ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு என்றால் என்ன? What is the Aesthetic Criticism?

அழகியல் திறனாய்வு

          ஒரு இலக்கியத்தில் காணப்படும் கலைத்தன்மை மற்றும் அழகினைப் பற்றி (Aesthetic Criticism) ஆராய்வது ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வாகும். இத்திறனாய்வு, ஓர் அழகிய தோற்றமுடையப் பொருளின் திரட்சி, நயம், நளினம் என்ற மூன்றையும் முதலில் ரசித்தல் வேண்டுமென்றும், அந்த ரசித்தலினால் கிடைக்கக்கூடிய சுகானுபவம் ரசனை முறையை வளர்க்கிறது என்கின்றனர்.

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு

        இவ்வகையானத் திறனாய்வு அறிவியல் முறைக்கு உட்படுத்தப்பட்டதல்ல. ஆனால் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய மனப்பதிவு (Impression) முறையினைக் கொண்டது.

1. சொல்லின் ஓசையில் காணக்கூடிய ஒழுங்கு முறை

2.வார்த்தை தொனி

3. பொருளினது சுழற்சி

4. உணர்ச்சி

5. வடிவங்கள்

6. உவம, உருவகங்கள்

7. மனதினுள் எழும் தூண்டல் உணர்வுகள்

       முதலியவற்றை ரசனைக்குறியப் பகுதியாக அறிவித்துக் கொண்டு. பின்பு விளக்கி வர்ணிக்கிறது. இவ்வகையான திறனாய்வினால், இலக்கியத்தின் கொள்கையோ, போக்கோ. வரலாறோ பெரிதும் பாதிப்படைவதில்லை. உள்ளடக்கத்தின் கருத்தை விட உருவத்தின் தன்மைக்கே இதனுள் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

       கவிக்கு சிரசே பிரதானம் – என்பது போலக் கவிக்கு வடிவம் என்று மெருகூட்டுகிறது. இதனை ஆங்கிலத்தில் Theoretical Criticism/ Aesthetic Criticism விஷயமல்ல-உருவமே பிரதானம்’ – என்ற வார்த்தைகளை முன்னோடியாகக் கொண்டு ரசனை முறைத் திறனாய்வு நடைப்பெறுகிறது. ‘என்சாண் உடம்பிற்கு என்று வழங்குகின்றனர். ரசனை ஆசிரியர்களின் கருத்துக்கள் (Ideologies) கீழ்க்கண்டவற்றுடன் ஒப்பீடு செய்யப்படுகிறது.

1. குழந்தைப் பாடல்கள்

2. பெண்கள் சிந்தனை

3. யாப்பு அமைதிகள்

4. பாவகைகள்

5. நடை அமைவுகள்

        முதலியன ரசனை முறையில் ஒப்பிடப்படுகின்றன. கவிதை எளியத்தன்மையில் இருத்தல் வேண்டும், ரசிப்பதற்கு சிரமம் கூடாது. உடனடியாகப் புரிதல் வேண்டும் என்பதை ரசனை முறைக்கு அளவுகோலாக வைத்திருந்தனர். ஆனால் சங்க இலக்கியப் பாடல்களை ரசனை முறைத் திறனாய்வு உட்படுத்தாமல் டி.கே. சி. போன்றவர்கள் புறக்கணித்தனர். ஏனெனில் கடினமானச் சொற்கள் அதனில் பயன்படுத்தப்பட்டிருப்பதே ஆகும். பாட்டில் வரும் சந்த நயங்களை கவனித்தோம் என்றால், சுகம் என்று சொல்லத் தோன்றுமே ஒழிய, வாயோ, செவியோ, மனமோ, சலியாது நிற்பது ரசனைமுறைத் திறனாய்விற்கு சிறப்பாகும்.

      தமிழிலக்கியத்தில் இத்தகைய ரசனை முறையைப் பற்றி பேசுபவர்கள் ரசிகமணி டி.கே.சி, கல்கி, ராஜாஜி, பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், ஆ. முத்துசிவன், பி.ஸ்ரீ, நீதிபதி எஸ். மகாராஜன், தொ.மு. பாஸ்கரன், வித்வான் ல. சண்முகசுந்தரம், அ.ச. ஞானசம்பந்தன் எனப் பலராவர். சந்த முறையில் சொற்பொழிவு ஆற்றக்கூடியவர்கள், எழுத்தாளர்கள், இவர்களிடம் ரசனை முறைப்பார்வை பின்பற்றப்பட்டது. எளிமை, தாளம், லயம், உணர்வு என்ற நிலையில் கம்பனின் பாடல்கள் அதிகளவில் ரசனை முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ரசனை முறை அல்லது அழகியல் திறனாய்வு

            மேலைநாடுகளில் அழகியல் திறனாய்வுக் கோட்பாட்டிலான முன்னோடியாக இம்மானுவோல் காண்ட் என்பவர் விளங்குகிறார். புலன்களால் நுகரப்படக்கூடிய இன்பமும்,அது தரக்கூடிய பொருளியல் அழகும், ஒன்றோடு ஒன்று இணைந்தவை என்கிறார்.

        இவ்வகையான இன்ப நிகழ்வு, தனிப்பட்ட புலனின்ப நுகர்ச்சியை விட மேன்மையானதாகவே உள்ளது. இத்தகைய அழகு நிலை ‘சுயாதிக்கமானது” (autonomy) என்றும். ரசனை முறையிலுள்ள ஆர்வம், உணர்ச்சி, தொகுத்துக் காணும் அறிவு முதலியவற்றிலிருந்து வேறுபட்டது என்றும் (Critique of Judgement) இம்மானுவோல் காண்ட் கூறுகிறார்.

       ரசனை முறைத் திறனாய்வின் வழிநிலையாக தோன்றியதுதான் ‘கலை கலைக்காகவே’ என்ற அமைப்பாகும். இதனில். கலை வேறு, வாழ்க்கை வேறு என்ற கருத்தினை வற்புறுத்தியுள்ளனர். ஆங்கிலக் கவிஞர் எட்கார் ஆலன் போ, அழகியல் விமர்சகர்கள் ஏ.சி. பிராட்லி போன்றோர். அழகு என்பதையோ, அதனை ரசிப்பது என்பதோ, வாழ்க்கையின் உள்ளடக்கத்திலிருந்து வேறுபட்டது என்கின்றனர்.

      இத்திறனாய்வினை, வாழ்க்கைச் சூழலிலிருந்தும், சமூக சூழலிலிருந்தும் சற்று வேறுபடுத்தியேப் பார்க்க வேண்டியுள்ளது.

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here