Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் உனைக் கண் தேடுதே|கவிதை|கவிஞர் இளங்கதிர்

உனைக் கண் தேடுதே|கவிதை|கவிஞர் இளங்கதிர்

உனைக் கண் தேடுதே- கவிஞர் இளங்கதிர்

👁️கடிகார முட்களோடு


பயணித்த வண்ணம் கண்கள்…


உன்னைக் காணாத ஏக்கத்தில்


கலங்கிடும் கண்கள்…


 

👁️ கடிகார முட்களை அசைத்துவைக்கலாமா?


நேரம் உன்னை அழைத்து வருமா?


உனக்காகக் காத்திருப்பது


உயர்ந்த சுகம்.


 

👁️தாமதம் தந்த கோபம்


தண்ணீரில் எழுதியதாகும்.


காத்திருந்தும் நீ வராத நாட்கள்


கானகத்தில் வெறும் முட்கள்.

👁️உன் பயணத்தில் காற்றானால்


என் இதயம் சீராகும்.


நிலவை நான் அழைக்கவா


உள்ளம் நீ நனைக்க.


கனவே நீ சென்று வா


காணாத இதயத்தை ஏந்தி வா.


 

👁️உன் மூச்சுக் காற்றையாவது


அனுப்பி வை 


என் மரணத்தை அதனால்


தள்ளி வை


கவிதையின் ஆசிரியர்

கவிஞர் இளங்கதிர்


சென்னை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »