Tuesday, July 22, 2025
Home Blog Page 28

காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடல்கள் ஓர் ஆய்வு

காரிமங்கலம்-வட்டார-ஒப்பாரிப்-பாடல்கள்-ஓர்-ஆய்வு

ஆய்வுச்சுருக்கம்

            காரிமங்கலம்  வட்டார மக்களிடம் புதைந்து கிடக்கும் ஒப்பாரிப் பாடல்களை வெளிக்கொணரும் விதமாக இவ்வாய்வு நிகழ்த்தப்படுகின்றது.  அதோடு அம்மக்களிடம் உள்ள உறவு நிலையில் பிணைப்பும் அவர்களின் சுகதுக்கங்கள் என அனைத்தும் ஒப்பாரியின் வாயிலாக வெளிப்பட்டு நிற்பதைக் காண்கின்றோம்.  மேலும், ஒப்பாரிப் பற்றிய அகராதி விளக்கம், இலக்கியங்களில் ஒப்பாரி, காரிமங்கலம் வட்டார ஒப்பாரிப் பாடலின் அமைப்பு முறைகள் ஆகியன இவ்வாய்வில் எடுத்தாளப்பட்டுள்ளன.

திறவுச்சொற்கள்

காரிமங்கலம் ஒப்பாரிப் பாடல்கள், ஒப்பாரி, ஒப்பாரி அகராதி விளக்கம், இலக்கியங்களில் ஒப்பாரி போன்றன.

முன்னுரை

மனிதன் இசையிலே பிறந்து  இசையிலே வளர்ந்து இசையிலே இறக்கின்றான். இக்கூற்றை நாட்டுப்புற இலக்கியம் நிருபிக்கின்றது. பிறக்கும் பருவத்தில் தாலாட்டு, வளரும் பொழுதில் காதல் பாடல்கள், இறக்கும் பொழுது ஒப்பாரி என மனித வாழ்வில் இடம்பெற்று இசையாகத் திகழ்கின்றது. இவ்வாறாக மனிதன் வாழ்வில் ஒரு அங்கமாக ஒப்பாரி பாடல் விளங்குகின்றது. இத்தகைய ஒப்பாரிப்பாடல்கள் மனிதனின் பண்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. மனிதனின் வாழ்க்கைச் செயல்பாடுகள் உறவுநிலைகள் பெருமைகள் அவனுடைய சேவைகள் அனுபவித்த இன்பத்தின் நிகழ்வுகள்   ஆகியவற்றை நினைவு படுத்துவது ஒப்பாரியாகும். இத்தகைய ஒப்பாரிப்பாடல்கள் காரிமங்கல வட்டார மக்களிடம் அதிகம் காணப்படுகிறது. இப்பாடல்களை ஆய்ந்து அம்மக்களின் பண்பாட்டு நிலைகளைக் கண்டறிந்து வெளிப்படுத்திக் காட்டுவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஒப்பாரி பொருள்

            இறந்தவர்களை நினைத்துப் பாடப்படும் பாடல்கள் ஒப்பாரிப்பாடல்கள் எனப்படும். வாழ்வின் முன்னுரை தாலாட்டு என்றால், முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டும் ஒப்பாரியும் பெண்குலத்தின் படைப்பாகும். ஒப்பாரியே ஒப்பு + ஆரி எனப் பிரித்துப் பொருள் கொள்வர்.  நாட்டுப்புறவியல் அறிஞர் சு. சக்திவேல் அவர்கள் “இறந்தவர்களை நினைத்துப் பாடும் பாடலே ஒப்பாரி என்பார். இறந்தவர்களின் இழப்பை எண்ணி இறந்தவர்களையும் தம்மையும் ஒப்பிட்டுப் பாடுவதும் ஒப்பாரியாகும்”1 என்கிறார்.

            “தமிழில் ஒப்பாரியைப் பிலாக்கணம், பிணக்கானம், கையறுநிலை, புலம்பல் பாட்டு, சாவுப்பாட்டு, இழவுப்பாட்டு எனப் பல வகையாகக் கூறுவர். பாதுகாப்பை இழந்தபோதும் பாதுகாக்கப்பட வேண்டியதை இழந்தபோதும் பெண்களின் ஒப்பாரியில் சோகம் வெளிப்பட்டு நிற்கின்றது”2  என்கிறார் சு.சக்திவேல். மேலும், இரத்த உறவினர்களையோ நட்பு அடிப்படையில் நெருக்கமானவர்களையோ மதிப்புமிக்க செல்வம் முதலிய உடைமைகளையோ இழக்கும்போது ஏற்படும் சோகத்தின் வெளிப்பாடாக ஒப்பாரி (இழப்புப் பாடல்கள்) அமைகின்றது.

ஒப்பாரி அகராதி விளக்கம்

            ஒப்பாரி என்ற சொல்லுக்குப் பல்வேறு அகராதிகள் பொருள் விளக்கத்தைத் தருகின்றன. அவ்வகையில் கதிர்வேற்பிள்ளையின் தமிழ் அகராதி “இறந்தவர் பொருட்டு பாடும் அழுகைப்பாட்டு”3 என்று பொருள் வைக்கின்றது. க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி “இழவு வீட்டில் இறந்துபோனவரைக் குறித்த அழுகையும் புலம்பலும் பாட்டுவடிவில் வெளிப்படுவது”4 என்கிறது. சென்னைப் பல்கலைக்கழக பேராகராதி “அழுகைப்பாட்டு”5 என சுட்டுகின்றது. தமிழ் – ஆங்கில அகராதி “ஒப்பு சொல்லி அழுதல் என்று பொருள் கூறுகிறது அதோடு பெண்களால் பாடப்படுவது என்றும் இறந்தவர்களுக்கும் அடுத்துப் பிற பொருள்களுக்கும் ஒப்பு சொல்லி பாடுவது”6 என்று கூறுகிறது. இவ்வாறாகப் பல்வேறு அகராதிகள் பொருளுரைக்கிறது. ஆகவே ஒப்பாரி என்பது இறப்புக்காக மட்டுமே பாடப்படுவதாகும் என்பதை அறியமுடிகிறது.

இலக்கியங்களில் ஒப்பாரி

            ஒப்பாரி குறித்த செய்திகள் பிற்கால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றைக் குறித்துக் கீழ்க்கண்ட இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சித்தர் பாடல்,

                        “அவரவர் அழும்போது ஒப்பாரி சொல்லி

                        அழுகின்ற வயணம் கண்டேன்”7

என்று குறிப்பிடபட்டுள்ளது. அதாவது இறப்பின்போது ஒவ்வொரு மனிதர்களும் அழுகின்ற நிலையினைக் கண்டேன் என்ற பொருள் அமைந்திருக்கின்றது. அதேபோல் அருணகிரிநாதர் பாடலில்,

                        “சமர்படுகளத்து ஒப்பாரி வைத்திருக்கும்

                        அஞ்ஞானம் விட்டனன்”8

என்று இடம்பெறுகிறது. போர்க்களத்தில் ஒப்பாரி வைக்கின்ற நிலையை குறிப்பிடுகின்றார். மேலும்,

                        “படுகளத்தி  லொப்பாரியாகிய

                        கருணை மொழியை கூறுவாருண்டோ”9

என்ற பாடலடி ஒப்பாரியைப்பற்றி குறிப்பிடுகின்றது. இவற்றின் அடிப்படையில் காணும்போது ஒப்பாரி என்பது ஆரம்பக்காலம் முதல் இன்று வரை மக்களிடையே வழங்கப்படுகின்றதை இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

இறப்புச் சடங்கும் ஒப்பாரியும்

            பொதுவாக இறப்பு நிகழ்ந்த நாள் முழுவதும் ஒப்பாரி பாடப்படுகின்றது. நீத்தார்க்கடன் எனப்படும் கருமாதிச்சடங்கு நடைபெறக்கூடிய சமூகத்தைப் பொறுத்து 5, 7, 9, 11 நாள் வரை ஒவ்வொரு நாளும் ஒப்பாரி பாடுவர். காலையிலும் மாலையிலும் நெருங்கிய உறவினர்கள் புடைசூழ இறந்தவரின் வீட்டில் ஒப்பாரிப் பாடுவது மரபாகும். அதேபோல் இறந்து மூன்றாவது மாதம், பதினோராவது மாதம் இறந்தவருக்கென்று வீட்டில் படையல் வைத்து வழிபடுவர். அப்போதும்கூட ஒருசிலர் ஒப்பாரி பாடுவதைக் காணமுடிகிறது.

காரிமங்கல வட்டார ஒப்பாரி

            மேற்கண்ட நிலைகளில் ஒப்பாரிப் பாடல்கள் அமைகின்றன. இவற்றின் வரிசையில் காரிமங்கல வட்டார ஒப்பாரிப் பாடல்களைக் காணலாம். அந்தவகையில், தந்தையை இழந்த மகள் பாடும் பாடல்,

                        “தலைமயிரை விரிச்சுவிட்டு

                        தருமபுரிபோய் நின்னா – என்னைத்

                        தருமபுரி வைத்தியரு

                        தங்கிப்போ இன்னாரு – நான்

                        தங்க முடியாது – எங்கப்பா வீட்டு

                        தங்ககரதம் சிக்காது ……”10

என்று தந்தை இறந்த செய்திகேட்டு வேகமாகப் பிறந்த வீட்டிற்கு வரும் மகளை வழியில் தந்தையின் நண்பர்கள் தங்கிப்போகச் சொல்கிறார்கள். ஆனால் இவள் முடியாது என்று சொல்லி தந்தையின் முகம் பார்க்க ஓடி வருகிறாள் என்ற செய்தியை இப்பாடலைப் பாடியவரின் விளக்கத்திலிருந்து நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. மேலும்,

                        “சேலத்தான் பட்டெடுத்தால்

                        சீருக் குறையுமின்னு

                        மொரப்பூரான் பட்டெடுத்தால்

                        மோப்புக் குறையுமின்னு

                        காரிமங்கலம் பட்டெடுத்தா

                        கலையழகு குறையுமுன்னு

                        அல்லி தரிமூட்டி

                        செல்லிக்குப் பட்டுடுத்தி ……”11

என்ற பாடலின் மூலம் தன் தங்கையின் விதவைக் கோலத்தைக் கண்டு அண்ணன் அழுகின்ற நிலையை அறியமுடிகிறது. கணவன் இறந்தபின் மனைவிக்கு அவளுடைய சகோதரர்கள் கோடிப்புடவை எடுத்துக் கொடுப்பார்கள். இப்புடவையைக் கோடித்துணி என்றும் அழைப்பர். நல்ல காரியங்களுக்குப் பட்டெடுத்துத் தங்கைக்கு அளிக்கும் அண்ணன் கையாலே கோடித்துணி வாங்கும் நிலை ஏற்பட்டதைக் குறித்து தங்கை வருந்துகின்றாள். நல்ல காரியங்களுக்கு கடைகளைத்தேடி நல்ல பட்டெடுத்த அண்ணன் இக்காரியத்துக்கும் ஊர்ஊராக அலைந்து நல்ல பட்டெடுத்தாரோ என்று சொல்லி அழுகின்றாள். தங்கையின் சொல்கேட்டு அண்ணன் அழுகின்றான் என்ற செய்தியை இவ்வட்டார ஒப்பாரிப் பாடல்கள் மூலம் அறியலாம். மேலும்,

            தங்கிப்போ, சேலத்தான், மொரப்பூரான், காரிமங்கலத்தான் என்பது வட்டார வழக்கைச் சுட்டிநிற்கின்றது. தங்கிப்போ என்பது அமரு, உட்காரு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. உறவு நிலைகளில் முதன்மை இடத்தைப் பெறுவது தாயாவாள். அத்தகைய தாய் இறந்தபோது இவ்வட்டார மக்களின் இறப்புப்பாடல் இத்தகைய அமைப்பில் அமைகிறது.

