அமிழ்து|கவிதை|நவநீதனா ச

அமிழ்து_நவநீதனா ச
👑 மாநகர் மண்டபத்தின்

மாமணி வடிவுடையாய்!

 
👑 மயிலினங்கள் இடையூடே,

ஆழித்தேர் ஒப்புடையாய்!

 
👑 வர்ணத்துப் புவியூடே,

வளை மெலிந்த சுடரழகே!

 
👑 வானத்துவெளி உறைந்த, 

பூதத்து மிகையுணர்வே!!…

 
👑 நாட்டியத்துச் சபை நளிந்த, 
இடையழகே! கேளாயோ?!!

 
👑 வேலுடையான் விரலமர்ந்த,

குளிர்நிலவே! இன்னுயிரே!

 
👑 கிளியினங்கள் கொஞ்சுகின்ற,

மீனவளின் கடைக்கண்ணாய்!

 
👑 சடையேற்ற அண்ணானின்,

உடலேற்ற வெளிர்நீறாய்!

 
👑 நாணத்து மாடத்திலே,

நகைப்போங்கும் பொன்முகிலே!!…

 
👑 கன்னத்தின் குழியழகு, அது

சீனத்து இலக்கணமோ?!

 
👑 பாசுரப் பெண்ணவளே,

அவள் சிரமாடும் முத்துடையாய்!

 
👑 மார்கழிக் குளிரிடையே, 

மையலுற்ற இசையழகே!

 
👑 வெப்பத்தின் சீற்றத்தூடே, 

மைவிழியே! வனப்புற்றாய்!!…


 

👑 மசையுற்றாள் கருவுடைய,

மாசற்ற ஒளியுடையாய்!

 
👑 அம்பலத்தில் ஆடிடுவான்,

மரகதமே! முகமணிந்தாய்!!…

 
👑 பெயரிலே பூட்டி வைத்தாய்!

அடீ! இரத்தினச் சுருக்கமடீ!!

 
👑 புவியுடையார் உரைக்கையிலே!

பூங்குயிலே!! மேனியுமே சிலிர்க்குதடீ!

 
👑 விண்ணுடையார் இசைக்கையிலே!

சிற்றிதழே! குருதியுமே உருகுதடீ!!

 
👑 விழியளித்த நீரினிதாம்!

தாயளித்த பிறப்பினிதாம்! 

 
👑 நின்றன் பெயராலே,
அ
வை அமிழ்தன்றோ?!

நனிச்சுவையன்றோ?!…

 
👑 அழிழ்துடையாய்! 

நீ இரத்தினச் சுருக்கமன்றோ?!

என்றன் உயிருடையாய், கேளாயோ?!…

கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச

கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,

கோவை.

 

Leave a Reply