மண்மகள் |கவிதை| முனைவர் நா.சுபலட்சுமி

மண்மகள் கவிதை ந.சுபலட்சுமி

📜  மண்மகள் உறங்கும்


கண்ணயர்வில் எங்கும்
 

பச்சைப் புல்வெளி


போர்த்திய போர்வை


பசும்புல்வெளியில்


பைந்நுனிகளிலே


பனித்துளியின் பரவசம்..!


 

📜 கொட்டும் அருவிகளில்


திக்கெட்டும் ஆளும்


இறைவனின் எல்லையில்லா


ஆனந்தத் தாண்டவம்..!


 

📜 ஆர்ப்பரிக்கும் கடல்களில்


இயற்கையின் இதயத்துடிப்பு


பொழியும் மழைத்துளிகளில்


இயற்கையின் சுவாசம்..!


 

📜 பறந்து விரிந்த


வெண்குடையாய் உலாவும்


வான் பரப்பில் வைரத்


துண்டுகளாய்  நட்சத்திரங்கள்..!


 

📜 மஞ்சள் வெயிலாய்  


மக்கள் வாழ்வில்


இருள்நீக்கும் சிவப்பு


கம்பள விரிப்புகள் ..!


 

📜 வானில் சிறகடித்து
 

பறந்து இரைதேடி


சுற்றித்திரியும் பறவைகள்


இயற்கையின்


சாகசப்பிறவிகள்..!

 

📜 பறவைகளின் இருப்பிடமாய்


பூக்களின் கூடாரமாய்


மணத்தைப் பரப்பி


அடிமனதை வருடிடும்..!


 

📜 வண்ண  மலர்கள்


இயற்கையின் கொடைகள்


காடுகளைப் பிரசவிக்கும்


கருவறைகளாய் மரங்கள்


இயற்கை மகளின்


இறவா வரங்கள்..!


 

📜 எட்டா உயரமாய்  


ஏற்றத்தைப் போதிக்கும்
 – மலைகள்

பூமிப்பந்தின்
கர்வ கிரீடங்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


முனைவர் நா.சுபலட்சுமி,


தமிழ்த்துறை,


உதவிப் பேராசிரியர்,


டிரினிடி மகளிர் கல்லூரி,


நாமக்கல் மாவட்டம்.

 

Leave a Reply