மீன்தொட்டி கவிதைகள்|முனைவர் அ.எபநேசர் அருள் ராஜன்

மீன்தொட்டி கவிதைகள் - முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்

🐟 கண்ணாடிச் சிறை


முட்டி மோதாத வாழ்க்கை


மீன்களின் பாடம்..!


 

🐟வண்ணக் கற்கள்


பாரங்களை அழகாகக் காட்டும்


மீன் தொட்டி…!


 

🐟செயற்கைச் சுவாசம்


கண்ணாடி அறையில் வாசம்


நிறைவான வாழ்க்கை..!


 

🐟கண்ணாடித் தொட்டி


முகம் பார்க்கும் அழகு


மீன்களின் வாழ்க்கை…!


 

🐟பிடித்திருக்கிறது மீனைத் தொட்டி


பிடித்திருக்கிறது மீனுக்குத் தொட்டி


பிடித்திருக்கிறது மீன் தொட்டி..!


 

🐟சுற்றிலும் பீங்கான் சுவர்கள்


தப்பிக்கத் தோன்றாத கைதிகள்


மீன் தொட்டி..!


 

🐟வலையை சுருட்டிவைத்து


ரசிக்கின்றான் மீன்களை


எதிரில் மீன் தொட்டி..!


 

🐟குரோட்டன்சுகளோடு பேச்சு


இயற்கை மீது ஆவல்


தொட்டியில் மீன்கள்..!


 

🐟தரையில் விழுந்த மீன்


துள்ளித் துள்ளி அழுகிறது


தொட்டியின் மரணம்..!


 

🐟துள்ளி விழுகிறது மீன்


துடிதுடிக்கிறது என்கிறான் மனிதன்


தப்பித்தலின் உத்தி..!


 

🐟துள்ளித் துள்ளி விழுகிறது.


அழுகை மறந்து சிரிக்கிறது குழந்தை


தவறி விழுந்த மீன்..!


 

🐟கூடுவிட்டு கூடு மாறினோம்


தொட்டி வைக்க இடமில்லை


டலுக்கு சென்றன மீன்கள்..!


 

கவிதையின் ஆசிரியர்


முனைவர் அ எபநேசர் அருள் ராஜன்


உதவிப் பேராசிரியர் 
 

தமிழ்த்துறை 


அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி ( தன்னாட்சி)


சிவகாசி

 

Leave a Reply