Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் விடுதலைப் பண்ணையம்

விடுதலைப் பண்ணையம்

கொங்குப் பகுதிகளில் வழக்கில் உள்ள நிலமேலாண்மை முறைகளில் விடுதலைப் பண்ணையம் எனப்படும் வாரத்திற்கு விடுதல் குறித்து சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் சேகரித்த தரவுகளைக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.

அதிக அளவு நிலம் வைத்திருக்கும் ஒரு சில நில உரிமையாளர்கள் ஆட்கள் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை, நிர்வாகம் செய்ய இயலாமை போன்ற காரணங்களால் தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படுவதுண்டு. இத்தகைய சூழலில் விவசாயம் செய்யத் தெரிந்தவரிடம் தன்னுடைய நிலத்தைப் பயிர் செய்வதற்காக அனுமதி அளிக்கின்றனர். அவ்வாறு அனுமதியளிக்கும்போது குத்தகைக்கு விடுதல், போகியத்திற்கு விடுதல், வாரத்திற்கு விடுதல் போன்ற ஒப்பந்த முறைகளைப் பின்பற்றுகின்றனர்.

குத்தகை முறை என்பது கால அளவினை அடிப்படையாகக் கொண்டு பயிர் செய்வதற்காக அனுமதித்தல் ஆகும். இம்முறையில் குறைந்தது மூன்றாண்டுகள் முதல் ஐந்தாண்டுகள் வரை நிலத்தை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைக் காலம் முடியும் வரை இலாபம் ஏற்பட்டாலும், நஷ்டம் ஏற்பட்டாலும் குத்தகைத் தொகையினை வருடா வருடம் கொடுத்து விடவேண்டும். விவசாயி தனது நிலத்தின் மதிப்பிற்கேற்ப குறிப்பிட்ட அளவுத் தொகையை முன்பணமாகப் பெற்றுக் கொண்டு விவசாயம் செய்ய அனுமதிப்பதைப் “போகியத்திற்கு விடுதல்” என்கின்றனர். முன்பணத்தைத் திருப்பித் தரும் வரை நிலத்தில் பயிர் செய்கின்றார். போகியத்திற்காக வாங்கிய பணத்திற்கு விவசாயி வட்டி கொடுப்பதில்லை.

நில உரிமையாளர் ஒரு பருவ காலத்திற்கு மட்டும் தன் நிலத்தை விவசாயம் செய்யத் தெரிந்தவர்களிடம் விடுகின்றார். இவ்வாறு விடுவதை “வாரத்திற்கு விடுதல்” என்கின்றனர். இதை “விடுதலைப் பண்ணையம்” என்றும் கூறுகின்றனர்.

தானியம். அதனை பயிர்செய்தால் பூமி குளிர்ச்சி அடையும் என்பது பொள் ளாச்சி மக்களின் நம்பிக்கை. இது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல. சிறந்த நிலமேலாண்மை ஆகும். நிலத்தின் தரம் கெட்டுவிடாமல் இருக்க கொங்கு மக்கள் பயிர்ச் சுழற்றி முறையைக் கடைப்பிடித்தனர். தீர்வளம் குறைந்த மேட்டு நிலங்களில் கம்பு, ராகி, சோளம், தட்டை, பாசிப்பயிறு போன்ற தானிய வகைகளை ஒன்றைமாற்றி ஒன்று எனப்பயிரிட்டு நிலத்தின் சத்தைச் சமன் செய்து வந்துள்ளனர். வாழை போன்ற நீண்ட காலப் பயிர்களைப் பயிர்செய்யும் பொழுது என்று நட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு வாழையின் இடையே வெங்காயம், தட்டை போன்ற குறைந்த கால பயிர்களையும் பயிர் செய்து வந்துள்ளனர்.

நில மேலாண்மை

வைகாசி மாதம் பூமியின் மேல் பகுதி மட்டுமல்லாது அடிப் பகுதியும் சூடாக இருக்கும். மாசி, பங்குனி மாதங்களில் பூமியின் அடியில் ஈரப்பதம் இருக்கும். நிலத்தை நெல் விதைப்பதற்கு ஏற்ற நிலமாக ஆக்கப் பத்து உழவு ஓட்ட வேண்டும். பிறவகைத் தானியங்களை விதைக்க நான்கு முதல் ஆறு உழவு போதும். ‘அதிர ஓடினால் முதிர விளையும்’ என்பது கொங்கு வட்டாரப் பழமொழி. நிலம் அதிரும்படியாக மாடுகளை ஓட விட்டால், தானியங்கள் நன்கு முதிர்ந்து விளையும் என்பது இதன் பொருள்.

அதாவது நெல்விளையும் வயல்களில் விதைப்பதற்கு முன்பாக 12 நாட்கள் குளம்போல் நீரைத்தேக்கி மண்ணை நன்றாக வறவிட்டு விடு வார்கள். தேக்கிய நீரில் எருக்கஞ் செடிகளையும் ஆமணக்குச் செடிகளையும் போடுவார்கள். நீரில் ஊறிய அச்செடிகள் அழுகும். ஆறு நாட்களுக்குப் பிறகு ஊறிய அக்களத்தில் பத்து இருபது மாடுகளை விரட்டி விரட்டி ஓட விடுவார்கள். காளை மாடுகளை இவ்வாறு ஓடவிடும் பொழுது அச்சத்தால் அம்மாடுகள் சிறுநீரையும் சாணத்தையும் கழித்துக்கொண்டே ஓடும். குளத்தில் ஏற்கனவே அழுகிய நிலையில் இருந்த எருக்கள் மற்றும் ஆமணக்குச் செடிகளின் மீது மாடுகளின் கழிவுகளும் விழுந்து, மாடுகளின் கால்களில் மிதிபட்டு மண் மிருதுவாகி உரங்களும் அதனுடன் நன்கு கலந்துவிடும்.

நீர் வற்றத் தொடங்கும் பொழுது ஏறு பூட்டி உழ ஆரம்பிப்பார்கள். ஏற்கனவே நன்கு மண்ணோடு கலந்துவிட்ட செடிகளும், கழிவுகளும் உழத் தொடங்கியதும் மேல்மண் அடியில் சென்று, அடிமண் மேலே வரும். இப்படிச் செய்வதால் நிலம் காற்றில் உள்ள நைட்ரஜனை எடுத்துக் கொள்கிறது. பத்து உழவு ஓட்டினால்தான் நிலம் பூ போன்று மென்மையாக ஆகும்.

நெல்வயல் எப்பொழுதும் கால் வைத்தால் புதைந்து போகக் கூடிய அளவிற்கு சேறும் சகதியுமாகத்தான் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் நாற்றை மாற்றி நடும்பொழுது விரலால் நிலத்தைக் குத்தி அந்த ஓட்டையில் நான்கு ஐந்து நெல் நாற்றுகளை நடமுடியும். நாற்று உழுது உழுது மென்மையாகச் செய்கிறார்கள்.

விதைப்பிற்காக உழுது நிலத்தைச் சமன்செய்யப் பரம்புப்பலகை என்னும் பலகையைப் படுக்கை வாக்கில் நிறுத்தி அதன் இரு ஓரங்களிலும் இரு இரும்பு வளையங்களை அமைத்து அந்த வளையத்தைக் கயிற்றின் ஒரு முளையுடன் இணைத்து மறுமுனையை மாட்டின் நுகத்துடன் இணைத்து விடுவார்கள். அந்தப் பரம்புப்பலகையின் மேல் ஏறி ஒருவர் நின்றுகொள்ள மாடு அந்தப்பலகையை நிலம் முழுவதும் இழுத்துச்செல்லும் அப் பொழுது நிலம் சமம் ஆகும்.

உரம் போடும் முறை

உழுதல், உரமிடுதல், களைநீக்குதல், நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் பயிர்ப் பாதுகாப்பு என்ற நிலமேலாண்மையில், உழுது பயிரிட்ட நிலத்திற்கு ஏற்ற உரத்தை இடுவது மிக அவசியம். நிலத்திற்கு உரமாக ஆட்டுப்புளுக்கை, மாட்டுச்சாணம், எருக்கஞ்செடி, ஆமணக்குச்செடி, அடுப்புச்சாம்பல், குப்பைமண் ஆகியவற்றையே பயன்படுத்தியுள்ளனர். செடிகளில் பூச்சி விழுந்தால் கோமியத்தையோ, சூளைச் சாம்பலையோ செடிகளின் மீது தெளித்தும், போட்டும் அவற்றை அழித்துள்ளனர். நிலத்திற்கு உரம் போடப் பட்டிபோடுதல் என்ற முறையைக் கையாண்டுள்ளனர்.

அதாவது ஐம்பது முதல் நூறு ஈடுகளை விதைப்பிற்கு முன்பாக நிலத்தில் பரம்புப்பட்டி அமைத்து இரவு முழுவதும் விட்டுவிடுவார்கள். ஆட்டுப்புழுக்கையும் சிறுநீரும் நிலத்திற்கு உரமாகும். ஆட்டைப் போன்றே மாடுகளையும் பட்டி போடுவார்கள். நிலத்தின் அள வைப் பொறுத்துப் பட்டி போடுதல் மாதக்கணக்கில் நீடிக்கும் இவ்வாறு நிலத்தின் பயனைப் பல தலைமுறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் இயற்கை உரங்களை இட்டுப் பாதுகாத்து வந்தனர்.

 முப்பது வருடங்களுக்கு முன்புவரை நெல் வயல்களுக்குப் பன்றியின் கழிவுகளை இடும் வழக்கம் இப்பகுதியில் இருந்துள்ளது. இரசாயன உரங்களின் வருகைக்குப் பின்பும் கூட இப்பகுதி மக்கள் நிலத்திற்கு இயற்கை உரங்களையே அதிக அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

நினைவுகூறல்

மாடுகளை ஓடவிட்டு நிலத்தைப் பக்குவப்படுத்தியதன் அடையாளமாகவும் பட்டி அமைத்து உரம்போட்டதன் அடையாள மாகவும் இன்றும் மாட்டுப்பொங்கல் அன்று பட்டி நோம்பி கொண்டாடப் படுகிறது. பட்டி நோம்பி அன்று அவரவர் தோட்டத்தின் மையப்பகுதியில் மூங்கில் பிளாச்சி கரும்பு, வாழை, மா இலை, முக்கத்தான் கொடி போன்ற வற்றால் பட்டி அமைக்கின்றனர். அந்தப்பட்டிக்குள் ஐந்து பானைகளை வைத்துப் பொங்கல் வைத்து அதற்கு முன்பாகச் சிறுகுழியை வெட்டி அதில் மாட்டின் சாணம் கரைத்த நீரை ஊற்றுகின்றனர். பொங்கல் பொங்கியதும். அந்தக் குழிக்குள் மாட்டை விரட்டி விட்டுப் பட்டியைச் சுற்றிவரச் செய்கின்றனர்.

தற்பொழுது உடல் உழைப்பிற்குப் போதிய வலிமையின்மை காரணமாகவும் நீர்ப் பற்றாக்குறை காரணமாகவும் பொள்ளாச்சி வட்டாரத்தின் பெரும் பகுதி தோப்புகளாகவும் மாறிவிட்டன. நெல்வயல் களில் காட்டி வந்த நிலமேலாண்மையை இப்பொழுது தென்னங் கன்றுகளை நடுவதில் காட்டுகின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி வட்டார மக்கள் நிலத்தை ஒரு தாய் பிள்ளையைப் பராமரிப்பது போல் பராமரித்து வந்தார்கள். எந்தப் பட்டத்தில் எதை விதைக்க வேண்டும் விதைக்கும் விதைக்கு ஏற்ப எத்தனை முறை உழ வேண்டும் என்பதில் மிகுந்த அனுபவம் உடையவர் களாக இருந்தனர், நிலம் உழுதிருப்பதைப் பார்த்தே இந்நிலத்தில் விளையும் தானியம் எத்தகையது என்பதை முடிவு செய்கின்றனர்.

இவ்வாறு பொள்ளாச்சி வட்டார மக்கள் நில மேலாண்மையில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்.

சீமாறு (துடைப்பம், விளக்கமாறு)

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் கை. சிவக்குமார்

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர்- 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »