நற்றிணையில் முல்லை நில மக்களின் வாழ்வியல் கூறுகள்

முன்னுரை

இந்த ஆய்வுக் கட்டுரை நற்றிணையில் வருகின்ற முல்லைத்திணைப் பாடல்கள் மட்டும் ஆய்வு செய்யப்படுகின்றன. அவற்றில் தலைவன் கூற்றில் வருகின்றப் பாடல்கள் மட்டும் இவ்வாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறன. மொத்தம் தலைவன் கூற்று பாடல்கள் பதிமூன்று (21,42,59,81,139,142,161,169,221,142,321,371,374) ஆகும்.

இக்கட்டுரையில் தலைவன் தலைவியின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுதல், மழையை வாழ்த்துதல், முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி கூறுதல், விருந்து செய்தல், குரல கேட்டல், வருந்துதல், நம்பிக்கைகள் வேட்டுவர் வாழ்க்கை, இடையர் வாழ்க்கை போன்றவைகள் கூறப்படுகிறது.

அன்பை வெளிக்காட்டுதல்

இவற்றில் வினைமுடிந்து வீட்டிற்கு வரும் போது வழியில் நடக்கும் நிகழ்வைப் பார்த்தத் தலைவனுக்குத் தலைவி மீது அன்பு வெளிப்படுகிறது. அவை, கானக்கோழி, நாங்கூழ்ப் புழுவைக் கவரும் அப்புழுவைக் கொன்று தன்பெடைக்கு ஊட்ட வேண்டும் பெருமையோடு அப்பெடையை நோக்கும் நிலையை உவ்விடத்தில் காண்பாயாக (21) என்றும், கார்ப்பருவம் தொடங்கியது. மடப்பத்தையுடைய பிணைமான் நீங்கி பெயரும் களர்நிலத்தில் மருண்டு விழிக்கும் கண்களுடைய தன் கூட்டத்தினின்று தவறி விலகி ஓடும். அதனை நீங்காத விருப்பமுடைய நெஞ்சத்துடன் சென்று தேடும் ஆண்மானை உவ்விடத்தில் காண்க (242) என்றும் தேரபாகனுக்கு கூறி விரைவாக தேரை செலுத்துக என்று தலைவன் கூறினான்.

மழையை வாழ்த்துதல்

இதில் தலைவன் வினைமுற்றி வந்த பள்ளிடத்தானாகப் பெய்த மழையை வாழ்த்தியது. அதாவது தலைவியுடன் முயங்கி, அவள் நலனை இனிதாக நுகர்ந்த தலைவன் கார்ப்பருவத்தில் பெய்கின்ற மழையை நோக்கி “மேகமே உதவி புரிந்தனை நீ உலகத்துக்கு ஆதாரமாகப் பலரும் தொழும்படி மலைச்சிகரங்களில் நின்று உலவுவாயாக” என வாழ்த்தினான்(139). மழையினால் ஏற்படும் குளிரச்சியால் தலைவன் தலைவியை தழுவி கிடந்தனன் என்றும் கார்ப்பருவம் வரும் முன்னவே வினைவே. வினைமுடித்து மீண்டனன் என்பது இப்பாடலில் வெளிப்படுகிறது.

முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சி

மழைப் பெய்ததால் உண்டான தவளைகளின் ஒலிகளால் நம் தேர்மணிக்குரலைத் தலைவன் அறியவில்லை. உடனே நான் வருவது குறித்து தெரிவிப்பீர் என ஏவலரை ஏவினேன். அவர்கள் சென்று அறிவிக்கவே, அவள் நீராடி தன்னை புனைந்து கொள்ளும் நான் செல்லவும் அவள் என்னை அணைத்து மகிழ்ந்து நிலைமுன் நிகழ்ந்தது அது மறத்தற்கரியது (142). அதனால் தேரை விரைவாக ஓட்டுமாறு பாகனை வேண்டுதல் இந்தப் பாடல் முன்பு நிகழ்ந்த நிகழ்ச்சியைத் தலைவன் வாயிலாக வெளிப்படுகிறது.

விருந்து செய்தல்

பூண்கள் தாழ்ந்த மார்பில் பொருந்தி இருக்கும் அழகிய முலைகளின் முகட்டில் கண்ணீ சீதறி விழும்படி அழுதவண்ணம் இருப்பவள், அழகிய மாமை நிறம் பொருந்திய காதலி நம்மைக் கண்டவுடன் ( தன் அவலம் நீங்கி) நமக்கு விருந்து செய்யும் விருப்பத்துடன் சமையல் அறைக்குள் புகுவாள் உரிய விருந்தை வருந்தி ஆக்கி களைப்படைந்த நிலையில் மகிழ்ச்சி மிகுந்த முகத்தினாய் நகையைக் கொண்டு நாம் என விளங்குவாள். அந்த நகை முகம் காணும் பொருட்டு விரைவாகத் தேரைச் செலுத்து என்று தேர்பாகனுக்கும் (81), வழியிடைக் கண்டாரிடம் புதியவர்களுக்கும் (374) தலைவன் கூறுதல்.

குரல் கேட்டல்

பாகனே! நம் காதலி தன் புதல்வன் துயிலுமிடம் அடைந்து எந்தையே வருக! என்று கூறும் மொழியைக் கேட்டு மகிழும் வண்ணம் தேரை விரைந்து செலுத்துக (21) என்று மகிழ்ந்துரைத்தான் தலைவன். இதனை,

பூங்கட் புதல்வன் உறங்குவயின் ஓல்கி

வந்தீக எந்தை என்னும்

ம்தீம் கிளவி கேட்கும் நாமே”

என்ற பாடலடியாகும்.

வருந்துதல்

தலைவி மாலைப் பொழுதிலே. நாம் இல்லாமையினால் வெறுமையாக இருக்கும் மனையைப் பார்த்து வருந்தி நிற்பாள் (321) என்றும், மேகம் மழைத் தொடங்கிற்று நம் காதலி இதனைக் கண்டு அழத் தொடங்கியிருப்பாள் ஆயர்தல்லோசை அவள் அழகையை மிகுவிக்கும் (371) என்றும் தேரை வினவாகச் செலுத்துக் என்று தலைவன் தேர்ப்பாகவிடம் கூறினாள்.

நம்பிக்கைகள்

தலைவன் நம் வரவை காக்கை புட்கள் முன்னரேச் சென்று அறிவித்தனவோ(161) என்று தேர்ப்பாகனுக்கும் நாம் தலைவியைப் பிரிந்ததனால் உண்டாகும் துன்பம் தீர இப்போது நாம் வருவதனை நம் மாலையின்கண் உள்ள சுவரிடத்தில் உள்ள பல்லி பலப்படியாக இயம்பி அறிவுறுத்துமோ (169) என்று தன் நெஞ்சிற்குத் தலைவன் கூறினான். இப்பாடல்களின் மூலம் அக்கால மக்களின் நம்பிக்கைகள் வெளிப்படுகிறது.

வேட்டுவர் வாழ்க்கை

காட்டில் உடும்பைக் கொன்று, வரிதத தவளையை அகழ்ந்தெடுத்தும்; நெடிய கோடுகளைக் கொண்ட புற்றுகளை வெட்டி ஆண்டுறையும் ஈசலகளை மண்ணைத் தோண்டி எடுத்தும் பகலில் முயலை வேட்டையாடியும் வாழும் வேட்டுவன் இரவின்கண் தன் அழகியத் தோளில் சுமந்து வந்து பல்வேறு வகைப்பட்ட பண்டங்களைப் பொதிந்த மூட்டையுடனே ஏனையக் கருவிகளையும் வீட்டியிலேயேப் போட்டுவிட்டு மறந்து மிகுதியான பருகியக் கள்ளின் மயக்கத்தில் செருக்குற்று கிடப்பான் (39) என்பது அறியமுடிகிறது.

இடையர் வாழ்க்கை

மழைக் காலத்தின் இறுதிநாளில் பால் விலைக் கூறும் இடையன் கையில் பலவாகியப் காலிட்டுப் பின்னிய உறியுடன், தீக்கடைக்கோல் முதலானக் கருவிகள் பலவற்றை இட்ட தோற்பையினையும், ஒருசேர சுருட்டி கட்டினான் அவற்றை பனையோலைப் பாயோடுச் சேர்த்துக் கட்டி முதுகில் சுமந்து சென்றான். நுண்ணியப் பல நாதிவலைகள் அவனுடைய உடம்பில் ஒரு பகுதியை நனைத்தன. கையில் இருந்த கோலை ஊன்றி அதனிடம் ஒரு காலை ஊன்றியவனாய் ஒடுங்கி நின்ற அவளிடையன் நாவை மடித்தப்படி ‘வீளை’ ஒலியை எழுப்பினான். அவ்வொலிக் *கேட்ட ஆட்டுக்கூட்டம் வேற்றிடங்களில் திரியாது மயங்கி அவ்வண்ணமே தங்கி நிற்கும் (142) காட்டு பகுதியில் அமைந்துள்ளது தலைவியின் ஊர் என்று தலைவன் பாகனுக்கு கூறுகிறான்.

முல்லையின் நறுமணம் கமலும் மலரை, ஆடுகின்ற தளையையுடைய ஆட்டை மேய்க்கும் வலிய கைகளை உடைய இடையன் இரவிலே கொய்து வெண்மையாபை பனங்குருத்தின் பொழுவுடனே சேர்த்து மாலையாகத் தொடுத்து அணிவான் (169) தலைவன் நெஞ்சிற்குச் சொல்லும் போது வெளிப்படுகிறது. மேலேக் கூறியச் செய்திகளைப் பார்க்கும் போது தலைவன் வாயிலாக வெளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை

இக்கட்டுரையில் முல்லை நில மக்களின் வாழ்க்கையைக் கூறும்போது பெண்கள் வீட்டில் இருத்தல்,விருந்து செய்தல், புதல்வனைப் பெற்று வளர்த்தல், தலைவனுடன் கூடுதல், தலைவன் இல்லாத போது அவன் வரும் வரையிலும் வருந்தி காத்திருத்தல், இனிமையான குரலில் பேசுதல், விருந்தினர் வரக் காக்கை கரைதல், நினைத்தது பலிக்கச் சுவரிலே பல்லி இயம்புதல் போன்ற நம்பிக்கையும் நம்புதல், ஆண்கள் பொருளீட்டச் செல்லுதல், போருக்குச் செல்லுதல், தலைவியுடன் கூடியிருத்தல்,வேட்டையாடுதல், ஆடுகள் மேய்த்தல், பால் விற்றல், புல்லாங்குழல் ஊதுதல், களைப்பு ஏற்படும் போதும் மகிழ்ச்சியாய் இருக்கும் போதும் கள் குடித்தல்,பலவகையான உண்டு வாழ்ந்தார்கள்.தலைவியுடன் சேர்ந்து இருக்கும் போது பொழிகின்ற மழையை வாழ்த்துதல், முன் நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தல் தேர்ப்பாகன் தேரை ஓட்டுதல் போன்றவைகள் தலைவன் கூற்றுப்பாடல்களிருந்து வெளிப்படுகின்றன.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் து.கிருஷ்ணன்

தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635109.

இந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பியல்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here