Thursday, June 18, 2026
Home கவிதைகள் மாணவனின் சபதம்! |ஜெ.புவனேஸ்வரி| கவிதை

மாணவனின் சபதம்! |ஜெ.புவனேஸ்வரி| கவிதை

மாணவனின் சபதம்! - கவிதை

மாணவனின் சபதம்!

அச்ச்சோ!
நான் படித்த கொஞ்சத்தில்
மிச்சமும் இல்லாமல்
மொத்தமும் மறந்து போச்சே!
 
பத்துமுறை படித்தும் பார்த்தேன்
படித்ததை பக்குவமா எழுதியும் பார்த்தேன்
பரிச்சை என்று வந்ததும், ஏனோ!
படித்ததில் பாதிக்குமேல்
ஞாபகம் வரவில்லை.
 
ஒவ்வொரு தேர்விலும்
முதல் மதிப்பெண் பெற்று
மூக்குமேல் விரல் வைத்து பார்க்க
வைக்க வேண்டும் மற்றவரை என்று
எண்ணியே படித்து வந்தேன் பரிச்சைக்கு!
 
பாவம்! படிப்பது யாவும் நினைவில்
இருந்து விட்டால் பாமரனான நான்
பைத்தியமாகிடுவேன் என்றோ!
 
விடைத்தாள் கையில் வாங்கியதும்
விடைகொடுங்கள்,பாசானால்
போதுமென்றே பதுங்க செய்கிறது
இந்த பாழா போன மனம்.
 
இரவு முழுதும் படித்தோம் என்பது
ஞாபகம் இருக்கிறது!
ஆயின் என்ன படித்தோம்!
எதற்கு படித்தோம்? என்பது மட்டும்
நினைவுக்குவரலையே!
 
மூணு பேரும் முப்பொழுதும்
ஒண்ணாதான் ஒத்துமையாக
எல்லா இடங்களுக்கும்
அலைந்து திரிந்தோம்.
 
படிக்கும் வகுப்பு ஒன்றுதான்!  பாடமும்
ஒன்றுதான்! வினாத்தாளும் ஒன்றுதான்
அவனும் படித்தான்; நானும் படித்தேன்
என்னால் ஏன் எழுதமுடியல?என்று
கேட்க வேண்டிய கேள்விக்கு பதிலாக!
இறைவனிடம்,
அவன் படித்தது நினைவில் வந்து
அவனால் மட்டும் எப்படி படித்ததை
எழுத முடிகிறதோ? கடவுளே!
என்றே கேட்டு தவித்தான் அவன்.
தன்னம்பிக்கையில்லாதவன்.
 
அங்கே ஒரு அசரிரீ!
“எத்தனை முறை சொல்கிறேன்
மனப்பாடம் செய்யாதே!
மனனம் செய்யாதே!
மனப்படம் செய்து படி என்று.
அன்று நடத்தியதை அன்றே படி,
அதுவும் நன்றே விளங்க படி”
என்றே கூறி ஒலித்து மறைந்தது.
 
ஆகாசத்தை பார்த்திருந்த அவனருகில்
ஆசிரியர் வந்து நிற்கிறார்.
அவனுடைய விடைத்தாளை
வாங்கி புரட்டி பார்க்கிறார்;
 
பரிச்சை முடிவதற்கு இன்னும்
பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது
அவனோ பாதி பக்கம் கூட
எழுதி முடிக்கவில்லை.
 
ஆசிரியர் சொல்கிறார்
“பரிச்சை முடிவதற்கு இன்னும்
பத்து நிமிடங்கள் தான் இருக்கிறது
பாதி பக்கம் கூட எழுதவில்லை.
பின் எதற்குதான் பரிச்சைக்கு
வந்தீயோ! இந்த வயசுல
படிப்பதைக்காட்டிலும்
என்னடா வேலை உனக்கு?
பக்கத்தில் இருப்பவரை
பார்த்து எழிதியாவது தொள!”
என்று பாவபட்டு ஆசிரியர்
சொல்வாரென்று பரிதாபமாக
நோக்கினான்.
 
“ஓங்கி விட்டால் அப்படியே
ஒரு காது செவிடாகி போய்விடும்.
ஒழுங்காய் படிக்கிற நேரத்தில்
படி என்றால் படிக்காமல் இருந்துட்டு
இப்போ விட்டத்தைப் பார்த்து
கொட்டாவி விடத் துடிக்கிறாயோ!
ஒழுங்காக தெரிந்ததை எழுதி
கொடுத்திட்டு சென்றிடு!
இன்றில் இருந்தாவது ஒருநாளும்
தவறாமல் படி! படி! படி!”
என்று ஆசிரியர் கூறினார்.
 
“படிக்கச் சொன்னீரே படித்தேன் பாவம்!
பக்கத்தில் கூட இந்த படிப்பு வந்து
அமர்ந்திடவில்லை. என்கிரகம்
உங்ககிட்டபேச்சு கேட்க வேண்டியே
உள்ள அந்த விதியை ஒருபோதும்
இனி எவரும் மாற்ற இயலுமோ
பட்டது பட்டது தான்
கெட்டது கெட்டது தான்
கோட்டை விட்டது விட்டது தான்!
 
அடுத்த முறை தேர்வு எழுதிவிட்டு
பேசிகொள்வோம் இவரை,
என்றெண்ணி மவுனாமாகவே
இருந்துவிட்டான்.
எல்லா தேர்விலும் செய்யும் சபதம் போலவே!
இதுவும் ஒரு பொய்யான
சபதமோ? இல்லை! இல்லை!
 
ஆயிரங்கோடி ஆண்டுகளாயினும்
ஆதவன் அவன் தொழில்
மறப்பதில்லை. அதுபோல் என்றும்
மாண்புமிகு மாணாக்கரே, நீவிர்!
உந்தன் தொழிலை மறந்திடாதீர்! இந்த
உண்மையை உணர்ந்து உறக்கம்
தவிர்த்து என்றும் படி! படி! படி
 
ஆசிரியர்
கவிஞர் ஜெ. புவனேஸ்வரி
இயற்பியல் துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »