பெற்றோர்கள் | சிறுகதை

பெற்றோர்கள் | சிறுகதை

பெற்றோர்கள் | சிறுகதை

முனைவர் து.கிருஷ்ணன்

உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர் கல்லூரி – ஓசூர்.

——————————————————————————————————————————————-

ஊரின் மத்தியில் மகிழுந்து வந்து நின்றதும் ஊரில் உள்ள மக்கள் எல்லோரும் அதிசயமாக பார்த்தார்கள். அந்த ஊருக்கு அதிகமாக பேருந்து வசதி வாய்ப்பு குறைவாக உள்ளதால் மக்கள் அப்படி பார்த்தார்கள் அந்த மகிழுந்தில் வந்தவர்கள் மிகவும் வசதி படைத்தவர்களாக தெரிந்தார்கள்.

மகிழுந்தில் வந்தவர்கள் ஊரில் உள்ள பெரியவர்களையெல்லாம் ஒன்று சேர்த்தனர். அவர்களுடைய காதில் ஏதோ கூறினார். கூட்டத்தில் இருந்த ஊர் கவுண்டர், பல ஆண்டுகளாக அந்த ஊரில் இருந்து வாத்து மேய்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தது ஒரு குடும்பம் அந்தக் குடும்பத்தில் ஒருவரை அழைத்து வரச் சொன்னார்.

அவனும், உடனே சென்று அந்த குடும்பத்தில் உள்ள அப்பா, அம்மா பதினைந்து வயதுடைய ஒரு மகளையும் அழைத்து வந்து நடுவீதியிலுள்ள ஆலமரத்தடியில் நிறுத்தினார். அவர்களும் என்னமோ ஏதோ என்று பயந்து பதறிபோய் நின்றார்கள். அப்பொது மகிழந்தில் வந்தவர் பெசத் தொடங்கினார். அதோ அங்கே நிற்கின்ற பெண்பிள்ளை என்னுடைய சொந்த பெண் பிள்ளை என்றான். எல்லொரும் அந்த வார்த்தை கேட்ட உடனே திடுக்கிட்டுப் போனார்கள்.

மேலும் அவர் பேசினார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிறைய சொத்து இருந்தது. இப்பவும் இருக்கிறது. என்னுடைய அம்மா, அப்பா உன்னுடைய மனைவி குழந்தைப் பேருக்காக தாய் வீடு போய்யிருக்கிறாள். எங்கள் சொத்துக்கு அண் வாரிசு வேண்டும் பெண் பிள்ளை பெற்றாள் நீங்க இங்கே வராமல் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள் என்று கூறிவிட்டு என்னை மனைவியிடம் அனுப்பினார்கள். நானும் அங்கே போன பிறகு ஒரு மருத்துவமனையில் என் மனைவியிடம் அப்பா, அம்மா சொன்ன செய்தியைக் கூறி, எங்கேயும் போய் வாழ முடியாது. இந்த குழந்தை எடுத்தக்கொண்டு எங்கேயாவது போட்டு விட்டு, குழந்தை இறந்தே பிறந்தது என்று சொல்லிவிட்டு அதே வீட்டில் வாழலாம் என்று கூறினேன். அதற்கு என் மனைவியும் சரியென்று தலையாட்டினாள். அப்போது நாங்கள் சரியாக முடிவு எடுக்க தெரியாமல் அந்த பெண் குழந்தையை மகிழுந்தில் எடுத்தக்கொண்டு இந்த ஊரில் ஓடும் ஆற்றுப்படுக்கை பக்கத்தில் போட்டு விட்டு வந்து மகிழுந்தில் ஏறி உட்கார்ந்துக் கொண்டு சாளரத்தின் வழியாக, அந்த ஆற்றின் படுக்கை ஓரமாய் வாத்து மேய்த்து வந்த ஒரு கணவன் மனைவியும் நமக்கு பல ஆண்டுகள் குழந்தை பேரு இல்லாததை சொல்லி அந்த பெண் குழந்தையை எடுத்து மகிழ்ச்சியாக கொஞ்சியதை பார்த்துவிட்டு சென்றோம்.

எங்க ஊருக்கு சென்று அப்பா, அம்மாவிடம் பெண் குழந்தை இறந்தே பிறந்தது. அடுத்தது ஆண் குழந்தை பெற்றுக்கொள்வோம் எனக் கூறிவிட்டு நாங்கள் மன வேதனையோடுஎங்கள் அறைக்குள் போய்விட்டோம். எங்களுக்கு பதினைந்து ஆண்டுகளாக குழந்தை பேரு இல்லை. அதனால் எங்கள் பெற்றோர்களால் பல தன்பத்iதை அனுபவித்தோம். போன வாரம் தான் எங்க அப்பா, அம்மா ஒருவர் பின்னால் ஒருவர் இறந்து போனார்கள்.

ஒவ்வொரு நாளும் பெற்ற குழந்தையை யாருக்கும் தெரியாமல் போட்டு விட்டு வந்து விட்டோம் என்று நினைத்து நினைத்து மனதிற்குள்ளே வருத்தப்பட்டோம். அதனால் எங்க பெண் பிள்ளையை எங்களோட அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சி கதறி இருவரும் அழுதார்கள். இதையெல்லாம் கேட்ட அங்கு இரந்தவர்கள், நீ உங்க அப்பா, அம்மா உடன் போமா என்று கூறினார்கள். அதற்கு அந்த பெண் பிள்ளை நான் போக மாட்டேன் எங்க அப்பா, அம்மா இவர்கள் தான். என்று வாத்து மேய்ப்பவர்களை கை காட்டியது. அவர்களும் அழதுக்கொண்டே அப்பா, அம்மாவோட போம்மா என்று கூறினார்கள். அதற்கு அந்த பெண்பிள்ளை முடியாது என்று கூறிவிட்டு கூட்டத்தை விட்டு ஓடினாள். கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பெண்பிள்ளை இழுத்துவந்து மகிழுந்தில் ஏற்றினார்கள். அங்கு இரந்தவர்களுக்கு நன்றி சொல்லி மகிழுந்து வேகமாகப் புறப்பட்டது.

வாத்து மேய்க்கும் அப்பா, அம்மா அவர்கள் மன வேதனையோடு வீட்டிற்கு சென்று மீண்டும் அவர்கள் செய்யும் வேலையைத் தொடங்கினார்கள்.

அந்த பிள்ளை அழைத்தக்கொண்டுபோய் பத்தாம் வகுப்பு தேர்வு முவு வந்தது நல்ல மதிப்பெண் எடுத்ததைப் பார்த்து ஒரு தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பில் சேர்த்தார்கள். வீட்டை பார்த்தால் பெரிய பங்களா போல்காட்சியளிக்கிறது. நான்கு, ஐந்து மகிழுந்து உள்ளது. வீட்டு வேலை செய்யவும் தோட்ட வேலை செய்யவும் நிறைய கூலியாட்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லாமே இரந்தும் அது அவளுக்கு பிடிக்கவில்லை, நகரத்தில் ஒரே நெரிச்சல் எங்கு பார்த்தாலும் புகைப்படலம், வெட்டு குத்து, கொலை, பொய், திருட்டு போன்றவையெல்லாம் பிடிக்கவில்லை. நகரத்தில் எல்லாப் பொருளும் காசு கொடுத்தால்தான் கிடைக்கும்.

            அவள் வாழ்ந்த கிராமத்தில் அன்பும் அரவணைப்பும், பண்பும், பாசமும் இருக்கும். பொய், திருட்டு கிடையாது. மக்கள் எல்லோரும் யதார்த்தமாகப் பழகுவார்கள். ஒருவரிடம் இரப்பதை மற்றொருவர் பிடிங்கி சாப்பிடுவதில்லை, ஊரை சுற்றி எங்கு பார்த்தாலும் பசுமையாகத் தெரியும். ஒரு பக்கம் வாழைத் தோட்டம் மற்றொரு பக்கம் தென்னந்தோப்பு, நெல், கரும்புவயல்கள், ஆறு சலசல என ஒலி எழுப்பிஓடிக்கொண்டிருக்கும். அதில் மீன் துள்ளி குதித்து விளையாடும். அதைப் பிடிக்க மீன்கொத்திப் பறவை கொக்கு ஆற்று ஓரத்தில் உள்ள மரத்தில் அமர்ந்திருக்கும் வலையில் நண்டு எட்டி எட்டி பார்க்கும். வாய்க்காலில் வரப்பின் மீது துள்ளி குதிக்கும் மீன்களை ரசித்த வண்ணம் மக்கள் பார்த்தக்கொண்டுப் போவார்கள்.

எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து என்னுடைய அப்பா, அம்மாவோட தான் வாத்து மேய்க்கப் போகும்பொதெல்லாம். ஆற்றில் நீந்தி நிச்சல் கற்றுக்கொண்டேன். துள்ளி விளையாடும் மீனை பிடித்து மீண்டும் ஆற்றில் விட்டு மகிழ்ந்தேன். இப்படி வாழ்ந்த வாழ்க்கையைவிட ரகர வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை. அதனால், பெற்ற அப்பா, அம்மாவைவிட வாத்து மேய்த்த அப்பா அம்மாதான் எனக்கு முக்கியம். நீங்கள் என்னை பார்க்க வேண்டும் என்றால் அங்கு வந்து பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவள் வாத்து மேய்க்கும் அப்பா அம்மாவிடம் மகிழ்ச்சியோடு வந்து சேர்ந்தாள்.

மேலும் பார்க்க,

1.மறையாத வடு

2. பாலம் | சிறுகதை

3.கோபம் | சிறுகதை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here