வரலாற்று முறைத் திறனாய்வு |Biographical Criticism

இனியவை கற்றல்

       இலக்கியப் படைப்பாளரின் படைப்பிலிருந்து, அவரின் வாழ்க்கை வரலாற்று முறையினை ஆய்வது வரலாற்று முறைத் திறனாய்வு ஆகும்.

     பாரதியாரின் படைப்புகளைக் கொண்டு அவரின் வாழ்க்கைக் குறிப்புகளை ஆராய்ந்தது இவ்வகையானத் திறனாய்வு முறையாகும். இத்தகைய திறனாய்வு முறை இரண்டு விதமானக் கூறுகளில் நடைபெறுகிறது.

1. அகவயமுறை (Subjective)

அகவயமுறை என்பது ஆசிரியரின் படைப்பினைக் கொண்டு திறனாய்வு செய்வது.

2. புறவயமுறை (Objective)

புறவயமுறை என்பது ஆசிரியர் பற்றி செய்தியினை, பிறத் தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்வது ஆகும்.

     வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் சிறப்புடையதாக அகவயமுறையே காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கம்பனின் படைப்பில் வரும் தசரதன் – இராமனின் பிரிவு நிலையைப் படித்தோர். அதனை கம்பர் – அம்பிகாபதியின் பிரிவு என்றே கருதினர். அதே போன்று பாரதியாரின் விடுதலை உணர்வுப் பாடல்களை நோக்கும்போது – பாரதியின் விடுதலை வேட்கை நிலையையும், தேசியத்திற்காக தன்னை அர்ப்பணித்த தன்மையையும் காண முடிகிறது. வாழ்க்கை வரலாற்று முறைத் திறனாய்வில் ஒருவரைப் பற்றி அறிய அவருடைய படைப்புகள் தேவைப்படுவது மட்டுமல்லாமல், புறச்சான்றுகளும் இன்றியமையாதது ஆகிறது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

1.விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism)

2. விதிமுறைத் திறனாய்வு (Prescriptive Criticism)

3.உளவியல் முறைத் திறனாய்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here