Saturday, July 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் வாங்க தேடலாம்|கவிதை| அர. செல்வமணி

வாங்க தேடலாம்|கவிதை| அர. செல்வமணி

வாங்க தேடலாம்கவிதை அர. செல்வமணி

📜 எங்கே எங்கே எங்கே காடுகள்


வாங்க தேடலாம் வந்து சேருங்க


காடுக ளில்லெ மரங்களு மில்லெ


வாடுது உலகம் வைரசு னாலே


மூச்சுக் காத்தும் மோச மானதே


பொசுக்குது நல்லா பூமியில் சூடே


கடலுல ஆறுல கழிவுக கூடி


வாட்டுது மக்கள நோவு களாலே


 

📜 வளங்களை யெல்லாம் எடுத்தது யாரு


வம்புல மக்கள விட்டது யாரு


பருவந் தவறுது பயிர்கள் போகுது


வறட்சியும் வெள்ளமும் வாட்டுது பாரு


ஏழைகள் மேலும் ஏழை களாக


எடுப்பதி லெல்லாம் கொழுப்பது யாரு


கொரோனா வந்து கொன்னது ஏழையெ


கோடி கோடியாக் குவிச்சது சிலரே


 

📜 சாதி மதத்துல மக்களத் தள்ளி


குடியில கூத்துல கொடுமய மறச்சி


பட்டினி போட்டுப் பலரையும் அழிச்சுப்


படிப்பைக் கெடுக்கப் பலதும் பண்ணி


இயற்கய அழிச்சி எல்லாஞ் சுரண்டி


எடுக்கற முதலால் எல்லாம் போகுதே


முதலே முதலே முதலே எங்கும்


மோதி அழித்து மூட்டுது போரே


 

📜 தேடுக தேடுக தேடுக படிப்பை


தெரியும் அதனால் தெளிவாய்ப் பலவும்


சூழலை மொழியை இனத்தை அழித்து


ஏழையை வாட்டுவ தெதுவெனத் தேடுக


ஒருசிலர் வாழ மிகப்பலர் வாடி


உருகிச் சாவது ஏனெனத் தேடுக


தேடுக தேடுக தேடுக வளம்பெறத்


தீர்வு கிடைக்கத் தேடுக நன்றே!


கவிதையின் ஆசிரியர்

அர. செல்வமணி,


அஞ்சற்பெட்டி எண்- 21,


பாசக்குட்டைப் புதூர்,


சத்தியமங்கலம்,


ஈரோடு மாவட்டம் – 638401.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »