Abstract
In Sangam literature, those who lived in natural settings and further, among the Sangam people who lived in harmony with nature, the land was classified into five regions, namely Kurinji (hilly), Mullai (forest), Marutham (agricultural), Neithal (coastal), and Palai (arid), and people lived accordingly. Among these people who lived in this way, the event of elopement is seen and known through Sangam poems. This research article aims to investigate how the setting of elopement is structured in Sangam literary works such as Narrinai, Kurunthokai, Agananuru, Kaliththokai, and Paripaadal, and to analyze the reasons for it.
“சங்க இலக்கியத்தில் உடன்போக்குச் சூழல்கள்”
முன்னுரை
சங்க இலக்கிய அகநூல்களில் இயற்கைச் சார்ந்த சூழலில் வாழ்ந்து வந்தனர். மேலும் இயற்கையோடு வாழ்ந்த சங்க மக்களிடையே ஐந்து நிலங்களாகப் பாகுபடுத்தி குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப் பிரித்துக்கொண்டு மக்கள் வாழ்ந்தனர். இவ்வாறு வாழ்ந்த மக்களிடையே உடன்போக்கு என்ற நிகழ்வு காணப்படுவதை சங்கப்பாடல்கள் மூலம் அறியமுடிகிறது. சங்க அக நூல்களான நற்றிணைஇ குறுந்தொகைஇ ஐங்குறுநூறுஇ அகநானூறுஇ கலித்தொகை போன்ற அகநூல்களில் உடன்போக்குச் சூழல் எவ்வாறு அமைகிறது அதற்கான காரணங்களை ஆராய்வதாக இக்க்ட்டுரை அமைந்துள்ளது.
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் என்பது எட்டுத்தொகையும்இ பத்துப்பாட்டு ஆகும். எட்டுத்தொகை அகநூல்களான நற்றிணைஇ குறுந்தொகைஇ ஐங்குறுநூறுஇ அகநானூறுஇ கலித்தொகை போன்ற நூல்களில் உடன்போக்கு செய்திகள் அறியமுடிகிறது. முதலில் வேட்டையாடிய சமூகமாக இருந்தது. பின்பு தாய்வழி சமூகமாக மாறியது. ஓர் இனத்துக்குள்ளாகவே மணம் செய்துகொள்ளும் முறை இருந்து வந்தது. பின்பு நெய்தல் நிலத் தலைவி தன் தந்தையோடு குறிஞ்சி நிலத்திற்குச் செல்லும் போது அவளின் மீது தலைவன் காதல் கொள்கிறான.; களவு வாழ்க்கையை பெற்றோர் ஏற்றுக் கொண்டால் உறவினர் முன் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் உறவினருக்கும் பெற்றோருக்கும் தெரியாமல் உடன்போக்கு நிகழ்த்துவர்.
உடன்போக்கு
உடன்போக்கு என்பது மனம் ஒத்த தலைவனும் தலைவியும் களவு வாழ்வில் இருந்து கற்பு வாழிவில் அடி எடுத்து வைக்கும் முதல் நிகழ்வாகும். இதில் தலைவன் தலைவியை பாலை நில வழியாக தன் ஊருக்கு அழைத்துச் செல்வான். இதனை உடன்போக்கு என்பர். உடன்போக்கு என்பதற்கு கொண்டுதலை கழிதலஇ; கடைகொண்டு பெயர்தல்இ போகிய திறத்து உள்ளிட்ட வெவ்வேறு சொற்களை கையாண்டுள்ளனர். சங்க இலக்கியத்தில் உடன்போக்கு என்ற சொல்லிற்கு குறிப்பில் உடன்போகாஇ கொண்டுதலை கழிதல்இ புணர்ந்துடன் போகா என்று குறிக்கப்படுகிறது.
சங்க இலக்கியத்தில் உடன்போக்குச் சூழல்கள்
சங்க இலக்கியத்தில் உடன்போக்குப் புhடல்களாக மொத்தம் 122 பாடல்கள் உள்ளன. இவற்றில் உடன்போக்கு நிகழ செவிலிஇ நற்றாய்இ தோழிஇ தலைவிஇ தலைவன்இ கண்டோர் போன்றோர்களின் மூலமாக அலர்இ அம்பல்இ இற்செறிப்புஇ வரைவு கடாதல்இ வெறியாட்டுஇ தாயின் மீது அச்சம்இ தாயின் ஐயம் பற்றிய உணர்வுஇ மகளை காக்கும் தாயின் காவல்இ தாய் கடிந்துரைத்தலும் அலைத்தலும் இத்தகைய சூழல் தான் உடன்போக்குச் செல்ல காரணமாக அமைந்த சூழலாகும்.
அலர்
அலர் என்பது ஒருவருக்கொருவர் சொல்வழியே மறைமுகமாக தூற்றும் பழிச்சொல் எனப்படும். தோழியினால் தலைவிக்கும் தலைவனுக்கும் உடன்போக்கு நிகழ்வதின் தோழின் சொல்லாற்றல் அறிவாற்றல் வெளிப்படுகிறது. மேலும் தலைவிக்கும் தலைவனுக்கும் இடையில் உள்;ள ஏற்றத்தாழ்வை களைத்து அவர்களை உடன்போக்கிற்கு இசைப்பதை காணமுடிகிறது. அவை
“புதுமலர் தீண்டிய பூநாறு குருஉச்சுவர்
கடுமாப்பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவு அயர்ந்திசினால்: யானே
அலர் சுமந்து ஒழிகஇவ் அழுறங்கல் ஊரே!”1
நம்மூர் தெருக்களிலே சிலரும் பலருமாக கூடி நின்று தம் கடைக்கண்ணாற் பார்த்து மூக்கின் உச்சியிலே சுட்டுவிரலைச் சேர்த்துக் கொண்டவராகப் பழி தூற்றித் திரிவாராயினர். அவரது பழியுரைகளைக் கேட்டறிந்த தம் அன்னையும் சிறுகோல் ஒன்றைக் கைக்கொண்டு சுழற்றுப்படியே என்னை அடிப்பர். இவற்றால் யானும் மிகவும் துயர் உற்றேன். ஊர் பழியின்றும் பிழைத்ததற்குத் தலைவனுடனே உடன்போக்கு சென்றுவிடுதலே நன்று என்ற நற்றிணைப் பாடலில் நெய்தல் திணையில் தோழிக்கூற்றில் இடம்பெற்றதை அறியமுடிகிறது.
அம்பல்
அம்பல் என்பது ஒருவருக்;கொருவர் மறைமுகமாகச் சைகைமொழி தூற்றும் பழியை அம்பல் என்பர். அவை அம்பல் மூதூர் அலர்வாயப் பெண்டிர்
“இன்னா இன்னுரை கேட்ட சிலநாள்
அறியேன் போல் உயிரேன்
நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே”2
இப்பாடலடிகள் மூலம் அம்பல் காரணமாக உடன்போக்குச் சூழலுக்கு காரணமாக இருப்பதை நற்றிணையில் பாலைத்திணையில் காண்கிறோம்.
மேலும்
“சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற
சிறுகோல் வலந்தனள் அன்னை அலப்ப
அலந்தனென் வாழி தோழி!”3
தலைவியின் நிலையினை அன்னை அறிந்தாள். ஊரில் உள்ள மக்கள் அலர் அம்பல் தூற்றுகின்றனர். நல்ல மனையின் கண்ணே தனித்திருப்பாரை வாட்டி வருத்தங்கொள்ளச் செய்யும்படியாக வருகின்ற தீய வாடை காற்றானது வருத்தமடைய செய்கிறது.
இற்செறிப்பு
தலைவியை ஊரார் அலர் தூற்றும் காரணமாக அன்னையானவள் இற்செறித்து புறம் போகாமல் இருக்க காவல் செய்கிறாள். இதனால் தலைவிக்கு உடன்போக்குச் சூழல் ஏற்படுகிறது. இதனை ஐங்குறுநூற்றில்
“கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் பருஞ்சுர மிறந்தன
ஏற்கெடுத்திருந்த வறனில் யாய்க்கே”4
என்ற பாடல் மூலம் இற்செறிப்பு காரணமாக உடன்போக்கு நிகழ்ந்திருப்பதை அறியமுடிகிறது.
வெறியாட்டு
தன் தலைவனைக் காண வேண்டும் என்னும் ஏக்கமும் காண இயலுமோ என்ற ஐயமும் தலைவியின் மன நோய்க்கு காரணமாயின. வெறியாடல் என்பது மன நோயினை அறியும் முயற்சி ஆகும். சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்களிடையே வெறியாட்டு என்னும் வெறிக்கூத்து மிகவும் பரவியிருந்தது. வெறி எனும் சொல் தெய்வத்தைக் குறிப்பதாகும். வெறியாட்டு மூலமாகவும் உடன்போக்குச் சூழல் ஏற்பட தோழி உதவுகிறாள். இதனட மூலம் தலைவியின் நோய் வெறியாட்டால் தீராது. துலைகனால் தான் முடியும் என்ற உணர்வைத் தலைவனுக்குத் தெரிவித்தல் ஆகும்.
தாயின் மீது அச்சம்
தோழி தலைவியை நோக்கி ஊரின்கண் அலரெழவும் சேரி ஆரவாரிப்பும் ஒழிவின்றி நம்மை அலைகின்ற அன்னைஇ தலைவியானவள் தன் மனையைவிட்:டு வெளியே செல்லாமல் உறைவாளாக என்று அன்னையின் கண்டிப்பு காரணமாக உடன்போக்குச் சூழல் தலைவிக்கு ஏற்படுகிறது. இதனை குறுந்தொகையில்
”ஊஉர் அலர் எழச் சேரி கல்லென
ஆனாது அலைக்கும் அறன்இல் அன்னை
இருக்க தன்மனை யானே”5
என்ற பாடல் மூலம் அன்னையின் அச்சத்தால் உடன்போக்கு நிகழ்வதை அறியமுடிகிறது.
தாயின் ஐயம் பற்றிய உணர்வு
களவுப் புணர்ச்சியிலே ஈடுபட்டு இருந்த தலைவி தலைவனுக்கு ஊரலர் அதிகமாயிற்று. அன்னையின் சொல்லும் கடுமையாயிற்று. தலைவியானவள் துடிதுடித்தாள். இந்நிலையிலே தலைவன் தலைவியுடன் உடன் போக்கிலே செல்லப் போவதாக முடிவு செய்து விட்டான். தாயின் கடிந்துரைத்தலும் கவனிப்பும் கண்டிப்பும் தலைவியின் உடன்போக்குச் சூழலுக்கு காரணமாவதை அகநானூற்றில்
”உன்னங் கொள்கையொடு உளம் கரந்து உறையும்
அன்னை சொல்லும் உய்கம்”6
இப்பாடல் மூலம் அன்னையின் கடும்சொற்கள் உடன்போக்குச் சூழலுக்கு காரணமாவதை அறியமுடிகிறது.
தாய் கடிந்துரைத்தலும் அலைத்தலும்
களவினால் ஊரலர் எழுந்தது. அன்னையோ தெய்வத்தால் வந்தது என எண்ணி தெய்வத்திடம் முறையிடுதல் வரைவு கடாதல் இற்செறிப்பு ஏற்படுத்துதல் அலர் அம்பல் போன்ற இன்னல்கள் இருப்பதால் உடல் மெலிவு காரணமாக தோழியின் உதவியுடன் உடக்போக்கு காணப்படுகிறது. இதனை அகநானூற்றில்
”கௌவை மேவலர் ஆகி இவ்ஊர்
நிறைய பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு எனப் பரைஇ
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர் யாம் என் இதற்படலே”7
ஊரலர் தூற்றலையே விரும்புவராகி இவ்வூரில் நிறைந்திருக்கும் அதிக பெண்டிர் இன்னாத சொற்கள் பலவும் பேசுகின்றனர். இதனால் அன்னையானவள் தெய்;வத்திடம் முறையிடுதல் வெறியாட்டு நடத்துதல் போன்றவை தலைவிக்கு ஏற்படுவதை அறிந்த தோழியானவள் தலைவனிடம் முறையிட்டு உடன்போக்கிற்கு உடன்படுத்துதல் ஆகும்.
முடிவுரை
♣சங்க காலத்தில் தலைவன் தலைவி களவுக்காலத்தில் சந்தித்து உரையாடுதல் தலைவி தலைவனின் மனநிலை செவிலி நற்றாய் இவர்களின் சூழ்நிலை உடன்போக்கிற்கு காரணமாக அமைந்த சூழல் போன்றவற்றை ஆராய்வதாக அமைந்துள்ளது. அலர் அம்பல் பற்றி சங்ககால மக்களின் நடைமுறை சூழ்ந்த வாழ்க்கைமுறையினை வெளிப்படுத்துகிறது. இயற்கையான சூழலையும் வெளிப்படுத்துகிறது.
♣களவு வாழ்க்கையில் தலைவன் தலைவி சந்திப்பு காரணமாக தலைவிக்கு ஏற்படும் மாற்றங்களை அறிந்த ஊர் பெண்டிர் பேசும் பேச்சு தலைவியின் மாற்றத்திறகு காரணம் தலைவன் என தோழி அறிந்து உடன்போக்குச் சூழலுக்கு முக்கிய காரணம் ஆகிறாள். தலைவியன் உடல் மெலிதல் இதனை கண்ட தாய் வேலன் அவறியாட்டு நிகழ்த்துதல் இலக்கியங்களில் கலப்பு மணம் நிகழ்ந்தது போன்ற செய்தகளை எட்டுத்தொகை அகநூல்கள் குறிப்பிடுகிள்றன.
♣சங்க இலக்கியத்தில் பெண்கள் களவு வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது தெரிகிறது. அறநெறியைப் பின்பற்றி வாழ்ந்த செய்தியும் அறியமுடிகிறது. தனக்கு பிடித்தவன் ஏழ்மையானவனாக இருந்தாலும் அவûனுடைய தகுதிக்கு இறங்கி தலைவி சென்றதை அறியமுடிகிறது.
♣தலைவி பிறந்த வீட்டில் இருக்கும்போது செல்வ செழிப்புடன் வளமாக காணப்படுகிறாள். ஆனால் தலைவனுடன் உடன்போக்கில் சென்று பின்னர் பாலை நிலத்தின் வெம்மையையும் தாங்காதவளாகவும் தலைவனின் வீட்டில் துன்பம் படுபவளாகவும் இருக்கின்றாள்.
♣சங்க காலத்தில் தலைவி தலைவனுடன் உடன்போக்கு சென்றபோது தோழியின் வருத்தம் செயல்பாடுகள், உணர்வுகள் அறிய முடிகிறது. செவிலித்தாயின் உணர்வுகள், புலம்பல்கள் காணப்படுகிறது. நற்றாய் வீட்டில் இருந்தபடியே நினைத்து பார்த்து வருந்துபவர்களாக உடன்போக்கு பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.
♣ தற்காலத்தில் உடன்போக்கு என்றபது ஓடிப்போவது என்று தவறான எண்ணமாக கொண்டுள்ளனர். நற்றாய், செவிலி, தோழி, தலைவன், தலைவி கணடோர் – இக்கதை மாந்தர்கள் உலக வழங்கில் காணப்படுபவர்கள் போலவே சங்க காலத்தில் படைக்கப்பட்டுள்ளனர் என்று உடன்போக்கு பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.
சான்றெண் விளக்கம்
1.நற்றிணை.பா.149
2.நற்றிணை.பா143
3.நற்றிணை.பா.149
4.ஐங்குறுநூறு.பா.385
5.குறுந்தொகை.பா.262
6.அகநானூறு.பா.65
7.அகநானூறு.பா.95
துணைநூற்பட்டியல்
1. சுப்பிரமணியன் ச.வே, நற்றிணை மூலமும் உரையும்
2. சோமசுந்தரனார் பொ.வே – ஐங்குநூறு
3. சோமசுந்தரனார் பொ.வே – குறுந்தொகை
4. சுப்பிரமணியன் ச.வே – அகநானூறு மூலமும் உரையும்
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மா.மகேஸ்வரி,
REG NO 204PHD23F10324TAM,
முழு நேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி,
திருவள்ளுவர் பல்கலைகழகம்,
திருவண்ணாமலை- 606603.
நெறியாளர்
முனைவர் கோ. சாந்தமூர்த்தி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி,
திருவண்ணாமலை -606603.