Wednesday, June 17, 2026
Home சிறுகதைகள் குடும்பச்சிறுகதைகள் பாட்டியின்ஆசை|சிறுகதை|முனைவர்.இரா.செல்வராணி

பாட்டியின்ஆசை|சிறுகதை|முனைவர்.இரா.செல்வராணி

பாட்டியின் ஆசை - முனைவர்.இரா.செல்வராணி
பாசனூர் என்ற கிராமத்தில் அழகி என்ற 70 வயதுடைய  பாட்டி வசித்து வந்துள்ளாள்,  அவளுக்கு ஒரு மகன் வழி பேத்தி இருந்தாள். அவளின் பெயர் கஸ்தூரி. பாட்டிக்குப் பேத்தி என்றால் கொள்ளைப் பிரியம். தன் பேத்திக்குக் கேட்பது எல்லாம் வாங்கிக்  கொடுத்து மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளாள். அவளும் வளர்ந்து பள்ளிக்குச் சென்று வருகிறாள். பாட்டி ரொம்ப  மகிழ்ச்சியாக இருந்தாள். தன் பேத்தியிடம் நீ நன்றாகப் படித்து உயர்ந்த பதவியில் அமர வேண்டும் என்கிறாள். அதற்கு கஸ்தூரி கண்டிப்பாக உன் ஆசையை நிறைவேற்றுவேன் என்கிறாள்.  பாட்டியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்.  காலங்கள் கடந்து சென்றன.
               
கஸ்தூரி பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச்  செல்கிறாள். பாட்டி தினமும்  தன் பேத்தி கல்லூரிக்கு சென்று வருவதற்குள் அவளுக்குப்  பிடித்த  உணவை சமைத்து வைத்து விட்டு மாலை நேரம் அந்த ஊருக்குள் வரும் பேருந்தை எதிர்பார்த்து காத்திருப்பாள். பேருந்தும் வந்து நின்றதும் அதிலிருந்து பேத்தி இறங்கியதும் அவளின் கையைப் பிடித்து அழைத்து வந்து சமைத்த உணவை உண்ணச் செய்வாள். இப்படியே மூன்றாண்டுகள் ஓடி விட்டது. கஸ்தூரியும் இளங்கலை படிப்பை முடித்து விட்டு முதுகலை  படிப்பு படிப்பதற்கு மீண்டும் கல்லூரியில் சேருகிறாள். ஆறுமாத காலம் சென்றது. பாட்டிக்கு வரவர உடல் நலம் குறையத் தொடங்குகிறது. படுத்த படுக்கையில் இருக்கிறாள். கஸ்தூரிக்குப் பாட்டியை இப்படி பார்ப்பது வருத்தமாக இருந்தது.
               
ஒருநாள் காலை பாட்டிக்குத் திடீரென்று மயக்கம் வந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழியிலேயே இறந்து விடுகிறாள். கஸ்தூரி மிகவும் வருந்துகிறாள், இப்படியே ஒரு வருடம் முடிகிறது ,அவளின் முதுகலைப் படிப்பும் முடிந்து விடுகிறது. வரன் வருகிறது. திருமணமும் நன்றாக முடிந்து இரு குழந்தைகளும் பிறந்தன. அவளின் கணவன் அவளை மீண்டும் முனைவர் பட்டப் படிப்பு படிக்க வைக்கிறான், அவளும் நன்றாகப் படித்து பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்கிறாள். அப்போது நினைக்கிறாள் பாட்டியின் ஆசைப்படி எல்லாம் நடந்து விட்டது. ஆனால் அதனைக் காண அழகி பாட்டி நம்முடன் இல்லை சற்று வருத்தமாக உள்ளது. ஆனாலும் பாட்டி தெய்வமாக என்னை வாழ்த்தி கொண்டிருப்பார் என நம்பி பாட்டியை வணங்குகிறாள் கஸ்தூரி.
சிறுகதையின் ஆசிரியர்
முனைவர்.இரா.செல்வராணி
                                                                                          
உதவிப் பேராசிரியர்
                                                                                            
தமிழ்த்துறை
                                                                                             
J.H.A.அகர்சன் கல்லூரி
                                                                                           
மாதவரம், சென்னை -60

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »