நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் | பகுதி – 2

நாட்டு நலப்பணித்திட்டம்

நாட்டுநலப்பணித்திட்டத்தின்கீழுள்செயல்திட்டங்களாவன

 அ. தொடர்பணிகள் (Regular / Concurrent Programmes)

 ஆ. சிறப்பு முகாம் திட்டங்கள் (Special Camps)

தேர்ந்தெடுத்து கொண்ட பகுதிகளில் பணிகள்:

            நாட்டுநலப்பணி திட்ட வழிகாட்டி குறிக்கோளின்படி இத்திட்டத்தின் அலகுகள் ஒவ்வொன்றும் தாங்கள் நலப்பணித்திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட ஒரு பகுதியை தேர்வு செய்து கொள்ள வேண்டும்நடைமுறையில் அவை ஒரு கிராமம் அல்லது ஒரு குடிசை பகுதி அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை தேர்ந்தெடுத்துத் கொள்கின்றன. சம்பந்தப்பட்ட பகுதிகள் கிராம பஞ்சாயத்து தலைவர் மற்ற அதிகார பூர்வமான அல்லது மரபு ரீதியான தலைவர்கள் கலந்து ஆலோசனை செய்து பணிக்காலத்தை தீர்மானித்து கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள மக்களின் ஆதரவு, நல்லிணக்கம், இடத்தின் அருகாமை முதலி கணக்கில் கொண்டு அவற்றின் அடிப்படையில் பணிக்காலம் தெர்ந்தெடுக்கப்படும்.

            அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களிலும், குடிசை பகுதிகளிலும் பால்வாடி எனப்படும் குழந்தை காப்பகங்கள் தொடங்கப்பட்டு உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் துணைகொண்டு நடத்தப்படும். நோய் தடுப்பு மருத்துவ பிரசார பணிகள், பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல், சுற்று சூழல் சுகாதாரம், விவசாயத்தை பற்றி மக்களுக்கு அறிவுறுத்துதல் மருத்துவ நலன் மற்றும் சுகாதாரம் குறித்து நிகழ்ச்சி திட்டங்கள். போர்கால நடவடிக்கைகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற நூலகங்கள்/புத்தக வங்கிகள் முதலியவற்றை உருவாக்குதல். மாநில மண்டல்களை துவக்குதல், இளைஞர் சங்கங்கள், பால் சேகரிக்கும் மையங்கள் தொடங்குதல் முதலியவை நாட்டு நலப்பணித்திட்டதின் கீழ் மேற்கொள்ளப்படும் சில செயல்பாடுகள்.

            கிராம மக்களுக்கு வங்கி கடன் கிடைக்க வழி செய்தல், மக்களுக்கு போய்வர மிக அத்தியாவசியமான சாலைகள் அமைத்தல், பராமரித்தல், முதலிய பணிகள் பல்வேறு கல்லூரிகளிலும் கிராமங்களிலும் உள்ள நாட்டு நலப்பணித்திட்ட பிரிவுகளால் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டு நலப்பணித்திட்ட பிரிவு பூங்காக்களை வளர்த்தல், பராமரித்தல், இலங்கை அகதிகள் மறுவாழ்வு திட்டப் பணிகளில் ஈடுபாடு / கிராமங்களில் இறைவிழாக்களை நடத்துதல், காய்கறி தோட்டம் வளர்த்தல், மருத்துவ நலத் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு, பண்டிகைக்கால கூட்டத்தை ஒழுங்குப்படுத்துதல், ரயிலில் பயண சீட்டு வாங்காமல் போய் வருபவர்களை திடீர் என சோதனை செய்து கண்டுபிடித்தல் / கைதிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், முதலமைச்சர் சத்துணவு கூடங்களுக்கு விஜயம் செய்தல் நாட்டு நலப்பணித்திட்டம் குறித்து சமாதான பேரொளி கருத்தரங்கம் ஏற்பாடு செய்தல், பார்தினியச் செடிகளை அழித்தல், இவை பிற நாட்டு நலப்பணித்திட்டம் செய்து வரும் பணிகள்.


பொது மக்களுக்கு எழுத்தறிவுத் திட்டம்

            உலக அளவில் நமது நாட்டில் ஜனத்தொகை இரண்டாவது இடத்தில் உள்ளது. நமது நாட்டின் முன்னேற்ற பாதையில் முக்கிய தடைக்கல்லாகி இருப்பது மக்களின் எழுத்தறிவற்ற நிலையே என்று கருதப்படுகிறது. உலகின் 69 எண்ணிக்கை நாடுகளோடு உடன் நோக்கில் நமது நாட்டின் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதுஎன்பது நம் எல்லோருக்கும் கவலையளிக்கும் செய்தியாக இருக்கிறது. உலகிலிலுள்ள 85.7 கோடி படிப்பறிவற்ற மக்களில் நம் நாட்டில் இருப்பவர்கள் 44 கோடியாகும். 1981ஆம் வருட புள்ளி விவரங்களின் படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்கள் 36.23 சதவீதம்தான். நம் நாட்டிலுள்ள 220.89 மில்லியன் படித்தவர்களில் 3.5 மில்லியன் பேர் பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் இருக்கிறார்கள்.


            இந்தியாவில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களின் எண்ணிக்கை 15 லட்சம். தமிழ்நாட்டில் 1.7 லட்சம் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்ளனர். நாட்டு நலப்பணித் திட்டத்தால் செயலாக்கப்பட்ட 2 லட்சம் அங்கத்தினர்களை எழுத்தறிவு திட்டத்தில் ஈடுபடுத்தவேண்டும் என்று மத்திய அரசு பரிந்துறை செய்துள்ளது. ஒரு தொண்டர் ஒருவருக்கு எழுத்தறிவு புகட்டவேண்டும் என்ற முறையில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இயங்குகிறார்கள். முதியோர் கல்விக்கான மாநில பள்ளிசாரா கருவாலயத்திலிருந்து நாட்டுநலப் பணித்திட்ட தொண்டர்களுக்கு தேவையான கற்பிக்கும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் கல்வி உபகரணங்கள் எழுத்தறிவு பணிக்கு கையேடு என்றழைக்கப்டும். இந்த எழுத்தறிவு பைகளில், கீழ் கண்டவை உள்ளன.


1. அட்டைகள் அல்லது அடிப்படை எழுத்தறிவு பயிற்சி பொருந்திய ஒரு தொகுதி.

2.எழுத்தறிவு பயிற்சி பெறுவதில் வாழ்க்கையோடு சம்பந்தமுடைய விஷயங்களை அடங்கிய ஒரு சிறு புத்தகம், பாடப்புத்தகங்களோடு சேர்த்து அதிகப்படி வாசிப்பிற்காகவும் அறிவு விளக்கத்திற்காகவும் தரப்படுகிறது.

3. மதிப்பாய்வு தாள்….

4. ஆசிரியர் வழிகாட்டி நூல்.

5. கற்பவர் குறித்து தனிப்பட்ட விவரங்களும் கற்பிக்கப்படும் விஷயமும்.

6. நான்கு அஞ்சலட்டைகள், இரண்டு ஆரம்ப உபயோகத்திற்காக. இரண்டு கல்வி காலகட்டத்தின் இறுதி உபயோகத்திற்காக.

            சமுக நலப்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்ட நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் பாமர மக்களின் எழுத்தறிவு பெறும் முயற்சிகளில் முழு முனைப்போடு பங்கெடுத்துக் கொள்கிறார்கள். சிலர் இரண்டு, மூன்று நபருக்கு மேலாக கூட கற்றுத்தருகிறார்கள், அப்படி எழுத்தறிவு பெற்றவர்கள் தங்கள் பெயர்களை எழுதுகிறார்கள் பேருந்துகளிலுள்ள பெயர் பலகைகளை படிக்கிறார்கள். செய்தித்தாள்களை படிக்க முயற்சி செய்கிறார்கள். கிராமங்களில் ஐந்தாம், நான்காம் வகுப்பு படித்தவர்கள் கூட எழுத தெரியாமல் இருப்பதை காணமுடிகிறது. அத்தைகைய குழந்தைகளும் நாட்டு நலப்பணித்திட்டதில் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

            தரநிலைச் சான்றிதழ்கள் (எத்தனை பேர்களை எழுத்தறிவுக் கொண்டவர்களாக்கினார்கள் என்ற எண்ணிக் கையை அடிப்படையாகக் கொண்டு) மாவட்ட முதியோர் கல்வி அதிகாரி, செயல் திட்ட அதிகாரி அல்லது கல்லூரித் தலைவர்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஆயருடன் ஆலோசனை நடத்தி பிறகு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்களுக்கு வழங்கப்பட வேண்டும். சான்றிதழ்களின் தரநிலை பின்வருமாறு 1. மூன்று அல்லது மூன்று பேருக்கு மேல் எழுத்தறிவூட்டியவர்களுக்கு முதற்நிலைச் சான்றிதழ்கள். 2. இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் எழுத்திறிவூட்டியவர்களுக்கு இரண்டாம் நிலை அல்லது (பி கிரேடு) நிலை சான்றிதழ்கள். 3 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களுக்கு எழுத்திறிவூட்டியவர்களுக்கு மூன்றாம் நிலை அல்லது (சி கிரேடு) சான்றிதழ்கள்.


எல்லோருக்கும் மருத்துவ உதவி

            கிராம மக்கள் அனைவருக்குமான உடல் நல மருத்துவ பரிசோதனைக்கு நாட்டு நலப்பணி திட்ட அமைப்புகள் அரசாங்க மருத்துவ மனைகளிலிருந்து மருத்துவர்களின் உதவி பெற்று முகாம்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

பின்வரும் மருத்துவ நல செயல் திட்டங்களை மேற்கொள்ளலாம்.

 1. எல்லா குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பூசிகள், மருந்துகள்.

2.கிராம மக்கள் அனைவருக்கும் அம்மை தடுப்பூசிகள் மற்றும்  தொற்றுநோய் தடுப்பூசிகள், மருந்துகளும் கிடைக்கச்செய்தல்

3. குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தகுந்த தம்பதிகளை தேர்ந்தெடுத்தல்,

4.எல்லோருக்கும் நோய்குறி சோதனையும் அதன் தொடர்ச்சியாக நோய்க்காரணிகளான நுண்ணுயிர்களை தகுந்த மருந்துகளின் மூலம் அழித்தல்

5.தொழுநோய்/காசநோய்/சர்க்கரை வியாதிகள் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கிறதா என்று கண்டறியும் மருத்து பரிசோதனைகள் அனைத்தும் கிராமத்து மக்களுக்கும் கிடைக்க செய்தல். பரிசோதனைக்கு பின் தொடர்
நடவடிக்கை ஏற்பாடு செய்தல்.


சத்துணவு திட்டம்

            கிராமத்து மக்களுக்கு அவர்களுடைய பகுதியில் கிடைக்கும் பல்வேறு வகையிலான உணவு பொருட்களிலிருந்த பெறக்கூடிய ஊட்டச்சத்துப் பற்றி அறிவூட்டுதல்.  தாய்பாலின் தேவையையும் பயன்பாட்டையும் எடுத்துரைத்தல் / குழந்தை வளர்ப்பு பற்றி அறிவூட்டுதல். இந்தப் பணியில் சுகாதார ஊழியர்களின் உதவியையும் தேவையெனில் பெற்றுக்கொள்ளலாம்.
 

            எலுமிச்சை மரம், பப்பாளி மரம், முருங்கை மரம், வாழை மரம், கீரை வனக மற்றும் பல இலைகள் கூடிய காய்கறி, செடிகளடங்கிய காய்கறித் தோட்டம் ஒவ்வொரு குடும்பத்திலும் உருவாக வேண்டியதை மேற்படி சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய அம்சமாக கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல் சுகாதாரம்

            குறைந்த செலவிலான பாராபள்ளி / நச்சுதடை மலக்குழியை தங்கள் வீட்டில் அமைத்துகொள்ளும்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் செயலூக்கம் தர வேண்டும். சுற்றுச் சூழல் சுகாதாரத்தை பராமரித்துப் பாதுகாப்பதற்காக ஒவ்வொரு குடும்பமும் உரக் குழிகளைக் கொண்டிருத்தல் அவசியம்.

மாற்று சக்தி வன ஆதார வழிகளைப் பயன்படுத்துதல் (Alternative Energy Sources)

            இயற்கை எரிவாயு முதலான மாற்று சக்திவள ஆதாரங்களைக் கைக்கொள்ளுதல், புகைவராத அடுப்புகளை யோகித்தல், சூரிய வெப்பத்தில் இயங்கும் சூரிய அடுப்பை கிராம மக்களிடையே பிரபலமாக்குதல் முதலிய வேலைகள் கிராமங்களில் மேற்கொள்ளப்பட வேண்டும்..

குடும்ப வரவு செலவு திட்டமிடுதலும், சிறு சேமிப்பும்

            கிராமத்து மக்கள் தங்கள் குடும்பத்தின் வரவு, செலவுக் கணக்கை திட்டமிட்டு செய்ய வேண்டிய அவசியம் பற்றி நாட்டு தல பணித்திட்ட தொண்டர்கள் அவர்களுக்கு எடுத்துரைத்து வருகிறார்கள். தவிர சிறு சேமிப்புப் திட்டத்தில் சேர்ந்து பணம் | சேமிப்பதிலுள்ள பயன்களையும் சேமிப்பின் அவசியம் பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைத்து சேமிக்க வேண்டுமென்ற செயலூக்கமளித்து வருவதையும் தங்கள் பணிகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள்.


சாலை செப்பனிடுதல்

            கிராம மக்களின் உதவியோடு நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் தங்கள் வழக்கமாக முகாம்கள் சமயம் அல்லது சிறப்பு முகாம்கள் சமயம் பொருவாரியான மக்களின் பங்கேற்போடு கிராமத்தின் இணைப்புச் சாலை மற்றும் செல்வழிச் சாலைகளைச் செப்பனிடுவார்கள். இந்த சாலைகள் போக்குவரத்திற்கும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கும், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்வதற்கும், பிள்ளைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும் பிற பல வேலைகளுக்கும் உதவும்.


வீடுஇல்லாதவர்களுக்குவீடு

     நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஏழை எளியவர்களுக்கு வீடுகள் கட்டிதரும் பொருட்டு மாவட்ட அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார்கள். இவர்களுடைய முயற்சிக்கு ஒரு உதாரணம் பின்வருமாறு : ஆழ்வார் குறிஞ்சியிலுள்ள பரமகல்யாணி கல்லூரியிலும் நாட்டு நலப்பணி திட்டத்தினர் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் (நாகர்மூலம் கோவில்) தங்களுடைய சிறப்பு முகாம் திட்டத்தின் சமலம் கட்டுவதற்கான கச்சாபொருட்களை வேறு வழிகளின் திரட்டி அதன்வழி ஆதரவற்ற பெண்களுக்கு ஒரு இல்லம் கட்டினார்கள். இதுபோன்று வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை கட்டி தருகின்றனர்.

கலைநிகழ்ச்சிகள்

            கிராமங்களில் அங்குள்ள நாட்டுநலப் பணித்திட்டம் கிளைகளினால் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம். உள்ளூரிலுள்ள கலையார்வம் மிக்கவர்களைக் கொண்டு கலைநிகழச்சிகளை ஏற்பாடு செய்யுமாறு கிராமத்து மக்களுக்கும் செயலூக்கம் அளிக்கப்பட வேண்டியது அவசியம். சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, குடியரசு தினம் முதலியன பல்வேறு முக்கிய தினங்கள் கிராமத்து மக்களின் ஒத்துழைப்போடும். பங்கேற்போடும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் கொண்டாடப்படவேண்டும். வருடா வருடம் வரும் பல்வேறு பண்டிகை தொடர்பான விழாக்கள், கொண்டாட்டங்களில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் ஊர் மக்களோடு ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டும்.


மரம் நடுதல்

            நமது நாட்டின் தட்ப வெப்ப சீர்குலையாமலிருக்கவும், பஞ்சம் பட்டினியிலிருந்து நம்மைக் நிலைகள் காத்துக் கொள்ளவும், மண் வளத்தையும், பாதுகாத்துக் கொள்ளவும், மரம் நடுதல் முக்கியமே. தொழிற்சாலைகளின் தேவைகளை நிறைவேற்றவும், மரங்கள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறோம். நாம் ஒவ்வொரு வருடமும் மரம் நடும் செயல் திட்டம் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் பெரிய அளவில் மேற்கொள்ளப்படுகிறது. கல்லூரி வளாகத்திலும் பல்கலைக்கழகங்களிலும் கிராமங்களிலும் பணி செய்யத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பகுதிகளிலும் இந்த தொண்டர்கள் வனத்துறையின் ஒத்துழைப்போடு பல மரங்களை நட்டு வருகிறார்கள், இளைய சமுதாயத்தினரின் திறமையும் ஆற்றலும், ஆர்வமும் இந்தியாவை பசுமையாக்குகின்றன.


நிவாரணப்பணிகள்

            இயற்கையன்னை தனது சீற்றத்தை அள்ளிக் கொட்டியதில் புயலும் சூறாவளியுமாய் மக்களுக்கு சொல்லொனத் துன்பங்கள் ஏற்பட்டது. இயற்கை தந்த சவுக்கடியின் வலி அளப்பறியது. அதன்வினையால் மனிதர்கள் வீடிழந்து நிற்கின்றனர். எப்பொழுதெல்லாம் வேதனையும், துயரமும்ஆதரவற்ற நிலைமையும் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் நாட்டு நல பணித்திட்டத்தினர் உதவி செய்கின்றார். அவ்விதமே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உள்ளூர் மக்களிடமிருந்து பழைய துணிமணிகள் நன்கொடைகள் சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர். அப்படி சேகரிக்கப்பட்ட துணிமணிகள் பிற பல பொருட்கள் எல்லாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. குடிசைகளில் வாழும் மக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை சரியான முறையில் தரப்படவும், குடிசைகள் கட்டுதல் மற்றும் சேதத்திற்குள்ளானவைகளை பழுது பார்த்தல் முதலிய பணிகளிலும் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் தங்கள் உதவிக் கரங்களை நீட்டுதல், மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் உதவி செய்ய முன் வந்தது கிராம மக்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டன.

            1977 நவம்பர் புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவிலுள்ள கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த பாபட்லா தாலுக்காவிலும் பிரகாசம் மாவட்டத்திலுள்ள சீராளா தாலுக்காவிலும் 10,000 பேருக்கும் மேலாக இறந்தது மட்டுமல்லாமல் மக்களின் உடமைகளுக்குப் பெருத்த சேதம் ஏற்பட்டப்போது ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல்வேறு கல்லூரிகளிலிருந்து 300 நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்கள் நிவாரணப்பணிகளில் பங்கெடுத்துக்கொண்டார்கள். இவர்கள் 300 கோணிப்பைகளில் ஏறத்தாழ 1,50,000 ரூபாய் பெறுமானமுள்ள புதுத் துணிகள், 70 சாக்கு மூட்டைகளில் அரிசி, 24 கோணி மூட்டைகளில் புதிய பாத்திர பண்டங்கள், மருந்துகள் முதலியவற்றை குறிப்பிட்ட பகுதிகளில் நிவாரணப்பணிப் பொறுப்பேற்றிருந்த அதிகாரிகளால் தரப்பட்ட அளவுக்கு மேலாக சேகரித்து வழங்கினார்கள். காவலி பகுதியிலுள்ள தொண்டர்கள் நாகாலந்தா பகுதியிலிருந்து 20 சடலங்களை ஜவஹர் பாரதியைச் சேர்ந்த நாட்டு நலப் பணித்திட்ட அகற்றினார்கள். அதே கிராமத்தில் இருந்த வேறு 60 நாட்டு நலப் பணித்திட்ட அங்கத்தினர்கள் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சினி சீமாவிலிருந்த கடற்கரையை ஒட்டிய ஒரு மீனவ கிராமமான கங்கமேஸ்வரத்திற்கு நாகாலந்தாவிலிருந்து செல்லும் சாலையை சீர்படுத்தித்தந்தார்கள். இதுபோல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள் திண்டுக்கல் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகள் செய்தனர். இதே மாதிரியான நெருக்கடி கால நிவாரணப் பணிகள் நாடெங்கும் நாட்டு நலப் பணித்திட்ட தொண்டர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

தகவல்

            அரசாங்கம் தாமதமாக தொகையை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செலுத்தும் காலங்களில் நாட்டு நலப்பணித்திட்ட செயல்பாடுகள் முடங்கி கிடக்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அக்காலங்களில் சில கல்லூரி/பள்ளி நிறுவனங்கள் முன்பணம் கொடுத்து திட்டங்கள் குறித்த நேரத்தில் செயல்பட உதவி செய்கின்றன. இது தவிர சில நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வேறு சில நிறுவனங்களில் இருந்து நன்கொடை பெற்று சமுதாய பணியை சிறப்பாக செய்து வருகின்றனர்.

நிர்வாக அமைப்பு முறை
                                                               NSS நிர்வாக அமைப்பு முறை

பயிற்சி மையங்கள்


            ஒரு தொழிலை நன்கு செய்ய, பயிற்சி இன்றியமையாதத காணப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்தி அரசாங்கம் பல பயிற்சி நிறுவனங்களை நாடு முழுவதும் நிறு அதற்கு தேவையான பண உதவியையும் செய்து வருகிறது.

நாட்டு நலப்பணித்திட்டத்தில் பயிற்சிகள் கீழ் கண்ட வகுப்பினருக்கு அளிக்கப்படுகின்றன


திட்ட ஒருங்கிணைப்பனப்பாளர் பயிற்சி


1. துணை திட்ட ஆலோசகர், உதவி திட்ட அலுவலர், இளைஞர் அலுவலர், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாநில தொடர்பு அலுவலர்.

2.கல்லூரி முதல்வர்கள், மேல்நிலை பள்ளி தலைமை
ஆசிரியர்கள், ஆசிரியைகள்

3. நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள்

4. மாணவத் தொண்டர்கள்


நாட்டு நல பணித்திட்டத்தில் புதிய திட்டங்கள் – மாற்றங்கள் ஏற்படும் பொழுது புத்துணர்வுப் பயிற்சி திட்ட மேலாளர்களுக்கு அளிக்கப்படுகின்றன. கல்லூரி முதல்வர்களுக்கும், மேல்நிலை பள்ளி தலமை ஆசிரியர், ஆசிரியைகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நாட்டு நல பணித்திட்ட கொள்கைகள், பண ஒதுக்கீடு கையாளும் முறை ஆகியவற்றை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் வெவ்வெறு துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சமுதாய பணியை குறித்து அனுபவம் இருக்காது. இதை மனதில் கொண்டு அவர்களுக்கு இரண்டு விதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அங்கீகரிக்கப்பட்ட மையங்களுக்கு10நாள் முதல் நிலை பயிற்சிக்கு அனுப்பப்படுகிறார்கள் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து புத்துணர்வு பயிற்சிக்காக (5 நாட்கள்) அனுப்பப்படுகிறார்கள்.


கீழ்கண்ட மையங்கள் நாட்டு நலப் பணித்திட்டதிற்காக மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுகிறது.


பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

மாநில நிர்வாக அமைப்பு முறை
                                                           மாநில நிர்வாக அமைப்பு முறை


இம்மையங்கள் மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை தவிர பல விதமான காலத்திற்கு ஏற்ற ஆராய்ச்சிகளை செய்து வருகின்றது. பொதுவாககல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், மேல் பள்ளிகளிலும் நடைபெறும் நாட்டு நலப் பணித்திட்ட மதிப்பீடு செய்கின்றன. கீழ்க்கண்ட மையங்கள் பயிற்சி மற்ற மத்திய ஆராய்ச்சிமையங்களாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

1. சமுதாயப் பணித்துறை, டில்லி பல்கலைக்கழகம்

 2. டாடா விஞ்ஞான பயிலகம் மும்பை

3. சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8

4.ராமகிருஷ்ணா தொண்டு நிறுவனம், கொல்கத்தா

            இம்மையங்கள் பி.எச்.டி பயிலும் மாணவ / மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்து வருகின்றது. அதை தவிர நாட்டி நலப்பணித்திட்டத்தை சார்ந்த பலபுத்தகங்களை வெளியிடுகின்றன. இம்மையங்கள் பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கு மேல்நிலை பள்ளிகளுக்கு தேவையான ஆலோசனைகளை கொடுத்து வருகின்றன.

முதல் நிலைப் பயிற்சியில் கீழ் கண்ட தலைப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

1. நாட்டு நலப் பணித்திட்டத்தின் வரலாறு, தத்துவம், வளர்ச்சி

2. தொடர்பணிகள் செயலாற்று முறை

 3. சிறப்பு முகாம்கள் நடத்தும் முறை ஆளுமை வளர்ச்சி

4.சமூக காடுகள்

5.முதலுதவி

6.சமுதாயபணி

7.தாய்சேய நலபராமரிப்பு

8.சாலைபாதுகாப்புபணி

9. பண ஒதுக்கீடு கையாளும் முறை

10.கிராமம்,குடிசைபகுதிகளைத் தத்து எடுக்கும் முறை

11.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

12. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி போன்ற பலவிதமான பாடங்கள்.

13.சமுதாயஆராய்ச்சி

14.ஊனமுற்றோருக்குமறுவாழ்வு

15.ஊரகவளர்ச்சி

16.நகரவளர்ச்சி

            சமுதாயப் பணியை தகுதியான முறையில் செய்வதற்கு கலந்துரையாடல் மூலமாக கொடுக்கப்படுகிறது. நாட்டு நல வகுப்பில் பயிற்றுவிக்கும் பயிற்சியும் களப்பணி பயிற்சியும் பணித்திட்ட அலுவலர்கள் களப்பணிக்காக எஸ்.ஓ.எஸ். குழந்தைகள்கிராமம் தாம்பரம், ஜெர்மன் தொழுநோய் மருத்துவமனை -ஷெனாய் நகர், பொது சுகாதார நிறுவனம் – பூந்தமல்லி போன்ற இடங்களுக்கு செல்லுகிறார்கள்.

புத்துணர்ச்சி பயிற்சிக்காக வரும் நாட்டு நலப்பணித்திட்ட  கொண்டு 5 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

1.மக்கள்எழுத்தறிவுஇயக்கம்

2. சுற்று சூழல் விழிப்புணர்ச்சி

3. நீர்பிடிப்பு பகுதி, மற்றும் நீர்வளம்

4. எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி

5. உடல் ஊனமுற்றோருக்கு மறுவாழ்வு

6. இளம் குற்றவாளிகளுக்கு சீர்திருத்த முறை

7. ஆலோசனை கொடுக்கும் முறை

8. மனித உரிமைகள்

9. இளைஞர்கள் நலம்


நிதி

            இந்திய அரசு பல்கலைக்கழகங்களின் நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் பல்வேறு அர்த்தமுள்ள பயன் வாய்ந்த, ஆக்கபூர்வாமான செயல் திட்டப் பணிகளில் பங்கெடுக்க உதவியாய் நாட்டு நலப் பணி திட்டங்களை நடைமுறைபடுத்தவும், தொடர் பணிகளுக்கும் சிறப்பு முகாமிற்கும் திட்டத்தை செயல்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.


            இந்த திட்டமானது மத்திய மாநில அரசின் நிதியுதவியோடு நடத்தப்படுகின்றது. அதில் மத்திய அரசு பன்னிரெண்டு பங்கில் 7 பங்கையும், மீதி ஐந்து பங்கினை மாநில அரசும் கொடுக்கின்றது. தற்போது 1,70,000 தொண்டர்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், தொழில்நுட்ப பயிலகங்களிலும், உள்ளனர். மத்திய அரசு தங்களது பங்கையும் சேர்த்து மாநிலதிட்ட  தங்களது பங்கை மாநில அரசுக்கு அனுப்பி வைக்க மாநில அரசு ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்பி வைக்கின்றது. இந்த தொகையில் மாநில அரசு 5/12 கொடுக்கின்றது. மீதி பங்கை மத்திய அரசு தருகின்றது. தற்போது தொடர் பணிகளுக்காக ரூ 160/ ம் சிறப்பு முகாம்களுக்கு ரூ. 300/- செலவழிக்கப்படுகிறது. பள்ளி இயக்குனருக்கும் அளிக்கிறது. கல்லூரி கல்வி இயக்குனர் இத்தொகையை மாநில அரசு கல்லூரிகளில் இயக்குனருக்கு பகிர்ந்து கொடுக்கின்றார்.

            பல்கலைக்கழகங்கள் பயிற்சி பல்கலைக்கழகங்களுக்கும் தொழில்நுட்ப பயிலகங்களுக்கும் நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் முகாம்களுக்குான திட்டங்களை பல்கலைக்கழகங்களின் அளவில் நடத்துகின்றன. திட்ட அலுவலர்களுக்கு மத்திய அரசால் ஊக்கத்தொகையை கல்லூரி ஆசிரியர்களுக்கு ரூ. 400/- மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ரூ.200/- வழங்கப்படுகின்றது. இந்த தொகையைானது அவர்கள் நிர்வாக செயல்கள் மற்றும் பணிபுரிபவர்களை நடத்தி செல்வதற்காக வழங்கப்படுகிறது. அத்தொகையானது மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து முடிவு எடுக்கப்படுகிறது. கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்ப | பயிலகங்களில் ஒரு அணிக்கு 100 மாணவ மாணவிகள் சேர்க்கப் படுகிறார்கள். பள்ளிகளில் 50 மாணவ, மாணவியர் ஒரு அணிக்கு சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒரு நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஒரு அணிக்கு அமர்த்தப்படுகிறார். அரசாங்கத்தினரால் கொடுக்கப்படும் தொகையானது மாணவர்களுடைய களப்பணி, போக்குவரத்து செலவிற்காகவும் மேலும் திட்டப்பணிகளுக்கும் பயண்படுத்தப்படுகின்றன.


பொதுவாக மத்திய அரசு மாநிலங்களுக்கு தங்கள் தொகையை தாமதிக்காமல் குறிப்பிட்ட காலத்தில் அனுப்புகின்றன. ஆனால் சில மாநிலங்கள், மிக தாமதமாகவே பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் அனுப்புகின்றன. நமது மாநிலத்தில் இம்மாதிரியான தாமதங்கள் ஏற்படுவதில்லை.

 

மேலும் பார்க்க..

நாட்டு நலப்பணித் திட்டம் தோற்றமும் வளர்ச்சியும் – பகுதி – 1

 

கட்டுரையின் ஆசிரியர்

டாக்டர் ஜெ. விசுவதாஸ் ஜெயசிங்

இயக்குநர்,

பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சென்னை சமுதாய பணிக்கல்லூரி, சென்னை – 8.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here