பாலம் (சிறுகதை)

பாலத்திற்கு முன்னால் இருக்கும் மனித சிலைக்கு நடந்து போகின்றவர்கள், வாகனத்தில் போகின்றவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒரு ஐந்து நிமிடம் நின்று மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். இதைப் பார்த்த அந்த ஊருக்குப் புதியதாக வந்த ஒருவர் அதே ஊரில் உள்ள ஒரு பெரியவரிடம் கேட்டார்.

            பெரியவர் சொல்லத்த தொடங்கினாhர். இந்த ஆற்றன் குறுக்கே பாலம் கட்டிய பிறகுதான் இந்த ஊரில் படித்தவர்கள் அதிகமாக உள்ளார்கள். பெரிய பெரிய வேலையில் உள்ளார்கள். இதற்கு காரணம் யார் தெரியுமா இதோ சிலையாய் நிற்கிறாரே அவர்தான்.

            அவர் அப்படி என்ன பெரியதாக செய்தார் என்று புதியவர் கேட்டார். அதற்கு பெரியவர் மேலும் சொல்லத் தொடங்கினார். இந்த ஊருக்குப் பக்கத்து நகரத்திற்கும் உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டர் தான். ஊருக்கும் நகரத்திற்கும் இடையில் வற்றாத ஆறொன்று ஓடிக்கொண்டிருக்கின்றது. பாலம் கட்டுவதற்கு முன்பு அந்த நகரத்திற்கு போக வேண்டும் என்றால் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

            மழை காலங்களில் அதிகமாக நிர் பெருக்கெடுத்து ஆற்றில் ஓடு;ம்போது மக்கள் ஆற்றைக் கடந்து நகரத்திற்கு போக முடியாமல் தத்தளிப்பார்கள்.

            மழைகாலங்களில் நகரத்திற்கு செல்லவேண்டுமானால் பத்துக் கிலொ மீட்டர் சுற்றி போக வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

            காய் கறிகள் வாங்க விற்க, பிள்ளைகள் பள்ளிக்குப்போக, மக்கள் ஊருக்கு சேரிக்குப் போக நோயாளிகள் மருத்துவ மனைக்குப்போக எல்லாவற்றிற்கும் இந்த ஊர் மக்கள் அந்த நகரத்தை நம்பியிருந்தது. பள்ளி, மாணவ மாணவிகள் ஆற்றைக் கடந்து செல்லும்போது பள்ளி சீருடையைப் பையில் வைத்து, பையைத் தலைமீது வைத்துக்கொண்டு கழுத்துவரை வரும் தண்ணீரில் நடந்து கரையை அடைந்து சீருடையை மாற்றிக்கொள்வார்கள். சில நேரம் கால் தவறி ஆற்றில் விழுந்தால் புத்தகமெல்லாம் நனைந்துவிடும். அப்போது மாணவர்கள் மற்றும் இதை பார்த்தவர்கள் நெஞ்சம் நீரில் உடல் நனைந்ததைவிட கண்ணீரில் நனைந்தது அதிகம். சில பெற்றோர்கள் தன் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற ஆசையில் ஐந்து வயது முடிந்ததும் பள்ளியில் சேர்த்தி காலையிலும் மாலையிலும் தன் தோளின் மீது ஏற்றிக்கொண்டு போய் கொண்டு வருவார்கள். ஆற்றில் கால் தவறி விழுந்தால் நீந்திக்கொள்வதற்காக சின்ன வயதிலேயே பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பார்கள்.

            ஆற்றில் எப்போது தண்ணீர் அதிகமாக, குறைவாக வருகிறது என்று யாருக்குமே nதியாது. ஒவ்வொரு முறையும் மக்கள் ஆற்றைக் கடக்கும்போது தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நடப்பார்கள். உயரமான மாணவர்களிடம் தன் பையைக்கொடுத்துவிட்டு இளைய மாணவர்கள் நீந்தி ஆற்றைக் கடந்து, நனைந்த உடையை கழற்றிவிட்டு பள்ளி சீருடையை மாற்றிக்கொண்டு நனைந்த துணியை பிழிந்து தன்மீது போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்று அதை அங்கு இருக்கும் செடிகொடி மீது காய வைத்து மீண்டும் மாலையில் அதை எடுத்து ஆற்றுப்பக்கம் வந்ததும் பள்ளி சீருடையைக் கழட்டிவிட்டு அதை மாற்றிக்கொண்டு ஆற்றைக் கடந்து வீட்டிற்கு வருவார்கள். இது வழக்கம் போல் நடக்கும். இது மக்களுக்கு பழகிப்போனதாகவே இருக்கும்.

            ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் தண்ணீர் குறையும் வரை பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லமாட்டார்கள். தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் ஆற்றில் இறங்கி வந்தால் ஆளை அடித்துக்கொண்டு போய்விடும். ஒரு முறை ஒருவர் மாட்டை மேய்ச்சலுக்காக காலையில் ஆற்றைக் கடந்து ஓட்டிக்கொண்டு போய் மேய்த்துக்கொண்டு ஆற்றுக்கிட்ட வருவதற்குள் இருட்டாகிவிட்டது. ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவது தெரியாமல் ஆற்றில் மாட்டை ஓட்டிக்கொண்டு இறங்கிவிட்டார். அவரையும், மாட்டையும் ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை அறிந்த ஊர்மக்கள் மனம் கலங்கிப்போனார்கள்.

            இந்த ஆறு எத்தனையோ பேரை பலிவாங்கிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் வெளியூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லாத காரணத்தால் பக்கத்து வீட்டுக் கைக்குழந்தை வைத்திருந்த ஒருத்தி குழந்தையோடு கர்ப்பிணியை மருத்துவமனைக்கு ஆற்றில் அழைத்துச் செல்லும்போது அவர்களையும், உடல் நிலை சரியில்லாக் குழந்தையை எடுத்துச்சென்ற தாயையும் ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. மேலும், வரம் வாங்கி பெற்றெடுத்த குழந்தையை வளர்த்து பள்ளிக்கு அனுப்பும்போது ஆறு அடித்துக்கொண்டு போனதை அறிந்த ஒரு தாய் துயரம் தாங்காமல் மகன் சென்ற இடத்திற்கே நான் போய்விடுகிறேன் என்று ஆற்றில் குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட துயரம் ஊரை உளுக்கியது.

            ஊரில் ஒருவர் தன் மகனை வெளியூரில் படிக்க வைத்தார். அவன் பள்ளி, கல்லூரி படிப்பு எல்லாம் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக தன் ஊருக்கு வரும்போது ஆறு அடித்துக்கொண்டு போய்விட்டது. இதை அறிந்த அவன் அப்பா பட்ட துயரத்திற்கு அளவே கிடையாது.

            ஆறு அந்த ஊரில் உள்ளவர்களை ஒருவரை அடுத்து ஒருவரை பலி வாங்கிக்கொண்டேயிருந்தது. இதையெல்லாம் பார்த்த ஊர்மக்கள் ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று அடுத்த ஊரில் இருக்கும் ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தார்கள். தலைவரும் படித்து பார்த்து ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட ஏற்பாடு செய்கிறேன் என்றுகூறி அவர்களை அனுப்பினார். இதுபோல பல தலைவர்கள் மாறியும் பாலம் கட்டவில்லை. இது ஊர் மக்களுக்கு வருத்தமாகவே இருந்தது.

            மேலும், மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியும், சாலை மறியல் செய்தும் பலன் கிடைக்காமல் ஏமாந்து போனார்கள். முதலமைச்சருக்கு மனு அனுப்பியதில் பலன் கிட்டவில்லை. இதையெல்லாம் பார்த்து வந்த அதே ஊரில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவனும் அந்த ஆற்றை கடந்துபோய்தான் படித்தான். அவனோடவே முதல் வகுப்பிலிருந்து படிக்கும் ஒரு மாணவன் அவனுக்கு நண்பனாக இருந்தான். அந்த நண்பனுக்கு அப்பா, அம்மா யாருமே கிடையாது. அனாதை விடுதியில் இருந்து தங்கி படித்து வந்தான். அந்த நண்பனை அவன் அப்பா அம்மாவிடம் கூறி தன் வீட்டிற்கே அழைத்துக்கொண்டு இரண்டுபேரும் ஆற்றைக் கடந்துபோய் படித்தார்கள். ஒவ்வொரு நாளும் ஆற்றைக் கடந்து செல்லும்போதும் வரும்போதும் நாம் நல்லா படித்து மாவட்ட ஆட்சியாளராகி நம்ம ஊருக்கு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டிவிடலாம் என்று இரண்டு பேரும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அந்த நண்பன் நான்தான் முதலில் ஆட்சியாளராகி நம்ம ஊருக்கு பாலம் கட்டுவேன் என்று கூறுவான். அதற்கு அவன் யார் பாலம் கட்டினால் என்ன நம்ம ஊருக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்க போகுது என்று கூறினான்.

            ஒரு நாள் உடல்நிலை சரியில்லை என்று நண்பன் போகவில்லை. அவன் மட்டும் வருத்தத்தோடு பள்ளிக்குப் போனான். வீட்டிற்கு மாலையில் வரவில்லை. அவன் கேட்டான் அதற்கு அவன் அப்பா, அம்மா உன் நண்பனை வெளிவூரில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்று கூறினார்கள். நண்பனும் அவனுடைய அப்பாவிடம் சென்று அப்பா நானும் நண்பன் படிக்கும் பள்ளியில் படிக்கிறேன் என்னையும் அங்கே சேரத்திவிடுப்பா என்று கேட்டான். அதற்கு அவனுடைய அப்பா வேண்டாம்பா நம்மிடம் பணம் வசதி இல்லை விடுதியில் தங்கி படிக்கவேண்டியிருக்கும். அதனால் அவன் மட்டும் படிக்கட்டும் என்று மனவேதனையோடு கூறினார். அதற்கு அவன் பெரிய பெரிய நகரத்தில் நிறைய அரசு விடுதி இருக்கிறது அதில் தங்கி படிக்கிறேன். அப்படி இல்லை என்றால் நான் இங்கே படித்தால் என்னையும் ஆறு அடித்துக்கொண்டுப் போகலாம் நாளை உன்னையும் அடித்துக்கொண்டுப் போகலாம் இது நம்ம ஊருக்க கடவுள் எழுதிய விதி இதை யாராலும் மாற்ற முடியாது என்று கூறினார்.

            மேலும், அதற்கு அவன் அப்பா விதியை மாற்ற முடியாததை நான் என் உயிரைக் கொடுத்தாவது இந்த விதியை மாற்றுவேன். என்னை வெளியூரில் உள்ள பள்ளியில் சேர்த்துவிடுங்கள் என்று கெஞ்சினான். அதற்கு அவன் அப்பா ஊரில் உள்ள படித்த ஒருவரை அழைத்துக்கொண்டு வெளியூரில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டார். அவன் அப்பாவிடம் அப்பா நான் நல்லா படித்து அரசு வேலைக்குபோகும் வரை நான் ஊருக்கு வருவதில்லை என்று கூறி அப்பாவை வழி அனுப்பி வைத்தான்.

            அதற்கு பிறகு அவன் பள்ளியிலும் தங்கிய அரசு விடுதியிலும் நண்பனைத் தேடி பாரத்தான் கிடைக்கவில்லை. சரி அவன் வேற பள்ளியில் படித்து வேற விடுதியில் தங்கி இருப்பான் என்றாவது ஒரு நாளைக்கு பார்ப்போம் என்று நினைத்து நல்ல படித்து பள்ளியில் முதலிடத்தில் வந்தான். பள்ளிக் கல்லூரி படிப்பு முடித்து ஆட்சியர் பணிக்கு பயிற்சி எடுத்து தேர்வு எழுதி வெற்றி பெற்று நண்பன் இருந்த அதே மாவட்டத்திற்கு ஆட்சியாளராக பணிபுரிய வந்து முதன் முதலாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேலையைத் தொடங்கினார். இவன் ஆட்சியாளராக ஆனதும் ஊரே பெரிதும் வரவேற்றன. அவனுடைய நண்பனின் வயதான அப்பா இதைப் பார்த்து ஆனந்த கண்ணீர்விட்டார்.

            பாலத்தின் வேலை மிக வேகமாக நடந்தது பாலம் கட்டி முடிந்ததும், யாரையும் இந்த ஆறு பலி வாங்காது என்று ஊர் மக்கள் நினைத்தார்கள். அவனும் எண்ணினான். பாலத்திற்கு திறப்பு விழா ஏற்பாடு நடைபெறுகிறது. ஊரே கோலாகலமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் தோரணங்கள் ஒலிபெருக்கி பாடிக்கொண்டிருந்தது. வாழைமரம் பாலத்தின் இரண்டு பக்கமும் கட்டப்பட்டிருந்தது. காகிதப்பூ தோரணம் ஊர் முழுவதும் கட்டியிருந்தார்கள். தென்னையின் கீற்றுகள் அங்கங்கே தொங்கப்பட்டு இருந்தது. ஊர் மக்களும் புதிதாக சுதந்திரம் கிடைத்ததுப் போல் இருந்தார்கள். சிறுவர்கள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கம் ஊர்க்காரர்களும் பாலத்தின் திறப்பு விழாவிற்கு வந்து கூடியிருந்தார்கள்.

            பாலத்தைத் திறப்பதற்கு ஆட்சியாளரை அழைத்தார்கள், அவர் வந்ததும் எல்லோரும் கடவுளை போல் கை கூப்பி வணங்கினார்கள். ஆட்சியாளர் பாலத்தை திறந்து வைத்தபோது எல்லோரும் இந்த ஆறு இனிமேல் யாரையும் பலி வாங்காது என்று கைத்தட்டி மகிழ்ந்தார்கள். ஆட்சியாளர் பாலத்தின் வழியே நடந்து வரும்போது தன் நண்பனுடைய அப்பாவிடம் என் நண்பன் எங்கே என்று கேட்டார். அதற்கு அவர் நீ ஒரு நாள் உடல் நிலை சரியில்லாமல் பள்ளிக்கு போகாமல் இருந்தபோது உன் நண்பன் மட்டும் பள்ளிக்குப் போக ஆற்றில் இறங்கியபோது தண்ணீர் வேகமாக வந்து அடித்துக் கொண்டு போய்விட்டது. இதை உனக்கு சொன்னால் நீயும் நண்பன் போன இடத்திற்கு நானும் போய்விடுகிறேன் என்று கூறி ஆற்றில் குதித்து விடுவாய் என்று உன்னிடம் சொல்லாமல் வெளியூர் பள்ளியில் சேர்த்து விட்டோம் என்று பொய் கூறினேன். அதற்கு என்னை மன்னித்துவிடு என்று கூறினார்.

            அவன் அப்பா கூறியதைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தான், கண்களில் கண்ணீர் ததுமபின. இனிமேல் இந்த ஆறு என் நண்பனை பலி வாங்கியது அல்லாமல் நீ யாரையும் பலி வாங்காது என்று கூறி பாலத்தின் சுவரைப் பிடித்து இந்த ஆறு தான் என் நண்பனை பலிவாங்கியது என்று மனதுக்குள் எண்ணி எட்டி பார்த்தார். கால் தவறி ஆற்றில் விடந்துவிட்டார். ஆறு அடித்தக்கொண்டுபோய்விட்டது. இந்த ஆறு ஆட்சியாளரையும் பலி வாங்கிவிட்டதே என்று மக்கள் எல்லோரும் கத்தி, கதறி யார் பெற்ற மகனோ நம்ம ஊருக்குப் பாலம் கட்டி திறந்து வைத்த பிறகு ஆற்றில் விழுந்துவிட்டாரே என்று கூறி புலம்பினார்கள் அதற்கு அப்புறம் ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து நமக்கு பாலம் கட்டித்தந்தவர் கடவுள் மாதிரி என்று கூறி பாலத்தின் முன்னால் அவருடைய சிலையை வைக்க வேண்டும் என்று பாலத்தின் முன்னால் அவருடைய சிலையை வைத்தார்கள் அன்று முதல் சிலையை கடக்கும் முன்பு அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு போகிறர்கள். இந்த கதையை கேட்ட புதியவர் கண்ணீர் விட்டார். இதை பார்த்து ஏன் அழுகிறாய் என்று கதை கூறிய பெரியவர் கேட்டார். அதற்கு புதிதாக வந்தவர் அங்கு சிலையாக நிற்கக் கூடியவர் என் நண்பன் தான் என்று கூறி, நான் ஆற்றில் அடித்துக்கொண்டு போகும்போது வெகு தூரம் போய் ஒரு செடியில் மயக்க நிலையில் மாட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த வசதி படைத்த ஒருவர் என்னை மருத்துவ மனைக்கு கொண்டுபோய் காப்பாற்றினார். அவரிடம் நான் எங்க ஊருக்குப் போவதில்லை மீண்டும் அந்த ஆறு என்னை அடித்துக் கொண்டு போய்விடும் என்று கூறினேன். அவரும் வெளியூரை சேர்ந்ததனால் என்னை அவருடைய ஊரிலே பள்ளியில் சேர்த்து நல்ல படிக்க வைத்து ஆட்சியாளராக ஆக்கினார். இப்போது இந்த மாவட்டத்திற்கு புதிதாக வந்த ஆட்சியாளர் நான் தான் என்று கூறி நானும் இதே ஊரில் பிறந்தவன் தான் இந்த ஊர் மாற்றமடைந்திருக்கிறது என்று உன்னிடம் கேட்டான் என்று கூறி முடித்து தன் நண்பனுடைய சிலைக்கு பக்கத்திலுள்ள பூக்கடையில் பூ மாலை வாங்கி போட்டு மரியாதை செலுத்திவிட்டு அவனுடைய சேவையைத் தொடங்கினான்.

சிறுகதையின் ஆசிரியர் : முனைவர் துரை.கிருஷ்ணன்

பார்க்க

1.மறக்க முடியுமா (சிறுகதை)

2.இருளில் ஓர் அலறல் | சிறுகதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here