தாத்தாவின் சில்லறை காசு|கவிதை|ச. கார்த்திக்

தாத்தாவின் சில்லறை காசு-கவிதை-ச. கார்த்திக்
🔔மரத்திற்கு முத்தம்

தருகிறது

மரங்கொத்தி.


 

🔔தாடியுற்ற ஆலமரத்தடியில்

கீழ்

சலூன் கடை.


 

🔔ஊரே உறங்கிய பிறகு

யாரை பார்க்க வந்ததோ

இந்த நிலவு.


 

🔔தன்னைப் போலவே

நடித்துக் காட்டுகிறது

தன் நிழல்.


 

🔔மரங்கள் ஒருபோதும்

இலைகளை சொந்தம் என்று

கொண்டாடுவதில்லை.


 

🔔நூலால் கைது செய்யவே

மனமே இல்லை

சிரிக்கும் பூக்கள்.


 

🔔ஒன்றும் அறியாத மாட்டை

விரட்டுகிறான்

சிறுவன்.


 

🔔குடிகாரனை எப்போது

எழுப்பி வீட்டுக்கு அனுப்பியது

மழைத்துளி.


 

🔔விளையாடும் குழந்தை

பலூனை விற்கும்

வறுமையில்.


 

🔔ஊழல் வழக்கு

உயிரோடு இருக்கிறது

நீதிமன்றத்தில்

உயிர் போன பிறகு.


 

🔔கடல் அலைகள்

யாருக்கும் கைக் கொடுப்பதில்லை

லைகள் போல் பிறந்திருக்கலாம்.


 

🔔நான் நட்டு வைத்த மரம்

என்னோடு பேசியதில்லை

பறவையோடு உறவாடுகிறது.


 

🔔இறப்பதும் தண்ணீரில்

ஒருபோதும்

எந்த மீனும்

கரையை பார்த்ததில்லை.


 

🔔நெல் அறுவடையில்

இந்த முறையாவது

கடன் நீங்குமோ என

தூக்கத்தில் ஒரு ஏக்கம்..


 

🔔வாங்கும் கைகள் இருக்கும் வரை

ரோஜா

விற்றுக் கொண்டுதான் இருக்கும்.


 

🔔வேரின் தன்மையை

வெளிப்படுத்துகிறது

இலை உதிர்ந்த மரம்..


 

🔔தாத்தாவின் சில்லறை காசு

பேரனுக்கு

பொக்கிஷம்.


 

🔔கடவுளுக்கு காது

கேட்டிருந்தால்

கருவறை விட்டு

என்றோ ஓடி இருப்பார்.


 

🔔இருளில் இருந்தே

தாய்மொழி அறிந்தேன்

அது என் தாயின்

கருவறையோடு

ஒட்டியே இருந்தது.


 

🔔நீல வானத்திற்கு

மறு உருவம்

இருள்.


 

🔔உயிர் இல்லாத ஒவியம் கண்டு,

உயிர் பயத்தில் ஒடுகிறது
எலி.

சாயல் வானம்

சிவந்த மேகம்

சூரியன் உறக்கம்.


 

🔔மாலை ரசிக்க

முரசாக ஒலிக்கும்

சிறிய அருவிகள்.


 

🔔பசி மறந்த புன்னகை

யாசகனிடம் கேட்டேன்

வாழ்வின் ரகசியத்தை.


 

🔔நிழலை தேடி

ஓடுகின்றோம்

வெயில்காலத்தில்

மரக்கன்றுகளை

நடுவதை மறந்துவிடுகிறோம்

மழைக்காலத்தில்.
                       
கவிதையின் ஆசிரியர்
ச. கார்த்திக்
முதுகலைத் தமிழ்
இரண்டாமாண்டு
தூய நெஞ்சக் கல்லூரி(தன்னாட்சி),
திருப்பத்தூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here