விடியலைத் தேடுகிறேன்

பொழுதுபுலர்ந்து விட்டது

♥ விடியலைஇன்னும்

   தேடிக்கொண்டிருக்கிறேன்..

   சாலையோரத்தில்

  அம்மாபிச்சைப் போடு

  என் காதுகளில் ரீங்காரம்

  விடியலைத் தேடுகிறேன்..!

 

       ♥  குட்டிச்சுவரில்

வேலையில்லாப் பட்டதாரிகள்

விடியலைத் தேடுகிறேன்..!

 

      ♥ பூங்காக்களில்

        சிருங்கார ராஜாக்களாக

        சோம்பேறிகள்!

        விடியலைத் தேடுகிறேன்..!

 

      குடிமகன்களின்

மகத்தான வெற்றிகளால்

வீதியிலேப் பிள்ளைகள்..

விடியலைத் தேடுகிறேன்..

 

  ♥   கல்வியை

வியாபாரம் செய்யும்

விகடகவிகள் பலபேர்

படிப்பை அறியத் துடிக்கும்

பாமரச்சிறுவர்கள்கன்னத்தில்

கைவைத்தபடியே

விடியலைத் தேடுகிறேன்..!

 

  ♥   குடும்பம் என்ற

கதம்பத்தில்ஒற்றுமையைக்

காணத்துடிக்கின்றேன் !

நீயா.. நானா.. போட்டியில்

விவாகரத்து வாங்கி

வாசலோடு பிரிகிறார்கள் !

விடியலைத் தேடுகிறேன்..!

 

  ♥   தொலைந்து போன விடியல்

தூரத்தில் இல்லை

கைக்கு எட்டும் தூரம்தான் !

கண்ணால் கண்டு

கைகளினால் பூட்டிடுவேன்

விடியலை ஒரு நாள் !

 

    ♥    தொலையாமல் இருக்கும்

புன்னகையைத் தொலைத்து

புகைத்துக் கொண்டிராதே

பூமியில் உன் பெயரினைச் சொல்ல

போடு விதையை,

முளைக்கட்டும் மரம்அது

பூப்பூக்கட்டும் கனியாகட்டும்..!

 

  ♥   பம்பரமாய் சுழன்று

வெற்றி பெறுநான்

விடியலைத் தேடுவதை

நிறுத்தி விடுகின்றேன்..!

கவிஞர் முனைவர்.க.லெனின்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here