ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருள் உணர்த்துவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
(எ.கா) ஊட்டி சென்றான்
இத்தொடர் ஊட்டிக்குச் சென்றான் என விரிந்து நின்று பொருள் உணர்த்துகின்றது. இரு சொற்களுக்கும் இடையில் ‘கு’ என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்து பொருளை உணர்த்துவதால் இது ‘வேற்றுமைத் தொகை’ எனப்படும்
வேற்றுமைத் தொகைத் தொடர்
உவம உருபு
வேற்றுமைத்தொகை
பால் அருந்தினான்
ஐ
இரண்டாம் வேற்றுமைத் தொகை
தலை வணங்கினான்
ஆல்
மூன்றாம் வேற்றுமைத்தொகை
பள்ளி சென்றான்
‘கு‘
நான்காம் வேற்றுமைத்தொகை
ஊர் நீங்கினான்
இன்
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
முருகன் நூல்
அது
ஆறாம் வேற்றுமைத் தொகை
கடல்வாழ் உயிரிகள்
கண்
ஏழாம் வேற்றுமைத்தொகை
முதல் வேற்றுமைக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் உருபு கிடையாது. ஒரு தொடரில் வேற்றுமை உருபும், அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகையும்‘ என்பர்.
2.வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்சவிகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம் ‘வினைத்தொகை’ எனப்படும். காலம் கரந்த பெயரெச்சமே வினைத்தொகை ஆகும். வினைப்பகுதியும் அடுத்த பெயர்ச்சொல்லும் அமைந்த சொற்றொடர்களிலேயே வினைத்தொகை அமையும்.
(எகா) ஊறுகாய், விரிகடல்
இவற்றில் ஊறு, விரி என்பவை வினைப்பகுதிகள். இவை முறையே காய், கடல் என்னும் பெயர்ச் சொற்களோடு சேர்ந்து பெயரெச்சங்களாயின. மேலும், இவை ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காப் முக்காலத்திற்கும் பொருந்தும்படி விரிந்து பொருள் எனத் தருகின்றன. காலம் காட்டும் இடைநிலைகள் இப்பெயரெச்சங்களில் தொக்கி இருக்கின்றன.
(எகா) சுடுசோறு, குடிநீர்
3.பண்புத் தொகை
பண்புப்பெயருக்கும் தழுவிநிற்கும் அது பெயர்ச் சொல்லுக்கும் இடையே ‘மை’ என்னும் பண்பு விகுதியும் ‘ஆகிய’, ‘ஆன’ என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.
(எகா) செந்தாமரை – செம்மையான தாமரை
வட்டக்கல் – வட்டமான கல்
இன்சொல் – இனிமையான சொல்.
இத்தொடர்களில் செம்மை, வட்டம், இனிமை என்பன பண்புப் பெயர்கள் தாமரை, கல், சொல், என்பன பெயரைத் தழுவி நிற்கும் பெயர்ச்சொற்கள் இவ்விரண்டிற்கிடையில் ஆகிய, ஆன, என்னும் பண்புருபுகளும், மை என்னும் பண்பு விகுதியும் மறைந்து வந்துள்ளதால் இவை ‘பண்புத்தொகை’ ஆகும்.
4.இருபெயரொட்டுப் பண்புத்தொகை
சிறப்புப் பெயர் முன்னும், பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்
(எ.கா) தமிழ்மொழி
இத்தொடர் தமிழாகிய மொழி என விரிகிறது. மொழி என்பது அனைத்து மொழிகளையும் சுட்டும் பெயராகவும், தமிழ் என்பது பல மொழிகளுள் ஒன்றாகிய தமிழைக் குறிப்பாகச் சுட்டுவதால் சிறப்புப் பெயராகும். இவ்விரு சொற்களுக்கும் இடையே ‘ஆகிய’ என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளதால் இது இருபெயரொட்டுப் பண்புத் தொகையாகும்.
(எ.கா) பனைமரம், புளிச்சைக்கீரை
5.உவமைத் தொகை
உவமைக்கும் உவமேயத்திற்கும் (பொருளுக்கும்) இடையில் போல, போன்ற, நிகர, அன்ன என்னும் உவம உருபுகளுள் ஏதேனும் ஒன்று மறைந்து உருவது உவமைத் தொகையாகும்.
(எ.கா)மலர்க்கரம்
மலர் போன்ற கரம் எனப் பொருள் தருகிறது.
மலர் -உவமை.
கரம் – உவமேயம் (பொருள்)
இடையில் ‘போன்ற’ என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளதால் இது உவமைத் தொகையாகும்.
6.உருவகம்
உவமையும் உவமிக்கப்படும் பொருளும் வேற்றுமை தோன்றாதபடி இரண்டுமே ஒன்றுதான் என்பன போல் வருவது உருவகம் எனப்படும். பொருள் முன்னாலும் உவமை பின்னாலும் வரும்.
இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வருவது ‘உம்மைத் தொகை’ எனப்படும்.
(எ.கா) இரவு பகல், ஆடு மாடு, வெற்றிலை பாக்கு.
மேற்கண்ட தொடர்கள் இரவும் பகலும், ஆடும் மாடும், வெற்றிலையும் பாக்கும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருளை உணர்த்துவதால் இது ‘உம்மைத் தொகையாகும்.
8.எண்ணும்மை
‘உம்’ என்னும் இடைச்சொல் வெளிப்பட்டே வருமானால் அது ‘எண்ணும்மை’ என்று அழைக்கப்படுகிறது.
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி (மறைந்து) நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும்.
(எகா) பொற்றொடி வந்தாள் (தொடி என்றால் வளையல் ஆகும்)
இத்தொடரில் முதலில் உள்ள ‘பொற்றொடி’ என்னும் சொல் ‘பொன்னால் ஆன வளையல் என்னும்’ பொருளைத் தரும். இது மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்சு தொகையாகும். இத்தொடர் ‘வந்தாள்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி நிற்பதால் பொன்னால் ஆன வளையலை அணிந்த பெண் வந்தாள் எனப்பொருள் தருகிறது. அணிந்த பெண் என்பது தொடரில் இல்லாத மொழியாகும். வேற்றுமைத் தொகையை அடுத்து அல்லாத மொழி தொக்கி நிற்பதால் இத்தொடர் ‘வேற்றுமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை எனப்படும்.
10.குற்றியலுகரம்
குற்றியலுகரம் – குறுமை + இயல்+உகரம். குறைந்த அளவு ஒலிக்கின்ற ‘உ’ என்னும் எழுத்து. இது அரை மாத்திரை அளவு ஒலிக்கும். வல்லின மெய்களுள் ஏதேனும் ஒன்றன்மேல் சேர்ந்து வரும் உகரம் (கு, சு, டு, து, பு, று) சொல்லின் இறுதியில் வரும்பொழுது, தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவினதாக ஒலிக்கும். இதுவே குற்றியலுகரமாகும். ஆயின், இவ்வாறு ஒலிக்கும்பொழுது இரண்டு எழுத்துக்களாலான சொல்லாக இருப்பின் முதல் எழுத்து நெடிலாக இருத்தல் வேண்டும். உ என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும் பொழுது உதடுகள் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்றது.
குறிப்பு : இரண்டே எழுத்தாலான சொல்லில் இறுதி எழுத்து வல்லின மெய்யுடன் சேர்ந்த உகரமாக இருந்தாலும் முதல் எழுத்து குறிலாக இருந்தால் குற்றியலுகரம் ஆகாது.
எ-டு : பசு என்பதன் இறுதி உகரம் குற்றியலுகரம் அன்று.
குற்றியலுகரத்தை ஆறு வகையாகப் பிரித்துக் கூறுவர். அவையாவன.
வ.எண்
குற்றியலுகர வகைகள்
எடுத்துக்காட்டுகள்
1
நெடில் தொடர்க்குற்றியலுகரம்
பாகு, காசு. தோடு. காது. சோறு
2
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
எஃது
3
உயிர்த் தொடர்க்குற்றியலுகரம்
அழகு, முரசு, முரடு, எருது, மரபு, பயறு
4
வன்றொடர்க் குற்றியலுகரம்
பாக்கு, தச்சு, தட்டு. பத்து, உப்பு, புற்று
5
மென்றொடர்க் குற்றியலுகரம்
பாங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, கன்று
6
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
மூழ்கு, செய்து, சால்பு
11.குற்றியலிகரம்
குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம். குறைந்த ஒலியை உடைய ‘இ’ என்னும் எழுத்து இது அரை மாத்திரை அளவு ஒலிக்கும். “இ“ என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும் பொழுது முழுமையாக ஒரு மாத்திரை அளவு ஒலிக்கின்றது. பட்டு +யாது: பட்டியாது. ‘டி’ என்னும் எழுத்தில் உள்ள இகர ஒலி (ட் + இ) முழுமையாக ஒலிக்கவில்லை. அரை மாத்திரை அளவே ஒலிக்கின்றது. ஆதலின் ‘பட்டியாது’ என்பதில் உள்ள இகரம் குற்றியலிகரமாகும்.
இலக்கணம் : ஒரு குற்றியலுகரச் சொல்லின் முன், யா என்னும் எழுத்தை முதலாக உடைய சொல் வந்து சேரும்பொழுது அக்குற்றியலுகரச் சொல்லின் இறுதியில் உள்ள உகரம் இகரமாக மாறும். இதுவே குற்றியலிகரம் எனப்படும். இதற்குக் கால அளவு அரை மாத்திரை ஆகும். மேலும் ‘மியா என்னும் அசைச்சொல் வருமொழியாக வந்தால் அதில் உள்ள இகரமும் (ம் + இ =மி) ஒலி குறைந்து, குற்றியலிகரம் ஆகும்.
எடுத்துக்காட்டு
வீடு + யாது? – வீடியாது
எஃகு +யாது? – எஃகியாது?
உலகு +யாது ? – உலகியாது?
பட்டு + யாது? – பட்டியாது?
பந்து + யாது? – பந்தியாது?
சால்பு + யாது? – சால்பியாது?
கேள் + மியா? – கேண்மியா
12.தொழிற்பெயர்
ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும்.
காலை எழுந்தவுடன் படிப்பு
மாலை முழுதும் விளையாட்டு
என்கிற இத்தொடர்களில் உள்ள படிப்பு, விளையாட்டு தொழில்களைக் குறிக்கும் சொற்கள்.
எ.டு. பொறுத்தல் தலை
பொறுத்தல் என்பதில் ‘பொறு’ என்பது முதலிலும் ‘தல்’ என்பது இறுதியிலும் அமைந்துள்ளன. முதலில் உள்ளதை முதனிலை அல்லது பகுதி என்றும் இறுதியில் உள்ளதை இறுதிநிலை அல்லது விகுதி என்றும் கூறலாம். பொறுத்தல் என்பது ‘தல்’ என்னும் விகுதி பெற்ற தொழிற்பெயராகும். தொழிற்பெயர் விகுதிகள் பலவாகும். தொழிற்பெயர் விகுதிகளும் எடுத்துக்காட்டுகளும் கீழே தரப்பெற்றுள்ளன.
வ.எண்
விகுதி
எடுத்துக்காட்டு
1
தல்
நடத்தல்
2
அல்
பாடல்
3
அம்
ஆட்டம்
4
ஐ
கொலை
5
கை
தொழுகை
6
வை
பார்வை
7
பு
நடப்பு
8
வு
வரவு
9
தி
மறதி
10
சி
வளர்ச்சி
11
வி
உதவி
12
உள்
கடவுள்
13
காடு
சாக்காடு
14
பாடு
கோட்பாடு
15
அரவு
தோற்றரவு
16
ஆனை
வாரானை
17
மை
கொல்லாமை
18
து
பாய்ந்து
முதனிலை திரிந்த தொழிற்பெயர்
சூடு போட்டார்
‘கெடுவான் கேடு நினைப்பான்’
இவற்றுள் சூடு, கேடு என்பன சுடுதல், கெடுதல் என்னும் தொழில்களை உணர்த்துகின்றன. சுடுதல், கெடுதல் என்னும் தொழிற்பெயர்களின் விகுதிகளை நீக்கினால் முறையே சுடு, கெடு என ஆகும். சுடு,கெடு என்பனவற்றின் முதல் எழுத்தான சு, கெ என்னும் குறில்கள் நெடிலாக மாறி சூடு,கேடு என ஆகும். இவ்வாறு தொழிற்பெயரின் விகுதியின்றி, பகுதியில் உள்ள குறில், நெடிலாகி வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும். (சில தொழிற்பெயர்களின் முதனிலை மட்டும் திரியும்).
தொழிற்பெயரின் விகுதி கெட்டு, பகுதி திரிந்து வருவது முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
எடு. பட்ட பாடு (படுதல் – படு – பாடு)
பெற்ற பேறு (பெறுதல் – பெறு – பேறு)
13.வினையாலணையும் பெயர்
குமரன் படித்தான். படித்தவன் தேர்ச்சி பெற்றான். இவற்றுள் குமரன் என்பது பெயர்ச்சொல்; படித்தான் என்பது வினைச்சொல். படித்தவன் என்பது சொல்லா? வினைச்சொல்லா? படித்தவன் என்பது எழுவாயாக இருப்பதால் பெயர்ச்சொல்லின் தன்மையும் பெற்றுள்ளது. படித்தல் என்னும் தொழிலையும் இறந்த காலத்தையும் காட்டுவதால் வினைச்சொல்லின் தன்மையும் பெற்றுள்ளது. எனவே ‘படித்தவன்’ என்னும் சொல், வினையின் தன்மையும் பெயரின் தன்மையும் அமைந்த சொல் ஆகும். இவ்வாறு வருவதே வினையால் அணையும் பெயர் என்று குறிப்பிடப்படும்.
இலக்கணம் : ஒரு வினைமுற்று, பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது. தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் உணர்த்தி வரும்.
எடுத்துக்காட்டு
அகழ்வாரைத் தாங்கும் நிலம் (அகழ்வாரை வினையாலணையும் பெயர்)
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (இகழ்வார் வினையாலணையும் பெயர்)
வ.எண்
தொழிற்பெயர்
வினையாலணையும் பெயர்
1
நடித்தல்
நடித்தவன்
2
எழுதுதல்
எழுதினவன்
3
உண்டல்
உண்டவன்
4
படித்தல்
படித்தவன்
5
நோன்பு
நோற்பார்
6
சேர்தல்
சேர்ந்தார்
7
வாழ்தல்
வாழ்வார்
தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள்
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் சிரித்தது, கிரிக்கெட்டில் இந்தியா வென்றது
15. வினைமுற்று
ஒரு பொருள் செய்த தொழிலைக் குறித்து வந்து, முற்றுப்பெற்ற சொல் வினைமுற்று எனப்படும். அது திணை, பால், எண், இடம் காட்டும்; காலம் காட்டும்; பயனிலையாக வரும்; வேற்றுமை உருபை ஏற்காது.
எ.டு. “பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்”
பொறுத்தாரைப் பொன்போல் வைப்பர்”
இத்தொடர்களில் வந்துள்ள ‘ஏறுமின்’, ‘வைப்பர்’ ஆகியவை வினைமுற்றுகள்.
வினைமுற்று வகைகள்
1.தெரிநிலை வினைமுற்று
2.குறிப்பு வினைமுற்று
3.உடன்பாடு வினைமுற்று
4.எதிர்மறை வினைமுற்று
5.ஏவல் வினைமுற்று
6.வியங்கோள் வினைமுற்று
1.தெரிநிலை வினைமுற்று
செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினையும் வெளிப்படையாகத் தெரிவிக்கும் வினைமுற்று தெரிநிலை வினைமுற்று எனப்படும்.
எ.டு. மங்கை, கூடத்தில் அரிசிமாக்கோலம் அமைத்தனள்.
மங்கை, இல்லத்தில் யாழ் எடுத்துத் தமிழிசை பாடினாள்.
2.குறிப்பு வினைமுற்று
செய்பவனையும் திணை பால்களையும் வெளிப்படையாகக் காட்டிக் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று, இவ்வினைமுற்று குறிப்பு வினைமுற்று எனப்படும். இவ்வினைமுற்று பொருள், இடம் முதலான அடிப்படையில் தோன்றும்.
3.உடன்பாடு வினைமுற்றுகள் மற்றும் 4.எதிமறை வினைமுற்றுகள்
செயல் நிகழ்வைக் குறிக்கும் வினைமுற்று உடன்பாட்டு வினைமுற்று எனப்படும்.
செயல் நிகழாமையைக் குறிக்கும் வினைமுற்று எதிர்மறை வினைமுற்று எனப்படும்.
எ.டு. நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண் துறவார் நாணாள் பவர்.
பெருங்குணத்தார்ச் சேர்மின்
பிறர் பொருள் விரும்பான்
துறப்பார்,சேர்மின் – உடன்பாடு.
துறவார். விரும்பான் – எதிர்மறை
4. ஏவல் வினைமுற்று
முன்னிலை இடத்தில் கட்டளைப் பொருளில் எதிர்காலம் காட்டி வரும் வினைமுற்று ஏவல் வினைமுற்று எனப்படும். இது ஒருமை, பன்மை உணர்த்தும்.
எ.டு. வாராய, பாரீர்
குறிப்பு: ஏவல் ஒருமை வினைமுற்றுகள் இ, ஐ, ஆய் என்னும் விகுதிகளைப் பெறும். ஏவல் பன்மை வினைமுற்றுகள் இர், ஈர்,மின்,உம் என்னும் விகுதிகளைப் பெறும்.
எ.டு. வருதி, செல்வாய் – ஏவல் ஒருமை
வருவீர், வம்மின், வாரும் – ஏவல் பன்மை
5.வியங்கோள் வினைமுற்று
வேண்டல், விதித்தல், வாழ்த்துதல், வைதல் முதலிய பொருள்களில் மூவிடங்களிலும் ஐம்பால்களிலும் வரும் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று எனப்படும். இது ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாக வரும். க, ய, ர் என்னும் விகுதிகளைப் பெறும்.
எடு. திருவளர் மூதூர் வாழ்க
வாழிய சூசை
வாழியர்
தீமை ஒழிக
மருந்து உண்க
நான் வாழ்க,
நீ வாழ்க
அவர் வாழ்க.
ஏவலுக்கும் வியங்கோளுக்கும் உள்ள வேறுபாடுகள்
வ.எண்
ஏவல் வினைமுற்று
வியங்கோள் வினைமுற்று
1
கட்டளைப் பொருளில் வரும்
வாழ்த்துதல், வைதல், வேண்டல், விதித்தல் பொருள்களில் வரும்.
2
முன்னிலை இடத்தில் மட்டும் வரும்
மூன்று இடங்களிலும் வரும்
3
ஒருமை, பன்மை உண்டு
ஒருமை, பன்மை என்னும் பகுப்பு இல்லை
16. ஒருபொருட் பன்மொழி
ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருட்சிறப்பைத் தருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
எ.டு. உயர்ந்தோங்கு மலை
உயர்ந்து, ஓங்கு என்னும் இரு சொற்களும் ஏறக்குறயை ஒரே பொருளைத் தந்து, ‘மிக உயர்ந்த மலை’ என்னும் பொருளை உணர்த்துகின்றன. இவ்வாறு ஒரு பொருள் தரும் இரண்டு சொற்கள் சேர்ந்து வருவது ஒரு பொருட் பன்மொழி எனப்படும்.
எ.கா மீமிசை ஞாயிறு
17.இரட்டைக்கிளவி
ஒரு சொல்லை பிரித்தால் பொருள் தராமல் இருப்பது இரட்டைக்கிளவி ஆகும்.
எ.கா சலசல, படபட, சரசர, கரகர, பளபள, என்பன
18.அடுக்குத்தொடர்
ஒரு சொல், விரைவு, வெகுளி, தெளிவு, அச்சம், உவகை முதலியன காரணமாக, இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும். இதனைப் பிரித்தாலும் பொருள் தரும்.
எ.டு. பாம்பு பாம்பு, தீ தீ, வெற்றி வெற்றி
அடுக்குத் தொடருக்கும் இரட்டைக் கிளவிக்கும் வேறுபாடுகள்
வ.எண்
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
1
இரண்டு முறை மட்டுமே வரும்
இரண்டு, மூன்று, நான்கு முறைகளும் அடுக்கி வரலாம்
2
பிரித்தால் பொருள் தராது
பிரித்தால் பொருள் தரும்
3
இரண்டும் சேர்த்து வந்து ஒரே பொருள் தரும் எ.கா பாம்பு சரசர என ஊர்ந்தது
அடுக்கி வருவதற்கு ஏற்ப, விரைவு, அச்சம், தெளிவு, உவகை என முதலிய பொருள்களைத் தரும் எ.கா புலவர் மன்னனை ‘வாழ்க வாழ்க‘ என வாழ்த்தினர்
19.இயல்பு புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது நிலைமொழியிலோ வருமொழியிலோ எந்த மாற்றமும் இல்லாமல் சேர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
எ.டு. வாழை + மரம் = வாழைமரம்.
20.விகாரப்புணர்ச்சி
நிலைமொழியும் வருமொழியும் சேரும்பொழுது இடையே எழுத்தோ, சாரியையோ தோன்றல், எழுத்துத் திரிதல், எழுத்துக் கெடுதல் என்பவற்றுள் ஒன்றே.. பலவோ விகாரங்களைப் பெற்றுப் புணர்தல் விகாரப் புணர்ச்சி ஆகும்
(அ) தோன்றல் : நிலைமொழிக்கும் வருமொழிக்கும் நடுவில், எழுத்து தோன்றுவது.
எ.கா. வாழை + பழம் = வாழைப்பழம், பூ + கொடி = பூங்கொடி
(ஆ) திரிதல் : நிலைமொழி, வருமொழிகளில் உள்ள எழுத்து, மாறி வருவது.
எ.கா. மண் + குடம் = மட்குடம், பல் + பொடி = பற்பொடி
(இ) கெடுதல் : நிலைமொழி, வருமொழிகளில் உள்ள எழுத்து, கெட்டுச் சேர்வது.
எ.டு. மரம் + வேர் = மரவேர்.
21. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
இறுதி எழுத்துக் கெட்டு எதிர்மறைப் பொருளை உணர்த்தி நிற்கும்.
எ.கா. பறவாப் பறவை, ஓடாக் குதிரை, காணாக் கண், செல்லாக் குதிரை
22. உரிச்சொல் தொடர்
இசை, குறிப்பு, பண்பு ஆகியவை நிலைக்களனாக ஒருசொல் ஓரியல்பு உணர்த்தவும் பலவியல்பு உணர்த்தவும் சால, உறு, தவ, நனி, கூர், கழி, உரு, ஏ, மழ, குழ, கதழ், தட, கய, நளி, மாதர், கலி, வியன், நாம, பே, வய, துய, வை, எறுழ், கடி போன்றன வருமாயின் அவை உரிச்சொல் எனப்படும்.
கௌதமபுத்தர், ஒரு வழியில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காரி எச்சிலை துப்பினான். தன் மேல்துண்டால் துடைத்து விட்டு. “இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?” என்றார் புத்தர். அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் “ஆனந்தா. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார். வார்த்தைகள் பலவீனமானவை இவர் என்ன செய்ய முடியும்..?” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். துப்பியவனுக்கு அன்று முழுவதும் குற்ற உணர்வால் நித்திரையே வரவில்லை. அடுத்த நாள் காலை புத்தரை தேடியலைந்து கண்டு அவரது காலில் விழுந்து அழுதான்.. அப்போதும் புத்தர் ஆனந்தாவை பார்த்து சென்னார். “இன்றும் இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார் ஆனந்தா..! ஆனால் வார்த்தைகள் பலவீனமானதால் இச்செயலை செய்துவிட்டார்..!” என்றார். அவன் எழுந்து கேட்டான். “நான் துப்பிய போது நீங்கள் ஏன் திருப்பி ஒரு வார்த்தைகூட ஏசவில்லை..?” என்று. அப்போது புத்தர் அழகான பதில் சொன்னார். “நீ எண்ணியது போல் நடக்க நான் என்ன உன் அடிமையா.. ?”
உனக்கு நீயே கேட்டுப்பார்
ஒரு கனவை நீங்கள் மட்டும் கண்டுகொண்டிருப்பது வெறும் கனவாகத்தான் இருக்கும். கனவோடு இணைந்து பயணம் செய்தால்தான் அது நிஜமாகும்’ என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த நடிகையும் அமைதிப் போராளியுமான யோகோ ஓனோ (Yoko Ono). இதற்கு எல்லோருக்கும் தெரிந்த சாவியைத் தொலைத்த முல்லர்வின் கதையை உதாரணமாகச் சொல்லலாம். ஒருநாள் ஊருக்கு வெளியே எதையோ தேடிக்கொண்டிருந்தாராம் முல்லா நஸ்ருதீன். ஒருவர் அவரிடம், என்ன தேடுகிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். என் சாவியைத் தேடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார் முல்லா. எங்கே தொலைத்தீர்கள்?’ என்று அவர் கேட்டதற்கு, வீட்டுக்கருகில்’ என்று பதில் சொன்னாராம். ஆச்சர்யப்பட்டுப் போன அந்த ஊர்க்காரர், வீட்டுக்கருகே சாவியைத் தொலைத்துவிட்டு இங்கே வந்து தேடுகிறீர்களே?’ என்றாராம். இங்கேதானே வெளிச்சமாக இருக்கிறது?’ என்று ஒரு போடு போட்டாராம் முல்லா. இது போலத்தான். நம்மில் பலருக்கும் பல லட்சியங்கள் இருக்கும்; அதை அடைவதற்கான முயற்சியில்தான் பலரும் தோற்றுப் போகிறார்கள். வாழ்வில் நம் இலக்கை அடைவது எப்படி என்று யாரும் வந்து நமக்குப் பாடம் எடுக்க மாட்டார்கள்; கற்றுக் கொடுக்கவும் மாட்டார்கள். நாம்தான் நமக்கான குறிக்கோளை வகுத்துக்கொண்டு இலக்கை அடையப் போராட வேண்டும். அதற்கு அத்தியாவசியமாக ஒன்று வேண்டும். அது இருந்தால் வெற்றி எளிது. அது என்ன? தன்னம்பிக்கை. நம் பலம் நமக்கே தெரியாதது. அதனால்தான் வெற்றி கைநழுவிப் போகிறது; பலரால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது. அந்த யதார்த்தத்தை விளக்குகிறது இந்தக் கதை.
ஒரு மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. அது என்ன கனவு என்பது இங்கே முக்கியமில்லை. வேண்டுமானால், சினிமாவில் ஹீரோவாக வேண்டும்’, சென்னை அண்ணாசாலையில் எல்.ஐ.சி மாதிரி ஒரு கட்டடம் கட்டி அதற்கு உரிமையாளராக வேண்டும்’, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட வேண்டும்’. இப்படி ஏதோ ஒரு பெருங்கனவு என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார்.
ஒருநாள் தன் அம்மாவோடு அவர் கிளினிக்குக்குச் செல்லவேண்டியிருந்தது. அது வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால், இருவரும் நடந்தே சென்றார்கள். மருத்துவரைப் பார்த்து, வழக்கமான சில பரிசோதனைகளை அம்மா செய்துகொண்ட பிறகு இருவரும் வீடு திரும்பினார்கள். வழியில் அவர், அம்மாவிடம் மௌனப் பேச்சை ஆரம்பித்தார். அம்மா, என் கனவு என்னனு உங்களுக்குத் தெரியும்தானே?’’ ஆமாம்ப்பா. அதுக்கென்ன இப்போ…’’ இல்லம்மா. அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை எனக்குக் குடுங்களேன்…’’ அம்மா சொன்னார்… உனக்கு உதவி செய்யறதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனா, அந்த அளவுக்கு சக்தி என்கிட்ட இப்போ இல்லை. இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட ஏற்கெனவே குடுத்துட்டேனேப்பா.’’
அந்த மனிதர் இதைக் கேட்டு துவண்டு போனார். ஆனால், கனவை நிறைவேற பலம் வேண்டுமே… யாரிடமிருந்தாவது, எந்த வழியிலாவது பெற்றுத்தானே ஆக வேண்டும்? ஒவ்வொருவரிடமாகக் கேட்டுப் பார்ப்பது என்று முடிவு செய்துகொண்டார். தனக்குத் தெரிந்த ஒரு ஞானியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். ஐயா. எனக்கு சக்தி வேண்டும். அது எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார். ஞானி சொன்னார், இமயமலையில் நமக்கு வேணுங்கிற சக்தியெல்லாம் கிடைக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். நானும் இமயமலைக்குப் போயிருக்கேன். ஆனா, அங்கே பனியையும் குளிரையும் தவிர வேற எதையும் நான் பார்த்ததில்லை. எனக்கும் சக்தி எங்கே கிடைக்கும்னு சரியா சொல்லத் தெரியலையேப்பா…’’
அடுத்து அந்த மனிதர் ஒரு துறவியிடம் போனார். விஷயத்தைச் சொன்னார். குருவே, என் கனவு நிறைவேறுவதற்கான சக்தி எனக்கு எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.
நீ செய்யும் பிரார்த்தனையால்தான் சக்தி கிடைக்கும். அதே நேரத்தில் நீ கண்டுகொண்டிருப்பது தவறான கனவு என்றால் அதையும் நீ தெரிந்துகொள்வாய். எனவே, அமைதியாக பிரார்த்தனையில் ஈடுபடு’’ என்றார் துறவி.
அவர் சொன்னது ஒரு வழி என்றாலும், அதுவும் அந்த மனிதருக்குக் குழப்பத்தையே தந்தது. ஏதேதோ சிந்தனையில் வீடு நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது வழியில் அவருக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார். என்னப்பா. ஏதோ யோசனையோட போற மாதிரி தெரியுது!’’ அவரிடமும் அந்த மனிதர் விஷயத்தைச் சொன்னார். என் கனவு நிஜமாறதுக்கு சக்தி வேணும். அது எங்கே கிடைக்கும்னு ஒவ்வொருத்தரா கேட்டுக்கிட்டிருக்கேன். ஆனா, யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியலை.’’ ஒருத்தரால கூடவா முடியலை?’’ ஆமா.’’ அந்த முதியவர் கேட்டார்! சரி, உனக்கு நீயே கேட்டுப் பார்த்துக்கிட்டியா?’’ அந்த மனிதருக்கு இதைக் கேட்டதும் ஏதோ தெளிவு கிடைத்ததுபோல இருந்தது.
ஒரு பொருளின் இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஊர் சிரித்தது
எங்கும் ஊர் சிரிக்காது. ஊரிலுள்ள மக்கள்தான் சிரிப்பார்கள். நேரிடையாக மக்கள் சிரிப்பதைச் சொல்லாமல் மக்கள் வசிக்கின்ற (தொடர்புடைய) ஊரைச் சொல்லியது ஆகும்.
“பொருள்முதல் ஆறோடு அளவை சொல்தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத்
தொன்முறை உரைப்பன ஆகுபெயரே” – நன்னூல்.290
என்பார் நன்னூல் ஆசிரியர் பவனந்தி முனிவர்.
ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
1.பொருளாகு பெயர்
ஒரு முழுப்பொருளின் பெயர் தன்னைச் சுட்டாது அதன் உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகுபெயர் எனப்படும். இதனை முதலாகுபெயர் எனவும் கூறுவர்.
(எ.கா) தமிழரசி மல்லிகை சூடினாள்
இத்தொடரில் உள்ள மல்லிகை என்னும் சொல் வேர், கொடி. இலை, பூ ஆகிய உறுப்புகள் அனைத்தும் சேர்ந்த முழுப்பொருளைக் குறிக்கிறது ஆனால் அடுத்துள்ள சூடினாள் என்னும் பயனிலையால் மல்லிகை என்னும் பெயர், முழுப்பொருளை உணர்த்தாது, அதன் ஓர் உறுப்பாகிய மலரை மட்டும் உணர்த்துகிறது. எனவே இது பொருளாகு பெயர்.
(எ.கா) பூசணிச்சாம்பார் சுவையாக இருந்தது.
2. இடவாகு பெயர்
ஓர் இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது ‘இடவாகு பெயர்’ எனப்படும்.
(எ.கா) கிரிக்கெட்டில் இந்தியா வென்றது.
இந்தச் சொற்றொடரில் உள்ள இந்தியா என்னும் இடப்பெயர் அப்பெயரால் அமைந்த நாட்டைக் குறிக்காது அந்நாட்டிற்காக விளையாடிய வீரர்களைக் குறிக்கிறது. எனவே இது இடவாகு பெயர் ஆகும்.
(எ.கா) காஞ்சிபுரம் என்ன விலை?
3. காலவாகுபெயர்
காலப்பெயர் காலத்தோடு தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது காலவாகுபெயர் எனப்படும்
(எ.கா) மார்கழி சூடினாள்
மார்கழி என்னும் சொல் தமிழ்த்திங்களைக் குறிக்கும் காலப் பெயராகும். ஆனால் சூடினாள் என்னும் குறிப்பால் மார்கழித் திங்களில் மலர்ந்த மலரை (டிசம்பர் பூ எனப்படும் நீலக்கனகாம்பரம்) உணர்த்துகிறது. எனவே இது காலவாகுபெயர் ஆகும்.
(எ.கா) கோடை நன்றாக விளைந்துள்ளது.
4.சினையாகு பெயர்
ஒரு சினையின் (உறுப்பு) பெயர், அதனோடு தொடர்புடைய முழுப்பொருளுக்கு ஆகி வருவது சினையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) ஆசிரியர் தலைக்கு ஒரு வினாத்தாள் தந்தார்.
‘தலை’ என்பது நம்முடலின் ஓர் உறுப்பு இத்தொடரில் உள்ள ‘தலை’ என்னும் உறுப்பின் பெயர், ஆனால் அடுத்துள்ள குறிப்புச் சொற்களால் மாணவனைக் குறிக்கின்றது. எனவே இது சினையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்கு ஒரு பழம் கொடு
5. பண்பாகு பெயர்
ஒரு பண்புப்பெயர், அப்பண்பைக் கொண்ட பொருளுக்கு ஆகி வருவது பண்பாகு பெயர் எனப்படும். இது ‘குணவாகு பெயர்’ என்றும் வழங்கப் பெறுகிறது.
(எ.கா) இளங்கோ இனிப்பு வழங்கினான்
இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப்பெயர், ‘வழங்கினான்’ என்னும் குறிப்பால் இனிப்புச் சுவையுடைய பொருளை உணர்த்துகிறது. எனவே இது பண்பாகுபெயர் எனப்படும்
(எ.கா) செவலையை வண்டியில் பூட்டு
6. தொழிலாகுபெயர்
ஒரு தொழிற்பெயர், அத்தொழிலிருந்து பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது தொழிலாகு பெயர் எனப்படும்.
(எகா) அழகன் அவியல் உண்டான்.
இத்தொடரில் அவியல் என்னும் சொல் காய்கறிகளை என்னும் பொருளைத் தருகிறது. எனவே இது தொழிலாகுபெயர் எனப்படும். அவித்தலாகிய தொழிலைக் குறிப்பதாகும். ஆனால் ‘உண்டான்’ என்னும் பயனிலையால் அவிக்கப்பட்ட காய்கறியினை உண்டான்.
(எ.கா) பொரியல் சுவையாக இருந்தது.
7. தானியாகுபெயர்
ஓர் இடப்பெயர். அவ்விடத்திலுள்ள பொருளுக்கு ஆகிவருவது இடவாகுபெயராகும். ஓரிடத்திலுள்ள பொருள் அவ்விடத்திற்கு ஆசி வருவது தானியாகுபெயர் எனப்படும்.
(எ.கா) பாலை வண்டியில் ஏற்று
பால் என்னும் நீர்மப்பொருள் ஏற்றும் என்னும் குறிப்பால், பால் வைக்கப்பட்டிருக்கும் தானமாகிய (இடமாகிய) குடத்திற்கு ஆகி வந்து தானியாகு பெயர் ஆயிற்று (தானம் – குடம், தானிக் பால்
8. உவமையாகு பெயர்
உவமானப் பெயர், தொடர்புடைய உவமேயப் பொருளுக்கு ஆகி வருவது உவமையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) காளை வந்தான்
காளை மாட்டைக் குறிக்கும் பெயராகிய காளை என்பது காளை மாடு போன்ற வலிமையும் வீரமும் வாய்ந்த ஆண் மகனுக்கு ஆகி வந்தது. காளை போன்றவன் வந்தான். எனவே இது உவமையாகுபெயர் ஆயிற்று
(எ.கா) பாவை ஆடினாள்
9. கருவியாகுபெயர்
ஒரு கருவியின் பெயர், அதனால் உண்டாகிய காரியப் பொருளுக்கு ஆகி வருவது கருவியாகுபெயர் எனப்படும்.
(எ.கா) குழல்கேட்டு மகிழ்ந்தான்.
குழல் என்னும் இசைக் கருவியின் பெயர், அதனால் உண்டான இசைக்கு ஆகிவந்து குழலோசை கேட்டு மகிழ்ந்தான் என்றானதால், இது கருவியாகுபெயர் ஆயிற்று
10. காரியவாகு பெயர்
ஒரு காரியத்தின் பெயர், அது உண்டாவதற்குக் காரணமான கருவிப் பொருளுக்கு ஆகிவருவது காரியவாகுபெயர் எனப்படும். இது கருவியாகு பெயர்க்கு எதிர்மறையாகும்.
(எ.கா) களவியல் படித்தான்.
களவியல் என்றும் காரியத்தின் பெயர் அதனை உணர்த்துவதற்குக் கருவியாகிய நூலிற்கு ஆகி வந்தது, களவியல் என்னும் அகத்திணை இலக்கணத்தைப் படித்தான் என்றானதால் இது காரியவாகு பெயர் ஆயிற்று.
11. கருத்தா ஆகுபெயர்
ஒரு கருத்தாவின் பெயர், அவரால் இயற்றப்பட்ட நூலிற்கு ஆகிவருவது கருத்தா ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) அழகனுக்குத் திருவள்ளுவர் மனப்பாடம்
திருக்குறளை எழுதிய கருத்தாவின் பெயர் திருக்குறள் என்பதாகும். இத்தொடரில் திருவள்ளுவர் என்னும் பெயர் அவரைக் குறிக்காது அவரால் எழுதப்பட்ட காரியமாகிய திருக்குறளுக்கு ஆகிவந்ததால் இது கருத்தாகுபெயர் ஆயிற்று.
12. சொல்லாகுபெயர்
ஒரு சொல்லின் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது சொல்லாகுபெயர் எனப்படும்.
(எ.கா) தம்பி என் சொல்லைக் கேட்டான்
’சொல்’ என்னும் பெயர், கேட்பான் என்னும் குறிப்பால், எழுத்துகளாகிய சொல்லைக் குறிக்காது அறிவுரைக்கு ஆகிவந்ததால் சொல்லாகுபெயர் ஆயிற்று.
(எ.கா) பாட்டுக்கு உரை எழுதுக.
13. எண்ணல் அளவை ஆகுபெயர்
எண்ணைக் குறிக்கும் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எண்ணல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
இத்தொடரில் உள்ள நான்கு, இரண்டு என்னும் சொற்கள் எண்ணிக்கைப் பொருளை உணர்த்தாது. நான்கு அடிகளாலான நாலடியாரையும், இரண்டடிகளாலான திருக்குறளையும் குறிக்கின்றன. இவ்வாறு எண்ணலளவைப் பெயர் தொடர்புடைய நூல்களுக்கு ஆகிவருவதால் இஃது எண்ணலளவையாகுபெயர் எனப்படும்.
(எ.கா) தலைக்கு ஒன்று கொடு
14. எடுத்தல் அளவை ஆகுபெயர்
எடுத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது எடுத்தல் அளவை ஆகுபெயர்.
(எகா) கிலோ என்ன விலை?
‘கிலோ’ என்னும் எடுத்தலளவைப் (நிறுத்தலளவை) பெயர், தொடர்புடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு, சர்க்கரை ) ஆகி வந்ததால் இது எடுத்தலளவையாகு பெயர் எனப்படும்.
15. முகத்தல் அளவை ஆகுபெயர்
முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு ஆகிவருவது முகத்தல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) இரண்டு லிட்டர் கொடு
லிட்டர் என்னும் முகத்தல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (பால், மண்ணெண்ணெய்) ஆகி வந்தது. எனவே இது முகத்தளலவையாகு பெயர் எனப்படும்.
16. நீட்டல் அளவை ஆகுபெயர்
நீட்டல் அளவைப் பெயர் தொடர்புடைய பொருளுக்கு ஆகி வருவது நீட்டல் அளவை ஆகுபெயர் எனப்படும்.
(எ.கா) சட்டைக்கு இரண்டு மீட்டர் வேண்டும்.
மீட்டர் என்னும் நீட்டல் அளவைப் பெயர், தொடர்புடைய பொருளுக்கு (துணி) ஆகி வந்தது. எனவே இது நீட்டல் அளவையாகுபெயர் எனப்படும்.
தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு. மற்ற இடங்களில் ஒற்று போட வேண்டும் என்ற அவசியமில்லை.
1.அது, இது, அவை, இவை என்னும் சுட்டுச்சொற்களின் பின்னும் எது ? யாது ? எவை ? என்னும் வினாச்சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + போயிற்று = அது போயிற்று
இது + பறந்தது = இது பறந்தது
அவை + பறந்தன = அவை பறந்தன
எது + கண்டது = எது கண்டது ?
யாது + சொல் = யாது சொல் ?
எவை + போயின = எவை போயின?
2. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + பழங்களா = அத்தனை பழங்களா
இத்தனை + பூக்களா = இத்தனை பூக்களா
எத்தனை + பெண்கள் = எத்தனை பெண்கள்
3.வினாவை உணர்த்தும் ஆ,ஓ,ஏ,யா என்னும் வினா எழுத்துகளில் வல்லினம் மிகாது.
அவளா + தைத்தாள் = அவளா தைத்தாள்
இவளோ +போனாள் = இவளோ போனாள்
அவனே + செல்வான் = அவனே செல்வான்
4.சில, பல என்னும் சொற்களுக்குப் பின் வல்லினம் மிகாது.
சில + குடிசைகள் = சில குடிசைகள்
பல + சொற்கள் = பல சொற்கள்
5.விளிப்பெயர், வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் பின் வல்லினம் மிகாது.
கண்ணா + கேள் = கண்ணா கேள்
வேலா + சொல் = வேலா சொல்
வாழ்க + தமிழ் = வாழ்க தமிழ்
6.எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது.
நாய் + போனது = நாய் போனது
அழகன் + படித்தான்= அழகன் படித்தான்
7.வினைத்தொகையில் வல்லினம் மிகாது.
ஊறு + காய் = ஊறு காய்
ஆடு + கொடி = ஆடு கொடி
விரி + கதிர் = விரி கதிர்
8.இரண்டாம் வேற்றுமைத்தொகை மறைந்து வந்தால் வல்லினம் மிகாது.
தமிழ் மொழியில் எழுதும்போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதுவதே மிக நன்று. பிழைகளோடு எழுதினால் நாம் சொல்ல வந்த கருத்துக்கு மாறாகவும் வேறொரு செய்தியாகவும் மாறக்கூடும். அதனால் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுதல் வேண்டும்.
இவற்றில் முதலாவதாகச் சந்திப்பிழைகளைப் பார்க்கலாம். தேவையான இடத்தில் மட்டுமே ஒற்றுகளைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒருசில விதிமுறைகளும் உண்டு. அவற்றை மட்டும் பார்த்தால் இச்சந்திப்பிழைகளைத் தவிர்க்கலாம்.
இதற்கு நாம் இரண்டு இடங்களை மட்டும் உற்று நோக்கினால் போதுமானது.
1.நிலைமொழி மற்றும் நிலைமொழியின் ஈற்றெழுத்து
2.வரும்மொழியின் முதலெழுத்து க,ச,த,ப – ஆக இருக்க வேண்டும்.
( க்,ச்,ட்,த்,ப்,ற் என்ற 6 வல்லின எழுத்துகளில் க,ச,த,ப என்ற 4 எழுத்துகளும் வரும்மொழியில் முதலாவதாக வந்தால் மட்டுமே அவ்விடத்தில் ஒற்று மிகும் என்பது விதி. அதனால்தான் இதற்கு வல்லினம் மிகும் எழுத்துகள் என்கிறோம். அந்த 4 எழுத்துகளின் ஒற்று க்,ச்,த்,ப் என்று வரும்)
கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)
இராமன் + ஐ என்பதில், நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு ன் +ஐ = னை என்று வருகிறது. வரும்மொழியின் முதலில் ”க” என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில் ”க்” என்ற ஒற்று வரும்.
கீழ்க்கண்ட அனைத்து விதிகளும் நிலைமொழிக்கு மட்டுமே பொருந்தும். வரும்மொழியில் முதலெழுத்து – க,ச,த,ப என இருக்கிறதா என்பதை மட்டும் பார்த்தால் போதும். வல்லினம் மிகும் இடங்கள், ஒற்று மிகும் இடங்கள் என்றும் அழைப்பர்.
1.நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்க, வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும். (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
நிலா + சோறு = நிலாச்சோறு
மழை + காலம் = மழைக்காலம்
பனி + துளி =பனித்துளி
2.அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
அ+ குடம் = அக்குடம்
இ+ புத்தகம் =இப்புத்தகம்
உ + சிறுவன் =உச்சிறுவன்
எ + தொழில் =எத்தொழில்
3.அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
அந்த + கிணறு = அந்தக்கிணறு
இந்த + தோட்டம் = இந்தத்தோட்டம்
எந்த + செயல் = எந்தச்செயல்
4.அப்படி, இப்படி எப்படி என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.
அப்படி + கூறினான் = அப்படிக்கூறினான்
இப்படி + சொன்னான் = இப்படிச்சொன்னான்
எப்படி + தந்தான் = எப்படித் தந்தான்
5.அங்கு, இங்கு, எங்கு என்னும் சொற்களின் பில் வல்லினம் மிகும்.
அங்கு +சென்றான் =அங்குச்சென்றான்
இங்கு +போனான் = இங்குப்போனான்
எங்கு + தேடினான் = எங்குத்தேடினான்
6.ஆறாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.
தாமரை+ பூ = தாமரைப்பூ (தாமரையின் பூ)
குதிரை +கால் = குதிரைக்கால் (குதிரையினது கால்)
7. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும்
குடி +பிறந்தார் = குடிப்பிறந்தார் (குடியின்கண் பிறந்தார்)
வழி +சென்றார் = வழிச்சென்றார் (வழியின்கண் சென்றார்)
அந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போதெல்லாம் சம்பத்திற்கு ஒரு உந்துதல் ஏற்படும். ‘வினோத விருப்பங்கள்’ என்ற தலைப்பில், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று. வாரந்தோறும் நடத்தும் நிகழ்ச்சி அது. நேயர்களின் வித்தியாசமான, நிறைவேறாத ஆசைகளை ஈடேற்றித் தருவதே அதன் நோக்கமாக இருந்தது. நேயர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது. தன் ஆசையை, லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள சம்பத்திற்கு வேறு வழி தோன்றவில்லை. தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எழுதி ஒப்புதலும் வந்துவிட்டது. நகரின் பெரிய துணிக்கடை ஒன்று செலவுகளை ஏற்றுக் கொள்ள முன்வந்தது. அவன் மிகுந்த எதிர்பார்ப்போடு அக்டோபர் ஏழாம் தேதிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்.
ராமநாதனுக்கு சம்பத் மட்டுமே வாரிசு. அவர் அரசு ஊழியத்திலிருந்தபோதே மகனுக்கு மணமுடித்து வைத்தார். பணியாற்றிக் கொண்டிருந்த வரை எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சங்களோடு ஓய்வு பெற்ற பிறகுதான் அவருக்கு மருமகளின் சுயரூபம் புரிய ஆரம்பித்தது. பணத்தை சம்பத் பெயரில் வங்கியில் இட்டு வைக்க வேண்டும் என்ற பரிணாமத்திற்கு வளர்த்துவிட்டாள். மனைவியின் என்பதை ஒரு வேண்டுகோளாக ஆரம்பித்து, கட்டளை செயல்கள் அனைத்தும் சரிதான் என்ற நிலைக்குப் போ யிருந்த சம்பத் தந்தையை வற்புறுத்த ஆரம்பித்தான். பணம் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்வரைக்குதான் தனக்குப் பாதுகாப்பு என்பது ராமநாதனின் அசைக்க முடியாத சித்தாந்தம். கடைசிவரை அவர் மசியாததால் மருமகள் அவரைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தாள். ஒரு தினம் கழிவதற்குள் அவர் பல ரூபங்களில் அவமதிப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது.
பொறுக்க முடியாத கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதென முடிவு செய்தார். நகரின் ஒதுக்குப்புறமாய் இருந்த முதியோர் காப்பகம், சரணாலயம் அவருக்கு அன்போடு அடைக்கலம் கொடுத்தது. மாதா மாதம் வங்கி பிலிருந்து கிடைத்த வட்டியை காப்பக நிர்வாகத்திற்கு அளித்து வந்தார். வாழ்க்கை நிம்மதியாய் நகர்ந்து கொண்டிருந்தது. சம்பத் அதை எதிர்பார்க்கவில்லை. எப்படியும் தன் வற்புறுத்தல்கள் தந்தையைப் பணியவைத்துவிடும் என்றிருந்தவனுக்கு அவரின் மாறுதலான முடிவு அதிர்ச்சிதான். அதுவும் சாகும்வரை அவன் கையால் ஒரு பருக்கை கூட உண்ணப் போவதில்லை என்றும், அவன் தனக்குக் கொள்ளி போடக் கூடாதெனவும் தெருவில் நின்று பிரகடனப்படுத்தி வெளியேறுவார் என்பது அவன் யூக எல்லைக்குள்ளேயே வராதது. ஒரு வேளையாவது அவருக்கு உணவிட வேண்டும் என்பதை ஒரு லட்சியமாக, வைராக்கியமாக மனதிற்குள் வளர்த்து வந்தவனுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒரு பெரிய வாய்ப்பாகிவிட்டது.
அன்று ஏழாம் தேதி, சரணாலயம் பரபரப்பாக இருந்தது.
“நம்ம நேரத்தப் பார்த்தியா.. ஸ்டார் ஹோட்டல்ல லஞ்ச் சாப்பிடப் போகிறோம். டீவில இன்னொரு நாள் அதப் பார்க்கப் போறோம்… நெனச்சிப் பாத்திருப்பமா?”
”ஏதோ ஒரு புண்ணியவான் மனசு வெச்சதால இது நடக்குது.. அவன் நல்லாயிருக்கட்டும்…”
இரு முதியவர்கள் புறப்பட்டவாறே பேசிக் கொண்டிருந்தனர். நகரின் பிரபலமான நட்சத்திர உணவு விடுதியின் வாகனம், இருபத்தி இரண்டு முதியவர்களையும், காப்பக மேலாளர் நடேசனையும் சுமந்து கொண்டு விரைந்தது.
உணவு விடுதியில் நுழைந்த நொடியிலிருந்தே அவர்களால் பிரமிப்பிலிருந்து மீள முடியவில்லை. திரைப்படங்களில் மட்டுமே காணக் கிடைத்தவை, நேரில் அனுபவிக்கவும் கிடைத்த விந்தையை அவர்களால் நம்ப முடியவில்லை. அலங்காரமான உணவுக் கூடத்தில் விருந்து துவங்கியது. பெயர் தெரியாத பதார்த்தங்களையெல்லாம் ருசித்து முடித்தனர். அனைவருக்கும் சமமான விதத்தில் பண்டங்கள் பரிமாறப்பட்டன. யாருக்கும் கூடுதலோ, குறைவோ இன்றி சீரான முறையில் கவனிப்பு இருந்தது.
ஒரு வழியாய் விருந்து முடிந்ததும், அவர்களுக்கு ஆவல் மேலிட்டது. தங்கள் பொருட்டு அத்தனை கருணை சிந்திய அந்த மனிதன் யாரென் அறிந்து கொள்ளத் துடித்தனர்.
சம்பத் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டபோது, ஆரவாரம் எழுந்தது. பலரும் அவனைப் பாராட்ட, மனம் குளிர்ந்தது. வெற்றிப் பெருமிதத்தோடு தந்தையை நோக்க, அவர் சலனமின்றி நின்று கொண்டிருந்தார். தொலைக்காட்சி நிறுவனத்தினர், துணிக்கடை அதிபரையும் அறிமுகப்படுத்த அவரும் பாராட்டு மழையில் நனைந்தார். உணவுக் கூடத்தின் மேலாளர், பளபளத்த புத்தக அட்டைக்குள் கட்டணச் சீட்டை வைத்து துணிக்கடை அதிபரிடம் நீட்டினார். முன்பே செய்து கொண்டிருந்த ஏற்பாட்டின்பேரில், மொத்த தொகை இருபத்து மூன்றால் வகுக்கப்பட்டது. ஒருவருக்கான கட்டணத்தை மட்டும் சம்பத் செலுத்த, மீதிக் கட்டணம் துணிக்கடை அதிபரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வினோதமான அந்த நடவடிக்கைப் பற்றி அனைவரும் வியப்போடு உரையாட ஆரம்பித்தனர். தன் லட்சியம் நிறைவேறியதாக சம்பத் சொன்னதை, புகைப்படக் கருவி நெருக்கத்தில் பதிவு செய்ய படப்பிடிப்பும் முடிந்தது. முதியவர்கள் விடைபெற்றுக் கொண்டு மீண்டும் வாகனத்தை நிரப்பினர்.
அடுத்த நாள் காப்பக மேலாளர் அறைக்கு வந்தார் ராமநாதன்.
சார்… உங்க உதவிய எப்பவும் மறக்க முடியாது.. கடைசிவரைக்கும்… நம்ம பேசி வெச்சுகிட்ட மாதிரி நடந்து சம்பத்த நம்ப வெச்சிட்டிங்க.. தான் ஜெயிச்சட்டதா இன்னும் நெனச்சிக்கிட்டிருப்பான்… அவனப் பொறுத்தவரை நா தோத்தவனாகவே இருந்துட்டுப் போறேன்…”
“அட நீங்க வேற… உங்களுக்குப் பரிமாறுன எல்லா அயிட்டத்தையும் நானும் பீட்டரும் சாப்பிட முடியாம சாப்பிட்டு வயிறு ஒரு வழியாயிடுச்சு… பீட்டர் இன்னும் எழுந்திருச்சே வராம படுக்கையிலேயே கெடக்கறாரு..”
சாரி சார்… எனக்கு வேற வழி தெரியர… அவனோட குறுக்கு வழி திட்டத்த நீங்க முன்னாடியே தெரிஞ்சுகிட்டு எங்கிட்ட சொன்னதுக்கப்பறம்.. மொதல்ல ஹோட்டலுக்கே வராம அவாய்ட் பண்ணிடலாம்னுதான் நெனச்சேன் அப்படி செஞ்சிருந்தா அவன் ஏமாந்து போயிருப்பான்… ஆனா இப்ப… அவனோட எண்ணம் ஈடேறினதா ஒரு திருப்தி வந்திருக்கும்… அது போதும்… என்னோட வைராக்கியத்துக்கும் எந்த பங்கமும் ஏற்படாம காப்பாத்திட்டிங்க… ரொம்ப நன்றி…”
“பரவால்ல சார்… ஆனா… எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு… என்னிக்காவது உங்க பையன் இங்க வந்து உங்கள கூட்டிக்கிட்டுப் போவான் பாருங்க…“
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும்.
(உ.ம்) கபிலன் பாராட்டினார்.
கபிலனைப் பாராட்டினர்.
முதல் சொற்றொடரில் பாராட்டியவர் கபிலன் எனப் பொருள் தருகிறது. இரண்டாவது சொற்றொடரில் ‘ஐ’ எழுத்தைச் சேர்த்த பிறகு பாராட்டப்பட்டவன் கபிலன் எனும் பொருளில் முழுமையாக வேறுபடுகிறது.
இதையே வேற்றுமை என்கிறோம். ‘ஐ’ என்பது இங்கு ‘வேற்றுமை உருபு’ எனப்படுகிறது.
பெயர்ச் சொல்லின் இறுதியில் அமைந்து பொருள் வேறுபாட்டைச் செய்யும் இடைச் சொற்கள் வேற்றுமை உருபுகள் எனப்படுகின்றன.
வேற்றுமை – வகை பிரித்தல் எனலாம்.
பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவதன் அடிப்படையில் வேற்றுமையை எட்டு வகைப்படுத்துவர். அவை
1. முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை)
2. இரண்டாம் வேற்றுமை
3. மூன்றாம் வேற்றுமை
4. நான்காம் வேற்றுமை
5. ஐந்தாம் வேற்றுமை
6. ஆறாம் வேற்றுமை
7. ஏழாம் வேற்றுமை
8. எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
1.முதல் வேற்றுமை
பெயர்ச்சொல் இயல்பாக வந்து எழுவாயாக நின்று, பயனிலையைக் கொண்டு முடிவது ‘முதல் வேற்றுமை` எனப்படும். இதனை ‘எழுவாய் வேற்றுமை’ எனவும் கூறுவர்.
(உம்) தமிழ்ச் செல்வன் பம்பரம் விளையாடினான்.
தமிழ்ச் செல்வன் தலைவர்.
தமிழ்ச் செல்வன் யார்?
மேற்கண்ட தொடர்களில் தமிழ்ச் செல்வன் என்பது இயல்பான பெயராய் நிற்கிறது பயனிலை கொண்டு முடிகிறது. எனவே இது முதல் வேற்றுமை அல்லது எழுவாய் வேற்றுமை எனப்படுகிறது.
முதல் வேற்றுமைக்கு வேற்றுமை உருபு கிடையாது
2. இரண்டாம் வேற்றுமை
ஒரு பெயர்ச் சொல்லின் பொருளைச் செயப்படுபொருளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமை எனப்படும். இதனை ‘செயப்படுபொருள் வேற்றுமை’ என்றும் வழங்குவர்.
(உம்) மாடு பயிரை மேய்ந்தது.
இத்தொடரிலுள்ள பயிர் என்னும் பெயர்ச்சொல் ‘ஐ’ என்னும் உருபை ஏற்றுச் செயப்படுபொருளாக வேறுபடுகின்றது. இவ்வாறு பெயர்ச் சொல்லினது பொருளைச் செயப்படுபொளாக வேறுபடுத்துவது இரண்டாம் வேற்றுமையாகும்.
இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’
ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை என்னும் ஆறு வகையினவாக இரண்டாம் வேற்றுமை அமையும்.
உதாரணம்
1.அழகன் சிலையைச் செய்தான் – ஆக்கல்
2.அதியன் பகைவரைக் கொன்றான் – அழித்தல்
3.தேன்மொழி ஊரை அடைந்தாள் – அடைதல்
4.கண்ணன் சினத்தை விடுத்தான் – நீத்தல்
5.எழிலன் காளையைப் போன்றவன் – ஒத்தல்
6.கார்மேகம் செல்வத்தை உடையவன் – உடைமை.
3.மூன்றாம் வேற்றுமை
திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது.
மரம் வாளால் அறுபட்டது.
ஆசிரியரொடு மாணவன் வந்தான்.
தாயோடு மகளும் வந்தாள்.
தந்தையுடன் மகனும் வந்தான்.
இத்தொடர்களில் ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் ஆகிய உருபுகள் வந்துள்ளன. இவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் ஆகும்.
‘உடன்’ என்பது பேச்சு வழக்கில் பயன்படும் சொல் உருபு ஆகும்.
இவை பெயர்ச் சொல்லின் பொருளைக் கருவிப் பொருளாகவும், கருத்தாப் பொருளாகவும், உடனிகழ்ச்சிப் பொருளாகவும் வேறுபடுத்துகின்றன.
கருவிப்பொருள்
தமிழால் வாழ்ந்தான் – வாழ்வதற்குத் தமிழ் கருவியாக இருந்தது என்பதை விளக்குகிறது.
அறத்தான் வருவதே இன்பம் – வருவதற்கு அறமே கருவி என்பதை இத்தொடர் உணர்த்துகிறது.
‘இச்செயலுக்கு இது கருவியாக இருந்தது’ என்பதை விளக்குவதற்காகப் பெயர்ச் சொற்களுடன் ஆல், ஆன் என்னும் உருபுகள் இணைந்துள்ளன. இதுவே கருவிப் பொருளில் அமைந்த மூன்றாம் வேற்றுமையாகும்.
கருத்தாப் பொருள்
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
கல்லணை கட்ட கரிகாலன் கருத்தாவாக இருந்தான் என்பதை கரிகாலன் என்னும் சொல்லோடு ‘ஆல்’ உருபு சேர்ந்து உணர்த்துகிறது. எனவே இது கருத்தாப் பொருள் ஆகும்.
கருத்தாப் பொருள் இருவகைப்படும்.
1. ஏவுதற் கருத்தா
2. இயற்றுதற் கருத்தா
1.ஏவுதற் கருத்தா
கரிகாலனால் கல்லணை கட்டப்பட்டது.
கல்லணையைக் கரிகாலன் தாமே கட்டவில்லை. உரிய பணியாட்களை ஏவி கல்லணையைக் கட்டி முடித்தான் என்பது இதன் பொருள். எனவே கரிகாலன் என்பது ‘ஏவுதற் கருத்தாட் ஆவார்.
2. இயற்றுதற் கருத்தா
தச்சரால் கட்டில் செய்யப்பட்டது
தச்சர் தாமே முயன்று கருவிகளைக் கொண்டு கட்டிலைச் செய்து முடித்துள்ளது விளங்குகிறது எனவே ‘தச்சர்’ இயற்றுதல் கருத்தா ஆவார்.
உடனிகழ்ச்சிப் பொருள்
உருபுகள், பெயர்ச்சொல்லின் பொருளை, உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டினால் அது உடனிகழ்ச்சிப் பொருள் எனப்படும்.
கடிதத்தொடு பணமும் வந்தது.
இத்தொடரில் உள்ள ‘ஒடு’ என்னும் உருபு கடிதமும், பணமும் உடன் வந்ததை உணர்த்துகிறது.
தலைவரோடு தொண்டரும் வந்தனர்.
இத்தொடரில் உள்ள ‘ஓடு’ என்னும் உருபு இருவரும் இணைந்து வந்தனர் எனப் பொருள் தருகிறது. இவ்வாறு ஒடு, ஓடு என்னும் உருபுகள் பெயர்ச் சொல்லின் பொருளை உடன் நிகழ்வுப் பொருளாகக் காட்டுவதால் ‘உடனிகழ்ச்சிப் பொருள்’ எனப்படும்.
சொல்லுருபு
வேற்றுமை உருபுகள் தவிர, சில சொற்களும் வேற்றுமைக்கு உருபுகளாக அமைவதுண்டு. அதுவே ‘சொல்லுருபு’ என அழைக்கப்படுகின்றது.
ஊசி கொண்டு தைத்தான்.
இடி மின்னலுடன் மழை பெய்தது.
இத்தொடர்களில் ‘கொண்டு’, ‘உடன்’ என்பவை மூன்றாம் வேற்றுமையின் சொல்லுருபுகளாகும்.
4.நான்காம் வேற்றுமை
தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள்.
தாய் என்னும் பெயர்ச்சொல் ‘கு` என்னும் உருபையேற்று, பொருள் வேறுபாட்டை உணர்த்தி வருகிறது. இதுவே நான்காம் வேற்றுமையாகும்.
நான்காம் வேற்றுமை உருபு ‘கு’
இது கோடற் பொருளை உணர்த்துகிறது. (கொடுப்பதை ஏற்றுக் கொள்வது ‘கோடல்’ ஆகும்)
நான்காம் வேற்றுமை உணர்த்தும் கோடற் பொருளானது கொடை, பகை, நேர்ச்சி, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என ஏழு வகைப்படும்.
உதாரணம் மன்னன் புலவருக்குப் பரிசளித்தான் – கொடை
புகைத்தல் மனிதனுக்குப் பகை – பகை
பாரிக்கு நண்பர் கபிலர் – நேர்ச்சி (நட்பு)
கண்ணனுக்கு அணிகலன் கண்ணோட்டம் – தகுதி
தயிருக்குப் பால் வாங்கினான் – அதுவாதல்
நாட்டின் விடுதலைக்குப் பாடுபட்டனர் – பொருட்டு
வளவனுக்குத் தங்கை வளர்மதி – முறை
சொல்லுருபுகள்
பணத்திற்காகத் தீயவை செய்யேல்
தலைவர் பொருட்டுச் செயலாளர் பேசினார்.
இவற்றில் ஆக. பொருட்டு என்பவை நான்காம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்.
5. ஐந்தாம் வேற்றுமை
பண்பாட்டில் சிறந்தது தமிழ்நாடு.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை.
இத்தொடர்களில் பண்பாடு, ஒழுக்கம் என்னும் சொற்களின் இல், இன் என்னும் உருபுகள் சேர்ந்து பொருளை வேறுபடுத்துகின்றன. இது ஐந்தாம் வேற்றுமை ஆகும்.
ஐந்தாம் வேற்றுமை உருபுகள் – ‘இல்’, ‘இன்’
இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது (காரணம்) என்னும் நான்கு பொருளை உணர்த்தி வரும்.
தலையின் இழிந்த மயிர் – நீங்கல்
கடலின் விரிந்த புகழுடையர் ஒப்பு
பழனியின் கிழக்கு மதுரை – எல்லை
வீணை வாசிப்பதில் வல்லவன் – ஏது.
சொல்லுருபுகள்
அன்பு ஊரிலிருந்து வந்தான்
வெண்ணிலா மேகத்தினின்று வெளிப்பட்டது.
மன்னனைவிடக் கற்றோரே சிறப்புடையர்.
தமிழைக் காட்டிலும் இனிமையான மொழியுண்டோ!
இத்தொடர்களிலுள்ள இருந்து, நின்று, விட, காட்டிலும் என்பவை ஐந்தாம் வேற்றுமைக்குரிய சொல்லுருபுகளாகும்
6. ஆறாம் வேற்றுமை
மன்னது கை
எனாது கை – அரிதாக வரும்
என கை இத்தொடர்களில் வரும் அது, ஆது, அ என்னும் உருபுகள் பெயர்ச்சொல்லைச் சேர்ந்து நின்று பொருள் வேறுபாட்டை உணர்த்துகின்றன. இது ஆறாம் வேற்றுமையாகும்.
இது கிழமைப் பொருளில் வரும் – (கிழமை -உரிமை)
ஆறாம் வேற்றுமை உருபுகள் – அது, ஆது, அ
சொல்லுருபுகள்
நண்பருடைய இல்லம்.
ஆசிரியருடைய இருக்கை.
இத்தொடர்களிலுள்ள உடைய என்பது ஆறாம் வேற்றுமைக்குரிய செல்லுருபாகும்.
7. ஏழாம் வேற்றுமை
கிளையின்கண் அமர்ந்துள்ள பறவை.
பெட்டிக்குள் பணம் இருக்கிறது.
பிறரிடம் பகை கொள்ளாதே.
தலைமேலுள்ள சுமை.
வீட்டில் சோலை உள்ளது.
மேற்கண்ட தொடர்களில் கிளை, பெட்டி, மாணவர்கள், தலை வீடு போன்ற பெயர்ச்சொற்களுடன் கண், உள், இடம், மேல், இல் என்னும் உருபுகள் சேர்ந்து பொருள் வேறுபாட்டைத் தருகின்றன. இதுவே ஏழாம் வேற்றுமை ஆகும்.
ஏழாம் வேற்றுமை உருபுகள்: இல், சண், இடம், உள், மேல் இந்த ஏழாம் வேற்றுமை இடப்பொருளை உணர்த்தும்.
ஐந்தாம் வேற்றுமையில் ‘இல்’ ஒப்புப் பொருளிலும் ஏதுப் பொருளிலும் வரும். ஏழாம் வேற்றுமையில் இடப் பொருளில் மட்டும் வரும். ‘இல்’ உருபை இட முடிவைக் கொண்டு வேற்றுமைப் பொருளை அறிய வேண்டும்.
(எ.கா.) பணம் பெட்டியில் இருக்கிறது – ஏழாம் வேற்றுமை.
பணத்தைப் பெட்டியிலிருந்து எடுத்தான் – நீங்கல் பொருள் – ஐந்தாம் வேற்றுமை
8. எட்டாம் வேற்றுமை
பெயர்ச்சொல் விளித்தல் பொருளில் வேறுபட்டு வருவது எட்டாம் வேற்றுமை ஆகும் இதனை ‘விளி வேற்றுமை’ என்றும் அழைப்பர்.(விளித்தல் – அழைத்தல்)
கண்ணா வா!
இத்தொடரில் ‘கண்ணன்’ என்ற சொல்லின் இறுதி எழுத்து கெட்டு அயல் (முந்தைய) எழுத்து நீண்டு, அழைத்தல் பொருளைத் தருகிறது. எனவே இது எட்டாம் வேற்றுமை ஆகும்.
படர்க்கையில் உள்ள பொருளை முன்னிலைப் பொருளாக்கி அழைக்க இவ்வேற்றுமை பயன்படுகிறது.
எட்டாம் வேற்றுமைக்கு உருபு கிடையாது.
வேற்றுமை உருபுகளின் வகைகள்
உருபுகள் வேற்றுமை
குமரன் பாடினான் உருபு இல்லை முதல் வேற்றுமை (எழுவாய்)
யாருமில்லாத சாலையில் வேகமாய்ப் போய்க்கொண்டிருந்தது அந்தக் கார். எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் இரண்டு குட்டிக்கரணம் போட்டு தலைக்கீழாய் மல்லாந்து விழுந்தது. காருக்குள் இருந்த கணவனும் மனைவியும் இரத்த வெள்ளத்தில் அவ்விடத்திலேயே உயிரை விட்டனர். லாரிக்காரன் பயம்கொண்டு வண்டியைத் திருப்பி எப்படியாவது தப்பித்துவிட வேண்டுமென வேகமாக ஓட்டினான். அந்தப் பக்கமாய் அப்போது வேறொரு கார் வந்து கொண்டிருந்தது. விபத்து நடந்த காருக்குப் பக்கத்தில் போய் வந்து கொண்டிருந்த கார் நிறுத்தப்பட்டது. அமைதியான சூழ்நிலை. அழுகுரல் இல்லை. பேச்சுக்குரல் இல்லை. சாலையில் பிற போக்குவரத்தும் இல்லை. அப்போது விழுந்து கிடந்த காருக்குள் பின்சீட்டிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. நின்று கொண்டிருந்த காரில் இருந்து இறங்கிய கணவனும் மனைவியும் அடிப்பட்ட காரில் இருந்து அந்த ஆண்குழந்தையைத் தூக்கிக் கொண்டனர். அந்தக் காரும் வேகமாய் வந்த திசையை நோக்கி சென்று கொண்டிருந்தது.
“என்னங்க… நமக்கு ரொம்ப வருசமா குழந்தை இல்ல. இந்தக் குழந்தைய நம்ம குழந்தையா நினைச்சி வளக்கலாங்க…” என்றாள் மனைவி.
”ஆமாம்! அந்தக் கார்ல வந்த கணவனும் மனைவியும் செத்துப்போயிட்டாங்க… சொந்தகாரங்க இருந்தாலும் இனிமேல் இவன் அநாதைதான். அவன நாம நல்லபடியா படிக்க வச்சு ஆளாக்கிடலாம். அதுவும் ஆண் குழந்தை வேற” என்றான் கணவன். அதன்பிறகு அந்தக் கார் எந்தத் திசையில் சென்றது என்றே தெரியவில்லை.
கொஞ்ச நேரத்தில் விபத்து நடந்த இடத்தில் கூட்டம் கூடியது. போலிஸ்சும் வந்தார்கள். ஆம்புலன்சும் வந்திருந்தது. பணியாட்கள் காருக்குள் மாட்டிக்கொண்டிருந்த ஒவ்வொருவராய் வெளியே எடுத்துக்கொண்டிருந்தனர். கணவனையும் மனைவியையும் வெளியே எடுத்தார்கள். மனைவி அமர்ந்திருந்த சீட்டின் கீழ்ப்பகுதியில் ஒரு குழந்தை மௌனாமாய்க் கண்ணை உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருந்தது. பணியாள் ஒருவன் டக்கென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.
“சார் இந்தக் குழந்தை மட்டும் உயிரோட இருக்கு!“ என்று போலிஸிடம் சொன்னான் அவன்.
சுற்றியிருந்தவர்கள் அனைவரும் அந்தக்குழந்தையை நோட்டமிட்டனர். குழந்தை ஸ்டேஷனுக்குத் தூக்கி வரப்பட்டது. இறந்தவர்களை எரித்தனர். உறவுகள் ஒவ்வொருவராய் பிரிந்து போயினர். பெண் குழந்தை அல்லவா! யார் கொண்டு போய் வயிற்றில் நெருப்பை சுமப்பது? என்றுகூட நினைத்திருக்கலாம். கடைசியில் கான்ஸ்டபில் கைக்கு வந்தது அந்தக் குழந்தை. அவர் நேராகக் கிருஷ்த்துவ ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றார். அந்த ஆசிரமத்திலே குழந்தை தேவகி வளர்ந்தாள்! படித்தாள்! நல்லவையைக் கற்றுக் கொண்டாள்! இன்று பெரிய மனுசியாகவும் ஆகிவிட்டாள்.
தேவகி ரொம்பவும் கூச்ச சுபாவம் உடையவளாக இருந்தாள். சிறுவயது முதலே மனதில் பலவிதமான எண்ணங்களும் உணர்ச்சிகளும் தோன்றும். அப்பொழுதெல்லாம் கத்துவாள். அழுவாள். ஃபாதர்தான் ஆறுதல் சொல்லுவார். தாயையும் தந்தையையும் பறிக்கொடுத்தவள். அந்தவொரு பாதிப்புதான் குழந்தையாக இருந்தாலும் அவளுடைய மனதை ஆட்டுவிக்கிறது என்று எண்ணினார். ஒவ்வொரு நாளும் அதுவே ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து இன்று பிரச்சனையாக வந்து நிற்கிறது.
இரவு நேரங்களில் கெட்ட கெட்ட கனவுகள் வேறு தூங்க விடாமல் தேவகியைத் துரத்தும். ஆண் நண்பர்களுடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் தோன்றும். அதுவும் அதுவரை பார்க்காத முகங்களும் அவர்கள் பேசிய உணர்ச்சி மிகு வார்த்தைகள்கூட காலையில் எழுந்தவுடன் தெவகிக்கு நன்றாக நினைவிருக்கும். ஏதோ தான்தான் அந்த நபரிடம் சென்று பேசிவிட்டு வந்திருப்பதை போல் உணர்வாள். எத்தனையோ முறை யோசித்து யோசித்துப் பார்ப்பாள். இந்த முகங்கள் எல்லாம் உண்மையாகவே இருக்கின்றனவா? எதற்காக எனக்கு இவ்வாறு தோன்றுகிறது? அவர்கள் பேசும் வார்த்தைகள் கூட உண்மையாலும் என்னிடமே பேசுவது போல்லல்வா உள்ளது. யார் இவர்கள்? என்னிடம் என்ன சொல்ல வருகிறார்கள்? பல நேரங்களில் குழம்பிப்போய் அப்படியே தூங்கியும் விடுவாள்.
தனக்குள்ள ஏற்பட்ட பிரச்சனையை ஃபாதரிடம் சென்று சொல்லலாம் என்று நினைத்திருந்தாள் தேவகி. அவளுடைய அப்பா, அம்மா, கடவுள் எல்லாமே ஃபாதர்தான். ஒருவேளை தனக்கு பைத்தியம் என்று மருத்துவமனையில் சேர்த்து விட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நிர்மூலமாகி விடுமே என்று பயந்தாள். அதனால் இந்த விஷியத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்தாள். இப்பொழுதெல்லாம் முடிந்தவரை இரவு நேரங்களில் கத்தாமல் தனக்குள்ளாகவே ஏற்படும் அந்த மிருகத்தை அடக்கி ஆள பழகிக்கொண்டாள்.
ஆனாலும் வயதுக்கு வந்த பிறகு இன்னும் சில உணர்ச்சிகளும் எண்ணங்களும் தேவகிக்கு ஏற்பட்டன. அறையில் தனியாக இருக்கும்போது விளையாட்டாக ஒருசில நேரங்களில் கண்ணாடியைப் பார்த்து ஆணைப் போல நெஞ்சை நிமிர்த்தி நடக்கவும் பேசவும் செய்வாள். பின்பு வாய்விட்டு சிரிப்பாள். ஏன் நாம் இவ்வாறு செய்கிறோம் என்று தன்னைத்தானே நொந்தும் கொள்வாள்? இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என்று மனதால் எண்ணினாள்.
கொஞ்ச நாளாகவே தன்னுடைய அறைத்தோழிகளுடன்கூட தொட்டுப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள் தேவகி. ஒரே அறையில் இருக்கும்பொழுது சக தோழி துணி மாற்றும்போதும் கண்களை இறுக மூடிக்கொள்வாள்.இப்பொழுதெல்லாம் தேவகிக்குப் பெண்கள் மேலும் அதித ஈர்ப்பு ஏற்படுவதை உணர முடிந்தது. பெண்களின் ஆடை விலகும்போது தன்னையும் அறியாமலும் தான் பெண்தான் என்று உணராமலும் கண்கள் அலைமோதியது. பல நேரங்களில் தான் ஒருவேளை ஆணாக இருப்போமோ என்ற பயமும் கூட அவளுக்கு இருந்தது. தன்னுடைய மனம் சக தோழிகளுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று மிகவும் பயந்தாள். இதனால் அவளை அவளே தனிமைப்படுத்திக் கொண்டாள்.
படித்த படிப்பிற்கு ஒரு நல்ல வேலையும் தேவகிக்குக் கிடைத்து விட்டது. தன்னுடைய முதல்மாத சம்பளத்தை அப்படியே எடுத்து வந்து ஃபாதரிடம் கொடுத்தாள்.
“இது நீ செய்த வேலைக்கான ஊதியம். இந்தப் பணத்த நீ உன் விருப்பம் போல் செலவு செய்” என்றார் ஃபாதர்
“இவ்வளவு பணத்த வச்சி நான் என்ன பன்றது. இந்த ஆசிரமத்துல என்னைப் போல அநாதை குழந்தைகளுக்கு உதவியா நினைச்சி வச்சிக்கோங்க ஃபாதர்” என்றாள் தேவகி.
“அது தப்புமா! நாங்க ஒரு குழந்தைய வளர்த்துப் படிக்க வச்சி ஆளாக்கி விடுறோம். அவ்வளவுதான் எங்க வேலை. அவன் வேலைக்குப் போயி சம்பாரிச்சு கல்யாணம் பண்ணி குடும்பத்துக்குப் போவ ஏதோ இந்த ஆசிரமத்துக்குக் கொடுத்தா போதும். அவனால முடிஞ்சது. அதுவும் கட்டாயம் இல்ல. இங்க வளர்ர குழந்தைங்க நல்ல நிலைமையில இருந்தா அதுபோதும்” என்றார் ஃபாதர்.
“எனகென்ன கல்யாணமா ஆயிடுச்சி! அதுவெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இப்ப இந்தப் பணத்த வச்சிக்கொங்க. முதன்முதலா என்னை வளர்த்த ஆசிரமத்துக்கு நான் செய்யுற உதவி. வேண்டாம் சொல்லி என்னை பிரிச்சிராதீங்க ஃபாதர்” என்றாள் தேவகி. வேறுவழியில்லாமல் பணத்தை வாங்கிக் கொண்டார் ஃபாதர். தேவகிக்கும் ரொம்ப சந்தோசம்தான்.
ஃபாதரைப் பார்த்துவிட்டு அறைக்கு வந்தவள் ஒருகனம் திகைத்துப் போய் நின்று விட்டாள். தன்னுடைய அறைத்தோழி ஒருத்தி அரை நிர்வானத்தில் தூங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறாள். எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தியும் அந்தப் பெண்ணை ரசிக்காமல் தேவகிக்கு இருக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் மனமும் கண்களும் தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கத் தூண்டியது. இதற்குமேல் இங்கே இருந்தால் ஏதாவது விபரீதம் நடந்து விடக்கூடும் என்று நினைத்து அறையை விட்டு வெளியேறுகிறாள் தேவகி.
மழை கொட்டோ கொட்டோவென்று கொட்டியது. மொட்டை மாடியில் மழையில் நனைந்தபடி அழுத கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள் தேவகி. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரானது மழைத்துளிகளில் கலந்து வெறுமையாய் காரணமின்றி வழிந்தோடியது. அம்மாவின் தேவை இப்போதுதான் தேவகிக்கு புரிந்தது. இதுவரை இப்படியொரு நினைப்பே இல்லாமல் இருந்தவளுக்கு அம்மா இருந்தால் கட்டிப்பிடித்து அழுவலாம் என்றிருந்தது.
அடுத்தநாள் காலையில் ஒரு சைக்காஸிஸ்ட் பெண் டாக்டரைப் பார்க்கச் சென்றிருந்தாள் தேவகி. டாக்டரிடம் எதையும் மறைக்காமல் முழுமையாக நடந்த அனைத்தையும் சொன்னாள்.
டாக்டர் சிரித்துக்கொண்டே, “நீ ஆணாக இருக்க விரும்புகிறாயா? அல்லது பெண்ணாக இருக்க விரும்புகிறாயா?” என்றார்.
பட்டென்று ”நான் பெண்ணாக இருக்கவே விரும்புகிறேன். இன்னமும் என்னை பெண்ணென்றே உணர்கிறேன். பெண்ணாகவே வாழவும் ஆசைப்படுகிறேன்” என்றாள் தேவகி.
டாக்டர் மீண்டும் சிரிக்கின்றார். தேவகியை நன்கு பரிசோதித்து விட்டு ”நீ முழுமையான பெண்தான். ஆனால் உன்னுடைய மனசில் ஏன் அவ்வாறு தோன்றுகிறது என்று மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும். ஒருவேளை நீ திருநம்பியாகக் கூட இருக்கலாம்” என்றார்.
“நிச்சயமாக இல்லை டாக்டர். நான் திருநம்பியாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் என்னில் நான் முழுமையான பெண்மையை உணர்கிறேன். அதுமட்டும் இல்லாமல் அவ்வவ்போதுதான் ஆண்தன்மை என்னிடம் வெளிப்பட்டு நிற்கிறது” என்கிறாள் தேவகி.
கிட்டத்தட்ட மூன்று மணித்துளிகளுக்கும் மேலாகத் தேவகிக்குப் பரிசோதனை நடைபெற்றது. தேவகியின் ஜீன்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதையும் சில ஜீன்கள் தனித்து இருப்பதையும் கண்டறிகிறார் டாக்டர். தனித்து விடப்பட்ட ஜீன்களை வெளியேற்றினால்தான் அவளின் முழுமையான பெண்மையைக் கொண்டு வரமுடியும் என்கிறார்.
டாக்டர் சொன்னது போல தன்னால் அப்படியொரு சிகிச்சையை செய்துகொள்ள முடியுமா? அதற்கு ஆகின்ற செலவினை எவ்வாறு சமாளிப்பது? ஃபாதரிடம் இதுபற்றி சொல்லலாமா? தேவகி மனக்குழப்பத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியே வருகிறாள். தனக்கு முன்னால் வந்த பேருந்தில் ஏறி ஒரு பெண் மட்டும் அமர்ந்திருக்கும் சீட்டில் உட்காருகிறாள். கொஞ்சதூர பயணம். இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பாத்துக் கொள்கிறார்கள். தேவகிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!
அடிக்கடி நினைவில் வந்த முகம். இந்தப் பெண்ணிடம் நிறைய பேசியதாகவும் பழகியதாகவும் தோன்றுகின்றது. இது எப்படி சாத்தியம்? ஓட்டுநர் போட்ட பிரேக்கில் இரண்டு தோள்களும் உரசிக்கொண்டன. ஏதோ பலநாள் பழகிய மாதிரி உணர்வு தேவகிக்கு. மீண்டும் தானாக உரசுகின்ற மாதிரி வேண்டுமென்றே அப்பெண்ணின் உடலைத் தொடுகிறாள். சத்தியமாக இந்த பெண்ணோடு நான் உறவாடியிருக்கிறேன். தேவகியின் மூளையின் வேகம் படுவேகமாய் சுற்றியது. “என்னங்க… நீங்க யாரு? என்ன இதுக்கு முன்னால எங்கையாவது பாத்திருக்கீங்களா?” என்றாள் தேவகி.
“எதுக்கு கேட்குறீங்க… நான் உங்கள இப்பதான் முதல்முறையா பாக்குறன்” என்றாள் அப்பெண்.
“என்னை கல்யாணம் பண்ணிக்கோ… ஒரு தாய் எப்படி குழந்தைய பாத்துப்பாங்களோ அதுபோல உன்னை கடைசிவரை பாத்துப்பேன். ஐ லவ் மை சுதா…” என்றாள் தேவகி.
ஜன்னல் பக்கமாய் பார்த்துக் கொண்டிருந்த அப்பெண், தேவகி சொன்னதைக் கேட்டு பதறித்தான் போனாள். ”என்னுடைய கணவன் என்னிடம் முதன்முதலாகக் காதலைச் சொன்னதை அப்படியே பெயரோடு சேர்த்துச் சொல்கிறாயே.. நீங்கள் யார்? என்றாள் சுதா.
“நான் சொன்னது சரியா? அப்படியானால் உன்னுடைய கணவனை நான் பார்க்க வேண்டும்” என்கிறாள் தேவகி.
இருவரும் வீட்டை நோக்கி பயணிக்கிறார்கள். அங்கு மதுராவை பார்க்கிறாள். தன்னுடைய உடன்பிறந்த அண்ணன்தான் மதுரா என்று எண்ணுகிறாள். நாம் இருவரும் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புகள். அதனால்தான் நீ செய்கின்ற பார்க்கின்ற பழகுகின்ற அத்தனை நபரையும் நானும் பார்த்தேன் என்கிறாள் தேவகி. தேவகி எவ்வாறு கஷ்டப்பட்டாலோ அதே போல மதுராவும் தன்னுள் பெண்மையை அவ்வவ்போது உணர்ந்துதான் இருந்தான்.
ஓடிச்சென்று அண்ணன் மதுராவை கட்டிக்கொண்டாள். தனக்கொரு சொந்தம் கிடைத்து விட்டதை எண்ணி தேம்பி தேம்பி அழுதாள். சுதா இருவரையும் பார்த்து மகிழ்ச்சிப் பொங்கினாள். அண்ணனைப் பார்த்த பிறகு தனக்கு இனி எந்தவொரு சிகிச்சையும் தேவையில்லை. என்னுடைய உடன்பிறந்தவனின் ஜீனை என்னுலிருந்து எடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்று முடிவெடுத்துக்கொண்டாள் தேவகி.
ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் இல்லறத்தின் வாயிலாக இணைப்பது அகத்திணை எனப்படும். நல்லொழுக்கங்களால் சிறந்த இவ்விருவரும் நன்மக்களைப் பெற்றும் மனையறம் காத்தும் உலக நலத்திற்கு உயர்த்துவதே அகத்திணை எனக் கொள்ளலாம். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். கணவன் மனைவி என்போர் மக்களைப் பெற்று பேரின்பம் அடைபவரையே இறைவனின் பாதத்தை அடையமுடியும். அதுவே உலகியல் வாழ்வாகும். தொல்காப்பியர் முதற்கொண்டு பின்வந்த இலக்கண ஆசிரியர்கள் அனைவரும் அன்பால் இணையப்பட்ட உறவையே சொல்லி செல்கின்றனர். இலக்கண நூலாசிரியர்கள் அகத்திணையை மூன்று வகைகளாகப் பிரித்துக்கொண்டார்கள். அவை,
1.முதற்பொருள்
2.உரிப்பொருள்
3.கருப்பொருள்
எனபனவாகும். பழங்காலத்தில் ஒரு மனிதனின் வாழ்வில் அன்றாடம் நடைபெறக்கூடிய அனைத்தையும் இம்மூன்றால் அடக்கிக் கொண்டார்கள். தொழில்கள், நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம், மனிதனின் செயல்பாடுகள், பணிகள் என ஒவ்வொன்றும் இவற்றில் கொள்ளலாம்.
எந்தவிதமான அறிவியல் வளர்ச்சி அடைந்திடாத அன்றைய மனிதர்கள் தங்களில் வாழ்க்கை முறையினைச் சராசரி விகிதாரத்துடன் எவ்வாறு வகுத்துக்கொண்டார்கள் என்பது பெரும் வியப்புக்குரியதே! அந்தளவிற்கு மிகச்சரியான முறையில் அகத்திணையியலில் கொடுக்கப்பட்டுள்ளன.
1.முதற்பொருள்
முதற்பொருள் இரண்டு வகைப்படும். அவை,
1.நிலங்கள்
2.பொழுதுகள்
1.நிலங்கள்
தமிழகத்தில் உள்ள நிலப்பரப்பினை ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிலங்களும் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன என்ற காரண விளக்கமும் சொல்லப்பட்டுள்ளன. நிலங்கள் ஐந்து வகைப்படும். அவை,
1.குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த பகுதிகளும்
2.முல்லை – காடும் காடு சார்ந்த பகுதிகளும்
3. மருதம் – வயலும் வயல் சார்ந்த பகுதிகளும்
4.நெய்தல் – கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்
5.பாலை – மணலும் மணல் சார்ந்த பகுதிகளும்
மேற்கண்ட படம், நிலங்கள் எவ்வாறு உருவாகியிருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. மலைப்பகுதிகளாக இருந்த நிலங்களை மனதன் கொஞ்சகொஞ்மாய் வெட்டி எடுத்து காடுகளாக மாற்றினான். காடுகளாக இருந்த பகுதிகளை வயல்வெளிகளாக மாற்றினான். வயல்களாக இருந்தவைகள் மழைநீரால் (கடலால் சூழப்பட்ட பகுதியையே முதன்மையாகச் சொல்லப்படுகின்றன) சூழப்பட்டு எங்கும் தண்ணீர் பகுதியானது. அதன்பிறகு வெப்பத்தின் காரணமாக தண்ணீரானது வற்றி வறண்ட பாலைவனமாக மாறுகிறது.
ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தங்களுடைய நிலங்களல் விளைந்த உணவு மற்றும் பொருட்களையே முதன்மையானதாகக் கொண்டு வாழ்ந்தனர். தங்கள் நிலத்தில் கிடைக்காத பொருளை பிற நிலங்களிலிருந்து பண்டமாற்று முறையில் பகிர்ந்து கொண்டார்கள்.
உதாரணமாக,
நெய்தல் நிலத்தில் விளைந்த உப்புக்கு நேர் மருதநில நெல் ஆகும்.
முல்லை நில பாலுக்கு குறிஞ்சி நில தேன் நேராகும்
இவ்வாறு பண்டமாற்று முறையினைப் பயன்படுத்தி அனைத்து வகையான மக்களும் எல்லாப்பொருட்களையும் வாங்கியும் விற்றும் ஒரு வணிகச் சந்தையே உருவாக்கி வந்துள்ளனர்.
2.சிறுபொழுதுகள் (ஒரு நாளினை ஆறாகப் பிரித்துக் கொள்வது)
1.பெரும் பொழுதுகள்
வ.எண்
பெரும் பொழுதுகள்
மாதங்கள்
1
இளவேனிற் காலம் ( வெயிற்காலம்)
சித்திரை, வைகாசி
2
முதுவேனிற் காலம் (வெயில் தணியும் காலம்)
ஆனி, ஆடி
3
கார்காலம் (மழைக்காலம்)
ஆவணி, புரட்டாசி
4
குளிர்காலம்
ஐப்பசி, கார்த்திகை
5
முன்பனிக்காலம்
மார்கழி, தை
6
பின்பனிக்காலம்
மாசி, பங்குனி
ஒரு பெரும்பொழுது என்பது வருடத்தில் இரண்டு மாதங்களாகக் கொள்ளலாம்.
2.சிறுபொழுதுகள்
சிறுபொழுதுகள் என்பது ஒருநாளினை ஆறாகப் பிரித்துக் கொள்வது ஆகும்.
வ.எண்
சிறுபொழுதுகள்
நேரங்கள்
1
காலை
6 Am முதல் 10 AM வரை
2
நண்பகல்
10 Am முதல் 2 PM வரை
3
எற்பாடு (சூரியன் மறையும் நேரம்)
2 PM முதல் 6 PM வரை
4
மாலை
6 PM முதல் 10 PM வரை
5
யாமம் (நடு இரவு)
10 PM முதல் 2 AM வரை
6
வைகறை (விடியற்காலை)
2 AM முதல் 6 AM வரை
நிலமும் பொழுதுகளும்
வ.எண்
அன்பின் ஐந்திணை
நிலங்கள்
பெரும் பொழுதுகள்
சிறுபொழுதுகள்
1
குறிஞ்சி
மலை சார்ந்த பகுதிகள்
குளிர்காலம்
யாமம் (நடு இரவு)
2
முல்லை
காடு சார்ந்த பகுதிகள்
கார்காலம்
மாலை
3
மருதம்
வயல் சார்ந்த பகுதிகள்
6 பெரும் பொழுதுகளும்
வைகறை
4
நெய்தல்
கடல் சார்ந்த பகுதிகள்
6 பெரும் பொழுதுகளும்
எற்பாடு
5
பாலை
மணல் சார்ந்த பகுதிகள்
இளவேனில், முதுவேனில், பின்பனி
நண்பகல்
📜 குறிஞ்சி நிலம் மலை சார்ந்த பகுதியாக இருப்பதால் எப்பொழுதும் குளிர் அதிகமாகக் காணப்படும். தலைனும் தலைவியும் ஒன்றாகும் நேரம் யாமப்பொழுது.
📜 முல்லை நிலத்தில் மரம், செடிக்கொடிகள் எனக் காடுகள் சூழ்ந்து இருப்பதால் மழை பிற இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பொழியும். தலைவனுடைய பிரிவு மாலை நேரத்தில் தலைவியை வருத்தமடையச் செய்யும்.
📜 மருதநிலத்தில் ஆறு பெரும்பொழுதுகளிலும் வேலைகள் தொடர்ந்து நடக்கும். வைகறை நேரத்தில் உழவர்கள் ஏர் பூட்டி வயலுக்குச் செல்வார்கள்.
📜 நெய்தல் நிலத்திலும் ஆறு பெரும்பொழுதுகளிலும் வேலைகள் தொடர்ந்து நடக்கும். மாலை மயங்கும் நேரத்தில் கடலுக்குள் செல்லும் மீனவர்களை நினைத்து (ஒன்று ஆகிவிடக்கூடாது என்று) அவர்களின் குடும்பத்தார்கள் விளக்கொளி ஏற்றி மௌனம் காத்துத் தவம் இருப்பர்.
📜 பாலை நிலத்தில் வெயில் அதிகம் இருப்பதால் எங்கும் வறட்சி மிகுந்து காணப்படும். அதனால் நண்பகல் எனும் வெயில் பகுதியைச் சொல்லப்படுகிறது.
குறிப்புகள்
📜 மேற்கண்ட ஒவ்வொரு வகைப்பாடும் இலக்கண நூலாசிரியர்களின் வகுத்தல்படி பெரும்பாண்மையைக் குறித்து நிற்கும்.
📜 ஒரு நிலத்தில் சொல்லப்பட்டது வேறு நிலங்களிலும் நடக்கும். ஆனால் அது சிறுபாண்மையாகவே இருக்கக்கூடும்.
வ.எண்
நிலங்கள்
உரிப்பொருள்
1
குறிஞ்சி
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
2
முல்லை
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
3
மருதம்
ஊடலும் ஊடல் நிமித்தமும்
4
நெய்தல்
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
5
பாலை
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
6
கைக்கிளை
ஒருதலைக்காமம்
7
பெருந்திணை
பொருந்தாக் காமம்
2.உரிப்பொருள்
தலைவனும் தலைவியம் இன்பமுற்று வாழும் அன்பின் ஐந்திணையும் கைக்கிளை மற்றும் பெருந்திணைக்கும் உரிப்பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.
முல்லை : பொருள் தேடச்சென்ற தலைவனை நினைத்துத் தலைவி காத்திருக்கிறாள். தலைவியை நினைத்துத் தலைவன் காத்திருக்கிறான்.
மருதம் : பரத்தையற் பிரிவால் தலைவி தலைவனுடன் ஊடி நிற்கின்றாள். ஊடலைத் தவிர்க்க உறவினர்கள் வருதல் மீண்டும் இன்பமாகும்.
நெய்தல் : கடலுக்குச் சென்றிருக்கும் தலைவனோ, தகப்பனோ, சகோதரனோ உயிருடன் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்று பெண்கள் இரங்கியிறுத்தல்.
பாலை : பொருள் தேட சென்றிருக்கும் தலைவன் வெயிலின் கொடுமையால் துன்பப்படுதல். தலைவியையும் பிள்ளைகளையும் விட்டு பிரிந்து தனிமை துயரம் அடைதல்.
3.கருப்பொருள்
இலக்கண ஆசிரியர்கள் மக்கள் நலமுடன் வாழும் பகுதிகளாக ஐந்து நிலங்களைக் குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு நிலத்திலும் அதனுடைய அடிப்படை தன்மைக்கு ஏற்ப மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மனிதர்கள் மட்டுமல்லாமல் பிற உயிர்களும் நிலத்திற்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன. கருப்பொருட்களை 13 வகைகளாப் பிரித்துக் கொள்ளலாம்.
கருப்பொருட்கள்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை
தெய்வம்
முருகன்
திருமால்
இந்திரன்
வருணன்
கொற்றவை
மக்கள்
குறவன், குறித்தி, வெற்பன்
ஆயர், ஆய்ச்சியர், இடையர்கள்
உழவர், உழத்தி, ஊரன், மகிழன்
பரதர், பரத்தியர், சேர்ப்பன்
எயினர், எயிற்றியர்
உணவு
மூங்கிலரிசி, தினை, மலைநெல்
வரகு, சாமை, முதிரை
செந்நெல்,
மீன், உப்பு
வழிப்பறி பொருட்கள்
விலங்கு
புலி, யானை, கரடி, சிங்கம்
முயல், மான்
எருமை, நீர்நாய்,
சுறா, முதலை
வலிமை இழந்த யானை, புலி, செந்நாய்
பூ
குறிஞ்சி, காந்தள்
முல்லை, தோன்றி
செங்கழுநீர், தாமரை, குவளை
நெய்தல், தாழை, முண்டகப் பூ
குறவம், பாதிரி
மரம்
அகில், வேங்கை, தேக்கு, சந்தனம்
கொன்றை, காயா
காஞ்சி, மருதம், வஞ்சி
புன்னை, ஞாழல்
பாலை, இருப்பை
பறவை
கிளி, மயில்
காட்டுக்கோழி, சேவல்
நாரை, நீர்க்கோழி, குருகு
கடற்காகம், அன்னம்
புறா, பருந்த
ஊர்
சிறுகுடி
பாடி, சேரி
பேரூர், மூதூர்
பட்டினம், பாக்கம்
குறும்பு
நீர்
அருவி, சுனைநீர்
காட்டாறு
மனைக்கிணறு, பொய்கை, ஆறு
மணற்கிணறு, உவர்க்குழி
வற்றிய சுனை, கிணறு
பறை
தொண்டப் பறை
ஏறுகோட்பறை
மணமுழா, நெல்லறி கிணை
மீன்கோட் பறை
துடி
பண்
குறிஞ்சிப் பண்
சாதாரிப்பண்
மருதப்பண்
செவ்வழிப் பண்
பஞ்சுரம்
யாழ்
குறிஞ்சி யாழ்
முல்லை யாழ்
மருத யாழ்
விளரி யாழ்
பாலை யாழ்
தொழில்
தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல்
ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல்,
நெல்லரிதல், களை பறித்தல், புது நீராடல்
மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்
வழிப்பறி செய்தல், கொள்ளை, நிரை கவர்தல்
அகத்திணைகளைப் பொறுத்தவரையில் திணை அடிப்படையில் மட்டுமின்றி களவு, கற்பு அடிப்படையிலும் பாகுபடுத்தப்படும்.
களவு : திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை முறையினைப் பற்றிக் கூறுவது
கற்பு : திருமணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை முறையினைப் பற்றிக் கூறுவது.