                        “நடுபட்ட வடுகெடுத்து என்ன பெத்தவளே

                        நெத்தியிலே பொட்டு வச்சி

                        இனிக்கபேசி அனுப்புனியே எம்மா

                        இன்னிக்கி இப்புடி விட்டுட்டியே”12

என்று பாடுகின்றனர். பெரும்பாலும் தாய் இறந்துவிட்டால் தலைமாட்டில் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதரிகதரி அழுபவள் அவளுடைய பெண் பிள்ளையே ஆவாள். ஆண்பிள்ளை அவ்வாறு அழுவதில்லை. அத்தகைய பெண் பிள்ளையானவள் நடுபட்ட வடுகெடுத்து தலைவாரி அழகு செய்தவளே நெற்றியில் பொட்டு வைத்து சிரித்த முகத்தோடு என்னை அனுப்பி வைத்தவளே என்று தன்தாயின் இழப்பை எண்ணிப் பாடுகின்றாள்.

            தாய் இறந்து போனதால் மகளுக்கு உண்டான சோகத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஒப்பாரிப்பாடல் அமைகிறது. அதாவது, தாய் ஒரு ஊரிலும் மகள் வேரொரு ஊரிலும் வாக்கப்பட்டு வாழ்கின்றாள். மகளானவள் எழுதப்படிக்கத் தெரியாதவள். தாய் வீட்டிலிந்து கடிதம் வருகின்றது அக்கடிதத்தைத் தபால்காரனையே படிக்கச்சொல்லி மகளானவள் தாய் இறந்த செய்தியை அறிந்துகொள்கிறாள். பிறகு பெற்ற பிள்ளையைவிட்டு கட்டிய கணவனையும் விட்டு ஓடோடி வருகிறாள் அவ்வேளையில் தாய்க்காகப் பட்டுப்புடைவை வாங்க நினைத்து பல ஊர்களுக்குச் செல்கின்றாள். அவ்வூர்களில் தாய்க்கேற்ற பட்டுப்புடவை கிடைக்காததால் தரியிலே நெய்து தாம்புலத்தட்டில் ஏந்தி கண்ணீர் கரைபுரண்டோட தாய் வீட்டிற்கு வந்து சேர்கின்றாள். இச்செய்தியானது,

                        “எழுதி படிச்சவரே இங்கிலீசு கத்தவரே எடுத்துப் படிச்சுப்பாரே

                          இது வாழ்வோலையோ சாவோலையோ

                         சாவோலை என்றதுமே அவுரேவும் கேக்காம

                         கைப்புள்ளையும் எடுக்காம பொட்டியில பணமெடுத்தா

                        எனக்கு பொழுதேறி போகுமுன்னு சட்டியில பணமெடுத்தா

                        சாய்ங்காலம் ஆகுமுன்னு உரியில பணமெடுத்து ஓடிவந்தேன்

                       டேசனுக்கு – திருட்டு இரயில் ஏறி திருப்பத்தூர் போயிரங்கி

                        திருப்பத்தூர் செட்டியாரே என்ன பெத்த சீதாவும் செத்துவிட்டா

                        செகப்பு கலருல சிறுகலரு தாருமண்ணா?”13

          என்ற ஒப்பாரிப்பாடலில் அமைகின்றது. மனதை உருக வைக்கும் பாடல் ஏட்டில் எழுதப்பெறவில்லை என்றாலும் காரிமங்கல வட்டார மக்களின் மனதில் எழுதப்பட்டுள்ளது. இப்பாடலில் ‘அவுரேவும்’ என்ற சொல் கணவனைக் குறிப்பதாகும். கணவனைக் கடவுளுக்கு மேலாக இப்பகுதி பெண்கள் நினைப்பதால் அவரிகளின் பெயர்களை எந்தக் காரணத்திற்கும் சுட்டி சொல்லமாட்டார்கள். ஆகவே இச்சொல்லானது இவ்வட்டார மக்களின் வழக்குச்சொல்லாகும்.

     தாயின் இறப்பில் அழுவதைக்காட்டிலும் தந்தையின் இழப்பில் பெண்கள் ஆரம்பம் முதல் முடிவு வரை எல்லாவற்றையும் சொல்லி கண்ணீரே வற்றுகின்ற அளவிற்கு மகளானவள் அழுவாள் என்பதை,     

                       “கால் சிலம்பு ரோசாவே பூவே

                        காலஞ்சென்ற மல்லி மொக்கே

                        காலஞ்சென்ற நாளையிலே எப்பா

                        கட்டிலில சாஞ்சிருந்தா

                        கட்டிலுக்கு அழகு உண்டு எப்பா

                        இந்த நாட்ல எனக்கும் காவல் உண்டு

                        கட்டிலிட்டு கால் வாங்குனா

                        கட்டிலுக்கும் அழகில்ல

                        காவலுக்கும் ஆலில்ல”14

           எனும் மகளின் ஒப்பாரியை வெளிப்படுத்துகிறது. இப்பாடலில் கால் வாங்குனா என்ற சொல்லுக்கு எழுந்து போதல், அவ்விடத்தை விட்டு நீங்குதல் என்ற பொருளில் வருகிறது.

அண்ணன் தங்கை உறவில் வெளிப்படும் ஒப்பாரி

            அண்ணன் தங்கை உறவு நிலைகளைப் பற்றி பல திரைப்படங்களில் காணமுடிகிறது. அவ்வாறு அண்ணன்களும் தங்கைமார்களும் மிகுந்த பாசம் கொண்டவர்கள். அத்தகைய சூழலில் அண்ணன் இறந்தபோது,

            “குங்கும எண்ணெய் எடுத்து என்ன பெத்த குயிலா குளிக்கும் தண்ணி

                        கொல்லையில போய்பாயும் கொல்லபுரம் தண்ணியில

                        கொண்டலறி பூ பூக்கும் கொண்டலறி பூ அறுத்து

                        என்ன பெத்த குயிலாலுக்கு கோபுரம் போல் தேருகட்டி

                        என்ன பெத்த குயிலால எடுத்துவச்சி………”15

       எனத் தங்கையை இழந்த அண்ணன் தன்தங்கை வளரும் பருவத்தில் அவள் பூந்தோட்டம் வைத்து வளர்த்த நிலையையும் அப்பூவே அவளுடைய தேர்ப்பாடைக்கு வந்ததை எண்ணி அண்ணன் புலம்புவதைக் காணமுடிகிறது. அதேபோல்,

                        “ஆத்துக்கு அந்தாண்ட ஆடு மேய்க்கும் அண்ணாவே

                        நா ஆட்டுமணி சத்தம் கேட்டு அல்லி மொளகா அரைப்பேன்

                        அவரைக்காய் நாருரிப்பேன்……… ………”16

          என்று அண்ணன் மீது பாசம்கொண்ட தங்கை அவன் தன்னோடு இருந்த காலத்தில் அவர் வரும் சத்தம் கேட்டே அவருக்கு பிடித்தமான அவரைக்காய் குழம்பு செய்து வைத்துக் காத்திருந்த தங்கையின் புலம்பலில் தெரிகிறது. அதோடு தங்கையை அண்ணன் வளர்த்த விதத்தையும் தங்கை அண்ணன்மீது கொண்ட பாசத்தையும் நினைத்து மனமுருகிப் பாடுவதை இவ்வட்டார மக்களிடம் காணமுடிகிறது.

புகுந்த வீட்டில் பெண்படும் துன்பம்

            ஒப்பாரி பாடும்போது பெண்கள் தாங்கள் முதலில் வாழ்ந்த வீடான தந்தை வீட்டிற்கு வந்ததும் அவர்களுடைய பழைய நினைவு வருகிறது. அதை இப்போது வாழும் வீட்டோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒப்பாரி வைக்கும் பாடல்,

                        “தங்க மலைமேலே தாலறுக்க போனேனே

                        தாளறுத்தா பாவமில்ல எம்மா என்னை

                        தட்டிஅடிச்சா கேட்பாறு இல்ல

                         ——————————————————————–

                        மாங்கா மரத்தடியில் மயில்போல குந்தியிருந்த எம்மா

                        என்ன மயிலுன்னு பாக்காம மருந்துபோட்டு கொன்னாங்க

                        பச்ச இலப்பமரம் பலசாதி வேப்பமரம்

                        படிக்காத ராஜனுக்கு எம்மா உம் பார்வதியும் மாலையிட்டா

                         நாள்முதலா எம்மா தேங்காய் இளநீரோ தீராத கண்ணீரோ …..”17

       என்ற பாடலின் மூலம், பெண் புகுந்த வீட்டிற்கு போனபின் கணவன் சொல்லைக் கேட்டு நடந்தாலும் கூட அங்கு இருக்கும் பிறரையும் மதித்து நடக்க வேண்டும். அதில் சிறுதவறு ஏற்பட்டாலும் அவர்கள் ஒன்று சேர்ந்து இப்பெண்ணை சாடுகின்றனர் என்பது புலனாகிறது. அதனாலே ‘தடடி அடிச்சா கேட்பாரில்ல’ எனும் அடி மாமியார் வீட்டில் அடிக்கின்ற கொடுமையை அப்பெண் பதிவு செய்கின்றாள். மேலும், ‘குண்டு போட்டு சுட்டாங்க’ ‘மருந்து போட்டு கொன்னாங்க’ என்ற சொல்லானது தன்னை கொன்று விடுவார்கள் என்பதை மிகுந்த அச்சத்தோடு கூறுகின்றாள். ‘தேங்கா இளநீரோ எம்மா தீராத கண்ணீரே’ என்னும் அடி மாமியார் வீட்டில் அழது அழுது கண்ணீரே வற்றிவிட்டது என்பதை உணர்த்துகிறது.

            விதவைப் பெண்ணொருத்தி திருமணமான தம்பதியர்களைக்கண்டு,

                        “வடக்கே மதுரையில வடமதுர வீதியில

                        எஞ்சோட்டு பொண்ணுங்கெல்லாம்

                        செம்மையா பொலக்கிறாங்க

                        ஒரு செல்வெடுத்து கொஞ்சராங்க ……”18

      என்று மனம் வெதும்பி பாடுகிறாள். காரணம், சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் அவளால் அவள் தோழிகளைப்போல் பிள்ளைக் குட்டிகளோடு வாழாது தன்வாழ்வே பாலைநிலமாய் போனதாக எண்ணி வருத்தப்படுவதை இப்பாடலில் காணமுடிகிறது.

தொகுப்புரை

                        இவ்வாறாகக் காரிமங்கல வட்டார மக்களிடம் தாய், தந்தை, அண்ணன், கணவன் ஆகிய உறவு நிலைகளில் பிண்ணிப்பினைந்தவர்கள். இறந்தபோது அவர்களின் உள்ளத்தில் தங்கியிருந்த சோகமானது ஒப்பாரிப் பாடலாக வெளிப்படுகின்றது. அப்பாடலின் மூலம் அம்மக்கள் பேசுகின்ற வழக்குச் சொற்களும் புலப்படுகின்றன. இவ்வட்டார மக்கள் தாலாட்டுப் பாடலையும்கூட  ஒப்பாரிப் போலவே  பாடுவதைக் காணமுடிகிறது.உறவுகள் என்பது மனிதனோடும் மனிதனின் இரத்தத்தோடும் இரண்டறக் கலந்தவையாகும். இவ்வகையான இரத்த உறவுகள் நம்மை விட்டுப் பிரிந்து செல்கின்ற போது உள்ளத்திலிருந்து சோகம் உருவெடுக்கும் இவ்வார்த்தைகளே காரி மங்கல வட்டார மக்களின் ஒப்பாரிப்பாடலாகும் என்பதை ஆய்வில் அறியமுடிகிறது.

சான்றெண் விளக்கம்

1.          சு.சக்திவேல், நாட்டுப்பறவியல் ஆய்வு, ப. 182

2.          மேலது, ப. 59

3.          எஸ்.கௌமாரீஸ்வரி, நா.கதிர்வேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, ப. 322

4.          பாராசுப்ரமணியன், கிரியாவின் தமிழகராதி, ப. 201

5.          சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பக். 451 – 453

6.          தமிழ் ஆங்கில அகராதி, ப. 567

7.          சித்தர் பாடல்கள், பா. 2

8.          அருணகிரியார் பாடல், ப. 6: 25

9.          சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பக். 451 – 453

10.        10 முதல் 18 வரையுள்ள பாடல்கள் அனைத்தும் காரிமங்கல வட்டார மக்களிடம் சேகரித்தது.

ஆய்வாளர் பெயர்                                                                                   நெறியாளர் பெயர்

திரு.இல.பெரியசாமி                                                                               முனைவர் க.லெனின்

முனைவர் பட்ட ஆய்வாளர்,                                                                    உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,                                                     தமிழாய்வுத்துறை,

பெரியார் பல்கலைக்கழகம்.                                                                   எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130,        

தொலைபேசி எண் : 97861 80599                                                            தொலைபேசி எண் : 70102 70575

மின்னஞ்சல் முகவரி pc.samy86@gmail.com                                           மின்னஞ்சல் முகவரி leninkesavan@outlook.com

நேர்காணல் | சிறுகதை

நேர்காணல் சிறுகதை

            பேப்பர்கார பையன் வீசிய அன்றையச் செய்தித்தாள் ராமின் காலடியில் வந்து விழுந்தது.  கையில் வைத்திருந்த காபியை உதட்டின் நுனியின் உறிஞ்சியபடியே செய்தித்தாளின் கடைசிப்பக்கத்திலிருந்து ஒவ்வொரு பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கத்தில் விளம்பரக் கட்டம் ஒன்று இருந்தது. அவ்விளம்பரத்தில் “ஒப்பாரி” பற்றிய சிறந்த கட்டுரைக்கு ஐந்து இலச்சம் பரிசுத்தொகை மற்றும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளும் இலட்சத்தில் போடப்பட்டிருந்தன. ராம் மனம் மகிழ்ந்தான். எப்படியாவது ஒப்பாரி பற்றிய ஆய்வை மேற்கொண்டு கட்டுரையைத் தர வேண்டும். பரிசுகள் கிடைக்காவிட்டாலும் கட்டுரையை முன் வைக்க வேண்டும் என்ற ஆவல் அதிகம் இருந்தது.

      படித்தவனுக்கு அறிவு அதிகம் இருக்கும் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் படித்தவன் தோற்று போவதையும் படிக்காத அனுபவமுள்ள சிலர் பல நேரங்களில் வெற்றியடைவதையும் பார்க்கின்றோம். ஒரு மனிதனுக்கு படிப்பும் அனுபவமும் அவசியம் வேண்டும். எவன் ஒருவன் ஏன்? எப்படி? எங்கே? என்ன? எப்பொழுது? என்று கேள்வி கேட்கின்றானோ அவனே வெற்றிக்கு சொந்தகாரனாகிறான். ராமும் அப்படித்தான். பிஎச்டி முடித்து விட்டு அரசு அலுவலகம் ஒன்றில் கிளர்க்காக வேலை செய்கின்றான். வேலை விட்டால் வீடு என்று இயந்திர வாழ்க்கையைக் கையில் பிடித்தபடி ஓடிக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டிருப்பான். கிடைத்த வேலையைப் பிடித்த மாதிரி செய்து கொண்டிருக்கிறான். அவ்வப்போது பிஎச்டி என்ற எண்ணம் வரும். அப்பொழுதெல்லாம் எதையாவது யோசித்து ஏன்? எப்படி? எப்பொழுது? என்று தனக்குத்தானே கேள்வியைக் கேட்டு கொள்வான். அம்மாதான் சும்மா நச்சரித்துக் கொண்டே இருக்கிறாள். அம்மாவோட அண்ணன் பொண்ண கட்டிக்கினுமா! ஆனாலும் நான் இவ்வுலகத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றேன். 

      “டே ராம்… என்ன யோசனையில இருக்க. காலியான காபி டம்ளரை கீழே வச்சிட்டு அப்புறமா படிடா. அப்பப்ப மரம் மாதிரி அசையாம நின்னுற… எனக்கு வேற பயமா இருக்குடா!” என்று புலம்பித் தள்ளினாள் அம்மா சந்திரா.

      “அம்மா… நீ தேவையில்லாம பயப்படாதம்மா.. எனக்கு ஒன்னும் இல்ல!”

      “வயசாகிட்டே போவுது. காலகாலத்துல கல்யாணம் நடந்தா நா நிம்மதியா இருப்பேன்”

      “சரிம்மா… உன் அண்ணன் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன். போதுமா..” அம்மாவின் வாய்யடைக்க ராமின் தந்திரம்தான் இது. இதற்கு மேல் அம்மா எதுவும் பேசாமல் சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்.  மீண்டும் செய்தித்தாளில் மூழ்கினான். 

             கள்ளக்குறிச்சிக்குப் பக்கத்தில உள்ள அந்தக் கிராமத்தைப் பற்றி பிஎச்டி ஆய்வு மேற்கொள்ளும் போதே அறிந்து வைத்திருந்தான். அக்கிராமத்தில் மேனாள் என்கிற கிழவி ஒருத்தி இருந்தாள். முடி நரைத்து கூன் விழுந்து தோல் சுருங்கி நடை தள்ளாடும் ஊருக்கு அழும் பிறப்பைக் கொண்டவள். அக்கிராமத்தில் யாருடைய இறப்புக்கும் மேனாள்தான் ஒப்பாரி வைப்பாள். அவளுக்கு கூலிக்கு மாரடிக்கிற வேலை. நடு ராத்திரி ரெண்டு மணி வாக்குல போனான்னா… செத்தவரை வச்சு புகழ்ந்தும் ஊர்க்கூட்டியும் மாரடிச்சு அழுவா. அழுததுக்கு விடிஞ்சவுடனே காச வாங்கிட்டு வந்து கொஞ்சமா கஞ்சிக் காச்சி குடிச்சிட்டுப் படுத்துக்குவா. ஏதோ மனசில நினைச்சவளாய் மீண்டும் மனதோடு மனதாய் அழுதுட்டே இருப்பா! மேனாளை ஏற்கனவே ராம் சந்தித்திருக்கிறான். மேனாள் அவ்வளவாக யாரோடும் பேச மாட்டாள். ராமிற்கு உடனடியாக சுந்தரம் மாமாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ராம் சென்ற சமயம் சுந்தரம் எங்கையோ வெளியில் செல்ல முற்பட்டிருந்தான்.

“வாடா மாப்ள… எங்க காலையிலயே இந்தப் பக்கம்” என்றார் சுந்தரம்.

         “ஒரு வேல விஷியமா வெளிய போவனும். வா போகலாம்” என்று உரிமையோடு சொன்னான் ராம். அம்மாவின் மூன்றாவது தம்பிதான் சுந்தரம். மற்ற இரண்டு மாமன்களை விட சுந்தரம் மேல்தான் ராம் ரொம்ப பிரியமா இருப்பான். சுந்தரத்துக்கு இன்னும் குழந்தை இல்ல. ராம்தான் சுந்தரத்துக்கு எல்லாமே. வீட்டுல எதாவது செஞ்சாலும் சுந்தரமே மறந்து போனாலும் கூட சுந்தரத்தின் மனைவி அஞ்சலை உடனே கொண்டு போய் கொடுத்து விட்டு வருவாள்.

         “உங்க அத்தை வெண்பொங்கல் செஞ்சி வச்சிருக்கிறா.. சாப்பிட்டுட்டு டிவி பாத்திட்டு இரு. செத்த நேரம் நான் வசூலுக்குப் போயிட்டு வந்துடறேன்” என்றான். சுந்தரத்தின் அடுத்தப் பதிலை எதிர்பாராமல் வீட்டின் உள்ளே நுழைந்தான் ராம்.

           ஒற்றையடிச் சாலையாய் இருந்ததை இப்போது விசாலமாய் நான்கு வழிச்சாலையாய் மாறி இருந்தது. பைக்கில் சென்று கொண்டிருந்த ராம் பழைய நினைவுகளில் மூழ்கினான். நண்பர்களோடு இக்கிராமத்திற்கு ஏற்கனவே வந்திருந்த மகிழ்ச்சியை நினைத்துக்கொண்டான். மதிய வெயில் உச்சியைத் தொட்டு நின்றது.

         “மாப்ள எங்கயாவது வண்டிய நிறுத்தி கூல்ரிங்ஸ் சாப்பிட்டு போலாமா?” – சுந்தரம். “இல்ல மாமா.. இப்பவே ரொம்ப லேட். சீக்கிரம் போலாம். மேனாள் பாட்டியைப் பாரத்துட்டு நேராநேரத்துக்கு வீட்டுக்கு வரனுமில்ல. அதுவும் இல்லாம உங்க வீட்டு வெண் பொங்கல்ல சாப்பிட்டு வயிறு தொம்முன்னு இருக்கு” – ராம். சுந்தரம் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

         பொட்டல் காடு. ஈரப்பசை இல்லாத ஓட்டிய மணலாய் நீண்டதொரு பரப்பு. மணலை ஒட்டிய கரைகள். கரைகள் தோறும் பனை மரங்கள் விண்ணை தொட்டு நிற்கும் அளவிற்கு வளர்ந்திருந்தன. பனை மரத்திற்கு அடியில் முள் வேலிகள் போடப்பட்டிருந்தன. அவ்வேலியில் படப்பங்கொடிகள் படர்ந்திருந்தன. அக்கொடிகளைப் பசு மாடுகளும் ஓரிரண்டு ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. வேலிக்கு அடுத்து பத்து பதினைந்து குடிசை வீடுகள் குறுக்கும் நெடுக்குமாய் கட்டியிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள் இருந்தன. மேனாள் கிழவி வீடும் அங்குதான் இருந்தது. வண்டியில் இருந்து இறங்கியவுடன் ராம்தான் முன்னே நடந்தான். மேனாள் கிழவியின் வீடு பூட்டு போடப்பட்டிருந்தது.

        “மாமா.. பூட்டு போட்டுருக்கு. மேனாள் பாட்டி எங்க போயிருக்குன்னு தெரியல. பக்கத்துக் குடிசையில போயி கேட்டுப்பாத்துட்டு வாங்க..” சுந்தரம் போனவுடன் அக்குடிசையின் கதவுக்கு பக்கத்தில் இருக்கும் திட்டில் அமர்ந்து கொண்டான். அன்று மேனாள் பாட்டி அந்த இடத்தில் படுத்துக்கொண்டிருந்தாள். எதிர்புறம் உள்ள திட்டில் ராம் உட்காந்திருந்தான். ஆறு வருடங்கள் ஆனாலும் மேனாள் பாட்டியின் முகம் தெளிவாய் ஞாபகமிருந்தது ராமிற்கு. அதற்குள் சுந்தரமும் வந்து சேர்ந்தான்.

         “மாப்ள.. பக்கத்தில இருக்கிற குடிசை எல்லாமே பூட்டு போட்டுருக்கு. இந்நேரத்துல எல்லோருமே வேல எதுக்காவது போயிருப்பாங்க போல… யாருமே இல்ல” இருவரும் வண்டி நின்ற இடத்திற்கு வந்தார்கள்.  அப்போது முள் வேலிப்பகுதியில் ஆடு மாடுகளை அதட்டிக்கொண்டிருந்தாள் அப்பெண்.

      “மாமா… வரும் போது வெறும் ஆடு மாடுகள்தான மேய்ஞ்சிட்டு இருந்தது. அங்க பாரு மாமா… யாரோ ஒரு பெண் போல தெரியுது”

“ஆமாம் மாப்ள! உச்சி வெயிலுல பேயா இருக்குமா! உடனே கிளம்பிடலாம்பா..”

        சுந்தரம் மாமாவை முறைத்தப்படியே.. “மாமா பேயும் இல்ல. பிசாசும் இல்ல.. வாங்க அந்தப் பொண்ணுகிட்ட போயி விசாரிக்கலாம்” என்றான் ராம். பயந்தபடியே சுந்தரம் ராமின் பின்னாடியே வந்து கொண்டிருந்தார்.

      பின்புறமாய் தெரிந்தாள் அவள். பச்சைக்கலர் ஸ்கூல் பாவாடையும் அப்பாவோட பழைய முழுக்கைச் சட்டையோடு நின்றிருந்தாள். தலையை முடிச்சு கொண்டை போட்டிருந்தாள். கொண்டைப்போட்ட தலையில் வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க கிழிந்து போன அழுக்குத் துணி ஒன்றினை வேடு கட்டிருந்தாள்.  கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு அந்த ஆட்டை அதட்டிக்கொண்டிருந்தாள்.

     அப்பெண்ணின் முதுகுக்குப் பின்னால் இருந்து முதலில் ராம் பேசினான். “இந்தாம்மா… மேனாள் பாட்டி வீடு பூட்டியிருக்கு. அவுங்க எங்க போயிருக்காங்கன்னு தெரியுமா உனக்கு?” என்றான்.

       “யாரு மேனாள் கிழவியா?” என்று திரும்பி ராமை பார்த்தாள். அவளின் உள்ளம் கருக்கெனச் சுருங்கிப் போனது. தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். உள்ள அழுகையும் கண்களில் தெரியும் நீரின் துளியும் பெருக்கெடுத்தன. அவ்விடத்தில் நிற்க முடியாதவளாய் கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓட முற்பட்டாள்.

           என்ன நடக்கிறது என்பதைப் புரியாதவனாய் குழம்பிப் போனான் ராம். “ஹலோ.. ஹலோ.. நில்லும்மா… ஏன் ஓடுறா. நாங்க உங்ககிட்ட அட்ரஸ்தான விசாரிச்சோம். ஹலோ…” என்றார் சுந்தரம். இப்போது ராமும் சுந்தரமும் அப்பெண்ணின் பின்னாலயே ஓடினார்கள். அவள் திரும்பி, “என் பின்னால எதுக்கு வறீங்க… யாராவது பாத்தா என்ன நினைப்பாங்க. இது கிராமம். அப்புறம் கண்ணு காது வச்சு பேச ஆரபிச்சிடுவாங்க.. போங்க…” என்று தழுதழுத்தக் குரலிலே சொன்னாள். அவள் சொல்லிக்கொண்டே அந்த மாட்டுத் தொழுவத்தினுள் புகுந்தாள். இப்போது ராமும் சுந்தரமும் மாட்டுத்தொழுவத்தின் வாயிலில் நின்றிருந்தார்கள். உள்ளே அப்பெண் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. அவ்விடத்தை விட்டு போய்விடலாமா என்று கூட தோன்றியது ராமிற்கு. அதற்குள் அப்பெண் வெளியே வாசலுக்கு வந்து ராமின் கண்களையே உற்றுப்பார்த்தாள். ராமும் அப்பெண்ணை கவனித்தான். அவளின் முகம் கறுத்துப் போயிருந்தது. உதடுகள் வெடிப்புகள் தோன்றி காய்ந்து போயிருந்தன. கழுத்துப்பக்கம் சிறுசிறு கொப்புளங்களாலோ அல்லது வெயிலின் உக்கிரத்தாலோ அல்லது அவள் அடிக்கடி கைகளால் சொரிந்ததனாலோ கறுப்பு தோலிலும் சிவந்து போய் தடித்துக் காணப்பட்டது. அவளின் முகவாய் தாடையில் ஒரு சின்னதாய் வெட்டு தழும்பு. ராமின் மனம் இப்போது எதையோ நினைத்து உருகியது. அப்படியே அவளின் கண்களைக் கூர்ந்து கவனித்தான். அக்கண்கள் அன்பையும் கருணையும் வெளிப்படுத்தின. கண்கள் முழுவதும் கண்ணீரால் நிரம்பியிருந்தது.

          “ஜீவிதா… ஜீவிதா… நீயா.. நீ எப்படி? இங்க? ஜீவிதா.. ஜீவீ..ஜீவீ…” கேள்விகளை அடுக்கி பதிலுக்காக ஏங்கினான். மாட்டுத்தொழுவத்தில் ஆட்டுக்குட்டிகள் கட்டப்பட்டிருந்தன. பக்கத்தில் இரண்டு கயிற்றுக் கட்டில்கள். ஒரு கட்டிலில் சேலை முந்தானை கீழே கிடக்க சுருக்கங்களுடன் இரண்டு மார்பகங்களும் தொங்கிக் கொண்டு வாய் நிறை புகையிலையை அடக்கிக்கொண்டு கிழவி ஒருத்தி உட்காந்திருந்தாள். அடுத்தக் கட்டிலில் என்னையையும் மாமாவையும் உட்காரச்சொன்னாள். நாங்கள் இருவரும் தலைகுனிந்தே நின்றிருந்தோம். ஜீவிதா ஏதோ நினைத்தவளாய் அக்கிழவியின் முந்தானையை எடுத்து மாராப்பை மூடினாள். கட்டிலில் இருவரும் அமர்ந்தபின் எதிர்புறமாய் சாணி தரையில் அமர்ந்து கொண்டாள் ஜீவிதா.

       கல்லூரியில் என்னுடன் படித்தவள். படிப்பில் கவனம் கொண்டவள். காரியத்தில் கண்ணாய் இருப்பாள். பேச்சுக்குப் பேச்சு ஏச்சுக்கு ஏச்சு என்றிருப்பவள். எம் வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஜீவீ.. என்றுதான் அழைப்போம். எதனால் அப்படி கூப்பிடுகிறோம் ஏன் அவ்வாறு கூப்பிடுகிறோம் என்றெல்லாம் தெரியாது. ஆனாலும் கூப்பிடிகிறோம். ஒருமுறை அவள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது விளையாட்டாக டிபன் பாக்சை அவளின் பின்பகுதியிலிருந்து எடுக்க முற்பட்டேன். அப்போது தெரியாதனமாக டிபன் பாக்சின் முனைப்பகுதி அவளின் தாடையில் பட்டு இரத்தம் கொட்டியது. நான் வௌவௌத்துப் போனேன். ஜீவீ மயக்கம் அடைந்து விட்டாள்.  மாணவர்களின் கூட்டம் சேர்ந்து விட்டது. மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றார்கள். ஓரிரு வாரங்களுக்குப் பின் ஜீவீ மறுபடியும் கல்லூரிக்கு வந்தாள். என் தாடையை உடைத்த மாதிரி ராமின் தாடையையும் உடைப்பேன் என்று என்னை கல்லூரி முழுக்க துரத்தியது அனைத்து மாணவர்களும் அறிவார்கள்.  கொஞ்ச நேர மௌனத்திற்குப் பிறகு… ஜீவிதாவே பேச ஆரமித்தாள்.

           “நான் ஒரு பையன லவ் பண்ணேன். உங்களுக்கு யாருக்கும் இந்த விஷியம் தெரிய வாய்ப்பில்லை. நானும் எங்க வீடடுல எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன். அவுங்க யாருமே என்னோட காதலுக்கு ஒத்துக்கல எங்க வீட்டுல என்னை பொண்ணுப் பாக்க வந்த அன்னிக்கு எங்க குடும்பத்தை எதிர்த்துகிட்டு அவரோட வந்துட்டேன். கல்யாணம் ஆனதும் என்னை அவரு நல்லா பாத்துக்கிட்டாரு. ஆனா கல்யாணம் ஆகி ஆறே மாசத்துல வயக்காட்டுல எலிக்கு வச்சிருந்த கரண்டுல என் வீட்டுகாரர் கால வச்சி அங்கயே கருகி செத்துட்டாரு..” சொல்லும்போதே தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து மூக்கைப் பொத்திக்கொண்டு அழத்தொடங்கினாள் ஜீவிதா.

           விதவை, புருசன வாரிக்கொடுத்தவ.. புருசனயே கொன்னுட்டா… ராசி இல்லாதவன்னு என்னை கொஞ்ச கொஞ்சமா ஒதுக்க ஆரமிச்சாங்க. கேட்கறதுக்கு ஆளிள்ள. போகிறதுக்கு எங்கும் வக்கில்ல.. பொறந்த வீடும் என்னை  தவிக்கவுட்டு தலைமுழுகிட்டாங்க. புகுந்தவூடும் அறுத்துவுட்டுடாங்க. சோறு தண்ணி கிடையாது. நல்ல துணிமணி கிடையாது. மாடு மாதிரி கால முத இரவு வரை வேலை செஞ்சிட்டே இருக்கனும். இல்லன்னா அடிதான். நெருப்புல சூடு கூட வைப்பாங்க தெரியுமா?

“யாரு சூடு வைப்பாங்க” – ராம்

      “அந்த வூட்டுல இருக்கிற எல்லாரும்தான்” கண்கள் சிவக்க மூக்கு விடைக்க அழுத கண்ணீரோடு ஜீவிதா சொல்லுகின்றதை கேட்க கேட்க எனக்கு வயிறு பற்றி எரிந்தது. மனசு வேதனையால் துடித்தது.

      “இதோ இந்த கிழவி என் வீட்டுக்காரரோட பாட்டிதான். வயசானதால வாய் பேச முடியறதுல்ல.. ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் அங்கேயேதான். நான்தான் அள்ளிக் கொட்டுவேன். அந்த நாத்தம் அவுங்களாள தாங்கிக்க முடியல. அதான் கிழவியையும் துணைக்கு என்னையும் இந்த பொட்டல் காட்டிற்கு அனுப்பிட்டாங்க. எங்களுக்குன்னு இங்க யாரும் உறவுகள் இல்ல. தானா மழை பேஞ்சு மொழைக்கிற இடத்துல நின்னு இருக்கிற ஆட்டையும் மாட்டையும் காப்பாத்துறோம். ஏதோ எங்க பொழப்பும் ஓடுது” கண்ணைத் துடைத்துக் கொண்டாள் ஜீவிதா.

      “ஆமாம்! நீ என்ன பண்ற ராம். கல்யாணம் ஆகிடுச்சா.. எத்தனை பசங்க..” – ஜீவீ

        ராமிடமிருந்து ஜீவிதாவின் கேள்விக்கு பதில் வரவில்லை. மாறாக, “நீதான படிச்சிருக்க இல்லையா.. நல்ல வேலைக்கு ஏதாவது போகலாம் இல்லையா?” என்றான்.

      “இந்தக் கிழவியை வச்சிக்கிட்டு நான் எங்கிட்டுப் போறது”

         “ஜீவீ எனக்கொரு யோசனை. நீ குரூப் எக்சாம் – கு படிக்கலாம்மில்ல.. பாட்டியை பாத்துகிட்டே இருக்கலாம். வெளிய மாடு மேய்க்கும் போதும்கூட படிக்கலாம். பாட்டியும் உன்கூடவே வரப்போறது இல்ல. அதுக்கு அப்புறம் உன்ன யாரு பாத்துப்பா. உனக்குன்னு ஒரு அடையாளம் வேண்டாமா? நீ படிச்சு அரசாங்க வேலைக்குப் போ.. அதுதான் உன்னை வாழவைக்கும்” – ராம்.

        “சரிதான் ராம். நான் இனிமேல் இவ்வுலகத்தில் வாழ வேண்டுமானால் எனக்கென்று அடையாளம் இருக்க வேண்டுமென்றால் படித்து அரசாங்க வேலைக்குச் சென்றே ஆக வேண்டும். இல்லையெனில் இம்மண்ணோடு மண்ணாக புழுவுக்கு இரையாக ஆக வேண்டியதுதான். என் வாழ்வு இனி படிப்பில் மட்டும்தான்” – ஜீவிதா

      குரூப் எக்சாமிற்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் நானே வாங்கி தருவதாக உறுதியளித்தேன். என் தோழிக்கு நான் செய்த இரத்தக்கறையைத் துடைக்கவும் அதற்கு பரிகாரமாகவும் ஒரு வாய்ப்பாக எண்ணினேன். தொழுவத்திலிருந்து வெளியில் வரும்போது மனம் இரங்கலையும் அதிகப்படியானத் துன்பத்தையும் அடைந்திருந்தது. உள்ளேயிருந்து மீண்டும் ஜீவிதாவின் குரல்..

       “ஆமாம்! நீ கேட்டல்ல மேனாள் கிழவி. அது கொஞ்ச நாளைக்கு முன்னாலதான் செத்து போச்சு”.

சிறுகதையின் ஆசிரியர்

 முனைவர் க.லெனின்

iniyavaikatral@gmail.com

இலக்கியத் திறனாய்வு என்றால் என்ன? வகைகளைக் குறிப்பிடுக? | What is literary Criticism? Specify types?

திறனாய்வு வகைகள்

        இலக்கியத் திறனாய்வானது இலக்கியக் மற்றும் கோட்பாட்டோடு, மனித சிந்தனைக் கருத்துநிலைகளை உட்படுத்திஅமைந்துள்ளது.  திறனாய்வு நிகழ்வதற்கான காரணங்களை வகுத்துக் கொண்டு, அதன்வழி திறனாய்வினைப் பலவகைகளாகப் பிரித்துள்ளனர். கொள்கை அதனை வெளிப்படுத்தும் சமுதாயவியல் கருத்து அணுகுமுறையாக விதிமுறை, விளக்கமுறை, பகுப்புமுறை, செலுத்துமுறை, எனப் பலவழிப்பட்ட செல்நெறிகளை உடையதாக திறனாய்வு அமைந்தாலும், மேலைநாட்டினர் விளக்கமுறைத் திறனாய்வுக்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். விளக்க முறைத் திறனாய்வானது திறனாய்வு வகைதனில் பொதுவானதாக தோற்றமளிக்கிறது. இவ்வகைத் திறனாய்வை ஒப்பீட்டு முறையில் அடக்கிக் கூறுவதும் உண்டு.

இலக்கியத் திறனாய்வின் வகைகள் (What is literary Criticism? Specify types?)

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism) – Click Here

2.விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism) – Click Here

3.உளவியல் முறைத் திறனாய்வு (Phychological Approach) – Click Here

4.வரலாற்று முறைத் திறனாய்வு (Biographical Criticism) – Click Here

5.சமுதாயவியல் திறனாய்வு (Sociological Criticism) – Click Here

6.ஒப்பீட்டுத் திறனாய்வு (Comparative Criticism) – Click Here

7.பாராட்டுமுறைத் திறனாய்வு (Appreciative Criticism) – Click Here

8.செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Judicial Method) – Click Here

9.பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism) – Click Here

10.ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு (Aesthetic Criticism) – Click Here 

11.முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism) – Click Here

12.மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ( Evaluation method performance) – Click Here

       திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

 

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு | What is the Evaluation method performance

மதிப்பீட்டு முறைத் திறனாய்வு

      திறனாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் இலக்கியத்தைப் பற்றிய முழு மதிப்பீட்டு நிலையை (Evaluation) அடியொற்றி அமைவது மதிப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஓர் இலக்கியத்தை பகுத்தும், தொகுத்தும், விளக்கியும், ஆய்தற்கும் உளவியல் தன்மையையோ, சமுதாய உண்மையையோ, அளவிட்டுரைப்பதற்கும், அதனின் உண்மை நிலையை மதிப்பீடு செய்வதற்கும் இத்திறனாய்வு முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

       அவற்றோடு மட்டுமல்லாமல், ஓர் இலக்கியத்தில் சமுதாயம் பற்றிய உண்மையை ஆழமாகவும், திறம்படவும் ஆராய்வதற்கு மதிப்பீட்டு முறை இன்றியமையாதது ஆகிறது, மதிப்பீட்டு முறையில் இலக்கியத்தின் தரம், தகுதி. சிறப்பு, சீர்மை, பண்பு பற்றியக் கூறுகளும், இலக்கியத்தின் மதிப்பும் (Literary Value) விழுமிய நிலையில் மதிப்பீட்டுரைக்கப்படுகிறது. இத்தகைய மதிப்பீட்டு சிலமுறையில் சில வகையான அளவுகோல்கள் மற்றும் வரையறைகள் காணப்படுகின்றன. அவை ‘சமுதாய மதிப்பு’ என்ற நிலையில் அமைந்துள்ளது. 

     இத்திறனாய்வு முறையானது திறனாய்வுக் கோட்பாட்டிற்கு ஒரு தூண்போல விளங்குகிறது என்கிறார் ஐ.ஏ. ரிச்சர்ட்ஸ் (Principles of Literary Criticism) அவர்கள். அவரின் கூற்றுப்படி நோக்குகையில்,

1. மதிப்பு பற்றிய கணக்கீடு

2. தகவல் பரிமாற்றம் பற்றிய கணக்கீடு

       இவை இரண்டும் மதிப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இரு தூண்களாக விளங்குகின்றன. சிறந்த இலக்கியம் எது என்பதற்கும், அல்லாத இலக்கியம் எது என்பதையும் கண்டறிய இவைப் பெரிதும் துணை செய்கின்றன.

      ‘சுடர்த்தொடீஇ கேளாய்’ – எனத் தொடங்கும் குறிஞ்சிக்கலி பாட்டில், ‘நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்’ – என்று தலைவி தான் காதலுற்ற தலைவனின் இயல்பினைத் தோழியிடம் சொல்லுமிடத்து,

1. தலைவியின் உளப்பாங்கு

2. தாயின் பரிவு

3. சமுதாய ஒழுக்கம்

       ஆகியவை இப்பாடலில் ஆழமாகவும், உண்மையாகவும், சொல்லப்பட்டிருப்பதற்கு காரணம், உள்ளடக்கம் பற்றி எழுந்த முதல்நிலை மதிப்பீட்டின் அடித்தளமான நிகழ்வே ஆகும். மதிப்பீட்டு முறைத் திறனாய்வில்

1. கதை

2. கதை சொல்கிற பாணி

3. நாடகப் பாங்கு

4.நடையியல் கூறுகள்

5.மெல்லிய உணர்வுகள்

         என இவை இலக்கிய முறையில் கவனம் சார்ந்தவையாக உள்ளன.

          திறனாய்வானது ஓர் இலக்கியத்தின் பாடுபொருள்கள் மற்றும் அவற்றின் உட்கூறுகளை அறியச் செய்வதோடு, நூல்கள் பற்றிய பொதுவான ரசனையை வெளிக்கொணரவும், அபிப்பிராயங்களை தெரிவிக்கவும், கருத்து நிலைத் தொகுப்பாகவும், காரண, காரியங்களைச் செயற்படுத்த பல்வேறுப்பட்ட திறனாய்வு வகைகள் துணைசெய்கின்றன.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

முடிபுமுறைத் திறனாய்வு

   

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

     திறனாய்வாளன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட வரையறைகளையும், அளவுகோல்களையும் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு இலக்கியம் பற்றிய முடிவினை அல்லது தீர்ப்பினைத் தரக்கூடிய தன்மைப் பெற்றதாக அமைவது முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

      முடிபுமுறைத் திறனாய்வில், மேலைநாட்டினரான சாட்விக் (Chadwick), கெர் (W.P. Ker), பவுரா (C.M. Bowra) போன்றோர் கூறிய கோட்பாடு முறைகள் ஒட்டியேத் தீர்வு அமைகிறது. இதனை தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய நிலைக் கண்டோ, சிறுகாப்பியத்தின் தன்மையை வைத்தோ, இளங்கோவின் சிலம்பினையும், கம்பனின் இராமாயணத்தையும், செவ்வியல் பண்புகளை வைத்து ஆய்வு செய்து. மேலைநாட்டினரின் கோட்பாடுகளோடு பொருத்தி, இது சரியான காப்பியம், சரியான காப்பியம் அன்று என்ற முடிவினை ஒருவர் தருபவராயின் அதனை ஏற்றுக்கொள்ளுதல் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

           இன்றையக் காலகட்டத்தில், நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், என இக்காலத்தில் வெளிவரக்கூடிய இலக்கியங்கள் அனைத்தும் மேலைநாட்டார் கூறுகின்ற விதிகளை பெற்று, முடிபுகளைக் கூறுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட இலக்கியங்களில் ஒரே அளவுடைய அல்லது ஓரேவிதமான வரையறை கூறுகளை உடைய விதிகளைப் பொருத்திப் பார்த்து இலக்கியத்தின் தரத்தை உயர்த்தச் செய்வது இந்த வகையானத் திறனாய்வின் பண்பு ஆகும்.

       மேலைநாட்டினரின் கூற்றுகள், குறிப்புரைகள். எல்லாம் கல்வியில் சார்ந்த பட்ட ஆய்வேடுகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு, தமிழில் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நிலை எல்லா வகையான இலக்கியங்களுக்கும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் ஒரே காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே வரன்முறையைப் பெற்று அமையவில்லை. முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

      முடிபுமுறைத் திறனாய்வானது இலக்கியங்களைப் போற்றுவதற்கு ஓரளவு துணைபுரிகின்றன. புதிய வடிவங்களை வளர்த்தெடுக்கச் செய்கிறது. சோதனை முறைகளைத் தவிர்த்து வருகிறது. புதிய இலக்கியங்களைப் போற்றும் தன்மை பழங்காலம் முதல் இருந்துள்ளது. முடிபுமுறைத் திறனாய்வின் இந்தப் போக்கினை பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இலக்கியக் கலை என்னும் நூலில் சாடியுள்ளார்.

        சங்க இலக்கியப் பாடல்களை முடிபு முறைத் திறனாய்வில் திறனாய்வு செய்தோமானால் ஒரே கருத்தை திரும்பக் கூறுவது போன்று அமைந்துவிடுவதால், இவ்வகையானத் திறனாய்வுக்குச் சிலர் அஞ்சுவதும் உண்டு.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு என்றால் என்ன? What is the Aesthetic Criticism?

அழகியல் திறனாய்வு

          ஒரு இலக்கியத்தில் காணப்படும் கலைத்தன்மை மற்றும் அழகினைப் பற்றி (Aesthetic Criticism) ஆராய்வது ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வாகும். இத்திறனாய்வு, ஓர் அழகிய தோற்றமுடையப் பொருளின் திரட்சி, நயம், நளினம் என்ற மூன்றையும் முதலில் ரசித்தல் வேண்டுமென்றும், அந்த ரசித்தலினால் கிடைக்கக்கூடிய சுகானுபவம் ரசனை முறையை வளர்க்கிறது என்கின்றனர்.

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு

        இவ்வகையானத் திறனாய்வு அறிவியல் முறைக்கு உட்படுத்தப்பட்டதல்ல. ஆனால் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய மனப்பதிவு (Impression) முறையினைக் கொண்டது.

1. சொல்லின் ஓசையில் காணக்கூடிய ஒழுங்கு முறை

2.வார்த்தை தொனி

3. பொருளினது சுழற்சி

4. உணர்ச்சி

5. வடிவங்கள்

6. உவம, உருவகங்கள்

7. மனதினுள் எழும் தூண்டல் உணர்வுகள்

       முதலியவற்றை ரசனைக்குறியப் பகுதியாக அறிவித்துக் கொண்டு. பின்பு விளக்கி வர்ணிக்கிறது. இவ்வகையான திறனாய்வினால், இலக்கியத்தின் கொள்கையோ, போக்கோ. வரலாறோ பெரிதும் பாதிப்படைவதில்லை. உள்ளடக்கத்தின் கருத்தை விட உருவத்தின் தன்மைக்கே இதனுள் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

       கவிக்கு சிரசே பிரதானம் – என்பது போலக் கவிக்கு வடிவம் என்று மெருகூட்டுகிறது. இதனை ஆங்கிலத்தில் Theoretical Criticism/ Aesthetic Criticism விஷயமல்ல-உருவமே பிரதானம்’ – என்ற வார்த்தைகளை முன்னோடியாகக் கொண்டு ரசனை முறைத் திறனாய்வு நடைப்பெறுகிறது. ‘என்சாண் உடம்பிற்கு என்று வழங்குகின்றனர். ரசனை ஆசிரியர்களின் கருத்துக்கள் (Ideologies) கீழ்க்கண்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.

1. குழந்தைப் பாடல்கள்

2. பெண்கள் சிந்தனை

3. யாப்பு அமைதிகள்

4. பாவகைகள்

5. நடை அமைவுகள்

        முதலியன ரசனை முறையில் ஒப்பிடப்படுகின்றன. கவிதை எளியத்தன்மையில் இருத்தல் வேண்டும், ரசிப்பதற்கு சிரமம் கூடாது. உடனடியாகப் புரிதல் வேண்டும் என்பதை ரசனை முறைக்கு அளவுகோலாக வைத்திருந்தனர். ஆனால் சங்க இலக்கியப் பாடல்களை ரசனை முறைத் திறனாய்வு உட்படுத்தாமல் டி.கே. சி. போன்றவர்கள் புறக்கணித்தனர். ஏனெனில் கடினமானச் சொற்கள் அதனில் பயன்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். பாட்டில் வரும் சந்த நயங்களை கவனித்தோம் என்றால், சுகம் என்று சொல்லத் தோன்றுமே ஒழிய, வாயோ, செவியோ, மனமோ, சலியாது நிற்பது ரசனைமுறைத் திறனாய்விற்கு சிறப்பாகும்.

      தமிழிலக்கியத்தில் இத்தகைய ரசனை முறையைப் பற்றி பேசுபவர்கள் ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், ஆ. முத்துசிவன், பி.ஸ்ரீ, நீதிபதி எஸ். மகாராஜன், தொ.மு. பாஸ்கரன், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தன் எனப் பலராவர். சந்த முறையில் சொற்பொழிவு ஆற்றக்கூடியவர்கள், எழுத்தாளர்கள், இவர்களிடம் ரசனை முறைப்பார்வை பின்பற்றப்பட்டது. எளிமை, தாளம், லயம், உணர்வு என்ற நிலையில் கம்பனின் பாடல்கள் அதிகளவில் ரசனை முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு

            மேலைநாடுகளில் அழகியல் திறனாய்வுக் கோட்பாட்டிலான முன்னோடியாக இம்மானுவோல் காண்ட் என்பவர் விளங்குகிறார். புலன்களால் நுகரப்படக்கூடிய இன்பமும்,அது தரக்கூடிய பொருளியல் அழகும், ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்கிறார்.

        இவ்வகையான இன்ப நிகழ்வு, தனிப்பட்ட புலனின்ப நுகர்ச்சியை விட மேன்மையானதாகவே உள்ளது. இத்தகைய அழகு நிலை ‘சுயாதிக்கமானது” (autonomy) என்றும். ரசனை முறையிலுள்ள ஆர்வம், உணர்ச்சி, தொகுத்துக் காணும் அறிவு முதலியவற்றிலிருந்து வேறுபட்டது என்றும் (Critique of Judgement) இம்மானுவோல் காண்ட் கூறுகிறார்.

       ரசனை முறைத் திறனாய்வின் வழிநிலையாக தோன்றியதுதான் ‘கலை கலைக்காகவே’ என்ற அமைப்பாகும். இதனில். கலை வேறு, வாழ்க்கை வேறு என்ற கருத்தினை வற்புறுத்தியுள்ளனர். ஆங்கிலக் கவிஞர் எட்கார் ஆலன் போ, அழகியல் விமர்சகர்கள் ஏ.சி. பிராட்லி போன்றோர். அழகு என்பதையோ, அதனை ரசிப்பது என்பதோ, வாழ்க்கையின் உள்ளடக்கத்திலிருந்து வேறுபட்டது என்கின்றனர்.

      இத்திறனாய்வினை, வாழ்க்கைச் சூழலிலிருந்தும், சமூக சூழலிலிருந்தும் சற்று வேறுபடுத்தியேப் பார்க்க வேண்டியுள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

பகுப்பு முறைத் திறனாய்வு என்றால் என்ன? What is Analytical Criticism?

பகுப்புமுறைத் திறனாய்வு

          ஆறறிவுக் கொண்ட மானுட வர்க்கத்தில் தொகுத்தல், பகுத்தல் என்ற அடிப்படை சிந்தனையானது இருந்து வருகிறது. உலகத்தில் உள்ளப் பொருட்களை ஒரேத் தன்மையுடையதாக இருந்தால் அதனை தொகுத்தும், சிறப்புப்பண்புகளைக் கொண்டிருந்தால் அதனை வேற்றுமைப்படுத்தியும், பகுத்துப் பார்ப்பது இலக்கியத் திறனாய்விற்கு வேண்டப்பட்ட ஒன்றாகும்.

              பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism) என்பது. இலக்கியத்தின் பண்புகள், மற்றும் கூறுகளை வரையறை செய்து கொண்டு. ஓர் நோக்குடன் பகுத்துக் காண்பது ஆகும். பகுத்துக் கொண்டு செய்யப்படும் திறனாய்வில், ஓர் இலக்கியம் அல்லது பொருளின் முழுத்தன்மை அல்லது சிறப்புப் பண்புகளை சிதைத்துவிடக் கூடிய நிலையில் அவை அமைதல் கூடாது.

           ஒற்றுமை, வேற்றுமை என்ற இரண்டு நிலைகளில் நோக்கும்போது, ஓர் நூலின் முழுமையான நிறை, குறைகள் தெரிவதோடு சிறப்புத் தன்மைகளும் வெளிப்படுகிறது. எந்த திறனாய்விற்கும் அடிப்படையாக அமையக்கூடியதாக பகுப்புமுறைத் திறனாய்வு உள்ளது. இதனை ‘அலசல்’ முறைத் திறனாய்வு என்றும் கூறுகின்றனர்.

பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism)

           சி.சு. செல்லப்பா அவர்கள் இத்தகைய திறனாய்வு முறை மேற்கொண்டுள்ளார். கவிதை, கட்டுரை, சிறுகதைகளில் இடம்பெறக் கூடிய உத்திகளையும், உணர்வுநிலைகளையும் இத்திறனாய்வு முறை விவரித்துள்ளது.

             வ.வே.சு ஐயரின் பல்வேறுபட்ட சிறுகதைகள் பகுப்பு முறையில் திறனாய்வு செய்யப்பட்டு, ஒன்றன் பின் ஒன்றாக, கதைகூறும் பண்புகளில் வளர்ச்சியும், மாற்றத்தையும் பெற்றுள்ளன. ‘குளத்தங்கரை அரசமரம்’ முதற்கொண்டு பல சிறுகதைகளை, சி.சு. செல்லப்பா அவர்கள்,

1. உருவக் குறை

2. தேர்ந்தகையும், புதுக்கையும்

3. கைவன்மைக் குறைவு

4.நிறையும், குறையும்

5. தனிரகம்

               என்ற தலைப்புகளில் கதைகளின் பண்புகளைக் கொண்டு பகுத்து ஆராய்ந்துள்ளார். கல்வியியல் சார்ந்த ஆராய்ச்சிகள், மற்றும் ஆய்வேடுகளில் பெரிதும் பயன்படுகிறது. ஒரு படைப்புதனில்,

1. புனைகதை உத்திகள்

2. பாத்திரப் படைப்பு

3. நோக்குநிலை

4.கதைப்பின்னல்

5. தொடக்கம், முடிவு

6. வருணிப்பு

7. மொழிநடை

பகுப்பு முறைத் திறனாய்வு (Analytical Criticism)

              என்ற நிலைகளில் பல பகுப்புகளையும், உட்பகுப்புகளையும் பெற்று வலம் வரும் பகுப்புமுறைத் திறனாய்வு ஏனைய திறனாய்வுக்கும் அணி சேர்ப்பதாய் அமைந்துள்ளது.

 

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு |Inductive Criticism

படைப்புவழித் திறனாய்வு

       ஓர் இலக்கியத்தை ஆய்வு செய்யும்போது அதனிலுள்ள நிறை, குறைகளை ஆய்வதற்கு முன்னர் அதற்குரிய வழிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுவது செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு (Inductive Criticism) ஆகும். திறனாய்வின் முடிவானது ஒருபுடை ஒப்புமையுடையதாக அமையும். ஆனால் இத்திறனாய்வு முறையானது இது உயர்ந்தது, இவை தாழ்ந்தது என்று கூறும் தீர்வு முறையிலிருந்து (Judicial Method) முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஒரு வரையறை உடைய அல்லது கலைஞனின் வழிமுறையை உடைய படைப்பை வேறொரு கலைஞனின் படைப்பில் பொருத்திப் பார்த்தல் என்பது படைப்புவழி திறனாய்வில் வேண்டத்தகாது ஆகும்.

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

       படைப்புப் பற்றியோ, படைப்பாளிப் பற்றியோ பேச விழைவோர், அவரவரின் விதிமுறைக்கு ஒட்டியே பேசுதல் வேண்டும். அதனையும் மீறி செலுத்துமுறைத் திறனாய்வினை மேற்கொள்கின்ற திறனாய்வாளர்கள், படைப்பின் வளர்நிலையையும், தனித்தன்மையும் எடுத்துக்காட்டுவது கவனத்திற்குரியது ஆகும். எல்லா வகையான திறனாய்வு மேற்கொள்வதற்கும் செலுத்துநிலை (Indefine Method ) யாகிய திறனாய்வின் பங்களிப்பினை மேற்கொள்ளாமல் இருக்கமுடியாது.

         ஆனால் மதிப்பீட்டு முறை, ஒப்பீட்டு முறை மற்றும் தீர்வுமுறைத் திறனாய்வு என்ற மூன்றையும் செலுத்துநிலை ஆய்வு தவிர்க்கிறது. ஒரு குறிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டு அதனுடைய எல்லைத் தன்மைகளில் இத்திறனாய்வு அமைகிறது.

செலுத்துநிலை அல்லது படைப்புவழித் திறனாய்வு

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

பாராட்டுமுறைத் திறனாய்வு

         குறையொன்றையும் காணாமல் நிறையினை மட்டுமே கண்டு விதந்து பேசும் நிலையை பாராட்டு என்கிறோம். தமிழ் இலக்கியத்தில் காணப்படும் உரைகள் மூல நூலாசிரியனின் குறைகளைச் சுட்டிக்காட்டாமல், ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த கருத்தினை கூறியுள்ளார் என்று பாராட்டிப் பேசியுள்ளனர். பாராட்டு முறைத் திறனாய்வுக்கு (Appreciative Criticism) பண்டைய கால உரைகளே அடித்தளமாக அமைந்துள்ளன.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     இன்றைய காலகட்டத்தில் பாராட்டுமுறைத் திறனாய்வானது பரவலாக அமைந்துள்ளது. பாராட்டு முறையின் மூலமாக ஒருவரின் சிறப்புப் பண்புகளை மிகையாக எடுத்துக் கூறுகின்றனர்.

1. இலக்கியச் சொற்பொழிவாளர்கள்

2. கல்வியாளர்கள்

     இவர்களிடம் பாராட்டு முறையானது சில வகையான மேடை உத்தியாகவும், விருப்பத்தின் காரணமாக நிகழக்கூடிய ஒருபக்கச் சார்பாகவும், இப்பாராட்டு முறை நிறையவே இடம்பெறுகிறது. கம்பனை காலமுள்ளவரை பாராட்டக் கூடியவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஜெகவீரபாண்டின், டி.கே.சி. ஏ.சி. பால்நாடார். கம்பனடிப்பொடி. சா. கணேசன், ப. ஜுவானந்தம், எஸ். ராமகிருஷ்ணன், பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன், மு.மு. இஸ்மாயில், தெ. ஞானசுந்தரம் போன்றோரும், இன்னும் பலர் கம்பனைப் பாராட்டிக்கொண்டே உள்ளனர்.

பாராட்டுமுறைத் திறனாய்வு | Appreciative Criticism

     பாராட்டு முறைத் திறனாய்வில் பாராட்டுரைகளை ஒரு குறிப்பிட்ட அளவாக எடுத்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, திறனாய்வில் வெற்றுரைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ‘எதுவும் சற்று அளவு கடக்குமானால் கரிக்கும்’ என்பதுபோல பாராட்டுகளும் ஒரு அளவோடு எடுத்துக் கொள்ளப்பட்டால் அது சிறப்புடைய திறனாய்வாக அமையும். திறனாய்வுக்கு உண்மை மட்டுமே அவசியமான ஒன்றாகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு

      இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை நிறுத்தி, அதனின் ஒற்றுமையையும், வேற்றுமையையும் ஆய்ந்துப் பார்ப்பது மனிதனின் இயல்பாகும். அத்தகைய வழிநின்று தோன்றியதே ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும். ஒரேக் கூறாக அமைந்தப் பொருட்களை ஒப்பீடு செய்வது என்பது சாத்தியமில்லை. நேர்முரணாக உள்ளப் பொருட்களையும் ஒப்பீடு செய்வது வழக்கமில்லை. ஒப்பீட்டு முறைத் திறனாய்வுக்கு இருபொருள்களின் ஒத்த தன்மைகள் மட்டுமே போதுமானதாக உள்ளது.

1. ஒத்த சமுதாய – வரலாற்றுச் சூழல்களில் பிறக்கும் இலக்கியங்கள், ஒத்த தன்மை உடையதாக இருத்தல்.

2. ஏற்புத்திறனை அதிகளவில் கொண்டு, ஓர் இலக்கியம், இன்னோர் இலக்கியத்தை தனது செல்வாக்கில் உட்படுத்துதல்

3. மொழி, இனம், நாடு, கடந்து, பலதரப்பட்ட புவியியல் கூறுகளை மீறி, இலக்கியங்கள் தன்னகத்தே ஒன்றுபட்ட பண்பகளைக் கொண்டிருத்தல்

4. குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகளும், கூறுகளும், தெளிவான நிலையில் விளக்கமாக காணக்கூடிய கருத்து நிலை ஒப்பீடு ஒப்பீட்டுத் திறனாய்வில் கருதுகோளாக அமைந்துள்ளது.

     ஒன்றனை ஒன்று ஒப்பீடு செய்வது உயர்ந்தப் பண்புகளை வெளிப்படுத்துவதற்கு மட்டுமே ஒழிய, என்னுடைய இலக்கியம்தான் உயர்ந்தது என்று செம்மாப்புக் கொள்வதற்கு அல்ல. சில உலக இலக்கியங்கள் ஒப்பீட்டு முறையில் திறனாய்வு செய்யப்பட்டதன் காரணமாக, அதனின் பொதுமைப் பண்புகள் கண்டறியப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. இதனின் பின்னணி இயங்கியல் முறையில் சரியாக இனம் காணப்படுகிறது. ஏனைய திறனாய்வு வகைகளைப் போன்று சிறந்த முறையில் அமைந்திருந்தாலும், இது பரந்த தளத்தை உடையதாக உள்ளது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

      ஒப்பீட்டுத் திறனாய்வானது, இன்று வளர்ச்சிப் பெற்று “ஒப்பிலக்கியம்” (Comparative Literature) என்று தனி அறிவுத்துறையாக செயல்பட்டு வருகிறது. இத்தகைய வளர்ச்சி நிலைக்கு வித்திட்டப் பெருமை ஃபிரான்சு நாட்டினைச் சாகும். பிறகு சில மாற்றங்களுடன் அமெரிக்காவில் வளர்ச்சியடையத் தொடங்கியது. அமெரிக்கா – இந்தியானா பல்கலைக் கழகப் பேராசிரியர் ஹெச். ஹெச். ரீமாக் (H.H.Remarce) கூறிய வரையறையே ஒப்பிலக்கியத் துறையில் பெரிதும் பின்பற்றப்படுகிறது. ஒரு நாட்டின இலக்கியத்தை இன்னொரு நாட்டு இலக்கியத்தோடு ஒப்பிடுகையில்

1. அவற்றிற்கிடையேயான உறவு நிலை

2) சமுதாயவியல் கொள்கை

3) தத்துவம்

4). இசை, ஓவியம், கூத்து போன்ற கலைநிலை வடிவங்கள்,

     எனப் பலதரப்பட்ட நிர்ணயக் கூறுகளை உடைய இலக்கியங்களின் மேன்மையை வெளிப்படுத்தி மனித உள்ளத்தில் ஒரு ஒற்றுமை உணர்வினை வளர்க்கச் செய்கிறது என்கிறார்.

1. ஹேரி லெவின்

2. ரெனே வெல்லக்

3. ரெனே எதேம்பிள்

4.பால் வான்தீகம்

5. உல்ரிச் வெய்ஸ்டீன்

போன்ற பலர் ஒப்பீட்டு திறனாய்வுத் துறையில் பல விளக்கங்களை அளித்துள்ளனர். பிரெஞ்சு ஒப்பிலக்கியக் கொள்கையானது. பிற கருத்து நிலைகளையோ, கலைக் கொள்கையையோ ஏற்றுக்கொள்வதில்லை. ஒப்பிலக்கியத் துறையானதுதிறனாய்வுத் துறையோடு இணைந்தே வளர்கிறது.

தமிழில் ஒப்பீட்டுத் துறை

         இலக்கியத்தையும், படைப்பாளியையும் ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது நம்நாட்டில் தொன்றுதொட்டு பழங்காலம் முதல் இன்றைய காலம் வரை இருந்து வருகிறது. தமிழ் உரையாசிரியர்கள் தாம் உரைகூறும் நூற்களுக்கும், பாடல் வரிகளுக்கும் பிற-இணையான இலக்கண-இலக்கிய மேற்கோள்களை ஒப்பீட்டு முறையில் எடுத்துக் காட்டுகின்ற போக்கு, பாராட்டத் தகுந்த அளவிலே இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இத்தகைய சிறப்புவாய்ந்த ஒப்பியல் நோக்கு தமிழகத்தில் பரவலாகவே வளர்ச்சியடைந்து விரைந்து வளர்ந்தும் வருகிறது.

ஒப்பீட்டுமுறைத் திறனாய்வு (Comparative Criticism) என்றால் என்ன?

     1885ஆம் ஆண்டில் ஜி.யூ.போப் அவர்கள் தமிழிலக்கியத்தைப் பார்த்து “பழைய தமிழ்க்காப்பியங்களைப் பார்க்கிற பொழுது, அவற்றிற்கும், அவற்றிற்குச் சமமான கிரேக்க இலக்கியத்திற்கும் இடையேயுள்ள ஒற்றுமைப் புலனாகிறது என்கிறார்.”

1. உருவம்

2. உள்ளடக்கம்

3. சமுதாய நிலை

       என்ற மூன்றும் பெருமளவில் ஒத்துப்போகின்றது. அதேபோல் எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் கூறுகையில்  “தமிழின் புறப்பாடல்கள் ஹோமரின் காவியத்திற்கு அடிநிலையான இசைப்பாடல்களோடு ஒத்து முடிகின்றன.’ என்கிறார். எஸ்.வையாபுரிப்பிள்ளை தனது காவிய காலம் (1952) நூலில் குறிப்பிடுகையில் இதனின் கருத்துக்கள் ‘Heroic Age’ எனப்படும் கிரேக்க கருத்து நிலையோடு ஒத்து முடிகின்றன என்கிறார். இத்தகைய கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டு கலாநிதி. க. கைலாசபதி அவர்கள் ‘Tamil Heroic Poetry’ என்னும் தலைப்பில் பிரிட்டன் பர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவ்வாராய்ச்சிக்கு அடிநிலையாக இருந்தது ஒப்பீட்டு முறைத் திறனாய்வு ஆகும்.

          தமிழில் ஒப்பீட்டு முறைத் திறனாய்வின் வளர்ச்சியினை வ.வே.சு அய்யரின் “Kamba Ramayana – A Study” எனும் நூல் கம்பனை, வால்மீகி, மில்டனுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளது ஒப்பீட்டு திறனாய்வுக்கு நல்ல சான்றாக அமைந்துள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

சமுதாயவியல் திறனாய்வு (Sociological Criticism)

கேள்வியும் பதிலும் - சமுதாயவியல் திறனாய்வ

   இலக்கியம் என்பது சமுதாயத்தில் வாழக்கூடிய மனிதர்களின் வாழ்க்கை வெளிப்பாட்டினைக் வெளிக்கொணருவதாகும். அதனில் மனிதனின் வாழ்க்கைத் தன்மையானது சமுதாயத்தோடு, இணைந்தும். முரண்பட்டும் வாழ்ந்த நிலையினை உணர்வுப்பூர்வமாக வெளிக்காட்டுகிறது. அவ்விலக்கியத்தில் அதனின் தோற்றம், பொருள், பயன்பாடு, ஆகிய மூன்று நிலைகளிலும் மனிதனுக்கு உள்ள தொடர்பினை விளக்குவது சமுதாயவியல் திறனாய்வின் அடிப்படை ஆகும்.

          சமுதாய வரலாற்று மரபில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றுகின்ற இலக்கியம், படைப்பாளியின் அனுபவ உணர்வுகளையும், படைப்பாற்றலுக்கு ஏற்ற நோக்கு மற்றும் கருத்தின் தன்மையையும், பெற்றதாக அமைகிறது.

        இலக்கியம், சமுதாயம் இரண்டிற்குமுள்ளத் தொடர்பானது புலனறிவு (Sensory Perception) போல மிகவும் இயல்பான, எளிமையான ஒன்றாக உள்ளது.         தே பொனால்ட் (De Bonald) எனும் பிரான்சு நாட்டு அறிஞர். இலக்கியத்தை சமுதாயத்தின் புலப்பாடு (Literature is the expression of society) என்கிறார். ரெனி வெல்லக் (Rene Wellak) அவர்கள். தன்னுடைய ‘இலக்கியக் கொள்கை” என்னும் நூலில், ‘இலக்கியம் என்பது சமுதாய காரணங்களின் விளைவு மட்டுமல்ல, சமுதாய விளைவுகளின் காரணமாகவும் தோன்றப்பட்டது’ என்று சமுதாயத்திற்கும், இலக்கியத்திற்கு முள்ள உறவுநிலையை விளக்கியுள்ளார். சமுதாய மதிப்புகளானது காலம் செல்ல, செல்ல சூழ்நிலைக்கு ஏற்ப மாறிய வண்ணமாக உள்ளன.

      மார்க்சிய வாதிகளின் சிந்தனைகளானது சமுதாயத்திற்கும். இலக்கியத்திற்கும் உள்ள உறவுநிலைப் பற்றி ஆழமாகவும், அதிகமாகவும் சிந்திக்கக் கூடிய தன்மைப் பெற்றதாக அமைந்துள்ளது. மார்க்சிய கொள்கைகளில், சமுதாயச் சிந்தனையானது,

1. அடிப்படையான பொருளியல் (Material)

2. வாழ்க்கைக்கான ‘சமுதாய இருப்பு’ (Social Being)

3. கருத்து நிலையால் ஏற்படும் சமுதாய உணர்வுகள் (Social consciousness)

      இவற்றைப் பற்றிதான் இலக்கியம் பேசுகின்றது என்கின்றனர். இவ்வுலகின் தன்மையை வெளிக்கொணருவதற்குச் சமுதாயவியல் திறனாய்வு சிறப்புடையதாக அமைகிறது.

சமுதாயவியல் திறனாய்விற்கு அடிப்படை

         ஓர் இலக்கியம் இயற்றப்படும்போது, அவ்விலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் நெரு தொடர்புண்டு என்பதைக் கருத்தில் கொண்டு, படைக்க முயல்வோர், சமுதாயப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். திறனாய்வாளர், சமுதாய நிலை இலக்கியமாகக் காணப்படும் இதனுள்,

1. இலக்கியம் புலப்படுத்தும் உண்மைகளைக் காரண, காரியங்களோடு (Cultural Factors) கண்டு விளக்குதல்

2. சமுதாய நிகழ்வுகளை (Social Determinants) வெளிக்கொணருதல்

3. இலக்கியத்தின் அமைப்புமுறைப் பற்றி பேசுதல்

4 அதனின் இடம்பெற்றுள்ள பொருளமைவுகள் பற்றி கூறுதல்.

     இவற்றைக் கருதுகோளாக வைத்து சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது அமைகிறது. இலக்கியத்திற்கும். சமுதாயத்திற்கும் உள்ள உறவுநிலையைக் கீழ்க்கண்ட பரிணாமங்களின் துணைக்கொண்டு திறனாய்வாளர்கள் விளக்குகின்றனர்.

(1) சமுதாயப் பின்னணி (Social Context)

¤ படைப்பிற்குரிய காலப் பின்னணி

¤ படைப்பாளனுடைய காலப் பின்னணி

(2) எதிர்கோள் (Reader’s Response)

¤ சூழலை எதிர்கொள்ளுதல்

¤ சூழலைப் போற்றுதல்

(3) சமுதாயத்தைக் காட்டும் விதம் (Social Content)

1. குடும்ப அமைப்பு

2. உறவு நிலை

3 நிறுவனங்கள்

4. அரசாட்சிமுறை

5. சமுதாய நிலைப்பாடு

         1. கிராம மக்களின் வாழ்வு

         2. நகர்ப்புற மக்களின் வாழ்வு

         3. சாதி நிலை

        4. சீரழிவான நிகழ்வுகள்

        5. சிக்கல்களைக் கொண்ட சமுதாயச் செயல்கள்

        6. பிரச்சனையை தீர்க்கும் வழிகள்

        7. கருத்துநிலை மாற்றங்கள்

     என்ற தன்மைகளில், முரண்பட்ட சமுதாயச் சூழலைத் திறனாய்வு செய்து தீர்வினைக் காண்கின்றனர். சமுதாயத்தில் நிகழக்கூடிய இவ்வகையான மாற்றங்கள் எப்போதும் முன்னோக்கியே  நடைபெற்றுள்ளதாகும்.

        படைப்பாளன் – படைப்பு – சமுதாயம் இம்மூன்றும் ஒன்றை ஒன்றுத் தழுவி நெருக்கமுற பிணைப்புக் கொண்டதாக சமுதாயவியல் திறனாய்வாளர்கள் கூறுகின்றனர். இலக்கியத்தின் கலையுருவாக்க தன்மைகளுக்கு ஏற்பவும், சமுதாயத்தின் நெறிமுறைகளுக்கு தகுந்த முறையிலும் அதனின் மதிப்பீடுகள் அமைகிறது. அதனடிப்படையில் அப்பரின் உழவாரத் தொண்டுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. முடிவாக, அப்பர் வைத்திருந்த உழவாரப்படை வேளாள எழுச்சியின் ஆயுதமாகவோ வெறும் அடையாளப் படுத்திக் கொள்ளும் குறியீடாகவோ. எண்ணாமல், அன்றைய காலக்கட்டத்தின் சமுதாயச் சூழ்நிலைகளைப் புரிந்துக் கொள்வதற்கான கருவியாக எண்ணுதல் வேண்டும் என்கின்றனர்.

எதிர்கொள்ளும் தன்மை

       ஒரு குறிப்பிட்ட படைப்பு குறிப்பிட்ட சமுதாயத்தினால் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்றும் அதனின் தரம், பயிற்சி, முதலிய தகைமைகள் நிர்ணயம் செய்யப்படும் தன்மை ஆகியவைப் பற்றி சமுதாயவியல் திறனாய்வாளர்கள் பேசுகின்றனர். மேலும், குறிப்பிட்ட படைப்பினை வாசகர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் அவர்களின் மனநிலை மாறுதல்கள் என்ன என்பது பற்றியும் பிரெஞ்சு இலக்கிய அறிஞர் ஹென்னக்யுன் (E.Hennequin) மற்றும் ருசிய அறிஞர்கள் பொதப்னியா (A. Potebnya) முதலியவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

      ஆங்கிலத் திறனாய்வாளர்களான 1) க்யூ டி. லீவிஸ் – விரிவாக்க முயற்சியில் சமுதாயவியல் (Fiction and the Reading – Public) கொள்கையை, ஒப்பிலக்கியம் ‘ஏற்றல் கொள்கை’ (Reception Theory) மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். எதிர்கொள்வின் இன்றியமையாமை:

1. வாசகரின் நேரடிப் பேட்டிகள்

2. விற்பனை பற்றிய குறிப்பு

3. தொடர்ச்சியாக வெளிவரக்கூடிய பதிப்பு

4. மதிப்புரை மற்றும் விமர்சனங்கள்

5. மேற்கோள்கள்

6.பிறரால் மொழிபெயர்க்கப்பட்டது

7. பிறரால் எடுத்தாளப் பெற்ற வரிகள்

    முதலியவை குறிப்பிட்டகலை இலக்கியப் படைப்பின் எதிர்கொள்வாக திறனாய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சமுதாய சூழலின் சித்தரிப்பில் இடம்பெறுகின்றதாக

(1) சாதிகள்

(2) குலங்கள்

(3) மொழி அடிப்படையில் அமைந்த சமுதாயப் பிரிவுகள் மற்றும் குழுக்கள் (Social Ethnic Groups) பற்றிய விரிவான ஆய்வுத் தன்மையும், வட்டாரம், மொழி. அடிப்படையில் பகுக்கப்பட்ட

              (1) தேசியம்,

             (2) துணைதேசியம் இனங்கள்

            (3) வர்க்கப் பிரிவினைகள்,

            (4) பழக்க வழக்கங்கள் (Social Habits)

            (5) நம்பிக்கைகள்

           (6) சடபங்குகள்

           (7) சமுதாயத்தின் தேக்கச் சீரழிவுகள்

           (8) வறுமை

           (9) வேலையின்மை

         (10) குடும்பச் சிதைவின் வழி வரும் சமுதாயச் சீர்க்கேடுகள்

         (11) சமுதாய மாற்றங்கள்

     என்று சமுதாயவியல் திறனாய்வின் அணுகுமுறையானது விசாலமானப் பார்வைக் கொண்டதாக பரந்துபட்டுச் செல்கிறது.

    சமுதாயவியல் திறனாய்வானது கலைப் படைப்பில், நுணுகி ஆராயும் தன்மைக் கொண்ட விஞ்ஞானியின் பார்வையைப் போன்று ஆழ்ந்து நோக்கும் தன்மையினைக் கொண்டதாகவும், உலகக் கண்ணோட்டத்தினை (World outlook) உடையதாகவும் அமைந்துள்ளது. ஏனைய திறனாய்வினை விட மிகச் சிறப்பிற்குரிய திறனாய்வாக இதனை அடையாளம் காட்டுகிறது.

வரலாற்று முறைத் திறனாய்வு |Biographical Criticism

இனியவை கற்றல்

       இலக்கியப் படைப்பாளரின் படைப்பிலிருந்து, அவரின் வாழ்க்கை வரலாற்று முறையினை ஆய்வது வரலாற்று முறைத் திறனாய்வு ஆகும்.

     பாரதியாரின் படைப்புகளைக் கொண்டு அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆராய்ந்தது இவ்வகையானத் திறனாய்வு முறையாகும். இத்தகைய திறனாய்வு முறை இரண்டு விதமானக் கூறுகளில் நடைபெறுகிறது.

1. அகவயமுறை (Subjective)

அகவயமுறை என்பது ஆசிரியரின் படைப்பினைக் கொண்டு திறனாய்வு செய்வது.

2. புறவயமுறை (Objective)

புறவயமுறை என்பது ஆசிரியர் பற்றி செய்தியினை, பிறத் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்வது ஆகும்.

     வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் சிறப்புடையதாக அகவயமுறையே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கம்பனின் படைப்பில் வரும் தசரதன் – இராமனின் பிரிவு நிலையைப் படித்தோர். அதனை கம்பர் – அம்பிகாபதியின் பிரிவு என்றே கருதினர். அதே போன்று பாரதியாரின் விடுதலை உணர்வுப் பாடல்களை நோக்கும்போது – பாரதியின் விடுதலை வேட்கை நிலையையும், தேசியத்திற்காக தன்னை அர்ப்பணித்த தன்மையையும் காண முடிகிறது. வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் ஒருவரைப் பற்றி அறிய அவருடைய படைப்புகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், புறச்சான்றுகளும் இன்றியமையாதது ஆகிறது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism)

2. விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

3.உளவியல் முறைத் திறனாய்வு

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »