரும் இயைபுத் தொடை அனுபல்லவி, சரணங்களில் வராது. மீண்டும் மீண்டும் பல்லவி பாடும் போது அதில் வரும் இயைபுத் தொடை நயத்துக்கும் பின்வரும் அனுபல்லவி சரணங்களில் வரும் இயைபுத்தொடைக்கும் வேறுபாடு இருத்தலே சிறப்பாகும். இது பல்லவியை ஏற்புடையதாக்கக் கையாளப்படும் உத்தியாகும்.


எதுகைத்தொடை 
         

        இயைபுத்தொடை நயமின்றி எதுகைத்தொடை நயமும் பல்லவியில் உள்ளது. பல்லவியில் என்ன எதுகை வருகின்றதோ அதே எதுகை பெரும்பாலும் அனுபல்லவியின் முதல் அடியில் வரும். இது பல்லவியை எடுப்புடையதாக்கும் மற்றொரு உத்தியாகும்.


அடுக்க வேண்டாம் ஏவையே!

தாட்சண்யப் பாம்பே

அகன்று நில் இனி வராதே (ஆ.பிரளயம்,ப.81)

என்பது கீர்த்தனையின் பல்லவி. ‘அடுக்க’ என்று வரும் எதுகைக்கு ஏற்ப
அனுபல்லவியில் ,


‘துடுக்கண் அலகையோடு

துணிந்தெனைச் சதி செய்த’  ( ஆ.பிரளயம்,ப.81)
         

      என அமைந்துள்ளது.துடுக்கண் என்ற சொல் எதுகை நயம்பட உள்ளது. இதே எதுகைச்சொல் அனுபல்லவியைத் தொடர்ந்து வரும் சரணங்களில் அமைவதில்லை.
 பொருள் நிலையில் பல்லவிக்கும் அனுபல்லவிக்கும் சரணத்திற்கும். முரண் இருத்தல் கூடாது. பல்லவி,அனுபல்லவி,சரணம் மூன்றும் ஒரே கருத்தையொட்டி ஒன்றுக்கொன்று இணக்கமாக அமைதல் இன்றியமையாத கீர்த்தனை இலக்கணம் ஆகும். வேதக்கண்ணின் கீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்றும் ஒரே கருத்தை விளக்கும் தன்மையதாய் பொருள் நிலையில் முரணில்லாத தன்மையில் பாடப்பட்டுள்ளன.


அனுபல்லவி         

        அனுபல்லவி என்ற சொல்லுக்குப் பல்லவியைத் தொடர்ந்து வருவது என்பதே பொருளாகும். பல்லவிக்கு விளக்கமாக நிற்பது அனுபல்லவியாகும். அனுபல்லவியைப் பாடி முடித்ததும் மீண்டும் பல்லவியை எடுத்துப் பாட வேண்டும்.(எஸ்.சௌந்திர பாண்டியன்; தமிழில் கீர்த்தனை இலக்கியம்.ப.27)


‘விருந்து வைத்தானே!

சம்பிரதாயம்தெரிந்திடத் தானே! ‘  (ஆ.மீட்சி.ப.161)
         

        என்பது பல்லவி. இப்பல்லவியில் யார் விருந்து வைத்தார்கள் என்பது குறிப்பிடப்படவில்லை.அதைத் தொடர்ந்து வரும் அனுபல்லவியில் அதன் விடை உள்ளது.


விருந்து வைத்தனன் தெரிந்து சோலையில்

மேசியா வேசுமுன் ராஜபவுசினில்

மருந்திதை விட வேறில்லை என்றெண்ணி

மந்திர இந்திரமகா தந்திர சாத்தானவன் (மேலது).         

         என்ற அனுபல்லவியைப் பாடிய பின்னரே விருந்து வைத்தவன் சாத்தான் என்று அறிய முடிகிறது. அனுபல்லவியை ஒருமுறை பாடிவிட்டுத் திரும்பவும் பல்லவியைப் பாடுவது சிறப்புடையதாகும். பல்லவியினும் சிறிது உயர்ந்த ஓசை கொண்டது அனுபல்லவி. தாழ்ந்த எடுப்பிற்கும், மிகுந்த உச்ச ஒலிக்கும் இடைப்பட்ட பாலமாக நின்று உதவுவதுஅனுபல்லவியாகும். அனுபல்லவியினும் உயர்ந்த ஒலிநிலைக்கு இராகம் சென்று , பின்பு இறுதி நிலை அடைந்து அமர்வது சரணத்தில் தான்.(மேலது) வேதக்கண்ணின் கீர்த்தனைகளில் இரண்டடி அனுபல்லவி பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளது. நான்கு அடியில் அமைந்த அனுபல்லவிப் பாடலையும் சிறுபான்மையாக அமைத்துள்ளார். எட்டு வரிகளில் ஒரு அனுபல்லவிப் பாடலை அமைத்துள்ளார்.


சரணம்
         

       பல்லவி அனுபல்லவிகளில் குறிப்பாகக் கூறப்பட்ட கருத்து மிக விளக்கமாக வருவது சரணத்தில் தான். பாடுபொருளை வருணித்துக் கூற இடம் அளிப்பது சரணப் பகுதி. ஒவ்வொரு சரணத்தின் முடிவிலும் பாடப் பெறும் பல்லவியால் சரணப்பகுதி மேலும் சிறப்படைவதைக் காண முடியும்.சரணங்களை ஒரே மூச்சில் பாடி முடிப்பது சிறப்பன்று.


‘பார்வை பாவம் இல்லை என்றெண்ணாதே -வேசை

பார்வை உனை இழுக்கும் நண்ணாதே'(ஆ.பிரளயம்,ப.47)
         

    என்ற சரணம் மோனைத் தொடையழகும் இயைபுத் தொடை அழகும் பெற்றுப் பாடலிற்கு எழிலூட்டுகிறது. பல்லவியின் எடுப்பு எந்த இராகமோ அதே இராகமே சரணத்தின் இறுதி வரையிலும் வரும்; தாளமும் அவ்வாறே அமையும்.


‘சாற்றும் யோர்தானெனும் ஆற்றங்கரையிலே

நோற்ற யோவானுனை போற்றினனே, பரன் 

தேற்றினனே நமக் கேற்ற சுதனென

வேற்றுமை நீயிங்கு தோன்றிய தெப்படி.’ (ஆ.மீட்சி,ப.132)

       எனும் இப்பாடலின் சரணத்தில் ‘சாற்றும்,நோற்ற,தேற்றினன், வேற்றுமை’ என்பதில் இரண்டாம்  எழுத்து ஒன்றி வந்து எதுகைத்தொடை நயத்துடன்  அமைந்துள்ளது.


முடிவுரை
         

       முத்தமிழால் ஆக்கப்பட்ட வேதக்கண்ணின் கீர்த்தனை நாடகங்கள் படிப்பதற்கும் இசைப்பதற்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இவரது கீர்த்தனைப் பாடல்கள் சிறந்தபண்ணமைப்பும்,தாளக்கட்டும் உடையனவாய் ஆசிரியரின் இசைப்புலமையை உணர்த்துகின்றது.  ஆதிநந்தாவனப் பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி என்ற இரு கீர்த்தனைநாடகங்களிலும் இடம் பெற்றகீர்த்தனைகளில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற முப்பிரிவுகள் பாடுபொருளின் தன்மைக்கேற்ப பொருள்நயத்துடன் பொருத்தமாகப் பாடப்பட்டுள்ளன.


பயன்படுத்திய நூல்கள்

1..அ.வேதக்கண்.அ, ஆதிநந்தாவனப்பிரளயம், ஆதிநந்தாவனமீட்சி, கிறித்தவ இலக்கிய சங்கம், சென்னை.


2.சௌந்த பாண்டியன்.எஸ், தமிழில் கீர்த்தனை இலக்கியம்,  ஸ்டார் பிரசுரம், திருவல்லிக்கேணி, சென்னை.


3.பெருமாள்.ஏ.என். தமிழ்நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் , அணியகம், சென்னை.


4.பெருமாள் ஏ.என் தமிழர் இசை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை


5.சுந்தரம் வீ.பா.கா. தமிழும் இசையும் தமிழ்நாடு இறையியல் கல்லூரி, அரசடி, மதுரை.


6.ஞானராபின்சன்,(ப.ஆ) தமிழ் கிறித்தவ மரபு, தமிழ்நாடு இறையியல்கல்லூரி,
அரசடி, மதுரை-10.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஹெப்சிபா பியூலா சுகந்தி தா.இரா.,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

அறிவியல் மற்றும் கலையியல் புலம்,

எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்,

காட்டான் குளத்தூர் – 603203.

Sanga Ilakkiyam Thotte Thangam| Mrs.Guna.Priyanka

சங்க இலக்கியம் தொட்டே தங்கம்_குணா.பிரியங்கா

“ சங்க இலக்கியம் தொட்டே தங்கம்”

Abstract
 

         In the Culture of Tamil sangam age literally known as golden Age. In Tamil literature marriage earrings ceremony function for girls like religious and rational belief gold to come prominent place in life of Tamil which we couldn’t  separated people with gold.Gold (phoon) remarkable item of Tamil life which was male, female used to wear where are ornament. They used gold as a utensils and they gifted gold as a precious gift. Because it was considered as valuable metal of all. Still now middle class family allocates one part of savings in gold. Once in society of women those who  were the lot of ornaments considered as a high class people. But the  gold we used buy forprestigious purpose and saving purpose. Gold which was entering in life of human as valuable things now day asking your life of human which it was unvaluable. Thus it’s a fact of life.

ஆய்வுச்சுருக்கம்
         

     தமிழர்களின் சங்க காலத்தை “தங்க காலம்” என்பார்கள். சங்க இலக்கியங்களிலும், திருமணம், செவிக்கு பொன் சேர்ப்பு விழா போன்ற அனைத்து சடங்கு முறைகளிலும் தங்க ஆபரணங்கள் தவிர்க்க இயலாத ஒன்றாக பின்னிப் பிணைந்துள்ளது . ஆண்கள் ,பெண்கள் அணியும் அணிகலன்களாகவும், புழங்கு பொருளாகவும், பரிசு பொருளாகவும் பொன்னையே உபயோகித்ததால் சிறப்பு வாய்ந்த மதிப்புமிக்க பொருளாகவும் பொன்னே இருந்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம். தங்கம் அதிகம் அணிந்த பெண்கள் உயர்தர வர்க்கத்தினராக சமுதாயத்தால் கருதப்படுகிறது. மதிப்பிற்காகவும், தேவைக்காகவும் வாங்கப்பட்ட தங்கம் தற்போது உயிர் பலியையும், உயிர் பயத்தையும் ஏற்படுத்துகிறது. தங்கம் தற்போது மதிப்பு மிகவும் உயர்ந்துள்ளதால் விளிம்பு நிலை மக்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.


முன்னுரை
         

      பொன்னான வாக்கு, பொன்மனச் செம்மல் போன்ற சிறந்த உவமையாக பொன்னையே கூறுவோம். பொன் என்றால் ஒரு தங்கத்தாது. பொன் என்னும் பெயர்ச்சொல் மினுக்கம் உள்ள ஒருவகை உலோகத்தாது. சங்க காலம் முதல் இதிகாச கதைகளிலும், புராணங்களிலும், தங்கத்தின் பயன்பாடு இருந்துள்ளது.  இதனை தற்போது விரிவாகக்  காணலாம்.


முதற் பயன்பாடு
         

        சங்ககாலத்தில் இருந்தே நம்மோடு ஒன்றிப் பிணைந்த ஒன்று தெய்வ வழிபாடு. தெய்வ வழிபாட்டின் போது அருளாளர்களின் உருவ சிலைக்கு அணிவிப்பதற்கு மட்டுமே பொன்னாளான நகைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு அரசர்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
 

கானவர் பொன்புனை பகழி செப்பங் கொண்மார்” (குறுந்தொகை )
         

          பொன்னால் அழகுறச் செய்த அம்பினைச் செம்மையாக்கும் கருமார் என்று பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார்.  காலப்போக்கில் சக மனிதர்களின் பயன்பாட்டிற்கும் தங்கம் வந்துள்ளது. மொகஞ்சதாரோவில் வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய நகைகள் மிகவும் மென்மையானதாகவும், நுணுக்கமானதாகவும் மாறியது. முகலாயர்கள் காலத்தில் உச்சத்தை தொட்ட நகைக்கு முலாம் பூசும் தொழில்நுட்பம் பண்டைய நகரமான டாக்ஸிலாவில் கண்டுபிடிக்கப்பட்டது.


பரிசம் போடுதல்
         

      பரியம் ( மூங்கிலால் பின்னப்பட்ட வட்ட வடிவிலான தாம்பூலம்) பரிசத்தில்  வைத்து பெண்ணுக்கு கொடுக்கப்படும் பொன்னாலான அணிகலன்களின் பரிசுத்தொகுப்பு. சிலப்பதிகாரத்தில் பரிசம் என்பது ஆணின் பெற்றோர்கள் மணப்பெண்ணுக்கு வழங்கும் பொன்னாலான அணிகலன்களின் சீர்வரிசை. புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு அளிக்கும் நம்பிக்கை. பொதுவாக மனிதர்களின் பயன்பாட்டில் இருந்த தங்கம் பெண்ணுக்கு அணிகலன்களாக கொடுக்கப்பட்டது.
 

பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்” (குறுந்தொகை – 21)


        பொன்னாற் செய்த அழகிய ஆபரணங்களை அணிந்த பெண்களை பற்றி ஓதலாந்தையார் கூறியுள்ளனர்.


சங்க இலக்கியத்தில் தங்கம்
         

பொன் வேய்ந்த சோழன்” -பரந்தகச்சோழன். பொன்னையே கூரையாக வேய்ந்ததால் பொன்வேய்ந்த சோழன் என்ற பெருமைக்குரியவர்.
 

மும் முன்னா வீழ்ந்த முடிகள் உதித்தமாப்

பொன் உரைக்கல் போன்ற குழம்பு” (முத்தொள்ளாயிரம் 99 )
                  

       மன்னர் பலர் போரிட்டு வீழ்ந்தனர். அவர்கள் தலையில் சூடி இருந்த முடி சிதறி கிடந்தது. மாறனின் குதிரை அந்தப்  பொன் முடிகளைக் காலால் இடறியது. அதனால் அந்த குழம்புகள் பொன்னை உரைத்து பார்க்கும் கட்டடக் கல் போல காணப்பட்டது.

விறகொப் மாக்கள் பொன்பெற் றன்னதோர்”  (புறநானூறு)
         

     விறகுக்குச் சென்றவர் பொன்  பெற்று வந்தார் என்று கோவூர்கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை புகழ்ந்து பாடியுள்ளார்.
 

ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார் கோதையைக்”     (முத்தொள்ளாயிரம் )
         

   தேர்ந்தெடுத்த ஆபரணங்களையும் தங்க நகைகளையும் மார்பில் அசைந்தாடுகின்ற மாலையையும் அணிந்த சேரன் கோதை என்று சேரன் பொன்னாலான ஆபரணங்களை அணிந்துள்ளார் என்று கூறுகிறது.


“பொன்னணி யானைத்  தொன் முதிர் வேளீர்” (புறநானூறு )
         

     யானைக்கும் பொன் அணிவிக்கப்பட்டுள்ளது என்பதை பொன்னணிந்த யானை என்று மாங்குடி கிழார் கூறியுள்ளார்.


அந்தணர் ஆவோடு பொன் பெற்றார்” (முத்தொள்ளாயிரம் )
         

     இளங்கிலைவேல் கிள்ளியிடமிருந்து, அந்தணர்கள், பசுமாடு மற்றும் பொன் பரிசீல்களை பெற்றுச் சென்றன.   பொன் இழைகளில் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன என்பதைப்
“பொன்புனை உடுக்கை போன்” என்று பரிபாடலில் கூறியுள்ளார்.


“தாமரைக் கவரியும் தமணிய அழைப்பையும்”
         

    இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் செல்வரின் அரச வீதியைக் குறிப்பிடுகையில் பொன்னால்  செய்த வெற்றிலை பெட்டியும் இருந்ததாகக் கூறியுள்ளார். பொன்னாலும் நவமணிகளாலும் ஆன அணிகலன்கள் தமிழர்களிடையே மதிப்பு மிகுந்ததாகக் காணப்பட்டுள்ளது


“ஆர்ப்படுத்த செம்பொன் பதிபடுப்பு முத்தமிழ் நூல்” (முத்தொள்ளாயிரம் )
         

      பார்- நிலம் படுப்ப- காணப்படும் செம்பொன்- தங்கம்.  பாண்டிய மண்ணைத் தோண்டினால் செம்பொன் கிடைக்கும்.  காட்டைத் தோண்டும்போது பரிமுகம் பதித்த பொன் கிடைக்குமாயின் அது நீரூற்றுள்ள இடமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளன.


“பொன் போலும் புதல்வர்ப் பெறாஅ தீரும்”  ( புறநானூறு-9 )

         பொன் போலும் பிள்ளைகளைப் பெறாதீரும் என் அன்புக் கடி விடுவதும் என்று பொன்னை உவமையாக பாடியுள்ளார்  நெட்டிமையார்.   பண்டமாற்று முறையில் மிளகை பெறுவதற்காக தங்கத்தை ஈடாக கொடுத்துள்ளனர்.


“ஒருத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து”  (திருக்குறள் -155)
         

      தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார். ஆனால் பொறுத்தவரைப் பொன் போல் மனதுள் வைத்து மதிப்பார் என்று பொன்னை சிறப்பித்து தெய்வப் புலவரும் கூறியுள்ளார்.


இக்காலத்தில் தங்கம்          

           தமிழ்நாட்டில்தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம். சிறுசேமிப்பின் மூலம் சிறுகச்சிறுக சேர்த்து மிகப்பெரிய தொகையாக வந்தவுடன் தங்க ஆபரணங்களையே வாங்குகின்றனர். மாதச் சம்பளத்திற்கு மற்றும் அன்றாட வேலை செய்பவர்களுக்கு சேமிப்பின் மிகப்பெரிய பங்காக விளங்குவது தங்கம்.  உணவு உடை இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து சேமிப்பின் மிகப்பெரிய தொகையை தங்கத்திற்காகவே சேமிக்கப்படுகின்றன.
           

        ஆபரணங்களாக அறிவிப்பதற்காக மட்டுமின்றி  உடனடி பணத்தேவை ஏற்படும்போது அடகு வைத்து அல்லது அதனை விற்று பணம் பெரும் நோக்கத்துடனும் தங்கத்தில் முதலீடு  செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்கள் அடகு வைத்தல் மற்றும் விற்று பணம் பெரும் நோக்கத்தோடு தங்க ஆபரணங்கள் வைத்திருப்பதால் களவு, கொள்ளை, நகைப் பறிப்பு போன்ற குற்ற செயல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. தங்கத்திற்காக அதிக அளவு கொலைகள், விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால் பெண்கள் வெளியில் செல்ல தயக்கம் ஏற்படுகின்றது.


முடிவுரை
          

    வரதட்சணையாக தங்கத்தைத் தவிர்த்து கல்வியை பெண்ணுக்கு நம்பிக்கையாக அளிக்கப்பட வேண்டும். பல சவரங்கள் பெண்ணுக்கு வரதட்சணையாக அளிக்கப்பட்டாலும்  அது சில காலங்களிலே அழிந்து விடக்கூடும். பெண்ணுக்கு கல்வியே இறுதி வரை  ஏற்றம் தரும்.
 

பார்வை நூல்கள்:

1.குறுந்தொகை -இரா.அறவேந்தன், காவ்யா பதிப்பகம் முதல் பதிப்பு 2012


2.சிலப்பதிகாரம் – புலியூர்கேசிகன்,  சரண் பதிப்பகம் மூன்றாம் பதிப்பு 2023


3.புறநானூறு –  ஔவை. துரைசாமிப்பிள்ளை, சாரதா பதிப்பகம்  முதற்பதிப்பு 2015


4.முத்தொள்ளாயிரம் – கிழக்கு பதிப்பகம்


5.பரிபாடல்

6.திருக்குறள்

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி.குணா.பிரியங்கா,

தமிழாசிரியர்,

கூடல் நகர், நல்லூர் சாலை,

ஓசூர்.

 

Naattupura Nambikaigal|V.Gowtham

நாட்டுப்புற  நம்பிக்கைகள் வெ. கெளதம்

Abstract

      If we saw the basic common elements of the folk, their beliefs and customs were unwavering. Their feelings and their beliefs were inseparable. They believed that some of the events in human life were unacceptable when the human mind was unacceptable. Beliefs have been created by the people and have been spreading from one generation to another. From birth to death, they lived with many beliefs.

முன்னுரை 
                 

        நாட்டுப்புற மக்களின் அடிப்படை பொதுக் கூறுகளாக பார்த்தோம் என்றால் அவர்களின் நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் அசைக்க முடியாத ஒன்றாக இருந்தது. அவர்களின் உணர்வுகளும் அவர்களின் நம்பிக்கைகளும்  பிரிக்க முடியாத ஒன்றாக இருந்தது. மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்கு காரணம் கற்பிக்க இயலாத பொழுது மனித மனமானது சிலவற்றை ஏற்றுக்கொள்ளாத இருந்தது  அதிலும் ஒரு நன்மை தான் என நம்பிக்கை கொண்டிருந்தனர். நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு காலம் காலமாக ஒரு தலைமுறைகளிடமிருந்து மற்றொரு தலைமுறைக்கு பரவி இருந்தது. பிறப்பு முதல் இறப்பு வரை பல நம்பிக்கைகளை கொண்டு வாழ்ந்து வந்தனர்.
 

நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகள்  

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் நல்லது இடது கண் துடித்தால் நல்லதல்ல
 

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது வலது கண் துடித்தால் நல்லதல்ல
 

சிரிக்கும் பொழுது இடது கன்னத்தில் குழி விருந்தால் அதிர்ஷ்டம்
 

வாழை மரம் தெற்கு நோக்கிக் குலை தழுதல் கூடாது
 

பயணம் செய்யும்பொழுது யானையைக் காண்பது நல்லது
 

தலையணை மீது உட்காரக்கூடாது
 

சுப காரியம் போது ஒற்றைத் தும்பல் ஆகாது
 

கர்ப்பிணிகளின் தலைக்கு மேலே கோழி பறக்க கூடாது
 

வெள்ளியன்று சுமங்கலிகள் பிறர் மனைவியை தாக்குதல் கூடாது
 

கம்மல் வளையல் போன்ற நகைகளை சுமங்கலிகள் இரவில் கழட்டுதல் கூடாது
 

சுப காரியங்கள் பேசும் பொழுது கோவில் மணி அடித்தால் நல்லது.


வெள்ளிக்கிழமை கண்ணாடி வளையல் உடைதல் கூடாது


கர்ப்பிணிகள் பெண்கள் கடல் தாண்டி போகக்கூடாது மலையேறும் கூடாது


மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவன் மலை ஏறக்கூடாது.

பிணத்தின் பின் செல்லுதல் கூடாது


அடுப்புக்கரி விறகுகளை வெள்ளிக்கிழமையில் வாங்க கூடாது


ஊசி வெள்ளிக்கிழமையில் கடையில் விற்கக் கூடாது


ஈர ஆடைகளை அணிந்து கொண்டு நல்ல காரியங்களை செய்யக்கூடாது


விக்கலை நிறுத்த விக்கி கொண்டிருப்பவர் அதிர்ச்சி அடையும்படி பொய்யான தகவலை சொல்வார்கள்


துக்கம் விசாரித்த வீட்டிற்கு வருபவர்களை வாருங்கள் என வரவேற்க கூடாது


துக்க வீட்டில் இருந்து புறப்படும் போது திரும்ப (அ) சென்று வருகிறேன் என சொல்லக்கூடாது


நம் செருப்புகளையும் ஆடைகளையும் புனித தளங்களில் தொலைத்து விட்டால் நம் பாவங்கள் போகும்


அன்னத்தை வீசிய கூடாது


அமாவாசை நாளில் முடி வெட்டக்கூடாது


பயணம் ஏற்படும் போது ரத்தக்காயம் ஏற்பட்டால் பயணத்தை தொடரக்கூடாது


தூரத்தில் உள்ள உறவினர் துன்பம் ஏற்பட்டால் நமக்கு நெஞ்சம் படபடக்கும்


புத்தாடைகளை மஞ்சள் தடவி அணிதல் வேண்டும்


சுமங்கலி பெண்களின் நல்ல புடவையைக் குறுக்கே கிழிக்கக் கூடாது


வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கை தேய்த்து கழுவ கூடாது பூஜை அறை சுத்தம் செய்யக்கூடாது


பசு மாடு ஆடு ஆகியவற்றை காலால் உதைக்கக் கூடாது


தலைப்பிள்ளையை தத்து கொடுக்க மாட்டார்கள்


பயணம் செய்யும்போது காக்கை எச்சம்மிடக்கூடாது


வவ்வால் வீட்டுக்குள் பறக்க கூடாது. தேன்கூடு வீட்டுக்குள் கட்டினால் ஆகாது


இரவில் கிணற்றில் நீர் எடுக்கக் கூடாது


யணம் செய்யும்போது நீர் நிறைத்து  வருதலும் திருநீர் அணிந்து வருதலும் நல்லது


பிள்ளையார் சாமி திருடிக் கொண்டு வந்து வைக்கலாம் நல்லது


சாமி வணங்கும்போது  சாமி மீது உள்ள பூ கீழே விழுந்தால் நல்லது நடக்கும்


உப்பும் நீரும் வெள்ளிக்கிழமை வாங்கினால் தனம் பெருகும்


பயணம் செய்யும்போது கருடன் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் செல்வது நல்லது


புது பெண்ணை ஆடி மாசம் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்க மாட்டார்கள்


வீட்டில் மகாபாரதம் படித்தால் சண்டை உண்டாகும்


தலையில் இரட்டைச் சொல்லிக் கொண்டவனுக்கு அதிர்ஷ்டம் இல்லாதவன்


வியாபார நிறுவனங்களில் கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து தாளம் போடக்கூடாது


மாலை நேரத்தில் விளக்கு ஏற்றியவுடன் யாரும் அழுக கூடாது வீட்டில் குத்து விளக்கை வலது புறம் பார்த்து ஏற்றினால் நல்லது தெற்கு புறம் ஏற்றக்கூடாது


சுவாமி விளக்கிற்கு கடலை எண்ணெய் ஊற்றக்கூடாது


அரிசியை அளந்து போடும் முன் லாபம் என்று சொல்லி அழைப்பார்கள்

குலதெய்வ வழிபாட்டு முறை சுப காரியங்களை தொடங்குவது நல்லது

விபூதியை கடையில் வாங்கி மற்றவர்களுக்கு இலவசமாக கொடுக்க கூடாது


விரத நாட்களில் அசைவம் உண்ணக்கூடாது


வீட்டின் வாயில் படியில் நின்று பணத்தை தரக் கூடாது


கிராமத்தில் மழை வர வேண்டும் என கழுதைக்கு திருமணம் செய்து வைப்பார்கள்


குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தை சுற்றி வருவார்கள்


வீட்டில் ஆண்டிக் கோலம் துர்க்கை அம்மன் காளி ஆகி படங்களை வைக்கக் கூடாது


பணம் கொடுக்கும் போது அது தவறி கீழே விழுந்தால் லாபம் என்று நினைப்பார்கள்


நல்ல காரியங்களுக்கு போகும் போது மூவராக சேர்ந்து போகக்கூடாது


வைகுண்ட ஏகாதசி என்று இறந்தவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பிக்கை


புது பானை உடைந்தால் அபசகுனம்
 நாய் ஊளையிட்டால்  அந்த பகுதியில் யாருக்காவது மரணம் நேரிடும்


தொடையைத் தட்டிக் கொள்ளுதல் ஆகாது


தாழ்ப்பாளை ஆற்றினால் வீட்டில் சண்டை வரும்


செவ்வாய் வெறும் என்று கூறுவார்கள்


திருமணம் ஆகி வரும் மணப்பெண் புகுந்த வீட்டில் வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும்


படுத்திருப்பவர்களை தாண்டக்கூடாது


வாசப்படியில் நின்று கொண்டு பொருளை வாங்கவோ கொடுக்கவும் கூடாது


சாப்பிட்ட கையால் எழுதி எடுக்கக் கூடாது


உள்ளங்கையில் சோறு போடாமல் சாப்பிட வேண்டும்


சாப்பிட்ட இலை தட்டு கை ஆகியவை உலர விடக்கூடாது


கரப்பான் பூச்சி வீட்டில் அதிகம் இருந்தால் வீட்டில் செல்வம் பெருகும்


உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது


புண்ணியம் செய்தவருக்கு தான் சிவலோகம் கட்டும்


குளவி கூடு கட்டி இருந்தால் வீட்டில் யாரேனும் கருத்தரிப்பார்கள்


பசுவை அடித்தால் பெரும்பாவம்
 பெண்கள் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருக்க கூடாது


வீட்டில் முளைப்பாலிகை செழிப்பாக வளர்ந்தால் வாழ்வு செழுமையாக இருக்கும்


கருவுற்றிருக்கும் பெண்கள் சூரிய சந்திர கிரகணத்தின் போது காய்கறிகள் நறுக்கக்கூடாது

உணவு சாப்பிடக்கூடாது
 ஞாயிற்றுக்கிழமை செவ்வாய்க்கிழமை மருந்து சாப்பிட ஆரம்பிக்கலாம்


வந்திருக்கும் விருந்தினருக்கு விருந்தளிக்கும் போது கீரை சமைத்து போட்டால் விருந்தினர் ஊர் திரும்ப வேண்டும் என்று பொருள்


விருந்தினருக்கு  வீட்டில் பாவக்காய் செய்யக்கூடாது


புண்ணியம் செய்தவருக்கு சிவலோகம் கிட்டும்

தீமை செய்தவருக்கு இறந்த பிறகு நரகம் செல்வார்கள்


பசுவை அடித்தால் பெரும்பாவம்


குயிலின் கூட்டைக் கலைத்தல் பெரும்பாவம்


குழந்தைகளுக்கு குலதெய்வத்தின் பெயரை வைத்தால் எந்த விதத் தீங்கும் வராது என நம்புவார்கள்


குழந்தை இல்லாத பெண்கள் அம்மன் கோவில் தொட்டில் கட்டுவார்கள்


துதியை திதியை பஞ்சமி சப்தமி தசமி திரியோதசி ஆகியவற்றில் திருமணம் நடைபெற வேண்டும்


புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு ஆகிய கிழமைகளில் திருமண நாட்களுக்கு ஏற்ற நாட்கள்


வளர்பிறையில் திருமணம் செய்வது நல்லது


வெள்ளிக்கிழமைகளில் பெண்ணை திருமணம் செய்து அழைத்துச் செல்ல மாட்டார்கள்


விவசாய நிலத்தில் சோளக்காட்டு பொம்மையை வைத்தால் பயிர்களுக்கு கண் திருஷ்டி வராது என நம்புவார்கள்


துலாம் ராசிக்காரர்கள் வைர மோதிரம் அணிவது சிறப்பு


கடக ராசிக்காரர்கள் முத்து அணிவது நல்லது


புதன் ராசிக்காரர் மரகதம அணிவது நல்லது


வியாழராசிக்காரர் புஷ்பராகம் அணிந்தால் நல்லது


மகரக் கும்ப ராசிக்காரர்கள் நீலம் அணிவது நல்லது


கேது தோஷம் உடையவர்கள் வைடூரியம் அணிவது நல்லது


ராகு ராசியில் பிறந்தவர்கள் கோமேதகம் அணிதல் நல்லது


சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கம் அணிதல் நல்லது


செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் பவளம் அணிதல் நல்லது


வசிய மருந்து உதவியால் சேர்ந்து வாழும் குடும்பத்தையோ நண்பர்களையோ பிரிக்கலாம் என்பார்கள்


நல்ல காரியத்திற்கு செல்லும் போது மூன்று பேர் சேர்ந்து போகக்கூடாது


நல்ல காரியத்துக்கு போகும் போது சகுனம் பார்ப்பார்கள்


குதிரையின் லாடத்தை வாசலின் முன்பு ஆணி அடித்து வைத்தால் தீய ஆவிகள் வராது


வீட்டு வாசல் முன் எலுமிச்சை கரித்துண்டு  மிளகாய் கருப்பு கயிறு ஆகவே கட்டினால் கண் திருஷ்டி உள்ளே வராது


வாசப்படியில்  பெண்கள் அமரக்கூடாது


சித்திரை மாதத்தில் மகன் பிறந்தான் நல்லதல்ல


ஆடி மாதத்தில் தலை பிள்ளை பிறப்பது நல்லதல்ல


அம்மாவாசை அன்று பிறக்கும் பிள்ளை சுட்டியாக இருப்பான்


அமாவாசையில் பிறந்தால் திருட்டு குணம் இருக்கும்


வெள்ளிக்கிழமை பௌர்ணமி அன்று பெண் குழந்தை பிறந்தால் நல்லது


வீட்டில் நல்ல காரியம் நடக்கும் போது மற்றவர் வீட்டு பெரிய காரியங்களுக்கு செல்லக்கூடாது


அரச வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து வைப்பார்கள்


அரச மரத்தை  சுற்றி வந்தால் குழந்தை பிறக்கும்


எந்த ஒரு காரியம் செய்யும் போதும் குலதெய்வத்தை நினைத்து செய்தால் நல்லதே நடக்கும்


பெண்கள் கூந்தலை விரித்து போடக்கூடாது
 சாப்பிடும் போது தும்புதல் கூடாது


ஆண்கள் விரல் நகம் கடித்துக் கொண்டே இருக்கக் கூடாது


காசி யாத்திரை மேற்கொண்டவர் தனக்கு பிடித்த உணவு ஏதேனும் ஒன்றை இனி பயன்படுத்தக் கூடாது என்று காசியில் சொல்லி  விட்டு விட வேண்டும்

முடிவுரை 
      

     நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை என்பது மூடநம்பிக்கை அல்ல அது அவர்களின் நம்பகமான அசைக்க முடியாத நம்பிக்கையாகும். நாட்டுப்புற மக்கள் வாழ்வியலில் சிறந்த அனுபவமும் முதியோர்களின் வழிநடத்தலும் அவர்கள் மேற்கொள்ளும் சடங்கு சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்கள் என அனைத்தும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பின்பற்றி வருகின்றனர்
 

துணை நூல்கள்  :
 

1) நாட்டுப்புற நம்பிக்கைகள் :ம. மீனாட்சி சுந்தரம்


2) நாட்டுப்புறவியல் : சு. சண்முகசுந்தரம்


3) நாட்டுப்புற இயல் ஆய்வு : டாக்டர் சு.சக்திவேல்


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்


வெ. கெளதம் 


துறைத்தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்,


தமிழ்த்துறை,


சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

விஜயமங்கலம்
, திருப்பூர் மாவட்டம்.

 

Neerin Thuimai Nithiya Vazhvin Thaimai|Dr.N.Dharmaraj

நீரின் தூய்மை நித்திய வாழ்வின் தாய்மை

“நீரின் தூய்மை நித்திய வாழ்வின் தாய்மை”

Abstract
               

      It is defined as the main ingredient of the most important requirements for man to survive, which is why air water land is the main components of the environment and the resources that can last life. In 2005, in 2005, the International Freshwater Year was recommended in 2005, but it is an undeniable fact that the people of our Indian people are less than the Western people, but in this article we will look at the troubles facing the human race.


முன்னுரை
               

  நீரின் முக்கியத்துவம் கருதி 2005ஆம் ஆண்டு சர்வதேச நன்னீர் வருடமாக பரிந்துரைக்கப்பட்டது ஆயினும் நீரின் முக்கியத்துவத்தின் விழிப்புணர்வு மேலைநாட்டு மக்களிடம் இருப்பதைவிட நம் இந்திய மக்களிடம் குறைவு என்பது மறுக்க முடியாத உண்மையாகும் இந்த அலட்சிய போக்கால் மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்கள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.


நீரின் முக்கியத்துவம்
               

     நாகரீக வளர்ச்சி அடைய நீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது பெரும்பாலான நாடுகள் என்னை மற்றும் கனிம வளத்தின் இருப்பினை அறிந்து வைத்திருக்கின்ற அளவுக்கு நீரின் இருப்பினை தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை எந்த ஒரு நாட்டில் நீர்வளம் மிகுதியாக காணப்படுகின்றதோ அங்கெல்லாம் மக்கள் நீரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதில்லை நீர் ஆதார மற்றும் அதன் இருப்பு போன்றவற்றை மதிப்பீடு செய்வதின் வாயிலாக ஒரு நாட்டின் மேம்பாட்டிற்கான சீரிய திட்டங்களை தீட்ட முடியும் என்பது திண்ணம்.இருப்பினும் மக்கள் தொகை உயர்வு காரணமாக நன்னீருகான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது இவற்றுடன் தொழிற்சாலை விவசாய வீட்டு தேவைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது பூமியின் பரப்பை மேம்படுத்துதல் தட்பவெட்பம் மற்றும்  மாசை குறைத்தலில் நீர் முக்கிய பங்கு வகுக்கின்றது. தாவரங்களில் ஆற்றல் உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது புவிபரப்பில் சுமார் 71% பரவியுள்ள நீர்நிலைகளின் தொகுப்பே நீர்க்கோலம் என்று அழைக்கப்படுகிறது இதில் மிகப் பரந்த அளவில் பெருங்கடல்களும் குறைந்த பகுதிகளாக குளங்கள் ஆறுகள் மற்றும் அணைக்கட்டுகளிலும் பரவி உள்ளன. புவியின் இரு துருவங்களிலும் பரவியுள்ள பணிப் படிவுகளும் இவற்றுள் அடங்கும். நீர் கோலமானது மனித இனத்திற்கு பல்வேறு வகைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது என்பதை உணர்ந்து செயல்படுவது மானுட பொறுப்பாகும்.


நீர் வளத்தின் பண்பாடு
               

    வேறுபட்ட காலநிலை கூறுகள். மாறுபாடுகள் நிறைந்த புவி அமைப்பு போன்ற காரணங்களினால். நம் நாட்டின் மழை பொழிவானது ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையிலான தென்மேற்கு வடகிழக்கு பருவக்காற்றுகளின் மூலமே கிடைக்கின்றது.
                கோடை காலத்தில் அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக திறந்த நீர் நிலைகளில் குறிப்பாக குளம் ஏரி ஆறுகள் மற்றும் நீர் தேக்கங்களில் உள்ள நீரானது நீராவிப் போக்கு மூலம் மிகுதியாக ஆவியாகி விடுகின்றது. மேலும் அதிக மக்கள் தொகை. தொழிற்சாலை வளர்ச்சி. விவசாய வளர்ச்சி மற்றும் வாழ்க்கை தர உயர்வினாலும் நீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதை கருத்தில் கொண்டு நமது நாட்டு நீர்வள வல்லுனர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் ஒன்று சேர்ந்து நீரின் வளத்தை மதிப்பிட்டு வீணாக ஓடுகின்ற மழை நீரை அணைக்கட்டுகள் மூலம் சேமித்து நீர் பற்றாக்குறையை ஓரளவு போக்கி வருகின்றனர்.


மேற்பரப்பு நீர் வளம்               

       இந்தியாவின் மேற்பரப்பு நீர்வளத்தை மூன்று வகையாக பிரித்துள்ளனர் அவை மிகப்பெரும் ஆற்று படுகைகள் இடைநிலை ஆற்று படுகைகள் சிறிய ஆற்றுப்படுகைகள் ஆகும் ஆற்றுப்படுகைகளின் தன்மைக்கேற்ப நீர் வளத்தின் இருப்பு பயன்பாடும் மாறுபடுகின்றன நீர் வளத்தை அதிகமாக பயன்படுத்தும் ஆற்றுப்படுகைகளில் முதன்மையானது காவேரி ஆற்று வடிகால் ஆகும் இந்த ஆற்றுப்படுகையில் 96 சதவீத நீரானது பயன்படுத்தப்படுகின்றது இதற்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்படும் ஆறுகளில் குறிப்பிடத்தக்கவை கிருஷ்ணா பொன்னாரு சிந்து நதி முதலியன ஆகும்.


நிலத்தடி நீர்வளம்               

        இந்தியாவில் கடின பாறை வகைகள் பறந்து காணப்படுகின்றன இதன் மேற்பரப்பு நிலத்தடி நீர் வளம் மேற்பரப்பு நீர் வளத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்து காணப்படுகின்றது மொத்த நிலத்தடி நீர் இருப்பு தோராயமாக 198 மில்லியன் கன மீட்டர் ஆகும் இதில் நாம் வெறும் 41% நீரை பயன்பாட்டுக்கு உபயோகிக்கிறோம் இதற்கு முக்கிய காரணங்கள் மாறுபட்ட நிலமைப்பும் கடின நீர் தன்மையும் ஆகும் ஒவ்வொரு வருடமும் நிலத்தடி நீர் வளத்துக்கு 670 கன கிலோமீட்டர் மழை நீர் கிடைக்கின்றது இதே அளவு நிலத்தடி நீரை நம் தேவைக்கு எடுத்துக் கொள்ளலாம் மேலே குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக எடுத்தால் வரும் காலங்களில் நிலத்தடி நீர் வளம் குறைந்து அல்லது வற்றி போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும்.


தமிழ்நாட்டின் நீர் வளம்
               

        தமிழ்நாட்டில் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் வளம் மிகக் குறைவாக காணப்படுகின்றது ஆனால் விவசாய மற்றும் அதைச் சார்ந்து தொழில்களுக்கு நீர் மிகுதியாக தேவைப்படுகின்றது இதன் காரணமாக நமது மாநிலத்தில் நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நீரை பாசனத்திற்கு அதிகமாக பயன்படுத்துகின்றது அதாவது தோராயமாக 92 சதவீத மேற்பரப்பு நீர் மற்றும் 60% நிலத்தடி நீர் பல்வேறு உபயோகங்களுக்காக தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.


மனிதனின் நீர் தேவைகளும் பயன்பாடுகளும்               

    மனிதனின் அன்றாட தேவைகளுள் நீர் இன்றியமையாத ஒன்றாகும். நீர் மனிதனுக்கு பல்வேறு வகைகளில் பயன்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி ஒவ்வொரு வருடமும் சுமார் 350 கன கிலோ மீட்டர் நீரானது மனிதனுடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இதில் சுமார் 75% நீரானது மனிதனின் உணவு உற்பத்திக்கு தேவைப்படுகின்றது.
               

      விவசாயத்திற்கு அடுத்தபடியாக மின் உற்பத்திக்கு 6.2% தொழிற்சாலைகளுக்கு 5.7% நீரும் பயன்படுத்தப்படுகின்றது மனிதனின் அன்றாட தேவைகளுக்காகவும் கால்நடை பராமரிப்புக்காகவும் 4.3 சதவீத நீர் செலவிடப்படுகிறது மீதமுள்ள 1.3% நீரானது நீர் போக்குவரத்து நீர் மின் உற்பத்தி மீன் வளர்ப்பு சுற்றுலா போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது இவ்வாறெல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த நீரை மாசுபடுத்துவதால் ஏற்படும் விளைவுகளை காண்போம்.


நீரின் மதிப்பு           

      நீ இயற்கை வளங்களில் ஒன்றாகும். இது இயற்கை தந்த கொடையாக கருதப்படுகிறது. மனிதனின் அனைத்து செயல்பாட்டிற்கும் தேவைப்படும் முக்கியமான ஒன்றாக உள்ளது. நீரின் மதிப்பு என்பது அதில் இருக்கும் வளங்களை பொறுத்தது அல்ல ஆனால் நீரை திறம்பட பயன்படுத்துதல் மற்றும் மேலாண்மையை பொறுத்து அமைகிறது இப்படிப்பட்ட நீரின் மதிப்பை உணராமல் பயன்படுத்துவதால் மாசடைகிறது நீரின் மாசு நேரிடையாக வாழும் உயிரினங்களை பாதிக்கின்றது.


நீர் மாசுபடுதலை தடுக்கும் சட்டம்
               

     கிபி 1974 ஆம் ஆண்டு நீர் சட்டம் இயற்றப்பட்டது. நீரின் தன்மையை நிலை நிறுத்தவும் மற்றும் மாசு  அடையாது தடுக்கவும் இந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டது. இந்த சட்டத்தின் நிபந்தனைகளான வெளி அமைப்புகள் மாசுபடுதல் சாக்கடை கழிவுகள் ஓட்டை வணிக கழிவுகள் போன்றவை பற்றியும் இச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன இந்த  நிபந்தனைகளுக்கு உட்படாமலும் மனசாட்சிக்கு பயப்படாமலும் செய்யும் செயல்களால் தான் நீர் மாசடைகிறது.


நீரும் மனித நலனும்
               

     மக்களின் உடல்நலம் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தின் தூய்மை பொருத்தே அமையும். தூய்மையான இந்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் பல நோய்கள் மனித நலனின் நேரடி பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன மனித சுற்றுச்சூழலில் ஏற்படும் சில குறிப்பிட்ட மாற்றங்கள் பல நோய்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றன.
 

              இந்த வகையான மாற்றங்களில் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் மனித உடல் நலனின் பலவகையான தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக. நகர்மயமாதல் மற்றும் தொழில்மயமாதல் மனிதச் சூழலில் பல மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு தொற்று நோய்களின் நோய் பரப்புகளுக்கு சொர்க்கமாக மாறுகிறது. அத்தகைய அதிரடி மாற்றம் நமது சூழலாகிய காற்று நீர் உணவு ஆகியவற்றை மாசுபடுத்தி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கிறது.


நீரை பற்றிய விழிப்புணர்வு
               

     நீரை பயன்படுத்தும் விதம் குறித்த விழிப்புணர்வு இல்லை என்றால் நோய் உண்டாகும் அபாயம் உருவாகும். பொதுவாக வளரும் நாடுகளில் 80 சதவீத நோய்கள் நீரினால் தோன்றி பரவக்கூடியவை. மனிதக் கழிவினால் ஆறுகள் 90% மாசடைகிறது.
                நமது நாட்டிலேயே கேரளாவின் இறப்பு சதவீதமானது தேசிய சராசரிக்கு கீழ் உள்ளது. இதற்கு காரணம் பெண்களிடம் காணப்படும் கல்வி அறிவும் சுற்றுச்சூழ்நிலை சுகாதாரமும் ஆகும்.
 

நீரால் பரவும் நோய்கள்
               

      மலேரியா யானைக்கால் மூளைக்காய்ச்சல் காலரா போன்ற எண்ணில் அடங்கா நோய்கள் பரவும் நிலை உயர்ந்துள்ளன. பின் நோய்கள் பரவுவதற்கு பூச்சிக்கொல்லிக்கும் நீர் பாசன நீருக்கும் இடையே சில ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளன. இவை நவீன விவசாயத்தின் எதிர்மறை விளைவுகளாகும். நோயை உண்டாக்கும் காரணிகளுக்கிடையேயான எதிர்ப்பு ஆற்றல் தண்ணீர் தேக்கம் மற்றும்  ஒப்பு அடர்த்தியாகியென உயர்ந்துள்ளன இவை நீரினால் பரவும் நோய்களுக்கு ஏதுவாக இருக்கின்றன
.

நீரை மாசுபடுத்தும் காரணிகள்
               

      இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது ஆகும். அதன் உயிரியல் வேதியல் மற்றும் இயற்பியல் தன்மைகள் மாசுபடுவதையே நீர் மாசுபடுதல் என கூறுகிறோம். இந்த வகையில் மாசுபடுத்தும் காரணிகள் என்று எடுத்துக் கொண்டால் வீட்டு சாக்கடைகள். தொழிற்சாலை கழிவுநீர் விவசாயக் கழிவுகள் மிதவை உயிரிகளின் வளர்ச்சி டிடர்ஜெண்டுகள் கன உலோகங்கள் வெப்பம் கதிரியக்க தனிமங்கள் என்னை போன்றவைகள் ஆகும் .


மனித நலனில் நீரின் பங்கு
               

       குடிநீர் மற்றும் அன்றாட பயன்படுத்தும் நீரானது தரக்கட்டுப்பாட்டுடன் நோயைப் பரப்பும் நுண்ணுயிரிகள் மற்றும் மனித நலத்திற்கு ஊறுவிளைவிக்கும் வேதிப்பொருட்கள் இன்றி இருக்க வேண்டும். பூமியின் நிலத்தடியில் கிடைக்கும் நீர் நகரத்தில் குடியேறிய மக்களுக்கு வழங்கப்படுகிறது. நிலத்தடி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும்  குடிநீரானது சாக்கடை வீட்டு கழிவுகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளால் அடிக்கடி மாசுபடுகிறது. தொழிற்சாலை கழிவுகள் வேறுபட்ட நச்சு கரிம கனிம மாசுகளை கொண்டிருப்பதால் இவை எளிதில் சிதைவதில்லை.
               

       குடிநீர் மலங்கலால் மாசுபடுவதே சில முக்கிய நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. உதாரணமாக டைபாய்டு காலரா பாக்டீரியா வயிற்றுப்போக்கு உட்காய்ச்சல் இரைப்பை குடல் சார்ந்த ஒவ்வாமை நோய்கள் சல்மோநெல்லா சேப்டிசீமியா போன்றவை மலக் கழிவுகளால் பரப்பப்படுகின்றன என்பதை உணர வேண்டும்
.

முடிவுரை
               

     நீரின் முக்கியத்துவம் அவற்றின் பயன்பாடு மற்றும் நீர் ஆதாரங்களில் ஏற்படும் மாசுக்களால் உண்டாகும் விளைவுகள் என்ன என்பதை இக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் மனித இனத்தின் விழிப்புணர்வு அற்ற தன்மைகளாலும் தொழிற்சாலையின் வளர்ச்சியினாலும் நீர் மாசடையும் விதம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இருப்பினும் விவரிக்கப்பட்டவைகளின் நன்மை தீமைகளை சீர்தூக்கி பார்த்து எதையும் முன்னெச்சரிக்கையோடும் அளவோடும் பயன்படுத்தினால் மனித குலத்திற்கு நன்மை உண்டாகும்.


சான்றாதார நூல்கள்

1.சுற்றுச்சூழல் அறிவியல் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிப்பு.


2.சுற்றுச்சூழல் கல்வி தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிப்பு.


ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ந.தர்மராஜ்


இணைப் பேராசிரியர்,

செயின்ட் ஜோசப் கல்லூரி(கலை மற்றும் அறிவியல்)
,

கோவூர், சென்னை.

 

என் சுவாச மரமே|ம.அநிஷா நிலோஃபர்

என் சுவாச மரமே ம.அநிஷா நிலோஃபர்

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்|முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்_முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

♟️ வானம் 


மேகக் கூட்டங்களை வைத்து
ச்

சிலுவைப்பாதை நிகழ்த்துகிறது!


 

♟️பறவையின்
அலகுகளாய்

ஆணிகள்!


 

♟️ஆணியை


ஒற்றை அடியில் 


இறக்கும் சுத்தி!


 

♟️அழகான


முட்களாலான கிரீடம்!


 

♟️அறையப்பட


வழுவழுப்பான சிலுவை!


 

♟️மேலெழுப்பிட


சொரசொரப்பான கயிறு!


 

♟️காயங்களைத்


தொட்டு முத்திக்க


சாரை சாரையாகக் கூட்டம்!


 

♟️திரண்டு திரண்டு

வரும்
முகில்கள் !


 

♟️காற்றின் கைகளால்


மாரடித்துப் புலம்புகின்றன!


 

♟️தந்தையின் கையில்


ஆவியை ஒப்படைக்க


எதிர்பார்க்கும் கண்கள் !


 

♟️வானமெங்கும்


தென்படுகின்றன

தளர்தசைக்காய் !


 

♟️எச்சூரியவாறு 


மெல்ல நகரும் முதலைகள்!


 

♟️ஆடைகளைப்


பங்கிட்டுக் கொள்வோர் 


சூழ்ந்து நிற்கின்றனர்!


 

♟️இப்படி 


சுற்றம் சூழ


வருகை தந்து

எல்லோருக்கும்


எல்லாமுமான


அநாதி அன்பை


கொள்ளையாட நிற்கையில்


இரண்டு பக்கமும் 


கள்வர்களாக மரிக்க


ஆளில்லாமல் 


கலைந்து தேடச் சென்றது 


மேகக் கூட்டம்!

கவிதையின் ஆசிரியர்

முனைவர் அ எபநேசர் அருள் ராஜன் 

உதவிப் பேராசிரியர் 

தமிழ்த்துறை 

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி (தன்னாட்சி)

 சிவகாசி

 

இப்படிக்கு மழை!|சி. தெய்வானை  சிவகுமார்

இப்படிக்கு மழை_சி. தெய்வானை சிவகுமார்

💧மழையாக! 


நிலத்தில் விழுந்து,


பல காடு மேடுகளைக் கடந்து,


பள்ளங்களைக் கடந்து


வேகமாக உருண்டோடும்


என்னில் – பல அழுக்குகளையும்


சேர்த்துக் கொண்டே செல்கிறேன்..!


 

💧நான் போகும் வழியோ,


என்னை முள்ளாகத்

தாக்கி கிழிக்கிறது!


அனைத்தையும்


பொறுத்துக் கொண்டு


ஓடிக்கொண்டே இருக்கிறேன்..!


 

💧நான் போய்


சேருமிடமோ சமுத்திரம்


பல காடு மேடுகளைக்


கடந்து வந்த எனக்கு


சமுத்திரத்தின்


ஆழத்தைக் கண்டு பயம்..!


 

💧ஏனென்றால்


நான் கொண்டு வந்த


அழுக்குகளை விட


சமுத்திரத்தின் ஆழத்தில்


எண்ணிலடங்கா


அழுக்குகள் உள்ளதைக் கண்டு,


மழையாக


இந்த பூமிக்கு வந்தபோது


என் சுவையோ வேறு!


 

💧ஆனால்


தற்போது நான்


சேர்ந்த இடமோ


என்னையும்


அதன் சுவைக்கு ஏற்றவாறு


மாற்றிவிட்டது.


 

💧இப்படி


மேடு பள்ளங்களையும்


ஏற்ற இறக்கங்களையும்


பல குப்பைகளையும்


என்னோடு


பயணித்துக் கொண்டு


அடித்து வந்த என்னையும்,


சமுத்திரம்


அதன் சுவைக்கு ஏற்றவாறு


மாற்றிவிட்டது..!


 

💧இவ்வுலகத்தில்


பயணிக்கும்


மக்கள் அனைவரும்


வெவ்வேறு குணங்களோடு


வருகிறார்கள்..!


 

💧 இறுதியாக


அவர்கள் தேர்ந்தெடுக்கும்


தொழிலோ!


கல்வியோ!


இப்படி ஏதோ,


ஒரு துறையில்


பயணிக்கும் போது


தன் நிலையில் இருந்து மாறி


அவர்களுக்கு


ஏற்றார் போல் மாறி விடுகின்றனர்,


என்பதை விட மாற்றி விடுகிறார்கள்


என்பது நிதர்சனமான உண்மை


இப்படிக்கு மழை..!


கவிதையின் ஆசிரியர்

சி. தெய்வானை  சிவகுமார்,
 

உதவி பேராசிரியர்,  

தமிழ்த்துறை,


ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


பர்கூர்,

கிருஷ்ணகிரி.

 

காதலாய் ஒரு முத்தம் | வெ. கெளதம்

காதலாய் ஒரு முத்தம் வெ. கெளதம்

 

காதலாய் ஒரு முத்தம்!

💋 காதலிக்கும் போது
 

ஒரு வேலையும் தெரியாது உனக்கு
 

எனக்காக கற்றுக் கொண்டாய் 
 

திருமணமானதும் எனக்காக..!


 

💋 வீட்டில் நீ பாவம்


காத்திருக்கும் அழுக்குத் துணிகள்
 

கழுவாத பாத்திரங்கள்


அடுத்த வேலை – சமையல் 
 

எனக்கும் பல பணிவிடைகள்
 

குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும்


பல பணிவிடைகள் செய்தாய்..!
 

 

💋 நான் உன்னை


பாதி இரவில்


விழித்துப் பார்த்தால்
 

களைத்துப்  போய்


குழந்தைப்  போல
 

உறங்கிக் கிடப்பாய்..!


 

💋 Sorry
 !

உன்னை அறியாமல்


தூங்கும்பொழுது


ஒரு முத்தம் கொடுத்து


தூங்கி விடுகிறது
 

என் காமம் (காதல்)
 

பல இரவுகளில்…!


 

பேருந்து பயணத்தில் !


🚌 உனக்கு தெரியாது
 

நாம் அருகருகே  அமர்ந்து
 

நெடுதூரம் பயணித்த போது
 

உன் காதல் பார்வையும்
 

உன் மூச்சுக்காற்றும்
 

ஓராயிரம் பூகம்பத்தையும்      


ஒட்டுமொத்த புயலையும்
 

உள்வாங்கியது போல


உணர்ந்தேன்..!
 

 

🚌 நீ பார்க்கும் இடங்கள்


உன் பார்வைகளை


நேரில் வாங்கத்


திறமை இல்லாமல்


திக்கு முக்காடிப் போனேன்..!
 

 

🚌 கதைப்  புனைகளையும் பேசி
 

ஜன்னலுக்கு வெளியே பார்த்தும்


எனக்கு தெரியாமல்
 

என்னை ரசிப்பதும்


கைகள் கோர்க்க ஆசை தான்


அதற்கு முதலில் ஏங்கியது


இருவரின் விரல்கள்..!
 

 

🚌 தோள்களில் 


சாய்ந்து கொள்ள


தலை ஏங்கியது 


அனைவரும் உள்ளார்


எனக் கண்கள் தயங்கியது


இறங்குமிடம் வந்தவுடன்


மீண்டும் தொடரக்கூடாதா 


இந்த பயணம் என்று


ஏங்கிய இதயங்கள்
 

இறங்கியவுடன்


மீண்டும் இந்த பயணம்


எப்போது  எனக் கேட்க துடிக்கும்

உதடுகள்..!


 

🚌 போகும்போது 


பார்க்கும் அந்த நொடிகள்


இமைகளுக்கும்  ஓய்வில்லாமல்


அந்த ஒரு நொடி


பயணத்தில்


நினைத்தேன்  


நீயே எனது வாழ்க்கை


பயணம் என்று..!


கவிதையின் ஆசிரியர்

வெ. கெளதம்


துறைத் தலைவர் மற்றும் உதவி பேராசிரியர்


தமிழ்த்துறை


சசூரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி


விஜயமங்கலம்

 

மகுடம் சூட்ட மார்க்கம் உண்டு! | நவநீதனா ச

மகுடம் சூட்ட மார்க்கம் உண்டு! நவநீதனா ச

👑 திங்களிலே பிறந்தவளாய்,


தென்பொதிகைச் சீமாட்டி!…


 

👑 மையலிலே திளைத்தவளாய்,


அவளுக்காக இவள்!…


 

👑 சீமையிலும் சிங்காரியாய்ச்


சீமாட்டியவள், பைந்தமிழே!…


 

👑 தாலாட்டிச் சீராட்டி,


தங்கமென வளர்ப்பாளை,


 

👑 தங்கசிங்க ஆசனத்தில்,


கம்பீரத் தோற்றத்திலே,


 

👑செங்கமல நாயகிபோல் 


செந்தாமரைத் தடக்கையால் 

 

👑 தாங்கித் தாங்கியே!


சிற்றுளியாய் வெற்றிகளைப்


 

👑பொழிந்திடும் அன்னைக்கு 


மணிமகுடஞ் சூட்டலிலே,


 

👑 மாணிக்க ரத்தினமாய் 


மாளா(றா)த காதலினால் 

 

👑 செம்பிராட்டி ஒளிர்வாளே!


சொக்கத் தங்கங்களாய்!…


 

👑 கோடிகள் கூறினாலும்,


கோபுரத்தில் ஏற்றினாலும்,


 

👑 செம்மொழியாள் அவளிற்கு 


உவமைகள் சொல்வதிலே,


 

👑கோடிகளாய்த் தயக்கங்களே!


இணையாகா இன்பத்திற்கு,


 

👑 இணையான உவமை கூற


வேறென்ன மொழியிலடீ?!


 

👑 உம் குழவி தேடிடுவாள்,


பேருவமைகளை!!…


 

👑 திகட்டாத் திரவியமாய்,


திரண்டு நிற்பதிலே 


உமக்கென்ன அத்துனை ஆனந்தம்?!


 

👑 உவமைக்கு உருவகமாய் 


அணிகளாவது சொல்லிவிடு!


 

👑 எம் பெயரிணைக்காப் புத்தகமாய்,


உம் பெயரிலே, 


 

👑 பரிசு விழைகிறேன்! காதல் கூறாக் கவியே!!…

 

கவிதையின் ஆசிரியர்

நவநீதனா ச


கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

Elakana Paadanool Uruvaakathil Nanool Perum Idam|Dr.G.Vijayakumari

இலக்கணப் பாடநூல் உருவாக்கத்தில் நன்னூல் பெறும் இடம்

Abstract

                After the arrival of the Europeans, the textbooks were taught based on Nunnool.    Grammar Question, Grammar Summary, Grammar, Grammar, Grammar, Grammar, Grammar, Children’s Word Grammar, Balance Grammar, Preschool Grammar, Balapadam, the grammar question, grammar, grammar, grammar, grammar, grammar, grammar, grammatical, grammar, preschool grammar, preschool grammar, Palapadam. Scholars who praised the excellence of grammar have been attributed to many reasons for the nineteenth -century. The textbooks written by Visakha Perumalaiyar, Mazhavai Mahalingaiyar, Arumuga Navalar, G. U. Pope, etc., the authors who wrote the grammar textbooks, the importance of the above-mentioned four scholars, and the textbooks written by them have been examined in detail in this article.

இலக்கணப் பாடநூல் உருவாக்கத்தில் நன்னூல் பெறும் இடம்

 ஆய்வுச்சுருக்கம்

     ஐரோப்பியர்கள் வருகைக்குப் பிறகு அக்காலத்தில் பாடநூல்கள் நன்னூலை அடிப்படையாக கொண்டு பாடம் கற்பிக்கப்பட்டன. மாணவர்கள் எளிமையாக கற்றுக் கொள்வதற்கு இலக்கண வினா விடை, இலக்கண சுருக்கம், இலக்கண நூலாதாரம், இலக்கணச் சிந்தாமணி, இலக்கணத் திரட்டி, இளைஞர் பயில் இலக்கணம்,  சிற்றிலக்கியம், சிறுவர் சொல் இலக்கணம், பால போத இலக்கணம், பாலர் இலக்கணம், பாலபாடம் ஆகிய தலைப்புகளில் நூல்களைச் சுருக்கி தரப்பட்டுள்ளது. இலக்கணத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாராட்டிய அறிஞர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நன்னூலுக்கு பல உரைகள் தோன்ற காரணங்களாக கூறப்பட்டுள்ளன.

                விசாகப்பெருமாளையர்,        மழவை மகாலிங்கையர், ஆறுமுக நாவலர், ஜி யூ போப் முதலானவர்கள் இயற்றிய பாடநூல்கள் பற்றியும் இலக்கண பாடநூல் இயற்றிய ஆசிரியர்களையும் மேற்குறிப்பிட்ட நான்கு அறிஞர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் இயற்றிய பாட புத்தகங்கள் குறித்தும் விரிவாக இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

முன்னுரை

   தமிழ்க்கல்வி வரலாற்றில் நன்னூல் ஒரு வழிகாட்டி நூல் என்றே கூறலாம். அக்காலக் கல்வியை அறிந்துகொள்ள உதவும் இந்நூல் பவணந்தி முனிவரால் பதிமூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. நன்னூல் அனைவராலும் எளிமையாக படிக்க முடியாது என்பதால் இலக்கண வினா விடைகளும், இலக்கணச் சுருக்கப் பதிப்புகளும், காண்டிகையுரைகளும், விருத்தியுரைப் பதிப்புகளும் இயற்றப்பட்டுள்ளன. ஐரோப்பியர் காலத்தில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும், அரசாங்கப் பள்ளிகளிலும், அரசாங்க ஆதரவுபெற்ற பள்ளிகளிலும் நன்னூல் கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அதனால் பல பாடநூல்கள் உருவாக்கம் பெற்றன.


இலக்கண பாடநூல்கள்

     பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கணம் முழுமையாகக் கற்றுத்தப்பட்டது. அந்தப் பாடநூல்கள் பல்வேறு தலைப்புகளில் இயற்றப்பட்டன. அவை இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை, இலக்கண நூலாதாரம், இலக்கணச் சிந்தாமணி, இலக்கணத் திரட்டு, இளைஞர் பயில் இலக்கணம், சிற்றிலக்கணம், சிறுவர் சொல் இலக்கணம், பாலபோத இலக்கணம், பாலர் இலக்கணம், பாலபாடம், முதலான தலைப்புகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மூன்று நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலே குறிப்பிட்ட நூல்களின் பட்டியல்களை வைத்துபார்க்கும்போது 1870க்கு பிறகுதான் அதிகமான பாடநூல்கள் இயற்றப்பட்டுள்ளன என்று தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட நூல்கள் அனைத்தும் நன்னூலை அடியொற்றி இயற்றப்பட்டுள்ளன. இந்நூல்களில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், சொற்றொடர் அதிகாரம், தொடர்மொழி அதிகாரம், பிரயோகவியல், ஒழிபியல், அனுபந்தம், பகுபதமுடிபு, சூசனம் எனும் இயல்களில் நன்னூல் இலக்கணம் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருசில நூல்களில் மட்டும் நூற்பா எண் கொடுக்கப்பட்டுள்ளன. மற்ற நூல்களில் உரைநடை வடிவம், வினா விடை வடிவம், எடுத்துக்காட்டு, சூசனம், அனுபந்தம், பயிற்சி வினா, பகுபதமுடிபு, நிறுத்தற்குறி, இயல்கள் மாற்றம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
 

   பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பாடப்புத்தகங்கள் அனைத்து வகுப்புகளுக்கும் ஏற்றாற்போல் இலக்கணச் சுருக்க நூல்களில் இயல்களைச் சுருக்கி இயற்றியதாகவும் மழவை மகாலிங்கையர், விசாகப்பெருமாளையர் கூறிய முன்னுரைகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது. நன்னூலார் கூறாத எடுத்துக் காட்டுகள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜி. யூ. போப்பையர் எழுதிய நூல்களில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் புதுமையாகவும் எளிமையாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.

   மொழியறிவைப் புரிந்து கொள்ள நன்னூல் ஒரு முக்கியமான இலக்கண நூலாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பயன்பட்டது.
தொடக்கக் காலப் பள்ளிக்கூடங்களில் அடிப்படையான இலக்கணம் மட்டும் போதிக்கப்பட்டது. அவை சிறுவர் சொல் இலக்கணம், நவமணி இலக்கணம், அரிச்சுவடி, நவமணி  திரட்டு, குழந்தைகளுக்கான இலக்கணம், வாக்கிய இலக்கணம் என்ற பெயர்களில் இயற்றப்பட்டிருந்தன.
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலக்கணம் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தால் ஆசிரியர்கள் இலக்கண நூல்களைச் சுருக்கமாகவும் ,வினா விடை முறையில் இயற்றினார்கள் என்றும் நூலாசிரியர் இயற்றிய முன்னுரை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ஆறாம் வகுப்புகளுக்குப் பாலபாடம், இலக்கண வினா விடை, இலக்கணச் சுருக்கம் ஆகிய பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன.


      பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த தமிழ்ப் புலவராக விளங்கிய திருத்தணிகை விசாகப் பெருமாளையர். இவர் 1852ஆம் ஆண்டில் மாணவர்களுக்காக தாம் எழுதிய பாலபோத இலக்கணம் நூலின் பாயிரத்தில் உரைநடை நூல்கள் ஏன் தோற்றம் பெற்றன என்று குறிப்பிடுகிறார்.
இலக்கண இலக்கியக் கணிதப் பூகோளக் ககோளாதி நூல்களையெல்லாம் இக்காலத்து இத்தேசத்தை யாளுகின்ற இங்கீலீஷ் காரர்களும், அவர்கள் வசிக்கும் கண்டத்திலுள்ள ஏனையயோர்களும் செய்யுளில் இயற்றிக் கற்பிப்பவதை விட்டு, வசனங்களிலே தெளிவுற இயற்றிச் சிறுவர்க்குக் கற்பித்துக் கொண்டு வருகின்றனர். அதனால் அக்கண்டத்தில் வாழும் சிறுவர்கள் சில நாட்களிலே பல நூல்களைக் கற்றுப் பல விஷயங்களையும் உணர்ந்து பல தொழில்களையும் இயற்றும் திறமுடையராகின்றனர்.
இத்தேசத்தார் இந்நூல்களை யெல்லாம் செய்யுளில் செய்து அவற்றிற்குச் சில சொற்களால் உரையியற்றிச் சிறுவர்க்குக் கற்பித்து வருகின்றனர்.

     இவ்வாறு செய்யுளில் இயற்றப்பட்ட நூல்கள், நிகண்டு முதலிய கருவி நூல்களைக் கற்றன்றிக் கற்கப்படாவாம். ஆகவே, அவற்றுள் ஒரு நூலைக் கற்பதற்கு நெடுநாள் செல்லுகின்றது. செல்லவே பல நூல்களைக் கற்றுணர்ந்து எந்தொழில்களையுஞ் செய்யத் தக்கவர்களாவது அரிதாம்.
இதனால் இந்நாட்டுச் சிறுவர்கள் தங்கள் வாழ்நாட்கள் வீழ்நாட் படாமற் சில நாட்களில் அப்பல நூல்களையும் கற்றறிந்து எத்தொழில்களையும் செய்யத் தக்க வல்லாமை அடைவதற்கு. அந்நூல்களையெல்லாம் உலக வழக்கியற் சொற்களால் உரை வசனமாகத் தெளிவுறச் செய்து கல்விச் சாலைகளிலே உபயோக முறும்படி செய்தல் நன்று (விசாகப்பெருமாளையர்: 1834: 31.
என்று பாலபோத இலக்கண நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  இலக்கண பாடப்புத்தகம் பாடத்திட்டத்தில் பாடமாக வைக்கப்பட்டதற்கு இதுவே போதுமான சான்றுகள். நான்காம் வகுப்பு மாணவர்களுக்கும் எளிமையாகப் புரியும் வகையில் இந்த இலக்கண நூல்கள் இயற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.


பத்தொன்பதாம் நூற்றாண்டில் நன்னூலுக்குப் பல உரைகள் தோன்ற காரணங்கள்

        பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பள்ளி, கல்லூரிகள் அதிகமாயின அப்பொழுது நிறுவனங்கள் சார்ந்த கல்வி பரவலாக்கப்பட்டது. 1867க்கு பிறகுதான் தமிழ் இலக்கணப் பாடப்புத்தகங்கள் அரசாங்கச் சட்டபடி பாடத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டன. பாடத்திட்டம் பதிவு செய்யப்படுவதற்கு முன்பே தமிழ் இலக்கணப் பாடநூல்கள் தோற்றம் பெற்றன. அரசாங்கச் சட்டமாக்கப்பட்ட பிறகு இருநூற்றுக்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
பொதுவாக இலக்கணப் பாடம் எளிய உரையில் அமைந்தால் சிறப்பாக இருக்கும் எனக் கருதி நன்னூலுக்குச் சுருக்க நூல்கள் தோற்றம் பெற்றன. நன்னூல் காண்டிகையுரை, விருத்தியுரை கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டன.
நன்னூலுக்குப் பல சுருக்க உரைகள் தோன்றுவதற்கான காரணங்களை இலக்கணக் கொத்து நூலிலும், சங்கரநமச்சிவாயர் உரைப்பதிப்புகளிலும், உ.வே. சா. என் சரித்திரத்திலும், பவானந்தம் பிள்ளையின் நன்னூல் காண்டிகைவுரைகளிலும் அறிந்துகொள்ளமுடிகிறது.


                பல உரைகள் ஒரு நூலுக்கு எழுதப்படும்போது அந்நூல் பெருமை பெறுகிறது. இவ்வாறு பெருமைபெற்ற நூல்களுள் ஒன்று நன்னூல், நன்னூலுக்கு உரைகள் பல்கியமைக்குப் பிறிதொரு காரணமும் இருக்கிறது. சமயப் போட்டியின் விளைவாகவும், நன்னூலுக்கு உரைகள் எழுதப்பட்டன. தொல்காப்பியம் உரை பல பெற்றதற்குக் காரணம், புரியாமை, நன்னூல் உரை பல பெற்றமைக்குக் காரணம், சமயப் போட்டி நன்னூல் பழைய உரை சமணச் சமயச் சார்பானது. சமணர் உரையால் நன்னூலும் உட்பட்டது (அறவாணன்: 1977: 84,85).
என்று நன்னூலுக்குப் பல உரைகள் தோன்றுவதற்குக் காரணம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கணப் பாடநூல்கள் அச்சிடப்பட்டதால் நன்னூக்கு மட்டும் பல உரைகள் எழுதப்பட்டன. மேலும்,
ஐரோப்பியர்களும், கத்தோலிக்க, புரொட்டஸ்டண்டு கிறிஸ்தவர்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில், நன்னூல் மொழி பெயர்ப்புகளையும் பதிப்புகளையும் வெளியிட்டார்கள், அவ்வெளியீடுகள் அனைத்தும் சமயப் போட்டியின் விளைவுகள் அல்ல. எனினும் சமய நலனையும் ஓரளவு கருத்தில் கொண்டு அவை வெளியிடப்பட்டன. சமயத் தொண்டிற்காக வருகின்ற பாதிரிமார்கள் உள்நாட்டு மொழியைப் பயில வழிகாட்டியாக அவை ஆக்கப்பட்டன.

        இவ்வாறு சமய ஆர்வத்தால் மட்டுமன்றி, பிறிதொரு வகையாலும் நன்னூல் உரைகளும், பதிப்புகளும் தோன்றின. இவ்வாறு தோன்றினதற்கு தன்மைக் காரணம், அக்காலத்தில் தோன்றிய கல்வி நிறுவனங்களே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பாதியில் பள்ளியளவிலும். கல்லூரி அளவிலும் நன்னூல் பாட நூலாக்கப்பட்டது. இவற்றின் நோக்கம் நன்னூலில் கூறப்படுகின்ற செய்திகளை எளிமையாக்கிப் புரிய வைப்பதே, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இக்காரணம் பற்றியே நிரம்பப் உரைகள் வந்தன என்பதை விட, நிரம்ப பதிப்புகள் வந்தன எனலாம் இவை பெரும் பாலும் வணிக நோக்கில் வெளியானவை (தனிநாயகம் அடிகளார்: 1999: 15).
என்று பள்ளிகளில் நன்னூல் பாடமாக்கப்பட்டதையும், உரைகள் பல தோற்றம் பெற்றதற்குக் காரணம் அக்காலத்தில் தோன்றிய கல்வி நிறுவனங்களே என்றும் மேலே கூறியதன் மூலம் அறிந்துக் கொள்ளமுடிகிறது.


இலக்கணத்தின் சிறப்பைப் புகழ்ந்து பாராட்டிய அறிஞர்கள்

           மொழியின் சிறப்பையும் இலக்கியச் சிறப்பையும் முழுமையாகக் கற்றுக் கொள்வதற்கு இலக்கணம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
தமிழில் ஏறத்தாழ எழுபத்திரண்டு இலக்கண நூல்கள் தோன்றின. இவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி பற்றி பேசுவது இவற்றுள் ஏறத்தாழ முப்பத்து மூன்று இலக்கண நூல்கள் மறைந்து விட்டன (தனிநாயகம் அடிகளார்: 1999:15)
மேற்கண்ட மறைந்த இலக்கண நூல்களின் பெயரும் சிற்சில நூற்பாக்களுமே இன்று கிடைக்கின்றன. இவைபோக எஞ்சிய முப்பத்தொன்பது இலக்கண நூல்களில் மிகச் சில நூல்கள் மட்டும் இன்று பாராட்டப்படுகின்றன. அவ்வாறு பாராட்டப்படுவனவற்றுள் நன்னூலும் ஒன்று.
நன்னூற் பொருளையும், பெயரையும் தம் நூலில் தக்க இடத்தில் அமைத்துப் பாராட்டிய இலக்கியங்கள் பல. அவை புரபுலிங்கலீலை, திருவெங்கையுலா, திருத்தணிகையுலா, கோடிச்சுரக் கோவை, தமிழ் விடு தூது என்பன (Subramanian:1975:2)
நன்னூல் பற்றிய புகழ்மொழிகள் என்ற தலைப்பில் இலக்கணத் தேவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தின் வழித் தமிழ்த்தேர்வு நடத்திய ஐரோப்பியர், நன்னூலைக் கட்டாயப் பாடமாக அமைந்திருந்தனர். என்றி பவர் (1876), எச். ஸ்டோக் (1830), வால்றர் சாய்சு (1858), டி. பிரதர்டன் (1848), டாக்டர் ஜி.யூ. போப்பையர் (1857) ஆகியோர்கள் இந்நூலைப் புகழ்ந்து போற்றினார்கள்.
ஆங்கிலத்தில் பல்லோராலும் மொழிபெயர்க்கப் பட்ட முதல் இலக்கண நூல் இதுதான். டாக்டர் கால்டுவெல் நன்னூலையே தம் ஒப்பிலக்கண ஆய்வுக்கு மேற்கொண்டார்.

      இருபதாம் நூற்றாண்டு மொழியியல் ஆய்விலும் நன்னூல் அறிவியல் முறையில் அமைக்கப்பட்ட இலக்கணம் என்று பாராட்டப்படுகிறது (அறவாணன்: 1977: 44).
நன்னூல் இலக்கணம் இத்துணைச் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.
டாக்டர் போப்பையர் உரை (கி.பி. 1857) பத்தொன்பதாம் நூற்றாண்டில் டாக்டர் போப்பையரின் பெருமை தமிழ்நாட்டில் விதானமிட்டது. அவர்தம் இலக்கண நூல் ஒவ்வொரு மாணாக்கர் கையிலும் பொலிவதாயிற்று. யான் முதன் முதல் பயின்ற இலக்கணம் இவருடையதே. என்பது தமிழ்த் தென்றல் திரு. வி. க. வின் பொன்னுரை. (அறவாணன் :1977: 210)
இலக்கண வினா விடை நூல் இயற்றியதில் ஜி.யூ.போப்பையர் உரைபணி தற்றிய சிறப்புக் குறியதாகப் போற்றப்படுகிறது.
நன்னூல் இத்துணைச் சிறப்புகள் பெறக் காரணங்கள் எவை? சொல்காப்பியர் 946 நூற்பாக்களில் 2046 அடிகளில் கூறிய செய்திகளைச் சுருக்கி விளக்கம் குன்றாமல் 462 நூற்பாக்களில் 1029 அடிகளில் கொடுத்தமை நூலை நடத்திச் செல்லும் முறை தருக்க நெறிக்கு உட்பட்டு இருக்கின்றமை எளிதில் மனதில் பதியும் பாங்கு கொண்ட நூற்பா அகவல் யாப்பில் நூலை ஆக்கியமை, நூற்பாவில் ஆளப்பட்ட சொற்கள் இல்லாமலும் அரிய சொற்களாய் இல்லாமலும் அமைந்தமை. நூற்பா அடிகள் பல்காமல் சொற்கள் பல்காமல் பெரும்பான்மையான நூற்பாக்கள், மூன்று நான்குவரிகளுக்கு மிகாது, திட்ப நுப்பம் செறிந்து விளங்குகின்றமை, தமிழ் மொழி மரபுகளைப் புறக்கணியாமலும், புதிய செய்திகளைப் புறக்கணியாமலும் வேற்றுமொழி ஆதிக்கத்திற்கு இடங்கொடாமலும் அமைந்தமை (அறவாணன் :1977: 44).
என்று நன்னூல் இலக்கணப் பாடநூல்கள் அமைந்தமைக்குச் சிறப்பு காரணங்கள் என்று கூறமுடிகிறது.
   

துணைநூல் பட்டியல்கள்

1.அரவிந்தன் மு.வை 1968 உரையாசிரியர்கள் சிதம்பரம் மு.ப மணிவாசகர் பதிப்பகம் சென்னை.

2.அறவாணன் க.ப. 1977 எழுநூறு ஆண்டுகளில் நன்னூல் சென்னை பாரி நிலையம்

3.ஆறுமுகநாவலர் – நன்னூற் காண்டிகையுரை பவணந்தி முனிவர் பகுதி-2

     

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஞா. விஜயகுமாரி


உதவிப் பேராசிரியர்


அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி


மீனம்பாக்கம் சென்னை -61

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »