அவள் எனும் பெரும் பொருண்மை|கவிதை| ச.நவநீதனா

அவள் எனும் பெரும் பொருண்மை- ச.நவநீதனா
🎯 அவள் எனும் பெரும் பொருண்மையில்
செங்கோல் ஆட்சி நடத்தும் மகாராணி!
🎯 தித்திக்கும் இடமெலாம்..

இவள் வாசம் முத்திரை!

 
🎯 திகட்டும் இடமெலாம்…
பொருட்போர் தலைமை ஏற்கும்

பட்டத்து ராணி!

 
🎯 எண்ணும் பொழுதெலாம்

எனைத் தொலைக்க வித்திட்ட

கள்வ நெஞ்சக்காரி!

 
🎯 பேசும் பொழுதெலாம்

பக்கம் பக்கமாய்

சொற்களை அடுக்கும் பேரகராதி!

 
🎯 ஆனால்!
அவளுக்கென எழுத முற்படும்போது…

சொற்கள் தராத கல்நெஞ்சக்காரி!
 
🎯 மனதினைச் சாலக் கவர்ந்திடும்
கவர்ச்சிப் பொருளல்ல இவள்!
நம்மைக் கவரும்

பொருளுக்கே பொருளூட்டும்

மாய வித்தைக்காரி அவள்!

 
🎯 இப்படி அவளைப்பற்றிப் பல..

எண்ணிலே அடங்காதவை…

எண்ணும் நோக்கம்
அவள் கொடுத்த வரம்..

 
🎯 வீழும் நோக்கம்!
அவளுக்கு அவளிட்ட சாபம்..!

ஏன்?
முதுமையும் கூட

முதிர்ந்து விடும்!
முடி சூடிய மகாராணி

போர்க்களம் புகுந்துவிட்டால்!

 
🎯 இப்படி…
போர்புரியும் பேரரசி!
எனக்கு மட்டும்

ஏனோ பணம் கேட்கா மருத்துவச்சி

ஆகிவிட்டாள் அனுதினமும்!

🎯 ஆனால்!
உலகமே அவள் வசம் எனினும்,
அவளுக்கு ஒன்றுமட்டும் தெரியாது

என் நோய்க்கு, முதற்காரணம் அவளென்று!

 
🎯 அவள் எனும் பொருண்மையிலே

அனுதினமும் எமைத் தாலாட்டும்

என்னவள் – தமிழே!

என்னவள் – தாய்த்தமிழே!!
 
கவிதையின் ஆசிரியர்


கவிஞர் ச.நவநீதனா

இளங்கலை இரண்டாம் ஆண்டு,

வணிகவியல் துறை, 

கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும்
 ஆராய்ச்சிக் கல்லூரி,
கோவை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here