தமிழரின் வீர விளையாட்டில் சிலம்பம்|கி.சின்னசாமி

தமிழரின் வீர விளையாட்டில் சிலம்பம் - கி.சின்னசாமி
        காதலும் வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும் மறப்பண்பு உடையோராகவும் வீரப்பற்று மிக்கோராகவும் தமிழர்கள் விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

தமிழரின் வீர விளையாட்டுக்கள்

1) சிலம்பம்

2) வழுக்கு மரம்

3) சல்லிக் கட்டு

4) கபடி விளையாட்டு

5)வில்வித்தை ஆகியனவாகும்.


சிலம்பம்
           
          சிலம்பம் என்பது ஒருதடியடி தமிழர் தற்காப்புக்கலைமற்றும் தமிழர்களின் வீர விளையாட்டு ஆகும். வழக்கில் இவ்விளையாட்டைக் கம்பு சுற்றுதல் என்றும் கூறுவர். இதுதடியைக் கையாளும் முறை, கால் அசைவுகள், உடல் அசைவுகள் மூலம் தம்மைப்பாதுகாத்து கொள்ளுதல் எனப் பல கூறுகளைக் கொண்ட விரிவான தற்காப்புக் கலை ஆகும். சிலம்பாட்டத்தில் எதிராளி வீசும் கம்பினைத் தடுத்தல், எதிராளியின் உடலில் சிலம்புக்கம்பினால் தொடுதல் (தொடுபுள்ளி) போன்றன அடிப்படையாகக்கொள்ளப்படுகிறது. சிலம்பாட்டத்தைக் கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் தேவை. இதற்கென சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன. பெற்ற ஆட்டக்காரர்களே சிலம்பாட்டப் போட்டிகளில் விளையாடுவர், சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு பயிற்சி தற்காலத்தில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலரும் சிலம்பாட்டத்தைக் கற்று விளையாடி வருகின்றனர். திருவிழா, கோயில் விழாக்கள், மற்றும் ஊர்வலங்களில் சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும். இக்கலை மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களில் பெருமளவு நடக்கிறது.


வரலாறு
            மக்கள் தம்மைபுலி போன்ற விலங்குகளிடம் இருந்துகா ஈத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள இந்தக் கலையைப் பயன்படுதினர். தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி,வேல், வாள், கம்பு போன்ற பலவிதமானஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் (சிலம்பு ) ஆகும்.


சிலம்பாட்ட வகைகள்
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு. அவையாவன


1) துடுக்காண்டம்

2) குறவஞ்சி

3) மறக்காணம்

4) அலங்காரச் சிலம்பம்

5) போர்ச் சிலம்பம்

6) பனையேறி மல்லு

7) நாகதாளி

8) நாகசீறல்
9)கள்ளன்கம்பு    ஆகியனவாகும்.


தொன்மை

            சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மை யானவை. கி.மு.2000க் கும் முற்பட்ட ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில், 32 வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாகக் கருதப்படுகிறது.


பெயர்க்காரணம்
            சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் போது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப் பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை,விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, சிலம்பம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

            எனவே, மலை நிலக் (குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், சிலம்பன் என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு சிலம்பம் என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே வாழும் பழங்குடியினருள் “சிலம்பரம்” என்ற பெயரும் வழக்கில் உள்ளது. உள்ள மலைப் பகுதிகளில்

இலக்கியத்தில் சிலம்பம்
            சிலம்பம் சுமார் 10000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாகசிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியததில் குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு கத்த் போன்றவை ஒருகடையில்விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிகஆர்வமுடன் வாங்கிச்செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளின் “கோல்” என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில்,

”வீசுதண்டிடை கூர்மழு ஒக்குமே”
           
        என்ற வரிகள் மூலம், “தண்டு) என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்பு விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த “பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவாம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன.

ஆயுதப்பிரிவு


            சிலம்பத்தில் ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம். எடுத்தெறிதல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும்,
வல்லவர்களாக விளங்கினர்.

            இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலும், இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது.தமிழக அரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக பட்டயப்படிப்பாகநடத்தப்படுகிறது. பாளையங்கோட்டை தூயசவேரியர் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் தன்னாட்சி கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், தென்பாண்டி தமிழரின் ஏசிலமாவரலாறும் அடிமுறைகளும் என்ற நூலை வெளியிட்டுள்ளது.


தற்காப்பு கலை பயிற்சி பயன்கள் – உடற்பயிற்சி நன்மைகள் 

            தற்காப்பு கலை பயிற்ச் பெறுபவருக்கு உடல், மனவெழுச்சிகள் மற்றும் ஆன்மீகஆரோக்கியம் போன்ற பல நன்மைகளை விளைவிக்கும். தற்காப்புகலைகளில் முறையான பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் ஒரு நபரின் உடல் நலன், உடற்கட்டு போன்றவற்றை மேம்படுத்தப்படலாம். வலிமை, சகிப்பு தன்மை, நெகிழ்வு. இயக்கம் ஒருங்கிணைப்பு முதலியவற்றை மேற்கொள்வதன் மூலம் முழு உடலையும் செயல்பாட்டில் வைத்திருப்பதோடு, முழு தசை மண்டலமும் ஒருங்கிணைந்து செயல்பட தூண்டப்படுகிறது. மனநலத்திற்கான நன்மைகள், சுய மரியாதை, தன்னிறைவு, உணர்ச்சி மற்றும் ஆன்மீக நல்வாழ்வு ஆகியவற்றுக்காக தற்காப்பு கலை பயிற்சி உதவுகிறது. பல தற்காப்பு கலைப் பள்ளிகள் முழுமையாக சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்துகின்றன.

தற்காப்பு கலையின் பயன்கள்

        நம் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.
 நம் உடலில் ஓடும் இரத்தத்தின் அளவை சீராக்குகிறது.
நம் மூளையின் செல்களை வலுப்படுத்தி சுறுசுறுப்பான ஆற்றலையும், ஞாபக சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
 உறுதியான உடல் அமைப்பைக் கொடுக்கிறது.
உடலும், மனதும் கட்டுப்பாடுடன் செயல்பட வைக்கிறது.
இறுதியாக எதிரிகளிடம் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

இது ஆண்கள், பெண்கள் என இருபாலாருக்கும் நல்லஉடற்பயிற்சியாக இருக்கும்

சுருள் பட்டை

     சுருள் பட்டை என்பது நீண்ட வாள். இது மிகவும் வளையக்கூடிய மெல்லிய இரும்பால் ஆனது அதேசமயம் சதையை வெட்டகூடிய அளவுக்கு கூர்மையானது.
 இது ஒரு இன்ச் அகலமும் 3 அடி நீளமும் கொண்டது. சுருள் போல மடித்தும் வைத்து கொள்ளலாம்.
 பொதுவாக இதை இடுப்பு பட்டையாக அணிந்து கொள்வர்.

முடிவுரை
   தமிழர்களின் வீரவிளையாட்டானா சிலம்பம் நெடுகாலமாக வழக்கத்தில் இருந்துள்ளது.சிலம்பட்டத்தின் வளர்ச்சி சில காலம் குறைந்து இருப்பினும் தற்பொழுது சிலம்பத்தின் மீது மாணவர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருப்பதால் சிலம்பம் வளர்ச்சி அடைந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லது இந்தியாவின் பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் வரவேற்பு பெற்றுள்ளது. சிலம்பத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசும் ஈடுபாடு காட்டி வருகிறது. அதேப்போல்சிலம்பம் கற்றுக்கொடுக்கும் பள்ளிகளுக்கும், ஆசாங்களுக்கும் தகுந்த அங்கீகாரம் வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்,
கி.சின்னசாமி,
முதுகலைத்தமிழ் இரண்டாமாண்டு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
பசுமலை, மதுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here