விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

iniyavaikatral.in

          முடிபுமுறைத் திறனாய்வினை ஒத்ததாகக் காணப்படுவது விதிமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறை என்பது ஒரு குறிப்பிட்ட சில அளவை முறைகளைக் கொண்டு ஓர் இலக்கியத்திற்கு முடிவினை வழங்குவது ஆகும். விதிமுறைத் திறனாய்வு என்பது (Prescriptive Criticism) வரையறை மற்றும் அளவுகோல்களை இலக்கியத்தில் பொருத்திக் காண முற்படுவது ஆகும். இத்திறனாய்வின் வழி தீர்வினை அறுதியிட்டுக் கூறுதல் முடியாது. சிலவகையான. வரையறைகளைக் கொண்டுள்ள இலக்கியத்தை விளக்குதற்கு விதிமுறைத் திறனாய்வு பயன்படுகிறது.

      ‘நெடுநல்வாடை’ – என்னும் நூல் அகமா, புறமா என்று சர்சைக்குள்ளான காலக்கட்டத்தின் பின்பு பத்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த நச்சினார்க்கினியர் நெடுநல்வாடை புறத்தைச் சார்ந்த நூல் என்ற முடிவினைத் தந்தார். ‘நெடுநல்வாடை – புறநூல்’ – என்பதை நிருபிக்க அவர் சில விதிமுறைகளைப் பின்பற்றினார்.

1. நெடுநல்வாடையில் அதிக அளவில் பேசப்படுகின்ற செய்தியானது புறத்தைப் பற்றியது என்றும்.

 2. இறுதி நிலையில் மட்டும்தான் அகம் பற்றி பேசப்படுகின்றது. அதனால் தொல்காப்பியரின் விதிப்படி இது அகம் ஆகாது என்று வரையறை செய்துள்ளார்.

3. அன்பின் ஐந்திணையில் தலைவனோ, தலைவியோ “சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப்பெறாஅர்” – என்ற தொல்காப்பியரின் கூற்று நெடுநல்வாடையில் இடம்பெறவில்லை. அதனில் ‘வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்’ – என பாண்டிய மன்னனின் அடையாள மாலை பற்றிக் கூறப்படுவதால் இது புறமாயிற்று. இதனின் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

மரபு ரீதியான முறையில் பின்பற்றப்பட்ட செய்திகளை மாற்றி, சில விதிமுறைகள் கொண்டு வலிந்து பொருள் கொள்ளச் செய்வது விதிமுறைத் திறனாய்வு ஆகும்.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here