Thursday, July 16, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் கண்ணீர்|கவிதை|திருமதி. பா. அக்தர்

கண்ணீர்|கவிதை|திருமதி. பா. அக்தர்

கண்ணீர் - திருமதி. பா. அக்தர்
💎 நாம் பிறந்ததும்

நம் முதல் உணர்வு !

மழலைகள் பசிக்குப்

பேசும் மொழி !

 
💎 சிறுபிள்ளைகள்

சிறுவாடு கேட்க தேவை

விடலைகள் காதலைச் சொல்ல

துணைக்கு அழைப்பது!

 
💎 திருமணம் முடிந்ததும்

தாய்வீடு பிரியும் தருணம்

காதல் இல்லா கணவன்

கடுஞ்சொல் கேட்டதும்

கேட்காமலே வருவது !

 
💎 கடவுள் திருவடி சேரும்போது
 
மற்றவருக்கு மறக்காமல்

கொடுத்துச் செல்வது

ஆரம்பம் முதல் முடிவு வரை

முடிவிலா தொடர்கதை

கண்ணீர்! கண்ணீர்!

 
💎 தொடுவானம் தொடும் தூரம்

தொடுவானம் தொடும்

தூரம் வியப்பில்லை..

வானம் என்றுமே

பறவைக்கு இலக்கில்லை…

 
💎 வாழ்க்கையின் இலக்குகள்
 
யாருக்கும் சமமில்லை…

அவரவர் தேடல்களில்

அவரவர் வானங்கள்

 
💎 தூரங்கள் எதுவும் தொய்வில்லை

துன்பங்கள் எவருக்கும் நிலைப்பதில்லை

அச்சமின்றி அனுதினமும் ஆசைப் படு

அகிலமனைத்தும் உன் தொடுவானம்

தூரங்களைத் தொலைத்துவிட்டுத்

தொட்டு விடு வானத்தை…!

 

பனிவிழும் ரோஜா

💎 மங்கையர் கூந்தலில் மகுடமாய்.!

காளையர் வர்ணனையில் கவிதையாய்.!

மழலையின் பாத வர்ணமாய்!

காதலர்களின் சின்னமாய்!

கவிஞர்களின் எண்ணமாய்!

கடவுள் சிலையில் தெய்வீகமாய்!

கல்லறை தோட்டத்தில் கௌரவமாய்!

காண்போர் நெஞ்சில் குதூகலமாய்!

பூந்தோட்டத்தில் புது மலராய்!

புன்னகைப்பூக்கும்

இளவரசியே!  பனிவிழும் ரோஜாவே..!!

 
கவிதையின் ஆசிரியர்,

திருமதி. பா. அக்தர்

தமிழ் ஆர்வலர்,

இராசிபுரம்,

நாமக்கல் மாவட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »