⛅ உவமை கூற இயல்வதுண்டோ?
அன்னை அவள் எழிலைக் கண்டு..!
⛅ வளியென்னும் வானவன்,
நிலமென்னும் மங்கைக்கோ,
கூந்தலாகிப் பறக்கின்றான்..!
⛅ நெருப்பினது துணையாலே,
ஒளியான கற்பகமே!
ஆகாயத்தில்,
நிலவைத்தேடி அலைகின்றாயோ?..!
⛅ மார்கழியின் இதழ்களிலே,
பன்னீர் தெளிக்கும் பனிப்புகையே,
விழிகளிலே வனப்பாக வசிக்கின்றாய்..!
⛅ நீல வண்ணமாய்க் கடலலையே,
உம் தோள் போர்த்திய விந்தை
என்னவோ?! புது விளையாட்டோ?..!
⛅ மையலுற வைக்கும் உம்மை,
பூதத்தில் ஒன்றென
யாமழைத்தால்,
சீற்றமதைக் கொடுப்பாயோ?
பசுமை சுமக்கும் தாரகையே..!
⛅ ஏனோ விடை
வனைய மறுக்கின்றாய்?!!
குயிலிசைகள் கேட்டிடவே,
மங்கையெனும் மழையினிலே,
காதலுற்றாயோ கவிநயமே..!
கவிதையின் ஆசிரியர்
நவநீதனா ச
கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.