Saturday, July 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் திருநாளைப் போவார் புராணம்

திருநாளைப் போவார் புராணம்

திருநாளைப்போவார் நாயனார்

திருநாளைப் போவார் புராணம்

            சோழநாட்டிலுள்ள ஆதனூரில், ஆதிதிராவிடர் குலத்தில் பிறந்தவர் நந்தனார் ஆவார். சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். சிவாலயங்களிலுள்ள மேளக் கருவிகளுக்கான தோல்களையும், யாழ்களுக்கான நரம்புகளையும் அளித்து வந்தார். அரசு தந்த சிறு நிலத்தில் பயிர்செய்து வாழ்ந்து வந்தார்.

            எப்போதும் சிவனையே சிந்தித்து இருந்தும், ஆலயத்தினுள் செல்ல இவரது குலத்தோர் அனுமதிக்கப் படாததால் கோயிலின் வாசலிலேயே நின்று சிவபெரு மானை வணங்கி வந்தார்.


            ஒருமுறை திருப்புன்கூர் சிவபெருமானைத் தரிசிக்கும் ஆசையில் அவ்விடம் சென்றார். கோயிலின் வாசலில் நிற்கும் நந்தனாருக்குக் காட்சிதர விரும்பிய பெருமான், நந்தி தேவரை விலகும்படிக் கூறினார். நந்தியும் விலகியது. நாயனார் சிவனைச் சிறப்புறக் கண்டு வழிபட்டார். பின்பொருநாள் தில்லையைத் தரிசிக்க ஆசை கொண்டார். அந்நினைவிலேயே இரவில் உறங்கச் சென்றார். அவருக்கு உறக்கம் வரவில்லை.


‘நான் தில்லைக்குச் சென்றாலும் ஆலயத்தினுள் நுழைய முடியாதே! நடராஜ பெருமானின் திருநடனத்தைக் கண்டு தரிசிக்க முடியாதே!’ என்று வருந்தியவர், தன்னைத்தானே சமாதானம் செய்யும்வகையில், எப்படியும் ‘நாளைப் போவேன்! நாளைப் போவேன்!’ என்று கூறியபடியே இருந்தார். இவ்வாறு நாட்கள் கடந்தன.


            ஒருநாள் நந்தனார் தில்லைக்குப் புறப்பட்டுச் சென்றார். இருப்பினும் ஆலயத்தினுள் பிரவேசிக்க அனுமதி இல்லாததால், ஆலயத்தின் வெளிப்புறமிருந்த மடங் களையும், யாகசாலை முதலியவற்றையும் கண்டு வணங்கினார்.


            ‘ஆலயத்தின் உள்ளே சென்று தில்லைக்கூத்தனின் நடனத்தைத் தரிசிக்க முடியவில்லை. அதற்கு இப்பிறவிக் குலம் தடையாக உள்ளதே!’ என்று வருந்தியபடியே உறங்கினார். அவர் கனவில் தோன்றிய இறைவன், “இந்தப் பிறவி தீர, நீ நெருப்பில் இறங்கி புனிதமடைந்து, பின் வேதியர்களுடன் என்னை வந்தடைவாய்!” என்று கூறியருளினார்.


            இறைவன் அந்தணர்களின் கனவில் தோன்றி, திருநாளைப் போவார் இறங்க யாககுண்டம் அமைக்கும் படி ஆணையிட்டார். அதுகண்டு திகைத்த அந்தணர்கள், நந்தனாரை வணங்கி, இறைவனின் ஆணையைக் கூறினர். நந்தனாரும் பேரானந்தம் கொண்டார். அந்தணர்கள் இறைவனின் கட்டளைப்படி நெருப்பு உண்டாக்கினர். திருநாளைப் போவார், இறைவனை நினைத்து, வலம் வந்து நெருப்பில் இறங்கினார். மறுகணமே பழைய உடல் மறைந்து, வேதியராக வெளிப்பட்டார். அதைக்கண்ட அந்தணர்கள் அவரை வணங்கினார்கள்.


            திருநாளைப்போவார், அந்தணர்களுடன் ஆலயத் தினுள் சென்று பொன்னம்பலத்தினுள் நுழைந்தார். அக்கணமே அவரது உடல் அவ்விடத்தை விட்டு மறைந்தது. அந்தணர்கள் உட்பட அனைவரும் அதைக் கண்டு அதிசயித்தனர். திருநாளைப் போவார் தில்லை அம்பலக்கூத்தனின் திருவடி நிழல் சேர்ந்தார்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

மேலும் அறிய,

1.சுந்தரர் வரலாறு

2.திருநீலகண்ட நாயனார்‌ புராணம்

3.அமர்நீதி நாயனார் புராணம்

4.இளையான்குடி மாற நாயனார்

5.விறன்மிண்ட நாயனார்

6.திருநீலகண்ட நாயனார்

7.மெய்ப்பொருள் நாயனார்

8.எறிபத்த நாயனார் 

9.ஏனாதி நாயனார் புராணம்

10.கண்ணப்ப நாயனார்‌ புராணம்

11.குங்கிலியக் கலய நாயனார் புராணம்

12.மானக்கஞ்சாற நாயனார் வரலாறு

13.அரிவட்டாய நாயனார் புராணம்

14.ஆனாய நாயனார் வரலாறு

15.மூர்த்தி நாயனார் புராணம்

16.முருக நாயனார் புராணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »