Saturday, July 4, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் வருதுயர் மறந்தேன் நானே!|கவிதை|கவிஞர் அர. செல்வமணி

வருதுயர் மறந்தேன் நானே!|கவிதை|கவிஞர் அர. செல்வமணி

வருதுயர் மறந்தேன் நானே!-செல்வமணி
📜 வானுலவும் நிலவின் ஒளியில்
மனமகிழ்ந் தாடும் களியில்
கானுலவும் புள்ளின் இசையில்
கனிந்துளம் ஆழும் விசையில்
தேனுறையும் மலரின் விரிப்பே
சிந்திடும் அழகின் சிரிப்பே
வானுறையும் முகிலின் துளியே
வையமிதைக் காக்கும் அளியே


📜 தண்டமிழின் இனிமை தன்னில்
தணிந்திடும் வெம்மை என்னில்
ஒண்டமிழின் ஊற்றை மேவில்
உளமிக ஒன்றும் பாவில்
பண்டமிழின் பாக்கள் வெற்பே
பணைமிகக் கூட்டும் பொற்பே
வண்டமிழின் துணையால் தானே
வருதுயர் மறந்தேன் நானே!

அருஞ்சொற்பொருள்
அளி = அருள்

தண்டமிழ் = தண்மையான தமிழ்

ஒண்டமிழ் = ஒளிமிகு தமிழ்

மேவில் = விரும்பில்

பண்டமிழ் = பண்ணிசைத் தமிழ்

வெற்பே = மலையே

பணை = பெருமை

பொற்பே = அழகே

வண்டமிழ் = வளமிகு தமிழ்

கவிதையின் ஆசிரியர்
கவிஞர் அர. செல்வமணி,

அஞ்சற்பெட்டி எண்: 21,

பாசக்குட்டைப் புதூர்,

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் – 638401.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »