Wednesday, July 23, 2025
Home Blog Page 25

பெருங்கதையில் முகத்தூது

பெருங்கதையில் முகத்தூது

ஆய்வுக்கட்டுரைச் சுருக்கம்

கொங்குவேளிர் அவர்களின் பெருங்காப்பியமான பெருங்கதையிலிருந்து இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது. தலைவன் தலைவியருக்குள் நடக்கும் உள்ளுணர்வு போராட்டத்தை வெளிக்காட்டவும் தூது இலக்கியத்தின் ஒருபகுதியாகவும் இக்காப்பியமானது அமைகின்றது. இவ்வாய்வில் தலைவன் தன்னுடைய மனைவியின் வாயிலாகவே வேறொரு பெண்ணுக்குத் தூது அனுப்புகிறான்.  மனைவியும் இவற்றை அறியாமலேயே அவர்களுக்குள் நடக்கும் காதல் நாடகத்திற்கு துணை செய்கிறாள். இறுதியில் நடந்ததை எண்ணி மனம் வெதும்புகிறாள்.  தூது என்கிற பெயரில் ஒரு பெண்ணுக்கு தெரியாமலே அவளுடைய முகத்தில் காதல் கடிதம் வரையப்படுவதும் அப்பெண்ணின் மனம் படும்துன்பங்களுக்கு ஒரு உந்துதலையும் வாசவதத்தையின் கோபங்கள் அனைத்தும் இவ்வாய்வு முன்வைக்க முயல்கிறது.

பெருங்கதையில் முகத்தூது

திறவுச்சொற்கள்

1.பெருங்கதை                5.கொங்குவேளிர்

2.முகத்தூது                  6.தூது

3.மானனீகை                 7.பந்தடித்தல்

4.உதயணன்                  8.வாசவதத்தை

முன்னுரை

ஒரு காலத்தில் மனிதன் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்த சைகை மொழியினைப் பயன்படுத்தியிருப்பான். கண் சிமிட்டுவதாலும் கை அசைவுகளாலும் தலை ஆட்டுவதாலுமே மனதில் தோன்றிய கருத்தை இவ்வகையான செயல்பாடுகளின் மூலம் எதிரில் நிற்பவற்கு தெரிவித்திருக்க வேண்டும். அதுவே கண்ணுக்குத் தெரியாமல் குறிப்பிட்ட தூரத்தில் ஒருவர் இருக்கின்றார் எனில் ஆய்… ஓய்… என்று வேகமாகக் கத்தியும் சீழ்க்கை (விசில்) ஒலி எழுப்பியும் தான்இருக்கும் இடத்தை அறிவித்திருப்பார்கள். தமிழ்மொழிக்கு ஒலிதான் மொழியின் முதல்படியாய் இருக்கக்கூடும். இப்படியாகக் கொஞ்சகொஞ்சமாய் வளர்ந்த மொழியானது பல நூற்றாண்டுகளுக்கு மேல் பேச்சுமொழியாக உருவெடுத்துள்ளது எனலாம். அதன் பிறகே எழுத்துமொழியும் தோன்றியிருக்கும். எவ்வளவுதான் பேசினாலும் காதல் என்று வந்துவிட்டால் அவ்விடத்தில் எழுத்துமொழிதான் தேவைப்படுகிறது. மனதில் தோன்றிய கருத்தை நேரில் சொல்லமுடியாததையும் எழுத்து வடிவில் கடிதம் மூலமாகச் சொல்லமுடியும்.  சங்ககாலம் முதல் இக்காலம் வரை அவ்வாறு எழுதிய கடிதங்கள் ஏராளம். பெருங்கதையில் தலைவியின் முகத்தைக்  காகிதமாக வைத்து வண்ணம் தீட்டி காதல் மடல் எழுதுவதும் தலைவியே தன்னுடைய கணவனுக்காகக் (அவள் அறியாமல்) காதல்தூது செல்வதும் வியப்பிற்குரியதே.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் காப்பியத்தைச் சாமர்த்தியமாகவும் மிக நேர்த்தியாகவும் கதையை நகர்த்தி செல்கின்றார். காப்பியத் தலைவனாகிய உதயணனை நலம் குன்றாத வகையில் காட்டியுள்ளார். யானையை அடக்குதல், யாழ் கற்றுக்கொடுத்தல், காதல் கொள்ளுதல், பகைவர்களைப் போரிலே வென்று வெற்றியைச் சூடுதல் போன்றவை மூலம் உதயணனின் இரண்டு பக்க முகங்களைக் காட்டியுள்ளார். ஒருபக்கம் வீரனாகவும், மறுபக்கம் மன்மதனாகவும் உதயணன் இருந்துள்ளார். மானனீகை அழகுள்ளவளாகவும் அறிவு செறிந்துள்ளவளாகவும் படைக்கப்பட்டுள்ளாள். தான் கவர்ந்து வரப்பட்டவள் என்பதை நன்கு உணர்ந்துதான் உதயணனைின் காதலை வேண்டாம் என்று மறுத்துரைக்கிறாள். ஆனாலும் மன்னன் அல்லவா உதயணன். ஒரு காலக்கட்டத்திற்கு மேல் உதயணனின் காதலே வென்று விடுகிறது. இங்கு வாசவதத்தை மற்றும் பதுமாபதியின் உள்ளமும் மானனீகையின் காதல்நிலையுமாகிய இப்பெண்களின் மனப்போராட்டமே இவ்வாய்வின் முக்கிய நோக்காகவும் பங்காகவும் இடம் பெறுகிறது.

தூது – விளக்கம்

     தன்னுடைய மனக்கருத்தைப் பிறருக்கு அறிவுறுத்த வேண்டி எழுத்து மூலமாகவோ அல்லது தனிநபர் மூலமாகவோ அனுப்பப்படுவது தூது இலக்கியம் எனப்படும். இத்தூதானது அகத்தூது மற்றும் புறத்தூது என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அகத்தூதில் தலைவன் தலைவியின் காதல் சார்ந்த செயல்பாடுகளும் புறத்தூதில் போர்ச்செய்திகள் அடங்கிய செயல்பாடுகளும் இடம்பெறும். ‘‘தூது விடுதலைப் பொருளாகக் கொண்ட செய்யுட்கள் பல சங்க இலக்கியத்தில் காமம் மிக்க கழிபடர் கிளவி என்ற துறையில் வருகின்றன’’1 என்கிறார் மது.ச.விமலானந்தம். காதல் அதிகமாதலின் காரணமாக தலைவனும் தலைவியும் உயிருள்ளவைகளையோ அல்லது உயிரற்றப் பொருட்களையோ தூதாக விடுகிறார்கள். தூது இலக்கியங்கள் கலிவெண்பாவில் இயற்றப்பெறும். தூது விடப்படும் பொருட்களையே தலைப்பாகவும் கொண்டிருக்கும். தூது இலக்கியத்திற்கு சந்து இலக்கியம் வாயில் இலக்கியம் என்ற பெயரும் உண்டு.

தூது செல்வோர்க்கான வாயில்கள்

     அகத்தூதில் தலைவன் தலைவியற்கு யாரெல்லாம் தூது செல்லக்கூடியவர்கள் எனத் தொல்காப்பியர்,

                ‘‘தோழி தாயே பார்ப்பான் பாங்கன்

              பாணன் பாடினி இளையர் விருந்தினர்

              கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்

              யாத்த சிறப்பின் வாயில்கள் என்ப’’ (தொல்.பொருள்.கற்பு.52)

     மேற்கண்ட பன்னிருவரும் அகத்தூதுக்குரியவர்களாகச் சுட்டுகின்றார். இவர்களில் வாயிலாகத் தங்களுடைய மனக்கருத்தைக் காதல் கொண்டவர்ககுத் தெரியப்படுத்துகிறார்கள். மேலும், புறத்தூதாக,

                ‘‘இயம்புகின்ற காலத்து எகினமயில் கிள்ளை

              பயம்பேறு மேகம்பூவை பாங்கி – நயந்தகுயில்

              பேதை நெஞ்சம் தென்றல் பிரமரம் ஈரைந்துமே

              தூதுரைத்து வாங்கும் தொடை’’2

இவ்வாறாகப் புறத்தூதுக்குரியப் பொருட்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இலக்கியங்களில் தூதுக்கள்

  • இராமாணத்தில் இராமன் சீதையிடம் அனுமனைத் தூதாக அனுப்புகிறார்.
  • இராமன் இவணனிடம் அங்கதனைத் தூதாக அனுப்பி வைக்கின்றார்.
  • சிலம்பில் மாதவி கோவலனிடம் தன்னுடைய தோழி வயந்தமாலையைத் தூதாக அனுப்புகிறாள்.
  • அதியமான் தொண்டைமானிடம் ஔவையாரைத் தூதாக அனுப்புகிறார்.
  • பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனைத் தூதாக அனுப்புகிறார்கள்.
  • முருகன் சூரபதுமனிடம் வீரவாகுத்தேவரை தூதாக அனுப்பகிறார்.
  • பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் அன்னச்சேவலை தூதாக அனுப்புகிறார்.
  • சீவகசிந்தாமணியில் குணமாலை சீவகனுக்கு கிளியைத் தூது விடுகிறாள்.
  • பெரியபுராணத்தில் சுந்தரர் பரவையாருக்கு இறைவனைத் துது அனுப்புகிறார்.
  • நளவெண்பாவில் நளன் தமயந்திக்கு அன்னப்பறவையைத் தூதாக அனுப்புகிறாள்.
  • தேம்பாவணியில் சூசையப்பருக்கு விண்ணவர் தூது வருகின்றார்.

இவைபோன்று இலக்கியங்களில் தூதுச்செய்திகள் இன்னும் காணக்கிடக்கின்றன. தூதுக்கென்றே தனி இலக்கியங்களும் உள்ளன. முதல் தூது இலக்கியம் நெஞ்சுவிடு தூது ஆகும். ஆனால் மதுரை சொக்கலிங்கர் மேல் தமிழைத் தூதாக விடப்படும் தமிழ்விடு தூதே சிறந்த தூது இலக்கியமாகக் கருதப்படுகிறது. சைவ வைணவ இலக்கியங்களில் கூட தூதுக்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன. காப்பியங்களிலும் தூதுக்களினால் பெயர் பெற்றவர்களைக் (கண்ணன், அனுமன்) கண்டிருக்கின்றோம். கொங்கு வேளிரின் பெருங்கதையிலும் தூது நடைபெறுவதற்குரிய காரணங்களும் அதனால் ஏற்படக்கூடிய சினமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பெருங்கதையும் – ஆசிரியரும்

     பெருங்கதை, மாக்கதை, உதயணன் கதை என்று வேறுபெயர்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன. பெருங்கதையானது முதலில் பிருகத்கதை என்கிற காப்பியத்தைக் குணாட்டியார் என்பவரால் பைசாசி மொழியில் இயற்றப்பட்டது. இந்த நூலில் இருந்தோ அல்லது அதன்வழி ஒன்றிலிருந்தோ பெருங்கதையின் கதைப்பொருளை எடுத்திருக்கலாம். இந்நூலில் உதயணனின் வரலாற்றையும் அவனுடைய மகன் நரவாணதத்தனின் வரலாற்றையும் குறிப்பிடுகிறது. பெருங்காப்பியங்கள் சிறுங்காப்பியங்களிடையே பெருங்கதையும் காப்பியமாகவே போற்றப்படுகிறது. இந்நூலின் சிறப்பினால் மகாபாரதம் கம்பஇராமாயணம் போன்ற இதிகாசங்களுடன் ஒரேநிலையில் வைத்து  எண்ணப்படுகிறது.

பெருங்கதையின் ஆசிரியர் கொங்குவேளிர் ஆவார். இவருடைய இயற்பெயர் யாதென்று தெரியவில்லை. இவர் வாழ்ந்த நாட்டின் பகுதியையும் வம்சாவளி பெயரான வேளிர் என்பதையும் இணைத்துக் கொங்குவேளிர் என அழைக்கப்படுகிறார். பகையரசனை வெல்லும் போது அந்த நாட்டிற்கு ஒரு தலைமை வீரனை அரசர் நியமிக்கின்றார். அவ்வீரனுக்குத் தனிப்பெயர் வைத்து அழைத்து வந்தார்கள். ‘‘கொங்கு மண்டலத்தை ஆண்ட கொங்கு மன்னன் தான்வென்ற குறும்பு நாட்டின் பகுதிக்கு நியமிக்கப்பட்ட தலைவனை வேளிர் என்று அழைக்கப்பட்டான்’’3 என்று பொன்னுத்தாய் குறிப்பிடுகிறார்.

பெருங்கதையின் காலம் கி.பி 750 என்றும் இதே காலம் கொங்கு வேளிரின் காலமாகவும் ஆசிரியர் கருதுகிறார்கள். ‘‘இளமைக் காலத்திலிருந்தே கொங்கு வேளிர் கல்வித்திறம் மிக்கவராகத் திகழ்ந்தார். தமிழ்மொழி, வடமொழி ஆகியவற்றில் புலமை மிக்கவராக இருந்தார் எனப் பெருங்கதையை ஆய்வு செய்தவர்கள் குறிப்பிடுகின்றனர்’’4 என்று இராமச்சந்திரன் செட்டியார் குறிப்பிடுகிறார்.  பண்டையத் தமிழகம் மூன்று வேந்தர்களால் ஆளப்பட்டது.  அம்மன்னர்களுக்குள் சண்டைகள் நடைபெறும்போது வேளிர்கள் அவர்களுடன் ஒன்றாகவோ தனியாகவோ சேர்ந்து போரிட்டனர். ‘‘வேளிர்கள் வீரம், ஆற்றல் மிக்கவர்களாக விளங்கியதுடன் பலர் பெரு வள்ளல்களாகவும் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களுள் சங்க காலத்தில் வாழ்ந்த கடை எழு வள்ளல்களான பாரி, ஆய், எழினி, பொதினி, காரி, ஓரி, பேகன், மலையன் ஆகிய வேளிர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்’’ 5 என்கிறார் ரா.விஜயலட்சுமி.  

இவற்றில் பெருங்கதையின் மொழிநடை, யாப்பு போன்றவற்றின் அமைப்பைக் கொண்டு அறிந்து கொள்ள முடியும். மேலும் கொங்குவேளிர் வடமொழியில் சிறந்திருந்த சமணப் பெரியோர்களோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார் எனவும் குறிப்பிடுகின்றனர். ஆதாலால்தான் மொழிபெயர்ப்பு நூலாக இருப்பினும் பெருங்கதையில் வடமொழிப் பெயர்களையே வைத்துள்ளமையைக் காணமுடியும்.

உஞ்சைக்காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம் என்று ஐந்து காண்டங்கள் இடம் பெற்றுள்ளன.  பெருங்கதையில் பெரும்பான பாடல்கள் கிடைக்கவில்லை.  முப்பத்தைந்து அடி எல்லையாகக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள். மேலும் காண்டத்தில் கதையின் போக்கு நிறைவு பெறாமல் இருப்பதால் ஆறாவது காண்டமாகத் துறவு பற்றி இருந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இப்பெருங்கதைக் காப்பியமானது நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது. சமண சமயக் கோட்பாட்டை வலியுறுத்தி பெருங்கதை செல்வதால் சமண சமயத்தைச் சார்ந்து நின்றது எனலாம்.

பெருங்கதையில் முகத்தூது

     பெருங்கதையில் வத்தவகாண்டத்தில் பந்தடி கண்டது காதையும் முகவெழுத்துக்காதையும் இவ்வாய்வுக் கட்டுரையில் ஆராயப்படுகிறது. தூது இலக்கியங்களில் நாம் நிறைய செய்திகளைக் கண்டும் கேட்டிருப்போம். இப்பகுதியில் தலைவன் தன்னுடைய மனைவியின் முகத்திலேயே யவண மொழியில் காதல் கடிதம் எழுதி தன்னுடைய காதலை வளர்க்கிறான். இக்காதலை மனைவி முதலில் வெறுத்தும் பிற்பாடு ஏற்றுக்கொண்டதன் பின்னணியும் மாறுபாடும் பெண்கள் குறித்த நிலையும் இக்கட்டுரையில் சொல்லப்படுகின்றன.

உதயணனின் போர்

     வத்தவ காண்டத்தில் உதயணனை மன்மதனாகவும் மிகச்சிறந்த வீரனாகவும் கொங்குவேளிர் படைத்திருப்பது பாராட்டுக்குரியது. ஒவ்வவொரு கதை நிகழ்வும் படிக்கும் மனதில் ஊன்றி நிற்பவயே. வருணனைகளும் எடுத்துக் கையாளும் விதமும் மிகநன்று. வத்தவ நாட்டின் மன்னன் உதயணன் ஆவான். உதயணனின் நன்பனும் அமைச்சனும் யூகி என்பவன் ஆவான். உதயணன் உஞ்சை நாட்டு மன்னன் பிரச்சோதனன் – பதுமகாரிகை மகளான வாசவதத்தையை யாழ் மீட்டு கற்றுக் கொடுத்துத் திருமணம் செய்து கொள்கின்றான். இரண்டாவதாக மகத மன்னனின் தங்கையான  பதுமாபதியை மாணகன் என்ற அந்தணர் பெயரைக் கொண்டு திருமணம் செய்து கொள்கின்றான்.

     பாஞ்சால நாட்டின் மன்னன் ஆருணி ஆவான். ஆருணி மன்னனுக்கும் உதயணனுக்கும் வெகு காலமாகவே பகை இருந்து வந்தது.  ஒற்றனாகிய வருடக்காரனின் யோசனையாலும் வகுத்துக் கொடுத்த திட்டத்தாலும் ஆருணி மன்னனைப் போரிலே உதயணன் தோற்கடிக்கிறான். ஆருணியைத் தோற்கடித்தது மட்டும் இல்லாமல் அவனுடைய அந்தப்புரத்திலிருந்து அரிய கலைத்திறனும் ஆடல் பாடல் வல்லமையும் கூத்துத் திறமையும் உள்ள ஆயிரத்தெட்டுப் பெண்களை வத்தவ நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வருகின்றான்.

 ‘‘அருமை சான்ற வாருணி யரசன்

ஆயிரத் தெண்ம ரரங்கியன் மகளிர்

ஆடலும் பாடலு நாடொன்று நவின்ற

நன்நுதன் மகளிரை மின்னோர் மின்னிடை’’ (பெருங்கதை.வத்தவ.12:3-8)

இந்தப் பெண்களில் மிகச்சிறந்த அழகியும், கலைத்திறனும் பெற்றவளுமான மானனீகையும் உடனிருந்தாள். இவ்பெண்கள் அனைவரும் மிக்க அழகுடனும் திறமையுடனும் வீற்றிருந்தார்கள். மேலும், இப்பெண்கள் ஆருணி மன்னனால் பகை மன்னர்களைத் தோற்கடித்து அவனுடைய திறன்மிக்க மகள்களைக் கவர்ந்து வந்து தன்னுடைய அந்தப்புரத்தில் வைத்திருந்தாகத் திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

பந்தாட்டம் நிகழ்தல்

     போருக்குப் பின் ஒருநாள் உதயணனின் மனைவிமார்கள் வாசவதத்தைக்கும் பதுமாபதிக்கும் நிலாமுற்றத்தில் பெண்களிடையே பந்தடிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தோழிமார்கள் இரண்டு அணியாகப் பிரிந்து நின்றார்கள். ஆனாலும் ஆட்கள் குறையவே, மன்னன் தேவியர் இருவருக்கும் கூட்டி வந்த ஆயிரெத்தெட்டுப் பெண்களையும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்தான். இப்போது பந்தாட்டம் நடைபெறுவதற்கான ஆட்களை இரண்டு பெண்களும் பிரித்துக் கொண்டார்கள். அவர்களுள் மானனீகையும் ஒருத்தி ஆவாள்.

‘‘வாசவ தத்தைக்கும் பதுமா பதிக்கும்

கூறுநனி செய்து வீறுயர் நெடுந்தகை

கொடுத்த காலை……’’ (பெருங்கதை.வத்தவ.12:9-11)

இவ்வாறாகப் பந்தாட்டத்தில் பங்கு பெறும் பெண்கள் அனைவரும் நெட்டியும் பஞ்சும், பட்டு நூலும் சேர்த்து உருட்டிக் கட்டிக்கொண்டனர். முடியை நன்றாகப் பின்னி அவற்றின் மேல் நூலாலும் கயிற்றாலும் மெல்லியதாய்ச் சுற்றி பாம்புத்தோல் போலவும் மயில் தொகையின் கண் போலவும் சுற்றிக்கொண்டனர். இராசனை, காஞ்சனமாலை, அயிராபதி, விச்சுவலேகை, ஆரியை  போன்ற பெண்களுக்குப் பிறகு மானனீகை பந்தடிக்க வருகிறாள். அப்பெண்களின் வர்ணனைப் பற்றி,

‘‘பீலியும் மயிரும் வாலிதின் வலந்து

நூலினுங் கயிற்றினு நுண்ணிதிற் சுற்றிக்

கோலமாகக் கொண்டனர் பிடித்துப்

பாம்பின் றேலும் பீலிக் கண்ணும்

பூம்புன னுரையும் புரையக் குத்தி’’ (பெருங்கதை.வத்தவ.12:44-48)

ஆசிரியர் கூறுகின்றார். மானனீகை இருபத்தியொரு பந்துகளை எடுக்கிறாள். தான் நடுவில் நின்று பந்தகளைத் தன்னைச் சுற்றிலும் வட்டமாக வைக்கிறாள். பின்னர் பந்தை வானத்தை நோக்கி அடிக்கிறாள். மீண்டும் வந்த பந்தை நிலத்தில்அடிக்கிறாள். பந்து மேலே எழும்பும் போது தானும் மேலே எழுகிறாள். பந்தடிப்பதற்கு ஏற்ப அவளது கைகளும் கால்களும் உடலும் புருவமும் கண்களும் அசைகின்றன. அவள் இருபத்தியொரு பந்துகளை எடுக்கிறாள். மானனீகை பந்தடிக்கும் போது பாடல் மகளிர் நூல்களிற் கூறப்பட்ட வண்ணம் தாளம் தவறாது கைகளால் தாளம் இடுகின்றனர். அவளுடைய செயல் திறனைக் கண்டு ஏனைய பந்தாடும் மகளிர்கள் பாராட்டுகின்றார்கள். உதயணனின் மனைவிமார்கள் மானனீகையைக் கண்டு திகைத்து நிற்கின்றனர். பந்துகள் சுழலும் வேகத்தில் அவளும் சேர்ந்து சுழலுவதால் அவள் இருக்குமிடம் அறியாத தோழிமார்கள் இது என்ன மாயமோ என்று வியக்கிறார்கள். ஆசிரியர் கொங்குவேளிர் இந்நிகழ்ச்சியை,

     ‘‘சுழன்றன தாமங் குழன்றது கூந்தல்

     அழன்றது மேனி யவிழ்ந்தது மேகலை

     எழுந்தது குறுவிய ரிழிந்தது புருவம்

     ஓடின தடங்கண் கூடின புருவம்

     அங்கையி னேற்றம் புறங்கையி னோட்டியும்

     தங்குற வளைத்துத் தான் புரிந் தடித்தும்’’ (பெருங்கதை.4:12:225-230)

கூந்தல் சுருள்கிறது. உடல் வெதும்புகிறது. மேகலை அவிழ்கிறது. வியர்வையினால் சந்தனம் வழிகிறது. அகன்ற கண்கள் அங்குமிங்கும் ஓடுகின்றன. உள்ளங்கையால் பந்தை ஏற்று புறங்கையால் பந்தை தட்டியும் உடம்பை வளைத்து ஆடுகிறாள் என வர்ணனை செய்கின்றார் ஆசிரியர். இம்மாதிரியான பந்தாடுதல் முறையானது சீவகசிந்தாமணியில் விமலையாரும், குற்றாலக்குறவஞ்சியில் வசந்தவல்லியும் பந்தாடுகிறார்கள். பெண்கள் மட்டுமே கூடி பந்தாடுகின்ற இவ்வேளையில் வயந்தகன் உதவியால் உதயணன் பெண் வேடமிட்டு அக்கூட்டத்தினுள்ளே மானனீகையின் அழகைப் பருகிய வண்ணம் அமர்ந்திருக்கிறான்.

உதயணனின் காதல்

     மானனீகையின் பந்தடிக்கும் திறனைப் பார்த்து வியந்த வாசவதத்தை, இவளை உதயணன் கண்டால் உடனே காதல் கொண்டு விடுவான் என்று அஞ்சுகிறாள். அதனால் உதயணன் மானனீகையைப் பாரக்காதவாறு செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்கிறாள். ஆனாலும் பந்தடிக்கும் இடத்தில் மாறுவேடத்தில் இருந்த உதயணனின் மனமானது மானனீகையிடம் சென்று விடுகிறது. மானனீகையைப் பார்ப்பதற்காகத் தன்னுடைய தேவியரிடம் பந்தடித்த அனைத்து மகளிரையும் பார்க்க வேண்டும் எனக் கூறுகிறான்.  ஆனால் வாசவதத்தை மானனீகையைத் தவிர்த்து மற்ற பெண்களை அழைத்து வந்து காட்டுகிறாள். மானனீகை வராமல் இருப்பதைப் பார்த்த மன்னன் வருத்தப்படுகிறான். காதலின் மிகுதியால் எப்படியாவது மானனீகையைப் பார்த்து விட வேண்டும் என எண்ணுகிறான். இதனை,

‘‘ஒன்றிய வியல்போ டொன்றுக் கொன்றவை

ஒளித்தவும் போலுங் களித்தவும் போலும்

வேலென விலங்குஞ் சேலென மிளிரும்

மாலென நிமிருங் காலனைக் கடுக்கும்

குழைமே லெறியுங் குமிழ்மேன் மறியும்

மலருங் குவியும் கடைசெல வளரும்

சுழலு நிற்குஞ் சொல்வன பொலும்

கழுநீர் பொருவிச் செழுநீர்க் கயல்போல்

மதர்க்குந் தவிர்க்குஞ் சுருக்கும் பெருக்கும்’’ (பெருங்கதை.வத்தவ.12:270-279)

என்கிறார் ஆசிரியர். அதனால் தன்னுடைய மனைவி வாசவதத்தையிடம் ஆருணி மன்னன் சேமித்து வைத்த பொருட்களெல்லாம் இருக்குமிடம்  மானனீகைக்கு மட்டும்தான் தெரியும் என்று பொய் கூறுகிறான். அதனை உண்மை என நம்பிய வாசவதத்தை மானனீகையை அழைத்து வரும்படிச் செய்கிறாள்.

     மானனீகையிடம், நீதானே ஆருணி மன்னனுக்குத் திருமந்திர ஓலை எழுதுதலும், வழக்குரை அறையைக் காத்தலும், அம்மன்னனின் தேவியர்களுக்கு ஒப்பனை செய்யும் வேலையை செய்து வந்தாய் என்று கேள்விபட்டேன். அவளும் நான் ஒப்பனை செய்யும் வண்ணமகள்தான் என்று கூறுகிறாள். அதனால் மானனீகையை வாசவதத்தைக்கு வண்ணமகளாக நியமிக்கின்றான் உதயணன்.

முகம் வழியாகத் தூது

     பெருங்கதையின் மூன்றாவது காதல் இங்குதான் நடைபெறுகிறது. உதயணன் மானனீகை இவருக்கும் மட்டுமே தெரிந்த யவன மொழி இக்காதலில் முக்கியப் பங்கு வகிக்கிறது. வண்ணமகளாகச் செயல்பட்டிருக்கும் மானனீகை வாசவதத்தையின் முகத்தில் சந்தனமும் குங்குமமும் குழைத்து அழகாய் வண்ணம் தீட்டினாள். வாசவதத்தையின் முகத்தை மானனீகைதான் அழகாக மாற்றியிருக்கக் கூடும் என்பதை உதயணன் அறிகிறான். அதனால் மானனீகை செய்த ஒப்பனை இயற்கை அழகிற்கேற்ப அமையவில்லை எனக் கூறி அழிக்கிறான். பூந்துகளையும் சந்தனத்தையும் குழைத்து வாசவதத்தையின் முகத்தில் தானே ஒப்பனை செய்கின்றான்.  வாசவதத்தையின் நெற்றியின் மேல் தனக்கும் மானனீகைக்கும் மட்டும் தெரிந்த யவன மொழியில் காதல் மடல் எழுதுகிறான்.  ‘‘ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் ஈர்த்து ஒருநிலைப்படுத்துவதாகும். உள்ளத்துக்கு உணர்ச்சி ஊட்டுவதாகும். இத்தகைய சிறப்புடையமையாற்றான் இது நுண் கலைகளுள் ஒன்று என்று அறிஞரால் பாராட்டப்படுகிறது’’6 என்கிறார் இராசமாணிக்கனார்.

உதயணனின் காதல் மடல்

     சிறந்த புகழுடைய உதயணன் எழுதும் ஓலை இது. ‘‘நுண்ணிடையும் இன்மொழியும் சிவந்த வாயும் கொண்ட மானனீகையே! மேல் மாடத்தில் நீ பந்தடித்து விளையாடியபோது உன் வேல் போன்ற கண்கள் என் நெஞ்சைக் கிழித்தன.  நெருப்புப் போன்ற அந்தப் புண்ணுடன் உயிர் வாழ என்னால் முடியவில்லை. அப்புண்ணிற்கு மருந்து கொம்புத்தேன் போன்ற உன் குவிந்த மார்பகங்களே. நீ பந்தடித்தபோது என் மனம் பறையடித்தது. என் எண்ணமும் நிலைமையும் சொல்வதற்கரியன. காமமாகியப் பெருங்கடலிலே நான் அழுந்தாபடி ஆழ்ந்த நீரில் அகப்பட்டோர்க்குத் தெப்பம் போல நீ உதவி செய்து என்னை உய்யக் கொள்வாயாக! நான் நினைப்பவற்றையெல்லாம் எழுதுவதற்கு இந்த ஏடு (வாசவதத்தையின் நெற்றி) போதவில்லை’’7 என்று உதயணன் மடல் எழுதினான் என்கிறார் விஜயலட்சுமி. பெருங்கதையில்,

‘‘பற்றிய யவன பாடையி லெழுத்தவள்

     பூந்தா தோடு சாந்துறக் கூட்டி

     ஒடியா விழுச்சீ ருதயண னேலை

     மான னீகை காண்க சேணுயர்

     பந்துவிளை யாட்டினுட் பாவைதன் முகத்துச

     கொந்தழற் புண்ணொடு நொந்துயிர் வாழ்தல்

     ஆற்றே னவ்வழ லவிக்குமா மருந்து

கோற்றேன் கிளவிதன் குவிமுலை யாகும்’’ (பெருங்கதை.4:13:59-73)

என்று ஆசிரியர் பெருங்கதையில் கூறுவதாக அமைகின்றது. வாசவதத்தையிடம் நான் செய்த ஒப்பனை மிகவும் அழகாக உள்ளது என்கிறான் உதயணன்.

மானனீகையின் மறு மடல்

     தன்னுடைய மனைவி வாசவதத்தையின் முகத்தில் மானனீகைக்கு தூது அனுப்புகிறான் உதயணன். வாசவதத்தையின் முகத்தைப் பார்த்து உதயணனின் காதல் தூதை மானனீகைப் புரிந்து கொள்கிறாள். ‘‘அரசர் எழுதிய திருமுகம் மிக அழகுடையது என்று இரண்டு பொருள்படக் கூறுகிறாள். திருமுகம் (1.அழகிய முகம்   2. கடிதம்)’’8 என்கிறார் விஜயலட்சுமி. மானனீகையும் வாசவதத்தையின் நெற்றியில் ஒப்பனை செய்வது போல் யவன மொழியில் உதயணனுக்குப் பதில் எழுதுகிறாள்.

‘‘மறுமொழி கொடுக்கு நினைவின ளாகி

     நெறிமயிர்க் கருகே யறிவரி தாக

     எழுதிய திருமுகம் பழுதுபட லின்றிக்

     பொருந்திய பல்லுரை யுயர்ந்தோர்க் காகும்

     சிறியோர்க் கருளிய வுயர்மொழி வாசகம்

பேணு செய்தல் பெண்பிறந் தோருக்

புறஞ்சொலு மன்றி யறந்தலை நீங்கும்’’ (பெருங்கதை.4:13:108-121)

என்பதாகப் பெருமகனின் அருள் என் மேல் உண்டென்பதை அறிகிறேன். ஆனால் அத்தகைய உயர் மொழி வாசகம் என் போன்ற பணிமகளிர்க்குப் பொருந்தாது. வாசவதத்தைப் போன்ற அரச மகளிர்க்கே பொருந்தும். மேலும் காவல் உள்ள இடத்திலிருந்து கொண்டு மறைவாக நாம் செய்யும் செயல்களை யாரும் காணமாட்டார் என்று எண்ணிச் செயல்படுவது என்போன்ற பெண்களுக்குத் தகுதியல்லவே. பெருமானாகிய தாங்கள் என்மேல் வைத்த திருவருளை முற்றிலும் மறந்து விடுதல் நல்லது எனப் பதில் மடலில் உதயணனின் காதலை மறுத்து எழுதுகின்றாள். பெண்களுக்குக் கற்பொழுக்கம் என்பது நாணத்தின் ஒருபகுதியாகவே கருதப்பட்டது. நாணமிழந்தவள் கற்பு நெறியில் சிறக்கமாட்டாள் என்பது மானனீகை நன்கு அறிந்திருந்தாள். அதனால்தான் உதயணனின் விருப்பத்தை அறிந்த மானனீகை அச்சமும் நாணமும் கொண்டவளாகக் காணப்பட்டாள்.  தன்னைப் பற்றியும் உதயணனின் காதல் பற்றியும் பயமும் கொண்டாள். அதுவும் தான் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே துரோகம் செய்வது மிகப் பிழையாகும் என்று கருதினாள். இதேபோல் வாசசதத்தையின் முகத்தில் உதயணனும் மானனீகையும் திரும்பதிரும்ப காதல் கடிதம் எழுதி தூது அனுப்புகிறார்கள்.

குச்சரக்குடிகை

     மானனீகையிடம் உள்ள அளவற்ற காதலால் உதயணன் மீண்டும் மீண்டும் தன்னுடையக் காதலை வற்புறுத்துகிறான். அதனால் மானனீகை குச்சக்குடிகையில் அவனை இரவில் பார்க்க இசைகிறாள். உதயணன் மேல் வாசவதத்தை சந்தேகம் கொள்கிறாள். அதனால் காஞ்சனமாலையை உதயணனைப்பின் தொடரும்படி செய்கிறாள். குச்சரக்குடிகையில்  மன்னனும் மானனீகையும் காதல் வசப்பட்டுக் கூடியும் ஊடியும் நீண்ட நேரம் பொழுதைக் கழிக்கின்றனர். தாமிருவரும் வாசவதத்தை நெற்றியில் எழுதிய செய்திகளை மீண்டும் மீண்டும் கூறி மகிழ்கின்றனர். இறுதியில் மன்னன் மானனீகைக்கு மோதிரம் ஒன்றைப் பரிசாக அளிக்கிறான். இதனை ஆசிரியர்,

‘‘திருத்தகு மார்பன் கருத்தொடு புகுந்து

     விருப்பொடு தழுவி நடுக்கந் தீரக்

     கூடிய வேட்கையி னெருவர்க் கொருவர்

     ஊடியுங் கூடியு நீடுவிளை யாடியும்

     இருந்த பின்றை யிருவரு முறைமுறை

திருந்திய முகத்துப் பொருந்திய காதலொ

டெழுதிய வாசக மெல்லா முரைத்து

குறியெனக் கூறிச் சிறுவிரன் மொதிரம்

கொடுத்தன னருளிக் கோயிலு ணீங்க’’ (பெருங்கதை.4:13:182-291)

     காஞ்சனமாலையிடமிருந்து தெரிந்து கொண்ட வாசவதத்தை மிகவும் சினம் கொள்கிறாள். மன்னனிடமும் கனவில் கண்டதாக மானனீகையின் காதலைப் பற்றிக் கூறுகிறாள். மன்னன் கற்பனையால் வந்த கனவுதான் என்று சமாதானம் செய்கிறான். அன்று மாலையில் மானனீகையை சிறையில் அடைத்து விட்டு குச்சரக்குடிகைக்கு வாசவதத்தைச் செல்கிறாள். வாசவதத்தையை மானனீகை என்றெண்ணி கொஞ்சிப் பேசுகிறான் உதயணன். தனக்கு முன்னால் இருப்பது மானனீகை அல்ல வாசவதத்தைதான் என்பதை அறிந்து அதிர்ந்து போகிறான்.

     இவைப்போன்ற காட்சிகள் மற்றும் யவனமொழியில் எழுதப்படும் தூதுச் செய்திகள் என அனைத்தும் சிறந்த நாடகத்தைப் பார்க்கும் உணர்வைக் கொடுக்கிறது.

வாசவதத்தையின் கோபம்

     அடுத்தநாள் காலையில் மானனீகையைத் தூணில் கட்டி அவளுடைய மயிரைக் குறைக்க எண்ணுகிறாள் வாசவதத்தை. இதை அறிந்த வயந்தகன் என்பவன் கத்தரிகளை ஆய்வு செய்வது போல் நடித்து கொஞ்ச நேரம் காலம் நீட்டிக்கிறான். அங்கு ஒரு மௌன சூழல் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பதுமாபதி அங்கு வந்து கணவன் தவறு செய்தால் பெண்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று உரைக்கின்றாள். ஆனாலும் வாசவதத்தை யார் பேச்சையும் கேட்காமல் பிடிவாதமாகவே இருக்கிறாள். அதன்பிறகு,

‘‘தனக்குந் தங்கை  யியற்பது மாபதி

     இருந்ததுங் கேட்டேன் வசுந்தரி மகளெனப்

     பயந்த நாளொடு பட்டதை யுணர்த்தாள்

     தன்பெயர் கரந்து மான னீகையென

     அன்புடைய மடந்தை தங்கையை நாடி

எய்திய துயர்தீர்த் தியான் வரு காறும்’’ (பெருங்கதை.4:14:126-133)

     அச்சூழலில்தான் கோசல மன்னன் உதயணனுக்கு எழுதிய கடிதத்தை வாசவதத்தைக்கு அனுப்புகிறான். அக்கடிதத்தில், மானனீகை வாசவதத்தையின் தங்கை முறையாவாள் என்றும், ஆருணி மன்னன் அவனை போரில் கவர்ந்து சென்றதாகவும், அவளைத்தான் பிற்பாடு உதயணன் கவர்ந்து வந்துள்ளதாகவும் குறிப்பிடுகிறது. மேலும் கோசல நாட்டு மன்னனுக்கும் தன்னுடைய சிற்றன்னையாகிய வசுந்தரியின் மகளே மானனீகை ஆவாள் என்பதையும் வாசவதத்தை அறிகிறாள். கோபம் தணிகிறது. மன்னன் உதயணனுக்கும் மானனீகைக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. வாசவதத்தையும் பதுமாபதியும் மானனீகையைக் கொடுக்க நான்கு மறைகளும் ஓதி மணச்சடங்குகள் நிகழ்த்த பலபேர் முன்னிலையில் தீ வலம் வந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது.

முடிவுரை

     மேற்கண்ட பந்தடி கண்டது, முகவெழுத்துக்காதை ஆகிய இரு காதைகளிலும் பெண்களைக் காமப்பொருளாகவும் அடிமை பெண்களாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆணாதிகத்தால் போர்மேற் செல்லும் மன்னர்கள் அங்கு அழகாய் இருக்கும் பெண்களை வற்புறுத்தி அழைத்து வருவதும் அவர்களை உடல் சார்ந்து துன்பப்படுத்துதலும் நடைபெற்று வந்துள்ளன என்பதை அறிய முடிகிறது. கணவன் செய்யும் அனைத்திற்கும் பெண்கள் துணையாக இருக்க வேண்டும் என்று பதுமாபதியின் வாயிலாக அறிய முடிகிறது. அக்காலத்தில் போரின் காரணமாக ஆண்கள் அதிக அளவு உயிர் விட்டிருக்கலாம். அதனால் ஆண்கள் குறைவாகவும் பெண்கள் அதிகமாகவும் இருந்திருக்க வேண்டும். அதனால் ஒருஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுகின்ற வழக்கம் வந்திருக்கக்கூடும் என் நம்பப்படுகிறது. உதணயனுக்கு மானனீகை மூன்றாவது மனைவி. மேலும் மன்னனுக்கு நான்காவதாக விரிசிகை என்னும் முனிவரின் மகளையும் திருமணம் செய்து கொள்கின்றான். இராமாயணத்தில் அயோத்தி அரசன் தசரதனுக்கு அறுபதாயிரத்து மூன்று மனைவிகள் உள்ளனராம். சீவகசிந்தாமணியில் சீவகனுக்கு எட்டு மனைவிமார்கள் இருந்திருக்கிறார்கள். இவ்வாறாக அரசர்களின் வாழ்க்கையில் திருமண நிகழ்வுகள் இருப்பினும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழரின் பண்பாடாக இருப்பதைக் காணலாம்.

சான்றெண் விளக்கம்

1.தமிழ் இலக்கிய வரலாறு, மது.ச.விமலானந்தம், அபிராமி பதிப்பகம், சென்னை, ப.147

2.தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன், கலையக வெளியீடு, ப.236

3.பெருங்கதையில் பெண்மை, இரா.பொன்னுத்தாய், முனைவர் பட்ட ஆய்வேடு, ப.75

4.கொங்கு நாட்டு வரலாறு, இராமச்சந்திரன் செட்டியார், ப.102

5.கொங்குவேளிர், ரா.விஜயலட்சுமி, சாகித்திய அகாதெமி, ப.13

6.தமிழகக் கலைகள், மா.இராசமாணிக்கனார், பாரிநிலையம், சென்னை, ப.27

7. கொங்குவேளிர், ரா.விஜயலட்சுமி, சாகித்திய அகாதெமி, ப.86

8.மேலது.ப.86

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

முனைவர் க.லெனின்,

எழுத்தாளர், முதன்மை ஆசிரியர் (இனியவை கற்றல் )

www.iniyavaikatral.in

www.kelviyumpathilum.com

www.puthagasalai.com

youtube : iniyavaikatral (இனியவை கற்றல்)

சோம்பலை நெருங்க விடாதீர்கள்

சோம்பலை நெருங்க விடாதீர்கள்

தன்னம்பிக்கை கட்டுரை – 11

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

எழுத்தாளர், சுய முன்னேற்ற பேச்சாளர்

          உலகில் நீங்கள் சாதிக்க பிறந்தவர் என்றால் சோம்பலை நீக்க வேண்டும். எப்போதும் காலையில் ஆறுமணிக்கு எழும் நீங்கள் அதை ஐந்து மணியாகக்  குறைக்கலாம். அவ்வாறு எழுந்தநாள் மனதிற்கு சந்தோஷத்தைத் தரும். சுறுசுறுப்பைத் தரும். அந்தக் காலைநேரத்தில் அழகாக இதமாக பாட்டு ஒன்று பாடலாம் என்று தோன்றும். அந்த நாளில் செய்யும் செயல்கள் அனைத்தும் சிறப்பாக நடந்தேறும். பாரதியார் கூறுவார் “இன்று புதிதாய் பிறந்தேன்” என்று. அவ்வாறே நீங்களும் புதிதாகப் பிறந்ததைப் போன்று உணர்வீர்கள். சோம்பலை நெருங்க விடாதீர்கள்

        அடுத்த வாரத்தில் நாலரைமணிக்கு எழப் பழகுங்கள். மனம் மகிழ்ச்சியில் திழைக்கும். அன்று நீங்கள் என்ன செய்யவேண்டுமோ அவற்றை பட்டியலிடுங்கள். யாரை பார்க்கவேண்டும்? எத்தனை மணிக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள். எவ்வாறு அவரிடம் உரையாடுவது? என்பதை நிதானமாக யோசித்து பாருங்கள். சில நிமிடங்கள் பிராணாயாமம் செய்யுங்கள். சிறிது தூரம் காலார நடந்து செல்லுங்கள். நல்ல தூய்மையான காற்றைச் சுவாசித்து வாருங்கள். அன்று நீங்கள் சுறுசுறுப்பின் உன்னதத்தைப் பெறுவீர்கள். ஆதலால் அதிகாலையில் எழுந்து பாருங்கள் உங்கள் வெற்றி சிறிது அருகே வந்திருக்கும்.

நற்செயலுக்குப் பிறகு என்பதே இல்லை

        நல்ல செயல்களைj தள்ளிப்போடாதீர். பலர் இதை உணர்வதே இல்லை. எதை எடுத்தாலும் நாளை அப்புறம் பிறகு என்று தள்ளி போட்டுக்கொண்டே இருப்பார்கள். நேற்று என்பது முடிந்து விட்டது. நாளை என்பது இன்னும் வரவில்லை. இன்று என்பதே உங்களின் கைகளில் உள்ளது. மணித்துளிகள் உயிர் போன்றவை. சென்றால் திரும்பாது. அதனால் எப்போதும் நிகழ்காலத்தில் வாழுங்கள். நேற்று நடந்தவற்றை நினைத்து கொண்டோ அல்லது எதிர்காலத்தை எண்ணிக்கொண்டோ இருந்தால் நிகழ்காலம் இறந்துவிடும். எனவே நிகழ்காலத்தில் வாழுங்கள். பொன்மொழி ஒன்று கூறுவார்கள், “பிறகு என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்” ஒரு செயலைச் செய்யாமல் தள்ளிப்போடும் மனோபாவம் வந்துவிட்டால் அவர் அதனை முடிக்க இயலாது என்றே கூறலாம். ஒரு செயலைச் செய்யாமல் காரணங்களைச் சொல்பவன் பொய்களைச் சொல்கிறான். ஒரு மணிநேரம்தான் தள்ளிப் போடுகிறோம் என்ற எண்ணம் ஒரு வருடம் தள்ளிப்போடும் மனநிலையை கொண்டு வரும். எந்தச் செயலையும் உடனே இன்றே இப்போதே என்று செய்ய வேண்டுமே தவிர நாளை என்று தள்ளிப்போடாதீர். இவ்வாறு தள்ளிப்போடுவதற்கு காரணம் சோம்பேறித்தனம். தன்னை செயலைச்செய்யாமல் முன்னேற்றத்தைத் தள்ளிப்போடும் சோம்பல் தேவையா? நல்ல பெயரெடுக்க வைக்கும் சுறுசுறுப்பு அவசியமா? எது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

உறக்கத்தைத் தள்ளிவைக்கலாம்

       இராமாயணத்தில் கூறப்படும் நிகழ்வு ஒன்று. மந்தரை என்ற கூனி இராமனின் மீது கொண்ட கோபத்தால், கைகேயிடம் சூழ்ச்சியுடன் பேசுகிறாள். “இராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்யக்கூடாது. நாட்டை துறந்து அவனை காட்டிற்கு அனுப்ப வேண்டும.” என்று ஏதேதோ பேசி கைகேயியின் மனதை மாற்றிவிடுகிறாள். இதனால் இராமன் காட்டிற்கு அனுப்பப்படுகிறான். செல்லும்போது சீதையும் இலட்சுமணனும் உடன் வருகின்றனர். மூவரும் அயோத்தி நகரத்தை விட்டு நீங்கி கங்கை கரையை அடைகின்றனர். அப்போது அங்குள்ள மக்கள் மனம் கலங்குகின்றனர். அரசாள வேண்டிய இராமன் காட்டிற்குச் செல்கிறானே என்று வேதனைப்பட்டனர். நாளெல்லாம் நடந்து கங்கைக்கரையில் துறவர் தங்கியிருக்கும் இடத்தில் சீதையுடன் இராமன் தங்கியுள்ளார். தம்பி இலட்சுமணன் வெளியில் நின்று அண்ணனுக்குக் காவல் காக்கிறான். நாளெல்லாம் நடந்த களைப்பு. இரவுநேரம் கண்கள் அப்படியே மூடிக்கொள்கின்றன. உடனே இலட்சுமணன் “நித்திரைப் பெண்ணே என்னை விட்டு இப்போது சென்று பதினான்கு ஆண்டுகள் முடித்துவிட்டு மீண்டும் நாங்கள் அயோத்தியை அடைந்தவுடன் வா” என்று இலட்சுமணன் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்தில் உறங்கக்கூடாது என்று கண்விழித்து காத்தான். எனவே நீங்கள் இலட்சுமணன் போன்று இல்லாவிட்டாலும் உறக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். உறக்கம் என்பது உணவைப் போன்று அளவுடன் இருக்க வேண்டுமே தவிர, அது உங்களை மூழ்கடிக்க்க் கூடாது. சிலர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து களைத்துப்போவார்கள். பாவம் இவர்களின் ஆற்றலும் ஓய்வெடுத்து களைத்துவிடுகிறது என்பதை அறியாதவர்கள்.

இலக்கை குறி வையுங்கள்

       ஒன்றை பெறவேண்டும் என்று மனது  வைத்துவிட்டால் உழைப்பதற்கு நேரம் பார்க்கக்கூடாது. இரவுபகல் என்று பாராமல் உணவு உறக்கம் என்று நினைவில்வராமல் உழைப்பு செயல் முன்னேற்றம் வெற்றி என்றே சிந்தனையில் இருக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் உங்களுக்கு சோம்பலா? என்ன அது என்று கேட்பீர்கள். உமக்கு என்ன தேவை? வெற்றி. அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். ஒரு செயலைச் செய்யும் போது ஓய்வு வேண்டாமா? என்று கேட்கலாம். ஓய்வு வேண்டாம் என்று கூறவில்லை. அந்த நேரத்திலும் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடலாம். வெறுமனே அமர்ந்து கொண்டு இருக்காமல் அந்த நேரத்திலும் உங்களுக்கான யோசனைகளைப் புரட்டிப் பார்க்கலாம்.

       ஒரு இலக்கை நோக்கி அடைய வேண்டும் என்று புறப்பட்டு விட்டாலே போதும் சோம்பல் என்பது காணாமல் ஓடிப்போகும். நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலோ உங்களுக்கு அதில் ஆர்வம் குறைவாக இருந்தாலோ  சோம்பல் என்பது உங்களை ஆட்கொள்ளும். ஒன்று பிடித்த வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் பிடித்தவாறு செய்ய வேண்டும். இல்லையென்றால் சோம்பல்தான் மிஞ்சும். உங்களை திறனற்றவன் என்று பெயரெடுக்க வைக்கும். முன்னேற்றத்திலிருந்து உங்களை மிகவும் தூரத்தில் எறிந்துவிடும். எனவே கவனமாக இருந்து சுறுசுறுப்பை வரவழைத்து வாழ்ந்து பாருங்கள்! இந்த இயற்கை உலகம் உறவுகள் அனைத்தும் உங்களுக்காகவே படைக்கப்பட்டவை என்று நினைக்கத் தோன்றும். பொழிகின்ற மழை பூக்கின்ற மலர்கள் எல்லாம் உங்களை பார்த்து நேசம் கொள்வதைப்போல உணர்வீர்கள்.

சுறுசுறுப்பு என்பது மனிதனைக் காட்டாறு போல ஓட வைப்பது. பல தோல்விகளை வெற்றிகளாக மாறச்செய்வது. பல மணித்துளிகளை மிச்சப்படுத்துவது. பலரின் வாழ்க்கை தன்மையை மாற்ற வல்லது. எனவே சோம்பலை விரட்டுங்கள் வெற்றிக்கதவுகளைத் திறவுங்கள்.

மேலும் பார்க்க..

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

2.வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

3.விமர்சனங்கள் ஒரு பொருட்டல்ல

4.மாற்றி யோசியுங்கள்

 

இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்

இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்

இயன்மொழித்துறை காட்டும் நாட்டு வளம்

முன்னுரை

            நாடு என்பது பல்வேறு வளங்களின் இருப்பிடமாய் இருக்க வேண்டும். வளங்கள் இல்லா நாடு வறுமை உடைய நாடாகவே கருதப்படும். ஆதலால் நாடு பல்வேறு வளங்களையும் இயல்பாகப் பெற்றுத் திகழ வேண்டும். இயற்கை வளமே மற்ற எல்லா வளங்களுக்கும் அடிப்படையாக அமையும். இயற்கையே எல்லாவற்றிற்கும் காரணமாக அமைவதால் மக்கள் அதனைத் தெய்வமாக வழிபட்ட தன்மையைச் சங்க இலக்கியம் புலப்படுத்துகிறது. மற்ற நாடுகளிலிருந்து வளங்களைப் பெறாமல், எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதாய் நாடு அமைந்திருக்க வேண்டும். இதனை,

“நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளம்தரும் நாடு”1

என்ற திருக்குறள் குறிப்பிட்டுள்ளது.

மலை வளம்

            மலை கனிம வளங்களின் இருப்பிடமாகும். மழை ஆதாரத்தின் சிறப்பிடமாகும். அருவிகளின் பிறப்பிடமாகும். மலைகள் இல்லை யென்றால் ஆறுகள் கடல்கள் இல்லையெனலாம். அத்தகைய மலைகள் நாட்டினை அணி செய்வதில் இன்றியமையாததாக உள்ளது. சங்ககால மன்னர்கள் மலையினைக் களமாகக் கொண்டு ஆட்சி புரிந்துள்ளனர். மலைகளின் பல்வேறு செல்வங்களை அக்கால மக்கள் பெற்றுள்ளனர். குறிஞ்சி நில மக்களின் வாழிடமாக மலை இருந்ததைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது.

            கொண்கானம் கிழான் என்னும் குறுநில மன்னன் கொண்கானம் எனும் மலைப்பகுதியை மக்களின் மனநிலை அறிந்து சிறப்புடன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஆண்ட அம்மலைப் பகுதி வளங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்றிருந்தது. அது பகைவர் யாராலும் கைப்பற்ற முடியாத அளவிற்கு வலிமையிலும் சிறந்து விளங்கியது. மற்ற நாடு மன்னர்களின் வளத்திலோ ஏதேனும் ஒன்றில் மட்டும் சிறந்ததாக இருந்தது.

“ஒன்றுநன் குடைய பிறர்குன்றம், என்றும்

இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்”2

என்ற மோசி கீரனாரின் பாடல் அடியால் கொண்கானம் எனும் மலைப்பகுதி, வளத்திலும் வலிமையிலும் சிறந்து விளங்கிய தன்மையினை அறிய முடிகிறது.

            பாரி, பறம்பு மலைப்பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் மலையைப் பகைவர்களால் எளிதில் அணுக முடியாது. அவன் முல்லைக்குத் தேர் கொடுத்த சிறப்புக்குரியவன். அவனது மலைப்பகுதி பல்வேறு வளங்களில் சிறப்புற்றதாய் அமைந்திருந்தது. அம்மலையில் சுனைகள் பல இடங்களில் இருந்தன. அச்சுனை நீரின் சுவைக்கு வேறு எதுவும் ஈடாகாது.

“பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்

ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர்”3

என்ற கபிலரின் பாடல் பறம்பு மலையின் இயல்பினைப் பதிவு செய்துள்ளது.

            நாஞ்சில் வள்ளுவன் பாண்டியனின் படைத் தலைவன். அவன் நாஞ்சில் மலைக்குத் தலைவன். அம்மலை இயற்கை வளங்களை நிரம்பப் பெற்றிருந்தது. மலை மல்லிகையும், கூதாளியும் தழைத்துச் செழித்திருந்தன. தேன் போன்ற சுவை கொண்ட பலா மரங்கள் நிறைந்து விளங்கின. இதனை,

“நாறிதழ்க் குளவியொடு கூதளம் குழைய

………………………………………….

தீஞ்சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்”4

என்ற கரூவூர்க் கதப்பிள்ளையின் பாடல் அடிகள் பதிவு செய்துள்ளன. இதன் மூலம் மலைகள் மக்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதையும் அறிய முடிகிறது.

மழை வளம்

            மழை நீர் உயிர் நீர் என்பர். மக்கள் உயிர்வாழ நீர் இன்றியமையாதது. மனித உடல் இயக்கத்திற்கும் நீர் அவசியம். மனித உடலில் நீரின் அளவு குறைந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இத்தகைய நீனினை வழங்கவல்லது மழையே ஒரு நாட்டின் இயற்கை வளங்களை மேம்படுத்தும் மழை இல்லையென்றால் உழவுத்தொழில் சிறக்காது. மாதம் மும்மாரி பொழிய வேண்டும்| என்ற கருத்தின் மூலம் சங்ககாலத்தில் மழைக்கு நல்கிய சிறப்பினை அறிய முடிகிறது. மழையே நிலத்தின் வளமைக்கும், நாட்டின் வளமைக்கும் காரணமாக அமைகிறது.

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

நாமநீர் வேலி யுலகிற்கு அவனளிபோல்

மேல்நின்று தான் சுரத்தலான்”5

என்ற இளங்கோவடிகளின் பாடலால் மழையின் சிறப்பினை அறிய முடிகிறது.

            வெப்பத்தின் தாக்குதலால் மூங்கில்கள் காய்ந்து வாடின. குன்றுகள் அனைத்தும் பசுமையினை இழந்து வாடின. அருவிகள் நீரற்றுக் காட்சியளித்தன. அத்தகைய வறட்சிக் காலத்திலும், சேரன் செங்குட்டுவன் நாட்டில் மக்கள் பொன் ஏர் பூட்டி உழுது மகிழுமாறு மேகங்கள் கடலிலிருந்து நீரைக் கொணர்ந்து பொழிந்தன. இதனை,

“இருப்பணை திரங்கப் பெரும் பெயர் ஒளிப்பு,

குன்றுவறம் கூரச் சுடர்சினம் திகழ,

அருவி அற்ற பெருவறல் காலையும்,

அருஞ்செலல் பேர்யாற்று இருங்கரை உடைத்து,

கடிஏர் பூட்டிக் கடுக்கை மலைய

வரைவுஇல் கதிர்சிலை முழங்கிப் பெயல்சிறந்து,

ஆர்கலி வானம் தளிசொரிந் தாஅங்கு”6

என்ற பரணரின் பாடல் அடிகள் பதிவு செய்துள்ளன. இதன்வழி வெப்பம் மிகுந்த கோடைக் காலத்திலும் செங்குட்டுவனின் நாடு மழையைப் பெறுகின்ற இயல்பினை உடையதை அறிய முடிகிறது. மேலும், இயற்கை வளத்தைப் பேணிய காரணத்தினால் கோடையிலும் மழை பொழிந்ததையும் அறிய முடிகிறது.

நீர்வளம்

            நாட்டின் வளங்களுள் நீர்வளம் இன்றியமையாதாது. ~நீரின்றி அமையாது உலகு| என்பதின் மூலம் நீரின் தன்மையை அறிய முடிகிறது. மன்னன் மழை நீரை மட்டும் நம்பி வாழாது, மக்களுக்குப் பயன்படும் படியாக ஏரி, குளம், ஆறு போன்ற நீர்நிலைகளை ஏற்படுத்தி நாட்டில் நீர்வளங்களைப் பெருக்க வேண்டும். நீர்நிலைகளே, கோடைக் காலத்தில் வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாக்கும். நீரினைச் சேமிக்கும் இத்தன்மையால்தான் விவசாயம் செழிக்கும். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கும்.

“இயற்கையினால் உண்டாகும் மழைநீரை, மட்டும் நம்பி தமிழன் வாழவில்லை. அங்ஙனம் வாழ்ந்திருப்பின் நாடு செழிப்புடன் இருந்திருக்க முடியாது. ஆகவே, அவன் கால்வாய்கள் பலவற்றைத் தனது முயற்சியால் உண்டாக்கினான். குளங்களும், ஏரிகளும் அவனின் விடாமுயற்சியின் அடையாளங்களாக இன்றும் உள்ளன”7 என்ற கருத்து நீர்நிலைகளின் தன்மையினையும் அதன் சிறப்பினையும் எடுத்துரைக்கிறது.

            நாஞ்சில் மலையை ஆண்ட நாஞ்சில் வள்ளுவன் நீரின் மேன்மையை அறிந்தவன். மழையினை மட்டும் நம்பி வாழாது, பல்வேறு நீர் நிலைகளை ஏற்படுத்தி நாட்டில் நீர்வளத்தைப் பெருக்கினான். அதனால்தான், அவன் நாட்டில் நீரில்லையென்றால் காய்ந்து விடும் குவளை மலர் கோடைக் காலத்திலும் செழிப்புற்று வளர்ந்திருந்தது.

“கொண்டல் கொண்ட நீர் கோடைக் காயினும்

கண்அன்ன மலர் பூக்குந்து”8

என்ற ஒருசிறைப் பெரியனாரின் பாடலால் அறியலாம். இயல்பாகவே குவளை மலர் நீர் இல்லையென்றால் காய்ந்துவிடும். ஆனால், நாஞ்சில் நாட்டில் கோடைக் காலத்திலும் செழிப்புற்று குவளை மலர் வளர்ந்திருந்ததின் மூலம், அவன் நாட்டில் நீர்நிலைகள் பெருகியிருந்ததையும், கோடைக் காலத்திலும் வற்றாது காணப்பட்டதையும் அறிய முடிகிறது.

            வெள்ளி என்னும் சுக்கிர நட்சத்திரம் மழைக்கு உதவுகின்ற மற்ற விண்மீன்களோடு நிற்க வேண்டிய நாளில் நின்றது. கடலிலிருந்து எழுந்த கார்மேகங்கள் நான்கு திசைகளிலும் பொருந்தி உலகினைக் காத்தற் பொருட்டு கார்காலத்தில் மழைபொழிய வலப்பக்கமாக எழுந்தது. ஆனால் மழை பொழியாது கார் மேகம் மறைந்து விட்டது. கார்மேகம் மழை பொழிய மறந்தாலும், பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் நாடு எப்பொழுதும் வற்றாத நீர்வளங்களை உடையது.

“மன்னுயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும்

கொண்டல் தண் தனிக் கமஞ்சூல் மாமதை

கார் எதிர் பருவம் மறப்பினும்

பேரா யாணர்த்தால், வாழ்க நின்வளனே!”9

என்ற பாலை கௌதமனாரின் பாடல் அடிகள் பல்யானைச் செல்கெழுகுட்டுவனின் நாடு வற்றாத நீர் நிலைகளைக் கொண்ட தன்மையினைப் பதிவு செய்துள்ளன.

நிலவளம்

            நிலம் மனிதனுக்கு இயற்கை தந்த கொடை. நிலத்திற்கு மனிதன் என்ன செய்கிறானோ அதனையே திருப்பி நிலம் மனிதனுக்குச் செய்யும். நிலத்தை மாசு அடையாமல் காத்தால்தான் நாடு வளமையானதாக இருக்கும். சங்ககாலத் தமிழ் மக்கள் நிலத்தின் பயனை நன்கு அறிந்திருந்தனர். அதனால்தான், நிலத்தை வளப்படுத்தி, பயிர்களைச் செழுமையாக்கினார். அவர்கள் நிலத்தை நன்செய், புன்செய் என்று பாகுபடுத்தி அதற்கேற்றவாறு விதைகளை விதைத்தனர் என்பதை,

“தமிழ்நாட்டு நிலம் மிக வளப்பமானது. நன்செய் நிலம் நெல், கரும்பு உற்பத்தி ஆகிய அளவிற்கு மெத்த வளமும், புன்செய் கேழ்வரகு, கரும்பு, சோளம் ஆகிய புஞ்சைப் பயிர்கள் பயிராகிற அளவிற்கு ஓரளவு வளமும் உடையது”10 என்ற கருத்தின் வாயிலாக தமிழ்நாட்டு நில வளத்தின் தன்மையினை அறியலாம்.

            நாஞ்சில் வள்ளுவன் ஆண்ட நிலப்பகுதி மிகவும் வளமுடையதாகத் திகழ்ந்தது. இயல்பாகவே எல்லா நாட்டிலும் மழை பொழியும் காலத்தில் பயிர்கள் செழுமையுடன் வளரும். ஆனால், நாஞ்சில் வள்ளுவன் நாட்டில், மழையில்லாத கோடைக் காலத்திலும் மக்கள் விதைத்த வித்து கரும்பு போல தழைத்தது.

“காய்த்திட்ட வித்து வறத்திற் சாவாது

கழைக்கரும்பின் ஒலிக்குந்து”11

என்ற பாடல் அடியால் நாஞ்சில் நாட்டில் நிலம் வறண்ட கோடைக் காலத்திலும் பயிர்கள் செழித்து வளர்ந்த தன்மையினை அறிய முடிகிறது.

உணவு வளம்

            உணவின் மூலாதாரம் விவசாயம். எந்தவொரு நாடு விவசாயத்தில் செழிப்புற்றிருக்கிறாதோ அந்நாட்டில் வறுமையும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இருக்காது. உணவினைத் தரும் விவசாயத்தை அனைவரும் போற்றிக் காக்க வேண்டும். மக்கள் உயிர் வாழ்வதற்கும், உடலை வலிமையோடு வைத்துக் கொள்வதற்கும் உணவு இன்றியமையாததாக விளங்குகிறது. மக்களுக்கு உணவு மருந்தாகவும் பயன்படுகிறது. உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைக் கூறுகளில் உணவிற்கே முதன்மை அளிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மன்னர்களுக்குப் புலவர்கள் நாட்டின் நிலையை அறிவுறுத்துகையில், உணவின் இன்றியமையாமையை அறிவுறுத்தியதனைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. உணவிற்கு அடிப்படையான உழவினையும், உழவர்களையும் மன்னர்கள் போற்றிக் காத்தனர்.

“சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை”12

என்ற குறளானது உணவிற்கு அடிப்படையான உழவின் தன்மையைக் குறிப்பிட்டுள்ளது.

            நல்லியக்கோடன் ஓய்மான் நாட்டை ஆட்சி புரிந்தவன். அவன் உணவிற்கு மக்கள் பசியறியாது வாழ்ந்து வந்தனர். அவன் நாட்டில் எங்கும் உணவு வளம் நிறைந்திருந்தது. அவன் நாட்டில் விளையாட்டில் ஈடுபட்ட மக்கள், பன்றி உழுத சேற்றைக் கிளறினர். அப்போது அதிலிருந்து ஆமை முட்டையையும், அல்லிக் கிழங்கையும் எடுத்தனர்.

“கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்

யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்

தேன்நாறு ஆம்பல் கிழங்கோடு பெறூஉம்”13

என்ற புறத்திணை நன்னாகனார் பாடல் அடிகள் நல்லியக்கோடன் நாடு உணவு வளத்தில் குறைவுபடாது இருந்த இயல்பைக் காட்டுகின்றது.

            பிட்டன் கொற்றன் நாட்டு மக்கள் பன்றி கிளறியப் புழுதி பரந்த இடத்தில் நல்ல நாளினைப் பார்த்து தினையை விதைத்தனர். தினை வளர்ந்து முற்றியது. அதனை அறுவடை செய்து, மான்கறி சமைக்கப்பட்ட பானையில் தினையைக் கொட்டி, சந்தன விறகினைக் கொண்டு தீமூட்டிச் சமைத்தனர். சமைத்த உணவை வாழை இலையில் பரப்பி, அவன் நாட்டு மக்கள் உண்டு மகிழ்ந்தனர்.

“கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு

கடுங்கண் கேழல் உழுத பூமி

நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்

உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதிணை”14

என்ற கரூவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனாரின் பாடல் பிட்டன் கொற்றன் நாடு பசியறியாது உணவு வளத்தில் சிறந்திருந்த இயல்பைப் பதிவு செய்துள்ளது.

            பாண்டி நாட்டில் பிசிர் என்ற ஊர் உள்ளது. அவ்வூர் உணவு வளம் குன்றாது சிறப்பற்றிருந்தது. அவ்வூரில் இடைச்சி சமைத்த புளியங்கூழை, அவரைக் கொய்பவர்கள் தம் வயிறு நிரம்ப உண்டனர்.

“கவைக்கதிர் வரகின் அவைப்புறு  வாக்கல்

தாதெரு மறுகின் போதொடு பொதுளிய

வேளை வெண்பூ வெண் தயிர்க் கொளீஇ”15

என்ற கோப்பெருஞ்சோழரின் பாடல் அடிகள் பாண்டிய நாட்டுப் பிசிர் என்ற ஊரானது வற்றாது உணவு வளத்தைக் கொண்ட தன்மையினைப் பதிவு செய்துள்ளன.

தொகுப்புரை

சங்ககாலம் நிலம், நீர், மலை, மழை, உணவு இயற்கை போன்ற அனைத்து வளங்களையும் பெற்று தன்னிறைவு உடைய சமுதாயமாக விளங்கியது. மன்னன் நீர்நிலைகளை ஏற்படுத்தி வேளாண் தொழிலையும், நீர்வள ஆதாரங்களையும் பெருக்கினான். மழையை நம்பியிராது கோடையிலும் மக்கள் செழிப்புற்று வாழ்ந்துள்ளனர்.

சான்றெண்விளக்கம்

1.திருக்குறள், 739

2.புறம். 156 (1-2)

3.மேலது, 176 (9-10)

4.மேலது, 380 (7-9)

5.சிலம்பு, மங்கல வாழ்த்துப் பாடல், (7-9)

6.பதிற்றுப். 43 (12-18)

7.அ.ச.ஞானசம்பந்தன், அகமும் புறமும், ப.214

8.புறம். 137 (7-8)

9.பதிற்றுப். 24 (27-30)

10.க.ப.அறவாணன், தமிழ் மக்கள் வரலாறு, ப.188

11.புறம். 137 (5-6)

12.குறள். 1031

13.புறம். 176 (2-4)

14.மேலது, 168 (3-6)

15.மேலது, 215 (1-3)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

திருமதி அ.கிறிஸ்டி நேசகுமாரி

ஆய்வில் நிறைஞர்

தமிழாய்வுத்துறை,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல் – 637501.

 

இரண்டாவது மனைவி | சிறுகதை

இரண்டாவது-மனைவி

இரண்டாவது மனைவி

ஆட்டோவிற்கு மூன்று சக்கரம்தான் உள்ளது. நான்காவதாக இன்னொரு சக்கரம் இருந்தால் நன்றாய் இருந்திருக்கும். மூன்று சக்கரம் உள்ளதால்தான் ஆட்டோ என்கிறோம். நான்கு சக்கரம் இருந்துவிட்டால் குட்டியானை, டெம்போ, லாரி என்றல்லவா அழைத்திருப்போம். கையில் பிடித்த ஸ்டிரிங்கை சாலையில் குண்டு குழியில் சக்கரம் சிக்கிக்கொள்ளாமல் சரியாக ஓட்டினான் கனகசபை. அவனுடைய ஆட்டோவில் வருகின்றவர்களுக்கு ஒருகுறையும் வந்துறக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பான்.

“தம்பி இந்த இடம்தான் நிறுத்துப்பா..” என்றார் அந்த வயதானவர்.

ஆட்டோவை நிறுத்தி மீட்டரைப் பார்த்தான் கனகசபை. அந்தப் பெரியவரும் பார்த்தார். இரண்டு பேர் கண்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் வந்துவிடப்போகிறது. ஒரே தொகைதான். பெரியவர்  கனகசபையிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு ஆட்டோவில் அமர்ந்திருக்கும் தன்னுடைய வயதான மனைவியை அழைக்க கையை நீட்டினார். அதற்குள் கனகசபை கீழே இறங்கி,

“பெரியவரே இருங்க. அம்மாவ நானே மெதுவா இறக்கி விடுறேன்”

“உனக்கு எதுக்குப்பா சிரமம். நான் பாத்துக்கிறனே” என்றார் பெரியவர்.

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்ல. பாட்டியம்மா என்னோட கையைப் புடிச்சுக்கோங்க” என்றான். அந்த வயதான அம்மாவை மெதுவாய் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டான். அவர்களுடையப் பைகளையும் கொண்டுபோய் வீட்டின் உள்கதவு வாசலில் வைத்தான். ஆட்டோவிற்கு திரும்பி வந்த கனகசபை ஒருமுறை ஆட்டோவை நன்றாகக் கவனித்தான். எதையாவது விட்டுவிட்டு சென்று இருப்பார்களா என்று? எதுவுமில்லை என்றவுடன் மீண்டும் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான். அப்போதுதான் அதை கவனித்தான்.

அந்தப் பெரியவருக்குத் தொன்னூறு வயதிற்கு மேல் இருக்கும். பெரியம்மாவிற்கு எம்பத்தைந்தைத் தாண்டியிருக்கும். சுருக்கம் விழுந்த பெரியம்மாவின் கையை இறுகப்பற்றியிருந்தார் அப்பெரியவர். பெரியம்மாவும் கணவனைத் தாங்கிப்பிடித்து நடந்து சென்றார். கனகசபைக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. இத்தனை வயசுக்குப் பின்னாலும் காதலும் தாபத்தியமும் இனிக்கின்றதா என்ன? உன்னதமான அன்பு இறைவனால் எப்போதும் கைவிடப்படுவதில்லை. ஆட்டோ வேகமாக ஓடியதில் புகை கருகியது.

சார்பதிவாளர் அலுவலகம் முன்பு கல்யாணி நின்றிருந்தாள். எடுப்பான தோற்றம். கை இடுக்கில் தோல்பை ஒன்று. பார்க்க சாதாரணமாய் இருந்தாலும் அழகாய் இருந்தாள். கல்யாணியின் கண்கள் வலதும் இடதுமாய் சுழன்ற வண்ணம் இருந்தன. இப்போது அவளின் முன்னால் ஆட்டோ வந்து நின்றது.

“ஏன் இவ்வளவு நேரம். சீக்கிரம் வர வேண்டியதுதானே” என்று கடிந்து கொண்டாள் கல்யாணி.

“சவாரி ஒன்னு இருந்தது. அதான் லேட்டாயிடுச்சி. வா.. வந்த ஆட்டோவுல சீக்கிரம் ஏறு. இன்னும் பசங்கள வேற கூப்பிட போகனும்” என்றான் கனகசபை.

பசங்க என்று சொன்னவுடன் முகம் கோணலாகியது கல்யாணிக்கு. இறுகிய முகத்துடனே ஆட்டோவில் ஏறினாள். கொஞ்சதூரம் சென்றவுடன் மளிகைகடை தாண்டி ஆட்டோவை நிறுத்தினான். கடைக்குச் சென்று பால் பாக்கெட் வாங்கி வந்து கல்யாணியிடம் கொடுத்தான். அவளும் வாங்கிக்கொண்டாள்.  வீடு போய்ச்சேரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆட்டோவிலிருந்து கல்யாணி இறங்கியவுடன் புறப்படத் தயாரானான்.

“உள்ள வந்து காபி சாப்பிட்டு போங்க” என்றாள் கல்யாணி

“ஸ்கூல்ல இருந்து பசங்கள கூப்பிடனும். இப்பவே டைம் ஆச்சு. நான் அப்புறமா வரேன்” என்று சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

“இந்த மனுசனுக்கு இங்க வந்தாதான் ஏதோவொரு வேல இருக்குன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடுராரு. மாசம் பொறந்திச்சின்னா போதும், கல்லி..கல்லி..யின்னு பின்னாலே வந்து அந்தச் செலவு இருக்கு இந்தச் செலவு இருக்குன்னு வாங்கின சம்பளத்துல பாதிய புடிங்கிடுறாரு. மீதியை அப்பப்ப வந்து வாங்கிகிட்டு போயிடறாரு. ஆனா செய்யுறது எல்லாம் அந்த வீட்டுக்கு மட்டுதான். என்ன கொஞ்சமாவது நினைச்சு பாத்தாரா..” மனதில் பொறுமிக் கொண்டாள் கல்யாணி.

வாசலில் கீரையை ஆய்ந்து முறத்தில் வைத்துக்கொண்டிருந்தாள் மீனாட்சி. ஆட்டோ வந்ததும் பிள்ளைகள் ரெண்டும் வேகவேகமாய் அம்மாவைக் கடந்து உள்ளே ஓடின. ஆட்டோவை நிறுத்தி விட்டு கனகசபையும் மீனாட்சியைத் தாண்டி உள்ளே நுழையப்போனான்.

“பசங்களுக்கு எப்ப ஸ்கூல் முடிஞ்சது. இப்பத்தான் கூட்டிட்டு வரீங்க. இவ்வளவு நேரமா எங்க போனீங்க“

“சவாரி இருந்திச்சி. அதான் ஸ்கூலுக்குப் போக லேட்டாயிடுச்சு”

“எல்லாம் எனக்கு தெரியும். ஆட்டோ எங்கயெல்லாம் போகுதுன்னு.. நடக்கட்டும் எத்தனை நாளைக்குன்னு நானும் பாக்குறன்”

“என்ன விசாரணை கமிஷனா? உனக்கு என்ன தெரியும்? அவனவனுக்கு ஆட்டோ ஓட்டி கஷ்டபட்டா தெரியும்”

“ஆமா… ஊர்ல எவனுமே ஆட்டோ ஓட்டுல பாரு. துரை நீங்க மட்டுந்தான் ஆட்டோ ஓட்டுறீங்க”

அடுத்த வினாடி மீனாட்சியின் கையில் இருந்த முறம் வாசலுக்குப் பறந்தது. கனகசபை வீட்டிற்குள் சென்றான். மீனாட்சி தேம்பி தேம்பி அழுதாள். பெரியவனும் சின்னவனும் பாத்ரூமில் ஒன்னுக்குப் போகச் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். சத்தம் கேட்டு ரெண்டு பசங்களும் அமைதியாய் வெளியில் எட்டிப்பார்த்தனர்.

அந்தத் தெருவில் கடைசி வீடுதான் கல்யாணியின் வீடு. ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் அவள் வீட்டு முன்னால் ஆட்டோ வந்து நின்றது. கையில் கேரிபேக். அவற்றில் மீன் இருந்தது. நேராக உள்ளே சென்றவன் கதவைச் சாத்தினான். தான் வந்த போவது யாருக்கும் தெரியக்கூடாதாம். ஆனால் அந்த வீட்டு முன்னால அப்பப்போ ஆட்டோ வந்து நிக்கிறது தெரு முழுக்க தெரிஞ்சுதான் இருந்தது.

“கல்யாணி.. கல்யாணி… எங்க இருக்குற…” என்று அழைத்துக்கொண்டே பின் வாசலுக்குச் சென்றான்.

“துணி துவைச்சிட்டு இருக்கேன்” பதில் உடனடியாக வந்தது.

      அவளின் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான். கல்யாணியையே உற்றுப் பாரத்துக் கொண்டிருந்தான். என்ன அழகு? தங்கமான குணம்! வியர்வையும் தண்ணீராலும் நனைந்து போயிருந்த முதுகுபுறம். தன்னையே மறந்து போனான்.

      “என்ன புருஷன் சார்! பொண்டாட்டிய சைட் அடிக்கிறியா?”

      “ஆமாம்!”  உண்மையை ஒத்துக்கொண்டான் கனகசபை.

      “செம தைரியம்தான் உங்களுக்கு! சரி நடங்க வெளிய போவோம்…”

      “எதுக்கு வெளிய கூப்பிடுற”

      “சும்மாதான்… கொஞ்ச வாயேன்..” என்று கையைப் பிடித்து இழுத்தாள். அவள் கை முழுவதும் அழுக்கு சோப்பு நுரை இருந்ததனால் வழுக்கிச் சென்றது.

      “என்ன சைட் அடிக்கிற இல்ல.. அதான் வெளிய வந்து ஊரக்கூட்டுறன். சத்தமா இவதான் என்னோட பொண்டாட்டின்னு சொல்லு”

      “ம்..ம்.. அது வந்து.. அது வந்து… என்னால முடியாது”

      “என்ன முடியாதா? ஆமா நானு யாரு? உங்கள சந்தோஷப்படுத்தனும். காசு கேட்கிறப்பல்லாம் கொடுக்கனும். அதான உங்க விருப்பம். சிறுக்கி மொவதான நானு!

      “அப்படியில்ல கல்யாணி தப்பா புரிஞ்சுக்காத…” கோப முகத்துடன் ஐந்து விரல்களையும் ஒன்றாக தலைக்கு மேல தூக்கி, ”போதும் நிறுத்து பேசாத! நான் சிறுக்கி மொவதான” என்றாள். கல்யாணியின் மனம் குமறியது.

      “தெருவுல நடக்க முடியல. என்ன யாரு பாத்தாலும், டே ஸ்டெப்னி போகுதுடா – ன்னு சொல்றாங்க. செகணட்டு, பழசு, ஓட்ட காரு, டவுன்பஸ்சு, டே அந்த ஆட்டோக்காரன் அவனுக்கும் வண்டிக்கும் ஸ்டெப்னி வச்சிருக்காண்டா ன்னு சொல்றாங்க”

      “நமக்குத்தான் கல்யாணம் ஆயிடுச்சில்ல. நீ என்னோட பொண்டாட்டி கல்யாணி. உன்ன எதுக்கு அப்படி பேசனும்”

      “உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆயிடுச்சின்னு நம்ம ரெண்டு பேரு, அப்புறம் அந்தப் பூசாரி அப்புறம் ரெண்டு பொண்டாட்டிகார சாமி. அவ்வளவுதான் வேற யாருக்குமே தெரியாது. இதெல்லாம் ஒரு கல்யாணமா? நல்லது கெட்டதுக்குப் போக முடியல… நீதான் யே புருஷன்னு வெளிய சொல்ல முடியல.. ஆபிஸ்ல எங்க வூட்டுகாரரு மாதிரி யாருமில்லன்னு சொல்லி வச்சிருக்கேன். இன்னும் அவுங்களுக்கு நம்ம கதை தெரியல. தெரிஞ்சா அவ்வளவுதான் நான். ஏதோ யே கதையும் ஓடிட்டு இருக்கு” கடுகடுத்தாள் கல்யாணி. கனகசபை மூஞ்சியை உம்மென்று வைத்திருந்தான்.

“உங்களுக்கென்ன நீங்க ஆம்பிளைங்க. உங்க சுகதுக்கத்தை எல்லாம் இங்க இறக்கி வச்சிட்டு போயிடுவீங்க… நாங்க எங்க இறக்கி வைக்கிறதாம்? எந்த நேரத்துல எங்க அம்மாக்காரி என்னைப் பெத்துப்போட்டாலோ தெரியல. காலம் பூராவும் லோலு பட்டுட்டு திரியரன். இதுக்கு ஒரு விடிவுகாலமே வராதா” என்று அண்ணாந்து வானத்தைப் பார்த்துக் கொண்டாள். கனகசபை தலை குனிந்து கொண்டான். கனகசபை அப்படி உட்காந்திருப்பது கல்யாணிக்குப் பிடிக்கவில்லை.

“சரி.. தலையை தொங்கப்போட்டுட்டு உட்காந்து இருக்காதீங்க. நல்லா இல்ல! சரி கையில என்ன வச்சிருக்கீங்க..”

“மத்தி மீனு வாங்கிட்டு வந்திருக்கேன். மத்தி மீனு உடம்புக்கு நல்லாதாம். குழும்பும் ருசியாய் இருக்குமாம்”

“அந்த வூட்டுக்கு என்ன வாங்கி கொடுத்தீரூ…” புடவைக்கு சோப்பு போட்டுக்கொண்டே கேட்டாள்.

“அங்கேயும் மீனு வாங்கி கொடுத்துட்டுதான் வரேன்” கல்யாணி கனகசபையை முறைத்துவிட்டு, மீன அலசி வையுங்க. சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடியை எடுத்து உரிச்சி வையுங்க. புளி கொஞ்சம் ஊற வைச்சிருங்க. நானு இந்த ரெண்டு துணியை அலசி போட்டுட்டு வந்துடுறேன்.

ஒரே பொண்ணுங்கிறதால அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பொண்ணு. அம்மாதான் இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து அவள கெடுக்கிறீங்க.. என்று அப்பப்போ சண்டை போடுவா.  இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சிட்டு இருந்தேன். அப்பதான் எங்க வீட்டுக்கு அப்பாவோட பால்ய வயசு நண்பர் ஒருத்தர் வந்திருந்தார். அவுங்க பையன் குரூப் எக்ஸாம் பாஸ் பண்ணி வேலையில இருக்கிறானாம். இப்ப பொண்ணு தேடிக்கிட்டு இருக்காங்களாம். என்னைப் பார்த்து,

“நீ என்னம்மா பண்ற” – என்றார் அவர்.

“பி.இ முடிச்சிருக்கேன். இப்ப வேலை தேடிகிட்டு இருக்கேன். அப்பாவுக்கும் வயசாயிடுச்சி. அப்பாவுடைய பென்சன் பணத்துலதான் குடும்பமே ஓடுது. நான் வேலைக்கு போனேனான்னா… கொஞ்சம் சிரமம் கொறையும்” வந்தவரிடம் தன்னுடைய இயலாமையைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டாள் கல்யாணி.

“நீ ஏன் குரூப் எக்ஸாம்க்கு படிக்க கூடாது” என்றார்.

அன்று அவர் சொன்னதுதான் மூன்று வருடங்களுக்குப் பிறகு சாத்தியமாகி இருக்கிறது. இரவு பகல் என்று பாராமல் படித்தவள் இன்று அரசாங்க வேலையில் அமர்ந்திருக்கிறாள். கல்யாணிக்கும் வயசு ஏறிக்கொண்டே சென்றது. அப்பாவும் அவருடைய நண்பரும் அடுத்த சந்திப்பில் என்னுடைய கல்யாணத்தைப் பற்றியும் பேசிக்கொண்டனர். அப்பாவின் நண்பருடைய மகனை எனக்கு நிச்சயம் செய்திருந்தனர். நல்ல சம்பந்தம்தான். அன்று காலை நல்ல சுபமுகூர்த்த வேளையில் எனக்கு திருமணம் நடந்தது. மறுவீடு அழைப்பின் போது என்னுடைய கணவர் அவரின் தங்கை குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் வாங்க பைக்கில் செல்லும் போது லாரி மீது மோதி மரணமடைந்தார். அத்துடன் என் வாழ்வும் நடுத்தெருவுக்கு வந்து விட்டது. கொஞ்ச காலத்தில் அப்பாவும் அம்மாவும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். நான் அநாதை ஆக்கப்பட்டேன்.  அப்பொழுதுதான் தனிமையை முழுமையாக உணர்ந்தேன். வேலைக்கு சென்று வரும்போதுதான் இந்தக் கனகசபையைப் பார்த்தேன். தினமும் அவருடைய ஆட்டோவில்தான் சென்று வருவேன். ஆரம்பத்தில் நான் அவருடன் பேசவே மாட்டேன். நாளாக நாளாகப் கொஞ்சம் பழக்கம் ஏற்பட்டது. அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் என்னுடைய ஆதரவை எண்ணி அவரை விரும்ப ஆரமித்தேன். இந்தச் சமூகத்தில் எனக்கு மனைவி என்கிற அந்தஸ்து வேண்டும். கனகசபையும் அவருடைய வீட்டில் எப்படியோ சம்மதம் பெற்று தருவதாக உறுதி அளித்தார். மனைவி என்கிற அந்தஸ்து அவரிடம் கிடைக்கும் என நம்பினேன். அதனால் அவருக்கு இரண்டாவது மனைவியாகக் கழுத்தை நீட்டினேன்.

எந்த மனைவியாவது தன்னுடைய கணவனுக்கு இன்னொரு மனைவி வருவதை ஒத்துக்கொள்வாளா? எங்கையாவது இப்படி நடக்குமா? நான்தான் முட்டாள்தனமாக நம்பிவிட்டேன். என்ன மடத்தனமாய் இருக்கிறது? என்று துணிகளை அலசிக்கொண்டை அத்தனையும் மனதில் படமாய் ஓட்டிப்பார்த்துக் கொண்டாள். கையில் இருந்த ஈரப்புடவையை கையை மேலே தூக்கி உதறினாள். துளித்துளியாய் தண்ணீர் சாரளாய் தெரித்தது. மத்தி மீனு குழம்பில் கொதித்தது. கல்யாணியின் மனமும் குழம்பில் கிடந்த மீனாய் தவித்த்து.

அன்று மாலை கல்யாணியில் வீட்டுக்கதவு யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மாராப்பை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு கல்யாணிதான் கதவை திறந்தாள். திறந்தவுடன், “ஏ… தேவுடியா மொவளே!..” என்று அவளுடைய வயிற்றில் எட்டி உதைக்கப்பட்டது. தொப்பென்று உள்ளே போய் விழுந்தாள். அதற்குள் கனகசபையின் மனைவியும் அவளுடைய தம்பிகளும் உள்ளே நுழைந்திருந்தனர். மீனாட்சி கனகசபையைப் பார்த்தாள்.

“இந்தாருடா தம்பி… உங்க மாமன பாத்தியாடா… ஆட்டுக்கறியை எனக்கு எடுத்துக்கொடுத்துட்டு மூத்திரத்த குடிக்க இங்க வந்திருக்காருடா” – மீனாட்சி

“அக்கா சும்மா இரு… பேச்சைக்கொற.. மாமா நீங்க வாங்க மாமா…” என்று கனகசபையை வெளியே அழைத்துச்சென்றனர். செல்லும்போது அக்கா மீனாட்சியிடம் கண்ணைக்காமித்துக் கல்யாணியைப் பாரத்தனர். அவ்வளவுதான்! மீனாட்சி கல்யாணியின் மேல் ஏறி சிண்டப்புடிச்சி அடிஅடியென்று அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள். தலைமுடி விரித்த நிலையில் கல்யாணி கீழே படுத்துக்கொண்டிருக்க, கல்யாணியின் வயிற்றின் மேல் மீனாட்சி அமர்ந்திருந்தாள். அவளின் கைகள் கல்யாணியின் மார்பை ஓங்கி ஓங்கி குத்தியது. மீனாட்சியின் வாயில் கெட்ட வார்த்தைகள் தவிர வேறெதுவும் வரவில்லை. பச்சை பச்சையாகத் திட்டிக்கொண்டிருந்தாள்.

“விடுங்கடா என்னை… எங்கடா கூட்டிட்டு போறீங்க… ” என்றார் கனகசபை. மீனாட்சியின் தம்பிகள் ரெண்டு பேரும் அந்த வீதியின் முனைப்பகுதியில் உள்ள சாலையில் கொண்டு வந்து சேர்த்தனர். கல்யாணி வீட்டில் மீனாட்சி அடிப்பது பெரும் சத்தத்ததுடன் அலறல் கேட்டது. அந்த வீதி முழுவதும் கூட்டமாய் மக்கள் நிறைந்து இருந்தனர். கடைசி வீட்டில் அப்படி என்ன நடக்கிறது என்ற ஆவலே அவர்களிடத்தில் மிகுந்திருந்தது. ஒரு சிலபேர் இப்படி அப்படி என்று பலர் அலர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கல்யாணியால் அடியைப் பொறுக்க முடியவில்லை. மயக்க நிலைக்குக் கொஞ்சகொஞ்சமாய் சென்றுகொண்டிருந்தாள். மீனாட்சியின் ஒவ்வொரு அடியும் கன்னத்தில் மாறிமாறி விழுந்தது. அடுத்த வினாடி.. கல்யாணி மீனாட்சியை ஒரேஒரு தள்ளாய் கதவுக்கு வெளியே தள்ளி தாழிட்டாள். அப்பதான் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. மேல்மூச்சு கீழ்மூச்சி வாங்கியது. அடிவயிறு சுள்ளென்று வலித்தது. நெஞ்சு வெடித்து இதயம் வெளியே வந்துவிடும் போலிருந்தது கல்யாணிக்கு.

“கதவ தொறடி நாதேரி முண்ட” சத்தமாய் திட்டினாள்.

கதவை எட்டி எட்டி உதைத்தாள். கதவு அதற்குமேல் திறக்காது என்று தெரிந்து கொண்டாள் மீனாட்சி. மாராப்பை நேராக இழுத்துவிட்டுக்கொண்டு கலைந்திருந்த தலைமுடியைக் கொண்டைப்போட்டுக்கொண்டாள். சுற்றி இருந்தவர்கள் அனைவரும் மீனாட்சியின் வெறித்தனமான ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். நேராக கணவனிடம் சென்றாள். அவனுடைய சட்டையை இறுக்கப்பிடித்துக்கொண்டாள்.

“எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு? சொல்லு… இப்பவே எனக்கு தெரிஞ்சாகனும் எங்கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு?”

“அமைதியா இரு.. எல்லாரும் பாக்குறாங்க. மானமே போகுது” – கனகசபை

“பாத்தியாடா தம்பி உங்க மாமாவுக்கு மானம் போகுதாம். ஏற்கனவே மானம் காத்துல போயி சந்தி சிரிப்பா சிரிக்குது. அவஅவளுக்கும் வாழ்க்கையே போகுதாம்… இவருக்கு மானம் போகுதாம்மல்ல…” நக்கலாய்ச் சிரித்தாள் மீனாட்சி.

“எதுவாயிருந்தாலும் வீட்டுக்குப் போயி பேசிக்கலாம். வா.. முதல்ல வீட்டுக்குப் போவோம்…” என்றார் கனகசபை.

“என்னது வீட்டுக்குப் போவோமா? என்னது என்ன பூசான பூத்துப் போயிருக்கு. அவகிட்ட என்ன இருக்குன்னுகு நாக்க தொங்க போட்டுட்டு போனவ”

கொஞ்சநேரம் அந்த இடமே நாரசமாய் வார்த்தைகள் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. சிலர் சின்னக்குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். வலி தாங்க முடியாமல் குப்புறப்படுத்துக்கிடந்தாள் கல்யாணி. அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீர்த்துளியானது தரையில் போடப்பட்டிருந்த கோடுகளின் வழியாக ஓடி சுவற்றை தொட்டு திக்குதெரியாமல் அடைபட்டு நின்றது.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

புறநானூற்றில் புலவரும் மன்னரும்

புறநானூற்றில்-புலவரும்-மன்னரும்

புறநானூற்றில் புலவரும் மன்னரும்

            சங்கச் சான்றோர் “எமக்குத் தொழில் கவிதை”யென்று கருதி, பெருமிதவுணர்வோடு மக்களின் நல்வாழ்விற்காகத் தம் எழுத்தாற்றலையும் சொல்லாற்றலையும் பயன்படுத்தினார்கள் என்பதை நாம் புறநானூற்றுப் பாடல்களிலிருந்து அறிய முடியும்.  புலவர்களை ‘அறிவுத்தொழில் செய்வார்’ என்ற பொருளில் “புலன் உழுது உண்மார்” என்றே குறிப்பிடும் பாடலும் உண்டு.  தாம் மேற்கொண்ட அறிவு வாழ்க்கை (life of the mind)  செயல்வாழ்க்கை (life of  action) என்பதினின்றும் வேறுபட்டது என்பதையும், பின்னதற்குரிய உடல் உழைப்பு தமக்குப் பொருந்துவது அன்று என்பதையும், எனவே மன்னரிடமும் குறுநில வேந்தரிடமும் ஏனைய செல்வரிடமும் சென்று தம் நாவன்மையைக் காட்டிப் பரிசில் பெற்று வாழ்க்கையை நடத்துவதில் தவறில்லையென்பதையும், அதுவே சமுதாயத்திற்குத் தாம் செய்ய வேண்டிய பணியென்பதையும் நன்றாகவே அப்புலவர்கள் உணர்ந்திருந்தார்கள். புறநானூற்றில் புலவரும் மன்னரும்

            இக்கருத்தைச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குத் தெளிவுபடுத்தும் கபிலர் “போர்க்களத்தும் அரசவையிலும் செயலாற்ற வேண்டிய அரசனின் கைகள் வலியவையாக இருப்பதும் புலாலும் துவையலும் கறியும் சோறும் உண்ணுவதைத்தவிர வேறு வலிய செயல்களைச் செய்யாமையால் புலவர்களின் கைகள் மென்மையானவையாக இருப்பதும் இயற்கை”

                                    சாவநோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்

                                    பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்

                                    வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை

                                    கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது

                                    பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்

                                    மெல்லியபெரும தாமே நல்லவர்க்கு

                                    ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு

                                    இருநிலத்து அன்ன நோன்மைச்

                                    செருமிகு சேஎய்நின் பாடுநர் கையே                   (புறம் 14)

என்பார். கவிதை யாத்தலை, புலமைத் தொழிலை ஒரு வாழ்க்கை முறையாகவே அன்னார் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு இத்தகைய பாடல்கள் சான்றாகும்.

            அறிவுத் தொழிலைச் செவ்வனே செய்வதற்காக இரந்துவாழும் வாழ்வு ஏற்புடையதே என்பது அவர்களது உறுதியான நம்பிக்கை.  மன்னர் வாழ்வினும் புலவர் வாழ்வு எவ்விதத்தினும் குறையுடையதன்று என்று மன்னனிடமே எடுத்துக்கூறும் புலவர் கோவூர்கிழார் ஆவார்.  “ஊர்ஊராகச் சென்று நாவன்மையால் வள்ளல்களைப் பாடிப் பொருளைப் பெற்றுச் சுற்றத்தைக் காத்துத் தமக்கென வைத்துக் கொள்ளாது பலருக்குக் கொடுத்துவாழும் புலவர் வாழ்க்கையால் யாருக்கேனும் தீங்கு உண்டாகக் கூடுமோ? அவர்களின் வாழ்வு பெருஞ்செல்வம் படைத்த அரசர்களின் வாழ்வை ஒத்த செம்மாப்பு உடையது” என்று புலவர் தொழிலின் பெருமையை மன்னனுக்கு எடுத்துக் கூறுகிறார்.

                                    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

                                    நெடிய என்னாது சுரம்பல கடந்து

                                    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

                                    பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

                                    ஓம்பாது உண்டு.  கூம்பாது வீசி,

                                    வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கை

                                    பிறர்க்குத்தீது அறிந்தன்றோ!  இன்றே திறப்பட

                                    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி

                                    ஆங்கினிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்

                                    மண்ணாள் செல்வம் எய்திய

                                    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே!             (புறம் 47)

            அறிவுத் தொழிலைத் திறம்படச் செய்து பரிசில் வாழ்க்கை வாழ்ந்த புலவர்கள் இரத்தலை இழிதொழிலாகக் கருதினாரல்லர்.  வேறு உடல்தொழில் செய்வதில் நாட்டமற்றவர்களாய், அதனால் தமது காலத்தையும் தமக்கிருந்த பிறவி ஆற்றலையும் விரயமாக்க விரும்பாதவர்களாய், மன்னரிடமிருந்து பெற்ற பெருவளத்தைப் பலரோடு பகிர்ந்துகொள்பவர்களாய்த் தம் வாழ்வை அமைத்துக் கொண்டனர்.  இதனால் அவர்கள் தாழ்வுமனப்பான்மை ஏதுமின்றித் தலைக்குனிவிற்கு இடமின்றித் தமக்கெனத் தெரிந்தெடுத்துக் கொண்ட தொழிலைச் செவ்வையாகச் செய்யமுடிந்தது.  வறுமையில் வாடிய பெருஞ்சித்திரனார் குறுநில மன்னனாகிய வெளிமானிடம் பரிசில் கேட்கச் சென்றபோது அவன் இறந்ததைக் கேள்வியுற்று, “என் இறைவன் இறந்தது அறியாது,  அந்தோ இரங்கத்தக்க நான்வந்தேனே!  என்ன ஆவார்களோ என் சுற்றத்தார்!  மழை பெய்யும் இரவில் மரக்கலம் கவிழ்ந்த போதில் கண்ணில்லாத ஊமையன் கடலில் விழுந்து அழுந்தியதைப்போல எல்லை அளந்தறியப் படாத தாங்குதற்கரிய அலைகள் வீசுகின்ற நீரில் மூழ்கி இறந்து படுதலே நன்று; நாம் செய்யத்தக்கதும் அதுவே” (புறம். 238) என்று வருந்திப்பாடியவர்.  அவரே குமணன் அளித்த பரிசிலைப் பெற்ற போது,

                                    நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும்

                                    பன்மாண்கற்பின் நின் கிளை முதலோர்க்கும்

                                    கடும்பின் கடும்பசி தீர யாழநின்

                                    நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும்

                                    இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

                                    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

                                    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே!

                                    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்

                                    திருந்துவேல் குமணன் நல்கிய வளனே.             (புறம். 163)

என்று தமது மனைவிக்கு அறிவுரை கூறுவார்.  வறுமையின் கொடுமையை உணர்ந்த புலவர் இரந்துபெற்ற பொருளைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில் கவிஞர்கள் வள்ளல்களுக்கு இளைத்தவர் அல்லர் என்பதை வலியுறுத்துவது நோக்கற்பாலது.

            இப்பெருஞ்சித்திரனாரே இளவெளிமான் என்பான் தமது தகுதிக்கேற்ற பரிசில் தராதபோது “புலி களிற்றை வீழ்த்த முயன்று அது தப்பிவிட்டால் எலியை நோக்கிப் பாயாது.  நெஞ்சமே கலங்காதே!”  என்று தமக்கு ஆறுதல் கூறிக்கொண்டு அப்பரிசினை ஏற்க மறுத்தார்.  அதற்கும் மேலாக, குமணன் தமக்களித்த யானை ஒன்றை இளவெளிமானின் காவல் மரத்தில் கட்டிவிட்டு,

                                    இரவலர் புரவலை நீயும் அல்லை;

                                    புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;

                                    இரவலர் உண்மையும் காண் இனி; இரவலர்க்கு

                                    ஈவோர் உண்மையும் காண்இனி; நின்ஊர்க்

                                    கடிமரம் வருந்தத் தந்துயாம் பிணித்த

                                    நெடுநல் யானைஎம் பரிசில்

                                    கடுமான் தோன்றல் செல்வல் யானே                   (புறம் 162)

என்று அவனிடம் சொல்லிச் செல்கிறார்.  புலவர்கள் தன்மானம் மிக்கார் என்பதற்கு இதனினும் உயர்ந்த சான்றைத் தேடிச்செல்ல வேண்டியதில்லை.  பெருஞ்சித்திரனார் இத்தகையர் என்பதை நாம் நம்புதற்கு இன்னொரு புறப்படாலும் ஏதுவாகிறது.

            அவ்வையாரின் பாராட்டைப் பெற்ற வள்ளலாகிய அதியமான் நெடுமான் அஞ்சியிடம் பரிசில் பெறச் சென்ற பெருஞ்சித்திரனாரை அவன் நேரில் கண்டு பேசாது அனுப்பிவைத்த பரிசிலை அவர் ஏற்காது, “நான் ஓர் ஊதியமே கருதும் பரிசிலன் அல்லேன்” என்று தம் நிலையைத் தெளிவுபடுத்துகிறார்.

                                    குன்றும் மலையும் பலபின் ஒழிய

                                    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கென

                                    நின்ற என்நயந்து அருளி ஈதுகொண்டு

                                    ஈங்கனம் செல்க தான் என என்னை

                                    யாங்கு அறிந்தனனோ தாங்கரும் காவலன்

                                    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

                                    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்

                                    தினையனைத் தாயினும் இனிதவர்

                                    துணையள வறிந்து நல்கினர் விடினே.               (புறம் 208)

            சங்க காலத்தில் அரசர்க்கும் புலவர்க்கும் இருந்த உறவு பொதுவாகப் புரவலர்க்கும் இரவலர்க்கும் இருக்கும் ஏற்றத்தாழ்வான உறவு அன்று.  மன்னர்களை அளவு கடந்து புகழ்ந்து பரிசில்களை அள்ளிச் செல்லும் நோக்குடன் புலவர்கள் செயல்பட்டார்கள் என்று கருதுவது தவறு.  தம்தனி வாழ்வில் அறமல்லாச் செயல்களை அரசர்கள் செய்தபொழுது அவர்களை இடித்துரைக்கப் புலவர்கள் தயங்கவில்லை.  வையாவிக் கோப்பெரும் பேகன் தன் மனைவியிடமிருந்து பிரிந்து அவளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பரத்தை ஒருத்தியோடு வாழத் தொடங்கியதை அறிந்த புலவர்கள் நால்வர் அவனைக் கடுமையாகச் சாடி அறவுரை கூறத்தயங்கவில்லை.  பேகனை,

                                    உடாஅபோரா ஆகுதல் அறிந்தும்

                                    படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

                                    கடாஅ யானைக் கலிமான் பேகன்

                                    எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன

                                    மறுமை நோக்கின்றோ அன்றே

                                    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே.           (புறம் 141)

என்றும்

                                    வரையா மரபின் மாரி போலக்

                                    கடாஅ யானைக் கழற்கால் பேகன்

                                    கொடைமடம் படுதல் அல்லது

                                    படைமடம் படான்பிறர் படைமயக்குறினே        (புறம் 142)

என்றும் பாராட்டிப் பேசும் பரணர் கண்ணகியின் துயரை,

                                    முகைபுரை விரலில் கண்ணீர் துடையா

                                    யாம்அவன் கிளைஞ ரேம்அல்லேம்; கேள்இனி;

                                    எம்போல் ஒருத்தி நலன்நயந்து என்றும்

                                    வரூஉம் என்ப வயங்குபுகழ்ப் பேகன்

                                    ஒல்லென ஒலிக்கும் தேரொடு

                                    முல்லை வேலி நல்லூ ரானே                                     (புறம் 144)

என்று படம்பிடித்துக்காட்டி “அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடியது” என்று கண்டிப்பார்.  இன்னொரு பாடலில் “நாங்கள் உன்னிடம் பசித்து வரவில்லை; எமக்குப் பரிசில் வேண்டும் சுற்றமும் இல்லை; நீ உன் மனைவியைச் சேர்ந்து அவள் துன்பத்தைப் போக்கு; இஃது யாம் இரந்த பரிசில்” (புறம் 145) என்பார்.  செறுத்த செய்யுள் செய்க் கபிலனோ,

                                    “நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்

                                    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று

                                    நின்னும் நின் மலையும் பாட இன்னாது

                                    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்

                                    முலையகம் நனைப்ப விம்மிக்

                                    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே”     (புறம்  143)

என்று ஓர் அவலக்காட்சியை ஓவியப்படுத்தி, “யார்கொல் அளியள் தானே” என்று மறைமுகமாக, ஆனால் அவன் உள்ளத்தில் தைக்குமாறு ஒரு வினாவை எழுப்புகிறார்.

            அரிசில் கிழார் என்னும் புலவர் பெருமான் பேகன் அளித்த பெரும்பரிசிலைப் புறக்கணித்து

                                    அன்னவாக் நின் அருங்கல வெறுக்கை

                                    அவைபெறல் வேண்டேம் அடுபோர்ப்பேக         (புறம் 146)

என்று சினத்தொடுபேசி, “நீ என்னை நயந்து பரிசில் நல்குவையாயின் உன்னால் ஒதுக்கப்பட்ட மனைவியை நீ உடன்சேர வேண்டும் என்பதே நான் வேண்டும் பரிசில்” என்பார்.

            பெருங்குன்றூர்க் கிழாரும் இத்தகைய வேண்டுகோளையே முன்வைப்பார்: “ஆவியர்கோவே! நாங்கள் கல்முழை அருவிப் பன்மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்தோம்.  கார்காலத்து வானிலிருந்து விழும் மழைத் துளிகளின் ஓசையை ஒருபெண் தனித்திருந்துகேட்டுத் துயர்தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.  அப்பெண்ணின் நெய்துறந்த கரிய கூந்தலை மணிபோல் மாசில்லாமல் கழுவிப் புதுமலர் அணியச் செய்வதற்கு இன்றே நீ செல்வாயானால் அஃதே நீ எமக்களிக்கும் பரிசில்” (புறம் 147).

            நான்கு பெரும் புலவர்கள் ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரே விதமான கருத்தைத் தெரிவித்திருப்பதால் இது வரலாற்று நிகழ்ச்சியென்பதில் ஐயமிருக்க வழியில்லை.  பேகனையும் கண்ணகியையும் இணைத்து வைக்கப் புலவர்கள் மேற்கொண்ட முயற்சி முற்றும் கற்பனையானது என்று கருதுவது அறிவீனமாகும்.  இப்பாடல்களைப் பெருந்திணையில் குறுங்கலித் துறையைச் சார்ந்தவையென்று திணை, துறை வகுத்தோர் இலக்கண வரம்பைத் தளர்த்தி, பெருந்திணை, குறுங்கலி ஆகியவற்றின் பாடுபொருளை விரிவு செய்துள்ளமை வரலாற்று நிகழ்ச்சியொன்றுபற்றிப்பேசும் அருமையான பாடல்களைத் தினை, துறை இலக்கணத்துள் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே என்பது தெளிவாகிறது.

            பெருந்திணையென்பது பொருந்தாக் காமத்தைப் பற்றிப் பேசுவது. ஒருவனால் துறக்கப்பட்ட மனைவியை அவனோடு சேர்த்து வைக்கும் நோக்குடன் நீ அவளிடம் அருள்காட்ட வேண்டும் என்று புலவர் வேண்டுதலே குறுங்கலியெனும் துறையென்று இப்பாடல்களை வைத்துக் கொண்டு அத்தகைய துறையைச் சேர்ந்திருக்க வாய்ப்புண்டு.

            சங்கச்சான்றோர் எழுத்துத்தொழிலைச் சமுதாய நலனுக்குப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தினர். தமது அறிவு, மன, ஆன்ம வளர்ச்சிக்காகவோ, தாம்பெறும் முருகியல் இன்பத்திற்காகவோ என்று மட்டுமல்லாமல் தம்மைச் சூழ்ந்திருந்த மாந்தர் நல்வாழ்வுபெறத் தம்மால் இயன்றதையெல்லாம் செய்யும் நோக்குடன் தம் கவிதையாற்றலைக் கையாண்டனர். கிரேக்கப் பழங்கவிஞர்களோடு புறநானூற்றுப் புலவர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது பின்னவர் சிறப்பு தெளிவாகும். பிண்டார் (Pindas), சாஃபோ (Sappho) போன்ற கிரேக்கத் தன்னுணர்ச்சிப் பாடல்களில் வல்லுநர்கள் சமுதாய மேம்பாட்டில், மனிதஇன முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர் அல்லர். “Social Consciousness was unknown to  the ancient Greek poets” என்று இன்றைய கிரேக்கக் கல்வியாளர்கள் அக்கவிஞர்களின் குறையைச் சுட்டிக்காட்டுவார்கள். பேரறிவு பெற்ற கவிஞர்கள் தம் கவிதைகள் மூலம் சமுதாயப்புரட்சிக்கு வித்திடவும் சட்டமியற்றவும் வருவதுரைக்கவும் வல்லவர்கள் என்று ஷெல்லி கூறுவார். புறநானூற்றுப் புலவர் பலர் இத்தகையோரே. தமிழ்வேந்தர் பலர் கல்வியின் இறையாண்மையினை நன்குணர்ந்து கற்றோர் கூறும் அறநெறியைக் காதுகொடுத்துக் கேட்டுத் தமது அரசுமுறையினை நடத்தி வந்தனர்; அன்னாரை நன்னெறியில் செலுத்த அறம் உரைக்கும் நல்லவைகளும் இருந்தன. பாண்டியன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் “அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும்” என்பதை ஏற்றுக்கொள்கிறான். புலமைத்தொழிலுக்கு அடிப்படையான கல்வியின் சிறப்பை அம்மன்னன்,

                                    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

                                    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;

                                    பிறப்போ ரன்ன உடன் வயிற்று உள்ளும்

                                    சிறப்பின் பாலான் தாயும்மனம் திரியும்;

                                    ஒருகுடிப்பிறந்த பல்லோர் உள்ளும்

                                    மூத்தோன் வருக என்னாது அவருள்

                                    அறிவுடையோன் ஆறு அரசம் செல்லும்

                                    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்

                                    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

                                    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே. (புறம். 183)

என்று விளக்கக் காணலாம்.

            வேந்தர்க்குக்கடன் இதுவென அறிவுறுத்தும் மோசிகீரனார், “மாந்தர்க்கு நெல்லும் உயிரன்று; நீரும் உயிரன்று; மலர்தலை உலகம் மன்னனையே உயிராகவுடையது; அதனால்தான் உயிர் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது ஒவ்வொரு மன்னனின் கடமையும் ஆகும்” (புறம் 186) என்று கூறுவார். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனைப் பாடிய வெள்ளைக்குடி நாகனார், “போரிட்டு நீ பெறும் வெற்றி உழவர்களின் கலப்பை நிலத்தில் ஊன்றி உழுவதால் விளைந்த நெல்லின் பயனே ஆகும். மாரிப்பொய்ப்பின்னும் வாரிகுன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் இவ்வுலகம் அரசரையே பழிக்கும். ஆதனை நன்கு அறிந்து உழவுத்தொழில் செய்து பெருங்குடும்பங்களைப் பாதுகாப்பர்களை நீ பாதுகாப்பாயானால் பகைவர்களும் நின் அடிபுறம் தருகுவர்” (புறம் 35) என்று பாடாண்திணையில் செவியறிவுறூஉ எனும் துறையில் தம் பாடலை அமைத்துக் கொள்வார். மன்னர்க்குப் புலவர் அறிவுரையை இடித்துக் கூறவே இத்துறை வழி செய்திருக்கக் காணலாம்.

            பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடை நம்பியிடம் ஓர் அரசன் வரியை எவ்வாறு திரட்டவேண்டும் என்பதையும் எடுத்துச்சொல்வார். “அறிவுடையவேந்தன் இறைகொள்ளும் நெறிஅறிந்து அவ்வாறே இறைபெறுவானாயின் அவனது நாடு அவன் ஆட்சி நடத்துவதற்குப் பெரும்பொருளை ஈட்டிக் கொடுத்துத் தானும் தழைக்கும். அதைவிடுத்து அரசன் அறிவால் குறைந்தவனாகி நாள்தோறும் தரம் அறியாது, நன்மையை எடுத்துக்கூறாது, அவன் விரும்புவதையே தாமும் விரும்பும் ஆரவாரத்தையுடைய சுற்றத்தோடு கூடி அன்புகெடக் கொள்ளும் இறையானது யானை புக்க புலம்போல அவனுக்கும் பயன்படாது அவனது நாட்டையும் கெடுக்கும்” (புறம் 184) என்று அவர் கூறும் அறிவுரை இன்றைக்கும் பொருந்தும் நல்லரையாகும்.

            முடியுடைவேந்தர் மூவரில் ஒருவராயினும் அவரிடம் அச்சமின்றிப் பேசும் புலவர்களையும் புறநானூற்றில் காண்கிறோம். வெண்ணிப் பறந்தலையில் நடந்த பெரும்போரில் சோழன் கரிகால்பெருவளத்தான் வென்றான்; தோற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் விழுப்புண் பட்டதாலே புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்து உயிர்நீத்தான். சோழனது வெற்றியினும் சேரனது மானவுணர்வு உயரியது என்பதை வெண்ணிக்குயத்தியார் எனும் பெண்பாற்புலவர் சோழனிடமே கூறுகின்றார்.

                                    களிஇயல் யானைக் கரிகால் வளவ

                                    சென்றமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

                                    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே

                                    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

                                    மிகப் புகழ் உலக மெய்திப்

                                    புறப்புண் நாணி வடக்கிருந்தோனே. (புறம் 66)

            கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனிடம் “தேரும் படையும் களிறும் உடையார் என்பதாலே நாங்கள் பேரரசருடைய செல்வத்தை மதித்தல் செய்யோம். சிறிய ஊரையுடைய மன்னராயினும் எம்மிடத்தே முறையோடு நடந்துகொள்ளும் பண்புடையராயின் அவர்களையே நாங்கள் போற்றுவோம். யாம் பெரிதும் துன்புற்றாலும் சிறிதும் அறிவற்றவருடைய செல்வம் பயன்படாமையின் அதனை எண்ணோம். நல்ல அறிவினை உடையவர்களது வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக்கருதுவோம்.” (புறம் 197) என்றுரைப்பார்.

            இப்பாடல்களைப் பார்க்கும்போது அறிஞர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவற்றிற்காகப் போராடிய ஆங்கிலக்கவிஞர் மில்டனின் கூற்றகளும் அருஞ்செயல்களும் நம் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க இயலாது. மக்களாட்சிக்காகப் போராடிய இப்பெரும்புலவர் அவருடைய கருத்துக்களுக்கு எதிராக முடியரசை ஆதரித்துக் கட்டுரைகள் வெளிவந்தபோது, கண்பார்வையை இழந்து கொண்டிருந்த நிலையிலும் கொடியவனாகிய இரண்டாம் சார்லசு மன்னனைப் பகைத்துக் கொள்ள வேண்டியிருந்தும், “எனது முடிவு உறுதியானது, மாற்றிக்கௌ;ள முடியாதது. என் கண்பார்வையை முற்றுமாக இழக்கவேண்டும்; அல்லது என் கடமையைச் செய்யாது நழுவவேண்டும்; ஆனால் கிரேக்க மருத்துவத் தெய்வமான எஸ்குலாபியசே நீ படிப்பதையும் எழுதுவதையும் விட்டுவிட வேண்டும் என்று எச்சரித்தாலும் கூட, நான் அதைக் கேட்கப் போவதில்லை” என்று கூறி அக்கட்டுரைகள் எழுப்பிய வினாக்களுக்குத் தக்க விடைகள் தாங்கிய கட்டுரையை எழுதினார். எழுத்தாளனின் உரிமைகளுக்காகப் போராடும் அரியோ பஜிடிகா எனும் நீண்ட கட்டுரையில், “நூல்களை அரசு தணிக்கை செய்தல் கூடாது; எனக்கு அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், என் கருத்துக்களைச் சொல்லவும், என் மனச்சாட்சியின்படி விடுதலையுணர்வோடு கலந்துரையாடவும் உரிமைகள் தரப்படல் வேண்டும்” என்று எழுதினார். அக்கட்டுரையின் தொடக்கத்தில் கிரேக்கத் துன்பியல் நாடக ஆசிரியரான யூரிபிடீசின் கீழ்க்கண்ட கூற்றை அவர் மேற்கோளாகத் தருவதும் குறிப்பிற்குரியது:

விடுதலையோடு பிறந்த மாந்தர் அச்சமின்றி விடுதலையுணர்வோடு பேசவும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறவும் பெறுகின்ற உரிமைதான் உண்மையான உரிமையாகும். யார் அவ்வுரிமையைப் பயன்படுத்திக் கொள்ளமுடியுமோ, பயன்படுத்திக் கொள்கிறானோ அவன் பாராட்டுக்குரியவன். ஓர் ஆட்சியில் இதைவிட நேர்மையான உரிமை வேறு எதுவாக இருக்கமுடியும்?

            இங்கிலாந்தில் முடியரசு வீழ்ந்தபின், ஆலிவர் கிராம்வெல் என்பார் மக்கள்தலைவராகப் பதவியேற்றபோது, மில்டன் அவரைப் பாராட்டிப்பேசுவதையே தொழிலாகக் கொள்ளாது அவன் எதனைச் செய்யவேண்டும், எதனைத் தவிர்க்கவேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கத் தயங்கவில்லை.

நீ இதுகாறும் மக்களுடைய உரிமையின் காவலனாகவும் அவ்வுரிமையின் புரவலனாகவும் செயல்பட்டு வந்திருக்கிறாய். நேர்மை, அறவுணர்வு, நற்பண்பு ஆகியவற்றில் உன்னை விஞ்சியவர்கள் யாருமில்லை. ஆயினும் நீ போற்றிக்காத்த உரிமைக்கு எதிராக அதனை அழிப்பதற்கு முயல்வாயானால், உனது நடத்தை உரிமைக்கு எதிராக மட்டுமல்லாமல் நேர்மை, அறவுணர்வு, நற்பண்பு ஆகியவற்றிற்கு எதிராகவும் செயல்படுவதாக அமையும்… எதிர்காலச் சந்ததியினர் உனது இயல்புபற்றி இழிவான எண்ணங்கொண்டு உன்னை மறப்பர்.

            கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடிய மில்டன் இக்காலக் கவிஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர். அவருடைய பேச்சும் எழுத்தும் செயலும் புறநானூற்றுக் கவிஞர்பலர் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று நாம் எண்ணிப்பார்க்கத் துணை செய்யும்.

            கவிஞரின் கடமைகளும் உரிமைகளும் பற்றி ஆங்கிலக் கவிஞர் ஷெல்லி கூறும் கருத்துக்களும் இங்கு எண்ணிப் பார்க்கப்படவேண்டியவை:

புலவர் ஒவ்வொருவம் ஒரு குறுகிய கால எல்லைக்குள் தம் வாழ்வை முடித்துக் கொள்பவராயினும் நீண்ட, நெடுங்கால மாந்தர்வாழ்வின் வரலாற்றிலும் பங்கு பெறுவோராவர்; நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் தம் பங்களிப்பைச் செய்தோராவர்; கவிதையெழுதுதல் மட்டும் அவர்களது தொழில் அன்று; கவிதையின் மூலம் சமுதாயப் புரட்சிகளுக்கு வித்திட்டு, வருவது உணர்ந்து, அதற்கேற்ப எதிர்காலச் சந்ததியினரின் அரசியல், சமுதாய வாழ்வை நெறிப்படுத்தும் சட்டங்கள் இயற்றவும் வழி செய்வோராவர்.

கவிஞர்கள் எவ்வாறு ஒப்புரவொழுகலையும், பிறர்நலம் பேணலையும் மாந்த இனம் முழுமையும் கடைத்தேற நன்னெறி காட்டலையும் செய்ய இயலுகிறது என்பதையும் ஆராய்ந்துரைப்பர் ஷெல்லி.

அன்பே அறக்கருத்துக்களின் அடிப்படையாகும். அவ்வன்பானது நம்மை நம்மிலிருந்து வெளிக் கொணர்வது; நமக்குச் சொந்தமில்லாத கருத்து, செயல், மாந்தன் ஆகியவற்றில் வாழும் அழகுக் கூறுகளோடு நம்மை ஒருங்கிணைத்துக்கொள்ளும் இயல்பாகும். ஒரு மனிதன் மீவுயர் மனிதனாக வாழவேண்டுமானால் ஆழமாகவும் விரிவாகவும் கற்பனைசெய்யும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். அவன்தன்னை மற்றொருவனுடைய, வேறு பலருடைய, இடத்தில் வைத்துப்பார்க்கும் மனநிலை உடையவனாதல் வேண்டும். மாந்த இனத்தின் துன்பங்கள், இன்பங்கள் யாவும் அவனுடையதாதல் வேண்டும். நல்லறம் செய்யத் தூண்டும் கருவி கற்பனையேயாகும். கவிதையானது காரணத்தில் செயல்பட்டுக் காரியம் நடைபெற வழிவகுக்கின்றது; தன்னைப் பிறர் நிலையில் எண்ணிப்பார்க்கும் கற்பனையின்மூலம் பிறர்நலம் பேணும் செயல்களில் ஈடுபடுத்துகிறது.

            புறநானூற்றுக் கவிஞர்கள் இத்தகைய கற்பனை வளத்தைப் பெற்றிருந்ததால்தான் சமுதாய நலனில் அக்கறைகாட்டியதோடு மன்னர்களும் பிற புரவலர்களும் அதில் ஆர்வம் கொள்ளத் தூண்டுகின்ற கவிதைகளைப் படைப்பதில் வல்லவர்களாகவும் இருந்தார்கள். அதனையே தமது கடமையாகவும் தொழிலாகவும் கொண்டு செயல்பட்டார்கள்.

            வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாய் விளங்கிய பாரி முடியுடை மன்னரின் வஞ்சத்தால் கொலையுண்டபின் அவனது மகளிர் இருவர்க்கும் திருமணம் செய்துவைக்கும் பொறுப்பைக் கபிலர் ஏற்றுக் கொள்கிறார். நாடும் செல்வமும் தந்தையும் ஒருங்கே இழந்த அப்பெண்டிரை மணக்க எக்குறுநில மன்னரும் முன்வராத நிலையில் மனமுடைந்த அப்புலவர்பெருமான் அன்னாரின் பகைமையைத் தேடிக்கொள்ளவும் தயங்காது ஊர்ஊராக அம்மங்கையரை அழைத்துச் செல்கிறார். பாரி மகளிரை ஏற்றுக்கொள்ளாத இருங்கோவேளைக் கபிலர் கடுமையாகச் சாடும் கவிதையும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

உன்மூதாதை, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்,” புகழ்ந்த செய்யுள்

கழாத்தலையாரை இகழ்ந்ததால் உங்களுடைய புகழ்வாய்ந்த மூதூர் அழிந்தது என்பதை நினைவில் கொள்வாயாக (புறம் 202).

விச்சிக்கோவிடம் பாரிமகளிரை அழைத்துச் சென்று

                                    இவரே பூத்;தலை யறாஅப் புனைகொடி முல்லை

                                    நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்

                                    கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த

                                    பரந்தோங்கு சிறப்பின் பாரிமகளிர்;

                                    யானே பரிசிலன் மன்னும் அந்தணன்; நீயே

                                    வரிசையில் வணக்கும் வாள்மேம்படுநன்

                                    நினக்குயான் கொடுப்பக் கொண்மதி சினப்போர்

                                    அடங்கா மன்னரை அடக்கும்

                                    மடங்கா விளையுள் நாடுகிழ வோயே (புறம் 200)

என்று கபிலர் அவனிடம் வேண்டும் பாடலும் இருப்பதால் இது வரலாற்று நிகழ்ச்சியெனக் கொள்வதில் தடையேதுமில்லை.

            பிசிராந்தையும் கோப்பெருஞ்சோழனும், அவ்வையும் அதியமானும், புலவரும் புரவலருமாக அல்லாமல் கெழுதகைநட்புக் கொண்டவர்களாகவே இருந்தார்களென்பதைக் காட்டும் பாடல்களும் வரலாற்று உண்மைகொண்டவையே. பிசிராந்தையார் அன்னச்சோலை விளித்து, “நீ உறந்தைசென்று கோப்பெருஞ்சோழனைக் கண்டு ‘நான் பிசிராந்தையின் அடியுறை’ என்று கூறினால் அவன்  நின் இன்புறுபேடை அணியத் தன் நன்புறு நன்கலம் நல்குவன்” (புறம் 67) என்று சொல்லும்போது அவர்களுக்குள்ளிருக்கும் நட்பைச் சிறப்பித்துக் கூறுகிறார். வடக்கிருந்த சோழன் அவனருகில் இருந்த சான்றோரிடம் பிசிராந்தையார் நிகழ்ந்தது அறிந்தால் உடன் வருவார் என்பதை,

                                    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்

                                    பிசிரோன் என்ப, என் உயிர் ஓம் புநனே;

                                    செல்வக் காலை நிற்பினும்

                                    அல்லற் காலை நில்லன் மன்னே (புறம் 215)

என்று அவர்தம் நட்பின் ஆழத்தை உணர்த்துகிறான். அவர் உறுதியாக வருவார் என்பதால், அவருக்கு இடம் ஒதுக்கி வைக்குமாறு நண்பர்களிடம் வேண்டுகிறான்:

                                    இகழ்விலன், இனியன், யாத்த நண்பினன்,

                                    புகழ்கெட வரூஉம் பொய்வேண்டலனே,

                                    புன்பெயர் கிளக்கும் காலை ‘என்பெயர்

                                    பேதைச் சோழன்’ என்னும் சிறந்த

                                    காதற் கிழமையும் உடையவன்; அதன்தலை

                                    இன்னதோர் காலை நில்லலன்,

                                    இன்னேவருகுவன், ஒழிக்க, அவற்கு இடமே! (புறம் 216)

பிசிராந்தையார் வந்ததுகண்டு பொத்தியார் வியந்து பாடுகிறார்:

                        ‘வருவன்’ என்ற கோனது பெருமையும்

                                    அது பழுதின்றி வந்தவன் அறிவும்

                        வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே. (புறம் 217)

            வடக்கிருந்த பிசிராந்தையைக்கண்டு கண்ணகனார் பாடுவதும் இந்நட்பின் வரலாற்று உண்மைக்குச் சான்றாகிறது:

                                   சான்றோர்

                                    சான்றோர் பாலர் ஆகுப;

                                    சாலார் சாலார் பாலர் ஆகுபவே. (புறம் 218)

            அதியமான் நெடுமான் அஞ்சியின் போர்;த்திறனையும் வள்ளன்மையையும் பல பாடல்களில் அரிய உவமைகள் கொண்டு பாராட்டும் அவ்வை அவன் பொருட்டுத் தூது செல்லும் பணியையும் மேற்கொள்கிறார். தன் படைக்கருவிகளைப் பெருமிதத்தோடு காண்பித்த தொண்டைமானிடம்

                                    இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக்

                                    கண்திரள் நோன்காழ் திருத்திநெய் அணிந்து

                                    கடியுடைய வியன் நகரவ்வே; அவ்வே

                                    பகைவர்க்குத்திக் கோடுநுதி சிதைந்து

                                    கொல்துறைக் குற்றில மாதோ என்றும்

                                    உண்டாயின் பதம் கொடுத்து

                                    இல்லாயின் உடன் உண்ணும்

                                    இல்லோர் ஒக்கல் தலைவன்

                                    அண்ணல் எம் கோன் வைந்நுதி வேலே (புறம் 95)

என்று அம்மன்னனுக்கு அறிவுகொளுத்தும் வண்ணம் அதியன் பல போர்க்களங்களைக் கண்டவன், அவனை வெல்வது எளிதன்று என்று மறைமுகமாகத் தெரிவிக்கக் காணலாம்.

            அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்களில் ஐம்பத்தொன்பது பாடல்களைப் பாடியுள்ள அவ்வையார் எனும் பெரும்பெயர்க்குரிய கவிஞர், தன்னைப்புரக்கும் குறுநில மன்னனுக்கு உதவ,

                                                      இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு

                                                                     உறுதி பயப்பதாம் தூது

என்னும் குறட்பாவிற்கு இணங்க இன்னொரு மன்னனிடம் தூது சென்றுள்ளதை அறிவிக்கும்பாடல் சங்ககாலப் புலவர்கள் எழுத்துத்தொழில் திறனை மக்கள் நலனுக்கு ஒல்லும் வசையெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்டும்.

            தவறு செய்த மன்னர்களைத் தட்டிக்கேட்கும் உள்ளவுரம் கொண்ட கோவூர் கிழார் பரிசில்நாட்டமே தலைநோக்காய்க் கொண்ட வாணிகப்புலவர் அல்லர் என்பதையும் மக்கள்நலன் கருதி மன்னர்க்கு அறவுரைகூறி நல்வழிப்படுத்திய பெருந்தகையாளர் என்பதையும் நிறுவும் பாடல்கள் பல புறநானூற்றில் உண்டு.

            சோழன் நலங்கிள்ளியின் நாட்டுவளத்தையும் கொடைச்சிறப்பையும் வெற்றிகளையும் பாடிய கோவூர்கிழார் உறையூரை நலங்கிள்ளி முற்றுகையிட்ட பொழுது சோழன் நெடுங்கிள்ளி போர்மேற்கொள்ளாமல் தன் அரண்மனைக்குள் ஒளிந்து கொண்டிருந்ததைக் கண்டித்து, “உன்நாட்டில் முற்றுகை காரணமாக, யானைகள் குளங்களில் படியாமல் உள்ளன; உணவுக் கவளங்களை உண்ணாமல் பெருமூச்சு விட்டுக் கலங்கி இடிஇடிப்பதுபோல் பிளிறுகின்றன; குழவிகள் பாலில்லாமல் அலறுகின்றன; மகளிர் பூவில்லாத வெறுந்தலையை முடிகின்றார்கள்; மக்கள் நீரின்றி வருந்தும் ஒலி கேட்கிறது; இச்சூழலில் நீ இங்கு இனிது இருத்தல் இன்னாதது. அறவழியில் நடப்பவனானால் நாட்டை நலங்கிள்ளிக்கு அளித்துப்போரை நிறுத்து; மறவழியில் நடப்பவனானால் கோட்டைக் கதவுகளைத் திறந்து போருக்குச் செல். நீ இவ்வாறு நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல் நாணுத்தகவுடைத்து” (புறம் 44) என்று அஞ்சாமல் அறம் கூறுவார்.

            நெடுங்கிள்ளியை இவ்வாறு சாடியவர் சோழமன்னர்கள் இருவரும் ஒருவரோடு ஒருவர் போர்புரிவது எவ்வளவு அறிவீனம் என்பதை இருவர்க்கும் எடுத்துச் சொல்கிறார்: “இருவருடைய மாலைகளும் ஆத்திப்பூக்களால் தொடுக்கப்பட்டவை. யார்தோற்றாலும் தோற்பது சோழனின் குடியே. இருவரும் ஒருபோரில் வெற்றி பெறுவதென்பது இயலாதது. இப்போரானது நும்மோர்அன்ன வேந்தர்க்கு மெய்ம்மலி உவகையை ஊட்டுவதாகும்.” (புறம் 45)

            இளந்தத்தன் என்னும் புலவர் உறையூருக்குச் சென்றபோது அவரை வெளிநாட்டிலிருந்து வந்த ஒற்றன் என்று தவறாகக் கருதி நெடுங்கிள்ளி கொலை செய்யமுனைந்தபோது கோவூர்க்கிழார் அரசனுக்கு உண்மையை எடுத்துக்கூறிப் புலவரைக் காப்பாற்றினார். “வரிசைக்கு வருந்தும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீமை கருதாத வாழ்க்கையாகும். தம்மோடு மாறுபட்டவர்களைத் தம்புலமையால் வென்று தலைநிமிர்ந்து நடக்கும் புலவர்கள் மண்ணாள் செல்வம் எய்திய மன்னரை ஒத்த பெருமிதம் உடையவர்கள்” (புறம் 47) என்று புலவர் தொழிலின் சிறப்பையும் கூறினார்.

            குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் அவனது பகைவனான மலையமானின் சிறுவர்களை யானையின் காலின் கீழிட்டுக் கொல்ல முயன்றபோது அவனுக்கு அறிவுரை கூறிய பெருமையும் கோவூர்கிழார்க்கு உண்டு. “நீ புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் களைந்த சிபியின் வழித்தோன்றல். இவர்கள் புலன் உழுது உண்பவர்களாகிய புலவர்களை ஆதரித்த மலையமானின் மக்கள். தம்மைக் கொல்லவரும் களிற்றினைக் கண்டு அஞ்சி அழுகிறார்கள். இவர்களைத் துன்புறுத்தாதே. நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன். நீ உன் விருப்பப்படி செயல்படு” என்று அவனது அறியாமையை இடித்துக் கூறுகிறார் தமது பாடலில் (புறம் 46).

            போரில் வெற்றிகண்ட மன்னர்களைப் புகழ்ந்து பாடிய புலவர்கள் யாவரும் மண்ணாள்வோரின் போர்வெறியைத் தூண்டி அவர்களை ஊக்கினார்கள் என்று கருதுவது தவறாகும். போரினால் நாடும்மக்களும் அடையும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி மறைமுகமாக மன்னரைத் தெருட்டிய பாடல்கள் பலவும் புறுநானூற்றில் உண்டு. இவற்றுள் பரணர் பாடிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.

            சோழன் உருவப் பஃறோர் இளஞ்சேட் சென்னியின் நாற்படை வலிமையைப் பாராட்டிப்பாடும் பரணர் இறுதியில், “நீ இத்தகைய பேராற்றல் கொண்டவனாக இருப்பதால் உன் பகைவர்களுடைய நாட்டு மக்கள் தாயில்லாத குழவிகள் போல ஓயாது கூவி வருந்துகின்றனர்” (புறம் 4) என்பார். சோழன் பெருவிறற்கிள்ளியும் சேரமான்குடக்கோ நெடுஞ்சேரலாதனும் நிகழ்த்திய போரில் இருவரும் மாண்டனர்; இருவர் படைகளும் அழிந்தன. இதனைப் பாடுபொருளாக்கும் பரணர், “பல யானைகள் அம்பால் தாக்கப்பட்டுப் போர்த் தொழிலின்றி இறந்தன; புரவிகள் எல்லாம் மறத்தகை மைந்தரொடு மாண்டன; தேர்வீரர் யாவரும் தோல் கண்மறைப்ப ஒருங்கு மாய்ந்தனர்; முரசுகள் தாங்குவோர் இன்மையின் தரையில் கிடந்தன; மார்பில் நெடுவேல் பாய்ந்ததால் இருவேந்தரும் இறந்தனர்; பெருவளமுடைய நாட்டின்நிலை யாதாகுமோ?” (புறம் 63) என்று அவலச்சுவை ஓங்கி நிற்கும் பாடலை எழுதியுள்ளார். இது போரில் வென்ற மன்னனைப் பரிசில் பெறும் நோக்குடன் பாராட்டிப்பாடப் பட்டதன்று என்பது நாம் நினைவில் கொள்ளவேண்டிய கருத்தாகும்.

            பரணரின் மகட்பாற் காஞ்சிப்பாடல்கள் போரினால் வரும் பேரழிவைச் சுட்டிக்காட்டி அவலஉணர்வை மிகுவிப்பன. “வேட்டவேந்தனும் பெருஞ்சினத்தினன்;; இவள் தந்தையும் எளிதில் பணியாதவன்; இப்பெண்ணால் இவ்வருங்கடிமூதூர் பெரும்பேதுற்றது; முற்றுமாக அழியப்போகிறது” (புறம் 336). “இப்பெண்ணைத்தர அவள்தந்தை மறுப்பதால் மென்புனல் வைப்பின் இத்தண்பணை ஊர், களிறு பொரக் கலங்கிய தண்கயம்போலப் பெருங்கவின் இழப்பது கொல்லோ!” (புறம் 341). “முசிறியன்ன விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும் தகுதியற்றோர்க்கு இவள் தந்தை மணம் செய்து கொடுக்க மாட்டான். இந்த நெடுநல்ஊர் போரில் அழியப்போவதையெண்ணி மதில்மேல் சாய்த்து வைக்கப்பட்ட ஏணியும் வருந்துகின்றதோ?” (புறம் 343). “இவளை இவள் தாய் ஈனாதிருப்பாளாயின், எம்பெருந்துறை மரங்கள், நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப, வயின்தொறும் செந்நுதல் யானை பிணிப்ப, வருந்துதல் நேர்ந்திராது” (புறம் 348). “மடந்தை மான்பிணை அன்ன மகிழ்மட நோக்கு ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ!” (புறம் 354)

            பிறபுலவர்கள் பாடியுள்ள மகட்பாற் காஞ்சிப் பாடல்களும் போரால் ஊர் அழியப் போவதற்கு ஒருபெண் காரணமாகி விட்டாளே என்ற கருத்தையே வற்புறுத்தி நம் உள்ளத்தை உருக்கும் தன்மையவை. அண்டவர்மகன் குறுவழுதியின் பாடல் “அழிந்தோர் அழிய, ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள்நலனே” (புறம் 346) என்றும் மருதனிளநாகனார் பாடல் “அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை மரம்படுசிறு தீப்போல அணங்காயினள் தான் பிறந்த ஊர்;க்கே” (புறம் 349) என்றும் ஆயத்தனார் பாடல் “தூர்ந்த கிடங்கின், சோர்ந்த ஞாயில், சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர் யாங்காவது கொல் தானே தாங்காது” (புறம் 350) என்றும் மதுரைப் படைமங்;க மன்னியார் பாடல் “என் ஆவது கொல் தானே – தெண்ணீர்ப் பொய்கை மேய்ந்த செவ்வரிநாரை தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம்சால் சிறப்பின் இப்பணைநல்லூரே?” (புறம் 351) என்றும் ஒரு சில வரிகளிலே ஒரு துன்பியல் நாடகத்தைப் படைத்துவிடக் காணலாம். இவையெல்லாம் அப்புலவர்கள் பரிசிலுக்காகவன்றிப் போரின் கொடுமையை உலகுக்குணர்த்தவே பாடியவை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

            புறநானூற்றில் இடம்பெற்றுள்ள புலவர் பலர் புலமைத் தொழிலால் வறுமையில் வாட வேண்டியிருந்தும், முடியுடை வேந்தரிடமும் குறுநில மன்னரிடமும் ஊர் ஊராகச் சென்று இரந்து வாழவேண்டியிருந்தும், எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோற்றையே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தும், அத்தொழிலை உயர்வுடையதாகக் கருதித் தாம் பெற்றிருந்த அறிவு முதிர்ச்சியையும் எழுத்தாற்றலையும் சமுதாய நலனுக்காகப் பயன்படுத்தினார் என்பது பெரும்பாராட்டுக்குரியதாகும். கிரேக்கம் முதலான ஏனைய தொன்மைச் செம்மொழிகளில் இத்தகைய புலவர் குழுக்களைக் காண்டல் அரிது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

பேரா. ப. மருதநாயகம்

பெற்றோர்கள் | சிறுகதை

பெற்றோர்கள் | சிறுகதை

பெற்றோர்கள் | சிறுகதை

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர்.

——————————————————————————————————————————————-

ஊரின் மத்தியில் மகிழுந்து வந்து நின்றதும் ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள். அந்த ஊருக்கு அதிகமாக பேருந்து வசதி வாய்ப்பு குறைவாக உள்ளதால் மக்கள் அப்படி பார்த்தார்கள் அந்த மகிழுந்தில் வந்தவர்கள் மிகவும் வசதி படைத்தவர்களாக தெரிந்தார்கள்.

மகிழுந்தில் வந்தவர்கள் ஊரில் உள்ள பெரியவர்களையெல்லாம் ஒன்று சேர்த்தனர். அவர்களுடைய காதில் ஏதோ கூறினார். கூட்டத்தில் இருந்த ஊர் கவுண்டர், பல ஆண்டுகளாக அந்த ஊரில் இருந்து வாத்து மேய்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தது ஒரு குடும்பம் அந்தக் குடும்பத்தில் ஒருவரை அழைத்து வரச் சொன்னார்.

அவனும், உடனே சென்று அந்த குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா பதினைந்து வயதுடைய ஒரு மகளையும் அழைத்து வந்து நடுவீதியிலுள்ள ஆலமரத்தடியில் நிறுத்தினார். அவர்களும் என்னமோ ஏதோ என்று பயந்து பதறிபோய் நின்றார்கள். அப்பொது மகிழந்தில் வந்தவர் பெசத் தொடங்கினார். அதோ அங்கே நிற்கின்ற பெண்பிள்ளை என்னுடைய சொந்த பெண் பிள்ளை என்றான். எல்லொரும் அந்த வார்த்தை கேட்ட உடனே திடுக்கிட்டுப் போனார்கள்.

மேலும் அவர் பேசினார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிறைய சொத்து இருந்தது. இப்பவும் இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா உன்னுடைய மனைவி குழந்தைப் பேருக்காக தாய் வீடு போய்யிருக்கிறாள். எங்கள் சொத்துக்கு அண் வாரிசு வேண்டும் பெண் பிள்ளை பெற்றாள் நீங்க இங்கே வராமல் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று கூறிவிட்டு என்னை மனைவியிடம் அனுப்பினார்கள். நானும் அங்கே போன பிறகு ஒரு மருத்துவமனையில் என் மனைவியிடம் அப்பா, அம்மா சொன்ன செய்தியைக் கூறி, எங்கேயும் போய் வாழ முடியாது. இந்த குழந்தை எடுத்தக்கொண்டு எங்கேயாவது போட்டு விட்டு, குழந்தை இறந்தே பிறந்தது என்று சொல்லிவிட்டு அதே வீட்டில் வாழலாம் என்று கூறினேன். அதற்கு என் மனைவியும் சரியென்று தலையாட்டினாள். அப்போது நாங்கள் சரியாக முடிவு எடுக்க தெரியாமல் அந்த பெண் குழந்தையை மகிழுந்தில் எடுத்தக்கொண்டு இந்த ஊரில் ஓடும் ஆற்றுப்படுக்கை பக்கத்தில் போட்டு விட்டு வந்து மகிழுந்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு சாளரத்தின் வழியாக, அந்த ஆற்றின் படுக்கை ஓரமாய் வாத்து மேய்த்து வந்த ஒரு கணவன் மனைவியும் நமக்கு பல ஆண்டுகள் குழந்தை பேரு இல்லாததை சொல்லி அந்த பெண் குழந்தையை எடுத்து மகிழ்ச்சியாக கொஞ்சியதை பார்த்துவிட்டு சென்றோம்.

எங்க ஊருக்கு சென்று அப்பா, அம்மாவிடம் பெண் குழந்தை இறந்தே பிறந்தது. அடுத்தது ஆண் குழந்தை பெற்றுக்கொள்வோம் எனக் கூறிவிட்டு நாங்கள் மன வேதனையோடுஎங்கள் அறைக்குள் போய்விட்டோம். எங்களுக்கு பதினைந்து ஆண்டுகளாக குழந்தை பேரு இல்லை. அதனால் எங்கள் பெற்றோர்களால் பல தன்பத்iதை அனுபவித்தோம். போன வாரம் தான் எங்க அப்பா, அம்மா ஒருவர் பின்னால் ஒருவர் இறந்து போனார்கள்.

ஒவ்வொரு நாளும் பெற்ற குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டு விட்டு வந்து விட்டோம் என்று நினைத்து நினைத்து மனதிற்குள்ளே வருத்தப்பட்டோம். அதனால் எங்க பெண் பிள்ளையை எங்களோட அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சி கதறி இருவரும் அழுதார்கள். இதையெல்லாம் கேட்ட அங்கு இரந்தவர்கள், நீ உங்க அப்பா, அம்மா உடன் போமா என்று கூறினார்கள். அதற்கு அந்த பெண் பிள்ளை நான் போக மாட்டேன் எங்க அப்பா, அம்மா இவர்கள் தான். என்று வாத்து மேய்ப்பவர்களை கை காட்டியது. அவர்களும் அழதுக்கொண்டே அப்பா, அம்மாவோட போம்மா என்று கூறினார்கள். அதற்கு அந்த பெண்பிள்ளை முடியாது என்று கூறிவிட்டு கூட்டத்தை விட்டு ஓடினாள். கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பெண்பிள்ளை இழுத்துவந்து மகிழுந்தில் ஏற்றினார்கள். அங்கு இரந்தவர்களுக்கு நன்றி சொல்லி மகிழுந்து வேகமாகப் புறப்பட்டது.

வாத்து மேய்க்கும் அப்பா, அம்மா அவர்கள் மன வேதனையோடு வீட்டிற்கு சென்று மீண்டும் அவர்கள் செய்யும் வேலையைத் தொடங்கினார்கள்.

அந்த பிள்ளை அழைத்தக்கொண்டுபோய் பத்தாம் வகுப்பு தேர்வு முவு வந்தது நல்ல மதிப்பெண் எடுத்ததைப் பார்த்து ஒரு தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்த்தார்கள். வீட்டை பார்த்தால் பெரிய பங்களா போல்காட்சியளிக்கிறது. நான்கு, ஐந்து மகிழுந்து உள்ளது. வீட்டு வேலை செய்யவும் தோட்ட வேலை செய்யவும் நிறைய கூலியாட்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லாமே இரந்தும் அது அவளுக்கு பிடிக்கவில்லை, நகரத்தில் ஒரே நெரிச்சல் எங்கு பார்த்தாலும் புகைப்படலம், வெட்டு குத்து, கொலை, பொய், திருட்டு போன்றவையெல்லாம் பிடிக்கவில்லை. நகரத்தில் எல்லாப் பொருளும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும்.

            அவள் வாழ்ந்த கிராமத்தில் அன்பும் அரவணைப்பும், பண்பும், பாசமும் இருக்கும். பொய், திருட்டு கிடையாது. மக்கள் எல்லோரும் யதார்த்தமாகப் பழகுவார்கள். ஒருவரிடம் இரப்பதை மற்றொருவர் பிடிங்கி சாப்பிடுவதில்லை, ஊரை சுற்றி எங்கு பார்த்தாலும் பசுமையாகத் தெரியும். ஒரு பக்கம் வாழைத் தோட்டம் மற்றொரு பக்கம் தென்னந்தோப்பு, நெல், கரும்புவயல்கள், ஆறு சலசல என ஒலி எழுப்பிஓடிக்கொண்டிருக்கும். அதில் மீன் துள்ளி குதித்து விளையாடும். அதைப் பிடிக்க மீன்கொத்திப் பறவை கொக்கு ஆற்று ஓரத்தில் உள்ள மரத்தில் அமர்ந்திருக்கும் வலையில் நண்டு எட்டி எட்டி பார்க்கும். வாய்க்காலில் வரப்பின் மீது துள்ளி குதிக்கும் மீன்களை ரசித்த வண்ணம் மக்கள் பார்த்தக்கொண்டுப் போவார்கள்.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து என்னுடைய அப்பா, அம்மாவோட தான் வாத்து மேய்க்கப் போகும்பொதெல்லாம். ஆற்றில் நீந்தி நிச்சல் கற்றுக்கொண்டேன். துள்ளி விளையாடும் மீனை பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டு மகிழ்ந்தேன். இப்படி வாழ்ந்த வாழ்க்கையைவிட ரகர வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், பெற்ற அப்பா, அம்மாவைவிட வாத்து மேய்த்த அப்பா அம்மாதான் எனக்கு முக்கியம். நீங்கள் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவள் வாத்து மேய்க்கும் அப்பா அம்மாவிடம் மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தாள்.

மேலும் பார்க்க,

1.மறையாத வடு

2. பாலம் | சிறுகதை

3.கோபம் | சிறுகதை

அமர்நீதி நாயனார்‌ புராணம்

அமர்நீதி-நாயனார்

அமர்நீதி நாயனார்‌

சோழநாட்டிலுள்ள பழையாறை என்னும்‌ ஊரில்‌, வணிகர்‌ குலத்தில்‌ பிறந்தவர்‌ அமர்நீதி நாயனார்‌ ஆவார்‌. பெருஞ்‌ செல்வந்தராய்‌ விளங்கிய அவர்‌ சிவபக்தியில்‌ சிறந்து விளங்கினார்‌. தன்‌ செல்வத்தின்‌ பெரும்பாகத்தை அடியவர்களுக்கு அமுது ஊட்டவே பயன்படுத்தினார்‌. திருநல்லூரில்‌ ஒரு மடம்‌ கட்டி, அடியவர்களுக்கு அருந்தொண்டு புரிந்து வந்தார்‌.

அமர்நீதியாரின்‌ சிவபக்தியை உலகறியச்‌ செய்ய சிவபிரான்‌ திருவுள்ளம்‌ கொண்டார்‌. பெருமான்‌ வேதியர்‌ கோலம்‌ கொண்டார்‌. உடுத்தியிருந்து போக இரண்டு கோவணங்களுடன்‌ கையில்‌ கோல்‌ ஒன்றை ஏந்தி திருநல்லூர்‌ மடத்திற்கு வந்தார்‌. அமர்நீதியார்‌ திருநீறு அணிந்துவணங்கினார்‌.

வேதியர்‌, “அமர்நீதியாரே! அடியவர்க்கு அமுது செய்யும்‌ உமது தொண்டை அறிந்தே வந்தேன்‌. நான்‌ குளித்துவிட்டு வருகிறேன்‌. அதுவரை எனது ஒரு கோணவத்தை நீர்‌ உமது மடத்தில்‌ வைத்துக்‌ கொள்ளுங்கள்‌. நான்‌ குளித்த பின்‌ எனது கோலில்‌ சுற்றிய இக்கோவணத்தை அணிந்து கொள்வேன்‌.  ஒருவேளை மழைபெய்து இக்கோவணம்‌ நனைந்து விட்டால்‌ உம்மிடம்‌ தந்துள்ள கோவணத்தைத்‌தரவேண்டும்‌. அதைக்‌ கட்டிக்‌ கொள்வேன்‌!” என்றார்‌.

அமர்நீதியாரும்‌ அதைப்‌ பெரும்‌ பாக்கியமாகக்‌ கருதி, கோவணத்தைப்‌ பெற்று மடத்தினுள்‌ வைத்தார்‌. வேதியரும்‌ சென்றுவிட்டார்‌. சற்று நேரத்தில்‌ சிவபெருமான்‌ திருவருளால்‌ மடத்திலுள்ள கோவணம்‌ மறைந்தது

அந்நேரம்‌ வெளியே கடும்மழை பெய்தது. சில நாழிகைப்‌ பொழுதில்‌ வேதியர்‌ மழையில்‌ நனைந்தபடி மடத்தை நோக்கி ஓடிவந்தார்‌. அவரது கோலில்‌ சுற்றிய கோவணமும்‌ நனைந்திருந்தது.

அவ்வேதியர்‌ அமர்நீதியாரிடம்‌, “நான்‌ தந்துள்ள கோவணத்தைத்‌ தருவீராக! இக்கோவணம்‌ நனைந்து விட்டது!” என்று கூறினார்‌. அமர்நீதியாரும்‌ மடத்தினுள்‌ சென்று கோவணத்தைத்‌ தேடினார்‌. அதைக்‌ காணவில்லை. எங்கு தேடியும்‌ அது கண்ணில்‌ அகப்படவில்லை.

உடனே வேதியரிடம்‌ வந்து கோவணம்‌ காணாமல்‌ போனதாகக்‌ கூறி, அதற்குப்‌ பதில்‌ தான்‌புதிதாக வேறு கோவணம்‌ தருகிறேன்‌ என்று சமாதானம்‌ கூறினார்‌.

வேதியரோ கடுங்கோபம்‌ கொண்டார்‌. எனக்கு என்னுடைய கோவணமே வேண்டும்‌ என்றார்‌. அமர்நீதியாரோ வேதியாரிடம்‌, “நீங்கள்‌ தந்த கோவணத்தைக்‌ காணவில்லை. புதிய பட்டுத்துணிகளை வேண்டுமானலும் தருகிறேன்‌. தயவுசெய்து கருணை காட்ட வேண்டும்‌!” என்று பணிந்து கூறினார்‌.

வேதியர்‌, “அப்படியென்றால்‌ ஒரு தராசைக்‌ கொண்டு வாரும்‌. அதில்‌ என்‌ கோவணத்தின்‌ எடையுள்ள வேறு ஒரு கோவணம்‌ தாரும்‌!” என்று கூறினார்‌. அதற்குச்‌ சம்மதித்த அமர்நீதியார்‌, உடனே அங்கொரு தராசைக்‌ கொண்டுவரச்‌ செய்தார்‌.

வேதியர்‌ தன்‌ கோலில்‌ சுற்றியிருந்த கோவணத்தை அதன்‌ ஒரு தட்டில்‌ வைத்தார்‌. மறுதட்டில்‌ புதிதாக ஒரு கோவணத்தை வைத்தார்‌ அமர்நீதியார்‌. வேதியரின்‌ கோவணம்‌ இருந்த தட்டு எடை அதிகமாகத்‌ தாழ்ந்‌து இருந்தது. அமர்நீதியார்‌ பல துணிகளை எடுத்து வைத்தார்‌. அவை யாவும்‌ வேதியரின்‌ கோவணத்தின்‌ எடைக்குச்‌ சமமாகவில்லை. துணிகளையும்‌ பொன்னையும்‌ வெள்ளியையும்‌ ஏனைய மணிகளையும்‌ அள்ளி அள்ளி வைத்து சோர்ந்துபோனார்‌. எடை சமன்படவில்லை.

உடனே அமர்நீதியார்‌, தன்‌ மனைவியையும்‌, மகனையும்‌ அழைத்தார்‌. தராசின்‌ தட்டில்‌ ஏறி நிற்கும்படிக்‌கூறினார்‌. “தான்‌ இதுவரை செய்து வந்த அடியவர்‌ தொண்டு குற்றமற்றது என்றால்‌ இத்தராசு சமநிலை பெறட்டும்‌! என்று கூறியபடி, தானும்‌ அத்தட்டில்‌ ஏறி நின்றார்‌. தராசு சமநிலைக்கு வந்தது.

அக்கணமே வேதியர்‌ அவ்விடத்தை விட்டு மறைந்தார்‌. சிவபெருமான்‌ உமையன்னையுடன்‌ விடை வாகனக்தில்‌ திருக்காட்சி தந்தார்‌. அமர்நீதியார்‌ இறைவனையும்‌ இறைவியையும்‌ கண்டு பேரானந்தம்‌ கொண்டார்‌. வழிபட்டார்‌. மெய்ச்‌ சிலிர்த்தார்‌.

தட்டில்‌ நின்றிருந்த அமர்நீதி நாயனாரும்‌, அவரது மனைவியும்‌, மகனும்‌ சிவபெருமான்‌ இருவருளால்‌ சிவலோகம்‌ சென்றடைந்தனர்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

சங்க இலக்கியங்களில் திருமணமுறை

சங்க-இலக்கியங்களில்-திருமண-முறை

சங்க இலக்கியங்களில் திருமண முறை

            பழந்தமிழகத்தில் மக்கள் இல்லற வாழ்க்கையையே பெரிதும் பாராட்டிப் போற்றி வந்தனர். ஒருவனும் ஒருத்தியும் இணைந்து வாழ்வாங்கு வாழ்வாராயின்  அவர்களுக்கு வீடுபேறு தானாக வந்தெய்தும் என்பது தமிழரின் கொள்கையாக இருந்தது. தான் வாழும் நிலத்தின் இயல்புக்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையும் பண்பாடு அமையும் என்பது பண்டைய தமிழரின் கொள்கையாக இருந்தது. பண்டைய தமிழ் மக்கள் அளவற்ற இன்பத்துடன் இல்வாழ்வில் ஈடுபட்டனர். தொழில் புரிவதை ஆடவர்கள் தம் உயிராக மதித்தனர். மகளிர் தம் கணவரைத் தம் உயிருக்கு நேராக வைத்துக் கருதினர்.

அகத்திணை

            சங்க காலச் சான்றோர் வாழ்க்கையை அகமென்றும் புறமென்றும் இரண்டாக வகுத்தனர். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கத்தினை அகம் என்றும்; அதனைத் தவிர்த மற்ற நிகழ்வுகளைப் புறம் என்றும் கொண்டனர். சங்க இலக்கியங்களில் பெரும்பாலானப் பாடல்கள் அகச்செய்யுட்களாக அமைந்துள்ளன. அவை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனும் ஐந்து திணைகளின் அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளன. அவை, அன்பின் ஐந்திணை என்று போற்றப்படுகின்றன. இவ்வைந்து நிலத்தின் பாகுபாடுகளுக்குத் ‘திணைகள்’ என்று பெயர். ‘திணை’ என்னும் சொல்லுக்குக் ‘குடி’ எனும் ஒரு பொருளும் உண்டு. குடிகள் வாழும் நிலமும் ‘திணை’ எனப்பட்டது. பிறப்பு, குடிமை முதலானவற்றால் ஒத்த தன்மையுடைய காதலர்பால் நிகழும் காதல் மட்டுமே அகத்திணை எனப்பட்டது. இதனைத் தொல்காப்பியர்,

                        “பிறப்பே குடிமை ஆண்மை யாண்டோ

                        டுருவு நிறுத்த காம வாயில்

                        நிறையே யருளே உணர்வொடு திருவென

                        முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே” (தொல். மெய் நூ.269)

எனக் குறிப்பிடுகின்றார். ஒருதலைக்காமம் கைக்கிளை என்றும், வரையறைக்குட்படாத மிகுகாமம் பெருந்திணையென்றும் பெயர்பெற்றன.

            முல்லை முதலான திணைகளின் பெயர் ஐவகை நிலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. முல்லை இருத்தலையும், குறிஞ்சி புணர்தலையும், மருதம் ஊடலையும், நெய்தல் இரங்குதலையும், பாலை பிரிதலையும் குறித்த குறியீடு உரிப்பொருள் ஆகும். நிலமும் காலமும் முதற்பொருளாகும். தெய்வம், உணவு, மா, மரம், பறவை, விலங்கு ஆகியன கருப்பொருள்களாகும்.

களவும் கற்பும்

            காதல் வாழ்க்கை களவு, கற்பு என இரண்டாகப் பகுக்கப்படுகிறது. ஊரறியாத வகையில் வயதுவந்த ஆணும், பெண்ணும் புணர்ந்து இன்புறும் நிகழ்வு களவெனப்பட்டது. தமரறிய – ஊரறியத் திருமணம் செய்துக் கொண்டு வாழும் வாழ்வு கற்பெனப்பட்டது. இதனை,

                        “கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

                        கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

                        கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”

                                                                                                                         (தொல். கற்பு. நூ. 140)

எனும் தொல்காப்பிய நூற்பாவின் வழி அறியமுடிகிறது.

            தலைவனும் தலைவியும் தம்முள் காதல் கொண்டு தாம் இணைந்து வாழ்வதற்குப் பெற்றோர் அனுமதிக்காத பட்சத்தில் தாமாகச் சென்றுத் திருமணம் செய்து கொண்டு கற்பு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர் என்பதை,

                        “கொடுப்போர் இன்றியும் கரண முண்டே

                        புணர்ந்துடன் போகிற காலை யான”       (தொல். கற்பு. நூ.141)

எனும் நூற்பா உணர்த்துகிறது. இந்நிகழ்வு உடன்போக்கு எனக் குறிப்பிடப்படுகிறது.

உடன்போக்கு

            பெற்றோர் அறியின் காதலுக்குத் தடை ஏற்படும் என்று அஞ்சிய காதலர்கள்; உடன்போக்கில் ஈடுபடுவர். ஒரு தாய் தன் மகள் உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்து புலம்புவாள், இதனை,

                        “தற்புரத் தெடுத்த எற்றுறந் துள்ளாள்

                        ஊரும் சேரியும் ஓராங்கு அலரெழக்

                        காடும் கானமும் அவனொடு துணிந்து

                        நாடும் தேயமும் நனிபல இறந்த

                        சிறுவெண் கண்ணி”                 (அகம். 383)

மகள் உடன்போக்கில் ஈடுபடுவது முன்பே தெரிந்திருந்தால் அவளை இல்லிற் செறித்திருக்கலாமே என்று வருந்துவாள்.

            தன் மகள் காதலனோடு உடன்போக்கு மேற்கொண்டதை அறிந்த தாய்,

                        “பெரும்பெயர் வழுதி கூடல் அன்ன

                        அருங்கடி வியனகர் சிலம்பும் கழியாள்”            (அகம். 315)

இன்னொரு தாய் தன் மகள் சிலம்பு கழிநோன்பு செய்ய நேர்ந்ததை எண்ணி வருந்தினாள். பிறகு அவர்களுடைய காதலின் உறுதியையும், நேர்மையையும் பாராட்டி அவர்களை அழைத்து வந்து பெற்றோர்கள் அவர்களுக்கு மணம் முடித்துவைப்பர். ‘இந்த உலகத்தையே நான் உனக்கு ஈடாகப் பெற்றாலும் நான் உன்னைக் கைவிடேன்’ என்று தலைவன் தலைவிக்கு உறுதி கூறுவான். உன் கூந்தலைப்போல நறுமணமுள்ள மலர் ஒன்றை இந்த உலகிலேயே நான் கண்டதில்லை என்று தன் காதலியின் கூந்தலைப் பாராட்டி இன்புறுவான்.

மடலேறுதல்

            தம் மகள் காதலில் ஈடுபட்டது கண்டு அவளை மணம் செய்துக் கொடுக்கப் பெற்றோர் மறுத்தபோது தலைவன் தலைவியின் உருவத்தை துணியில் ஓவியமாக வரைந்துகொண்டு  பனங்கருக்கினால் குதிரை ஒன்று செய்து அதன் மேல் ஏறி அமர்ந்துகொள்வான். இதனை ஊரரிய இழுத்துச் செல்வார்கள் ‘பனங்கருக்கினால் அறுப்புண்ட அவன் உடலில் குருதி வடியும்’இ ஊராரும், பெண்ணின் பெற்றோரும் அவன் துயரைக் கண்டு இரக்கங்கொண்டு அப்பெண்ணை அவனுக்கே  மணம் முடிப்பார்கள். இதனை,

                        மாவென மடலும் ஊர்ப பூவெனக்

                        குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப

                        மறுகில் ஆர்க்கவும் படுப

                        பிரிதும் ஆகுப காமம் காழ்க் கொளினே”           (குறுந். 17)

எனும் குறுந்தொகைப் பாடல் வழி அறியமுடிகிறது. இதனால், அன்று காதலுக்குத் தடையிருந்ததையும், சமூகத்தில் எதிர்ப்பு இருந்ததையும் அறியமுடிகிறது. காதல் திருமணம் பெரும்பான்மையாக இருந்தாலும், அன்றைய காலகட்டத்தில் ஒத்த குலத்தார் தத்தம் தகுதி நோக்கி உரிய இடத்தில் மணம்பேசி முடிப்பதே நடைமுறை வழக்கமாக இருந்திருக்கிறது. குலவேறுபாடோ, பொருளாதார ஏற்றத்தாழ்வோ காதல் திருமணத்திற்குப் பெற்றோர்  உடன்படாமல்  இருந்திருக்கலாம் என்பதை அறியமுடிகிறது. மேலும், பெண்கள் மடலேறுதல் இல்லை.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்த்தல்

            தம் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருமணம் செய்ய விரும்புவோர் பொருத்தம் பார்த்தல் என்பது சங்ககாலத்தில் இருந்து தமிழர்களிடையே மரபாக பின்பற்றப்பட்டு வந்துள்ளது. அது இன்றும் நடைமுறையில் உள்ளது. இதனை, தொல்காப்பிய சூத்திரம் (தொல். மெய். நூ. 269) முதற் பொருத்தமாகப் பிறப்பைக் குறிக்கிறது. மேலும், அவனது குலத்தையும் குறிக்கிறது. குடிக்கு ஏற்ற ஒழுகலாறும், வயதும், தோற்றமும், இரு குடும்பங்களின் பொருளாதார நிலையையும் நோக்கப்பட்டது. இவை அனைத்தும் பொருந்தியிருப்பது உலகில் அருமை. எது இல்லாவிட்டாலும் பிறப்பு ஒத்திருக்க வேண்டும் என்பது அடிப்படையாக இருந்திருக்கலாம். எல்லா பொருத்தங்களும் உடையவர் எதிர்ப்பட்டுக் காதல் கொண்டனர் என்பது இலக்கிய மரபாகும்.

பரிசமளித்தல்

            “பெண்ணுக்கு மணமகன் பரிசமளிக்கும் வழக்கம் தொன்று தொட்டு தமிழர்களிடையே மரபாக வந்துள்ளது. அன்று இது முலைவிலை, சிறுவளை விலை, பரியம் என்று குறிப்பிடப்பட்டது. பாசிழை விலை என்றும் பெயர் உண்டு.” இதனை,

                        “இருப்பிடம் படுத்த வடுவுடை முகத்தர்

                        கடுங்கண் கோசர் நியம மாயினும்

                        உறுமெனக் கொள்குனர் அல்லர்

                        நறுநுதலரிவை பாசிழை விலையே”        (அகம். 90)

என்னும் பாடலடிகளின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் இதனை,

                        “சிறுவளை விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம்

                        முன்கடை நிறீஇச் சென்றிசி னோனே”                (நற். 300)

என்னும் பாடலடியும்,

                        “முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன,

                        நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்,

                        புரைய ரல்லோர் வரையலர் இவளென”    (புறம். 345)

என்னும் சான்றுகளால் இதனை உணரலாம்.

திருமணச் சடங்குகள்

            தமிழ்ச் சமுதாயம் வளர்ச்சி கண்டிறாத காலகட்டத்தில் எத்தகைய திருமண சடங்குகளும் இருந்திருக்க முடியாது. அந்தகாலகட்டத்தில் வயது வந்த ஆணும் பெண்ணும் தாமே கூடிக் குடும்பம் நடத்தியிருக்க வேண்டும். இச்சமூகம் நல்ல வளர்ச்சியை அடைந்த பிறகு பல்வேறு குலப்பிரிவுகள் தொழிலடிப்படையில் தோன்றிய பிறகு சில வரையறைகள் வகுத்தனர். தொல்காப்பியர் இதனை,

                        “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

                        ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

என்னும் சூத்திரத்தால் அறியமுடிகிறது. காதலில் ஈடுபட்டவர்கள் பின்னர் அதனை இல்லை என்று மறுதலித்த நிலை ஏற்பட்டபோது. இக்கரண நிகழ்ச்சியை ஏற்படுத்தினர் என்பதை வெளிப்படுத்துகிறது.

            திருமண நிகழ்வானது தொடங்கும் முன்பு கடவுள் வழிபாடு நடைபெறும். மூத்தோர், பெரியோர், பெற்றோர் நிறைந்த சபையில் இந்நிகழ்வு நடைபெறும். பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மணமகன் ஏற்றுக் கொள்வதே கற்பு வாழ்வின் தொடக்கமாக இருந்தது. கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டு என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால் எவ்வாறேனும் திருமண நிகழ்வொன்று நடத்தல் இன்றியமையாதது என்பது தொல்காப்பியர் கால நிலையாகும்.

“உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை

பெருஞ்சோற்று அமலை நிற்ப நிரை கால்

தண் பெரும் பந்தரத்  தரு மணல்; ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள்

கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்தென,

உச்சிக் குடத்தர், புத்தகல் மண்டையர்,

பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தர

புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று

வால் இழை மகளிர் நால்வர் கூடி,

‘கற்பினின் வழாஅ, நற் பல நற் உதவிப்

பெற்றோர் பெட்கும் பிணையை ஆக! என,

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி”                

                                                                                                                         (அகம். பா.86, வரி. 1 – 15)

            திருமண நிகழ்வானது ஒரு நல்ல நாளில் திங்களும் உரோகிணியும் கூடிய நல்ல நாளில் திருமணம் நிகழ்ந்தது. வைகறைப் பொழுதில் மணவினை நிகழ்ந்தது. அதன் பின்பு மணமகளைப் பெண்கள் அனைவரும் ‘பேரிற் கிழத்தி ஆக’ என வாழ்த்தினர். பின்னர் பெற்றோர் மணமகளை மணமகனிடம் கொடுத்தனர். மண விழாவிற்கு வந்தவர்கட்கு உளுத்தம் பருப்புடன் கலந்த அரிசிப் பொங்கல் இடையறாது வழங்கப்பெற்றது. இறைச்சியும், நெய்யும் கூட்டி ஆக்கிய வெண்சோற்றையும் படைத்தனர் என்பதை அறியமுடிகிறது.

முடிவுரை

            பழங்காலந்தொட்டு இன்றுவரை வயது வந்த ஆணும், பெண்ணும் தம்முள் காதல் கொண்டு காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற பொழுது அவர்கள் உடன்போக்கு மேற்கொண்டு திருமணம் செய்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்கின்றனர். தன் மகள் கொண்ட காதலை அறிந்த பெற்றோர் திருமணம் செய்து கொடுக்காத நிலையில் தலைவன் மடலேறுவான். இந்நிகழ்வைக் கண்ட தலைவியின் பெற்றோர்கள் அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

            திருமண நிகழ்வானது, சங்ககாலத்திலிருந்து இன்றுவரை சடங்குகள் மரபாகத் தொடர்ந்து தமிழர்களிடையே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன. திருமணப் பொருத்தம் பார்த்தல், பரிசமளித்தல் போன்ற திருமண சடங்குகள் காலந்தோறும் தொடர்ந்து தமிழ் மக்களிடையே பின்பற்றப்பட்டு வந்துள்ளன. சங்க காலத்திற்கு முற்பட்ட காலத்தில் காதல் வாழ்வு சிறப்புற்றிருந்தது. அதற்கு பிற்பட்ட காலத்திலிருந்து, பெரும்பாலும் காதல் திருமணங்களுக்கு அன்று முதல் இன்று வரை எதிர்ப்பு இருந்து கொண்டே வருகிறது என்பதும் அறியப்படுகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ல.திலிப்குமார்,

                                                                                                 முனைவர் பட்ட ஆய்வாளர்,

                                                                                                                             தமிழ்த்துறை,

                                                                                             அரசு ஆடவர் கலைக்கல்லூரி,

                                                                                                             கிருட்டினகிரி – 635 001.

ஆசிரியரின் பிறக்கட்டுரை

1.தொல்காப்பிய ‘அசை’க் கோட்பாடுகளும் பிற்கால யாப்பியல் கூறுகளும்

கோபம் | சிறுகதை

கோபம் | சிறுகதை

கோபம் – சிறுகதை

          என்னதான் பெண்ணாக இருந்தாலும் இப்படி கோபம் வரக்கூடாது. கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பார்கள் அதைப்போலத்தான் அவளும் சட்டென்று கோபப்பட்டாலும் குழந்தைகள் மீதும் கணவன் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருப்பாள்.

            கோபத்தில்  எடுக்கின்ற முடிவு சரியில்லை என்பார்கள். ஒரு நாள் தன் கணவனுக்கும் அவளுக்கும்  வாய்ப் பேச்சால் சண்டை வந்தது. சண்டை நீண்டுக்கொண்டே போனது. பிள்ளைகள் பாடசாலைக்குப் போயிருந்தார்கள். கணவன் இப்படி பேசிக்கொண்டு போனால் முடிவு வேற விதமாகப் போய்விடும் என்று நினைத்து தேநீர் கடைக்குப்போய் தேநீர் குடித்தவிட்டுவந்தால்  அவளுடைய கோபம் அடங்கும் என்று பக்கத்தில் கொஞ்ச தூரத்தில் இருக்கும் தேநீர் கடைக்குப் புறப்பட்டு தேநீர் குடித்துவிட்டு அங்கே உட்கார  மனசு வரவில்லை, மனசு ஏதேதோ நினைக்கலாயிற்று.

            அவள் அவர் பேசிய வார்த்தையை நினைத்து நினைத்து பார்த்தாள். அவள் எதையுமே யோசிக்காமல் கட்டிலின் மேலே இருக்கின்ற விசிறியில் தூக்குப்போட்டுக்கொள்ள தன்னுடைய சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டு இருந்தாள். அவன் வந்தான் அவன் நினைத்த மாதிரியே கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. கதவைத் தட்டித் தட்டிப் பார்த்தான். கதவு திறக்கப்படவில்லை. எல்லா சாளரமும் மூடியிருந்தது. படுக்கையறை சாளரம் மட்டும் திறந்திருந்தது. அதன் வழியே பார்த்தான். திகைத்துப்போனான்! வேண்டாம்மா நான் சொல்வதைக்கேள். இதற்கு மேல் உன்னுடன் சண்டைபோடமாட்டேன். உன் காலையாவது பிடித்து கெஞ்சி கேட்கிறேன். தூக்குப்போட்டுக் கொள்ளாதே! நம் பிள்ளைகள் அனாதையாகிவிடும், நீ இல்லை என்றால்  நானும் இறந்தே போய்விடுவேன், நான் சொல்வதைக்கேள். வந்து கதவைத் திற. ஐயோ! நான் என்ன செய்வேன்? கடவுளே! என் மனைவியை எப்படியாவது காப்பாற்று என்று கத்தினான் கதறினான். அவன் கண்முன்னே விசிறியில் கட்டப்பட்டிருந்த சேலையைக் கழுத்தில் சுருக்கு வைத்துக்கொண்டு கட்டிலின்மீது இருந்து குதித்தாள், அவன் அய்யோ அய்யோ! என்று கத்திக்கொண்டு அக்கம் பக்கம் இருந்தவர்களைக் கூப்பிட்டு கதவைப் கடப்பாறையால் பெயர்த்துவிட்டு உள்ளே போவதற்குள் அவள் உயிர் உடலை அறுத்துவிட்டு வெளியேறிச் சென்றது.

            அவர்கள் அவள் கழுத்தில் இரக்கும் சுருக்கு சேலையைக் கத்தியால் வெட்டி எடுத்தார்கள் அவளுக்கு உயிர் இருக்கக் கூடாதா! அவள் செத்திருக்கமாட்டாள். என்றெல்லாம் நினைத்தான். அவளின் கழுத்தை சேலை நெருக்கியதில் நாக்கு வெளியே வந்துவிட்டது. அவன் நாக்கை வாயின் உள்ளே தள்ளினான். மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு போகலாமா? என்று வந்தவர்களைப் பார்த்து செஞ்சினான். அதற்கு அவர்கள் இவள் இறந்தவிட்டாள். நீ மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றால் சாவு கிடங்கில் போட்டுவிட்டு எப்படி செத்தாள் என்று காவல்துறை விசாரனை நடத்தவார்கள். இதை கண்ணும் காதும் வைத்தமாதிரி மிக வேகமாக எரித்தவிடவேண்டும் அதனால், உங்களுடைய சொந்த பந்தத்துக்குச் சொல்லிவிடு, பிணத்தை சீக்கிரமாய் எடுக்கவேண்டும் என்றார்கள்.

            வீட்டின் முன்னால இருக்கின்ற மரத்தின் நிழலில் கட்டிலைப்போட்டு பிணத்தைப் படுக்கவைத்தார்கள். இறந்த செய்தியைக்கேட்ட அக்கம்  பக்கத்தில் இருப்பவர்கள் வந்துவிட்டார்கள்.

            பிள்ளைகளும் வகுப்பை முடித்துவிட்டு பாடசாலையிலிருந்து வந்து அம்மா இறந்து போனதைப் பார்த்து கதறி அழுதார்கள். அதைப் பார்த்த மற்றவர்களின் கண்களிலும் கண்ணீர் பெறுக்கெடுத்தன.

            அவன்  மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல் கையைத் தலைமீது வைத்துக்கொண்டு பூமியை நோக்கியவனாய் கண்களில் கண்ணீர் வந்து பூமியை நனைத்தபடியும், மூக்கில் ஒழுகி தரையைப் பார்க்கிறபடி உட்கார்ந்திருந்தான்.

            அவள் உயிர் எமலோகத்திற்கு போகாமல் தன்னுடைய உடலைப் பார்க்க வந்தது. வந்து பார்த்ததும் அதிர்ந்துபோய்விட்டது. பிள்ளைகள் கதறுவதைப் பார்த்து அந்த ஆவியே அழுதது. பிள்ளைகளைக் கட்டிப்பிடித்துத் தூக்கியது, தூக்க முடியவில்லை, தன் கணவனிடம் போய் அழாதிங்க! என்று கண்ணீரைத் துடைத்தது, துடைக்க முடியவில்லை தன் உடலைப்போய் தொட்டுதொட்டுப் பார்த்தது அசையவே இல்லை. அசைவற்று இருந்தது. அங்கு இருந்த ஒரு அம்மா இந்த பிள்ளைகளை விட்டு விட்டு போவதற்கு எப்படித்தான் அவளுக்கு மனசு வந்ததோ தெரியவில்லையே! நாளைக்கு அந்த பிள்ளைகளுக்கு யார் தண்ணிர் ஊற்றுவார்கள், சாப்பாடு யார் ஊட்டுவார்கள். யார் தலைவாரி பூச்சூடுவார்கள். பாடசாலைக்குப்போக பேருந்தில் யார் ஏற்றுவார்கள், அவன்  ஆண் இதையெல்லாம் செய்வானா? என்னதான் கோபம்  வந்தாலும் இப்படி செய்யக்கூடாது. அந்தப் பிள்ளைகள் முகத்தைப் பார்க்கக்கூடாதா! அவனுக்கும்  வேற சின்ன வயசு இன்னொரு திருமணம் செய்துகொண்டால் அவள் இந்த பிள்ளைகளை நல்லா பார்ப்பாளோ? இல்லை கொடுமை செய்வாளோ, இல்லை படிக்க போகவிடாமல் ஆடு, மாடு மேய்க்கவைப்பாளோ என்னவோ? தெரியவில்லையே! என்னத்தான் இருந்தாலும் இவள் இப்படி செய்திருக்கக்கூடாது. பொம்பளைக புத்தி பொட கழுத்தில் உள்ளது என்பார்கள் அதேபோல இவளும் செய்துவிட்டாளே! என்று பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மாவிடம் கூறினாள். இதைக் கேட்ட அவள் ஆவி தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது. நம் பிள்ளையை நாம் தான் கண்ணும் கருத்துமாய் பார்த்தக்கொள்ள வேண்டும் நம்ம பிள்ளைகள்  நிறைய படிக்க வேண்டும். நாளைக்கு பிள்ளைகள்  பாட சாலைக்குப் போக வேண்டும். நாம் சாக கூடாது என்று நினைத்து எமலோகத்திற்கு அவள் உயிர் பறந்து  சென்று எமதருமராசனை பார்த்தது. அந்த உயிரை பார்த்து ஏன் இவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறாய் என்று கேட்டார். ஐயா என்னை மன்னித்து விடுங்கள் நான் சாக கூடாது. நான் தெரியாமல் தூக்குப் போட்டுக்கொண்டேன். என்னுடைய உயிரை விட்டுவிடுங்க என்னுடைய உடலில் புகுந்துக்கொள்கிறேன் என்று கேட்டது அதற்கு எமன் என்னது? உன் உயிரை விடுவதா? என்ன பேசுகிறாய்? அப்படியெல்லாம் விட முடியாது! என்றார், ஐயா அப்படி சொல்லாதிங்க! என் பிள்ளைகள் கதறுவதை என்னால் பார்க்க முடியவில்லை உன் காலை பிடித்துக்கொண்டு கேட்கிறேன், என் உயிரை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியது. அதற்கு எமன் எடுத்த உயிர் எடுத்ததுதான். உன் உயிரைவிட முடியாது. அவன் காலைப் பிடித்துக்கொண்டு அவன் பாதம் நனைகிற அளவுக்கு ஆவி  கண்ணீர்விட்டது. பெண்யென்றால் பேய் இரங்கும்  என்பார்கள். அவள் உயின் கோலத்தைப் பார்த்த எமன் இங்க பாருங்கம்மா! எனக்கு மேலே ஒருவர் இருக்கிறார். அவர் தான் அழித்தல் தொழிலைப் பார்க்கின்ற சிவன். அவரை போய் பார், அவர் சொல்லியதால் தான்  உன்னுடைய உயிரை நான் எடுத்தேன் என்று கூறினார்.

            அந்த உயிர் சிவனைப் போய் பார்ப்பதற்கு முன் நம் உடலை எடுத்துவிட்டார்களோ! என்னவோ! என்று பூலோகத்திற்கு வந்து தன் உடலைப் பார்த்தது. பிள்ளைகள் அம்மா எழும்மா! எழும்மா! என்று கத்த முடியாமல் அழுதன. அவள் ஆவி தன் பிள்ளைகளைக் கட்டிப்பிடித்து அழுந்தது. என் பிள்ளைகள் என்றும் இப்படி அழுந்ததே கிடையாது இன்று இப்படி அழுகிறார்களே! நான் தெரியாமல் தூக்குப் போட்டுக் கொண்டேன் என்று நினைக்கும்போது அவள் கணவனைக் கூப்பிட்டு எல்லோரும் வந்து விட்டார்களா! தாய்வீட்டு சீதனம் கொண்டு வந்தவிட்டார்களா! சீக்கிரமாய் பிணத்தை எடுத்து எரிக்கவேண்டும் என்றார்கள். அதைக் கேட்டதும் அவள் உயிர் சிவபெருமானைநோக்கிப் பறந்தது.

            சிவபெருமானைப் பார்த்து, ஐயா! நான் தெரியாமல் தூக்குப்போட்டு இறந்துவிட்டேன். இப்போதுதான் எனக்கு புத்தி வந்தது. என் பிள்ளைகள் அனாதை யாகிவிடும். என் பிள்ளைகள் அனாதையாகிவிடும் என் உயிரை விட்டுவிடுங்கள் என் உடலில் புகுந்து என் பிள்ளைகளையும் என் கணவரையும் நல்லப்படியாகப் பார்த்துக்கொள்வேன். கோபத்தினால் தெரியாமல் இப்படி செய்துவிட்டேன். என் உயிரை விட்டு விடங்கள் என்று கெஞ்சி கூத்தாடியது. அதற்கு சிவன், என்னம்மா! சொல்லற எடுத்த உயிரை  மீண்டும் விடவதா? அப்படி விட்டால் பூலோகம் தாங்காது, அதனால் எதுவும் பேசாமல் போய்விடு! என்று கடும் கோபத்தில் சொல்லிவிட்டார். அங்கு பேசிக் கொண்டு இருக்கும்போது நம்ம உடலை எடுத்துவிடுவார்கள் என்று இருக்கும்போது உயிர் படபடத்தது திக்திக் என்று அடித்துக்கொண்டது.தன் உடலை ஓடி வந்து பார்த்தது. தன்னுடைய அம்மா அவள் உடலைக் கட்டிப்பிடித்துக் கொண்டு எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போய் விட்டாயேம்மா என்று அம்மாவைக் கட்டிப்பிடித்து அழுந்தது அத்தாய்க்கும் தெரியாது.

            சரி நேரமாச்சு! பிணத்தின் மேலே இருக்கின்ற மாலையெல்லாம் எடுத்துவிட்டு குளிப்பாட்ட எடுத்துவாங்க! பாடை கட்டி முடித்தாகிவிட்டது என்ற வார்த்தையை அவள் உயிர் கேட்டதும். சிவலோகத்திற்கு ஓடியது. சிவபெருமானை பார்த்து, என்னை உன் மகள் மாதிரி நினைத்துக்கொண்டு உன் உயிரை விட்டுவிடுங்க என்னுடைய உடலை எடுக்கப்போகிறார்கள். என்று கெஞ்சியது. அதற்கு சிவபெருமான் தன் தவத்தைக் களைத்ததற்காக என்னுடைய மருமகனையே நெற்றிக்கண்ணால் சுட்டெரித்து என் மகளை விதவையாக்கியவன் அவள் வந்து கெஞ்சியும் அவனை உயிர்பெறச்செய்யவில்லை அதனால், நீ புறப்படு என்று கூறினார், ஐயா! என் கணவன் உன் காலையாவதே பிடித்துக்கொள்கிறேன் நீ சாகாதே என்று கெஞ்சியும் நான் அவர் பேச்சை கேட்காமல் செத்துவிட்டேனே என்று நினைத்துக்கொண்டு, பூலோகத்திற்கு அவ்வுயிர் ஓடிவந்து பார்த்தது பூவால் பாடையெல்லாம் அலங்கரிக்கப்பட்டு பிணத்தை அதன்மீது வைத்தவிட்டார்கள். இதைப்பர்த்து மறுபடியும் சிவலோகத்திற்கு தன் உயிர் ஓடியது. சிவபெருமானின் காலைப்பிடித்தக்கொண்டு கண்ணீர்விட்டு கதறியது. இதைப்பார்த்த சிவபெருமான் இந்த உயிரை கொண்டுபோய் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வாங்க என்று இங்கு இருப்போருக்குச் சொன்னதும் அந்த உயிரை பெண்ணோட உயிர் என்று கூட பார்க்காமல் கொண்டுபோய் எல்லைக்கு அப்பால் விட்டுவிட்டு வந்தார்கள். மீண்டும் அந்த உயிர் பூலோகத்திற்கு ஓடிவந்தது. நிலவு, நட்சத்திரம், சூரியன், மேகம், மழை, வானம் போன்றவர்கள் அந்த உயிர் சிவலோகத்திற்கும் பூலோகத்திற்கும் அலைவதைப் பார்த்து கண்ணீர் விட்டன. என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்து அவர்களும் இருந்தனர்.

            உயிர் வந்து வீட்டுகிட்ட பார்த்தது. உடல் இல்லை அங்க இருந்த ஒரு அம்மா நற்று என்னோட இன்நேரத்தில் பேசினால். ஆனால், இன்று இல்லையே என்று புலம்பினாள். அதைக்கூட காதில் வாங்காமல் பிணத்தை எடுத்தக்கொண்டு போகும் வழியே பார்த்து ஓடியது பாடையில் பிணம் பாதி தூரம் போய்க்கொண்டு இருந்தது. சுடுகாட்டிற்குப் போவதற்குள் மீண்டும் ஒருமுறை கேட்டுப்பார்ப்போம் என்று எமலோகத்திற்குச் சென்றது எமதருமராசனைப் பார்த்து ஐயா! உன் பெயரிலேயே தருமராசா என்று இருக்கிறது அதனால், என் உயிரை தருமமாக விட்டுவிடுங்க என்று கெஞ்சியது. யாம்மா நான்தான் சொன்னேனே போய் சிவபெருமானைப் பார் என்று கூறினார். அதற்கும்  நான் போய் பார்த்தேன் முடியாது என்று கூறிவிட்டார். நீங்க தான் எப்படியாவது அவரிடம் சொல்லி என் உயிரை பூலோகத்திற்கு விடச் சொல்லவேண்டும் என்று அவள் உயிர் கெஞ்சியது. அதற்கு எமன் நான் உடன் வருகிறேன். ஆனால் நீதான் கேட்க வேண்டும் என்று எமதருமராசனும் உடன்சென்றார். சிவபெருமானைப் பார்த்து, ஐயா! என் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றுவிட்டார்கள். என் உயிரை எப்படியாவது விட்டுவிடுங்கள் என்று கண்ணீரைத் தாரைத் தாரையாக விட்டு அழுதது. இதனைக் கண்ட சிவபெருமான் எமனைப்  பார்த்து கேட்டார். இந்த உயிரை என்னசெய்வது எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டிங்குது என்று கூறினார். அதற்கு எமன் ஒரு வயசான பாட்டி என்னை எப்பவந்து எமன் கூட்டிப்போகும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. அதனால், இந்த உயிரை விட்டுவிட்டு அதற்கு பதிலாக அந்த பாட்டி உயிரை எடுத்தக்கொள்வோம் என்று கூறினார். அதற்கு சிவபெருமான் ஏதோ செய் மீண்டும் வந்து இங்கு கெஞ்சக் கூடாது என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார். எமன் உடனே அந்த பாட்டி உயிரை எடுத்துக்கொண்டு அந்த உயிரை விட்டுவிட்டார். அந்த உயிருக்கே உயிர் வந்ததுபோல் இருந்தது. எமனுக்கு நன்றி சொல்லிவிட்டு வேகமாக ஓடிவருகிறதைப் பார்த்த நிலா, நட்சத்திரம், சூரியன், வானம், மழையெல்லாம் மகிழ்ச்சியடைந்தன.

            ஓடிவந்துபார்த்தால் விறகு கட்டையை சுடுகாட்டில் மேடையாக அடுக்கிவைத்து அதன்மீது பிணத்தை வைத்து வெட்டியான் தீ வைத்தான் மெதுவாக எறிய ஆரம்பித்தது. அந்த எரிகின்ற உடலில் உயிர் புகுந்து தன் உடலோடு சேர்ந்த பிறகு கீழே குதித்தது. என்னைக் காப்பாற்றுங்க! காப்பாற்றுங்க என்று கத்தியது வெட்டியான் பேய்தான் வந்துவிட்டது என்று நினைத்து பிணத்தை எரிப்பதற்குப் பயன்படுத்தும் கட்டையால் அடித்துக் கொன்று எரிக்கின்ற நெருப்பில் எடுத்துப்போட்டு எரித்துவிட்டார்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர்.

மேலும் பார்க்க,

1.மறையாத வடு

2. பாலம் | சிறுகதை

சங்க இலக்கியமும் தொல்லியலும்

சங்க இலக்கியமும் தொல்லியலும்

“சங்க இலக்கியமும் தொல்லியலும்”

       தொல்லியலை “ஆர்க்கியாலஜி” என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதன் பொருள் “ஆதிகாலத்தைப் பற்றிய அறிவியல்” என்பதாகும். பண்டைக்கால மக்கள் விட்டுச் சென்ற பொருட்களை மேற்பரப்பிலோ அல்லது பூமியை அகழ்ந்தோ எடுத்து அவற்றின் மூலம் அவர்கள் வாழ்ந்த வரலாற்றை உய்த்தறிந்து கூறுவதே தொல்லியல் ஆகும்.

            தொல்லியல் என்பது அகழ்வராய்ச்சியை மட்டும் குறிப்பது அல்ல. பழங்காலக் கல்வெட்டு, செப்பேடு, நாணயம், முத்திரை, மோதிரம் முதலிய அணிகலன்கள், ஓலைப் பட்டயம் போன்ற பல பொருட்களைக் குறிக்கும். இப்பரந்த தொல்லியல் சான்றுகளில் பல சங்ககாலக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இத்தொல்பொருள்களின் காலத்தை அறிவியல் முறைப்படி கண்டுபிடிக்க இக்காலத்தில் வாய்ப்பு உள்ளதால் சங்கத்தின் இருப்பு, காலம், அவை கூறும் செய்திகளின் உண்மைத் தன்மை இவைகள் உறுதிப்படுகின்றன.

சங்கம்

            மதுரையில் தமிழ்ச் சங்கம் இருந்ததை இலக்கியம் வழி அறிகிறோம். மதுரை “தமிழ்க்கூடல்” “தமிழ்கெழு கூடல்” “கூடலின் ஆய்ந்த ஒண்தீந்தமிழ்” என்ற தொடர்களால் தமிழோடு இணைத்துக் கூறப்படுகிறது. ஒரு சமயம் மாங்குடி மருதன் சங்கத்தலைவராக இருந்ததாக ஒரு சங்கப்பாடல் கூறுகிறது. முற்காலப் பாண்டியர் செப்பேடுகளில் சங்கம் பற்றிய குறிப்புகள் பல காணப்படுகின்றன. பராந்தகன் வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டில்,

            “தென்மதுரா புரம்செய்தும் அங்கதனில்

            அருந்தமிழ்ச் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்”

என்ற தொடர் உள்ளது. (97-98)

இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டில்,

            “மதுராபுரிச் சங்கம் வைத்தும்

            மாபாரதம் தமிழ்ப் படுத்தும்”

என்று கூறப்படுகிறது (102-103). அதே செப்பேட்டில் தமிழோடு வடமொழிப் பிரிவும் சங்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

            “வளமதுரை நகர்கண்டும் மற்றதற்கு மதில்வகுத்தும்

            உளமிக்க மதியதனால் ஒண்டமிழும் வடமொழியும்

            பழுதறத்தான் ஆராய்ந்து”

என்பது அப்பகுதியாகும் (93-93).

அகத்தியர்

            தொல்காப்பியருக்கு முன்னர் அகத்தியர் வாழ்ந்து “அகத்தியம்” என்ற இலக்கண நூல் செய்தார் என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட செய்தி. அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் தொல்காப்பியரும் ஒருவர் என்பர்.

            பாண்டியரின் பழமையான செப்பேடுகளில் பாண்டியருக்கும் அகத்தியருக்கும் உள்ள தொடர்பு கூறப்படுகிறது.

            “அகத்தியனொடு தமிழ் தெரிஞ்சும்” (சிவகாசி செப்பேடு 48)

            “அகத்தியனொடு தமிழ் ஆய்ந்தும்” (தளவாய்புரச் செப்பேடு 88)

            “தென் வரைமிசைக் கும்போத்பவனது

            தீந்தமிழால் செவி கழுவியும்” (சின்னமனூர்ப் பெரிய செப்பேடு 81-82)

என்பன அப்பகுதிகள் ஆகும்.

சேரர்

            கரூர் மாவட்டம், புகலூர் வேலாயுதம்பாளையத்தில் ஆறுநாட்டார் மலையில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டில் பதிற்றுப்பத்து 7,8,9 ஆம் பத்துக்கு உரிய சேர மன்னர்கள் அதே வரிசையில் கூறப்பட்டுள்ளனர். செல்வக் கடுங்கோ வாழியாதனின் பேரனும், பெருங்கடுங்கோ மகனுமான இளங்கடுங்கோ இளவரசனாக ஆனபோது யாற்றூர்ச் செங்காயபன் என்ற மூத்த சமணத் துறவிக்குக் கல்படுக்கை அமைத்துக் கொடுத்ததை அக்கல்வெட்டுக் கூறுகிறது.

            “மூத்த அமண்ணன் யாற்றூர் செங்காயபன் உறைப்

            கோ ஆதன் செல்லிருப்பொறை மகன்

            பெருங்கடுங்கோன் மகன் இளங்

            கடுங்கோ இளங்கோ ஆக அறுத்த கல்”

என்பது அக்கல்வெட்டாகும். சேரமான் கோதைக்குப் படைத் துணைவன் பிட்டங்கொற்றன். அவன் பெயரும் அவன் மகள் கொற்றியின் பெயரும் ஆறுநாட்டார் மலைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

            கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் வனப்பகுதியில் சேரபுழா என்னும் ஆற்றங்கரையில் உள்ள பாறையில் பழந்தமிழ் எழுத்தில் “கடும்மி புத சேர” என்ற தொடர் வெட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இத்தொடருக்குக் “கடுமான் சேரல்” என்று பொருள் கொள்கின்றனர். சித்தோடு அருகேயுள்ள கருமலைக் கல்வெட்டில் “குட்டுவன்செய்” என்ற பெயர் பழந்தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. சேரர் மரபில் “சேய்” என்று குறிக்கப்படுபவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் என்பவனே. இது அம்மன்னனைக் குறிக்கலாம்.

            சேரரின் உருவமும் பழந்தமிழ்ப் பெயரும் பொறிக்கப்பட்ட “மாக்கோதை” “மாக்கோக்கோதை” “குட்டுவன்கோதை” “கொல்லிப் பொறை” “கொல்லிரும் பொறை” காசுகள் கிடைத்துள்ளன. ஆதன், அந்துவன் என்பன சேரர்க்கு உரிய பெயர்கள், (சேரலாதன், ஆதன், அழிசி, அந்துவன் சேரல்) அழகர்மலை, குன்னக்குடி, புகலூர், எடக்கல் போன்ற பல இடங்களில் இப்பெயர்கள் காணப்படுகின்றன.

            யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கரூரில் ஆட்சிபுரிந்த கொங்குச் சேரரில் ஒருவன். அம்மன்னன் பற்றிய ஒரு ஆவணம் “மாந்தரஞ்சேரல் பதிகம்” என்ற பெயரில் கிடைத்துள்ளது. மாந்தை எனத் தன் பெயரில் ஒரு நகர் உண்டாக்கி அங்கு ஐயன் என்னும் சாத்தன் கோயில் எடுத்தான் என்று கூறுகிறது.

            “உதியனது நன்மரபில் பதிஎனவே வந்தமர்ந்த

            ஆய்ந்துணர்வு கொளும்புனித மாந்தரஞ் சேரல்மன்னன்

            மாந்தையெனத் தன்நாமம் மருவஒரு நகர்அமைத்து

            பாந்தமுடன் ஐயன் என்னும் பகர்சாத்தன் தளிஎடுத்து”

என்பது மெய்க்கீர்த்திப் பகுதி. திருப்பூர் மாவட்டத்தில் வள்ளிஎறிச்சல் கிராமத்தில் “மாந்தபுரம்” என்னும் ஊர் இன்றும் உள்ளது. அங்குள்ள சிவாலயம் மாந்தீசுவரம். அங்குள்ள கோயில் “நாட்டராயன் – நாச்சிமுத்து ஐயன் கோயிலே” மாந்தரஞ்சேரல் எடுத்த சாத்தன் கோயிலாகும். சிவாலய அமைப்பின்றி உள்ள சிறு கோயில் ஒன்று மாந்தீசுவரர் கோயில் என்ற பெயரில் அவ்வூரில் உள்ளது. அது மாந்தரஞ்சேரலின் பள்ளிப்படைக் கோயிலாக இருக்கலாம்.

செப்பேட்டில் வஞ்சி

            கரூருக்கு “வஞ்சி” என்ற பெயர் உண்டு. அதனால் சிலர் சேர மரபின் அனைவர்க்கும் கரூர் வஞ்சியே தலைநகர் என்று கூறுவர். சேரர் வஞ்சி பெரியாற்று முகத்துவாரத்தில் கடல் ஒலி கேட்கும் இடத்தில் உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. கொங்கு நாட்டை வென்று கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த சேரர்கள் கரூர் முதலிய சில ஊர்கட்கு வஞ்சி என்று பெயர் வைத்துள்ள விபரம் திருப்பூர் அருகே கிடைத்த அனுப்பப்பட்டிச் செப்பேடு மூலம் தெரிகிறது.

            “கொங்கு மலைநாடும் குளிர்ந்தநதி பன்னிரண்டும்

               சங்கரனார் தெய்வத் தலம்ஏழும் – பங்கயஞ்சேர்

               வஞ்சிநகர் நாலும் வளமையால் ஆண்டருளும்

               கஞ்சமலர்க் கையுடையோன் காண்”.

            என்பது அப்பாடலாரும். “நாலு வஞ்சியும் சேரப்படைத்த” என்பது ஒரு செப்பேட்டுத் தொடர். கரூர் அருகில் “முசிறி” என்ற சேரர் துறைமுக நகர்ப் பெயருடன் ஓர் ஊர் உள்ளது குறிப்பிடத்தக்கது.         ஒரு தனிப்பாடல் மூலம் சேலம், தாராபுரம், கரூர், மூலனூர் என்ற நான்கு ஊர்களும் “வஞ்சி” எனப் பெயர் பெற்றிருந்தது தெரிகிறது.

            “மாந்தரர்க்கும் மற்றுவரு மன்னவர்க்கும் கொங்குவஞ்சி

            ஏந்துபுகழ் சேர்தலைமை ஏய்ந்தபதி – சார்ந்திலகு

            சேலமொடு தாரா புரியும் திகழ்கருவூர்

            மூலனூர் ஆக மொழி”

என்பது அப்பாடலாகும். தாராபுரம் “பெருவஞ்சி” எனப்பட்டது. இவ்வூர்களில் வஞ்சியம்மன் கோயில்கள் இருப்பது சிறப்புச் செய்தியாகும்.

சோழர்

        தேரிருவேலியில் அகழாய்வில் கிடைத்த பானையொன்றில் “நலங்கிள்(ளி) என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பரணர் பாடிய அகநானூற்றுப் பாடல் ஒன்றில்

            “கடும்பகட்டு யானைச் சோழர் மருகன்

            நெடுங்கதிர் நெல்லின் வல்லம்கிழவோன் நல்லடி”

என்பான் குறிக்கப்படுகின்றான். சோழரின் அன்பில் செப்பேட்டில் கோச்செங்கட்சோழன் மகன் நல்லடி என்று குறிக்கப்பட்டுள்ளார். உறந்தைத் தலைவன் “தித்தன்” என்பவனை அகமும், புறமும் பாராட்டுகிறது. “தித்தன்” பெயர் பொறித்த மோதிரம் கரூரில் கிடைத்துள்ளது.

பாண்டியர்

            நெட்டிமையார் என்ற சங்கப் புலவர் கடல் தெய்வத்திற்கு விழா எடுத்த பாண்டியன் பற்றிக் குறிப்பிடுகிறார். “முந்நீர் விழாவின் நெடியோன்” எனப்படும் அப்பாண்டிய மன்னன் “வடிம்பலம்ப நின்ற பாண்டியன்” என்றும் அழைக்கப்படுவான்.

அம்மன்னன் பற்றி நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேட்டில்,

            “மிக்கெழுந்த கடல்திரைகள்

            சென்றுதன் சேவடி பணிய

            அன்று நின்ற ஒருவன்”

என்றும், பராந்தக பாண்டியன் கல்வெட்டில் மெய்க்கீர்த்திப் பகுதியில்,

            “மன்னர்பிரான் வழுதியர்கோன்

            வடிம்பலம்ப நின்றருளி

            மாக்கடலை எறிந்தருளி”

என்று குறிப்புகள் வருகின்றன. பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் வயதில் முடிசூடினான். அவனை வெல்ல சேரன், சோழன் ஆகிய அரசர்களும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய சிற்றரசர்களுமாக எழுபேர் இணைந்து போரிட்டனர். நெடுஞ்செழியன் ஆலம்கானம் என்ற இடத்தில் ஒரே பகலில் எழுவரையும் வென்று “தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்று பெயர் பெற்றான். இதனை நக்கீரர்,

            “கொய்சுவல் புரவிக் கொடித்தேர்ச் செழியன்

            ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச்

            சேரல் செம்பியன் சினம்கெழு திதியன்

            போர்வல் யானைப் பொலம்பூண் எழினி

            நார்அரி நறவின் எருமை யூரன்

            தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்

            இருங்கோ வேண்மான் இயல்தேர்ப் பொருநன்என்று

            எழுவர் நல்வலம் அடங்க ஒருபகல்

            முரைசொடு வெண்குடை அகப்படுத்து”

என்று பாடியுள்ளார் (அகம் 36).

இச்செய்தி இராசசிம்ம பாண்டியனின் சின்னமனூர்ப் பெரிய செப்பேட்டில்,

            “தலையாலங் கானத்துத் தன்னொக்கும் இருவேந்தரை

            கொலைவாளின் தலைதுமித்தும் குரைத்தலையின் கூத்தொழித்தும்”

என்று கூறப்பட்டுள்ளது. பாண்டியன் பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேட்டிலும் “ஆலங் கானத்து அமர்வென்றம்” என்று கூறப்பட்டுள்ளது.            மாங்குளம் பழந்தமிழ்க் கல்வெட்டில் கணியநந்தாசிரியன் என்ற சமணத்துறவிக்கு கடலன், வழுதி என்று பெயர் பெற்ற நெடுஞ்செழியன் காலத்தில் கல் படுக்கை அமைத்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்நெடுஞ்செழியன் மேற்கண்ட தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனா அல்லது ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனா என்பது தெரியவில்லை. “பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி” பல சங்கப் பாடல்களில் குறிக்கப்பட்ட பாண்டிய மன்னன். நெடுஞ்சடையன் பராந்தகனின் வேள்விக்குடிச் செப்பேட்டில்,

            “கொல்யானை பலஓட்டிக் கூடாமன்னர் குழாம்தவிர்த்த

            பல்யாக முதுகுடுமிப் பெருவழுதியெனும் பாண்டியாதிராசன்”

என்று அம்மன்னன் குறிக்கப்படுகிறான்.

            “பெருவழுதி” “வழுதிபெருவழுதி” என்று பழந்தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. இவை இம்மன்னன் வெளியிட்ட நாணயமாக இருக்கலாம். மாங்குடி மருதனாரால் பாண்டியன் நெடுஞ்செழியன் மீது பாடப்பட்ட இலக்கியம் “மதுரைக் காஞ்சி”. பத்துப்பாட்டில் ஆறாவது இலக்கியம். அந்நூலின் தொடக்கமாக அமைந்தது “ஓங்குதிரை வியன்பரப்பில்” என்ற தொடராகும். பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரச் செப்பேடு “ஒங்குதிரை வியன்பரப்பில்” என்றே தொடங்குகிறது.

மீன் சின்னம்

            பாண்டியர்க்குரியது மீன் சின்னம். சில எழுத்தாளர்கள் பாண்டியர் காலம் முடிந்து பல நூற்றாண்டுகள் கழித்து மிகப் பிற்காலத்தில் எடுக்கப்பட்ட கோயிலில் ஒற்றை மீன் சின்னத்தைப் பார்த்தவுடன் இது “பாண்டியர்காலக் கோயில்” என எழுதியுள்ளதைப் பல  நூல்களிலும், கட்டுரைகளிலும் காண்கிறோம். இரட்டை மீன்களுடன் நடுவே செண்டு உள்ள மீன் சின்னம் தான் பாண்டியர் சின்னம் ஆகும்.

            “வானார்ந்த பொற்கிரிமேல்

              வரிக்கயல்கள் விளையாட” என்பது பாண்டியர் மெய்க்கீர்த்திப் பகுதி.

சோழநாட்டை வென்ற பாண்டியர்கள் தம்மோடு தங்கள் நாட்டுச் சிற்பிகளையும் அழைத்துக் கொண்டு சென்று பல இடங்களில் பாறைகளில் தங்கள் மீன் சின்னத்தைப் பொறிக்கச் செய்துள்ளனர். சோழர் செப்பேட்டில் எல்லைகூறும் சில இடங்களில் “இணைக் கயல்கள் பொறித்துக் கிடந்த பாறைக்குத் தெற்கும்” என்பன போன்ற தொடர்கள் காணப்படுகின்றன.

பாரி மகளிர் தொடர்பான செய்திகள்

            பாரி மறைவிற்குப் பின்னர் பாரியின் நண்பரும், அவைக்களப் புலவருமாகிய கபிலர் “பாரி மகளிரைப் பார்ப்பாற்படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்துப் பாடியது” என்று புறநானூறு 113ஆம் பாடல் அடிக்குறிப்புக் கூறுகிறது. பின்னர் புறநானூறு 236 ஆம் பாடலில் “வேள்பாரி துஞ்சியவழி அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து வடக்கிருந்த கபிலர் பாடியது” என்ற குறிப்பும் காணப்படுகிறது.

            பறம்புமலையிலிருந்து பாரி மகளிருடன் புறப்படும்போதே பார்ப்பனரிடம் அடைக்கலம் கொடுக்கக் கபிலர் முடிவு செய்திருப்பாரானால் பாரி மகளிரை இருங்கோவேள், விச்சிக்கோ முதலிய சிற்றரசர் அவையில் நிறுத்தித் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று ஏன் கெஞ்சிக்கேட்க வேண்டும்? எனவே புறநானூறு அடிக்குறிப்பின் மீது ஐயம் ஏற்படுகிறது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் கீழுர் வீரட்டானேசுவரர் கோயிலில் முதலாம் ராசராசன் காலப் பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. அக்கல்வெட்டு பாரி மகளிரைத் திருக்கோயிலூர் மலையமான் மக்களுக்குத் திருமணம் செய்வித்து விட்டுத் தீப்பாய்ந்து கபிலர் உயிர்துறந்தார் என்று கூறுகிறது.

            “தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன்

            மூரிவண் தடக்கைப் பாரிதன் அடைக்கலப்

            பெண்ணை மலையர்க்கு உதவிப் பெண்ணை

            அலைபுனல் அழுவத்து அந்தரிட் சம்செல

            மினல்புகும் விசும்பின் வீடுபேறு எண்ணிக்

            கனல்புகும் கபிலக் கல்”

என்று இந்நிகழ்வைக் குறிக்கும் கல்வெட்டுப் பாடல் பகுதியாகும்.   இராசராசன் காலத்துக்கு முற்பட்ட கண்டராதித்த சோழனின் இரண்டாமாண்டுக் கல்வெட்டு ஒன்று திருக்கோயிலூர் மலையமான் வழிவந்த சித்தவடவன் என்பானைப் புகழும் போது,

            “பாரி மகளிரைப் பைந்தொடி முன்கை

            பிடித்தோன் வழிவரு குரிசில்”

என்று கூறுகிறது. சிவகங்கை மாவட்டம், பிரான்மலைதான் பாரியின் பறம்புமலை. அம்மலை (இப்போது திருக்கொடுங்குன்றம்) அடிவாரத்தில் உள்ள மங்கைநாதர் கோயில் கல்வெட்டில் “தேனாற்றுப் போக்கு வடபறப்பு நாடு, தென்பறப்பு நாடு” என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. மங்கைநாதர்கோயிலே பாரீச்சுரம் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. “முன்னூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு” என்று புறநானூறு கூறும். கல்வெட்டில் முன்னூறு ஊர்ப்பற்று என்ற தொடர் காணப்படுகிறது.

பட்டினப்பாலை

            பத்துப்பாட்டில் ஒன்பதாவதாக இடம் பெற்ற நூல் பட்டினப்பாலை. சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான் மீது கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது. இந்நூல் பாடிய புலவருக்கு மன்னன் 16 லட்சம் பொன் பரிசாகக் கொடுத்தான் என்று கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் கூறுகிறது. சங்கரசோழன் உலாவும் தமிழ்விடுதூதும் 16 கோடி பொன் அளித்ததாகக் கூறும்.

            “தழுவு செந்தமிழ் பரிசில் வாணர்பொன்

            பத்தொடு ஆறு நூறாயிரம் பொன்பெறப்

            பண்டு பட்டினப் பாலை கொண்டதும்” என்பது கலிங்கத்துப்பரணி.

            சோழன் முதல் பராந்தகன் “மதுரை கொண்ட கோப்பரகேசரி” என்று பட்டம் பெற்றான். பின்னர் வந்த பல சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்து வென்றனர். மதுரைக்கு அந்தகம் விளைவித்தவன் என்ற பொருளில் சோழ இளவரசர்கள் மதுராந்தகன் என்று பெயர் சூட்டப்பட்டனர். மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பின் பட்டம் பெற்ற மூன்றாம் ராசராசன் காலத்தில் சோழநாடு வலிமை குன்றியது. இதைக் கண்ட மாறவர்மன் சுந்தரபாண்டியன் பெரும்படை திரட்டி வந்து மூன்றாம் ராசராசனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றி வஞ்சம் தீர்த்துக் கொண்டான். மாடமாளிகை கூட கோபுரங்கள் அனைத்தையும் இடித்தான். ஆடரங்குளை அழித்தான். தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொழுத்தினான்.

            ஒரு புலவர் இந்த வெற்றியையும், பாண்டியன் செய்த அழிவையும் பாடியவர். கரிகாற் பெருவளத்தான் பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் நினைவாக எடுத்த 16 கால் மண்டபம் மட்டும் சோழநாட்டில் அழியாமல் நின்றது என்று பாடினார். இப்பாடல் திருவெள்ளறையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது.

            “வெறியார் தளவத் தொடைச்செய மாறன் வெகுண்டதொன்றும்

            அறியாத செம்பியன் காவிரி நாட்டு அரமியத்துப்

            பறியாத தூண்இல்லை கண்ணன்செய் பட்டினப் பாலைக்கன்று

            நெறியால் விடும்தூண் பதினாறு மேயங்கு நின்றனவே”

என்று அப்பாடலாகும்.

மலைபடு கடாம்

            பத்துப்பாட்டில் பத்தாவதாக உள்ள நூல் மலைபடுகடாம். பல் குன்றக்கோட்டத்து செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன் மீது இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் பாடிய நூல். 583 வரிகளையுடையது.       நன்னனது மலை நவிரமலை. நவிரமலையில் பல்வேறு அருவிகள் நீர் விழுகிறது. இது ஒரு பெரிய யானையின் மதநீருக்கு ஒப்பானது என்று பாடிய காரணத்தால் இந்நூல் “மலைபடுகடாம்” என்று பெயர் பெற்றது.

            செங்கம் ரிஷபேசுவரர் கோயிலில் ஒரு கல்வெட்டுப் பாடல் உள்ளது. நன்னனின் மலை இலக்கியம் பெற்றது. அருவிகள் உள்ள மலை. ஆனால் இன்று காங்கேயன் கண் சிவந்தால் (கோபித்தால்) அருவிகள் விழும். இரத்த ஆறுதான் புரளும் என்று காங்கேயனின் வீரமும் நயமும் தோன்றப் புலவர் பாடியுள்ளார்.

அப்பாடல் கல்வெட்டு,

            “ஸ்ரீ

            வண்டறைதார் மன்னர் மலைபடைத்தென் மன்னரைவென்

            கண்டதிறல் காங்கேயன் கண்சிவப்பப் – பண்டே

            மலைகடாம் பாட்டுண்ட மால்வரை செஞ்சோரி

            அலைகடாம் பாட்டுண் டது”.

என்பதாகும். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கல்வெட்டொன்றில் மலைபடுகடாம் பற்றி குறிப்பு வருகிறது. பிற்காலப் பல்லவமன்னன் கோப்பெருஞ்சிங்கன் மகன் ஆட்கொண்ட தேவன் மலைபடுகடாம் புகழ்பெற்ற நன்னன் மலையில் தனது வெற்றிச் சின்னத்தைப் பொறித்தான் என்று அக்கல்வெட்டுப் பாடல் குறிக்கிறது.

            “நல்லிசைக் கடாம்புனை நன்னன் வெற்பில்

            வெல்புகழ் அனைத்தும் மேம்படத் தங்கோன்

            வாகையும் குரங்கும் விசயமும் தீட்டிய

            அடல்புனை நெடுவேல் ஆட்கொண்ட தேவன்”

என்பது அப்பாடலாகும்.

சில சங்கப் புலவர் பற்றிய குறிப்பு

            இராமநாதபுரத்தில் உள்ள சீமாறன் சீவல்லவன் கல்வெட்டொன்றில் “இருப்பைக்குடி கிழவன் எட்டி சாத்தன் என்பவன் தமிழ்கெழு கூடலில் சங்கப் பலகையில் வீற்றிருந்தவர் வழிவந்தவன்” என்று குறிக்கப் பெறுகிறார். செங்கை மாவட்டம், திருக்கச்சூர் கச்சபேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் “பெருநம்பி முத்தமிழ் ஆசான்” என்பவர் சங்கப் புலவர் சாத்தனார் வழிவந்தவர் என்று குறிக்கப் பெறுகிறார்.

            மதுரை மருதன் இளநாகனார் திருப்பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடும் பொழுது “அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை” என்று குறிப்பிடுகின்றார். திருப்பரங்குன்றில் உள்ள பழந்தமிழ்க் கல்வெட்டு ஒன்று “அந்துவன் கொடுப்பித்தவன்” என்று பொறிக்கப்பட்டுள்ளது. கீரன், கீரனார், நக்கீரன், இளங்கீரன், பெருங்கீரன் என்று பல புலவர்கள் பெயர் பெற்றுள்ளனர். புகலூர் ஆறுநாட்டார் மலையில் “கீரன்” எனப் பெயர் பொறிக்கப்பட்ட சில கல்வெட்டுகள் உள்ளன. ஓமன் நாட்டில் கிடைத்த ஒரு பானையோட்டில் கீரன் என்ற பெயர் பழந்தமிழில் எழுதப்பட்டுள்ளது. மோசிகீரனார், முடமோசியார் என்ற பெயர்களில் வரும் மோசி என்ற ஊர்ப் பெயர் தொண்டூர் பழங்கல்வெட்டில் குறிக்கப்படுகிறது.

யவனச் சான்றுகள்

            சங்க இலக்கியங்களில் யவனர் பற்றிய குறிப்பு பல இடங்களில் வருகின்றன.

            “யவனர் தந்த வினைமாண் நன்கலம்

            பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” (அகம் 149)

            “யவனர் நன்கலம் தந்த தண்கழ் தேறல்” (புறம் 56)

            “யவனர் ஓதிம விளக்கு” (பெரும் 315)

            “யவனர் இயற்றிய வினைமாண் பாவை” (நெடு 101)

            “வலிபுணர் யாக்கை வன்கண் யவனர்” (முல் 61)

என்பன அவற்றுள் சில.  தொல்லியல் மேற்பரப்பாய்விலும், அகழாய்விலும் பலவிதமான ரோமானியர் தொடர்பான பொருட்கள் கிடைக்கின்றன.

1.ரோமானியர் மட்டுமே பயன்படுத்தும் “அரிட்டைன்” “ரௌலடெட்” ஓடுகள் பல தமிழ்நாட்டில் கிடைக்கின்றன.

2.உருவமும் பெயரும் பொறித்த ரோமானிய மன்னர் காசுகள் பல கிடைத்துள்ளன.

3.ரோமானியர் பயன்படுத்தும் மதுக்குடங்களான “அம்போரா” மதுக்குடங்கள், எச்சங்கள் பல கிடைத்துள்ளன.

4.ரோமனிய சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன.

இத்தியாவில் கிடைக்கின்ற ரோமானிய மன்னர் காசுகளில் 80 விழுக்காடு தமிழ்நாட்டில் கிடைக்கின்றன. அரிக்கமேடு அகழாய்வில் ரோமானியக் குடியிருப்பு உள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அகழாய்வில் சங்ககால ஊர்கள்

            சங்க இலக்கியம் குறிப்பிடும் 17 ஊர்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1.அரிக்கமேடு (வீரை முன்துறை)

2.அழகன் குளம் (மருங்கூர்ப்பட்டினம்)

3.உறையூர் (உறந்தை)

4.கரூர் (கருவூர்)

5.காஞ்சிபுரம் (காஞ்சி)

6.காவிரிப்பூம்பட்டினம் (புகார்)

7.கொடுமணல் (கொடுமணம்)

8.கொற்கை (கொற்கையம் பெருந்துறை)

9.தருமபுரி (தகடூர்)

10.திருக்கோவிலூர் (கோவல்)

11.திருத்தங்கல் (தங்கால்)

12.பொருந்தல் (பொருந்தில்)

13.மதுரை (பெரும்பெயர் மதுரை)

14.வசவசமுத்திரம் (நீர்ப்பெயற்று)

15.மாங்குடி (உயர்ந்த கேள்வி மாங்குடி)

16.வல்லம் (சோழர் வல்லம்)

17.கொடுங்கலூர் (முசிறி)

மேற்கண்ட ஊர்களில் நடைபெற்ற அகழாய்வில் கொற்கையின் காலம் கி.மு.850 என்றும், கொடுமணலின் காலம் கி.மு.500 என்றும், பொருந்தல் காலம் கி.மு.490 என்றும் அறிவியல் முறைப்படி நடைபெற்ற கரிப்பகுப்பாய்வு (ஊ14) காலக்கணிப்புப்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர்ந்த நாகரிகத்துடன், சிறந்த எழுத்தறிவு பெற்று விவசாய உற்பத்தியுடன் கைத்தொழிலும் வல்லவர்களாய் ரோம நாடு, வடநாடு, இலங்கை, ஆப்கானிஸ்தான் முதலிய பகுதித் தொடர்புடன் சங்க கால மக்கள் வாழ்ந்தது தெரிகிறது. பல்வேறு கலைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். நிலையாக ஊர்கள் அமைத்து வாழ்ந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

கடல் பணமும் வெளிநாட்டுச் சான்றுகளும்

            ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகட்டு முற்பட்டதாகக் கருதப்பெறும் தொல்காப்பியம் “கலத்திற் சேரல்” என்று கடல் பயணத்தைக் குறிக்கிறது. அன்றைய தமிழர்கள் கடல் பயணத்திற்குப் பெண்களை அனுமதிக்கவில்லை. “முந்நீர் வழக்கம் மகடூவோடு இல்லை” என்பது தொல்காப்பிய நூற்பா.

            “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

            வளிதொழில் ஆண்ட உரவோன்”

என்பது புறநானூற்றுப் பாடல், “அலைகடல் நடுவுள் பல கலம்” செலுத்தியவர்கள் தமிழர்கள். “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது பழமொழி.

            சங்க இலக்கியங்களில் வெளிநாட்டவர் (யவனர்) பற்றிய குறிப்பு உள்ளது. அண்மைக் காலம்வரை வெளிநாட்டில் சங்ககாலத் தமிழர் பற்றிய சான்றேதும் கிடைக்காமலிருந்தது. அண்மைக் காலத்தில் கிழக்கு நாடுகளிலும், மேற்கு நாடுகளிலும் சங்ககாலப் பழந்தமிழ் எழுத்துப் பொறிப்புகள் பல கிடைத்திருக்கின்றன.

1.எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் உள்ள தொன்மையான நகரம் குவாசிர் அல்காதிம். அங்கு அமெரிக்கத் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் பழந்தமிழ் எழுத்தில் “கண்ணன்” “சாத்தன்” என்று எழுதப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

2.எகிப்து நாட்டில் பெறனிகே என்ற இடத்தில் பழந்தமிழில் “கொறபூமான்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

3.தாய்லாந்து நாட்டில் கிளாங்தோம் என்ற இடத்தில் சோழருடைய புலி அடையாளம் பொறிக்கப்பட்ட முத்திரை கிடைத்துள்ளது.

4.தாய்லாந்து நாட்டில் குவான் லுக் பாப் என்ற இடத்தில் பொன் மாற்றுக் காணும் உரைகல் “பெரும்பத்தன் கல்” எனும் எழுத்துப் பொறிப்புடன் கிடைத்துள்ளது.

5.தாய்லாந்து நாட்டில் பூகாதாங் என்ற இடத்தில் “தூதோன்” என எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

6.ஓமன் நாட்டில் கோர் ரோரி என்ற இடத்தில் “ணந்தைகீரன்” என்று எழுதப்பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.

7.எகிப்து நாட்டில் குவாசிர் அல் காதிம் என்ற ஊரில் இங்கிலாந்து நாட்டின் தொல்லியல் நிபுணர்கள் நடத்திய அகழாய்வில் “பனை ஒறி” என இருமுறை எழுதப்பட்ட ஒரு மட்கலம் கிடைத்துள்ளது.

8.வியன்னா அருங்காட்சியகத்தில் உள்ள “பேபிரஸ்” என்னும் பழந்தாளில் எழுதப்பட்ட ஆவணம் ஒன்று கிடைத்துள்ளது. கிரேக்க மொழியிலும், பழந்தமிழிலும் எழுதப்பட்ட அந்த ஆவணத்தில் முசிறியைச் சேர்ந்த தமிழ் வணிகன் ஒரு கப்பலில் கொண்டு சென்ற வாசனைப் பொருட்கள், தந்தப் பொருட்கள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன. இது போல் பல தமிழக வணிகர்கள் அக்கப்பலில் பொருள்களைக் கொண்டு சென்றார்கள் இந்த ஆவணம் கான்ஸ்டாண்டிநோபில் வணிகருக்கும் சேரநாட்டு முசிறி வணிகர்கட்கும் ஏற்பட்ட ஒப்பந்தமாகும்.

9.கொற்கையில் கிடைத்த பானை ஓடு ஒன்றில் யவனக் கப்பல் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

ஓரியை வென்ற காரி

            தகடூர் அதியமான் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக் காரிமீது படையெடுத்த போது கொல்லிமலை ஓரி அதியமானுக்குப் படை உதவி செய்தான். தக்க சமயம் வாய்த்த போது ஓரி மீது போர் தொடுக்கக் காரி எண்ணியிருந்தான். அதன்படி காரி ஓரியின் கொல்லிமலை நாட்டை முற்றுகையிட்டுத் தாக்கினான். கொல்லிமலை நாடு காரி வசம் ஆகியது. ஓரியும் போரில் கொல்லப்பட்டான்.

            கொல்லிமலையைப் பெறவேண்டும் என்று நெடுநாள் எண்ணியிருந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் கொல்லிமலையை காரி அன்பளிப்பாக வழங்கினான்.  பெருஞ்சேரல் இரும்பொறை இந்நிகழ்ச்சியைக் கொண்டாடும் பொருட்டுத் தன் உருவம் பொறித்த “கொல்லிப் பொறை” கொல்லிரும்பொறை என்று காசுகளை வெளியிட்டான். இதனைப் புறநானூறு,

            “முள்ளுர் மன்னன் கழல்தொடிக் காரி

             செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்

             ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த

             செவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி”

என்று கூறுகிறது. கண்டாராதித்தன் காலக் கல்வெட்டொன்று மலையமான் திருமுடிக் காரி வழி வந்த சித்த வடவன் என்பானைப் புகழும்போது,

            “வல்வில் ஓரியை மதவலி தொலைத்த

             செல்பரி மிகுந்த சித்த வடவன்”

என்று புகழுகிறது. இக்கல்வெட்டின் மூலம் மலையமான் திருமுடிக்காரி கொல்லிமலை வல்வில் ஓரியைப் போரில் வென்ற செய்தி உறுதிப்படுகிறது. எடக்கல்லில் கிடைத்த பழந்தமிழ்க் கல்வெட்டில் “பல்புலி தாத்த காரி” என்ற தொடர் காணப்படுகிறது.

அதியமான்

            தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் அதியமான் மரபினர்.  அதியமான் நெடுமான் அஞ்சி மகன் எழினி. அஞ்சி – எழினி என்ற பெயரை மாறி மாறி வைத்துக் கொண்டனர்.  இவர்கள் சேரர் மரபினர் என்பர்.  பனைமரம் இவர்களின் லட்டிகம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.  தகடூர் யாத்திரையில் சேரனிடம் அதியமான் பற்றிக் கூறும்போது “உம்பி (உன் தம்பி) என்று புலவர் கூறுகிறார்.  கல்வெட்டில் “சேரன் அதிகன்”, “வஞ்சியர் குலபதி” என்ற தொடர்கள் காணப்படுகின்றன.

            திருக்கோயிலூர் மலையமானோடு போரிட்ட அதியமான் மலையமான் தலைநகரை அழித்தான் என்று அவ்வையார் கூறுகிறார்.  திருக்கோயிலூருக்கு மிக அருகில் உள்ள ஜம்பை என்ற ஊரில் உள்ள குன்றுப்பகுதியில்,

            “ஸதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி”

என்ற கல்வெட்டொன்று பழந்தமிழ் எழுத்துப் பொறிப்பில் காணப்படுகிறது.  அசோகன் கல்வெட்டில் குறிக்கப்பெறும் “சதியபுத்திரர்” என்ற சொல்லே “ஸதிய புதோ” என்று ஜம்பைக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.  சிலர் “சதிய” என்று அசோகன் கல்வெட்டில் வரும் பெயரைச் “சத்திய” என்று தவறாக உணர்ந்து “வாய்மொழிக் கோசரோடு” தொடர்புபடுத்துவது தவறாகும்.

வேள் ஆவிக்கோமான் பதுமன் மரபு

            இவர்கள் பழனிமலைத் தலைவர் மரபினர்.  இவர்கள் சேரர்கட்கு மகட்கொடைக்கு உரியவர்கள்.  பதிற்றுப்பத்துக் கூறும் எட்டு அரசர்களில் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், பெருஞ்சேரல் இரும்பொறை மூவரும் பழனி வேள் ஆவிக்கோமான் பதுமன் மரபின் மகள் வழிப் பிறந்தவர்கள் ஆவர்.  இவர்கள் முறையே 4,6,8 பத்துக்கு உரியவர்கள்.

            அழகன் குளம் அகழாய்வில் “பதுமன் கோதை” என்று பழந்தமிழில் எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்று கிடைத்துள்ளது.  இக்கோதை (சேரர்) வேளாவிக் கோமான் பதுமன் தேவியர் ஒருவரின் மகனாக இருக்கக்கூடும்.

மலையமான்

            திருக்கோயிலூர் மன்னன் மலையமான்.  மலையமான் என்று பெயர் பொறிக்கப்பட்ட நாணயம் கிடைத்துள்ளது.  இது மலையமான் மரபினர் வெளியிட்ட நாணயமாக இருக்கக்கூடும். பண்ணன், வெளியன் என்பவர்கள் சங்க இலக்கியம் கூறும் தலைவர்கள்.  கொடுமணல் அகழாய்வில் “பண்ணன்” என்ற பெயரும், அரிட்டாபட்டி பழந்தமிழ்க் கல்வெட்டில் “வெளியன்” என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

புலவர் செ.இராசு,

ஈரோடு.

சங்க இலக்கியத்தில் கலங்கள்

சங்க இலக்கியத்தில் கலங்கள்

சங்க இலக்கியத்தில் கலங்கள்

      உலக அளவில் வளரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் இன்றியமையாத தொழில்களாகக் கருதப்படுபவை உழவும், வணிகமும் ஆகும். இதனை அடியொட்டியே அந்நாட்டின் பொருளாதார வலிமையும் அமைகிறது. செல்வம் பெருகுவதற்கும், அதனை வழங்கிக் கொடையில் மேம்படுவதற்கும் இவை துணை புரிவன, இதனையே

                        “மீக்கூறும்……………..

                        வியல் மேவல் விழுச் செல்வத்து

                        இருவகையான் இசை சான்ற

                        சிறுகுடிப் பெருந்தொழுவர்”

என மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. உழவுத் தொழில் நாட்டு அளவிலும் வணிகம் உலக அளவிலும் அமைந்தது. மிகப் பழங்காலத் தொட்டே கடல்கடந்து சென்று வாணிகம் செய்தனர் தமிழர் என்பதைத் தொல்காப்பியமே உறுதி செய்கிறது. தமிழ் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்ற இடங்களுக்குச் செலல் நிலவழி, நீர்வழி ஆகிய இரண்டு வழிகளைக் கொண்டிருந்தனர். ‘இருவகைப் பிரிவும் நிலைபெறத் தோன்றினும்’ என்னும் நூற்பாவிற்கு உரை எழுதியவர்கள் காலினும் கலத்தினும் எனச் சுட்டினர். உற்பத்தி செய்வதற்குரிய மூலப் பொருட்களைப் பல்வேறு இடங்களிலிருந்து கொண்டுவந்து சேர்ப்பதும், உற்பத்தி செய்த பொருட்களைப் பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சேர்ப்பதும் என வணிகர்கள் செயல்பட்டனர். இதற்கு நீர்வழியையும் நிலவழியையும் பயன்படுத்தினர். அக்காலத்தே மேலை நாட்டினராகிய கிரேக்கர், யவனர், பாபிலோனிய நாட்டுக் கோசியர்கள் தமிழகத்தோடு கடல் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். கடல் வணிகத்தில் அதிகம் ஈடுபட்டுப் பெருஞ் செல்வத்தை ஈட்டி வந்ததே ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்ற பழமொழி உருவாகக் காரணமாகியிருக்கும். இத்தகைய வணிகத்திற்குத் தமிழகம் நீர்வழியைப் பயன்படுத்தியமையைச் சங்க இலக்கியங்கள் மிகத் தெளிவாகவே சுட்டியுள்ளன. அதற்குப் பயன்பட்டன கலங்கள் எனச் சுட்டப்பட்டன. சங்க இலக்கியத்தில் கலங்கள்

கலங்களின் வகைகள்

            அம்பி, புணை (பிணை), திமில், நாவாய், வங்கம், கலம், ஒடம், மிதவை, பஃறி, நீரணிமாடம், தோணி என்பன சங்க இலக்கியங்களின் வழி அறியப்படுவன.

                        ‘நன்கலம் பரிசின் மாக்கட்கு நல்கி’

                        ‘கடன் மண்டு தோணி,

                        முந்நீர் வழங்கு நாவாய் – எனப் புறநானூறும்,

                        ‘கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால்’ எனச் சிலம்பும்,

                        ‘இரவெனம் ஏமாப்பில் தோணி’

                        ‘பரிமுக வம்பியுங் கரிமுக வம்பியும்’-எனத் திருக்குறளும்,

                        ‘ஓடம் புனைகலம் பெய்த தோணி’

எனச் சீவகசிந்தாமணியும் இப்பெயர்களைக் குறித்துள்ளன. நீரில் மரங்கள் மிதப்பதைக் கண்டவன் அவற்றில் ஏறி நீரைக் கடக்க முயன்றுள்ளான். அதில் வெற்றிபெற்றதால் தனது திறமையினால் மரங்களை ஒழுங்குபடுத்தி பலவற்றை ஒன்றாக இணைத்துக் கட்டுமரம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளான். மனிதன் முதன் முதலில் நீரைக் கடக்கக் கண்டுபிடித்த சாதனம் மிதவை. இதுவே பிற்காலப் படகுகளின் தாய் எனலாம். சங்க இலக்கியங்களில் கட்டுமரத்தைப் புணை என்று குறித்துள்ளனர். மரங்களை ஒன்றோடொன்று இணைத்துக் கட்டுவதால் பிணை எனக் குறிக்கப்பட்டதே புணையாகியிருக்கும். மிதவை என்பது உள்ளூரில் ஏரி குளங்களில் பயன்பட்டதாக இருக்கலாம். மிதவை என்பதற்குத் தெப்பம் என்றும் புணை என்பதற்குத் தெப்பம், கால்விலங்கு மூங்கில் என்றும் அகராதி பொருள் தருகிறது. மேலும் ஆற்றின் ஓரமாக வளர்ந்த மூங்கில்களைக் கொண்டு புணைகள் அமைக்கப்பட்ட காரணத்தாலும் மூங்கில் என்னும் பொருள் கொண்ட புணை என்ற சொல் மரக்கலத்தின் பெயராக ஆகியிருத்தல் கூடும். இவையே ஆறுகளில் புனல் விளையாட்டிற்குப் பயன்பட்டதாக அறிகிறோம்.

            வணிகத்தின் பொருட்டுப் பெரிய மரக்கலங்களில் சென்றோன் அம்மரக்கலம் கடலில் பெரிய அலைகளால் உடைபட்டுப் போகப் புணையாகிய தெப்பத்தில் கரை சேர்ந்ததாகக் கூறுவதை மணிமேகலைக் காப்பியம் வழி அறியமுடிகிறது. எனவே கட்டுமரத்தைப் புணை எனச் சுட்டியமை உறுதியாகிறது.

பஃறி

உள்ளூர்களில் உப்பைவிற்று அதற்கு ஈடாக நெல்லைப் பெற்று வந்தனர் என்பதனை

            “வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி

            நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி”

            எனப் பட்டினப்பாலை சுட்டுகிறது. இப்படகுகள் கட்டுத்தறியில் குதிரைகளைப் பிணிப்பது போல் உப்பங்கழியைச் சார்ந்த தறிகளில் கட்டியிருப்பர் எனவும் மொழிகிறது.

அம்பி

சிறிய மரக்கல வகையைச் சார்ந்த ஒன்று அம்பி. அம்பு என்ற சொல்லிலிருந்து திரிந்த ஒன்றாகக் கருதுவர். ஓற்றை மரத்தில் குடைந்து செய்யப்பட்ட கலமாகவும் அமையலாம். இக்கலத்தின் முன்பகுதி குதிரைமுகம் / யானை முகம் / சிங்க முகம் போன்று காணப்பட்டதாகச் சிலம்பின் (13:176) வழி அறியமுடிகிறது. இது ஆட்களை ஏற்றி அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டு செல்லும் வகையில் பயன்பட்டதை அறியமுடிகிறது. குகன் ஆயிரம் அம்பிக்கு நாயகன் எனச் சுட்டப்பட்டமை ஈண்டு குறிக்கத் தக்கதாகும். மீன் பிடித்தல் தொழிலிலும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. கடல்நீர் அலைத்தலால் மோதப்பட்டு முதிர்ந்து தொழில் செய்ய உதவாது ஒழிந்த அம்பி என நற்றிணைப் பாடல் சுட்டுவதால் இக்கலம் உள்நாட்டிலேயே அதிகம் (ஆறு) பயன்பட்டிருக்க வேண்டும் என உணரமுடிகிறது.

திமில்

கட்டுமரம், கலம், கப்பல் என்ற பொருள்களை அகராதி சுட்டுகிறது. இது பெரும்பான்மையும் மீன் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சுறாமீன் வேட்டைக்கு இதனைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஒருவகைக் கட்டுமரமே. இது திண்மையும் உறுதியும் உடையதாதலின் சுறாமீன் வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் கொடுந்திமில் எனக் குறுந்தொகையுள் சுட்டப்பட்டுள்ளது. திமில் என்னும் கலனில் விளக்கு பயன்படுத்தப்பட்டமையும், கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கைக் கொண்டு அடையாளம் கண்டு தம்மிடம் (கரையை அடைவர்) சேர்வர் என்றும் நற்றிணை, புறநானூறு, பட்டினப்பாலை, அகநானூறு ஆகிய இலக்கியங்கள் வழி அறியமுடிகிறது.

ஓடம்

தொன்மையான காலந்தொட்டுத் தமிழகத்தில் நீரைக்கடக்கப் பயன்படுத்தப்படும் சாதனம். இதுவும் சிறிய மரக்கல வகை. நீரில் வேகமாக ஓடுவதால் இப்பெயர் வழங்கப்பட்டிருக்கும். ஓடக்கோல் என்றழைக்கப்படும் நீண்டகோலினாலே ஆற்றில் செலுத்தப்பட்டது.

நீரணிமாடம்

சிறிய படகு வகை. உல்லாசப் படகுப் பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. பயணிகளை ஏற்றிச் செல்வதற்கேற்ப அமைக்கப்பட்ட கலம்.

தோணி

ஒரே மரத்தில் குடைந்து செய்யப்பட்ட கலம். தொள் என்னும் வினையடியிலிருந்து தோன்றியிருக்கக் கூடும். தொள் என்பது குழித்து எடுப்பது என்னும் பொருள் தரும் சொல்லாகும். தோள் – தொடு – தோடு – தோண்டு. பெரிய மரக்கலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்கள் தோணிகளில் ஏற்றப்பட்டுக் கரைக்கு கொண்டு வந்ததனை

                        “கலம் தந்த பொற்பரிசம்

                        கழித் தோணியான் கரை சேர்க்குந்து”

எனப் புறநானூறு சுட்டுகிறது. குதிரைகள் கடல்நீரைப் பிளந்து செல்லும் தோணிகள் போலப் பகைவருடைய படைமுகத்தைப் பிளந்து செல்லும். கடல் மண்டு தோணியின் படை முகம் போல’ எனவும் புறநானூறு சுட்டுகிறது. இதனால் விரைந்து செல்லக் கூடியது என்பதும் தெளிவாகிறது. பயணத்திற்கும், புனல் விளையாட்டிற்கும், மீன் பிடித்தலுக்கும் தோணி பயன்பட்டதனை பின்னர் வந்த இலக்கியங்களும் சுட்டுகின்றன.

நாவாய்

கடலில் செலுத்தப்படும் பெரிய கலத்துக்கு ‘நாவாய்’ என்று பெயர். புகார் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகளால் தாக்குண்டு தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவது போல் அசைந்தன. அவற்றின் மீது காணப்பட்ட பாய்மரத்தின் கொடிகள் பறந்தன என்பதனை

                        “வெளில் இளிக்கும் களிறுபோல

                        தீம் புகார்த் திரை முன் துறை

                        தூங்கு நாவாய் துவன்று இருக்கை

                        மிசைக் கூம்பின் நசைக் கொடியும்’

என்ற அடிகளால் பட்டினப்பாலை சுட்டுகிறது. நாவாய் என்னும் கலம் பண்டைத் தமிழர்களால் வணிகக் காற்றின் வரவு செலவு அறிந்து ஓட்டிச் செல்லப்பட்டது.

                        “நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

                        வளிதொழில் ஆண்ட உரவோன் மருக”

என்கிறது புறநானூறு.

            நாவாய்கள் குதிரைகளை மேற்றிசையிலிருந்து வடதிசைக் கண்ணிலிருந்தும் கொண்டுவந்தன. மேலும் வடதிசைக்கண் விளையும் நுகர் பொருள்களான மணியும் பொன்னும் பிறவும் கப்பலில் வந்து இறங்கின எனப் பெரும்பாணாற்றுப்படை சுட்டுகிறது. இச்சான்றுகளின் மூலம் நாவாய் என்னும் கலம் பண்டைக் காலங்களில் காற்றின் துணையினால் செலுத்தப்பட்ட ஒரு பாய்மரக்கப்பல் என்றே கருதமுடிகிறது. முற்காலத்தில் காணப்பட்ட நாவாய்கள் யானை போன்ற அமைப்பில் முன் பின் பகுதிகள் சுருங்கியும் நடுப்பகுதி விரிந்தும் பரந்துபட்டுச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.

கலம்

பாத்திரம், அணிகள், கப்பல் முதலியவற்றைக் குறிக்கப்பயன்படும் சொல். பெரிய பாய்மரக் கப்பல்கள் மரப் பலகையால் செய்யப்பட்டிருத்தலால் அவை மரக்கலம் என்ற பெயரில் அழைக்கப்படலாயினர். கலத்திலுள்ளவை பாயும், கயிறும், பாய்மரமும், சிதையும் நிலையிலுள்ள மரக்கலத்தைப் ‘பயின்’ என்ற ஒரு வகைப் பசையினால் சீர்செய்துள்ளனர்.

இதனை,

                        சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல்

                        இதையும் கயிறும் பிணையும் இரியச்

                        சிதையும் கலத்தைப் பயினான் திருத்தும்

                        திசை அறி நீ கானும் போன்ம்”         (பரிபாடல்.10:53-55)

என்ற அடிகளால் அறியலாம்    கடற்கரையில் அமைந்துள்ள பெரிய வீடுகளின் மேலே ஏற்றப்பட்டிருக்கும் விளக்கு கலங்கள் கரையை வந்தடைவதற்கு உதவின என்கிறது பெரும்பாணாற்றுப்படை. இச்சான்றின்வழி கடற்கரையை அடுத்து உயர்ந்த இடங்களில் வீடுகள் கட்டப்பட்டிருந்தமையும் இரவில் அவ்வீடுகளில் ஏற்றப்பட்டிருக்கும் விளக்கின் ஒலி கடலிலே காணப்படும் கலங்களுக்குக் கலங்கரை விளக்கங்களாக இருந்து கலங்கள் கரையை வந்தடைவதற்கு உறுதுணையாக இருந்துள்ளன என்றும் தெரியவருகிறது.

வங்கம்

        வங்கம் என்ற கலமும் ஒரு பெரிய மரக்கல வகையே. அகராதியில் வங்கத்திற்குப் பெரியகப்பல், அலை, கடல் எனப் பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கு அல்லது வங்கு கால் என அழைக்கப்படும் சட்டங்கள் கலங்கள் கட்டுவதற்கு மூலக் கருவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. வங்குக் கால்களால் கட்டப்பட்ட முதல் பெரிய மரக்கலத்துக்கு வங்கம் என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும் என்றும் வங்காள விரிகுடாக் கடலின் வழியாகவே இக்கலம் அதிகம் பயன்படுத்தப்பட்டதால் வங்கம் என்ற பெயர் வந்தது என்றும் கூறுகின்றனர்.

            தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கீழை மற்றும் மேலை நாட்டினரோடு கடல் வணிகம் செய்து வந்துள்ளனர். அந்நிய நாடுகளிலிருந்து பல பண்டங்கள் கப்பல் வழியாகக் காவிரிப்பூம்பட்டினத்தில் இறக்குமதி செய்யப்பட்டன. பல பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன என்று பட்டினப்பாலை மிக விரிவாக உணர்த்துகிறது. வெளியே அனுப்புவதற்குக் குவிந்திருக்கும் பண்ட மூட்டைகளின் மீது சோழனுடைய புலிவடிவம் முத்திரையிடப்பட்டது. முத்திரையிடப்படாத பண்டங்கள் வெளியேற முடியாது என்றும் கூறுகிறது. இவ்வளவு கட்டுக்காவலுடன் ஏற்றுமதியும் இறக்குமதியும் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. குதிரை, மிளகு, பொன், மணி, அகில், முத்து, ஆரம், துகில், ஈழ உணவு போன்ற பொருட்கள், விளைபொருட்கள், கருப்பூரம், பன்னீர், குங்குமம் போன்ற பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களாக விளங்கின.

            கடற்படையில் சிறந்திருந்தமைக்கும் தமிழிலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. கடல்பிறக்கோட்டிய குட்டுவன், கரிகாற் சோழன், சேரன் செங்குட்டுவன், பெரும்பாணாற்றுப்படை நீர்வழியே நிலைநாட்டி வென்றமை.

            திமில், அம்பி, தோணி ஆகியனவே பெரும்பான்மையும் மீன்பிடிக்கும் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. திமில் என்னும் கலத்தில் வலைகளைக் கொண்டு பரதவர் மீன் பிடித்தமையினை நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, பரிபாடல் ஆகிய நூல்கள் குறித்துள்ளன. திமில் என்னும் கலம் இரண்டு பக்கங்களிலும் பிறைபோன்று மேல்நோக்கி வளைந்து உள்ளிடம் அகன்று முனைகள் குறுகிக் காணப்படும் கலமாகும். மேலும் இதனைக் கொடுந்திமில், நெடுந்திமில், திண்திமில், நிரைதிமில் என அடைகொடுத்தும் சுட்டியுள்ளனர்.

            நீரில் உல்லாசப் பயணம் செல்லப் படகுகளைப் பயன்படுத்தியுள்ளனர். பரிபாடலில் நீரணிமாடம் என்னும் ஒரு உல்லாசப்படகு சுட்டப்பட்டுள்ளது. இது நடுவே அகன்றும் முன் பின் சுருங்கியும் காணப்படுவது. இதன் நடுவே உட்காருவதற்கு ஏற்பச் சிறு மண்டபம்போல் ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கும் எனப் பாடல் சுட்டுகிறது. சிலப்பதிகார நாடுகாண் காதையில் கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் நீரணிமாடத்தில் தென்கரையை அடைந்ததாகச் சுட்டப்பட்டுள்ளது.

            பண்டைத்தமிழ் மக்கள் கப்பற்கலையில் சிறந்து விளங்கினர் என்பதை, அவர்கள் கடல் வணிகத்தில் புகழ்பெற்று விளங்கியிருந்ததன் மூலமும் கடற்போர், கடற்கொள்ளை, மீன் பிடித்தல், உல்லாசப் பயணம், போக்குவரத்து ஆகியவற்றுக்கு அவர்கள் பயன்படுத்திய கலங்கள் வாயிலாகவும் உறுதி செய்யமுடிகிறது. மேலும் பல்வேறு வகையான கலங்களைச் சமைத்து அவற்றைச் செலுத்தியமை அவற்றில் ஏற்படும் பழுதுகளைச் சரிசெய்தமையும் இதனை உறுதிசெய்வனவாகும். கப்பற்கலைக்கு உதவிக் கூறுகளாகத் திகழும் துறைமுகங்கள், கலங்கரை விளக்கங்கள், சுங்கச் சாவடிகள் திறம்படக் கையாளப்பட்டமை கலங்களின் உறுப்புகளாகிய நங்கூரம், ஓடக்கோல், குடுப்பு, பாய்மரம் பயன்படுத்தியமை இவற்றின் அங்கமாகிய காற்று, அலை, ஓதம், விண்மீன்கள் போன்ற இயற்கை உதவிக் கூறுகளை அறிந்து செயல்பட்டமை முதலியன தமிழனின் அறிவுத்திறத்தினை வெளிச்சமிட்டுக் காட்டுவனவாகும்.

நங்கூரம்

கடலிலோ, ஆற்றிலோ செலுத்தப்படும் கலங்களை நிறுத்தி வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவியின் பெயரே நங்கூரம் எனப்படும். இது முற்காலங்களில் கல்லினால் ஆன ஒரு கருவியாகவே இருந்துள்ளது. கலங்களின் உருவத்திற்கு ஏற்ப நங்கூரத்தின் எடையும் காணப்படும். கல்லை நங்கூரமாகப் பயன்படுத்திவந்த மக்கள் பிற்காலத்தே மரத்தினால் நங்கூரம் செய்து அதில் ஒரு கல்லைக் கட்டி நீரில் இறக்கிக் கலங்களை நிறுத்தி வந்தனர். பின்னர் நங்கூரம் இரும்பினால் செய்யப்பட்டதாகக் காணப்படுகிறது. மதுரைக்காஞ்சி வாயிலாகப் பழந்தமிழகத்தில் கல் நங்கூரம் பயன்படுத்தப்பட்ட உண்மை தெரியவருகிறது.

            கடலில் காலவரையறைக்குட்பட்டு ஏற்படும் கடல்மட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு ஓதங்கள் என்று பெயர். இதனைக் கடல் ஏற்றம், கடல் இறக்கம் என இன்று குறிப்பிடுகிறோம். ஓதம் என்பதற்குள்ள பல்வேறு பொருள்களுள் நீர்ப் பெருக்கு என்பது ஒன்றாகும் (வுனைநள). வேலி ஏற்றம் அல்லது கடல் ஏற்றம் என்பது கடலில் நீர் மிகுந்து கரையை நோக்கி வருவதாகும் (ர்iபா வுனைநள). வேலி இறக்கம் என்பது கடலில் நீர் உள்வாங்குவதாகும் (டுழற வுனைநள). கடற்கரைப் பரப்பிலிருக்கும் தாழை, கழியில் நீர் குறையுங்கால் தாழ்ந்தும், கழியில் ஓதம் மிகும்போது உயர்ந்தும் அலைதலைப் போலத் தலைவியின் நெஞ்சம் வருந்தியதாகக் குறுந்தொகைப் பாடல் (340) சுட்டுகிறது.

            ஓதங்களுக்கு மூல காரணங்களாக அமைவன சூரியனும் சந்திரனும். பூமி சூரியன் சந்திரன் ஆகிய மூன்றும் ஒன்றையொன்று ஈர்க்கும் திறன் கொண்டவை. ஈர்ப்புவிசை கோள்களின் பொருண்மைக்கு நேர் விகிதத்திலும் அவற்றின் இடையேயுள்ள தொலைவிற்கு எதிர் விகிதத்திலும் அமைந்துள்ளது. சூரியனின் பொருண்மை அதிகமாயினும் அது வெகு தொலைவில் இருப்பதால் அதனின் பொருண்மை மிகவும் குறைந்து காணப்பட்டாலும் மிக அருகாமையில் இருக்கும் சந்திரனே பூமியிலுள்ள பொருள்களை ஈர்ப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடலில் ஓதங்கள் அளவில் மிகுந்து காணப்படுகின்றன. இதனைத் தங்களது வாழ்நாளில் கண்டு உணர்ந்த பண்டைத் தமிழர்கள் சந்திரனுக்கும் ஓதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே நம்பினர். சந்திரன் பௌர்ணமி நாளில் மிகத் தெளிவாக விளங்கியதால் கடலும் பொங்கும் அலைகளை உடையதாயிருந்தது. ஓதமும் கரையை மோதிப் பெயர்த்;து சென்றது என்கிறது நற்றிணைப் (335) பாடல்.

            மேலும் அகநானூறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, ஐங்குநூறு ஆகிய நூல்களிலும் இத்தகு சான்றுகள் குறிக்கப்பட்டுள்ளன. இதனைப்போன்றே வானநூல் அறிவுமிக்கோர் தமிழர் என்பதனையும் இவ்விலக்கியங்கள் சுட்டிச் சென்றுள்ளன.

            தமிழர்கள் மிகத் தொன்மைக் காலந்தொட்டே நீரியல் மற்றும் வானியல் அறிவைப் பெற்றிருந்தனர். கடலில் நீரோட்டங்களைக் குறித்த அறிவு அவர்களுக்கு மிகுதியாகவே இருந்திருக்கிறது. நீரின் ஓட்டம், கடலின் ஆழம் ஆகியன அறிவதற்குத் தாவுக்கயிறு என்ற ஒன்றைப் பயன்படுத்தியுள்ளனர். ஒரு நீண்ட கயிற்றின் நுனியில் ஒரு கல் கட்டப்பட்டிருக்கும். ஒரு கலத்தில் செல்லும் மீனவர்கள் எதிரேவரும் கலத்தில் இருக்கும் மீனவரிடம் நீரோட்டம் எந்தத் திசையிலிருந்து எந்தத்திசைக்கு ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுத் தெரிந்து கொள்வர். நீரோட்டத்தைக் கொண்டு கடலில் எந்த இடத்தில் மீன்கள் அதிகமாகக் கிடைக்கும் என்பதனை உணர்ந்திருந்தனர். கடல் நீரின் நிறத்தைக் கொண்டும் மீன்கள் கிடைப்பதனைத் தீர்மானிப்பர். எவ்வகை மீன்கள் கிடைக்கும் என்பதனை இதன்வழி அறிவர். இன்னின்ன காலங்களில் கலங்கள் செல்வதற்கேற்ற பருவக்காற்றுகள் வீசும் என்றும் அந்தக் காலங்களில் கடல் கொந்தளிப்பு இருக்காது என்றும் மழையும் குறைவாக இருக்கும் என்றும் அறிந்து செயல்பட்டனர்.

            நடுக்கடலில் இருக்கும் போது கரையை அறிந்துகொள்வதற்குப் படகோட்டிகள் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளனர்.

1.          தாவுக்கயிறு என்பதன் மூலம் ஆழந்தை அறிந்து கொள்ளுதல்

2.          நீண்டதூரப் பயணம் மேற்கொள்ளும் மாலுமிகள் கரையைக் கண்டு அடைவதற்குப் பறவைகளைப் பயன்படுத்தியுள்ளனர். பறவை வெளியே பறந்து வட்டமடித்து மீண்டும் அந்தக் கலனுக்கே திரும்பிவிட்டால் கலன் கரையை அடையவில்லை என்பது பொருளாம்.

      பழந்தமிழகத்தில் கப்பற்கலை குறித்த செய்திகளைக் காணும்பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகம் ஒரு வணிகக் கேந்திரமாக விளங்கியது. பல்வேறு நாடுகளிலிருந்து பண்டங்கள் தமிழகக் கடற்கரைக்கு வந்தமை, தமிழகத்தில் கிடைத்த பொருட்கள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமை, தமிழகத் துறைமுகங்களில் சுங்கச் சாவடிகள் இருந்தமை, சுங்கச் சாவடிகள் திறம்படச் செயல்பட்டமை ஆகியன இதனை உறுதிசெய்வனவாகும். பல்வேறு வகையான கலங்களைப் பயன்படுத்தியிருத்தலின் தங்கள் அறிவு நுட்பத்தால் ஆக்கவும் பழுதுபார்க்கவும் முடியும் என்பதைப் புலப்படுத்தியுள்ளனர். வணிகத்தின் பொருட்டும், மீன்பிடிப்பதற்கும், கடல் பயணத்திற்கும், புனல் விளையாட்டிற்கும், கடற்போருக்கும் பயன்படும் விதத்தில் ஆக்கப்பட்ட கலங்கள் அவர்களது தொழில் திறத்தை உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன.

            காற்றின் உதவியினால் கலங்களில் பாய்கட்டிச் செலுத்த முடியும் என்பதை அறிந்து கலங்களைச் செலுத்தியுள்ளனர். கலங்களைச் செலுத்திச் செல்வதற்கேற்ற உதவிக் கூறுகளையும் கொண்டிருந்தனர். படகு உறுப்புக்களின் உதவிக்கூறுகள் மட்டுமின்றி இயற்கை உதவிக் கூறுகளையும் கொண்டிருந்தனர் என்பதையும் அறியமுடிகிறது. மேலும் இவை அனைத்திற்கும் அடிப்படைத் தேவையான வானியல் அறிவைப் பெற்றிருந்தமையும் வியக்கத்தக்கதாகும். இவ்வாறு கப்பற்கலையை வளர்த்து வந்ததன் மூலம் தமிழர்கள் பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் மேம்பட்டுத் திகழ்ந்துள்ளனர் என்பது உறுதியாகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் இரா.சபாபதி (ஓய்வு)

இணைப்பேராசிரியர்,

தேசியக்கல்லூரி,

திருச்சிராப்பள்ளி -620 001.

விறன்மிண்ட நாயனார்‌ புராணம்

விறன்மிண்ட நாயனார்

விறன்மிண்ட நாயனார்‌

        விறன்மிண்ட நாயனார்‌ சேர நாட்டிலுள்ள செங்குன்றூரில்‌ பிறந்தவர்‌. சிவபெருமான்‌ மீதும்‌ சிவனடியார்கள்‌ மீதும்‌ அளவற்ற பக்தியும்‌ அன்பும்‌ கொண்டிருந்தார்‌. சிவாலயங்கள்‌ பலவற்றிற்குச்‌ சென்று சிவனைத்‌ தொழுவதும்‌, சிவப்‌பணிகள்‌ செய்வதையுமே தன்‌ வாழ்வின்‌ பெரும்‌ பேறாக்‌ கருதினார்‌.

         ஒருமுறை விறன்மிண்ட நாயனார்‌ திருவாரூரில்‌ வீற்றிருக்கும்‌ தியாகராஜப்‌ பெருமானை வணங்க அங்கு வந்தார்‌. விறன்மிண்ட நாயனார்‌ வந்த அச்சமயத்தில்‌, சைவசமயக்‌ குரவர்களில்‌ ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும்‌ திருவாரூர்‌ ஆலயத்திற்கு வந்திருந்தார்‌. சுந்தரர்  ஆலயத்தில்‌ அமர்ந்திருந்த பல சிவனடியார்களைக்‌ கண்டும்‌ அவர்களை வணங்காமல்‌ ஒதுங்கி வந்தார்‌.

       அடியார்களை மதியாது ஆலயத்தினுள்‌ சென்ற சுந்தரரைக்‌ கண்ட விறன்மிண்ட நாயனாருக்கு, ‘சுந்தர மூர்த்தி நாயனார்‌ சிவனோடு நட்புறவு கொண்டவராக இருக்கலாம்‌. இருப்பினும்‌ இப்படி சிவனடியார்களை மதிக்காமல்‌ செல்வது நல்லதில்லையே’ என்று எண்ணி மனம்‌ வருந்தினார்‌.

       சுந்தர மூர்த்தி நாயனாரின்‌ மேலும்‌ அவருக்கு வடக்கு வாசலில்‌ திருக்காட்சி அளித்த தியாகேசப்‌ பெருமானின்‌ மீதும்‌ கோபம்‌ கொண்டு, “திருத்தொண்டர்களுக்கு வன்றொண்டனும்‌ புறம்பு; அவனை ஆண்ட சிவனும்‌ புறம்பு” என்றார்‌.

     இனி திருவாரூக்குத்‌ தான்‌வருவதில்லை என்று சபதம்‌ செய்தார்‌. அதோடு மட்டுமின்றி திருவாரூருக்குச்‌ சென்றுவரும்‌ சிவனடியார்களின்‌ கால்களையும்‌ வெட்டுவேன்‌ என்று கூறி, ஆண்டிப்பந்தல்‌ என்ற ஊரில்‌ தங்கியிருந்தார்‌.

     சிவனடியார்கள்‌ மீது விறன்மிண்ட நாயனார்‌ கொண்ட பக்தியை உலகுக்குத்‌ தெரிவிக்க விருப்பம்‌ கொண்டார் சிவபிரான்‌. சிவனடியார்‌ உருவம்‌ தாங்கி ஆண்டிப்பந்தல்‌ வந்தார்‌. விறன்மிண்ட நாயனாரைச்‌ சந்தித்தார்‌. தான்‌ திருவாரூரிலிந்து வருவதாகக்‌ கூறினார்‌.

       அதைக்கேட்டு கோபம்‌ கொண்ட விறன்மிண்ட நாயனார்‌, அச்சிவனடியாரின்‌ கால்களை வெட்டுவது என்று வாளை ஓங்கிக்‌ கொண்டு ஒடினார்‌. சிவனடியாரும்‌ அவரைக்கண்டு பயந்ததுபோல்‌ ஓடிக்‌ கொண்டேயிருந்தார்‌. விறன்மிண்ட நாயனாரும்‌ அச்சிவனடியாரைத்‌ துரத்தி துரத்தி அவரையறியாமல்‌ திருவாரூருக்கே வந்துவிட்டார்‌.

      உடனே அந்தச்‌ சிவனடியார்‌, விறன்மிண்ட நாயனாரை நோக்கி, “திருவாரூர்‌ மண்ணை மிதிக்க மாட்டேன்‌ என்று சபதம்‌ செய்தாயே; இப்போது திருவாரூருக்கு வந்து விட்டாயே!” என்று கேலியாகப்‌ பேசினார்‌. இதனால்‌ கோபமடைந்த விறன்மிண்ட நாயனார்‌, தன்‌ கைகளிலிருந்த அந்த வாளால்‌ தன்‌ கால்களையே வெட்டிக்‌ கொண்டார்‌. உடனே சிவனடியார்‌ உருவிலிருந்த சிவபெருமான்‌, நாயனாரைத்‌ தடுத்தாட்கொண்டார்‌.

        விறன்மிண்ட நாயனார்‌ சிவனடியார்‌ மீது கொண்ட அன்பை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகளும்‌, திருத்‌தொண்டத்‌ தொகையைப்‌ பாடினார்‌. அதைக்‌ கேட்ட விறன்மிண்ட நாயனார்‌ பெருமகிழ்ச்சி அடைந்தார்‌. சுந்தரருடன்‌ நட்பு கொண்டார்‌. இவ்வாறு வாழ்ந்த விறன்மிண்ட நாயனார்‌, இறுதியில்‌ சிவஜோதியில்‌ கலந்தார்‌.

கீழ்க்கண்ட நூலிலிருந்து,

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு

ஆசிரியர் – கீர்த்தி

சங்கர் பதிப்பகம், சென்னை.

படங்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள் – அருள் வரலாறு

நன்றி

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »