Saturday, April 4, 2026
Home Blog Page 6

Recolutionary Lady Dhaaniyamaali in Kamaba Ramayana|Dr.G.Mangaiyarkkarasi

கம்பராமாயணத்தில் புரட்சிப் பெண் தானியமாலி - முனைவர் க.மங்கையர்க்கரசி
Abstract               
        In the Ancient era, womenfolk were living in such a bitter position that they cannot even ask as an information about the blenders or mistakes committed by their respective life partners. This kind of state of affairs were not only confined to the normal women force of the society but  was also  very much prevalent even with the Queens of the Great Kings of several empires. Though King Ravana’s second wife Dhaaniyanmaali and the mother of Adhikayan who has not even had the sight of others cry  was aware that there were a few other wives and women in thousands were havng rights over Lanka’s King, she was not questioning and was serious about those issues. Because of the death of his beloved son Adhikaya, who fought with Rama and Lakshmana and defeated Indra, the leader of the gods,  with unutterable grief and anger, she though Ravana as the cause of her Son’s death. She direcly accused that Ravana’s lust for Goddess Sita for the loss of her Son .With more anger and fury she asks him. Where did your courage has gone?  Don’t you understand what I mean? Won’t you listen to me ? You never listen to your younger brothers Kumbakarna and Vebeeedanan. You, being the root cause  for the loss of everyone including Akkumaran and Adhikayan, still  ruling the Empire ! Now, only Mandothari’s son, Indrajit, is alive. Will you go for Successive Wars  again with him? In this way she started raising series of questions to Ravana without fear. Though Dhaaniyamaali was very well aware that her own husband Lanka’s King Ravana is the wrong doer she was firm in her statement that Blender is still a Blender and she also says “ Already you have incurred more loss of Brave personalities of your Empire and because of your lust towards Devi Sita, you may have to incur further more bravery from your side.”   Here Poet Kambar through his exemplary expressions, has depicted Dhaaniyamaali as a Revolutionary lady through her above explicit and  fiery  contentions in this Epic.

Keywords: Dhaaniyamaali ,Ravan, Raman, Sita, Lakshmanan, Caution, Anger, Rage.


“கம்பராமாயணத்தில் புரட்சிப் பெண் தானியமாலி”

ஆய்வுச் சுருக்கம்
           முற்காலத்தில் கணவன் என்ன தவறுதான் செய்தாலும்  அதனை தகவலாகக் கேட்க கூட முடியாத நிலையில் தான் பெண்கள் இருந்தனர். சாதாரண பெண்களுக்கு மட்டுமல்ல, மன்னனின் தேவியாக இருந்தாலும் இதேநிலைதான். இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி. பிறர் அழுததைக் கூட பார்த்தறியாதவள். அதிகாயனின் அம்மா. இலங்கை வேந்தனுக்கு சில மனைவியரும், பல்லாயிரம் உரிமை மகளிரும் இருந்ததை அறிந்த போதிலும், எதையும் கேட்கவும் எண்ணாதவளாய் இருந்தாள். இராமலட்சுமணரோடு போரிட்டு தேவர்களின் தலைவனான இந்திரனையும் வென்ற தன் அருமை மகன் அதிகாயன் இறந்ததால், சொல்ல முடியாத துயரத்தில் வந்த கோபத்தோடும், ஆத்திரத்தோடும் அவன் இறப்புக்கு காரணம் இராவணன் தான். அவன் லோகநாயகி சீதை மேல் கொண்ட காமமே என்பதை நேரடியாகவே இராவணனிடம் கேட்டாள். மகனின் இழப்பினால் வந்த சோகத்தால் வந்த கோபமே. உன்னுடைய வீரம் எங்கே போனது? நான் சொல்வதைக் கேட்டு பொருள் உணரவில்லையா? நான் சொல்வதைக் கேட்க மாட்டாயா?  உன் தம்பி கும்பகர்ணன், வீடணன் பேச்சை நீ கேட்கவில்லை முன்பு அக்ககுமரன் உள்ளிட்ட அதிகாயன் வரை அனைவரின் இழப்பிற்கும் காரணமான நீ, இன்னும் அரசு செய்கிறாயா? இப்போது மண்டோதரியின் மகன் இந்திரஜித் மட்டுமே உயிருடன் இருக்கிறான். அவனை வைத்துக் கொண்டு இன்னொரு முறை திக்கு விஜயம் செய்வாயோ? என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக் கணைகளைத் தொடுக்கிறாள். தவறு செய்தது இலங்கை வேந்தனான தன் கணவனே ஆனாலும் தவறு தவறுதான் என்றும், இதுவரை பல இழப்புகளைச் சந்தித்த நீ, இன்னும் சீதை மேல் கொண்ட காமத்தால் நீ அடைய இருக்கும் இழப்புகள் நிறையவே என்றும், கணவனை எச்சரிக்கும் ஒரு புரட்சிப் பெண்ணாகக் கம்பர் தன் காப்பியத்தில் தானியமாலியைப் படைத்துள்ளார்.

திறவுச்சொற்கள் : தானியமாலி, இராவணன், இராமன், சீதை,  இலட்சுமணன், எச்சரிப்பு,  கோபம்,ஆத்திரம்.

முன்னுரை
     கம்பராமாயணத்தில் எத்தனையோ பெண்பாத்திரங்கள் வருகின்றன. இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி.அவளை ஒரு புரட்சிப் பெண்ணாகக் கம்பர் படைத்திருக்கிறார். இராவணன் காமத்தினால் எத்தனையோப் பெண்களைக் கவர்ந்தும் வந்திருக்கிறான். அவனுக்கு உரிமை மகளிர் பலர் இருப்பதையும் அறிந்தவள்.அதை எதிர்க்க எண்ணவும் இல்லை. அதிகாயன் இறந்தபோது அவளுக்கு ஏற்பட்ட ஆற்றொணாத் துயத்தில் வந்த கோபத்தாலும், ஆத்திரத்தாலும், ஆதங்கத்தாலும் தன் அருமை மகனின் இழப்பிற்குக் காரணம் கணவன் இராவணனே, அவன் சீதைமேல் கொண்ட தவறான காதலாலே, காமத்தாலே என்பதால் அதுவரை எதுவுமே பேசாத அவள் இராவணனிடமே அவனுடைய தவறுகளை அடுக்கடுக்காகக் கேள்விகளைத் தொடுக்கிறாள்.தவறு செய்தது தன் கணவனேயானாலும் அரக்கர் குல அரசனேயானாலும் தவறு தவறுதான் என்று எண்ணியேக் கொந்தளித்து அடுக்கடுக்காகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தாள் என்பதை கம்பராமாயணத்தின் மூலம்  இக்கட்டுரையின் வழி ஆராய்வோம்.

அதிகாயனின் அன்னை தானியமாலி
       தசகிரீவன் இராவணனின் இரண்டாவது மனைவி தானியமாலி. தேவேந்திரனையேத் தோற்கடித்த அதிகாயனின் தாய்.பிறர் அழுததைக்கூட பார்த்தறியாதவள். பல பெண்களை உரிமைமகளிராக வைத்திருக்கிறான் என்பதை தெரிந்திருந்தாலும் கணவனிடம் இத்தன்மையைக் கேட்காதவள்.

அடித்து அழுது கொண்டு ஓடி வந்தாள் 
        இராம, இலட்சுமணர்களோடு போரிட்டு அதிகாயன் இறந்துவிட்டான் என்ற செய்தியை அறிந்து அலறி அடித்துக் கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் இராவணன் முன் வந்தாள். கதறியபடி வந்த தானியமாலி மலை உச்சியில் இடி தாக்கியதைப் போல, தன் கை வளையல்களும், கழுத்தில் அணிந்துள்ள மாலைகளும் ஒலி எழுப்ப, தன் முலைகளின் உச்சியில் அடித்துக்கொண்டு அழுதாள். புத்திரசோகத்தினால் குகை திறந்ததைப் போன்ற வாயைக் கொண்டவளாய் அரற்றிக் கொண்டும், கதறிக்கொண்டும் செம்பட்டை மயிற்குழல்கள் குழைந்து எங்கும் விரிந்து பரவ, ரத்த கண்ணீரைச் சொரிந்தபடியே அரற்றி அழுதாள்.

“மலைக் குவட்டு இடி வீழ்ந்தென்ன வளைகளோடு ஆரம் ஏங்க
முலைக் குவட்டு ஏற்றும் கையால் முழை திறந்தென்ன வாயாள்
தலைக் குவட்டு அணைந்த செக்கர் சரிந்தன குழல்கள் தத்தி
உலைக் குவட்டு உருகு செம்பு ஒத்து உதிர நீர் ஒழுகும் கண்ணாள்”     (அதிகாயன் வதைப் படலம் 1934)
மலைப்பாம்பு போலப் புரண்டாள்
 
        இதுவரை பிறர் அழுவதையேப் பார்த்து அறியாத அவள், தன் தோள்கள் மண்ணைப் பொருந்த இராவணனின் பாதத்தில் விழுந்தாள். துயரம் மிகுதியால் புலம்பி உடைந்து அழுதாள். பெரிய பாம்பைப் போலப் புரண்டாள். இராவணனிடம் எனக்குக் கொடுமை செய்துவிட்டாய் என்று கூறிப் புலம்பத் தொடங்கினாள்.

என்னுடைய கண்மணியைக் காட்டமாட்டாயோ?
     இப்போது வல்லவர்களாக திகழும் பகைவர்களான இராம லட்சுமணர்களின் வலிமையைப் போக்க மாட்டாயோ? உன் வீரத்தை வெளியே செல்ல விடாமல் உள்ளுக்குள்ளேயேத் தடுத்து நிறுத்தி விட்டாயோ? தோள் வலிமை தளரப்பெற்றாயோ? நான் சொல்வதைக் கேட்டு அதன் பொருளை அறிந்து கொள்ளவில்லையோ? அல்லது நான் சொல்வதைக் காது கொடுத்து கேட்க மாட்டாயோ? என் கண்மணியாகிய அதிகாயனை என் கண்முன் காட்ட மாட்டாயோ என்று கூறி அழுதாள்.
 
“மாட்டாயோ இக்காயம் வல்லோர் வலி தீர்க்க
மீட்டாயோ வீரம் மெலிந்தாயோ தோள் ஆற்றல்
கேட்டாய் உணர்ந்திலையோ என் உரையும் கேளாயோ
காட்டாயோ என்னுடைய கண்மணியைக் காட்டாயோ”   (அதிகாயன் வதைப்படலம் 1936)
அதிகாயனின் சிறப்புகள்
        அதிகாயனின் சிறப்புகளாக வீடணன் கூறுகிறான். அறம் இல்லாதவற்றை அன்றி மற்றொன்றை அறியாதவன். வீரம் என்னும் அணிகலனைத் தவிர, வேறான பல அணிகலன்களை அணியாதவன். வலிமை அற்றிருக்கின்ற எந்த உயிரையும் அழிக்காதவன். பெரும் புகழைப் பெறுவதே சிறந்தது என்பதை அறிந்தவன். (அதிகாயன் வதைப் படலம் 1732) போர்க்களத்தில் உடலில் உள்ள உயிரை விட நேரும் போதும், மாயச் செயலில் வல்லவர்கள் கூடிப் போரிட்டாலும், தேசத்தில் உள்ள அனைவரும் தந்திர செயல்கள் செய்தாலும், அவற்றுக்கு எதிராக மாயத் தொழிலைச் செய்ய நினைக்க மாட்டான் என்று கூறினார்.

“காயத்து உயிரே விடு காலையினும்
மாயத்தவர் கூடி மலைந்திடினும்
தேயத்தவர் செய்குதல் செய்திடினும்
மாயத் தொழில் செய்ய மதித்திலனால்”      (அதிகாயன் வதைப்படலம் 1733)
தேவர்களின் தலைவனையே வென்றவன்
        இந்திரனுக்கும் தோற்காத சிறந்த புதல்வனை இவள் பெற்றெடுத்தாள் என்று வானத்தில் வாழும் தேவர்களும் போற்றும் போற்றுதலுக்குப் பாத்திரமான எளியேன் நான். என்னுடைய மந்திர மலையைப் போன்ற தோளைப் பெற்ற மகனை, அவனுக்குச் சமமாக மாட்டாத மனிதன் ஒருவனது வில் விட்ட அம்புக்கு இரையாகக் கொடுத்து விட்டேனே என்று கதறினாள்.

“இந்திரற்கும் தோலாத நன்மகனை ஈன்றால் என்று
அந்தரத்து வாழ்வாரும் ஏத்தும் அளியத்தேன்
மந்தரத்தோள் என் மகனை மாட்டா மனிதன் தன்
உந்து சிலைப் பகழிக்கு உண்ணக்கொடுத்தேனே”    (அதிகாயன் வதைப்படலம் 1937)
திசை தோறும் சென்று வெற்றி பெறுவாயோ
        இதற்கு முன்பே அக்ககுமரன் இறந்துவிட்டான். அதிகாயன் இப்போது இறந்து போனான். மிக்க வலிமை பெற்ற அனைவரும் அழிந்தனர். இப்போது உன் புதல்வர்களில் உயிரோடு இருப்பவன் மண்டோதரியின் மகன் இந்திரஜித் மட்டுமே. இனிமேல் திசை தோறும் சென்று வெற்றி பெறுவாயோ என்று வினவினாள்.       

“அக்கன் உலந்தான் அதிகாயன் தான் பட்டான்
மிக்க திறந்து உள்ளார்கள் எல்லோரும் வீடினார்
மக்கள் இனி நின்று உள்ளான் மண்டோதரி மகனே
திக்கு விஜயம் இனி ஒரு கால் செய்யாயோ?”    (அதிகாயன் வதைப் படலம் 1938)
இன்னும் வர இருப்பவை சிலவோ
             ஐயனே நீ எதனை எண்ணிக் கொண்டிருக்கிறாய்? வெற்றி மாலை சூடிய வேலாயுதம் ஏந்திய எண்ணற்றவரான இறந்து போன அரக்கரை உயிர்ப் பிழைத்து வருமாறு கூப்பிட மாட்டாயோ? அறிவற்றவராய்க் காமத்தால்  பிணிக்கப் பட்டவர் தப்பி பிழைப்பாரோ? சீதையால் இதுவரை வந்த துன்பங்கள் போக, இன்னும் வர விருப்பவை சிலவோ. அவை மிகப் பலவாகும் என்று கூறினாள்.(சீதை மேல் நீ கொண்ட காமத்தால் முதலில் கிங்கரர், சம்புமாலி ,பஞ்சசேனாபதியர், அக்ககுமரன், கும்பகர்ணன் ஆகியோர் இறந்தனர். இப்போது அதிகாயன் இறந்தான்.. இனி இந்திரசித் , நீ, மண்டோதரி இறக்கப்போகிறீர்கள் என்பதைக் குறிப்பாகக் கூறினாள்))

“ஏது ஐயா சிந்தித்திருக்கின்றாய் எண் இறந்த
கோதை ஆர் வேல் அரக்கர் பட்டாரைக் கூவாயோ
பேதை ஆய் காமம் பிடித்தார் பிழைப்பாரோ
சீதையால் இன்னும் வருவ சிலவேயோ”  (அதிகாயன் வதைப் படலம் 1939)
நீ  இன்னும் அரசாட்சி செய்கின்றாய்
     அறிவு நிறைந்த உன் தம்பியான கும்பகர்ணன் உரைத்த நல்லுரையை நீ ஏற்றுக்கொள்ளவில்லை. குலத்துக்கு உரிமை உள்ள மற்றொரு தம்பியான வீடணன் கூறிய சொற்களில் பொருந்திய தன்மையை நீ உணர்ந்து கொள்ளவில்லை. கும்பகர்ணனை முதலில் கொலை செய்துவிட்டு, இப்போது என் மகனான இளவரசன் அதிகாயனையும் அம்புக்குப் பலியாக்கி, நீ இன்னும் அரசாட்சி செய்கின்றாய் என்று கோபத்துடன் கேட்டாள்.
 
“உம்பி உணர்வுடையான் சொன்ன உரை கேளாய்
நம்பி குலக் கிழவன் கூறும் நலம் ஓராய்
கும்பகர்ணனையும் கொல்வித்து என் கோமகனை
அம்புக்கு இரையாக்கி ஆண்டாய் அரசு ஐயா      (அதிகாயன் வதைப் படலம் 1940)
        இவ்வாறாகப்  பற்பலவற்றைத் தொடர்ந்து கூறி குரல் உயர்த்தி, கூவி தன் கன்று இறந்து போகத், தான் மட்டும் உயிர்ப் பிழைத்திருக்க நேர்ந்த தாய் பசுவைப் போலக் கவலை கொண்ட தானியமாலியை அருகே நின்ற ஊர்வசியும், மேனகையும் நெருங்கிச் சென்று எடுத்து மலையை ஒத்த உயர்ந்த அரண்மனைக்குள்ளே சேர்த்தனர்.
 முதன்மை இடத்தைப் பெற்ற அந்த இலங்கை நகரத்து அரக்கர்கள் ஒன்று கூடி தத்தம் மகனை இழந்தவர் போல, அதிகாயன் முதலியோர்களின் அழிவுக்காக வருந்தி அழுதனர். அந்நகரில் இருந்த எண்ணற்றவரான வான மகளிரும் மிக இரங்கியத் தன் வாயைத் திறந்து கதறி அழுதனர் என்று சொன்னால் அரக்க மகளிர் நிலை எத்தகையதாக இருக்கும்.

முடிவுரை
        பல உரிமை மகளிரைக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து தான் விரும்பினால் அந்தப் பெண்களை எப்படியாவது தன் வயப்படுத்தும் திறம்படைத்த இலங்கை வேந்தன் இராவணனால், அவன் சீதைமேல் கொண்ட காமத்தால் தன் மகன் அதிகாயன் இறந்ததால் , அதிகாயனின் அம்மா தானியமாலி அடங்காத சோகம் மற்றும் கோபத்துடன் கணவனைத் திட்டிக் கேட்டாள். தட்டிக்கேட்டாள். கணவன் செய்தது தவறாகவே இருந்தாலும், அது குறித்து மனைவி  எதுவும்  கேட்டமாட்டாள் என்பதே அக்காலத்தில் இருந்த நடைமுறையாகும். தகவலாகக்கூட கேட்க இயலாத அன்றைய சூழ்நிலையில், அடுக்கடுக்காகக் கேள்விகள் கேட்கும், நீ செய்தது தவறே,உன்னால்தான் என் மகன் இறந்தான் என்றும்,அவனைக் கொன்றது நீ தான் என்றும், உன் தம்பிகளைக் கொன்றாய் என்று அடுக்கடுக்காகக் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் புரட்சிப் பெண்ணாகக் கம்பர் தம் இராமாயணத்தில் கூறியுள்ளார் என்பதை நாம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்
1.சுப்பிரமணியம்.வ.த.இராம.தண்டியலங்காரம்,முல்லைநிலையம்,சென்னை,  
   2019.

2.ஞானசந்தரத்தரசு அ.அ., கம்பன் புதிய தேடல், தமிழ்ச்சோலைப் பதிப்பகம்,    
   புதுக்கோட்டை, 2012.

3.ஞானசம்பந்தன் அ.ச இராமன் பன்முகநோக்கில், ,சாரு பதிப்பகம்,   
   சென்னை,2016.

4.நடராசன்.பி.ரா. தண்டியலங்காரம்,சாரதா பதிப்பகம், சென்னை,2012.

5.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு,
சென்னை, 2011.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.மங்கையர்க்கரசி,

உதவிப்பேராசிரியர்,

அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி(சுழல்-II),

மீனம்பாக்கம், சென்னை 600061.

 

Medical thoughts Inspired by Sirupanchamoolam|M.Gohila

சிறுபஞ்சமூலம் உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள்
Abstract
      
      Sirupanchamoolam consists of five roots which cure the diseases of the human body and similarly this book is a miracle medicine for curing the diseases of the human body. In today’s time, there are many diseases related to the heart. This book plays a big role in reducing them. This article will be useful for everyone.
                        

 “சிறுபஞ்சமூலம் உணர்த்தும் மருத்துவ சிந்தனைகள்”
 

முன்னுரை
          
      சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து வகையான வேர்களைக் கொண்டுள்ள ஒரு மருத்துவ நூலாகும் இதன் ஆசிரியர் காரியாசன் ஆவார் என்னுள் தமிழர்களின் மருத்துவ சிந்தனைகளையும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் ஒத்திருக்கிறது  இவற்றில் உள்ள ஐந்து வேர்களும் உடலுக்கு நன்மை பயக்கும் மருத்துவ குணங்களாகும்.

பஞ்ச மூலத்தில் உள்ள ஐந்து வேர்கள்
1.சிறுவழுதுணை

2. நெருஞ்சி

3. சிறு மல்லி வேர்

4. பெருமல்லி வேர்

5. கண்டங்கத்திரி வேர்
        
       இந்த ஐந்து வேர்களும் பல்வேறு நோய்களை குணப்படுத்தவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது தமிழர் மருத்துவத்தில் முக்கிய நூலாக கருதப்படுகிறது இதன் மூலம் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவமும் பண்டைய தமிழரின் மருத்துவ அறிவும் வெளிப்படுகிறது.

நோய் பற்றிய சொற்குறிப்புகள்
        
         நோயின் குணத்தை கண்களால் காண , கருத்தினால் மட்டுமே அறிய முடியும்.
  
“நோயும் வேட்கையும்  
நுகர்வும் என்று அங்கு  
ஆவியின் வருவோம் கிளவி எல்லாம்  
நாட்டிய மரபின்   
நெஞ்சு  கொனின் அல்லது   
காட்ட லாகப் பொருள் என்பர்”   (பொருளியல்53)
         
மேலும், வயா என்பது கருவுற்றிருக்கும் வேளையில் வரும் நோயைக் குறிக்கிறது.
 
“வயா என் கிளவி வேட்கை பெருக்கம்” (சொல் உயிர்854)
                
அதாவது இந்நோய் விலங்கு, தாவரம், பெண் ஆகியோருக்கு ஏற்படும் நோயாகும்.

மருத்துவர்         
        நோய்க்கு மருந்து கொடுப்பவரை அறிஞர் என்றும் மருத்துவர் என்றும் குறிப்பிடுவர்.
 வாயுறை என்பது வாய் வழியே 
 அருந்துகின்ற மருந்து என்னும் 
பொருள் தரும்.
 உறை என்பது மருந்தை குறிக்கும்.

“உற நோய் தீர்க்கும் மருந்துஉறை என்ப”  (நிகண்டு.2788) 
மருத்துவ முறைகள் மூன்று
  
1.ஒப்புறை
 
2.எதிர் உறை
 
3.களப்புறை
           
ஆகிய மூன்றும் தமிழ் மருத்துவத்தில் மருத்துவ முறைகளாகும்.
 
திருக்குறள் கூறும் மருத்துவம்
          
     நல்ல மருத்துவம் என்பது நோயை நீக்குவது அன்று நோயே வராமல் தடுப்பது என்ற கருத்தாக்கமே வள்ளுவனின் சிந்தனையாகும்.உணவு செரித்த பின் அடுத்த வேலை உணவு உண்பவனுக்கு மருந்தே வேண்டாம் என்பது, புது சிந்தனையாகும்.              

“மருந்தென வேண்டாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி   யுனின்” குறள்
            
     அளவு அறிந்து உண்பவன் நெடுநாள் உயிர் வாழ்வான் அனைத்து நோய்களின் பிறப்பிடம் முறையற்ற உணவு முறை என்று வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளான்.

உணவே நோய்            
        பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக உணவு அமைகிறது உணவு காரணமாக நோய் கிருமிகள் பரவி உடலின் நோயை ஏற்படுத்துகின்றன. நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருப்பின், அவற்றினை உடலுக்கு ஏற்றவாறு உண்ண வேண்டும். சுவையுடன் இருப்பதற்காக, அதிக அளவில் உணவு உண்டால் நோயை உண்டாக்கும். செரிமானம் ஆனப்பின்பு  உண்பதே சிறந்த முறையாகும்.

சங்ககாலத்தில் மருத்துவ முறை 
            
        மருத்துவ அறிவோடு பலர் நல்ல இலக்கியத்தில் அறிஞர்களாகவும் திகழ்ந்துள்ளனர். என்பதற்கு மருத்துவன் தாமோதரனார் என்றும் சான்றாவார். புலவராக திகழ்ந்தமையால் இன்று அவர் பெயர் மட்டும் அறியப்படுகிறது. அன்று எண்ணற்ற மருத்துவர்கள் இருந்திருக்கிறார்கள் “ நீர் வேட்கையும் உணவு பசியும்” கூட பிணி என்கின்றனர்.

“வருந்திய செல்லல் தீர்த்த திறனறி ஒருவன்
மருத்துவக்  கோடலின் கொடிதே”( கலி)
               
       என்ற கலித்தொகை பாடல் அடிகள் இதற்கு சான்றாகும் நோயாளி கேட்டதை கொடுக்காது அவனுக்கு எது நல்லது என்பதை ஆராய்ந்து  மருந்து அளிக்கவேண்டும் என்பார். தமிழர்கள் மருத்துவத்திற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தினர் என்பது எட்டுத்தொகை வழி அறிய முடிகிறது.
சிறுபஞ்சமூலம் மருத்துவ பயன்பாடு
         
      சிறுபஞ்சமூலம் என்பது ஐந்து  மூலிகை கொண்ட ஓர் இயற்கை மருந்து.அதுபோல் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகளை தொகுத்து கூறப்பட்டுள்ளது. அதாவது ஐந்து ஒழுக்க நெறிகள் இடம் பெற்றுள்ளன.

ஐந்து ஒழுக்க நெறி 
 
1.கொலை செய்யாமை
 
2.பொய் கூறாமை
 
3.புலால் உண்ணாமை
 
4.களவு செய்யாமை
 
5. நல்லொழுக்கம்
           
       ஆகிய ஐந்தும் ஒரு மனிதனின் நல் வாழ்விற்கு இன்றியமையாதவை  என்று கூறுகிறது. இவற்றினை கடைபிடித்தால் மனிதன் வாழ்வில் சிறந்த வழியை அடைய முடியும் என்று சிறுபஞ்சமூலம் கூறுகிறது. மனிதன் வாழ்நாளில் உணவு என்பது முக்கியமான அங்கம் அவற்றோடு மட்டுமல்லாமல் எண்ணமும் தூய்மையாக இருக்க வேண்டும் நல் ஒழுக்கங்களையும் பின்பற்ற வேண்டும் என்னும் அறச்  சிந்தனையை வலியுறுத்துகிறது. தரத்தின் வழி வாழ்ந்தால் நற்பயனை அடைய முடியும்.

கொன்றான் கொலைஐய் உடன்பட்டான், கோடாது
கொன்றதனை கொண்டான், கொழிக்கும் கால்
கொன்றதனை அட்டனிவுண்டா அனைவரின்னும்
ஆகுமாயெனகட்டதெரிந்த பாவம் கருது    (சிறுபஞ்சமூலம் 70)
       
       புலால் உணவு தீங்கானது அது பல தீமைகளுக்கு அடிப்படையான தாகும் ஊன் உண்டவன் நல்  மனதினைத் தளர்த்தி உடலை வளர்த்து கூட ஒழுக்கத்திற்கும் புகுத்திவிடும். என்று குறிக்கப்படுகிறது உயிர்கொலைக்கு உடன்படுவதும் ,கொன்ற ஊனை விலைக்கு வாங்குவது ,சமைப்பதும் பரிமாறுவதும் ஆகிய எல்லா நிலையிலும் ஊன் வருவதாக உள்ளது. இந்த வரிகள் உயிர்கொலை செய்வதிலும் கொலைக்கு உடன்படுவதிலும் கொல்லப்பட்ட உயிரின் ஊனை உண்பதிலும் உள்ள பாவத்தை சுட்டுகிறது. கொலைத் தொழிலைசெய்யாமல் இருப்பது நல்லது என்பதையே இந்தப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

முடிவுரை
          
      இத்தலைப்பானது மனிதனின் மனநிலையானது இன்றய காலகட்டத்தில் ஒருநிலையாக இல்லை. மனிதனின் மனநிலையையும் சிந்தனையும் நன்னெறிப்படுத்துவதாக இவை அமைகிறது. மருத்துவம் சார்ந்ததோடு மட்டும்மின்றி மனிதனின் மனதையும் ஒருநினைப்படுத்துவதாக இந்நூல் அமைந்துள்ளது.

துணை நின்ற நூல்கள்
1.தொல்காப்பியம் சொல்லதிகாரம்-திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் திருவையாறு.

2.தொல்காப்பியம் பொருள்- திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் திருவையாறு.

3.  தமிழ் நிகண்டுகள் வரலாற்றுப்பார்வை -டாகடர் பி.மாதையன் ,தஞ்சை தமிழ் பதிப்பகம் தஞ்சாவூர்.

4 திருக்குறள் – தேவிரா உரை -ஸ்ரீ நந்தினி பதிப்பகம் 38/16முதல் தெரு  அண்ணா நகர்மேற்கு விரிவாக்கம் சென்னை .

5. சிறுபஞ்சமூலம்- மூலமும் உறையும் கௌர பதிப்பகம்.  

6. இலக்கியவரலாறு- பேரா டாக்டர் பாக்கியமேரி ,பாரிநிலையம் சென்னை.  

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்  

Iniyavaikatral peer reviewedம.கோகிலா
முனைவர் பட்ட  ஆய்வு மாணவர் (பகுதி நேரம்)

(பதிவு எண் BDU2120632778825)

தேசியக் கல்லூரி (தன்னாட்சி),
(பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது),
திருச்சி.

ஆய்வு நெறியாளர்

முனைவர் நா. மாணிக்கம்

 இணைப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, 

 தேசியக் கல்லூரி (தன்னாட்சி), 

(பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவுப் பெற்றது),

திருச்சி.

 

Tamilvidu Thoothil Ilakkana Seithigal|M.Priyanka

தமிழ்விடு தூதில் இலக்கணச் செய்திகள்
Abstract
            Thoothu Ilakkiyam (Messenger Literature) is a literary genre where a person sends a non-human entity as a messenger to convey one’s thoughts or message to another person. Often, birds, animals, or states of mind are used as messengers in this literary genre. It is also known as “Vaayil Ilakkiyam” or “Sandhu Ilakkiyam”. This genre emerged as a distinct literary form in the 14th century, but its elements can be found in Sangam literature and the literary works of epics. A woman in love with Somesundara Kadavul sends the message in Tamil to express her love and suffering. The heroine’s message highlights the greatness of Tamil language showcasing its excellence in literature and grammar. Tamil literature is renowned for its poetic forms, five types of landscapes, colours, origin, seasons, and grammatical aspects such as phonetics, morphology, and semantics. The heroine mentions the names of all the books of Tamil illakkanam, emphasizing the richness of Tamil language.


“தமிழ்விடு தூதில் இலக்கணச் செய்திகள்”

ஆய்வுச் சுருக்கம்
             தூது இலக்கியம் என்பது ஒருவர் தனது கருத்தை அல்லது செய்தியை இன்னொருவருக்கு அறிவிக்க மனிதரல்லாத அஃறிணை பொருளைத் தூதாக அனுப்பும் ஒரு இலக்கிய வகையாகும். பெரும்பாலும் பறவைகள், விலங்குகள், அல்லது மனதின் நிலைகள் தூது போகும் பொருட்களாக அமைகின்றன. இது “வாயில் இலக்கியம்” அல்லது “சந்து இலக்கியம்” என்றும் அழைக்கப்படுகிறது. 14 நூற்றாண்டில் இது தனித்ததொரு இலக்கிய வகையாக உருவெடுத்தது. ஆனால்  சங்க இலக்கியங்கள் மற்றும் காப்பியங்களிலும் இதன் கூறுகள் காணப்படுகின்றன. சோமசுந்தரக்க கடவுடளிடம் காதல் கொண்ட ஒரு பெண் தன் காதல் துன்பத்தை வெளிபடுத்துவதற்காக தமிழைத் தூதாக விடுகின்றாள். தான் சொல்ல விரும்பும் கருத்தைக் கூறவந்த தலைவி தமிழின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக அமைந்துள்ளது. தமிழ் மொழி, இலக்கியத்திலும், இலக்கணத்திலும், சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பா, ஐம்பால் வகைகள், வண்ணங்கள், மொழியின் பிறப்பு, பருவங்கள், எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம், பொருளிலக்கணம் என்ற இலக்கண வகைகள் மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்களில் உள்ள அனைத்து நூல்களின் பெயர்களையும் கூறி தலைவி தூது விடுகின்றாள்.

முன்னுரை
      தலைவன் அல்லது தலைவி பிரிவுத்துயரைத் தெரிவிக்க, மனதின் துயரங்களைத் தத்தையோ, நெஞ்சத்தையோ தூதாக அனுப்புவதாகும். தமிழ்விடு தூது என்ற நூல் மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தை கூறி தமிழ் மொழிய தூது அனுப்பியதாக அமைந்துள்ளது .இந்த நூல் 268 கண்களைக் கொண்டுள்ளது. இதனை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. கலி வெண்பா யாப்பில் எழுதப்பட்ட இந்நூல் தூது இலக்கிய வகையை சார்ந்தது. மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழித் தமிழ்மொழியாகும். அம்மொழியினைத் தூதாக அனுப்புவது போல தமிழின் சிறப்பினை எடுத்துக்கூறுகின்றது. அந்த வகையில் தமிழ்விடு தூது நூலிலுள்ள இலக்கணச் செய்திகளைக் காண்போம்.
தூது இலக்கிய நூலின் சிறப்பு
🦋 தூது செல்லும் தமிழ் மொழியின் பெருமைகளைக் கூறுதல்.

🦋 பிற பொருட்களைத் தூதாக அனுப்பாமைக்குரிய காரணங்களைத் தலைவி தூதுப் பொருளிடம் கூறுதல்.

🦋 தூது பெறும் தலைவன் ஆகிய சோமசுந்தரக் கடவுளைப் புகழ்ந்து கூறுதல்.

🦋 தலைவி தன் துன்பம் கூறுதல்.

🦋 தலைவி தமிழிடம் தன் தூதுச் செய்தியைக் கூறித் தூது வேண்டுதல்.

என்ற பகுதிகளைக் கொண்டு திகழ்கின்றது.

தமிழின் பத்து குணங்கள்
🎯 இனிமை: தமிழ்மொழி இனிமையானது, தேனீயின் தேனை விட இனிமையானது.

🎯 செம்மை: தமிழ்மொழி செம்மையானது. தவறு இல்லாதது.

🎯வளமை: தமிழ்மொழி வளமானது. பல சொற்களையும், இலக்கணங்களையும் கொண்டது.
🎯 எளிமை: தமிழ்மொழி எளிமையானது. கற்றுக் கொள்ள எளிதானது.

🎯கடிமை: தமிழ்மொழி கடினமானது. ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியது.

🎯 அழகு: தமிழ்மொழி அழகானது. செய்யுள்களில் இனிமையாக ஒலிக்கும்.

🎯நன்மை: தமிழ்மொழி நல்லது. நற்கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடியது.

🎯 தெளிவு: தமிழ்மொழி தெளிவானது. எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது.

🎯 ஆற்றல்: தமிழ்மொழி ஆற்றல் வாய்ந்தது. மக்களை ஈர்க்கக்கூடியது.

🎯 பண்பு: தமிழ்மொழி பண்பு வாய்ந்தது. நல்லொழுக்கங்களை போதிக்கக்கூடியது.
தமிழ் விடு தூது பாடலில், தமிழ்மொழியின் பத்து குணங்களை பாடலாசிரியர் புகழ்ந்து பாடுகிறார்.

பா வகைகள்
        தமிழ் இலக்கியத்தில் “பா” என்பது செய்யுளைக் குறிக்கும் சொல்லாகும். நான்கு வகை பாக்கள் உள்ளன. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மற்றும் வஞ்சிப்பா ஆகும். இதனுடன் மருட்பாவையும் சேர்த்து ஐந்து வகைப்படும்.  இவை ஒவ்வொன்றும் தனித்துவமான ஓசை, சீர், தளை, மற்றும் தாள வகைகளைக் கொண்டிருக்கும். எந்தக் குலத்திலும் பிறக்காமலும் இறக்காமலும் உயிருக்குள் உயிராய் நின்று பிறப்பும் இறப்பும் இல்லாமல்  ஐந்து குலமாக தமிழ் மொழி வளர்ந்தது என்பதை

“தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் – இருநிலத்துப்” (த.வி.தூ: 19)
          பாடல் வழி அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல்

ஆங்கமைசெப் பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண் 
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா – ஓங்கு மனத் (த.வி.தூ. – 30)
         
         என்ற வரியில் தமிழ் மொழியின் குலமாகிய பாவில் செப்பலோசை, அகவலோசை, துள்ளல் ஓசை, தூங்கல் ஓசை ஆகிய பண்கள் பட்டத்து அரசிகளாகவும் விளங்குகின்றது. விரிந்து நிறைந்த நால்வகைப் பாக்களுக்கும், எல்லை வரப்பாக அமையப் பெறுகின்றது. பெருமைமிகு தாழிசை, துறை, விருத்தம், ஆகிய இனங்கள் மடைப்போக்காகவும் இருக்கின்றது.

வண்ணங்கள்
       மை தீட்டிக் கண்ணை அழகுபடுத்துவது போலப் பாட்டுக்கு ஒலி-வண்ணம் (Tonal Colour) கொடுத்துப் பாடலை அழகுபடுத்துவதாகும். சொல் பாடலில் வரும் நடைநலத்தைக் குறிக்கும்.  பலவகை வண்ணங்களால் நம்மை நாமே அழகுப்படுத்துகின்றோம். அதைப்போல செய்யுள்களை அழகுப்படுத்துவது வண்ணங்கள் ஆகும். இதனை வடநூலார் சந்தம் என்று கூறுவார். தொல்காப்பியர் கூறும் செய்யுள் உறுப்புகள் 34-இல் வண்ணமும் ஒன்று.

“மாட்டே வண்ணமொடு யாப்பியல் வகையின்” (தொல். செய்யு. – 310)“வண்ணம் தானே நாலைந்து என்ப” (தொல். செய்யு. – 513)
அவ்வண்ணங்கள்  20 வகைப்படும். அப்படிப்பட்ட வண்ணங்களாக தமிழ் மொழி இருக்கின்றது என்பதை

“ஆக்கிய வண்ணங்க ளைந்தின்மே லுண்டோ நீ
நோக்கிய வண்ணங்க னூறுடையாய் – நாக்குலவும்” (த.வி.தூ: – 74)
என்னும் வரிகள் உணர்த்துகின்றது.

மொழியின் பிறப்பு
        பெருமை நிலைபெற்ற இப்பூவுலகில் புண்ணியம் வாய்ந்த தொப்புளில் காற்றுத் தங்கி வாக்காகச் சூல் கொண்டு நாம் அனைவரும் மொழியைப் பேசுகின்றோம்.

“தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் – தலைதிரும்பி” (த.வி.தூ: 21)
         
      தலை, கழுத்து, மூக்கு, நெஞ்சு, ஆகிய நான்கு இடங்களைச் சார்ந்து, உதடும் நாக்கும் பல்லும் கெடாத மேல்வாயும் ஆகிய கருவிகளால் பிறக்கின்றது.
 
“ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் – மேற்படவே” (த.வி.தூ: 22)
         
       அவ்வாறு தலையில் இருந்து பிறந்தவை, பன்னிரண்டு உயிர் எழுத்துகளாகவும், பதினெட்டு மெய்யெழுத்துகளாகவும் சேர்ந்து முதல் எழுத்துக்கள் முப்பது ஆகும். உயிர்மெய் (216) உயிரளபெடை(7), ஒற்றளபெடை(11). குற்றியலுகரம்(1) குற்றியலிகரம்(1), ஆய்தம்(1), ஐகாரக்குறுக்கம்(1), ஔகாரக் குறுக்கம்(1), மகரக்குறுக்கம்(1) எனச் சார்பெழுத்துகள் இருநூற்று நாற்பதாகும்.

எழுத்திலக்கணம்
“எண்முதலா கப்பகரு மீரா றெனும் பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் – கண்மணியோற்”(த.வி.தூ: 23)
           முதல் சார்பு எழுத்துகளாய்ப் பிறந்தபின் மேலும், எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ச்சி, எனப் பன்னிரண்டு பருவங்களாக மண்ணுலகில் வாழும் கல்வியில் முதன்மை உடையோர் வளர்த்து எழுத்திலக்கணம் தோன்றியது. இதனையே நன்னூலார்

“எண்பெயர் முறைபிறப் புருவ மாத்திரை
முதலீ றிடைநிலை போலி யென்றா
பதம்புணர் பெனப்பன் னிருபாற் றதுவே”    (நன். எழுத்த – 02)
கூறுகின்றார்.

பருவங்கள்
       தமிழர் பண்பாட்டில் முதல் 2 திங்கள் குழந்தையை வெளியில் கொண்டு வர மாட்டார்கள். எனவே, பிள்ளைத்தமிழ், 3-ஆம் திங்கள் முதல் பாமாலைகளால் தொடுக்கப்படும்.

3-ஆம் திங்கள்: காப்பு

5-ஆம் திங்கள்: செங்கீரை

7-ஆம் திங்கள்: தாலாட்டு

9-ஆம் திங்கள்: சப்பாணி

11-ஆம் திங்கள்: முத்தம்

13-ஆம் திங்கள்: வருகை

15-ஆம் திங்கள்: அம்புலி

17-ஆம் திங்கள்: சிற்றில் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
   நீராடல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)

19-ஆம் திங்கள்: சிறுபறை (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
   அம்மானை (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)

21-ஆம் திங்கள்: சிறுதேர் (ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)
   ஊசல் (பெண்பால் பிள்ளைத்தமிழுக்குரியது)

        இப்படி பிறந்த குழந்தையை (தமிழ் மொழி) காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி (சிற்றில் சிறுபறை சிறுதேர்) (கழங்கு, அம்மானை, ஊசல்) என்னும் பத்துப் பருவங்களாக வளர்த்தாய். அத்தகைய சிறப்புடைய உன்னை யாரால் வளர்க்க இயலும்? இதனை

பன்னியொரு பத்துப் பருவமிட்டு நீ வளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ – முன்னே (த.வி.தூ: 26)
         
       என்ற பாடல் மூலம் அறியலாம். பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களில் தான் அமைய வேண்டும் என்பது வரையறை ஆகும். வெண்பாப் பாட்டியல், பன்னிரு பாட்டியல் இலக்கண விளக்கப் பாட்டியல், போன்றபெரும்பாலான பிள்ளைத்தமிழ் நூல்கள் இவ்வாறே பாடப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டாள் பிள்ளைத்தமிழ் 11 பருவங்களையும் தில்லை சிவகாமியம்மைப் பிள்ளைத்தமிழ் 12 பருவங்களையும் கொண்டுள்ளது.

சொல் – திணை வகைகள்
            செய்யுளை அழகு செய்வது சொல்லாகும். அச்சொல்லை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் சொற்கள் நான்கும், உயர்வு பொருந்திய பெயர், வினை, இடை, உரி என்னும் நான்கு சொற்களும், இலக்கிய இலக்கணத்தில் உள்ளன.

“செய்யுட்சொன் னான்குமுயர் செந்தமிழ்ச்சொல் லோர் நான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் மையிலெழுத்” (த.வி.தூ: 28)
     ஐந்திணைகள் நம் வாழ்க்கையோடு பின்னிப்பிணைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் திணைகளைப் பற்றி கூறுகின்றது. கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகிய ஏழு திணைககள் ஆகும்.  புறத்திணைகள் பன்னிரெண்டு. அகத்திணைகளுக்குரிய புறத்திணைகளாக வெட்சி, காஞ்சி, வஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை வாகை ஆகிய ஏழு திணைகளும் குறிப்பிடப்படுகிறது.

யாப்பு – அணி
        யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்பதற்கு கட்டுதல் என்று பொருள். யாப்பிலக்கணம் என்பது செய்யுளின் இலக்கணம் என்றும், பொருள் தரும்.எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை போன்ற உறுப்புக்களை கட்டி அமைப்பதால் இதனை செய்யுள் யாத்தல் என்கிறார்கள். பாட்டு, தூக்கு, தொடர், கவிதை செய்யுள் போன்றவை யாப்பிற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் ஆகும். அணி என்பதற்கு அழகு என்று பொருள்படும். அதாவது ஒரு செய்யுளில் இருக்கும் சொல்லின் அழகு மற்றும் பொருளின் அழகு ஆகியவற்றை எடுத்து கூறுவது அணி இலக்கணம் எனப்படும்.

“தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேரெழின்மாப் பிள்ளையாய்ச் – சாதியிலே” (த.வி.தூ: 29)
         
       குற்றம் இல்லாத எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, ஓசை, இனம் என்னும் யாப்பின் உறுப்புகள் எட்டும், தன்மை, உவமை, உருவகம், தீவகம், பின்வருநிலையணி, முன்ன விலக்கணி, வேற்றுப் பொருள் வைப்பணி, வேற்றுமை, விபாவனை, ஒட்டு, அதிசயம், தற்குறிப்பேற்றம், ஏது, நுட்பம், இலேசம், நிரல் நிறை, ஆர்வமொழி, சுவை, தன்மேம்பாட்டுரை, பரியாயம், சமாகிதம், உதாத்தம், அரிதுணர், அவநுதி, சிலேடை, விசேடம், ஒப்புமைக் கூட்டம், விரோதம், மாறுபடு புகழ்நிலை, புகழாப் புகழ்ச்சி, நிதர்சனம், புணர்நிலை, பரிவர்த்தனம், வாழ்த்து, சங்கிரணம், பாவிகம் என்னும் அணிகள் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு பேரழகு வாய்ந்த மாப்பிள்ளையாக,  இந்த தமிழ்மொழி யாப்பும் அணியுமாம் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

பொருள்கோள்கள்
         செய்யுளில் அமைந்திருக்கும் வாக்கிய அமைப்பை வழக்குத்தமிழ் வாக்கியமாக கொள்வதற்கு பொருள்கோள் என்று பெயர். தானாக வரகூடியப் பொருள்கள், ஏற்றுமதி இறக்குமதி வரியாகிய சுங்கவரியால் வரகூடிய பொருள்கள், பகைவரை வெற்றிக்கொண்டு கவர்ந்த பொருள்கள் என மூன்றும் நாடாளும் மன்னனுக்குக் கிடைக்கக்கூடிய பொருட்கள் ஆகும். செய்யுளில் இடம்பெறும் சொற்களை அமைந்துள்ளவாறே பொருள் கொண்டால் சரியான பொருள் கிடைக்காது. யாப்பு முதலிய காரணங்களுக்காகச் சொற்களை முன்பின்னாக மாற்றி, பல நிலைகளில் சொற்களைச் சேர்த்தும், பிரித்தும் பொருள் கொண்டால் அச்செய்யுளின் பொருள் விளங்கும். இவ்வாறு செய்யுளில் காணப்படும் தொடர்களைப் பொருள் கொள்ளும் முறையை விளக்குவது பொருள்கோள் ஆகும். பொருள்கோள் எட்டு வகைப்படும். இதை நன்னூலார்

“யாற்றுநீர் மொழிமாற்று நிரனிறை விற்பூண்
தாப்பிசை அளைமறி பாப்புக் கொண்டுகூட்டு
அடிமறி மாற்றெனப் பொருள்கோள் எட்டே” (நன். சொல்: 411)
கூறுகின்றார். அவை,

1.ஆற்றுநீர்ப் பொருள்கோள்

2.மொழிமாற்றுப் பொருள்கோள் (சுண்ணம் –தொல்காப்பியர், பாசி நீக்கம்-மயிலை நாதர்)

3.நிரனிறைப் பொருள்கோள்

4.விற்பூட்டு பொருள்கோள் (பூட்டுவிற் பொருள்கோள்)

5.தாப்பிசைப் பொருள்கோள்

6.அளைமறிப் பாப்புப் பொருள்கோள்

7.கொண்டுகூட்டுப் பொருள்கோள்

8.அடிமறி மாற்றுப் பொருள்கோள்
என்பனவாகும். இதனையே

வாங்கு பொருள்கோள வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே –பாங்குபெற  (த.வி.தூ: – 77)
    என்ற வரிகள் மூலம் தமிழ்மொழியோ உயர்ந்த பொருள் கோள்களக பெற்றிருக்கின்றது என்பதை அறியமுடிகிறது.

ஐம்பால் – சீர்
      மக்களை உயர்திணை என்றும் மக்கள் அல்லாத ஏனைய உயிர்களை அஃறிணை என்றும் அவற்றுள் ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் என இருதிணைக்கும் ஐம்பால்களையும் தொல்காப்பியர் கூறுவார். இதனையே

“இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்”; (நன். சொல்: 259-2)
         
என்று நன்னூலார் கூறியுள்ளார். நேர் நிரை என்னும் இருவகை அசைகளும் தனித்தோ தொடர்ந்தோ அளவுற அமைவது சீராகும். இச்சீர் இசைக்கு உதவுகின்றது. சீர் என்பதற்கு ஓசை என்று பொருள் அசைகள் பொருந்தி ஓசை புலப்பட நிற்பதால் சீர் என்பது காரணப்பெயராகும். அப்படிப்பட்ட சீர்களுக்குரிய வாய்ப்பாட்டினையும்

“தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
வாமாண் கலையல்குன் மாதே வகுத்தவஞ் சிக்கரிச்சீர்
நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே”(யாப்பரு: 7)
         
       கூறியுள்ளார். இதனையே தமிழ்விடுதூது அழகு பொருந்திய அறம், பொருள் இன்பம் என்னும் மூன்று பால்களைக் கொண்டிருப்பதோடு அன்றி ஆண்பால் பெண்பால் பலர்பால் ஒன்றன்பால் பலவின்பால் என்னும் ஐந்து பால்களையும் நாள், மலர்,  தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்,  தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்,  தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி, கருவிளங்கனி,  தேமாந்தண்ணிழல், புளிமாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்,  தேமா நறுநிழல், புளிமா நறுநிழல், கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல், தேமாந்தண்பூ, புளிமாந்தண்பூ, கருவிளந்தண்பூ, கூவிளந்தண்பூ, தேமாநறும்பூ, புளிமாநறும்பூ, கருவிளநறும்பூ, கூவிளந்நறும்பூ, என்னும் முப்பது சீர்களை உடைய மிக பெரிய செல்வர்களையும் தமிழ் மொழி பெற்றெடுத்தது என்பதை

ஓர்முப்பா லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் – சேரமான் (த.வி.தூ: – 78)
என்ற பாடல் வரிகள் உணர்த்துகின்றது.

பத்து பொருத்தங்கள்
          காதலன் காதலியை முதன்முதலில் பார்ப்பது காட்சியாகும். அவ்வாறு தலைவன் தலைவியை பார்க்கும்போது பத்து வகை பொருத்தங்களை உடையவராக இருத்தல் வேண்டும் சங்க இலக்கியத்தில் பத்து பொருத்தங்கள் என்பது 1.ஒத்த குலத்தில் பிறத்தல் 2.அக்குலத்திலும் நற்குடியராய் இருத்தல் 3.ஆளும் தன்மை 4.ஒத்த வயது 5.தோற்றப்பொலிவு 6.அன்பு 7.மன அடக்கம் 8.அருளுடைமை 9.நுண்ணறிவு 10.செல்வம் என்பனவாகும். தற்பொழுதும் திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்க்கின்றனர். இலக்கணமுடைய பாடலில் மங்கலம். சொல் எழுத்து தானம் பால் உண்டி வருணம் நாள் கதி கணம் என்னும் பத்துப் பொருத்தங்கள் உள்ளது. தமிழ் மொழி இத்தகைய இலக்கண இலக்கிய பொருத்தங்களைப் பெற்றிருக்கின்றது என்பதை  

“பொருத்தமொரு பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல விதியோ – இருட்குவையை (த.வி.தூ: – 83)
என்னும் அடிகள் வழி அறியலாம்.

தொடை
        தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புகள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுவதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.

“மெய்பெறு மரபின் தொடை வகை தாமே 
ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ் ஞ}ற்றொடு 
தொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று 
ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே”  (தொல். செய்யு: 1358)
      என்று தொல்காப்பியர் கூறுகின்றார். நீ தூதாகச் சென்றாலும் முன்னோர்கள் படைத்த பத்தொன்பதாயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்று ஒன்று என்னும் எண்ணிக்கையிலான தொடைகளுக்கு தமிழ் மொழி உரிமை பெற்றுள்ளது என்பதை

பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற
றெண்ணியதொண் ணூற்றொன் றெனுந்தொடையாய (த.வி.தூ: – 113)
என்ற பாடல் வரிகள் உணர்த்துக்கின்றது.
பொருள் இலக்கணம்
     வாழ்விற்கு பொருள் தரும் கூறுகளை விளக்கிக் காட்டுவது பொருள் இலக்கணமாகும். பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே உள்ளது. மற்ற மொழிகளில் பொருள் இலக்கணம் இடம் பெறவில்லை. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்கும் என்று எடுத்துக் கூறும் பொருள் இலக்கணம் தமிழுக்குத் தனிச் சிறப்பு வாய்ந்ததாகும். பொருள் இலக்கணம் அகப்பொருள் புறப்பொருள் என்று இருவகைப்படும். அகப்பொருள் என்பது ஓர் ஆணுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையில் ஏற்படும் காதல் உணர்ச்சியைப் பற்றிக்கூறுவதாகும். புறப்பொருள் என்பது வீரம் போர் வெற்றி கொடை நிலையாமை முதலிய புறப்பொருள்களைக் கூறுவதாகும்.

நாத்திரமா மேவுபொரு ணன்றா வறுபதெனும்
சூத்திரமாப் பாடியரு டோற்றமும் – மாத்திரமோ (த.வி.தூ: – 118)
       பாட்டு இலக்கணத்தில் நாவால் உறுதியாகக் கூறப்படும் பொருள் இலக்கணத்தை அறுபது நூற் பாக்களாய் பாடித்தந்த காட்சியை பார்த்தால் தமிழ் மொழிக்கு அழகு தருவது போல உள்ளது.

முடிவுரை
      தலைவன் தலைவியை களவு மேற்கொள்ளும் போது சில இடையுறுகள் வரும். அப்போது தலைவன் தலைவியைக் காணமல் இருப்பான். அந்த நேரத்தில் தலைவி தலைவனுக்கு தூது அனுப்புவாள். இங்கு தூதாக தமிழைத் தூது விடுகின்றாள். நமக்கு ஒரு செயல் நடக்க வேண்டுமென்றால் நாம் அதன் பெருமையைப் புகழ்ந்து பேசுவோம். இங்கு தலைவி தமிழைத் தூது விடுவதற்காக அதன் பெருமையைப் பேசுகின்றாள். தமிழ் இலக்கியத்திலும் இலக்கணத்திலும் சிறப்புற்று இருக்கின்றது. “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப்போல் இனிதாவது எங்கு காணேம்” என்று பாரதியார் கூறியது மிகையாகாது.

பார்வை நூல்கள்
1.முருகேசன். கதி. முனைவர், (உரையாசிரியர்) தமிழ்விடுதூது மூலமும் உரையும், சாரதா பதிப்பகம், சென்னை – 14. பதினாறாம் பதிப்பு – 2023

2.இளம்பூரணர் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை – 5. மூன்றாம் பதிப்பு – 2006

3.திருஞானசம்பந்தம். சு முனைவர், யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும், கதிர் பதிப்பகம், திருவையாறு. முதல் பதிப்பு – 2007.

4.இளவரசு. சோம, நன்னூல் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108. நான்காம் பதிப்பகம் – 2009.

5.இளவரசு. சோம, நன்னூல் சொல்லதிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 108. இரண்டாம் பதிப்பகம் – 2007.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

மோ. பிரியங்கா,

Iniyavaikatral peer reviewedமுதுகலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு,

தமிழ்த்துறை,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,

திருவாரூர்.
நெறியாளர்
முனைவர் கி. சர்மிளா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.

 

மனநலம் பிறழ்வு நிலை – உளவியல் வகைகள் – நூல் திறனாய்வு| முனைவர் வீ. பூமிநாதன்

மனநலம் பிறழ்வு நிலை - உளவியல் வகைகள் - நூல் திறனாய்வு - முனைவர் வீ. பூமிநாதன்
மனிதர்களின் மனம் அளந்தறிய முடியாத ஆழம் கொண்டதாகவும், அவிழ்க்க முடியாத  சிக்கல் நிறைந்த வலையாகவும் அமைகிறது. மனத்தினை அடக்கி கட்டுக்குள் வாழ்வதென்பது சமகாலத்தில்  ஏட்டளவில் வாசிக்கும் ஒன்றாகவே உள்ளது. பெரும்பாலும் மனம் நிறைக்க கூடாத எதிர்மறை எண்ணங்களைச் சேமிக்கும் மாசுக்கிடங்காகவே உள்ளது.  எதிர்மறை சிந்தனைகளை ஊக்குவிக்கும் போதை போன்ற அசுர சக்திகள் அளவுகடந்து வளர்ந்துள்ளதையும் அறிய முடிகிறது. எனவே சமகால மனிதர்களை மனரீதியாக வளப்படுத்துதல் என்பது மிகப்பெரிய சாதனையாகவே உள்ளது.  கொரானா போன்ற பெரு ஊழிக்குப் பிறகு இச்சிக்கல் மேலும் தீவிரமடைந்து சராசரிகளை மிகவும் அச்சுறுத்துகிறது.
முனைவர் த. கண்ணன்இயல்பான வாழ்வு என்பது அருகிவரும் தற்காலச் சூழலில் மனித மனங்களை இயல்புக்கு மடைமாற்றம் செய்ய உளவியல் வல்லுநர்கள் பெரிதும்  உழைக்க வேண்டியுள்ளது.  ஆலோசனைகளும் நூல்களும் சிகிச்சை முறைகளும் பெரிதும் அவசியமாகிறது. அவ்வகையில் “மனநலம் – பிறழ்வு நிலை உளவியல் வகைகள்” என்னும் தலைப்பில் முனைவர் த. கண்ணன் அவர்கள் எழுதியுள்ள நூல் பிறழ்வுநிலையின் தன்மையை அறிய மிக அவசியமான ஒன்றாக உள்ளது. சென்னை சுடர் பதிப்பகத்தில் பதிக்கப்பட்டுள்ள இந்நூல் 231 பக்கங்களை உடையது. பிறழ்வு நிலை உளவியலின் முக்கிய வகையான மனச்சிதைவு, பாலியல் கோளாறுகள் மற்றும் ஆளுமைக் கோளாறுகள் ஆகியவற்றை மிகத் தெளிவாக விளக்குகிறது. மேலும் முதல் இயலில் பிறழ்வு நிலை உளவியல் குறித்த அடிப்படைக் கருத்துகளை மிகத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
பிறழ்வு நிலை உளவியல்
     முதல் இயலாக அமைந்துள்ள பிறழ்வு நிலை உளவியலின் கூறுகளுக்கான விளக்கங்கள், உளவியலின் முன்னோடிகள் கூறிய கருத்துகள் ஆகியவற்றை விளக்கி, அப்பிறழ்வு நிலை உளவியல் என்றால் என்ன என்பதனைப் பல்வேறு வல்லுநர்களின் கருத்துக்களைக் கொண்டு விளக்கியுள்ளார். இயல்பான மனிதர்கள் என்பவர்கள் யார்? பிறழ்வு நிலை மனிதர்கள் யார்? என்பதை பல்வேறு அறிஞர்களின் ஆய்வறிக்கை அல்லது கருத்துக்களை மூலமாகக் கொண்டு நிறுவியுள்ளமை மிகச் சிறப்பான ஒன்றாகும். மேலும் பிறழ்வு நிலைக்கான வரைபடங்கள் மற்றும் வகைகள் ஆகியவை மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. பிறழ்வு நிலைக்கு பண்டைய காலச் சிகிச்சை முறைகள் ஐரோப்பிய மேலை நாடுகளில் மருத்துவ முறை ஆகியவற்றையும் ஆராய்ந்து கூறியுள்ளார்.
        பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் கூறியுள்ள பிறழ்வு நிலை குறித்த கருத்துகளையும் மிகச்சிறந்த அறிவியல் அறிஞரான ஹெலன் கூறிய கருத்துக்களையும் மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். இடைக்கால ஐரோப்பிய நாடுகளில் பிறழ்வுநிலை நபர்களைப் பேய் பிடித்தவர்கள் என்று கூறி  அணுகியது முதல் பல்வேறு வரலாற்றுச் செய்திகளையும் இவ்வியலில் நிறுவியுள்ளார். பிரெஞ்சு மருத்துவர் பினல் பிறழ்வுநிலை உளவியலில் ஏற்படுத்திய மாற்றங்களையும் பெஞ்சமின் ரஷ் மற்றும் டிக்ஸ் ஆகியோர் கூறிய மருத்துவச் சிக்கல்களும் அதற்கான வழிமுறைகளையும் விளக்கியுள்ளார். மேலும்  கிராப்ளினின் விளக்கங்களையும் எடுத்துக் கூறியுள்ளார்.
       சிக்மன் பிராய்ட் விளகிய உளவியல் மற்றும் கனவுப் பகுப்பாய்வுகளை அறிமுகப்படுத்தி, அவற்றிலிருந்து மாறுபட்ட அல்லது வளர்ந்த உளவியல் கூறுகளையும் எடுத்துரைத்துள்ளார். மேலும் மனிதர்களின் நடத்தை முன்மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு பாவ்லோ மற்றும் ஸ்கின்னரின் நடத்தை முறைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து விளக்கியுள்ளார். பெக் தியரி கொண்டும் உளவியலில் அசைவுகளை மிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும்  பிறழ்வுநிலை உளவியலின் வகைகளை அமெரிக்க உள மருத்துவ கழகம் வெளியிட்டுள்ள கையேட்டின் அடிப்படையில்  சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
மனச்சிதைவு (Schizophrenia)
        இன்றைய சூழலில் மனச்சிதைவு நோய்க்கு உட்படாதவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர் எனலாம். அதற்கு  மனச்சிதைவு ஏன் ஏற்படுகிறது? அதனுடைய பின்புலம் என்ன என்பவனவற்றை ஆராயும் வகையில் மனச்சிதைவு என்ற இயல் அமைக்கப்பட்டுள்ளது.  மனச்சிதைகளுக்கான விளக்கங்கள், அதனுடைய வரலாறு ஆகியவற்றையும் அறிஞர்களின் கருத்துக்களோடு மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். யூஜன் புளூலர் என்ற அறிஞரின் கருத்து மிக விரைவாக ஆராயப்பட்டுள்ளது.   மனச்சிதைவுகளுக்கான நேர்மறை அறிகுறிகள் எதிர்மறை அறிகுறிகள் என்று பிரித்து நேர்மறை அறிகுறிகளில்
1.பிறழ் நம்பிக்கை
2.புலன்களின் பேதலிப்பு
3.பேச்சில் தெளிவும் கோர்வையும் இல்லாமை
4.மாறுபட்ட நடத்தை
5.உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமை
          போன்ற கூறுகளையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். மேலும் எதிர்மறை அறிகுறிகளில்
1.இயல்பாக வெளிப்படுத்தப்படும் உணர்வில் குறைபாடு
2.சமூக பங்கேற்பில் பின்னடைவு
3.பேச்சில் முரண்பாடு
4.உறவுகளில் ஆவல் குறைவு
          போன்ற கூறுகளை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். பிறழ்வு நம்பிக்கை என்ற பகுதியில் ஒரு மனிதனுக்கு எவ்வாறு பிறழ்வு ஏற்படுகிறது என்பது குறித்த  உளவியலாளர்கள் கண்டறிந்த பரிசோதனை முறைகளைக் கொண்டு விளக்குகிறார். அப்பிறழ்வு நம்பிக்கையின் வகைகள் ஆன
🎯 நம்ப முடியாத பிறழ் நம்பிக்கை
🎯 மிகைப்படுத்தப்பட்ட தவறான மனப்பான்மை
          போன்றவற்றையும், மருத்தவர்கள் எடுத்தியம்பிய சான்றாதாரங்களோடு விளக்கியுள்ளார். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையக்கூடிய இன்னல்கள் சமூகத்தில் அவர்கள் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் ஆகியவற்றையும் மிகத் தெளிவாக எழுதியுள்ளார். புலன்களின் பேதலிப்பில் பிறழ்வு நிலையில் இருப்பவர்கள் அடையும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வகைகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ளார். மனச்சிதைவின் முக்கிய வகையான புலன்களின் பேதலிப்பு ஏற்படுவதால் மனிதர்கள் பல்வேறு வகையில் தன்னுடைய நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர். அவ்வாறு நடத்தைகளை மாற்றிக் கொள்வதால் ஏற்படக்கூடிய பல்வேறு வகையான விளைவுகள் குடும்பம், தனிநபர் வாழ்வு மற்றும் சமூக வாழ்வு ஆகியவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்று விளக்கியுள்ளார். மேலும்  பிறழ்வு நிலைகளிலிருந்து மருத்துவர்கள் கண்டறிந்த முடிவுகளையும் (மருத்துவர்களின் நோயாளிக் குறிப்புகளைக் கொண்டு – (casestudy) கொண்டு மிகத் தெளிவாக எழுதி உள்ளார்.  மனச்சிதைவு நோய் எவ்வாறு ஏற்படுகிறது அவற்றிற்கான சிகிச்சை முறைகள் என்ன மனச்சிதைவை எவ்வாறு தவிர்க்கலாம் அல்லது எவ்வாறு குறைக்கலாம் என்பதை பல்வேறு உளமருத்துவர்களின் அறிவுரைகளைக் கொண்டு மிக நேர்த்தியாக எல்லாச் சூழலில் வாழும் மனிதர்களுக்கும் பொருந்தும் வண்ணம் எடுத்து இயம்பி உள்ளார்.
பாலியல் கோளாறுகள்
         மனிதர்களின் எல்லா பிறழ்வு நிலைக்கும் அடிப்படையாக அமைவது பாலியல் கோளாறுகளே ஆகும் என்ற கருத்து மிக முக்கியமானதாகும். மனிதர்கள் பாலியலில் எவ்வாறு சிக்குண்டு மனச்சிதைவை அடைகின்றனர் என்பவற்றை மிகத் தெளிவாக இவ்வியலில் எடுத்து இயங்குகிறார். பாலியல் கோளாறுகளின் பல்வேறு வகைகளையும் அவற்றிற்கு அறிஞர்கள் கூறும் கருத்துக்களையும் இப்பிறழ்வில் சிக்குண்டுள்ள மனிதர்களை மீட்கும் நிலைகளையும் விளக்கியுள்ளார். மேலும் பாலியல் கோளாறுகளில் அகப்பட்டுள்ள மனிதர்கள் தன்னுடைய நடத்தைகளை எவ்வாறு மாற்றிக் கொள்வர் என்றும் அதனால் அடையும் இன்னல்கள் குறித்தும் மிகச் சிறப்பாக கூறியுள்ளார். பாலியல் கோளாறில் உச்சமான sadism குறித்தும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். 
       பாலியலில் பிறழ்வு ஏற்படுவதற்கான காரணம் அவர்கள் ஏன் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார். மேலும் இப்பிறழ்வுக்குள் உட்பட கூடியவர்கள் தன்னுடைய நடத்தையில் எவ்வாறாக அமைத்துக் கொள்கிறார்கள் ஏன் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை உதாரணங்களுடனும் மேலைநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டும் விளக்கியுள்ளார். மேலும் பாலியலில் தவறான போக்குகள் குறித்தும் அவற்றிலிருந்து குழந்தைகள் மற்ற பெண்கள் ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்தும் மிக சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். பாலியலில் பிறழ்வு ஏற்படுத்துவதற்கான உடலியல் குறைபாடுகள் என்னென்ன அவற்றை ஈடு செய்வதற்காக அவர்கள் எவ்வகையில் இயல்பை மீறுகிறார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். மேலும் உடலில் கூறுகளை சரி செய்வதற்கு மனரீதியாக அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளார்.
ஆளுமைக் கோளாறு
        ஆளுமை என்றால் என்ன அச்சொல்லின் உடைய வேர்ச்சொல் அவற்றின் விளக்கம் ஆளுமை பற்றிய அறிஞர்கள் கருத்து ஆளுமையினுடைய காரணிகள் ஆளுமைக் கோளாறு எவ்வாறு ஏற்படுகிறது என்ற அடிப்படை கருத்துகளை கூறியுள்ளார்.
ஆளுமைக் கோளாறில் வகைகளான,
🎯வித்தியாசமாக காணப்படும் ஆளுமைக் கோளாறு
🎯விபரீதமாக தென்படும் ஆளுமைக் கோளாறுகள்
🎯வினோதமாக அச்சம் தரக்கூடியதாகவும் செயல்பாடுகள் அமைந்த ஆளுமைக் கோளாறுகள்
          போன்றவற்றை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார்.  சந்தேகத்தினால் பல்வேறு ஆளுமைக் கோளாறுகள் ஏற்படுகிறது என்பதை கிராப்ளின் என்ற அறிவியல் அறிஞரின் துணையோடு மிகச் சிறப்பான மேலைநாட்டு உதாரணங்களையும் கொண்டு விளக்கியுள்ளார். மனிதர்கள் மனிதர்களிடமிருந்து தன்னை ஒடுக்கி கொள்வதால் ஏற்படக்கூடிய ஆளுமைக் கோளாறுகளையும், மனிதன் தனிமைப்படுத்தப்படுவதால் ஏற்படக்கூடிய ஆளுமை கோளாறுகளையும் அவ்வாறு ஆளுமையில் பாதிப்பு அடைந்த மனிதர்கள் செயல்படக்கூடிய நடத்தைகளின் மாற்றங்களையும் மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். ஆளுமைக் கோளாறு அடைந்தவர்களுடைய மனம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்து கூறி, அவர்களை குறித்த படைப்புகள் எவ்வாறு வெளிவந்துள்ளன என்பதனையும் விளக்கியுள்ளார். விபரீதமாக தென்படும் ஆளுமை கோளாறில்,
🎯நாடகத் தன்மை உள்ள ஆளுமைக் கோளாறு
🎯மிகைப்படுத்தும் தன்மை உள்ள ஆளுமைக் கோளாறு
🎯சமூக விரோத ஆளுமைக் கோளாறு
🎯தடுமாற்றம் நிறைந்த ஆளுமைக் கோளாறு
         எனப் பல்வேறு வகையான ஆளுமைக் கோளாறுகளை மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க அவர்களின் நோயாளிகள் பற்றிய குறிப்புகளோடு நமக்கு விளக்கியுள்ளார். சமூக விரோத ஆளுமைக் கோளாறுகளில் ஒருவன் ஆளுமைக் கோளாறால் பாதிக்கப்பட்டால் சமூகத்தில் எவ்வகையான விளைவுகள் ஏற்படுகின்றன, அதனால் இயல்பு வாழ்க்கை எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்பவற்றை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். மேலும் அளுமைக் கோளாறில் புதிய பல்வேறு வகையான பிறழ்வுகள் உள்ளன. அவை,
🎯விலகி இருக்கும் தன்மை
🎯துல்லியமான மற்றும் கட்டாய ஆளுமைக் கோளாறு
         போன்றவற்றையும் விலக்கியுள்ளார். மேலும் ஆளுமைக் கோளாறு ஏற்பட்டால் சமூகம் எவ்வாறு எல்லாம் சீரழியும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். சமகாலத்தில் ஏற்பட்டுள்ள மனிதர்களின் மன மாற்றங்கள் பல்வேறு தொடர்புகளில் அடிப்படையில் அமைகின்றன. இப்பிறழ்வுகள் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை நமக்கு அடையாளம் காட்ட முற்படும் இந்த நூல் வாசிப்பில் சற்று ஏறக்குறைய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாகவே அமைகிறது. மனிதர்கள் எவ்வகையில் எல்லாம் பிறழ்வு நிலையை அடைகிறார்கள், அவ்வாறு அடையும் மனிதர்கள் தன்னுடைய நடத்தைகளை எவ்வாறு மாற்றிக் கொள்கிறார்கள் அவ்வாறு அவர்கள் மாற்றிக்கொள்வதால் நம் சமூகக் கட்டமைப்பு எவ்வாறு சிதைகிறது, உறவுகள் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன மரபுகள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன என்பவற்றையெல்லாம் மிகத் தெளிவாக விளக்கும் இந்த நூல் சமகால மக்களின் வாழ்வை சரிப்படுத்தும் அல்லது வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆகச்சிறந்த அருந்துணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.
          இந்நூலின் சிறப்பு கருதி மத்திய அரசின் மொழிகள் நிறுவனம் மைசூர் இதன் மென்படியினை பதிவேற்றம் செய்து சிறப்பித்துள்ளது.  “மனநலம் – பிறழ்வு நிலை உளவியல் வகைகள்   என்ற இணைப்பில் இந்நூலினை காண முடியும். மேலும் இந்நூல் குறித்து பல்வேறு வலைதளங்களிலும் கருத்தரங்கத்திலும் உரையாடல்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
முனைவர் வீ. பூமிநாதன்நூல் திறனாய்வின் ஆசிரியர்
முனைவர் வீ. பூமிநாதன்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி),
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் – 635601.

 

Elements of the Lifestyle of Petty Kings in the Ruling Class during the Sangam Period|Dr.D.Dhinesh

Abstract
               
           In Sangam Tamil Nadu there were small land kings next  to Vendras and Velirs. These petty kings were under the rule of the Vendras as their tax payers, and they themselves participated in politics and served as commanders of the Vendras in times of war. In this way, this article examines the places of small land owners and their living conditions in the ruling division of the Sangam period.


“சங்க கால ஆளும் பிரிவில் குறுநில மன்னர்களின்வாழ்வியல் கூறுகள்”

முன்னுரை
         
          சங்ககால தமிழகத்தில் வேந்தர், வேளிர்களை அடுத்து நிலையில் குறுநில மன்னர்கள் இருந்தனர். இக்குறுநில மன்னர்கள் வேந்தர்கள் ஆட்சிக்கு உட்பட்டு அவர்களுக்கு வரி செலுத்துபவராகவும், அவர்கள் அரசியலில் தாமும் பங்கேற்று, போர்காலங்களில் வேந்தர்களுக்கு படைத்தலைவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அவ்வகையில் சங்க கால ஆளும் பிரிவில் குறுநில மண்னர்கள் பெற்ற இடங்கள் மற்றும் அவர்களின் வாழ்வியல் சூழல்களைப் பற்றி இக்கட்டுரை ஆராய இருக்கின்றது.

சங்க இலக்கியமும் குறுநில மன்னர்களின் மாட்சியும்
       ’குறுநில மன்னர்’ என்னும் தொடர்மொழியை நம் முன்னோர்கள் மிக விரிவான பொருளில் பயன்படுத்தியுள்ளனர். எனவே பல்வேறு இனக்குழுக்கள், சிற்றரசர்கள், வள்ளல்கள்,  வேளிர்கள், படைத்தலைவர்கள் முதலியோரைக் குறிப்பதற்கு வசதியான சுட்டுப்பொருளாக, இங்கு இத்தொடர்மொழி பயன்படுத்தப்படுகின்றது,  வரலாற்றுக் காலம் முதலே தமிழகம் சேர,  சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்மூவேந்தர்களோடு பல குறுநில மன்னர்களும் இனக் குழுக்களின் தலைமக்களாக விளங்கினர்.   ஆற்றுப்படை இலக்கியங்கள் இவர்களின் கொடைத்திறம் குறித்துச் சான்று பகர்கின்றன.

     இனக்குழுச் சமூகத்தின் அடியொற்றி வந்தவர்களே இக்குறுநில மன்னர்களாவர். சீறூர் மன்னர்களைப் போலவே வீரத்திலும் கொடைச்சிறப்பிலும் மேலோங்கிய இவர்கள் தொடர்ச்சியாக, சீறூர் மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின் மேலெழுந்தவர்கள் ஆவர்.   இவர்கள் சீறூர் மன்னர்களைப்போல் அல்லாமல், படை வலிமையும், அரண் அமைப்புகளையும், சிறு எயில்களும் பெற்றுக் காணப்பட்டனர்.   புலவர்களிடமும், கலைஞர்களிடமும் நெருங்கியத் தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களுக்குக் கிடைத்த புகழையும் எழுச்சியையும் கண்டு வேந்தர்கள் ஐயம் கொண்டு,  வேந்தர்களின் நாடு கொள்ளும் ஆசையில் குறுநில மன்னர்கள் பலியாயினர்.   

          சங்ககாலச் சிற்றரசுகளின் தோற்றம் குறித்து அறிஞர்களிடையே பல  கருத்துவேற்றுமை இருந்து வருகின்றன.   எண்ணற்ற பழங்குடிச் சமூகங்கள் பேராற்றல் வாய்ந்த தலைவர்கள் தங்களின் கீழும், பலவகைப்பட்ட நிலக்கிழார்களின் கீழும் வாழ்ந்துவந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.   அதனை,

“ஆவியர் பெருமகன் பேகன்”  (சிறு.  86)
“குறவர் பெருமகன் ஏறை”     (புறம்.  157:7)
“கள்வர் பெருமகன் புல்லி”    (அகம்.  342:6)
“மழவர் பெருமகன் மாவள் ஓரி” (நற்.  52:9)
“மழவர் பெருமகன் அஞ்சி”    (புறம்.  88:3)
      மேற்கண்ட சங்ககாலக் குறுநில மன்னர்கள் முறையே அவர்களுடைய இனத்தவரின் அல்லது இனக்குழுவின் தலைவர்களாக (பெருமகன்) விளங்கியதை அறியமுடிகின்றது.கலைகளைப் போற்றுவதில் இவர்கள் சிறந்து விளங்கினர்.

செல்வத்துப் பயனே ஈதல் 
        தகுதியுடை கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், வாழப்பிறந்த மனிதன் வறுமையால்  வாட்டமுற்று உயிர்விடக்கூடாது என்ற அருள் நெஞ்சமும் கொண்டவர்களாக இவர்கள் திகழ்ந்தனர்.  சங்க காலத்தில் வாழ்ந்த குறுநில மன்னர்கள்  ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற கொள்கையுடன் வாழ்ந்துவந்தனர்.  இவர்கள் புகழுச்சிக்காக எதனையும் செய்வதில்லை “இத்தகைய அருள் உள்ளத்தைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு வரலாற்று அறிஞர்,  “பாரி, முல்லைக்கொடிக்கு தேர்க் கொடுத்தது இன்றைய காலக்கட்ட மக்களுக்கு பொருளற்றதாகத் தோன்றும்”1 என்று தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.  இங்கு ஒரு உண்மையை நாம் புரிந்துகொள்ளல் வேண்டும்.
     உயிர்களை மதித்து போற்றுதல் வேண்டும் என்ற உயரிய கொள்கையைச் சங்க கால மன்னர்கள் கடைப்பிடித்து வந்தமையால் பாரி தன் தேரினை முல்லைக்கொடிக்கு கொடை நல்கினான் எனப் புரிந்துகொள்ளல் வேண்டும்.   “காட்டில் கொழுகொம்பு இன்றிக் காற்றால் அலைப்புண்டு அல்லல்பட்ட முல்லைக் கொடிக்கு – வாயால் தன் துன்பத்தை எடுத்துரைக்க இயலாத முல்லைக் கொடிக்கு – புலவர்களையும்  பாணர்களையும் போல வாய்திறந்து பாட இயலாத முல்லைக்கொடிக்கு – தன்னுடைய மணியொலிக்கும் நெடுந்தேரினைக் கொழுக்கொம்பாகக் கொண்டு துன்பம் தவிர்க்குமாறு பாரி கொடுத்த செயல் எவ்வாறு பொருளற்ற செயலாகும்”2  என்ற கறுத்து இங்கு ஒப்புநோக்கத்தக்கது.  

குறுநில மன்னர்களின் விருந்தோம்பும் பண்பு
         குறுநில மன்னர்கள் மக்களுடனும் கலைஞர்களுடனும் நெருங்கிப் பழகினர்.  இவர்கள் தன்னை நாடி வருவோர்க்கு வரையாது கொடுக்கும் பண்பினர்கள் ஆவர்.  கண்டீரக்கோப் பெருநள்ளி தனது இனக்குழுச் சமூக வாழ்வின் வழக்கப்படி வல்வில் வேடனாகக் காடுகளில் தொடர்ந்து மான் வேட்டையாடினான்.   எதிர்வந்த இரவலர்களின் பசி தீர்க்க,  தீக்கடைக் கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சி விரைவாகச் சுட்டுத் தந்தான்.   (புறம்.150:5-14)  குட நாட்டு எயினர் தந்த மான் தசையைச் சமைக்கப்பட்ட குடை போன்ற பொட்டலங்களில் வரையாது கொடுத்தவன் மல்லிகிழான் காரியாதி என்னும் மலை நாட்டு சிற்றரசன் ஆவான்.

“…………………….குட நாட்டு
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ்ஞிணம் பெருத்த பசி வெள் அமலை
வருநர்க்கு வரையாது தருவனார் சொரிய
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும்புலர் வைகறைச் சீர் சாலாதே” (புறம். 177: 12-17)
         
        மலைநாட்டு பெருமன்னன் அதியமான் தனக்குள்ள உணவை, இல்லாதாருக்குப் பகிர்ந்துண்ணும் இனக்குழுப் பண்பு கொண்டவன் என்பதை,

…………………………  என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம் கோ மான்”             (புறம்.  95: 5-9)
         
           என்னும் பாடலடிகள் விளக்குகின்றன. இத்தகைய “பகிர்ந்துண்ணும் குழுப்பண்பு இனக்குழுச் சமூகப் பண்பாட்டிற்கு உரியதாகும்.   இது வேந்தரிடம் வற்றிவிட்டது;  ஆயின் மலை,  காட்டுப் பகுதி சீறூர் மன்னர்களிடம் இன்றும் காணப்படுகிறது”3  என்று குறிப்பிடுகின்றார் இராஜ்கெளதமன்.  பாரி பாணர்க்கு உன்கலம் நிறைய கள்ளை நிரப்பிக் குடிக்குமாறு விருந்தோம்பல் செய்தான். (புறம்.115:1-4) பாரியின் பறம்பு நாட்டில், தெருக்கொடியின் பூவையும், புற்றுகளில் கிடைக்கும் ஈசலையும், இனிய மோருடன் கூட்டிப் புளிங்கறி சமைக்கப்பட்டது.  புதிய திணைச்சோற்றுடன் இப்புளிங்கறி விருந்தினர்க்கு உணவாகத் தரப்பட்டது.
 
“செம்புற்று ஈயலின் இன் அளைப்புளித்து
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ”     (புறம்.  119: 3-4)         
          என்ற பாடல் இதனை மெய்பிக்கின்றது.   இதுபோலவே குமணவள்ளல் புலவர்க்கு அளித்த விருந்தோம்பல் புறநானூற்றில் விவரிக்கப்பட்டுள்ளது.   அதிலிருந்து விருந்தில் தரப்பட்ட உணவு வகைகள், விருந்து தந்த பாத்திரங்கள் அகியவற்றைப் பற்றி நன்கு அறிய முடிகிறது.   அப்போது விருந்தாக வந்தவன் பசியால் வாடினான்.   வற்றியக் குடலினை உடைய அவனுக்குக் குடற்பகுதி ‘தண்’ எனக் குளிறும்படி – நிறையும் படி – உணவு சுவையாகவும் நிரம்பவும் தரப்பட்டது.    நன்கு ஓசை கிளம்புமாறு தாளிதம் செய்யப்பட்ட கொழுமை நிறைந்த நெய்யுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்பட்டது.    சிறுசிறு பொன்னாலான நல்ல கலங்களில் அந்த உணவு படைக்கப்பட்டது.  இதன்மூலம், நெய்சோறு பொற்கலங்களில் குமணனால் வழங்கப்பட்டன.   என்பதை அறியமுடிகின்றது.   (புறம், 160: 4-9)அதியமான் பொருநர்க்கு களிப்பினைத் தரும் கள்ளோடு, அமிழ்து போன்ற சுவையை உடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை, வெள்ளியால் ஆகிய  வெண்மையான கலத்திலே பெய்து உண்ணுமாறு செய்து கண்டுரசித்தான் என்பதை,
 
“மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
அமிழ்து அன் மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி”    (புறம்.  390: 6-18)
      எனவரும் பாடல் அடிகள் மூலம் அறியலாம்.   கருபனூர் கிழான், தன்னை நாடி வரும் இரவலர்க்கு நீர் போன்று தாராளமாக நெய் ஊற்றப்பட்ட நிணம் கலந்த கொழுவிய சோற்றுணவை உண்ணக் கொடுத்து விருந்தோம்பினான்.    இதனை,
 
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
மன் நாணப் புகழ் வேட்டு
நீர் நாணநெய் வழங்கி புரந்தோன்”    (புறம்.  384: 15-18)
      எனவரும் பாடலின் மூலாம் அறியலாம்.   இவ்வுணவுப் பரிமாற்றம் என்பது தொன்மையான  ஒரு வழக்கமாகக்  கருதப்படுகின்றது.   இதன் மூலம் மக்களுடன் மன்னன் எவ்வளவு நெருக்கமாக இருந்துள்ளார் என்பதைக் அறிந்துக்கொள்ள முடிகின்றது.   இவர்கள் தங்களை நாடிவந்த பரிசிலர்களுக்கும் புலவர்களுக்கும் தான் வேட்டையாடி வந்த இறைச்சியைப் பகிர்ந்து கொண்டார்கள் என்பதைச் சான்றுகள் வழி அறிந்துக்கொள்ள முடிகின்றது.

மகட்பா காஞ்சி
        சங்க காலத்தில் குறுநில மன்னரின் பெண்களை வேந்தர்கள் மணம் முடித்துத் தருமாறு வேண்டுவர்.   பெண்ணின் தந்தை விரும்பாதபோதோ மணம் முடித்துக் கொடுக்காதபோதோ போர்களும் அழிவுகளும் நிகழ்ந்துள்ளன.    குறுநில மன்னர்களின்  பெண்களை வேந்தர்கள் மணம் முடிக்க விருபுவர் என்பதை,

“வேட்ட வேந்தனும் வெஞ்சினத்தினனே
கடவனகழிப்பி வடந்தையுஞ் செய்யான்”   (புறம்.  336) 
“கொற்ற வேந்தர் வரினுந் தற்றும்
வணங்கார்க் கீகுனவல்ல”                        (புறம்.  338) 
“தண் பணைக் கிழவனிடந்தையும் வேந்தரும்
பெறா அமையின் பேரமர் செய்தலின்”                 (புறம்.  342)
        மேற்கண்ட பாடல்களின் மூலம் அறியலாம்.    குறுநில மன்னர்களின் மகள்களை விரும்பி அடைய வந்தவர்கள் வேந்தர் எனத் தெரிய வருகிறது.   இந்த வேந்தருக்காகக் கொடை நேர்ந்தமை பற்றி புற இலக்கியங்கள் அன்றி அக இலக்கியமும் குறிப்பிடுகின்றன.    புறத்தில்  பெரும்பாலும் மகட்கொடை  மறுக்கப்படாத நிலையில் நடந்த போர்கள் பற்றியும், மறுக்கப்பட்டால் ஏற்படும் ஊரழிவுகள் பற்றியும் கூறப்பட்டு,  அப்பெண்ணின் தந்தையினது வீரமும்,  தமையனின் வீரமும் குறித்துப் பேசப்படுகின்றன.

கொடைப்பண்புகள்
       குறுநில மன்னர்களைப் பொருத்தமாட்டில் இவர்களிடம் உடைமைப் பண்பு இருந்தாலும் இவர்கள் உள்ளதைப் பகுத்துண்டு வாழும் இயல்பும் கொடைப்பண்பும் மிக்கவர்களாய் இருந்துள்ளதைப் பின்வரும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
 
“மறுமை நோக்கின்றோ வன்றே
பிறர்வறுமை  நோக்கின்றவன் கைவண்மையே”
               எனப் பேகனும்,
 
“மாரியன்ன வண்மைத்
தேர்வே ளாயைக் காணிய சென்றே”    (புறம்.  133: 6-7)
   என ஆயும்,

“மூவரு ளொருவன் நுப்பாகியரென
ஏத்தினர் தரூஉங் கூழே நுங்குடி 
வாழ்த்தினர் வரூஉ மிரவலரதுவே”    (புறம். 122: 5-7)    எனக் காரியும்,
 
“பறம்பு பாடின ரதுவே யறம் பூண்டு
பாரியும் பரிசில ரிரப்பின்
வாரே னென்னா வைர்வரை யின்னே”     (புறம்.  108:4-6)
எனப் பாரியும்,

ஓம்பா வீகை விறல்வெய் யோன்”      (புறம்.  152:31)         
        என ஓரியும் கொடை மாண்பு மிக்கவராய்க் காட்டப்பட்டுள்ளதை அறிய இயலும்.   மேற்கண்ட சான்றுகளின் வழி இவர்கள் உடைமைப்பொருள் அற்றோராயினும் தன்னை நாடி வந்த குடிமக்கட்கு கொடையளிக்கும் பண்பு குன்றாது காணப்பட்டனர் என்பது தெளிவு. 

குறுநில மன்னர்களின் போர்முறைகள்
        சங்க காலத்தில் முடியுடை வேந்தர்களுக்கு கீழ்பட்ட குறுநில மன்னர்கள் பலர் இருந்தனர்.   வேந்தர்களுக்கும் இவர்களுக்கும் இடையே உட்பகைக் காரணமாக பல போர்கள் நடைபெற்றுள்ளதை நாம் புறநானூற்றின் வழி அறிந்துகொள்ளமுடிகின்றது.  இத்தகைய  “உட்பகைக்கு திறை செலுத்துவதைப் புறக்கணித்தலும், மகள் மறுத்தலுமே அதிக அளவில் காரணிகளாக இருந்தன.   அதியமான்  என்ற குறுநில மன்னன் ஆண்ட தகடூரைச் சேர மன்னன்  முற்றுகையிட்டான்.   அதனையொட்டி எழுந்த  போரில் அதியமான் கொல்லப்பட்டான்”4.

         மேலும் கோவலூரை ஆட்சி செய்த மலையமானை சோழவேந்தன் கிள்ளிவளவன் தாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.   (அகம்.  209) இவ்விரு போர்களுக்கும் காரணம் குறுநில மன்னர்களாகிய அதியனும், மலையமானும் தாங்கள் கீழ்படிந்திருந்த சேர, சோழ வேந்தர்களின் ஆதிக்கத்தில் இருந்து விலகி,  தங்களின் தனியுரிமையை நிலை நாட்ட முயன்றமையே காரணமாகத் திகழ்ந்தது.    உண்மையிலேயே சில குறுநில மன்னர்கள் தனியுரிமைவாய்ந்த தனியரசர்களாக விளங்கினர்.   தங்கள் விருப்பத்திற்கு இணங்கவே,  பகைவர்களான இருபெரு வேந்தர்களுள் ஒருவரைத் தாங்கள் ஆதரிக்கத் துணியும் அளவிற்குத் தன்னுரிமையும், படைபலமும் பெற்றவர்களாக இவர்கள் வாழ்ந்தனர்.   தொண்டைமான் இளந்திரையன், நெடுங்காலம் தனியுரிமையுடன் தன்னாட்சி செய்துவந்தான்.   இரண்டாம் கரிகாலனின் ஆதிக்கம் வடக்கே பரவியபொழுதுதான்,  இளந்திரையனுடைய ஆட்சியுரிமை ஒரு வரம்பிற்குட்பட்டதாக அமைந்ததைப் பட்டினப்பாலை (276) நமக்குச் சான்று பகர்கின்றது.
பெருஞ்சிறப்புமிக்க குறுநில மன்னர்கள், எப்போதும் பேராற்றல் வாய்ந்தவர்களாக இருந்ததோடு, பயிற்சிமிக்க படையினை உடையவர்களாகவும், திறமைமிகு நிர்வாகிகளாகவும் இருந்தனர்.    “ஒவ்வொரு தலைவனும் சில உரிமைகள், சலுகைகள், முன்னுரிமைகள் மரியாதைப் போன்றவற்றை வேந்தர்களிடம் உரிமையுடன் கேட்டுப்பெற்றனர்.   வேந்தர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவரை அவர்கள் இந்த சலுகைகளை இன்புற அனுபவிக்கலாயினர்”5
         
          இதனால் இவர்கள் வேந்தர்களிடம் நட்புபூண்டும் அவர்களுக்கு உதவியாகவும் அவ்வப்போது போரில் ஈடுபட்டுவந்தனர் என்பதை அறியமுடிகின்றது.   அதேசமயம் மூவேந்தர்களின் ஆதிக்கத்தினை வளரவிடாமலும் தடுத்தனர் என பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது.   கரிகாலன் காலத்தில்,  அன்றைய குறுநில மன்னர்கள்  சேர, பாண்டிய வேந்தர்களுடன் சேர்ந்துகொண்டு சோழனுடைய ஆதிக்கத்தினை வளரவிடாமல் தடுக்க முயன்றனர்.    இவ்வாறே,  ’பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியன் ஆட்சிக்கு வந்தபோது, இருபெருவேந்தரும் ஐந்து குறுநில மன்னரும் ஒருங்கிணைந்த கூட்டணியை எதிர்த்து போரிடவேண்டியதாயிற்று.    சேர மன்னன் ஏழு சிற்றரசர்களின் முடிகளைக் கோர்த்து மாலையாக அணிந்துகொண்டதாக’ பின்வரும் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.   (பதிற்.  14:11, 16:17, 40:13, 45:6) இதன் மூலம் சங்க அடுக்கமைவுகச் சமுதாயத்தில் இவர்கள் பெற்றிருந்த செல்வாக்கினையும், பெருவாழ்வையும் அறிந்துகொள்ள முடிகின்றது.   இவ்வாறு வேந்தர்கள் மற்றும் குறுநில மன்னர்களுக்கிடையே பல போர்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இலக்கியங்கள் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.6  

முடிவுரை
       சீறூர் மன்னர் என்போர் வன்புலத்துக்குறிய சிறிய நிலத்தை ஆளும் தலைவன் ஆவர்.   இவர்கள் மக்களோடு மக்களாகக் கலந்து வேறுபாடு அற்ற நிலையில் வாழும் தன்மையைக் கொண்டவர்கள் என்பதையும், கொடை மற்றும் விருந்தோம்பும் பண்புகளில் சிறந்தவர்கள் என்பதையும் அறிய முடிகின்றது. சிறுகுடில்களில் வாழும் எளிய வாழ்வினர் என்பதையும் கடன் பெற்றேனும் தம் குடியினையோம்பும் பண்பினர் என்பதையும், பொருளில்லாத சூழலில் தன்னை நாடி வந்தோர்க்குத் தன் வாளைப் பணையம் வைத்தேனும்  கொடை நல்கும் பண்பினர் என்பதையும் மேற்கண்ட சான்றுகளின் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.    வேந்தர்களுக்கு உதவியாகப் போர்க்காலங்களில் படை நடத்திச் செல்லும் படைத்தலைவர்களாகவும் இவர்கள் செயல்பட்டுள்ளனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.   வேந்துவிடு தொழிலில் இவர்களை வேந்தர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும்,  சங்க காலச் சூழலில் மக்களோடு மக்களாக இருந்து அறவாழ்வு வாழ்ந்துவந்துள்ளனர் என்பதையும் மேற்கண்ட சான்றுகள் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.

மேற்கோள் குறிப்புகள்
1.Nilakanda Saatri, K.A., A Comprehensive History of India, Vol.   II.   P.   530.

2.தமிழ் நாட்டு வரலாறு, சங்ககாலம் – அரசியல்.   1983.   பக்.   518-519.

3.ராஜ்கெளதமன், பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், ப. 117.

4.Arokiaswami, M., The Kongu Country, p. 60.

5.Mahalingam, T.V., South Indian Polity, p. 18.

6.மாதையன், பெ., 2001 சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம்.   ப. 16

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர்  த. தினேஷ்,

வி.இ.டி கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி,

திண்டல், ஈரோடு.

 

Thangkar Pachanin Pataippulakam|C.Prabu

தங்கர் பச்சானின் படைப்புலகம்
Abstract
           Thangkar Pachan, who enjoys celebrating his land as Sembulam, has been writing stories, novels, essays, cinematography and directing in the language of the people who had to leave the land. The language of literature and the language of the visual interact in his literary space, full of mind-blowing visualizations of people, animals, plants and trees. Tangkar records the stories of fear and pain about a world that will disappear and the pain, disappointment, poverty, hunger, anger, cruelty, disability and longing for the legacy of the simple people, the compassion and violence that the traditions have embedded in them, on the same platform, with social care. of Bachchan The purpose of this review is to compile the works.


“தங்கர் பச்சானின் படைப்புலகம்”

முன்னுரை       
           செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர்பச்சான் சிறுகதை, புதினம், கட்டுரை, ஒளிப்பதிவு, இயக்கம், என்று  பல்வேறு தளங்களில் மண்ணைவிட்டு வெளியேறி  வாழ நேர்ந்துவிட்ட  மக்களின் மொழியில் மிகக் காத்திரமாகப் படைத்து வருபவர்.
இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் கதைகளை தமது இலக்கிய பரப்பில்,  மனது கனக்கக் காட்சிப்படுத்துதலும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது .அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் கொண்ட  கதைகளையும் எளிய மக்களின் வலி,ஏமாற்றம், வறுமை, பசி,  கோபம்,  குரூரம், இயலாமையும்  மரபுப் பற்றிய ஏக்கமும்  மரபுகள் தமக்குள்ளாகப் பொதிந்து வைத்திருக்கும் பேரன்பு, வன்முறைகள் இரண்டையும் ஒரே தளத்தில், சமூக அக்கரையோடு பதிவு செய்யும்  தங்கர் பச்சானின் படைப்புகளைத் தொகுத்து அளிப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

       கடலுர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள பத்திரக்கோட்டையில், பச்சான் இலட்சுமி அம்மாள் தம்பதியரின் ஒன்பதாவது மகனாக 1961 மே-5 நாள் பிறந்த இவரின் இயற்பெயர் தங்கராசு. இவரது தந்தை தெருக்கூத்து கலைஞர் என்பதால் தங்கர் பச்சானுக்கு கலையின் மீதான ஆர்வம், சிறுவயதிலிருந்தே அதிகமாக இருந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து ஒலி ஒளி துறையில் பயின்று, திரைத்துறையில் ஒளிப்பதிவாளராகவும் திரைப்பட இயக்குனராகவும் நடிகராகவும்   எழுத்துலகில்  சிறுகதை, நாவல், கட்டுரை எனப் பல கோணங்களில்  (படைப்புலகில்)   பல்கலை  வித்தவராக இயங்கிவருகிறார்.

எழுத்துலகம் – சிறுகதை
       தங்கர் பச்சான் சிறுகதைகளில், நடு நாட்டு மக்களின் வாழ்வியலை  அதன் எல்லா போக்குகளுடன் பிரதிபலிக்குமாறு வெளிப்படுத்தி  வருகிறார். பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும்  பல்வேறு சுரண்டல்களுக்கு ஆட்படும், எளிய மக்களின் வலி, ஏமாற்றம், வறுமை, பசி , கோபம் , குரூரம், இயலாமை  பற்றியும் மரபு ரீதியான உணவுப் பழக்கங்களில் ஏற்படும் மாறுபாட்டை பற்றியும் வயல்வெளிகளையும் ஆறுகளையும் தோப்புகளையும் பறந்து விரிந்து கிடக்கும் இயற்கை பற்றியும் அதனுடான  உழவையும் உழுபவனின் நம்பிக்ககைகளை,  களமாகக் கொண்டு சிறுகதை படைத்துள்ளது சிறப்பாகும். இவற்றை பேசும்போது, மரபிலக்கிய தேர்ச்சி பெற்ற இலக்கியவாதியாக விளங்குகிறார்.             
 
            சிறந்த கதை சொல்லியாகவும் நடு நாட்டின் வளம் எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை பற்றியும் கலாச்சார ரீதியான சீரழிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றியும் சிறுகதைகள் வழியாக வெளிப்படுகின்றன. நடுப்பகுதி மட்டுமல்லாது, தான் வாழ்ந்த பல்வேறுபட்ட இடங்களில் இருக்கும் தமிழர்களின் அவலங்களையும் தமது கதைகளில் எடுத்துரைக்கின்றார். எழுத்தாளர் தனது அனுபங்களை படைப்புகளின் வழியே எடுத்துரைக்கும்  ஆற்றல் மிக்கவராக விளங்குகிறார். மேலும், நடு நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறையினையும் பழக்க வழக்கங்களையும் நம்பிக்கைகளையும் சடங்கியல் முறைகளையும் உழுவுதல் சாதிகளுக்கு இடையே ஏற்படுகின்ற பிளவுகளையும் வட்டார வழக்கு சொற்களைக் கொண்டே  விவரிப்பதை,

வெள்ளை மாடு                           –   1993
குடி முந்திரி                                  –   2002
இசைக்காத இசைத்தட்டுகள்  –   2006
ஆகியப் படைப்புகளில் காணலாம்.

நாவல் : ஒன்பது ரூபாய் நோட்டு – 1993
        தங்கர்பச்சானின் நாவல்கள், பின் தங்கிய மக்களின் உரிமைப் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் கிராமமாக புலியூர் காணப்படுகிறது. அங்கு வசிக்கின்ற மக்களின் இனிமையும் பெரிய லட்சியமும் ஏதும் இல்லாத சாமானிய மக்களின் உழைப்பும் உண்மையும் நல்லுணர்வுகளும் தன் குடும்பத்திற்காக தன் வாழ்வையே, தியாகம் செய்த மாத படையாட்சி. அவரின் வீரத்தின் விளைநிலமாக விளங்கிய செயல்பாடுகள் அனைத்தையும் பன்முக கோணங்களில் வெளிப்படுத்தி உள்ளார்.
 ஒன்பது ரூபாய் நோட்டு என்னும் புதினம் தங்கர் மச்சான் எழுதிய முதல் புதினமாக இருந்தாலும் வாசகர்கள் அதனைப் படிக்கின்ற பொழுது, பலமுறை எழுதி ஆழங்கால் பட்டவர்களின் எழுத்து ஆட்கள் போல, வெளிப்பட்டு இருப்பதை காணலாம்.
 குறிப்பாக மரக்கன்று நடுதல், ஆட்டு தோல் விற்பனை செய்தல், வழிபாடுகள், இறுதிச் சடங்குகள், தொழில் பற்றிய செய்திகள் மற்றும் சிறப்புகள், நியாயமாக வாழ்பவர், நீதிமொழி நடப்பவர் அடையும் துன்பங்களை பற்றி, வெளிப்படையாக பேசியிருப்பதை அறிய முடிகிறது. மா, பலா, முந்திரி ஆகிய வியாபாரம் உத்திகள் பற்றியும் பெண் பாத்திரமான வேலாயி, தமிழா ஆகியோருடைய அன்பை வெளிக்காட்டும் ஆசிரியரின் தாய்மை நிலை – தங்கு தடை இன்றி வெளிப்பட்டு இருப்பதை அறியலாம்.
ரங்கசாமி திருவிழாவில் கூத்துக்கட்டுவராக வெளிப்படுவதையும்; முருகர் வழிபாட்டு முறையை ஆங்காங்கே விட்டுச் செல்வதும்; இளைஞனான சிகாமணி மரக்கன்று நடுவதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்; மாந்தோப்பில் ஒருவரை இறந்து கிடந்த போது அடைகின்ற அதிர்ச்சியும் ஒரு சேர எடுத்துரைப்பது, அவரது நாவலுக்கான பயிற்சியை அதில் வெளிப்படும் முதிர்ச்சியைபடிக்கும் வாசகர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது அறியலாகிறது.

அம்மாவின் கைப்பேசி – 2009
         அம்மாவின் கைபேசி” என்பது இயக்குனர் தங்கர் பச்சான் எழுதிய, இரண்டாவது  நாவல் மற்றும் திரைப்படமாகும். நாவல் – ஒரு தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசத்தையும், மொபைல் ஃபோன் வந்த பிறகு ஏற்படும் மாற்றங்களையும் சித்தரிக்கிறது.
இந்த கதையில், அம்மா மற்றும் மகன் ஆகியோரிடையே உள்ள உறவு, மொபைல் ஃபோன் வந்த பிறகு எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விவரிக்கிறது. கிராமத்தில் வசிக்கும் அம்மா, நகரத்தில் இருக்கும் தனது மகனுடன் பேசுவதற்காக மொபைல் ஃபோன் வாங்குகிறார். நகர வாழ்க்கைக்குப் பழகிய மகன், அம்மாவுடன் பேசுவதற்கு முன்பு மொபைல் ஃபோன் மூலம் நண்பர்களுடன் பேசுவதையே விரும்புகிறான். இதனால், அம்மா வருத்தப்படுகிறார், கதையில் பல உணர்ச்சிகரமான தருணங்கள் உள்ளன.

கட்டுரை  – 2015
       தி இந்து’ தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின் நூல் சொல்லத்தோணுது. இந்நூல் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய  50 கட்டுரைகளை கொண்டது. சமகால விளிம்பு நிலை மக்களை அதிகாரவர்கம் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆட்படுத்துகிறது என்பதை, மிக நேர்தியாகப் பதிவுச்செய்துள்ளது இக்கட்டுரை.
“சிறந்த ஒளிப்பதிவாளர், திரை இயக்குநர் மற்றும் இலக்கியவாதியான தங்கர் பச்சான் ஒரு பன்முகக் கலைஞர். அவரைப் பிடிக்காதவர்கள் இருக்கலாம். அவரது படங்களை ரசிக்காதவர்கள்கூட இருக்கலாம். ஆனாலும் இப்புத்தகத்தில் எழுப்பியுள்ள கருத்துகளை எவராலும் புறக்கணிக்க முடியாது.”– கே.சந்துரு, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி “இந்நூலைப் படிக்கின்ற அறிவுள்ள தமிழர்கள் சிந்திப்பார்கள். உணர்ச்சியுள்ள தமிழர்கள் செயல்படுவார்கள். இவையொன்றுமே இல்லாமல் வீழ்ந்து கிடக்கும் தமிழர்கள் இந்த நூலில் கொட்டிக்கிடக்கும் உண்மை உணர்வின் உச்சத்தைக் கண்டு குறைந்தபட்சம் வியந்து நிற்பார்கள். இன்றைய தேவை தமிழர்களுக்கு வியப்பு அல்ல. விழிப்புதான். இந்த நூல் அந்த விழிப்புக்கு வித்திடும்.”(உ. சகாயம், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி)

திரையுலகம்
         
      தமிழ் திரையுலகில் பாலுமகேந்திராவிற்கு பிறகு, சமகால ஒளிப்பதிவாளர்களில் தமது வித்தியாசமான ஒளிக் கோணங்களின் மூலம் மனிதர்களின்  ஏமாற்றம், வலி, வேதனை கோபம், குரூரம் போன்ற உள்ளார்ந்த உணர்வை தத்துருபமாக படம்பிடித்து, குறிப்பிட்டத்தக்க இடத்தைப் பிடித்தவர் தங்கர் பச்சான் என்றால் மிகையாகாது.  திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். ஒளிப்பதிவின் மூலம் தனித்துவமான படைப்புகளை உருவாக்கி தங்கர் பச்சான் ஒளிப்பதிவு செய்த  படங்கள்,

மழைச்சாரல்                  –           1990

தர்மசீலன்                      –           1991

கருவேலம் பூக்கள்         –           1997

காதலே நிம்மதி              –           1998

மறுமலர்ச்சி                    –           1998

கண்ணெதிரே தோன்றினாள்-      1999

கனவே கலையாதே       –          1999

கள்ளழகர்                       –         1999

உன்னுடன்                   –          1999

பாரதி                              –           2000

இயக்குநர்
           தங்கர் பச்சான் இயக்கத்தில் 2002 ல் வெளியான ‘அழகி’ அவரது முதல் திரைப்படமாகும். பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
2007 ல் இவர் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றான ‘பள்ளிக்கூடம்’ படத்தில் நரேன், சினேகா, ஷ்ரேயா ரெட்டி, சீமான் மற்றும் தங்கர் பச்சானும் நடித்திருந்தார். பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். சத்யராஜ், அர்ச்சனா, நாசர் மற்றும் ரோகிணி ஆகியோர் இணைந்து நடிக்க தங்கர் பச்சான் இயக்கத்தில் 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ஒன்பது ரூபாய் நோட்டு. இத்திரைப்படம் ஒன்பது ரூபாய் நோட்டு என்ற நூலின் திரைவடிவம் ஆகும். இப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.
2012 ல் இவர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாக நடித்த ‘அம்மாவின் கைபேசி’ திரைப்படத்தில் இனியா, ரேவதி, அழகம் பெருமாள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரோஹித் குல்கர்னி இசையமைத்துள்ளார்.
சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர் பச்சான் இயக்கினார். இப்படத்தின் கதை நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புதினத்தின் திரை வடிவமாகும்.
தனது படைப்புகளில் மனதிற்குள் பதியும் மனித உணர்வுகளையும், கிராமியவாழ்க்கை அழகாக சொல்லும் தங்கர் பச்சான், தமிழ் சினிமாவில் ஒரு தனித்த அடையாளம் பதித்துள்ளார். அவரது திரைப்படங்கள் இன்று வரை ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கின்றன. அவை வருமாறு,

இயக்கிய திரைப்படங்கள்
அழகி                             –        2002

சொல்ல மறந்த கதை    –        2002

தென்றல்                       –        2004

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி  2005

பள்ளிக்கூடம்                 –        2007

ஒன்பது ரூபாய் நோட்டு –        2007

அம்மாவின் கைபேசி     –        2013

களவாடிய பொழுதுகள் –        2017

கருமேகங்கள் கலைகின்றன –        2022

விருதுகள்
1993 சிறந்த சிறுகதை தொகுப்பு லில்லி தெய்வசிகாமணி நினைவு விருது -வெள்ளை மாடு

1993: சிறந்த சிறுகதை தொகுப்பு திருப்பூர் தமிழ் சங்கம் – வெள்ளை மாடு

1996 : சிறந்த நாவல் தமிழ்நாடு விருது –  ஒன்பது ரூபாய் நோட்டு

1996 : சிறந்த நாவல் அக்னி சிறைசா விருது – ஒன்பது ரூபாய் நோட்டு

1996 : சிறந்த நாவல் திருப்பூர் தமிழ்ச்சங்கம்  – ஒன்பது ரூபாய் நோட்டு

1997 : சிறந்த ஒளிப்பதிவாளர் விருது  தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
- காலமெல்லாம் காதல் வாழ்க

1998: கலைமாமணி விருது தமிழ்நாடு அரசு
2002: சிறந்த இயக்கநர் திரைப்படம் அழகி

2005: சிறந்த நடிகர் ஜெயா தொலைக்காட்சி விருது – சிதம்பரத்தில் ஒரு
அப்பாசாமி

2007 : திரைப்பட இயக்குனர் பங்களிப்பிற்காக  தமிழ்நாடு மாநில விருது

முடிவுரை
        தங்கர் பச்சானின் படைப்புலகம்  மொழி மற்றும் ஒளி என இரண்டு பரந்துப்பட்ட தளங்களில்  இயங்குகின்றன. குறிப்பாக சிறுகதை  மற்றும் நாவல்களில்  நடுநாடு என குறிப்பிடப்படும் கடலூர் மாவட்டத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் முந்திரி மற்றும் பலாகடுகளும் அதனைச் சார்ந்த மக்களின் மேன்மை மற்றும் சிறுமையை ஒருசேர பதிவு செய்வதோடு விவசாயத்தின் வீழ்ச்சி வேலைக்குப் போகும் இடை நிலை மக்கள்  எவ்வாறு நவீன மயமாக்களில் மாற்றப் படுகிறார்கள் என்பதோடு அம்மக்களின் கோபம், வீரம், ஏமாற்றம், வலி, குரூரம் போன்ற சமூக நடப்புகளை தமது எழுத்துக்களின் மூலம் படிப்பவர்களின் கண்முன் கட்டுகிறார். சொல்லத் தோணுது கட்டுரைத் தொகுப்பில்  சமகால விளிம்பு நிலை மக்களை அதிகாரவர்கம் எவ்வாறு அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படுகிறது  என்பதோடு   இவற்றையெல்லாம்  திரைமொழியிலும் மிக நுட்பமாகப் படைத்துவரும்  தங்கர் பச்சானின் படைப்பு உலகத்தைத் தொகுப்பதளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம் அமைந்துள்ளது.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

செ.பிரபு,
முனைவர் பட்ட ஆய்வாளர் ,

கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி,
திருவண்ணாமலை.

 

Virtues in Kalithokai|S.Aruthra

கலித்தொகையில் அறங்கள்
 Abstract
         The Tamilians acquired wealth, practiced virtue (Dharma/Aram), and lived with joy, embracing domestic life (Il Vazhkai) as a morally upright way of living. Even if the entire world were presented as a reward, they refused to engage in blameworthy acts, steadfastly following the path of righteousness and thereby attaining enduring blessings. Literature indicates that the people of the Sangam era considered virtue (Aram) to be central to human sentiment. In this context, this research elucidates the concept of virtue (Aram) as expounded in Kalittokai.


“கலித்தொகையில் அறங்கள்”

ஆய்வுச் சுருக்கம்
       தமிழர்கள் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்று வாழ்ந்து வந்தனர். இல்வாழ்க்கையை அற வாழ்க்கையாக மேற்கொண்டனர். உலகே பரிசாக கிடைத்தாலும் பழிதரும் செயல்கள் செய்ய மறுத்து நல்வழியைக் கடைப்பிடித்து நிலைபெற்றப் பேறெய்தினர். சங்க கால மக்கள் அறத்தை மனித உணர்வின் மையமாகக் கொண்டிருந்தனர் என்பதை இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன. இவ்வகையில் கலித்தொகை கூறும் அறம் பற்றிய தெளிவே இவ்வாய்வாகும்.

முன்னுரை
        சங்க இலக்கியம் பழமை வளமும், புதுமை நலமும் பொருந்தியது. சங்க கால மக்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் பெட்டகமாக சங்க இலக்கிய நூல்கள் திகழ்கின்றன. தமிழனின் தொன்மைக்கும், பெருமைக்கும் சான்றுகளாக இருப்பன எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் ஆகும். சங்க இலக்கியங்கள் என்று போற்றப்படும் தொகையும், பாட்டும் அகம், புறம் என்ற இரண்டு ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. இவற்றை தமிழர்கள் தம் இரு கண்களாகப் போற்றினர். அகவாழ்க்கையை விளக்கும் நூல்களுள் ஒன்று கலித்தொகை. இக்கலித்தொகையில் அறக் கருத்துகள் நிறைந்துள்ளன. இக்கருத்துகளை வெளிக் கொணவர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கலித்தொகை நூலின் அமைப்பு
        எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாக அமைந்திருப்பது கலித்தொகை ஆகும். “கற்றறிந்தார் ஏத்தும் கலி” என்று போற்றப்படுகின்ற சிறப்புக்குரிய இந்நூலில் மதுரையாசிரியர் நல்லந்துவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துச் செய்யுள் பாடல்1, பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய பாலைக்கலி பாடல்கள் 35, கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாடல்கள் 29 மதுரை மருதன் இளநாகனார் புனைந்துள்ள மருதக்கலி பாடல்கள் 35, சோழன் நல்லுருத்திரன் இயற்றிய முல்லைக்கலிப்பாடல்கள் 17. கடவுள் வாழ்த்துப் பாடிய மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரே எழுதி முடித்துள்ள நெய்தல் கலிப்பாடல்கள் 33 ஆக மொத்தம் 150 பாடல்கள். இவ்வாறாக இந்நூலின் அமைப்பு அழகுற அமைந்துள்ளன. இந்நூலின் மூலமாகப் பண்டைத்தமிழர் தம் வாழ்வியல், பழக்கவழக்கங்கள். பண்பு நலன் முதலியவற்றைத் தெளிவாக உணர முடியும். இவை மட்டுமல்லாமல் தலைவன், தலைவி தோழி செவிலியர் என இவர்களின் கூற்றுகளில் மனிதநேயக் கருத்துகளும், அறக்கருத்துக்களும் காணப்படுகின்றன.

அறப்பண்பு
       அறம் என்பது ஒழுக்க நெறியாகும். இவ்வறம் பிறர்க்கு உதவி செய்வது; மற்ற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது போன்ற நற்செயல்களை கடைப்பிடிப்பதாகும். சங்ககால மக்கள் பசி, பிணி, வறுமை, இருப்பிடம் ஆகிய வாழ்க்கைப் போராட்டங்களிடையே இன்பமும், பொருளும் பெற பல வழிகளைப் பின்பற்றினர். பிறர்க்கு துன்பம் தராமல் இவற்றை நன்னெறியில் பெற வேண்டும் என்ற உணர்வே அறநெறியாகும். வாழ்வின் அடிப்படை நிலைக்களன்களாக காதல், போர், அரசியல், சமுதாயம் அமைந்திருந்தன. இவற்றுள் சிக்கல்கள், முரண்பாடுகள் தோன்றிய காலத்தில் வாழ்க்கையை செம்மைப்படுத்த அறக்கருத்துகள் தோன்றின. எக்காலத்தும் பயன்படுத்த வேண்டிய  வாழ்விற்கு ஏற்ற அறக் கருத்துகளை கலித்தொகை எடுத்தியம்புகின்றது. கலித்தொகையில் ஆங்காங்கே பல அறக்கருத்துக்கள் காணப்பட்டாலும், ஒரே பாடலில் அறவுரைக் கருத்துகள் அனைத்தையும் தொகுத்துக் கூறியுள்ளது. இதனை,

“ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்  
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரிதல்  
பண்பெனப் படுவது பாடு அறிந்து ஒழுகுதல்  
அன்பெனப் படுவது தன்கிளை செறாமை  
அறிவெனப் படுவது பேதையர் சொல் நோன்றல். 
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை  
நிறையெனப் படுவது கண்ணோடாது உயிர் வௌவல்  
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” (கலி.பா.133)
         
       என்ற பாடல் தெளிவாக்குகிறது.  ஆற்றுதல் என்பது வருந்தி வந்தோர்க்கு உதவுதல்; போற்றுதல் என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல்; பண்பெனப்படுவது சான்றோர் வழி அறிந்து ஒழுகுதல்; அன்பெனப்படுவது சுற்றம் தழுவி வாழ்தல்; அறிவெனப்படுவது அறிவிலார் சொல் பொறுத்தல்; செறிவு என்பது கொடுத்த வாக்கைக் காத்து நிற்றல்; நிறைவு எனப்படுவது பிறர் அறியாது மறை பொருள் காத்தல் நீதி முறைமை எனப்படுவது ஒரு பால் கோடாது ஒறுத்தல் பொறுமை எனப்படுவது இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளல் முதலிய அறக்கருத்துகளை உள்ளடக்கியது கலித்தொகையில் பாடல்கள். இந்நூல் வாழ்க்கையில் அனைவரும் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் கொண்டதாக திகழ்கின்றது.

நடுவு நிலைமை 
      
       நடுவு நிலைமை என்பது யார்க்கும் பாரபட்சம் பாராமல் எல்லார்க்கும்‌ ஒப்ப நிற்கும்‌ நிலை ஆகும். கலித்தொகை வேண்டியவர், வேண்டாதவர் எனும் கண்ணோட்டம் இல்லாமல் நடுவு நிலையாக நிற்கும் பண்பினைப் போற்றிக் கூறுகின்றது. நடுவு நிலைமையோடு செயலாற்றிட வேண்டும் எனும் அறக் கருத்தினைத் தெளிவுறுத்துகின்றது. மரத்தின் மையத்தில் உள்ள ஆணி போல ஒரு பக்கத்திலும் சாயாது சிறப்புடன் விளங்க வேண்டும் என்று தாய் மகனுக்குச் சொல்வது போலக் கலித்தொகையில் பாடலொன்று காணப்படுகின்றது.

“பால் கொளல் இன்றி, பகல் போல் முறைக்கு ஒல்காக்
கோல் செம்மை ஒத்தி பெரும”(கலி.பா.86)
         
என்ற பாடல் விளக்குகிறது. நடவு நடுவுநிலைமை பற்றி வள்ளுவரும்,

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் 
கோடாமை சான்றோர்க்கு அணி”(குறள்.118)
         
என்ற குறளில் துலாக்கோல் போல் நேர்மையாக நின்று சிறிதும் மாறாமல் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற காழ்ப்புணர்ச்சியின்றி வழக்கின் தன்மையை ஆய்ந்து நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மேலும்,

“நன்றே வரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை 
அன்றே ஒழிய விடல்”(குறள்.113)
         
      என்ற குறள் எவ்வளவு நல்லதாயினும் நடுவுநிலைமையான நேர்மையை விட்டு விட்டு அடையக்கூடிய செல்வத்தை அப்போதே விலக்கிவிட வேண்டும் என்றுரைக்கின்றது. நடுவுநிலைமையைக் கடைப்பிடித்து ஒழுகும் அனைவருடைய வாழ்விலும் மேன்மை உண்டாகும் என்பது தெளிவாகிறது.

பிறர்க்குதவும் ஈகைப் பண்பு
     வறுமையால் இரந்து வந்து கேட்பவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுத்தல் கொடிய வறுமைக்கண் பசி தீர்க்கும் உணவைக் கொடுப்பது ஈகை எனப்படும். இவ் ஈகையானது கொடையிலிருந்து வேறுபட்டதாகும் என வகுத்துள்ளார் வள்ளுவர். இதனை,

“வறியார்க் கொன்று ஈவதே ஈகை மற்றெல்லாம் 
குறியெதிர்ப்பை நீர துடைத்து”(குறள்.221)
         
        என்னும் குறளில் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்க்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கருதமுடிகிறது. வறியோர் பசி தீர்ந்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்க கால மக்கள் எண்ணி வாழ்ந்தனர். காற்றை விட விரைந்து செல்லும் தேர்களை மட்டுமின்றி யானைகளையும் தன்னை நாடி வரும் புலவர்களுக்கு பரிசாக அளித்த தன்மையினை,

“நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் 
தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு 
அளியொடு கைதூவலை”(கலி.பா150)
         
என்ற பாடலின் மூலம் அறிய முடிகிறது. மேலும்,

”நீரினும் சாயல் உடையன், நயந்தோர்க்குத்
தேர் ஈயும் வண் கையவன்”(கலி.பா.6)
         
    என்ற கலித்தொகைப் பாடலும் குறிப்பிடுகிறது. இதனைப் பார்க்கும் போது இரந்து வந்தோர்க்கு பொன், பொருள் மட்டும் அல்ல தேரையே வழங்கக் கூடிய மனிதநேயம் மேலோங்கி இருந்த செய்தியை அறிய முடிகின்றது. ஈகையின் சிறப்பினை,

“சீறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய”(சிறுபாண்.பா.162)
         
என்ற பாடல் வரியிலும்,

“மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர் 
பயன்கெழு முள்ளூர் மீமிசைப் 
பட்ட மாரி உறையினும் பலவே”(புறம்.பா.123)
         
       என்ற புறநானூற்று பாடலின் மூலமும் அறிய முடிகிறது. சங்க கால மக்கள் ஈகையில் சிறந்து விளங்கி, மனிதநேய  அறங்களை உலகிற்கு எடுத்துரைத்துள்ளனர். தன்னை நாடி வந்தவர்க்கு இல்லை என்று கூறக் கூடாது என்றப் பண்பு சங்ககாலத்தில் இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது. தம் வாழ்க்கைக்கு வேண்டியப் பொருள் தம்மிடம் இல்லை என்று சொல்லி வந்து இரந்தவர்க்குச் சிறு பொருளையும் தராதிருப்பது இழிவாகும். இதனை,

“இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று     
ஈயாமை இழிவு…..(கலி.பா.2)
என்றும்,

“இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால் 
தன் மெய் துறப்பான் மலை”(கலி.பா.7)
         
என்னும் கலித்தொகைப் பாடல்கள் விளக்குகின்றன. இதனை,

”இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் 
குலனுடையான் கண்ணே உள”(குறள்.223)
         
என்ற குறள் வழி இல்லை என்று கூறாது பிறருக்கு கொடுக்கும் சிறந்த பண்பு ஈதல் தன்மை உடையவனுக்கே உண்டு என்பதை காணமுடிகின்றது.  ஈதலில் குறை காட்டாது இரந்தவர் மனம் மகிழக் கொடுக்கும் தன்மையை,

“ஈதலில் குறை காட்டாது. அதன் அறிந்து ஒழுகிய  
தீதிலான் செல்வம் போல”(கலி.பா.27)
என்ற கலித்தொகைப் பாடல் விளக்குகிறது.

“நட்டோர் உவப்ப நடையரி காரம்
முட்டாது கொடுத்த முனை விளக்கு தடக்கை  
துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடுங்கோட்டு  
நளிமலை நாடன் நள்ளியும்”(சிறுபாண்.பா.162)
           
       தன்னை நாடி வந்தவர் மனம் மகிழ, அவர் இல்லத்திற்கு இயன்ற பொருள்களைக் குறிப்பறிந்து வழங்கியவன் நள்ளி என்னும் வள்ளல் என்பது சிறுபாணாற்றுப்படை பாடலின் மூலம் விளங்குகிறது. கொடுத்து வாழ்வது சிறப்பானது. அச்சிறப்பினை,

“கொடுப்பின் அசனம் கொடுக்க
வெகுளி கெடுத்து விடல்”(நான்மணி.பா.79)       
      நான்மணிக்கடிகை பாடல் இல்லார்க்குக் கொடுத்தலும், ஏழை  உறவினரை எடுத்துயர்த்தலும் சிறந்ததெனக் கூறுகின்றது. தலைவியின் தந்தை இரப்பவர் மீதுள்ள அன்பால் எவருக்கும் சிறந்த பொருளைத் தருபவராக விளங்குகிறார். இரந்தவர்க்கு ஏதேனும் ஒன்றை முகம் மாறுபடாமல் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க முடியாவிட்டால் வாழ்வதைவிட சாவதே மேல் என வாழ்ந்துள்ளனர் சங்கத் தமிழர்கள். இதனை,

“செறா அதுஈதல் இரந்தவர்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் 
சாதலும் கூடுமாம் மற்று”(கலி.பா.363)
         
என்று கூறுகிறது கலித்தொகை. இதன் மூலம் ஈகைக் குணம் மட்டும் இல்லாமல் மனித நேயமும் வெளிப்படுவதைக் காண முடிகிறது.

விருந்தோம்பல் பண்பு
        தமிழ் மக்களின் பண்டைக்கால பழக்க வழக்கங்களில் ஒன்று விருந்தோம்பல் பண்பாகும்.

“கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே 
வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி” (புறப். 35)
தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்புமிக்கதாகும். விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் மனிதநேயப் பண்புகளுள் தலைசிறந்த ஒன்றாக விருந்தினைக் குறிக்கின்றது. இதனை,

“விருந்து புறந் தருலும் சுற்றம் ஓம்பலும் 
பிறவும் அன்ன கிழவோள் மாண்புகள்”(தொல்.கற்பு.நூ.11)
         
      என்ற தொல்காப்பிய கற்பியல் நூற்பா தெளிவாக்குகிறது. விருந்தோம்பல் சிறந்திருந்ததை சங்கப் புலவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்பின் அறிமுகம் இல்லாத நிலையிலும் கூட வழிப்போக்கர்களை அழைத்து உபசரிக்க வேண்டும். இவ்வுபசரிப்பு விருந்தோம்பலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களாகக் கலித்தொகை ஒரு காட்சியின்  வழிக் சுட்டுகிறது. தலைவியும், தோழியும் சிறுமியாய்த் தெருவில் மணல் வீடு கட்டி  ஆடும் காலத்தே வீட்டைக் காலால் அழித்தும், கூந்தலில் சூடியிருந்த பறித்துப் பாழாக்கியும், பந்தைக் கவர்ந்து ஓடியும், மனம் நோவத்தக்கனவற்றையே செய்யும் கொடியவனாகிய சிறுவயதிலிருந்த தலைவன் பிற்காலத்தில் பருவ மெய்திய தலைவியைக் காண விரும்பினான். தலைவியும், அவள் அன்னையும் வீட்டிலிருக்கும் போது அவர்தம் மனைக்குச் சென்றான். தாகத்திற்கு நீர் கேட்டான். தலைவியின் தாயும் தலைவியை நீர் கொண்டு தருமாறு பணித்தாள் என்பதனை.

“உண்ணுதி வேட்டேன் என வந்தாற்கு, அன்னை 
அடர் பொற் சிரகத்தா வாக்கி, சுடரிழாய் 
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள், என யானும் 
தன்னை அறியாது சென்றேன் ; மற்று என்னை 
வளை முன்கை பற்றி நலிய, தெருமந்திட்டு”(கலித்தொகை.பா.51)
         
      என்ற கலித்தொகை பாடல் அழகுற எடுத்துரைக்கிறது. எத்தகைய சூழலிலும் தவறாது விருந்தோம்பலைக் கடைப்பிடித்தனர் என்பதை கலித்தொகையில் காண முடிகிறது. மனையிலிருக்கும் பரத்தையருடன் கூடி வீடு திரும்புகின்ற கணவன் தன்னுடன் விருந்தினரையும் அழைத்து வருவான் இவ்வாறு அழைத்து வருவதால் மனைவியானவள் அவனொடு ஊடல் மறந்து வரும் விருந்தினரை வரவேற்று விருந்து படைப்பாள் என்பதை,

“விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச்சூள் அஞ்சவும்” (கலித்.பா.70)
         
     என்ற பாடல் வழி அறிய முடிகின்றது. எந்த வேளையில் விருந்தினார் வரினும் முகம் கோணாமல் விருந்தினரை வரவேற்றுப் பேணும் பண்புடைய தலைவியைப் பற்றி நற்றிணைப் பாடலில் அறிய முடிகிறது.

“அல்லி வாயினும் விருந்துவரின் உவக்கும் 
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்”(நற்றிணை.பா.142)
         
       மேலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகமலர்ச்சியோடு வரவேற்றால் அவர்கள் மகிழ்வர். முகத்தில் மாறுபாடு தோன்ற அழைத்தால், அவர்களது முகம் வாடிவிடும் என்பதை.

“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரித்து 
நோக்கக் குழையும் விருந்து”(குறள்.90)
         
        என்ற குறள் உணர்த்துகிறது. விருந்தினரைப் போற்றி பாதுகாப்பது தமிழர்களின் பண்பாக விளங்கியுள்ளமை வெளிப்படுகிறது.

முடிவுரை
      பதினெண் கீழ்க்கணக்கில் அற நூல்கள் கூறும் கருத்துகள் போன்றே கலித்தொகையும்  வாழ்க்கைக்கு தேவையான பிறருக்கு உதவும் ஈகைப் பண்பு, விருந்தோம்பல் பண்பு, நடுவுநிலைமை  முதலிய அறக்கருத்துக்களை தெளிவுறுத்துகின்றன. இவ்வறக் கருத்துக்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் ஒவ்வொருவருடைய வாழ்வும்  சிறந்து விளங்கும்.

துணை நூல்கள்
1.கலித்தொகை, நச்சினார்கினியர்(உ.ஆ), கழக வெளியீடு, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை.

2.தொல்காப்பியம், இளம்பூரணர் (உ.ஆ), சாரதா பதிப்பகம், சென்னை.

3.நற்றிணை, ஔவை துரைசாமி பிள்ளை.சு, பூம்புகார் பதிப்பகம், சென்னை.

4.புறப்பொருள் வெண்பாமாலை, முனைவர் ச. திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம், திருவையாறு. 

5.பத்துப்பாட்டு, மாணிக்கம். புலவர். அ. (உ.ஆ) வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.

6.திருக்குறள்,  பரிமேலழகர் உரை, ராம் பிரசுரம், சென்னை.

7.நான்மணிக்கடிகை, மாதவன்[ப.ஆ]. வே.இரா, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 

Iniyavaikatral_Article_Publishedஆய்வாளர்
ச.ஆருத்ரா,
முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,

திருவாரூர்.

நெறியாளர்
முனைவர் பெ. வெற்றிச்செல்வி,

உதவிப்பேராசிரியர்,
 
தமிழ்த்துறை,
 
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
 
திருவாரூர்.

 

Life principles in Thirikadugam|B.Janani

திரிகடுகத்தில் வாழ்வியல் நெறிகள்
  Abstract     
          Tamil literature possesses a unique and unparalleled excellence. The first works to speak about morality in the Eighteen Minor Works (Pathinenkeezhkanakku) are the ethical texts (Aranoolgal). These books stand      as guides that elevate humankind. All these moral works are   remarkable for  laying    down principles essential for human life. Thirigadugam, one of the  eighteen  minor Tamil anthologies (Pathinen Kilkanakku Noolgal), expounds on  the  essential  virtues for human life, including domestic life  (Il Vazhkai), good qualities, hospitality (Virundhombal), best features of befriending others, abstaining from coveting another’s spouse (Piranmanai   Nayavaamai),  aspects that warrant careful safeguarding, and the righteous   actions of   individuals in public life. By embracing these virtues, every individual can fulfill the true purpose of their existence. This study aims   to examine precisely this aspect delving into the moral teachings of       Thirigadugam which teaches a virtuous life.

ஆய்வு நோக்கம்
       தமிழ் இலக்கியங்கள் தன்னிகரில்லா தனிச் சிறப்புடையது. முதன்முதலில் பதினெண்கீழ்க்கணக்கில் ஒழுக்கத்தைப் பற்றி கூறியிருப்பது அற நூல்களே. இந்நூல்கள் மனித இனத்தை மேம்படுத்தும் நூல்களாகத் திகழ்கிறது. அறநூல்கள் அனைத்தும் மனிதன் வாழ்வதற்குரிய கருத்துகளை வகுத்துக் கொடுத்தப் பெருமைக்குரியது. இப்பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகம் மனித வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிகளான இல்வாழ்க்கை, நற்பண்புகள், விருந்தோம்பல், நட்புகொள்ள வேண்டியவர், பிறன்மனை நயவாமை, காக்க வேண்டியவை, பொது வாழ்வில் ஈடுபடுவோரின் அறங்கள் ஆகியவை எடுத்துரைக்கின்றன. இந்நன்னெறிகளைக் கடைப்பிடிக்கின்ற பொழுது ஒவ்வொரு மனிதனும் பிறவிப் பயனை அடைய முடியும். அதனை ஆராய்வதே இவ்வாய்வின் தெளிவாகும்.


“திரிகடுகத்தில் வாழ்வியல் நெறிகள்”

முன்னுரை
            சங்கம் மருவிய இலக்கியங்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திரிகடுகம் அறம், ஒழுக்கம், கல்வி, அறிவு, தன்னலமற்ற வாழ்க்கை, மறுபிறவி, நம்பிக்கை, வாய்மை மற்றும் நட்பு போன்றவற்றை வாழ்வியல் நெறிகளாக வலியுறுத்துகிறது. இவ்வாழ்வியல் நெறியை  வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  

திரிகடுகம்
          திரிகடுகம்  நல்லதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். மருந்துப் பொருட்களை குறிக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் ஒருவருடைய உடல் நோயைப் போக்குவது போல இந்நூலில் இடம்பெறும் ஒவ்வொரு பாட்டிலும்  சொல்லப்படும் மூன்று அறநெறிகளும் மனிதர்களுடைய அறியாமை நோயைப் போக்கும் என்பதால்   திரிகடுகம் என்று போற்றப்படுகின்றது.

கல்வியின் பயன்கள்
         கல்வி என்பது மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாகும். இக்கல்வி அறிவு, திறன், நல்லொழுக்கம் ஆகியவற்றை வளர்த்து, தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் அடித்தளமிடுகிறது. திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு மற்றும் சங்க இலக்கியங்கள் கல்வியின் சிறப்பைப் பற்றியும், கற்றவர்களின் சிறப்பு, கல்வியின் வலிமை மற்றும் அது தரும் பலன்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன.
பண்டைய காலம் முதல் கல்வியை மிக இன்றியமையாத செல்வமாகச் சான்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். கல்வியினால் மட்டுமே ஒரு சமுதாயத்தை நன்கு முன்னேற்றமடையச் செய்ய முடியும் என்பதைத் திரிகடுகம் எடுத்துக் கூறுகின்றது.

“பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாம்”(திரி.பா.31)
         
         என்பது அப்பாடல். கல்வி கற்கும் போது பல்வேறு நூல்களிலுள்ள நல்ல அறவுரைகளைக் கற்றுணர வேண்டும் என்று கூறுவதனை திரிகடுகம் பாடலால் உணர முடிகின்றது. கல்வியின் சிறப்பினை,

“குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும் 
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து 
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்  
கல்வி அழகே அழகு”(நாலடி.பா.131)
         
      என்ற பாடல் வழி ஒரு பெண்ணுக்குக் கூந்தல் அழகும், முந்தானை அழகும், மஞ்சள் பூசும் அழகும் அழகல்ல. நாம் நல்லவராய்க் கல்வியில் சிறந்து காணப்படுவதே அழகு என்று நாலடியார் விளக்கிக் கூறுகின்றது. நிலையில்லாத அழகை உடம்பிற்குச் சேர்ப்பதை விட்டு விட்டு, நிலைத்து நிற்கும் அழகானக் கல்வியைக் கற்க வேண்டும் என்ற சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளது.

அறம் மற்றும் ஒழுக்க நெறிகள்
         இளமையில் கல்வி கற்பது, பெற்றோர்களை வழிபட்டுப் போற்றுவது, சான்றோர் நெறியில் செல்வது போன்றவை உயர்ந்த அறங்களாகும். அறவழியில் வாழ்வது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது. அறத்தினால் கிடைக்கும் இன்பத்தை,

“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல”(குறள்.39)
         
      என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.  ‘நல்ல நெறிகளைப் பின்பற்றி நடத்தல்’ஒழுக்கம் எனப்படும். ஒழுக்கத்தைத் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுக் கூறாகக் கொண்டிருந்தனர். ஒழுக்கம்பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் இதை மெய்ப்பிக்கும். இல்வாழ்க்கையில் ஈடுபடுவாரின் ஒழுக்கம், ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே மேம்பாடு அடையச் செய்யும்.  இதனை,

“ஒழுக்கத்தின் ஏய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி” (குறள்.137) 
         
      என்ற குறள் வழி அறிய முடிகிறது. இக்குறள் வழி ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள் ஒழுக்கம் கெட்டால் அடையத்தகாத பழியை அடைவார்கள் என்பது தெளிவாகிறது. நட்புத் தன்மை இல்லாதவரிடம்  அன்புரிமையைக் காட்டுபவனும், மனைவியைப் பாதுகாப்பதை இகழ்கின்ற அறிவில்லாதவனும் குணமற்ற தவறுதலான சொல்லை சொல்பவனும் என்ற இம்மூவரும் தமக்குரிய ஒழுக்கத்தை உறுதியாகத் கடைப்பிடிக்காதவர் ஆவர் என்பதனை,

“பண்பில்லார் மாட்டு நசைக்கிழமை செய்வானும்
பெண் பாலைக் காப்பிகழும் பேதையும் – பண்பில்
இழுக்கான சொல்லிடு வானும் இம்முவர்
ஒழுக்கம் கடைப்பிடியா தார்”(திரி.பா.94)
என்று குறிப்பிடுகிறார் நல்லலாதனார்.

பிறந்தும் பிறவாதார்
         
      அருளில்லாதவனும் பொருளினைத் தானும் அனுபவிக்காமல் பிறர்க்கும் கொடுக்காமல் பூமியில் புதைத்து வைப்பவனும், பிறர் மனம் வருத்தும் படி பேசுகின்றவனும், ஆகிய இம்முவரும் மக்களாய் பிறந்தும் பிறவாதவர் ஆவர் என்பதை,

“வீழுத்திணைத்  தோன்றா தவனும் எழுத்தினை
யொன்றும் உணராத ஏழையும் – என்றும்
இறந்துரை காமுறு வானும் இம்முவர்
பிறந்தும் பிறவா தவர்”(திரி.பா.92)
             என்றும்,

“அருளியனை நெஞ்சத்    தடைகொடா தானும்
பொருளினைத்  துவ்வான் புதைத்து வைப் பானும்
இறந்து இன்னா சொல்லகிற் பானுமிம்மூவர்
பிறந்தும் பிறந்திலா தார்”(திரி.பா.89)
         
         என்ற பாடலிலும் விளக்குகிறது திரிகடுகம். பெறுதற்கு அரிய மானிடப் பிறவியை எடுத்ததன் பயனாக  அரிய பேற்றினைப் பெறுதல் வேண்டும். வாழ்வதற்கு வேண்டியப் பொருளை நல்ல நெறியில் ஈட்டுதல் வேண்டும். ஈட்டியப் பொருளை கொண்டு நாம் தூய்மையான  அறநெறியில் செல்ல விட்டு அதனால் அந்த இன்பத்தை துய்த்து அருளைத் தேடிக் கொள்ள வேண்டும். உடலை விட்டு உயிர் போகும்போது நாம் ஈட்டிய சேர்த்து வைத்த பொருள் நம்மோடு வருவதில்லை. அதைக் கொண்டு செய்த நல்வினைப் பயனே தொடர்ந்து வரும்.
மேலும், அருளை தன் உள்ளத்தின் நிறுத்து வைக்காதவன் பொருளை தானும் அனுமதிக்காமல் பிறர்க்கும் தராமல் அதனைப் புதைத்து வைப்பவனும் தன்னிலை கடந்து பிறர்க்குத் துன்பம் தரும்‌ சொற்களைக் கூற வல்லவனும் என்ற இம்மூவரும் மக்கள் பிறப்பில் பிறந்திருக்கும் பிறவாதவராகக் கருதப்படுவர் என்பது வெளிப்படுகிறது.

வாய்மையின் வலிமை
        வாய்மையின் வலிமை என்பது தீமையான சொற்களை எப்பொழுதும் பேசாதிருப்பதாகும். மேலும், பிறருக்குத் தீங்கு விளைவிக்காத எந்த ஒரு சொல்லும் வாய்மையே ஆகும். இவ்வாய்மை பற்றி,

“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்”(குறள்.291)
         
        என்ற குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.  ஒருவனிடம் செல்வம் முதலான வசதிகள் சுருங்கும் போது அவனுடைய நட்பின் அளவை அறிந்து கொள்ளலாம் ஒருவன் துன்பப்படும் போது அவனது நற்குடி பிறப்பின் பொறுமையை அறிந்து கொள்ளலாம் பால் போன்ற தூய்மையின் அவனுடைய உண்மை நிலையையும் புரிந்து கொள்ள முடியும். இக்கருத்து,

“குறளையுள் நட்பளவு தோன்றும் உறவினிய
சால்பினில் தோன்றும் குடிமையும் பால் போலும்
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இம்மூன்றும்
வாய்மை யுடை யார் வழக்கு”(திரி.பா.37)
என்றவாறு குறிப்பிடப்படுகிறது.

அறிவு அற்றங்காக்கும் கருவி
         அறிவு எது சரி, எது தவறு என்பதைப் பிரித்துப் பார்க்க உதவுகிறது இதனால் சவாலான சூழ்நிலைகளைச் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் பகையால் அழிவு வராமல் பாதுகாக்கும் அரண் அறிவு ஒன்றுதான். இவ்வறிவு,

“அறிவு அற்றங்காக்கும் கருவி செறுவார்க்கும் 
உள்ளழிக்கல் ஆகா அரண்”(குறள்.421)
         
என்று இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவியாக விளங்குகிறது. பகைவரும்  உட்புகுந்து அழிக்க இயலாத  அரணாக இருப்பது அறிவு என்பதை வள்ளுவர் வலியுறுத்துகிறார். திரிகடுகம்,

“தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம் பயவா
நல்பயம் காய்வின்கண் கூறுலும் பின்பயவாக்
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இம்மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில்”(திரி.பா.54)
       தனக்கு உண்டாகும் பயனை ஆராய்ந்து உதவி செய்யாதவரை சேர்தலும், ஒருவன் கோபமுற்றபோது நன்மையானச் சொற்களை  கூறுதலும், பின்னால் பயன்படாத குற்றங்களை மற்றவர் மேல் சொல்லுவதும் என்ற இம்மூன்றும் அறிவுத் தெளிவற்றவர்களின் செயல்கள் ஆகும் என்று கூறுவதிலிருந்து எச்சூழலிலும் அறிவுடையவர்களாகத் திகழ வேண்டும் என்பதை புலப்படுத்துகின்றது.

கடன்படா வாழ்க்கை
      ஒருவன் தனது தேவைக்காகப் பிறரிடம் சென்று கடன் வாங்குவது அவனுக்கு அழிவை உண்டாக்கும். ஒருவன் தன்மானத்தோடு வாழ வேண்டுமானால், பிறரிடம் சென்று கடன் வாங்காமல், தனது தேவையைக் கடின உழைப்பின் வாயிலாகப் பொருள் ஈட்டி அதனை நிறைவு செய்து கொள்ள வேண்டும். அத்தகைய கடன் பற்றி,
 
“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்”(திரி.பா12)
        கடன் படாமல் வாழ்பவன் முயற்சினையுடையவன் ஆவான் என்று கூறுகின்றது. முயற்சி செய்து உழைத்து வாழ்பவன் வாழ்வில் கடன்பட்டு வாழ மாட்டான் என்பதை உணரமுடிகின்றது. மேலும்,

“கடன் உண்டு வாழாமை காண்டல் இனிதே” (இனியவை நாற்பது.பா.11)
         கடன் வாங்கி உண்டு வாழாத முறையைக் கண்டறிந்து வாழ்தலே சிறந்தது என்று கூறுவது பொருத்தமுடையதாகும்.

நல்லவரின் கொள்கை
         நல்லவரின் கொள்கை என்பது தங்களின் வருவாயில் கால் பங்கை தானம் செய்தல் செய்த செயல்களை மற்றவர்களிடம் நாடி சிறப்பு பெறாமல் இருத்தல் மற்றும் மற்றவர்கள் சொன்ன நல்ல கருத்துக்களை நாடுதல் ஆகியவற்றை உடையவர்கள் ஆவர்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் லரிது”(குறள்.101)
        தான் எதுவும் செய்யாதிருக்காவும் பிறர் தனக்கு செய்த உதவி இவ்வுலகம் வானுலகம் ஈடாக முடியாது என்பதை வலியுறுத்துகிறது திருக்குறள்.

வருவாயுள் கால்வழங்கி வாழ்தல்
செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்பு உடைமை – எய்தப்
பலநாடி நல்லவை கற்றல் இம்முன்று
நலமாட்சி நல்லவர் கோள்”(திரி.பா.21)
         
       தமது வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு அற செயல்களுக்குச் செலவிடுதல், போரில் வெற்றி கிடைக்கத் தான் செய்த செயல்கள், ஆராயாதபடி அனைவருக்கும் விளங்கி தோன்றும் சிறப்புடையவனாதலும்,பலவற்றையும் நன்கு ஆராய்ந்து கற்றலும் ஆகிய இம்மூன்றும் நற்குண, நற்செய்கைகளால் சிறப்புற்ற  நல்லவரின் கொள்கையால் ஆகும் என்பதை அறிய முடிகின்றது.

நல்ல குடும்ப பண்பு
         
        பெற்றோரால் ஏவப்பட்ட செயலை செய்ய மறுக்கும் மகனும், மனைவியைக் காவாது இகழ்ந்து பேசும் கணவனும், பொய்யை வெறுக்கும் பண்புள்ளோர் விட்டில் உள்ள செல்வத்தை அழிக்கும் மனைவியும் ஆகிய இம்மூவரும் இப்பிறவியில் பயனற்றவர் ஆவர் என்பதை,

“ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது 
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி 
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்முவர்  
இம்மைக் குறுதியில் லாள்”(திரி.பா. 49)
         
        என்ற பாடலிலும், தன்னைச் சேர விரும்பும் பெண்ணைச்  சேராமையும், பிறர் பொருளுக்கு ஆசைப்படாமல், ஆசையினால் பிறர் பொருளை தனதாக்கிக் கொள்ளாமல் இருத்தலும், நிலம் முதலியவற்றை விரும்பி அறப்பயனை அடையாமல் வாழ்கின்ற காலத்தை மதியாமையும் என்ற இம்மூன்றும் நுட்பமான நூல்களை உணர்ந்தவர்களின் கருத்தாகும்.

பிறன்மனை நயவாமை
      பிறர்மனை நோக்குதல் அறமல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை. இருப்பினும், பிறன்மனை விரும்பும் கொடிய செயல் இராமாயணக் காலத்திலிருந்து நடைபெற்றுள்ளது. வானவர்களுக்குத் தலைவனான இந்திரன் கூட இத்தவறினைச் செய்திருக்கின்றான். அவ்வாறு தவறு செய்தவர்கள் மிகப்பெரிய தண்டனையையும் அடைந்துள்ளனர். இருந்தாலும், இக்கொடிய தவறுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இவ்வினைத் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை அறநூலார்கள் வலியுறுத்துகின்றனர். அவ்வகையில் பிறர் மனைவியை விரும்புகின்றவன் விரைவில் அழிந்து விடுவான் என எச்சரிக்கை விடுக்கிறார் இந்நூலாசிரியர். இதனை,

“கொல் யானைக்கு ஒடும் குணம்இலியும் எல்லின் 
பிறன்கடை நின்றுஒழுகு வானும்- மறம்தெரியா(து) 
ஆடும்பாம்பு ஆட்டும் அறிவிலியும் இம்மூவர் 
நாடுங்கால் தூங்கு பவர்”(திரி.பா.19)
         
        என்ற பாடலடியில் போர் யானைக்கு அஞ்சிப் பின்வாங்கும் குணமில்லாத வீரனும், இரவில் பிறர் மனைவியை விரும்பி நிற்பனும் படமெடுத்து ஆடுகின்ற பாம்பை ஆட்டுகின்ற அறிவில்லாதவனும் போன்ற இம்மூவரும் விரைவில் அழிந்துவிடுவர் எனச் சுட்டியிருப்பதைக் காணமுடிகின்றது. இப்பிறமனை நயவாமை பற்றி,

“பிறன்மனை புகாமை அறமெனத்தகும்”  (கொன்றைவேந்தன்.பா.61)
         
        பிறர்மனை விரும்புதல் அறமல்ல என்ற நெறியைக் கொன்றை வேந்தன் உணர்த்தியிருப்பதும், பிறன்மனை நோக்குதல் தவறு என்பதற்கான கூடுதல் வலு சேர்ப்பதாக இருக்கிறது.

நட்பு
         
      தனி மனித ஒழுக்கக் கூறுகளில் நட்புக்குத் தனி இடம் உண்டு. நட்பு என்பது வாழ்வின் பற்றுக்கோடு. மனிதனுக்கு அன்பையும், அமைதியையும், ஆறுதலையும் தரும் நட்பைக் காட்டிலும் சிறந்தது வேறு கிடையாது. தனி மனிதனைச் சமுதாயத்துடன் இணைப்பது நட்பாகும். மனித உயிர்கள் உலகில் பிறக்கும் போதே நட்பு தொடங்கி விடுகின்றது. பாலூட்டும் தாயிலிருந்து நட்புத் தொடங்கிப் பின், ஒத்த பண்புடையாளர் இதயம் கவர்ந்தவர்கள் என நட்பு மலர்கின்றது. இந்நட்பு நாளடைவில் உலகம் தழுவிய மனிதநேய ஒருமைப்பாட்டை வளர்க்கின்றது. தனிமனிதன் ஒருவன் பிறருடன் நட்புக் கொள்ளும் போது நீதி நெறியுடையவர்களுடன் நட்புக்கொள்ளல் வேண்டும் என்பதை,

“கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை 
நள்ளிருளும் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி 
வடுவான வாராமல் காத்தல் இம்மூன்றும் 
குடிமா சிலார்க்கே யுள”(திரி.பா.77)
         
       கீழ் இன மக்களைக் கைவிட்டு வாழ்தலும், நீதி நெறியுடையவர்களை எப்பொழுதும் பிரியாது நட்பு கொண்டு நடத்தலும், தனக்குப் பழி வராமல், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளலும் ஆகிய இம்மூன்றும் குற்றமில்லாக் குடிப்பிறப்பைச் சேர்ந்தார் செய்யும் செயல்களாகும் என்ற சிந்தனைப் புலப்படுகிறது.

“சான்றோர் இனத்திரு”(ஆத்திசூடி.பா.44)
         
      கல்வி, அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்குபவர்களுடன் ஒன்றாய் இணைந்து நட்புக் கொண்டு வாழ வேண்டும் என ஆத்திசூடிச் பாடலின் வாயிலாக உணர முடிகின்றது.

முடிவுரை
        
          திரிகடுகம் என்பது ஒரு நீதி நூல் மட்டுமல்ல மனித வாழ்க்கையின் முழுமையான வழிகாட்டியாகவும் விளங்குகிறது. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் சமநிலையுடன் கடைப்பிடித்தால் மட்டுமே வாழ்க்கை நிறைவடையும் என்பதை இந்நூல் தெளிவுப்படுத்துகிறது.

துணை நூல்கள்
1.திரிகடுகம், தமிழ் பிரியன் (உ.ஆ), கற்பகம் புத்தகாலயம், சென்னை.

2.திருக்குறள், பரிமேலழகர் உரை,  சாரதா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை.

3.கொன்றைவேந்தன், நாவலர். திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டார், பூம்புகார் பதிப்பகம், சென்னை.

4.இனியவை நாற்பது, அய்யாசாமி, சேகர் பதிப்பகம், சென்னை.
5.நாலடியார், புலியூர் கேசிகன் உரை, சாரதா பதிப்பகம், சென்னை.

Iniyavaikatral peer reviewedஆய்வாளரின் பெயர்
பா. ஜனனி, 
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டு,
நெறியாளர்
முனைவர் பெ. வெற்றிச்செல்வி,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,
திருவாரூர்.

 

Paavendharin Kaadhal Paavaiyum Painthamizhum|Dr.D. Sangeetha

Abstract

                A life without love is like a barren desert. Love alone is the foundation for every living being to exist in this world. From Adam and E ve to Valluvar and Vasuki, Kamban, Ilango, Avvaiyar, and the poets of the Sangam age, the various states of love have been beautifully expressed. Even in this century, there is no poet untouched by the theme of love—be it Bharati, Bharathidasan, Kannadasan, or Vaali. Along with romantic love, there are poets who express love towards socialism, non-human living beings, and nature itself. Bharathidasan’s love is like a threefold sweet blend of romance, classical Tamil, and socialism. In his lines on love, the poet vividly portrays the different states of life with colorful imagery.

பாவேந்தரின் காதல் பாவையும் பைந்தமிழும்

ஆய்வுச் சுருக்கம்

      அன்பில்லாத வாழ்வு வறண்ட பாலைவனம் போலாகும்.ஒவ்வொறு உயிர்களும் உலகில் வாழ்வதற்கு அன்பு ஒன்றே அடிப்படை. அம்பிகாபதி அமராவதி, ஆண்டாள், உதயனகுமாரன் உலகப்பொதுமறை தந்த வள்ளுவன் வாசுகி ஆதாம் ஏவாள்கம்பன்  இளங்கோ,ஔவையார் ,அக்காலப் புலவர்களும் சங்க இலக்கியங்களும் அன்பின் நிலைகளை அழகாக கூறியுள்ளது. இந்நூற்றாண்டிலும் பாரதி,பாரதிதாசன்,கண்ணதாசன்,வாலி என காதலைத் தீண்டாத கவிஞர்கள் இல்லை.காதலோடு பொதுவுடமை அஃறிணை உயிர்கள்,இயற்கை என எல்லாவற்றிலும் அன்போடு இயற்கைமேல் காதல் கொண்ட கவிஞர்கள் உண்டு. பாரதிதாசனின் காதல் பாவையோடும்  பைந்தமிழோடும்  பொதுவுடமை மும் கலந்த முக்கனிச்சாறாக உள்ளது. காதல் வரிகளிலே வாழ்வின் நிலைகளை வண்ணக் கோலமிட்டு கவிஞர் சுட்டிக்காட்டியுள்ளார் அவரின் தமிழ் மேல் காதலை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

முன்னுரை

          வண்டிக்காரன் மாடு மேய்ப்பவன் பாவோடு பெண்கள் தறித்தொழிலாளி நினைவுகள் உழவன் பாட்டு, உழத்தி, ஆலைத் தொழிலாளி, இரும்பாலைத் தொழிலாளி, கோடாலிக் (கோடரி) காரன் கூடைமுறம் கட்டுவோர், பூக்காரி, குறவர், தபால்காரன், சுண்ணம் இடிக்கும் பெண்கள், ஓவியக்காரன் போன்ற பல தொழிலாளிகளின் காதல் பாடல்களைப் படைத்துள்ளார் பாரதிதாசன்.அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள்.கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்.”என்று காதலின் வலிமை எத்தகையது என்று ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ எனும் காவியத் தன்மை கொண்ட கவிதையில் பாடுகிறார் பாவேந்தர்.ஒவ்வொறு வரிகளிலும் புதுமையான சிந்தனைகளைப் புகுத்திப் பகுத்தறிவு சிந்தனைகளை பைந்தமிழில் காதலின்  எழுச்சிக்கனலாய்   அனைவருக்கும் பொருந்தும்படி அமைத்துள்ளார்..

சுருக்கச் சொற்கள்: (key words )

          காதல், ஆமை, அன்பு, கடமை,காதல், காதலியர், பைந்தமிழ் கன்னித்தமிழ் தமிழ் காதலே, சமூகப் புரட்சி, பொதுவுடமை, அழகு, வர்ணனை, தொழிலாளி, விதவை, மறுமணம், உழவன், வாழ்வுணர்வு, சுயமரியாதை, பசி – வறுமை, புரட்சிக் கவிஞர்.

விதவை மேல் காதல்

     புலவர்களில் சிலர் அரசர்களின் காதலைப் பாடியவர்கள் மத்தியில் உழைப்பாளிகளின் காதலைப் பாடிய ஒருவர் பாவேந்தர் “மாந்தோப்பு” எனும் கவிதையில் அமுதவல்லிக்கும் குப்பனுக்குமான காதலை பாடியிருப்பார். ஒரு பெண்ணை விரும்பி அவளிடம் தன் காதலைச் சொல்லும்போது, நான் சிறுவயதில் விதவையானவள் என்று அவள் கூறுகிறாள். குப்பன் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். பிற்போக்கு எண்ணம் கொண்ட ஊர்க்காரர்கள், சாதிகாரர்கள் போன்றோர் ஊர் விலக்கம் செய்வோம் என்று பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள். சாதியவாதிகளை எல்லாம் மீறி அப்பெண்ணை மணக்கும் அந்த கவிதையில் மறுமணத்தை வலியுறுத்தி பாரதிதாசன் எழுதிய வரிகள் சிறப்பு வாய்ந்தவை.

உன்னை எனக்குக் கொடுத்துவிடு! – நான்

உனக்கெனைத் தந்திட அட்டியில்லை’ – இந்தக்

கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் – எட்டிக்

காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்;

சின்ன வயதினில் என்றனையோர் – பெருஞ்

சீ மான் மணந்தனன் செத்துவிட்டான்! – எனில்

அமங்கலை’ என்றுகண் ணீர்சொரிந்தாள்!

          பாவேந்தரின் இப்பாடல் வரியில் கன்னல் மொழிக்கு கனிமொழியானவல் நீ என்று விதவைப் பெண்ணை கன்னித்தமிழ் போலானவள் என்று மார்க்ஸிய கவிஞராக கையாண்டுள்ளார்.இன்றைய விதவைப் பெண்கள் கன்னித்தமிழ் போல் கன்னிகளாக விதவைகள் கோலம் கொண்டு வாழ்கின்றனர்.இந்நிலையை அன்றே தனது பாடலில் கணித்துள்ளார்.

தமிழ் போல் அவளின் அழகு

 வஞ்சிக்கொடி போல இடை

 அஞ்சத்தகு மாறுளது

 நஞ்சுக்கிணையோ, அலது

 அம்புக்கிணையோ, உலவு

 கெண்டைக்கிணையோ கரிய

 வண்டுக்கிணையோ, விழிகள்

 மங்கைக்கிணை ஏதுலகில்

 அங்கைக்கிணையோ மலரும்?

மேனி அதுவோ அமிழ்து, வீசுமண மோமிகுதி

கானிடை உலாவுமயில் தானுமெனையே அணைய நினையாளோ?

    அமிழ்தான மொழியாலே நஞ்சுகொண்ட பாம்பு போல அவள் இடையும்,எதிரியை வீழ்த்தும் அம்பான பார்வை கொண்டு உலா வருகிறாள். ,வண்டு போல் அவள் கண்களும் என்னை வட்டமிட்டு சுத்தி வருகிறது.,வானில் உள்ள தேவலோக மங்கை போல் வந்தவளோ இந்தப் பெண்., காணகத்தில் உலவும் மயிலானவள் என்று அழகான பைந்தமிழில் அழகான  தமிழ் பெண்ணாக ஆடைகட்டி வந்து நிற்கிறாள் .அவளைக் கண்டு மனம் தல்லாடி போகும் பேரழகி ,தேன் தேடி ஓடிவரும் வண்டு போல் என் மனம் அவளை நாடிப் போகும் பேரழகே உன்னை ஆராதிக்க தமிழை விட அழகானமொழியில்லை.அத்தமிழே என் காதலியாக வருகிறாள் இதயத்தில் எத்தனை அழகான உவமை நயம்கொண்ட காதல் பாடல் படிப்பவர் உள்ளம் கொள்ளைபோகும் படி அமைப்பது தமிழின் தனிச்சிறப்பு..

பாவேந்தரின் தமிழ் காதலி

         பெண்ணொருத்தி பார்த்துவிட்டால் போதையாகும் உள்ளமது பாவேந்தரின் காதலிலே கன்னித்தமிழும் கலந்து விட்டால் காதல் தீயை ஏற்றிவிட்டால் அவரின் மங்கையும் மங்காத தமிழ் போல் அழகானவளாக மாறிவிட்டாள்.கையில் இறகும் உண்டு!அவளைக் காதல் மைதொட்டு மெய் தொட்டு வடித்துவிட்டேன் நானும் ஒரு பட்டாம்பூச்சி பறவையாகி,பறக்கிறேன்.கொம்பிற்கினிய கனியாகி என் பசிதனிக்க வருகிறாள்.கடவுள் படைத்தல் நல்அமுதாக அரசர்கள் உணவைவிட தித்திப்பு சுவைமிகுந்தவள் நான் உண்ண காத்திருக்கிறாள்.இசையின் ஏழு சுரங்களும் இசைக்க அழகான சுனையிலே நீராடி மகிழ்வது போல் என்னில் வந்தாள்.என்னோடு நீராடி காதல் மொழி சொன்னாள்.

அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள்

கொஞ்சுப்பரி மாறுமொழி

பண்டைத்தமிழோ, அலது கொம்பிற்கனி யோ

——– —— ——-   ‌‌

கூடுமெனிலோ பெரியபேறு பெறுவேன் அலது.

நீடுதுயரே அடைவேன் ஈடுசொலவோ அரிது,

தேடுபொருள் யாதுமிலை, சீருமிவளே, உறவு

      பழமையானவளோ கொஞ்சும் மொழி பேசிவரும் பாவையிவளோ, கொம்பில் பழுத்த முக்கனிச் சுவையானவள்,என் அன்பிற்கினிய காதலியைத் தேடுவது தவிற ஒன்றுமில்லை .பொன்போல மின்னும் அழகான புன்னகை கொண்டவள்  தமிழோடு விளையாடும் எதுகை நயம் உறவாட உதித்த காதலில்  மோனையும் எதுகை , கரங்களால் இணைந்திட  நற்பண்புகளை  அணிகலனாக காதலிக்கு தேன்கவிகளை சூடியுள்ளார். நான் தேடும் பொருள் யாதுமில்லை தேவதையாய் அவள் எனக்கு கிடைத்துவிட்டாள் பொன் பட்டது தென்பட்டது மின்னும் தங்கம் போல்  அவள் மேனி ஒளிரும் பொண்ணிலவு ஒன்று பூமிக்கு வந்தது போல் அவளின் தோற்றம்.அன்பு மாது அவள் புன்னகை பூத்திடும் புது வசந்தம் அவள் அவளாலே இன்புற்றுடும் என் வாழ்வு. அன்பிலே அழகிய தமிழ் மொழி .அவள் புன்னகை  பூத்திட்ட பூங்காவனம் என்று தனது காதலியைக் கூறியுள்ளார்.இன்றைய காதலர்களுக்கு முன்னோடியாக கவிஞரின் தமிழ் மொழி காதல் அமைந்துள்ளது.

பாவேந்தர், பாடலில் தேடும் பைங்கிளி

பாடலவள் நான்ந(ல்)லுரை ஆடலவள் நானடையும்

ஓடைமலரே அரசி ஊறுமணம் நானுமதில்

நீடவரும் யாழுமவள், நீர்மை இசை நான்அதனில்

ஈடுபடு மேனியவள் ஏழைஅதில் ஆவிஎன

அமைவாளோ அவள் …. எனக்கா?

     தமிழும் அவளும் நான் தேடிய மனதில் குடி கொண்டவர்கள்  நெஞ்சிற்குடி யேறிய நிலை நான் அறியவில்லை. அவள் என் இதயத்தில் எப்பொழுது குடியேறினால் ஓடை மலராக என் மனதில் மணம் வீசுகிறாள். நானும் அதில் அவளோடு வாழுகிறேன். நீரின் இசை போல அவளின் குரலில் நான் மயங்குகின்றேன் என் இதயத்தில் குடிகொண்டு அவள் வாழுகின்றாள். ஏழை என் மன மாளிகையில் அமர்ந்து ஆட்சி செய்கிறாள். இந்த ஏழையின் நறுமணம் வீசுகின்ற மலர் போல மயங்கி நின்றாலோ என்னிடம் தெரியவில்லை என்னுள் ஆவியாக புகுந்து விட்டால். அவள் எனக்காக பிறந்தவள் என்று அவளிடம் என் மனதை நானும் இழந்து விட்டேன்.

மானமவளே, எனதின் ஊனுமவளே. எனுயிர்

தானுமவளே, புகழ்மை மானமவளே, கொடிய

மாமழையி னாலுலகு தானமழையுமாறு நலம்

அருள்வாளோ  

         நான் பாடும் இசையானவள், மழையானவள்,அமிழ்தானவள், யாழ்போல ஊனும் உயிருமாக கலந்தவளாய் நெஞ்சிலே குடிகொண்டுள்ளவள் நதிபோல் மான்போல் ஓடிவருவாள். நங்கையுள்ளமும் நானறிவேன் என்னைத்தவிர என் தமிழ்காதலியை யாரும் அறியமுடியாது.ஏழ்மை இளவரசனாய் நான் வாழ்கிறேன். என் இல்லத்திலே தோழமையோடு மொழியும் மங்கையென வந்த கங்கை இவளோ? மழை போல அமிழ்தானவள். கானகத்து தேன் போல சுவையானவள்.ஏழ்மை எழிலரசியாய் என்னுள் வீற்றிருப்பவள். அஞ்சத்தகமோ அவளின் பேச்சை நான் கேட்டால். இன் சொல்லால் என்னை இதயம் நிறைப்பாளோ? வன்சொல் சொல்லி என்னை மறுப்பாளோ? மங்கைக்கு மங்கையாக மனதை மாற்ற வந்தவளும் இவளோ? என் உயிரானவள். என் உணர்வாக நிற்கிறாள். இதயம் என்னும் மாளிகையில் ஒளிரும் வண்ண நிலவும் தமிழ் கொடியும் இவள்தான்.என்னில் நிறைந்தவள்.. என்று தமிழை வர்ணித்து பாடியுள்ளார்.

காதலி முகவரி தேவை

      இன்று காளையொருவன் பெண்ணை விரும்பி விட்டாள் அவளைத் தேடி பித்தனாக அழைக்கிறான், முகம் பார்த்து முகவரி வாங்கும் வரை அவனின் தவிப்பு காட்டாற்று வெள்ளம் போல் ஆரம்பிக்கிறது          .நண்பனை ஒற்றனாக தூது போக வைக்கிறார்கள்,வாட்ஸ் அப், முகநூல் தேடி அழைக்கிறது இளைய சமுதாயம் இன்று.ஆனால் அன்றோ தகவல் தெரியவில்லை. அவள் சென்ற இடம் முகவரி அறியவில்லை. அவளின் நெற்றியோ ,நிலாப் பிறை,மைவிழிக் கண்களும் காதலைப் பேசுகிறது. அப்பட்டமான ஒப்பற்ற நீல நிற கார் கூந்தலும் காதலால் கட்டிப்போட்டது என்னை. அன்றலர்ந்த மலர் போல முகமும் ,ஒப்பற்ற மேனி, பத்தரை மாற்றுத் தங்கம் இழைத்தது போன்ற உடல் அழகு. இத்தனையும் நான் கண்டேன்.முத்தை பழிக்க அவள் பற்கள் போதும்.. கூந்தல் மலையின் மீது விழும் அருவி போல ஆர்ப்பரித்து நின்றது. அந்த கூந்தலிலே என்னை முடிந்து சென்றாலோ சென்ற இடம் தெரியாமல் சித்தம் கலங்கி செந்தமிழை ருசித்து பித்தனாய் நானும் வாழுகிறேன். அவளைத் தேடி அலையும் மனதிற்கு பதில் கூற வழி இன்றி விழி பிதுங்கி இருக்கின்றேன் .        வெறுமனே.     

     கீழ் திசை வானம் நோக்கி தலை குனிகிறேன். மீண்டும் வருவாளோ சிந்தாமணி போன்ற குற்றமில்லாத தமிழ் காவியமாய் என் காதலை ஏற்று மோட்சம் தருவாளோ? என்று காத்திருக்கிறேன் வழி தெரியாது நானும் வலியோடு நித்தமும் வாயிலில். காதலின் மேல் கொண்ட அன்பே தமிழ் ஊற்றாக்கி உள்ளக்கிடங்கை ஓசையின்றி உலா விட்டுள்ளார் கவிஞர்.

தகவல் தெரியவில்லை அவளின்

முகவரி அறிந்துவா ஒற்றா!

அகல நெற்றி நிலாப்பிறை! ககண்கள

—— —- ——   —– ——

சரிகுழல் மலையின்வீழ் அருவி?

புகை வண்டியில் என் மேற் புன்னகை

    புகைவண்டியில் புகையிற்க்கு நடுவே தனது காதலி யார் என்று தேடுகிறார். கண்டுபிடித்துவிட்டார்.பொழிந்து நடுவே புன்னகை பூத்த மலராக எழுந்து போனாள். (தகவல்) அழகாக தனது காதலியாரென்று கவிதைப் பாடலில் ஓவியமாக காதலியை யார் என்று காட்டியுள்ளார்.

பாவேந்தரின் பாவையும் காதல் பார்வையும்

சிதைந்தது முதற்பார்வை? காதற்

சிரிப்போடு பார்த்தாள் பிற்பாடு!

மிதந்து வந்த தங்கத் தோணி எனைவிட்டு

மறைந்தது! காதல் வெள்ளத்தில் நொந்தேன்,

    அழகான புகைவண்டி  அதில் எதிரே வந்தவள் என் தேவதையாகி நின்றால்  அவளும் எனக்கென்ன என்று மனம் நிறைய புன்னகையோடு என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் அவளை நோக்கி சிரித்தேன். பாவையின் கண் பட்டது. அவளும் அடடா என்னை அழகாகப் பார்த்து சிரித்தாள்.நான்கு கண்களும் கதை பேசியது. சிறப்பாய் அமைந்தது முதல் பார்வை. பார்வை பட்டதால் காதல் சிரிப்போடு பார்த்தால். பிறகு மறைந்து போன நிலவாக என்னைவிட்டு விலகிப் போனாள். அருகே வந்த தங்க தோனி என்னை விட்டு மறைந்தது. காதல் வெள்ளத்தில் கொஞ்சம் நானும் வழியறியாது நின்றேன்.அவள் சென்ற திசையைப் பார்த்து.புகைவண்டி நில்லாது சென்றது. அங்கு என் மனம் பறிபோய் நின்றது.          தேவதை இறங்காமல் சென்றுவிட்டாள். நானும் அவளின்றி உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை இன்றி புகைவண்டியை பார்த்துக் கொண்டே எந்த எண்ணமும் இன்றி நடந்தேன்.

     கொல்லிமலை செவ்வாழை போல கனிச்சுவை அந்த இதழை அவளிடம் மட்டுமே நான் கண்டேன் கோவைப்பழ இதழோ ?இல்லை செந்நிற மிளகாயின் நிறமோ! பவளத்தின் நிறத்தை பாதி விலைக்கு வாங்கி வந்தாலோ? அதுபோல அவளின் உதடு அழகு இருந்தது..பெண் அவள் என் உள்ளத்தை தழுவி ஊடுருவி நல்ல அடையாளத்தைப் பறித்து சென்றாள் மீண்டும் என்னைத் தேடி வருமா அந்த முகம் என்று மனதிலே ஆயிரம் கேள்விகள் பாவை முகமோ பதிந்தது.      பசுமரத்து ஆணி போல நானும் பதித்து விட்டேன் மீண்டும் தேடுகிறேன். ஒவ்வொரு புகைவண்டிகளாக மீண்டும் அவள் வருவாளா என்று காதலிக்காக காத்திருக்கிறார்.

பறந்து வந்த காதல் கிளியே:

திறந்த என் மனக்கூடு புகுவாய்!

பிறந்த பெண்கள் பல கோடி உன்போல்

பெண்ணொருத்தி தேடி நான்

இறந்துபோகுமுன் னாடி மில

எழில் சுமந்தபடி என்னை நாடிப்

  பாவேந்தரின் காதலி பறந்து வந்த நின்றாளோ பார்வையிலே கொன்றாளோ !கவிஞர் காதலின் வலிகளை இக்காலக் கவிஞரகளின் காதல்போல் பார்த்த ஞாபகம் இல்லையோ? பருவ நாடகம் தொல்லையோ? வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ எனப் புகைவண்டியில் கண்டதும் மனம் மயங்கி பாவேந்தரின் உள்ளம் வலியால் துடித்தது. எந்த காலமானாலும் காதல் மனம் படும் பாட்டை ஆயிரம் மொழிகள் இருந்தாலும் செந்தமிழவளைப் போலாகுமா ? உள்ளத்திலே நீ இருக்க வேறு பெண்ணொருத்தி நாடுமோ இந்த பூமியில் பிறந்தது பல ஆயிரம் கோடிப் பெண்கள் உன்னைப் போல பெண்ணொருத்தியை என் வாழ்வில் நான் கண்டதில்லை பிறந்த  மலர்களும் பெண்களாக இருந்தாலும் நான் அவர்களை ஏற்க மாட்டேன் எனக்கு தேவதையும் நீதான். காதலியும் நீ தான். என் இமைகளும் நீ தான், நான் இறக்கும் முன்னே என்னைக் காண வந்துவிடு என்று காதலி சிறப்பை காவியமாக்கிவிட்டார்.

தேடிவந்த தமிழ்காதலே:

இலங்கைதனில்இருந் தாயா? அவர்செய்

இழிவு கண்டு நைந் தாயா? நீ

கலங்கி இங்குவந் தாயா? என்

   உன்னை யார் தீண்ட நினைத்தாலும் என்கரம் கொண்டு ஒடிப்பேன் கடல் தாண்டி வந்தாயா காதலன் நான் என்று நின்றாயா ?உனது உள்ளக்குறைகளை என் கரம் கொண்டு காப்பேன் உன்னைத் தீண்டும் காற்றைக் கூட கைது செய்வேன். உன் உள்ளத்தை நான் அறிவேன் அதில் உள்ள குறைகளையும் நான் களைவேன். என்னைத் தேடி வந்தவளே என் உயிரில் வைத்து காத்திடுவேன். உனக்கு ஒரு இழிவு என்றால் நான் அதனைத் தீர்த்திடுவேன் உள்ளம் எனும் மனக் கோவிலிலே உயர்ந்து நிற்கும் என்னவளே நீ நாடு தாண்டி வந்தாலும் என் இதயம் தொட்ட இளவரசி நீயே வாழ்க என்று சூளுரைத்துள்ளார்.

அமைந்திட்ட திண்ணையிலே

நண்பன் வருகையினை

 நான்பார்த் திருக்கையிலே

     நண்பனுக்காய் நான் காத்து இருக்கையிலே அழகான பூஞ்சோலையில் ஊறும் மணி கீற்று போல அமைந்திட்ட திண்ணையிலே நண்பருக்காய் பார்த்திருந்தேன் நீ வந்து முன் நின்றாய் நினைவெல்லாம் நீயாக உன்னைத் தேடி அலைகின்றேன். நானே கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் பெண்ணழகி நீயென்று நான் அறியவில்லை.

வெண்பல்லைப் பூவிதலால்

   மூடியொரு மெல்லிதான்

போனாள் இடதுகை

   பொற்குடத்தைப் போட்டணைத்தே

       வெண்பல் புன்னகையால் ,பொற்குடத்தை அவள் அனைத்து முத்தமொன்று தந்துவிட்டாள் இவளை நான் எந்த நிலையிலும் பிரியமாட்டேன் பிரிந்தால் வாழமாட்டேன்.என்று இன்றைய இளைஞர்கள் பாடும் பாடலாக நான் உன்னை நீங்க மாட்டேன் என்று காதல் கண்ணனாக பாடியுள்ளார்.

கொஞ்சாமை ஒன்று மகிழாமை

ஒன்று குளிர் தமிழால்

கெஞ்சாமை ஒன்று கிடவாமை

பாராமை ஒன்று பகராமை

திடுக்கிட்டு மனம் கொதித்தேன்

பருக்கைக் கல்லும் உருகிவிடும்.

   எத்தனையோ ஆமை உண்டு அதில் காதலில் முயலாமை, இயலாமை,சேராமை ,பேசாமை, புகழாமை எத்தனையோ மையிருந்தாலும் காதலி கண்மை போல் என் கைகளில் இல்லாமை மட்டும் வேண்டாம்..என் கையில் இறகும் உண்டு காதலி நீ என்மனதில் உண்டு சிரிக்கும் ஓவியமே உனது புன்னகையில் போதை கொண்டேனடி பாவை உன்னாலடி..செந்நிற மலரும் தோற்குமடி,திரும்பிப் பார்க்க பிறந்தவளே,உன்னாலே திடுக்கிட்டு மனம் தறிகெட்டு நின்றேன்.பாராங்கல்லும் உருகி விடும் உனக்கு மனம் ஏனடி இலகவில்லை,காதலின் கவலை  தந்தாயே என் பாடலை கேட்டால் கல்லும் உருகும் காதலியே !நீ ஏன் என்னைத் திரும்பிப் பார்க்கமல் போகிறாய்…தமிழ் கூட என்பதை கேட்டு அருள்வாளே  இயலாமை எனக்கில்லையே.நீ பார்த்ததிட்டு போனாலும் பார்க்காம போனாலும் பார்த்திட்டிருப்பேன் என்று பாரதிதாசனும் எதிர்கால இளைஞர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று அன்றே பாடிவிட்டார் .

என்னுயிர் காதலியே அருகேவா;

பச்சிளநீர், வெண்ணிலவு,

பாங்கி என்று நினைத்தேன் எனைப்

பார்த்திடவும் மறுத்து விட்டாய்

பதறி மனம் கொதித்தேன்

தீயால் நெஞ்சு கொதித்தேன்,

ஆனை ஒன்றும் மதம் அடங்கும்

       தனது காதலி பச்சிளநீர் காதலியே பெளர்ணமி நிலவே வெளியே வா, தமிழின் அருள்உண்டு தரணியில் வாழ இடமுண்டு நீபேசாத நிமிடங்கள் தீயாக மனம் கொதிக்கிறது .தமிழ் கொண்ட அருளாலே என் நோயும் கொஞ்சம் குறைகிறது.தோழியாக நினைத்தேன்.ஏனோ நீ பார்த்ததும் மறுத்து விட்டாய் தேனருவி பூந்தோட்டம் தேடி வந்தேன் வண்டாட்டம் செல்வம் என்று உன்னை நினைத்தேன்.

       சேரமுடியாது நானும் தவித்தேன். தீயாய் நெஞ்சு கொதித்தேன் திரும்பிய இடமெல்லாம் உன்னால் துடித்தேன். பாதியான இதயத்தை பக்குவமாய் காத்திடவே பறந்து வந்தால் ஆகாதா? பாவையுள்ளம் என்னை நாடாதா?.பேசாது நீ போனால் தீயாக கொதிக்குதடி உள்ளமோ நெருப்பில் வெந்து சாகுதடி அன்னைத் தமிழ் எனக்கு அருமருந்தாகி நின்றால் பாவேந்தரின் ஒவ்வொரு வரியும் செந்தமிழை காதல் கனிச் சுவையாக்கி தன் காதலைத் தந்துள்ளார்.

நீலவான ஆடையில் காதலி

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து

நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமு கத்தைக்

கோலமுழுதும் காட்டிவிட்டாற் காதல்

கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ?”

கவின்நிலவே உனைக்காணும் இன்பம் தானோ!”  

       காதலியைக் காணும் இன்பம் குறித்து எழுதுகிற போதும் மொழிச்சுவையுடன் பொதுவுடமைச் சிந்தனையைச் சேர்த்து சுரண்டப்படும் மக்களின் வாழ்வையும் பாடினார்பேறெனில் அவளன்பு பெறுவதாகும். காதலிலும் பொதுவுடைமைப் புரட்சிப் போக்கைக் கொண்டு வந்தவரே பாரதிதாசன். தனது பாடல்களில் ஏழை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.. ஏழைத்தொழிலாளியின் மனைவி, மாட்டுவண்டிக்காரன் மனைவி போன்று சாதாரணப் பெண்களின் வாய்மொழிப் பாடல்களாக அமைவதுடன் பொதுவாகப் பழந்தமிழ் பாடல்களில் வரும் காதலியர் தம் காதல் உணர்வுகளைத் தமது காதலனிடம் வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். ஆனால் பாரதிதாசன் பெண்டீர் புரட்சிப் பெண்டீராகத் தம் காதல் உணர்வுகளைக் காதலனிடம் வெளிப்படையாக கூறவல்லவர்களாகவே படைத்துள்ளார்.

எதிர்பாராத அன்பின் முத்தம் :

           எதிர்பாராத முத்தம் என்னும் நூலிலே ஒரு பெண்ணின் வருகையை வர்ணிக்கும் வரிகளில் எம் கண்முன்னே ஒரு பெண்ணைக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

நீலப் பூவிழி நிலத்தை நோக்கக்

கோலச் சிற்றிடை கொடிபோல் துவளச்

செப்புக் குடத்தில் இடதுகை சேர்த்தும்

பெண்ணழகி அன்னப் பேடுபோல் செல்கையில் – செத்துப்

போகவும் மனம் நொந்தேனே

   காதலின் தவிப்பும் ,காதலிக்கு வாங்கி வரும் தாவணி ஏற்கமறுத்தால் இதயத் துடிப்பும் அதனால் படும் வேதனை தேவதாஸாக மாறிவிட்டார்.காதலி வார்த்தை கேட்டு வாழ்க்கை இழக்கவும் துணியும் ஆண்வர்க்கத்தை இங்கு சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார்.

காதல் காவியம் குடும்ப விளக்கு

    குடும்பவிளக்கு என்னும் அவரின் நூலைப் படிக்கும் போது ஒரு திரைப்படத்தைப் பார்த்த உணர்வு கண்முன்னே சித்திரிக்கப்பட்டிருந்தது. குடும்பவிளக்கு நாயகியின் கண்களை வர்ணிக்கும் போது தெளிவிலாக் கருக்கலில் ஒளிபடும் அவள்விழி குளத்து நீரில் குதிக்கும் கெண்டை மீன் எனக் கண்களைக் கெண்டை மீனுக்கு ஒப்பிட்டுப் பாடுகின்றார்.இவ்வாறே பெண்களின் கண்களை வர்ணிக்கும் வண்ணக்களஞ்சியப்புலவர்

தளம்குளிர் புனல்என நெடிய

கருவிழிஇரண்டும் கயல்எனத் தோன்றக்

கண்டுவந்து உடல் அசையாது

    மாடத்திலே நிற்கின்ற பெண்ணின் கண்கள் பளிங்குத் தரையிலே பிம்பமாகத் தோன்றுகின்றன. அந்நிலப்பகுதி குளிர்புனல் என நினைத்து மீன்கொத்திப் பறவைகள் பறந்து வருகின்றன.அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டும் கயல்மீன்கள் போல் காட்சியளிக்கின்றன. எனவே அப்பெண்ணின் கருவிழிகள் இரண்டையும் கயல் மீன்கள் என்று நினைத்து மீன்கொத்திப் பறவை கவ்விக் கொள்ள வந்து வீழ்கின்றது என்று அழகாகப் பாடியுள்ளார்..

மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே!

போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே என்று வாலி பாடுகின்றார்.

இதே கண்கள்

வள்ளுவர் 1093 ஆவது குறளிலே

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்

யாப்பினுள் அட்டிய நீர்

           நான் பார்க்காத போது என்னைப்பார்த்தாள். பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள். இந்தச் செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும் என சாலமன் பாப்பையா பொருள் கூறுகின்றார்.

காதல் குற்றவாளிகள்:

   இதனையே பாரதிதாசன் காதல் குற்றவாளிகள் என்ற தலைப்பில் வெளிவந்த கவிதைகளில் அழகான ஆண் ஒருவனை ஓடை குளிர் மலர் பார்வையால் அவள் பார்த்து விட்டாள். பாடம் படித்து நிமிர்ந்த விழி பட்டு திரிந்தது. அந்த மானின் விழி பட்டதால் என் மனம் பறிபோனது .ஆடை திருத்தி அழகாக நின்றால். விழி பட்டு மெய் பட்டு மெய்மறந்து நின்றேன். பட்டு மேனி அவளை நானும் கண்டு. ஆயிரம் ஏடுகளைத் திருப்பினாலும் மனம் அதில் செல்லவில்லை அவள் விழிகளில் விழுந்து விட்டது மனமும். ஏடு எடுத்து நான் பயில மறந்தேன்.இதுதான் அன்பென உணரவைக்கிறது.

ஓடைக் குளிர் மலர்ப் பார்வையினால்- அவள்

உண்ணத் தலைப்படும் நேரத்திலே,பாடம் படித்து நிமிர்ந்த விழி- தனிற்

பட்டுத் தெறித்தது மானின் விழி!

      உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே.!. விண்ணை நான்  பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே” என்று கவியரசு கண்ணதாசன் கூட அற்புதமாக எடுத்துக் காட்டியுள்ளார்.

காதலில் பெண்மையின் பெருமை

           பெண்மையின் பெருமையையும் உலகுக்கு உணர்த்துவதற்கு பாரதிதாசனின் குடும்பவிளக்கு ஒன்று போதும். பெண் வீட்டின் கண். அவள் உறவிலே விளங்கிடும் குடும்பம் என்னும் தத்துவத்தை அழகாகச் சித்திரித்திருக்கின்றார். காலை எழுகின்றாள். கோலமிட்டாள், கணவனைப் பிள்ளைகளைத் துயிலெழுப்புகின்றாள், காலையுணவு தயாரிக்கின்றாள். காதலின் மேன்மை உணவுப் பரிமாற்றத்தில் அறியக் கூடியதாக இருக்கின்றது.

என்னவளை நான் மறப்ப தெப்படி?

  அவன் மேல் தானே நானேஆசை வைத்தேன் மானே!        (அவன் மேல்).     வீட்டுவேலைகள், தையல்வேலைகள், மரச்சாமான்கள் பழுதுபார்த்தல், கொல்லூற்றுவேலை, மாமன்மாமி தேவைகளின் கவனிப்பு, பிள்ளைகளுக்கு, கணவனுக்கு எது பிடிக்கும் என தேடிச் சமைத்தல், உணவு பரிமாற்றம், கடைக்குச் சென்று கணக்கு வழக்குப் பார்த்தல், பிள்ளைகளைக் கடற்கரைக்கு அனைத்துச் செல்லல், பிள்ளைகளை அழைத்து வரல், பெற்றோர் பெருமை பிள்ளைகளுக்கு எடுத்துரைத்தல், பிள்ளைகளை உறங்கச் செய்து கணவன் கட்டிலண்டை வந்து பேசல், விருந்தினர் வரவேற்றல், இவ்வாறு நீண்டு கொண்டு செல்லும் குடும்பவிளக்கு நல்ல பல கருத்துக்களையும் இவற்றினூடு இடையிடையே தமிழின் பெருமை, பொதுவுடைமைக் கருத்துக்கள், போன்றவற்றையும் சுவையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.காதல் அடைதல் உயிரியற்கை! – அது

நீதடு மாற்றம் அகற்றிவிடு! கை

நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! அடி

கோதை தொடங்கடி! என்று சொன்னான் – இன்பம் என மூடக் கொள்கையை உடைத்தெறிந்து தன் எண்ணச் சுதந்திரத்தை எழுத்தில்  வடிக்கும் திறம்பெற்றவர் பாரதிதாசன் என்பதை அவரின் காதல் வரிகளிலும்,தமிழ் மொழி மேல் கொண்டகாதலிலும் நாம் கண்டுனற முடிகிறது.

முடிவுரை

    முதுமையில் ஏற்படும் காதல் பற்றி சுவை மிகுந்த பாடல் குடும்பவிளக்கிலே வாசித்து இன்புறத்தக்கது. இளமையிலே காதல் வரும் எதுவரையில் கூட வரும் என்றால், முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை ஓடி வரும் என்று கண்ணதாசன் கூறுவதுபோல் இங்கு இளமை வடிந்து விட்டதோற்றம் ஒட்டிய மேனியில் காமத்தின் கடைசிச் சொட்டுக் கூட இல்லாத வயது. ஆனால், உண்மை அன்பு மனைவியில் காணுகின்ற வயதில் எல்லையைத் தொடும் ஆண்மகன் அவள் அழகை இழந்து விட்டாலும் அவள் உயிரோடு இருக்கின்றாள் என்பதே எனக்குப் போதும் என்கின்றார் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று கண்ணதாசன் கூறியதுபோல் இந்த உலகத்தில் எல்லாம் ஒருநாள் ஓய்ந்து போகும் ஆனால், உங்கள் அன்பைச் சுமந்திருக்கும் மனம் மட்டும் ஓய்வதில்லை என முதுமை கண்ட கணவனில் கொண்ட காதலை முதாட்டி உரைக்கும் போது அறம் செய்த கையும் ஓயும்!மக்களை அன்பால் தூக்கிப்புறம்போன காலும் ஓயும்!செந்தமிழ்ப் புலவர் சொல்லின் திறம் கேட்ட காதும் ஓயும்!செயல்கண்ட கண்ணும் ஓயும்! காதல் மறவரைச் சுமக்கும் என்றன் மன மட்டும் ஓய்தலில்லை என்று மூதாட்டி காதலை குடும்பவிளக்கிலே நாம் காணமுடிகிறது.பாவேந்தரின் தமிழும் அவரின் தமிழ் காதலும் படித்தாலும் சுவைக்கும் கேட்டாலும் இனிக்கும்.பாவைகள் உள்ளமோ அதிகம் துடிக்கும் .. எக்காலமும் ஏற்கும் அழகான பாடலில் மோனை எதுகை இயைபு என முக்கனிச் சுவை கலந்து காலங்கள் ஆனாலும் காலத்தால் அழியாத தமிழ் காதலியவள் எல்லா இடங்களிலும் காவியமாகி நிற்பாள் பாரதிதாசன் பொதுவுடமை, தொழிலாளிகள், மறுமணம், இயற்கை,உவமை உருவகம் என எல்லா நிலைகளையும் தொட்டுச் செல்லும் காதல்.வரிகள் ஒவ்வொன்றும் வைரம் போல் மின்னுகிறது.எக்காலத்திற்கும் பொருந்தும் காதல் கவிதையல்ல .காதலை காவியமாக்கித் தந்துள்ளார்.இன்றைய இளைய சமுதாயத்திற்கு எது உண்மையான அன்பு என்பதையும் ,அதனை எவ்வாறு வெளிக்காட்டி வாழ்வில் கடைபிடிப்பது, இல்லறத்தில் நல்லறமாக காதலோடு வாழமுடியும் என்பதற்கு அவரின் நூல்களே சான்றுகளாகி உள்ளது.

துணை நூற்பட்டியல்

1.பாரதிதாசன் கவிதைகள் -பாரதிதாசன்

செண்பகா பதிப்பகம் 2002

2.நூல் -புரட்சிக் கவி

ஆசிரியர் மா.பா.குருசாமி

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு 2007.

3.பாரதிதாசன் ஓர் உலகக் கவிஞர. செல்லப்பன் -சிலம்பொலி

அருணோதயம் பதிப்பகம் .1989

4.பாரதிதாசன் கவிதைகள்

ஆ.திருவாசகன்

அருள் சுடர் பதிப்பகம்.

வளசரவாக்கம் சென்னை.

5.பாரதிதாசன் பாடல்கள்

தொ.பரமசிவன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அம்பத்தூர் சென்னை.

Neelagirivaazh Mullukurumbar–Thirumanam|Dr.S.K.Umamagesvari

Abstract
          Throughout history, human beings have observed a wide range of ritual practices that mark different stages of life. The forms and meanings of these rituals vary across societies and are preserved through enduring traditions. In contemporary times, both rural and urban communities continue to attach significance to such life-cycle rituals. Among the Mullukurubar people, ritual practices are closely intertwined with their festivals and hold a distinctive place in their cultural identity.
For the hill communities, these rituals accompany every phase of existence—from birth to death—reflecting a worldview in which rituals are inseparable from life itself. This article explores the central role of marriage within the life-cycle rituals of the Mullukurumbar community residing in the Nilgiri Hills, where the Western and Eastern Ghats converge in South India.
ஆய்வுச் சுருக்கம்
     மனிதன் தன் வாழ்வுக் காலத்தில் பல்வேறு சடங்கு நிகழ்வுகளைக் கடைப்பிடித்து வருகின்றான். சமுதாயங்களுக்குள் மனிதனின் சடங்கு முறைகள் மாறுபடுகின்றன. மரபு வழியாகத் தொடர்ந்து சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. இன்றைய நாகரீக யுகத்தில் கிராமவாசி, நகர வாசி இருவரும் வாழ்வியல் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மனிதன் கொண்டாடும் விழாக்களுக்கு இணையாக அமைபவை சடங்கு முறைகள்.
மண்ணுலக வாழ்வின் முதல் நாளிலிருந்து இறுதி நாள் வரை ஒவ்வொரு பருவத்திலும் வாழ்வியல் சடங்குகள் மலைவாழ் மக்களின் வாழ்வில் தனித்துவம் பெறுகின்றன. நகரர்ப்புற, கிராமப்புற வாசிகளை விட மலைவாழ் மக்கள் வாழ்வியல் சடங்குகளை உயிராகக் கருதுகின்றனர். தென்னிந்தியாவில் மேற்குத் தொடர் மலைகளும் கிழக்குத் தொடர் மலைகளும் இணையும் நீலகிரி மலையில் வாழும் முள்ளுக் குறும்பர் இன மக்கள் தங்கள் வாழ்வியல் சடங்குகளில் திருமணத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இக்கட்டுரை ஆராய்கிறது.

நீலகிரிவாழ் முள்ளுக்குறும்பர் – திருமணம்”

முன்னுரை
        மனிதனின் ஒவ்வொரு பருவமும் மதம் மற்றும் மதங்கள் கூறும் வாழ்வியல் சடங்குகளோடும் பின்னிப் பிணைந்தது. மனிதன் வாழ்க்கை முழுதும் ஏதாவது ஒரு சடங்கைச் செய்து முழுமை அடைகின்றான். முன்னோர் மரபை பின்பற்றி வாழ்ந்தால் வாழ்க்கை துன்பங்களின்றி அமையும் என மனிதன் நம்புகின்றான். குறைவில்லா செல்வத்தோடு வாழவே ஆசைப்பட்ட மனிதன் சடங்குகளைக் கடைப்பிடித்து வருகின்றான். முள்ளுக்குறும்பர் இனத்தவரும் மரபு சார்ந்த சடங்குகளை தவறாமல் பின்பற்றி வருவதை கள ஆய்வில் காண முடிகிறது. சடங்குகளை பாரம்பரிய முறையில் பின்பற்றி வருவதால் தாங்களும் தங்கள் சந்ததிகளும் முன்னோர் ஆசியோடு வாழ்வதாகக் கூறுகின்றனர்.  

திருமணச் சடங்கு
       திருமணம் என்பது இருமணம் இணையும் பந்தம். பெற்றோர் சம்மதத்துடன் அல்லது ஆண் பெண் இருவரும் மனமொத்த முறையில் அவர்களே திருமண பந்தத்தில் இணைகின்றனர். முள்ளுக் குறம்பர் இனச் சமூகத் திருமணம் மற்ற குறும்பர்களின் திருமண நிகழ்வைக் காட்டிலும் முற்றிலும் மாறுபட்டது. முள்ளுக்குறும்பர் இனத்தின் குல அமைப்பு முறைகள் நான்கு. வில்லியப்ப குலம், வடக்கே குலம், காதிய குலம், வேங்கட குலம் என்பன. ஒரே குலத்தவருக்குள் திருமண பந்தம் அமையாது. ஏனெனில் ஒரே குலத்தவர்கள் அண்ணன், தங்கைகளாகக் கருதப்படுவர். இருவேறு குலத்தவர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்வர். தங்கள் வசதிக்கேற்ப திருமணப் பரியத் தொகை அளிக்கப்படுகிறது.

    “கன்னி மாதத்தில் முதன் முதலாக பெண் பார்க்க அல்லது மாப்பிள்ளை பார்க்கத் தொடங்குவர். ஜாதகம் பார்த்து சரியான பொருத்தம் இருந்தால் பெண் பார்க்கத் தொடங்குவர். தந்தை, தாய்மாமன், சித்தப்பா இவர்கள் தான் முதலில் பெண் பார்க்கச் செல்வர். பெண் பிடித்துப் போனால் திருமணம் நாள் குறிக்க அனுமதி அளிப்பர். கும்பம், மீனம், மேடம், மிதும், இடவம் ஆகிய மாதங்கள் திருமணம் செய்ய உகந்த மாதங்கள். கர்க்கடை (ஆடி) மாதத்தில் திருமணம் நடைபெறாது. திருமணம் முடிவான பிறகு இருவீட்டாரும் ஒன்றாக உணவருந்தி திருமண உறவைத் தொடங்குவர். திருமணம் பெண் வீட்டில் நடைபெறும். திருமணத்திற்கு பெண்ணிற்குத் தேவையான ஆடைகளை ஆண் வீட்டாரே எடுத்து வருவர். இருவர் வீடும் நன்கு தூய்மை செய்யப்படும். திருமணம் மூன்று நாட்கள் நடைபெறும். திருமணத்திற்கு முந்தைய நாள் ஆண்-பெண் இருவீட்டாரும் அவரவர் இல்லத்தில் விருந்து வைப்பர். மதியம் தெய்வப்பிறை வீட்டில் உள்ள வில்லம்புவை வைத்து சாமி கும்பிடுவர். அதன்பின் குழுக்கள் இணைந்து வேட்டைக்குச் செல்வர். (வேட்டைக்குச் செல்வது காலங்காலமாக வரும் மரபு) வேட்டையின் போது கிடைக்கும் சிறிய வகை விலங்குகளை இரவு உணவாகப் பயன்படுத்துவர்.”1

        உறவினர்கள் இனிப்புப் பதார்த்தங்களான தோசை, அப்பம் ஆகியவற்றை திருமணம் நிகழும் வீட்டிற்கு எடுத்து வருவர். இனிப்புப் பதார்த்தங்கள் அங்குள்ள அனைவருக்கும் மாலை வேளையில் தேநீருடன் பகிர்ந்தளிக்கப்படும். ஆண், பெண் இருவர் வீட்டிலும் தாய்மாமன் முறையில் இரவு சடங்குகள் நடைபெரும். அச்சடங்கில் பெண்ணிற்கு அணிகலன்கள் (காதணிகள், கழுத்தணிகள், கைவளையல்கள், மெட்டி) அணிவிக்கப்படும். ஆண் வீட்டில் பரம்பரை பரம்பரையாக கையில் அணிவிக்கும் வெள்ளிக்காப்பு, காதில் அணியும் வெள்ளி வளையம் (காதலே வளையம்), கைவிரல் மோதிரம் ஆகியவை அணிவிக்கப்படும். பின்பு உற்றார் உறவினர்கள் வெற்றிலை பாக்குடன் தங்களால் இயன்ற தொகையை மணமக்களுக்கு தட்சினையாக கொடுத்து ஆசீர்வதிக்கிறார்கள். இரவு உணவு சாப்பிட்ட பின்பு முள்ளுக்குறும்ப இன ஆண்களால் வட்டக்கலி நடனம் ஆடப்படும். தெய்வப்பிறை வீட்டின் முன்பு பச்சை வாழை மரத்தை நட்டு வைப்பர். வாழை மரத்தின் மேல் தளத்தில் பசுஞ்சாணம் வைத்து அதன்மீது 5, 7 அல்லது 9 திரியுடன் கூடிய விளக்கைப் பதித்து வைப்பர். விடியும் வரை வாழை மரத்தைச் சுற்றி ஒவ்வொரு சுற்றாகச் சுற்றி பாட்டுப்பாடி வட்டக்கலி நடனம் ஆடுவர். ஓவ்வொரு பாடல் முடியும் போதும் ஒரு திரி அணைக்கப்படும்.

         இரண்டாவது நாள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறும். மாப்பிள்ளை வீட்டார்கள் வருவர். அவர்களை நல்லமுறையில் பெண் வீட்டார்கள் வரவேற்பர். குறித்த நேரத்தில் ‘பெரியாளு’ என்று அழைக்கப்படும் ஊர்ப்பெரியவர் முன்னிலையில் தெய்வப்பிறை வீட்டில் திருமணம் நடைபெறும். தாய்மாமன் சடங்கு முறை திருமணத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முற்காலத்தில் பெண்ணின் தாய்மாமன் தான் பெண்ணிற்குத் தாலி அணிவிக்கும் வழக்கம் இருந்துள்ளது. தற்போது மணமகனே தாலியைக் கட்டுகிறார். தாலி ஆல இலை வடிவில் இருக்கும். வெள்ளை நூலில் தாலியைக் கோர்த்து திருமணத்தில் கட்டப்படுகிறது. வசதியுள்ளவர்கள் திருமணத்திற்குப் பிறகு தாலியை தங்கச் சங்கிலியில் அணிந்து கொள்வர். திருமணம் முடிந்த பிறகு கோல்கலி நடனம் தொடங்கும். அனைவரும் உணவருந்துவர். உணவருந்திய பின் பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் செல்வர்.

         மூன்றாவது நாள் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்வர். அங்கும் கோல்கலி நடனம் நடைபெறும். அங்கு பெண் வீட்டாருக்கு விருந்து அளிக்கப்படுகிறது. விருந்து முடிவுற்ற பிறகு, மாப்பிள்ளை வீட்டில் இருந்து இரண்டு சிறிய துணி மூட்டைகளில் தோசைகளை மணப்பெண் தன் தலையிலும் இடுப்பிலும் சுமந்து தன் தாய் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதில் ஒரு மூட்டையை தெய்வப்பிறை வீட்டில் வைத்து தங்கள் முன்னோர்களுக்கு படைத்து வழிபட்ட பிறகு எல்லோருக்கும் பங்கிட்டு வழங்குவர். மற்றொரு மூட்டையை வீட்டிற்கு கொண்டு வந்து உறவினர்களுக்கு மற்றும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் விருந்துடன் வழங்குவர். மறுநாள் மணப்பெண் கணவன் வீடு செல்லும்போது தன் தாய் வீட்டிலிருந்து தோசை மற்றும் இனிப்பு வகைகளை எடுத்துச் செல்ல வேண்டுமென்பது வழக்கமாக இருந்து வருகிறது.

திருமணச் சடங்கு பாடல்கள்:கோல்கலி
“கரிவான் முகவன் கெணபதி வரிகா
சவா ஒரு வில்சிலா கோல்கலி கன்ம்மான்
மஞ்சுலா வனி சாரஷ்பதி ஏமுன்னான்
அம்முரா ரோஜன கரிரா முரேப்பன்
கலேம சிசு வலகன் அம்போல்
கலிகன் மேய்பதின் அரம்பிச்சு
கோலும் எடுத்து வலகன் அப்போல்
ஒடேக் குழல் விலி ஓடும்கூடி …
வட்டக்கலி
ஆதி கெணபதி ஆணமுகேன் தேவா
ஆங்காரம் முல்லோனே!
அன்பில் தூணைசெய்கா பலூ பழம் கோம்பன்
வெளுத்த நல்லா வெல்லியும்
சலே நிரமேரும் தேவி தூண செய்கா!
ஞங்கள் களிக்கும் களிக்கு வரம் நல்கா
ஒமேனா வைய்தேலே கிருஷ்ண தூண செயக்
ஆண முகம்தேவா கிருஷ்ண கை தொழுனே!
 
நலேங்ங நலேங்ங நழிகாரம்
அழிவுள்ள சர்கேரா வாழைப்பழம்
நீலக்கரும்பு நீர்; கடலேக்கையும்
நீலேமேல் பூண்ட தேங்ஙா புழும்
இரதயெல்லாம் வேட்சு கைதொழுனே
அளவூர் வழும் கெணபதிக்கு
பரதே வெட்சிதா பூஜா செய்து
வயாரன் கெணபதி தம்புரனே
ஞனிதா நின்பதம் கைதொழுதேனே
ஞனிதா நின்பதம் கைதொழுதேனே
 
பொன்னும் முத்தும் சான்னேனம் விழுவா சாந்து விசுவும்
பாச்சா முன்பில் நில்கா வேணும் மேண்டே வனவிக்கிரவ
ஆனேக் கால்லாடி கல்மேல்ட் சுவடே
அனையுடே சுவடா நல்ல ஆலுடே தனலோ
சிங்ஙையும் சலிர் முல்லும் அதிலுமுண்டரிகே
அவிடே வன் நரட்சோரு மனம்புலி தாடியன்
வட்ட முடியும் வாயும் மலமும் முகவும்
இஸ்ட் முல்லா சேர்பேன்னினு மலையிடுவான்
இன்பமோடே மரிஜன் போய் மனு குபமயித்து
காடு தன்னில் கலிச்சு வன்ன மரிமனே
ஓடி அப்போல் ராமதேவன் அஸ்திரவி…”2
உடன் போக்குத் திருமணம்
        சங்க இலக்கியக் குறிப்பின்படி உடன்போக்கு என்பது காதல் திருமணம். சங்க இலக்கியங்கள் இதைப்பற்றி இரவுக்குறி, பகற்குறி, பகற்குறி இடையீடு, இரவுக்குறி இடையீடு, உடன்போக்கு என முறைமைப்படுத்துகின்றன. திருமண வயதை அடைந்த ஆணும், பெண்ணும் அவர்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறாமல் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் நடத்துவது உடன்போக்குத் திருமணம். பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காவிடில் ஊருக்கு வெளியே சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். “முள்ளுக் குறும்பர்கள் இனத்தில் முந்தைய காலகட்டத்தில் இத்தகைய திருமண முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. உடன்போக்கு மேற்கொண்டவர்கள் திரும்ப அவர்கள் அந்த ஊருக்கே வரக்கூடாது. எந்த உறவினர்களோடும் கலந்து கொள்ளக்கூடாது என்ற வரைமுறை இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நாகரீக வளர்ச்சி மாற்றங்களினால் உடன்போக்கை ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது மணமக்கள் ஓரினத்தவராக இருந்தால் ஏற்றுக் கொள்கின்றனர். வேற்றினத்தவராக இருக்கும்போது ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.”3
முள்ளுக் குறும்பர் இனத்தவர் சிலர் உடன் போக்குத் திருமணம் செய்து கொண்டு வேறு ஊர்களில் சென்று வாழ்வதைக் கள ஆய்வில் அறிய முடிகிறது. கள ஆய்வின்போது இந்நிகழ்வுகளைக் காண முடிந்தது.

மறுமணம்
      “முள்ளுக் குறும்பர்களது வாழ்வில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற முறையைப் பின்பற்றுகின்றனர். இவர்களிடையே மறுமணம் செய்யும் பழக்கம் உள்ளது. மறுமணத்தை அதன் சூழ்நிலையைப் பொறுத்து விதவை மறுமணம், விவாகரத்து திருமணம் என்று பிரித்துக் கருதுவது ஏற்றது. கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர் இளம் வயதினராக இருக்கும் பட்சத்தில் இத்திருமணம் நடைபெறுகிறது.”4

விதவைத் திருமணம்
        கணவன் இறந்துவிட்டால் மனைவி விருப்பம் இருந்தால் மறுமணம் செய்து கொள்ளலாம். விதவைகள் எவ்விதமான சமூகக் கட்டுப்பாடுகளாலும் துன்புறுத்தப் படுவதில்லை. இறந்துபோன கணவரின் உறவினர் அல்லாத நபரையே மறுமணம் செய்ய ஒப்புக்கொள்கின்றனர். குலம் சார்ந்த சட்டதிட்டங்களைச் சரியாகக் கடைபிடித்து திருமணப் பந்தத்தை அமைத்துக் கொள்கின்றனர். விதவை மறுமணம் நடைபெற்றுவி;ட்டால் முன்னாள் கணவர் சொத்துக்களில் இருந்து எவ்விப் பங்கும் பெற இயலாது.
“கணவனை இழந்த பெண் (விதவை) மறுமணம் செய்யவில்லை எனில் அவளுக்கும், குழந்தைகள் இருப்பின் அவர்களுக்கும் கணவனின் வீட்டார் சொத்துக்களைக் கொடுத்து நன்கு கவனித்துக் கொள்கின்றனர். தன் தாய்வீட்டு நினைப்பில்லா வகையில் பார்த்தும், ஆதரித்தும் வருகின்றனர். இறந்த கணவன் அக்குடும்பத்திற்கு ஒரே மகன் எனில் மருமகளே மகனின் கடமைகளைச் செய்து அக்குடும்பத்தைக் கவனித்து வருவதையும் அறியமுடிகிறது.”5
மனைவி இறந்துவிட்டாலும், கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம். மறுமணம் செய்ய விரும்பும் ஆண்களும் குலம் போன்ற சட்ட திட்டங்களையும் கடைபிடிக்க வேண்டும். மறுமணம் எளிய முறையில் நடத்தப்படும்.

மைத்துனி மணம்
        பல கணவர் மணம், பல மனைவி மணம் ஆகியவற்றின் அங்கங்களாக மைத்துனி மணம் விளங்குகிறது. மைத்துனி மணம் என்பது ஒருவர் தன் மனைவி இறந்தாலோ, மனைவிக்கு குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமல் போனாலோ மனiவி மற்றும் பெரியவர்களின் அனுமதியோடு தன்னுடைய மனைவியின் தங்கையை மணந்து கொள்வது. முள்ளுக் குறும்பர்களிடையேயும் இவ்வகை மணமுறை காணப்படுகிறது.
“மனைவி இறந்து குழந்தைகளுடன் கணவன் தனது மனைவியின் சகோதரியை மணந்து அவளும் குழந்தைகள் பெற்று வாழ்வதைக் களப்பணியில் காணமுடிந்தது. மணமகளுக்கு பரிசத்தொகை (Bride Price) கொடுக்கும் சமுதாயங்களில் இது மிகுதியாகக் காணப்படுவதை இங்கு கருதத்தக்கது.”6

விவகாரத்து மறுமணம்
          “திருமணமானவர்கள் தங்களுக்குள் ஏதாவது கருத்து வேறுபாடு; காரணமாக ஒத்துவராத முறையில் விவாகரத்து செய்து கொண்டாலும் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இவ்வாறு திருமணம் செய்யும்பொழுதும் பழைய மரபு சார்ந்த முறைகளை, சட்டதிட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். முள்ளுக்குறும்பரின் மக்களுள் இவ்வகை மணத்தை அரிதாகவே காணமுடிகிறது.”7

முடிவுரை
      முள்ளுக் குறும்பர்களின் வாழ்வியல் சடங்குகள் நம்பிக்கைகள் மையமாகக் கொண்டே பின்பற்றப்பட்டு வருகின்றன.  குழந்தை பிறப்பிலிருந்து இறப்புவரை வாழ்வியல் சடங்குகள் ஏதேனும் ஒரு நம்பிக்கையை காட்டுவதாக அமைகின்றன. முள்ளுக் குறும்பர்கள் திருமண முறையில் மறுமணமும், விதவை திருமணமும் இன்றும் வழக்கில் உள்ளன. மனைவி இறந்தபின் கணவன் குழந்தைகளின் நலன்கருதி மனைவியின் சகோதரியைத் திருமணம் செய்து வாழ்வதைக் கள ஆய்வில் காணமுடிந்தது.

மேற்கோள் நூல்கள் / தகவலாளர்கள்:
1. தே.சாரதாமணி   –       ஆலுக்குறும்பர் இனவரைவியல் ஓர் ஆய்வு

2. தகவலாளர்                 –       ரமேஷ் (34) மாடக்குண்டு

3. தகவலாளர்                 –       பழனி (45) நெடுங்கோடு

4. தகவலாளர்                 –       அச்சுதன் (52) நெடுங்கோடு   

5. தகவலாளர்                 –       பாஸ்கரன் (67) நரிவலிப்பு

6. தகவலாளர்                 –       பாலன் (55) நரிவலிப்பு

7. தகவலாளர்                 –        கோபி (37) கொள்ளாடு

துணை நூற்பட்டியல்
1.இராசேந்திரன், மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடி மக்கள், கணையாழி படைப்பகம், திருவள்ளுவர் நகர், சென்னை – 600 041 (2003)

2.ச.அரிச்சந்திரன், தமிழகப் பழங்குடிகள் – வரலாறு சமூகம் பண்பாடு (தேசியக் கருத்தரங்கம் தொகுதி-1),கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி,ஞானாம்பிகை நூற்பாலை அஞ்சல், கோவை.

3.இராசேந்திரன்.அ., நாட்டுப்புறப் பண்பாட்டு வழக்கங்கள், ஜோதி புத்தக நிலையம்,9-மேக்மில்லன் காலனி,நங்கைநல்லூர், சென்னை -600061. (2008)

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ச.க.உமாமகேஸ்வரி,
உதவிப்பேராசிரியர்,
கோபி கலை அறிவியல் கல்லூரி,
கோபிசெட்டிபாளையம்.

 

 

Kurunthogaiyil Thozhikuttru Uvamaigal|T.Sornanjali

Kurunthogaiyil Thozhikuttru Uvamaigal - T.Sornanjali
Abstract
     Although many literature appeared in Tamil, Sangam literature is unique. These books are the majority of love and war. There is many evidences about the culture of the Tamil people who lived in the second century AD in Sangam literature. This article is mentioned in the illustrations that were spoken of at the girlfriend in one of the eight years. It is a vault that depicts the life of the ancient Tamil with the adjective of the good CD. From four feet to eight feet, the bottom of the song. The most cited book is short in literary texts. The CD is also known as four hundred.  In this case, the five -year -old is the companion who has been created with a variety of angles. The essence of such a proud friend examines the highlights of the illustrations in the CD.

“குறுந்தொகையில்   தோழிக்கூற்று – உவமைகள்” 

ஆய்வுச் சுருக்கம்
      தமிழில்  பல இலக்கியங்கள்  தோன்றியிருந்தாலும் சங்க இலக்கியங்கள் தனி சிறப்பு உடையன. இவ்விலக்கியங்கள் காதலையும் போரையும் பெரும்பான்மையாக மொழிவன. சங்க  இலக்கியங்களில் கி.பி இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் மக்களின் பண்பாடு பற்றிப்   பல சான்றுகள் உள்ளன.
எட்டுத்தொகையில் ஒன்றான குறந்தொகையில் தோழிக்கூற்று  நிகழும் இடங்களில் பேசப்பட்ட உவமைகள் பற்றி  இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளன. நல்லக் குறுந்தொகை என்ற அடைமொழியோடு பழந்தமிழரின் வாழ்வியலைச் சித்தரிக்கும் பெட்டகமாகத் திகழ்கிறது. நான்கு அடி முதல் எட்டடி வரை பாடலின் அடிவரையறைக் கொண்டது. இலக்கிய நூல்களில் அதிக மேற்கோள்களாக கையாளப்பட்ட நூல்  குறுந்தொகை ஆகும். குறுந்தொகை நானூறு எனவும் பெயர் பெறும் .இப்பெயர் வழக்கு இறையனார் களவியல் உரையால் அறியப்படுகிறது.  இவ்விலக்கியத்தில் ஐந்திணைகளிலும் பல்வேறுக் கோணத்துடன் படைக்கப்பட்டிருப்பவள் தோழியேயாவாள். இத்தகைய பெருமை வாய்ந்த தோழியின் இன்றியமையாமையை இவ்வாய்வு குறுந்தொகையில் தோழிக்கூற்று  உவமைகளின் சிறப்புகள் பற்றி ஆராய்கிறது.

முன்னுரை
      உவமை என்பது பொருளைத் தக்க ஒப்புமைக் கொண்டு உணர்த்துவதாகும். பொருளின் தலைமையைப் புலப்படுத்துவது உவமையாகும். உவமை நான்காகும். அஃது பண்பு, தொழில், பயன், உரு. முதலில்  பொருளோடு பொருளினை ஒப்புவமைப்படுத்துவது  ஆக உவமை என்பதற்கு இணையாகக் காட்டும் ஒப்புமை  விளக்கம் தருகிறது  கிரியாவின்  தற்காலத் தமிழ் அகராதி.  ஒரு புலவன் தான் எழுதும் செய்யுளில் ஒருக் கருத்தை நிலைநிறுத்த அதேத் தன்மைக் கொண்ட மற்றொருப் பொருளோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கு உவமையைக் கையாளுகிறான். களவொழுக்க காலத்தில் மட்டுமன்றிக் கற்புக் காலத்திலும் தலைவியின் கூடவே இருந்து உதவுபவள் தோழி. தலைமக்கள் விரைந்து சென்று இல்லறம் நடத்துகையில் தலைவன் தன் நிலையிலிருந்து தாழ்ந்து சில நேரங்களில் பரத்தை என்னும் பொருட்பெண்டிரைத் தேடிச் செல்வான். அவ்வாறு செய்கையில் இரவுச் சோற்றுக்குத் திண்டாடிய முந்தைய நிலையைத் தலைவன் மறந்து பரத்தையர் சுகம்தான் பெரியது என்று எண்ணிய தலைவனை இடித்துக் கூறுபவளாக தோழி விளங்குகிறான்.
இக்கட்டுரையில் தோழி, நட்புக்கு இலக்கணமாகவும்,  களவிலும், கற்பிலும் தலைவன் தலைவி இருவருக்கும் அறநிலை வழுவாது  பண்போடு இருக்கும் நிலையை இங்குப் பார்க்க முடிகிறது.

உவமையின் வகைகள்
     இளம்பூரனார், தொல்காப்பியர் உவமை இயலுக்கு உரை எழுதும் போது பின்வருமாறு எழுதுகின்றார்.

புலன் அவ்வாறன புலன் ஆதலும்
அலங்காரமவிக் கேட்டார்க்கு
இன்பம் பயத்தலும்”
       உவமையின் பயன் எனகிறார்.
தொல்காப்பியர் உவமையின் வகைகளாக  ”வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகை பெற வந்த உவமைத் தோற்றம்” (தொல் நூற்.22) இவற்றையே  தண்டி யலங்கார ஆசிரியர் பண்பு தொழில் பயன் என மூன்றாக அடக்கிக் கூறுவார்.

“பண்பும் தொழிலும் பயனும் என்று இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளோடு புணர்ந்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை”         (தண்டி நூற்பா 21)
உவமை என்றால் என்ன?
      தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத ஒன்றை விளக்குவது உவமை என்பர். அதுபோல் செய்யுள்களில் அழகுற அமைந்து காணப்படுவது உவமை. தண்டி அலங்காரம் என்னும் இலக்கண நூல் அணிவகைகளைச் சுட்டி சொல்லும் வகை பல எனினும் உவமைஅணியை மட்டும் ஆய்வு செய்வதே இக்கட்டுரை தன் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தோழியின் பண்பு
“முன்னுறவுணர்தல் குறையுறவுணர்தல்
இருவரும் உவழி அவன் வரவுணர்தல் என்று
அம்முன்றென்ப தோழிக்கு உணர்ச்சி  ” (இறையனார் அகப்பொருள் 7 )
       என்ற இறையனார் களவியல் நூற்பா வழித் தோழியானவள் தலைவியது காதல் வயப்பட்ட நிலைமை, உடல் மாற்றம், செயல் மாற்றம், கண்டு உணா்தல், குறையுற்ற வழி உணர்தல், தலைவி தோழி இருவருள்ளவிடத்துத் தலைவன் வந்துழி உணர்தல் என்ற மூன்று நிலைகளில் தன்னுடைய மதியை  உடன்படுத்தித்  தலைமக்களது காதலுக்குத் துணைபுரிவாள் என்பது புலனாகிறது.

தோழி  –  அறத்தொடு   நிற்றல்  (பண்புவமை)
”அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
மேக்கு எழு பெருஞ்சினை இருந்த தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாடன்
தகாஅன் போலத் தான்தீது மொழியினும் ….” ( 26 – குறிஞ்சி)
       நற்றாயும், செவிலித்தாயும் தலைமகளது வேறுபாடு கண்டு, “இதற்கு காரணம் யாது?  என்று கட்டுவிச்சியை கேட்கின்ற பொழுது, ‘தலைமகளது வேறுபாட்டிற்குக் காரணம் பிறிதோர் தெய்வம்’ என்று கூறக்கேட்டு, தோழி அறத்தொடு நின்றது. இப்பாடலில் அரும்புகள் ஏதுமின்றி மலர்ந்த, கரிய அடிப் பகுதியை உடைய வேங்கை மரத்தின் மேற்பகுதியில் வளர்ந்துள்ள பெரிய கிளைகளில் தங்கியுள்ள மயிலானது, மலர்களைக் கொய்யும் இளமகளிரைப் போலக் காட்சியளிக்கிறது  என்பதன் மூலம் பண்புவமைக் கையாளப்பட்டுள்ளமையை  அறியமுடிகின்றது.

தோழி – வாயில் நிற்றல் (தொழில் உவமை)
யாய் ஆகியளே மாஅயோளே
மடை மாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய் சாயினளே;
பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல்
இன மீன் இருங் கழி ஓதம் மல்குதொறும்
கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம் முன் நாணிக் கரப்பாடும்மே     (நெய்தல் 9 )
      களவு ஒழுக்கத்தில் தோழி தலைவனைத் தலைவியோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கும்போது இந்தச் சொற்களைக் கூறி அனுமதிக்கிறாள். மாந்தளிர் போன்ற மேனிநிறம் கொண்ட இவள்  தாய் ஆகிவிட்டாள். பெய்யாப்பூ என்பது பொங்கல்-சோறு. சமைத்த பானையில் பொங்கல் சோறு இருப்பது போல இவள் உடல் நலம் தோற்றம் தருகிறது. இதற்காக இவள் தனக்குள்ளே நாணம் கொள்கிறாள். அந்த நாணத்தை மறைக்க முயல்கிறாள். துறைவன்  செய்த கொடுமை வெளிப்பட்டுவிடுமே என்று எண்ணி மறைக்க முயல்கிறாள். நெய்தல்  பூ நீரில் மூழ்கி எழுவது மகளிர் நீரில் மூழ்கி எழும்போது அவர்களது கண்கள் மூழ்கி எழுவது போலத் தோன்றும் துறை. (நெய்தல் பூ – மகளிர் கண்களுக்கு உவமை
 இப்பாடலில் கயமனார்  பொங்கல் சோறு – உடலம் தோற்றம்,  நெய்தல் பூ நீரில் மூழ்குதல்  –  கண்கள் மூழ்கி எழுவது போன்ற உவமைகள் கையாண்டுள்ளார்.

பாலை –  தோழிக்கூற்று  (உள்ளுறை உவமம்)
பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான்.  தன்னைவிட்டுப் பிரிந்த சென்ற தன் காதலன் தன்னை நினைத்துக் கொண்டிருப்பானோ அல்லது மறந்திருப்பானோ என்று தலைவி வருந்துகிறாள். “அவர் சென்ற வழியில் ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைப்பதைக் கேட்டவுடன் அவருக்கு உன் நினைவு வரும். அவர் விரைவில் மீண்டும் உன்னிடம் வருவார்.” என்று தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

”உள்ளார் கொல்லோ தோழி கள்வர்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர்நுதி புரட்டும் ஓசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தாரே”.   ( பாலை – 16)       
       தோழி, பாலை நிலத்தில் உள்ள வழிப்பறிக் கள்வர், இரும்பினால் செய்யப்பட்ட தம் அம்பை சுத்தம் செய்வதற்காக,  அதை நக நுனியால் புரட்டுவதால் உண்டாகிய ஒலியைப் போல ஒலி எழுப்பும், சிவந்த கால்களை உடைய ஆண்பல்லியானது, தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் இடமாகிய, அழகிய அடியை உடைய கள்ளிச் செடிகளோடு கூடிய பாலை நிலத்தைக் கடந்து (பொருள் தேடுவதற்காகச்) சென்ற தலைவர், என்னை நினைக்க மாட்டாரோ?
 ஆண்பல்லி தன் துணையாகிய பெண்பல்லியை அழைக்கும் பாலை நிலத்தில் செல்பவர் அது கேட்டுத் தன் காதலியை நினைவு கொள்வார் என்பது உள்ளுறை உவமம்.

குறிஞ்சி  தோழிக்கூற்று  (உருவுவமை)
      கட்டுவிச்சி அந்த மலையைப் பற்றிப் பாடினால், தலைவியின் மகிழ்ச்சியைக் கண்டு, தலைவியின் செவிலித்தாயும் தாயும் அந்த மலையில் வாழும் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று தோழி எண்ணுகிறாள். ஆகவே, அந்த மலையைப் பற்றி மீண்டும் மீண்டும் பாடும்படித் தோழி கட்டுவிச்சியிடம் கூறுகிறாள்.

”அகவன் மகளே அகவன் மகளே
இன்னும் பாடுக பாட்டேஅவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே”.   (குறிஞ்சி –  23 )
       இப்பாடலில் சங்குமணி மாலை போலக் கூந்தல்  (நிறம்) கட்டுவிச்சிக்கு உள்ளதாகக் உவமைப் பேசப்பட்டுள்ளது., கட்டுவிச்சி வயதில் முதிர்ந்து நரைத்த முடியுடையவளாக இருந்தாள் என்பதைக் குறிக்கிறது.
தலைவனின் பிரிவால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல் தலைவி அழுதுகொண்டிருக்கிறாள். அதைக் கண்ட தோழி, “நீ தலைவனோடு சேர்ந்து இருந்தக் காலத்தில் மகிழ்ச்சியோடு இருந்தாய்.  இப்பொழுது ஏன் அழுகிறாய்? தலைவன் திருமணத்திற்குப்  பொருள் தேடுவதற்காகக்தானே சென்றிருக்கிறான். நீ அழுவதை நிறுத்து. அவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வான்.” என்று கடிந்து கூறுகிறாள்.

குறிஞ்சி. தோழிக்கூற்று ( பண்புவுவமை )
”நறையகில் வயங்கிய நளிபுன நறும்புகை
குவளை யுண்கண் கலுழப்பசலை யாகா வூங்கலங் கடையே.”      (குறிஞ்சி339)
         இப்பாடலில், “நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை” என்ற வரியில், புனத்தில் உள்ள அகில் மரங்கள் தீப்பற்றி எரிந்ததால் உண்டான நறுமணப் புகை, தலைவன் இனி வருவதாகக் கூறி வந்ததால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு உவமையாக வருகிறது. தலைவன் மீது காதல் கொண்ட தலைவியின் மனம், அகில் புகை போல இனிமையானதாக இருப்பதை இது குறிக்கிறது.
தலைவன் பிரிவால் வருந்தும் தலைவிக்கு, அவன் இனி வருவான் என்ற செய்தி மனதுக்கு இனிமையையும் ஆறுதலையும் அளிக்கிறது. அகில் புகையானது, காட்டில் தீப்பற்றி எரிவதால் உண்டாக்கும் நறுமணம் போல, அவனது வருகை குறித்த செய்தியும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவதோடு, அவனது பிரிவின் துயரத்தை மறக்கச் செய்கிறது. என்னும் குறுந்தொகைப் பாடல் உணர்த்துகிறது.

தோழி –  தலைவிக்கு ஆறுதல் மொழிக் கூறுதல்
”நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே” (பாலை – 22)
      நீர் வடியும் கண்களையுடைய தோழி ( தலைவியே!)! உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு யாரால் பிரிந்து செல்ல முடியும்?  கடம்ப மலரை உடைய கடம்ப மரங்கள், மலைப்பக்கத்திற்கு அழகு செய்கின்றன. வேனிற் காலத்தில் அந்த மலர்கள் மலர்வதால், அவற்றைத் தாங்கி நிற்கும் அழகிய கிளைகளும் மணம் உடையனவாக உள்ளன. அந்த மலர்களின் நறுமணம் போல் மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியை உடைய உன்னை உன் தலைவர் கூடவே அழைத்துச் செல்வார்.
கடம்ப மரத்தின் மலர்கள் தாங்கி நிற்கும் கிளைகளின் நறுமணமும், அதன் அழகு நீங்கிய பிறகு மீண்டும் மலரும் தன்மையும், தலைவியின் அழகும் இனிமையும் உடைய ஒண்ணுதல் (ஒளி பொருந்திய நெற்றி) ஆகியவற்றுடன் ஒப்பிடப்படுகிறது. தலைவன் பிரிந்து செல்ல முடியாது என்றும், பிரிந்தாலும் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்றும் தலைவிக்கு நம்பிக்கை அளிக்கப்படுகிறது.
கடம்ப மலரின் நறுமணம்: மலைப்பக்கத்திற்கு அழகு சேர்க்கும் கடம்ப மரங்கள், வேனிற் காலத்தில் மலர்ந்து நறுமணத்தைப் பரப்புகின்றன. இந்த நறுமணம் போல, தலைவியின் ஒளிபொருந்திய நெற்றியில் இருந்து மணம் கமழும். இந்த உவமை, தலைவியின் துயரத்தைக் போக்கி, அவளுக்கு நம்பிக்கையையும், இனிமையையும் அளிக்கிறது.

தோழித் தலைவனுக்காக தூதுச் செல்லல்  (தொழில் உவமை)
        பரத்தையிடம் இருந்து மீண்டுவந்த தலைவன், தலைவியோடு வாழ விரும்புகிறான். அவன் தன் மனைவியின் தோழியைத் தனக்காகத் தலைவியிடம் தூதுசெல்லுமாறு வேண்டுகிறான்.  “நான் என் தவறை உணர்ந்தேன். இனி, இது போன்ற தவறு செய்ய மாட்டேன்.” என்று தோழியிடம் சூளுரைக்கிறான். தோழி , “நான் உன்னுடைய சூளை நம்ப மாட்டேன். என் நலத்தைத் திருப்பித் தந்துவிட்டு, உன் சூளை நீயே எடுத்துக்கொண்டு செல்வாயாக.” என்று கூறித் தோழி அவனுக்காகத் தலைவியிடம் தூது போக மறுக்கிறாள்.

”பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி


கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.”   (மருதம் – 238)
         இப்பாடலில்  உள்ள உவமை நயம்  தொண்டி நகரத்தில் உள்ள பெண்கள், வயல் வரப்பில் தங்கள் நெல் உலக்கையைச் சாய்த்துவிட்டு, மணல் அள்ளி விளையாடும் போது மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதுபோன்ற மகிழ்ச்சி தலைவன் தன்னுடன் இருக்கும்போதுதான் இருக்கும்.
தொண்டி நகரம்: இது மேற்குக் கடற்கரையில் இருந்த ஒரு நகரமாகும். தலைவன் பிரியுமிடத்து, தன்னுடைய மகிழ்ச்சியும் அழகு நலமும் வாடிவிடும் என்பதையும், அதனால் அவன் உடனிருத்தல் அவசியம் என்பதையும் இந்த உவமையின் மூலம் தலைவி உணர்த்துகிறாள்.

தோழியாவாள் – தலைவியைத் தேற்றல்
     இன்பத்தில் மட்டுமல்லாமல் துன்பத்திலும் பங்கு கொண்டு, தன்மை தோழி என்பவள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு கடுஞ்சொல்லால் சுட்டி இருவருக்குள்ளும் எவரேனும் தவறு செய்தால் பொய்க்கோபம்  காண்பித்து தலைமக்களை வரைவிற்கு உடன்பட வைத்தலையே கடமையாகக் கொண்டிருந்தான் என்பதை,

”வினையே ஆடவர்க் குயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க் காடவர் உயிரென
நமக்குரைத் தோருந் தாமே
அழாஅல் தோழி அழுங்குவர் செலவே.”      (பாலை 135)
     என்ற குறுந்தொகை பாடல் இவற்றிற்கு சான்று பகர்கின்றது. இல்லறம் புரிவதற்குரிய பொருளை ஈட்டுதல் ஆடவர்க்கு உயிர் போன்ற என்றும் அவ்ஆடவரைப் போற்றுதல் மனையில் உறைகின்ற மகளிர்க்கு உயிர் என்றும் தோழி தலைமகளைத் தேற்றுபவளாக அமைகின்றாள்.
தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து செல்ல எண்ணிக்கொண்டிருக்கிறான். அதை அறிந்த தலைவி வரப்போகும் பிரிவை நினைத்து வருத்தத்தோடு அழுதுக்கொண்டிருக்கிறாள். அப்பொழுது, தோழி அங்கு வருகிறாள். அவள் தலைவியை நோக்கி, “ஆடவர்தான் மகளிர்க்கு உயிர் என்று கூறிய தலைவர் உன்னைவிட்டுப் பிரிந்து செல்லமாட்டார். நீ வருந்தாதே!” என்று ஆறுதல் கூறுகிறாள். 

உவமையின் பொருள்
          தலைவன், பொருள் தேடுவதற்காக வெளியூர் செல்ல எண்ணியிருப்பதை அறிந்த தலைவி வருந்துகிறாள். அப்போது தோழி, “ஆடவர்களுக்கு தொழில் உயிர் என்றால், அந்தத் தொழிலைக் கைவிடாமல் இருப்பார்கள். அதேபோல், மகளிருக்கு ஆடவர் உயிர் என்றால், தலைவன் உன்னை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டான். ஏனென்றால், உனக்கு வாழ்வளித்த நீ, உன்னை விட்டுப் பிரிய மாட்டார்” என்று ஆறுதல் கூறுகிறாள். இங்கு வினை என்பது தலைவனின் தொழிலையும், உயிர் என்பது அவனது வாழ்க்கையையும் குறிக்கும் உவமை ஆகும்.

முதமையிலும்  இளமை (பண்புவுவமை)           
”பெரு நன்று ஆற்றின், பேணாரும் உளரே?
ஒரு நன்று உடையள் ஆயினும், புரி மாண்டு,
புலவி தீர அளிமதி இலை கவர்பு,
ஆடு அமை ஒழுகிய தண் நறுஞ் சாரல்,
மென்நடை மரையா துஞ்சும்
நன் மலை நாட! நின் அலது இலளே.” (
குறிஞ்சி 115)
        இப்பாடலில்  மலைப்பக்கத்தில் மெல்லிய  நடையுடன்  மரையாமான்கள்  உறங்கும் காட்சியை  உவமையாகக் காட்டப்படுகிறது.  ‘‘இவள்  நினக்குப்  பலவகையிலும் இன்பம் தரும் நிலையில்  இருக்கின்றாள்; இவள்பால் இப்பொழுது நீ அன்பு  பூண்டு பாதுகாத்தல் பெரிதன்று. பெரிய உபகாரம் செய்தாரைப் பாதுகாத்தல் உலகில்யாவர்க்கும்  இயல்பே. ஆதலின் இவளால் இப்பொழுது பெறும் இன்பத்தை அடைய  முடியாத  முதுமைப் பருவத்திலும் இவளுக்கு நின் பாலுள்ள அன்பொன்றையே  கருதிப் பாதுகாத்து வருவாயாக. இவளைப் பாதுகாப்பதற்கு வேறு யாரும் இலர்” என்று தோழிக் கூறித் தலைவியைத் தலைவனுடன் விடுத்தாள்.
மரையா (ஒருவகை விலங்கு) தனக்குப் பயன்படாது ஓங்கி வளர்ந்த மூங்கில்களையுடைய சாரலாயினும் தனக்குப் பயன்படும் இலைகளைத் தேடியுண்டு அதன்கண் அன்புவைத்துத் துயில்வதுபோல நினக்குப் பயன்படாத மூப்புடையளாயினும் நினக்கு உவந்த நல்லியல்பு கண்டு இன்புற்று இவள்பால் அன்பு வைத்து ஒழுகுவாயாக என்று தோழித்  தலைவனிடம் கூறுவதை அறியமுடிகின்றது.

முடிவுரை
        இவ்வாறு தலைமக்களின் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியில் மகிழ்ச்சியுற்றும், துயரத்தில் துன்புற்றும் தனக்கென முயலாதோன் தன்னுடைய வாழ்வையே அவர்களுக்காக அர்ப்பணிப்பவள் தோழி. தலைமக்கள் வாழ்வில் பல முக்கிய முடிவுகளை எடுத்து தேவையான இடங்கள் இடித்தும் பழித்தும் வழி நடத்துபவளாக அமைபவள், தோழி என்பவள் உண்மையை எல்லோராலும் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

துணை நூல்கள்
1.தண்டியலங்காரம் – டாக்டர் கு. முத்துராசன், யாழ் வெளியீடு, சென்னை – 600 040

2. தமிழ் இலக்கிய வரலாறு –  முனைவா் பாக்யமேரி, நியுசெஞ்சரி புக்ஹவுஸ், சென்னை.

3. குறுந்தொகை மூலமும் உரையும் – முனைவா் வீ.நாகராசன், நியுசெஞ்சரி புக்ஹவுஸ்,  சென்னை.

Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
தி.சொர்ணாஞ்சலி
ஆய்வு மாணவர்,
முதுகலைத் தமிழ்
இரண்டாமாண்டு,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி – திருவாரூர்.
ஆய்வு நெறியாளர்,

முனைவர் கோ.மலர்விழி
தமிழ்த்துறைத் தலைவர்,
இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி – திருவாரூர்.

 

Nanmbiyagapporul Kalaviyil Seithigal|M. Saranya

Nanmbiyagapporul Kalaviyil seithigal - M.Saranya
Abstract
         Sangam literature, a cornerstone of ancient Tamil culture, intricately portrays the dual facets of human existence: akam (inner life) and puram (outer life), with akam often regarded as superior. Central to this portrayal are the concepts of kalavu (pre-marital love/romance) and  chastity or post-marital fidelity, pivotal in the interplay between the talaivan (male protagonist) and talaivi (female protagonist). Nambiyaga text eloquently delineates the nuances of kalavu, capturing the subtle dynamics of affection between lovers prior to marriage. Kalavu embodies the natural attraction leading to mutual affection, wherein the talaivan discerns suitability and conveys intent through discreet expressions. The text articulates seventeen distinct events characterizing kalavu, shedding light on traditional courting behaviors. Remarkably, these ancient notions resonate with contemporary understandings of love and marital compatibility, echoing considerations like dasapattam (ten compatibilities) in match-making processes. Thus, Sangam literature offers profound insights into Tamil cultural perspectives on relationships, bridging past and present dialogues on love, courtship, and matrimony. Its exploration of human emotions underscores enduring relevance, reflecting timeless dimensions of affection and partnership within societal contexts. The thematic richness continues to invite scholarly exploration and cultural reflection.


“நம்பியகப்பொருள் களவியல் – ஒரு பார்வை”

ஆய்வுச்சுருக்கம்
        சங்க இலக்கியங்கள் அனைத்தும் அகப்புற வாழ்வியலைப் பிரதிபலிக்கின்றது. ஒரு மனிதனுக்கு அகவாழ்வும் புறவாழ்வும் மிக முக்கியம். இவ்விரண்டில் புற வாழ்வைவிட அகவாழ்வு சிறந்தது. அப்படிப்பட்ட வாழ்வில் களவும் கற்பும் மிக முக்கியமானதாக திகழ்கின்றது. தலைவனும் தலைவியும் இல்வாழ்க்கையின்போது களவோடு கூடிய கற்பு அவசியமானதாகும். அந்த வகையில் ஒரு தலைவனும் தலைவியும் களவு மேற்கொள்ளும் போது ஏற்படக்கூடிய நிகழ்வைப் பற்றி நம்பியபொருள் களவியல் மிக அழகாக எடுத்துரைக்கின்றது.

முன்னுரை
      
           சங்க இலக்கியங்கள் தமிழரின் பண்பாடு, வாழ்க்கை, உணர்ச்சி, சமூக நிலை ஆகியவற்றின் பிரதிபலிப்பாக விளங்குகின்றன. நம்பியகப்பொருள் என்பது தமிழ் இலக்கணநூலாகிய தொல்காப்பியத்தில் கூறப்பட்ட அகப்பொருள் இலக்கணத்தை விளக்க எழுந்த ஒரு சார்பு நூலாகும். பல்வேறு கால கட்டங்களிலும் தோன்றிய அகப்பொருள் இலக்கண நூல்களில் சிறந்ததாகக் கருதப்படுவதும், இன்றும் தமிழ் இலக்கணம் பயில்வோரால் விரும்பப்படுவதுவும் இந்நூலேயாகும். அகம் புறம் என்ற இருவகைகளில், அக இலக்கியம் காதலை மையமாகக் கொண்டு உருவானது. அதனுள் களவியல் மிக முக்கியப்பகுதி. திருமணம் நடைபெறுவதற்கு முன் காதலர்கள் அனுபவிக்கும் சந்திப்பு, பிரிவு, ஊடல், இணக்கம் ஆகிய நிகழ்வுகளைப் பற்றியது களவியல். அந்த வகையில் நம்பியகபொருள் களவியலில் உள்ள  செய்திகளைக் காண்போம்.

நம்பிஅகப்பொருள்
         சூத்திர வடிவில் அமைந்துள்ள இந்நூல் நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது.
1.அகத்திணையியல்-116

2.களவியல்-54

3.வரைவியல்-29

4.கற்பியல்-10

5.ஒழிபியல்-43

      என ஐந்து பிரிவுகளாக 252 நூற்பாக்கள் உள்ளன.  இந்நூலிற்கு இலக்கியமாய்ப் பொய்யாமொழிப் புலவரால் மூன்று இயல்களும் முப்பத்தி மூன்று பிரிவுகளும் கொண்டு 425 பாடல்களில் மாறை என்ற நாட்டை ஆண்ட சிற்றரசர் சந்திரவாணன் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு தஞ்சைவாணன் கோவை இயற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
 காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

களவியல்
           தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது.
இன்பம், பொருள், அறம் மூன்றும் இணைந்தது வாழ்க்கை. அன்பின் வழியில் அமையும் இதனை ஐந்து திணையொழுக்கங்களாக எண்ணிப் பார்ப்பது தமிழர் நெறி. இதனைக் காமக்கூட்டம் என்பர். வேத நூல்கள் பாகுபடுத்திக் காட்டும் திருமண முறைகள் எட்டில் இது யாழோர் கூட்டம் எனப்படுகிறது.   ஊழ்வினையால் காதல் காட்சி நிகழும். காதலர் ஒப்புமையால் ஒன்றியிருந்தால் சிறப்பு. காதலன் காதலியை விடச் சிறந்திருந்தாலும் குறையில்லை.  காதலி சிறந்தவளாய் இருந்தால், கிடைப்பாளோ எனக் காதலனுக்கு ஐயம் தோன்றும்.  தெய்வமோ என அவன் ஐயுறும்போது சில குறிப்புகளால், இவள் பெண்மகள் என உணர்ந்துகொள்வான்.  அவர்கள் பார்வையில் இசைவு புலப்படும்.  ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. 

1.களவின் இலக்கணம்

2.கைக்கிளையின் பாகுபாடுகள்

3.களவிற்கு உரிய கிளவித்தொகைகள்

4.இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, தெளிவு, பிரிவுழி மகிழ்ச்சி, பிரிவுழிக் கலங்கல், இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் முதலான கிளவிகளுக்கான விளக்கங்கள். ஆகியவை இப்பாடப் பகுதியில் இடம் பெறுகின்றன.

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”.
   (தொல்.பொருளதிகாரம்—1038)
களவின் இயல்பு
உளமலி காதல் களவுஎனப் படுவது
ஒருநான்கு வேதத்து இருநான்கு மன்றலுள்
யாழோர் கூட்டத்து இயல்பினது என்ப     (களவியலில்-117)

        உள்ளம் மகிழ்வதற்குக் காரணமாகிய காதல் வாழ்க்கை அன்பின் ஐந்திணையாகும் இது களவு, கற்பு என்னும் இரு பிரிவுகளை உடையது. அவற்றுள் களவு வாழ்க்கையானது. நான்கு வேதத்துள் கூறப்படும் எண்வகை மணங்களுள் யாழோர் கூட்டமாகிய காந்தர்வ மணத்தை ஒத்ததாகும்.
   இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பவை நான்கும் வேதங்களாகும் அவற்றுள், பிரமம் முதலாகக் கூறப்பெறுவன எண்வகை மணங்களாகும். அவை

1.பிரமம் (பிரம்மசரிய விரதம் காக்க தக்கான் ஒருவனுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது)

2.பிரசாபத்தியம் (தலைமகனின் பெற்றோர் பெண் வேண்ட தலைமகளின் பெற்றோர் மறுக்காமல் பெண்ணை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது

3.ஆரிடம் (தலைமகனிடமிருந்து ஓரிரு ஆவையும் (பசு) ஆனேற்றையும் (எருது) அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது)

4.தெய்வம் (வேள்வி ஆசிரியனுக்குக் கன்னியை அலங்கரித்துத் தீயின் முன்னர்க் கொடுப்பது)

5.காந்தர்வம் (கொடுப்பாரும் கேட்பாரும் இன்றித் தலைமகளும் தலைமகளும் தனியிடத்துக் கண்டு கூடுவது)

6.சுரம் (தலைமகட்கு, உரிய பொன் கொடுப்பதோடு அவளது சுற்றத்தாருக்கும் வேண்டுவன கொடுத்துப் பெண் கொள்வது)

7.இராக்கதம் (தலைமகள் மற்றும் அவள்தம் பெற்றோர் உடன்பாடின்றி வலிதிற் கொள்வது)

8.பைசாசம் (உறங்கும் பெண்ணிடமும் கள் உண்ட பெண்ணிடமும் வலிதிற் சேர்வது)

இவற்றுக்கு உரிய வேறு பெயர்களை இறையனார் அகப்பொருள் விளக்கம் கூறுகின்றது

1.பிரமம் – அறநிலை

2.பிரசாபத்தியம் –ஒப்பு
3.ஆரிடம்-பொருள்கோள்

4.தெய்வம் வேறுபெயரில்லை.

5.காந்தர்வம் – யாழோர் கூட்டம்.

6.ஆசுரம் -அரும்பொருள்வினைநிலை  

7.இராக்கதம் வேறுபெயரில்லை

8.பைசாசம் பேய்நிலை என்பன.
      இவற்றுள் ஆகரம் முதலிய மூன்றும் கைக்கிளை எனவும் பிரமம் முதலிய நான்கும் பெருந்திணை எனவும் பாகுபடுத்தப்படுகின்றன. கந்தர்வ மணம் அன்பின் ஐந்திணைக்கு ஒப்பானது.

கைக்கிளையின் பாகுபாடு
காட்சி ஐயம் துணிவுகுறிப்(பு) அறிவுஎன
மாட்சி நான்கு வகைத்தே கைக்கிளை. (களவியலில்-118)
         
       என்று களவின் தொடக்க நிலையில் உள்ள இந்த நான்கும் கைக்கிளையின் பாகுபாடு ஆகும். 

1.காட்சி
        
        காதலன் காதலியை முதன்முதலில் பார்ப்பது காட்சியாகும். அவ்வாறு தலைவன் தலைவியை பார்க்கும்போது பத்து வகை பொருத்தங்களை உடையவராக இருத்தல் வேண்டும் சங்க இலக்கியத்தில் பத்து பொருத்தங்கள் என்பது 1.ஒத்த குலத்தில் பிறத்தல் 2.அக்குலத்திலும் நற்குடியராய் இருத்தல் 3.ஆளும் தன்மை 4.ஒத்த வயது 5.தோற்றப்பொலிவு 6.அன்பு 7.மன அடக்கம் 8.அருளுடைமை 9.நுண்ணறிவு 10.செல்வம் என்பனவாகும். தற்பொழுதும் திருமணம் செய்யும்போது பொருத்தம் பார்க்கின்றனர்.       
         
         திருமணத்தின்போது பார்க்கும் 12 பொருத்தங்களில் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீதீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், இராசிப் பொருத்தம், இராசி அதிபதி பொருத்தம், வசியப் பொருத்தம், ரஜ்ஜுப் பொருத்தம் மற்றும் வேதைப் பொருத்தம் ஆகிய பத்து முக்கிய பொருத்தங்கள் உள்ளன, இவை மணமக்களின் மகிழ்ச்சியான மற்றும் வளமான எதிர்காலத்தைத் தீர்மானிக்க உதவுகின்றன. 

முக்கிய பொருத்தங்கள்
1.தினப் பொருத்தம்: இது இருவருக்கும் இடையே உள்ள உடல் மற்றும் மனதின் இணக்கத்தை குறிக்கிறது.

2.கணப்பொருத்தம்: மணமக்களின் குணாதிசயங்களை கணிக்கும் முக்கியமான பொருத்தம் இதுவாகும்.

3.மகேந்திரப் பொருத்தம்: ஆண் மற்றும் பெண்ணின் குடும்பத்தின் முன்னேற்றத்தை இது குறிக்கும் ஒரு பொருத்தம்.

4.ஸ்திரீதீர்க்கப் பொருத்தம்: இது மனதின் மகிழ்ச்சியையும், நீண்ட ஆயுளையும் குறிக்கிறது.

5.யோனிப் பொருத்தம்: இது தம்பதியரின் உடல் மற்றும் உணர்வு ரீதியான இணக்கத்தை உறுதி செய்கிறது.

6.இராசிப் பொருத்தம்: இது இருவரின் ஜாதகத்தில் உள்ள இராசிகளின் பொருத்தத்தை குறிக்கிறது.

7.இராசி அதிபதி பொருத்தம்: மணமக்களின் இராசிக்குரிய அதிபதிகளின் பொருத்தமாகும்.

8.வசியப் பொருத்தம்: இது இருவருக்கும் இடையேயான அன்பு மற்றும் கவர்ச்சியை குறிக்கும் பொருத்தம்.

9.ரஜ்ஜுப் பொருத்தம்: இது மிகவும் முக்கியமான பொருத்தமாகும், ஏனெனில் இது தம்பதியரின் நீண்ட ஆயுளையும், குடும்பத்தின் பாதுகாப்பையும் குறிக்கிறது.

10.வேதைப் பொருத்தம்: இது இருவரின் உடல் ரீதியான ஆரோக்கியத்தை குறிக்கும் ஒரு பொருத்தம்

2. ஐயம்:
      காதலியைப் பார்த்த பிறகு உண்டாகும், அவள் தன்னுடன் ஒத்த அன்பு கொண்டவளா என்ற சந்தேகம் வரும் அதுமட்டுமல்லாமல் இவள் மானுடப் பெண்ணா அல்லது தெய்வப் பெண்ணா என்ற ஐயம் தோன்றுகின்றது. இந்த ஐயத்தினை வள்ளுவர்

அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.  (குறள், 1081)
என்னும் குறள் தலைமகன் ஐயம் கொண்டதற்குச் சான்றாகும்.

3. துணிவு:
        ஐயம் நீங்கிய பிறகு உண்டாகும், அதாவது தலைவியின் தோளில் ஓவியம், அணிகலன்கள், வாடிய மலர், மலரை சுற்றும் வண்டு, நிற்காமல் இருக்கும் கால்கள், பார்க்கின்ற கண்கள், உயர்த்தல் நிழல் விழுதல், ஆடையில் மாசுபடுதல் போன்ற நிகழ்வுகளை கண்ட தலைவன் அவளும், தன்னுடன் ஒத்த அன்புடையவள் என்ற திடமான நம்பிக்கை வந்தபின் துணிவு வரும்.

திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயும் – அரிபரந்த
போகித ழுண்கணு மிமைக்கும்
ஆகு மற்றிவ் ளகலிடத் தணங்கே. (பு.வெ. கைக்கிளை நூற்பா – 3)
          இவள் நெற்றி வேர்க்கிறது. இவள் மாலை வாடியிருக்கிறது. கால்கள் நிலத்தில் நிற்கின்றன. கண்கள் இமைக்கின்றன. ஆதலால் இவள் மண்ணுலகில் வாழும் பெண்தான் என்று புறப்பொருள் வெண்பாமாலை கூறுகின்றது.

4. குறிப்பறிதல்:
           காதலியைப் பார்த்து, அவளுடைய உடல் மொழியின் மூலம், அவளும் தன்னைப் போலவே அன்பு கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளுதல். தலைவியின் உள்ளக் குறிப்பை தலைவனுக்கு அவளுடைய கண்கள் உணர்த்துவதே குறிப்பறிதல் ஆகும். இக்குறிப்பறிதலைத் தொல்காப்பியர்,

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும் (தொல்.களவியல் – 5)
என்னும் நூற்பாவழி எடுத்துரைக்கிறார்.

இருநோக்கு இவள்உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.  (குறள் – 1091)
         
என்ற வள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார். இந்த நான்கு நிலைகளும் ஒருதலைக் காமத்தை அடிப்படையாகக் கொண்டதால், இவை கைக்கிளை ஒழுக்கமாகக் கருதப்படுகின்றன.

களவிற்கு உரிய கிளவித் தொகை
களவிற்குரிய கிளவித்தொகையை ஆசிரியர்

இயற்கைப் புணர்ச்சி வன்புறை தெளிவே
——————————–
களவிற்கு உரிய கிளவித் தொகையே   (களவியல் – 123)
         
           1.இயற்கைப்புணர்ச்சி 2.வன்புறை 3. தெளிவு 4. பிரிவுழி மகிழ்ச்சி 5. பிரிவுழிக் கலங்கல் 6. இடந்தலைப் பாடு 7. பாங்கற் கூட்டம் 8. பாங்கிமதி உடம்பாடு 9. பாங்கியிற் கூட்டம் 10. பகற்குறி 11. பகற்குறி இடையீடு 12. இரவுக்குறி 13. இரவுக்குறி இடையீடு 14. வரைவு வேட்கை 15. வரைவு கடாதல் 16. ஒருவழித் தணத்தல் 17. வரைவு இடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் ஆகிய பதினேழும் களவிற்கு உரிய கிளவித் தொகையாகும்.

1.இயற்கைப்புணர்ச்சி:
        இயற்கைப் புணர்ச்சி என்பது முன்பின் அறியாத தலைவனும் தலைவியும் எதிர்பாராத விதமாகக் கண்டு மகிழ்வதாகும். இது, தெய்வப் புணர்ச்சி, முன்னுறு புணர்ச்சி, காமப் புணர்ச்சி என்றும் அழைக்கப்படும்.

🎯இது காந்தருவமணத்தோடு ஒத்திருப்பதால் இயற்கைப் புணர்ச்சியாகும்.

🎯இது தெய்வத்தால் (விதிவசத்தால்) கூட்டப்படுவதால் தெய்வப் புணர்ச்சியாகும்.

🎯இது முதன் முதல் கூடுவதால் முன்னுறு புணர்ச்சியாகும்.

🎯இஃது இருவரும் ஒத்த அன்பினால் கூடுவதால் காமப்புணர்ச்சியாகும்.

🎯இவ்வியற்கைப் புணர்ச்சி தெய்வ அருளால் நிகழ்வதும் உண்டு; தலைவியின் முயற்சியால் நிகழ்வதும் உண்டு. தெய்வ அருளால் நிகழும் போது முயற்சி இன்றி நிகழும். தலைவியால் நிகழும் போது முயற்சியின்றி நிகழாது.

2.வன்புறை:
        வன்புறை என்றால் வலியுறுத்திக் கூறுதல் என்று பொருள். தலைவன் பிரிவானோ என்று தலைவிக்கு ஐயம் ஏற்படும். அந்த ஐயப்பாட்டைப் போக்கும் வகையில் தலைவன் பேசுதல் வன்புறைஆகும்.

3.தெளிவு:
தலைவன்    வற்புறுத்திக்கூறிய வார்த்தைகளைக் கேட்டத் தலைவி அவன் கூறுவது உண்மைதான் என்று நினைப்பது தெளிவு ஆகும்.

நின்ற சொல்லர் நீடுதோன்று இனியர்
என்றும் என்தோள் பிரிவறி யலரே
——————————–
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.          (நற்றிணை-1)
4.பிரிவுழி மகிழ்ச்சி:
      களவுப் புணர்ச்சியில் ஈடுபட்ட தலைவன், தலைவி அவ்விடத்தை விட்டுச் சென்றபின் அப்புணர்ச்சியை நினைந்து மகிழ்வது பிரிவுழி மகிழ்ச்சி ஆகும். 

5.பிரிவுழிக் கலங்கல்:
            களவுப்புணர்ச்சியில் ஈடுபட்ட    தலைவன், தலைவி அவ்விடத்தை விட்டுப் பிரிந்து சென்றபின், அத்தலைவியை நினைத்து வருந்துவது பிரிவுழிக் கலங்கல் ஆகும்.

6.இடந்தலைப்பாடு:       
          இயற்கைப் புணர்ச்சியில் தலைவியைப் புணர்ந்த தலைவன், அடுத்த நாளும் அதே இடத்தில் அத்தலைவியைக் கூடுதல் இடந்தலைப்பாடு எனப்படும்.

7.பாங்கற் கூட்டம்:       
பாங்கனின் உதவியால் தலைவன் தலைவியைக் கண்டு கூடுதல் பாங்கற் கூட்டம் ஆகும்.

8.பாங்கி மதிஉடன்பாடு:       
        தலைவனும் தலைவியும் கூடி மகிழ்ந்ததைத் தோழி தன்னுடைய அறிவால் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதலே பாங்கி மதி உடன்பாடு எனப்படும். அதாவது தலைவியிடம் வேறுபாடு கண்ட தோழி அவளுடைய செயல்களைக் கண்டு ஆராய்ந்து தெளிந்த பின் உடன்படுவாள்.
9.பாங்கியிற் கூட்டம்:       
           பாங்கியின் உதவியோடு தலைவனும் தலைவியும் கூடும் கூட்டம் பாங்கியிற் கூட்டம் ஆகும்.

10.பகற்குறி:       
       பகற்பொழுதில் தலைவனும் தலைவியும் காண்பதற்காக குறிக்கப்படும் இடம் பகற்குறி ஆகும்.பகற்குறியில்தலைவனின் வரவைத் தோழி தலைவிக்கு 

கவர்பரி நெடுந்தேர் மணியும் இசைக்கும்
——————————-
அல்லல் அரும்படர் காண்கநாம் சிறித”    (நற்றிணை 307)
      என்ற பாடல் வழிஎடுத்துக் கூறுவதை காணமுடிகிறது.
11.பகற்குறி இடையீடு:       
      பகற்பொழுதில் தலைவியை காணவரும்போது தலைவனுக்கு, அச்செயல் நடைபெறாமல் தடைப்பட்டுப் போவது பகற்குறி இடையீடு எனப்படும்.

அளிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி
——————————
பெருவிதுப் புற்றால் நோகோ யானே.    (குறுந் -131)
      போன்ற பாடல்கள் வழி தலைவன் தலைவியை காண வரும் போது பகற்குறி இடையீடு ஏற்படுகின்றதே என்று தலைவன் தலைவியோடு கூடி மகிழ்ந்த இடங்களையும், தலைவனுடைய ஊரின நோக்கி பார்த்து மகிழ்வது போன்ற செய்திகளை அறிய முடிகிறது

12.இரவுக்குறி:       
        இரவுப் பொழுதில் தலைவன் தலைவியைக் காண்பதற்காகக் குறிக்கப்படும் இடம் இரவுக்குறி எனப்படும். இது பகற்பொழுதில் தலைவன் தலைவியைக் காணாதபோது, தொடர்ந்து இரவு வரை நீடீப்பது. 

பெயல்கண் மறைத்தலின் விசும்புகா ணலையே
————————————
யாங்குஅறிந் தனையோ நோகோ யானே. (குறுந் 355)
     என்ற பாடல் வழி இரவுக்குறியில் தலைவன் தலைவியை காண வரும் போது ஏற்படும் இடையூறுகளை நினைத்து தலைவி வருந்துகின்றாள் என்ற செய்தியை அறிய முடிகிறது

13.இரவுக்குறி இடையீடு:
        இரவுபொழுதில் தலைவியை காணவரும்போது தலைவனுக்கு, அச்செயல் நடைபெறாமல் தடைப்பட்டுப் போவது இரவுகுறி இடையீடு எனப்படும்.

காமம் கடவ உள்ளம் இனைப்ப
யாம்வந்து காண்பதோர் பருவம் ஆயின்
ஓங்கித் தோன்றும் உயர்வரைக்கு
யாங்குஎனப் படுவது நும்ஊர் தெய்யோ   (ஐங்குறு 237)
         என்ற பாடலில் இரவுக்குறியில் இடையீடு  ஏற்பட்டதை அறியலாம்.

14.வரைதல் வேட்கை:       
         அல்லகுறியாலும், தலைவன் வருதல் அருமையாலும் வருந்திய தலைவி, தலைவனை மணந்து கொள்ளும் வருப்பத்தினைக் கூறுதலே வரைதல் வேட்கை (திருமண விருப்பம்) ஆகும். 

15.வரைவு கடாதல்:       
      களவில் கூடும் தலைவனை, விரைந்து வந்து தலைவியை மணந்துக் கொள்ள வேண்டும் எனத் தோழி வற்புறுத்துவது வரைவு கடாதல் (திருமணத்தை விரைவுப்படுத்துதல்) எனப்படும்.

16. ஒருவழித் தணத்தல்:       
       களவுக் காலத்தில் தலைவன் தலைவியைப் பற்றி அலர் எழும். அப்போது அந்த அலரைத் தணிப்பதற்காக தலைவன் தலைவியைக் காண வரமாட்டான். இந்த சிறு பிரிவே ஒருவழித் தணத்தல் எனப்படும்.

சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
———————————–
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.    (நற்றி 70)
        என்ற பாடல் ஒரு வழி தணத்தலின் போது தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி புலம்புவதாகும்.

17.வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு:       
      களவுக் காலத்தில் தோழி தலைவனிடத்தில் தலைவியை திருமணம் செய்துக் கொள்ள விரைவுப்படுத்துவாள். அதற்கு உடன்பட்டு, அத்திருமணத்திற்காக பொருள் வேண்டும் என்று பொருள் தேடுவதற்காகப் பிரியும் பிரிவே வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவாகும்.

முடிவுரை:
 
        தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் களவியல் என்ற இயலில் தலைவன் தலைவனின் களவுச் செய்திகள் கூறப்படுவதுபோல் நம்பியகப் பொருளிலும் காணப்படுகிறது.தலைவன் தலைவியை களவு மேற்கொள்வதற்கு முன் தலைவியை இயற்கையாக பார்த்து, இவர் தலைவிதானா என்று ஐயத்தை நீக்கி, ஓரிடத்தில் சந்தித்து களவு மேற்கொள்வான். தலைவன் தலைவிக்கு இருக்கக்கூடிய பத்து வகை பொருத்தங்களையும், 17 வகையான களவிற்குரிய கிளவித்தொகையையும் அறிய முடிகிறது. நம்பியகப் பொருள் ஒரு இலக்கண நூலாக இருந்தாலும்  அந்த இலக்கண வழியே தலைவன் தலைவிக்குரிய களவு செய்திகளை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பார்வை நூல்கள்:
1.திருஞானசம்பந்தம். முனைவர் ச. நம்பியகப்பொருள்,  கதிர் பதிப்பகம்,  திருவையாறு. 2010.

2.இளம்பூரனார் உரை, தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை. 2006.

3.நாகராசன். வி. (உரை ஆ), குறுந்தொகை, (பகுதி – 1, 2) நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. 2007.

4.தட்சிணாமூர்த்தி.  அ. (உ.ஆ), ஐங்குறுநூறு, (பகுதி – 1, 2) நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. 2007.

5.சோமசுந்தரனார், தி.பொ.வே. புறப்பொருள் வெண்பாமாலை விளக்கவுரை> திருநெல்வேலி   தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம், சென்னை. 2004.

6.இராரமயாபிள்ளை, நற்றிணை, வர்த்தமான் பதிப்பகம், சென்னை. 1999.

7.கலைஞர் கருணாநிதி. மு, திருக்குறள், திருமகள் நிலையம், சென்னை. 2019. 
Iniyavaikatral peer reviewedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 

மா. சரண்யா,

முதுகலைத்தமிழ்,
இரண்டாம் ஆண்டு
தமிழ்த்துறை,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,     
திருவாரூர்.
ஆய்வு நெறியாளர்
முனைவர் கி. சர்மிளா,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,

இராபியம்மாள் அகமது மெய்தீன் மகளிர் கல்லூரி,     
திருவாரூர்.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »