Saturday, July 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும் | சு.கலைச்செல்வன்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும் | சு.கலைச்செல்வன்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும்

ஒப்புமை நோக்கில் கம்பனும் மில்டனும்

            கவிதை என்பதை கதை, விதை என்று அழைக்கலாம். ஒரு பொருளின் விதையைக் கதையாக மக்களுக்கு எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பது ஆகும். எவ்வளவு பெரிய கருத்துக்களையும் சுவையாக நறுக்கென சொல்லப்படுவது கவிதை. எல்லோரோலும் கவிதையை எழுத முடியாது. எவர் உள்ளத்தில் இயற்கையை நேசிக்கவும் ரசிக்க வைக்கின்ற எண்ணமும் உள்ளதோ அவர்களே கவிதை எழுத வல்லவர்கள் ஆகின்றார்கள். இவ்வுலகத்தில் எத்தனையோ கவிஞர்கள் இருப்பினும் கவிச்சக்கரவர்த்தி கம்பனைின் கவி நடையை இன்றளவும் எண்ணி வியந்து போவதுண்டு. அதேபோல் ஆங்கில கவிஞர் மில்டனின் கவிதையைில் ஓர் ஆழம் இருப்பதை உணர முடியும். கம்பனின் பஞ்சவாடி என்பதையும் மில்டனின் ஈடன் தோட்டத்தையும் பின்னணியாகக் கொண்டு இவ்வாய்வு ஒப்பாய்வாக நிகழ்த்தப்படுகிறது. கவிநயப்பார்வையில் கம்பனின் கவித்துவமும் மில்டனின் கவியழகும் இவ்வாய்வுக் கட்டுரையின் காண்போம்.

 கவிச்சக்கரவர்த்தி கம்பன்

     காப்பிய உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.  தமிழில் சிறந்த கவிஞர். கவிஞர்களின் சக்கரவர்த்தி என்று பாராட்டப் பெற்றவர்.  கம்பனைப் போல் பூமிதனில் எங்கேயும் பிறந்ததில்லை என்பார் பாரதி. கம்பன் வீட்டுக் கட்டுத்தரியும் கவி பாடும், கல்வியில் பெரியவன், கல்வியில் சிறந்தவன்  கம்பன்,  பெருங்கவிஞர்  என்றெல்லாம் சிறப்பு பெற்றவர். கம்பராமாயணத்தின் ஆசிரியர். தன்னுடைய ஒவ்வொரு படலத்திலும் காட்சி அமைப்பு, காடடசியைச் செலுத்தும் முறைமை, பாத்திர படைப்பு மற்றும் பண்புகள் ஆகியன ஒருமித்ததாக அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.                    

மில்டன்

            ஆங்கில மொழியின் மிகச்சிறந்த கவிஞர்.  இழந்த சொர்க்கம் என்ற நூலை எழுதியுள்ளார்.  மதவாதிகளும், பழமைவாதிகளும், கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தைப் பின்னுக்கு இழுத்தவர்கள். ஆட்சியாளர்களும், பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும் கல்வியாளர்களும் கூட மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது, அவரது எழுத்துக்களை ‘தீ’ நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர். அவர் பயின்ற  கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்   முதல் இடத்தைப் பிடித்த மாணவர்கள் பட்டியலில் இருந்த ‘ஜான் மில்டனின்’ பெயரை 300 ஆண்டுகளுக்கும் மேலாக கருப்பு மையிட்டு மறைத்தது. மில்டன் மட்டுமல்ல; ‘குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்தவனே மனிதன்’ என்ற உண்மையைக் கண்டுரைத்த சார்லஸ் டார்வினையும் மறைத்தார்கள் என்பதையும் இந்நேரத்தில் குறிப்பிட வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் பறைசாற்றிய கவிஞர் மில்டன் மீண்டும் பிறந்து வர வேண்டும் என்றெல்லாம் மக்கள் ஆசைப்படார்கள்.

மில்டனின் ஈடன்  தோட்டம்

            தலைவன் ஆதாம் தலைவியே வாழ்க்கையாகக் கொண்டுள்ளான். இறைவடிவினர் ஆகிய இருவரும்  நிமிர்ந்த நன்னடையும் மேற்கொண்ட பார்வையும் உயர்ந்து ஓங்கிய வளர்ச்சியும் தோற்றம் பெற்றுள்ளனர். அவர்கள் ஆடை ஏதும் அணியாத நிலையிலும் மாட்சிமை பெற்று வளர்கின்றனர். தூய்மை, வாய்மை, விவேகம் பெற்று ஒழுக்கத்தின் சிறந்த அழகான வடிவினராக இருக்கும் அவர்கள் உழைப்பால் மகிழ்ச்சியும் அடைகின்றனர்.  அவர்கள் ஈடன் தோட்டத்தில் பூஞ்செடியைச் பேணுவதுபோல எளிய பணிகளைச் செய்கின்றனர். தென்றலில் இனிமையும் ஓய்வு நிம்மதியும் கூடுதலாகத் துய்ப்பதற்கு அந்த உழைப்பும் உதவுகிறது. வேலை முடிந்தபின் தோப்பு நிழலில் அருவி அருகில் அமர்ந்து உள்ளவர்கள் அங்குள்ள பூக்கள் மீது சாய்ந்தவரே மரங்களில் உள்ள கனிகளை உண்பார்கள். பின்னர் தெளிந்த நீரோட நீரை பருகுவார்கள். இருவரும் இயற்கையின் வசம் உடலாடி பின்பு  இன்புறுகிறார்கள்.

வெள்ளாட்டுக் குட்டியுடன் கர்ஜனை செய்யும் சிங்கம், தும்பிக்கை வளைத்து விளையாடும் யானை, வளைந்த நெடிய விஷம் உள்ள பாம்புகளை கண்டு மகிழ்வார்கள்.  இவர்களின் இன்பமான வாழ்விற்கு வழிவகை செய்த இறைவனை உள்ளன்போடு  போற்றி புகழ்வார்கள்.  சிந்தனை அறிவுக்கு ஆதாமும்  மென்மை கவர்ச்சிக்கு ஏவாளும் இறைவன்  படைத்ததாக மில்டன் கூறுகிறார்

“உனக்கு விதி வகுப்புவன் இறைவன் எனக்கு விதி வகுப்புகள் நீயே”  — என்று ஆதாமும் ஏவாளும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசுவார்கள்

            மனிதகுலம் கருத்து ஒருமித்த காதலராகப் பலரை கண்டு இருக்கிறது. ஆனால்  ஆதாமையும் ஏவாளையும் போல்  ஈருடல் ஓர் உயிராய் வாழ்ந்தவர்கள் எவரும் இல்லை என்பார் கவிஞர். அதனை புலப்படுத்தும் ஏவாளின் பேச்சுகளும் உள்ளன. ஆதாம் ஏவாளை தன் வாழ்வின் உயர்நிலையாகக் கருதுகிறார். முழுமையான வளர்ச்சியைப் பெற்ற ஆளுமை உடையவள் ஏவாள். அவள்  சொல்லும் செயலும் அன்புக்குரிய  அறத்திற்கு  அறிவிக்கும் உச்சவரம்புக்கு எல்லை இல்லை என்று கூறுவான். அவனோடு  உரையாடும்போது மென்மைத்தன்மைய இழந்து  வெண்மையாகும் என்று ரஃபேரிடம் மெய்மறந்து பேசுவான்.

            சாத்தான் ஆதாமும் ஏவாளும் அனுபவிக்கும் இன்பத்தை கண்டு பொறாமையும் துக்கமும் அடைகின்றான்.  சாத்தான் சற்று ஆதாமும் ஏவாளின் பேடியின் தேடித் தன்மையும் அவர்கள் தூக்கி இன்பத்தையும் நிறைவடையும் நிறைவையும் புலப்படுத்தும். விண்ணுலகில் காற்றும் காற்றும்  கலப்பது போல இவர்கள் இருவரும் இரண்டல்ல முழுமையாக ஒன்றிணைந்து கலவி இன்பம் சுவைக்கும் இன்பத்தை இழந்து  நிறைவேறா ஆசையில்  துன்புற்றி தவிப்பதைக் காணமுடியும்.  ஆதாமும் ஏவாளும் மாறுபடுவதை கண்டு,

  ” பொறுமையான காட்சி! வேதனை தரும் ஆட்சி

   விளைந்து தழுவும் சுவர்க்க போக  மாட்சி

   தன்னையே விஞ்சும் இன்பத்துக்கு சாட்சி

   இன்று அழுக்காருடன் பேசுகிறான் ” (கம்ப.ஆரண்ய.அகத்திய.பா.57)

            வீழ்ச்சி வரும் வரை ஆதாமும் ஏவாளும் பாலுறவு உடைய  தம்பதியாக  வாழ்ந்தார் என்று மில்டன் காட்டுகிறார்.  இன்பத்தைப் பெருக்குமாறு  இறைவன்  அவர்களுக்கு  ஆணை  விட்டதாகப் பைபிள் கூறுகிறது.  அதனால் அவர்களிடம் இருந்து  குற்றமற்ற  அவர்களுடைய பால் இன்பத்தை  மில்டன்  ஊடல் ஆடி விட்டுள்ளான்.  சூரியன் மறைந்து இருள் சூழ்ந்ததும் இருள் கடலை பாற்கடலாக மாற்றும் வெண்மதி தோன்றும். அப்போது  ஆதாமும் ஏவாளும் வானத்தின் கீழ் நின்று இறைவனை வணங்கி விட்டு பள்ளியறைக்குள் செல்வார்கள் என்று  மில்டன் கூறுகிறார்.  மனித குலத்தின் முதல்வர் இருவரது இல்லற வாழ்வின் விருப்பத்தையும் இன்பத்தையும் காமரசம் கனியைப் போற்றி பாடுகிறார். வீரன் தோட்டம்  மண்ணகத்து உறக்கம்  வாழ்வின்  வர்ணனைக்கு  மணிமகுடம் ஆகிறது

கம்பனின் பஞ்சவாடி

              இயற்கையோடு இணைந்த இன்பம் அந்த இன்பத்தோடு   இயைந்த  வாழ்வு என்னும் கொள்கையும் கற்பனையும் கவர்ந்தது. ஈடனும் பஞ்சவாடியும் குறிப்பிடத்தக்க ஒப்புமை உடையன.   பஞ்சவாடியில் இயற்கை காட்சிகள் வழங்கிய இன்பத்தில்  உச்சியில் சீதையும் ராமனும் நடத்திய வாழ்வின்  சொல்லோவியம்  ஈடனை நினைவுபடுத்தும். மில்டனின்  சோலை  சுவர்க்கம். ஒரு மலையின் அகன்ற முடிவில் அமைந்தது. மலைச்சிறுவில் நெடிதுயர்ந்த நிழல் தரும் மரங்களை விட ஈடன் சோலையில் எல்லை காப்பான மரங்கள் ஓங்கி உயர்ந்தவை அவற்றை மிஞ்சியவை  சோலை மரங்களின் உயரம். இந்த வர்ணனை ராமனுக்கும் அகத்திய முனிவர் வழங்கியது  பஞ்சவாடி சித்தரத்தை நினைவூட்டும் பஞ்சவடியைக் கம்பன் காட்டும் போது

                       “ஓங்கும் மான் ஓங்கிய மலை ஓங்கிய மலை ஓங்கிய

                        பூங்குளை குலவும் குளிர்  சேலை புடை விம்மி  

                        தூங்கு குதிரை  ஆறு  தவல்  சூழலாது ஓர் குன்றின் 

                        பங்கர் உளதால் உரையுள் பஞ்சவாடி “

      என்பார்.  உண்பதற்கு கனியும் அருந்துவதற்கு அமுதமும் ஈடன் சோலையை விட மிகுதியாக கிடைத்தன.  பஞ்சவாடியில் நீராட ஆறும் உணவுக்கு வாழையும் செந்நெல்லும் உள.  அங்கே சிங்கமும் யானையும் அவர்களை விளையாட்டுக்கு காட்டி மகிழ்வித்தன .  இங்கே சீதையுடன் விளையாட  நாரைகளும் அன்னமும்  உள்ளன. ஈடன் சோலை வடிவில் மில்டன் ஆதாம் ஏவாளின் குற்றமில்லாத பாலுணர்வை காட்ட,  இங்கே  கம்பன் ராமன் சீதையின் இடையே  அளவிலான   அன்பை சொல்லி செல்வதைப் பார்க்க முடியும்.

            தாமரை மலர்கள் தங்கிய சக்கர வியூக பறவைகளைக் கண்ட தலைவன் மங்கையின் கொங்கைகளை  நோக்குகிறான்.  அவன் பார்வையைக் கண்டு நாணிய சீதையின் பார்வை மணிகளை  நிறைந்த  மனக்கொன்றுகளின்  பதிகிறது.  அக்கொன்றுக்கு நிகரான ராமன் தோள்களைக்  கண்ணால் காண, அவன் அழகை  நினைத்து மகிழ்கிறாள்.  சீதையின் நடை தோற்றத்தை போல் ஒதுங்கி நடக்கும் அன்னத்தைக் கண்ட ராமன்  சீதையின் நடையழகை மீண்டும் நோக்கி குறுநகை புரிகிறான். அதைப் பார்த்த நீரூண்டு வந்த யானை இராமன் நடையழகை கண்டு விலகி  நடப்பதைக் கண்ட சீதை அதன் நடையிலும் செம்மார்ந்த ராம நடையினை நினைத்து புதியதோர் புன்முறுவல் செய்கிறாள்   நதிக்கரையில் மண்டிய கொடிகளைக் கண்ட நாயகன்  கொடியைப்போல்  வளையும் சீதையின்  இடையை காண்கிறான்.  அது  கன்னங்கரிய குவளை  மலர் கட்டுகளுக்கிடையே செந்தாமரை மலர்களைப்போல அவள் இடை சிவந்து காணப்படுகிறது.  இதைக் கண்ட சீதையும் நாண உணர்வை கடந்து கரியனும் கரிய கமலக்கண்ணனை நேரே நோக்குகிறாள்.

முடிவுரை

            மொழிகள் வேறாயினும் கவிஞர்கள் மனதளவில் ஒன்றுபட்டு இருப்பதைக் காணலாம். இயற்கையாய் இணைந்த காதலர்கள் வாழ்வில் இன்புற்று இருப்பதை கம்பரும் மில்டனும் ஒரே மாதிரியான கருத்துக்களோடு அழகுநயம்பட கூறியிருப்பது போற்றுதலுக்குரியது ஆகும். இவ்வாறு இயற்கையோடும் இசைந்த இன்ப வாழ்வை இரு பெரும் கவிஞர்களும் ஒத்த நிலையில் படைத்துள்ளனர்.  ஈடன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் அமைந்த இன்ப வாழ்வு அவர்களுக்கு நிலைக்கவில்லை.  அது சாத்தான் சதியில் ஈடன் வாழ்வு அழுகிறது.  அதேபோல ராமன் சீதைக்கும் பஞ்சவாடி இன்பமாக இருக்கிறது.  அந்த இன்ப வாழ்வு அவர்களுக்கு நீடிக்க வில்லை.  இங்கே சூர்ப்பனகையின்  சூழ்ச்சியால் சீதையின்  ராமனின் பஞ்சவாடி வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனாலும் இருவர்களுடைய வாழ்க்கையும் இன்பமுடையதாகவும் உலகம் உள்ளவரை மக்கள் இன்னும் அவர்களைப் பற்றி பேசுவதையும் கதைப்பதையும் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நாளும் காணலாம்.

பார்வை நூல்கள்

1.கம்பராமாயணம், ரா.சீனிவாசன், செல்லம்மாள் தெரு, சென்னை – 30, மூன்றாம் பதிப்பு – 2000

2.கிறுத்துவமரபு, ஜான் மில்டன், மொழிபெயர்ப்பு, சாமுவேல் சிமன்ஸ் வெளியீடு, 1667

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சு.கலைச்செல்வன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130

மின்னஞ்சல் : mskalai28590@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »