Saturday, April 4, 2026
Home Blog Page 27

கரந்தைக் கவி  வேங்கடாசலம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து

கரந்தைக் கவி வேங்கடாசலம் பிள்ளையின் தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து

கரந்தைக் கவி  வேங்கடாசலம் பிள்ளையின் பிறப்பு
            கி.பி.1886ஆம் மார்கழித் திங்கள் ஆண்டு ஐந்தாம் நாள் அரங்க வேங்கடாசல பிள்ளை பிறந்தார். அவர் பிறந்த இடம் தஞ்சைக் கந்தருவக் கோட்டை மோகனூர் ஆகும். அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் கல்வியும், தமிழாசிரியர் குயிலையா சுப்பிரமணிய அய்யரிடம் தமிழ் இலக்கியங்களையும் பயின்றார். பின்னர்க் காவல்துறை கண்காணிப்பாளராயிருந்த இலக்கணம் மா.நா.சோமசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தொல்காப்பியம் பயின்றார். செட்டிநாடு, தஞ்சை ஆகிய இடங்களில் பத்தாண்டுகளுக்குமேல் தமிழாசிரியராயிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட தமிழ்ப்பொழில் இதழாசிரியராயிருந்து சீரிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதிவந்தார்.
தமிழ்ப்பற்று
            1932ல் திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் ஆனார். 1938ல் கரந்தை தமிழ்ச்சங்க வெள்ளி விழாவில் அவருக்குக் கரந்தைக் கவிராயன் என்ற பட்டத்துடன் தங்கப்பதக்கமும் வழக்கப் பெற்றது. 1946ல் அவரது அறுபது ஆண்டு நிறைவு விழாவின்போது இவருக்கு ஓராயிரம் வெண்பொற்காசுகள் அளிக்கப் பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சி அனைத்திற்கும் அவரே வரவேற்புரைகளும், வாழ்த்துப் பாக்களும் எழுதிக் கொடுத்தார். நகைச்சுவையும், சிலைடை நயமும் கலந்த நடையில் மாணாக்கர்கட்குக் கல்வி புகட்டியும் அறிஞர்களுடன் உரையாடியும் வந்தார். அவர் நினைத்த அளவில் பாடலியற்றும் ஆசுகவியாவார். தன் ஆசான் குயிலையா மீது ஆசான் ஆற்றுப்படை பாடினார். இவர் தெய்வச் சிலையார், தொல்காப்பிய உரைக்குறிப்பு, சிலப்பதிகாரம், மணிமேகலை நாடகங்கள், செந்தமிழ்க் கட்டுரைகள், உரைநடைக் கோவை ஆகியவற்றின் ஆசிரியர். நாவலர் ந.மு.வேங்கடாசாமி நாட்டாருடன் அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப்பெற்ற அகநானூற்றுக்கு அரிய உரை எழுதியுள்ளார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினால் நடத்தப் பெற்ற அகநானூற்று மாநாட்டில் தலைமையுரை ஆற்றியுள்ளார்.
கரந்தைக் கவியரசு எனும் பட்டம்
            கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய கல்வி நிலையத்தில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1922 ஆம் ஆண்டு முதல் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணியாற்றினார். தொல்காப்பியத்திற்கு தெய்வசிலையார் எழுதிய ஏட்டுச்சுவடி உரையை தமிழ்த்தாத்தா உ.வே.சா.விடம் பெற்று, பதிப்பித்துக் கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டு வந்தார்.
            ‘ஆசானாற்றுப் படை’, ‘சிலப்பதிகார நாடகம்’, ‘மணிமேகலை நாடகம்’, ‘அகநானூறு உரை’ முதலிய நூல்களைப் படைத்து கவியரசு வேங்கடாசலம் தமிழுக்குத் தந்துள்ளார். கரந்தைத் தமிழ்ச் சங்கம், கவியரசு வேங்கடாசலத்தின் தமிழ்த் தொண்டினைப் போற்றிப், பாராட்டி, ‘கரந்தைக் கவியரசு’ எனப் பட்டமளித்துச் சிறப்பித்தது. டாக்டர் மா.இராசமாணிக்கம், முத்தானந்த அடிகள் முதலிய புகழ்மிகு தமிழ் அறிஞர்களை உருவாக்கிய கரந்தைக் கவியரசு வேங்கடாசலம், தமது அறுபத்து ஏழாவது வயதில் 1955 ஆம் ஆண்டு மறைந்தார். அன்று அவர் மறைந்தாலும், அவரது தமிழ்த் தொண்டு என்றும் நிலைத்திருக்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்து
            தமிழ்ப் பெரியார் திரு.வேங்கடாசலம் பிள்ளை பல பாடல்களைப் படைத்துள்ளார்.  இவர், இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து

“வான் ஆர்ந்த பொதியின் மிசை வளர்கின்ற மதியே !

மன்னிய மூவேந்தர்கள் தம் மடி வளர்ந்த மகளே !

தேன் ஆர்ந்த தீஞ் சுனை சால் திருமாலின் குன்றம்

தென் குமரி ஆ இடை நற் செங்கோல் கொள் தேவி !

கான் ஆர்ந்த தேனே! கற்கண்டே ! நற்கனியே !

கண்ணே! கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி !

ஆனாத நூற் கடலை அளித்து அருளும் அமிழ்தே !

அம்மே ! நின் சீர் முழுதும் அறைதல் யார்க்கு எளிதே !”

 


அருஞ்சொற் பொருள்
வானார்ந்த பொதி = வானுயர்ந்த பொதிய மலை
மன்னிய = பெருமை மிக்க
தேனார்ந்த தீஞ்சுனை சால் = தேன் போல இனிக்கும் நீர்ச் சுனைகள் நிறைந்த
திருமாலின் குன்றம் = வேங்கட மலை
ஆயிடை = அவ்விடம் (இடைப்பட்ட பகுதியில்)
செங்கோல் கொள் = ஆட்சிபுரிகின்ற
கானார்ந்த தேனே = காடுகளில் தேனடையிலிருந்து வடியும் தேன் போன்ற  தமிழே !
கட்புலம் = பார்வை
ஆனாத = குறையாத
சீர் = பெருமை
அறைதல் = சொல்லுதல்
யார்க்கு எளிதே = யாருக்கு எளிய செயலாகும்.

 

வீழ்ந்து விடாத வீரம்|கவிதை|ச. குமரேசன்

வீழ்ந்து விடாத வீரம் - ச. குமரேசன் - கவிதை

வீழ்ந்து விடாத வீரம்

 
வல்லவனையும் வழுக்கி விடும்
வழுக்குப் பாறை தான் வாழ்க்கை…!

 

நம்பிக்கை என்னும்
நரம்பு கயிற்றைப் பிடித்து நட…
உந்தி உந்தி உயரே செல்..
நாளை நட்சத்திரமாய் ஒளிர்வாய்…!

 

வறுமையென்னும்
வளைவுகள்
வாழ்க்கை நதியை
தாமதப்படுத்தலாம்
 தடுத்து நிறுத்தி விடாது…!

 

வாடிய பயிர்கள் எல்லாம்
வளைந்து ஓடும்
நதிகளால்தான்
வளம் கொழிக்கின்றன…!

 

காற்றினால்
களவாடப்பட்ட
கருமேகங்களும் – தான்
கண்ணெதிரே
கனமழையை
கொடுக்கின்றன…!

 

உன் வீரம் வீழ்ந்து விடாது…
நம்பிக்கையோடு
நதியாக..
கனவுகளோடு
கார்மேகமாக..
தடைகளைத் தகர்த்தெறி
வீறுநடைபோடு வெற்றி உனதே..!

ஆசிரியர்

கவிஞர் பேரா. ச. குமரேசன்,

தமிழ் உதவிப் பேராசிரியர்,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராசிபுரம்.

கவிஞர் பேரா. ச. குமரேசனின் படைப்புகளைக் காண்க..

 

நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ்மொழி மேலாண்மை|ஆய்வுக்கட்டுரை|இளங்கவி ச.வாசுதேவன்

நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ்மொழி மேலாண்மை
முன்னுரை
    இளங்கவி ச.வாசுதேவன்தென்பெண்ணை ஆற்றுக்கு தெற்கு ஆகவும் வட வெள்ளாட்டுக்கு வடக்காகவும் அமைந்துள்ளது நடுநாடு எனும் பகுதி நடுநாட்டை நடுவில் நாடு என்று சொல்லும் வழக்கம் கல்வெட்டில் பொரிந்துள்ளதை காண முடிகிறது நடுநாட்டை நல்ல தமிழ் பேசும் நாடாகவும் கூத்துக்களையில் பெயர் பெற்ற பகுதியாகவும் கூறுவர் சைவம் தலைக்கு வந்த அப்பர் சுந்தரர் ஆகியோர் பிறந்த மண் நாட்டார் கலைகளில் சிறப்பு பெற்ற பகுதியில் இப்பகுதியும் ஒன்று தொன்றுதொட்ட மரபான கூற்றுக்களையில் நடு நாட்டுக் கூத்திற்கே தனியான நடை வாணி உள்ளது. திரை கட்டி பல பகுதிகளில் பலர் ஆடினாலும் கூத்து முறைகளில் தனது தனித்துவத்தை காட்டுவர் நடுநாட்டு கூத்தர்கள் ஒவ்வொரு கலைஞருக்குள்ளும் ஒவ்வொரு விதமான நடையும் திறனும் உள்ளதை அரிதானம் பூசி கலரிக்கு வந்த உடனே கண்டறிய முடியும் கலைஞர்கள் வேடமிட்டு ஆடும் போது அவர்கள் பேசும் வசனத்திலும் பாடல்களிலும் தமிழ் மொழி எவ்வாறு ஊடுருவி உள்ளது என்பதையும் அதன் மேலாண்மை திறனையும் நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழி மேலாண்மை எனும் பொருண்மையில் அமைந்த இக்கட்டுரை திறம்பட விளக்குகின்றது.
நடுநாட்டு கூத்தர்கள்
                நடுநாட்டு தெருக்கூத்தும் பொருன்மையும் வட ஆற்காடு மாவட்டம் என்றாலே கூத்துக் கலையின் நெடியில்லாமல் இராது என்பது பல்லோர் கருத்து நடுநாட்டிற்கு என்று ஒருவகையான இலக்கிய மரபு இருப்பதைப் போல் நடுநாட்டு பகுதிக்கு என்றே தனியான கலை மரபு உண்டு. அடகு முறையிலும் இசையான பாட்டு பாடும் தொனியிலும் தனித்துவம் பெற்று விளங்கும் பூத்து பொருண்மை பெரும்பாலும் இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்தே அமையும் ராமாயணம் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிகழ்த்த பெறும். ஆனால் மகாபாரதம் எல்லா இடங்களிலும் நிகழ்த்த பெறும். வட ஆற்காடு மாவட்டத்தில் திரௌபதி அம்மன் வழிபாடு அதிகம் உள்ளதே இதற்கு காரணம் கூத்து நிகழ்த்துக்களை வடிவமானாலும் அதன் பொறுமை பொறுமை இதிகாச கிளை கதைகளில் இருந்தே வைக்கப்படும் அவை அர்ஜுனன் தபசு பாஞ்சால குறவஞ்சி மின்னொளி சிவ பூஜை மதகறி சூரன் சண்டை ஜெராசந்தன் சண்டை விராட பருவம் ஸ்வாலக்ஷ்வாலை கருவபங்கம் சுபத்திரை கல்யாணம் அபிமன்னன் சுந்தரி மாலையிடு அபிமன்னன் கொன்ற மாலை செய்தவன் சண்டை கிருத்துவம் தூது கிரிட்டினன் தூது கிருஷ்ணன் தூது நளாயினி சரித்திரம் போர் மன்னன் சண்டை சுந்தர்ராஜன் கருவ பங்கம் விடும்பா சூரன்பதை சக்கராசுரன் சண்டை சாலை கருவபங்கம் விராட பருவம் கர்ண மோட்சம் 18ஆம் நாள் சண்டை பஞ்சபாண்டவர் பாகப்பிரிவினை ஆறாவது வனம் கங்கா தேவி திருமணம் போன்ற பொருண்மையில் கூத்துக்கு தலைப்புகள் அமைக்கப்படுகிறது மகாபாரதம் கூத்து நிகழ்த்தப்பட்டால் அதிகம் அதில் துரியோதனன் தருமன் கண்ணன் ஆகிய கதாபாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் ராமாயண கூத்து நிகழ்த்துவது அரிதாகத்தான் நிகழும் பண்பாட்டின் வழியாகத்தான் கலைகள் நிகழ்த்தப்படும் கலைகளே தமிழர்களுக்கு உயிர் மொழி கலைகளின் வழியே தான் கடத்தப்படுகிறது காலம் தோறும் தமிழ் மொழியானது தன்னையும் தன்னை சார்ந்தவரையும் தகவமைத்துக் கொள்ளும் தகை தன்மையுடையது பண்பாட்டின் வளர்ச்சியே கலைகளின் வளர்ச்சி கலைகளின் மேம்பாடு மொழியின் வளர்ச்சி விவரிக்கிறது என்கிறார் நாடகக் கலைஞர் அரியலூர் மணி.
 நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழிமேலாண்மை
                நடுநாட்டு தெருக்கூத்தில் தமிழ் மொழி மேலாண்மை தொன்று தொட்டு வளர்ந்து கொண்டே உள்ளது காலப் பழமையும் பண்பாட்டு புதுமையும் கொண்டிலங்கும் மொழி தமிழ் கலை வடிவங்களில் தொன்மை வடிவமாக கருதப்படுவது தெருக்கூத்து தெருக்கூத்தில் பலவகைப்பட்ட கதாபாத்திரங்களும் வேடப்பாடல்களும் வசனங்களும் இடம்பெறும் இவ் வசனங்களில் வழக்குழிந்து போன தமிழ் சார் சொற்களும் சொற்றொடர்களும் இன்றளவும் நடுநாட்டு தெருக்கூத்து கலைஞர்களால் கையாளப்பட்டு வருகின்றது கையாளப்படாத மொழியின் விழுமியங்களை கூர்த்தியல் ஓர் உருவாகவே தன்னகத்தில் கொண்டிலங்குகிறது இதனை தெருக்கூத்து பாடல் பலவகையாக கூறுகிறது அவை திரை வணக்கப் பாடல் வேடப்பாடல் அறிமுகம் கணவன் வணக்கப் பாடல் கணவன் துதி பாடல்கள் என பல வகைப்பட்ட பாடல்களின் தொகுப்பாக தாளம் மத்தளம் முழங்க நிகழ்த்துதல் அரங்கேறும் அரங்கேற்றத்தின் உடைய பொருண்மை கூற்றின் பாங்கிற்கு ஏற்ப பாடல்களும் வசனங்களும் அமையும் அப்பாடல்களில் தமிழ் மொழி ஆதிக்கம் மிகுந்திருப்பதை காண முடிகிறது அவை எள்ளளவு மங்கையும் எள்ளளவு மங்கையும் என் தகப்பாய் ஈசனாரி என் கழுத்தில் இருக்க பிடிக்கலையா கடுகளவு மங்கையும் என் தகப்பாய் சனாரே என் தாலி தானே செரிக்கலையா ஆட வந்த தேவிடியா என் தகப்பாய் ஈசனாரி அவள் அடிமடி வயிற்றில் ஒண்டு நாளா கொட்டிய மோலக்காரன் என் தகப்பாய் ஈசனாரி அவன் கூரைல ஒன்றுரானா எனக்கு பச்சமா வெல்ல தந்த எனக்கு வந்த மன்மதரே இந்த மாளிகை விட்டுப் போகவில்லையே இன்னைக்கு பந்தலும் பிடிக்கலையே ரதிதேவி புலம்பல் இப்பாடல் மன்மதன் ஈசனின் கோபத்தில் எரிந்து கிடக்கும் போது அவனின் மனைவி ரதிதேவியானவள் ஓலமிட்டு புலம்பி அழும் பாடல் இப்பாடலில் என் தகப்பா தேவர் அடியார் மூலகாரன் மாளிகை மன்னவர் பந்தல் போன்ற தமிழ் சொல்லாடல்கள் இன்றைக்கும் பேச்சு வழக்கில் பயில்வதை காண முடிகிறது. இது புலம்பல் பாடலாயினும் இப்பாடலில் தமிழ் மொழி பொருண்மையளவிலும் சொல்லளவிலும் சிறப்பு பெற்று இயல்கின்றது. அர்ஜுனன் தபசு கூட்டில் அர்ஜுனன் ஈசனை கோரி தவம் செய்யப் போகும்போது கண்ணபிரான் மோகினி வேடம் எடுத்து அர்ஜுனனை தடுக்கும் போது ஒரு பாடல் அந்நாடகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அப்பாடல் மோகனராகம் கொண்டது மோக ராகம் கொண்டது அங்கே தமிழ் மொழி வளர்ச்சி ஒவ்வொரு வார்த்தையிலும் பயில்கின்றது.
தமிழ்மொழிச் சொற்கள்
            அவை தேரல் மொழி என்னும் மதன் வழியாலும் தேடினான் வந்தேனே வந்ததும் வந்ததும் ஆணழகா உந்தன் அன்பு மொழி கேட்டு அறிவை மயங்கினேனே அதிதிரனே சுகுமாரணி என கேட்டான் தீரணி என மோகினி பாட அதற்கு மறு பாடலை அர்ஜுனன் பாடுகிறார் அவை அம்பு வில் அர்ஜுனன் நம்பி வணங்கிடும் அன்னை இலக்கினியோ இவள் அருந்ததியையோ இல்லை சரஸ்வதியோ அந்த சந்திரமதியோ தான தனந்தன தான தனந்தன தான தனந்தனனா தன னா மோகினி தர்க்கம் இந்தப் பாடலில் தேனைக் குறிக்கக்கூடிய சங்கச் சொல்லான பேரல் எனும் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்ணனை விழி என்றும் கண்ணை விழி என்றும் ஆணழகா அருந்ததி மதி இலக்குமி அறிவை பெண் போன்ற தமிழ் சொற்கள் இப்பாடல் நிறைந்துள்ளது இதுபோல் நாடகங்களுக்கு ஏற்ப தமிழ் சொற்கள் கையாளப்படுகிறது கையாளும் சங்க சொற்கள் இன்றைக்கும் நடுநாட்டு தெருக்கூத்தில் நடைமுறையில் இருக்கின்றன என்பதுதான் வியப்பிற்குரிய ஒன்றாக உள்ளது தெருக்கூத்தில் எப்படி இசை, இசைக்கேற்ற தாளம் தாளத்திற்கேற்ற சுதி சுதிக்கேற்ற அளவு அடவுக்கேற்ற களரி உள்ளதோ அதை போல் வசனங்களும் பாடல்களும் வட சொற்கள் தவிர்த்து நிகழையாக தமிழில் மட்டுமே உள்ளன பண்பட்ட சூழலில் பன்னெடுங்கால கலை மரபில் தெளிந்த மழை இன்றைக்கும் பயன்படுத்தும் கலை தெருக்கூத்தாகும் நடுநாட்டு தெருக்கூத்தில் மேன்மை பொருந்திய தமிழ்ச் சொற்களும் யாப்பு கட்டமைப்பும் மேலோங்கி உள்ளதை காண முடியும் ஒப்பாரி தாலாட்டு காதல் பாட்டு அடகு பாட்டு ஆகிய எப்பாடல் ஆயினும் அப்பாடலில் வட சொற்கள் இருப்பதை விட தமிழ் மொழிச் சொற்கள் இருப்பதே அதிகம் தமிழ் மொழிச் சொற்களை பூத்துக் கலைஞர்கள் தீர்க்கமாகவும் திறமாகவும் கையாளுகின்றனர் நடுநாட்டு தெருக்கூத்து கலையில் குறிப்பிடத்தக்கவர்களான நாடக ஆசிரியர் அரியலூர் மணி தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதாளர் தாங்கள் சேகர் போன்றோர் இதற்கு சான்றாக விளங்குகின்றனர் முடிவுரை ஆதி கலை வடிவான தெருக்கூத்து வட்டார வள மொழிகளில் நிகழ்த்தப் பெறும் அது வட ஆற்காடு மாவட்ட பகுதிகளில் மிகையாக நிகழ்த்த பெறுவதுண்டு மண்மனம் மாறாமல் பண்பாடு சிதையாமல் இதிகாசம் புராணங்கள் போன்ற நாடகங்கள் ஆயினும் தெருக்கூத்தில் புராண இதிகாசங்கள் குறிப்பிடும் சமஸ்கிருத சொற்களை பயன்படுத்தினாலும் தமிழ் மொழிச் சொற்களையே அதிகமாக கையாள்கின்றனர் நாடகக் கலைஞர்கள்.
முடிவுரை
                வட்டாரங்களுக்கு ஏற்றார் போல தங்களது நாடகங்களை அமைத்திடுவர் நடுநாட்டு தெருக்கூத்து என்பது வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள எல்லா வட்டார கூத்துகளோடு ஒன்றி போனாலும் இசையோடும் பயிலும் உரையோடும் வேறுபடுகின்றன கதாபாத்திர வர்ணனை கூத்துக் களரி அமைப்பு வாத்தியக்காரர்கள் வைப்பு முறை பின்பாட்டு பாடுபவர்களின் குரல் திறன் ஆகிய எல்லாவற்றையும் தெளிவாக பாடுபவர் வழங்குபவர்கள் நடுநாட்டு கூத்து கலைஞர்கள் அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் சங்கத்தமிழ் சொற்கள் ஆதிக்கம் மிகுந்திருக்கும் கூத்து சார்ந்த பொருட்களும் தமிழ்ச் சொற்களே மேலோங்கி இருக்கும் தமிழ் மொழி மேலாண்மை என்பது கையாள்கின்ற திறத்திலும் கையாள்பவர் சார்ந்த பின்புலத்திலும் மேம்படும் தன்மை எது பண்பாட்டின் கூரான மொழி தெருக்கூத்தில் கதை மொழியாகவும் பாடலில் இசை மொழியாகவும் வசனத்தில் இயல் மொழியாகவும் உள்ளது நடுநாட்டு தெருக்கூத்து கலையில் இன்றளவும் தமிழ் மொழி மேலாண்மை பெற்றுள்ளது என்பதற்கு சான்றாக இக்கட்டுரை விளங்குகின்றது.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
இளங்கவி ச.வாசுதேவன்
(நடுநாட்டுத்தமிழன்)
             முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி,
குடியநல்லூர் கிராமம்,
வேங்கைவாடி அஞ்சல்,
கள்ளக்குறிச்சி வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 206
மின்னஞ்சல் : shankarvasu98@gmail.com

மேலும் பார்க்க..

1.கலைஞர் நூற்றாண்டுக் கவிதை 

 

நீதிக்கு அடிபணி|வாழ்வியல் கட்டுரை|முனைவர் ஈ.யுவராணி

நீதிக்கு அடிபணி_யுவராணி

நீதிக்கு அடிபணி

மூதாட்டியின் உணவு விடுதி
      வயது முதிர்ந்த மூதாட்டி ஒருத்தி உணவு விடுதி நடத்தி வந்தாள். காலையில் அவள் விடுதியில் கிடைக்கும் அப்பம் மிகமிகச் சுவையானதாக இருக்கும். அந்த விடுதிக்கு வரும் அனைவரும் அதனை விரும்பிக் கேட்டு வாங்கி உண்பர். அப்பத்துக்குச் சர்க்கரையும் பாலும் துணைப் பொருள்களாக அளிப்பாள்.
      ஒரு சமயம் சர்க்கரை விலை சற்றுக் கூடியது. அப்பத்திற்குப் பெறுகிற விலைக்குச் சர்க்கரை கொடுப்பது அம்மூதாட்டிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது. அதிகவிலை கொடுத்துச் சர்க்கரை வாங்கினாலும், அப்பத்தின் விலையைக் கூட்ட அவள் விரும்பவில்லை. எனவே, ‘அப்பத்திற்குச் சர்க்கரை இல்லை’ எனக் கூற விரும்பினாள்.  கடைக்கு வழக்கமாக வந்து சாப்பிடும் ஒருவரை அழைத்து, ‘அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என அறிவிப்பு அட்டை ஒன்றை எழுதிவரச் சொன்னாள். அவர் அதன் அடிப்படையில்,
                        “இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை” என ஓர் அறிவிப்பு அட்டை எழுதி வந்தார். அம்மூதாட்டி அதனைக் கடையில் தொங்கவிட்டாள்.
                        காலையில் சாப்பிடவந்த ஒருவர் ஓர் அப்பம் வாங்கிச் சாப்பிட்டார். சர்க்கரை இல்லாமலே சாப்பிட்டார். இரண்டாவதாக ஒர் அப்பம் கேட்டார். அவள் இரண்டாவது அப்பம் கொடுத்தாள். அவர் “அம்மா! அப்பத்துக்கு சர்க்கரைக் கொடு” எனக் கேட்டார்.  அம்மூதாட்டி “அறிவிப்புப் பலகையைப் பார்த்தீர்களா?” என்று கேட்டாள். அப்பம் வாங்கியவர் “பார்த்தேன்! படித்தேன்! அதன் பிறகுதான் சர்க்கரை கேட்டேன்” என்று கூறினார்.  “அதைப் படித்துவிட்டுமா கேட்கிறீர்?” என்றாள் அம்மூதாட்டி.  “ஆமாம்… அறிவிப்பு அட்டையில் என்ன எழுதி இருக்கிறது? ‘இன்று முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இல்லை’ என்றுதானே எழுதியிருக்கிறது. இரண்டாவது அப்பத்துக்குத்தானே நான் சர்க்கரை கேட்கிறேன்” என்றார்.  “ஐயா! அப்படியா பொருள் கொள்கிறீர்கள்? சரி! உங்களுக்கு இன்று சர்க்கரை கொடுத்து விடுகிறேன். நாளை அறிவிப்பு அட்டையில் எழுதியிருப்பதை மாற்றி விடுகிறேன்” என்று கூறினாள். அறிவிப்பு அட்டை எழுதியவரை அழைத்தாள். ஐயா, அறிவிப்பு அட்டையில் “அப்பத்துக்கு இன்றுமுதல் சர்க்கரை இல்லை” என எழுதிவிடுங்கள் என்றாள். அந்த நாள் முதல் அப்பத்துக்குச் சர்க்கரை இன்றி விற்கத் தொடங்கினாள். காலைச் சிற்றுண்டிச் சிக்கல் இவ்வாறு தீர்ந்தது.  பகலுணவு வழங்குவதில் ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டது.  அன்று மதியம் வழிப்போக்கன் ஒருவன் அந்த உணவு விடுதிக்குள் நுழைந்தான். மூதாட்டியிடம் ஐந்து பணம் கொடுத்துவிட்டு, “அம்மா, எனக்கு அதிகமான பசியாக இருக்கிறது. எலுமிச்சங்காய் அளவு சோறாவது எனக்குச் சீக்கிரமாகப் போடு” என்றான். மூதாட்டி “நீ கேட்டபடியே எலுமிச்சங்காய் அளவு சோறு போடுகிறேன்” என்று கூறினாள்.  ஒரு வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து. எலுமிச்சங்காய் அளவு சாதம் மட்டும் உருட்டி அவன் இலையில் போட்டாள். அதைப் பார்த்ததும் வழிப்போக்கன், “இது எப்படி என் வயிற்றுக்குப் போதும்? வயிற்றுப் பசிக்குத்தானே சோறு சாப்பிடுகிறோம்?” என்றான். “நீ கேட்டபடி எலுமிச்சங்காய் அளவு சோறு போட்டுவிட்டேன். விரும்பினால் சாப்பிடு! இல்லையானால் எழுந்து போ!” என்று சொன்னாள். “அப்படியா? எனக்கு இது வேண்டாம். நான் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடு, நான் போகிறேன்” என்றான் வழிப்போக்கன்.  உணவு விடுதிக்கு உரியவள் ஐந்து பணத்தைத் திருப்பிக்கொடுக்க மறுத்துவிட்டாள். வழிப்போக்கன் மரியாதை ராமனைத் தேடிச் சென்றான். நீதிபதியான மரியாதை ராமனிடம் நடந்ததைக் கூறி முறையிட்டான். நீதிபதி உணவு விடுதி நடத்தி வந்த மூதாட்டியை ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார்.
                        விடுதிக்குச் சொந்தக்காரியான அம்மூதாட்டி நீதிபதியின் முன் நின்று, “ஐயா! வழிப்போக்கன் கேட்டபடி, அவன் கொடுத்த பணத்திற்குச் சோறு போட்டுவிட்டேன்” என்று கூறினாள். அத்தோடு தான் இலையில் உருட்டிப் போட்ட எலுமிச்சங்காய் அளவு சோற்று உருண்டையையும் சாட்சியமாக எடுத்துக் காட்டினாள்.  அதை எல்லாம் தெரிந்துகொண்ட பிறகு, நீதிபதி மரியாதை ராமன் புன்னகை தவழ, “அம்மா! நீ என்ன ஒப்புக்கொண்டாய்? எலுமிச்சங்காய் அளவு  சோறு போடுவதாகத்தானே ஒப்புக்கொண்டாய்? நீ போட்ட இந்த சோற்றுப் பருக்கை ஒன்றே ஒன்றாவது இருக்கிறதா பார்! ஆகவே, வழிப்போக்கன் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடு! அல்லது எலுமிச்சங்காய் அளவு பருமன் உள்ள ஒரு சோற்றுப் பருக்கையையாவது போடு” என்று தீர்ப்பு வழங்கினார்.   சொல்லின் நுணுக்கத்தை உணர்ந்த உணவு விடுதிக்கு உரிமைக்காரியான மூதாட்டி “அந்த அளவு பருமனாகும் சோற்றுக்கு உரிய அரிசிக்கு நான் எங்கே போவேன்? என்று கூறி, வழிப்போக்கன் கொடுத்த ஐந்து பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு நீதிக்கு அடிபணிந்து நடந்தாள்!
பொய்யான சாட்சிக்கு ஏமாற்றமே மிஞ்சும்
                        ஒருவரை நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.  குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டார் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.
                        பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.  அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை” என்று கூறினார்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,
கோபிச்செட்டிபாளையம்.
ஈரோடு மாவட்டம் – 638 476.

மேலும் பார்க்க..

1.கற்பதை கசடற கற்க

2.தாத்தாவின் பழைய வீடு

 

திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிப்பாடல்களுக்கான விளக்கமும்

திருமூலர் சித்தரின் வரலாறும் முதல் நான்கு வரிபாடல்களுக்கான விளக்கமும்
திருமூலர் சித்தர்
ஓம் திருமூலர் சித்தர் ஸ்வாமியே போற்றி…
ஸ்ரீதிருமூலர் சித்தசாமியின்  அடிபணிந்து திருமந்திரம் எழுத அருள்  புரிந்த திருமூலர் சித்தர் சுவாமியே போற்றி.
         
இவரது இயற்பெயர் சித்தசன் என்னும் முனிவர் ஆவார். அவர் ஈசனிடம்/ சிவபெருமானிடம் நேரடியாக தீட்சை பெற்ற முனிவர்களில் ஒருவர் ஆவார். மூலம் என்றால் மூலக் கருத்து, ஆதாரம், மூலப்பொருள்  என்பதாகும்.  எந்த ஒரு செயலுக்கும் ஒரு மூலம் ஆதாரம் வேண்டும் இந்த உலக மக்கள் வாழ்வதற்கு தேவையான அத்தனை ரகசியங்களையும் அவர் பல வருடங்களாக ஆராய்ந்து மனித உடற்கூறுகளை பற்றியும் மனிதனது மனதைப் பற்றியும் மனிதனுக்கு உண்டாகும் அனைத்து வகையான இன்னல்கள் நோய்கள் பற்றியும் அதை எப்படி சரி செய்வது என்ற முறையைப் பற்றியும் அருளியுள்ளார்.
குண்டலினி யோகம்
            குண்டலினி யோகம் என்னும் ஒரு ரகசியத்தை மனித உடலில் எத்தனை சக்கரங்கள் உள்ளது அவைகள் எப்படி இயங்குகின்றன அதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்கியுள்ளார்.  திருமூலர் இறைவனின் தூதராவார் அவர் எழுதிய திருமந்திரம் நூல் முழுவதும் இறைவனைப் பற்றியே எடுத்துரைத்துள்ளார். இறைவன் இருக்கும் இடத்தையும் அவரை அடையும் உண்மையான வழிகள் அனைத்தையும் விரிவாக எடுத்து உணர்த்துகிறார். அது மட்டுமல்லாமல் மனித உடலின் தத்துவம் உயிர் தத்துவம் சிவதத்துவம் என்று எல்லாத் தத்துவ உண்மைகளையும் உணர்த்துகின்றார் சரியை கிரியை யோகம் ஞானம் என்னும் நெறிகளையும் இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தாரணை தியானம் சமாதி என்னும் அட்டாங்க யோகங்களையும் மிகத் தெளிவாக உணரும் வண்ணம் உணர்த்துகிறார் சைவத்தை கடைப்பிடித்து ஒழுகி சன்மார்க்க நெறியில் இருக்குமாறு வலியுறுத்துகிறார் உயிர்கள் பராசக்தியை பணிந்து வழிபட்டு பலன் அடைய நவாக்கரி மந்திரத்தை சொல்கின்றார் ஓங்காரம் ஓரெழுத்து என் உண்மையான இந்நூலைப் படிக்கும் அனைவரும் அறியும் வண்ணம் உபதேசித்துள்ளார்.
            திருமூலர் என்ற பெயர் எல்லா வகையான செயல்களுக்கும் உயிர்களுக்கும் மூலமான பொருள் என்ன என்பதை ஆராய்ந்து பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி உள்ளதால் அவருக்கு திரு என்ற மரியாதைக்குரிய சொல்லுடன் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். திருமூலர் கூடுவிட்டு கூடு பாயும் வித்தையையும் அறிந்துள்ளார். அதன்மூலம் அதனால் இந்த பூமியில் வாழ்ந்து தூய தமிழில் திருமந்திரம் என்ற ஒரு அற்புதமான நூலை எழுதுவதற்கு காரணமான ஒரு கதை உள்ளது.
திருமூலர் வரலாறு
            ஒரு சமயம் திருமூலர் ஆகாய மார்க்கமாக பூமியின் மீது வந்து கொண்டிருக்கிறார். அப்பொழுது  ஒரு மனிதனைச் சுற்றி பசுக்கள்  நின்று கண்ணீர் வடித்த வண்ணம் கத்தியும் நின்று கொண்டு இருக்கிறது. அதை பார்த்த திருமூலர் உடனே தனது ஞானதிருஸ்டியால்   தெரிந்துகொண்டு கீழே வருகிறார். அந்த பசு கூட்டங்களின் கண்ணீரையும் அந்த மாடு மேய்ப்பவன் மீது கொண்டுள்ள அன்பையும் கண்டு வியந்து அவர் தனது உடலை பத்திரமாக ஒரு குகைக்குள் வைத்துவிட்டு கூடுவிட்டு கூடுபாயும் முறையில் இறந்த அந்த இடையனின் உடலில் புகுந்து உயிர் கொண்டு எழுகிறார். அதை பார்த்தவுடன் பசுக்களெல்லாம் மிகவும். சந்தோசம் அடைந்தது. மாலை ஆனதால் பசுக்கள் அந்த கிராமத்தை நோக்கி செல்கின்றது. திருமூலர்   சரி இந்த மாடுகளை அந்த கிராமத்தில் விட்டுவிட்டு சென்று விடலாம் என்று நினைத்து செல்லுகிறார். அப்பொழுது அந்த ஊருக்கு சென்றவுடன் அந்த இடையனின் மனைவி தனது கணவன் ஏன் இவ்வளவு நேரம் கழித்து வருகிறார் என அழுது புலம்புகிறார். அதைப்பார்த்த திருமூலர் தான் உனது கணவன் அல்ல என்றும் அவன் இறந்துவிட்டான் என்றும் நான் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் இறந்த உனது கணவனின் உடலுக்குள் புகுந்து வந்துள்ளேன். இந்த மாடுகளை விட்டு விட்டு செல்லலாம் என்று வந்தேன் என்கிறார். ஆனால் அந்த இடையனின் மனைவி அதை நம்ப முடியாமல் ஊர் மக்களிடம். முறையிடுகிறார் சித்திரும் ஊர் மக்களிடம் நடந்ததை கூறுகிறார்.  எனது  உடலை காட்டுகிறேன் என்று கூறுகிறார். அதன்படி அவர் தனது உடலை விட்டுச் சென்ற இடத்தை நோக்கி சென்று பார்க்கும் பொழுது திருமூலரின்  உடல் அங்கே இல்லாமல் மறைந்து போய்விடுகிறது. அதைப்பார்த்த திருமூலர் இறைவனை / சிவபெருமானை நோக்கி வழிபடுகிறார். சிவபெருமான் அவரது வேண்டுகோளை ஏற்று சித்தரே நீ இந்த உலக மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள், அறிவுறுத்த வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது அதை முடித்துவிட்டு வாரும். அதற்குப் பிறகு நீ என்னிடம் வந்து சேர்வாய் உன்னுடைய உண்மையான உடலுடன் என்று கூறிவிட்டு மறைந்து விடுகிறார். எனவே இடையன் உருவில் இருந்த சித்தர் பல ஆண்டுகள் அந்த இடத்திலேயே இருந்து தவம் புரிகிறார்.
கடவுள் வாழ்த்துக்குப் பிறகு தெய்வதூதர் திருமூலர் எழுதிய
முதல் நான்கு வரிப்பாடல் அதற்கான விளக்கம்
            திருமூலர் அருளிய தெய்வத்தமிழ் திருமந்திரம் 3000 பாடல்கள். 1 முதல் 112 வரை கடவுள் வாழ்த்து இந்த நான்கு வரி பாடல்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களுக்கெல்லாம் சித்தர்  அகத்தியருக்கு பிறகு தோன்றிய தெய்வ அருள் பெற்ற மூலர் எனப்படும் ஒரு சித்தர் சித்தர்சாமி என்று அழைக்கப்படும் ஒரு சித்தர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பாடலை எழுதியுள்ளார் என்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  தமிழ்  எழுத்துக்களும் எண்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனால் நாம் தெரிந்துகொள்வது உலகமொழிகளில் அனைத்து மொழிகளுக்கும்ம் தமிழ் அடிப்படை மொழியாக கொண்டும் தமிழ் எழுத்துக்களை அடிப்படையாக கொண்டும் எண்களையும் அடிப்படையாகக் கொண்டும் மற்ற இன மக்கள் பூமியில் உள்ள வேறு நாட்டு மக்கள் தங்களது ஒலிகளைக் கொண்டு உண்டான எழுத்துக்களை கண்டுபிடித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
            இது போல வேறு எந்த மொழியிலும் இலக்கியமும், சித்தர்ககளுடைய வழிகாட்டுதல் உபதேசம் போன்றவற்றைக் கூற வேறு மொழிகளில் சித்தர் / மனிதர்கள் வேறு எந்த நாட்டிலும் இந்த பூமியில் பிறந்து உள்ள எந்த ஜீவராசிகளிடத்திலும் மனிதர்கள் இடத்திலும் இல்லை.  அதனால் உலக மக்களுக்கு அடிப்படையாக வாழ்ந்த சித்தர்கள் என சொல்லப்படும் தெய்வம் என சொல்லப்படும் இறைவன் கடவுள் தெய்வம் என சொல்லப்படும் எல்லாம் ஒன்றே அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த பெயரை எப்படி நாம் வைத்துக் கொள்கிறோமோ அது மாதிரி ஆதிகாலத்தில் மனிதன் தங்களது சுயநலத்திற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதம் என்று சொல்லக்கூடிய ஒன்றையும் அதைப் பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு இன மக்களும் தங்களுக்கு தகுந்தார் போல பெயர்களை இட்டு வணங்கி வாழ்ந்தனர் என்பதற்கு இப்பொழுதுள்ள தற்போது வாழ்ந்து வரும் உலக மக்கள் தொகை உதாரணமாக உள்ளது எனத் தெரிய வருகிறது நன்றி
             திருமந்திரமே.  இந்த உலகத்தில் உள்ள அனைத்து சித்தர்களும் ஞானிகளும் அவரை குருவாக வணங்கி அவர் மூலம் உருவான அத்தனை மூலக் கருத்துக்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் இறைவனை எப்படி வழிபட வேண்டும் நோய் நொடிகளிலிருந்து எப்படி காப்பாற்றுவது ஞானம் எப்படி அடைவது  போன்ற முலக் கருத்துக்களை உலகிற்கு எடுத்துக் கூறுவதால் *மூலர் திருமூலர் என்ற பெயர் வந்தது. மந்திரம் திருமூலரின் திருமந்திரம்  முதல் பாடல் முதல் இரண்டு வார்த்தைகள் விளக்கம்.

“ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்

நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து

வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழ் உம்பர்ச்

சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே”

என்பது முதல் பாடலாகும்.
1.ஒன்றவன்தானே (இதற்கான விளக்கம்)
            இந்த உலகம் தோன்றியது முதல் ஒரே  ஒரு பிபஞ்சம் மட்டுமே உள்ளது. இதில்தான் சூரியன என்ற ஒரு பெரும் பெரிய தீப்பிழம்பு பிரபஞ்சத்தில் பல ஆயிரம் வருடங்கள் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து வெடித்து சிதறி பிரிந்து  பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்களும் நமது கண்களுக்கு தெரியக்கூடிய கோள்களும் அந்த தீப்பிழம்பிலிருந்து தான் உண்டானது. அந்த தீப்பிழம்பு தான் சூரியன். சூரிய பகவான் என்று சொல்லப்படும் இந்தக் கோள் மட்டுமே இந்த உலகத்தையும், உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளையும், கண்ணுக்குத் தெரிகின்ற தெரியாத எல்லா செடி கொடி மரம் மற்றும் அனைத்து உயிரினங்கள் என்று சொல்லப்படும் இந்தத் தாவரங்கள் கூட வாழ்வதற்கு தேவையான ஒன்று தேவை என்றால் இந்த சூரிய பகவான்தான். சூரியன் இல்லாவிட்டால் இந்த மண்ணுலகம் என்ற ஒன்று இல்லை என்பது உண்மையாகும். அதனால் ஒன்றவன் என்றால் சூரியன் ஆகத்தான் இருக்கவேண்டும். ஆதி பகவன் என்று அதனால் தான் திருவள்ளுவரும்  முதல் அதிகாரத்தில் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் என்று எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒன்றவன்தானே இவ்வுலகில் பிறந்த அனைத்து உயிரினங்களிலும் குடியிருப்பவன் ஈசன் ஒருவனே, ஒன்றவன்தானே நெற்றிக் கண்ணையுடைய அவன் இந்த உலகில் அவன் ஒருவனே. அதனால் ஒன்றவன்தானே.
ஞானத்தில் அறிவுக்கண் தொலைநோக்குப் பார்வையும் என அனைத்து உலகங்களின் தலைவன் ஒன்றவன்தானே ஈரேழுலோகம் என்று சொல்லக்கூடிய அனைத்து உலகங்களுக்கும் தலைவன் ஒருவனே. படைத்தவன் அவனே அதனால் அவன் ஒன்று  அவன் ஒருவனே. இந்தப் பிரபஞ்சத்தில் சூரியனும்  கோடான கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் அந்த நட்சத்திரங்களால் இந்தப் பிரபஞ்சத்திற்கு எந்தப் பயனும் இல்லை ஆனால் ஆதிபகவன் என்று சொல்லக்கூடிய சூரியன் இந்தப் பிரபஞ்சத்திற்கு அவன் ஒருவனே அவன் இன்றி இந்த உலகம் இல்லை ஒன்றவன்தானே.  
ஒன்றவன் என்றால் சீவன், உயிர், தன்மை கொண்டவன் என விளக்கினார் . மேலும் கிடைத்துள்ள சங்ககால இலக்கியங்களின் அடிப்படையில் முதன்முதலில் திருமூலர் மட்டுமே சிவன் என்ற ஒரு வார்த்தையை எழுதியுள்ளார்.  அதை அடிப்படையாகக் கொண்டுதான் பிற்காலத்தில் வந்த அனைத்து சித்தர்களும் அவரது சிஷ்யர்களும் சிவன் என்ற ஒரு வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனுடைய சக்தியை உணர்ந்து வழிபாடு செய்தார்கள். சிவனுக்கு மூன்று கண்கள் உள்ளது நெற்றிக்கண் என்ற ஒரு அமைப்பு கொண்ட தெய்வம் கடவுள் சிவபெருமானுக்கு மட்டுமே உண்டு.
ஞானத்தில் அறிவுக்கண் தொலைநோக்குப் பார்வையும் என அனைத்து உலகங்களின் தலைவன் ஒன்றவன்தானே ஈரேழு லோகம் என்று சொல்லக்கூடிய அனைத்து உலகங்களுக்கும் தலைவன் அவனே படைத்தவன் அவனே அதனால் அவன் ஒருவனே 
உதாரணமாக. 0 என்ற இந்த சுழிக்கு மதிப்பு இல்லை. ஆனால் அதற்கு முன் ஒன்று என்ற எண்ணை சேர்த்தால் அதற்கு மதிப்பு அப்போது கிடைக்கும் எண்10. அதாவது இறைவன் ஒருவனே அவனே எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் இருந்து நிறைந்து இயக்குபவன் அவனே ஆகும். அருளியுள்ளார் அதையே திருவள்ளுவர் ஒழுக்கத்தை ஒன்றாக வைத்தான்  அதை… உயிரினும் மேலாக வைத்தான்… 
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் 
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
2. இரண்டவன் இன்னருள் என்றால்
            அந்த ஈசன் எனப்படும் சிவபெருமான் தனக்குளமுழு சக்தியையும் அடக்கி வைத்துக் கொண்டுள்ளார். அதுதான் சக்தி எனப்படும் ஒரு தொலைநோக்கு அல்லது இந்த உலகை படைத்து காப்பதற்கும் அழிப்பதற்கும் ஒரு சக்தி தேவை என்பதால் தன்னையே அதாவது தனது உடலை இரண்டாக்கி சக்தியாக மாற்றி ஒரு பெண் உருவத்தை தனக்குள் உண்டாக்கி இரண்டாக உள்ளார் எனலாம்.  இந்த உலகத்தில் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு கண்ணுக்கு தெரிவது எத்தனையோ நட்சத்திரங்கள் என்று பல விஷயங்கள் இந்த பிரபஞ்சத்தில் தெரிந்தாலும், இரண்டாவதாக மனிதனின் கண்ணுக்கு தெரிவது சந்திரன் என்று சொல்லப்படும் ஒரு கிரகம் ஆகும். அந்த சந்திரன் மூலம் மனிதர்களின் மனநிலையையும், உடல் நிலையையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
            மேலும் இரவில்   அந்த சந்திரனுடைய ஒளி சூரியனிடமிருந்து வாங்கி பிரதிபலிப்பதால் அந்த இரவும் மனிதர்களுக்கு மிகவும் குளிர்ச்சியானதாகவும் இருப்பதற்கு காரணமாக அமைவது இந்த சந்திரன் எனப்படும் ஒரு கிரகம் ஆகும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள வேறு எந்த கோள்களும் எளிதாக மனிதர்களுடைய கண்ணுக்குத் தெரிவதில்லை.  (நட்சத்திரங்கள் புள்ளி புள்ளியாக தெரிந்தாலும் 27 நட்சத்திரங்கள் மட்டுமே மனிதர்கள் வாழ்க்கையில் தொடர்பு கொண்டுள்ளன.)
மனமும் ஆத்மாவும்
நம்முள் இருக்கும் இறைவனால் நாம் கண்காணிக்கப் படுகிறோம். இறைவனால் நாம் இயக்கப்படுகிறோம். ஆத்மா என்பது நம் உடலில் உயிராக உள்ளது. உடல் மேலும் உபயோகப்படுத்த முடியாது என்ற நிலைக்குத்  தள்ளப்படும்போது அதிலிருந்து உயிர் விலகி வேறு உடலை அடைகிறது. பிறப்பும் இறப்புமான இந்த 2 வாழ்க்கையைப் பற்றி – பிறப்பு, இறப்பிலிருந்து விடுபட வேண்டுமென்றால் இறைவனை சரணடைவது ஒன்றே வழி.  உயிரின் உறைவிடத்தையே ஆத்மா என்கிறோம். உயிர் செயலில் இல்லை என்றால் உயிர் பிரிந்து விட்டது அல்லது ஆத்மா பிரிந்து விட்டது என்று சொல்லுகிறோம்.
இரண்டானவன் என்ற வரிக்கு மற்றோர் விளக்கம்.
             உயிரும் மெய்யும் கலந்தால் தானே தமிழ் அதன் அடிப்படை என்ன தெரியுமா? சிவன் என்பது மெய். இதை உடல் எனக் கொள்ளலாம் உயிர் என்பது இந்த உடலை இயக்கும் உயிர் . உடலென்ற மெய் உயிரில்லாமல் இயங்குமா? எனவே தமிழுக்கும் உயிர் மெய் எழுத்துக்கள் அடிப்படை. ஆன்மா இயங்க வேண்டுமெனில் உயிரும் மெய்யும் அவசியமாகிறது. அது போல மெய் என்பது சிவன் அந்த மெய்யாகிய சிவன் இயங்க உயிராகிய சக்தி தேவை. உயிரில்லாத மெய் பயனற்றது. அது போலவே சக்தி இல்லாமல் சிவன் இயங்காது என்பதே அடிப்படை உண்மை.
            இந்த உலகம் இந்தப் பிரபஞ்சம் 2 அணுக்கள் சேர்ந்தால்தானே இந்த உலகம் இந்த பிரபஞ்சமே உள்ளது. அதுபோல ஆண்பெண் -இரண்டு பேர்களுடைய புணர்ச்சி ஒன்றுடன் ஒன்று கலப்பதால் தான் குழந்தை பிறப்பு. உதாரணமாக திருவள்ளுவர், குறள்.5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
2.இருவினையும் சேரா:- இருவினை என்றால் நல்வினையும்  தீவினையும் என்ற இரண்டு செயல்கள்  ஆகும். நல்லது நினைத்தால் நல்வினை அதாவது நல்ல செயல்களை அவனால் உலக மக்களுக்காக செய்து கொண்டே இருக்க முடியும். நல்ல செயல் என்றால் என்ன தூய சிந்தனையுடன் இருந்தால் தூய எண்ணங்கள் உண்டாகும் அதன்மூலம் தூய செயல்களை செய்ய முடியும். இது ஒருவனுடைய நேர்மறையான எண்ணங்கள் ஆகும். இதற்கு எதிர்மறையாக செய்யப்படும் செயல்கள் அனைத்தும் தீவினை ஆகும். எனவே இந்த இரு வினைகளையும் மனிதன் தீவிரமாக ஆய்ந்து அறிந்து தெளிந்து செயல்பட வேண்டும். வாழ்க்கையை இரண்டாக வகுத்தான். அகம், புறம் என கணவன் மனைவி வாழும் வாழ்க்கை அகத்தையும் புறத்தையும் சார்ந்துள்ளது. (திருவள்ளுவருடைய குருவும் திருமூலரே ஆவார் அதனால் தனது குறளிலும் இருவினை பற்றி எழுதியுள்ளார் எனலாம்)
மேலும் மூன்று என்ற எண்ணை, ஒரு குறியீட்டை பற்றி  சிந்தித்து பார்த்தால்  மூன்று காலங்களையும் நினைத்து இந்த மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. நிகழ்காலம்,கடந்த காலம், எதிர்காலம். இந்த மூன்றும் தான் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து வகையான உயிரினங்களும்  அடிப்படையாகக் கொண்டுதான் இருக்கிறது.
மூன்று என்பதற்கு காத்தல்  அழித்தல் படைத்தல் போன்ற மூன்று தொழிலையும் அல்லது செயல்களையும் சிவபெருமான் தன்னிடம் வைத்துக் கொண்டதால் மூன்றினுள் என்று எடுத்துக் கொள்ளலாம். இறைவனுடைய அருளைப்பெற வேண்டும். ஒன்றுக்கொன்று அந்த மூன்றாவது ஆக்கல் அழித்தல் காத்தல் இந்த மூன்றையும் தனக்குள் எடுத்துக் கொண்டு தேவைப்படும் பொழுது உருவாக்கி, வேண்டாத பொழுது அழிக்கிறான்.  அதனால் ஆக்கல் அழித்தல் காத்தல் என்ற மூன்று செயல்களுக்கும் நின்றனன். இதை அடிப்படையாகக் கொண்டுதான் உலகத்தை உலகத்தில் உள்ள உயிர்களை இயக்குகிறார். அதனால் மூன்று நின்றனன். மூன்று என்பதன் விளக்கத்தில்,
தோஷங்கள் மூன்று –  வாதம், பித்தம் சிலேத்துமம். மூன்றாகி நின்றனன் இந்த மூன்றும்தான் உலகத்தில் வாழ்கின்ற அனைத்து வகையான உயிரினங்களுக்கும்  அடிப்படையாக உள்ளது . இந்த உலகம் இயங்குகிறது.
மண்டலங்கள் 3 அக்கினி மண்டலம் ஆதித்த (சூரிய) மண்டலம், சந்திர மண்டலம்
குணங்கள் மூன்று சாத்துவிகம், இராசதம், தாமதம் .
மலங்கள் 3 ,ஆணவம் , கன்மம், மாயை  இதை ஒழிக்க அருள் புரிவாயாக.
மூன்றினுள் என்பதற்கு மூன்று வேல் திரிசூலம் போன்ற ஒரு அமைப்பை கொண்டது.  மனிதன் தனது மூன்று விரலால் தான் நெற்றியில் திருநீறு பூசுவதன் மூலம் இந்த உடம்பும் ஒருநாள் சாம்பலாகும் என்ற தத்துவத்தை உணர்ந்து உலகில் வாழ வேண்டும்.
நான்குணர்ந்தனன் என்றால் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பூமியை சார்ந்து வாழும் மக்கள் 4 பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் எனலாம். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நான்காக பிரித்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான்கு உணர்ந்ததன் என்கிறார்களாம்
4 திசைகள் நான்கு பாகமாககும் எனவே  நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டிருக்குமாறு மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக நான்முகன் என்ற ஒரு கடவுளை படைக்கிறார்.
திசையைக் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எனவும். காற்றையும் நான்காக  பிரித்தார்.
தென்றல்,,வாடை , கோடை , கொண்டல் என்பதாகும்.
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல்.
மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை .
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.
ஐந்து என்பதற்கு ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து செயல்களையும் என்பதற்கு எடுத்துக் கொள்ளலாம். 
ஐந்து வேள்விகள்:
1)கடவுள் வேள்வி, 2) பிரமவேள்வி, 3) பூதவேள்வி, 4)மானிடவேள்வி, 5)தென்புலத்தார்வேள்வி
ஆன்மீக ஒழுக்கத்தின் பொருட்டு ஒருவர் செய்யவேண்டிய ஐந்து யாகங்கள்: 1)கருமயாகம், 2)தவயாகம்,  3) செபயாகம்,  4) தியானயாகம், 5)ஞானயாகம்.
5 என்பதில் 
பூதங்கள் ஐந்து நீர், நிலம், நெருப்பு, காற்று,   ஆகாயம்.
பொறி 5 மெய்,வாய் கண், மூக்கு, செவி
ஐந்து.தொழில்கள்
5 தேவதானம், விசர்க்கம், ஆனந்தம், பயம். கோசம்.  அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம்.
சயம் 5 அமரசயம்,,.பக்குவாசயம் மலசயம், சிலசமயம் சுக்கிலசயம்.
புலன்கள் 5. சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்.
காமேந்திரியம் 5.வாக்கு,பாதம், பாணி ,பாயுறு ,உத்தமம்.
அவத்தை 5. சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், அதிதுரியும் இவையும் அடங்கும்.
ஐந்து எழுத்து மந்திரத்திலுள்ள ரகசிய என்னவென்று திருமூலர் அருளியுள்ள
சி வா ய ந ம 
சி என்றால் சிவன் என்றால் உயிர் அம்மா சக்தி என்றால் உயிர் சிவாய சிவனும் சக்தியும் ஒன்றே.
நிலத்தை ஐந்தாக பிரித்தான்… 
குறிஞ்சி  (மலைப்பகுதி) 
முல்லை   ( வனப்பகுதி) 
நெய்தல்  ( கடல் பகுதி) 
மருதம் ( நீர் மற்றும் நிலம்) 
பாலை  ( வறண்ட பகுதி)
ஆறு என்பதற்கு விளக்கம்
மனித உடலில் ஆறு சக்கரங்கள் உள்ளன.
1. மூலாதாரம்  2.அடிவயிற்றுக்கு கீழ் 3.தொப்புள்  4.தொண்டை குழி 5.நெற்றி 
6.உச்சந்தலை.
மனிதனுக்கு உள்ள  ஆறறிவைக் கொடுத்தான்.
1. கற்பூர புத்தி
2. கரி புத்தி
3. காரிய புத்தி
4. வாழைமட்டை புத்தி
5. சமயோஜித புத்தி
6. பகுத்தறிவு
இவைதான் மனிதனுக்கு வகைப்படுத்தப்பட்டுள்ள ஆறறிவு .
பருவ காலங்கள் ஆறு கோடை காலம், குளிர்காலம், முன்பணிக்காலம், பின் பணி காலம், இலையுதிர் காலம்,
மழைகாலம்.
மேலும் சுவையை ஆறாக பிரித்தான்… இனிப்பு,கசப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு  என அறுசுவையாகும்.
இசையை ஏழாகக் கொடுத்தான்… 
ச ரி க ம ப த நி
இசையை ஏழாக கொடுத்தார்.  நாட்களையும் ஏழாக பிரித்தார். 
ஏழு என்பதற்கு உலகங்கள் ஏழு.
நாட்கள் 7 திருக்குறளில் வெண்பா ஏழு
இந்த உலகத்தை ஏழு கண்டங்களாக பிரித்து உள்ளார்கள்.
எட்டு என்பதற்கு மனித உடன் தான் உடம்பு என்று கணக்குட்டுள்ளார். மேலும் 1.காமம் 2.குரோதம் 3.பற்று 4.சுவை 5.உணர்வு 6.ஒளி 7.ஒலி 8.கேட்டல் ஆன்மாவுடன் இந்த எட்டும் இருக்கும் ஐந்து மெய் உறுப்புகள் உணரக்கூடிய விஷயங்களும் அத்துடன் ஆணவம் புத்தி மனம் ஆகிய மூன்றும் சேர்ந்து எட்டாகும்.. ஒரு சில சித்தர்கள் செய்யக்கூடிய அஷ்டாங்க யோகம் என்னும் பயிற்சி மூலம் உடலை 8 பாகங்களாக பிரித்து விடுவார்கள்.
திசைகளை எட்டாகப் பிரித்தார்….
கிழக்கு,மேற்குவடக்கு, தெற்கு,வட கிழக்கு, வட மேற்கு,தென் கிழக்கு,தென் மேற்கு,
என முதல் பாடலில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள முக்கியத்துவத்தையும் சிறப்பையும் திருமூலர் உணர்த்துகிறார் என நினைக்கத் தோன்றுகிறது.
இப்பாடல் வரிகளின் ஆய்வு உரையாசிரியர்
குறளமுதம்
எம்எஸ்கே மனோகரன், கோவை.
 

பிரியமான கூறல்|கவிதை|க.கலைவாணன்

பிரியமான கூறல்

பிரியமான கூறல்

ஏனோ! ஏனோ!

என்னை நீ சுற்றி வர..

யாரோ! வீனோ!

உன்னை ஏளனமாய் நினைத்திட….

 

மெய்க்காதல் உன்னில்

தீயாக எரிந்திட…

உன் இதயம் கதறும் ஓசை

சுடும் சுவாச காற்றில் கசிந்திட…

 

அஞ்சலாக நீ கொடுத்த முத்தம்..

 உன் முகவரியை

என் இதயத்தில் சேர்த்தது !

என் இரத்தம்…

 

பெண்ணே…

உன் கண்களைக்  காண்கையில் !!

ஏக்கங்கள்

ஏழு இலட்சம்…

கசிந்திட கண்ணீரோ 

ஏது மிச்சம்….

 

பெண்ணே…

கேட்காமல் கேட்கிறாய் நீ!!

காதலால் என்னை

கட்டி அணைப்பாயாடா என்று!!

ஊடலால் எனது

உள்ளம் குளிர்ப்பாயடா என்று. !!

 

பெண்ணே,

வென்று விட்டாய் நீ..

உன் விழியால்

கொன்று விட்டாயடி 

பிரியமானவளே….!

ஆசிரியர்

கவிஞர் க.கலைவாணன்

ஓசூர் – 635 109

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை | இளங்கவி ச. வாசுதேவன்

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை

கலைஞர் நூற்றாண்டுக் கவிதை

(விருத்தப்பா – எண்சீர் விருத்தம்)

 
காலத்தால் வற்றாத கடலின் நீரே
கற்பனைகள் ஊறிவரும் கவிதை நீரே
ஞாலத்தில் புகழ்படைத்த தலைவர் தன்னுள்
நற்றமிழில் தென்றலென பேசும் அண்ணல்
காலமெனும் சக்கரத்தில் ஏறி நின்று
கனிவுடனே உலாசெல்லும் இனிய நெஞ்சன்
கோலமுடன் உரைவீச்சு நடத்தும் அன்பன்
திருக்குவளை மண்ணீன்ற தமிழர் நண்பன்!

 

காலையில் உதிக்கின்ற கருத்துப் பூத்தீ!
கரும்பினிலே இனிக்கின்ற சாரும் ஆனான்
சோலையில் விளையாடும் சிவந்த வேங்கை
சுந்தரனாய் அரசியலைக் காத்த வேந்தன்
மாலையில் வெளியாகும் வீண்மீன் தோழன்
மகிழ்வினையே தொண்டர்க்கு வழங்கும் ஆசான்
சாலையில் நடந்துவரும் தங்கத் தேரு
சரித்திரத்தில் யாருமில்லை என்றே கூறு!

 

வள்ளுவருக்குக் கோட்டத்தை அமைத்துத் தந்தார்
வானளவு வள்ளுவனார் சிலையை வைத்தார்
உள்ளுவதை உயர்வாக எண்ணும் வேங்கை
உள்ளத்தில் தமிழ்கொண்டு அருளும் செங்கை
கொள்கையிலே பெரியாரை இணைப்பார்; அந்த
பெரியாரின் கோட்பாட்டைப் பிடிப்பார் நன்றாய்
கள்ளமிலா மானிடருள் இவரும் ஒருவர்
கலைஞரெனும் பெயர்கொண்ட இன்பத் தமிழர்!

 

வற்றாத பாக்களுக்கும் உரைக ளுக்கும்
வழித்தோன்றல் இவர்தானே தமிழர் நெஞ்சில்
கற்றழியாய் குடி கொண்ட கழகத் தலைவர்
கன்னித்தமிழ் திருவாரூர் பிறந்த இளைஞர்
கொற்றவனாய் சிலகாலம் நாடு காத்த
கோடியான தலைவரிலே இவர்பே ருண்டு
நற்றமிழாள் ஈன்றெடுத்த அழகுச் செண்டு!

 

பேரறிஞர் அண்ணாவின் அன்புத் தம்பி
பேச்சினிலே இடி முரசை அறையும் நம்பி
ஊரறிஞர் அன்பழகன் போற்றும் தோழன்
உத்தமராய் தமிழ்நாடு ஆண்ட தீரன்
பாரறிஞர் பல்லோரும் ஏத்தி ஏத்தி
பாவலர்கள் பாமாலை சாற்றிப் போற்றும்
வீரறிஞர் இளநகையே முகமாய் நிற்கும்
முத்தமிழின் காவலரே வாழ்க! வாழ்க!!

 

திருக்குவளை மாகடலில் விளைந்த முத்து
திருக்குறளும் காப்பியமும் இவரின் சொத்து
கருத்துக்கள் கூறுகின்ற கேணி தானே
கற்பனைகள் பிறப்பெடுக்கும் வாணி தானே
விறுப்புடனே கவியரங்கம் பலவாய்க் கண்டார்
வெற்றிகளை மாலையாய் ஏற்றுக் கொண்டார்
மறுப்பொன்றும் பேசாத மனித மாண்பு
மகத்துவமே இவர்வடிவாய் விளங்கும் பண்பு!

 

அவ்வையெனும் தமிழ்க்கிழத்திச் சொல்லி வைத்த
அறக்கருத்து மிக்கதமி ழில்லை என்று
அவ்வையோடு வள்ளுவனார் கம்பன் தன்னை
வாஞ்சையுடன் இளங்கோவின் சிலம்பு கொண்டு
இவ்வூரைத் தமிழுக்கு கொடுத்த எங்கள்
கலைஞர்பு ழெந்நாளும் அழியாது என்று
கொவ்வைத்த மிழ்கூறும் புலவர் நெஞ்சில்
புகுந்திட்ட தமிழ்க்கோவே வாழி வாழி!

 

குமரியிலே குறள் தந்த வள்ளுவர்க்கு
குரல் போலே சிலை வைத்தீர் எவரும் காணார்
அமரர்போல் அரசாலும் வானூர் எல்லாம்
அன்பான மலர்கொண்டு போற்று வாராம்
சமரென்னும் அரசியலில் களமும் கண்ட
சமரசனே சக்தியனே சான்றோர் நெஞ்சில்
இமயம்போல் உயர்ந்திட்ட உந்தன் அன்பு
இனித்திடுமே எந்நாளும் அதுவே தெம்பு!

 

கலையோடும் இலையோடும் புகுந்து சென்று
கதைவசனம் பலவோடும் பொழுதும் வாழ்ந்து
மலையான தமிழ்க்கவிதை மரபைக் கொண்டு
மானமுள்ள தமிழுக்குச் செய்தாய் தொண்டு
வலைவீசி பிடித்துவிட்டாய் சொல்மீன் தன்னை
வலைத்திட்டாய் அனைவரையும் கருத்தால் பேச்சால்
உலைவிளையும் நெற்கதிரும் நீரும் நீதான்
உலகாள உதித்திட்ட சூரியன் நீதான்!

 

சங்கப்பா மிளிருகின்ற சபைகள் தோறும்
சரித்திரத்தின் நாயகனே உந்தன் தேரும்
எங்களது வீதிகளில் ஓடும் நாளும்
எழிலான தேமாங்காய் புளிமா தேடும்
மங்காத புகழ்படைத்தப் பரிதி உன்னை
மகிழ்ச்சியுடன் புகழ்ந்தேத்தும் சிறுவன் என்னை
மங்காத சூரியனாய் ஒலி கொடுத்து
நூற்றாண்டு கண்டவரே காப்பீர் நன்றாய்!

 

இளங்கவி ச வாசுதேவன் (நடுநாட்டுத்தமிழன்)
முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி,
தமிழ்ப்பற்றாளன்,
குடியநல்லூர் கிராமம்,
வேங்கைவாடி அஞ்சல்,
கள்ளக்குறிச்சி வட்டம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் – 606 206
மின்னஞ்சல் : shankarvasu98@gmail.com

Sorry|சிறுகதை|பிரபுவ

Sorry சிறுகதை
‘சும்மா இருங்க. உங்களுக்குப் புரியாது’. நான் ஒரு இடத்தில் வேலை பார்க்கிறேன். அங்கே என்ன நடக்குதுன்னு உங்களுக்கு தெரியுமா? ஒரு சாரி கேட்டு மெசேஜ் அனுப்புறது ஒண்ணும் பெரிய தப்பில்லை. வேலை பார்க்கும் இடத்தில் இதையெல்லாம் ‘அட்ஜெஸ்ட் பண்ணிக் கொண்டுதான் வேலை பார்க்கணும்’. இவ்வாறு நீது தன் கணவன் வேதாவிடம் கூறினாள்.
நீது ஒரு தனியார் பள்ளியில் கடந்த சில வருடங்களாக படித்த படிப்பிற்கிணங்க, மாத ஊதியத்திற்கு வேலை பார்த்து வந்தாள். அன்று பள்ளி விடுமுறை தினம். அதாவது பள்ளி விடுமுறை தினத்தில் விடுப்பு அளித்து இருந்தது. பொதுவாக பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து விட்டு ஆசிரியர்களுக்கு ஏதாவது அலுவலக பணி செய்யும் விதமாக வரச்சொல்லி விடுவார்கள்.
அன்று விடுமுறையை முன்னிட்டு உறவினர்கள் சிலர் நீதுவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அதனால் எப்போதும் போல் இல்லாமல் அன்று நாள் முழுவதும் கொஞ்சம் பிஸியாக தான் இருந்தாள். அதிலும் குறிப்பாக மாலை நேரம் வந்தவுடன் சொல்லவே தேவையில்லை. பிஸியோ பிஸி.
வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு உபசரனை செய்யும் பொருட்டும், சிறுபிள்ளைகளுக்கு இரவு உணவு தயார் செய்து கொண்டு இருந்ததன் பொருட்டும் கடந்த சில மணி நேரங்களாக நீது கைபேசியை சற்றும் கவனிக்கவில்லை.
இரவு சுமார் 9.30 மணி இருக்கும். ஒரு புறம் பிள்ளைகள் உணவு உண்ட மயக்கத்தில் தூங்க ஆரம்பித்தனர். அதே சமயம் வீட்டிற்கு வந்த விருந்தினர்களையும் உபசரித்து வழியனுப்பியும் முடிந்தது. இப்போதுதான் நீது தன் கைபேசியை எடுத்துப் பார்த்தார்.
பள்ளியில் அவர்களுக்கு என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்று உள்ளது. அது பள்ளியின் ஏதேனும் அலுவல் சம்பந்தமான தகவல்களை பதிவிடப்படும் பொருட்டு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் உயர்திரு அட்மின் அவர்கள் அனுப்பிய செய்தி பின்வருமாறு.
“ஆசிரியர்கள் கவனத்திற்கு, கோடை விடுமுறை தினங்களில் ஓரிரு நாட்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டி இருக்கும்”. ‘Please acknowledge and confirm by phone or message me’ என்று மாலை 6.30 மணியளவில் வாட்ஸ் அப் குழுவில் ஒரு மெசேஜ் வந்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்தக் குழுவில் இருந்த பலரும் ‘ok’, ‘yes mam’… என்று தங்கள் வெறுப்பை மறைத்து விருப்பத்தைத் தெரிவித்து இருந்தனர்.
நீது வீட்டின் அலுவலில் முழுவதும் மூழ்கியிருந்தபடியால் இது ஏதும் தெரியாமல் இருந்தாள். அவள் மட்டும் அதில் பதில் அளிக்காது இருந்திருந்தாள். அதனால் அட்மின் அவர்கள் ‘Neethu, what about you?’ என்று வினா கேட்கப்பட்டு அப்போது இரண்டு மணி நேரம் முடிந்தே போயிருந்தது.
இதை பார்த்தவுடன் நீதுவுக்கு, அவள் யாரும் செய்திடாத பெரிய தவறை இழைத்து விட்டதாக எண்ணி வருந்தினாள். ஒரு வேளை அடிமைகளில் சிறந்த அடிமையாக இருக்க தவறிவிட்டோமோ என்று கருதி துவண்டு போனாள்.
உடனே அவளுடைய பதிலை, ‘ok mam’ என்று எழுதினாள். அதே சமயம் அருகில் இருந்த கணவனிடம், ஏங்க வேதா, ‘sorry for the delay response’ அல்லது ‘sorry for the delay’ இவற்றில் ‘எது சரியாக இருக்கும்’ என்று கேட்டாள். திரு வேதா அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவரது புராணத்தை பேச ஆரம்பித்தார்.
போனை கையில் வாங்கி மேலும் கீழுமாக இழுத்துப் பார்த்து படித்துவிட்டு வேதா, இந்த இடத்தில் ‘sorry’ ஒன்றும் கேட்க தேவையில்லை. ஆறு நாட்களுக்குப் பிறகு நடக்கப் போகும் ஒரு செயலுக்கு விருப்பு அளிக்கும் படியாகதானே இருக்கிறது. எப்படியும் ஒருவரும் மறுத்து பதில் சொல்லப்போவது இல்லையல்லவா?
அதனால் சொல்றத கேளு, ‘ok mam, Noted’. அல்லது ‘Sure. Will do’ என்று மட்டும் அனுப்பு போதும்; ‘sorry’ கேட்கக்கூடிய அளவுக்கு ‘இது அவ்வளவு முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை’ என்றான் வேதா.
உங்களிடம் ‘sorry’ கேட்கலாமா? வேண்டாமா? என்று நான் கேட்கவே இல்லையே. அந்த வாக்கியத்தில் எது சரி? எது தவறு? என்று மட்டும் தானே கேட்டேன் என்று சற்று கோபத்துடன் நீது சொன்னாள்.
இந்த நேரத்தில்தான் நீது தன் கணவனிடம், ‘உங்களுக்கு அங்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா? ஒரு இடத்துல வேலை பார்க்குறதுன்னா சும்மாயில்லை…’என்று கடுகடுத்த குரலில் ஆரம்பத்தில் மேலே சொல்லியது போல கூறினாள்.
இதைக் கேட்ட வேதாவின் கோபம் தலைக்கு ஏறியது. கண்கள் சிவந்தது; துக்கம் மார்பை அடைத்தது. எதற்கும் அஞ்சாத கலங்காத ஆண்மகன், ஏதோ பொறி தட்டியது போல் அப்படியே திகைத்து நின்றான். மறுவார்த்தை ஒன்றும் மறுத்து சொல்லாமல், அவ்விடம் விட்டு நகர்ந்தான். அன்று இரவு உணவு உண்ணாமல் நோன்போடு படுக்கை அறைக்குச் சென்று படுத்தான். அந்த வார்த்தைகள் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. படுத்துக் கொண்டு தான் இருந்தான்; ஆனால் அவனுடைய பக்கத்தில் கூட தூக்கம் வந்து படுக்கவில்லை.
பலபல சிந்தனைகள் தோன்றி மறைந்து கொண்டே இருந்தது. அப்போது அவனுடைய வாழ்க்கையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துப் பதினான்கு வருடங்கள் முடிந்து விட்டது என்பதை நினைவுகூர்ந்தான்.
வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை இல்லாமல் இருக்கின்ற வேதாவுக்கு இது போன்று ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டு போக தெரியவில்லையோ’. ஒருவேளை இப்படி செய்து இருந்தால் செய்த வேலையை எல்லாம் விட்டுவிட்டு இப்படி வீட்டில் வேலை இல்லாமல் இருந்திருக்க மாட்டேனோ? என்று நினைத்து வருந்தினான்.
“இறுதியாக வேலை செய்த பெரிய நிறுவனத்தில் ஒட்டுமொத்த வேலையையும் இழுத்துப் போட்டு ஓடி ஓடி செய்தோமே! எனக்கு தகுந்த மரியாதையும் சன்மானமும் கொஞ்சம்கூட கிடைக்கவில்லையே! ‘பொறுத்து இருங்கள்’ என்று நிர்வாகம் கூறியதற்கு எதிர்த்துக் கேள்விக் கேட்டதற்கு தண்டனையாக மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்;  ‘இல்லையேல் வேலையில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்து விடுவோம்’ என்று மிரட்டினார்கள். நீங்கள் வேலையில் இருந்து நீக்கியதாக இருக்கக் கூடாது, மாறாக நான் வேலையை விட்டு போனதாக இருக்க வேண்டும்.” என்று வேலையை விட்டு வந்த காரணத்தையும் சற்றுத் தியானித்துப் பார்த்தான். 
ஒரு வேளை ஏதாவது பணியில் இருந்து சொல்லி இருந்தால், சொல்லியதை உதாசினப்படுத்தாமல் கண்டிப்பாக நீது கேட்டு இருப்பாளோ என்னவோ? என்று நினைத்து வருந்தினான்.
வேலை ஒன்றுக்கும் போகாமல் வீட்டில் இருக்கும் கணவனை ‘*த்துடைத்தக் கல்லாகக் கருதி விட்டாளோ’ என்று நினைத்து வருந்தினான். அப்படி அவன் நினைத்து வருந்துவது சரியா? தவறா? என்று தெரியாமல் வேதனையில் மூழ்கினான். இது உள்ளூர உண்மையில்லை என்று தேற்றினாலும் வருந்தவே செய்தான். வேதாவின் ‘உயிர் உடலை வெறுத்து ஒதுக்கி சென்றது’ போல் வெறுக்க ஆரம்பித்தான். அப்போது படுக்கை அறையின் கதவை திறந்து மெல்ல நளினமாக உள்ளே வந்தாள் நீது. 
’ஏங்க, சாப்பிடாம உங்களுக்கு தூக்கம் வராது! ஒழுங்கா எழுந்து வாங்க! சேர்ந்து சாப்பிடலாம்’, என்று நீது கொஞ்சும் கிளியின் குரலில் கெஞ்சினாள்.
‘Sorry’ங்க, sorry, sorry என்று சொல்லி வீண் வீம்பு பிடித்த வேதாவின் கையை இறுகப்பிடித்துச் சாப்பிட வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்றாள். ‘உயிர் உடலை வெறுக்க நினைத்தாலும், உடல் உயிரை ஒருபோதும் வெறுத்து ஒதுக்காது’ என்பதை மெய்யாக்கிடுவது போல.

சிறுகதையின் ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712.

karpraba@gmail.com

எழுத்தாளர் பிரபுவ – வின் படைப்புகளைப் படிக்க…

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

6.கிருகபதி – கிருகிணி (கவிதை)

7.அம்மாயும் சிறு குழந்தைதான்

திருஞானசம்பந்தர் பக்தி நெறி |ஆய்வுக்கட்டுரை|ர.அரவிந்த்

திருஞானசம்பந்தர் பக்தி நெறி
முன்னுரை
                சைவம் என்பது சிவம் என்னும் செந்தமிழ்ச் சொல்லின் அடியாகப் பிறந்தது. சிவனோடு தொடர்புடையது சைவமாகும். இச்சொல்லானது செம்மை என்னும் அடிச்சொல்லில் இருந்து தோன்றியதாகும். மேலும் சிவப்பு, நன்மை, மங்கலம் என்னும் பொருள்களையும் குறிந்துவருகிறது.  ‘சமையம்;’ என்ற சொல் காலப்போக்கில் ‘சமயம்’ என்று மருவியதுமன்றி சமயம் என்னும் சொல் நெறி என்னும் பொருண்மையிலும் வழங்கிவருதல் வழக்கு. எனவே, ‘சைவ சமயம்’ என்பது செம்மை +  நெறி ஸ்ரீ செந்நெறி  என்ற பொருளைத்தருகிறது. இச்சமயமே காலத்தாலும் முற்பட்டதாக இன்றளவிலும் வழக்கத்தில் காணப்படு; சமயமாகவும் காணப்படுகின்றது. கால வளர்ச்சியின் காரணத்தினாலும், பிறச் சமயத்தின் தோற்றத்தினாலும் சைவ சமயத்தில் பின்னடைவு ஏற்பட்டது மக்களின் வாழ்க்கையில் பக்தி, முக்தியும் இன்றி சைவ சமயம் பெருமளவில் குறைந்து காணப்பட்டது. சைவம் மீண்டும் மறுமலர்ச்சி அடையவும், உயிர்கள் சிவானந்தத்தை பெற்றவும் இறைவனால் அருளப் பெற்றவர்களே நாயன்மார்கள் ஆவார்கள்.
                திருநாவுக்கரசர் சரியை நெறியிலும், திருஞானசம்பந்தர் கிரியை நெறியிலும், சுந்தரர் யோக நெறியிலும், மாணிக்கவாசகர் குருவின் அருள் பெற்று ஞான மார்க்கத்திலும் நின்று இறைவனை சென்று அடையும் வழியாகிய நான்கு மார்க்கத்தினை பின்பற்றி இறைத்தன்மையினை இவ்வுலகத்திற்கு எடுத்துக்காட்டவே நால்வர் பெருமக்களின் திருஅவதாரம் இறைவனால் செய்தருளப்பட்டது. திருஞானசம்பந்தர் கிரியையாகிய பக்தி நெறியில் நின்று எவ்வாறு திருவடிப்பேற்றினை அடைந்த விதத்தையும், மேலும் உலக மக்களை நல்வழி படுத்தினார் என்பதையும்,  அவர் அருளிச்செய்த தேவார பதிகங்கள் வழி எடுத்துரைப்பதே இவ்வாய்குக் கட்டுரையின் நோக்கமாகும் அமைகின்றது.
இறை மார்க்கம்
                சைவ சமயம் இறைவனுடைய திருவடிப்பேற்றினை அடைவதற்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்கங்கள் (வழி) வகுக்கப்பட்டுள்ளது. அந்நான்கு வழியில் நின்று சிவப்பேற்றினை அடைந்தவர்களே நால்வர் பெருமக்களாவார்கள். இவ்வவதாரத்தின் பெருமையினை பிற்காலத்து மக்கள் அறிந்து பயன் பெரும்  பொருட்டே பெரிய புராணம் இறைவனின் அருளால் சேக்கிழார் வழி செய்தருளப்பட்டது.  உலக மக்கள் அனைவரும்; எல்லா நிலையில் இருந்தும் இறைநிலையினை  அடைவதார்கான வழியே சைவ நன்நெறிகளாகும். பிற எந்த சமயத்திலும் காணப்படாத தத்துவங்களை தன்னகத்தே கொண்டதாக  சைவ சமயம் விளங்குகின்றது.
திருஞானசம்பந்தர்
                திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சீர்காழிப் பதியில், அந்தணர் மரபில், கவுணியர் குலத்தில் பிறந்தார். இவர் தந்தை சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையாரின்; விண்ணப்பத்தின்படி சமணம், பௌத்தம் வீழ்ச்சிப்பெற்று சைவம் மீண்டும் இப்பூவுலகில் மேலோங்கும் பொருட்டு திருத்தோணிப்புரத்து இறைவனால் அருளப் பெற்றவரே திருஞானசம்பந்தராவார். இவர் அன்னை உமாதேவியின் திருமுலைப்பாலாகிய ஞானாமிர்தத்தை உண்டவர். ஆதலால் பெரியோர்கள் ஞானக்குழந்தையாரை முருகனின் திரு அவதாரமாகவே காண்கின்றார்கள். இப்பூவுலகில் திருஞானசம்பந்தர்  அவதாரமானது,
“வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சிதவன வயற்புகலித் திருஞானசம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்”
               (பெரிய புராணம், பாடல்.1256)
“தொண்டர் மனம் களிசிறப்பத் தூய
மாதவத்தோர் செயல் வாய்ப்ப”
                                                               (பெரிய புராணம், பாடல்.1921)
“திசை அனைத்தின் பெரும எலாம்…
இசை முழுதும்  மெய் அறிவும் இடம் கொள்ளும் நலை பெறுக”
(பெரிய புராணம்.பா.1922)
“தாளுடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற…..
ஆளுடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருக”
(பெரிய புராணம்,பா.1923)
“அவம் பெருகும் புல அறிவின் அமண் முதலாம் பரசமயம்….
சிவம் பெருக்கும் பிள்ளையார் திருஅவதாரம் செய்தார்”
(பெரிய புராணம். பாடல்.1924)
                என்னும் பாடல்களின் வழி, புறச்சமயங்களாகிய சமணம், பௌத்தம் செல்வாக்கு ஒழிந்து சைவம் தலைத்தோங்கவும், சிவனடியார்கள் உள்ளம் களிப்படையவும், திருநீற்றின் புகழ் எட்டுத்திக்கும் பரவுதல் பொருட்டும், ஏழுலகத்தவரும் களிப்படையவும், தமிழ் செய்த தவம் நிலைபெறவும்,  இசைத்தமிழ் நிலைபெறவும், தென்திசை பெருமை பெறவும், சராசரி உயிர்கள் எல்லாம் சிவமாம் தன்மைப் பெறவும், மேலும் மக்களின் நல்லொழுக்கம் நிலைபெறவும், சீர்காழிப் பதி வாழவும், நிகழ் காலத்தும், எதிர்வரும் காலத்தும் வரும் குற்றங்கள் நீங்கவும், திருத்தோணியப்பர் அருள் உலகம் முழுவதும் பரவவும் அவதாரம் செய்தவர் திருஞானசம்சந்தர் என்று சேக்கிழார் பெரியபுராணத்தின் மூலம் அறியலாம்.
                பன்னிருதிருமுறையில் திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளை அருளியுள்ளார் அவை மொத்தம் 16,000 பதிகங்களாகும். ஒவ்வொரு பதிகத்திற்கும் 11 பாடல் வீதம் மொத்தம் 1,76,000 பாடல்களை எழுதியுள்ளதாக தகவல்கள் இருந்தாலும் நமக்கு கிடைக்கப்பெற்ற பாடல்கள் எண்ணிக்கை 4158 பாடல்கள் மட்டுமேயாகும். இப்பதிகங்கள் ஞானத்தன்மையில் இருந்து பாடப்பெற்றதால் இயல்பாகவே இப்பாடல்களுக்கு மந்திர ஆற்றல் கொண்டதாக  அமைகின்றன. ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் பதிகத்திற்கான பயனை எடுத்துரைக்கின்றார். இப்பதிகங்களை இன்றனவும் பண்ணொடு பாடினால் அப்பதிகத்தின் பயனை இன்றும் பெறலாம்.
                திருஞானசம்பந்தர் கிரியையாகிய பக்தி நெறியினை பின்பற்றி இறைநிலையினை அடையும் வழியினை வகுத்து, அவற்றுக்கான ஆற்றலையும், அவர்தம் பண்முறையில்  அமைந்த பதிகத்தின் வழி உலகத்தவருக்கும் சென்று சேறும் வண்ணம் அருளியுள்ளார். இறைவனை அடையும்  பெரு விருப்பத்துடன் அன்பு கொண்டு ஓதுவார்க்கு திருவடிப்பேறு நிச்சயம் கிட்டும் என்பது பதிகத்தின் உயர்ந்த பயனாகும்.
                கிரியை என்பது மந்திர தந்திரங்களை குருவின் மூலமாக அறிந்து சமய, விஷேட, நீர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் இறைவழிபாட்டு முறை கிரியையாகும். தம்பொருட்டு இறைவனிடத்து செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யும் பாராத்த பூசையும் இந்நெறியில் அடங்கும்.
                கிரியை மார்கத்துடன் ஒவ்வொரு மார்க்கமும் பக்தனின் பக்குவத்திற்கு ஏற்றாறர் போல,
கிரியையில் சரியை – பூசைப் பொருட்களை   சேகரித்தல்
கிரியையில் கிரியை – இறைவனை புறத்தில்  பூசித்தல்
கிரியையில் யோகம் – இறைவனை அகத்தில்  வைத்து  பூசித்தில்
கிரியையில் ஞானம் – மேற்சொன்ன  மார்க்கங்களின் தத்துவத்தினை  அறிதல்.
                ஆனைந்து, திருமலர்கள், திருமஞ்சனம், பால், தயிர், நெய், விபூதி, கரும்புச்சாறு, எலுமிச்சம் சாறு, இளநீர், பஞ்சாமிருதம், தேன் போன்றவற்றை இறைவனின் திருமேனிக்கு அமிசேகம் செய்து, அலங்கரித்தல், புகைக்காட்டுதல், தீபம் காட்டுதல், அவிபடைத்தல், உபசாரம் செய்தல், மந்திரம் ஓதுதல், பதிகம் பாடுதல், ஆடுதல் போன்றரவை கிரியையின் அங்கங்களாகும்.
                மனிதனின் உடலுக்கு எது நன்மை பயக்குமோ, எதை அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றார்களோ, அதை இறைவனுக்கு படைத்து மகிழ்கின்றான். ஒவ்வொரு பொருட்களுக்கும் உருவ நிலை, உருவங்களை கடந்த சுக்கும நிலை என இரண்டு உருவ அமைப்புகள் உண்டு. பக்தி நிலையில் இருந்து புறமாக கொடுக்கப்படும் பூசைப்பொருட்கள், இறைவனுக்கு சுக்குமமாக சென்று சேர்கின்றது என்பது முன்னோர்களின் நம்பிக்கை. கோயில்கள் உலகில் சக்தியின் சேமிப்புக் கலமாக காணப்படுகின்றது. அபிசேகப் பொருட்கள் கோயிலில் பயன்படுத்தப் படுவதால் அங்கு பிரபஞ்சத்தில் இருந்து கலசத்தின் மூலம் வரும் காஸ்மிக் கதிர்கள் கருவரையில் வைக்கப்பட்டிருக்கும் இறைவனின் உருவத்திருமேனியின் மிது பட்டு அலையாக கோயில் முழுவதும் பரவுகின்றன. அவ்வாறு பரவும் இறை சக்தியானது அங்கு பூசைக்கு பணப்படுத்தப்படும் பொருட்களின் தன்மைகளை தன்னகத்தே ஈர்த்து அங்கு வரும் பத்தர்களுக்கு நேரட்டியாக உணவாகவும், தீர்த்தமாகவும், காற்றின் துணைக்கொண்டு அங்கு நுகரப்படும் பொருட்களான வாசனை திரவியங்கள், காதில் கேட்கும் மந்திரங்கள், கண்ணுக்கு நன்மையளிக்கக் கூடியதாக தீபாராதனை வழியாகவும், மலர் தூவியும், அலங்காரம் செய்வதின் மூலம் இறைவனின் திருஉருவம் மனதில் நீங்காமல் இருந்து மனம் ஒன்றையே தியானிக்கும் பயிற்றி முறையினையும், தருவதாக அமைகின்றன. மேலும்,  நேர்த்திகடன் என்று செய்யப்படும் உடல் பயிற்சிகள் எல்லாம் பஞ்ச பூதத்தின் வழியாக  மனிதனையும், மனித மனங்களையும் வழுப்படுத்தி இறைநிலையினை பெறச்செய்வதே இவ்வழிபாட்டின் நோக்கமாக காணப்படுகின்றது. 
                அவ்வாறு திருஞானசம்பந்தர் காலத்தில் பல தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து இறைவனின் புகழ் பாடி பல பதிகங்களை பாடியுள்ளார். இவ்வாறு பாடப்பெற்ற பாதிகத்தின் வாயிலாக பக்தி நிலையில் இறைவனுக்கு செய்யப்பட்ட கிரியை அங்கங்களாக செய்யப்பட்டி பொருள்களை சிறப்பித்து பாடும் இடத்து இறைவழிபாட்டு முறையினையும், இறைவழிபாட்டின் மேன்மையினை அறிய முடிகின்றது.
கிரியை அங்கங்களும், பயனும்
தூய நீர்
                இறைவனுக்கு தூயநீர் கொண்டு அபிசேகம் செய்தல் என்பது மனிதன் உடலை தூய்மை செய்தல் போன்றதாகும். இது உருவத்திருமேயில் இருக்கும் இறைவனை சுத்திகரித்தல் நிலையாகும்.  மேலும் இறைவன் கங்கையினை தலையில் அணிந்துக் கொண்டு நித்தியமாக தூயநீர் அபிசேகம்  செய்தபடியாக இருக்கின்றார் அதன் விழைவாக கங்கையாகிய தூயநீரை அபிசேகமாக செய்யப்படுகின்றன.
கங்கையினை தன் சடாமுடியில் தாங்கியுள்ளதை திருஞானசம்பந்தர்,
“…… …… மாசறு திங்கள் கங்கை முடிமேல்…”
(திருமுறை 2:85:1:3)
“நீர்கரந்த நீமிர்புன் சடைமேலோர்…….”
(திருமுறை 1:1:2:1)
                பெரும்பான்மையாக அனைத்து பாடல்களிலும் சிவபெருமான் தன்னுடைய வலப்பக்கத்தில் கங்கையை வைத்துள்ளதையும், அவற்றின் சிறப்பினையும் திருஞானசம்பந்தர் பல இடங்களில் பாடியுள்ளார்.
வெண்ணெய்
                வெண்ணெய் கொண்டு இறைவனுக்கு அபிசேகம் செய்வதினால் உடல் ஆராக்கியம் பெறும். வெண்ணெய் பயன்படுத்தியதை திருஞானசம்பந்தர்,
“நல்வெண்ணெய் விழுதுபெய்து ஆடுதிர் நான்தொறும்
நெல்வெண்ணைய் மேவிய நிரே…”
(திமுறை 3:96:1:1)
என்னும் பதிகம் மூலம், வெண்யெண் அபிசேகத்திற்குத் தினந்தோறும் பயன்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது.
நெய்
                இறைவனுக்கு பொதுவாக அபிசேகத்தின் போது நெய் அபிசேகமாகவும், காப்பாகவும் செய்வது வழக்கம். இச்செய்தியினை,
‘ஆடினாய் நறுநெய்யொடு பால்தயிர்’
(திருமுறை 3:1:1:1)
‘நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே’ (திருமுறை 1:15:1:1)
என்னும் பாடல் வரியின் மூலம் அறியலாம். நெய் கொண்டு அபிசேகம் செய்வதினால் செல்வ கடாச்சம் பெற்று, எதிர்வினைகளில் இருந்து விடுதலை பெற்று புத்துணர்ச்சியுடன் வாழலாம்.
பசும் பால், தயிர்
                இறைவனுக்கு பால், தயிர் கொண்டு அபிசேகம் செய்தல் வழக்கமாக இருந்துள்ளதை திருஞானசம்பந்தர்,
“நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
நித்தில் பூசை செய்யல் உற்றார்”
  (திருமுறை 7:5:1:1)
‘ஆடினாய் நறுநெய்யோடு பால்தயிர்’
(திருமுறை 3:1:1:1)
‘பாலோடு நெய் தயிர்பலவும் ஆடுவர்’
(திருமுறை 3:15:3:1)
என்னும் பதிகம் வழி பாலும், தயிரும் அபிசேகத்திற்கு பயன்படுத்தியுள்ளதை காணலாம். இவை சகல நன்மைகளை தருவனவாகவும், உடலுக்கு பூரண ஆராக்கியம் தருவதாகவும், நீண்ட ஆயுளையும் தருவதாக அமைகின்றது.
தேன், இளநீர், கருப்பஞ்சாறு
                திருஞானசம்பந்தர் பதிகத்தில் தேன், இளநீர், கருப்பஞ்சாறு போன்றவை பூசைக்கு பயன்படுத்தியுள்ளதை,
“தேன்நெய்பால் தயிர் தெங்கிளநீர் கரும்பிண்தெளி”
“தேன்நெய் பால் தயிர் ஆட்டுகந் தானே”  
(திருஞானசம்பந்தர் தேவாரம்)
என்னும் பதிகம் மூலம் அறியலாம்.
ஆனைந்து (பஞ்ச கவ்வியம்)
                பசுவிடமிருந்து பெறப்படுகின்ற பால், தயிர், நெய், கோமயம், கோசலம் இவை ஐந்தையும் மந்திரப்பூர்வமாகப் பூசித்து ஒன்று சேர்க்கப்பட்ட கலவை ‘ஆனைந்து’ (பஞ்ச கவ்வியம்) ஆகும். ஆனைந்து இறைவனுக்கு அபிசேகம் செய்யப்படுவதும், அவற்றை பக்தர்களுக்கு கொடுப்பதால் உடல்சார்ந்த ஆராக்கியத்தினையும், மனதுக்கு சாந்திக்காவும் கொடுப்பதாக அமைகின்றது. இவை உடலுக்கு சென்று அசுத்த கழிவுகளை போக்கி, நோய் எதிர்ப்பு சக்தியினை மிகச்செய்து உடலுக்கு எந்தவிதமான நோயும் அனுகாமல் காத்து இறைவழிபாட்டுக்கு ஏற்ற உடல் தகுதியினை தந்துதவுகின்றது. இவ்வானைந்து திருஞானசம்பந்தர் காலத்தில் அபிசேகத்திற்க்கு பயன்பாட்டில் இருந்துள்ளதை,
“ஆனஞ் சாடிய சென்னி அடிகளுக் கடமர சிலியே”  
(திருமுறை2:122:5:4)
“ஆவின் மேவிய ஐந்தமர்ந் தாடுவான்”
(திருமுறை 5:100:4:1)
என வரும்  ஞானசம்பந்தர் பாடல் வழி அறியலாம்.
மலர் தூவுதல்
                சிவனுக்கு உகந்த மலர்களாகிய கொன்றை பூ, ஆத்தி பூ, செவ்வரளி பூ, ஊமத்தம் பூ, பாரிசாதம் பூ, எருக்கம் பூ, வில்வம் மற்றும் வெள்ளை நிறமுடைய பூக்கள் மாலைகளாகவோ, உதிரிப் பூக்களாகவோ இறை வழிபாட்டிற்க்கு பயன்படுத்துதல் நன்மை பயக்கும். ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணாதிசம் உண்டு. சில பூக்கம் மனதுக்கு அமைதி கொடுப்பதாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக் கூடியதாகவும், கண்களுக்கு நல்ல காட்சியினையும் (மங்கலம்) தருவதாகவும் காணப்படுகின்றன. முக்கியமாக சைவ வழிபாட்டில் வில்வம் உயிர் சக்தியாகிய வித்துவை கெட்டிப்படுத்தும் தன்மையுடையதாகவும், வைணவத்தில் துளசிக்கு நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
“தொட ஆர் மாமலர் கொண்டு”
“மாசில் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட” 
(திருமுறை 3:488:6:1)
“கைகாள் கூப்பித்’ தொழீர் கடிமாமலர் தூவிநின்று
            பூக்கையால் அடிப் போற்றி
      என்னாத இவ்வாக்கையால் பயனென்”
 (திருமுறை 4:9:7:1-2)
“யாவருககுமாம் இறைவனுக்கு ஒரு பச்சிலை”
(திருமந்திரம் 252:1)
தீப வழிபாடு
                இறைவனுக்கான அபிசேகங்கள் முடிவுற்ற நிலையில் தீபாராதனை செய்வது வழக்கம். தீபாராதனை மூலம் மங்களமான தோற்றத்துடன் அலங்காரம் செய்யப்பட்ட இறைவனின் திருமேனி அழகு மனதுக்கு மகிழ்வை தருவதாகவும், மேலும் யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இறைவனை தியானிப்பதற்கான ஒற்றை பொருளாகவும் தீபாராதனை மூலம் நமக்கு கிடைக்கின்றது. நெருப்பு பொதுவாக இறைச்சக்தியினை கடத்துபவையாக காணப்படுகின்றது. இதனால் கண்களில் வழியாகவும் மற்றும் வெற்று உடலுடன் கோயிலுக்கு செல்லும் போது இறைசக்தியை நன்மை அனைவரும் எளிமையாக பெரும் பொருட்டே இவ்வழிமுறைகள் கையாளப்பட்டிருக்கின்றன. மேலும் வீடுகளில் பயன்படுத்துவதனால் வீட்டில் உள்ள தீவினைகள் விலகி இறைநிலை பரவி ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகை செய்கின்றது.
“இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே”
  (திருமுறை 4:113:8:1-4)
என்னும் திருநாவுக்கரசர் பாடலில் மூலம் விளக்கு ஏற்றுவதனால் ஏற்படும் நன்மையினை அறியலாம்.
இறைநாமம் கேட்டலும், திருக்கூத்தும்
                உலகியலில் கிடைக்கும் மேற்சொல்லப்பட்ட பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிசேகத்தை விடவும் குருவிடம் இருந்தும், சிவ அருளாளர்களிடமிருந்தும் சிவ நாமத்தினையும், இறைவனுடைய அற்புதங்களையும் கோட்பது சிறந்த வழிபாடாகும். அவ்வாறு சிறப்பிற்குரிய மந்திரமாகிய ‘நமச்சிவாய’ என்னும் மந்திரத்தின் பெருமையினையும், பயனையும், 
“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது
வேதம் நர்கினும் மெய்கொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே..
நந்தி நாமம்ம நமச்சிவாய என்னும்
சந்தையால் தமிழ் ஞானச்சம்பந்தன் சொல்
சிந்தையால் மகிழ்ந்து ஏத்தவல்லார் எலாம்
பந்த பாசம் அறுக்க வல்லார்களே.”
                                                (திருமுறை 3:49:520-530)
“துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
அற்றமிழ் மாலை ஈரைந்தும் அஞ்செழுத்து
உற்றன வல்லார் உம்பராவரே”
                                    (திருமுறை 3:22:231-241)
“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
ஏத்துவார் தமக்கு இடுக்கண் இல்லையே”  
                                (திருமுறை 4:113:170-179)
                நமச்சிவாய என்னும் மந்திரமானது சாதரன கீழ்நிலை மனிதர்களையும் நல்வழி படுத்தி வாழ்வில் ஏற்படும் நரகம் புகும் தீமைகளையே கொண்டிருந்தாலும் நமச்சிவாய என்னுமு; திருமந்திரத்தினை ஓதுவார்கள் என்றால் அவர்களின் மனதினை பக்குவப்படுத்தியும், முன்வினைகளை போக்கியும், பின் வினைகளை தடுத்தும், என்றும் அழியா பொருளாகிய தன்னுடைய சுய சோதியினை காட்டி பிறவா இன்பமாகிய திருவடிப்பேற்றினை வாழ்வில் தந்தருளும் மந்திரம் ஐந்தொழுத்து மந்திரமாகும்.
மேலும் மந்திரங்களையும், பதிகங்களையும், பாடி ஆடி மகிழ்தல் அடியார்களின் மரபாக இருந்துள்ளதை,
“தொண்டர்கள் பாடியாடிக் தொழுகழல் பரமனார்”
(திருமுறை 4:36:3:2)
“தலையாரக் கும்மிட்டுச் கூத்துமாடி”
(திருநாவுகரசர்)
என வரும் பதிக வரிகளின் மூலம் பக்தர்களின் களி (ஆனந்தம்) நடனத்தினை அறியலாம்.
கூட்டு விழிபாடு
                தனி நபராக நீன்று வழிபாட்டினை செய்து பலன் பெறுவதைக் காட்டிலும் பலர் ஒன்று கூடி இறைவன் மீது அன்புடன் பூசை செய்தால் அதிக பயனை அடையலாம். பொதுவாக மந்திரங்கள் செய்யும் செயல்கள் எண்ண அலைகள் மூலமாகவே பரவுகின்றன. அவ்வாறு மந்திர ஆற்றல் கொண்ட சப்தத்தினை கோயில்களில் ஏற்படுத்துவதன் மூலம் அங்கு இறையாற்றல் எப்போதும் நிலையுடையதாக இருக்கின்றது. தமிழில் அவ்வாறு அருளாளர்களின் மூலம் பாடப்பெற்றவையே தேவாரமாகும். இப்பதிகங்களை கூட்டு வழிபாட்டில் பண்ணொடு பாடி வழிபட்டால் அதிக பயனை பெறலாம்.
கூடிக்கூடித் தொண்டர்தங்கள் கொண்டபணி குறைபதாமே
ஆடிப்பாடிஅழுது நெக்கங்கு அன்டை யவர்க்குஇன்பம்”
என்னும் திருநாவுக்கரசர் பதிக வரிகளின் மூலம் கூட்டு வழிபாட்டினை அறியலாம். பொதுவாக பக்தி என்பது தனிநபர் சார்ந்ததாக அல்லாமல், சமுதாயத்துடன் இணைந்தால் அனைவரும் நற்சிந்தனை பெற்று வாழ்வில் உயர்நிலைய அடைய வழிவகுக்கும்.
முடிவுரை
                ஒற்றைச் சொல் ஒரு பொருளை மட்டும் குறிக்கப்பட்டால் அதன் மகத்துவம் சாதாரண சொல்லாகவே காலம் முழுவதும் இருந்துவிடுகின்றது. அதே சொல் குருவின் மூலமாகவோ அல்லது அருளாளர்களின் மூலமாக பெறப்படும் பொது அவ்வாக்கியத்திற்கான பொருளின் தன்மையிலும் அவற்றில் செய்படும் ஆற்றல் நிலையிலும் மாற்றங்கள் நிகழும். அவற்றின் பயன் பயன்படுத்தும் தன்மையினை பொறுத்ததாக அமையும். அவ்வாறாக அம்மை உமாதேவியின் ஞானப்பாலை உண்ட திருஞானசம்பந்தர் வாக்கும் உயர்ந்த வாக்காகவே காணப்படுகின்றன. அவ்வாக்கில் இருந்து பிறந்தவையே முதல் மூன்று திருமுறைகளாகும்.  திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கு தலயாத்திரை செய்து இறைவனை தரிசித்து தமிழிசையால் பல பாடல்களை பாடி சைவ தழைத்தோங்கும் படியாகவும், மக்கள் இறைத்தன்மையினை பெறுதல் பொறுட்டாகவும் பல பதிகங்களை பாடி அருளியுள்ளார். அப்பதிகங்கள் ஒவ்வொன்றும் பயன்தரும் பதிகங்களாக அமைந்துள்ளது திருஞானசம்பந்தர் பதிகத்தின் சிறப்பாகும். அவ்வாறு பதிகத்தினை மூலம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். திருமுறைகளை அன்புக் கொண்டு பாடி பக்தி செலுத்துபவர்களுக்கு இறைவன் அருள் கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தி மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றினை ஓடுக்கி பேரின்பமாகிய திருவடிப்பேற்றினை தந்தருளுவார்.
                உலக மக்கள் அனைவரும் இறைவனின் திருவடிப்பேற்றினை அடைவதற்காக இறைவன் கருணைக்கொண்டு நிகழ்திய திருவிளையாடலே திருஞானசம்பந்தர் அவதாரமாகும். மேலும் கூட்டு வழிபாட்டினை உபதேசித்த திருஞானசம்பந்தரே தன் வாக்கின் படி நின்று தன்னுடைன திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் இறைவனின் அருளால் முக்தியினை பெற்றுத்தந்தார் என்பது உலகறிந்த உண்மை. மேலும் திருஞானசம்பந்தர் பதிகங்களை துணைக்கொண்டும், கள்ளமில்லா அன்பு கொண்டும், பக்தி நெறியில் நின்று இறைவனை தியானிப்பவருக்கு இறைவனின் கருணையால் எளிய முறையில் சிவத்தன்மையினை அடையலாம் என்பதை திருஞானசம்பந்தர் பதிகங்கள் கொண்டு அறியமுடிகின்றது.
துணைநுற் பட்டியல்
1.சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை
 கருமுதல் திரு வரை,   பவாணி – 638 301.
2.திருவாவடுதுறை ஆதினம்  -சைவ அநுட்டான
  விதி, திருவாவடுதுறை ஆதினம் – 609 803.
3.பக்தவச்சலம்.ஆ-திருஞானசம்பந்தர் சுவாமிகள் அருளிச் செய்த  முதல் மூன்று திருமுறைகள்,
குடியாத்தம் – 632 602. 
4.பக்தவச்சலம்.ஆ-திருநாவுக்கரசர் சுவாமிகள் அருளிச் செய்த நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகள், குடியாத்தம் – 632 602.
5.பக்தவச்சலம்.ஆ-சேக்கிழார் சுவாமிகள் அருளிய பெரியபுராணம், குடியாத்தம் – 632 602.
6.மாணிக்கவாசகன்.ஞா.திருமூலர் – திருமந்திரம்,
உமா பதிப்பகம், சென்னை – 600 001.
7.வைத்தியநாதன் -சைவ சமய வரலாறும்,
பன்னிரு திருமுறை வரலாறும்,
திருவாவடுதுறை ஆதினம் – 609 803.
8.வெள்ளைவாரணார்.க -சைவ சிந்தாந்த சாத்திர வரலாறு, ராமையா பதிப்பகம்,
சென்னை – 600 014.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

மேலும் பார்க்க…

1.திருமந்திரத்தில் ஞானம் 

2.திருக்குறளில் ஊழ் 

அம்மாயும் சிறு குழந்தைதான் |சிறுகதை|பிரபுவ

அம்மாயும் சிறு குழந்தைதான்
“உங்களுக்கு இதுதான் கடைசியா இருக்கணும். இன்னொரு முறை இதை செஞ்சுடாதீங்க. பிறகு நான் என்ன சொல்வேன்? என்ன செய்வேன்? என்று எனக்கே தெரியாது”.
“இந்த அரிசி எத்தனை பேருங்க உழைச்சு உற்பத்தி செஞ்சு இங்க வந்திருக்குதுன்னு” உங்களுக்குத் தெரியாதா?
அரிசியையும் படியையும் யாராவது எங்கயாவது இப்படி விளையாட எடுத்துக் கொடுத்துட்டு வேடிக்கைப் பார்ப்பாங்களா? அவன் கேட்டால் எது? என்னான்னு? கொஞ்சம் கூட யோசிக்காம, கேட்டவுடனே அப்படியே கேக்குறதை எடுத்து கொடுத்துவிடுவீங்களா? உங்களுக்கு தெரிய வேண்டாமா? நல்லது கெட்டது ஏதும் சொல்லி தர மாட்டீங்களா?
அவன் அதுதான் வேணும்னு அடம்பிடித்தால் அரிசி, பருப்பு, சர்க்கரை, உளுந்துன்னு எல்லாத்தையும் எடுத்து கொடுப்பீங்களா? கொஞ்சமாவது வரைமுறை வேணாமா?” என்று அப்பா பிள்ளைகளின் அம்மாயியை கடிந்து ஏசுகிறார். எதனால் இப்படி வாயில வந்ததெல்லாம் சொல்லி திட்டி தீர்த்தார்.
ஒரு பேடு தன் குஞ்சுகள் முட்டையில் இருக்கும் வரை மட்டும் அடைக்காப்பதில்லை; ஒரு கோழிக்குஞ்சு வளர்ந்து, எதிரி உயிரிகளிடம் இருந்து எதிர்த்து தன்னைத்தானே காத்துக்கொள்ளும் வரையிலும் அடைக்காக்கும் அல்லவா! இதுபோல பெற்றெடுத்த மூன்று விலை மதிப்புமிக்க பொன்களை (பெண்களை), அரும்பாடுபட்டு வளர்த்து, ஆளாக்கி, ஆளுக்கொரு திசையில் திருமணமும் செய்து வைத்தார் பசுபதி அம்மாயி. அவர் மூன்று பெண்களையும், திருமணம் செய்து வைத்து, பேரன் பேத்திகள் என்று ஆன பின்னரும் கூட அடைக்காப்பது போலவேக் காத்து வாழ்ந்து வந்தார்.
பசுபதி அம்மாயி பார்ப்பதற்கு மிகவும் சாதுவானவர்; அசாத்தியமான பொறுமை குணம் உடையவர். அக்கம் பக்கம் இருப்போரிடம் அளவான அன்போடு பழகி குடும்ப வாழ்வை செம்மையாகவே கழித்து வந்தார்.
தன்னுடைய பேத்தி மற்றும் பேரன்களுக்கு மிகவும் பிடித்தமானவர். எப்போதும் அவர்களுடன் இருப்பதை மிகவும் விரும்புவார்; சில வேளைகளில், பிள்ளைகளுடன் ஈன்ற தாய் தந்தை இல்லாது இருந்தாலும் இருப்பார்கள்; ஆனால் பிள்ளைகள் ஒருபோதும் அம்மாயி இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்.
பிள்ளைகளும் இவரோடு இருப்பதையே அதிகமாக பிரயாசப்படுவார்கள். பிள்ளைகள் காலையில் எழுந்தது முதல் இரவில் உறங்கும் வரையில் ஒவ்வொரு பிள்ளையும் கேட்கும் விளையாட்டு சாமான்களையும் சலிக்காமல் எடுத்துக் கொடுப்பது தான் அவரது முதல் கடமையாகும். அது மட்டும் அல்ல. மீண்டும் அந்த விளையாட்டு பொருள்கள் அனைத்தையும் அதனதன் பைகளில் அசராமல் நாளும் எடுத்து அடுக்கி வைத்து விடுவார்.
பிள்ளைகள் சில நேரங்களில் சமையலறையின் உள்ளே புகுந்து சட்டி, குண்டான், இட்லித்தட்டு, டம்ளர் போன்று இருக்கும் சாமான்களை எல்லாம் எடுத்து வந்து வறாண்டாவில் வைத்து கொஞ்ச நேரத்திற்கு விளையாடுவார்கள். பிறகு அங்கு உள்ள சாமான்களையெல்லாம் அப்படியே போட்டுட்டு மீண்டும் உள்ளே சென்று, வேறு ஏதேனும் சாமான்களை எடுத்து வந்து வீட்டின் வேறொரு பகுதியில் வைத்து சிறிது நேரம் விளையாடுவார்கள்.
முன்பு வறாண்டாவில் வைத்து விளையாடிய சாமான்களை எடுத்து வைக்க அம்மாயி சென்றால், ‘பிள்ளைகள் எடுக்கக் கூடாது’ என்று கத்தி அழுது அடம் பிடிப்பார்கள். இப்படி வீடு முழுவதுமாக பொருள்களை பரப்பி வைத்து பிள்ளைகள் விளையாடி ஓய்ந்து உறங்கிய பின்புதான், அந்த பொருள்களை எல்லாம் எடுத்து வைத்து வீட்டை சுத்தம் செய்ய முடியும்.
இப்படி அம்மாயி வீட்டின் உள்ளேயும் வெளியேயும் அங்கும் இங்குமாக உள்ள சாமான்களை ஒவ்வொரு நாளும் எடுத்து வைப்பதில் மிகவும் அதிகமான நேரத்தைச் செலவிட்டு வந்தார்.
ஓரிரு நாட்கள் என்றால் ‘சரி போகட்டும்’ என்று விடலாம். ஒவ்வொரு நாளும் அரங்கேறும் இந்த செய்கைகளுக்கு அம்மாயி ஒரு போதும் பிள்ளைகளிடம் மறுப்பு தெரிவித்ததே கிடையாது. இதனால்தானோ என்னவோ? பிள்ளைகளும் இதை தொடர்ந்து ஒரு நாளும் தவறாமல் செய்து கொண்டே இருந்தார்கள்.
இவ்வாறாக சிறு பிள்ளைகள் விளையாட்டு பொருள்களான பொம்மைகள், கார், ஜீப், வேன், ரயில் போன்ற சில பொருட்களோடு, சிறிது நேரம் விளையாடுவார்கள். பின்னர், வீட்டின் சமையலறையில் இருந்து எடுக்கும் சாமான்களோடு சில மணித்துளிகள் விளையாடுவார்கள். பிள்ளைகள் கேட்பதைக், கேட்டப்படியே எடுத்து கொடுக்கதான் அம்மாயி இருக்காங்களே! என்ன கவலை?
ஒரு முறை அம்மாயி சமையலறையில் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த சிறு பிள்ளைகள் கத்தரிக்கோல் மற்றும் ஏதேனும் தாள் வேண்டும் என்று அடம் பிடித்தனர். கேட்டதைக் கேட்ட மாத்திரத்திலே, “இந்தா! பிடி! இனி இங்கே வந்து என்னை தொந்தரவு செய்யாதீங்க!” என்று எடுத்துக் கொடுத்து அனுப்பினார்.
வாங்கிய கத்தரிக்கோல் மற்றும் பேப்பரை வைத்து சிறப்பான சம்பவம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்; பேப்பரை எவ்வளவு சிறிய துகளாக நறுக்க முடியுமோ! அவ்வளவு சிறியதாகப் பிஞ்சு விரல்கள் கொண்டு நறுக்கி தீர்த்தனர். குழந்தைகளுக்கு நல்ல நேரம் இருந்ததால் கத்தறிக்கோல் பிள்ளைகளைப் பதம் பார்க்கவில்லை. அப்போது மின் விசிறியில் இருந்து சர்ற்…. என்று வந்து கொண்டிருந்த காற்று, அந்த மெல்லிய பேப்பர் துகள்களை வெட்ட வெட்ட வீடு முழுவதும் பரப்புவதற்கு வெகு உதவியாக இருந்தது.
சமையல் வேலையை முடித்து விட்டு, வெளியில் வந்து பார்த்த அம்மாயிக்கு வீடு முழுவதும் பேப்பர் இருப்பதைக் கண்டு ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இவ்வளவு சீக்கிரத்தில் இப்படி “வீடு முழுவதும் பேப்பரை வெட்டி நறுக்கி குப்பையாக்கிட்டாங்களே!” என்று புலம்பிக்கொண்டு கூட்டித் துடைத்து சுத்தம் செய்தார். அப்போது பிள்ளைகள் மத்தியில் கடுகளவும் கோபத்தை வெளிபடுத்தாது இருந்தார். இதன் பொருட்டு ஓரிரு நாள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் பிள்ளைகள் இதே போன்று விளையாடி மகிழ்ந்தனர்.
ஒரு நாள் பிள்ளைகள் தலையணை மற்றும் பாய் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கினர். அதை கட்டிலின் மேலே வைத்து விளையாடிக்கொண்டிருந்தனர். ‘இதெல்லாம் ஒரு விளையாட்டா? ஒழுங்கா கீழே இறங்கி விளையாடுங்கள்’ என்று அலுவலகத்திற்கு செல்லும் முனைப்புடன் அப்பா கண்டிப்பான குரலுடன் திட்டி முணுமுணுத்துக் கொண்டே குளிக்கச் சென்றார்.
சிறார்கள் ஆசையோடு விளையாடிக்கொண்டு இருக்கையில், ஒருவன் தரையில் விளையாடிக்கொண்டு இருப்பது போல நினைத்து கட்டிலில் இருந்து இறங்குவதற்கு பதிலாக கட்டிலில் இருந்து பக்கவாட்டில் ஓட ஆரம்பித்து விட்டான். அப்போது கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு ‘டொம்’ என்று ஒரு பெரிய சத்தம் வீடே அதிர்ந்தது. என்ன ஆச்ச பிள்ளைக்கு? என்று குளிக்கச் சென்ற அப்பா ஒருபுறம் ஓடிவர, அதற்குள் சமையலறையில் இருந்த அம்மா மற்றும் அம்மாயி இருவரும் வந்து பிள்ளையை தூக்கினர்.
பிறகு எங்கு அடிபட்டது? என்று தெரியாமல் அடிப்பட்ட இடத்தை விட்டுவிட்டு வேறு ஏதேதோ இடத்தில் தேய்த்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த அப்பா, எங்கே அடி விழுந்தது? என்று கேட்காமல், அதோடு பிள்ளையை அடி அடி என்று கோபம் தணிய அடித்து துவைத்துவிட்டார். அந்த பிள்ளை கீழே விழுந்ததால் மண்டையில் அடிபட்டு ஏற்பட்ட வலியை விட, அப்பா அடித்த அடிதான் அதிகமாக வலித்தது.
அம்மா, அம்மாயி இருவரும் எவ்வளவு தடுத்தும் பயனில்லாமல் போனது. ‘எங்கிருந்து தான் வந்தது’ என்றே தெரியவில்லை, அவ்வளவு கோபம். பிள்ளைக்கு பேச்சு மூச்சு சுத்தமாக இல்லை. தண்ணீர் எடுத்து வந்து முகத்திலே அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கண்கள் விழித்து பார்த்தான். கொஞ்ச நேரத்துல அங்கிருந்தவர்களின் உயிர் உடலை பிரிந்து சென்று திரும்பி பின் வந்தது. உங்கள் ரெண்டு பேரையும் கீழே இறங்கிதானே விளையாடச் சொன்னேன். இனிமேலாவது இப்படி விளையாண்டு தொலைக்காதீங்க! ஏண்டா இப்படி ஏங்கிட்ட அடிவாங்கி சாகுறிங்க” என்று கூறி வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார் அப்பா.
ஒரு வாரத்திற்கு பிறகு இது போலவே மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியது. அன்று சிறு பிள்ளைகள் இருவரும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து கொண்டு முறம், அரிசி மற்றும் அரிசியை அளக்கும் படி, இவற்றை எடுத்துக் கொண்டு விளையாடினர். அழுது அடம்பிடித்து பாசக்கார அம்மாயிடம் உரிமையோடு ஏமாற்றி வாங்கி விளையாடினர். அப்போது அம்மாயி அருகில் இருந்த கடைக்குச் சென்று இருந்தார். சிறு பிள்ளைகள், வழக்கம் போலவே விளையாட ஆரம்பித்து முடிவில் வீடு முழுவதும் அரிசியை சிதறிவிட்டனர்.
வீட்டில் கால்களே வைக்க முடியாத நிலையில் இருந்தது. கடைக்குச் சென்று திரும்பி வந்து பார்த்த அம்மாயி, வீடு முழுதும் சிதற வைத்துள்ள அரிசியை பார்த்து உறைந்து போய் நின்றார். கால் வைக்கும் இடமெல்லாம் அரிசி, உள்ளே கால் வைத்தால் பாதங்களுக்கு அடியில் இருந்து அரிசிகள் “ஐயோ! என்னை மிதிக்காதே!” என்று கெஞ்சுவது போல தோன்றியது.
அம்மாயி அரிசியை எடுத்து கொடுத்தது ‘என் தப்புதான்’ என்று முணுமுணுத்துக்கொண்டு பெருமூச்சு விட்டு, பின்னர் வழக்கம் போலவே வீடு முழுவதும் பரப்பி சிதறிக்கிடந்த அரிசியை கூட்டிப் பெருக்க ஆரம்பித்தார். எப்போதும் போலவே இப்போதும் தனது கோபத்தைப் பிள்ளைகளிடம் காட்டாது சுத்தம் செய்யும் வேலையை தொடர்ந்தார்.
இந்த நேரத்தில் வீட்டிற்குள் வந்த அப்பா, வீடு முழுவதும் சிதறிக்கடந்த அரிசிகளைக் கண்டு கடுங்கோபத்தில் என்ன செய்வது? என்று தெரியாமல் “உங்களுக்கு இதுதான் கடைசியா இருக்கணும். இனி ஒரு முறை நீங்கள் இப்படி செய்தால் அப்பறம் நான் என்ன செய்வேனே எனக்கே தெரியாது? நீங்க சின்ன பிள்ளையா இருந்தப்ப இப்படிதான் உங்கள விளையாட விட்டாங்களா?”…. என்று என்னென்னவோ சொல்லி திட்டி தீர்த்து விட்டார்.
கோபத்தில் வெளிவந்த வார்த்தைகளை கேட்டு பசுபதி அம்மாயியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கண்கள் கலங்கி கண்ணீர் வழிந்தது. அவர் பச்ச குழந்தையைப் போல தேம்பி தேம்பி அழுதார். ஆனால் என்ன? அந்த அழுகை அப்போது மட்டும் தான். பொழுது விடிந்தது; அப்பாவும் வீட்டில் இல்லை. குழந்தைகள் அரிசியை கேட்டு அடம் பிடித்தனர். அம்மாயி எப்போதும் போலவே மறுப்பு ஏதும் சொல்லாமல், எடுத்துக் கொடுக்கிறார். இது நித்தமும் தவறாமல் அரங்கேறியது. ஒரு மாதத்திற்கு பிறகு அப்பாவின் பார்வையில் தென்படுகிறது. இதனை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறார்.
‘பிள்ளைகள் செய்தது தவறு’ என்று அவர்களுக்கு ஒருபோதும் புரியப் போவது இல்லை. ‘கேட்டதையெல்லாம் எடுத்து கொடுப்பதும் தவறு’ என்று அம்மாயி உணர்வதாகவும் இல்லை. அம்மாயி பிள்ளைகள் மீது கோபம் கொள்ளாததற்கும், தேம்பி அழுததற்கும் காரணம் தெரிய வேண்டின், ஒன்று நாம் சிறு பிள்ளையாக இருக்க வேண்டும், அல்லது நமக்கு இந்த அம்மாயி போல வயதாகி இருக்க வேண்டும்! வயதான பின்பு பெரியவர்களும், வயதுக்கு வராத முன்பு உள்ள பிள்ளைகளும் சிறு குழந்தைகள் தான்!அவ்வகையில் பசுபதி அம்மாயும் ஒரு குழந்தைதானோ! என்று நினைத்து சமாதானம் அடைகிறார்.

