களவாணி | கவிதை | ச.குமரேசன்

களவாணி- குமரேசன்

களவாணி

கதிரொளி வீசும்

 கதிரவன் அழகு..!

 குளிரொளி கொடுக்கும்

திங்களும் அழகு..!

 

வெம்மையின் கதகதப்பு

இதமான உணர்வோடு..!

குளிரின் தன்மை

குதூகல உணர்வோடு..!

அழகையும் ரசிக்கிறேன் – அவற்றின்

தன்மையையும் உணர்ந்து

அனுபவிக்கிறேன்..!

 

அவற்றோடு – நான்

தனிமையில் உரையாடுகிறேன் !

அவை  தொட முடியாத 

தொலைவில் அல்லவா உள்ளன !

அதனால் பல வண்ணங்களிட்டு

தூரிகைகளால் உயிரோவியம் தீட்டுகிறேன் !

அவற்றை தீண்டி பார்க்கத்தான்..!

 

இங்கும் ஒருத்தி – அப்படித்தான்

பார்வையாலே சுட்டெரிப்பாள் !

 

சிலசமயங்களில்

குதூகல குளிர்ச்சியாய்

வெட்கப் புன்னகை பூப்பாள் !

 

இவள் தொட முடியா

தூரம் ஒன்றும் இல்லை

அருகேதான் இருப்பாள்

அழகாய் அகத்தை

ஊடுருவி  – என்

உள்ளேயும் இருப்பாள் !

 

இவளோடு உரையாட

முடிவதில்லை..!

தனிமையின் தவிப்பிலும்,

தள்ளி நிற்கும் வேலையிலும்..!

 

இணைப்பு கம்பிகளால்

இணைத்தது போல 

அவளோடு இருக்கும் என் மனம்..!

 

எதிரே நின்றால்

யாரோ யாருடனோ

பேசுவதாய் நடிக்கும் அது தினம்..!

 

யாரவள் திங்களா? தினகரனா?

கற்பனையிலும், கனவிலும் மட்டுமே

என்னோடு சிலாகிக்கும்

களவாணி..!

 

கவிஞர் பேரா.ச.குமரேசன்

முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி தன்னாட்சி இராசிபுரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here