முள் செடி (விஷ முள்)- நிமிடக்கதை

நான் சின்னவயதில் இருக்கும்போது ஒரு விஷ முள் செடிகூட தென்படவில்லை. ஆனால், இப்போது எல்லா இடத்தையும் ஆக்கிரமிப்புச் செய்துகொண்டது ஏரியில் இச்செடி வானுயர வளர்ந்து ஏரியின் அழகை கெடுத்துவிட்டது.

                சராசரி ஒரு செடிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டால் இந்தச் செடிக்கு மட்டும் இருபது லிட்டர் தண்ணிர் தேவைப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் உரிஞ்சப்பட்டு எங்குமே வறட்சி காணப்படுகிறது. மழையும் குறைந்துவிட்டது. எல்லோருடைய வீட்டிலும் எரிவாயு இருப்பதால் அடுப்பெறிக்க விறகு வெட்டுவதில்லை.

                நான் அரசாங்க அதிகாரிகளிடம் பேசினேன். அதை, அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். நியாயவிலை கடையில் உள்ள தகவல் பலகையில் செய்தி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. அது, ஏரியில் இருக்கின்ற முள்செடிகளை வீட்டிற்கு ஐந்து செடிகள் வேரோடு பிடுங்கினால் நியாயவிலைக் கடையில் ஒரு அட்டைக்கு ஆயிரம் ரூபாய் பணமும் ஒரு மா, பலா, வாழைக்கன்றும் அதனுடன், ஒரு தென்னங்கன்றும் கொடுக்கப்படும் என்றும், எரிவாயு இருப்பு இல்லாததனால் இரண்டு மாதம் வழங்கப்படமாட்டாது என்றும் செய்தி இருந்தது. இந்தச் செய்தி ஊர் முழுக்கக் காட்டுத் தீப்போல் பரவியது.

                உடனே ஏரியில் கத்தி, கடப்பாரை, மண்வெட்டியோடு ஊர் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு ஒரே நாளில் ஏரியைச் சுத்தப்படுத்திவிட்டனர். கொடுத்தக் கன்றுக்கு மழை வரும் வரை வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு ஐந்து குடம் தண்ணிர், லாரியில் கொண்டுவந்து தரப்பட்டது.

                இப்போது மரங்கள் வளர்ந்து பலன் தருகின்றன. மழை தவறாமல் பெய்கின்றது. விவசாயம் நல்லபடியாக நடக்கின்றது. ஊரைப் பார்த்தால் நந்தவனம்போல் காட்சியளிக்கிறது.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

மறக்க முடியுமா (சிறுகதை)

நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்,

எம்.ஜி.ஆர் கல்லூரி,

தமிழ்த்துறை,

ஓசூர் – 635 130

9952779278

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here