Sunday, June 28, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் பசுமை கொண்ட வானம்!|கவிதை|நவநீதனா ச

பசுமை கொண்ட வானம்!|கவிதை|நவநீதனா ச

பசுமை கொண்ட வானம்! - நவநீதனா ச

 ⛅ உவமை கூற இயல்வதுண்டோ?


அன்னை அவள் எழிலைக் கண்டு..!

 

 ⛅ வளியென்னும் வானவன்,


நிலமென்னும் மங்கைக்கோ,


கூந்தலாகிப் பறக்கின்றான்..!

 

 ⛅ நெருப்பினது துணையாலே,


ஒளியான கற்பகமே!


ஆகாயத்தில்,


நிலவைத்தேடி அலைகின்றாயோ?..!


 ⛅ மார்கழியின் இதழ்களிலே,


பன்னீர் தெளிக்கும் பனிப்புகையே,

விழிகளிலே வனப்பாக வசிக்கின்றாய்..!


 ⛅ நீல வண்ணமாய்க் கடலலையே,


உம் தோள் போர்த்திய விந்தை
 

என்னவோ?!
புது விளையாட்டோ?..!


 ⛅ மையலுற வைக்கும் உம்மை,


பூதத்தில் ஒன்றென


யாமழைத்தால்,


சீற்றமதைக் கொடுப்பாயோ?


பசுமை சுமக்கும் தாரகையே..!


 ⛅ ஏனோ விடை


வனைய மறுக்கின்றாய்?!!


குயிலிசைகள் கேட்டிடவே,


மங்கையெனும் மழையினிலே,


காதலுற்றாயோ கவிநயமே..!


கவிதையின் ஆசிரியர்

நவநீதனா ச


கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,


கோவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »