முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

முடிபுமுறைத் திறனாய்வு

   

முடிபுமுறைத் திறனாய்வு (Judicial Criticism)

     திறனாய்வாளன் தனக்குத்தானே வகுத்துக் கொண்ட வரையறைகளையும், அளவுகோல்களையும் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு இலக்கியம் பற்றிய முடிவினை அல்லது தீர்ப்பினைத் தரக்கூடிய தன்மைப் பெற்றதாக அமைவது முடிபுமுறைத் திறனாய்வு ஆகும்.

      முடிபுமுறைத் திறனாய்வில், மேலைநாட்டினரான சாட்விக் (Chadwick), கெர் (W.P. Ker), பவுரா (C.M. Bowra) போன்றோர் கூறிய கோட்பாடு முறைகள் ஒட்டியேத் தீர்வு அமைகிறது. இதனை தண்டியலங்காரம் கூறும் பெருங்காப்பிய நிலைக் கண்டோ, சிறுகாப்பியத்தின் தன்மையை வைத்தோ, இளங்கோவின் சிலம்பினையும், கம்பனின் இராமாயணத்தையும், செவ்வியல் பண்புகளை வைத்து ஆய்வு செய்து. மேலைநாட்டினரின் கோட்பாடுகளோடு பொருத்தி, இது சரியான காப்பியம், சரியான காப்பியம் அன்று என்ற முடிவினை ஒருவர் தருபவராயின் அதனை ஏற்றுக்கொள்ளுதல் முடிபுமுறைத் திறனாய்வு ஆகும். முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

           இன்றையக் காலகட்டத்தில், நாவல்கள் மற்றும் சிறுகதைகள், கவிதைகள், என இக்காலத்தில் வெளிவரக்கூடிய இலக்கியங்கள் அனைத்தும் மேலைநாட்டார் கூறுகின்ற விதிகளை பெற்று, முடிபுகளைக் கூறுகின்றன. ஒன்றிற்கு மேற்பட்ட இலக்கியங்களில் ஒரே அளவுடைய அல்லது ஓரேவிதமான வரையறை கூறுகளை உடைய விதிகளைப் பொருத்திப் பார்த்து இலக்கியத்தின் தரத்தை உயர்த்தச் செய்வது இந்த வகையானத் திறனாய்வின் பண்பு ஆகும்.

       மேலைநாட்டினரின் கூற்றுகள், குறிப்புரைகள். எல்லாம் கல்வியில் சார்ந்த பட்ட ஆய்வேடுகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டு, தமிழில் பின்பற்றப்பட்டு வருகிறது. இத்தகைய நிலை எல்லா வகையான இலக்கியங்களுக்கும் பொருந்துவதாக இல்லை. ஏனெனில் ஒரே காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்கள் கூட ஒரே வரன்முறையைப் பெற்று அமையவில்லை. முடிபுமுறைத் திறனாய்வு : (Judicial Criticism)

      முடிபுமுறைத் திறனாய்வானது இலக்கியங்களைப் போற்றுவதற்கு ஓரளவு துணைபுரிகின்றன. புதிய வடிவங்களை வளர்த்தெடுக்கச் செய்கிறது. சோதனை முறைகளைத் தவிர்த்து வருகிறது. புதிய இலக்கியங்களைப் போற்றும் தன்மை பழங்காலம் முதல் இருந்துள்ளது. முடிபுமுறைத் திறனாய்வின் இந்தப் போக்கினை பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் இலக்கியக் கலை என்னும் நூலில் சாடியுள்ளார்.

        சங்க இலக்கியப் பாடல்களை முடிபு முறைத் திறனாய்வில் திறனாய்வு செய்தோமானால் ஒரே கருத்தை திரும்பக் கூறுவது போன்று அமைந்துவிடுவதால், இவ்வகையானத் திறனாய்வுக்குச் சிலர் அஞ்சுவதும் உண்டு.

 

கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here