பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும் | Duties and Responsibilities of a Journalist

பத்திரிக்கையாளரின்-பணிகளும்-பொறுப்பகளும்

பத்திரிக்கையாளரின் பணிகளும்  பொறுப்புக்களும்

       செய்தியாளர் உண்மையில் தகவல்களைப் பரப்பும் சமுதாயக் கல்வியாளராகப் பணியாற்றுகின்றார். ஒரு வகையில் அவரது பணி சமுதாயத் தொண்டாகும். மக்களாட்சியில், நாட்டின் அன்றாட நடப்புக்களை உடனுக்குடன் தெரிவித்து, மக்கள் விழிப்போடு செயல்படத் தூண்டுகின்ற பணியை செய்தியாளர் மேற்கொள்கின்றார்.

கடினமானபணி

            செய்தியாளரின் பணிமிகவும் கடினமானதாகும். இருபத்தி நான்கு மணிநேரமும் அவர் விழிப்போடு செய்திகளைத் தேடி அலைய வேண்டும். எங்கிருந்து செய்தி, எப்படி வெடித்துச் சிதறுமென்று கூறமுடியாது. நாளிதழில் ஒவ்வொருசெய்தியாளர்*செல்ல இடத்தையும் (Beat)’ என்ன ‘பணி (Assignment) வேண்டுமென்பதையும் தலைமைச் செய்தியாளர் ஒதுக்குவார். பணியைச் செய்து முடிக்க கடினமாக உழைக்க வேண்டும், ‘தூங்காடை கல்வி, துணிவுடைமை” உள்ள செய்தியாளர்கள் கருமமே கண்ணாய் உழைத்தால் சிறப்பாகச் செய்திகளைத் தேடிக் கண்டு திரட்டித் தந்து புகழ் பெற முடியும்.

ஆபத்தான பணி

            செய்தியாளர் நடக்கும் பாதையில் மலர்கல் தூவப்பட்டிருப்பதில்லை, நெருஞ்சி முள் காட்டிற்குள் பயில்பவர்களைப் போன்றே செய்தியாளர்கள் பணிபுரியவேண்டியுள்ளது. உண்மைகளை வெளிக்கொணரும் பணியைச் செய்வதால், அதனால். பாதிக்கக் கூடியவர்கள் எப்பொழுதும் செய்தியாளர்களுக்குப் பாதகங்கள் செய்யத் தயங்கமாட்டார்கள். செய்தியாளர்கள் அடிதடிக்கும், அவமானத்திற்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகின்றனர். செய்தியாளர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருக்க வேண்டும்.செய்தியாளர்களைத் சுட்டுக்கொன்ற நிகழ்ச்சிகளும் கூட நடைபெற்றிருக்கின்றன.

             செய்தியாளரின் பணி எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு நிகழ்ச்சியைச் சான்றாகக் கூறலாம். 1988 ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் நமது நாட்டின் தலைமையமைச்சர் ஒய்வெடுக்க இலட்சத்தீவுகளுக்குச் சென்றார். அவரோடு சென்றவர்கள் பற்றிய சில விவரங்களை அரசு வெளியிடவில்லை. 7.1.88 வியாழக்கிழமை இலட்சத்தீவிலிருந்து ஒரு ஹெலிகாப்டரில் வந்து புகழ் பெற்ற இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கொச்சி விமானதளத்தில் இறங்கினார். இதனை புகைப்படம் எடுத்த ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ Indian Express’ புகைப்படக்காரர் ஜீவன் ஜோஸ் (Jeevan Jose) அமிதாப்பச்சன் தடுத்திருக்கின்றார். அதற்கு மேலும் புகைப்படம் எடுக்கவே, தாக்கி, விலை உயர்ந்த புகைப்படக்கருவியைப் பறிக்க முயன்றிருக்கின்றார். நடிகரோடு ஒரு வெளிநாட்டுக்காரரும் உடன் இருந்து இருக்கின்றார். 8.1.88 வெள்ளிக்கிழமை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் புகைப்படங்களோடு இச்செய்தி வெளியாகியுள்ளது. இதிலுள்ள இடர்ப்பாட்டின் கடுமையைச் சொற்களால் விளக்க இயலாது.

செய்தித் திரட்டும் பணி

            எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்து, அந்த செய்தி உண்மையானதா என்பதை அறிந்து, செய்தி மூலத்தை அணுகி, செய்தியைத் திரட்டி தருவது தான் செய்தியாளர் பணி. காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்படுகின்ற செய்தியாளர் வெற்றி பெறுகின்றார்.

    செய்தியைத் திரட்டுவதில் சில நிலைகள் உள்ளன

      முதலாவதாக செய்தியாளர் செய்திக்குத் தன்னை வெளிப்படுத்திக் (Exposure கொள்ள வேண்டும். அதாவது செய்தியின் மூலத்தோடு நேரடித் தொடர்பு கொள்ள வேண்டும். முடிந்தால் செய்திக்குரிய நிகழ்ச்சி நடந்த இடத்தை அடைந்து, நேரடியாக செய்தியைப் பெற வேண்டும். அல்லது செய்தி மூலமாக இருப்பவரை அணுகி செய்தியை அறிந்து கொள்ள முயல வேண்டும்.

       இரண்டாவதாக, நடந்தவற்றை பார்க்க (Perception) கவனித்து நோக்க வேண்டும். உண்மையை அறிந்து எழுத இப்படி வேண்டும். விருப்பு, வெறுப்பின்றி நேரடியாகக் காணக்கூடியவற்றைக் பார்வையிடுதல் துணை செய்கின்றது. அறிக்கைகளாகவோ, புள்ளி விவரங்களாகவோ செய்திகள் கிடைத்தால் அவற்றைப் புரிந்து படித்து, அவற்றிலுள்ள செய்திகளை மட்டும் தெளிவான முறையில் வழங்குவது செய்தியாளர் பணி.

       மூன்றாவதாக, பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் நினைவில் (Retention) வேண்டும். செய்தியாளருக்கு பதித்துக் கொள்ள நினைவாற்றல் என்பது கைவந்த கலையாக மாற வேண்டும். முதலில் குறிப்புகள் எடுத்துக் கொண்டு பின்பு விரித்து எழுத நினைவாற்றல் துணை செய்கின்றது. பதிவு செய்யும் கருவிகளை (Tape Recorder)பயன்படுத்தலாம்.

      நான்காவதாக, கிடைக்கின்ற விவரங்களில் எவை சரியானவை என்பதைத் தீர்மானித்து தெரிந்தெடுக்க (Selective Judgement) வேண்டும். எந்த நிலையிலும் செய்தியில் பொய்மை கலந்து விடக் கூடாது. “ஐயத்துக்குரியதை விட்டுவிட வேண்டும்” (when in Doubt,Leaveit out) என்பது செய்தியாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளில் ஒன்று.

      ஐந்தாவதாக, எதனைப் பெரிது படுத்தித் (Amplify) தரவேண்டும் என்பதை அறிந்து, அதனையே செய்தியாக, சரியான கோணத்தில் எழுதித் தர வேண்டும். நிறைய விபரங்களை சேகரித்து இருக்கலாம்.எல்லாவற்றையும் செய்தியாக்கவேண்டியதில்லை.முக்கியமானவற்றையும்,குறிப்பிடத்தக்க மனிதர்களையும் சேர்த்து, பின்னிப் பிணைத்து சுவையான, பயனுள்ள செய்திகளை படைத்து தருதல் செய்தியாளர் பணியாகின்றது.

பொறுப்புக்கள்

            செய்தியாளர் மேற்கொள்வது சமுதாயப் பொறுப்பான பணியாகும். செய்தித்தாட்களில் வெளிவருவனவற்றை “அச்சிட்டது நம்பிப் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். உண்மையாகவே”, இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் வகையில் செய்தியாளர் நடந்து கொள்ள வேண்டும்.

       சிலசெயல்கள் உண்மையில் நடந்திருக்கலாம், அதற்கான தக்கு ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியேவெளியிட்டால் சில தனிமனிதர்களோ, சமுதாயமோ பாதிக்கப்படுமானால்,அவற்றை வெளியிடக் கூடாது. எடுத்துக்காட்டாக, கற்பழிப்புச் செய்தியில் கற்பழிக்கப்பட்டவரின் பெயரை வெளியிடுவது நல்லதல்ல. சாதி, சமயப் பூசலைத் தூண்டி சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக் கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.

      கூடியவரை தங்களது செய்தி மூலங்களை இரகசியங்களாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளர்கள் கடமையாகும். சான்றுகளை வெளியிடாமல் வைத்துக்கொள்ள சட்டப் பாதுகாப்பும் இருக்கின்றது. சில வேளைகளில் செய்திகளைத் தருகின்றவர்கள் தங்களை. வெளிக்காட்டிக்
கொள்ள விரும்புவதில்லை.

      நேர்காணல் பேட்டி (Interview) மூலம் விவரங்களைச் சேகரிக்கும்பொழுது, பேட்டியாளர் வெளியிட வேண்டாமென்றக் குறிப்போடு விளக்கத்திற்காகச் சிலவற்றைக் கூறலாம். அவை சுவையானதாக இருந்தாலும் அவற்றைச் செய்தியில் சேர்க்கக் கூடாது.

       செய்தியாளர் தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காப்பது என்றும் அவரது கடமையாகும். தான் சேகரிக்கும் செய்திகளை தனது நிறுவனத்திற்கே தர வேண்டும். வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி திரட்டிய செய்திகளைச் செய்தியாளர் பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு

கட்டுரையானது டாக்டர் மா.பா.குருசாமி அவர்களின் இதழியல் கலை என்னும்  நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

மேலும் பார்க்க..

1.பத்திரிகைச் சட்டங்கள் |PRESS LAWS

2.இதழியல் விளக்கமும் இலக்கணமும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here