சிறுகதையின் ஆசிரியர்

பிரபுவ,

பல்லபுரம், இலால்குடி தாலுக்கா

திருச்சி – 621 712

மேலும் பிரபுவ அவர்களுடைய படைப்புகளைப் படிக்க, 

1.ஃபியூசிபெலஸ்

2.பிபுகேர் ஏஜென்ஸி

3.சாலம் பாய் கறிக்கடை

4.24 காரட் தங்கம்

5.மொபைல் ரூல்ஸ்

6.கிருகபதி – கிருகிணி (கவிதை)

தாத்தாவின் பழைய வீடு|முனைவர் ஈ.யுவராணி |வாழ்வியல் கட்டுரை

தாத்தாவின் பழைய வீடு
     பள்ளிகூடம் முடிந்து வீட்டிற்கு வந்தாள் மலர். அங்கே அப்பா தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். ‘அப்பா எனக்கு நிறைய அட்டை, கலர்பேப்பர், கலர்பேனா எல்லாம் வேணுப்பா’ “எதுக்கம்மா பள்ளிக்கூடத்துல ஏதாவது போட்டியா” போட்டியெல்லாம் இல்லப்பா, அந்தகாலத்துல வாழ்ந்த மக்களோட வீடுகள், அரண்மனை மாதிரி செய்து காட்டனும்ப்பா, அதுக்கு மார்க் உண்டுப்பா” ‘அப்படியா, சரிம்மா. அப்பா நாளைக்கு வாங்கி தாறேன்’. மறுநாள் எல்லா பொருட்களையும் வாங்கி கொடுத்தார் அப்பா.
    பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய வீட்டு பாடங்களையெல்லாம் செய்து முடித்துவிட்டு, இரவு நேரங்களில் அப்பா வாங்கி தந்த பொருட்களைப் பயன்படுத்தி, அந்தக் காலத்து வீடுகள், அரண்மனை, கோவில், கிணறு என ஒவ்வொன்றாகச் செய்ய ஆரம்பித்தாள் மலர். ஒருவாரம் கழித்து எல்லாவற்றையும் செய்து முடித்தாள். அதில் ஒரு அரண்மனை, சில வீடுகள், கிணறு, கோவில், தோட்டம் அமைந்திருந்தாள்.
        பின் தனது அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்து, தான் செய்தவற்றை காட்டினாள். அதை பார்த்த அவர் ஆச்சரியப்பட்டு, மலரைத் தூக்கி முத்தமிட்டு, “ரொம்ப நல்லா செய்திருக்க, அப்படியே தத்ரூபமா இருக்கு” என்று பாராட்டினார். 
   மறுநாள், மலர் செய்து வைத்திருந்த மாதிரிகளைப் பள்ளியில் காண்பிக்க எடுக்க சென்றாள்.  அங்கே ஒரு மாதிரி வீடு உடைந்திருந்தது. அதை பார்த்த அவள் “அப்பா ஒரு மாதிரி வீடு உடைச்சிருப்பா மார்க் எல்லாம் போச்சு” என்று அழ ஆரம்பித்தாள்.  மலரை தூக்கி வைத்து “அழாதம்மா” என்று சமாதானப்படுத்தினார் அப்பா.  ‘அப்பா இதெல்லாம் நான் எவ்வளவு யோசிச்சு, யோசிச்சு, செய்தேன் தெரியுமா. அதுவுமில்லாம ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் கண் முழிச்சி இருந்து கஷ்டப்பட்டுச் செய்தேன். ஆனா இப்படி ஆயிடுச்சே’ என்று சொல்லி அழுது கொண்டேயிருந்தாள்.  மலரின் அப்பா, அவளை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவள் அழுகையை நிறுத்தவில்லை.  இதைப்பார்த்த பக்கத்து வீட்டு, தாத்தா மலரை கூப்பிட்டு, அந்த உடைந்த வீட்டை கொண்டுவரச் சொன்னார்.  ‘பாப்பா, அழக்ககூடாது, நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். அப்படி செய்றியா..?’
‘ம்ம்.. சரிதாத்தா சொல்லுங்க” ‘உடைஞ்ச வீடு பக்கத்துல தாத்தாவின் பழைய வீடுன்னு எழுதி வைச்சிடு. யாராவது கேட்டால்,, அது அந்த காலத்துல எங்க தாத்தா வீடா இருந்துச்சு. பெரிய மழையை பெய்தப்ப இடிச்சிருச்சுன்னு சொல்லிடு, மார்க்கெல்லாம் குறைக்க மாட்டங்க சரியா பாப்பா” என்றார் தாத்தா.  கண்களைத் துடைத்துவிட்டு, ஒரு அட்டையில் தாத்தாவின் பழைய வீடு என்று எழுதி, உடைந்திருந்த வீட்டில் ஒட்டிவைத்து. விட்டு ‘ரொம்ப நன்றி தாத்தா’ என்றாள்.  ‘ஹலோ குட்டிப்பாப்பா ஏதாவது தப்பு நடந்துவிட்டால் அதை எப்படி சரி பண்ணலாம்னுதான் பார்க்கனும், அதை விட்டுட்டு அழதுக்கிட்டே இருந்தால் எந்தப் பயனும் இல்ல சரியா  என்று சொல்ல. ‘மம் சரி தாத்தா இனி அழமாட்டேன். பள்ளிக்கூடம் போயிட்டு வர்றேன். ; டாட்டா தாத்தா” என பள்ளிக்கு உற்சாகமாகக் கிளம்பினாள் மலர்.
            செல்வம் என்பது நிறைய பணமும் பொருளும் வைத்திருப்பது அல்ல. இருப்பது போதும் என்ற மனநிலையில் இருப்பதே மகிழ்ச்சி தரும். எந்த ஒரு செயலை செய்யும் போதும், உடல் மனம் இரண்டும் இணைந்து முழு ஈடுபாட்டுடன், விருப்பத்துடன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.  ஆனந்தமாக இருப்பது மிகப் பெரிய பாக்கியம், சோகமாக இருப்பது, நமக்கு நாமே இழைத்து கொள்ளும் துரோகம். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் நேரத்தை பயன்படுத்தினால், மற்றவர்களைக் குறைகூற நேரம் இருக்காது.  பிறரிடம் இருந்து எதிர் பார்ப்பதுதான் ஏமாற்றம் வரக்காரணம்.  உங்கள் தேவைகள் அனைத்தையும் நீங்களே பூர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.  எதைப் பற்றியும் அளவிற்கு அதிகமாக யோசிக்கிற வியாதியே மிக பயங்கரமானது. நம்மையும் சந்தோஷமாக இருக்கவிடாது. சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக இருக்க விடாது.  பொய் சொல்லி பிறரைக் கவர்வது வாழ்க்கை அல்ல. எவரையும் காயப்படுத்தாமல் வாழ்வதே வாழ்க்கை. சோர்ந்து போகும் மனதை, உற்சாகமூட்டும் வண்ணம் செயல்படுபவர்கள் இச்சமூகத்திற்கு மிகவும் தேவை.
     நாம் செய்யும் செயலில் நமக்கு ஈடுபாடு இருக்க வேண்டும். அந்தச் செயல் நமக்குப் பிடித்திருக்க வேண்டும். நீங்கள் விருப்பம் இல்லாமல் செய்தால் அது கடமைக்குச் செய்யும் செயலாகி விடும்.
சூழ்நிலை எப்போதும் ஒரு மனிதனின் விருப்பத்திற்கு ஏற்றதாக மட்டுமே அமைவதில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். தன்னம்பிக்கை மனதில் இருக்கும் ஒரு மாபெரும் சக்தி. தன்னம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் பேச்சு, செயல், நடை உடை பாவனை மூலம் அறிந்து கொள்ளலாம்.  யாரெல்லாம் தமது தவறுக்கு அடுத்தவர் மீது பழி போடாமல் இருக்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவு வராது.  துரோகங்களை ஒவ்வொரு முறையும் எதிர்கொள்ளும் தருணங்களால், பேச்சின் வீச்சு குறைந்து மனம் ஆழ்கடலில் நிலவும் அமைதி ஞான நிலைக்குச் செல்கிறது.
            நல்ல நாளும், நல்ல நேரமும் நம்மைத் தேடி வருவதில்லை. நம் செயல்களால் நாம் தான் உருவாக்க வேண்டும்.  உண்மையில் வாழ்க்கை மிகவும் எளிதானது. ஆனால் உணர்ச்சிகளும் சிந்தனைகளும் அதை சிக்கல்களாக உருவாக்கி விடுகின்றன.  நமது கைபேசி  உலகத்தையே உள்ளங்கையில் காட்டுகிறது. ஆனால் உலகத்தை விட்டு நம்மை தனியே பிரித்து விடுகிறது. நாம் நம்மால் முடிந்த வேலையைக் கூட செய்யாமல், பிறர் உதவியை நாடுவதே பிரச்சினை வரக் காரணம். தவறாக செய்து விடுவோமோ என்ற பயத்தில் இருப்பவருக்கு, நன்றாக செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதே ,ல்லை.
            ஒரு பணியைச் செய்யத் தொடங்கிய பின் தோல்வி குறித்து பயம் கொள்ளாதே. அப்பணியை நிறுத்தவும் செய்யாதே. தன் பணியை செவ்வனே செய்பவர்களே மிக மகிழ்ச்சியான மனிதர்கள்.  இரண்டு வகையான மனிதர்களைக் காணலாம். எதையுமே சிறப்புற குறைவு இன்றி செய்யும் மனிதர்கள் ஒரு வகை. செய்தாக வேண்டுமே என்பதற்காக ஏனோ தானோவென செய்யும் மனிதர்கள் மறு வகை.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி,

இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்.

ஈரோடு மாவட்டம் – 638 476

மேலும் பார்க்க..

1.கற்பதை கசடற கற்க

 

திருக்குறளில் ஊழ்|ர. அரவிந்த்|ஆய்வுக்கட்டுரை

திருக்குறளில் ஊழ்
முன்னுரை
                தமிழ் இலக்கியங்கள் நமக்கு கிடைக்கப்பெற்ற மிகவும் பழைமையானது தொல்காப்பியம். அதற்கு, பிறகு தோன்றிய இலக்கண, இலக்கியங்களில் வினைப்பற்றிய செய்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வினை என்பதற்கு ஒரு செயல் அல்லது தொழில் என பொருள். இவ்வினையை நல்வினை, தீவினை என வகைப்படுத்தலாம். வினைப்பயன் என்பது செயலின் விளைவாகவும், தொழிலின் பயன் எனவும் பொருள் கொள்ளலாம். இதனை, நற்பயன், தீப்பயன் என்றும் வகைப்படுத்தலாம்.
                மனிதன் நல்ல செயல்களை செய்தால் பயனாக நன்மையையும், தீய செயல்கள் செய்தால் தீமையான விளைவுகளை பெறுவான். இவ்வினையின் வினைப்பயனை நிகழ்காலத்திலோ, மறுபிறவியிலோ நிகழும் என்ற கருத்தினை அனைத்து சமயங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. கிமு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினை நம்பிக்கைகள் சமயத்தின் துணைக்கொண்டு பரிமாண வளர்ச்சி பெற்று கருத்தாக்கம் அடைந்திருக்கிறது. மேலும் தமிழ் இலக்கியங்களில் ஊழ்வினைப் பற்றியும், திருக்குறளில் ஊழ் பற்றியும் செய்திகளையும் விளக்கமாகவும் பின்வறுமாறு காண்போம்.
ஊழ்வினை – விளக்கம்
                ஊழ்வினை என்ற சொல்லை ஒரு வினைத்தொகை என்று எடுத்துக் கொண்டால் இச்சொல் ஊழ்ந்த வினை, ஊழ்கின்ற வினை, ஊழும் வினை என்று முக்காலத்தினையும் உணர்த்தும்.        
             ஊழ்  வினை ஸ்ரீ ஊழ்வினை
                அகராதியில் ஊழ் என்ற பகுதிச் சொல்லுக்கு முதிர்வு என்ற பொருளும் வினை என்பதற்கு செய்யும் செயல் என பொருள் தருகின்றது. எனவே ஊழ்வினை என்பது வினை முதிர்வு என்ற பொருளையே குறிக்கிறது. மேலும்,  பழைமை, பழவினைப்பயன், முறைமை, தடைவ, முடிவு, பகை, மலர்ச்சி, சூரியன் என்றும் பொருள் அகராதியில் கூறப்பட்டுள்ளது.
                ஊழ் என்ற பகுதிச் சொல்லுடன் முறை, விதி, வினை என்ற சொற்கள் சேர்ந்து ஊழ்முறை, ஊழ்விதி, ஊழ்வினை, ஊழ்வினைப்பயன், ஊழி என்ற சொற்களுக்கு முறையே வினைப்பயன்முறை, பழவினைப்பயன், பழவினை, கருமபலன், விதி என்றும் அகராதிகள் பொருள் கூறுகின்றன.
தொல்காப்பியத்தில் ஊழ்
                தொல்காப்பியம் இன்று தமிழ் நூல்களில் காலத்தால் பழைமையானது. தமிழ் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்துக் கொள்ள பெரிதும் துணைப்புரிவதோடு மட்டுமல்லாமல் ஊழ்வினை பற்றிய கருத்துகளையும் அறிந்துக் கொள்ள துணைபுரிகிறது.
ஊழ் என்ற சொல்லை ஓர் இடத்தில் மட்டும் தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும்  இச்சொல் வினைபயனை குறிக்கப்பெறவில்லை, அதற்கு மற்று சொல்லாக பால் என்ற சொல்லாச்சியை பயன்படுத்தியுள்ளார்.
                தலைவனும் தலைவியும் இல்லறத்தில் வாழ்ந்து மறுப்பிறவியில் சேர்வதற்கும், பிரிவதற்கும் வினைப்பயனே காரணம் என்றும், தலைவன் தலைவி இருவருக்கும் கண்ட உடனேயே புணர்ச்சி வேட்கை தோன்றாது அவையும் வினையின் ஆணையின் படியாகவே நடக்கும் என அனைத்திற்கும் ஊழையே முன்நிறுத்துகின்றார்.
     “…பால தாணையின்…” எனும் 1037 – ஆம் நூற்பாவில் பால் என்ற சொல் ஊழ்வினை பொருளையே குறிக்கப்பயன்படுத்தியுள்ளார்.
சங்க இலக்கியத்தில் ஊழ்
                பதினென் மேற்கணக்கு நூல்களான எட்டுத்தொகையையும், பத்துப்பாட்டையும் உற்றுநோக்கும் போது சங்க மக்களின் வாழ்க்கை, இறைகோட்பாடு, ஊழ்வினை போன்ற பண்பாட்டு கூறுகளை அறிந்துக் கொள்ள முடிகின்றது.
          எட்டுத்தொகையில் 83 இடங்களில் ஊழ் சொல்லையும் இதன் திரிபு சொற்களையும் காணமுடிகிறது. பத்துப்பாட்டில் 12 இடங்களில் வினைபற்றியும் 95 இடங்களில் ஊழ் என்ற சொல் பிற பொருளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஊழ்வினையை குறிக்க அச்சொல்லிற்கு மாறாக உதிர்தல், மலர்தல், அலர்தல், முதிர்தல், சொரிதல், முறையே, பலமுறை, காரணம், பொருந்துதல், நிறம் வெளுத்தல், மாறி மாறி, முளைத்தல் போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
     ‘மக்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்து மரபைக் காப்பது ஊழே’ என்ற நம்பிக்கையிக் அடிப்படையிலேயே ஊழ்வினை பேசப்பட்டதே தவிர இறையியல் அடிப்படையில் பேசப்படவில்லை. இருப்பினும் இம்மை, மறுமை சிந்தனை சங்க மக்களிடம் இருந்துள்ளது. இதன் தொடர்ச்சியே ஊழ்வினை நம்பிக்கை வளர தொடங்கியது எனலாம். சங்க காலத்தில் அகப்புற வாழ்க்கையின் அனுபவத்தின் அடிப்படையிலேயே ஊழ்வினை கேட்பாடு தோன்றியுள்ளதையும் அறிந்துக் கொள்ள முடிகிறது.
கம்பராமாயணத்தில் ஊழ்
                கம்பர் ஊழ் என்ற சொல்லையும் அதற்கு நிகரான விதி என்ற சொல்லாட்சியையும் 338 இடங்களில் வினையினைப்பற்றி பேசுகின்றார். மேலும் வினையை குறிக்க அருவினை, ஆய்வினை, இருவினை, ஊழ்வினை, ஏய்வினை, கருவினை, சூழ்வினை, தீவினை, தொல்வினை, மாயவினை,  மெய்வினை, வல்வினை, வெவ்வினை என்ற சொல்லாட்சியையும் கையாண்டுள்ளார். விதி வினை என்ற சொல் விதியில் வினை என்னும் சொல்லைத் தாங்கி நின்றாலும், ஊழ் விதிவசம் என்ற பொருளையே தருகின்றது.
பகவத்கீதையில் ஊழ்
                  பகவத்கீதையில் கர்மபந்தத்தை நல்லகர்மா, கெட்டகர்மா என்று இரு வகைப்படுத்தலாம். பொதுநலத்தில் இடுபாடுகொண்டுள்ளவர்கள் நல்லகர்மாவையும், சுயநலம் கொண்டவர்கள் கெட்டகர்மாவையும் உடையவர்கள் என் குறிப்பிடுகின்றது. மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் வேள்வியாக செய்தால் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலை பெறலாம் என்று பகவத்கீதையின் கருத்தாகும் இதனை, பதஞ்சலி முனிவர் ‘கைவல்யநிலை’ என பெயரிடுகின்றார்.
அயல்நாடுகளில் ஊழ்
                 கர்மாவைக் கிரேக்கர்கள் ‘விதி’ என்றும், சீனர்கள் (tao) என்றும் ஏ என்றும், பாலி மொழியில் ‘கம்மா’ என்றும், திபெத்தில் லாஸ் (Las) என்றும், ஜப்பானில் கோ அல்லது இங்கா (Go or Inga) என்றும் ஊழ்வினையினை குறிக்க பயன்படுத்தியுள்ளார்கள். எனவே வினையையும் வினையின் பயனையும் பிற நாட்டவர்களிடமும் இருந்திருக்கின்றது.
சமயக் காப்பியங்களில் ஊழ்
     காப்பியங்கள் ஒவ்வொன்றும் சமயங்களை தாங்கி நின்று அச்சமயத்தின் பண்பாட்டினை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஐம்பெரும் காப்பியங்களும், ஐஞ்சிருகாப்பியங்களும் ஊழ்வினைப் பற்றியும், மறுபிறப்பு பற்றியும், ஊழ்வினையில் இருந்து விடுபடும் வழியையும் இதனால் பெறும் பயன்களையும் காப்பியங்கள் உணர்த்துகின்றது.
சைவத் திருமுறைகளில் ஊழ்
     கி.பி 2-ஆம் நூற்றாண்டிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் மக்களின் ஊழ்வினை நம்பிக்கை பற்றிய சிறந்த தெளிவான கருத்துக்களை காட்டுகின்றது. இறைவனை தொழுவதன் மூலமாக வினைப்பயளில் இருந்து விலகமுடியும் என் திருமுறைகள் உணர்த்துகின்றது.
பதினென் கீழ்கணக்கில் திருக்குறள்
                 பதினென் கீழக்கணக்கு நூல்களுள் ஒன்றான திருக்குறள் தனக்கென தனியிடம் பெற்றுள்ளது. தமிழ் மக்களின் பண்பாடு, வாழ்கைமுறை, வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய கருத்துகளை தாங்கி நிற்கிறது.
                  திருவள்ளுவர் காலத்தினைப் பற்றி பல்வேறு கருத்துக்களள் இருந்தாலும் கிமு.31 – இல் பிறந்தார் என திருவள்ளுவராண்டு கணக்கிடப்படுகிறது. சான்றாதரங்கள் வழி ஆராயும் பொழுது கிமு. 2-ஆம் நுற்றாண்டு முதல் கிபி. 5-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் திருக்குறள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கணக்கிட முடிகிறது.
திருக்குறள் சமயம்
     திருக்குறள் அனைத்து சமயக் கருத்துக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, எனவே திருக்குறள் சமயச் சார்பற்ற நூல் எனறும் உலக மக்களுக்கொள்ளாம் பொதுவான நூலாக திகழ்கின்றது.
திருவள்ளுவர் கூறும் ஊழ்
      திருவள்ளுவர் சமயங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளும் ஊழ் கேட்பாட்டை படைத்துள்ளார். ஊழ்வினை தொடர்பான செய்திகளையும் தம் குறள்வழி எடுத்துரைக்கின்றார். ஆனால் உரை எழுதியவர்கள் சிலர் உழிவினை கருத்தை ஏற்றும் சிலர் மறுத்தும் உரை எழுதியுள்ளார்கள். வள்ளுவர் ஊழ் அதிகாரத்தில் வினையைக் குறிக்க ஆகூழ், இழவூழ், உண்மை, தெய்வம், பால், போகூழ் என்ற சொற்களை தம் குறளில் பயன்படுத்தியுள்ளார்.
      வள்ளுவர் முன்வினை, பழவினை, கொள்கையுடையவர் என்பதற்கு 5இ 10இ 38இ 62இ 98இ 107இ 126இ 319இ 339இ 345இ 349இ 351இ 356இ 357இ 358இ 361இ 362இ 398இ 459இ 538இ 835இ 972இ 1002இ 1042இ 1318 ஆகிய குறள்கள் சான்றாக திகழ்கின்றது. வள்ளுவர் ஊழ்  நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதோடு மட்டுமின்றி ஊழ் பற்றிய நம்பிக்கை அவர் காலத்து மக்களிடம் இருந்தமையையும் காணமுடிகிறது.
ஊழ் அதிகாரம் கூறும் ஊழ்
    ஊழ் என்ற அதிகாரத்தில் செல்வம், முயற்சி, அறிவு நன்மை, தீமை, நிலையாமை, துறவு, ஊழின் வலிமை என்ற கருத்துக்களை தொடபுபடுத்தி ஊழ்வினையினை வள்ளுவர் தம் குறள் வழி விளக்குகிள்றார்.
     முதல் இரு குறளில் செல்வம், முயற்சி பற்றியும், மூன்றாவது குறளில் அறிவைப் பற்றியும், நான்காவது குறளில் செல்வத்திற்கும் அறிவிற்கும் உள்ள வேறுபாடு பற்றியும், ஐந்தாவது குறளில் நன்மை, தீமை பற்றியும், ஆறாவது குறளில் செல்வம் நிலையாமை பற்றியும், ஏழாவது குறளில் செல்வ நுகர்ச்சி பற்றியும், எட்டாவது குறளில் துறவு பற்றியும், ஓன்பாதவது குறளில் இன்ப, துன்ப துகர்;ச்சி பற்றியும், பத்தாவது குறளில் ஊழின் வலிமை பற்றியும், விளக்கி ஆள்வினை உடைமையில் முயற்சியால் ஊழயும் நீக்க முடியும் என்ற தன்நம்பிக்கையையும் விளக்குகின்றார்.
ஆகூழ், போகூழ்
“ஆகூழால் தொன்றும் அசைவின்மை; கைப்பொருள்
போகூழ் தோன்றும் மடி” (குறள்: 371)
எனும் குறளில், ஊழில் நன்மை செய்வதை ஆகூழ் என்றும், தீமை செய்வதை போகூழ் என இருவகைபடுத்துகின்றார்.
      ஆகூழ்  ஸ்ரீ ஆகும் ஊழ் , ஆகல் ூ ஊழ், நல்வினைபயன். (முயற்சி, அறிவு, உண்மை, விளைவித்தல், பொருள் சேர்தல், அனுபவித்தல்)
     போகூழ் ஸ்ரீ போகும் ஊழ், இழக்கச் செய்யும் ஊழ், தீவினைபயன். (சோம்பல், பேதைமை, உண்மையின்மை, தீவினை, பொருள் அழிதல், அனுபவித்தலுக்கு இடையூறு)
அறிவு
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவு மிகும்” (குறள்: 373)
எனும் குறளில், மனிதனுக்கு இயல்பாக இரண்டு குணங்கள் அவை நற்குணம், தீயகுணம் இவை அடிப்படையிலேயே காணப்படுவது. அறிவு என்பதும் கல்வியால் அமையும் என்பார்கள், ஆனால் வள்ளுவர் கல்விகற்றாலும் இயல்பாக அமையப் பெற்ற அறிவே செயல்களில் மேலோங்கி நிற்கும் அதுவே உண்மையானஅறிவு என் கூறுகின்றார்.
செல்வம், அறிவு வேறுபாடு;
     மனிதனுடைய செல்வத்திற்கும், அறிவிற்கும் தொடர்பில்லை. இவை இரண்டையும் தேடுகின்ற முயற்சி வேறுவேறாக இருந்தாலும் இரண்டையும் நல்லூழால் மட்டுமே பெற முடியும். இவற்றை,
“இருவேறு உலகத்து இயற்கை; திருவேறு
தௌ;ளியர் ஆதலும் வேறு” (குறள்: 374)
எனும் குறளில், இல்லறத்தார் தேடுவது பொருள், துறவறத்தில் இருப்பவர் விரும்பி முயன்று பெறுவது தெளிவான அறிவாகும் எனவே இரண்டும் வேறுபாடு கொண்டவை என்கிறார்.
நன்மை, தீமை
     செல்வம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்ற பொழுது ஏற்படுகின்ற இடையூறுகள் கூட அவனுக்கு நல்லூழ் இருந்தால் நன்மையாகமாறும், தீயூழ் இருந்தால் செயலில் பாதகமாக முடீயும் என்று,
“நல்லவை எல்லாஅம் தீயவாம்; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு” (குறள்: 375)
எனும் குறளில் குறிப்பிடுகின்றார்.
செல்வம் நிலையாமை
“பரினும் ஆகாவாம் பாலல்ல்  உய்த்துச்
சொரியினும் போகா தம” (குறள்: 376)
எனும் குறளில், மனிதன் பெற்றுள்ள அனைத்து செல்வங்களும் ஊழின் அடிப்படையிலேயே நிலைத்து நிற்பதும், நிலைக்காமல் போவதும். ஊழே என காரணம்காட்டுகின்றார்.
செல்வ நுகர்ச்சி
“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
 தொகுத்தார்க்கும் துய்ந்தல் அரிது” (குறள்: 377)
எனும் குறளில், ஒருவன் கோடிக்கணக்கான செல்வத்தை பெற்றவனாக இருந்தாலும் கூட அவன் செய்த ஊழ் வினையின் அடிப்படையிலேயே செல்வத்தை அனுபவிக்க முடியும் என்கிறார்.
துறவு
“துறப்பார்மன் துப்பரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்” (குறள்: 378)
எனும் குறளில், “உலகில் உறவுக்கும், துறவுக்கும் ஊழ் வேண்டும்” அனைத்து பொருள்களை விழைந்து போற்றாமல் யாவற்றையும் துறப்பதே துறவாகும். உயிருக்கு உய்தி தருகிற துறவு யாருக்கும் எளிதில் கிட்டுவதில்லை, நல்லூழ் உடையவனுக்கே நலமாய்க் துறவு கூடிவரும்.
இன்பம், துன்பம் நுகர்ச்சி
“நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவது எவன்?” (குறள்: 379)
எனும் குறளில், ஒருவன் இன்ப, துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என எண்ணிவிட்டல் துன்பங்கள் பெரியதாக தோன்றாது. ஊழ் வகுத்தபடி வரும் இன்பத்தையும், துன்பத்தையும் அனைவரும் நுகர்ந்தே ஆக வேண்டும். வேறுவழியில்லை அதை மாற்றி அமைக்கவும் முடியாது என் கூறுகின்றார்.
ஊழ்வினை வலிமை
“ஊழிற் பெருவழி யாவுள மற்றொன்று
சூழனும் தான்முந் துறும்” (குறள்: 380)
என்ற குறளில், ஊழைவிட வலிமையானது எதுவுமில்லை. அப்படிபட்ட ஊழை வெல்ல நினைத்தால் அவனுக்கு முன்நின்று அவனது முயற்சியை முந்தி நிற்கும் ஆற்றல் கொண்ட ஊழ் என வலிமையை குறிபிட்டுள்ளார்.
     ஊழின் வலிமையை கூறிய வள்ளுவர் பொருட்பால், ஆள்வினை உடைமையில்,
“ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்” (குறள்: 620)
எனும் குறளில், ஒருவன் இடைவிடாது  முயற்சி செய்தால் ஊழையும் வென்றுவிடலாம். இக்கருத்தை மேம்போக்காக பார்த்தால் முன்னுக்கு பின் முறணாகவும் தோன்றும். ‘உப்பக்கம்’ என்றால் முதுகுப்பக்கம் ஊழை புறமுதுகிட்டு ஓடச் செய்தல் என பொருள் படுகிறது.
      இப்பிறப்பில் மேற்கொள்ளும் நல்லூழ் முயற்சியால் அடுத்த பிறவியில் நலமாய் வாழ வள்ளுவர் ஊழை விலக்குவதற்கும், அதனை அகற்றுவதற்கும், மாற்றுவதற்கும் மனிதன் முயற்சி செய்தால் ஊழ் அவன் முயற்சியை வென்றுவிடும். இந்த உண்மையை உணர்ந்தால் துன்பத்தை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தீவினைபயனான துன்பத்தை அனபவித்து விடமுயற்சியால்  நல்லூழ் செய்து ஊழை இப்பிறவியில் அல்லாது மறுபிறப்பிலாவது குறைத்து வீடுபேற்றை பெறவும், அனைவருக்கும் விடமுயற்சியை முன்நிறுத்துகின்ற வகையிலேயே இக்குறள் அமைந்துள்ளது.
முடிவுரை
     தமிழ் இலக்கியத்தில் பல நூல்களில் ஊழ்வினை கருத்துக்களை கூறியிருப்பினும் திருக்குறளில், அனைத்து சமயங்களும் எற்றுக்கொள்ளும் வகையில் செல்வம், முயற்சி, அறிவு நன்மை, தீமை, நிலையாமை, துறவு, ஊழின் வலிமை போன்ற கருத்துக்களுடன் தொடபுபடுத்தியும், நல்வினைப்பயனையும், தீவினைப்பயனையும் விளக்குவதோடு மட்டுமல்லாமல். நல்லூழ் துணைக்கொண்டு இவ்வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை அனுபவித்து கடமைகளை உணர்ந்து,  அச்சத்தின் விளைவாக புதிய குற்றங்களை செய்யாமல் இடைவிடாத முயற்சியால் நல்லூழை செய்து இப்பிறவியில் இல்லையெற்றாலும் மறுபிறவியில் நல்வினையின் பயனால் சிறுக சிறுக ஊழை குறைத்து வீடுபேற்றை அடையும் வழியினையும், சமூகத்தில் தீய செயல்களை தடுக்கும் வகையிலும் ஊழ்வினை கருத்துக்களை விளக்கியும். விடமுயற்சியால் இருந்தால் ஊழ்வினையை புற முதுகு காட்டி ஓடவைக்க முடியும் என்று முயற்சியை வழிவுருத்தும் வகையில் குறிப்பிட்டிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

ர. அரவிந்த்

உதவிப் பேராசிரியர்

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 001.

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »