Thursday, July 16, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home கவிதைகள் பூவே பிழைத்துக்கொள் |க.கலைவாணன்| கவிதை

பூவே பிழைத்துக்கொள் |க.கலைவாணன்| கவிதை

பூவே பிழைத்துக்கொள்

பூவே பிழைத்துக்கொள்!!

 

பூவே !
என்ன சொல்கிறது
என்னவளின் கூந்தல் !
என் பெயரைச் சொல்லி
உன்னை வாடச் செய்கிறதா..
பூவே சொல் !

 

பூவே !
என்ன சொல்கிறது
என்னவளின் கழுத்து !
என் தலை சாயச்சொல்லி
உன்னை கொலை செய்கிறதா ..
பூவே சொல் !

 

பூவே !
இந்தா எடுத்துக்கொள்
என்னவளின் தேகத்தால்
உன் மோகம் பெருகும் !
கருமேகம் இருளும்!
காடும் காதலால் மலரும்!

 

பூவே !
விட்டுச்செல்
என்னவளின் இதயத்தை..
உன் மகரந்தம் பிழைக்கும் !
உன் அழகிய
மென் இதயம் மணக்கும் !

 

பூவே !
பிழைத்துக்கொள் நீயே !
நானும் என்னவளும்
இணைகையில் – நீ
அனலாய் எரிந்து விடுவாய் !

 

கவிஞர் க.கலைவாணன்

ஓசூர் – 635 109

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »